ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2021

பிறரையே எண்ணிக் கொண்டு வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லை - ஈஸ்வரபட்டர்

 

ஐம்புலனை அடக்குவது என்றால் என்ன...?

பார்த்தல்... சுவைத்தல்... கேட்டல்... நுகர்தல்... எண்ணல்... எனும் இந்த ஐம்புலன்களும் பெற்ற மனிதர்கள் எல்லோருமே தான் பெற்ற அருளை
1.பார்த்தவுடன் பதட்டப்படாமல்
2.பார்க்கும் நிலையில் ஒன்றை எடை போடாமல்
3.பார்த்த பொருள் ஒன்றைப் பார்த்தவுடன் வாங்க வேண்டும் என்றில்லாமல்
4.தான் பார்த்ததை ஒருநிலைப்படுத்தி
5.பார்த்த நிலைக்கு எதையும் முடிவு எடுக்காமல்
6.தான் பார்க்கும் அருளைப் பெற்ற “அந்த அருளின் சக்தியை” நல்வழியில் உபயோகப்படுத்த வேண்டும்.

இப்படித்தான் சுவைக்கும் கேட்பதற்கும் நுகர்வதற்கும் மன எண்ணத்திற்கும் எல்லாவற்றுக்குமே ஆண்டவன் அருளிய இத்தன்மை உள்ளது.

இத்தன்மை என்பது மனித ஜென்மங்கள் ஐம்புலனை அடக்கும் தன்மை மிருக ஜெந்துக்களுக்கு இல்லையப்பா...!

ஐம்புலனை அடக்கிடும் தன்மை பெற்ற மனிதனே தன் மன நிலையை அடக்கிடாமல்...
1.“வாழும் வரை சந்தோஷமாக வாழலாம்...” என்று இருக்கின்றார்கள்
2.வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே என்ன..? என்றே புரியாத மானிடர்கள்

ஆக இவ் ஐம்புலனை அடக்கி ஆளும் சக்தியையே அதி பேராசையினால் இவ் ஐம்புலனையும் அலைய விட்டு விடுகின்றார்கள்...! பேராசை நிலைக்கு அடிமைப்பட்டவன் தானப்பா இவ் ஐம்புலனையும் அலைய விட்ட ஒவ்வொரு மனிதனும்.

இந்த மனித ஜென்மங்களுக்கு ஆண்டவன் அருளிய “அரும் பெரும் பொக்கிஷமப்பா...” இந்த ஐம்புலனைப் படைத்தது.

மிருக உடலுக்குத் தன்னைக் காத்துக் கொள்ள... தன் உணவைத் தேட... ஆண்டவனால் ஒவ்வொரு மிருக இனத்திற்கும் ஒவ்வொரு காப்பு நிலை உள்ளதப்பா.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் என்ன செய்கின்றான்...?

ஒருவனை ஒருவன் ஏமாற்றி... ஒருவனுக்காக ஒருவன் ஒருவனை அழிக்கப் பல பில்லி சூனியங்கள் பல மந்திரங்கள் பல ஏவல்கள் எல்லாம் செய்கின்றனர்.

தன் எண்ணத்தையே பிறரையே அழிக்க உபயோகப்படுத்துகின்றனர்.
1.பிறரை அழிப்பது மட்டுமல்லாமல்
2.அந்நிலையே தன்னை வந்து தாக்குகிறது என்பதை அறியாமல்
3.தான் பெற்ற பாக்கியத்தை எல்லாமே சிதறவிட்டு வாழ்கிறார்கள் பல கோடி மக்கள்.

எவன் ஒருவன்...
1.பிறரையே எண்ணிக் கொண்டுள்ளானோ
2.அவன் வாழும் வாழ்க்கையும் நல்ல வாழ்க்கையில்லையப்பா...!

நீங்கள் கேட்கலாம்... தன்னையே பார்த்துக் கொண்டுள்ளவன் “சுயநலவாதியல்லவா” என்று...! நான் சொல்லும் சொல் அதுவல்லப்பா...!

நான் சொல்வதெல்லாம்...
1.உன்னை நீ உணர்ந்து
2.உன்னில் அந்த ஈஸ்வர சக்தியைப் பெற்று
3.உன் உழைப்பில் நீ உண்டு
4.உன்னைச் சார்ந்தோரின் நிலையை நீ பார்த்து
5.உன்னால் மற்றவர்களுக்குப் பயனை மட்டும் தான் அளிக்கும் நிலையில் நீ இருந்து
6.உன் வாழ்க்கையையே நீ அமைத்துக் கொண்டு
7.பிறரின் சொல்லுக்காக... அவச் சொல்லுக்காகப் பயப்படாமல்... பிறரின் புகழுக்காக ஏங்கிடாமல் மயங்கிடாமல்
8.உன்னையே நீ நம்பு...! என்பதன் பொருளைப் புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கையே பூரிப்புடன் வாழும் வாழ்க்கை...!

நாம் வாழும் வாழ்க்கை பிறருக்காக வாழ்வதல்ல. எவன் ஒருவன் பிறரைப் பார்த்துப் பொறாமைப்பட்டோ பிறரைப் புகழ்ந்தோ வாழும் வாழ்க்கையும் வாழ்க்கை அல்ல..!

மனித உடலில் மன நிலையில் கொதி நிலைதானப்பா..! அந்த மன நிலையையும் ஐம்புலனையும் ஒருநிலைப்படுத்தி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமப்பா..! முடியுமப்பா...!

என்ன தியானம் செய்து... என்ன பலன் என்பார்கள்...!

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி தியானிக்க வேண்டும் என்று உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்... நினைவுபடுத்துகிறோம்.

அதை வைத்துத் தீமைகள் புகாது பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய பொறுப்புதான்...!

ஒரு பொருளுக்கு ஆசைப்படுகிறோம் கிடைக்கவில்லை. அதே போல் நமக்கு வேண்டியவர்களுக்கு உடலில் நோயாகி விட்டது. சரியாகவில்லையே...! என்ற நினைவைச் செலுத்தினால் வேதனை உணர்வு தான் வருகிறது. அத்தகைய நேரத்தில் நல்ல உணர்வு பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்.

எத்தனையோ தியானம் இருந்தாலும் கூட இப்படி எல்லாம் வருகிறது என்று சில பேர் எண்ணுகின்றனர்.

1.அத்தனை தியானம் செய்தேன்... என் பிள்ளைக்கு உடல் நலம் இல்லாது போய்விட்டது...!
2.எவ்வளவு தியானம் செய்தேன்...? என்னிடம் சண்டைக்கு வருகின்றார்களே...! என்று
3.இந்த உணர்வை எடுத்து எடுத்து இப்படி மாற்றிக் கொண்டிருந்தால்
4.உணர்வுகள் அங்கே (தீமையின் பால்) சென்று விடும்... நினைவுகள் தீமையின் பக்கமே சென்றுவிடும்.

ஆகையினால் அது போன்று வராதபடி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டுமென்று அதை வலுவாக்க வேண்டும். அருள் உணர்வை நம் உடலுக்குள் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ நிலைகளைப் பார்த்தாலும் நாம் நுகரப்படும் போது “தவறு செய்கிறார்கள்...” என்று உற்றுப் பார்க்கின்றோம்... அது பதிவாகிறது.

பதிவாகி விட்டால் பின் அது தன் உணவுக்காகக் கிளரும். அதை வைத்து அந்த உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிக் கொண்டே இருக்கும். தவறு செய்தவரின் உணர்வை உணவாக எடுத்துத் தான் அந்த அணுக்கள் தன் இனத்தைப் பெருக்கும்.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் எப்போது சங்கடம் சலிப்பு வெறுப்பு என்று வருகின்றதோ... அடுத்த கணமே அதை மாற்ற... அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை கூட்டிக் கொண்டே வந்தால் அது குறைந்து கொண்டே வரும்.
1.அது குறையத்தான் செய்யும் தவிர முழுமையாக மாற்ற முடியாது
2.இதைப் (அருளை) பெருக்கினால் அது இதற்குள் அடங்கிவிடும்.

நல்ல குணங்கள் கொண்டு இருக்கும் பொழுது தீமை என்ற உணர்வுகள் அதிகமாகி விட்டால் அது நல்ல குணங்களை அடக்கி
வேதனை என்ற உணர்வும்...
வேதனைப்படும் சொல்லும்...
வேதனையான செயல்களும்...
வேதனையான பேச்சுகளும்...
வேதனையான மூச்சுகளையும் தான் செயல்படுத்தும்.

ஆனால் அந்த மகரிஷிகளின் அருளைப் பெற்று இதை மாற்றிடுவோம்... மாற்ற முடியும்... அவர்கள் நலம் பெறுவார்கள்...! என்ற எண்ணத்திற்கு நாம் வர வேண்டும்.

ஒரு நோயாளி அவருடைய கஷ்டத்தைச் சொன்னால் மகரிஷிகளின் அருள் சக்தியை அவர்கள் பெறுவார்கள்... நலம் பெறுவார்கள்...! என்று நாம் எண்ணி விட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் வராது.

ஆனால் அவர்களை உற்றுப் பார்த்து... சொல்வதைக் கேட்டறிந்து அவருடைய துயரத்தை எண்ணி நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள்ளும் அது விளைந்து அவர் சொன்ன கஷ்டங்கள் எல்லாம் நமக்குள்ளும் வரும்.
1.அவரை மாதிரித் தான் நமக்குள்ளும் இருக்கின்றது
2.அவரை மாதிரித் தான் நமக்கும் நோயாகி விட்டது...! என்று அவரின் உணர்வு வந்து
3.அதையே நாமும் வளர்த்துக் கொள்கிறோம்

உதாரணமாக ஒருவன் நம்மை ஏமாற்றினான் என்றால் “ஏமாற்றினான்... ஏமாற்றினான்...” என்று எண்ணி அதையே எடுத்துக் கொண்டே இருந்தோம் என்றால் நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் வளர்வது நிச்சயம் தடைப்படும்.

இதைப் போன்ற தீமையான விளைவுகளிலிருந்து நாம் மாறுவதற்கு ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானத்தின் மூலம் எடுத்து வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

April 29, 2021

நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் மின்கதிர்களின் பேராற்றல்கள்

 

பூமிக்குள் வெப்பத்தின் தணல் ஆகும் போது ஆவியின் தன்மை அடைந்து ஆவி எடையற்றதாக மாறி மேலே செல்கின்றது.
1.வெப்பத்தினால் எடையற்ற தன்மை மாறினாலும் அதிலே மின்னல்கள் தாக்கப்படும்போது
2.இலகுவாக இருந்த மேகக் கூட்டத்திற்குள் சக்தி வாய்ந்த நட்சத்திரங்களின் உணர்வலைகள் பரவுகின்றது.

அந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் படரப்படும் பொழுது அழுத்தத்தின் தன்மை ஒரு பக்கம் மோதி... மற்றொரு பக்கம் மோதும்போது மழையாகப் பெய்கின்றது.

இப்படி அந்த மேகக் கூட்டத்திற்குள்
1.ஆவியின் தன்மையும் ஒளிக்கற்றைகளும் இணைந்து மழையாகப் பெய்யும் பொழுது நீராக வருகின்றது.
2.அதனால் தான் மழை நீர் பெய்யும் பொழுது தாவர இனங்களுக்கு அது உரமூட்டும் உணரவின் சக்தியாகக் கிடைக்கின்றது.

மழை நீர் பெய்தாலே தாவர இனங்கள் அதிகமாகச் செழித்துக் கொழுத்து வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் “அந்த மின் கதிர்கள்... அதனுடைய இயக்கம் துடிப்பின் தன்மையைக் கூட்டுகின்றது...!”

பல கோடி உணர்வுகள் பெற்று நாம் மனிதனாக வளர்ச்சி அடைந்த நிலையில் அந்த மேகக் கூட்டத்தை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வின் சக்தி அதிலே படர வேண்டும் என்று அந்த உணர்வுகளைச் செலுத்த வேண்டும்.

இத்தகைய உணர்வுகள் கலந்த மழை நீராக நம் பூமியில் பெய்யும் பொழுது
1.அது தாவர இனங்களில் உள்ள தீமைகளை அகற்றவும்
2.மக்கள் வாழும் பகுதியில் மழையாகப் பெய்யும் பொழுது அருள் உணர்வின் அறிவாக எல்லோரையும் இயக்க இது உதவும்.

எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் பாய்ச்சும் இந்த அருள் சக்திகள் மழை நீர் வழியாகக் கலக்கப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலை பெறச் செய்யும்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் ஈசன் என்றும்... அவனால் உருவாக்கப்பட்ட அந்த உடல்கள் ஆலயம் என்றும்... மனித உடலை உருவாக்கிய உயர்ந்த சக்திகள் அங்கே தெய்வங்களகக் கொலுவீற்றிருக்கிறது என்றும்... நாம் மேலே சொன்ன நிலைகளைச் செயல்படுத்தினால்
1.இது நம்மை அறியாமலே நமக்குள் நன்மை பயக்கும் சக்தியாகிறது...
2.அதே போல் நம்மை அறியாது அனைவருடைய நிலைகளும் நலம் பெறும் சக்தியாக விளைகின்றது.

எந்தப் பூமியில் பிறந்தோமோ அதுவே நமக்குத் தாயாகின்றது. அந்தத் தாயின் மடி மீது தான் நாம் அமர்ந்துள்ளோம். பூமித் தாயின் சக்தியைக் கூட்டி தீமை புகாது தூய்மைப்படுத்தும் உணர்வுகளை நாம் ஒவ்வொருவரும் செயல்படுத்தும் போதுதான் இந்தப் பூமியும் தூய்மையாகிறது.

நம் தாய்க்கு செய்யும் சேவையே இது தான்.
1.ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் பூமியான தாயைக் காக்கவும்
2.உயிரைக் காக்கவும் முயற்சி எடுங்கள்.

தாயால் உருவாக்கப்பட்ட “இந்த உடல்” நம்மை எத்தனையோ வகையில் பேணிக் காத்தது. ஆகவே தாயின் உணர்வே இந்த உடல். இந்த தாயான உடலைக் காக்க வேண்டும்... தாயின் உடலில் பெற்ற உணர்வுகள் தாயான நிலையில் காக்கப்பட வேண்டும் என்று இந்த உண்மையின் உணர்வைப் பெற்றால் மனிதன் தெளிவாகின்றான்.

மனிதன் தெளிவாகும் போதுதான் தெளிந்த உணர்வு கொண்ட உயிராகின்றது. உயிருடன் ஒன்றும் உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது.

அத்தகைய உயர்ந்த நிலையைப் பெற்று குரு காட்டிய அருள் வழியில் பேரின்பத்தைப் பெறுவோம்... பெரு வாழ்வு வாழ்வோம். பிறவியில்லா நிலை அடையும் நிலையாக... முழுமை பெறும் உணர்வை வளர்ப்போம். உலக மக்கள் அனைவரும் இந்த நிலை பெற தியானிப்போம்... தவமிருப்போம்.

உன்னை நான் பார்த்து... என்னில் உன்னைக் கண்டிட... உன்னையே நான் வணங்குகிறேன் ஈஸ்வரா - ஈஸ்வரபட்டர்

 

சாமியார்கள் என்றாலே வேஷதாரிகள்... ஏமாற்றுக்காரர்கள்... சூனியக்காரர்கள்... என்றும் தான் வாழும் வழிக்குத் சாமியார் என்ற வேடம் பூண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள் என்றும் உருவாக்கி விட்டார்கள்.
1.பல மதங்களைப் பரப்பி
2.பகவானைப் பணிவதற்குப் பல நிலைகளை மக்களுக்கு உணர்த்தி
3.பல கோடி ஜெபங்களை ஜெபித்து
4.ஆண்டவனை வணங்குவதையே மக்களின் மனதில் ஒருவித பயம் கலந்த உணர்வாக உண்டு பண்ணிவிட்டார்கள் இந்தப் பல வழிச் சாமியார்கள்.

இவர்களில் சிலர் பல மந்திரங்களை மக்களுக்குப் புரியாத பாஷையில் ஓதி ஒம குண்டங்களை வளர்த்து அந்த ஓம குண்டத்தில் பொன்.. வஸ்திரம்... பல வகைப் பதார்த்தங்கள்... இன்னும் பலவற்றைப் போட்டு ஓமங்கள் வளர்க்கின்றனர்.

எட்டுத் திக்கிலும் எட்டுப் பூசாரிகளை அமரச் செய்து அவ்வனைவரும் ஒன்று சேர்ந்து அந்த ஆண்டவனைக் கோடியார்ச்சனை என்ற பேரில் புரியாத மொழியில் ஓதுகிறார்கள்.

இந்த வழியில் யாகக் குண்டத்தை வளர்த்து மந்திரங்களை ஓதும் பொழுது தான்
1.அந்த ஆண்டவன் வருவானா அந்நிலைக்கு...?
2.யாருக்காக...? யாரின் நிலைக்காக...?

அத்தகைய சாமியார்கள் மக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக யாகம் வளர்த்து மந்திரங்கள் ஜெபிக்கின்றனர். ஆக
1.பொருள் தருபவனுக்கு (மக்கள்) அந்தச் சாமியார்கள் செய்யும் பூஜையில் ஆண்டவன் வந்து அருள் தருவானாம்...!
2.ஆண்டவனுக்கு இவர்கள் (சாமியார்கள், பூசாரிகள்) தூதுவர்களாம்...!

பல ஆயிரம் செலவு செய்து யாக குண்டம் வளர்த்து அந்தப் பூசாரிகளுக்கு அன்னமளித்து பொருள் தந்து அந்த ஆண்டவனை வணங்கினால் இவன் செய்த பாவங்களும்.. இவன் எண்ணமும் மாறி.. அந்த ஆண்டவன் வந்து அருள் புரிவானாம்..!

1.ஊரை ஏமாற்றி
2.உள்ள நிலையைப் புரிந்திடாமல்
3.தன் புகழைப் பரப்பப் பூஜை செய்பவர்கள் தான் பெரும்பாலனவர்களாக உள்ளார்களப்பா...!
4.இவர்களின் நிலைக்கெல்லாம் இந்தப் பல வழிச் சாமியார்கள் பெரும் தூதுவர்களப்பா...!

செய்த பாவத்தைக் கழித்திட பூஜை செய்துவிட்டால் பாவம் தீர்ந்துவிடுமா...? அவர்கள் தான் அதைப் பாவம் என்றே எண்ணுவதில்லையே...!

புகழுக்காகத் தான் சம்பாதித்த செல்வத்தை “அந்த ஆண்டவன் வந்து காப்பாற்றித் தர வேண்டும்...” என்பதற்காக அந்த ஆண்டவன் பெயரைச் சொல்லிப் பல பூஜை செய்கிறார்கள் இந்தப் பாமர மக்கள். “பெரும்பாலான பூஜை முறையே... இப்படித்தானப்பா உலகெங்கிலும் உள்ளது...!”

இந்த மனிதர்களை மாற்றிடவும் நல்வழியில் அழைத்துச் செல்லவும் நல் வழியில் பல சாமியார்கள் (நல் வழிச் சாமியார்கள்) இன்றும் உள்ளார்கள்... அன்றும் இருந்தார்கள்...!

பல ஜெபங்களை ஜெபிக்கச் சொல்லி மக்களின் மனதினிலே நல்ல உணர்வுகளை ஆழமாகப் பதிய வைக்க நல் வழிச் சாமியார்கள் எல்லாம் நாட்டம் கொண்டு நடந்திட்டார்கள்.

இன்னும் சில இடங்களில் சில சாமியார்கள் அந்த ஆண்டவனின் சக்திக்குப் பல வகை நாமங்களைச் சூட்டி புவனேஸ்வரி பூஜை... சௌண்டேஸ்வரி பூஜை... காமாட்சியம்மன் பூஜை...! என்று இன்னும் பல நாமங்களைச் சூட்டி அந்தச் சக்தியின் நிலைக்கே பல யாகங்களை வளர்த்துப் புகை மண்டலங்களை எழுப்பி
1.தான் வாழ தன்னைச் சார்ந்தவர்கள் வாழ தன்னை நம்பி வருபவர்களை வாழ வைக்க
2.இப்படியும் பல நிலைகளைச் செய்கிறார்கள்.

நல்ல மணத்தைக் கொண்ட புகை மண்டலத்தை எழுப்பி அந்த ஆண்டவனை ஜெபிக்கும் பொழுது எந்நிலையில் நாம் ஜெபிக்கின்றோமோ அந்நிலையில் அவர் அவர்கள் ஜெபிக்கும் நிலைக்கு அந்தச் சக்தி நிலை வருகிறதப்பா...!

1.ஆண்டவனை வணங்கிட யாருக்கும் யாரும் தூது வேண்டாமப்பா...!
2.எல்லோருமே அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி அவன் அருளை எப்படியும் பெறலாமப்பா..!
3.அவனவன் எண்ணத்திலும் சுவாசத்திலும் தான் எல்லாமே இருக்கின்றதப்பா...!

ஓ...ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா...!
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா...!

உன்னை நான் பார்த்திடவே
என்னில் உன்னைக் கண்டிடவே
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா...!

உன் வழியில் சத்தியத்தை
உன் வழியில் தர்மத்தை
உன் வழியில் நியாயத்தை
உன்னை எண்ணும் இதயத்தில்
ஊன்றிடுவாய் ஈசனின் சக்தியே

ஓ...ம் என்ற நாதத்தில் உருளுகின்ற உலகினிலே
உதித்துள்ள உயிரணுவாக
உன்னையே... நான் வணங்குகிறேன் ஈஸ்வரா.. குருதேவா

April 28, 2021

நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

 

உதாரணமாக நாம் வசிக்கும் இடத்தில் ஒரு வேப்பமரத்தின் வித்து கீழே விழுந்தால் அது முளைத்து வளர்ந்து மரமாகி விட்டால் பின் அதை வெட்டுவதற்கு அரிவாள் கோடாரி எல்லாமே தேவைப்படுகின்றது.

பந்தோபஸ்தாக அதை அப்புறப்படுத்துவதற்கு எத்தனையோ ஆள்களும் தேவைப்படுகின்றது. நம் வீட்டுப் பக்கம் விழுந்து சேதாரம் ஆகாதபடி அதையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அப்போதுதான் அதை வெட்ட முடியும்.

இதைப் போன்றுதான்
1.நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்
2.தீமைகளை நமக்குள் வளரவிடக் கூடாது.
3.அதற்காக வேண்டித் தான் தியானத்தின் மூலம் உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றோம்.

நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்றிலே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது. அதை எடுத்து வளர்த்துக் கொண்டால் உங்களைக் காக்கும் சக்தியாக அது நிச்சயம வரும்.

உதாரணமாக... ஜோசியக்காரன் நம்மிடம் ஏழரை நாட்டுச் சனி பிடித்திருக்கிறது. அதனால் பணம் விரயமாகும் தொழில் நஷ்டமாகும் எதிரிகள் அதிகமாக வருவார்கள் என்று சொல்வார்கள். அதைப் பதிவு செய்து விட்டால் ஜோசியக்காரன் சொன்னபடி தான் இங்கே உணர்வின் இயக்கம் ஆகின்றது.

அந்த அடிப்படையில் தொழில் செய்தால் அது நஷ்டமாகி விடுகிறது... இடைஞ்சல் தான் வருகின்றது.

ஒரு சிலர் (ஜாதகம் பார்ப்பவர்கள்) இதையே குறிப்பாகப் பார்த்து எடுத்துக் கொள்வார்கள். இந்த உணர்வுகள் வளர்ச்சியாகிச் சொன்னவுடனே அதைக் கேட்டவுடன் நமக்குள் பதிவாகின்றது. இதெல்லாம் வாக்குவன்மை தான்...!

ஜோசியக்காரன் சொன்னதை நுகர்ந்தால் உடலில் பதிவாகிறது.
1.நல்லது சொன்னால் ஓரளவுக்குப் பலிக்கலாம்
2.ஆனால் கெட்டதை அதிகமாகச் சொல்லி விட்டால் அது அதிகமாகிறது.
3.(பெரும் பகுதி ஜோசியக்காரர்கள் நல்லதை அதிகம் சொல்வதில்லை).

கெட்டதை எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் சாங்கியத்தைச் செய்தால் நீக்கி விடலாம் என்று அதையும் சொல்வார்கள். அவன் சொன்னபடி காசைக் கொடுத்துத்தான் நீக்குவதற்குப் பார்க்கின்றோம்.

இருந்தாலும் அப்படி ஜாதகமும் ஜோதிடமும் பார்க்கும்போது
1.ஒரு விபரீத விளைவுகளைச் சொன்னார்கள் என்றால் அதனால் நாம் அதிர்ச்சி அடைந்து விடுகின்றோம்.
2.ஆக மொத்தம் காசு கொடுத்துத் தான் தீமைகளை நீக்க வேண்டும் என்ற நிலை வருகிறது.

ஆனால் நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ அதைத்தான் உயிர் இயக்குகின்றது. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிச் சென்ற அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து நம் உடலுக்குள் அதை ஏங்கிப் பெற்றால் உயிர் அதனின் கருவை உடலிலே உருவாக்குகின்றது.

அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்க்கத் தொடங்கினால் தீமையான உணர்வுகளை மாற்றி அமைக்கலாம். ஞானிகள் காட்டிய வழிகள் இது தான். பல சரக்குகளைப் போட்டு ஒரு குழம்பை எப்படிச் சுவையாக வைக்கின்றோமோ அதைப் போல் நல்லதாக மாற்ற முடியும்.

ஆறாவது அறிவின் துணை கொண்டு பல உயிரினங்களின் அணு செல்களை எடுத்துப் புது விதமாக பல பல உயிரினங்களை விஞ்ஞானி மாற்றியமைக்கின்றான். விஞ்ஞானிகள் செய்வதை எல்லாம் இன்று நாமும் பார்க்கின்றோம்.

அதைப் போன்று தான் அந்த அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால் பகைமை உணர்வுகளையும் தீமையான உணர்வுகளையும் மாற்றிவிட முடியும்.

இதை எல்லாம் எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வெறுப்பு வேதனை கோபம் எல்லாம் நம்மை அறியாமலே வருகின்றது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். நம்மை நாம் அறிதல் வேண்டும்.

1.பிறிதொரு உணர்வு எப்படி இயக்குகின்றது...?
2.அந்தப் பிறிதொரு தீமையான உணர்வு நமக்குள் புகாது எப்படித் தடுக்க வேண்டும்...?
3.அதற்குண்டான உபாயங்களையும் சக்திகளையும் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேசமாகக் கொடுக்கின்றோம்
4.அதை நீங்கள் எடுத்தால் நிச்சயம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மெய் ஞான விழிப்புப்படுத்தும் திறவுகோல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

இன்றைய உலகில் பல வகையான வாகனங்கள் உண்டு. ஒவ்வொன்றும் மனிதன் தனது எண்ண ஆற்றல் கொண்டு வேகமாகச் செல்லும் நிலைக்கு உருவாக்கப்பட்டது தான்.

ஆக அந்தந்த வாகனங்களின் கதிக்கொப்ப அது ஓடுவதைப் போன்று
1,மனித ஆற்றலின் உந்து விசையையும் அதிகப்படுத்தினால்
2.வேகம் கூட்டும் வாகனங்களின் ஆற்றலின் அறிவுத் திறன் வளர்ந்ததைப் போல்
3.மெய் ஞான வளர்ச்சியில் விருப்பப்பட்டுப் பயணிக்கும் பாதையே மனித சக்தியைக் கூட்டும் எண்ண ஆற்றல் ஆகும்.

உலகம் எப்படித் தன் ஈர்ப்புப் பிடிப்புடன் தன் வளர்ப்பின் செயலுடன் சுழன்று வருகிறதோ அதைப் போல்
1.நம் உயிராத்மாவை இந்தப் பூமியின் ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபட்டுச் செல்ல
2.தன் எண்ணத்தின் உந்து விசையால் நீரமிலக் காற்றில் விண்ணுலக ஒளி அமிலத்தைச் சுவாசத்தால் உடல் எடுக்க
3.நாம் மேற்கொள்ளும் தவத்தின் தனித்துவத்தால் தரணியின் மெய்யை உணர்ந்து
4.மெய் ஞான விழிப்பெய்த மூல நாடியாக மூச்சலையின் சக்திதனை மூலமாக்கிய மகரிஷிகளின் சக்திகளை
5.நாமும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உணர்வின் எண்ணத்தில் செழிப்பின் ஆசைதானப்பா மனிதச் செயலின் மூலாதாரமே. ஆனால் வித்தை காணும் ஆசை ஓட்டத்தில் “பேராசையின் எண்ணம் கொண்ட விளைவுதானப்பா...” இன்றைய மனித நிலை.

யுகங்கள் யுகங்களாக மகரிஷிகளின் தொடர்பலைகள் வளர்ச்சியின் செயலுற்று அவர்கள் வழி வகுத்துத் தந்த அந்த மெய்ஞான விழிப்பே மனிதனின் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செயலாற்றும் “திறவு கோல்” ஆகும்.

இன்றைய விஞ்ஞான கலியுகத்தில் மனித ஞானத்தை விழிப்புறச் செய்ய மெய் ஞானிகள் கொண்ட ரிஷிகளின் தொடர் அலையின் கருத்தின் கோர்வைகளை... அவகள் கண்ட உண்மைகளை இங்கே தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.

செடி கொடிகள் எப்படித் தனக்கொத்ததை ஈர்த்து... வளர்ந்து... விளைந்த பின் பலன் தருவதைப் போல் நாமும் அந்த மாமகரிஷிகள் காட்டிய அருள் வழியில் நம்முடைய சுவாச அலையின் செயல் தன்மையைச் சீராக்கிடல் வேண்டும்.

1.இதைப் படித்துப் பதிவாக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் தெய்வ சக்தி பெற்று
2.இந்தப் பூமியின் சுவாச கதியில் ஒளிச் சரீரமாக உங்கள் ஆத்ம உயிரை மெய் ஞான விழிப்புப்படுத்துங்கள்
3.விஞ்ஞானத்தால் உருவான நஞ்சினை அகற்றும் வல்லுநராக நீங்கள் மாறுங்கள்...
4.ஒளியான அண்டத்தையே உங்களால் படைக்க முடியும்.

April 27, 2021

நடப்பதெல்லாம் நம் நன்மைக்குத் தான்..! என்பது வெறும் சொல் அல்ல - ஈஸ்வரபட்டர்

 

வாழ்க்கையில் வரும் மோதல்களில் இருந்து
1.சஞ்சலமற்ற... சமமான நிலை பெற்றிட வேண்டும் என்றால்...
2.எண்ணம் பரிசுத்தமாக நிலை பெற வேண்டும் என்றால்... எடுக்க வேண்டிய முயற்சி
3.நுண்மின் காந்த ஒளியைத் தியானத்தின் மூலம் ஈர்த்துக் கொள்வதே ஆகும்.

பஞ்சேந்திரியங்கள் கொண்டு உணர்ந்திடும் தன்மை போல் ஆத்ம வலுவின் தொடருக்கு மனத் திறன் பெறவேண்டும். மனத் திறன் என்றால் என்ன...?

1.மனச் செவி
2.மனச்சுவை
3.மனத்தால் மணம் நுகர்தல்
4.சகலமும் பேரின்பமாக ஆனந்தத்தில் என்னும் மனஸ்பரிச உணர்வு என்ற இவை அனைத்தும்
5.ஸ்தூல (திட) சரீரம் கொண்டு சூட்சம ஒளிச் சரீரம் பெற்றிடும் அகச் செயலில் வலுக் கொள்ளும் நிகழ்வுகளப்பா...!

அனைத்திற்கும் தியானமே மூல காரணம்.

மூல காரணம் எனும் ஊன் தன்மையாகச் சரீரம் முழுமைக்கும் மெய் ஒளி பரவி உயிரான்ம சக்தியாக லிங்க உடலாக வெளித் தோன்றாத் தன்மையாக “என்றும் நிலை பெற முடியும்...”

ஆகவே அந்த ஆதிசக்தியுடன் ஒன்றிடும் சக்தி பெற வலுவின் வலுவாகும் மூலச்சக்தியின் குணத் தன்மைகளை உணர்ந்து கொள்ளும் பொழுது இந்த மானிடப் பிறவி... “கிடைத்தற்கரிய பிறவியாக அமைகிறது...!”

ஜீவன் பெற்று எத்தனையோ பிறவிகள் பெற்றே வாழ்ந்திடும் உயிர்த் தொகைகளின் சுவாச அலைகள் ஒலி ஒளி அலைகளாகக் காற்றில் பரவிப் படர்ந்தே உலவிக் கொண்டே உள்ளது.

பகுத்தறியும் ஆற்றல் கொண்ட மனிதனின் பரபரப்பாக வாழும் வாழ்க்கைக் தொடர் என்ற இன்றைய கால கட்டத்தில்... தான் கொண்ட எண்ணங்களுக்கொப்ப காற்றிலே கலந்த அந்தச் சுவாச கதியை ஈர்த்து வினைச் செயலாகப் பற்பல வாழ்க்கை அனுபவங்களில் பெற்ற பயன் தான் என்னப்பா...?

1.சுவாசிக்கும் சுவாசமானது... சரீரத்தினுள் அமையப் பெற்றுள்ள முக்கிய நாடிகளில் ஓடி
2.சிரசில் அமைவுற்ற கட்டளைக் கேந்திர நாடிகளுடன் தொடர்பு கொண்டு
3.புறத் தொழில் கதிப்படும் உறுப்புகளாகிய கண் காது மூக்கு வாய் இவைகளில் ஓடி
4.அக்கினி கேந்திரமாகிய மூலாதாரம் எனப்படும் குதகுய்ய நாடிகளுடன் இணைந்து செயல்படும் செயலில்
5.அந்தந்த அவயங்களில் அமைவுற்ற காற்றுகள் தம் தம் செயலுக்கு உறுப்புகளின் நாடி வழியாக ஓடி
6.உடலுக்கு வெப்பத்தை உயிர் ஜீவனாக அளித்திடும் மூலாதார நாடிகளிலே
7.சரீர இயக்கத்தின் வினைச் செயல் மனிதன் கொண்ட எண்ண நிலைக்கொப்ப அனைத்துச் செயல்களும் நடைபெற்று ஓடிக் கொண்டுள்ளது.

செவிகளில் வலம் இடமாக ஓடிடும் நாடிகள் ஓர் ஓசையின் அலைகளால் மோதுண்டவுடன்
1.அந்த ஓசையின் பொருளை அந்தக் கணமே அறிந்து கொள்ளும் மிக நுண்ணிய கால அளவில்
2.சரீரத்தினுள் முக்கிய நாடிகளின் ஈர்ப்பின் செயலாக மூச்சலைகள் ஓடி
3.சிரசின் கட்டளைக் கேந்திரத்தில் பிடர்தல் (என்ற) ஓசைகள் மோதியவுடன் - செவியில் ஏற்படும் அதிர்வுகளில்
4.அறிந்து கொண்டிடும் அறிவாக மூலாதார அக்கினியின் தொடர்பு உண்டப்பா...!

வெப்பத்தாலோ மின்சாரத்தாலோ செயலுறும் இன்றைய இயந்திரங்கள் எதையும் ஒப்பிட முடியாத மனோசக்தித் திறன் தியானத்தின் மூலம் எடுக்கும் மிக மின் நுண் காந்த அலைகளால் செயல்படும் நிலை உணரத்தக்கது.

இந்தச் சரீர வாழ்க்கையில் எதிர் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் செவி நாடிகள் நம் ஆத்மாவின் பதிவுச் செயலுக்கு முக்கிய பங்கேற்கின்றன.

1.எண்ணங்களில் மோதல்களால் (உணர்வுகளால்)
2.கனம் கொண்ட சுவாச அலைகளைச் சுவாசமாக ஏற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம்
3.உடனுக்குடன் உயர் மின் நுண் காந்த அலைகளை ஈர்த்து
4.அனைத்துமே நமக்கு நன்மை அளித்திடும் செயலே...! என்ற மனதின் திடம் கொண்டு
5.“சுபம் சுபம் சுபம்...!” என்ற ஒலி நாதத்தை ஏற்படுத்தி
6.நம் ஆத்ம பதிவில் நல்மதியின் உயர் ஞான ஒளியாக
7.”ஆத்மாவின் மூலம்” வலுப் பெறவேண்டுமப்பா..!

ஏனென்றால் உயர் ஞானமாக ஆக்கப்படும் செயல் அனைத்தும் நன்மையே...!

சுபம்... சுபம்... சுபம்...!

உங்கள் பார்வை அனைவரது நோய்களையும் போக்கக்கூடிய சக்தியாக மலரட்டும்

 

இன்றைய விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கையாக வாழ்ந்து... விஞ்ஞான அறிவால் பூமியில் தீயவினைகள் பரவியிருக்கும் இந்த நேரத்தில்
1.மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொருவரும் பெற்று... அருள் ஞான வாழ்க்கை வாழ்ந்திடவும்
2.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து பேரின்பப் பெரு வாழ்வு வாழ்ந்திடவும்
3.சர்வ பிணிகளையும் அகற்றும் சக்தி பெற்று சர்வ நஞ்சுகளையும் வென்றிடும் அருள் சக்தி பெற்று
4.உலக மக்கள் அனைவரையும் அருள் சக்தி பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெற
5.எமது அருளும் அகஸ்தியனின் அருளும் உறுதுணை செய்யும்.

உங்கள் பார்வையில் சர்வ பிணிகளையும் போக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள். உங்களைப் பார்ப்போர் அனைவரையும் நலம் பெறச் செய்யும் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.

நீங்கள் பார்ப்போர் அனைவரும் அவர்கள் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெற்றிட... குரு அருளும் எமது அருளும் உறுதுணை செய்யும்.

மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழ்வோம் இருளை வென்றிடும் மெய்ப்பொருள் காண்போம். அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் ஞானம் பெறுவோம். தெளிந்த மனத்துடன் வாழ்வோம். மலரைப் போல மனம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியுடன் வாழ்வோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் நலம் பெற்று விஞ்ஞான அறிவால் விளைந்த சர்வ நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம்.

உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறும் சக்தியாக ஒன்றுபட்டு வாழ்ந்திடத் தியானிப்போம்.

1.இனி வரும் காலங்களில் மெய் வழி செல்லும் மெய் வழி பெறும் அருள் ஞான வாழ்க்கையாக நாம் வாழ்வோம்.
2.உலக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திட நாம் தியானிப்போம்... தவம் இருப்போம்

உலக மக்கள் அனைவரும் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் அருள் உணர்வு பெற நாம் தவம் இருப்போம். அருள் வழி வாழ்வோம்... அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்திடும் அருள் ஞானம் பெற நாம் தவம் இருப்போம்..!

April 26, 2021

நம் எண்ணங்களை ஒருநிலைப்படுத்துவதற்குத் தான் தியானம்...! - ஈஸ்வரபட்டர்

 

1.கண் கொண்டு பார்த்தல் (காட்சிகளும் காட்சிப் புலனறிவும்)
2.நாசி கொண்டு சுவாசித்தல் (சுவாச ஓட்ட வாசனைகளை அறிந்திடும் அறிவு)
3.வாய் கொண்டு சுவைத்தல் (சுவை குண அறிவு செயல்பாட்டில் உணர்தல்)
4.செவிப்புலனறிவு (ஓசைகளின் தன்மைகள் தெளிதல்)
5.தொடு புலனறிவு (ஸ்பரிசித்தலில் உணர்வு கொண்டு அறிந்து கொள்தல்) என்ற
6.இந்த ஐந்து பஞ்சேந்திரியங்கள் மனித உடலுக்குள் செயல்படுகின்றன.

அவைகள் செயல்படும் நிலையில் புறத்திலிருந்து வரும் மோதல்கள்... அந்த அமில குணத்தன்மைகளை அவயங்கள் தம் தம் செயலுக்குச் சரீரத்தின் கட்டளைக் கேந்திரமாகச் “சிரசின் உச்சிப் பகுதியில்...” செயல் கொண்டே உள்ளது.

ஆகவே அகச் செயலாகச் சுவாச ஓட்டங்களின் தொடருக்கு
1.நொடிக்கும் குறைவான கால ஓட்டமாகச் செயல் கொண்டு
2.சரீர இயக்கமே ஆத்ம ஒளியால் பகுத்தறிவு எனும் ஞான தீபமாகச் செயல் கொண்டு
3.அறிதல்... உணர்தல்... தெளிதல்... என்றிட்ட முத்தொடர் செயலில்
4.ஆக்கபூர்வமானவனாக நாம் ஆகுதலே மெய்ஞான விழிப்பு.

அந்த அகச் செயலில் எண்ணத்தின் கூர்மையை ஒரு நிலைப்படுத்தப்படும் பயிற்சி வழித் தொடர்பே தியானம் ஆகும்.

மனம் ஒருநிலைப்பட்டபின் தான் தியானம் என்றால் எப்பொழுதப்பா உன் மனதை ஒருநிலைப்படுத்தப் போகின்றாய்...?

தியானத்தில் அமர்ந்தவுடன் வந்து வந்து மோதிடும் “வாழ்க்கைச் சாகர எண்ண நிலைவோட்ட அலைகள்” படிப்படியாக விலகி மனதின்கண் அமைதி கொள்ளவே இந்த எளிய தியானத்தைக் கொடுக்கின்றோம்.

நாங்கள் “ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா...” என்றே புருவ மத்தியில் எண்ணித் துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் பேரருள் பேரொளியை ஈர்த்து எண்ணத்தின் வலுவைப் பெற்று விட்டால்
1.உயிராத்மாவின் பேரானந்த நிலையைச் சொல்லால் விளக்கிக் கூற முடியாது
2.“உணர்ந்தறியும் அனுபவ ஞான ஆனந்த நிலையே நித்திய சுபம்...!”

சொர்க்கத்தை அடைய வேண்டும் என்று முயற்சித்தவர்களில் “முழுமை அடையாதவர்கள் உணர்வு நம்மை இயக்கிவிடக் கூடாது”

 

இயற்கையின் நியதிகள் எவ்வாறு இயக்குகின்றது என்றும்... பிறப்பு இறப்பு என்ற இயற்கையின் சுழற்சியிலிருந்து மனிதன் எப்படி மீள வேண்டும் என்றும் எண்ணி இந்தப் பூமியில் முயற்சித்தவர்கள் எத்தனையோ பேர்...!

1.ஆனால் எத்தனையோ பேர் முயற்சி செய்தாலும் அதிலே முழுமையடையாது மடிந்தவர்கள் உண்டு
2.முழுமை பெறும் வழிக்குச் சென்று... முழுமை பெற்றவர்கள் “சிலரே” உண்டு.

பலர் முழுமை பெறாது தோல்வி அடைந்து... அந்த முழுமையற்ற நிலைகளாகக் குறை கொண்ட உணர்வுகளை உடலில் விளைய வைத்து அப்படி வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் அணுக்களும் இந்தக் காற்றிலே உண்டு.

அதே சமயத்தில் முழுமை பெற்று அழியாத நிலையில் எண்ணிலடங்காதோர் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

ஆனால் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்ற ஆவேச உணர்வுகள் மனிதனுக்குள் உருவாகி
1.அதற்காக “நான் திருமணமே செய்யமாட்டேன்...!” என்ற உணர்வின் வேக அழுத்தம் கொண்டு செயல்பட்டால்
2.திருமணம் ஆகாமலே வெறுக்கும் தன்மையே அந்த உடலிலே வளருகின்றது

அப்படி வெறுக்கும் தன்மை வரப்படும் பொழுது அவன் வளர்ச்சியின் தன்மை குன்றுகின்றது. மற்றொன்றை வளர்க்கும் தன்மையும் இழக்கப்படுகின்றது.
1.ஆண்மை என்ற உணர்வின் தன்மை வலுவாக உருவாக்கி
2.கரு என்ற உணர்வை உருவாக்காதபடி
3.வளர்ச்சி பெறும் உணர்வின் தன்மை தடைப்படுத்தி விடுகின்றது.
4.அதற்கு மேல் வளர முடியாத நிலையும் வருகின்றது.

இப்படிப்பட்ட வளர்ச்சி பெற்றவர்கள் சாமியாராகச் சென்றாலும் திருமணமாகிக் கணவன் மனைவி என்று ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் உடலில் விளையும் அணுக்கருத் தன்மை மாறுபட்டு அவரின் செயலாக்கங்களும் மாறுகின்றது.

திருமணமே செய்யமாட்டேன் என்ற இவரின் உணர்வைப் பின்பற்றி வரும் சீடர்களின் உணர்வுகளிலும் இது ஆழமாகப் பதிவாகின்றது. ஏனென்றால் “குரு போதிக்கின்றார்...” என்று அந்தக் குரு சென்ற பாதையில் அவர்களும் செல்லத் தொடங்குகின்றனர்.

இருந்தாலும் குரு என்பவர் கடைசியில் மடிந்தார் என்றால் சீடர்கள் என்று அவர் வளர்த்த நிலைகள் கொண்டு அவரின் உடலுக்குள் தான் குருவின் உயிரான்மா செல்கிறது.

1.குருவின் உணர்வுகளை எந்தச் சீடன் வளர்த்துக் கொண்டு
2.குரு பக்தி என்றும்... தனது குரு...! என்றும் நேசிக்கின்றானோ
3.குரு இறந்த பின் அவன் உடலுக்குள் தான் அவர் செல்ல முடிகிறது.

உடலுக்குள் வந்த பின் குரு கண்டுபிடித்த உணர்வுகள் எல்லாம் சீடனின் உடலுக்குள் இயங்கத் தொடங்குகின்றது. இப்படி அந்தச் சீடனின் உடலுக்குள் தான் இவர்கள் நுழைய முடிகின்றதே தவிர சொர்க்கம் அடையும் நிலை இல்லை.

சீடன் குரு மீது பற்று கொண்ட உணர்வும் குருவினுடைய உணர்வும் ஒன்றுபடும் நிலையில் அந்த உயிரான்மா வெளி வந்தால் அது இயக்கி அந்த உடலுக்குள் “சாகாக்கலை...” என்ற நிலையாகத் தான் மாறுகின்றது.

சீடனின் உடலுக்குள் புகுந்த பின் அவன் எடுக்கும் ஆசையின் உணர்வுகள் கொண்டு வேதனை என்ற உணர்வை அவன் வளர்த்து விட்டால் விஷமான உணர்வின் தன்மையையே உடலுக்குள் வந்த குருவும் வளர்க்க நேர்கின்றது.

ஆனால் வேதனை என்றால் கடும் விஷம். அவன் செய்தான்... இவன் செய்தான்..!. என்ற நிலையில் மாறுபட்டுச் செயல்படும் நிலையே இங்கே வருகின்றது.
1.அவர்களுடைய ஆசையின் நிலைகள் செயல்படும் போது
2.வளர்ச்சியின் பாதைக்குச் செல்ல முடியாதபடி தேய்பிறை என்ற நிலையை அடைகின்றனர்.

சொர்க்கம் அடைந்தார் என்று இவர்கள் பட்டத்தைக் கொடுக்கலாம்.
1.ஆனால் அந்த நிலையை இவர்கள் அடைவதில்லை என்பதை
2.குருநாதர் காட்டிற்குள் எம்மை (ஞானகுரு) அழைத்துச் சென்று சொர்க்கம் என்பது எது...? என்று தெளிவாகக் காட்டினார்.

April 25, 2021

தினசரி உறங்கப் போகும் முன் நாம் செய்ய வேண்டிய பயிற்சி - ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு நொடியிலும் மனிதனுக்குள் ஓடும் பலதரப்பட்ட எண்ணத்தின் சுவாசங்கள் வீரியமாகச் செயல்படும் தன்மைக்கு... “சங்கிலித் தொடர் போல் அந்த எண்ண ஓட்டமே...” ஒவ்வொரு நாளும் கொள்ளப்படும் செயலாக நிகழ்கிறது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்... தெரியாதது இல்லை)

அவ்வாறு எடுக்கும் சுவாச ஓட்டத்தின் கனத்தினால் மீண்டும் மீண்டும் அந்தச் சுவாச ஓட்டத்தின் வீரியம் கொண்ட எண்ணத்தின் பதிவு நிலையாகச் செயல் கொள்கிறது.

அதுவே “விதியாகவும்” மாறுகிறது.

வாழ்க்கையில் அன்றாட அலுவல்களில் பலரைச் சந்திக்கும் நிகழ்ச்சிகளில் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்த ஜீவ பிம்பச் சரீரத்தின் காந்த ஈர்ப்பினால் உடலுக்குள் ஈர்த்துக் கொண்டே தான் உள்ளோம்.

அதிலே எந்தெந்தக் குணத் தன்மைகளை ஈர்த்து நமக்குள் பதிவு செய்கின்றோமோ அந்தப் பதிவு நிலைக்கொத்த குணத் தன்மைகளுக்குத் தக்க ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் அதை எண்ணியே வலுக்கூட்டி ஆத்மாவும் சரீரமும் பாதிப்பு ஏற்படுத்திக் கொள்ளும் நிலை ஆகிறது.

அன்றாடம் உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சரீரத்தைத் தூய்மைப்படுத்திடும் செயல் போன்று
1.நாம் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைகள்... உணர்வுகள் மாற்றம் கொள்ளும் கால கட்டத்தில் எல்லாம்
2.எண்ணத்தை வானை நோக்கி உயர்வாகச் செலுத்தி
3.ஜீவ காந்தச் சரீரம் கொண்டு உயர் காந்த மின் அணுக்களை ஈர்த்துக் கொண்டு
4.சுவாச கதியில் உணர்வுகள் மாற்றம் கொள்ளும் செயலின் வீரியத்தை
5.தியானத்தில் ஈர்த்துக் கொள்ளும் நற்சுவாச அலையால் சமன்படுத்தி மனதின் திறத்தைக் காத்திடல் வேண்டும்.
6.அதனால் சரீரமும் பாதிப்படையாது... பல நன்மைகளும் ஏற்படுமப்பா...!

புலரும் காலைப் பொழுது முதற் கொண்டு இரவு உறங்கும் காலம் வரை சரீரத்தில் ஈர்த்துக் கொண்ட அணுக்களின் குணத் தன்மைகளில்...
1.ஈர்க்கப்பட்ட அந்த அணுக்கள் அனைத்தும்
2.உறங்கும் காலப் பொழுதில் மீண்டும் சுவாசத்தின் நிலையில் ஜீவன் கொண்டிடும் செயல் சூட்சமமாக நிகழப் பெறும்.

அதிலே நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால் கெட்டது ஜீவன் பெறாது... அதனின் வினைச் செயலை மாற்றி... நல்லாக்கம் பெற்றே வலுவாக்கிடும் நிலையை “உறங்கும் முன் எடுக்கும் தியானத்தின் தொடரில் கொண்டு வர வேண்டும்...!” (இது மிகவும் முக்கியமானது).

1.எங்கள் உடலுக்குள் இருக்கும் அத்தனை உயிரணுக்களும்
2.ஒளி அணுக்களாகச் சக்தி பெற்றிட வேண்டும் ஈஸ்வரா...! என்ற எண்ணம் கொண்டு
3.உயர் மின் காந்த அணுக்களை ஈர்த்துப் பல முறை உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். (படுக்கும் முன்)

காலையிலிருந்து இரவு வரை நம் சுவாசத்தில் ஈர்க்கப்பட்ட அந்த மாற்று நிலை கொண்ட உயிரணுக்களும்
1.இந்தச் சரீரத்தினுள் நற்சக்தி பெற்று
2.நல் அணுக்களாக மாற்றம் கொள்ள வேண்டும் என்ற
3.உயர்ந்த எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்து உறங்கினால்
4.இரவு முழுவதும் வலுக் கொண்டு ஓடும் இந்தத் தியான நினைவோட்டத்தால்
5.உயர் ஞானம் சித்திக்கும் செயலாக நல் நிலை பெற்றிட முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஒளிப் பிளம்பலைகளை நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்க வேண்டும்

 

ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து இரவு வரையிலும் சதா எத்தனையோ தீமைகளையும் நன்மைகளையும் நுகர்ந்தறிந்து கொண்டே உள்ளோம்.

அது எல்லாம் நம் உடலுக்குள் ஓ...ம் நமச்சிவாய ஓ...ம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.

அப்படி மாறிக் கொண்டே இருந்தாலும் அந்தத் தீமையான உணர்வுகளை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் எடுத்தேயாக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா... என்று உடலுக்குள் செலுத்தினால்
1.தீமைகளை மாற்றிடும் சக்தியாக அது வலுப் பெற்று
2.நல்ல உணர்வுகளாக மாறி... தீமையிலிருந்து நம்மை விடுபடச் செய்யும் என்று
3.ஞானிகள் இதை நமக்குத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

அதே சமயத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம் மட்டும் பெற்றால் பத்தாது.

நாம் பெற்ற சக்திகளையும் நாம் கண்ட உண்மை உணர்வுகளையும் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டுமென்று கணவனும் தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் இந்த இரு உணர்வும் ஒன்றி உருவாக்கினால்தான் ஒளியான அணுத் தன்மை அடைகின்றது,

இதை ஒவ்வொருவரும் பழகிக் கொண்டால் இன்றைய விஞ்ஞான உலகில் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அது நம்மைப் பாதிக்காதவண்ணம் மாற்றிக் கொள்ள முடியும்.

1.27 நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் அந்தத் தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது ஒளிப் பிளம்பலைகள் பரவுகின்றது.
2.அந்த ஒளிப் பிளம்பலைகள் பரவி வரும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தால்
3.அதிலிருந்து வரக்கூடிய அணுக்களைச் சுவாசித்து நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அதைச் சேர்ப்பிக்கின்றது.

27 நட்சத்திரங்களும் ஒன்றுடன் ஒன்று மின்னலாகத் தாக்கி அது உணர்வலைகளாகப் பரப்பப்படும் போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டால் ஒளிக் கற்றைகளாக உடலுக்குள் பரவும்.

ஏனென்றால்...
1.நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக்கற்றைகள் பளீர்... பளீர்... என்று மின்னும்.
2.அந்த உணர்ச்சிகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஏங்கிப் பெறும் போது நம் ஆன்மாவாக மாறுகிறது.
3.ஆன்மாவிலிருந்து சுவாசித்து உடலுக்குள் செலுத்தும் போது அந்த உணர்வின் அணுக்கள் ஒளியாக மாறும்.

ஆகவே உயிர் எப்படித் துடிக்கின்றதோ இதைப் போன்றுதான் இந்த உயிர் அணுவின் தன்மை இணைந்து இந்த உடலை விட்டுச் செல்லும் பொழுது எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்தோமோ அங்கே நம்மை அழைத்துச் சென்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில் ஏழாவது நிலையாக வளர்ச்சி பெற்று அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைய முடியும்.

April 24, 2021

நாடிகளின் துடிப்பு மாறுபட்டு அதனால் நோய் எப்படி உருவாகிறது...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

வாழ்க்கை நடைமுறையில் மனிதன் எடுக்கின்ற எண்ணத்தின் குணங்களாக
1.மோகம் (மயக்கம் – மருள்)
2.கோபம் (அவசரம் - ஆத்திரம் - ஆவேசம்)
3.காமம் (அதி ஆசைகள் – ஏக்கம்)
4.வெறி (மதம் – செருக்கு)
5.பொறாமை (வெறுப்பு - விரக்தி - குறுகிய மனம்)
6.அதி பயம் (கலக்கம்) போன்ற இந்த ஆறு குணங்களும் இடும்பச் சித்தன் காட்டிய தீதெண்ண குணங்கள்.

இந்தக் குண எண்ண ஓட்டங்களால் மனிதனின் நினைவுகள் அதிலே சிக்கப்பட்டு அந்தச் சுவாசமே “கனம் கொண்டதாக...” ஈர்க்கப்படுகின்றது.

அந்தக் கனமான சுவாசத்தின் அலைகள் சரீரத்தினுள் இரத்த ஓட்ட நாளங்களில் செயல் கொள்ளும் சுவாச நாடிகளின் வழியே ஓடி சுவாச நாடிகளின் முக்கிய கேந்திரங்களாக அந்தந்த இடங்களில் அமையப் பெற்ற மூலம்... மூலாதாரம்.... நாபி... இருதயம்... கண்டம்... நெற்றி... தலையின் உச்சிப் பகுதி... முதலிய அமைப்புகளிலும் ஓடுகின்றது.

1.சரீரத்தில் ஈர்க்கப்படும் இத்தகைய உணர்வுகள் இடும்ப குண வசமாக மனிதனுக்குள் வந்து
2.அந்தந்த எண்ணத்தின் தொடருக்கு நாடிகளில் ஓடிடும் மூச்சலைகள் இரத்த நாளங்களில் ஓடும் செயலில்
3.சரீர அவயங்களில் தன் தன் இயக்கத்தில் (நாடிகளில்) செயல்படும் நிலையே
4.அதி தீவிரச் செயல் நிகழ்வாகச் சரீர இயக்கத்தில் செயல்பட்டு
5.அந்தத் தீதெண்ண குணங்களின் கனம் மிக்க சுவாசத்தின் ஓட்டத்தினால் ஏற்படுவதே உடல் நோய்கள்.

(1). இருதய வலி:-
சுவாச ஓட்டம் சரீரத்திற்குள் சென்று வெளி வரும் செயலில் இருதயப் பகுதியில் இருந்து ஓடும் தாய் மூச்சு நாடி நாபிப் பகுதியில் நீரமிலச் சக்தியுடன் இணைந்து செயல்படுகின்ற செயலில் கோபத்தின் கனம் மிக்க சுவாச ஓட்டத்தால் என்ன ஆகிறது...?

அந்தத் தாய் மூச்சு தாக்கப்பட்டு அதனுடன் இணைந்த மார்பு நாடியின் செயலுக்கும் தடை ஏற்படுத்தும் பொழுது உண்டாவதே இருதய வலி.

(2). வாயு... பித்தம்... மன நோய்:-
குறுகிய மன நிலை... மருள்... பொறாமை... ஏக்கம்... உள்ளிட்ட கனம் கொண்ட சுவாசத்தின் தன்மையால் நீரமில சக்தி கொண்டிட்ட நாபி நாடியின் செயலுக்குத் தடை ஏற்படுகிறது.

அதே போல் இடுப்பு எலும்பும் கால் எலும்பும் இணையும் இடத்தில் ஓர் சூட்சம வாயு வெளிப்பட்டு மூல அக்கினியில் கலக்கின்றது.

1.மூல அக்கினியில் கலந்த அந்த வாயு
2.மூலத்திலிருந்து கிளம்பி மூல நாடியின் வழி ஓடி நாபி நாடியைத் தாக்கிடும் செயலில்
3.சரீரத்தில் வாயு பித்தம் மற்றும் மன நோய் ஏற்படும் நிலைகளை உண்டாக்கி விடுகிறது.

(3). உடல் உஷ்ணம்... தோல் வியாதி:-
மோகம்... செருக்கு... அதி ஆசைகள்... என்ற எண்ண ஓட்டத்தில் வரும் சுவாசத்தின் மூச்சலைகள் மூலாதாரம் மூலம் இந்த இரு நாடிகளில் தாக்கப்பட்டு அதி உஷ்ணம் தோல் வியாதிகள் மற்றும் உயிர் நிலையை ஜீரணிக்கச் செய்யும் இரத்தம் சிலந்தி நோய்களும் வரக் காரணமாகின்றது.

கண்ட நாடி பாதிக்கப்படும் பொழுது அறிவின் ஆற்றல் செயல்படாதபடி பிரமை பிடித்த நிலையும் ஊமைத் தன்மையும் மற்றும் காதுகேளாச் செயலும் ஏற்படுகிறது.

இந்த நோய்களும் இவைகளின் கிளைகளாகப் பல்கிப் பெருகும் ஏனைய நோய் நொடிகளும்
1.தான் எடுத்துக் கொண்ட குணத்தின் வீரியத் தன்மைகளால்
2.”மனிதன் தனக்குத் தானே விதித்துக் கொள்ளும் தண்டனைகள் தான்...!”

கண்டத்தின் செயலையும் தாண்டிச் சிரசின் பகுதியில் நெற்றியில் ஓடும் நாடிகள் பாதிக்கச் செய்யும் அதி தீவிரச் சிந்தனைகளாலும்... திடீரென ஏற்படும் அதிர்ச்சிகளின் செயலினால் உண்டாகும் பயத்தினாலும் மனிதனுடைய சித்தம் கலங்கிப் பித்தனாகவே (பைத்தியம்) மாற்றிவிடும்.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல...!
1.நல் எண்ணக் குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
2.சுவாச நிலையைச் சீராக்கும் முயற்சியில் மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் எடுத்து
3.உயரிய சுவாசமாக.. அருள் மணங்களாக.. அந்த மூச்சலைகளை நாடிகளின் கேந்திரங்களுக்குள் செலுத்தினால்
4.சரீர சுத்தி கிடைக்கும்... அதே போல் உயிரான்ம சக்தியும் சுயப்பிரகாச நிலை (ஒளி நிலை) அடையும்.

April 23, 2021

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்திகளை நாம் பெற வேண்டியதன் அவசியம்

 

இன்று எந்தப் பயிரினங்களாக இருந்தாலும் “பூச்சிக் கொல்லி மருந்துகள்” தெளிக்கவில்லை என்றால் அது சரியாக விளையாது. நாம் உணவாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்திலுமே இந்த நஞ்சின் தன்மையே கலந்துள்ளது.

நம் உடலிலே சிறுகச் சிறுக இந்த நஞ்சின் தன்மை கலக்கப்படும் பொழுது
1.கை கால் குடைச்சலும் மற்ற நோய்களும் வரக் காரணமாகின்றது.
2.அதே சமயத்தில் நஞ்சு அதிகரிக்கும் போது சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
3.சிந்திக்கும் தன்மை இழக்கும் போது தவறு செய்யும் இயல்புகள் அதிகமாகி விடுகின்றது... குற்ற இயல்புகளும் அதிகமாகி விடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்புவதற்கு என்ன செய்வது...? என்று நாம் சற்று சிந்தித்தல் வேண்டும். ஏனென்றால் இந்தக் காற்று மண்டலத்தில் விஞ்ஞான அறிவால் விஷத்தின் தன்மை அதிகளவில் பரப்பப்பட்டு விட்டது.

பூச்சிக்கொல்லி மருந்துகளால் உருவான பயிர் வகைகளை உணவாக உட்கொள்ளும் பொழுது நம் உடலில் அது வடிகட்டினாலும்
1.நம் ஆன்மாவில் கலந்தது
2.அதே விஷத்தின் தன்மைகளை இன்னொரு பக்கம் தூவினாலும்
3.அதை நமக்குள் இழுக்கும் சக்தியும் வருகின்றது.

ஆகையினால் அந்த விஷத்தின் தன்மை வரும் பொழுது நமக்குள் எத்தனையோ புதுவிதமான நோயாக மாறுகின்றது.

மாடு ஆடுகள் இவைகளெல்லாம் விஷத்தைத் தன் உடலாக மாற்றுகின்றது. நல்லதைக் கழிவாக மாற்றுகிறது.

ஆனால் பூச்சிகளைக் கொன்று விட்டு நல்ல உணவை உணவாக உட்கொள்ளலாம் என்று விஞ்ஞான அறிவு கொண்டு மருந்துகளைத் தூவிப் பயிர்களை உருவாக்குகின்றார்கள்.

அப்படி உருவாக்கினாலும் அந்த விஷத்தன்மை அதனுடன் கலந்து நம் உடலுக்குள்ளும் விஷத்தன்மைகளை ஊட்டி விடுகின்றது. இதைப் போன்று நம் உடலில் ஏற்படும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்து கொண்டுள்ளது,

பயிரினங்களால் உருவாக்கப்பட்ட அந்த விஷத்தன்மை நம் உடலிலும் விளையத் தொடங்குகின்றது. அப்படி விளைந்த அந்த அணுக்கள் அதே உணர்ச்சிகளை ஊட்டி அந்த விஷத்தையே உணவாக உட்கொள்ளும் தன்மை வருகின்றது.

இதைப்போன்ற நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்குத் தான் உங்களுக்கு அடிக்கடி அடிக்கடி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து நம் உடலில் உள்ள எல்லா அணுக்களிலும் அதை வளர்த்துக் கொண்டால் “விஷத்தை வென்றிடும் சக்தி...” பெறுகின்றோம்.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் எதனையுமே ஒளியாக மாற்றும் திறன் கொண்டது.

இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள மற்ற நட்சத்திரங்கள் வெளியிடும் மின்னல்கள்... மின் கதிர்கள் வெளிப்படுவதை துருவ நட்சத்திரம் எடுத்து அதை ஒளியாக மாற்றுகின்றது.

அதாவது...
1.27 நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகி மின்னல்களாகச் சீறிப் பரவுவதை
2.அதிலிருந்து வரும் அந்த ஒளிக்கற்றைகளை நம் உடலில் உள்ள அணுக்கள்
3.அதனுடைய சந்தர்ப்பம் அதைப் பெறத் தொடங்கி விட்டால் சிந்திக்கும் திறனும் அதிகமாகின்றது
4.தீமை என்ற உணர்வுகள் நமக்குள் புகாமல் தடுக்கும் சக்தியும் பெறுகின்றது.
5.அதன் மூலம் எத்தகைய நஞ்சை நாமும் ஒளியாக மாற்றிட முடியும்.
5.விஞ்ஞானத்தால் வந்த கடும் நஞ்சையும் நாம் ஒளியாக மாற்றிட முடியும்.

நெஞ்சுக் குழியில் நம்மை இயக்கும் தாய் மூச்சு நாடி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

உதாரணமாக கோப குணம் நமக்குள் உந்துகிறது என்றால் அப்பொழுது நாம் ஈர்த்துக் கொண்டிருக்கும் சுவாசமே “கனம் கொண்டதாக” மாறுகின்றது.

கோப குணத்தின் வீரியம் எத்தகையதோ அதற்கேற்றாற்போல் சரீர நாடிகளும் இயங்கி அந்தக் கோப குணத்தின் கார அலை நம் சரீரத்தைத் தாக்குகின்றது.

அப்படித் தாக்கும் நிலையில் ஆண் பெண் இருபாலருக்குமே
1.மார்புப் பகுதியின் மையத்தில் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில்
2.”சிறிய குழிவு..” போன்ற பகுதியினுள் ஓர் மூச்சு நாடி ஓடுகின்றது
3.அதுவே மிக முக்கிய நாடியப்பா…! –
4.தாய் மூச்சு நாடி...! என்பது அது தான்.

நாபி நாடியுடன் இணைந்து செயல்படும் அந்தத் தாய் மூச்சு நாடி தாக்கப்படும் காலத்தில்... அருகில் அமைந்துள்ள இரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் செயலில் அதைத் தூண்டி... இருதயத்தின் தொடர்புடன் இணைந்து கொண்டு
1.அதற்குள் ஓடும் மூச்சுக் காற்றால்
2.எடுத்துக் கொண்ட குணத்தின் வீரிய உணர்வு தாக்கிடும் செயல் நிலையே இருதய நோய் (HEART ATTACK).

ஜீவ காந்தம் கொண்ட மனிதச் சரீரம்... உணர்வு கொண்டு இயங்கும் இயக்கத் தொடரில்... உடல் தனக்குத் தேவையானதைப் பெறும் (சுகமாக அனுபவிக்கும்) செயலில் எது...எது எப்பொழுது செயல்படுகிறது...? என்ற பாங்கில் அந்தந்தக் கால கட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் காரணமே “பசி... மோகம்.. தாகம்...” என்பதாகும்.

இவைகள் எல்லாம் நீங்கி அந்தத் தேவைகள் பூர்த்தி பெற்றாலும் ஈர்த்துக் கொண்டிருக்கும் உணர்வுகளின் குணங்களின் சுவாசத்தினால் நிகழ்வது என்ன…?

ஏனென்றால் அனைத்து குணங்களின் சுவையே நம் ஆத்மாவின் பதிவு நிலை ஆகின்றது. அப்படிப் பதிவானது அதே தொடரின் செயலில் கனம் கொண்ட சுவாசமாக மீண்டும் மீண்டும் ஈர்க்கப்படுகின்றது.

1.அத்தகைய வினைச் செயலின் பதிவாகக் களங்கமுறுவது ஆத்மாவும்... சுவாசமும்... செயல் கொள்ளும் ஜீவ சரீரமும் தான்...!
2.ஆக ஆத்ம சக்தியுடன் இணைந்து தான் சரீர சுத்தியும் செயல் கொள்ளுமப்பா…!

வாழ்க்கையில் பலதரப்பட்ட மோதலில் ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் குணங்களின் நல்லெண்ண நற்சுவாசச் செயலே ஆத்ம சுத்தி.

அன்றாட வாழ்க்கை நிலையில் எத்தனையோ பல காரியங்களை நாம் செயல்படுத்துகின்றோம். அப்பொழுது பலருடைய எண்ணங்களின் தொடர்புகள் சுவாசத்தின் ஈர்ப்பில் வந்து சேர்கிறது.

நண்பர்கள்.. உறவினர்கள்... மற்றைய அலுவல்களில் சந்திக்க நேரும் பொது ஜனத் தொடர்புகள்... ஆகியவற்றில் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடும் செயல்களில் எல்லாம்
1.பிறரது எண்ணங்களின் குணநலன்கள் நம் சுவாசத்தின் ஈர்ப்பினால் பெற்று
2.அந்தக் குணங்களின் அமில குணச் சுவை அணுக்கள் சரீரத்திலும் கலந்து
3.அதே குணங்களின் உணர்வலைகள் ஆத்மாவிலும் பதிவு நிலை பெறுகின்றது.

புவி ஈர்ப்பின் பிடிப்பில் சுவாச ஓட்டத்தில் ஈர்த்துக் கொள்ளும் சுவாசம் கனம் கொண்ட எண்ணத்தின் வீரியத்திற்கொப்பச் செயல்படும் நிலையில் ஆத்மாவில் பதிவு பெறும் மாற்று நிலைகளின் கழிவை நீக்கவே இந்தத் தியான முறையச் சுட்டிக் காட்டுகின்றோம்.

இந்தத் தியானத்தின் வழியாக
1.வாழ்க்கையில் உணர்வின் மோதல் ஏற்படும் கால கட்டங்களில் எல்லாம்
2.எண்ணத்தின் உணர்வில் உயர்வைக் கூட்டி...
3.ஒளியின் பிரகாசமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை எண்ணி
4.அந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளை விண்ணிலிருந்து புருவ மத்தியில் ஈர்த்துக் கொண்டு
5.நம் ஜீவ காந்தச் சரீரம் கொண்ட அந்த கனமான சுவாச அலைகளைச் சமன்படுத்தி
6.உயர்வைக் கூட்டி நல்லாக்கம் பெறல் வேண்டும்...!

ஆகவே
1.நாம் செயல்படும் செயலில் கொள்ளும் நிதானமே...
2.நம் உயிர் ஆத்ம ஞான வளர்ப்பிற்குப் பிரதானம்...!

April 22, 2021

மரண வாயிலில் வைத்து குருநாதர் எனக்குக் கொடுத்த சக்தி

 

ஒரு சமயம் குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கை கால் வராது போல் இருந்தார் என்று சொல்லி (தூக்கிக் கொண்டு தான்) ஐவர் மலைக்கு அழைத்துச் சென்றிருந்தேன் (ஞானகுரு).

அங்கே சென்ற பின் இரவிலே நீ என் பக்கத்திலேயே படுத்துக்கொள்...! என்றார், குருநாதர். பனிரெண்டு மணி இருக்கும். கை கால் வராமல் முடமாக இருந்தவர் எழுந்து நடக்கிறார்... சாதாரணமாக நடக்கின்றார்...!

அங்கு ஒரு பிள்ளையார் கோவில் இருக்கும். நடந்து போய் அங்கே உட்கார்ந்து கொண்டார். அவர் செய்வதை நான் முழித்துப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

அங்கே போனவுடன்... “தெலுங்கு ராஜ்ஜியம் இங்கே வாடா...” என்னை எவனோ தூக்கிக் கொண்டு வந்து இங்கே வைத்துவிட்டான்... வந்து தூக்குடா...! என்கிறார்.

இரவு நேரத்தில் அங்கே போய் என்ன செய்வது...? சருக்கலான பாறையில் உட்கார்ந்திருக்கிறார்.

அந்த இடத்தில் இருந்து கொண்டு என்னைக் காப்பாற்றுடா... என்னைக் காப்பாற்றுடா,.. என்கிறார். பார்த்தால் சறுக்கலான பாறையில் பிடிக்க முடியாத இடத்தில் இருக்கின்றார். (இன்னும் கூட அந்த வழுக்குப்பாறை அங்கே இருக்கின்றது)

நான் எப்படி சாமி வர முடியும்...? என்று கேட்டேன். பின் வேஷ்டியெல்லாம் கட்டி விட்டு இதைப் பிடித்து கொள்ளுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு கீழே போய்க் கொண்டே இருக்கின்றார், நீ வந்து என்னைக் காப்பாற்றுடா, துண்டு... வேஷ்டி எல்லாம்... என்னைக் காப்பாற்றாது...! என்கிறார் குருநாதர்.

சாமி... வேஷ்டியையும் பிடித்துக் கொள்ளுங்கள், நானும் பிடித்துக் கொள்கிறேன் என்றாலும் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது நான் (ஞானகுரு) ஒரு பக்கம் இருந்தாலும் என்னை வழுக்கிவிட்டு இந்தப் பக்கம் கொண்டு போகின்றது..

குருநாதர் “என்னை காப்பாற்றுடா...” என்கிறார்.

சாமி, நான் கீழே போய்த்தான் காப்பாற்ற வேண்டும். கீழே விழுந்தால் நொறுங்கித் தூள் ஆகிப்போகும். அங்கு போய்த்தான் காப்பாற்ற வேண்டும் என்றேன்.

இது நடந்த நிகழ்ச்சி.

அப்பொழுதுதான் அதிகாலை விடிந்து சில நிலைகள் வருகின்றது. அங்கு கீழே ஒரு பஸ் போய்க் கொண்டிருந்தது. உடனே குருநாதர் “ஏறு சிங்... இறங்கு சிங்... என்று நீ பார்த்திருக்கிறாயாடா...?” என்றார்.

1.சாமி... இப்பொழுது நான் இறங்கு சிங்கில் கீழே போய்க் கொண்டு இருக்கிறேன்.
2.செத்த பிற்பாடு... உடலிருந்து உயிர் ஏறு சிங்காக மாறிவிடும்.
3.அதிலே வேண்டுமென்றால் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் சாமி என்றேன்.

ஏன்டா நான் சொல்கிறேன்... நீ எதிர்த்துப் பேசுகின்றாயா...? என்றார், குருநாதர்.

பார்த்தால் அந்த இடத்தில் வைத்துக் குருநாதர் பல நிலைகளில் பல அற்புதங்களைக் காட்டுகின்றார். இந்த உலக நிலைகளையும் மற்ற நிலைகளையும் எல்லாவற்றையும் காட்டுகின்றார்.

அப்பொழுது நீ இந்த உலகத்தைப் பாருடா...! என்கிறார்.

எங்கே சாமி பார்ப்பது...? இன்னும் கொஞ்ச நேரத்தில் கீழே போய் எல்லாம் அடங்கிவிடும் போல் இருக்கின்றது...! என்றேன் நான்.

நீ உலகத்தைப் பாருடா என்றால்... என்னடா நீ அடங்கிவிடும்...! என்று சொல்கின்றாய்...? என்று இப்படி வாதம் பண்ணிக் கொண்டே இருக்கின்றார் குருநாதர்.

அப்படியே பாறையில் நெஞ்சோடு தேய்த்து இரத்தம் வடிகின்றது. வழுக்குப் பாறையாக இருப்பதால் அப்படியே என்னைக் கீழே கொண்டு போகின்றது. இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடுவோம் (உயிர்) போலத் தெரிகின்றது.

நீ இதைப் பார்... உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்...! என்று என்னென்னமோ அதிசயங்களை எல்லாம் காட்டுகின்றார் குருநாதர்.

சாமி... இன்னும் கொஞ்சம் நேரத்தில் நீங்கள் சொல்வது எல்லாவற்றையும் போய்ப் பார்க்கப் போகின்றேன், அது வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்...! என்றேன்.

அதற்குப்பின்...
1.எத்தனையோ உணர்வுகளை ஊட்டுகிறார், உலக நிலைகளைக் காட்டுகின்றார்
2.இந்த மரண நிலைகளில் வைத்துத்தான் முழுமையான சக்தியைக் கொடுக்கிறார்
ஐவர் மலையில் வைத்துத்தான் அதைக் கொடுத்தார் நமது குருநாதர்.

அந்தக் காலை நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். குருநாதர். அங்கிருந்து எழுந்து வந்து என்ன செய்தார்...?

1.சிவ தாண்டவம் ஆடுகிறார்
2.ஒரு பெரு விரலில் நின்று கொண்டு அப்படியே “கிறு...கிறு...கிறு” என்று பம்பரம் போல் சுற்றி அவ்வளவு அற்புதமாக ஆடுகிறார்.
3.எல்லா வேலைகளையும் செய்கின்றார், குருநாதர்.

நீ பல உண்மைகளை அறிவாய்... பல நிலைகளைப் பெறுவாய் என்று இந்த இடத்தில் வைத்து மரண வாயிலில் வைத்துத்தான் இந்த சக்திகளைக் கொடுக்கிறார்.

இந்த உலகம் எப்படி இருக்கிறது என்று நீ அறியும் தன்மை பெறுவாய், அதை எப்படிக் காக்க வேண்டும்...? என்று காட்டுகின்றார்.

யாராவது தவறு செய்தால் கூட என்னிடம் இருக்கும் சக்தியைக் கொண்டு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் அதைச் செய்தால் இந்தச் சக்தி விரயம் ஆகும்.
1.அந்த விரயம் ஆகும் நிலைக்குக் கொண்டு செல்லாமல்
2.உருவாக்கும் நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார் குருநாதர்.

இப்படித்தான் ஏதேதோ செய்யும்படி பல நிலைகளைச் செய்து... அதை எல்லாம் சொல்வதற்கில்லை...! இப்படி எண்ணிலடங்காத நிலைகளைச் செய்துதான் எனக்கு இந்த வாக்குகளைக் கொடுத்தார் குருநாதர்.

நமது அகண்ட அண்டமும் பேரண்டமும் இந்த உணர்வின் தன்மை எப்படி இயங்குகிறது...? என்ற சில உண்மையின் தன்மைகளை எல்லாம் கொடுக்கிறார்.

நமது பிரபஞ்சமும் 27 நட்சத்திரங்களும் எப்படி எல்லாம் இயங்குகிறது...? என்பதை நேரடியாகப் பார்த்தால் எப்படி இருக்கும்...!
1.அந்த மரண வாயிலில் வைத்துத்தான் இந்த அற்புதங்களை
2.பார்க்காத காட்சிகளை எல்லாம் காட்டுகிறார் குருநாதர்.

பின் அந்த உணர்வின் தன்மை கொண்டு ஏறு சிங்... இறங்கு சிங்... என்று சொல்லி இந்த ஆட்டங்களைக் காட்டி அப்புறம் என்னை எழுப்பிவிடுகிறார் குருநாதர்.

அப்பொழுது, அந்த இடத்தில் மற்றவர்கள் பார்க்கும் போது கால் முடமாக இருப்பது போல இருக்கிறார். ஆனால் இங்கே நன்றாக நடனம் ஆடுகின்றார்.

மற்றவர்கள் அவரைப் பைத்தியம் என்றுதான் நினைத்தார்கள். அதனால் காலை முடக்கி கொன்டார். ஆனால், அந்த உண்மையின் தன்மையை எமக்குக் கொடுத்து இங்கு நடனம் ஆடுகிறார்.

1.குருநாதர் ரசமணி செய்வார்... தங்கத்தைச் செய்வார்
2.இந்தச் சரக்குகளைச் செய்தால் நாமும் தங்கம் செய்யலாம் என்ற வகையில்
3.குருநாதரிடம் ஆசைப்பட்டு அணுகியவர்கள் ஏராளமானோர்.

ஆனால் இதிலிருந்து ஒடுங்கப்பட்டு தனித்தன்மையாக, எனக்கு இந்த ஐவர்மலையில் வைத்துத்தான் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.

அவர் இருக்கும் பொழுதே பல காடுகள் பல மேடுகள் எல்லாம் அலைந்து பார்த்தேன். இந்த உண்மையெல்லாம் எமக்குத் தெளிவாகத் தெரிந்த்து இந்த ஐவர் மலையில் தான்.

ஏனென்றால் அந்த உண்மையின் உணர்வுகள் வந்த பின் குருநாதர் என்ன செய்வார்...?

என் கையை நீட்டச் சொல்வார். அங்கிருக்கும் மரங்களும் கற்களும் அப்படியே தூக்கிக் கொண்டு மேலே போகும். தூக்கி வீசுவது போன்ற சில சக்திகளைக் கொடுக்கின்றார்.

அப்பொழுது எனக்கு என்ன செய்கின்றது...?

1.மரத்தையே தூக்கி வீசும் பொழுது நம்மால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று ஒரு திமிர் ஏற்படுகின்றது.
2.எதிரி இருந்தால் அவனை வீழ்த்தக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறது என்று இப்படித்தான் எனக்குச் சிந்தனை வருகிறது.

ஆனால் அதை எப்படி நல்ல வழிக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அந்தந்தச் சமயங்களிலெல்லாம் குருநாதர் ஒவ்வொரு உணர்வின் நிலைகளையும் எனக்கு உபதேசித்தார்.

ஆகவே... எம்மை குருநாதர் எப்படிப் பண்படுத்தி வளர்த்துக் கொண்டு வந்தாரோ அதே போல மற்றவர்களையும் கொண்டு வர வேண்டும் என்று தான் விரும்புகின்றேன்.

1.இந்த உலகம் எப்படி இருக்கிறது...? என்ற நிலையும்
2.இந்த உடலுக்குப்பின் எங்கே செல்ல வேண்டும்...? என்ற நிலையும்
3.பிறவி இல்லா நிலைகள் எப்படி அடைய வேண்டும்...? என்ற உண்மைகளையும் எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

அப்பொழுது அந்த நிலையில்... எது எது உன்னைச் சந்திக்கும்...? அந்த ஆசையின் நிலைகள் உனக்குத் திரும்பும்...! அல்லது ஆசையின் நிலைகள் உனக்குள் திரும்பும் போது உன்னை எதிரி என்ற நிலையில் உன்னைத் தாக்கும் உணர்ச்சி வரும்.

அப்பொழுது, இந்தக் கடுமையான நிலைகளின் உணர்வை ஏற்றினால் உன்னையும் ஆட்கொண்டு உனது நல்ல குணங்களைக் கொல்லும்... மற்றவரையும் காக்க முடியாது.

இப்படிக் கடுமையான சோதனைகளைக் கொடுத்தார் குருநாதர். நான் போகும் பக்கம் எல்லாம் பல எதிர்ப்புகள் வரும். நாய் கூடக் கடிக்க வரும், அப்பொழுது என்னென்ன செய்வது...? என்று முதல் அனுபவத்தைக் கொடுத்தார்.

இப்படித்தான் இருபது வருடம் அனுபவம் பெற்று உங்களுக்குள் இந்தச் சக்தியைக் கொடுத்து உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறேன்.

நிறையச் சொல்லப் போனால் ஒவ்வொரு நேரத்திலும் நான் பட்ட அவஸ்தைகள் இன்னதென்று சொல்ல முடியாது. ஆகையால் இதைப் பேணிக் காத்து எல்லோருக்கும் இந்த உண்மையை உணரும் தன்மை பெறச் செய்ய வேண்டும். நீங்கள் எடுத்துக் கொண்ட மூச்சலைகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தி பெற வேண்டும்.

என்னுடைய ஆசை... நீங்கள் அனைவரும் என்னைப் போல் (ஞானகுரு) பெரும் ஞானிகளாக மாற வேண்டும்.

பிறருடைய தீமைகளைப் போக்கும் மகான்களாகத் தான் நீங்கள் மாற வேண்டுமே தவிர இந்த உடலின் இச்சைக்கு மாறி விடாது உங்களைக் காத்து நல் வழியில் கொண்டு வருவதுதான் “என்னுடைய முழுமையான தியானம்....!”

நீங்கள் முழுமை பெற்றால்தான் இதைச் செயல்படுத்த முடியும்.

ஏனென்றால் அதைத்தான் இப்பொழுது மிகவும் வலுப்படுத்துகின்றேன். இந்தச் சக்தி பெற்ற நீங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலும் வழி காட்டுதல் வேண்டும்.

இப்பொழுது உபதேசித்த நிலைகள் கொண்டு
1.நுகர்ந்த உணர்வுகள் உங்களை எப்படி இயக்குகின்றது...?
2.அதிலிருந்து நீங்கள் எப்படி மீள வேண்டும் என்று உபாயத்தை
3.மற்றவருக்கு எடுத்துக் கூறி அந்தப் பதிவின் நிலைகளை அவர்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் நிலைகள் அவர்களுக்குள் வளர்ந்தால்...
1.அந்த எண்ணத்தால் தீமையிலிருந்து அவர்கள் விடுபடுவதும்,
2.தீமை செய்தவர்கள் திருத்திக் கொள்வதும்
3.நன்மை செய்யும் உணர்வு உள்ள மக்களாக அவர்களை மாற்றும் திறன் நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத் தான்
4.யாம் இதைச் சொல்வது.

அந்த முழுமையின் தன்மைகளை நாம் எல்லோரும் அடைதல் வேண்டும். இது தான் நமது லட்சியமே...!

ஆகவே இந்த லட்சியத்தின் நிலைக்கு வரும்போது செல்வத்தை நாம் தேடிப் போக வேண்டாம். செல்வம் தன்னாலே வந்து சேரும். ஏனென்றால் செல்வத்தைக் குறிக்கோளாக வைத்தால் அதனுடைய ஆசையின் நிலைகள் “உடல் பற்று தான் வரும்..”

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்...
1.நீங்கள் எல்லோரும் அந்த அகஸ்தியனைப் போன்று
2.உலகைக் காக்கும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன்.

ஆத்ம சுத்தி செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

அறுசுவை உணவுகள் உண்டிடும் காலத்தே உட்கொள்ளும் பொருள்களின் சுவைகள் அது காரமோ... புளிப்போ... உவர்ப்போ.. இனிப்போ.. துவர்ப்போ.. கையிப்போ..! எந்தச் சுவை ஆகினும் அந்தச் சுவைகளின் குணங்களின் கன பரிமாண அடர்வின் தொகுப்பில் திகட்டல் ஏற்பட்டால் என்ன செய்கிறோம்..?

உடனே நீரைத் தான் தேடிச் சென்று குடிக்கின்றோம்.

நீரை உட்கொண்டு அந்தச் சுவைகளைச் சமன்படுத்துதல் போல் ஜீவ காந்த சரீரம் கொண்டிடும் உணர்வில் கனமான சுவாச அலைகளை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்...?

1.அந்தச் சுவைகளுக்கெல்லாம் வீரியமான உயர்வெண்ண மின் காந்த அலைகளை
2.மகரிஷிகளை எண்ணி ஈர்த்திடும் செயலில்
3.நம் சுவாச ஓட்டம் அமைதி கொண்டு நம்முடைய உணர்வின் குணங்களும் சமன் கொள்ளும்
4.நம் சுவாசமும் நாடியும் சீராகும்.

சுலபமாகப் பெற்று உயர்ந்திடும் இந்தத் தியானத்தின் வழியில் செயல்படுத்தும் “மனத்தின் திறன்” என்பதெல்லாம் அவரவர்களின் எண்ணத்திற்கொப்பத்தான் கொள்ள முடிந்திடும்.

தான் கைக்கொள்ளும் ஒவ்வொரு செயலிலும்... காரியமாற்றும் நிலையிலும்...
1.தன் ஆத்ம உயர்வுக்காக வேண்டி
2.எண்ணிச் சுவாசித்திடும் பக்குவம் தானப்பா “ஆத்ம சுத்தி...” என்பது.

சரீர வாழ்க்கையில் சுவாச ஓட்டத்தின் செயலில் மனிதன் ஒவ்வொரு நிமிடத்திலும் எடுக்கும் உணர்வுகளின் வீரியத்தால் நமக்குள் மாற்றம் கொள்ளச் செய்யும் செயல்களாக பயம்... கோபம்... மோகம்... ஆவேசம்... ஆத்திரம்... பழி.... ஆகிய இந்தக் குணங்களின் மோதல்களால் முதலில் பாதிக்கப்படுவது சரீரம் தானப்பா…!

அது எப்படி என்றால்...
1.சுவாச ஓட்டங்கள் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படும் செயலில்
2.சிறுகச் சிறுகக் கூட்டிக் கொள்ளும் அந்த உணர்வுகளின் வலுவினால்
3.இரத்த நாளங்கள் குழைவு கொண்டு
4.நரம்பு ஓட்டங்களில் தளர்வு பெற்று
5.எலும்புகளின் ஊண் ஒளி குறைவுபட்டுத் தளர்வுறும்.

பக்குவமாக அந்தக் குணங்களை விலக்கிக் கொண்டு நல் நிலை பெறுவதற்கே இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதமப்பா...! அதனால் சரீர சுத்தியும் கிடைக்குமப்பா...!

April 20, 2021

நம் உடலுக்குள் ஒரு அணுவின் இயக்கத்திற்கும் அதுவே கூட்டமைப்பாக இயக்கும் நிலைக்கும் உள்ள வித்தியாசம்

  

ஒரு கோபப்படுவோருடைய உணர்வைக் கண்ணுற்று நோக்கி நம் உடலிலேயே பதிவாக்கி மீண்டும் அதை நுகர்ந்து நம் உயிரிலே பட்டால் அது நம் உடலுக்குள் கோபத்தை உருவாக்கும் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.

நமக்குள் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் “அவன் கோபித்தான்” என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது. நுகர்ந்த உணர்வு நம் இரத்தநாளங்களில் அது பெருகத் தொடங்கி விடுகின்றது.

உதாரணமாக ஒரு நெல்லை வைத்து அதை நாம் சமைத்துச் சாப்பிட முடியாது. பல நெல்களை இணைத்துச் சமைத்தால்தான் அது சாதம் ஆகின்றது.

ஆகவே அதைப் போன்று
1.நாம் நுகர்ந்த அந்தக் கோபமான உணர்வு பல அணுக்களின் தன்மை அடையப்படும் பொழுது தான்
2.இரத்தக் கொதிப்பு என்ற உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

ஒரு அணுவின் தன்மை என்று இருந்தால் அது மற்ற உணர்வுடன் கலக்கப்படும் பொழுது இரத்தக் கொதிப்பு என்று வராது..
1.அது உணர்ச்சியை ஊட்டும் உணர்வு என்றுதான் அதற்குப் பெயர் வரும்.
2.மற்றவைகளுடன் சேர்த்து இந்த உணர்வின் தன்மை இயக்கம் கம்மியாகவே இருக்கும்.

ஒரு வேதனைப்படுவரைத் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த எண்ணத்தின் கணக்கு அதிகரித்தால் அதற்குத் தக்க நோயாக வரும்.

இதை எல்லாம் உணர்த்துவதற்குத்தான் சிவன் ஆலயத்தில் நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப்பிள்ளை என்று காட்டுகின்றார்கள்.

நாம் எந்தெந்தக் குணங்களை எல்லாம் சுவாசிக்கின்றோமோ அது நமக்குள் உள் சென்று அதனின் குணமாக உருவாகின்றது என்பதைத் தான் நந்தீஸ்வரன் என்று காரணப்பெயர் வைக்கின்றார்கள்.

எக்குணத்தின் தன்மை உணர்வின் தன்மை உருவாக்குகின்றதோ தன் இனத்தைப் பெருக்கத் தொடங்கிவிடும்.

ஒரு அணுவின் தன்மை பெற்றபின் அந்த உணர்ச்சியைத் தூண்டி நம் உயிரின் நிலைகளுக்கு நினைவுபடுத்தி அதை மீண்டும் சுவாசிக்கச் செய்து நம் இரத்தநாளங்களில் கலந்து இந்த உணர்வின் தன்மை உணவாக எடுத்துக் கொள்ளும்… உடலிலே அணுக்களாக விளையும்.

ஒரு நெல்லை நிலத்தில் ஊன்றினால் எப்படிப் பல நெல்களாக விளைந்து வருகின்றதோ இதைப்போல
1.நமக்குள் பதிவான ஒரு உணர்வின் (வித்தின்) தன்மை அது எதுவோ
2.அதற்குத் தக்கவாறு அந்தப் பல எண்ணங்களுடைய உணர்வுகளாக வருகின்றது
3.அந்த வித்தின் தன்மை விளைகின்றது

இப்படி நாம் நுகரும் உணர்வுகள் அனைத்தும் சிவன் ஆலயத்தில் சிவனுக்குக் கணக்கப்பிள்ளை

யார்..?

சுவாசித்த உணர்வுகளே நந்தீஸ்வரன். நாம் பார்த்த உணர்வுகள்… நாம் சுவாசித்து அந்த உணர்வின் தன்மை அதனின் கணக்கு அதிகமாகும் போது அது நந்தீஸ்வரன்.

உடல் சிவம்… சுவாசிப்பது நந்தீஸ்வரன்… உடலுக்குள் தொடர்ந்து இது செயல்படும் போது நந்தீஸ்வரன் கணக்குப்பிள்ளை.

April 18, 2021

இன்றைய உலக சூழ்நிலையில் எதை நம் விதியாக மாற்ற வேண்டும்…?

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஒரு கடுமையான வேதனைப்படுவருடைய செயல்களை நாம் உற்று நோக்கினோம் என்றால் அது நமக்குள் “விதியாக” மாறுகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்... இன்றைய உலகில் அனைத்துமே விஞ்ஞான அறிவால் பெரும் வேதனைப்படும் உணர்வுகளையே நாம் நுகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

1.பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி. வாயிலாகவும் எங்கோ நடக்கும் சம்பவங்களை நாம் கேட்கின்றோம்… உடனுக்குடன் பார்க்கின்றோம்
2.அதையெல்லாம் பார்த்து… நுகர்ந்து… உணர்வால் அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

அந்தக் கடுமையான உணர்வுகள் நமக்குள் பதிவாகி விட்டால் அதுவும் நமக்குள் “விதியாக” மாறி விடுகின்றது.

பலருடைய துன்பப்பட்ட உணர்வுகளையும் பலருடைய கொடுமைகளையும் நமக்குள் எடுக்கும் பொழுது அது எல்லாம் நமக்குள் வினையாக வித்தாகப் பதிவாகின்றது. இப்படி ஒரு வித்தாக மாறுவதைத்தான் “விதி” என்று சொல்வது.

1.அப்படிப் பதிவான வித்து தன் இனத்தைப் பெருக்க
2.மீண்டும் மீண்டும் அதே உணர்வைத் தான் கவரும்.
3.அதே துன்பத்தைத் தான் நமக்குள்ளும் செயல்படுத்தும்.

ஆனால் அந்த விதியை எவ்வாறு மாற்ற வேண்டும்…?

பத்திரிகையோ டி.வி.யோ பார்த்துப் படித்த பின்பு உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…?
1.அந்த வீரியத் தன்மை (கொடுமைகள்) நமக்குள் அது தனித்த நிலையில் வளராது தடுக்க
2.ஈஸ்வரா…! என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
4.உடலுக்குள் பல முறை செலுத்த வேண்டும்… இந்த உணர்வினை நமக்குள் அதிகமாக நமக்குள் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப் பின்… பத்திரிகையிலோ டி.வி.யிலோ படித்துப் பார்த்த (சம்பவங்கள்) அத்தகைய நிலைகள்…
1.நாளை நடப்பது எல்லாம் நல்லவைகளாக நடக்க வேண்டும்.
2.தீமைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்
3.மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி அவர்கள் பெற வேண்டும் என்று இப்படி உணர்வை மாற்றி விட்டால்
4.இது நமக்குள் தீமைகளை வென்றிடும் “விதித் தன்மை” அடைகின்றது.

இதைத்தான் மதி கொண்டு விதியை மாற்றுதல்…! என்று சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எடுத்தால் இது மதி…! அந்தப் பேரருளை நமக்குள் பெறச் செய்கின்றது. நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது

ஆகையினால் நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற காலை துருவ தியானம் நல்ல பலனைத் தரும்.

குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

இடும்பனான குணம் அகற்றி தெய்வீக குணத்தை நாம் வளர்க்க உயிரான்மா ஒளியாகும் - ஈஸ்வரபட்டர்

 

உடலில் உள்ள பஞ்சேந்திரியங்கள் அனைத்தையும் சுற்றி ஓடும் ஒளி நாதம் செயல் கொள்ளும் திறன் என்ற தொடரை அறியும் முன் இடும்பன் காட்டிய தத்துவ மூலத்தை அறிந்திடல் வேண்டும்.

உயிரான்மாவின் சக்தியைக் கெடுக்க முயலும் வினைச் செயலையும் அந்தக் கேட்டினால் ஏற்படும் விளைவாகச் சங்கடமான அலைகள் எப்படித் தாக்குகின்றது...? என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தீமைகள் தாக்கும் போது உயிரான்ம மூலக்கலப்பு (உயிர்ச் சக்தியும் ஆன்ம சக்தியும்) இணையாத் தன்மை கொண்டு பிரிவு என்கிற மனோபாவனையில் செயல்படும் தன்மை வருகின்றது.

அந்தத் தீதெண்ண குண சக்தியின் வலுவினால் ஆத்ம சக்தியின் வலுக்கூட்டும் தொடர்பையே நிறைவுறாத செயலுக்கு அது தன் செயலை நிகழ்த்தி விடுகின்றது.

1.தீவினைச் செயல்பாடு - உயிர் சக்தியைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டால்
2.உயிர் சக்தியின் வீரிய வலுவை அது தன் வலுவாக்கி
3.இடும்பச் சித்தன் காட்டியபடி அந்தத் தீதெண்ண குணங்கள் வீரியம் கொள்ளும்.

அது தனக்கொத்த கிளைகளைப் பரப்பிக் கொண்டு ஆன்மா என்றிட்ட உயர் சக்தி இருக்குமிடம் தெரியாமல் அனைத்தையும் மறைத்துத் தான் பெற்று வலுவாக்கிய சங்கட அலைகளைப் பஞ்சேந்திரியங்கள் மூலம் செயல்படத் தொடங்கும்.

1.சக்கர வியூகம் செயல்படும் நிலையில்
2.எண்ண உணர்வின் வலு மூலம்,.. மெய் என்ற வட்டத்தை அடுத்து
3.வாய் என்ற சக்கர வட்டத்தை உடைத்துத் தன் குணச் செயலை நிகழ்த்தும்.
4.வாய் வழியாக அந்தச் சங்கடத்தையும் சோர்வையும் கோபத்தையும் வேதனையையும் சொல்லாக வெளிப்படுத்தச் செய்யும்.

அவ்வாறு வெளி வந்த சங்கட அலைகள் யாரை எண்ணிச் சொல்லப்படுகின்றதோ சொல்லப்பட்ட பொருளின் கருத்தில் நிலை பெற்றிருப்பவர்
1.அந்தச் சங்கட அலைகள் தன் உயிராத்மாவின் சக்தியை ஆட் கொண்டு உண்டு விடாமல் இருக்கும் பொருட்டு
2.தன் சரீரத்தில் உள்ள பஞ்சேந்திரியங்களை முதலில் வசப்படுத்திக் கொள்ள முனைதல் வேண்டும்.

பின் உள் நிகழ்வின் செயல்முறை தானாக வசமாகும்.

போகப் பெருமான் தன் அனுபவத்தின் இடர்பாட்டில் இடும்ப குணச் செயலை அறிந்து தன் உயிராத்ம சக்தியை எப்படிக் காத்துக் கொண்டாரோ அந்தப் பக்குவத்தை ஞானச் செல்வங்கள் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

April 17, 2021

நாம் ஒளி உடல் பெற்றால் எண்ணங்கள் இருக்காது... உணர்வின் இயக்கம் மட்டும் தான் இருக்கும்

 

காவியங்களில் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் கடைசியில் எமன் பாசக்கயிறை வீசி நம்மை அழைத்துக் கொண்டு போகின்றான்...! என்று காட்டியிருப்பார்கள்.

அழைத்துச் சென்ற பின் அவரவர்கள் செய்த தவறுக்குத் தண்டனையாக நரகத்திற்கு அனுப்புகின்றான் என்றும் சொல்கின்றார்கள். அதனின் உட்பொருளை ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் அறிதல் வேண்டும்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை வென்று வந்த பின்பு தான் இன்று இந்த மனிதச் சரீரத்தையே நாம் பெற்றிருக்கின்றோம்.

இருந்தாலும் இப்பொழுது மனிதனாக வாழும் காலத்தில்...
1.“எனக்கு ஒருவன் துன்பம் கொடுத்தான்... தொல்லை கொடுக்கின்றான்...! என்ற எண்ணத்தை வலுவாக்கி விட்டால்
2.இந்த எண்ணமே நமக்கு எமனாக மாறுகின்றது.

எப்படி...?

ஒருவர் வேதனைப்படும் உணர்வுகளை அதிகமாகச் சுவாசித்து அந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த வாழ்க்கையினுடைய இயல்பான நிலைகளை மறந்துவிடுகின்றோம்.

வேதனை... வேதனை... என்று பட்டு அந்த வேதனையான உணர்வு எங்கிருந்து... யாரால் வந்ததோ அவரையே எண்ணி அந்த உடலுக்குள் சென்று... அங்கேயே தண்டனையை அனுபவிக்கச் செய்கின்றது...!

ஏனென்றால் வேதனை என்றாலே விஷம். ஆக அந்த உடலுக்குள் சென்று மீண்டும் அதே விஷத் தன்மையை அங்கேயும் பெருக்கிக் கொண்டு அந்த உடலையும் வீழ்த்துகின்றது.

அடுத்து மனிதனல்லாத உயிரினங்களுக்குள் தான் செல்ல நேரும். இதைத் தான் நம் காவியங்களில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

ஆனால் அதே சமயத்தில் இந்த மனிதனின் வாழ்க்கையில் எந்தெந்த ஆசைகள் இருந்ததோ அந்த ஆசைகளை அகற்ற
1.இதையெல்லாம் வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பதிவாக்கி
2.இந்த எண்ணங்களை நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொண்டால்
3.அந்த எண்ணம் இந்த மனித உடலுக்கு எமனாக மாறி
4.என்றும் பேரின்பப் பெரு வாழ்வாக வாழும் நிலைகளுக்கு நம்மை அரவணைத்து
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் கொண்டு சென்று விடுகின்றது.

அதுவே சொர்க்கவாசலாக அமைந்து அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கின்றது.
1.அதற்கு அப்புறம் வேறு எண்ணங்கள் வருவதில்லை...
2.ஒளியான உணர்வுகள்தான் இயக்கும்.

தாவர இனங்கள் எப்படித் தன் உணர்வின் செயலால்... தன் அறிவால் இயக்குகின்றதோ... இதைப் போல மற்ற உயிரினங்களில் எண்ணங்களாக வருவதை அந்த உயர்ந்த ஒளியின் தன்மை பெறச் செய்து விட்டால் எண்ணங்கள் வருவதில்லை... உணர்வுகள் தான் இருக்கும்...!

ஒரு செடியின் சத்தை நாம் நுகர்ந்தால் அதற்குண்டான எண்ணங்கள் நமக்குள் எப்படி வருகின்றதோ இதைப் போலத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துக் கொண்டால்
1.இந்த மனித உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறுகிறது.
2.மாறியபின் அந்த உணர்வின் இயக்கமாக இயக்கத் தொடங்கும்...!

துருவ நட்சத்திரம் எத்தனை கோடி உணர்வுகளைச் சேர்த்துத் தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாறியதோ அதனின் உணர்வைக் கவர்ந்து உயிரின் துணை கொண்டு நமக்குள் இணைத்தால் ஒளியின் சரீரமாக ஆவோம்.

அப்போது எண்ணமே இல்லாது மற்றொன்றை இயக்கச் சக்தியாக மாற்றும். அத்தகைய பயிற்சியைத் தான் இதிலே கொடுக்கின்றோம் (ஞானகுரு).

“சக்கராயுதம்” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“இரத கஜ துரித பதாதி...” என்ற நால்வகைப் படைகளையும் வியூகம் என்ற மெய்யை வைத்து முதன்மைப் படைக் கேந்திரமாக எத்தன்மை காக்கப்பட வேண்டுமோ... அந்தச் செயலின் உயர் தனித்துவத்திற்குப் பயன்படுத்த வேண்டும்.

இருந்தாலும்... அதற்கு எதிர்மறையான சத்துரு குண எண்ணச் செயல் வீரியம் தன் ஆதிக்கத்தை நிலைப்படுத்த தன் எண்ணம் கொண்டு உடலில் இருக்கும் சகலத்தையும் தன் வசமாக்கிட எண்ண முயற்சிக்கும்.
1.அது தன் குண உயர்வையே பிரதானமாக்கி
2.தனக்கொத்த வலுவில் வலுக்கூட்டிக் கொண்டு
3.சக்கராயுத நடுநிலைத் தலைமையை (உயிர்+ஆத்மா) அடைந்துவிட முயற்சிக்கும்.

அதனால் எழும் போராட்டத்தைச் சுட்டிக் காட்டப்படும் பொழுது உயிரான்ம தத்துவ சரீர கதியில் அந்தத் தீமையின் உணர்வுகளின் செயலாக்கங்களை உணர்ந்து அறியும் கேந்திரங்களில் மெய் என்பது “முதல் வியூகம்...”

இந்தச் சரீர கதிக்கு ஆகார நிலைப்படுத்தும் செயல் வழி கேந்திரம் வாய்... மெய்யை வட்டமிட்ட இரண்டாவது சக்கராயுதம்...! இவை இரண்டையும் வட்டமிட்டுக் காக்கும் அடுத்த நிலை நாசி...!

நாசி என்று கூறும் பொழுது வியூக மையத்தில் காக்கப்படும் உயிரான்ம சக்தியைப் போல்
1.வட்டமிட்டுச் சுழலும் “காக்கும் சக்கர வியூகத்தின்” மையப் பகுதியை
2.காக்கப்பட வேண்டிய அந்த சுவாசத்தின் வீரிய குணத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்த மூன்று தொடரையும் சுழன்றோடும் செயல்பாட்டில் “செவியும்” இது அனைத்தையும் சுற்றிச் சுழன்றோடும் “விழிப்பார்வை” செயல்படுத்தும் நிலையும் உள்ளது. ஆக செயல்படுத்தும் சக்தியாக முன்னிலையில் நிற்பது விழியின் தொடரே...!

சரீர இயக்கத்தில் உணர்த்திட்ட இந்த வழியின் முக்கியச் செயல்பாட்டில் “அடக்குதல்...” என்பதன் பொருள் என்ன...?

ஒவ்வொரு படைப் பிரிவையும் கட்டளையிட்டு அந்தக் கட்டளையின் கீழ் வழி முறைப்படுத்தி நடந்திடும் பக்குவம் ஒவ்வொன்றிலும்
1.முதன்மை பெறும் ஒவ்வொரு அணியின் படைத் தளபதியும்
2.தன் சக்தியின் செயலாற்றலினால் துரித கதி கொண்டு
3.செயல்படுத்தித் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது “தற்காப்பு...!”

இந்த உண்மையை அறிந்து ஒவ்வொரு படைப்பிரிவிலும் எண்ணம் கொண்டு செயல் கொள்ளும் படை வீரர்கள் அந்தக் கட்டளையின் உயர் சக்தியின் தன்மையை உணரும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் படைகளுக்குள் குழப்பம் நிலவி விட்டால் ஒவ்வொன்றும் தன் தன் எண்ணம் கொண்டு தன் இஷ்டம் போல் உலவிடும் செயல்பாட்டின் விபரீதம் ஆகி... பஞ்சேந்திரியத் தத்துவத்தில் “தீமையான செயல் தான்” வலுக் கொள்ள நேரும்.

அப்படிப்பட்ட குழப்பத்தின் நிகழ்வால் உடலுக்குள் ஒருமைப்பாடற்ற தன்மை உருவாகி உயிரான்ம சக்தியைத் தாக்கி அதை வலுவிழக்கச் செய்யும். மேலும் காக்கும் சக்கராயுதத்தையும்... அதாவது வியூகம் என்ற தொடர்புபடுத்திய பஞ்சேந்திரியச் செயல்களையும் கேடாக்கிவிடும்

1.குழப்பத்தின் வழியாகச் செயல்படும் தீதெண்ண அமில குண வீரிய சக்தி காந்த அமில ஈர்ப்பின் செயலால்
2.அது தன் வீரியம் கொண்டு பஞ்சேந்திரியங்கள் அடக்கும் முறைகளை உடைத்து... உள் நுழைந்து செயல் கொண்டு
3.உடலில் உள்ள உயர்ந்த சக்திகளையே அத்தகைய குணங்கள் உண்டுவிடும்.

உயிர் சக்தி வலுப் பெற எண்ணம் கொண்டு செயல்படுத்தும் நல்லாக்கச் செயல் நிகழ்வில்... தன் வீரியத்தைக் காத்துக் கொள்ளும் செயல்பாட்டிற்கு... முதலில் செயல்படுத்துவது ஒன்றுண்டு.

சரீரத்திற்குள் இயங்கி மற்றவைகளையும் இயக்கும் இந்தப் பஞ்சேந்திரியங்களை உயர் சக்தியின் மூல கேந்திரத்திற்கு... அதாவது
1.உயிர் சக்தியின் வசப்படி...
2.உணர்வுகளின் எண்ண ஓட்டம் செயல் கொண்டிடும் விதத்திற்கு
3.அவைகளை அடக்கி ஆளப் பழகுதல் வேண்டும்.

அப்படியானால் தன் சரீரத்தில் இருக்கும் கோடானு கோடி “அத்தனை உயிரணுக்களையும் வசமாக்கிட வேண்டும்...” என்றால் என்ன செய்ய வேண்டும்...?
உணர்தல்...
சுவைத்தல்...
நுகர்தல்...
செவிமடுத்துக் கேட்டல்...
விழியின் செயல் திறன்...
இவை அனைத்திலும் ஓர் பக்குவத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

உயிரான்ம சக்தி உணர்த்தும் கட்டளைகளை... எண்ணத்தின் வலுச் செயலாற்றல் கொண்டு நல்வினையாக்கமாக எண்ணிப் பெறப்படும் செயலில்
1.நிலையாக நின்றிடும் தனித்துவச் செயல் திறனை
2.நீங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது ஆசிகள் (ஈஸ்வரபட்டர்)

April 16, 2021

ஆரம்பத்தில் யாம் அதிவேகமாக உபதேசம் கொடுத்ததன் நோக்கம் என்ன...?

 

சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார்...! என்ற இந்த எண்ணங்களில் தான் இருக்கின்றோமே தவிர “அடுத்தவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்...” என்று நாம் இன்னும் தயாராகவில்லை.

எத்தனையோ வருடங்களாக எண்ணிலடங்காத உபதேசங்களை யாம் கொடுத்திருக்கின்றோம். ஆனால் இதைக் கேட்டுவிட்டு
1.சாமி எப்படிப் பேசுகின்றார் தெரியுமா...? என்று
2.இந்தப் பேச்சைத் தான் அளக்கின்றோம்.

ஆனால் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது...? என்று அடிக்கடி யாம் சொல்லி இருக்கின்றோம். இப்பொழுது தற்சமயத்தில் கொடுக்கும் உபதேசங்கள் எல்லாம் தெளிவாகச் சொல்கின்றோம்.

முந்தி எல்லாம் உபதேசம் செய்யும் போது எக்ஸ்பிரஸ் போன்று அதுபாட்டுக்குக் காற்றிலே போவது போன்று திடு...திடு... என்று ஓடிக் கொண்டிருக்கும்.

அதைக் கேட்பவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள். உபதேசம் கேட்டு முடிந்தவுடன் “அற்புதமாக இருக்கின்றது என்றெல்லாம் தலையை ஆட்டுவார்கள்.

கடைசியில்... சாமி சொன்னது உங்களுக்கு அர்த்தமானதா...? என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

முதலில் அதிவேகமாகச் சொன்னேன். இப்பொழுது ஒரு உணர்வின் இயக்கம் எவ்வாறு இயக்குகிறது...? என்று நிறுத்தி விளக்கமாகச் சொல்கிறேன்.

காரணம்...
1.அன்று குருநாதர் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்திகளை
2.அந்த உணர்வுகளை எடுத்து மீண்டும் எனக்குள் வளர்த்து
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பச் செய்தேன்.

நீங்கள் நோட்டுப் புத்தகங்களில் குறிப்புகளை எழுதிக் கொள்வது போன்று தான் அந்த உணர்வலைகளை வெளியில் பரப்பினேன். கேட்பவர்களுக்குள்ளும் பதிவானது.

உதாரணமாக ஒருவர் பேசுவதை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்தபின் அதைக் குறைவான வேகத்தில் மீண்டும் சுழல விட்டால் தொண்டை கனமாகப் பேசுவது போன்று இருக்கும். ஆனால் அதை வேகமாகச் சுழல விட்டால் கீச்சு...பூச்சு... கீச்சு... பூச்சு... என்று சப்தமிடும்.

அதைப் போன்றுதான் ஆரம்பத்தில் யாம் சொல்லும் பொழுது கீச்சு...பூச்சு... கீச்சு... பூச்சு... என்று தான் இருக்கும். அர்த்தம் புரியாது. ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த சக்திகளை அப்படித்தான் பதிவு செய்தேன்.

ஒருத்தர் எம்மிடம் கேட்கிறார் என்றால் அவரைக் கேட்கச் சொல்லிவிட்டு உடனே எல்லாவற்றையும் பேசி அவர்களுக்குள் பதிவு செய்து அந்த அலைகளைப் வெளியிலே பரப்பச் செய்வேன்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமாகக் கேட்பார்கள். அந்தந்தக் காலகட்டத்தில் உடனே குருநாதர் பதிவு செய்ததை நினைவுபடுத்தி மீண்டும் எடுத்து அந்த அலைகளை இங்கே பரப்பிக் கொண்டே இருப்பேன்.

1.அப்படிப் பரப்பி வைத்த அலைகளை எடுத்துத் தான்
2.அதிலே எதை எதையெல்லாம் உங்களுக்குத் திரும்பச் சொல்ல வேண்டுமோ
3.இப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.
4.முந்தி சொன்னதைத்தான் இப்பொழுது சொல்லிக் கொண்டு வருகிறேன்.
5.ஆனால் முந்தி அர்த்தமாகாது. இப்பொழுது அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்தது முந்தி அர்த்தமாகவில்லை என்றாலும்... சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் அதை இப்பொழுது நீங்கள் எண்ணும் பொழுது உங்களுக்குள் ஓரளவுக்கு அர்த்தமாகும். அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதிக்கு வருகிறீர்கள்.

அதே சமயத்தில் உங்களுக்குள் பதிவு செய்ததை உங்கள் நண்பர்கள் மத்தியில் நீங்கள் சொல்லப்படும் போது அவர்களிடமும் இது பதிவாகி விட்டால் நான் (ஞானகுரு) பேசிய மெய் ஞானிகளின் உணர்வலைகளை அவர்களும் நுகர்ந்து... அந்த சக்தியைப் பெறும் தகுதி அவர்களும் பெறுகின்றார்கள்.

ஒரு மனிதன் நோய்வாய்ப்பட்டு விட்டான் என்றால் என்ன செய்கிறோம்...?

நல்ல மனிதன் என்று பாசத்தால் பழகிய பின் அடுத்தவனிடம் சொல்லப்படும் நோயினால் ரொம்ப அவஸ்தைப்படுகிறான் என்று தான் சொல்கிறோம்.

1.நோயாளியை உற்றுப் பார்த்து அவர் கஷ்டப்படுவதை நுகர்ந்து
2.அடுத்து அடுத்து நண்பர்களிடம் சொல்லப்படும்போது அவர்களும் இதைக் கேட்டு வருத்தப்படுவார்கள்.

அதைப் போன்று தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் வரும் சந்தர்ப்பத்தை எடுத்து உங்களுக்குள் ஞானத்தை உபதேசிக்கின்றேன். அதாவது
1.மறைந்த பொக்கிஷத்தை (அருள் ஞானம்) மீண்டும் நினைவுபடுத்தி அந்த அலைகளைப் பெருக்கி
2.அவ்வப்பொழுது அதற்குண்டான உணர்வைக் கூட்டி
3.உயர்ந்த ஞானத்தின் உணர்வுகளை வெளிப்பரப்பு...! என்று குருநாதர் சொன்னதால்
4.ஆரம்பத்தில் அதை நான் செய்தேன்.

அந்த அலைகள் இங்கே உங்களுக்கு முன்னாடி பரவி இருப்பதனால் உங்களுக்கு இப்பொழுது அர்த்தமாகும் அளவுக்குத் தெளிவாக விளக்கமாக வரும்.

அந்த விளக்கங்களை நீங்கள் மற்றவர்களுக்கும் “சாமி இப்படிச் சொன்னார்...” என்று சொன்னால் இலேசாகப் பதிவாகும். இதை அவர்களும் உணர்வார்கள்.

இப்படி இந்தக் காற்று மண்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக... மிக அடர்த்தியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பரவும்.
1.எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் சந்தர்ப்பமாகவும் அது அமையும்.
2.எல்லோரும் ஞானத்தின் வழித் தொடரைப் பெறும் பாக்கியமாகவும் நிச்சயம் அமையும்.

சிறு மூளை வழி (பிடர் வழி) புருவ மத்தி வழி விண்ணின் ஆற்றலைப் பெறப் பழக வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

பரவெளியின் பூதியில் சூரிய மண்டலங்களின் சந்திப்பில்... யுகம் என்ற மறைபொருளாக விண்மீன்கள் விண் கோள்கள் அமையப் பெற்று ஓர் ஓட்ட கதியில் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

ஒவ்வொரு குடும்பமும் அந்தக் குடும்பத்தின் சுழல் ஓட்ட கதியில் சுற்றி வரும் சூரியனின் சக்தியில்
1.ஒன்றுடன் ஒன்று பிடர் வழி என்ற உந்தும் வீரிய குண சக்தியைக் கொண்டு
2.சக்தியை ஈர்த்துக் கொண்டும்... சக்தியை அளித்துக் கொண்டும்...
3.ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திக் கொண்டு வெளித் தள்ளும் சமைப்பு அமில குணத் தன்மைகளை ஒளி காந்தமாக வீசிக் கொண்டும்
4.தன்னைச் சுற்றி ஓடும் சுழற்சியின் சப்த நாதங்களை வளர்த்துக் கொண்டும்
5.தான் பெறும் சக்தியை ஈர்ப்பு நிலையில் குறைவுபடாத தன்மையாக வளர்த்துக் கொண்டும் உள்ளது.

அவ்வாறு ஓடுகின்ற ஓட்டக் கதியில் எல்லாம்... எந்த மண்டலமோ அந்த மண்டலம் தன் சக்தியின் வலுவைக் கொண்டு
1.தன் ஈர்ப்பு வட்டத்திற்குள் வரும்
2.தன் வலுவை விடக் குறைந்த சக்தி பெற்ற உருவாகும் கோள்களின் தொடரை
3.தான் ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொள்ளும் ஓர் சூட்சமம் உள்ளது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் ஞான வழியில் முன்னேறி வரும் ஞானச் செல்வங்கள் (நீங்கள்) இந்தச் சரீரம் உள்ள பொழுதே வீரியச் சக்தியின் தொடரை வேகம் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகம் என்பது என்ன..?

எண்ணத்தின் வலு கொண்டு...
1.மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சக்தியின் உயிரான்மக் கலப்பின் முலாம் தனக்குள் வலுப் பெற்று விட்டால்
2.ஞானக் கண் திறக்கும் திறப்புச் செயல் வேகம் கொண்டுவிடும்.

அத்தகைய வேகம் கொண்டால் யுகங்கள் தன் சந்திப்பில் ஓர் நட்சத்திரத்தை உருவாக்குவது போல் உருவாக்கும் ஆக்கம் எந்தக் கோளமும் தன் ஈர்ப்பின் வலுச் செயலினால் மூலத்தையே தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியும்.
1.சக்தியின் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் வீரிய மண்டலமாக
2.நீங்கள் ஒவ்வொருவரும் உருக்கோலம் கொள்ள வேண்டும்.

நீங்கள் என்ற சொல் உங்கள் அனைவரின் தொடருக்கு வலுக் கொள்ளும் செயலை... அதாவது “அழுத்தமாகச் சுட்டிக் காட்டும்” அமில குணம் கொண்ட வீரியச் செயலாக... நட்சத்திர அலைகளின் விசேஷ வீரிய குணத் தன்மைகளை அறிந்து கொள்ளும் “உயிரான்மா - ஜீவாத்மா தொடரில்”
1.சரீரத்தின் மூலம் அமைத்துக் கொள்ளும் பக்குவச் செயலாக
2.கரங்களில் வெளிப்படுத்தும் உணர்வு நரம்புகளின் வீரியச் செயல் கொண்டு மண்டலமாக உருவாக்கிடும் உருக்கோலம் கொள்ள
3.”பிடர் வழி” என்றிட்ட மன எண்ணச் செயலில்
4.பரணி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எலும்புகளின் வலுக்கொண்ட சேமிப்பாகக் கூட்டிக் கொண்டு
5.சரீரத்தில் உள்ள உயிரணுக்கள் உயிரின் ஒளி காந்தத்தை நாடி உயிர்ச் சக்தியினை வலுக்கூட்டப்படும் பொழுது
6.சரீரத்தின் கட்டளைக் கேந்திரமான (CONTROL PANEL) சிறுமூளையின் பாகம் திறக்கப்படும் ஞானக் கண் வழியாக
7.எண்ணத்தின் பிடர்வழி உந்தும் குண வீரிய எண்ணமாக ஆக்கப்படும் பொழுது
8.மண்டலத்தின் உருக்கோலத் தன்மைக்கு வித்திடும் வீரிய சக்தியாகப் பரிமளிக்கும்.

ஆக மகரிஷிகள் படைத்த “படைப்பின் படைப்பு” என்பது சூட்சம சரீரம் கொண்டு உயிரான்ம ஒளி காந்த சக்தியுடன் தன் நிகழ்வில் பெறப்படும் சக்திகளுடன் தான் ஒன்றி “ஞானக் கண் திறப்பின்” வழியாகத்தான் தன் வலுவை வீரியமாக்கிக் கொண்டனர்.

பூதியின் வீரிய நட்சத்திரமாகத் தனக்கென்று தன் ஆக்கத்தின் ஆக்கமான படைப்பின் படைப்பான ஒளி காந்த சக்தியைப் பெற்றுச் “சுய வீரிய சக்தி கொண்ட நட்சத்திரமாக உருக்கொண்டார்கள்...!”

April 15, 2021

மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுவதே என்னுடைய பொழுது போக்கு - ஞானகுரு

 

அன்றாட வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் நாம் ஒரு கெட்டதைப் பார்த்து விட்டால் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது. ஏனென்றால் நாம் ரோட்டிலே போகின்ற போக்கிலே அந்தத் தவறு செய்பவர்களைப் பார்க்க நேர்கின்றது.

1.அந்த உணர்வுகள் நமக்குள் பட்டவுடனே நம்மை அறியாமலே வெறுப்பு வருகின்றது
2.அதைச் சுத்தப்படுத்த வேண்டும் அல்லவா...!

சுத்தப்படுத்தவில்லை என்றால் என்ன செய்யும்...? நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வுகளை உயிர் இயக்கிக் கொண்டே இருக்கும். நம்மை அறியாமல் ஆத்திரத்தையும் கோபத்தையும் தூண்டிக் கொண்டே இருக்கும்.

இதைப் போல ஒவ்வொரு நாளும் எத்தனையோ தீமையான உணர்வைப் பார்த்திருப்போம். அந்த அணுக்கள் நமக்குள் விளைந்திருக்கும். அதற்குச் சாப்பாடு தேவை.

அது தன்னுடைய உணர்வுகளை எடுத்து வளரப்படும் பொழுது
1.நம் உடலில் மேல் வலிக்கின்றது... கால் வலிக்கின்றது...
2.கழுத்து சுளுக்கி விட்டது... நரம்பு பிடித்துக் கொண்டது... சுண்டி விட்டது... என்றெல்லாம் சொல்வோம்.
3.நன்றாகத்தான் இருந்தோம்... இது எப்படி வந்தது...? என்று தெரியவில்லை என்போம்.

ஆனால் இவை எல்லாம் எந்த அடிப்படையில் வருகிறது என்றால்... மேலே சொன்ன மாதிரி சில நேரங்களில் நாம் பதிவு செய்த அந்தத் தீமையான உணர்வுகள் அது உடலுக்குள் வலுவாகப்படும் பொழுது நம் நல்ல அணுக்களை இயக்க விடாதபடி தடைப்படுகின்றது. அதனால் வேதனையும் வருகின்றது.

டாக்டரிடம் சென்று அவர் கொடுக்கும் அந்த மருந்தை வைத்துத் தான் இதை எல்லாம் போக்க முடிகிறது.

இருந்தாலும் தீமைகளைக் கண்ட உடனே அடுத்த கணமே அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று அதைச் சுத்தப்படுத்துகின்றோமா என்றால் அந்தப் பழக்கம் நம்மிடம் இல்லை.

அத்தகைய பழக்கம் வர வேண்டும் என்பதற்குத்தான்
1.குருநாதர் காட்டிய அருள் வழியில் உபதேச வாயிலாக அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தியைக் கொடுக்கின்றோம்.
2.அதை எடுக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்துகின்றோம்.
3.அந்த மகரிஷியின் அருள் சக்தியை எடுக்க வேண்டும் என்று
4.பல வகைகளிலும் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

ஆனால் உபதேசங்களைக் கேட்ட பின் எங்கள் சாமி... எங்கள் சாமி...! என்று போற்றுவதற்கு மட்டும் ஆள் நிறைய வந்து விடுகின்றது. உபதேச வாயிலாகக் கொடுக்கும் சக்தியை எண்ணித் தனக்குள் எடுப்பதில்லை.

1.ஞானகுரு சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்தேன்....
2.என்னை நான் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது...! என்ற இந்தச் சொல் உங்களிடமிருந்து வர வேண்டும்.

காரணம் என்ன என்றால் கோபப்பட்டவர்கள்... சலிப்புப்பட்டவர்கள்... சஞ்சலப்பட்டவர்கள்... வெறுப்புப்பட்டவர்கள்... குரோதப்பட்டவர்கள்... தொல்லை கொடுப்பவர்கள்... என்று இத்தனையும் இதற்கு முன்... பதிவு செய்திருக்கிறீர்கள்.

இது எல்லாம் உடனடியாக நினனவுக்கு வந்து விடுகின்றது.

ஆனால் உங்களிடம் உயர்ந்த குணங்களைப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). அதை மீண்டும் எண்ணச் சொல்கின்றேன். நீங்கள் எண்ணுகிறீர்களா...! என்றால் இல்லை.

ஏனென்றால் இந்தக் கோபமும் வெறுப்பும் வேதனையும் குரோதமும் வலுக் கொண்டது. உங்களிடம் இருக்கும் நல்லதை எடுக்க விடாதபடி முன்னாடியே தடுத்து விடுகின்றது.

ஆகவே அதைச் சுத்தப்படுத்தினால் தான் அந்த அருள் ஞானத்தைப் பெற முடியும். சிறிது நாளைக்கு நீங்கள் இதை வளர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதமாக எளிதாகக் கொடுத்து இருக்கின்றேன்.

குருநாதர் எனக்கு எத்தனையோ கடுமைக்கு அப்புறம் அந்தச் சக்தியைக் கொடுத்தார்.
1.உங்களுக்கு இலேசாக எடுத்துக் கொள்ளும்படி அந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளேன்.
2.சதா உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும்...! என்று அதைப் பாய்ச்சுவது தான் என்னுடைய பொழுது போக்காக இருக்கின்றது.

யார் யாருக்கெல்லாம் வாக்கு கொடுத்தேனோ... நல்லதாக வேண்டும் என்று சொன்னேனோ... அவர்களுக்கெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவம் இருக்கின்றேன்.

முதலில் அந்த மகரிஷிகள் சக்தி பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன். எனக்குள் அதை வலுப் பெறச் செய்து கொள்கின்றேன்.

அதற்குப் பின் நான் வாக்குக் கொடுத்தவர்கள் அனைவருக்கும்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
2.அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.. உடல் நலமாக இருக்க வேண்டும்
3.அவர்கள் குடும்பத்தில் உள்ளோர் எல்லோரும் நலமாக இருக்க வேண்டும்
4.அந்த அருள் ஞானம் பெற வேண்டும்... மகிழ்ந்து வாழ வேண்டும்
5.என்னைச் சந்தித்தவர்கள் எல்ல்லொரும் நன்றாக இருக்க வேண்டும் என்று
6.இப்படித்தான் என்னுடைய தவம் இருந்து கொண்டிருக்கின்றது. (ஞானகுரு).

விபூதி பூசுவதன் உண்மைப் பொருள் என்ன...? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

பிடர் வழி என்பதே எண்ணத்தின் உந்தும் குண அமிலச் சக்தியின் வீரியமாகச் செயல் கொள்ளும் பக்குவ கதிக்கு ஊக்கம் என்ற சொல் நாம முயற்சியை நல்லாக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அதுவே நலம் பயக்கும்.

ஆனால் குணங்களின் செயல் மாற்றத்தால் ஏற்படும் செயலின் தன்மை சரீர கதியில் எதிர் மோதல் ஏற்படும் நிலையில் வள்ளுவன் சொன்ன வேதப்படி “ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் அதுவல்லது போக்கது இல்லாச் செயல்...” என்ற சொல்லிய உண்மையும் உண்டு.

1.ஆகவே குணங்களில் மாற்றம் கண்டால்
2.பிடருகின்ற வழிகளில் சக்தியும் குறைவுபட்டுப் போகும்...! என்ற உண்மையை உணர்ந்து
3.நல்லாக்கச் சூட்சம கதிக்கே ஞானச் செல்வங்கள் செயல் கொள்ள வேண்டும்.

பால்வெளியில் படர்ந்துள்ள கோடானு கோடி அமில குணச் சக்திகளில் மறைந்துள்ள மறை பொருள் வண்ண குண அமிலமும்... ஒலி நாதத்தின் அமில குணமும்... ஆதிசக்தியின் அமில குண நீர் சக்தியுடன் ஒன்றிச் செயல் கொள்ளும் பொழுது திடமாகின்றது.

“பால்வெளியில் படர்ந்துள்ள பரமாத்மா...” என்ற சூட்சமத்தில் உயிரணுக்கள் செயல் கொள்ளும் செயலின் நிலையால் ஒன்றுடன் ஒன்று குண அமில ஈர்ப்பில் கலந்து பிறிதொன்றை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
1.பிரம்மமாகச் சிருஷ்டியாகின்றது.
2.அதையே பிரம்மத்தின் உள் மறைந்துள்ள “அனித்தியமான சூடு...!” என்று காட்டப்பட்டுள்ளது.

ஏனென்றால் இந்தச் சரீரம் கொண்டு ஈர்ப்பு நிலை சக்தி பெற்று... “மூல சக்தியில் கலந்துவிடும் செயல்பாட்டின் இரகசியத்தை...!” ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைத் தான் உணர்ந்து கொண்டு தன் வழியில் சக்தியை வலுக்கூட்டி அறிந்து கொள்ள வேண்டும்.

1.சரீர பிம்பத்தில் இரு கரங்களும் இணைக்கப்படும் பொழுது
2.அதன் அமைப்பே ஓர் வட்டச் சுழற்சியின் செயலாக முதலும் முடிவும் அற்ற நிலையில்
3.பால்வெளிப் பூதியில் உருவாக்கும் பிடர் சக்தியின் வழித் தொடரில்
4.பூதியை விபூதி என்ற காட்டிய தத்துவம் - உண்மையை உணர்ந்து கொள்ளத்தான்...!

ஆனால் அதில் விதிவிலக்கும் ஒன்றுண்டு. சூட்சமப்படுத்தப்பட்ட அந்தச் செயலைத் தவிர சரீரம் முழுக்க வேடமிட்டுக் கொள்ளும் இந்தக் கால கட்டத்தில் உண்மையின் பொருளை யார் உணர்ந்தார்கள்...?

(அதாவது ஆவியாக இருப்பது திடமாகிறது... திடமானது மீண்டும் ஆவியாக மாறுகிறது. முதலும் முடிவும் இல்லாது இது நடந்து கொண்டே உள்ளது. பூதி... விபூதி...! திடமான சரீரத்தில் விபூதியைப் பூசுவதன் உண்மை அது தான்...!)

April 14, 2021

மலைப்பாம்பின் ரூபமாக வந்து குருநாதர் எனக்குக் கொடுத்த அனுபவம்

 

காட்டிற்குள் ஒரு சமயம் மலைப்பாம்பு ஒன்று வருகிறது நான் (ஞானகுரு) படுத்திருக்கிறேன். அது சுருண்டு...சுருண்டு சுருண்டு...சுருண்டு. புஸ்...புஸ்...புஸ்ஸென்று வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) தான் இதை ஏவிவிட்டாரா... அல்லது நிஜமாகவே வருகின்றதா...? என்று எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு சீறிக் கொண்டு வருகின்றதே...! நிஜமாகவே உருவாக்கி கொடுக்கின்றாரா...! என்ற எண்ணமும் வருகின்றது.

ஆனால் குருநாதர் அருகில் இல்லை... காட்டிற்குள் சென்று விட்டார். குருநாதர் என்ன ஏவல் செய்கிறார்...? என்றும் எனக்குத் தெரியவில்லை. நிஜமா... பொய்யா...? என்று தெரியவில்லை.

அந்தப் பாம்பு அதிபயங்கரமான நிலைகளில் சீறிப் பாய்ந்து கொண்டு வரும் பொழுது என் மேலே இருக்கக்கூடிய துண்டையும் அதிலே ஒரு கல்லை முடிந்து அதைத் தூக்கிக் கொடுக்கின்றேன்.

இது என்னுடைய யோசனை...! புஸ்...ஸ்ஸ்... என்று இழுக்கும் பொழுது அதைத் தூக்கி கொடுக்கின்றேன். வாயில் சிக்கிக் கொண்டது.

மனிதனுடைய வாசனை என்று தெரிந்து அந்தக் கல்லுடன் சேர்த்து அப்படியே விழுகின்றது. ஏனென்றால் துண்டைக் கையில்தான் எடுத்திருந்தேன். அதற்குள் கல் தான் இருக்கிறது என்று அதற்குத் தெரியாது.

அந்த நேரத்தில் எனக்குள் பல விதமான உணர்வுகள் சுழல்கின்றது.
1.ஒரு பக்கம் தைரியமும் வருகின்றது. ஒரு சில நேரங்களில் தப்ப முடியவில்லை.
2.ஆனாலும் இதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டுமே என்று சிந்திக்க ஆரம்பித்தேன்.

ஏனென்றால் அதற்கு முன்னாடி என் விரலை நீட்டினால் மரத்தையே வேருடன் சாய்க்கும் சக்தியை குருநாதர் கொடுத்திருந்தார்.

சரி...! என்னிடம் கொடுத்த சக்தியை வைத்து நான் ஏதாவது செய்கின்றேனா...? என்று தான் குருநாதர் பரிசோதிக்கிறார் என்ற இப்படி ஒரு சிந்தனை வந்தது.

1.எதுவானாலும் சரி... அப்பா நீயே பார்த்துக் கொள்...
2.எனக்கு ஒன்றும் தெரியாது.
3.என்னைப் பாம்பு விழுங்கினாலும் சரி... அல்லது கடித்தாலும் சரி...
4.நீயே பார்த்துக் கொள் என்று சொல்லி விட்டேன்... அவ்வளவுதான்...!

அந்த மலைப் பாம்பை அனுப்பி வைத்தது அவருடைய ஏவல்தான் என்று அப்புறம் நான் புரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் அந்தப் பாம்பு மறைகின்றது.

குருநாதர் கெக்கெக்..கெக்க.. என்று சிரித்துக் கொண்டு வருகின்றார். என்னுடைய பயிற்சியில் நீ தப்பிவிட்டாய்...! என்கிறார்.

குருநாதர் இந்த மாதிரிப் பல பரிசோதனைகளை வைத்து அவர் எனக்குக் கொடுத்த சக்தியை நான் எப்படி உபயோகிக்கின்றேன்...? என்று பார்க்கின்றார்.

இது போன்ற பல இன்னல்களைப் பட்டேன்... காடு மேடெல்லாம் அலைந்தேன்... குருநாதர் காட்டிய அருள் வழியில் அவர் உணர்த்திய உண்மைகளை அறிந்தேன்... அந்தச் சக்தியை எனக்குள் பெருக்கினேன்.
இருந்தாலும் குருநாதர் எனக்குச் சொன்னது...
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதி
2.ஒவ்வொரு உடலையும் கோவிலாக மதி
3.அந்தக் கோவிலுக்குள் இருக்கும் நற்குணங்களை நீ உயர்ந்த நிலையில் எண்ணு...!

இவ்வாறு நீ எண்ணுவாய் என்றால் நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தி உனக்குள் நற்பயனை அடையும்...! என்று இப்படி இந்த மூன்று சுருக்க நிலையைச் சொன்னார்.

அந்த அடிப்படையில் தான் உங்களுக்குள் அருள் ஞானத்தைப் போதிக்கின்றேன்.