ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2017

“உருவ வழிபாடு இல்லை… அது கூடாது…,” என்று சொல்பவர் எவராக இருந்தாலும் “உருவமில்லாது வணங்குவோர் யாரும் இல்லை”

ஆண்டவனாக இருப்பது நம் உயிர். ஈசனாக இருந்து உருவாக்குவதும் உயிர். நாம் எண்ணியதை உள் நின்று செயலாக்கும் தெய்வமாக இருப்பதும் அது தான்.

நம் உள் நின்று அது இயக்கப்படும் பொழுது அதுவே நம் எண்ணத்தால் உருவான அந்த அணுவின் தன்மை கடவுளாக இருக்கின்றது.

“தனித்த கடவுள்” எவரும் இல்லை.

உணர்வுக்கொப்ப அந்தச் செயலுக்கொப்பத்தான் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த நிலையைத் நாம் அறிந்து கொள்வதற்குத் தெய்வங்களாகக் காட்டப்படுகின்றது.

நாம் பார்க்கின்ற மாதிரி சிவன் இப்படி உருவத்தில் இல்லை. முருகன் இப்படி இல்லை.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உருவங்களைக் காட்டிக் கடவுள் இப்படித்தான் இருந்தார் என்று அதன் வழி வகுத்துக் கொண்ட நிலைகள் தான் இன்று அவர்கள் கொடுத்த காவியத்தைப் பதிவாக்கி இந்த உணர்வே அவர்கள் உடலுக்குள் நின்று கடவுளாக உருவாகின்றது.

உலக மதங்கள் அனைத்திலும் இப்படித்தான் உருவாக்கிக் கொண்டார்கள்.

கடவுள் இப்படித்தான் இருந்தார் என்று கற்பனை செய்து கொண்டு அதற்குத்தக்க உருவத்தைக் கொடுகின்றார்கள்.
1.உருவம் இல்லாத நிலைகள் எதுவும் இல்லை.
2.கடவுள் உருவமே இல்லாதவர் என்று சொல்வார்கள்.
3,அரூபி என்றும் சொல்வார்கள்.
4.ஆலயங்கள் அமைக்கப்படும் பொழுது (எந்த ஆலயமாக இருந்தாலும் சரி) இந்த உருவத்தின் நிலையையே அங்கே உருவாக்குகின்றார்கள்.

அதற்குப் பெயரில்லை என்பார்கள். ஒவ்வொரு மதத்திலும் ஒவ்வொரு ஞானிகளின் பெயரை வைத்திருப்பார்கள்.

மதங்கள் உருவமில்லாத நிலைகளில் அரூபியாகத்தான் கடவுள் செயல்படுகிறார் என்று சொல்வார்கள்.

இல்லை.

கிருஸ்தவர்கள் இயேசுவை உருவமாக வைக்கவில்லையா...! அதே மாதிரி இங்கே உருவமாக மசூதியை வைத்துத் திரையைப் போட்டு மூடவில்லையா...!. அதற்குள் மறைந்துள்ளார்கள் இன்னார் மகான் நல்லவர் என்பார்கள்.

இதுவும் உருவ வழிபாடுதானே.

1.நமக்குள் மறைந்த குணத்தின் செயலாக்கங்களை உருவமாக்கி
2.இன்னென்ன குணங்கள் இன்னது செய்யும் என்று தெய்வ நிலையாக்கி
3.நம்மை அறியும்படி செய்தார்கள் ஞானிகள்
4.இதுவும் உருவ வழிபாடு தான்.

உருவ வழிபாடு இல்லை கூடாது என்று சொல்பவர் எவராக இருப்பினும் “உருவமில்லாது வணங்குவோர் யார் இருக்கின்றனர்…?”

யாருமே இல்லை.

ஒரு உருவத்தை வைத்துத் தான் உருவத்தின் தன்மை தனக்குள் எடுத்துக் காவியத்தைப் பதிவு செய்து அதன் உணர்வே இவர்களுக்குத் தோற்றமாகின்றது.

1.ஒன்று சக்தியாக இருந்த பின் ஒன்றுடன் இணைந்தால் உருவமாகின்றது.
2.உருவமான பின்தான் உணர்வின் தன்மை அதற்குள் சேர்ந்து இணைந்து செயல்படும் சக்தியே வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறர் செய்யும் தீமைகள் நமக்குள் அதிகமாகிவிட்டால் நல்லதை எண்ணாதபடி அதை இறுகப் பிடித்துக் கொள்கின்றோம் - அத்தகைய “பிடிவாதமான தீமைகளை” நாம் அகற்றிப் பழக வேண்டும்

இந்த வாழ்க்கையில் யாருக்கு வேண்டுமென்றாலும் உதவி செய்யலாம். எந்த வகையிலும் நுகர்ந்தறியலாம்.

1.கஷ்டப்படுகின்றார்கள் வேதனைப்படுகின்றார்கள் தவறுகள் செய்கின்றார்கள் என்று
2.புறநிலைகளில் நாம் அறிந்து கொண்டாலும் அறிந்த பின்
3.மீண்டும் அது நமக்குள் அணுத் தன்மையாக கருவாகாதபடி
4.நாம் கேட்டறிந்த அந்தத் தீமைகள் நமக்குள் உருவாகாதபடி தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் இந்த வாழ்க்கையில் பிறருடைய தீமைகளையும் அவர்கள் கஷ்டப்படுவதையும் பார்த்து கேட்டு நுகர்ந்து நமக்குள் வளர்த்து அதையெல்லாம் நாம் “பிடிவாதமாகப் பிடித்துக் கொள்கின்றோம்”.

அதைத் தடுக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

சூரியன் உலகுக்கே ஒளியாக வழி காட்டுகின்றது.

அதைப் போல அகஸ்தியர் தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி ரிஷி என்ற நிலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சிருஷ்டித்துக் கொண்ட நிலைகளில் இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் மனைவி உயர வேண்டும் என்ற உணர்வை ஒன்றாகச் சேர்த்து இணைத்து அந்த ஒளியின் சரீரமாக ஆனவர்கள்.

இருவருமே அந்த உயர்ந்த உணர்வுகளைச் சேர்த்து தனக்குள் எந்தத் தீமையும் புகாதபடி தீமைகளை அழித்தனர்.

அதனின் உணர்வு கொண்டு எந்தத் துருவத்தைக் கூர்மையாக எண்ணினார்களோ கூர்மை அவதாரமாக இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.

பூமிக்குள் வருவதனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதைப் பின்பற்றிச் சென்றவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்,

நவராத்திரி கொலு முடிந்தபின் பத்தாவது நிலையாக விஜய தசமி என்று காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

தசமி - நாம் எப்படிப் பத்தாவது நிலை அடைவது?

விண்ணிலிருந்து பூமிக்குள் விஜயம் செய்யும் உயிர் பல கோடிச் சரீரங்களில் நஞ்சினை வென்று ஒளியாக மாற்றி விண் செல்லும் நிலையைத்தான் விஜய தசமி என்று காட்டினார்கள். அதை அறிவிக்கும் நாள் தான் விஜய தசமி.

அப்படி ஆனது அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆனது. ஆக கல்கி என்று ஒளியின் நிலையாக அவர்கள் எப்படிப் பெற்றார்களோ அதன் வழி கொணடு நாமும் பெறவேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து காலை 4 மணிக்கெல்லாம் அலைகள் வெளி வருகின்றது. சூரியனின் காந்தசக்தி கவர்ந்து நம் பூமிக்குள் கொண்டு வருகின்றது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்தோம் என்றால் நம் சிந்தனையைக் குறைக்கும் நஞ்சான உணர்வுகளை வெல்லும் ஆற்றல் பெறுகின்றோம்.

அதனின் வலிமை கொண்டு நமக்குள் பிடிவாதமாக இயக்கும் அத்தனை உணர்வுகளையும் அடக்க முடியும்.

1.இப்படிச் செய்தானே
2.அப்படிச் செய்கின்றானே
3.இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் என்ன செய்வது...! என்ற நிலையில்
4.”பிடிவாதம் பிடிக்காதபடி” நமக்குள் அந்த உணர்வின் உண்மையை உணர்த்தும்.

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது.

அங்கே எடுத்தவுடன் எங்கே செல்கின்றான் நாரதன்…?

உயிரான விஷ்ணுவிடம் தான் செல்கின்றான். விஷ்ணுவிடம் சென்றபின் கண்ணாக கண்ணனிடம் செல்கின்றான் நாரதன். “கண்ணா.., எல்லா உபாயமும் உனக்குத் தெரியும்”

1.கண்களின் செயலாக்கமும்
2.எண்ணிய உணர்வுகள் நமக்குள் எப்படி உருவாகின்றது என்ற நிலையையும்
3.அதிலிருந்து மீட்டிடும் உபாயங்களையும்
4.ஒரு காவியத் தொகுப்பாக கீதாச்சாரம் என்று எழுதி அமைத்துள்ளார் வியாசகர்.

ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும். அது எங்கள் இரத்த நாளங்களில் கலந்து ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ணிச் சுத்தப்படுத்துதல் வேண்டும். 

இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

June 29, 2017

அருள் ஞானிகளைப் பற்றிய “பதிவு (RECORD) இருந்தால் தான்” அதை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் பெற்ற ஆற்றல்களை நாம் பெறமுடியும்

ஒரு நாடாவைப் பதிவு செய்யும் பொழுது அதில் இருக்கக்கூடிய காந்தப்புலனும் அதற்குள் பூசிய முலாமும் அதற்குள் கவர்ந்து பதிவாக்கிக் கொள்கின்றது.

மீண்டும் காந்தப்புலனால் அதை உராயச் செய்யும் பொழுது அதற்குள் இணைந்த நாத ஒலிகள் வெளிப்படுகின்றது. நாதத்தைப் பெருக்கும் மைக்கிரோஃபோன் அதனுடைய உணர்வுகளைப் பெரிதாக்கிக் காட்டுகின்றது.

பெரியதாக்கும் நுண்ணிய அலைகளைச் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து கொள்கிறது. அந்தக் கவர்ந்த நிலைகளை மீண்டும் ரிக்கார்டு செய்துவிட்டால் இதே உணர்வுகள் இயந்திரத்தில் பதிவு ஆகிவிடுகின்றது.

இயந்திரத்தில் கெமிக்கல் கலந்த முலாமுக்குள் ஊடுருவி வெளிவருவதைச் சூரியனின் காந்த சக்தி கவரும் பொழுது (இரண்டாவது முறை)
1.எந்த இயந்திரத்தின் துணை கொண்டு கலந்ததோ
2.அதே இயந்திரத்திற்குள் அது ஈர்க்கும் உணர்வலையை வைத்துத்தான்
3.இன்று புதிது புதிதாக "விஞ்ஞானக் கருவிகள்" செய்கின்றனர்.

இதைப்போல
1.மனிதனுக்கு மனிதன் இணைந்து கொண்ட உணர்வுகள் பதிவான பின்
2.அந்த அலைகள் தொடர்ந்து இந்த பூமியில் படர்ந்து கொண்டு இருப்பதும்
3.அதை மீண்டும் நினைவு கூர்ந்தவுடன் அந்த அலைகள் நமக்குள் வந்து
4.அடுத்தடுத்து நினைக்கும்பொழுது நம்மை எப்படி இயக்குகின்றது? என்ற நிலையை
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

 இன்று மன மகிழ்ச்சிக்காக விஞ்ஞானக் கருவிகள் எத்தனை வகைகளில் எதைச் செய்தாலும் அதுவெல்லாம் மனித உடலுக்குள் அவன் எடுத்துக் கொண்ட உணர்வு “மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வலைகள்தான் அது”,

இயந்திரக் கருவியில் முலாமை இணைக்கச் செய்து அதிலே மற்றதைப் பதிவு செய்யப்பட்டு அது வெளிப்படுத்தும் பொழுது
1.அதே முலாமின் உணர்வு கொண்டு சூரியனின் காந்த சக்தி கவர்ந்தால்
2.எத்தகைய முலாமைப் பூசினானோ அதன் உணர்வின் துணை கொண்ட நிலையைத்
3.திருப்பி வைக்கும் பொழுது காந்தப் புலன்கள் ஈர்க்கின்றது.

அதைப்போலத்தான் சம்பந்தமே இல்லாதபடி ஒரு நண்பனிடத்தில் நாம் பேசும்பொழுது அந்த உணர்வின் தன்மைகள் நல்ல எண்ணங்கள் பதிவானலும் பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டபின் விஷத்தின் தன்மையாக அது இயக்குவது போல் ஒரு வேதனையான நிலைகளைக் கேட்டால் அதனின் இயக்கமாக மாற்றிவிடுகின்றது.

வேதனைப்படும் அந்த நண்பனிடம் நாம் மிகத் தெளிவான நிலைகளில் தெளிந்து மகிழ்ச்சியூட்டும் சொற்களைப் பேசினாலும் பாலுக்குள் விஷத்தைக் கலந்தால் எப்படியோ அதைபோல நாம் சொல்லும் நிலைகள் வேதனைப்படுவோரின் உணர்வுகளில் ஏறாது. அவர்களுக்குள் புரியும் நிலையோ சிந்திக்கும் நிலையோ அற்றுப்போய்விடும்.

நீங்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் யாம் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தால் உங்களுக்குள்
1.சாமி என்னமோ சொல்கின்றார்,
2.நமக்குப் புரியவில்லை என்ற நிலையாகக் கலக்கத்தை ஏற்படுத்தி
3.சிந்தித்து அறிந்துணரும் நிலைகளைப் பதிய விடாதபடி
4.உங்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கும்.

இதைப் போன்று தான் சாதாரண வாழ்க்கையில் உள்ள நிலைகளை நீங்கள் அதிகமாகப் பதிவாக்கிக் கொண்டீர்கள் என்றால் அது தான் நினைவுக்கு வரும்.

அதற்காக வேண்டித் தான்  யாம் அந்த மெய்ஞானியின் உணர்வு கொண்டு அதை எப்படியும் உங்களுக்குள் பதிவு செய்யவேண்டும் என்ற நினைவினைக் கூர்மையாக்கி இந்த உணர்வின் நிலைகளை உங்கள் ஆன்மாவில் சேர்ப்பதற்காக குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு மீண்டும் மீண்டும் உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வின் நிலைகளில்
1.எப்படியும் யாம் சொல்வது ஆழமாகப் பதிய வேண்டும்
2.அதனின் நிலைகள் ஊழ்வினையாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்கின்றோம்
ஏனென்றால் முதலில் சொன்ன மாதிரி (ஒரு நாடாவில்) பதிவு இருந்தால் தான் நினைவு வரும்.

அருள் ஞானிகளைப் பற்றிய பதிவுகள் இருந்தால் தான் அவர்கள் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் கவர முடியும். அதை வைத்து நமக்குள் வரும் எத்தகைய தீமைகளையும் அகற்ற முடியும்.

வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ முடியும். 

நம் உடலில் பித்தத்தை (விஷமான வாயுக்களை) அகற்றும் இஞ்சி எலுமிச்சைச்சாறின் குண நலன்கள்

ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் எது எது சேர்கின்றதோ அது உள் நின்றே அந்த உணர்வின் கூட்டம் அதிகமாகிவிட்டால் அதன் இனமாகப் பெருகிவிடுகின்றது. ஆனால்,
1.இன்னொரு இனக் கூட்டம் அதிகமாக இருந்து
2.அதற்குள் இந்த அணுவின் தன்மை இணைந்துவிட்டால் இது சிறுத்துவிடுகின்றது.
3.அதற்கு உணவாகிவிடுகின்றது.
4.உணர்ச்சியை மாற்றும் நிலை வருகின்றது.

ஒரு மாவினை எடுத்து அதில் வெல்லத்தைக் கரைத்தால் ஒரு ருசி வருகின்றது, அந்த மாவிலே சீனியைப் போட்டுக் கரைத்தால் அது ஒரு ருசி வருகின்றது.

அதே சமயத்தில் மாவில் சிறிது காரத்தைச் சேர்த்தால் அதனுடைய ருசி வேறாக வருகின்றது. அதிலே சுக்கைச் சேர்த்தால் அது ஒரு ருசி வருகின்றது.

காரம் உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

ஆனால் சுக்கு உடலுக்குள் உற்பத்தியாகும் (விஷமான உணர்வை) வாயுவாக உருவாகி வருவதை அகற்றக்கூடிய சக்தியாக மாறுகின்றது.
1.சுக்கு அல்லது இஞ்சி இவையெல்லாம்
2.ஒரு திடப்பொருளுக்குள் உருவாகும் ஆவியின் தன்மையை நீக்கி
3.சம அளவு கொண்டு வரக்கூடிய சக்தி பெற்றது.

உடலில் உருவாகும் பித்தம் அதிகரிக்கப்படும் பொழுது பித்தத்தால் மந்த நிலைகள் ஏற்பட்டு அதனால் அஜீரணம் ஏற்படும் பொழுது வெப்பத்தால் ஆவியாக மாறுகின்றது.

ஆவியின் தன்மை உறையப்படும் பொழுது சளியாக மாறுகின்றது. ஆஸ்த்மா போன்ற நோய்களையும் உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் இஞ்சிச் சாற்றுடன் எலுமிச்சம்பழத்தின் சாறைச் சேர்த்துச் சிறிதளவு உப்பையும் இணைத்துவிட்டால் இதை அடக்கும் தன்மை வருகின்றது.
1.ஆகவே இது அமிலங்களாக மாறுகின்றது.
2.அணுக்களாக மாறும் தன்மை இல்லை.
3.உடல்களில் அணுக்களாக மாறி வரும் அமிலங்களை இது பிரித்து விடுகின்றது.

இது பௌதீக முறையில் மருந்து என்ற நிலையில் வருகின்றது. 

இதையெல்லாம் நமது தத்துவ ஞானிகள் தெளிவாகக் கூறியுள்ளார்கள். நமது காவியங்களிலும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

விளக்கினுள் ஊற்றப்படும் எண்ணெய் “இருட்டுதான்” ஆனால் எண்ணெயை எரித்தால் அதிலிருந்து “ஒளி” வருகின்றது - விளக்கம்

இன்று நாம் பல வகையான உணர்வுகளையும் இந்த மனித உடலுக்குள் நின்றே அறிய முடிகின்றது. இது தான் மகா சிவன் இராத்திரி.

நம் உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நம் உயிருடன் நினைவு கொண்டு வரப்படும் பொழுது அந்த நினைவின் ஆற்றலாக நாம் தெரிந்து கொள்கின்றோம்.

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் துணையாக நம்மை அறியச் செய்கின்றது. தெளியச் செய்கின்றது.

ஆனாலும் நம் உடலுக்குள்... “இருளாக” இருக்கின்றது.

ஒரு விளக்கில் எண்ணையை ஊற்றும் பொழுது
1.எண்ணெய் இருண்ட நிலையாகத்தான் இருக்கின்றது.
2.அந்த எண்ணெயில் நாம் நெருப்பை வைத்து எரிக்கும்போது
3.அது ஒளியாக மாறுகின்றது.

இதைப் போலத் தான் நம் உடலுக்குள் எத்தனையோ வகையான குணங்கள் பதிவாகியிருக்கின்றது.

அந்த நினைவுகளை எண்ணும் பொழுது
1.அந்த மணம் (உணர்வுகள்) உயிருடன் ஒன்றி
2.உயிரிலே உராய்வாகும் பொழுது
3.அதனின் அறிவாக நம்மை இயக்கி அது அறியச் செய்கின்றது.

இது இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற இயற்கையின் தன்மைகளைத்தான் வேதங்கள் கூறுகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் இணை சேர்க்கும் உணர்வுகளில் மாறுபடும் நிலையை “உபநிஷத்து” என்று உட்பிரிவுகளை உணர்த்திக் காட்டினர்கள் ஞானிகள்.

பல கோடிச் சரீரங்களில் நாம் கடந்து இந்த மனித உடல் பெற்ற பின் இந்த இருளுக்குள் மறைந்து
1.மறைத்து வைத்திருக்கக்கூடிய நிலைகளில் நாம் எதை நினைவு கொள்கின்றோமோ
2.அதனின் நினைவின் ஆற்றலாக நமக்குள் தெரியப்படுத்துகின்றது. அதை அறிகின்றோம்.
3.அதன் வழிகளில் வளர்கின்றோம். அதனின் வழிகளில் நாம் இயங்குகின்றோம்.

இவ்வாறு வருவதை நமக்கு உணர்த்துவதற்குத்தான் மகா சிவன் இராத்திரி என்றும் நம்மை நாம் அறிந்திடும் நிலையாக வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

“நாம் யார்...?” என்று தன்னைத் தான் யார் என்று அறிந்து கொள்ளும் நிலைக்காக அன்றைய காலங்களில் அந்த மகரிஷிகள் காட்டிய உண்மையின் உணர்வுகள் வேதங்களில் உண்டு,

இன்று யாம் உபதேசிப்பது போன்று நமது குருநாதர் இதைப் போன்ற பல பேருண்மையின் நிலைகளை எமக்கு எடுத்து ஓதினார். அந்த உணர்வினைப் பதிவு செய்து “தான் யார்” என்ற நிலையில் என்னைச் சிந்திக்கச் செய்தார்.

இதில் வரும் எதிர்கொள்ளும் தீமைகளிலிருந்து விடுபடும் முறைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார். அவர் காட்டிய வழியில் தான் உங்களுக்குள்ளும் சூட்சமத்தில் மறைந்த நிலைகளை அறியும் வண்ணமாக உபதேசிக்கின்றோம்.

ஆகவே, அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்த்து இருளைப் போக்கிடும் நிலையாக “விழித்திரு” என்ற நிலையில் என்றுமே பேரொளியாக மாறுவோம். 

“இரு..., நான் பார்க்கின்றேன்” என்று நாம் ஒருவரைக் கடுமையாக எண்ணித் தாக்க விரும்புகின்றோம் அல்லது தாக்கிவிடுகின்றோம் - அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று அறிந்திருக்கின்றோமா...?

நாராயணன் பூலோகத்திற்கு வந்து சீதா ராமனாகப் பிறக்கிறான் என்று காவியங்களில் தெளிவாக எடுத்துரைத்தனர் ஞானிகள்.

இராமனோ தான் எய்த அம்பைத் திரும்ப வாங்கிக் கொள்வான். இதையெல்லாம் கதையாகப் படிக்கின்றோம் பார்கின்றோமே தவிர அதில் உள்ள மூலங்களை நாம் அறியவில்லை.

நான் ஒருவரைக் கெடுதல் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றேன், இது சீதா - சுவை. அது சொல்லாக எனக்குள் வரும் பொழுது உங்கள் மேல் பாய்ச்சுகின்றது.

1.கெடுக்க வேண்டும் என்ற அந்த உணர்வு அம்பாகப் பாய்ந்தவுடனே
2.“இரு உன்னை நான் பார்க்கிறேன்” என்று திரும்பி
3.அந்த அம்பு எனக்குள் வரும் என்று
காவியங்களில் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்..

அதே சமயம் வாலி இன்று மிகவும் வலிமை பெற்றவன். ஆனால், பிறர் எவ்வளவு வலிமை கொண்டிருந்தாலும், வாலி தன் கண் கொண்டு பார்ப்பானேயானால் அவனுடைய வலுவில் சரி பகுதி வலு பெற்று விடுவான் என்பார்கள்.

ஒரு போக்கிரியை நாம் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவனுடைய வலு அதிமாக இருக்கும் பொழுது,
1.நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த குணங்கள் கொண்டிருந்தாலும்
2.எத்தனை ஆயிரம் பேரை சமாளிக்கக் கூடிய திறன் இருந்தாலும்
3.அவன் மேல் பார்வை பட்டவுடனே...,
4.என்ன பலம் இருந்தாலும் அனைத்தையும் இழக்கச் செய்து நமது வலு பூராவும் அங்கே சென்றுவிடுகின்றது.

“ஒரு கராத்தே மாஸ்டர்...,” அவர் பல அடுக்கு ஓடுகளை ஒரே சமயத்தில் வெட்டிவிடுவார்.

ஆனால் அவர் வீட்டிலே வெறும் தடியைக் கொண்டு கதவை உடைத்து அவரை அடித்து எல்லாப் பொருளையும் எடுத்துக் கொண்டு போகும் நிலை உள்ளது. (பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள்)

1.ஆகவே நாம் எத்தகைய வலுகொண்டு
2.அசுர உணர்வு கொண்டு அதை வளர்த்துக் கொண்டோமோ,
3.அதற்குத் தகுந்த முரட்டுப் புத்தி வரும்.
4.எதைச் சொன்னாலும அலட்சிய புத்தி வரும்.

இதே மாதிரி எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை யாராவது எதையாவது சொன்னால்..., “இரு... உன்னைப் பார்க்கின்றேன்” என்ற இந்த உணர்வுதான் வளரும்.

இதைப் போன்று நாம் எண்ணினால் நமக்குள் வரும் அந்த நிலையையே
1.முரடனின் நிலையை
2.வாலியாகச் சித்தரித்தார்கள் ஞானிகள்.

எண்ணங்கள் பிறருடைய நிலைகளைக் கவரும் சக்தி கொண்டது.

அதனால் தான் நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு அவனை (வாலியை) வெல்வது முடியாது என்று இராமாயணத்தில்..., “மிகத் தெளிவாக” எடுத்துக் கூறியுள்ளார்கள்.

ஒருவர் தீமையாகப் பேசினால் நேரிடையாகப் பார்க்கும் பொழுது நம் நல்ல குணங்கள் அனைத்தும் அழிந்துவிடுகின்றது.

“நான் ஒன்றுமே செய்யவில்லை.., இப்படிப் பேசுகின்றான் பாவி”, என்று அவர்களுடைய உணர்வை எடுத்துக் கொள்வோம்.

அவன் உணர்வை எடுத்துக் கொண்டபின் நஞ்சின் தன்மை கொண்டு “பதட்டத்தில்... நான் ஒன்றுமே செய்யவில்லை பாவிப்பயல்..., இப்படிச் செய்கின்றான்” என்றவுடன்
1.அவன் அடக்கிக் கொண்டு இருப்பான்
2.இந்த வலுவின் தன்மை அங்கே சென்று
3.“இப்படிப் பேசினால், நான் சும்மா இருப்பேனா?” என்று கூறும் நிலையும் அங்கே வருகின்றது.

இவையெல்லாம் நம் வாழ்க்கையில் எவ்வாறு வருகின்றது? என்பதை இராமாயணம், கந்தபுராணம், கீதை, இவைகளில் தெளிவாகக் கூறியிருந்தாலும் நாம் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றோம்...!

அவைகளைக் குப்பையில் போட்டுவிட்டு
1.நம்மை ஏமாற்றும் நிலையிலும், யாகங்கள் செய்தால் வேள்விகள் செய்தால்
2.கடவுள் நமக்கு நேரிடையாகக் கொடுப்பான் என்ற இந்தத் தன்மை கொண்டு,
3.உண்மையை நாம் அறியாது மெய் உணர்வை நாம் அழித்துக் கொள்ளும் நிலைகளில் உள்ளோம்.

விஞ்ஞான அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். விஞ்ஞான நிலைகள் நமக்குப் பயன்பட்டாலும்.., “அது உடலுக்கே”. (உடலுக்குப் பின் என்ன என்ற நிலை விஞ்ஞானத்தில் இல்லை...!)

உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு என்றும் அழியாத சரீரம் பெறுவதே வேகாக்கலை என்று மெய்ஞானிகள் காட்டியது.

அதை நாம் அனைவரும் பெறுவோம்

எமது அருளும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும் உங்கள் அனைவருக்கும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும். அருளாசிகள்.

June 28, 2017

தெய்வ குணத்தை நமக்குள் வளர்க்கச் செய்வதற்காகவே ஒவ்வொரு ஆலயங்களிலும் “ஓம்…” போட்டுக் காட்டியுள்ளார்கள் ஞானிகள் – நாம் வளர்க்கின்றோமா…

ஓர் அணுவின் தன்மை ஐந்து புலனறிவு என்று வைத்துள்ளளனர் ஞானிகள்.

இதையே
1.வெப்பம் (பராசக்தி)
2.காந்தம் (லட்சுமி)
3.விஷம் (இயக்கும் சக்தி)
4.மணம் (அறியும் சக்தி) இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து
5.உணரும் சக்தியாக மாறுகின்றது என்பதை
மெய்ஞானிகள் அன்று பெயர் வைத்து நமக்குத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள். ஆகவே உணர்வு என்ற நிலை வரும் பொழுது அனைத்தும் சேர்ந்து, ஒன்றாக மாறுகின்றது.

சூரியனில் இருந்து வரும் வெப்பகாந்தம் உள் நின்று அந்த உணர்வின் சக்தியை தன்னுடன் அணைத்துச் செல்லும் பொழுது
1.அந்த உணர்வுக்குள் இருக்கும் 
2.அந்த இயக்கச்சக்தியாக மாறும் நிலையே.., “கடவுள்”

எந்த மணத்தின் சக்தியை எடுத்துக் கொள்கின்றதோ அது விஷமான சத்தாக இருந்தால் நாம் மணத்தால் நுகரப்பபடும் பொழுது அந்த விஷத்தின் தன்மை இயக்கச் சக்தியாக இறையாகின்றது.

உயிர் இயக்கும் பொழுது நெகடிவ் பாசிடிவ் (+/-)

ஒரு மேக்னட் சுழலும் பொழுது அது தனக்குள் கரண்டை உற்பத்தி செய்கின்றது. இதைப்போலத்தான் நமது பூமி சுழலும் பொழுது ஏற்படும் வெப்பத்தால் காந்தம் ஏற்படுகின்றது.

அத்தகைய காந்தத்தால் பூமிக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிலும் காந்தப்புலன் இருக்கின்றது. பூமி சுழலும் பொழுது தன் எதிரிலே படும் காந்தப்புலனுடன் உராயப்படும் பொழுது கரண்டை உற்பத்தி செய்கின்றது.

அதனால் அதனதன் நிலைகளுக்கொப்ப பூமியின் ஆற்றலை அது பெறுகின்றது. இதைப் போல நமது உயிரின் தன்மை “நெகடிவ்… பாசிடிவ்…” என்ற, எதிர்மறையான இயக்கங்களில் இயக்கும் பொழுது இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

நமக்குள் வெப்பமாக இயங்குவது கடவுள் என்றும் இயக்கத்தின் சக்தியை ஈஸ்வரா என்றும் பெயரை வைத்துள்ளனர். ஏனெனில் வெப்பம் எதனுடன் சேர்ந்தாலும் உற்பத்தி செய்யும் நிலைகள் பெற்றது.

நமது ஞானிகள் இதை நாம் தெளிவுறத் தெரிந்து கொள்வதற்காக, தெளிவான நிலைகளில் கண்டுணர்ந்து அந்தப் பேருண்மைகளை நமக்கு எடுத்து உரைத்துள்ளார்கள்.

1.நமது உயிர் இயக்கமாகும் பொழுது இயக்கத்தை ஈஸ்வரன் என்றும்,
2.இயக்கத்திற்குள் எற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்,
3.வெப்பம் எற்படும் நிலையில் ஈர்க்கும் சக்தி வரும்பொழுது விஷ்ணுவின் மனைவி லட்சுமி என்றும்
4.விஷ்ணுவின் மனைவி லட்சுமியானாலும் காந்தம் இந்த உயிருடன் இணைந்து இயக்கச் சக்தியாகும் பொழுது “துடிப்பாகின்றது”.

ஒரு நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டவுடன் கொதிப்பாகி அதனின் மணம் வெளிப்படுகின்றது. ஆகவே
1.எந்த உணர்வின் சத்தை அது கவர்கின்றதோ
2.கவர்ந்த உணர்வுகள் உயிருடன் உராயும் பொழுது
3.நாம் எண்ணிய அந்த உணர்வுகள் ஜீவன் பெறுகின்றது.

இதைப் போல் உயிருக்குள் இருக்கும் பொழுது ஜீவ சக்தியாக அது மாற்றுகின்றது. இதுதான் “ஓ…” என்ற உணர்வின் சத்து உயிருடன் ஒன்றி உராயும் பொழுது பிரணவமாகி “ம்...” (சிவம்) உடலாகின்றது. சிவத்திற்குள் அது சக்தியாக மாறுகின்றது.

நாம் எண்ணும் எண்ணத்தை நமக்குள் ஜீவனாக்கச் செய்வது நம் உயிரின் வேலை. அதனால்தான் கோயில்களில் “ஓ…ம்” என்று அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லிப் போட்டிருப்பார்கள்.

நாம் அந்தத் தெய்வத்தைப் பார்க்கும் பொழுது அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால் அது “ஓ…ம்” என்று ஜீவனாகின்றது.

1.அந்தத் தெய்வ குணத்தின் சக்தி நமக்குள்ளாகும் பொழுது
2.அந்தத் தெய்வ குணத்தின் செயலாக நமக்குள் செயலாற்றும்.
3.தெய்வ குணத்தை நமக்குள் உருவாக்குவதற்கே “ஓ…ம்” என்று காட்டியுள்ளார்கள்.

கோவிலுக்குச் சென்றால் நாம் அந்த ஞானிகள் காட்டிய சாஸ்திரப்படி தெய்வ குணங்களை வளர்க்க வேண்டும். நாம் அவ்வாறு வளர்க்கின்றோமா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.