ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2018

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவதற்காகக் காசைச் செலவழிக்க வேண்டியதில்லை

பணம் இந்த உடலின் நிலைகளுக்குத் தான் வரும். ஆனால் அந்த மெய் ஞானிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டினால் இந்த வாழ்க்கையில் வரக்கூடிய இருளை மாய்க்கலாம். இதற்குப் பணம் தேவையில்லை. காசைச் செலவழிக்க வேண்டியதில்லை.

நம் மனதில் அந்த மெய்ஞானிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற இச்சை இருக்க வேண்டும். சக்தி பெற வேண்டும். என் மூச்சு நான் பேசுகிறவர்களுக்கு எல்லாம் நல்லதாக வேண்டுமென்று ஆத்ம சுத்தி செய்து கொண்டிருந்தால் வியாபாரம் நன்றாக இருக்கும்.

நம் மனது நல்லதாக இருக்கும், நம் குடும்பத்தில் எல்லாம் நல்லதாக இருக்கும். சண்டையை நிறுத்தும். நோயைப் போக்கும். இத்தனையும் நாம் அனுபவிக்கலாம். நம் எண்ணம் அண்டவெளி வரையிலும் போகும்.

நமக்குள் இருக்கும் சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம்.

தியானத்தின் மூலம் ஞானியரின் அருள் சக்தியை வளர்த்துக் கொள்வோம். ஞானியரின் அருள் ஆற்றல் நமக்குள் பெருகும்போது துன்பங்களும் துயரங்களும் வேதனைகளும் விலகுகிறது.

ஏனென்றால் ஒவ்வொரு ரிஷிகளும் ஞானிகளும் மனிதனைத்தான் தேடி வந்தார்கள்.  மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் ஞானகுருவும் நம்மைத் தேடி வந்து தான் இந்தச் சக்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

அதைப் பெறவேண்டும் என்ற ஆசை மட்டும் நம்மிடம் இருந்தால் போதும்...!