ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label அணுவின் ஆற்றல். Show all posts
Showing posts with label அணுவின் ஆற்றல். Show all posts

February 20, 2013

ஒரு அணுவிற்குள் உள்ள ஆயுதங்கள் - ஆயுத பூஜை

சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம் பராசக்தி என்றும், அதனிடம் இணைந்து வெளிப்படும் சக்தி காந்தம் லட்சுமி என்றும் பெயர் வைத்தனர் ஞானிகள். அதனுடன் வெளிக்கடந்து, சூரியனிலிருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினைக் கவர்ந்து, நமது பூமிக்குள் வரப்படும் பொழுது, மூன்று நிலையாக வருகின்றது.

விஷம்   இயக்கம்,
காந்தம்   இணைத்தல்,
வெப்பம் உருவாக்குதல்,
என்ற நிலைகள் கொண்டு, நம் பூமிக்குள்  வரப்படும் பொழுது, அது நம் பூமியிலே வந்து, ஒரு ரோஜாப்பூவின் மணத்தைக் கவர்ந்து கொண்டால், காந்தம் தனக்குள் கவர்ந்து, தன்னுடன் இணைத்துக் கொள்ளும் பொழுது, வெப்பமான நிலைகளிலே இது மோதியவுடனே, வெப்பமாகின்றது.

அப்பொழுது, அது இரண்டறக் கலந்து, அந்த ரோஜாப்பூவின் மணமாக,
இந்த சூரியனில் இருந்து வந்த, காந்தப்புலன் இயங்குகின்றது. அப்பொழுது அந்த மணம், ஞானம் சரஸ்வதி. ஆகவே, அந்த அணுவிற்கு
(1) வெப்பம் - உருவாக்கும் சக்தியாகவும்,
(2) காந்தம்  - தனக்குள் அணைக்கும் சக்தியாகவும்,
(3) மணம்    - அறியும் சக்தியாகவும்,
அதனுடன் இணைந்துள்ள
(4) விஷத்தின் தன்மை - இயக்கச்சக்தியாகவும்,
அனைத்தும் இணைந்து இருந்தால்,
(5) உணர்வு, இயக்கம் என்று, ஐந்து புலனறிவாக மாறுகின்றது.
மூன்று சக்தியாக இயங்குகின்றது. (1) பராசக்தி   வெப்பம், உருவாக்கும் சக்தி  (2) லட்சுமி    - காந்தம், அணைக்கும் சக்தி(கவரும் சக்தி)  (3) சரஸ்வதி  -ஞானம், மணத்தின் சக்தி,  என்று  ஒரு அணுவின் இயக்கத்தை நாம் அறிந்து கொள்வதற்குத்தான், மூன்று படங்களையும் வைத்து, ஒரு அணுவிற்குள் உருவாக்கும் சக்தியும், அணைக்கும் சக்தியும், மணத்தின் சக்தியுமாக அது இயங்குகின்றது,  என்ற நிலையை மனிதனாக இருக்கும் நாம் புரிந்து கொள்வதற்காக, ஆயுத பூஜை என்று ஞானிகள் வைத்தார்கள்.

‘’ஆயுதம்‘’  என்றால் என்ன?  இப்பொழுது எந்த குணத்தை எண்ணுகின்றோமோ,  அந்த குணத்தின் சக்தியாக நாம் எண்ணி, அதையே ஆயுதமாக எண்ணி, நாம் செயல்படும் தன்மை, ஆயுத பூஜை.

இப்போது நாம் ஒரு பொருளை உருவாக்க வேண்டும் என்றால்,  அதை எண்ணி, நாம் எண்ணத்தால் செயல்படுத்தும் நிலையை நாம் அறிந்து கொள்வதற்காக,  ஆயுத பூஜை என்று வைத்தது.

நாம் ஏதாவது செய்யவேண்டும் என்றால், ஞானம் வேண்டும் என்பதற்காகத்தான் ஆயுத பூஜை என்றும், நாம் எண்ணியதை காந்தம் அணைத்து, அந்த உணர்வாக செயலாக்கும் நிலைதான் லட்சுமி. இவை அனைத்தும் நமக்குள் எண்ணியதை, இந்த எண்ணத்தை உருவாக்கியது, ‘’பராசக்தி’’ என்ற இந்த  உண்மையினை நாம் அறிவதற்காகத்தான்,  (ஒரு அணுவிற்குள் உள்ள ஆயுதங்கள்) “ஆயுத பூஜை என்றும், லட்சுமி பூஜை என்றும், பராசக்தி பூஜை என்றும் கொண்டாடப்படுகின்றது,

 இன்று வட இந்தியாவில் எடுத்துக் கொண்டால், துர்கா பூஜை என்றும், காளி பூஜை என்றும் அதை வணங்குகின்றனர். அன்று துர்கை மாதிரி சிலைகளைச் செய்து, பத்து நாள் கொண்டாடி, அதன்பின் துர்கையைக் கொண்டு போய்த் தண்ணீரில் கரைப்பது வழக்கம்.

ஆனால், தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலும், ஆயுத பூஜை என்று நாம் வைத்து, முறைப்படி இங்கு வணங்குகின்றோம்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி,
என்று சொன்னதைப் போல, தென்னாட்டிலே தோன்றிய அகத்திய மாமகரிஷி இதைக் கண்டுணர்ந்து, இந்த உண்மைகளை வெளியிட்ட நாள் தான் விஜய தசமி.

இதிலிருந்துதான், உலகம் முழுவதற்கும் விண்ணுலக ஆற்றலின், ஒரு அணுவின் இயக்கத்தை வெளிப்படுத்தியது.

February 16, 2013

எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் & அப்பு, வாய்வு, தேய்வு

1. எலெக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான்
நமது சாஸ்திர விதியில், ”ஆதிசேஷன்” என்பார்கள். ஆதிசேஷன் என்றால் விஷம். அதன் மேல், நாராயணன் பள்ளி கொண்டான் என்பார்கள். விஞ்ஞானிகள் இதை ”அல்ட்ரா வயலட்" (ultra violet)  என்கிறார்கள். விஷத்தின் இயக்கத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டு, நாராயணன் உலகை இரட்சிக்கின்றான் என்று பொருள்படும்படியாகக் காவியமாகத் தீட்டியுள்ளார்கள். நாராயணன் என்பது சூரியன். பாற்கடல் என்பது, விண்வெளி.

அல்ட்ரா வயலட்டுக்குள், வெப்பகாந்தம் ஊடுருவி வரும் பொழுது, அது கவர்ந்து கொண்ட விஷத்தின் தன்மைக்கு, ஞானிகள் ”இலட்சுமணா” என்று பெயர் வைக்கின்றார்கள்.
இலட்சுமி (காந்தம்) கவர்ந்து,
அந்த விஷத்துடிப்பான மணம்,
வெப்ப காந்தத்திற்குள் இருந்து இயக்கும் நிலையையே,
இலட்சுமணா என்று பெயரை வைக்கின்றார்கள்.

வான்மீகி எழுதிய காவியத்தில், நாராயணன் பூலோகத்திற்குச் சென்று, இராமனாகப் பிறக்கச் செல்லும் பொழுது, ஆதிசேஷனையும், தன்னுடன் இலட்சுமணா என்ற பெயரில் அழைத்துச் செல்கின்றான், என்றார்.

அல்ட்ரா வயலட் என்ற நஞ்சினைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, பிரபஞ்சத்தில் படரப்படும் பொழுது, விஞ்ஞான அறிவுப்படி, “எலக்ட்ரானிக்” என்று பெயர் வைக்கின்றார்கள். மெய்ஞான அறிவுப்படி, “இயக்கச் சக்தி” என்று பெயர் வைக்கின்றார்கள்.

ஒரு அணுவின் நிலை, மற்றொன்றுடன் இயக்கப்படும் பொழுது, விஷம் கொண்டு தாக்கப்படும் பொழுது, இயக்குகின்றது.
தேள் கடித்துவிட்டால், எப்படி நம்மைத் துடிக்கச் செய்கின்றதோ,
அதைப் போல ஒரு விஷத்தன்மையை
ஒரு அணு கவர்ந்து கொண்டால், துடிக்கச் செய்கின்றது.
இதையே, மெய்ஞானிகள் இயக்கச் சக்தியாகப் பெயர் வைத்தனர். விஞ்ஞானிகள் எலக்ட்ரானிக் என்றனர்.

அதைக் கடந்து, வெளியிலே செல்கையில், வேறு மணத்தைக் கவர்வதை விஞ்ஞானிகள், “நியூட்ரான்” என்கிறார்கள். அன்றைய மெய்ஞானிகள், “சரஸ்வதி” என்றார்கள்.
இது வெளியில் செல்கையில், வேறு மணத்தை நுகர்ந்தாலும்,
அல்லது அது தனக்குள் இயக்கிக் கொண்டால்,
எந்தச் சத்தின் மணம், அதனுடன் இயங்குகின்றதோ,
அதன் மணம், இந்தக் காந்தம் இணைத்துக் கொண்ட வெப்பத்தால்,
அதனின் மணம் வெளிப்படும் நிலையும்,
அதனதனுடன் கலந்து, விஷத்தின் ஆற்றல் ஊன்றி,
அது உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை பெற்றது என்பதனை சரஸ்வதி – ஞானம் என்று பெயர் வைக்கின்றார்கள். அந்த அணுவின் தன்மை, முழுமை அடைந்து விடுகின்றது.

விஞ்ஞானிகள் அதைப் “புரோட்டான்” (சத்து) என்று அவர்களின் நிலைக்கேற்ப, பெயர் வைக்கின்றார்கள். மெய்ஞானிகள் ஒரு அணு, ஒரு சத்தினைத் தனக்குள் எடுத்துக் கொண்டால், அச்சத்தின் வலுக் கொண்டு, அச்சத்தின் முழுமையான செயலாக்கும் இந்நிலைக்கு, “காயத்ரி” என்று பெயர் வைத்துள்ளனர்.
 
2. ப்பு, வாய்வு, தேய்வு
இன்று, காயத்ரி ஜெபிக்கின்றோர் அநேகம். அன்று, வியாசகர் நாம் எதை ஜெபித்து, எதை முழுமையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்? என்று தெளிவுற எடுத்துக் கூறியுள்ளார்.

நாம் கசப்பைச் சாப்பிட்டால், உள்ளேயிருப்பதை வெளியே தள்ளிவிடுகின்றது, துவர்ப்பைச் சாப்பிட்டால், உள்ளே மெதுவாகத்தான் செல்கின்றது. அதன் உணர்வின் சுவை, நறுமணம் வீசுகின்றது. ஆனாலும் அவ்வுணர்வின் சுவை திகட்டுகின்றது.

ஒரு விஷச் செடியிலிருந்து வரும் சத்து, நமது மேலே பட்டால், அரிப்பு ஏற்படுகின்றது. அது நமக்கு நம நமப்பாகத் தோன்றுகின்றது. அவ்விஷச் செடியின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவருமேயென்றால், நமநமப்பை உருவாக்கும் காயத்திரியாக மாறுகின்றது.

கசப்பான உணர்வுகள் அலைகளாகப் படரும் பொழுது, அக்கசப்பான அலைகள் உந்து விசை கொண்டதாக இருப்பதால், ரோஜாப்பூவின்  மணத்தை எடுத்துக் கொண்ட உணர்வலைகள், இந்த மணம் தாங்காது, ஓடும் நிலை வருகின்றது.

எடுத்துக் கொண்ட சத்தின் தன்மை ”அப்பு”
இந்த உணர்வின் தன்மை, நகர்ந்து ஓடும் பொழுது, “வாய்வு’
அதைக் கடந்து இந்த மூன்று நிலைகளும் ஒன்று சேர்த்து, ஒன்றுடன் ஒன்று நகர்ந்து செல்லும் பொழுது, சீரான காற்று வந்தாலும், அதனின் உணர்வு ஒன்றாகச் சேர்ந்து சுழல் காற்றாக மாறுகின்றது.

அந்தச் சுழல் காற்றாக ஆகும்பொழுது, 
மூன்று மணங்களும் ஒன்றாக ஆனாலும்,
இந்த விஷச் செடிப் பக்கம் சென்றவுடன்,
தேள் கடித்தவர் நகர்ந்து செல்லாமல்,
அங்கேயே சுழலுவதைப் போல,
இந்த உணர்வின் சத்து, ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது,
விஷத்தின் தன்மை கொண்டு சுழன்று ஓடுகின்றது.

முதலில், ரோஜாப்பூவின் மணம், விஷத்துக்குள் சிக்குகின்றது. அது தாங்காது, சுழல ஆரம்பித்து விடுகின்றது. அடுத்து, வேப்ப மரத்தின் கசப்பின் தன்மையைக் கவர்ந்த அணு வந்து, இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி, பெரும் சுழல் காற்றாக மாறுகின்றது.

ஆனால், இம்மூன்றும் ஒன்று சேரும் பொழுது, வேப்ப மரத்தின் சத்தையும், ரோஜாப்பூவின் மணத்தின் சத்தையும், விஷச் செடியின் மணத்தின்  சத்தையும் இழந்து விடுகின்றன.

மூன்றும் சேர்ந்து ஒன்றாகும் நிலையே “தேய்வு”. இதைத்தான் “அப்பு”, “வாய்வு”, “தேய்வு” என்று நமது ஞானிகள் பெயர் வைத்தார்கள்.

முதலில் சேர்த்துக் கொண்ட, இந்த சக்தி இரண்டும் சேர்ந்தவுடன், அதனின் சக்தியை இழந்துவிடுகின்றது. அதனால்தான் இதைத் தேய்வு என்று பெயர் வைத்தார்கள்.