ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2022

எத்தனையோ துயரங்கள் வந்தாலும் அதிலிருந்து “மீளும் மார்க்கங்களைக் காட்டினார் குருநாதர்...”

உங்கள் உயிரான ஈசனை மதித்து... அவனால் உருவாக்கப்பட்ட எத்தனையோ கோடி உணர்வுகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு செல்ஃபோனில் நம்பரைத் தட்டியுடன் எங்கிருந்து... யாரிடமிருந்து வருகிறது..? என்று எப்படித் தெரிகிறதோ இதைப் போல
1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத் தனித்தன்மையாக அமைத்து
2.அதன் உணர்வின் இயக்கமாக உங்களுடைய தொடர் வரிசைகள் இருக்க வேண்டும்.

காரணம்... விஞ்ஞான உலகில் நமக்கு முன் இருக்கும் இந்தக் காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இருந்து மீள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) இதை எல்லாம் தெளிவாகக் காட்டினார்... அறிந்தேன்.
1.எத்தனையோ துயரங்களைக் கண்டு அதிலிருந்து விலகும் மார்க்கங்களைக் காட்டினார்.
2.அதைப் போல் உங்களை அறியாது வந்த துயரங்கள் எத்தனையோ...
3.அதை எல்லாம் நீங்கள் மாற்றி அமைக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று தான்
4.திரும்பத் திரும்ப உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரும் பயிற்சியைக் கொடுக்கின்றேன்
5.உங்களுக்கு அந்தச் சக்தியைக் கிடைக்கச் செய்வதற்காக தவம் இருக்கின்றேன்.

ஆகவே அடிக்கடி யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சக்தி செய்து அந்தச் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.உங்கள் வீடுகளில் நல்ல நறுமணங்கள் வரும்
2.குடும்பத்தில் அற்புதமான வாசனைகள் வரும்
3.குடும்பத்தில் நற்செய்திகளும் வரும்.

இந்த வாசனைகள் உங்கள் வீட்டில் அடிக்கடி வந்தால் உங்களை அறியாது சேர்ந்து தீயவினைகள் சாப வினைகள் பாவ வினைகளை நீக்கக்கூடிய சக்தி நீங்கள் பெறுகின்றீர்கள்.

நீங்கள் தொழில் செய்யும் இடங்களிலும் இதைச் செயல்படுத்தினால் நல்ல நறுமணங்கள் கமழும். வாடிக்கையாளர்களும் நலமும் வளமும் பெறுவார்கள்.

வேலை செய்பவர்களும் அந்த மகிழ்ந்து செயல்படக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும். அங்கே உற்பத்தி செய்யும் பொருள்களிலும் இது படரும். எல்லோரும் நலம் பெறக்கூடிய சக்தியாக இது அமைகின்றது. நாமும் நலம் பெறுகின்றோம்.
1.ஆகவே துருவ நட்சத்திரத்துடன் நாம் தொடர்பு கொள்வோம்
2.பிறவி இல்லா நிலை என்னும் அருள் வாழ்க்கை வாழ்வோம்.

ஒரு அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரை ஊற்ற... ஊற்ற அதுவும் நந்நீராக மாறுவது போல் இதற்கு முன் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த முந்தைய வினைகளுக்கு (அணுக்களுக்கு)
1.விஞ்ஞானத்தில் மருந்தினை ஏற்றி இஞ்செக்சன் செய்து உடலில் உள்ள நோயின் வலுவைக் குறைப்பது போல
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சி... ஆழமாகப் பதிவு செய்கிறேன்
3.உங்கள் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்களை மகரிஷிகள் உணர்வுடன் ஒட்டும்படி செய்து
4.அதில் இருக்கக்கூடிய பகைமைகளை நீக்கச் செய்து
5.துருவ நட்சத்திரத்தின் ஒளியை பெருக்கிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை இப்போது ஏற்படுத்துகின்றோம்.

பல நூல்களை ஒன்றாகத் திரிக்கும் பொழுது அது எப்படி வலு கூடுகின்றதோ அது போன்று கூட்டமைப்பாகச் செயல்படுத்தும் போது மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகிறது.

ஒவ்வொரு நாளும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற்று உண்மை நிலைகள் எல்லோருக்கும் தெரியும்படியாகச் செயல்படுத்த வேண்டும்.

1.நமது குருநாதர் காட்டிய அருள் வழிகள் எல்லோருக்கும் கிடைத்து...
2.சிந்தித்து செயல்படும் சக்திகளையும்... வாழ்க்கையைச் சீர்படுத்தும் ஆற்றல்களையும் அவர்களைப் பெறச் செய்வோம்.

உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

எண்ணத்தில் வருவது தான் எல்லாமே…! இந்தச் சொல்லைப் பாட நிலையின் முதலிலிருந்தே இன்று வரை சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.நாம் எந்தெந்த எண்ணங்களை எண்ணுகின்றோமோ
2.அதற்குத் தக்கவாறான சுவாச நிலையில் வருவது தான் எல்லாமே என்று பல முறை செப்பியுள்ளேன்.

பூர்வ ஜென்மப் பயனை வைத்து… முதல் ஜென்மத்தில் விட்ட குறையை முடிக்க.. ஆவி நிலையிலிருந்து தன் நிலைக்கு ஒத்த சுவாச நிலையை ஈர்த்துத் தான் “குழந்தைகள் பிறக்கின்றது…” என்று கூறியுள்ளேன்.

ஆண்டவனின் அருளில் பூர்வ ஜென்மத்தின் பலனை அவர்வர்கள் நிலைக்கு எடுத்துக் கொண்டால்தான் அந்தப் பலனையே பெற்றிட முடியுமப்பா…!

போன ஜென்மத்தில் நீ செய்த பயனாக… பூர்வ ஜென்மத்தின் பலனால் பல புண்ணியங்கள் செய்தும்.. அந்நிலைக்கு சூட்சம நிலைக்கு ஆண்டவன் என்னும் நிலையின் ரிஷியின் நிலைக்கே வரும் தன்மையைச் சிறிதளவு தவறவிட்டதனால் தான் “இந்த ஜென்மமே எடுத்துள்ளாய்…!”

இந்த ஜென்மத்திலும் பிறவி நிலையிலேயே உன் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருந்தால் உன் நிலையும் வேறாகத் தான் இருந்திருக்குமப்பா…!

1.போன ஜென்மத்தில் நீ வைத்திருந்த ரிஷியின் தொடர்பினால்
2.இந்த ஜென்மத்திலும் உன்னை… உன் எண்ணத்தை… அவன் ஒரு நிலைப்படுத்தி வழி நடத்திச் செல்கின்றான்.
3.ஆகவே கால நிலையைத் தவற விட்டிடாதே...!

இந்த ஜென்மத்தில் உன் எண்ணமெல்லாம் உயர் நிலையில் செல்வ நிலையில் இருந்ததனால் தான் உன் பூர்வ ஜென்மத்தின் பயனால் இந்த மெய் ஞானத்தைப் பெறும் பேற்றையே பெற்றாயப்பா…!

படிக்கும் ஒவ்வொருவருக்கும் புரிவதற்காக இந்நிலையைப் புகட்டியுள்ளேன். பெற்ற சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாதீர்கள்.
1.மகரிஷிகளுடன் ஐக்கியமாகுங்கள்.
2.அவர்கள் வாழும் சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முற்படுங்கள்.

எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா

செடி கொடிகளுக்கு அதனுடைய வித்துக்களை நிலத்தில் ஊன்றிய பின் அது முளைத்து வருகின்றது. பின் வளர்ச்சியாகி... மீண்டும் தன் இனத்தின் வித்துக்களை உருவாக்குகிறது.

அந்த வித்துக்களைப் பரவச் செய்தால்... மீண்டும் அதனின் வித்துக்கள் நிலத்தில் பட்டால் அதே தாய்ச் செடியின் சத்தை நுகர்கின்றது... இப்படித்தான் வளர்ந்து கொண்டே வருகிறது.
1.செடி கொடிகளுக்குண்டான வித்துக்கள் போன்றது தான்
2.நம் உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊனும்.

கண்களால் ஒன்றை (அல்லது மற்ற மனிதர்களை) உற்றுப் பார்க்கப்படும் போது “கருவிழி ருக்மணியால்” அது பதிவாக்கப்படுகிறது.

யார் யாரை எல்லாம் பார்த்தோமோ அவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பதிவாக்கி அந்தந்த உணர்வுகளை நுகரப்படும் போது உயிரிலே மோதுகின்றது.

உயிரிலே மோதும் போது உயிர் அதனின் உணர்ச்சிகளாக நம்மை இயக்கி நம்மை அறியச் செய்கிறது... அதனின் செயலாகவே நம்மை அது மாற்றுகிறது.

எந்தெந்தக் குணங்களை எடுத்தோமோ அது எல்லாம் நம் எலும்புக்குள் ஊனாக மாறுகின்றது.

உதாரணமாக...
1.வேதனைப்படுவோரை உற்றுப் பார்த்து அதை அதிகமாகப் பதிவாக்கியிருந்தால் அது வேதனைப்படும் ஊனாகிறது.
2.எலும்புக்குள் வேதனைப்படும் அணுக்களாகப் பெருகி நம்மை வேதனைப்படும் செயலுக்கே கொண்டு செல்கிறது.
3.நாளடைவில் அதுவே நோயாக மாறத் தொடங்குகிறது.

அதை மாற்ற வேண்டும் அல்லவா.

வேதனைப்படும் உணர்வைப் பதிவாக்கினால் அது ஊனாகி நம்மை வேதனைப்படும்படி செய்து நோயாக மாற்றுவது போல்
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நம் எண்ணங்களைக் கண்ணுடன் இணைத்து
2.கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து... உயிருடன் இணைத்து... ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்டி
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தி
4.அறியாது வந்த வேதனைகளையும் தீமைகளையும் நீக்கிடும் சக்திகளைப் பெறச் செய்வதுவது தான்
5.நம் குருநாதர் காட்டிய வழியில் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்தத் தியானத்தின் நோக்கம்.

அதன் வழியில் உங்கள் நினைவாற்றல் துருவ நட்சத்திரத்தின் பால் சென்று அதனின்று வெளி வரும் பேரருளைப் பெற வேண்டும் என்று ஏங்கினால் அதன் பேரருளை நீங்கள் பெற முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் பெற்று உங்கள் உடலிலே பரப்பச் செய்து கொண்டே இருந்தால் உங்கள் உடலில் இருக்கக்கூடிய தீய அணுக்களை மாற்றி உயிரைப் போல உணர்வின் தன்மை என்றுமே ஒளியாக மாற்றிடும் திறன் பெற முடியும்.

மனிதனான பின் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனானோ இதைப் போன்று நமது வாழ்நாளில் நாமும் ஒளியின் சரீரம் பெற முடியும். மனிதனின் கடைசி நிலை பிறவியில்லா நிலை நிலை தான்

உயிரைப் போன்றே உணர்வுகளை ஒன்றாக்கி என்றும் ஒளியின் உடலாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தில் வரும் விஷத்தை ஒளியாக மாற்ற வேண்டும்.

பாம்பினம் தன் விஷத்தைப் பாய்ச்சி மற்ற உயிரினங்களை உணவுக்காக முழுமையாக விழுங்கினாலும்
1.அந்தந்த உடல்களில் உள்ள விஷத்தினைத் தனக்குள் வடிகட்டி
2.பல விதமான வர்ணங்கள் கொண்ட விஷத்தன்மைகளைத் பாம்பினம் தனக்குள் சேர்த்து நாகரத்தினமாக உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்று தான் இந்த மனித வாழ்க்கையிலே ஏற்கனவே சொன்னது போன்று வேதனை வெறுப்பு கோபம் பயம் ஆத்திரம் என்ற பல விதமான விஷத்தன்மைகளை நாம் நுகர்ந்தாலும்...
1.பல விதமான விஷத்தின் தன்மை ஒடுக்கி ஒளியின் உணர்வாகப் பெற்ற
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது
3.விஷத்தின் தன்மை அடக்கி ஒளியின் தன்மையாக மாற்றுகின்றோம்.
4.எத்தகைய விஷத்தன்மைகள் வந்தாலும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று
5.இந்த உடலை விட்டுச் செல்லும் நிலை தான் கடைசி நிலை.

ஆகவே... பிறிதொன்றின் ஈர்ப்பிற்குள் சென்று மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி உயிருடன் ஒன்றி ஒளியாகின்றோம்.

“இது எல்லாம் ஒவ்வொரு உயிரின் கடமைகள்...”

காரணம்... “இந்த உயிர் தான்...” தன்னைக் காக்கத் தன் உணர்வின் தன்மையைச் செயல்படுத்துகின்றது என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.

மனிதனாக ஆன நிலையில் தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தியாக அங்கங்களும் அதற்குத்தக்க உறுப்புகளையும் உருவாக்கியது இந்த உயிரே.

ஆகவே... தீமையிலிருந்து விடுபடச் செய்யும் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை நமக்குள் சேர்த்தோம் என்றால் மனித வாழ்க்கையில் வரும் இன்னல்களிலிருந்து விடுபட்டு உயிரைப் போன்று உணர்வின் தன்மை ஒன்றி வாழும் திறன் பெற்று... “பிறவி இல்லை” என்ற நிலை அடையலாம்.

அதைப் பெறச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே.

November 29, 2022

தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

அகத்தினை அன்பு கொண்டால்…
“ஜெகத்தினை” வென்று வாழ்ந்திடலாம்.

தங்க வந்த கூட்டினில்…
தரணி ஆண்ட வாழ்க்கையில்…
தரணிதனில் நிலைத்திட.. “தவமிருந்தே வாழ்ந்திடுவோம்…!”

ஆண்டவன் என்ற ஆத்மாவை அடக்கி ஆளப் பார்க்காமல்
“ஆத்மலிங்க தேவனை” அறிந்தே நாம் வாழ்ந்திடுவோம்

பகவான் படைத்த படைப்பே நாம்…
பகவான் எங்கே உள்ளான்…? என்று
பகுத்தறியும் ஆற்றலைத்தான் “பகவான் அருளால் பெற்றுள்ளோமே…!”

உடல் அழுக்கைப் போக்கத் தண்ணீர்…
உள்ள அழுக்கைப் போக்க எந்நீர்…?

திருமானின் எண்ணத்தை எண்ணுவீர்… திருநீறு அணிந்தே…!

ஈசன் அருளில் உதித்த நாம்…
ஈன்றெடுத்த தெய்வமாக..
“ஈன்றெடுத்த அன்னை தந்தையை
ஈசனாக்கி வணங்கிடுவோம்…”

நம்மை ஈன்றவர்.. படைத்தவர் யார்…?
நம் முற்பிறவி இப்பிறவி மறுபிறவியில் யார்…?

நம்மில் பலவும் உள்ள பொழுது “நான்” என்பது யார்…?

ஒன்றில்லாமல் ஒன்றில்லை…
ஒன்றிலிருந்து ஒன்றாக ஓங்கி நிற்கும் சக்தியிலே
ஒன்றியே நாம் வாழ்ந்திடுவோம்.

பல ஆசை நிலைகளிலே பல நிலை அடைவதற்கே…
பயம் என்ற பேய்க்கு நாம் பயந்து வாழ்வது எதற்காக…?

நிலையில்லா வாழ்வினிலே “நித்திய நிலை பெற்றிடவே…!”
நிலையான அன்பைக் காட்டி நிலை பெற்று வாழ்ந்திடுவோம்…!

எண்ணக் கடலில் செல்லும் நாம்
எண்ணிய இடத்திற்குச் செல்வதற்கே
எண்ணிய எண்ணத்தில் தான்…
ஏற்றமும் தாழ்வும் அமைகிறது…! என்று உணர்ந்தே வாழ்ந்திடுவோம்.

அகஸ்தியரையும் காணலாம்... ஈஸ்வரபட்டரையும் காணலாம்... துருவ நட்சத்திரத்தையும் காணலாம்... உங்களால் முடியும்...!

ஈஸ்வரா... என்று உயிரிடம் வேண்டி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி நாம் தியானிப்போம்.

கண்களைத் திறந்தபடியே நேராக உற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

இப்பொழுது...
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்ற
2.மகரிஷிகள் அனைத்தும் உங்கள் காட்சிக்கு வரலாம்.

சப்தரிஷிகள் அருள் சக்திகள் இங்கே படர்ந்து இருப்பதனால்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் சப்தரிஷிகளின் அருள் சக்திகளை நுகரும் பொழுது
2.சப்தரிஷி மண்டலமும் சப்தரிஷி மண்டலமும் காட்சியாகக் கிடைக்கலாம்
3.துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய ஒளி அலைகளும் (நீல நிற ஒளிக்கற்றைகள்)
4.துருவ நட்சத்திரத்தைப் பார்க்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இப்பொழுது கிடைக்கின்றது.
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு உணர்த்திய அருள் உணர்வுகள் இப்பொழுது தெளிவாகத் தெரிய வரும்.
6.குருநாதருடைய அருள் உணர்வு கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் சக்திகளைப் பெற முடியும்

அகஸ்தியனை நீங்கள் பார்த்ததில்லை... ஆனால் அகஸ்தியனுடைய பேரருளைப் பார்க்க முடியும். அகஸ்தியன் வெளிப்படுத்திய அருள் உணர்வுகள் நம் பூமியில் படர்ந்திருப்பதை நீங்கள் எடுத்து வளர்க்க வளர்க்க
1.அகஸ்தியனையும் காணலாம்
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரையும் காணலாம்.

ஏனென்றால் டிவி ரேடியோ அலைகளைப் பதிவாக்கிய பின்... அது எப்படி அந்த அலைத் தொடர்களின் மூலம் படங்களையும் ஒலிகளையும் நாம் காண்கின்றோமோ... கேட்கின்றோமோ... அதைப் போல்
1.அருள் மகரிஷிகள் உணர்வுகளை... ஒருங்கிணைந்த அந்த ஆன்மாக்கள் படர்ந்திருப்பதை
2.நாம் நுகர்ந்து வலுப்பெற்றால் நமக்குள் அவர்களின் காட்சியையும் காண முடியும்
3.அவர்களின் அருள் சக்திகளைப் பெற முடியும்...
4.அந்த ஞானிகள் காட்டி வழியில் நாம் வாழ்ந்து இருளை அகற்றலாம்... பேரருளையும் பேரருளையும் பெற முடியும்...!

நீங்கள் எங்கே இருந்தாலும் எந்த நிமிடத்திலும் இந்த அருள் சக்திகளைப் பெற முடியும். கண்ணின் நினைவு கொண்டு உங்கள் உடலில் உள்ள இரத்தங்களில் கலக்கச் செய்து உடலில் உள்ள எல்லா அணுக்களுக்குள்ளும் அதை வளரச் செய்யலாம்... எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்ய முடியும்.

இன்று உலகம் கடும் மோசமாக இருப்பதனால் அதையெல்லாம் நாம் மாற்றக் கூடிய சக்தியாக அந்த அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை நாம் அடைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

எப்படி வராகன் சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று... காற்று மண்டலம் நச்சுத் தன்மையாக இருக்கக்கூடிய இன்றைய சூழ்நிலையில்
1.அதற்குள் மறைந்துள்ள துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பெற்று
2.அந்தப் பேரருளை நாம் வளர்த்துப் பேரொளியாக மாற வேண்டும்.

இத்தகைய பழக்கத்திற்குத் தான் நாம் வர வேண்டும்.

வாழ்க்கையில் எதையுமே குறையாக எண்ண வேண்டியதில்லை... குறைகளைக் காண வேண்டியதில்லை.

சந்தர்ப்பத்தில் எங்கே யாரிடம் எதிலே குறைகளைக் கண்டாலும் அடுத்த கணம்... துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்... அவர்களும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்... அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்.. தெளிந்த மனம் பெற வேண்டும் என்று இது போன்று ஆத்ம சக்தி செய்து செயல்படுத்தி வாருங்கள்.

இவை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டிய வழி முறைகள்.

November 28, 2022

ஞானம் பெற வேண்டியது மிகவும் அவசியம்

அகக்கண் மனக்கண் ஞானக்கண் இப்படி நம்முள்ளே மூன்று வகைத் தன்மைகள் உள்ள நிலைகளைக் கண்களாகக் காட்டினார் பலர் பல நிலைகளில்.

அகக்கண்ணும் மனக்கண்ணும் ஞானக்கண்ணும் இவை எல்லாமே சுவாசக் கண்ணிலிருந்து தான் வருகின்றன.

நம் உடலிலே பல கோடிக் கண்கள் உள்ளன. அக்கண்கள் வழியாகத்தான் இந்த உடலுக்குச் சூரியனிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை இந்தப் பூமித் தாய் தன்னுள் ஈர்த்து அதை நம்முள் ஈர்த்திடும் செயல் நடக்கின்றது.

1.அகக்கண் மனக்கண் ஞானக்கண் என்பவை
2.நம் மன நிலையை வைத்து ஒவ்வொருவரின் குண நிலையைச் சுட்டிக் காட்ட
3.இந்நிலையில் உள்ள குணக்கண்களுக்குப் பல முன்னோர்கள் இந்த நாமத்தைச் சூட்டினார்கள்.
4.இந்த மூன்று வகைக் குணக்கண்களுக்குமே முதற்கண் இந்தச் சுவாசக்கண் ஒன்று தான்.

அந்தச் சுவாசக் கண்ணினால் நம் உடலுக்கு நாம் எந்தெந்த நிலைகளை ஈர்க்கின்றோமோ அந்த நிலை கொண்டுதான் நம் வாழ்க்கை முறையில்… விழிப்பு நிலையில்… சுவாச நிலை கொண்டு ஈர்க்கும் தன்மையை வைத்து… நம் கனவில் வரும் நிலைகளும் ஒன்று சேர்ந்தே கலந்து வருகின்றது.

இந்த மூன்று வகைக் குணக்கண்களை வைத்து ஒவ்வொரு மனிதனின் நிலையையும் தெளிவாக அறிந்திட முடியும்.

இப்படி அகம் புறம் ஞானம் என்ற நிலைகளைக் கண்களாக்கி நம் நிலைக்கு வழி கொண்டு வர வழி வகுத்துத் தந்தனர் நம் முன்னோர்கள்.
1.அகத்தில் எண்ணிப் புறத்தில் வாழ்பவர்கள் தான் இன்று உள்ளார்கள்.
2.தான் பெற வேண்டிய ஞானத்தையே மறந்து விட்டார்கள்.

ஞானம் பெற வேண்டியதன் அவசியத்தைத் தான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்..

November 27, 2022

இரவிலே ஜெப நிலையிலேயே உறங்குங்கள்

நாம் நினைவில் உள்ள பொழுது நடப்பதற்கும்… உறக்கத்தில் காணும் கனவிற்கும்.. என்னப்பா மாற்றம் உள்ளது…?

1.அதிகாலை கனவு பலிக்கும்…!
2.நினைவில் நிற்காத கனவினால் பலன் ஒன்றும் இல்லை...! என்றெல்லாம்
3.கனவின் சகுனங்களையும் பலர் பல விதத்தில் கனவின் உருவம் கண்டு சொல்கிறார்கள்.

நாம் உறக்கத்தில் இல்லாத பொழுது செய்யும் வேலைகளும்… நாம் பேசும் சொற்களும்.. நாம் படிப்பது… பார்ப்பது… இப்படிப் பல நிலைகளில் நம் எண்ணத்துடன் அச்சுவாச நிலை நாம் எடுக்கும் பொழுது நாம் நினைவில் வாழும் நிலையாக உள்ளது.

நாம் உறக்கத்தில் உள்ள பொழுது நம் எண்ணங்கள் உறங்கினாலும்
1.நாம் எடுக்கும் சுவாச நிலை கொண்டு
2.இந்த உலகில் கலந்துள்ள பல அணுக்களின் சுவாச நிலையும் நம் சுவாசத்தில் வந்து கொண்டே உள்ளது.

அந்நிலையில் நம் ஆத்மா அச்சுவாச நிலையுடன் செயல்படும் பொழுது பல நிலைகளில் உள்ள சுவாசங்கள் நம் சுவாசத்துடன் கலப்பதால்
1.பல விபரீதக் கனவுகளும்
2.நாம் எண்ணியே பார்த்திடாத சில நிலை கொண்ட கனவுகளும்
3.சிதறுண்ட நிலையிலும்
4.நம் உணர்வையே நாம் உணர்ந்திடாத சில பயங்கர நிலையில் நம் உடல் சிதையுண்ட நிலையிலும் கனவுகளாக வருவதைக் காணுகின்றோம்.

இப்படிப்பட்ட கனவெல்லாம் எந்த நிலையில் இருந்து வருகின்றது…?

பல சிதறுண்ட கனவுகள் அடிக்கடி நம் கனவில் காண்பதனால் அவை நம் ஆத்மாவிற்குச் சில தீங்குகள் விளைவிக்கின்றன.

கனவில் வருபவை எல்லாமே இந்த உலகில் கலந்துள்ள பல கோடி அணுக்களில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் இப்படிப் பல உயிரணுக்களின் சுவாச நிலையின் உந்துதலினால்தான்
1.நம் எண்ணத்தை (தூக்கத்தில்) நாம் மறந்திருக்கும் பொழுது
2.நம் சுவாச நிலையிலும் இந்நிலையின் உந்துதலுக்கு நாம் ஆளாகின்றோம்.

இறந்தவர்கள் கனவில் வருவதுவும் நம் சுவாச நிலையைக் கொண்டு தான்…! அவர்கள் ஜீவனுடன் இருந்த காலத்தில் அவர்கள் விட்ட சுவாச நிலையைக் கொண்டு நம் சுவாச நிலைக்கேற்ப ஈர்ப்பு நிலை கொண்டு தான் கனவுகளில் வருகிறார்கள்.

இந்நிலையில் இக்காணும் கனவெல்லாம் நம் ஆத்மாவைப் பாதிக்காமல்… கனவிலேயே பல உண்மை நிலைகளைக் கண்டிடும் வண்ணம் “நம் சுவாச நிலையை நாம் ஒருநிலைப்படுத்தி…” ஒழுங்குபடுத்த வேண்டும்.

நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கை நிலையிலிருந்தே நம் சுவாச நிலைக்குப் பல உன்னத நிலையை எடுத்துக் கொண்டு வரும் பொழுது
1.எப்படி நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்குத் தியானத்தின் மூலம் உரம் அளிக்கின்றோமோ
2.அதைப் போல் நாம் கனவில் காணும் நிலையில் நல்ல நிலையுடன் கூடிய கனவுகளாக
3.நம் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்கு உரம் தேடி வைக்க முடியும்.

நாம் உறங்கும் பொழுது பல எண்ணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால் அப்படிப் பல எண்ணங்களை எண்ணும் பொழுதே நம் சுவாசநிலை கொண்டு அதற்கொத்த நிலைகளும் வந்து மோதத்தான் செய்யும்.

ஆகவே அத்தகைய எண்ணங்களுக்கு நாம் அடிமையாகாமல்
1.ஜெப நிலையிலேயே நாம் உறங்கும் பொழுது
2.நம் சுவாசமும் நம் உயிரணுவும் ஒரே நிலையில் அவ்வாண்டவனின் சக்தியை ஈர்க்கின்றது.

அந்நிலையில் இருக்கும் பொழுது நமக்குப் பல அணுக்களின் நிலைகள் நம் சுவாசத்திற்கு வந்திடாமல் ஒரே அமைதி கொண்ட நிலையில் நாம் உறங்கி எழுந்திடலாம்.

கனவும் நினைவும் கலந்தது தான் இந்த வாழ்க்கையே…! விழிப்பில் உள்ள பொழுது தீய அணுக்கள்.. நல்ல அணுக்கள்… என்று நம் சுவாச நிலைக்கு எப்படி வருகின்றனவோ அந்நிலை கொண்டே தான் கனவிலும் நடக்கின்றது.

நம் ஆத்மாவிற்கு இரண்டு நிலைகளுமே ஒரே நிலை கொண்ட உணர்வுகளைத்தான் ஈர்க்கின்றது. அந்நிலையிலிருந்து…
1.நாம் இதை எல்லாமே கனவான வாழ்க்கையின் – “கனவு…நினைவு…” என்று புரிந்து கொண்டு
2.எல்லாவற்றிலும் ஒரே நிலை கொண்ட அவ்வீசனின் சக்தியை ஒரே நிலையில் ஈர்த்து
3.நம் ஆத்மாவிற்கு நல்ல நிலையைத் தேடிக் கொள்வது ஒன்று தான்
4.நாம் எடுத்திடும் பெரும் முயற்சியாக இருந்திட வேண்டும்.

ஆத்ம சுத்தியின் சூட்சமமே புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “அழுத்தமாக...” நிலை நிறுத்துவது தான்

உலக நடப்புகளைத் தெரிந்து கொள்வதற்காகப் பத்திரிகைகளைப் படிக்கின்றோம். ஒரு இடத்திலே விபத்தாகி விட்டது... அடிபட்டனர்... விபரீத நிலைகள் ஆகிவிட்டது என்று அங்கே நடந்த நிகழ்ச்சிகளை... அவர்களுக்குக் கிடைத்த ஆதாரப்படி... அறிந்ததைச் சொல்கின்றார்கள்.

எழுத்து வடிவில் இருப்பதைப் பார்த்து நாம் படித்தாலும் அதே உணர்வுகளை நாம் நுகரக்கூடிய சந்தர்ப்பம் வந்து விடுகின்றது.

இதைப் போன்று பிறிதொரு தீமையின் உணர்வுகளை நாம் அறிந்து தெரிந்து கொண்டாலும் அது நம் உடலுக்குள் உருவாகாதபடி அவ்வப்போது அதைத் தூய்மையாக்க ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

ஈஸ்வரா... என்ற உயிரை எண்ணி...
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவை நம் புருவ மத்தியில் நிலை நிறுத்தி
3.நாம் படித்துப் பதிவாக்கிய உணர்வும்... இதற்கு முன் நமக்குள் உருவான தீய வினைகளும் உள்புகாது தடுத்தல் வேண்டும்.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை வைத்து நாம் தடுத்து நிறுத்தினால்
5.அந்த விபரீத உணர்வுகள் உள்புகாது தடுக்கப்படுகின்றது.

ஏனென்றால் அதிர்ச்சியான செய்திகளை நாம் பார்த்தவுடன் நமக்குள் பதிவாகிறது.
1.பதிவான உணர்வுகளை நாம் சுவாசித்து
2.அந்த எண்ணங்கள் அந்த உணர்ச்சிகள் கொண்டு அந்தந்த வாழ்க்கை வாழ்ந்தாலும்
3.இப்போது (அடுத்து அடுத்து) மீண்டும் எண்ணத்தால் அதை எண்ணும் பொழுது
4.அதே உணர்வைக் காற்றிலிருந்து கவர்ந்து அதே உணர்ச்சிகள் இயக்கப்பட்டு
5.அதே செயல்களை நமக்குள் உருவாக்கி விடுகின்றது அல்லது வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்க செய்கின்றது.

இப்படி நாம் வேதனையான உணர்வுகளைச் சுவாசித்தோம் என்றால் அது அனைத்தும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து இரத்தத்திலே “மாசுபடும் உணர்வுகளாக” மாறுகிறது.

மாசுபட்ட உணர்வுகளை நம் உடலில் மீண்டும் சேர்க்க உடலில் இருக்கும் நல்ல அணுக்களுக்குள் அது சேரும் தன்மை வந்து விடுகின்றது. இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வராதபடி தடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திப் பழக வேண்டும். தடுத்து நிறுத்தவில்லை என்றால் உடலுக்குள் சென்று அந்த நல்ல அணுக்களைக் கெடுத்துவிடும்.

கண்களை மூடித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று “இரத்தத்தில் கலக்கச் செய்ய வேண்டும்...”

அப்போது துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தமாக மாறும் பொழுது வலு கொண்டதாக மாறுகிறது. இப்படி “அந்த வலுவை” நாம் ஏற்றி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்படிச் சேர்த்துக் கொண்டால் “இதன் அழுத்தம்... துருவ நட்சத்திர வலு” நாம் அங்கே எண்ணும் இதே உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆதாரத்துடன் கலந்து அந்த வெறுப்பு அல்லது வேதனை போன்ற தீமை செய்யும் உணர்வுகளை நுகராது உயிரிலே அடக்கி... ஆகாரத்தைச் சீராக அமைத்து நல்ல இரத்தமாக மாற்ற இது உதவும்.

“ஆத்ம சுத்தி என்பது சாதாரணமானதல்ல...”
1.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் பதிவாக்கி
2.இதைத் தெளிவாக்கி அந்தச் சக்தியைப் பெறுவதற்குத்தான் இவ்வளவு காலம் உங்களுக்கு உபதேசித்தது (ஞானகுரு)
3.ஓரளவுக்கு அந்த வலிமை பெறக்கூடிய தகுதியைப் பெற்ற பின் இதை இப்போது முழுமையாகக் கொடுக்கின்றோம்.

காரணம்... உலகம் முழுவதும் விஷத்தன்மையாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்... உங்களுக்குள் யாம் சொன்ன முறைப்படி வலுக் கொண்டு இந்தக் காற்றுக்குள் மறைந்திருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கவர்ந்து உங்கள் உடல் உறுப்புகளில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை அதிகமாகச் சேர்த்துக் கொண்டு வர.. வர...
1.துருவ நட்சத்திரத்தின் வலிமையைப் பெறுகின்றீர்கள்...
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லாத நிலை அடைகின்றீர்கள்.

November 26, 2022

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்...?

ஆதியில் ஆண்டவனை எந்த ரூபத்தில் வணங்கினார்கள்..?

உதய காலத்தில் ஆற்றுப் படுகையிலும் குளங்கள் கடல் இப்படி உள்ள இடங்களில் அந்நீரில் நின்று அந்தச் சூரியனின் சக்தியை சூரிய உதய காலத்தில் எண்ணி வணங்கினார்கள்.

அந்த நிலையில் வருண பகவான்… வாயு பகவான்… சூரிய பகவான்… என்று அந்தப் பகவானையே இந்நிலையில் கண்டு வணங்கி ஜெபித்தார்கள்.

1.காற்றும் மழையும் அவ்வொளியும் இல்லாவிட்டால் ஜீவனே இல்லை.
2.ஜீவனைத் தந்த சக்தி இந்த மூன்றுக்கும் தான் உள்ளது என்ற நிலையில்
3.இந்த மூன்றையுமே தெய்வமாக்கி வணங்கினார்கள்.
4.வணங்கினார்கள் என்ன…? அந்த நிலை கொண்டுதான் நாமும் வணங்க வேண்டும்.

அந்த நிலையிலிருந்து தான் நம் உயிர்ணுவிற்கு நம் ஆத்மாவிற்கே உயிர்த் துடிப்பு வந்தது. அந்நிலையில் அருள் பெற்ற நம் ஆத்மா அவற்றைத் தான் “ஆதி முதல் தெய்வமாக” வணங்கிப் போற்ற வேண்டும்.

ஆதியில் வந்த ஆண்டவனையே தன் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்ட மனிதனப்பா இன்றைய மனிதன்.

இன்றைய மனிதன் நம்பும் நிலை எல்லாம்..
1.அவன் போடும் கணக்குப்படி தேதியிலும் கைரேகைகளிலும் ஜாதகத்திலும் பெரும் நம்பிக்கை வைத்து
2.தன்னுள்ளேயே அந்த ஆண்டவனின் சக்தியை மறந்து விட்டு இன்று உலகம் முழுவதுமே இந்த நிலையில் தான் நம்பி வாழ்கிறது.
3.நாளும் நட்சத்திரமும் தேதியும் இவன் வைத்த கணக்கு தான்...!

ஆதியில் வாழ்ந்த மனிதன் அந்தச் சூரியனின் சக்தி கொண்டு ஒளி நம் நிலத்தில் படும் நிலை கொண்டு “நேரமும் காலமும்” அறிந்து செயல்பட்டான்.

அன்று பல பெரியவர்கள் இந்த இந்த நாட்கள் மழை பெய்யும்.. வெயில் அதிகமாக இருக்கும்… என்றெல்லாம் தான் அந்த ஞானத்தை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

இன்றைய வளர்ந்த விஞ்ஞான மனிதன் தன் அறிவைக் கொண்டு பல செயல் ரூபங்களையும் பல உபயோக நிலை கொண்ட பல உன்னதப் பொருள்களையும் கண்டிட்டான்.

அவ்வாறு தான் கண்ட நிலையை ஒன்றுடன் ஒன்று பொருத்தி வாழ்ந்து
1.உத்தம நிலையில் வாழ்ந்திடாமல்
2.பேராசை நிலை கொண்டு அழிவு நிலைக்கு ஏனப்பா செல்ல வேண்டும்..?

இன்று மனித மனங்களில் சுவாச நிலையே ஒருவரைப் போற்றியும்… ஒருவரைத் தூற்றியுமே… வாழ்வதாக உள்ளது. நம் மனித ஜென்மத்தில் தான் இந்தப் போற்றலும் தூற்றலும்.

போற்றலுக்கும் தூற்றலுக்குமா நாம் பிறவி எடுத்தோம்…!

ஆண்டவன் சக்தியிலிருந்து மகத்தான உன்னத நிலையில் ஆறறிவு படைத்து மனிதனாகப் பிறவி எடுத்துள்ளோம். அந்த நிலைக்கு அந்த ஆண்டவனின் சக்தியை நாம் உபயோகப்படுத்தாமல் அவன் தந்த சக்தி கொண்டு நம்மை நாம் அழித்து வாழ்கின்றோம்.

அதற்காகத்தான் இச்சக்தியை ஆண்டவன் நமக்கு அளித்தானா…?

மிருக ஜெந்துக்கு ஐந்தறிவு படைத்தான் ஆண்டவன் என்கிறோம். அந்த மிருக ஜெந்து போற்றலுக்கும் தூற்றலுக்கும் ஏங்குவதில்லை. பொருளுக்கும் ஆடை ஆபரணங்களுக்கும் அவைகளிடம் ஆசை இல்லை.

அவைகளின் நிலை தான் மனிதன் சொல்வது போல் ஐந்து அறிவு ஆயிற்றே..! அவைகளின் நிலைக்கு எப்படியப்பா இந்த நிலைகளைக் கண்டிட முடியும்…?

அம்மிருகத்தின் நிலையில் உள்ள உயர்ந்த குணம் ஒற்றுமையான குணம் அதன் அறிவுத் தன்மை இன்றைய ஆறறிவு படைத்த மனிதனுக்கு எங்கப்பா உள்ளது…?

மிருகங்களும் பறவைகளும் எந்தக் கடிகாரத்தை வைத்து எந்தத் தேதியை வைத்து நாளும் மணியும் கணக்கிட்டன…?

நாம் நினைக்கின்றோம்… மனிதனுக்குத் தான் எல்லா நிலையும் தெரியும் என்று…! பறவைகள் வாழும் பரிபக்குவமான வாழ்க்கை நிலையை மனிதர்கள் பார்த்து வாழ வேண்டுமப்பா…!

மிருகங்கள் நிலைக்கு என்ன தெரியும்…! நம்மைப் போல் அதற்குத்தான் ஆறறிவு இல்லையே…! என்கின்றான் மனிதன். அனால் இவன் பெற்ற பொக்கிஷத்தைத்தான் இவன் சிதற விடுகின்றான் என்பதை அறியவில்லை.

இது தான் இன்றைய உலக நிலை…!

முந்தைய வினைகளை நாம் மாற்றி அமைக்க வேண்டியது மிகவும் அவசியம்

தாய் கருவிலே நாம் பெற்ற உணர்வுக்கொப்ப மனிதனாக உருப்பெற்றாலும்
1.நமது வாழ்க்கையில் கண் கொண்டு உற்றுப் பார்த்து உணர்வுகளைப் பதிவாக்கி
2.அதன் வழி உணர்வுகளை நுகர்ந்து அறியும் சக்தி பெற்ற நாம்
3.நமது வாழ்க்கையில் எத்தனை பேரைப் பார்த்தோமோ எத்தனை பொருள்களை உற்றுப் பார்த்தோமோ
4.அவையெல்லாம் ஊழ்வினை என்ற வித்தாக நமது உடலில் எலும்புக்குள் இருக்கும் ஊன்களில் பதிவாகி விடுகின்றது.

எப்படி செல்ஃபோன்களில் பதிவாக்கி வைத்துக் கொண்ட பின் அதனின் இயக்கங்களை முழுமையாக நாம் இயக்க முடிகின்றதோ இதைப் போன்று எலும்புகளில் உள்ள செல்களில் இயக்கி எத்தனையோ கோடி உணர்வுகளை நாம் பதிவாக்கிக் கொள்ளலாம்.

“பதிவான நிலைகளில்…” நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த நினைவாற்றலே மீண்டும் வருகின்றது. அதன் வழி அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக நம்மைச் செயலாக்குகின்றது. அதிலே தீமைகளும் பதிவாகி இருக்கிறது.

இதைப் போன்று நமது வாழ்க்கையில் எத்தனை கோடி தீமையின் உணர்வுகள் நம் ஊன்களில் உண்டு. அதை இயக்க விடாது தடைப்படுத்த வேண்டுமல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளை
1.எல்லா உறுப்புகளிலும் படரச் செய்ய வேண்டும்
2.அந்த உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்
3.எலும்புக்குள் இருக்கும் எல்லா ஊன்களிலும் அதைப் பரவ செய்ய வேண்டும்.

எப்படி விஞ்ஞான அறிவு கொண்டு இரத்தங்களில் இன்ஜெக்க்ஷன் மூலமாக மருந்தினைச் செலுத்தி உடலில் உள்ள உறுப்புகளுக்கும் மற்ற அணுக்களுக்கும் சேரும்படிச் செய்கிறார்களோ அதைப் போன்று தான்… துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் கவர்ந்து… இரத்த நாளங்களிலே கவரச் செய்து… உடல் முழுவதற்கும் பரவச் செய்ய வேண்டும்.

நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் பழகி அந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் “நன்மை செய்தார்…!” என்று எண்ணும் பொழுது எங்கே இருந்தாலும் அது பாய்ந்து விக்கலாக மாறுகின்றது அதே தொடர்பில் இருவரையும் நல்லதாக அது இயக்குகின்றது.

ஆனால் பகைமையானால்… எனக்குத் துரோகம் செய்தான் பாவி…! என்று வேக உணர்ச்சிகளைத் தூண்டப்படும் பொழுது சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.
1.உணவு உட்கொள்ளும் பொழுது அது இயக்க மறுத்து புரையும் ஓடுகிறது.
2.வாகனங்களிலோ அல்லது நடந்து செல்லப்படும் பொழுது விபத்தாகிறது.

மனிதனுக்கு மனிதன் தொடர்பு கொண்ட உணர்வுகள் எப்படி செல்ஃபோன்களில் இயக்கி நாம் ஃபோனில் தொடர்பு கொள்கின்றோமோ அதே போல் அந்தப் பதிவுகள் இயக்கப்பட்டு அந்த மனிதனுக்கும் சரி… நமக்கும் சரி… அதே இயக்க நிலை ஆகி தொல்லைகளுக்கு ஆளாகின்றோம்.

நமக்கும் அந்த வெறுப்புகள் கூடும் போது பள்ளம் மேடு தெரியாதபடி இயக்கி நமக்கும் விபத்துகள் ஏற்படக் காரணமாகி விடுகின்றது.

அல்லது நாம் மற்ற வேலைகளைச் செய்தோம் என்றால் சிந்தனையற்ற நிலைக்குக் கொண்டு சென்று விடுகின்றது. அவர்களுக்கும் அதே போன்று சிந்தனை இல்லாத செயல்களாக இயக்கி விடுகின்றது…
1.விபத்துகள் ஏற்படுவதற்கு இதுவே காரணம் ஆகி விடுகின்றது.
2.இது எல்லாம் நமக்குள் ஏற்கனவே பதிவு செய்த முந்தைய பதிவுகள்.

இது போன்ற முந்தைய வினைகள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம்மிடம் இருக்கக்கூடிய எல்லா அணுக்களிலும்
1.நம் கண்ணின் பார்வை கொண்டு அந்த அழுத்தமான நிலைகளில் அதிகமாகச் செலுத்தச் செலுத்த
2.முந்தைய பாவ வினைகளோ தீய வினைகளோ சாப வினைகளோ பூர்வ ஜென்ம வினைகளோ எது இருப்பினும்
3.அதை எல்லாம் சிறுகச் சிறுக நம்மால் குறைக்க முடியும்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை ஊற்ற ஊற்ற ஊற்ற அந்த அழுக்கு நீர் எப்படி அது குறைவாகின்றதோ இதே போன்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து முந்தைய (தீமையான) பதிவுகளைத் தூய்மையாக்குதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி உடல் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் இதை இணைக்கக்கூடிய முயற்சிகளை நாம் செயல்படுத்துதல் வேண்டும்…!

நாளுக்கு நாள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கவரும் ஊன்களாக நமக்குள் உருவாக்க வேண்டும். அவசியம் இதைச் செயல்படுத்த வேண்டும்.

November 25, 2022

இன்றைய உலக வாழ்க்கை கனவு தான்…!

நாம் வாழும் வாழ்க்கை கனவான வாழ்க்கை…!

நாம் உறங்கும் பொழுது வருவது தான் கனவு… நாம் விழித்திருக்கும் பொழுது வாழ்வது “நினைவு..!” என்கின்றோம். கனவும் நினைவும் எல்லாமே ஒன்று தான்…!
1.இன்று நடப்பது நாளை கனவு தான்.
2.நாம் உறக்கத்தில் உள்ள பொழுதும் கனவு தான்.
3.சில நாட்கள் பொறுத்து எண்ணிப் பார்ப்பது எல்லாமே கனவு தான்,
4.முன் ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
5.இந்த ஜென்ம வாழ்க்கையும் கனவு தான்.
6.இனி நமக்கு நடப்பதுவும் கனவு தான்,

அவ் ஈஸ்வரனின் நினைவு ஒன்றே… அவ் ஈசனின் சக்தி ஒன்றே தான்…! ஒரே நிலை கொண்ட “என்றும் நிலைத்து நிற்கும் நினைவு…!”

கனவுக்கும் நினைவுக்கும் நாம் மாறுபட்டு எண்ணுகின்றோம்.

நடப்பது எல்லாமே கனவு தான் என்ற நினைவு எல்லோருக்கும் வந்தால் இன்றைய உலகில் பகவானைப் பல ரூபமாக்கி பல ஜாதியாக்கி இருக்க மாட்டார்கள்.

இன்று பல மதங்களின் நாமத்தைச் சூட்டி வட கலை… தென் கலை.. என்றெல்லாம் சொல்லி தன்னையே தான் தாழ்த்தி வாழ்கின்றான் மனிதன்.

இதிலிருந்து விடுபட வேண்டும்.

November 24, 2022

குரு இட்ட கட்டளைப்படி தான் சேவை செய்து கொண்டிருக்கின்றேன் - ஞானகுரு

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று தான் நான் (ஞானகுரு) தியானம் இருக்கின்றேன்.
1.உங்கள் ஒவ்வொருவரது உயிரிலும் அந்த அருள் சக்தி படர வேண்டும் என்றும்
2.உயிர் வீற்றிருக்கும் உடலான ஆலயத்திற்குள் அருள் ஞானம் பெருக வேண்டும் என்றும்
3.அரும் பெரும் சக்தியை ஊட்டிக் கொண்டுள்ளேன்.

காரணம் உங்கள் உடலில் இதற்கு முன் அறியாது சேர்ந்த தூசிகளைத் (தீமைகளை) துடைக்க வேண்டும் என்று “இதை ஒரு சேவையாக நான் செய்கின்றேன்… குருநாதர் இட்ட கட்டளைப்படி…!”

உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன்… உடலைக் கோவிலாக மதிக்கின்றேன். நீங்களும் இதே போல உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து உடலை ஆலயமாக மதித்து… அந்த அருள் சக்தியை வளர்த்துக் கொள்ளலாம்.

அதே சமயத்தில் நீங்களும் எல்லோரது உயிரையும் கடவுளாக மதித்து அவர்கள் உடலை ஆலயமாக மதித்து… அவர்களுக்கெல்லாம் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று நமது குரு காட்டிய வழியில் செயல்படுத்தினால்… நம் உயிரை நாம் கடவுளாக மதித்தவர்களாகின்றோம்… நம் உடலை ஆலயமாக மதித்தவர்களாகின்றோம்.

இதைப் போன்று அனுதினமும் நீங்கள் எண்ணி வந்தால்
1,உங்கள் குடும்பங்களில் நல்ல நறுமணங்கள் படரும்… புதுப்புது மணங்கள் வரும்… உங்கள் சுவாசத்தில் அதை உணர முடியும்.
2.உங்கள் சுவாசத்தில் உயர்ந்த மணங்கள் வந்தால் சர்வ தீமைகளிலிருந்து விடுபட முடியும்…
3.நோய்களிலிருந்து விடுபட முடியும்… தோஷங்களில் இருந்து விடுபட முடியும்…!
4.துன்பமாக துயரமோ மற்ற நிலைகள் வராதபடி சிந்தித்துச் செயல்படக்கூடிய அருள் சக்திகளும் பெருகும்.

உங்களால் ஞானத்துடன் செயல்பட முடியும். உங்கள் உடலில் நல்ல அணுக்கள் உருவாகும். மகிழ்ந்து வாழும் சக்தி பெறுவீர்கள். மன பலம் பெறுவீர்கள் உடல் நலம் பெறுவீர்கள்.

ஆகவே குடும்பத்தில் கஷ்டம் என்று சொல்லாதீர்கள்… குறைகளை எண்ணாதீர்கள். ஏனென்றால் உடல் நலிந்தால் சிந்தனை குறையும். சிந்தனை குறைந்தால் செயல்கள் குறையும்… செயல் குறைந்தால் தொழில் மந்தமாகும்… பொருள்கள் வீணாகும். குடும்பத்திற்குள் பகைமையாகும்.

இதை போன்ற நிலையிலிருந்து எல்லாம் நீங்கள் விடுபட்டு அருள் வழி வாழுங்கள். தீமைகள் புகாது தடுத்துப் பழகுங்கள்.

நீங்கள் எதை எண்ணுகின்றீர்களோ அதைத்தான் உயிர் செயல்படுத்துகின்றது அந்த உணர்வை வைத்துத் தான் நீங்கள் செயல்பட முடியும்.

1.ஆகவே உங்கள் உயிரை மதித்துப் பழகுங்கள்
2.உங்கள் உடலுக்குள் அருள் உணர்வுகளைப் பெருக்குங்கள்.
3.உடலுக்குப் பின் இனி பிறவியில்லை என்ற நிலையை அடையுங்கள்.

இதுதான் மனிதனின் கடைசி நிலை…!

குருவின் துணை நமக்கு அவசியம் வேண்டும்

நமக்கு முன்னே பல கோடிச் சித்தர்கள் வாழ்ந்தார்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். திருவள்ளுவர் தோன்றி திகட்டாத பொக்கிஷத்தை நமக்களித்தார்…! என்றெல்லாம் இன்றும் சொல்லி வருகின்றார்கள்.

திருவள்ளுவரும் போகரும் கொங்கணவரும் ஏனைய எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் நம்மைப் பொல் மனிதனாகத்தான் பிறந்தார்கள்.
1.அவர்கள் எல்லாம் இன்றும் உலகம் போற்றும் நிலையில் தன் ஞானத்தை வளர்த்து
2.தன் நினைவில் அவ் ஈஸ்வரனையே ஈசனாக்கி வாழ்ந்து காட்டினார்கள்.

அந்த நிலைகளை எல்லாம் இன்றையக் கலியில் நாம் விஞ்ஞானம் என்னும் ரூபத்தில் நமக்கு ஆண்டவன் அளித்த சக்தியைக் கொண்டுவந்து வீண் விரயமாக்கி விட்டோம்.

1.அன்றிலிருந்து இன்று வரை மனிதப் பிறவியில் மாற்றமில்லை.
2.ஆனால் மனித எண்ணத்தில் தான் பல கோடி மாற்றங்கள் வந்துள்ளன.

இன்றுள்ள நிலையில் ஆண்டவனை ஜெபிக்கும் நிலையிலும்... உண்மை நிலைகளைச் சொல்பவர்களை எள்ளி நகையாடும் நிலையில் தான் உள்ளார்கள்.

அந்நிலை கொண்டு தான் இந்தக் கலியில் கண்ட பல மேதைகள் இராமகிருஷ்ண பரமகம்சர்… விவேகானந்தர்…! அவர்கள் நமக்களித்த உண்மை நிலைகளைக் கொண்டு நாம் அதைக் காசாக்கிக் “கருத்தில் ஏற்றுக் கொள்ளும் நிலையை மாற்றி வாழ்கின்றோம்…!”

இன்று பிறவி எடுத்த நாமும்
1.ஆசையின் உந்தலுக்கு அடிபணியாமல் வாழ்ந்திட்டால்
2.அன்றையக் கால சித்தர்களைப் போல் வாழ்ந்து காட்டிவும் முடியும்.

வளரும் முறையிலிருந்து தான் இந்நிலை எல்லாமே வருகின்றது. வளர்ந்த பின் நாம் அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் “தியான நிலை ஒன்று தான் உண்டப்பா…!”

ஒவ்வொருவருவரும் தன் நிலையிலேயே ஏற்றுக் கொள்வதையும் இப்பொழுது வெளியிடும் நிலையில் இல்லாமல் தனக்குத் தெரிந்த உண்மை நிலைகளையும் வெளியிடும் பொழுது அதில் தவறுகள் உள்ளனவா…! என்ற பயத்தில் மறைத்து வாழ்கிறார்கள்.

இந்நிலையைப் போக்க நம் நிலைக்கு நாம் இந்த வழிக்கு வந்தமைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு குருவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தக் குருவின் சக்தியிலிருந்து பல உண்மை நிலைகளைப் பெற்றிட முடியுமப்பா…! நீங்கள் இப்பொழுது போற்றிடும் திருவள்ளுவரின் நிலைக்கும் ஒரு மாபெரும் ரிஷி இருந்தார்.

இப்படி ஒவ்வொருவரின் நிலைக்கும் ஒவ்வொரு குருவின் நிலை கொண்டு தான் ஆரம்பப் பாடநிலை அறிந்திட முடியுமப்பா…!

அந்தக் குருவின் நிலை நாம் தியானத்தில் அமர்ந்து அந்தக் குருவை எண்ணி வணங்கிடும் காலத்தில் அவர் பெற்ற சக்தி நிலை கொண்டு நமக்குப் பல உன்னத நிலைகளை ஈர்த்து அளித்திட முடியும்.

1.இந்தக் கலி காலத்தில் ஒரு போகராகவோ திருவள்ளுவராகவோ…
2.நாம் ஏன் வாழ்ந்து காட்டிட முடியாது…?

அவர்களுக்கும் மேல் உயர்ந்த நிலையை அவர்களை எண்ணி ஜெபமிருக்கும் பொழுதே அவர்கள் நமக்களிக்கும் உன்னத நிலை பெற்று வாழ்ந்திடலாம்.

நம்மிடமுள்ள பயத்தைப் போக்கி “நாம் பிறவி எடுத்த பயனைப் பெற்றுக் காட்டிட வேண்டும்…!” என்ற வைராக்கிய எண்ணம் கொண்டு வாழ்ந்திட வேண்டும்.

November 23, 2022

உயிரின் இயக்கத்தைப் (வெப்பத்தை) பயன்படுத்த நமக்கு ஒரு பயிற்சி தேவை

1.உயிரிலே எது பட்டாலும் அதைத்தான் அது இயக்குகின்றது,,, அதைத் தான் இயக்கும்…!
2.அது தன்னிச்சையாக எதுவும் செயல்படுத்தாது

ஒரு நெருப்பை வைத்தோம் என்றால் அது தன்னிச்சையாக சமைக்குமா என்றால் இல்லை. நெருப்பை வைத்து… அதன் மீது ஒரு பாத்திரத்தை வைத்து… அதில் எந்தப் பொருளைப் போடுகின்றோமோ அதைத்தான் அது சமைக்கின்றது.

இதைப் போன்று தான்
1.“வெப்பத்தின் உணர்வு கொண்ட நமது உயிர்…”
2.அதில் இருக்கக்கூடிய காந்தம் எதைக் கவர்கின்றதோ சுவாசிக்கின்றதோ
3.அந்த உணர்ச்சியின் செயலே செயல்படுத்துகின்றது
4.அந்த உணர்வுக்கொப்பதான் வாழ்க்கை அமைகின்றது
5.இந்த உணர்ச்சிக்கொப்பதான் நாதங்களை எழுப்புகிறது.
6.உணர்ச்சிக்கொப்பத்தான் எண்ணம் சொல் செயல் என்று இயக்குகின்றது.

உயிரே கடவுள் என்றாலும் மிருக நிலையிலிருந்து ஆறாவது அறிவு கொண்டு மனிதனாக எப்பொழுது முழுமை பெற்றானோ… முழு முதல் கடவுள். தீமைகளை நீக்கக்கூடிய சக்தி பெற்றவன் என்று விநாயகனைப் போட்டு மனிதனுக்குள் இருக்கும் சக்திகளைக் காண்பித்துள்ளார்கள்.

பல கோடிச் சரீரங்களில் தீமைகளை நீக்கி நீக்கி நீக்கி… தீமைகளை நீக்கிடும் வினைக்கு நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது உயிர் தான்.

ஆகவே அருள் ஞானத்தைப் பெருக்குங்கள்…! அருள் மகரிஷிகளின் உணர்வுகளை யாம் (ஞானகுரு) ஆழமாக உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது மீண்டும் அதை நினைவு கொண்டு நீங்கள் எடுத்தால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எளிதில் பெறலாம்… தீமைகளை அகற்றலாம்.

இதற்கு பயிற்சி அவசியம் தேவை.

ஒரு தையல் மிஷினில் அமர்ந்த உடனே துணியைத் தைத்து விட முடியுமா…? சமையல் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் சமைக்கத் தெரியாதபடி உணவைச் சுவையாகக் கொண்டு வர முடியுமா…?

எல்லாக் காய்களையும் போட்டாலும் அது பக்குவப்படுத்தி வைத்தால் தான் அந்தக் குழம்பு ருசியாக இருக்கும்.

வெறும் சோறை ஆக்க வேண்டும் என்றாலும் கூட நெருப்பைத் திகு திகு… என்று எரித்துவிட்டு அதிலே அரிசியைப் போட்டால்
1.அதில் வைக்கக்கூடிய நெருப்பின் அளவுகோல்படி ஒரு பக்கம் அரிசி வேகும்.
2.அடியில் இருப்பது கருகிவிடும். மேலே இருப்பது வேகாது இருக்கும்.
3.கருகிய அரிசி மேலே சென்ற பின் அந்தச் சமையலே வித்தியாசமாகத்தான் இருக்கும்.

இந்த நெருப்பின் அளவுகோல் மாறினால் அரிசியின் வேக்காடும் மாறிவிடும்.

“ஆகவே எதிலுமே பக்குவம் தேவை...”

யாம் சொல்லும் இந்த தியானத்தின் மூலம் பக்குவப்படுத்தக்கூடிய முறைகளைப் பழகிக் கொண்டால் தீமைகளை மாற்றி அமைக்கும் பழக்கம் வந்துவிடும்.

தையல் வேலை தெரிந்தவர்கள் அடுத்தவரிடம் பேசிக் கொண்டே துணிகளைக் கத்திரித்து அதைச் சீராகத் தைப்பது போன்று
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பயன்படுத்தப் பழகிக் கொண்டால்
2.தீமைகளை நீக்கும் அந்த ஆற்றல் இயற்கையாக நமக்குள் வந்துவிடுகிறது

எலக்ட்ரிக்… எலக்ட்ரான்…! எதனின் அழுத்தம் அதிகமாகிறதோ அதன் நிலைக்கே வருகிறது. சங்கடம் சங்கடம் என்ற இந்த அழுத்தம் அதிகமாகி விட்டால் நமக்கு முன்னாடி அதுவே எலக்ட்ரானிக்காக இருக்கின்றது.

தீமை என்ற உணர்வு எலக்ட்ரானிக்காக மாறிவிட்டால் அது நன்மைகளை நமக்குள் விடுவதில்லை. ஆனால் தீமைகளை நீக்கிய அருள் உணர்வுகளை நமக்கு முன்னாடி வைத்து… தீமை என்ற உணர்வு உள்ளே புகாதபடி நன்மையின் உணர்வுகளாக… அந்த எலக்ட்ரானிக்காக மாற்ற வேண்டும்.

உயிர் எலக்ட்ரிக்… நாம் நுகரும் உணர்வுகள் சந்தர்ப்பத்தில் நமக்குள் பதிவான நிலை கொண்டு எலக்ட்ரானிக்…
1.வேதனை வெறுப்பு குரோதம் கோபம் என்ற உணர்வின் அழுத்தம் அதிகமானால்
2.மனிதன் எவ்வளவு தான் நல்லது செய்ய வேண்டும் என்று நல்ல உணர்ச்சிகள் ஆனாலும் அதைச் செயல்படுத்த முடியாது போய்விடும்.

ஆகவே இதைப் போன்ற நிலைகளை மாற்ற ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். வாழ்க்கையில் வரும் இருளை அகற்றுவோம்… மகிழ்ந்து வாழ்வோம்… பிறவி இல்லா நிலை அடைவோம்.

இது தான் மனிதனின் கடைசி நிலை.

அகஸ்தியன் எப்படிப் பிறவியில்லா இல்லை அடைந்தானோ… உயிருடன் ஒன்றி ஒளியாக மாறினானோ… அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.
1.இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் துருவ நட்சத்திரம் அழியாது.
2.அந்த ஆற்றலை நாமும் பெற வேண்டும்.

வாழும் வரை வாழலாம் என்றால் வாழ்ந்தபின் என்ன நிலை…?

இந்த மனிதப் பிறவி எடுக்க அவ்வாண்டவனின் சக்தியில் பல நாள் தவமிருந்து நாம் பெற்றதே இப்பாக்கியம்.

ஆனால் நாம் எடுத்த மனிதப் பிறவியையே பெரும் பயத்துடனும் கலக்கத்துடனும் வாழ் நாட்களை வீணடித்துக் கொண்டு வாழ்கின்றோம்.

நாம் எடுத்த பிறப்பின் பயனைப் பெறுவது என்பது நம் வாழ் நாட்களை வீண் விரயம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவது தான்…!

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு குணாதிசயத்தை ஆண்டவன் சக்தியிலிருந்து பெற்றுள்ளான். மனிதப் பிறவி எப்பொழுது எடுத்துள்ளோமோ அப்பொழுதே அந்த ஆண்டவனின் “பரிபூரண சக்தி” பெற்றவர்களாகத்தான் தாயின் கருவுக்கே வந்து உதிக்கின்றோம்.

இந்த நல்ல நிலையில் வந்தவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வாழ்ந்திடாமல்
1.பெரும் பேராசை நிலை கொண்டு பல விஞ்ஞான ரூபங்கள் எடுத்து
2.கடைசியில் தன்னைத் தானே அழிக்கும் நிலைக்கு வந்துள்ளார்கள் (இன்றைய உலக நிலை இது தான்).

விஞ்ஞான ரூபத்தில் வந்த மனிதர்கள் எல்லாம் தன்னுள் இருக்கும் சக்தியை ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டால் அவ்விஞ்ஞானத்தையே வெல்லும் மெய் ஞானத்தைக் கண்டிடலாம்.

கூடுவிட்டுக் கூடு பாய்கின்றார்கள் சித்தர்கள்… என்றெல்லாம் கதைகளாகவும் காலப்போக்கிற்காகவும் படிக்கின்றார்கள். ஆக இன்றைய மனிதர்களின் குண நிலையெல்லாம்… பெரும் உல்லாசத்தைக் காணும் குணமாகவே உள்ளது…!

கனவும் நினைவும் உள்ள காலமாக உள்ளதப்பா இந்தக் காலம்.
1.கருத்துடன் நமக்குப் பல பெரியோர்கள் போதித்த கருத்தையெல்லாம்
2.தன் உல்லாச வாழ்க்கைக்காக வியாபாரமாக்கத்தான் தெரிந்தது
3.தன்னுள் இருக்கும் உண்மை நிலைகளை வீண் விரயமாக்கி வாழ்கிறார்கள்.

“வாழும் வரை வாழலாம்…!” என்ற எண்ணம் தான் மக்களின் மனதிலே பதிந்துள்ளது. இந்த உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்ற பிறகு “அழியாத ஆத்மா” எப்படியெல்லாம் வட்டமிட்டுக் கொண்டுள்ளது…? என்று யாருமே எண்ணிப் பார்ப்பதில்லை.
1.எண்ணிப் பார்ப்பதில்லை என்றால்
2.எண்ணத்தில் பயம் வருவதால் தான் எண்ணிப் பார்ப்பதில்லை…!

இன்றுள்ள நிலையில் நமக்குத் தெரிந்த ஒரே வழி… அச்சக்தியின் நிலை கொண்டு சகல ஜீவராசிகளையும் காத்து வாழ்ந்திட… அவ் ஈஸ்வர ஜெபம் இருப்பது ஒன்றே தான்.

அச்சக்தியின் நிலை கொண்டு ஒவ்வொருவரும் இந்த உலகில் உள்ள பல கோடி உண்மை நிலைகளைத் தன்னுள் ஈர்க்க முடியும்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…! என்று நம் முன்னோர்கள் சொல்லவில்லையா…! “எந்நிலையும் ஜெயம் கொண்டு வாழ்ந்து காட்டிட வேண்டுமப்பா…!”

November 22, 2022

ஆறாவது அறிவை வைத்து நாம் உருவாக்க வேண்டியது எதை…?

மனிதனின் ஆறாவது அறிவைப் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று சொல்வார்கள். காரணம் நாம் உருவாக்கும் சக்தி பெற்றவர்கள். ஆறாவது அறிவு கொண்டு இன்று…
1.எத்தனையோ உயிரினங்களை உருவாக்கியுள்ளோம்
2.மிருக இனங்களை மாற்றியுள்ளோம்…
3.எத்தனையோ தாவர இனங்களை மாற்றி உள்ளோம்…
4.எத்தனையோ இயந்திரங்களையும் உருவாக்கி உள்ளோம்.

ஆனாலும் இந்த மனித வாழ்க்கையின் சந்தர்ப்பத்தில் உதாரணமாகக் கோப உணர்வுகளை அதிகமாக நுகர நேர்ந்தால்… அந்தக் கார உணர்ச்சிகள் நம் உடலிலே இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

அந்தச் சந்தர்ப்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் அல்லவா…!

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து அந்தத் தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கிப் பழகுதல் வேண்டும்.

அதைத்தான் ஓ…ம் என்ற பிரணவத்தை முருகன் சிவனுக்கே ஓதினான்…! என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

அதாவது…
1.கோபப்படுவோர் உணர்வுகளை நுகர்ந்தால் அது ஓங்கார உணர்வாக இயக்கினாலும்
2.அந்த ஓங்காரத்தை அடக்கிய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
3.நம் புருவ மத்தியில் எண்ணினால் கோப உணர்வுகளை இது தடைப்படுத்திவிடுகிறது.

அடுத்து அந்த உணர்வை உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
1.எங்கே நம் கண்ணின் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்கியதோ
2.மீண்டும் அதைப் பெற வேண்டும் என்று எண்ணப்படும் பொழுது அதே இடத்தில் பதிவாகின்றது
3.அந்தக் கோபம் என்ற ஓங்காரத்தைத் தடைப்படுத்தி விடுகின்றது.

நம்முடைய வாழ்க்கையில் இதற்கு முன்னாடி எத்தனையோ தீமைகள் உடலிலே சேர்ந்திருந்தாலும் எதிர்காலத்தில் வரக்கூடிய வேதனை வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் பாய்ச்சாதபடி… தனக்குள் உருவாகாதபடி… அதை எல்லாம் தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் பால் உங்கள் நினைவாற்றலைப் பெருக்குவதற்கு தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.

தியானம் என்றால் என்ன…?

திட்டியவனை நாம் மீண்டும் மீண்டும் எண்ணுகின்றோம்… அதுவும் தியானம் தான். என்னைத் திட்டினால் அவனைச் சும்மா விடுவதா… அவனை விடக்கூடாது…? என்று எண்ணினால் அந்தக் கோப உணர்வுகளை நமக்குள் அது எப்படி மீண்டும் மீண்டும் தூண்டுகின்றதோ அதுவும் தியானம் தான். இவை எல்லாம் நமக்குத் தீமை செய்யக்கூடியது.

ஆனால்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணத்தால் எண்ணி
2.நமக்குள் மீண்டும் மீண்டும் எடுத்து வளர்த்துக் கொண்டால் இந்தத் தியானம் நமக்குள் பல நன்மைகளைச் செய்கின்றது.

குருநாதர் அனைத்தையும் அறிந்தார்… அவருக்குள் விளைய வைத்தார்… எனக்குள் பதிவு செய்தார். குரு காட்டிய அருள் வழியில் நான் எனக்குள் விளைய வைத்தேன் உங்களுக்குள் அந்த நல்ல ஞான வித்தைப் பதிவாக்குகின்றேன்.

இந்தப் பதிவை நினைவாக்கினால் உங்கள் ஞானத்தால் தீமைகளைப் போக்க முடியும். உங்களைக் காத்துக் கொள்ள முடியும் யாரோ செய்வார் எவரோ செய்வார் என்று எண்ண வேண்டாம்.

ஆகவே ஆறாவது அறிவால் உங்களுக்குள் ஒளியான உணர்வுகளை உருவாக்க முடியும்.

மனிதன் என்ற உண்மையைத் தெரிந்து கொண்ட இந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் தெளிந்து வாழலாம்.

இவ்வுலகில் வீணாகவும் உபயோகமற்றதாகவும் எதுவும் இல்லை

இன்று உலகினிலே பல வகையான ஜீவராசிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தன் நிலைக்கு ஏற்பச் சுவாச நிலையை எடுக்கின்றது.

1.மனிதரின் சுவாச நிலை தான்
2.எல்லாத் தன்மையையுமே தன் சுவாசத்தில் ஈர்க்கும் நிலையில் உள்ளது.

மனிதனின் சுவாச நிலை அவன் ஒவ்வொரு எண்ணம் கொண்டும் எண்ணிடும் பொழுது அந்நிலையில் அவன் எடுக்கும் சுவாச நிலையைப் பொறுத்து அவன் வாழ்கின்றான்.

இவ்வுலகினிலே நாகப்பாம்பைப் போல்
1.நச்சுத் தன்மையுள்ள கொடிய விஷத்தைத் தன்னுள் ஈர்த்து எடுத்திடும் ஜீவராசிகள் இல்லாவிட்டால்
2.இந்தக் காற்றில் கலந்துள்ள கொடிய விஷங்கள் எல்லாம் பெரும் தீங்கைத் தான் விளைவித்திருக்கும்.

அவ் ஈசனின் சக்தியிலிருந்து நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் தெரிந்திடாமல் பல வகை உண்மை நிலைகள் உள்ளன. எல்லாமே அவ்வீசனின் சக்தியில் வந்தவை தான்.

ஒவ்வொரு தாவரமும் ஒவ்வொரு நிலையில் உற்பத்தியாகி வளர்ந்திருக்கின்றன. தாவரங்கள் எல்லாம் அதனதன் சுவாச நிலை மேல் நோக்கி அந்தச் சூரியனின் சக்தியை நேராக ஈர்க்கும் நிலையில் உள்ளன.

பல வகைத் தாவரங்களிலும் பல வகை நல்ல உணவாகவும் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அமையப் பெற்றுள்ளன.

நாம் எண்ணுகின்றோம். உபயோகமில்லாமல் இப்படி ஏன் பல வகைத் தாவரங்கள் உள்ளன என்று…? அச்சக்தியின் அருள் பெற்றுத் தான் அவையும் வளர்கின்றன… நல்ல கனி கொடுக்கும் தாவரங்களும் வளர்கின்றன.

அந்தக் கொடிய விஷமுள்ள தாவரங்கள் எல்லாம் இல்லாவிட்டால் இந்தக் காற்றிலிருந்து இன்னும் பல தீய நஞ்சு கலந்த அணுக்கள் தான் சுற்றிக் கொண்டிருக்கும்.
1.அந்த விஷ அணுக்களையே உண்டு உயிர் வாழும் தாவரங்கள் இருப்பதால் தான்
2.நம்மைச் சுற்றியுள்ள இந்தக் காற்றையே சுத்தமாக்கி நாம் சுவாச நிலைக்கு ஈர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த உலகில் தோன்றியவை எதுவுமே வீணாகவும் உபயோகமற்றதாகவும் தோன்றவில்லை.
1.ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தன் சுவாச நிலையைக் கொண்டு தோன்றி
2.இந்த உன்னதமான உலகத்தைப் பல கோடி ஆண்டுகள் காத்து வருகின்றது.

இன்றைய உலகத்தில் விஞ்ஞானம் என்ற பெயரால் பல வினைகளைச் செய்து… தன்னையே தான் அழித்துக் கொள்ளும் இந்த மனிதரின் நிலைகள் எல்லாம்… இன்னும் ஜீவனுடன் உயிர் வாழ்கிறதென்றால் எந்நிலையில்…?

1.நச்சுத் தன்மையைத் தானே உண்டு வாழும் நாகப் பாம்புகளும்…
2.நச்சுடன் நச்சாக வளர்ந்து பெரும் விஷத் தன்மையுள்ள நாம் சொல்லும் செடி கொடிகளும் இல்லாவிட்டால்…!
3.இன்று வீசும் காற்றே பெரும் விஷமுள்ளதாக வீசி எந்த ஜீவராசிகளுமே உடலுடன் வாழ்ந்திட முடிந்திருக்காதப்பா…!

இந்த நச்சுத் தன்மை பாம்பிலும் தாவரங்களிலும் தான் உண்டு என்று இம்மனிதர்கள் எண்ணுகின்றார்கள். இவை எல்லாம் நமக்கு நன்மையைத்தான் அளிக்கின்றன.

இம்மனிதனாக வாழ்வதற்கு மாபெரும் தவமிருந்து நமக்கு அந்தச் சூரியனிலிருந்து பல ஜென்மங்கள் எடுத்து பெரும் வாழ்க்கையை வாழும் பாக்கியம் பெற்ற நாம் “நம் மனதையே விஷமாக்கி வாழ்கின்றோம்…!”

இந்த மனித உடலைப் பெற்று வாழ்வதுவே நாம் செய்த பாக்கியம் தான். இந்தப் பாக்கியம் பெற்ற நாம் இந்த மனித உடல் உள்ள பொழுதே நாம் பிறவி எடுத்த பயனைப் புரிந்து “நம் மனதையே நல் மனதாக்கி வாழ்ந்திட வேண்டும்…!”

பிறவி எடுத்த புனிதத் தன்மையைப் போற்றிக் காத்து எவன் ஒருவன் வாழ்கின்றானோ… அவனெல்லாம் அச்சக்தியின் சக்தி பெற்ற… நம்முள் கலந்துள்ள பல தேவர்களின் தேவர்களைக் கண்டிடலாம்.

1.அந்தத் தேவர்களின் தேவர்களாகவும் நாம் ஐக்கியப்பட்டு
2.நம் உடலை விட்டு நம் ஆத்மா செல்லும் நிலைக்குள் சகல நிலையையும் பெற்றிடும் பாக்கியம் பெறத்தான்
3.இந்தப் பாட நிலையெல்லாம் அளிக்கின்றேன்.

November 21, 2022

ருத்ர தாண்டவம்...

உதாரணமாக கோப குணத்தை நாம் நுகர்ந்து விட்டால் உடலுக்குள் என்ன நடக்கிறது...?

ஒரு மிளகாயை வாயிலே போட்ட பின் நாம் எப்படி அலறுகின்றோமோ இதைப் போல் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களில் அதே உணர்ச்சிகளைத் தூண்டும்.

அதைத் தாங்காத நிலைகள் கொண்டு அந்தக் கார உணர்வுகள் அதிகமானால் இந்த அணுக்கள் அந்தக் காரத்தையே ஏற்று காரமான மலத்தை அது வெளிப்படுத்தும் தன்மை வருகிறது.

இப்படி நமது வாழ்க்கையில் சாந்தத்துடன் ஞானத்துடன் விவேகத்துடன் வாழ்ந்து வந்தாலும்
1.கோபத்தின் உணர்வு கொண்டு கோப (கார) உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கப்படும் பொழுது
2.நரம்பு மண்டலங்களில் அதனுடைய இயக்கம் நாளுக்கு நாள் சேர்ந்து இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது
3.அப்பொழுது நம்முடைய உடல் அங்கங்களைச் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இந்த உணர்வின் அழுத்தங்கள் அதிகமாகி விட்டால் அந்த உணர்ச்சிகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றி... இந்த உணர்வின் இயக்கம் நரம்பு மண்டலங்களில் மாற்றப்படும் பொழுது “கை கால் அங்கங்களைச் சுருக்கி விடுகின்றது...”

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் அந்தக் கோப குணம் உடலை எப்படிப் பாதிக்கின்றது என்பதைக் காட்டுவதற்காகக் காளிக்கு முன் புலியைப் போட்டுக் காட்டியுள்ளனர் ஞானிகள்.

புலி எப்படி இரக்கமற்று மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிடுகின்றதோ அதே போல
1.பிறிதொருவர் மீது வெறுப்புகள் வரப்படும் பொழுது
2.அந்தக் கார உணர்வுகளைச் சுவாசிக்கப்படும் பொழுது
3.சிந்தனை அற்றவனாக ஆக்கி வெறித் தன்மை கொண்டு இயக்கப்பட்டுவிடுகிறது.

நண்பனாகப் பழகினாலும் கூட தான் எண்ணிய வழி அவன் சரியான நிலைகளில் வரவில்லை என்றால் ஆத்திரங்கள் அங்கேயும் வருகின்றது.

ஆத்திரம் அதிகரிக்கப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது. யாரைப் பார்த்து இந்த உணர்வைச் சேர்க்கின்றோமோ “தாக்க வேண்டும்...” என்ற உணர்வுகளை உண்டாக்கிடுகின்றது.

ஆனால் வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன நடக்கின்றது…?

தாக்குபவனின் உணர்வுகளும் தாக்கப்பட்டவனின் உணர்வுகளும் அங்கே அவர்களுக்கு முன்னாடி இருக்கின்றது. அந்தக் கார உணர்ச்சிகள் உயிரிலே மோதினால் அது நம் உடலில் காளியாக மாறுகின்றது.

உயிரிலே மோதப்படும் போது அதே வேக உணர்வுகள் மோதியவுடனே உடலை இயக்கத் தொடங்கி விடுகிறது. இதைத்தான் “சிவன் - ருத்ர தாண்டவம் ஆடுகிறான்...” என்று காட்டினார்கள்.
1.ஆக… நாம் ஆடுகின்றோமா...!
2.நாம் நுகர்ந்த உணர்வு நம்மை ஆட்டுவிக்கின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தாக்கப்படுபவன் நண்பனாக இருக்கும் பட்சத்தில்... அவன் மீது அன்பைச் செலுத்தி அவன் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் அவன் படும் வேதனை நம்மை இயக்குகின்றது. ஆஅனால் வேதனை என்பதே விஷம்.

நண்பனைத் துன்புறுத்தும் உணர்வு கொண்டு எதிராளி தாக்குகின்றான். நண்பனின் வேதனையை நுகர்ந்து விஷத்தின் தன்மை உடலுக்குள் சென்று விட்டால் நமக்குள் என்ன நடக்கிறது...?

காற்று மண்டலத்தில் சில செடி கொடிகள் விஷத்தின் தன்மை கொண்டதாக இருக்கும். அந்தச் செடி கொடிகள் உமிழ்த்தும் மணங்கள் காற்றில் கலந்து வருவதை நாம் சுவாசித்தால் நமக்கு மயக்கம் வருகின்றது.

அதைப் போல் நண்பனின் வேதனையை நாம் சுவாசித்தவுடன் உடல் முழுவதும் பரவி சிந்தனை இழக்கச் செய்து விடுகின்றது.

சிந்தனை இழந்த பின் யார் மீது பற்று இருக்கின்றதோ அவனைத் தாக்குவோர் மீது எதிர் நிலையாகி “அவரைத் தாக்க வேண்டும்...” என்ற வேக உணர்வு வருகின்றது.

வேதனை வரும் பொழுது “முதலில்” சிந்தனையை இழக்கச் செய்கின்றது... சோர்வடையச் செய்கின்றது. ஆனால் கார (கோப) உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது விஷமும் கார உணர்வுகளும் வேக நிலையில் கலந்து ஏதிராளியைத் தாக்கும் உணர்ச்சிகளே நமக்குள் கூடுகின்றது.

நாம் தவறே செய்யவில்லை என்றாலும் நண்பருடைய நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது இதைப் போன்ற நிகழ்ச்சிகள் தான் வாழ்க்கையில் நடக்கின்றது.

நமக்கு வேண்டியவரை ஒருவர் தாக்கி விட்டால் நமக்கு எப்படி இருக்கும்…? வேதனைப்படும்போது அலறுகின்றோம். ஏன் எப்படி என்று நமக்குத் தெரிவதில்லை..! ஆனால் தாக்கிவிட்டான் என்று அடுத்தவன் மீது கோபப்படுகின்றோம்.

இப்படி... நமது வாழ்க்கையில்
1.நாம் தவறு செய்வதும்...
2.நாம் தவறு செய்யாமல் இருப்பதும்...
3.நம்மைத் தவறு செய்ய வைப்பதும்... “பிறருடைய நிலைகளை வைத்துத் தான்...”

இந்த உணர்வுகள் அணுக்களாக மாறி விட்டால் உணர்ச்சிகளைத் தூண்டிக் கண் வழி கவர்ந்து உயிரிலே மோதி இந்த உணர்ச்சிகள் உமிழ் நீருடன் கலந்து இரத்தத்திலே கலந்து விடுகின்றது... தீமைகளாக விளைகின்றது.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா…!

சித்தர்களின் சுவாச நிலை போல் நம் சுவாச நிலையும் இருத்தல் வேண்டும்

1.நம் எண்ணத்தில் பல நினைவுகளைச் சிதறடித்துக் கொண்டு நாம் சுவாசம் எடுக்கும் பொழுது
2.அந்நிலை தான் நம் எண்ணத்தையும் சுவாசத்தையும் ஒருநிலைப்படுத்தி
3.பல அணுக்களின் உந்துதலுக்கு நாம் ஆளாகி
4.மீண்டும் மீண்டும் பல பல எண்ணங்களை எண்ணியே
5.நம் சுவாச நிலையைக் கெடுத்துக் கொள்கின்றோம்.

நாம் எந்த நிலையில்… எந்த நினைவில் இருக்கின்றோமோ… அந்நிலையில் எண்ணும் எண்ணத்தை வைத்து நாம் சுவாசம் எடுக்கும் பொழுது “அந்நிலையேதான்…” வாழ் நாட்களில் நம்முடன் கூட வருகின்றது.

1.அவ்வாண்டவனை நினைத்துச் சுவாசம் விடும் பொழுது
2.அந்தச் சுவாச நிலை கொண்டு நம் உயிரணுவிற்குப் பெரும் உன்னத நிலை கிட்டுகின்றது.

ஆனால் அந்நிலையை நாம் புரிந்திடாமல்…
1.நம் வாழ்க்கையையே
2.நாம் நம்மையையே நாம் அடிமையாக்கிக் கொள்கின்றோம்.
3.அசுத்த சுவாச நிலை என்பதன் பொருளும் இது தான்.

நம் எண்ணத்தைக் கொண்டு தான் நம் சுவாச நிலையில் பலவித நறுமணங்கள் பெற முடிகிறது. நல்ல மணமுடைய சுவாச நிலையில் உள்ள பொழுது நம் உயிர் நிலைக்குப் பெரும் ஊட்டம் கிடைக்கின்றது.

நாம் வாழ்வதுவும் மடிவதுவும் நம் எண்ணத்தைக் கொண்டு தான்…!

இந்நிலையைப் புரிந்து கொண்டு இந்நிலையில் இருந்து தான் பல கோடிச் சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள்.

1.வாழும் வாழ்க்கையில் நிறைவு பெற்று வாழும் பொழுது
2.அச்சித்தர்களின் நிலையைப் போல இந்த மனித உடலைப் பெற்ற நாம் எல்லோருமே பல கோடி ஆண்டுகள் வாழ்ந்திடலாம்.
3.உயிர் என்னும் ஆத்மாவிற்குப் பெரும் நிலையைத் தேடிடலாம்.

November 20, 2022

நம்மால் மற்றவர்கள் தீமைகள் அகல வேண்டுமே தவிர… அவர்கள் தீமைகள் நம்மை மாற்றிவிடக் கூடாது

கோடிக் கோடி சொத்துக்கள் தேடி வைத்தாலும் பொறாமை உணர்வு வந்து… “அவன் அப்படிச் செய்கின்றான்… இவன் இப்படிச் செய்கிறான்…!” என்று விரோதிகளைத் தான் நாம் வளர்த்துக் கொள்கிறோம்… பகைமைகளைத் தான் உருவாக்கிக் கொள்கின்றோம்.
1.பகைமை உணர்வுகளை உடலுக்குள் சேர்த்துப் பகைமை உணர்வோடு தான் வாழ்கின்றோம்
2.துடிப்பும் துயரமும் தொல்லையும் தான் நம் உடலுக்குள் வருகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.

வெளியிலே சென்றாலும் எத்தகைய துயரங்களைக் கேட்டாலும் தீமைகளைப் பார்த்தாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதனின் வலுவை வைத்து அவைகளை அடக்கிப் பழக வேண்டும்.

யார் மேல் பகைமை ஆனதோ… அறியாத இருள்களிலிருந்து அவர்கள் மீள வேண்டும்… பொருளறிந்து செயல்படும் தன்மை பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் உடலில் படர்ந்து அவர்கள் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஆக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்… அவர்கள் உடல் நோய்கள் நீங்க வேண்டும்… தொழில் வளம் பெருக வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.

தொழில் செய்யும் இடங்களில் குற்றம் குறைகள் இருந்தாலும்
1.ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து
2.அவர்களும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.உண்மையின் உணர்வை அறிய வேண்டும்
4.அவர்கள் தெளிந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணி நாம் இதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.

தொழில் செய்யும் இடங்களில் ஒருவருக்கொருவர் வரும் பகைமைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றாலும் “ஈஸ்வரா…” என்று எண்ணி… துருவ நட்சத்திரத்தின் நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் சக்தி அந்தக் குழந்தை உடல் முழுவதும் படர வேண்டும் அது உடல் நலம் பெற வேண்டும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள்.

முதலில் அந்தச் சக்தியை எடுத்து வலுவாக்கிக் கொண்ட பின் அங்கே பாய்ச்ச வேண்டும்… நோய் அகலும்.
1.உங்களால் அவர்கள் நோய் போக வேண்டும்
2.அவர்கள் நோய் உங்களுக்கு வரக்கூடாது.

அதற்குத்தான் இந்த அருள் வாக்குகளைக் கொடுத்து ஒவ்வொரு நொடியிலும் உங்களுக்குப் பாதுகாப்பான நிலைகள் கிடைக்கும்படி செய்கின்றோம் (ஞானகுரு). உலக விஷத்தன்மைகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்கும் இது உங்களுக்கு உதவும்.

முன் ஜென்மத் தொடர்ச்சி தான்… இன்றைய வாழ்க்கை

பிறவி எடுத்து நம் பிறவியில் நமக்கு வரும் குணாதிசயங்கள் எல்லாம் ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் சொல்வதைப் போல்
1.நாம் பிறக்கும் நாளைக் கொண்டோ
2.பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டோ வருவதல்ல அந்தக் குண நிலைகள் எல்லாம்…!

இந்தக் குண நிலைகளின் உண்மை நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் வருவது அவன் முதல் பிறவியில் செய்ததின் தொடர்ச்சி தான்… இந்தப் பிறப்பில் நாம் சாந்தமாக உள்ளதும் கோப நிலையில் உள்ளதும் மற்ற எல்லாமே.

வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குண நிலையில் வாழ்கின்றோம். எல்லோரும் ஒன்றாக நினைப்பது அவ்வாண்டவனின் சக்தி ஒன்றைத்தான்.

குண நிலையில் பல மாற்றங்கள் இருந்தாலும் அவ்வாண்டவனின் சக்தியை ஒரே நிலையில் எப்படி வணங்குகின்றோமோ அந்நிலையிலேயே எல்லோரும் வாழ்ந்திடலாம்.

1.ஒருவர் கோபக்காரராக இருந்தால் அந்தக் கோப நிலை முதல் ஜென்மத்தின் தொடர்ச்சி தான்.
2.சாந்தமுள்ளவராக இருப்பதும் முன் ஜென்மத்தின் எண்ணத்தை வைத்துத்தான் அமைகிறது.

முன் ஜென்மத்தின் தொடரிலேயே இப்பொழுது பிறவிக்கு வந்தாலும் இந்த ஜென்மத்தில் நாம் வாழும் வாழ் நாட்களை வீண் விரயமாக்கிடாமல் வாழ வேண்டும்.

அந்த வினைப்பயன்கள் எல்லாம்
1.நாம் பிறந்த நேரம்…
2.நாம் செய்த பாவ புண்ணியங்கள்… என்று தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.

இப்பொழுது வாழ்ந்திடும் வாழ் நாட்களில் நம் எண்ணத்திலும்… நம் சுவாசத்திலும் அந்த மகரிஷிகள் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து வாழ்ந்து சுவாசத்தைச் சீராக்கி அருள் மணங்களை நம் சுவாச நிலைக்குக் கொண்டு வந்து வாழ்ந்திட வேண்டும்.

இந்தப் பிறவியில் இதை அதிகமாக வளர்க்கும் பொழுது நம்முடைய நாளைய சரீரம் அது ஒளியின் சரீரமாக அமையும்.

November 19, 2022

இந்த உடலைக் கழட்டிவிட்டு விட வேண்டும்

இன்றைய சூழ்நிலையில்... வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து எடுத்துப் பழக வேண்டும். தனுஷ்கோடி...! அருள் உணர்வுகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

காரணம்... நாம் கோடிக்கரையில் (மனிதப் பிறவியின் கடைசியில்) இருக்கின்றோம். இதை விட்டுச் சென்றால்
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்கின்றோம்
2.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.
3.“உடலைக் கழட்டிவிட்டு விடுகின்றோம்...!”

ஏனென்றால் இந்த உடலிலிருந்து மீண்டும் இன்னொரு உடல் பெறுவதற்குப் பதிலாக இந்த உடலில் இருக்கும் பொழுதே உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக மாற வேண்டும்.

இன்றைய உலகில்
1.விஞ்ஞான வழியில் எத்தனையோ கடும் விளைவுகள் வந்து கொண்டிருக்கின்றது
2.விஷமான உணர்வுகளும் பரவிக் கொண்டுள்ளது
3.”புதிய புதிய வைரஸ்களும்” அதிக அளவில் பரவிக் கொண்டே உள்ளது.

தீமையான உணர்வுகளை வளர்க்கும் சில குடும்பங்களிலோ ஊர்களிலோ இது அதிகமாகப் பரவுகின்றது. ஒருவருக்கொருவர் சண்டையிடுவதும்... வேதனைப்படுவதும்... மந்திர ஜாலங்களைச் செய்வதும்... மாயாஜாலங்கள் செய்து அது நடக்கவில்லை என்றால் சாப அலைகள் விடுவதும்... அதன் மூலம் சாபமிட்ட ஆன்மாக்கள் வெளியேறி... எல்லை கடந்து செல்லப்படப் போகும்போது அந்தத் தெருக்களிலே பல தொல்லைகளும் துயரங்களும் அங்கே வாழும் மக்களுக்கு ஏற்படுகின்றது.

அதிலிருந்தெல்லாம் மக்களை மீட்டிடும் சக்தியாக நாம் செயல்படுத்த வேண்டும். ஆகவே... எல்லோரும் அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தைக் கடைபிடிப்போம்.
1.அவரவர்கள் வீட்டிலும் தெருவிலும் ஊரிலும்
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைப் பரப்புவோம்.

ஒவ்வொரு உயிரும் கடவுள் என்றும் ஆண்டவன் என்றும் ஈசன் என்றும் அவன் வீற்றிருக்கும் ஆலயம் அந்த உடல் என்றும் நமது குருநாதர் காட்டிய வழியில் அதைத் தூய்மைப்படுத்துவோம். உடலான அந்த ஆலயத்தைச் சுத்தப்படுத்துவோம்.

மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களுக்கெல்லாம் அருள் உணர்வுகள் கிடைக்கப் பெற வேண்டும் என்று பரப்பி... மக்கள் அதைப் பெறும்படி செய்வோம்... அவர்களை மகிழ்ந்து வாழச் செய்வோம்.

அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ந்த உணர்வைக் கண்டு நாம் சந்தோஷப்பட வேண்டும். ஏனென்றால் அந்த மகிழ்ந்திடும் உணர்வு நமக்குக் கிடைக்கின்றது.

1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவர்கள் உடலை ஆலயமாக மதித்து
2.அவர்களுக்குள் அறியாது சேர்ந்த குறைகள் நீங்கி அருள் உணர்வுகள் பெருக வேண்டும் என்று எண்ணி
3.இந்த வழிப்படுத்தி நாம் வாழ்ந்தாலே போதுமானது... என்றுமே அந்த உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

கோடிக்கரையில் இருக்கும் நாம் தனுசுக்கோடியாக உணர்வுகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து ஒளியின் உணர்வாக மாற வேண்டும். எதிலுமே இருள் என்ற நிலைகள் வராதபடி ஒளியாக மாற்றிடும் சக்தி பெற அந்த முயற்சியை நாம் எடுப்போம்.

நாம் இந்த உடலில் வாழும் காலத்தைக் காட்டிலும் ஆவி உலகில் தான் அதிக காலம் வாழ நேருகிறது

இந்த உலகில் தோன்றிய மனிதர்கள் தன் எண்ணத்திலும் சுவாசத்திலும் பல துவேஷங்களையும் ஆசைகளையும் வளர்த்து
1.நாம் இருக்கும் காலம் வரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாம்…
2.இறந்த பின் நமக்கு என்ன தெரிகிறது…? என்ற மனப்பான்மையிலே தான் ஊறி வாழ்கிறார்கள்.

நாம் இறந்த பிறகு தான் நம் ஆத்ம நிலை நாம் இந்தப் பூமியில் வாழ்ந்த நாட்களைக் காட்டிலும் “அதிகக் காலங்கள்” ஆவி உலகில் சஞ்சரிக்கின்றது.

பூமியில் வாழ்ந்த காலங்களை வைத்தே அவ்வெண்ணத்தில் ஒரு சிறு அணுவும் தான் விட்ட சுவாச நிலை மாறிடாமலே சுற்றி வருகின்றது.

தன் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த உடல் கிடைக்கும் நாள் வரை
1.எந்த ஆசையில் இந்த உடலை விட்டு ஆவி பிரிந்ததோ அந்த ஆசை நிலை கொண்டே
2.பல நூறு வருடங்களும் தன் எண்ணத்திற்கு ஏற்ற பிறப்பிடம் கிடைக்கும் நாள் வரை இருந்து தான் பிறக்கிறது.

நாம் நம் தாய் தந்தையரை முதலில் வணங்குவதும் இந்நிலை வைத்துத்தான். முதல் ஜென்மத்தில் விட்ட குறையை வைத்து ஆவி உலகில் பல காலம் சஞ்சரித்து
1.நம் எண்ணத்தைச் செயல்படும் இடமாக வந்து சேருமிடம் தான்
2.நம் முதல் தெய்வமாக வணங்குவதின் உண்மை நிலையும் அதுவே.

யாரும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோருமே அந்த ஆண்டவனின் சக்தியில் அச்சூரியனின் சக்தியில் வந்து உதித்த தனித் தனி பிம்பங்கள் தான்.

1.நாம் பல பிறவிகள் எடுத்து
2.ஒவ்வொரு பிறவியிலும் பல வகைச் சொந்தங்களை அடைந்து
3.”சொந்த பந்தங்களுடன் வாழ்கிறோம்…” என்பதல்ல சொந்தமும் பந்தமும்…!

எல்லோருக்குமே ஒரே சொந்தம்… “அவ்வாண்டவனின் சக்தி தான்…!”

சொந்தம் பந்தம் எல்லாம் கூடும் நாள் ஒரே நாள்… அவ் ஈஸ்வர சக்தியில் இருந்து இம்மனித வாழ்க்கையில் வாழ்ந்துவிட்டு.. நிறைவுடன் வாழ்ந்து விட்டு.. அந்தச் சூட்சம உலகிற்குச் சென்றிடல் வேண்டும்.

அங்கே சென்று அந்நிலையில் சகல நிலையையும் பெறும் பாக்கியம் பெற்று… அந்த சப்தரிஷிகளின் சக்தியுடன் சக்தியாகக் கலந்து
1.இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சித்தர்கள் ஞானிகள் இந்நிலை உள்ளவர்களுடன் நாமும் கலந்து
2.அவர்களுடன் வாழும் நாட்கள் தான் நாம் சொந்த பந்தங்களுடன் வாழும் வாழ் நாட்கள்.

November 18, 2022

நம்முடைய ஒவ்வொரு குணத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒரு பாதுகாப்புக் கவசமாகச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்

அகஸ்தியன் உண்மையான நிலைகள் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றியவன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக ஆனவன்.

யார் ஒருவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளைப் பெறுகின்றார்களோ அவர் வாழ்க்கையில் வரக்கூடிய இருளான நிலைகளை ஒவ்வொன்றாக… அடுக்கடுக்காக… ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

அதற்குத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இதை யாம் (ஞானகுரு) ஞாபகப்படுத்துவது. கஷ்டமோ நஷ்டமோ துன்பமோ துயரமோ எதைப் பார்த்தாலும்… அல்லது நுகர்ந்தாலும்…
1.அடுத்த நிமிடம் அந்தத் தீமைகள் உடலுக்குள் புகாதபடி ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் எண்ணி நிறுத்திவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்…
3.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை முந்தி
4.இந்த உணர்வுகளை உடலுக்குள் வலுவேற்றிக் கொள்ள வேண்டும்.

இப்படி வலு ஏற்றியவுடன் தீமைகளைப் பிரித்து விடுகிறது.

அடுத்து நாம் எந்தத் தீமை செய்வோரைப் பார்த்தோமோ… அவர்கள் அறியாத தீமையிலிருந்து விடுபட வேண்டும்… பொருளறிந்து செயல்படும் சக்தி அவர்கள் பெற வேண்டும்… என்று இந்த உணர்வைச் சேர்த்துக் கொண்டோம் என்றால் “புதிய உணர்வின் அணுக்களாக” நமக்குள் உருவாகின்றது.

ஒவ்வொரு உடலிலும் எத்தனையோ விதமான நிலைகள் இருந்தாலும் நாம் அந்த அருள் ஒளியைக் கூட்டிப் பேரொளியாக மாற்றுதல் வேண்டும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும்… தன்னைக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைப் பார்த்துச் சுவாசித்து… ஒன்றை ஒன்று கொன்று தின்று மற்றதுக்கு இரையாகி… வலிமையான உடலுக்குள் சென்று தான் பரிணாம வளர்ச்சிக்கு வந்தது.

ஆனால் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்து வந்திருந்தாலும் விஷத்தின் தன்மை கூடி தேய்பிறையாகும் நிலையில் இருந்து மாற வேண்டும் என்றால்
1.அந்த அருள் ஞானத்தின் உணர்வை
2.ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு குணத்திலும் நாம் சேர்த்துச் சேர்த்து
3.நாம் இந்த உடல்களில் அதை நன்மை செய்யும் சக்தியாக மாற்றி மாற்றி
4.எல்லாவற்றையும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

எதன் வழி கொண்டு…?

நம் உயிரின் துணை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் பாய்ச்சி… தீமை செய்யும் உணர்வுகளை மாற்றி… தீமைகள் வராது தடுக்கக்கூடிய கவசமாக “ஒவ்வொரு குணத்திலும் அதைச் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்…”

அப்பொழுது அது நம்மை காக்கக்கூடிய உணர்வாக வரும்.

மண்ணுடன் மண்ணாகும் மாய வாழ்க்கை… வேண்டாம்

சூரியனின் சக்தியிலிருந்து ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா ஜீவ அணுக்கள் தோன்றித் தோன்றி மறைகின்றன.
1.ஒவொரு ஜீவராசியும் எந்த நிலை கொண்டு ஜீவன் பெற்றதோ
2.அந்நிலையில் அந்த ஜீவராசிகள் எண்ணம் ஈடேறியவுடன்
3.அதனுடைய ஜீவ உடலைப் பெற்ற நிலையும் மாறிவிடுகின்றது.

அதே போல் தான் பறவைகள் மிருகங்கள் மனிதர்கள் எல்லோருடைய நிலையும் உள்ளன.

மனிதர்களுக்கு… மனிதன் ஜீவன் பெற்ற நாளிலிருந்து தாயின் கருவில் எப்படிப் பத்து மாதங்கள் இருந்து பிறக்கின்றதோ அந்நிலை வைத்து மனிதனின் சராசரி ஆயுட்காலமும் உள்ளது. யானையின் ஆயுட்காலம் கருவில் இருபது மாதங்கள் இருந்து அதனுடைய சராசரி ஆயுட்காலமும் கூடி இருக்கின்றது.

இப்படி ஒவ்வொரு மிருகத்தின் நிலையும் கழுதைக்கு ஏழு ஆண்டுகள் கோழிக்கு இரண்டு ஆண்டுகள் நாய்க்கு பதினாறு ஆண்டுகள் இப்படிப் பறவைகள் நிலையிலும்
1.அவை அவை எத்தனை நாட்கள் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றனவோ
2.அந்நிலை கொண்டு தான் அதனதன் ஆயுட்காலமும் உள்ளன.

உங்கள் எண்ணத்தில் மனிதர்கள் ஏன் ஆறு ஆண்டுகளும் வாழ்கிறார்கள்… அறுபது ஆண்டுகளும் வாழ்கின்றார்கள்…? என்று எண்ணக்கூடும்.

அற்ப ஆயுளில் ஜீவன் பிரிவதெல்லாம் அவரவர்கள் எண்ணத்தைக் கொண்டு தான்…!

ஆனால் இந்த மனித உடல்களுக்கு மட்டும் தான் அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து அழியா உடலையும் அழியா உயிரையும் அவ்வாண்டவனின் சக்தியில் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்நிலை பெற்ற நாம் எல்லோரும்
1.அந்த ஆண்டவனின் சக்தியை அந்த நிலையில் நாம் பேணிக் காத்து
2.இந்த உலகில் நாம் உதித்ததையே அழியாச் செல்வமாக்கி
3.நாம் சேர்த்திடும் ஒரே சொத்து… உன்னதமான சொத்து… நம் உயிராத்மாவுக்கு அளிப்பது தான்…!

அந்தச் சூரியனின் சக்தியிலிருந்து பல ஒளிக்கதிர்கள் நம் பூமியைத் தாக்கிப் பெற்ற செல்வங்கள் தான் இன்றைய உலகில் உள்ள எல்லாமுமே…!

அந்த இயற்கையிலிருந்து தான் செயற்கையையும் செய்கின்றோம். அந்தச் செயற்கை அழிந்தாலும் இயற்கையுடன் தான் கலக்கின்றது.

இந்தப் பூமியில் உள்ள
1.இயற்கைத் தன்மையும்…
2.செயற்கைத் தன்மையும்…
3.நம் உடல்..
4.நாம் சேர்த்த பொருள் எல்லாமுமே
5.மண்ணுடன் மண்ணாகத் தான் ஆகின்றது.

அழியாச் செல்வமான நம் ஆத்மா மட்டும் தான் ஆண்டவனிடம் ஐக்கியமாக முடியும். ஆகவே
1.மண்ணுடன் மண்ணாகும் இந்த உடலுக்காகவும் பொருளுக்காகவும் வாழாமல்
2.வாழ்வாங்கு வாழச் செய்யும் உயிராத்மாவை ஆத்ம ஜோதியாக்குவோம்…!

November 17, 2022

நல்லதைச் செய்தாலும் “அதைத் தடைப்படுத்துகின்றார்களே...” என்று எண்ணினால் இரு மடங்கு வேதனையாகிவிடும்

தியானம் செய்து நல்லதையே வளர்த்துக் கொண்டு வரும் பொழுது ஒருவன் கடுமையான தவறு செய்தால் எப்படி நினைக்கின்றோம்...?

1.நான் இவ்வளவு நல்லது செய்து கொண்டிருக்கின்றேன்...
2.இப்படித் தவறு செய்கின்றானே...! என்று “இரண்டு மடங்கு” வேதனைப்படும் நிலைகள் வந்து விடுகின்றது.

அதாவது... தியானம் செய்து நல்ல உணர்வுகளை வளர்த்துக் கொண்டு வந்தாலும்... வேதனைகளை வளர்த்துக் கொள்ளும் ஆயுள் மெம்பராக இணைந்து விடுகின்றார்கள்.

ஆனால் வாழ்க்கையில் வரும் வேதனைகளை நீக்கும் நிலைகளுக்குத் தான் இங்கே உபதேசம் கொடுக்கின்றோம்.
1.நல்லதைச் செய்தாலும்... தர்மத்தைச் செய்தாலும்
2.எத்தனையோ பல நன்மைகளைச் செயல்படுத்த வேண்டும் என்று செயல்பட்டாலும்
3.வாழ்க்கையின் நிமித்தம் இடையில் வரக்கூடிய தவறுகளையும் தீமைகளையும் வேதனைகளையும் சுத்தப்படுத்தும் நிலைக்கு வர வேண்டும்.

பரிவு கொண்டு பண்பு கொண்டு பிறரைக் காக்கும் நிலை இருந்தாலும் வெறுப்பு வேதனை என்ற உணர்வுகளை எடுத்து நம்மையே படுபாதாளத்திற்குத் தள்ளும் நிலையாக வந்து விடுகிறது.

அது போன்று ஆகாதபடி தடுப்பதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். அந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.

திட்டியவனை மட்டும் இப்படித் திட்டினான்... திட்டினான்... என்று நினைவுக்குக் கொண்டு வருகின்றோம். அப்பொழுது அது கோப உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.

அந்த நேரத்தில்
1.நம் குழந்தை ஏதாவது அழுதால் கூட “போடா நாயே...” என்று திட்டும்படி செய்யும்.
2.யாராவது நல்லது செய்தால் அட போய்யா...! என்று கோபமாகப் பேசும்படி வரும்... ஆக நல்லது செய்தாலும் கூட வெறுப்போம்.

என்ன இவர் இப்படிச் சீறிப் பாய்கிறார்...? என்று அவர்கள் நினைப்பார்கள்.

வேலை செய்யும் இடங்களிலே “மேலதிகாரி” தன்னிடம் வேலை செய்பவர்களை இது போன்று கடுமையாகத் திட்டினால் அது பய உணர்ச்சிகளைத் தூண்டி அவர்கள் சிந்திக்கும் வலுவை இழக்கச் செய்யும். கடைசியில் தவறு செய்யும் நிலையில் கொண்டு போய் விட்டுவிடும்.
1.நீங்கள் அதிகாரியாக இருந்து உங்களிடம் வேலை செய்பவர்களை மிரட்டிப் பாருங்கள்.
2.அடுத்து... அவர் செய்யும் வேலைகளில் தவறுகளை அதிகமாகச் செயல்படுத்துவார்கள்.

ஒரு சிலர் அவன் அப்படிச் செய்தான்... இப்படிச் செய்தான்... என்று ஆத்திரத்துடன் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு இரத்தக் கொதிப்பு நிச்சயம் இருக்கும்.

இது போன்ற நிலைகள் எல்லாம் நாம் மாற்ற வேண்டும் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அவசியம் எடுத்து ஆக வேண்டும்.

காரணம் கோபப்பட்டுக் கொண்டிருந்தால் நம் காரியங்கள் தடைப்படுகின்றது யாரைப் பார்த்து நாம் கோபித்தோமோ அவனுக்கும் இதே உணர்வுகள் ரிமோட் செய்து அவனையும் இயக்கும்.

ஏனென்றால் காற்றிலே இருக்கின்றது... இந்த உணர்வின் வேகங்கள் அவனை இயக்கி...
1.கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் அதைத் தப்பாக்கி விடுகின்றது...
2.இயந்திரத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் என்றால் அதைத் தவறாக இயக்கச் செய்யும்...
3.வாகனத்தில் சென்று கொண்டிருந்தான் என்றால் சிந்திக்கும் தன்மை இழந்து விபத்து ஆகிவிடும்.

இது எல்லாம் எதனால் வருகிறது...? சந்தர்ப்பம்...!

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் இருந்து நாம் எப்படி மீள்வது...?

சந்தர்ப்பங்களில் இது போன்ற உணர்வுகள் மோதல் ஆனாலும்...
1.அடுத்த கணம் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் எண்ணி...
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் தீமை புகாது தடைப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பின் யாரால் நமக்குக் கோப உணர்ச்சிகள் தோன்றியதோ அவர்கள் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என் பார்வை எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்று எண்ணி எடுத்தால் கோப உணர்ச்சிகள் வருவதைத் தடைப்படுத்தும்.

நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து நாம் விடுபட முடியும்.

ரூபமில்லா சக்தி... கடவுளின் சக்தி...

எல்லோரும் வணங்கிடும் அந்தக் கடவுளின் சக்தி ஒன்றே தான். அந்தச் சக்தியின் நிலைக்குப் பல ரூபங்களும் பல நாமங்களும் இட்டு அவரவர்கள் வழிக்கு அவரவர்கள் வணங்குகிறார்கள்.

ரூபமில்லா சக்தியின் நிலை என்னப்பா..? அந்த ரூபமில்லாத நிலை தான் காற்றும்… மழையும்… ஒளியும்…! இவற்றில் கலந்துள்ள அச்சக்தியின் நிலை இல்லாவிட்டால் இந்த உலகிலே தோன்றிடும் பல கோடி உயிரணுக்கள் எல்லாமே எப்படி உதித்து இந்நிலையில் உயிர் பெற்று வாழ்ந்திடுமப்பா…?

அவ் ஈசனின் சக்தியின் ஆற்றல் எல்லாம் அச்சூரியனின் சக்தியிலிருந்து தான் பல வழிகளில் நமக்கு அருள் தருகின்றது. எல்லா அருளையும் தன்னுள் ஏற்றிருக்கும் அச்சூரியனின் சக்தியிலிருந்து பல கோடி உயிரணுக்கள் தோன்றுகின்றன.

அந்த உயிரணுக்களின் உண்மை நிலைகளை எல்லாம் பலர் பல வழிகளில் அறிந்தும் அறியாமலும்… பல ஆராய்ச்சிகளிலும்… பல வகை விஞ்ஞான ரூபத்திலும்… கண்டு உணர்கின்றார்கள். கண்டு உணர்வதற்குப் பல வழிகளைக் கையாளுகிறார்கள்.

அந்த உயிரணுக்கள் உயிர் பெற அச்சக்தியின் அருள் கொண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் உயிர் பெறும் நிலையில் உள்ளது.

பல இடங்களில் பல வகைச் செடி கொடிகள் வளர்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகைச் செடிகளும் அந்த ஊரின் மண் நிலைக்கு ஏற்ப வளர்ந்து பயன் தருகின்றன.

1.நாம் பயிர் செய்து பலன் பெறும் செடி கொடிகள் பல.
2.நாம் பயிர் செய்யாமலேயே இப்படர்ந்த பூமியில் பல வகைச் செடி கொடிகளும் மரங்களும் வளர்கின்றன.

அவை எல்லாம் எந்நிலையில் அவ்விடத்தில் வளர்கின்றன…?

விதை விதைத்து வளர்கின்றனவா எல்லாமே என்று சிலர் எண்ணுகின்றார்கள். பறவைகளின் எச்சம் பட்டும் காற்றிலே பல விதைகள் பறந்து வந்தும் அந்நிலையிலிருந்து பல வகைச் செடிகள் வளர்கின்றன என்று..!

திடீர் திடீரென்று மழை பெய்து சூரிய ஒளி பட்டவுடன் ஈரம் உள்ள இடங்களில் எல்லாம் பல வகை புல் பூண்டு தாவரங்கள் எல்லாமே வளர்கின்றன. புல் பூண்டிற்குத்தான் விதையே இல்லாத பொழுது அவை எப்படி அந்நிலையில் எல்லாம் வளர்கின்றன…?

பல உயிரணுக்களின் உண்மைத் தத்துவங்களை இந்நிலையில் செப்புகின்றோம்.

சூரியனிலிருந்து கிளம்பி வரும் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் எந்தெந்த நிலையில் வந்து தாக்குகின்றனவோ அந்நிலையில் அப்பூமித் தாய் ஈர்க்கின்றாள்.

அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் மேல் அச்சூரிய ஒளி பட்டதும்
1.அப்பூமியின் நிலைக்கும் அந்நிலையில் உள்ள ஈரப்பசையின் நிலைக்கும் ஏற்ப சூரிய ஒளி பட்டவுடன்
2.அங்குள்ள உயிரணுக்கள் உயிர் பெற்று அம்மண்ணின் நிலை கொண்டு பல வகைத் தாவரங்கள் உண்டாகின்றன,

அந்நிலையிலே தான் பல கோடி உயிரணுக்கள் தன் தன் நிலைக்கு ஏற்ப தன் தன் சுவாச நிலைக்கேற்ப சேர்த்து
1.தன் ஆகாரம் உள்ள இடத்தில் படர்ந்து இருக்கும் பொழுது
2.அந்நிலையில் தன் ஆகாரத்தின் சுவாச நிலைக்கு ஏற்ப… “ஆகாரம் உள்ள இடத்தில் அச்சூரிய ஒளி பட்டதும்”
3.பல உயிரணுக்கள் உயிர் பெறுகின்றன.

இந்நிலையில் உயிர் பெறுபவை தான் பல வகைப் புழு… பூச்சிகள்… எறும்புகள்… கொசுக்கள்.. ஈக்கள்…! எல்லாமே. இவை எல்லாம் முட்டை இட்டு முட்டையிலிருந்து குஞ்சு பொரிப்பதில்லை.

இதன் நிலை எல்லாம் தன் சுவாச நிலைக்கேற்ப அழுகும் தன்மை நாற்றம் வாய்ந்த இடம் இப்படிப் பல பல இடங்களில் அந்தந்த இடத்திற்கு ஏற்பச் சுவாச நிலை கொண்டு தான் அந்த உயிரணுக்கள் எல்லாமே உற்பத்தியாகின்றன.

தன் சுவாச நிலைக்கேற்ற உணவுள்ள இடங்களில் தான் இந்த உயிரணுக்களும் தோன்றித் தோன்றி மறைகின்றன.

ஆடி மாதத்தில் பலாப்பழத்தில் ஈ மொய்க்கிறது என்கிறோம்.
1.அந்த ஆடி மாதத்தில் மட்டும் தான் அந்த ஈ உற்பத்தியாகின்றதா…?
2.திடீரென்று தோன்றி மறைய அந்த ஈக்களுக்கு முட்டை எங்கிருந்து வந்தது…?
3.பல ஈக்கள் ஒரே சமயத்தில் வருகின்றன. அந்த ஈக்கள் திடீரென்று தோன்றுவதெல்லாம் இந்நிலையிலிருந்து தான்.

அச்சூரியனின் சக்தியிலிருந்து பல உயிரணுக்கள் இந்தப் பூமியின் மீது படர்ந்துள்ளன. இந்நிலையில் அதற்கு ஏற்ற சுவாச நிலை கிடத்தவுடன் அந்தந்த நிலையிலேயே அந்த உயிரணுக்கள் எல்லாம் ஜீவன் பெற்று தன் ஆகாரத்தைத் தேடிக் கொள்ளச் சுற்றி வருகின்றன.

எவ்வளவு குறுகிய காலத்தில் ஜீவன் பெற்றதோ அந்நிலையிலேயே அந்த உடலை விட்டும் அது ஜீவன் பிரிகின்றது. பல உயிரணுக்களின் நிலை எல்லாம் அந்நிலையிலிருந்து தான் உற்பத்தியாகின்றன.

மரப்பொந்துகளிலும் வீட்டின் பல பகுதிகளிலும் திடீர் திடீரென்று எறும்புகள் படர்ந்து காணப்படுபவை எல்லாமே இந்நிலையிலிருந்து தான்…!

November 16, 2022

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து “ஒளிப்பிளம்பாக…” நாம் மாற வேண்டும்

வாழும் பொழுது நம்மை அறியாது சில உடல் நோய்கள் வந்தாலும் தியானத்தின் மூலம் அதை நீக்கிக் கொள்ள முடிகிறது.
1.ஆனால் நோய்களை நீக்கினாலும் சிறிது காலமே இந்த உடலிலே வாழ்கின்றோம்.
2.எப்படியும் இந்த உடலை விட்டுச் சென்று தான் ஆக வேண்டும்
3.இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…?

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்…” என்ற அந்த அருள் ஒளியை எடுத்துப் பாய்ச்ச வேண்டும் என்ற உணர்வுகளை நாம் வளர்த்துக் கொள்ளும் பொழுது “அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்றோம்...”

உணர்வுகள் நோய்வாய்ப்பட்டாலும் உடல் சுருங்கத் தான் செய்கின்றது. அருள் ஒளி பெற்ற பின் தீய உணர்வுகள் தீய அணுக்கள் குறையும் பொழுது அப்பொழுதும் உடல் சுருங்கத் தான் செய்யும்.
1.ஆனால் பேரருள் என்ற உணர்வுகள் உயிரிலே அந்த வழிப்பட்டு ஒன்று சேர்த்து இணைந்த பின்
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து அதைக் கவர்ந்து
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உணவாக எடுத்து ஒளியின் பிளம்பாக மாறும்
4.நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

இதைத்தான் இராமன் நேரமாகிவிட்டது என்று மணலைக் குவித்துத் தியானிக்கின்றான் என்று இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

நம்முடைய தியானங்கள் அனைத்தும்… நம் எண்ணங்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்துப் பகைமை இல்லாத உணர்வுகளை வளர்த்து… உயிருடன் ஒன்றி… உடலில் இருக்கும் பொழுதே ஒளியின் உணர்வைச் சேர்த்து ஒளியின் சரீரமாக மாற்ற வேண்டும்.

இதுதான் கடைசி நிலை…!

குளவி புழுவின் மீது விஷத்தைப் பாய்ச்சிக் கொட்டியபின் புழு குளவியாக மாறுகின்றது. சில புழுக்கள் எதுவுமே செய்யவில்லை என்றாலும்
1.அந்த உடலில் இருந்து தன் உணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி… தான் சுவாசித்துப் புழு - பூச்சிகளாக மாறுகின்றது.
2.இந்தப் பூச்சிகள் வேறு இலையில் மீது பட்டால் அந்த உணர்வை எடுத்து வண்டாக மாறுகின்றது
3.இந்த வண்டுகள் மற்ற நிலைகள் பட்டபின் பலவிதமான உணர்வுகள் மாறி ஒரு உடலாக சேர்த்துக் கொண்ட உணர்வு மேல் ஒடுகள் மாறிப் போகின்றது.

இதைப் போன்று தான் நாம் அந்த அருள் உணர்வுகளை எடுக்கும் பொழுது இந்த உணர்வுகள் இங்கே விளைந்து… இந்த உடல் ஒளியாக மாறுகின்றது. அடுத்து நாம் பிறவிக்கு வருவதில்லை.

இதற்காக வேண்டித் தான் பல கோடி தவயோகிகள் எத்தனையோ வகைகளில் முயற்சி செய்து செயல்படுத்தி உள்ளார்கள். இருந்தாலும் மார்க்கங்கள் மாறிவிட்டது.

இமயமலைப் பக்கம் நான் (ஞானகுரு) செல்லும் பொழுது ஜீவ சமாதியாக எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இமயமலைச் சாரல்களில் மண் இடுக்குகளில்… சந்துகளில் குகை மாறி அமைத்து… ஓ…ம் நமச்சிவாய… என்றும் ஓ…ம் நமோ நாராயணா… என்றும் இந்த ஒலிகள் வருகின்றது.
1.சிறையில் அடைத்தது போன்று குகைக்குள் இருக்கின்றார்கள்
2.வேறு எங்கும் செல்ல முடியவில்லை... உடல் என்ற இந்த கூட்டில் தான் அடங்கியுள்ளார்கள்

இதெல்லாம் குருநாதர் எமக்குக் காட்டிய பேருண்மைகள்…! ஆகவே இப்போது நல்ல நினைவு இருக்கும் போதே ஒளியின் உணர்வாக மாறுங்கள்.

உணவு பற்றிய இரகசியங்கள்

சக்தியின் நிலை கொண்டு உயிர் பெற்ற உயிர் அணுக்கள் எல்லாமே தன் தன் உயிர் நிலை நிலைத்து நிற்க உணவை உட்கொள்கின்றன. மனிதர்களுக்கு அவரவர்கள் உண்ணும் உணவிலிருந்து சில உணர்வுகளும் உண்டாகின்றன.

நாம் உண்ணும் உணவெல்லாம் நம் உடலை வளர்க்கத்தான் என்ற நிலையில் உண்ணுகின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து மட்டும் தான் நம் உடலை நாம் காத்திட முடிகிறது என்றால்…
1.பல கோடிச் சித்தர்களும் பல தவசு முனிவர்களும் பல ரிஷிகளும்
2.பல நாள்கள் ஆகாரம் புசிக்காமலே ஜெப நிலையிலிருந்து இன்றும் இருந்து கொண்டுள்ளார்கள்.
3.அது எந்நிலையப்பா…?

நாம் உண்ணும் உணவு நமக்குச் சக்தியளித்து சக்தி எல்லாம் நமது உடலில் ஈர்த்து… பாக்கி நிலையில் உள்ளது கழிவாகிறது என்னும் நிலை தான் மனிதர்களுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ளது.

நம் உடல் ஒரு இயந்திரம் போல் உள்ளது என்று எண்ணுகின்றோம்.

நாம் உண்ணும் உணவின் நிலை என்ன…? என்றால் நாம் எந்த ஆகாரத்தைப் புசிக்கின்றோமோ அந்நிலையிலிருந்து அவ்வாகாரத்தின் தன்மை “நம் சுவாச நிலைக்கு வந்துதான்” நாம் பிறகு சுவாசம் எடுக்கும் பொழுது நம் உடல் அந்த ஆகாரத்தை ஏற்கிறது.

சித்தர்கள் ஞானிகள் பெற்ற நிலை எல்லாம்
1.”அச்சுவாச நிலையிலிருந்தே” தன் உடலுக்கு வேண்டிய ஆகாரத்தை ஏற்று எடுக்கும் நிலையை
2.அச்சூரியனிலிருந்தே பூமிக்குக் கிடைத்திடும் அணுவின் சக்தி நிலை கொண்டு தன் சுவாச நிலைக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்.

மரம் செடி கொடிகளின் நிலை எல்லாம் மனிதருக்கும் மற்ற ஜீவராசிகளின் நிலைக்கும் உயர்ந்த நிலை பெற்ற நிலையப்பா…!

அச்சூரிய சக்தியிலிருந்து ஒளிக் கதிர்கள் நம் பூமியைத் தாக்கி அந்நிலையிலிருந்து தான் நாம் சுவாசிக்கின்றோம். மற்ற மிருகங்களின் நிலையும் மற்ற ஜீவனின் நிலையும் சூரியச் சக்தியின் ஒளிப் பிளம்பு பூமியில் பட்ட பிறகு தான் தன் சுவாச நிலைக்கு எடுத்துக் கொள்கிறது.
1.கீழ் நோக்கிய சுவாச நிலை கொண்டு தான்
2.இயற்கையில் எல்லோருமே ஜீவன் பெற்றுள்ளோம்.
3.அப்பூமி ஈர்த்து அந்நிலையில் தான் நம் சுவாச நிலைக்கு எடுக்கின்றோம் சுவாசத்தை.

மரம் செடி கொடிகளின் இலைகள் எல்லாம் அவ்ஈசனின் சக்தியைப் பெற்று அவ்ஈசனின் சக்தி என்பது சூரியனிலிருந்து வெளி வரும் ஒளிக் கதிர்களை நேராகவே தன் சுவாச நிலைக்கு ஈர்க்கின்றது.

அந்நிலையிலிருந்து நாம் பெறும் புஷ்பங்களும் காய் கனிகளும் நாம் உண்ணும் பொழுது நம் உயிரணுவிற்கும் நம் உடலுக்கும் பெரும் ஆரோக்கிய நிலை தருகின்றன. மற்ற அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்குவதில்லை.

1.மற்ற ஜீவராசிகளைச் சமைத்து உண்ணும் பொழுது
2.எந்நிலை கொண்டு எப்படி உஷ்ணத்தை ஏற்றிச் சமைத்தாலும்
3.அந்த அணுக்களின் நிலை நம்மை வந்து தாக்கத்தான் செய்யும்.

அந்த அணுக்களின் நிலையிலிருந்தெல்லாம் தப்பி… நாம் உண்ணும் உணவில் நல்ல நிலையை எடுத்துக் கொள்ள… அன்று வாழ்ந்த சித்தர்கள் நமக்குச் சொல்லிய பல வழிகள் மறைந்து விட்டன.

நாம் ஜெப நிலையிலிருந்து நல்ல உணர்வுடன் நாம் விட்டிடும் சுவாச நிலையிலிருந்து
1.அந்த ஈஸ்வர சக்தியை எடுத்துக் கொண்டால்
2.நம் நிலைக்கும் அச்சூரியனிலிருந்து வரும் சக்தி நிலைகள் பூமிக்கு வந்து தாக்கிடாமல்
3.பெரும் உன்னதமான நிலையில் நம் சுவாச நிலைக்கே அது வந்து
4.அழியாச் செல்வமான நம் உயிரணுவிற்கு… நம் ஆத்மாவிற்கு… சகல நிலையையும் பெற்றிடலாம்.

சித்தர்களும் ஞானிகளும் பல காலங்கள் ஆகாரம் புசித்திடாமல் இருந்த நிலைகள் எல்லாம் எப்படி...? என்று இப்பொழுது புரிந்ததா…!

தியான நிலையில் இருந்து கொண்டிருந்தால் இந்நிலையில் தியானம் பெற்றவர்கள் நிலை ஆயிரம் அணுகுண்டுகளை வெடித்தாலும் நம் சுவாச நிலைக்கு அவ்வணுகுண்டின் “அழிக்கும் தன்மை” என்றுமே வந்து தாக்கிடாது.

நம் கண்ணிற்குத் தெரியாமல் வாழும் பல கோடி ரிஷிகளின் நிலை எல்லாம் இது தானப்பா…!

November 15, 2022

கெட்ட கனவுகள் வரக் காரணம் என்ன…?

அன்றாட வாழ்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் சண்டை போடுபவர்களை… வெறுப்படைபவர்களை… கோபப்படுபவர்களை… குரோதப்படுபவர்களை… எல்லோரையும் நாம் பார்க்க நேர்கிறது. அந்த உணர்வுகளை எல்லாம் நாம் நுகர்கின்றோம்.

அவர்களுக்கும் நமக்கும் நேரடியான சம்பந்தமே இல்லை. இருந்தாலும் பதிவு ஆகிவிட்டால் இரவு தூக்கத்தில் கனவுகளாகப் பார்க்கலாம்.

பகலில் நல்ல இடத்திலே… எப்படிச் சண்டை போட்டார்கள்…? என்று
1.“தூங்குவதற்கு முன்…” இந்த உணர்வலைகள் வரும்.
2.அடுத்து தூக்கத்தில் பார்த்தால் நாம் யாருடனோ சண்டை போடுகின்ற மாதிரி கனவுகள் வரும்… முழிப்பாகி விடும்… எழுந்து விடுவோம்…!
3.யார்… என்ன…? என்ற நிலையில் தெரியாது… உருவமும் தெரியாது
4.நம் எண்ணமும் இந்த உணர்வுகளும் சேர்த்துச் சரியான உருவம் தெரியாதபடி நமக்கு அதிர்ச்சியாகிவிடும்
5.யாரோ நம்மைத் தாக்க வருகிறார்கள்…! என்று கனவிலே வரும்.

ஏனென்றால் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து இதே உணர்வுகள் “மற்ற அணுக்களுக்கு எதிர்மறையாக வரும் போது…” இந்தப் பதட்டமும் பயமான உணர்ச்சிகளும் தூண்டப்பட்டுத் திடீரென்று இரவிலே எழுந்து விடுவோம்.

இது எல்லாம் எது செய்கின்றது…? பகலில் நுகர்ந்த உணர்வுகளை நமது உயிர் இயக்கிக் காட்டுகிறது.

அந்த உணர்ச்சியின் தன்மை அந்தந்த அணுக்களுக்கொப்ப அதனதன் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அந்தச் செயல்களை உணர்ச்சிகள் வழி தான் செயலுக்கு வருகின்றது.

இந்த இயற்கையின் நிலைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

காரணம் பகலில் எல்லாவற்றையும் நாம் பதிவு செய்து விடுகின்றோம். இரவு தூக்கத்திலே அந்த மாதிரி நம்மை இயக்குகிறது.

நம்மை ஒருவன் திட்டிவிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்கடுத்து மற்ற வேலைகளைச் செய்கிறோம். வேலையில் சோர்வடையும் பொழுது… தன்னை அறியாமலே அந்தத் திட்டியவனின் நினைவு வரும்.

என்னை இப்படி எல்லாம் பேசினான்… செய்தான்… என்று எண்ணினால் அந்த நேரத்திலே செய்யக்கூடிய வேலை கெட்டு விடுகின்றது… வேலையைச் சரியாகச் செய்து முடிக்க முடியாது.

அப்போது வீட்டில் ஏதாவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களிடம் சண்டைக்குச் செல்வோம்… நண்பர்களிடத்திலும் பகைத்துக் கொள்வோம்.

அதாவது மிகவும் பழகிய நண்பர்களாக இருந்தாலும் கூட வீட்டிலோ வெளியிலோ வெறுப்பாக இருந்தால் தமாஷாக ஏதாவது சொன்னால் போதும். இரண்டு பேருக்கும் நிஜமாகவே சண்டை கடுமையாகிவிடும்.

சந்தோஷமாக இருக்கும் போது ஒன்றும் இருக்காது. ஆனால் சங்கடமாக இருக்கும் பொழுது… வெறுப்பாக இருக்கும் பொழுது… என்னைக் கிண்டல் செய்கின்றாயா…? என்று இந்த நல்லவன் மீது… உதவி செய்தவர்கள் மீது… சண்டை வந்துவிடும்… பார்க்கலாம்… எதிரியாகவே மாற்றிவிடும்.

ஆகையினால் தமாஷாக… விளையாட்டாக… எப்போதும் நாம் செயல்படுத்தக் கூடாது. அன்புடன் அரவணைத்து ஒரு அர்த்தத்துடன் நாம் சொல்லி
1.நீங்கள் இப்படிச் செய்ததால் தான் தீமையின் விளைவுகள் இப்படி உங்களுக்கு வந்தது
2.அதற்குப் பதிலாக இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னால்
3.அந்த நேரத்தில் நல்ல நிலைகளைக் கொண்டு தீமைகளை மாற்றி அமைக்க முடியும்.

ஆகவே இந்தத் தியானத்தை கடைப்பிடிப்பவர்கள் கேலியாகப் பேசுவதோ கிண்டலாகப் பேசுவதோ அல்லது அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்காகச் செயல்படுத்துவதோ அந்த வழிக்கே நாம் போகக் கூடாது. கடும் எதிரியாக மாறிவிடும்… சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்துவிடும்.

வேதனையாக இருக்கிறார் என்ற சிந்தனை இல்லாதபடி அவர்களை நாம் கேலி செய்வோம்… கிண்டல் செய்வோம்…
1.உடனே அவர்கள் நம் மீது சீறிப்பாய்வார்கள்… கடும் சண்டையாகும்…
2.நம்மை அறியாமலே… நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் நமக்கு எதிரியாக மாறி வரும்.
3.பின் வேதனையாகி உடலில் கடும் நோயாக மாறி நம்மைத் தீமையின் எல்லைகளுக்குக் கொண்டு சென்றுவிடும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து… அவைகளை நாம் மாற்றிப் பழகுதல் அவசியம். அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களிடம் பதிவு செய்கிறோம்.

எந்த நேரத்திலும் இந்த ஆயுதத்தை எடுத்துச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். பகைமை இல்லாது வேதனை வராது மகிழ்ந்து வாழும் சக்தி பெறுங்கள்.

எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டோமா...

பல கோடி உயிரணுக்கள் வந்து நம் உடலிலும் எண்ணத்திலும் கலந்திடும் நிலையில் உள்ளதப்பா மனித உடல்.

1.பல கோடி அணுக்களின் ஈர்ப்பு நிலையில் இருந்து தப்பி
2.அழியாத செல்வமான நம் ஆத்ம ஜோதி நிலை கண்டிடத்தான்
3.இந்தத் தியான நிலை… சுவாச நிலை எல்லாமே…!

தியான நிலையில் உண்மை நிலையைப் புரிந்து ஒவ்வொருவரும் செயல்பட்டுப் பல கோடித் தீய உயிரணுக்களின் செயல்களுக்கு நாம் அடிமையாகாமல் இந்நிலையிலிருந்தெல்லாம் நாம் தப்பி நம் சுவாச நிலையில் நம் எண்ணத்தில் அவ்வீசனின் சக்தியை ஊன்றச் செய்ய வேண்டுமப்பா…!

பல மகரிஷிகள் ஞானிகள் சித்தர்கள் எல்லாம் பெரும் ஞானப் பேராற்றல் நிலையை எய்தியது எப்படியப்பா..?
1.மற்ற அணுக்களின் சக்திகள்… உந்தல்கள்…!
2.தன் நிலைக்கு வந்து செயல்படாமல் மாற்றிக் கொண்டார்கள்.

அவரவர் நிலையை அவரவர்கள் உணர்ந்து பல கோடி உண்மை இரகசியங்களை அறிந்து அன்றைய காலத்தில் அதை ஜாதக வடிவிலும்… கோவில்களிலும்… மருத்துவத்திலும்… பல உண்மை நிலைகளை எல்லாம் கண்டறிந்து பெரும் சூட்சமத்தில் இரகசியமாக வெளியிட்டார்கள். பல உண்மைகளை மறைத்தும் விட்டார்கள் அன்றையச் சித்தர்கள்…!

இந்நிலையில் பல உண்மைகளை அறிந்து தன் உயிராத்மாவை அழியாச் செல்வமாக்கி “நான் என்றால் என்ன…?” என்பதை அன்றே உணர்ந்து இந்த மக்களுக்காக எவ்வளவோ பெரும் நிலைகளை எல்லாம் கண்டுணர்ந்து
1.இன்றும் சூட்சம நிலையில் இருந்து கொண்டே
2.ஆண்டவன் ரூபத்தில் வந்து பல வழிகளில் உணர்த்துகிறார்கள்.
3.அழியாச் செல்வமான இந்த உயிராத்மாவை மனிதர்கள் எல்லோருமே என்ன…? என்று புரிந்து கொண்டு வாழ்ந்திட வேண்டுமப்பா…!

ஜெப நிலையில் அமர்வதையும்… தெய்வத்தை வணங்குவதையும்… பலர் பல நிலையில் பொருளுக்காக என்று செயல்படுத்தி உண்மை நிலையையே புரிந்து கொள்ளாமல் சிதறடித்து விட்டார்கள்.

நம் உயிராத்மாவை… உடலை விட்டுப் பிரிந்த பல ஆத்மா என்னும் அணுக்களின் நிலையில் இருந்து தப்பி... ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட முடியும்…!

இந்த உடலில் இருந்தால்..
1.இனி எத்தனை காலங்கள் இவ்வுடலுடன் வாழ முடியும்…! என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
2.தன் ஆத்மாவிற்குத்தான் அழியாச் செல்வத்தைச் சேமித்திடல் வேண்டும்.

இந்தச் சூரியனிலிருந்து நாம் பல கோடி நன்மைகளைப் பெற்று வருகின்றோம். அந்தச் சூரியன் எப்படிப் பல மண்டலங்களின் நிலை கொண்டு அச்சக்திகளைத் தன்னுள் ஈர்த்து நமக்குப் பல நன்மைகளை அளிக்கின்றதோ அந்நிலை கொண்டு தான் அச்சக்தியின் அருள் பெற்ற நாம் எல்லோரும் சத்திய நிலையில் வாழ்ந்து சமுதாயத்தில் நல் நிலையில் வாழ்ந்திட வேண்டும்.

1.இந்தப் பிரபஞ்சத்தில் நாம் பிறருக்குச் சுமையாக வாழ்ந்திடாமல்
2.பிறரின் நன்மைக்காகப் பிறவி எடுத்த பயனைப் பெற்றிட வேண்டும்.