ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2015

ஞானகுருவின் பொன்மொழிகள் January 2015

31.01.2015
பிரபஞ்சத்தை அறிந்த குருவானவர் தரும் ஞானத்தைப் பின்பற்றுவதில் நாம் காட்டும் வைராக்கியம் நம் ஆன்மாவையும் வாழ்வையும் ஜொலித்திடச் செய்யும்.
30.01.2015
ஆலயத்தில் தெய்வத்தைப் பார்க்கப்படும்பொழுது,
இந்த தெய்வ குணத்தைப் பெறவேண்டும்,
இந்த மலரின் மணம் பெறவேண்டும்,
கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் நாங்கள் பெறவேண்டும்,
அந்த மலரைப் போல எங்கள் உடல் முழுவதும் மணங்கள் மணக்க வேண்டும்,
அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்களுக்குள் நல் மணமாக மாறவேண்டும்,
எங்கள் சொல்லின் தன்மை பிறரை இனிமைப்படுத்தும் நிலை பெறவேண்டும் என்று நாம் எண்ணும்பொழுது
நாம் எண்ணியதை அந்த உணர்வின் தன்மை தெய்வமாக மாற்றுகின்றது.
29.01.2015
பிரபஞ்சத்திற்கு சூரியன் குரு. உடலுக்கு உயிர் குரு. சூரியன் எவ்வாறு இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றதோ அதைப் போன்று நமது உயிர் நமது உடலுக்குள் ஒரு பிரபஞ்சத்தையே உண்டாக்குகின்றது.
முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலைப் பெற்றிருக்கிறோம். மிருக நிலைகளிலிருந்து மனித உடல் பெற்ற நாம் அந்த மெய்ஞானி பெருக்கிய உணர்வின் தன்மையை இந்த உடலுக்குள் பெருக்க வேண்டும்.
28.01.2015
நமது எண்ணம் கொண்டு நம்முள் உணர்வை உருவாக்கும் நிலைக்குத்தான் இராமேஸ்வரம் என்று ஞானிகள் பெயரிட்டார்கள்.
27.01.2015
நீங்கள் உங்களுடைய நெடுநாளைய நண்பரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருப்பீர்கள் என்றால், இதனின் உணர்ச்சிகள் நண்பரிடத்தில் தூண்டப்பட்டு நீங்களும் உங்கள் நண்பரும் சந்திக்கும் சந்தர்ப்பம் உருவாகும்.

இது போன்று அருள் மகரிஷிகள் அருள் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கி தியானிப்பீர்கள் என்றால், மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பம் உருவாகும்.
26.01.2015
காடுகளில் வாழும் புலையர்கள் யானை புலி போன்ற மிருகங்கள் வெகு தொலைவிலிருந்து வரும் பொழுதே யானை வருகிறது, புலி வருகிறது என்று தங்களுடைய புலனறிவால் தெரிந்து கொள்கின்றனர். தங்களைக் காத்துக் கொள்கின்றனர்.
ஆனால், நகரங்களில் வாழும் மனிதர்களான நாமோ ஒருவரைப் பார்க்கும் பொழுது இவர் நல்லவரா, கெட்டவரா என்று தெரிந்து கொள்ள முடிவதில்லை.

ஆனால், நாம் துருவ நட்சத்த்திரத்தினை எண்ணி ஏங்கி தியானித்துப் பெற்ற பேரருள் உணர்வானது நம்முள் தீமைகள் வராது காக்கின்றது.
25.01.2015
அகஸ்திய மாமகரிஷி, வான்மீகி மாமகரிஷி போன்ற ஏனைய ஞானிகள் அனைவரும் சந்தர்ப்பங்களால்தான் தங்களுக்குள் மெய்ஞானத்தைப் பெற்றார்கள்.

இந்த மெய்ஞானிகளைப் போன்று நாமும் நம்முள் மெய்ஞானத்தைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பங்களை உருவாக்கும் ஆற்றல் நமது ஆறாவது அறிவிற்கு உண்டு.
24.01.2015
சிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்தால் தீமைகளைச் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்று காவியங்களில் கூறப்பட்டிருக்கும்.

அதாவது, கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி உயிரான ஈசனை எண்ணி ஏங்கி அருள் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது, அறியாது சேர்ந்த தீமைகள் ஒடுங்குகின்றன என்பதே ஞானிகள் உரைக்கும் உண்மைகள்.
23.01.2015
எமனின் பாசக்கயிற்றிலிருந்து தப்பிப்பதற்காக மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைப் பிடித்துக் கொண்டான். ஆவடையைப் பிடிக்கவில்லை.

அதாவது, லிங்கம் என்பது உயிர். மார்க்கண்டேயன் உயிரைப் பற்றிக் கொண்டான். உயிரைப் போன்றே தன் உணர்வுகளை ஒளியாக்கி, இருளான உணர்வுகளிலிருந்து விடுபட்டு என்றும் பதினாறு என்ற பெருவீடு பெருநிலையைப் பெற்றான் என்பதே ஞானிகள் உரைக்கும் உண்மையாகும்.
22.01.2015
அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் கேட்கும் பொழுதும் படிக்கும் பொழுதும் அதனின் உணர்வுகள் கடலில் கரைத்த பெருங்காயத்தின் மணம் சிறிது நேரம் இருந்து மறைந்துவிடுவது போன்று, நம்மிடத்தில் சிறிது நேரம் மட்டுமே இயக்கமாக இருக்கும்.

ஆதலால், அருள்ஞானிகளின் அருள் உணர்வுகளை நம்மிடத்தில் திரும்பத் திரும்ப பதிய வைக்க வேண்டும், நினைவுபடுத்த வேண்டும். இதன் தொடர்கொண்டு நம்மிடத்தில் அருள்ஞானமும் மகிழ்ந்திடும் சக்தியும் பெருகும்.
21.01.2015
பிரபஞ்சத்திலிருந்து வரும் உணர்வுகளை நம் பூமி துருவத்தின் வழியாகக் கவர்வதை அகஸ்தியர் தம்முள் உணர்ந்து, துருவத்தின் வழி வரும் விண்ணின் ஆற்றலை நுகர்ந்து, கவர்ந்து துருவனானார்.

அந்தத் துருவனின் அருளைப் பெற்று விண்ணின் ஆற்றலை நம்முள் பெறுவோம்.
20.01.2015
நாம் எதனின் உணர்வை எண்ணுகின்றோமோ, அதனின் உணர்வுகள் நாம் அமர்ந்துள்ள தரையிலும் சுவரிலும் பதிவாகின்றது. நாம் நமது இல்லத்தில் கவலையை, வேதனையைப் பதிவு செய்வோமானால் அங்கே கவலையும் வேதனையும் தான் பெருகும்.

அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நமது இல்லங்களில் பதிவு செய்வோமானால், நமது இல்லங்களிலும், இல்லத்திலுள்ளோர்களின் உடல்களிலும் அருள்ஞானமும், அருள் சக்தியும் பெருகும்.
19.01.2015
குப்பைக்குள் விழுந்து மறைந்துள்ள மாணிக்கம் போல, அசுர உணர்வுகளுக்கு மத்தியில் அருள் ஞானிகளின் அருள் உணர்வுகள் மறைந்துள்ளது.

அதை தியானித்து நம்முள் பெறும் பொழுது நாம் தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறமுடியும்.
18.01.2015
ஒருவர் நம்மைக் கடுமையாகத் திட்டியிருந்தாலோ அல்லது துரோகம் செய்திருந்தாலோ, அவரைப் பற்றிய நினைவு நம்மிடத்தில் அடிக்கடி வரும்.

அப்படி வரும்பொழுதெல்லாம் அவர் திட்டிய வார்த்தைகளோ அல்லது துரோகம் செய்த சம்பவங்களோ தொடர்ந்து நினைவுகளாக நமக்குள் வந்து நம்மிடத்தில் வேதனைகளை உருவாக்குகின்றது, அந்த நேரத்தில் நாம் ஒரு நல்ல செயலைச் செய்ய முடியாதபடி தடையேற்படுகின்றது.

மாறாக, நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குவோம் என்றால் அச்சமயம் நமக்குள் தெளிந்த ஞானமும் மகிழ்ச்சியும் உருவாகும். 
17.01.2015
எண்ணங்களைக் கூர்மையாக விண்ணை நோக்கிச் செலுத்தப் பழகிக் கொள்கின்ற பொழுதும், விண்ணின் சக்தியை நமக்குள் வலுப் பெறும் நிலையாக மாற்றுகின்ற பொழுதும் கார்த்திகை தீபம் போன்று நம் ஒவ்வோருவரின் எண்ணங்களும் தெளிவு பெறும் நிலைக்கு வருகின்றது.

புத்திக் கூர்மை இல்லாத உணர்வின் எண்ணங்கள் நமக்குள் நோயாக மாறுகின்றது.
16.01.2015
உயிரின் கருணையால் உடல் அமைகின்றது. ஜீவனின் வினைப்பயன் உயிரின் கருணையால் ஆகின்றது. உயிரின் நிலைகள் கொண்டுதான் அனைத்தும் இயங்குகின்றது.

மனதைக் கல்லாக்கிவிட்டோம். இனியாகிலும் உயிரைக் கடவுளாக மதிப்போம். மகா ஞானிகளின் உணர்வை நம் மணமாக்குவோம்.
15.01.2015
சாக்கடையான இந்த உடலைப் பிளந்து மெய் ஒளியின் தன்மையுடன் நம் உயிரணுவின் தன்மையை இணைத்து என்றும் நிலையான ஒளியின் சரீரம் பெறவேண்டும்.
ஒளி சரீரம் பெறுவதே இன்று நமது வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும்.
14.01.2015
அன்னை தந்தை அவர்கள் நம்மை வளர்த்து, புனிதமான நிலைகளில் எப்படி வளரவேண்டும் என்று எண்ணினார்களோ அவர்கள் அருளாசி நமக்குள் வினையாகி அந்த உணர்வின் தன்மை நமக்குள் வினையாகச் சேர்த்தால், கனியான சப்தரிஷிகளின் அருள் வட்டத்தில் நம் உயிரின் உணர்வுகள் அனைத்தும் கனியாகி, நாம் என்றும் ஒளி சரீரம் பெறமுடியும். 
13.01.2015
 குருநாதர் காண்பித்த அருள் வழியில் நாம் அனைவரும் நம் உடல் நமக்குச் சொந்தமில்லை என்று உணரவேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வை அருள் ஒளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும். 
மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும். 
நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.
07.01.2015
குருவின் துணையால் மகரிஷிகளின் அருள் ஒளி பெறுவோம்
குருவின் துணையால் மகரிஷிகளின் அருள் வழி செல்வோம்
குருவின் துணையால் மெய்வழி செல்வோம்
குருவின் துணையால் மெய்ப் பொருளை அடைவோம்
06.01.2015
நமது கண்களைக் கண்ணனாக மதித்து, நல்வழி காட்டியாக அந்த நல் உணர்வின் தன்மைகள நமக்குள் வளர்த்து, கெட்டதை உடல் மலமாக மாற்றி, அந்த ஆறாவது அறிவின் தன்மையாக வந்த அந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, நம்மையறியாது வந்த - வரும் விஷத்தின் தன்மையைப் பிளந்து, மெய்வழி காணும், மெய்வழி செல்லும், மெய் உணர்வின் தன்மையில் நாம் செல்வோமாக.
05.01.2015
உங்களை நீங்கள் நம்புங்கள்.
உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது.
04.01.2015
மெய்ஞானி வாக்கினைக் கொடுத்தால், அந்த உணர்வால் எத்தகைய கொடிய நோயாக இருந்தாலும் வாக்கின் உணர்வின் வித்து அங்கே விளைந்து அந்த வாக்கினைப் பெற்றவர்கள் அதை எண்ணி ஏங்கி அந்த உணர்வின் சக்தி அங்கே வளர்ந்து தன் உடலிலே உள்ள நோய்களை மாய்க்கச் செய்கின்றது. இது மெய்ஞானிகள் செய்த நிலைகள்.
03.01.2015
ஊழ் என்றால் என்ன? நமது எலும்புக்குள் (மேக்னட்) காந்த சக்தி உண்டு. இந்த உடலிலே நாம் பதிவு செய்வது அனைத்தும் நமது எலும்புக்குள் ஊழ்வினையாக “ஊழ்” ஆக இருக்கின்றது. 
02.01.2015
நமது உயிர் நாம் எண்ணுவதை எவ்வாறு இயக்கி நம் உடலாகச் சேருகின்றது என்ற இந்த உண்மையினை பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அணுவின் ஆற்றலும், அணுவின் பெருக்கமும், அணுவின் இயக்கம் என்ற நிலையில் அகத்தியர் தன் உடலில் விளைந்த உணர்வை வெளிப்படுத்தினார்

நவமியிலே பிறந்தான் இராமன் - எண்ணத்தின் தோற்றம்


இராமன் நவமியிலே பிறந்தான் என்ற காவியத்தை வான்மீகி எழுதுகின்றார்.

அதாவது, ஒன்பது கோள்களின் தன்மை கொண்டு இந்த உடலின் தன்மை அமைந்தது.

இந்த உடலுக்குள் எடுத்துக்கொண்ட நிலைகள் கோள்களிலிருந்து வெளிப்படும் உணர்வின் சத்தைத்தான் நாம் உடலாக வைத்து, இந்த உடலுக்குள் விளைந்த இந்த உணர்வின் தன்மைகள் அணுக்கள் நட்சத்திரங்களாக மாறுகிறது.

இந்த நட்சத்திரங்களின் தன்மை நம் உயிருடன் சேர்க்கப்படும் பொழுது நாராயணன் இராமனாகப் பிறக்கின்றான்.
நம் உயிரோ – சூரியன், நாராயணன்.
அதே சமயத்தில் நாராயணனின் தொடர் கொண்டவன் – ஈசன்.

நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் சத்து நம் உடல் – கோள். நமக்குள் எடுத்துக்கொண்ட உணர்வுகள் இயக்கச் சக்தியாகப்படும் போது நட்சத்திரம்.

எல்லாம் சேர்த்து உயிருடன் சேர்க்கப்படும்போது – இராமன். இராமன் சாந்தமானவன்.

ஆனால், விஷ்ணுவோ – அக்னி, நாராயணனோ - கோபமுள்ளவன். ஆக அதெல்லாம் நெருப்பு.
நாம் எடுத்துக்கொண்ட உணர்வின் தன்மை
இந்த நெருப்புக்குள் சமைக்கப்பட்டு
உயிருடன் சேர்த்துக்கொண்ட இந்த உணர்வுதான் இராமன்.

இராமன், பரசுராமன், பலராமன் அந்த இராமன் என்று பலராமன்கள். எடுத்துக்கொண்ட எண்ணத்தின் தன்மை தான் அங்கே செயல்படுகின்றது என்ற நிலையில்,
நாம் எந்தெந்த உணர்வின் சக்தியை நமக்குள் எடுக்கின்றோமோ
அவையனைத்துமே நம் உயிருடன் சேர்க்கப்படும்போது
இராமனாக எண்ணமாகப் பிறக்கின்றது.

ஆக, இராமன் என்பது எண்ணம். எண்ணத்தின் வலிமைகொண்ட அந்த நிலைக்கு இராமனின் பக்தன், தூதுவன் - ஆஞ்சநேயன், அதற்குள் ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு எண்ணத்தின் ஒவ்வொரு உணர்வின் செயல்கள் எவ்வாறு செயல்படுகின்றது என்று வான்மீகி காட்டினார்.

இப்பொழுது மனிதனாக இருக்கக்கூடிய நான் எண்ணுவது, நான் பேசுவது இராமன். எந்த எண்ணம் எந்த நிலைகளில் நாம் எடுத்துப் பேசினாலும், இது இராமனின் செயல். இது சாந்தம்.

ஆனால், இந்த உணர்வின் தன்மை பிறருடைய உணர்வுகளில் சேர்க்கப்படுகின்றது.
இராமனுடைய வலுவை ஊடுருவிச் செயல்படுத்தி
இயக்கச் செய்வது, இயக்கத்தன்மை பாய்வது - ஆஞ்சநேயன்.

ஒவ்வொரு உணர்வின் தன்மையும் எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையும். சூரியன் எப்படி ஒரு பிரபஞ்சமாக்கியதோ இதைப்போல உயிரணு ஆனபின் உணர்வின் நிலைகள் கொண்டு எண்ணங்களாக எவ்வாறு வடிவெடுத்தது என்ற நிலையைத்தான் வான்மீகி இராமாயணத்தை எழுதினார்.

January 29, 2015

நாராயணன், சர்வேஸ்வரன், ஈஸ்வரன், விஷ்ணு

நாராயணன் மறு அவதாரமாக விஷ்ணுவாகப் பிறக்கிறான் ஆக நாராயணனுக்கு சங்கு சக்கரம்தான், விஷ்ணுவுக்கும் சங்கு சக்கரம்தான். சூரியனோ தான் சுழலப்படும்போது ஏற்படுத்தப்பட்ட நிலைதான் – சக்கரம்.

ஆக ஆதியிலே சொன்னது ஒரு பரம்பொருளாக உருவாகும்போது பரமசிவம். ஒரு திடப்பொருளாகி சீவலிங்கம்.

அதற்கு அடுத்து அது வளர்ச்சியின் தன்மை பெறும்பொழுது நட்சத்திரம். நட்சத்திரம் ஆன பிற்பாடு சூரியன். சூரியனாகும்போது சர்வேஸ்வரன்.

சூரியனைப் பார்க்கும்போது சிவம் - சிவசக்தி. ஆனால் சிவசக்திக்குள் சீவலிங்கமாக மாறி, பின் சர்வேஸ்வரனாக மாறுகின்றது. சர்வத்தையும் உருவாக்கக்கூடிய ஆற்றல் சூரியன்.

சூரியன் சுழலப்படும்போது சுழற்சி ஆவது சக்கரம் அதிலிருந்து வெளிப்படும் நாதம் சங்கு. அதைப்போல நம் பூமி அது சுற்றும்போது ஏற்படக்கூடிய அந்த சுழற்சியின் நிலைகள் சக்கரம். சுழலும்போது வரக்கூடிய நாதம் சங்கு,

இதிலே ஏற்படக்கூடிய வெப்பம் நாமம் – சிவப்பு (நெற்றியிலே) நாராயணனுக்கு அதுதான். விஷ்ணுவாக மறு அவதாரம் எடுக்கின்றான்.

அதாவது இந்த அவதாரத்தன்மையை, சூரியன் தோன்றி மற்ற கோள்கள் ஆகும்போது ஒவ்வொரு அவதாரமாக மாறி வருகின்றான் என்ற நிலையைக் காட்டியுள்ளார்கள் மெய்ஞானிகள்.

அதேபோன்று நமது உயிருக்குள் துடித்துக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு நிலையும் அந்த வெப்பம் விஷ்ணுதான். ஆக அது இயக்கச்சக்தி – ஈஸ்வரன்.

இயக்கத்துக்குள் ஏற்படும் வெப்பமோ விஷ்ணு.
ஆக அந்த வெப்பத்தின் தன்மை கொண்டு
ஈர்க்கும் காந்த ஈர்ப்பின் தன்மை கொண்டு தனக்குள் சுழலச்செய்து,
நம் உடலுக்குள் இந்த சுவாசத்தை இயக்கச் செய்கின்றது – சக்கரம்.

நாம் சுவாசித்து உயிருடன் மோதும்போது அது ஜீவன் – நாதன்.
நாம் எடுத்துக்கொண்ட சுவாசம்
உயிருடன் மோதப்படும்போது பிரம்மம்.

நாம் எந்த குணத்தின் தன்மையை உயிருடன் மோதச் செய்கின்றோமோ அதை பிரம்மா சிருஷ்டிக்கின்றார்.

அதைத்தான் நாராயணன் மறு அவதாரம் விஷ்ணுவாகி, அடுத்து இவன் ராமனாகப் பிறக்கின்றான் என்ற இந்த தத்துவத்தை அன்று மெய்ஞானி வான்மீகி நமக்குத் தெளிவாகக் காட்டினார்.

வாழவைக்க வேண்டும் என்றுதான் எண்ணவேண்டும், இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணக் கூடாது

சோதனையான காலங்களில் “இப்படி ஆகின்றதே” என்று வருந்தி குழந்தைகளையும் மற்றவர்களையும் எண்ணி படபடப்பாகி மயங்காமல்,
ஆசையின் உணர்வுகளை விடுத்து
அருள் ஒளியின் உணர்வுகளை எடுக்க வேண்டும்.

பின், குழந்தைகள் அருள்ஞான உணர்வுகள் பெறவேண்டும், இருளை அகற்றி மெய்ப்பொருள் காண வேண்டும், அவர்கள் வாழ்க்கை நலம் பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்தால் அவர்களை வாழவைக்கலாம். நமக்குள் அருள் உணர்வின் தன்மையைக் காக்கலாம்.

ஆகவே, மனிதருக்கு “வாழ வைக்க வேண்டும்” என்ற எண்ணம்தான் வரவேண்டுமே தவிர
“இப்படி ஆகிவிட்டதே” என்று எண்ணக் கூடாது.

ஏனென்றால், இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணப்படும் பொழுதுதான் விஷத்தின் தன்மையைக் கவர நேருகின்றது.

குருநாதர் காண்பித்த அருள் வழியில் நாம் அனைவரும் நம் உடல் நமக்குச் சொந்தமில்லை என்பதை உணர வேண்டும்.

உயிருடன் ஒன்றும் உணர்வை
அருளொளியின் உணர்வாக இணைத்துச் சொந்தமாக்குதல் வேண்டும்.

மகரிஷிகளின் அருள் உணர்வைப் பற்றுடன் பற்றுதல் வேண்டும். நமது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றுதல் வேண்டும்.

மனித வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் குடும்பத்திற்காக உழைக்கின்றோம். நம்மையறியாது பல தீமைகள் கண் வழியாகவும், செவி வழியாகவும் நமக்குள் சேர்த்துக் கொள்கின்றோம்

துன்பத்தை ஊட்டும் அந்தத் தீமையான உணர்வுகள் உங்களை ஆட்டிப் படைக்காதிருக்கத்தான்
மெய்ஞானிகளின் அருள் ஒளியுடன் கலந்து,
உபதேசத்தின் நிலைகள் கொண்டு வாக்கின் வழியாக
உங்களுக்குள் ஞானத்தை அந்தச் சக்திகளைப் பதிவு செய்கின்றோம்.

அதைப் பெறச் செய்வதற்கு எந்த நிமிடத்திலும் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று உயிரை எண்ணி, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

அப்பொழுது, அந்த துருவ நட்சத்திரத்தின் பேரொளி உங்கள் உடலுக்குள் ஊடுருவுகின்றது.
உங்களை ஆட்டிப்படைக்கும் தீமைகளை அடக்கி,
உங்கள் துன்பத்தைப் போக்கி மனதைத் தெளிவாக்குகின்றது.
எமது அருளாசிகள்.

January 28, 2015

சூரியன் எதன் மேல் பள்ளி கொண்டிருக்கின்றான்? விஷத்தின் மேலே

இரும்பை உருக்க வேண்டும் என்றால் வெப்பம் அதிகம் தேவை.

இன்று எப்படி மற்ற உலோகத்தின் தன்மைகளையும், களிமண்ணையும் ஒன்றாகச் சேர்த்து, நிலக்கரியைப் போடுகிறான். அதை வேகவைத்து அதனுடைய உணர்வின் தன்மை வரப்படும்போது சிமெண்டாக உற்பத்தி செய்கின்றார்கள்.

ஆக வெப்பத்தைத் தனக்குள் கூட்டி சமநிலைப்படும்போது அதனுடைய நிலைகள் வேறுவிதமாக மாறுகின்றது.

இதைப்போல, பூமி சுழலச் சுழல ஆதியும் அந்தமும் பரவெளிகளே ஒன்றுமே இல்லாத நேரத்தில் தனக்குள் எடுத்து அது ஒரு நீராகி, திடப்பொருளாகி, பரம்பொருளாகி, பரம்பொருள் கோளாகி,
எல்லையே இல்லாத இடத்தில் எல்லையாகி, சீவலிங்கமாகி,
அதற்குள் சேர்த்துக்கொண்ட வெப்பத்தின் தன்மை அதிகமாகின்றது.

அதன் இயக்கம் அதற்குள் சேர்த்துக்கொண்ட உலோகங்களை உருவாக்கும் நிலையும் கனமான சக்தியினுடைய உணர்வை வெளிப்படுத்துகின்றது.

இவ்வாறு தனக்குள் ஆன பிற்பாடு, இது சுழற்சியினுடைய வேகம் கொண்டு விண்ணிலே செல்லக்கூடிய எத்தகைய விஷத்தின் தன்மையையும், தனக்குள் கவர்ந்து, அந்த விஷத்தின் ஆற்றலை அது பொசுக்கி சூரியனாக மாறுகின்றது.

அது சூரியனாக மாறும்போதுதான், இன்று நாம் பார்ப்பதெல்லாம், பாதரசம்தான், வெய்யிலாகப் பார்ப்பதும் பாதரசம்தான், ஒரு பொருளுக்குள் இருப்பதும் பாதரசம்தான். அதிலே பலவிதமான ரசங்கள் உண்டு,

சூரியனின் பூமியோ குளிர்ந்திருக்கின்றது.

அதிலிருந்து தோற்றுவித்த அந்த உணர்வின் தன்மைதான் இது எப்படி ஆரம்பத்திலே நீராகி கோளாக மாறியதோ இதைப்போன்றுதான் இந்தப் பிரபஞ்சத்திலே, சூரியனில் விளையவைத்த இந்த உணர்வின் தன்மைகள் ஆற்றல்மிக்க அணுக்கள் சூரியனின் பிடிப்பலைகளில் சிக்கியது தான் கோள்கள். அதன்வழி கொண்டு வளர்ச்சி ஆனதுதான் நட்சத்திரங்கள்

ஒரு பிரபஞ்சமாக தனக்குள் அமைத்து, அந்தப் பிரபஞ்சத்திற்குள் சூரியன் உயிராக நின்று அது செயல்படுகின்றது. சூரியன் என்பது. நாராயணன். சூரியன். அவன் எது மேலே படுத்திருக்கின்றான். ஆதிசேஷன் – விஷம்.

ஆக, பேரண்டமே விஷத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வின் ஆற்றல்தான் வளர்ச்சி பெற்றது. விஷத்தை அடக்கி தனக்குள் அந்த ஆற்றல்மிக்க நிலைகள் சிருஷ்டிக்கும் தன்மை பெறுகின்றது நாராயணன்.

அதனால்தான் நாராயணன் - சூரியன் எதன் மேல் பள்ளி கொண்டிருக்கின்றான்?

விஷத்தின் மேலே.

ஒரு அணுவுக்குள் அந்த விஷம் இல்லை என்றால் இயக்கத்தின் சக்தி கிடையாது.

சூரியனைச் சுற்றியிருக்கக்கூடிய விஷத்தின் இயக்கம் தான் சூரியனை அவ்வளவு வேகமாக இயக்கச் செய்கின்றது.

சூரியன் தன் உணர்வின் தன்மை விஷத்தின் ஆற்றல் கொண்டு,
ஒவ்வொரு அணுவின் தன்மையை இயக்கி
அது உமிழ்த்திய நிலைகள் கொண்டு
பிரபஞ்சத்தை உலகத்தையே சிருஷ்டிக்கும் தன்மை வருகின்றது.

January 27, 2015

அகஸ்தியமாமகரிஷியுடன் உங்களை ஆயுள் மெம்பராக்குகிறோம்...!

உங்கள் குடும்பத்தில் குழந்தைகளுடைய செயல்களில் சில குறைபாடுகள் வந்தாலும் குறையாக அவற்றை எண்ண வேண்டாம்.

சந்தர்ப்பம் அவர்களை இயக்குகின்றது.
அந்தச் தீய சந்தர்ப்பத்தில் இருந்து அவர்கள் விலக வேண்டும்,
மெய்ப்பொருள் காணும் மெய்ஞானிகள் ஆகவேண்டும்,
அகப்பொருள் அறிந்துணர்ந்து செயல்படும் ஞானியாக வேண்டும்
என்று உங்கள் குழந்தைகளை எண்ணி,
இந்த உணர்வின் தன்மையை
“ஓம் நமச்சிவாய” “சிவாயநம ஓம்” என்று
உங்களில் விளைய வைத்த அருள் உணர்வுகளை
அவர்களின் உடலிலே பாய்ச்சுங்கள்.
ஆகவே, இதுதான் “விஷ்ணு தனுசு”.

இந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் தீமைகளை அடக்கி, அதே உணர்வின் தன்மையை அங்கே ஒளியாகப் பாய்ச்சி அவர்கள் தெளிந்த மனம் பெறவேண்டும் அருள் ஞானிகளாக வளரவேண்டும் என்று நாம் எண்ணும்போது அவ்வழியில் நம் குழந்தைகள் அருள் ஞானிகளாக ஆக்கப்படுகின்றனர்.

ஏனென்றால், கடந்த காலங்களில் நம்மையறியாமல் நமக்குள் தீய உணர்வுகளைச் சேர்த்துத் தான் பழகியிருக்கிறோமே தவிர அதை நீக்குவதற்குப் பழகவில்லை.

இன்று யாம் செல்லும் பாதை இத்தனை காலம் உங்களுக்குள் அருள் உணர்வைப் பாய்ச்சி உங்களை ங்களை அறியச் செய்து இந்த அருளுணர்வின் துணை கொண்டு
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
உங்கள் உடலுக்குள் பரப்பி
உங்கள் குடும்பத்தில் இத்தகைய நிலையைப் பெறச் செய்யுங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள்வழிப்படி நான் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பரானேன். அவர் அருள் வழிப்படியே உங்களையும் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக்குகிறோம்.

கணவன் மனைவி நீங்கள் ஒவ்வொருவரும் குடும்பத்தில் இரு மனமும் ஒன்றி, வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்திட வேண்டும். ஏனென்றால் நீங்கள் திருமணம் செய்தபின் கவர்ந்த உணர்வுகள் கொண்டு ஒன்று சேர்ந்து இணைந்து அந்த அருள் சக்தி பெற்று வாழ வேண்டும்.

நளாயினியைப் போன்று கணவன் மனைவியை மதித்து நடப்பதும், மனைவி கணவனை மதித்து நடக்கும் அந்த உணர்வுகள் வரவேண்டும்.

நம்மை அறியாமல் தீமைகள் வருமேயானால், உடனே “ஈஸ்வரா” என்று அந்த துருவ நட்சத்திரத்தினுடைய உணர்வை நமக்குள் பெருக்கி,
குரு அருளால் நமக்குள் பகைமை உணர்வு வராமல் மாற்றி,
அருள் ஒளியைக் கூட்டி நமக்குள் இருள் புகாது தடுத்து,

உணர்வினை ஒவ்வொரு நிமிடத்திலும் அருள் பாதையில், அருள் வழியில் அழைத்துச் செல்லும் அணுக்களாக நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.

January 26, 2015

ஞானகுருவின் பொன்மொழிகள் - Spiritual Quotes November 2014

30.11.2014
நமது உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு தெளிந்த நிலைகள் கொண்டு செயலாக்கும் ஆற்றல் பெற்றது நமது ஆறாவது அறிவு
29.11.2014
பரிணாம வளர்ச்சியில் வந்த நாம், பரிவு கொண்ட உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் மனிதனானபின் ஆறாவது அறிவின் துணை கொண்டு கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கிடும் நிலையைத்தான் பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன் என்று சொல்வது.
28.11.2014
வெப்பத்தைப் பராசக்தி என்றும், காந்தத்தை லட்சுமி வளரும் நிலை என்றும், விஷத்தின் இயக்கத்தைக் காந்தம் தனக்குள் கவர்ந்து இயக்கச் சக்தியாக மாறுவதை லட்சுமணா என்றும் பெயர் வைத்து உணர்த்தினார்கள் ஞானிகள்.
27.11.2014
எந்தெந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து அந்த மணம் அனைத்தும் ஞானமாகி, அது எவ்வாறு உணர்வின் செயலாக உடலை இயக்குகிறது என்பதைத்தான் மெய்ஞானிகள் அன்று விநாயகனை ஞானவான் என்று தெளிவுற உணர்த்தினர்.
26.11.2014
இயற்கையின் சக்தி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும் பொழுது அதன் செயலாக்கங்கள் எவ்வாறு?

அதை நாம் தெரிந்து கொள்வதற்காக, இந்த உண்மைகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று மகரிஷிகள் தம் உடலிலே விளைய வைத்து வெளிப்படுத்திய உணர்வலைகளை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து இந்த பூமியிலே படரச் செய்து கொண்டிருக்கிறது.
25.11.2014
நாம் சுவாசிக்கும் உணர்வின் வலுதான் இந்த உடலை இயக்கி, அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் இயக்குகின்றது என்ற நிலைதான் நந்தீஸ்வரா.
24.11.2014
நாம் தெளிவுறத் தெரிந்து கொள்ள, தெளிந்துரைத்த அந்த மெய்ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் சிந்தித்து அவர்கள் உணர்த்திய உர்வின் அலையை நமக்குள் பெருக்கி, நம்மையறியாது நம்மில் சேர்ந்த தீயவிளைவுகளை நீக்கலாம்.
23.11.2014
தனக்குள் மெய்ப்பொருளைக் கண்டுணர்ந்து நாம் மெய்ப்பொருளைக் காணும் நிலைக்கு, தனக்குள் வின் உலக ஆற்றல் எவ்வாறு விளைந்தது என்று உபதேசித்து அருளியவர்கள் மகரிஷிகள்.
22.11.2014
நாம் எண்ணும் எண்ணத்தை நமக்குள் ஜீவனாக்கச் செய்வது நம் உயிரின் வேலை. அதனால் தான் ஓம் என்று போட்டு கோவில்களில் உணர்த்தியிருப்பார்கள்.
21.11.2014
மனதைக் கல்லாக்கிவிட்டோம்,
கல்லைக் கடவுளாக்கிவிட்டோம்
இனியாகிலும் உயிரைக் கடவுளாக மதிப்போம்.
மகாஞானிகளின் உனர்வை நம மணமாக மாற்றுவோம்
20.11.2014
முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக நாம் இந்த மனித உடலைப் பெற்றிருக்கிறோம். மிருக நிலைகளிலிருந்து மனித உடல் பெற்ற நாம் அந்த மெய்ஞானிகள் பெருக்கிய உணர்வின் தன்மையை நம் உடலுக்குள் பெருக்க வேண்டும்.
19.11.2014
கலி என்பதும் பலராமன் என்பதும் பலருடைய எண்ணங்கள் எந்தெந்த சுவை கொண்டு எண்ணுகின்றோமோ அதனதன் சுவைக்கொப்ப அந்தந்த உணர்வின் எண்ணங்கள் வடிந்து அதனின் செயலை நாம் செய்கிறோம் என்பதை கலி என்ற நிலைகளில் வைத்தனர்.
18.11.2014
புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு உடலையும் காத்துக் கொள்ளும் உணர்வின் தன்மை நாம் எடுத்துக் கொண்டு மனிதனுக்குள் எண்ண வளர்ச்சியின் தன்மை அடைந்ததைக் குறிப்படுவதற்குத்தான் “அர்ச்சுனன்” – சகலகலா வல்லவன், சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டவன், வல்லமை பெற்றவன் என்று ஞானியர்கள் உணர்த்தினார்கள்.
17.11.2014
கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கின்றான் என்று சொல்கிறோம்.

அதாவது நாம் ஒரு செயலைக் கண்ணால் பார்க்கும் பொழுது அந்த உணர்வினை எடுத்து சுவாசிக்கும் பொழுது, அந்த உணர்வின் நிலைகளே நாதங்களாக எழும்பி நம்மை இயக்கும். இதைத்தான் கண்ணன் புல்லாங்குழல் வாசிக்கின்றான் என்றார்கள் ஞானிகள்.
16.11.2014
நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நல்லது கெட்டதை உணர்த்தி, அந்த உணர்வின் நிலைகள் நமக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலையயும், அறிந்து கொள்ளும் நிலையையும் உருவாக்கியது கண்தான் என்ற உண்மையை உணர்த்துவதற்காக கண்ணைக் கண்ணனாக உருவகப்படுத்தினார்கள் ஞானிகள்.
15.11.2014
உருவான சக்தியான வெப்பம், இயக்கும் சக்தியான நஞ்சு, இணைக்கும் சக்தியான காந்தம், மணம் நான்கும் ஒரு அணுவிற்குள் இயக்கச் சக்தியாக மாறும்போது ஐந்தாவது நிலையான உணர்வு என்ற இயக்க நிலை அடைகின்றது. இதுவே காயத்திரி எனப்படுகிறது.
14.11.2014
பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற உயிராத்மா வேறு எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் செல்லாதபடி மகரிஷிகள் அருள் உணர்வை நமக்குள் கூட்டி, தீய உணர்வுகள் சேராவண்ணம் ஆத்ம சுத்தி செய்து, என்றும் நிலையான ஒளி சரீரம் பெறவே கூட்டு தியானம்.
13.11.2014
பிரபஞ்சத்திற்கு சூரியன் குரு.
உடலுக்கு உயிர் குரு.

சூரியன் எவ்வாறு பிரபஞ்சத்தை இயக்குகின்றதோ, அதப் போன்று நமது உயிர் நம் உடலுக்குள் ஒரு பெரும் பிரபஞ்சத்தையே உருவாக்குகின்றது. 
12.11.2014
இப்பூமி என்பது பரம். இப்பூமியின் பரத்துக்குள் படர்ந்து விளைந்து வெளிப்படும் சக்தி பரமாத்மா. 

இந்தப் பரமாத்மா எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அந்த அளவிற்குத்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
11.11.2014
நாம் அனைவரும் ஒரே மகிழ்ச்சி கொண்டு ஒவ்வொரு உள்ளங்களில் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்கி, மெய்ப் பொருள் காணும் அந்த உணர்வுகள் அங்கே வளர வேண்டும் என்று எல்லோரும் எண்ணினால் சூரியனின் காந்த சக்தியால் அது கவரப்பட்டு அது பரவுகின்றது.
10.11.2014
இந்த மனித வாழ்க்கையில் முழுமை அடைந்த ஞானிகளின் அருளாற்றல் மிக்க சக்தியையும் எண்ணங்களையும் நாம் அடிக்கடி நம் உடலிலே பதிவு செய்யப்படும் பொழுது,
வாழ்க்கையில் நஞ்சினை நீக்கி
வேதனை என்ற உணர்வை ஒளியாக மாற்றிய
ஞானிகள் வெளிப்படுத்திய சக்திகளை நாம் பெறமுடியும்.
09.11.2014
மனித வாழ்க்கையில் வேதனை என்ற நஞ்சான உணர்வை வென்று  நல் உணர்வின் சத்தைத் தனக்குள் இணைத்து, அந்த உணர்வை உயிருடன் ஒன்றிய ஒளியாக மாற்றிச் சென்றவர்கள் சப்தரிஷிகள். 

ஆறாவது அறிவு கொண்டு ஏழாவது நிலை கொண்டவர்கள். அதுதான் சப்தரிஷிகள் என்பது.
08.11.2014
வெப்பம், காந்தம், மணமான சத்து இவை மூன்றும் இணைந்து ஓர் அணுவின் நிலையை அடைவதால், இணைத்தல், காத்தல், அறிதல், உணர்தல் என்ற இயக்கச் சக்தியின் ஓர் அணுவாக ஆற்றல் பெருகின்றது. 
07.11.2014
மனிதனாக இருக்கும் நாம் நல் உணர்வுகளை நமக்குள் கூட்டி
விஷத்தின் தன்மையைச் செயல் இழக்கச் செய்து
நல் உணர்வுகளை ஒளிச்சுடராக மாற்றி
என்றும் அழியா ஒலி ஒளி சரீரம் பெறுவோம்.
06.11.2014
என்றும் விழித்த உணர்வு கொண்டு
ஒளியின் சுடராக நிலைபெற்ற நந்நாள்தான் வைகுண்ட ஏகாதசி
05.11.2014
மனிதனாக இருக்கும் நாம்,
உண்ணும் உணவிற்குள் உள்ள விஷத்தை மலமாக மாற்றி
நல் உணர்வின் சக்தியை உடலாக மாற்றுவது போன்று 

அந்த உணர்வின் தன்மை விஷத்தை வென்று
உணர்வின் ஒளி சுடராக மாற்றும் நிலை பெற்றதுதான் கல்கி.
04.11.2014
மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சுவாசியுங்கள்
உங்களைக் காக்க உங்கள் எண்ணம் உதவட்டும்
03.11.2014
உங்களை நீங்கள் நம்புங்கள்
நீங்கள் எடுக்கும் உணர்வுதான் தெய்வம்
பேரண்டத்தின் பெரும் உணர்வுகள் உங்களுக்குள் உண்டு
02.11.2014
நாம் எக்குணத்தை எடுக்கின்றோமோ அதுவே நம் உடலுக்குள் அக்குணத்தின் உணர்வின் இயக்கமாகப் பெருகி செயல்படுகின்றது. 

உணர்வின் இயக்கம் வாகனமாக நின்று நம்முள் பதிந்த உணர்வுகளுக்கொப்ப நம்மைச் செயல்பட வைக்கின்றது.