ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2018

பழனிக்குச் சென்றால் முருகன் சிலையை “உற்றுப் பார்த்து…” அதிலிருந்து வெளிவரும் மூச்சலைகளை நம் உயிர் வழி “சுவாசிக்க வேண்டும்”

பழனியில் “நாம் பார்க்கும்.., முருகன் சிலை சாதாரணமானதல்ல. அதைச் சும்மா பார்த்தால் மட்டும் போதாது.

ஏனென்றால் 5300 ஆண்டுகளுக்கு முன் மெய்ஞானியான போகரால் அது உருவாக்கப்பட்டது. பல கோடித் தாவர இனங்களின் சத்தும் 27 நட்சத்திரங்களின் வைரக்கல்லின் ஆற்றலும் நவக் கோள்களின் பாஷாணமும் அந்தச் சிலைக்குள் உண்டு.

இருட்டறைக்குள் வைக்கப்பட்ட முருகன் சிலையின் மீது அக்காலங்களில் நீரை விடும்படி செய்தார் போகர்.

போகமாமகரிஷி காட்டிய அருள் வழியில் போகரை எண்ணி
1.“அந்தச் சிலையை உற்றுப் பார்த்து..,
2.அதிலிருந்து வரும் மணத்தை இழுத்துப்
3.புருவ மத்தியின் வழியாகச் சுவாசிக்க வேண்டும்.

பூமியின் வெப்பத்தால் மலையின் வெப்பத்தை அது எடுக்கும் பொழுது
1.சொட்டு நீர் சிலை மீது பட்டால்
2.முருகன் சிலையிலிருந்து மூச்சலைகள் வெளிவரும். (மனிதனைப் போன்று சிலை வியர்க்கும்)
3.நாம் எந்த ஏக்கத்துடன் செல்கின்றோமோ முருகன் சிலையிலிருந்து வெளிப்படும் அலைகளைச் சுவாசித்தவுடன்
4.நமக்குள் இருக்கக்கூடிய பல விஷத் தன்மைகளை மாய்க்கக் கூடிய சக்தியை நாம் பெற முடியும்.
5.பகைமைகளைப் போக்க முடியும்
6.கடுமையான நோய்களாக இருந்தாலும் அது ஒடுங்கும்.

மக்கள் அனைவரையும் மகிழச் செய்வதற்காகத்தான் முருகன் சிலையைப் போகர் உருவாக்கினார். பிறர் மகிழ வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தச் சிலையிலிருந்து வெளிவரும் வாசனையை நுகர்ந்தால் போகமாமகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.

அதனின் துணை கொண்டு அவன் எப்படி விண்ணிலே ஒளியின் சரீரம் பெற்று என்றும் பதினாறாக வாழ்கின்றானோ அவனின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் செல்லலாம்.

என்றுமே பேரானந்தப் பெரு வாழ்வாக வாழ்ந்திடலாம். 

ஒருவர் நம்மைப் பற்றி இல்லாததைச் சொல்கிறார் என்று உணர்ச்சிவசப்பட்டு விடுகின்றோம் – அதைத் தடுக்கும் வழி

நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால் ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். அதை நம் மீது ஒரு பழிச் சொல்லாகச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அந்தச் சொல் வெறும் வார்த்தைதான். 

ஆனால் அதை நமக்குச் சொன்னவுடன் அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அடக்க முடியவில்லை.

அவன் குற்றம் செய்துவிட்டு இவ்வாறு நம்மைச் சொல்கிறானே...! என்று பதட்டமும் பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடுகின்றது. ஏனென்றால்
1.அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி
2.தவறு செய்யும் நிலைகளுக்கு
3.எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது.

இல்லாததைச் சொல்கிறான் என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ் நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து உடலுக்குள் அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. இரத்தமாக மாறி நம் தசைகளாக மாறிவிடுகின்றது.

இதனால் தலை வலி உடல் வலி அஜீரணம் போன்றவைகள் ஏற்படுகின்றது. வேதனைகள் அதிகமாகின்றது. அதே சமயத்தில் மனதிலும் அமைதியை இழக்கச் செய்துவிடுகின்றது. நல்ல சிந்தனையும் குறைக்கச் செய்கின்றது.

இதைக் கட்டுப்படுத்துவதற்கு மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.

ஏனென்றால் மெய் ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளை அடக்கிட விண்ணின் ஆற்றல்களைப் பெற்று அவர்கள் உடலிலே வந்த தீமைகளையெல்லாம் மாற்றித் தன் உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.

மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா... என்று உயிரான ஈசனிடம் வேண்டி மகரிஷிகளின் அருள் சக்திகளை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.

அப்பொழுது உடனடியாகக் காற்றிலிருந்து இந்த ஞானியருடைய அருள் சக்தியை நாம் பெற முடிகின்றது. அவ்வாறு சுவாசித்து நம் உடலில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க இது உதவும்.

அதே சமயத்தில் விண்ணிலிருக்கும் மகரிஷிகளின் பால் புருவ மத்தியில் நம் நினைவாற்றல் இருப்பதால் மற்றவர்களின் உணர்வுகள் நம் சுவாசத்திற்குள் ஈர்க்காது.

நம்மை அவர்கள் எண்ணும் பொழுது நாம் சுவாசிக்கும் மகரிஷிகளின் உணர்வுகள் அவர்களுக்குள் ஊடுருவி அவர்களைப் பலவீனப்படுத்தும்.

அவர்களை இயக்கி உண்மையை உணர்த்தும்.

மகரிஷிகள் உணர்த்திய தீமையை நன்மையாக அடக்கியாளச் செய்யும் தியானம்

நாம் தங்க நகை செய்கின்றோம். அதிலே செம்பும் வெள்ளியும் இணைத்துத் தான் செய்கின்றோம். அடுத்த நகை செய்யும் போது திரவகத்தை ஊற்றி இதை செம்பும் பித்தளையும் நீக்கித் தங்கத்தைப் பரிசுத்தமாக்குகின்றோம்.

மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையிலே தீமையை அகற்றிய உணர்வின் தன்மைகள் மிகவும் வலு பெற்ற சக்திகள் கொண்டது.

குரு காட்டிய வழிகளில் அந்த உணர்வை நாம் நுகர்வதற்குண்டான தகுதியை ஏற்படுத்துவதே தியானம்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் தன்மை நாம் கொள்ளும் போது தியானமாகின்றது. அந்த உணர்வின் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தப்படும் போது நல்ல அணுக்களுக்கு உரமாகின்றது.

சந்தர்ப்பத்தால் நமக்குள் பிறரின் தீமையான உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் போது
1.அது (தீமை) அணுவாக வளர்வதற்கு முன்
2.அந்த அணுவையே நமக்குச் சாதகமான நிலையிலே மாற்றிவிடுகின்றோம்.

அந்தத் தீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்திடும் போது ஒவ்வொன்றிலும் நமக்கு வலு கூடிக் கொண்டே வருகின்றது.

ஏனென்றால்… குற்றமாகச் சொல்லி விட்டான்… தவறாகப் பேசுகின்றான்…! அறிவு கெட்டதனமாக நடக்கின்றான்…! என்று இரண்டு தரம் நான்கு தரம் சொல்லி விட்டீர்கள் என்றால் அந்த உணர்வு வளர்ந்து விட்டது என்றால் நாம் நல்லது செய்ததன் வலு போய் விடுகின்றது.

ஆனால் அடுத்த கணம்
1. மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.அந்த உணர்வுடன் இதை இணைத்து விட்டால்
3.அந்த அணு நம் வழிக்கே இணைந்து விடும்.
4.அப்போது இது நமக்குள் நம்மைக் காக்கும் இந்த உணர்வின் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.

மகரிஷிகள் உணர்த்திய தீமையை நன்மையாக அடக்கியாளச் செய்யும் “தியானம்”

நாம் தங்க நகை செய்யும்போது அதிலே செம்பும் வெள்ளியும் இணைத்துத் தான் செய்கின்றோம். ஆனால் அடுத்த நகை செய்யும் போது திரவகத்தை ஊற்றிச் செம்பையும் பித்தளையையும் நீக்கித் தங்கத்தைப் பரிசுத்தமாக்குகின்றோம்.

இதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் நல்லதைச் செயல்படுத்த சந்தர்ப்பத்தால் பயம் கோபம் ஆத்திரம் அவசரம் சஞ்சலம் சோர்வு எரிச்சல் போன்ற எத்தனையோ உணர்வுகளைக் கவர்ந்துதான் நம் காரியத்தை முடிக்கின்றோம்.

நல்லதைச் செயல்படுத்தினாலும் அதனுடன் இரண்டறக் கலந்து வந்த பயம் கோபம் சஞ்சலம் போன்ற உணர்வுகளைச் சுத்தப்படுத்தாமல் விட்டு விட்டால்
1.அடுத்த காரியங்களை நாம் செய்யும் பொழுது
2.இந்த எரிச்சலும் கோபமும் வேதனையும் சேர்ந்தே வந்து விடுகின்றது.
3.சீராக நடக்காது அதுவே தடைப்படுத்திவிடுகின்றது.

இதை நிறுத்த வேண்டும் அல்லவா…!

ஆனால் மகரிஷிகள் தங்கள் வாழ்க்கையிலே தீமையை அகற்றிப் பழகியவர்கள். விண்ணின் ஆற்றலை எடுத்து ஒளியாக மாற்றும் திறன் கொண்டவர்கள்.

மகரிஷிகளின் உணர்வுகள் மிகவும் வலு பெற்ற சக்திகள் கொண்டது. குருநாதர் காட்டிய அருள் வழிகளில் அந்த உணர்வை நாம் நுகர்வதற்குண்டான தகுதியை ஏற்படுத்துவதே தியானம்.

எந்த ஆலயத்திற்குச் சென்றாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற ஏக்கத்தின் தன்மை நாம் கொள்ளும் போது அதுவே சிறந்த தியானமாகின்றது.

அந்த உணர்வின் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தப்படும் போது உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு உரமாகின்றது.

அப்பொழுது சந்தர்ப்பத்தால் நமக்குள் பிறரின் தீமையான உணர்வுகள் வந்தாலும் மகரிஷிகள் உணர்வை இதனுடன் இணைக்கப்படும் போது
1.அது (தீமையானது) அணுவாக வளர்வதற்கு முன்
2.அந்த அணுவையே நமக்குச் சாதகமான நிலையிலே மாற்றிவிடுகின்றோம்.

அதீமையை அடக்கும் உணர்வாக அணுவாக விளையச் செய்திடும் போது ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் நமக்கு வலு கூடிக் கொண்டே வருகின்றது.

குற்றமாகச் சொல்லி விட்டான்… தவறாகப் பேசுகின்றான்…! அறிவு கெட்டதனமாக நடக்கின்றான்…! என்று இரண்டு தரம் நான்கு தரம் சொல்லி விட்டீர்கள் என்றால் அந்த உணர்வு வளர்ந்து விட்டது என்றால் நல்லது செய்த நிலைகள் வலு குறைந்து விடுகின்றது.

ஆனால் அடுத்த கணமே
1. மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.அந்த உணர்வுடன் இதை இணைத்து விட்டால்
3.அந்த அணு நாம் செல்லும் மெய் வழியில் இணைந்து விடும்.
4.அப்போது இது நமக்குள் நம்மைக் காக்கும் அந்த உணர்வின் அணுவாக விளையத் தொடங்கி விடுகின்றது.

தீமைகளை எரித்து ஒளியாக மாற்ற மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசியுங்கள்...!

நான் (ஞானகுரு) ஒன்றும் அறியாதவன். மூன்றாவது வகுப்பு கூட முழுமையாகப் படிக்கவில்லை. இத்தனை பேசுகின்றேன். நான் எங்கிருந்து பேசுகின்றேன்…!
1.புத்தகங்களைப் படித்ததும் இல்லை.
2.படிக்க விரும்பவும் இல்லை.
3.படித்தாலும் அது அர்த்தம் புரிவதில்லை.

திருவள்ளுவர் திருக்குறளைப் பாடியிருக்கின்றார் என்றால் அதைப் பற்றிப் படித்தவர்களுக்குத் தெரியும். படித்தால் எனக்கு என்ன அர்த்தம் தெரியும்…!

இராமயாணத்தை கவியாகப் பாடியுள்ளார்கள். கவிகள் பாடியவர்களுக்கு அல்லது கவி தெரிந்தவர்களுக்கு அதைப் பற்றி விளக்கம் சொல்ல முடியும்.

ஒருவர் இராமயாணத்தில் ஒன்றைச் சொல்வார். இன்னொருத்தர் அதை படித்து வியாக்கியானம் கொடுத்தால் இவருடைய இராமயாணம் வேறு விதமாக இருக்கும்.

படித்த உணர்வின் நிலைகள் அவர் உணர்வுடன் ஒன்றி செயல்படும் போது அந்த உணர்வுக்கொப்பத் தான் உணர்வின் எண்ணங்களும் செயல்களும் வருவது.

ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்து விண்ணுலகம் சென்ற முதல் மனிதனான அகஸ்தியனின் உணர்வலைகளை எனக்குள் பதிவாக்கினார்.

அகஸ்தியர் தன் தாய் கருவில் பெற்ற சக்தியின் துணை கொண்டு வானியல் புவியியல் உயிரியல் அடிப்படையில் அவர் கண்டுணர்ந்த பேருண்மைகளை என்னையும் அறியும்படி அதை உணரும்படிச் செய்தார்.

அகஸ்தியர் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான நிலைகளை குருநாதர் எமக்குக் காட்டினார்.

அந்த அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் மகரிஷிகளாக சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டிருப்பதையும் காட்டி அந்தச் சக்திகளைப் பெறும் பாக்கியத்தை எனக்கு ஏற்படுத்தினார்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வுகள் இந்தப் புவியில் படர்ந்துள்ளது. அதை மனிதர்கள் நாம் நுகரும் திறன் பெற வேண்டும். நமக்குள் அதை வளர்க்க வேண்டும்.

அதனின் உணர்வுகள் வலு பெற்ற பின் அறியாது வந்த தீமைகளை அது கரைத்து விடும்.

விறகில் நெருப்பு வைக்கப்படும் போது அந்தக் கட்டைக்குள் இருக்கும் எண்ணெய்ச் சத்து எரிந்து கட்டையைக் கருக்கி விட்டு ஒளியாக மாற்றுகின்றது.

இதைப் போல தீமையான உணர்வுக்குள் இருக்கும் வீரிய சக்தியை எரித்து ஒளியாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் மெய் ஞானிகள். எத்தகைய தீமைகள் வந்தாலும் அதைக் கருக்கி விட்டு ஒளியின் தன்மை மாற்றிக் கொண்டவர்கள்.

அப்படிப்பட்ட மெய் ஞானியின் உணர்வை நமக்குள் இணைத்து விட்டால் அது தன்னிச்சையாக தீமையான உணர்வுகளை எரி பொருளாக்கி ஒளியின் சக்தியாக மாற்றும் தன்மை வருகின்றது என்ற நிலையை நேரடியாகக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நான் (ஞானகுரு) சொல்வதெல்லாம் உங்களுக்கு அதிசயமாக இருக்கும்.

நான் சொன்னதையெல்லாம் நீங்கள் பார்க்கும் போது என்னிடம் சொல்வீர்கள்.
1.சாமி இதெல்லாம் நான் பார்க்க முடிந்தது…!
2.”என்னால் தீமையைப் போக்க முடிந்தது…!” என்ற
3.அந்த மகிழ்ச்சியான நிலைகள் உங்களுக்குள் வரும்.

January 30, 2018

போற்றலும் தேவையில்லை...! புகழும் தேவையில்லை...! இகழ்ச்சியும் தேவையில்லை...!

இந்த மனித வாழ்க்கையிலே பெருமையும் போற்றுதலும் எல்லாம் கிடைக்கும். அத்தகையை சொல்களைக் கேட்கும் பொழுது நமக்கு மிக ஆனந்தமாகவும் இருக்கும். மகிழ்ச்சியும் பெறுவோம்.

நம்மை மற்றவர்கள் போற்றிக் கொண்டேயிருக்கின்றார்கள் என்றால் அந்தப் போற்றல் கடைசியில் படு பாதாளத்தில் தள்ளிவிடும்.

போற்றுதலுக்குகந்த நிலைகளை அந்தப் போற்றுதலையே எண்ணிக் நாம் கொண்டிருப்போம். நம்மையறியாமலே அது இழி நிலைகளுக்கு இட்டுச் செல்லும். பேருண்மையை அறியாத நிலைகளில் நாம் விட்டு விடுவோம்.

ஒருவரைப் போற்றினால் போற்றுதலுக்குத் தக்கவாறு பொருள் கிடைக்கும். ஆனால் நம் உள்ளத்தாலே நமக்குள் எடுக்கும் மெய்யுணர்வின் தன்மையை நாம் இழந்து விடுவோம்.

அதே போன்று தான் ஒருவரைப் புகழ்ந்து கூறும் பொழுது தவறுகள் நிச்சயம் வருகின்றது. ஆகவே
1.புகழ் கண்டு மயங்காதே…!
2.புகழாரம் பாடாதே…!
3.புகழ்ந்துரைக்க எண்ணாதே…!

ஒருவரைப் புகழ்ந்து பாடத் தொடங்கிவிட்டால் புகழ்ந்து பாடிய உணர்வுகள் வெறும் ஏமாற்று வித்தையாகத்தான் இருக்கும்.

புகழைத் தேடி நாம் சென்றால் அந்தப் புகழின் ஏக்கத்தில் இருப்போம். நாம் ஏமாற்றத்தில்தான் சிக்குவோம். நாம் புகழுக்காகச் செல்லுகின்றோமென்றால், நம் வாழ்க்கை நிச்சயம் தடைப்படும்.

1.இன்னல் கண்டு கலங்காதே..!
2.இகழ்ந்துரைக்க எண்ணாதே…!
3.இகழ்ச்சி கண்டு பதறாதே…!

நாம் எத்தகைய இன்னல்கள் வந்தாலும் பிறரை இகழ்ந்துரைக்கும் எண்ணங்களைத் தவிர்த்தல் வேண்டும். ஒருவருடைய நிலைகளில் இன்னல்கள் வருகின்றதென்றால் அதைக் கண்டு இகழ்ந்துரைப்பது தவறு.

ஒருவர் இன்னலில் சிக்கும் பொழுது அந்த இன்னலிலிருந்து “அவர் மீள வேண்டும் ஈஸ்வரா”என்று அருள் உணர்வைத் தனக்குள் எடுத்து அந்த இன்னலில் இருந்து மீள வேண்டும் என்றால் அந்த உயர்வு நமக்குள் கிடைக்கின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் பிறரை இகழ்ந்துரைப்பதும் இன்னல் கண்டு கலங்குவதும் நமக்கு நாமே தண்டனை கொடுப்பது போன்றதாகும்.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட்டுப் பழகுதல் வேண்டும்.

சப்தரிஷி மண்டலங்களாக முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்லும் அந்த மெய் ஞானிகளின் சத்தான ஆற்றல்கள் நமக்கு முன் மிதந்து கொண்டிருக்கிறது.

விண்ணை நோக்கி ஏகி அந்த விண்ணின் ஆற்றலை நாம் பெறுவதற்குண்டான முயற்சி தான் நாம் எடுக்கும் இந்தத் தியானத்தின் நிலைகள்.

ஆகையினாலே நேரத்தையும் காலத்தையும் விரயமாக்காதபடி ஆற்றல் மிக்க அரும் பெரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசித்து நம்மைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கின்ற தீய உணர்வுகளைச் செயலிழக்கச் செய்து இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியை நாம் ஏற்படுத்திக்கொள்வோமாக…!

கௌரவப் பிரச்சனை என்று ஒவ்வொரு(வருக்கும்) குடும்பத்திலும் உண்டு – அதை நீக்கினால் தான் நிம்மதியும் அமைதியும் மகிழ்ச்சியும் வரும்...!

பையன் மேல் நாம் வெறுப்பாக இருப்போம். அவன் நல்லது செய்துவிட்டு வந்தாலும் கூட லேட்டாகிவிட்டது என்கிறபோது அவனை நினைத்தவுடன் “அவன் எப்பொழுது பார்த்தாலும்... இப்படித்தான் இருக்கிறான்...” என்று சொல்வோம்.

பையன் ஒரு காரியத்திற்குப் போனால் லேட்டாகி அந்தக் காரியத்தை முடித்துவிட்டு வருவான். “ஜெயித்துவிட்டு வந்தால் கூட...” நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

அவன் சென்று வந்த காரியம், என்ன என்று கேட்காதபடி “அவன் இப்படித்தான்... எப்பொழுது சென்றாலும் லேட்டாக வருவான்...!” என்று அவனைத் திட்டவும் பேசவும் ஏசவும் தான் செய்வோம்.

1.அவன் உண்மையைச் சொன்னாலும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
2.பொய் சொல்கின்றான் என்ற எண்ணம்தான் தோன்றும்.
3.அதைக் கேட்டறிவதற்குத் தாமதமாகும்.
4.நல்லது நினைத்தாலும் கூட நம்மையறியாமல் அந்த உணர்வுகளை நிற்கச் செய்யும்.
5.அந்த உணர்வின் தன்மை அவனைக் கெட்டவனாக மாற்றச் செய்யும்.

இதைப் போன்று ஒவ்வொரு குடும்பத்திலும் சரி தொழிலும் சரி ஒருவர்பால் கெடுதலான எண்ணங்களை வைத்து விட்டால் அந்த உணர்வின் பார்வையிலே பேசும் பொழுது
1.எந்த நல்லதைக் செய்தாலும்,
2.அந்த எண்னங்களுக்குத் தப்பாகத்தான் தெரியும்

இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டுமென்றால் முதலில் நாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று “ஆத்ம சுத்தி” செய்து கொள்ள வேண்டும்.

நாம் எடுக்கும் இந்த ஆத்ம சுத்தியின் நிலைகள் மகரிஷிகள் அருள் சக்தி உள்ளுக்குள் சென்று அந்த மெய்யை உணர்த்தும். அறியாமையிலிருந்து மீட்க நமக்கு அந்தச் சக்தி உதவும்.

குடும்பத்திற்குள் இதைப் போன்ற நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.

மாமியாருக்கும் மருமகளுக்கும் பிடிக்காது. மகனுக்கு அப்பாவைப் பிடிக்காது. கணவனுக்கும் மனைவிக்கும் ஆகாது. அந்த அளவுக்கு இன்று பெரும் பகுதி ஆகிவிட்டது. இன்றைக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த நிலைதான்.

சந்தர்ப்பத்தால் நாம் நுகரும் பிறிதொரு உணர்வுகள் நமக்குள் வந்து நம்மை அவ்வாறு இயக்கி நம் நல்ல உணர்வுகளை மாற்றிவிடுகின்றது. பகைமையை உண்டாக்கி விடுகின்றது.

சிலருக்கு இது கௌரவப் பிரச்சனையாக மாறிவிடுகின்றது. நேருக்கும் நேர் பேசாதபடி கடுமையான நிலைகள் ஆகிக் கடைசியில் இரண்டு பேரும் மிகுந்த வேதனைக்குள்ளாவார்கள்.

இதையெல்லாம் மாற்றவில்லை என்றால் வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் நிம்மதியோ அமைதியோ இழந்த நிலையாகத்தான் வாழ வேண்டியதிருக்கும்.

உங்கள் உணர்வலைகள் மாறாமல் இருப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தத் தவறாதீர்கள்.

யார் மீது பகைமையோ கருத்து வேறுபாடோ இருக்கின்றதோ அவர்களுக்கு எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் கிடைக்க வேண்டும் என்று உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் வேண்டிச் செலுத்திப் பாருங்கள்.

ஒன்று சேர்க்கும் சந்தர்ப்பாம் தன்னாலே வரும்.

வெறும் வார்த்தையிலே சும்மா சொல்கிறோம் என்று எண்ணிவிடாதீர்கள். உங்களுக்குள் வரக்கூடிய எத்தகைய துன்பத்தையும் போக்குவதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகக் கொடுத்துப் பதிவு செய்கின்றோம்.

உங்கள் உடலுக்குள் அணுவாக விளைந்து விட்டால் உங்கள் அனுபவம் பேசும்...!

எப்பொழுது பார்த்தாலும் நம்மைத் திட்டிக் கொண்டேயிருப்பவர்களுக்கு நாம் உண்மையை உணரும்படி எப்படிச் செய்ய வேண்டும்…?

தவறுகள் செய்யவில்லை என்றாலும் சில சந்தர்ப்பம் நம்மைப் பிறர் கோபமாகப் பேசுவார்கள். திட்டவும் செய்வார்கள்.

நாம் அவர்களிடம் விளக்கிச் சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வதும் இல்லை. உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணமும் இருப்பதில்லை.

அவர்கள் சொன்னதயே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதைக் கேட்டால் நாமும் உணர்ச்சிவசப்பட்டுப் பதிலுக்குத் திட்டுவோம்...! அல்லது மிகுந்த வேதனைக்குள்ளாவோம்.

இதை எப்படி நிறுத்துவது? நல்லதாக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

“ஈஸ்வரா...” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இப்படி உடலுக்குள் நினைவைச் செலுத்திவிட்டு உங்களைத் திட்டியவர்கள் அவர்கள் எங்களைப் பார்க்கும் பொழுது, நல்ல சொல்லாகச் சொல்லும் ஆற்றல் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அவர்கள் எதையெல்லாம் பேசி எதையெல்லாம் உங்களுக்குச் சங்கடமாக எண்ணுகின்றனரோ அதே சமயம் நீங்கள் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,
1.அவர்கள் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகின்றனரோ
2.அது அவர்களுக்கு நடந்து
3.“அவர்கள் உணரும் ஆற்றல் பெறட்டும்...!” என்று நீங்கள் எண்ணுங்கள்.

ஒருவர் திட்டிக் கொண்டே இருக்கிறார் என்று சொன்னால் நாம் சுத்தமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தபின்
1.திட்டியது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்...!
2.எனக்கு அது எதுவும் வேண்டாம்…! என்று நாம் அவரிடம் சொல்லிவிட்டால்
3.அது நம்மைப் பாதிக்காது.

நீங்கள் ஆத்ம சுத்தியைச் செய்துவிட்டுத் திட்டியவரிடம், “நீங்கள் எப்படி எப்படியெல்லாம் திட்டினீர்களோ... அதையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்... எனக்கு வேண்டாம்... என்று
1.சிரித்த முகத்துடன் சொல்லுங்கள்.
2.அந்த உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காது.

நாம் ஆத்ம சுத்தி செய்து இவ்வாறு சொன்னவுடன் “ஆ...” என்று அவர்கள் இழுத்தால் போதும்.

அவர்கள் அறியாமல் செய்த தவறை நாம் விட்ட மூச்சலைகள் அவருக்குள் ஊடுருவிச் சென்று அவர்கள் செய்த தவறை உணர்த்தும்.

இதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

மெய் ஞானத்தை வளர்க்கும் “விழுதுகள்

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தின் உணர்வைத் தன்னுள் கண்டுணர்ந்து இந்த மண்ணுலகை வென்று விண்ணுலகைச் சென்றடைந்து முழுமை பெற்றார்.

விண் செல்வதற்குண்டான பாதையை அவர் கற்றார். இந்த உணர்வை முழுமை பெறுவதற்குத் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணினார்.

அந்தத் துணையைத் தான் பெற்றாலும் விண்ணுலகம் செல்வதற்கு விண்ணிலே உந்தித் தள்ளுவதற்கு தனக்குகந்த ஆதாரங்கள் தேவை.
1.விழுதுகள் இல்லாது மரம் வளர்ந்திடாது
2.ஆகவே தனக்கென்று விழுதுகளை உருவாக்குகின்றார்.
3.அதே போலத்தான் ஒவ்வொரு உயிருக்கும் விழுதுகள் தேவை.

நாம் எல்லோரும் ஏகோபித்த நிலைகள் கொண்டு விண் சென்ற மகா ஞானிகளின் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் எடுத்து அந்த விழுதுகளாக நாம் ஓவ்வோருவரும் உருவாக வேண்டும்.
1.உங்களுக்கு நான் விழுது
2.எனக்கு நீங்கள் விழுது என்ற இந்த உணர்வுகள் வளர வேண்டும்.

விழுது இல்லாது ஒன்றின் துணை இல்லாது ஒன்று விளையாது என்ற நிலையைக் குருநாதர் தெளிவாகக் காட்டினார். அதே சமயத்தில்
1.நான் மட்டும் தனித்துத் பெறுவேன்.
2.மற்ற அனைத்தையும் வெறுப்பேன் என்ற நிலையில் பெற இயலாது.

அன்று அகஸ்தியன் தனக்குள் அனைத்தையும் இணைத்துத்தான் ஒளியாக்கினார்.
1.வருவதைத் தனக்குள் அரவணைத்துத்
2.தீங்கு செய்யாது அதை அடக்கினார்.

அதனால் தான் எதையுமே ஒளியாக மாற்றும் திறன் பெற்றார் அப்படிப் பெற்ற அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது நிச்சயம் நாம் அனைவரும் அதைப் பெறலாம்.

இதை எல்லாம் “துணுக்குத் துணுக்காகச் சொல்கிறேன்…!” என்று எண்ண வேண்டாம்.

இதை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால் நினைவாக்கும் பொழுது சந்தர்ப்பத்தில் தீமைகளைப் போக்கும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

நீங்கள் அனைவரும் அவ்வாறு பெறவேண்டும் என்பதற்காகத்தான் தெளிவாக்குகின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படிப் போதித்தாரோ…? மகரிஷிகளின் உணர்வுகளை நான் பெறும்படி எப்படிச் செய்தாரோ…? அவ்வாறே நீங்களும் பெறவேண்டும். பெற முடியும் என்ற அந்த நம்பிக்கையில் சொல்லுகின்றேன்.

1.உங்கள் நினைவலைகள் கூர்மையாக இருக்க வேண்டும்.
2.கூர்மையாக ஆக்க உபதேசிக்கும் உணர்வை ஆழமாகப் பதிவு செய்ய வேண்டும்.
3.பதிந்ததை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவேண்டும்.
4.அந்த நினைவின் ஆற்றல் உங்களை வளர்க்கும்.
5.முதலில் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் வளர்க்க வேண்டும்
6.பின் அது உங்களை வளர்க்கும்
7.அருள் ஞானத்தை உங்களுக்குள் போதிக்கும்
8.அருள் வழியில் அழைத்துச் செல்லும்.

மகான்கள் அனைவருமே அனுபவ வாயிலாக அறிந்தவர்கள் தான் – படித்து வரவில்லை...!

வியாசகர் வான்மீகி சமீபத்தில் வந்த அருணகிரிநாதர் இராமலிங்க அடிகள் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஏனைய மகான்கள் என்று சொல்லும் அனைவருமே
1.கல்வி கற்று உணர்ந்தவர்கள் அல்ல கல்வியில் ஞானம் பெற்றவர்கள் அல்ல…!
2.அவர்கள் கற்றுணர்ந்ததெல்லாம் தங்களுடைய அனுபவத்தில் கண்டுணர்ந்தவைகள் தான்.

அனுபவபூர்வமாகத் தான் பெற்ற உயர்ந்த சக்திகளையும் தங்கள் உடலில் விளைய வைத்த ஆற்றல் மிக்க உணர்வுகளையும் போதனைகளாக மக்களுக்கு வெளிப்படுத்தினார்கள்.

சந்தர்ப்பத்தால் நுகர்ந்த சக்தி தான் அவர்களுக்குள் அது அவ்வாறு உருப்பெறுகின்றது.

அவர்கள் பெற்றது போல் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றோம்.

நான் (ஞானகுரு) கல்வி கற்காதவன் தான். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அவரைப் பின்பற்றிய உணர்வு கொண்டு அதைப் பதிவு செய்து அதனின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பெற முடிந்தது.

மக்களின் உணர்வின் தன்மையும் தீமைகளை அகற்றும் உணர்வையும் கண்டறிய முடிந்தது. தீமைகளை அகற்றும் சக்திகளை எனக்குள் வளர்த்துக் கொள்ள முடிந்தது.

கற்றவர்களோ கற்காதவர்களோ… அறிந்தவர்களோ அறியாதவர்களோ… என்று (உங்களை) நீங்கள் யாரும் எண்ண வேண்டாம். அறிய வேண்டும் என்பதற்காகத்தான் வருகிறோம்.

பள்ளிக்குச் செல்வோர் அனைவரும் அறிந்து கொண்டு செல்வதில்லை.
1.அறிந்து கொண்ட பின் பள்ளிக்குச் செல்லவில்லை.
2.அறிவதற்குத் தான் பள்ளிக்குச் செல்கிறோம்.

அதைப் போன்று உலகை அறிவதற்காகவும் மெய் ஞானம் பெறுவதற்காகவும் தான் இங்கே வந்துள்ளோம். அதைப் பெறும் நிலைகளை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வைச் சந்தர்ப்பத்தால் நமக்குள் கூட்டி அதைப் பெறவேண்டும் என்ற ஆசையிருந்தால்… அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால்…,
1.கல்வி வேண்டியதில்லை…!
2.மெய் ஞானம் தன்னிச்சையாக வரும்.

தீமைகளை அகற்றும் ஞானங்கள் பிறந்தால் அருள் ஞானத்தின் உணர்வு கொண்டு இந்த வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

குருநாதர் காட்டிய வழியில் இந்த உபதேசத்தின் வாயிலாகப் பதிவு செய்யும் உயர்ந்த எண்ணத்தை நீங்கள் கவர முடியும், அருள் மகரிஷிகளின் உணர்வுகளை ஒவ்வொருவரும் பெற முடியும்.

மகா மகான்களாக வளர உங்களாலும் முடியும்…!

January 29, 2018

துருவ நட்சத்திரத்தின் உணர்வை “முன்னனியில்” வைத்துக் கொண்டால் அது மிகப் பெரிய "பாதுகாப்புக் கவசமாக..." நமக்கு அமையும்

காலையில் எழுந்தவுடன்
1.வீட்டில் பையன் இப்படிச் செய்துவிட்டான்
2.அவன் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்
என்று  இந்த எண்ணத்தில் சோர்வடைந்து விட்டால் இந்த உணர்வுகள் முன்னனியில் வந்துவிடுகின்றது.

அது முன்னாடி வந்துவிட்டால் நாம் போகும் பாதையில் ஒரு சைக்கிள் வருவது கூடத் தெரியாது. ஒரு பெரிய வாகனம் வருவதும் தெரியாது.

அப்பொழுது நம்மை அறியாமலே விபத்துக்கள் நடந்துவிடும்.

எதன் உணர்வு நம்மைச் சிந்தனையைக் குறைக்கச் செய்ததோ இதைப் போல் நம் வாழ்க்கையில் நடந்துவிடுகின்றது.

ஆனால், நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னனியில் வந்துவிடுகின்றது. அது நம்மை இயக்கிவிடுகின்றது.

இதையெல்லாம் மாற்றி உங்கள் வாழ்க்கையில் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி இந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்திக் கொள்ளுங்கள்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணினால்... "இது நமக்கு  முன்னாடி வந்து...!" வலிமையான சக்தியாக நிற்கின்றது. 

அதே சமயத்தில் எதிரே திடீரென்று ஒரு வாகனம் வந்தாலும் நம்மை ஒதுங்கச் செய்யும்.

அப்பொழுது அதை முன்னிலைப்படுத்திச் செல்லும் போது
1.தீமை என்றால் விலகி வரும் உணர்வுகளையும்
2.தீமை வந்தால் விலகிச் செல்லும் உணர்வுகளையும்
3.சிந்தித்துச் செயல்படும் ஆற்றல்களையும்
4.வாழ்க்கையில் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளையும்
நமக்கு அது ஊட்டிக் கொண்டேயிருக்கும்.

“உடலிலுள்ள அணுக்களின் இயக்கமும் நம் ஆன்மாவில் நடக்கும் செயல்களும்” – நாம் தெரிந்து கொள்ள வேண்டியது

நம் உடலுக்குள் எண்ணில் அடங்காத ஆன்மாக்கள் உண்டு. அது எதனெதன் நிலைகள் விளைந்ததோ அதனின் உணர்வலைகளைக் காற்றிலிருந்து ஈர்க்கும். (தன் உணவுக்காக)

உடலுக்கு முன் பரவி வரும் உணர்வுகளை அது கவர்ந்து இழுத்துத் தன் ஆன்மாவாகி உடலுக்குள் ஒரு அணுவின் கருவாக மாற்றிக் கொண்டு இருக்கும்.

தீயவர்களைப் பார்க்கப்படும் போது தீய உணர்வலைகளைக் கவரச் செய்து அதை உயிர் உணர்ச்சியால் நம்மை அறியச் செய்தாலும் உணர்வின் அணுவாக மாற்றி விடுகின்றது. அணுவின் தன்மை மலமாக மாற்றி உடலாக மாற்றுகின்றது.

உடலுக்குள் அது தேங்கி நின்று தன் உணர்வை (உணவை) எடுப்பதற்கு அந்த உணர்ச்சியைத் தூண்டும்.

உணர்ச்சிகளைத் தூண்டும் போது நமக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலனறிவு எங்கிருந்து தீமைகளை உருவாக்கியதோ அதைக் கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம்மைச் சுவாசிக்கச் செய்யும்.

சுவாசித்தது உயிரிலே பட்டு அந்தத் தன் இனமான உணர்வுகளை நம் உடலுக்குள் பரப்பச் செய்து அதனைத் தனக்குள் சேமித்து வைத்துக் கொள்ளும்.

நாம் உணவாக உட்கொள்வது உடலுக்குள் சென்று அது சிறுகச் சிறுகக் கலந்து இரத்தமாகவும் உணர்வின் அணுக்களாகவும் மாற்றிக் கொண்டு உள்ளோமோ இதைப் போல தான் தனது சேமிப்பாக அது எடுத்து அந்த உணர்வின் தன்மை (அந்த அணு) வளர்க்கும்.
1.அதில் கொஞ்சம் குறைகின்றது என்றால்
2.(நமக்குப் பசிப்பது போல்) உடனே உணர்ச்சிகளைத் தூண்டும்.

உணர்ச்சிகளைத் தூண்டும் போது அதை எதனின் உணர்வின் தன்மை பட்டதோ அதே காந்தப்புலன் அருகில் இருக்கும் இந்த உணர்ச்சியின் வேகம் அதிகமாகும்.

அப்பொழுது இன்னொரு மனிதன் உடலில் விளைந்த  தீமையான உணர்வை இது கவர நேரும்.

அவ்வாறு கவர்ந்தால் நமது ஆன்மாவாக இங்கே சேருகின்றது. சுவாசித்து உயிர் வழி கொண்டு தனக்குள் அதை எடுத்துக் கொள்கின்றது. இந்த இயற்கையின் நியதிகளே இது தான்.

அது எடுக்கப்படும் போது தன் ஆன்மாவில் (நம்முடைய காற்று மண்டலம்) சேமித்துக் கொள்ளும்.

சாப்பாடு சாப்பிட்டு வயிறு நிறைந்தவுடனே நாம் எப்படித் தூங்குகின்றமோ அதே போல உடலிலுள்ள அணுக்கள் அது அதனதன் உணவை எடுத்து உட் கொண்ட பின் அது உறங்கச் செல்லும்.

அதே சமயத்தில் விஷத் தன்மையான அணுக்கள் (வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம்) வரப்படும் போது தன்னை அறியாமலே துடிப்பின் வேகம் அதிகமாகும். அப்போது நமக்குள் வேதனையின் தன்மைகளும் உருவாகும்.

இது இயற்கையின் சில நியதிகளில் நிலையானது.

நாம் எப்படிப் பசிக்கும் பொழுது உணவைத் தேடுகின்றோமோ உணவை உண்ட பின் உறங்குகின்றோமோ அதை போல் தான் நம் உடலில் உருவான அணுக்கள் இந்தக் காற்று மண்டலத்திலிருந்து அதனதன் உணர்வலைகளை உணவாக எடுத்து வளரும்.

நம்முடைய ஆன்மாவின் இயக்கங்களைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இதை உணர்த்துகின்றோம்.

1.வெளியிருக்கும் காற்று மண்டலம் பரமாத்மா – பொதுவானது
2.நம்முடைய காற்று மண்டலம் ஆன்மா – உடலில் உள்ள அணுக்களுக்குச் செல்லும் (உணவு) உணர்வலைகள்
3.சுவாசம் – உணர்வலைகள் உடலுக்குள் கவரப்பட்டுப் போகும் பாதை
4.உயிர் – உயிரில் பட்ட பின் உணர்ச்சிகள் இயங்கி அணுக்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றது

இப்படித்தான் சுவாசம் அமைகின்றது. சுவாசத்தின் வழி உடல் அணுக்கள் வாழ்வதும் உடலில் விளைந்ததிலிருந்து உயிர் தன் ஆற்றலைப் பெருக்கும் நிலையும் நடந்து கொண்டயிருக்கின்றது.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
1.உடலிலே அணுக்களாகப் பெருக்கி வளர்த்துக் கொண்டால் அது விளைந்தபின்
2.நம் உயிர் கடைசியில் அதனின் நுண் ஆற்றலாகப் பெருக்கித்
3.தன் உயிராத்மாவாக்கி ஒளியாக ஆக்கி
4.அந்த மகரிஷிகளின் எல்லைக்கு நம்மை அடுத்த நிலையாக அழைத்துச் செல்லும்.