ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 6, 2018

இந்த உலகம் மறையும் முன் அகஸ்தியர் உணர்வைப் பெற்று “விண் செல்ல வேண்டும்”

1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரும்
2.அவர் ஞானம் பெற்ற நிலையும்
3.துருவத்தின் ஆற்றலை அறிந்து “துருவ நட்சத்திரமாக” ஆன நிலையும்
4.காலத்தால் மறைந்தே போய்விட்டது என்று சொல்லலாம்.

அகஸ்தியரை “எல்லாவற்றிலும் வல்லவர்” என்று சொல்லி மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் ஓரிரு இடங்களில் அவர் வருவதாகக் காட்டி அத்துடன் நிறுத்திவிட்டார்கள்.

நம் பூமியிலிருந்து “விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்” என்ற நிலை விநாயகர் தத்துவத்தின் மூலம் காட்டியிருந்தாலும் அதை வெறும் சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள்.

அவர் தான் பெற்ற விண்ணின் ஆற்றல்களைத் தன் இன மக்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தென்னாட்டிலே தோன்றிய அந்த மகா ஞானி வெளிப்படுத்திய நிலைகளைச் சுத்தமாகவே மறைத்துவிட்டார்கள். சரணாகதி தத்துவத்தில் திசை திருப்பிவிட்டார்கள்.

காலம் கடந்த இந்த நேரத்திலாவது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அகஸ்தியரைப் பற்றி அறிந்து கொண்டோம். ஆகவே நாம் விண் செல்ல வேண்டும்.

அந்த மெய்ஞானி காட்டிய உணர்வுகளை நாம் பெறவேண்டும் எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும். இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும் என்றார் குருநாதர்.

அனைத்து மக்களின் உணர்வுகளும் நமக்குள் உண்டு. அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற உணர்வு நமக்குள் வருகின்றது.

நாமும் ஒளி நிலை பெறுகின்றோம் மற்றவரும் ஒளியாகின்றார்கள். பிறவி என்ற நிலையை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கையாக அமைகின்றது. 

இருளை அகற்றும் சக்தியாக அந்த “அகஸ்தியரைப் போன்ற… மகா ஞானியாக…” நாம் அனைவரும் மாறவேண்டும்.