ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2016

கணவன் மனைவி - “பாதுகாப்புக் கவசம்”

கணவன் மனைவி இருவரும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ்ந்து வளர்கின்ற இல்லத்தில் மகிழ்ச்சியும் மணமும் நிறைந்திருக்கும்.

அத்தகையை இல்லங்களில் மனைவியின் சமையல் மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும்.

கணவன் தனது மனைவியின் நலன்களைப் பற்றிச் சிந்திப்பதாலும் மனைவி தன் கணவனின் நலன்களைப் பற்றிச் சிந்திப்பதாலும் அவர்களின் இரு எண்ணங்களும் வலு நிறைந்ததாக இருக்கும்.

வேலைக்கோ அல்லது வியாபாரத்திற்கோ எல்லும் கணவன் பல நபர்களைச் சந்திக்க வேண்டியிருப்பதால் பல உணர்வுகள் அவரிடத்தில் வந்து மோதும் வாய்ப்புண்டு.

சங்கடம், கோபம், வெறுப்பு, வேதனை போன்ற உணர்வுகள் அவரிடத்தில் வந்து மோதும் பொழுது அது அவருடைய பணியிலும் குடும்பத்திலும் அமைதியைக் குலைப்பதாக அமைந்துவிடும்.

அல்லது குடும்பத்தில் கணவன் மனைவி இருவரின் உணர்வுகள் வேறுபட்டு இருவருக்கிடையே உள்ள ஒற்றுமை குலைந்து போனாலும் அதுவும் கணவனின் தொழிலையும் அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கும்.

உதாரணமாக, வீட்டில் கணவன் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு வியாபாரத்திற்கு வருவாரானால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் விரும்பும் சரக்கை எடுத்துக் கொடுக்கும் பொழுது அந்தச் சரக்கு நல்ல சரக்காக இருந்தாலும் அது வாடிக்கையாளரைத் திருப்தியடையச் செய்யாது.

இதனால், வாடிக்கையாளர் சரக்கை வாங்காது சென்றுவிடுவார்கள்.

கணவனுக்கு வீட்டில் ஏற்பட்ட வெறுப்பான உணர்வுகள் அவர் வெளிப்படுத்தும் மூச்சலைகள் மூலம் கடையில் படர்ந்து நல்ல சரக்குகள் இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அந்த வெறுப்பான உணர்வைச் சுவாசித்து அவரிடத்திலும் வெறுப்பான உணர்வையே தூண்டிவிடும்.

இவ்வாறு குடும்பத்தில் உருவான குழப்பம் தொழிலும் படர்ந்து அங்கும் துன்பத்தையே தருகின்றது.

இதைப் போன்று ஒருவர் அலுவலகத்தில் பணி புரிபவராக இருந்தாலும் வெறுப்பின் உணர்வுகளால அவருடைய பணிகள் தடைப்படுகின்றன. அதனால் அவருடைய மேலதிகாரிகளிடம் கெட்ட பெயரைச் சம்பாதிக்கும் நிலை உருவாகிவிடுகின்றது.

ஆகவே, இத்தகையை தீய உணர்வுகளின் தன்மையை உணர்ந்து கணவன் மனைவி இருவரும் அன்புடன் மனம் ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும்.

கணவன் மனைவி இருவரும் தூங்கச் செல்வதற்கு முன்னால் ஒருவர் மற்றொருவரைப் பார்க்கும் வண்ணமாக நேருக்கு நேர் அமர்ந்து கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிட்டு ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதன் பின்பு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும், என் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் உணர்வை ஒருவருக்கொருவர் பாய்ச்சுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் அவரைப் (கணவன்/மனைவி) பார்ப்பவர்கள் நல்ல எண்ணம் பெறவேண்டும், அவர் வழி நல் வழியாக இருக்க வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சுதல் வேண்டும்.

எங்கள் குடும்பம் ஒற்றுமையுடன் நாங்கள் இருவரும் என்றும் மகிழ்ந்த உணர்வுடன் இருக்க அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை மனைவி கணவருக்காக ஏங்கித் தியானிக்க வேண்டும். இதைப் போன்று கணவனும் மனைவிக்காக எண்ணித் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு இருவரும் தியானிப்பதால் எங்கு சென்றாலும் இருவருக்கும் பாதுகாப்பான நிலைகள் ஏற்படும்.

இருவரிடமும் அறியாது சேர்ந்த தீமையை விளைய வைக்கும் உணர்வுகள் நீங்கும், சொல்லும் செயலும் புனிதம் பெறும், பொருள் கண்டுணர்ந்து செயல்படும் நிலை ஏற்படும்.

இரு மனமும் ஒரு மனதாக இணைந்து செயல்படும் நிலை ஏற்படும். இல்லற வாழ்க்கையில் எல்லா நலமும் எல்லா வளமும் பெற முடியும்.

கணவன் மனைவி இருவரின் மகிழ்ந்த உணர்வலைகள் அவர்கள் இல்லங்களில் படர்ந்து இல்லங்களுக்கு வருவோர் அனைவரும் இந்நிலை பெற முடியும்.

ஆக, கணவனின் உணர்வுகள் மனைவிக்குப் பாதுகாப்புக கவசமாகவும், மனைவியின் உணர்வுகள் கணவனுக்குப் பாதுகாப்புக் கவசமாகவும் செயல்படும்.

ஒவ்வொரு மனிதனையும் மகிழ்ந்து வாழச் செய்திட நம்முடைய மகரிஷிகள் காட்டிய பேருண்மைகள் இது.

July 29, 2016

குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட ஆத்ம சுத்தி செய்யும் முறை

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிட்டு ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு தியானித்த பின்பு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இல்லம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் வீட்டில் உள்ள தரை, சுவர்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகளைப் படரச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று வீட்டிலுள்ளோரை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

பின்பு, துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் சகோதர உணர்வுடன் பற்றும் பாசமும் பரிவுடன் பண்புடன் வாழ்ந்திடும் நிலை பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் உடல் நலத்துடன் மன மகிழ்ச்சியுடன் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களால் முடிந்தவரை துருவ நட்சத்திரத்துடன் உணர்வுகளை வலுக்கூட்டித் தியானியுங்கள்.

தவறு யாரும் செய்வதில்லை. சந்தர்ப்பங்கள் நமக்குள் குறை காணும் சூழ்நிலைகளை உருவாக்கி விடுகின்றது. ஆகவே, குறைகள் வளராது தடைப்படுத்த வேண்டும்.

பெண்களிடம் தான் சக்தியின் நிலைகள் துரித நிலையில் பெறுகின்றது. குடும்பத்தில் உள்ள பெண்கள் இதனைக் கருத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் முழுமையாகக் கடைப்பிடித்து குடும்பத்தின் நிலைகளை உயர்த்த வேண்டும்.

அடிக்கடி ஆத்ம சுத்தி மூலம் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை நினைவு கொள்ளும் பொழுது துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில் நம் பற்று ஓங்கி வளர்கின்றது.

அதன் துணை கொண்டு இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக்கி அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அவர்கள் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் சிந்தித்துச் செயல்பட்டு வழியறிந்து பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று பிறவா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

சமையல் செய்யும் பொழுது, உணவு பரிமாறும் பொழுது ஆத்ம சுத்தி செய்யும் முறை

சமையல் செய்யும் பொழுதும் உணவு பரிமாறும் பொழுதும் நாம் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிட்டு ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் சமைக்கும் உணவு முழுவதும் படர்ந்து இந்த உணவை உண்ணும் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அவர்கள் அனைவரும் உடல் நலமும் மன பலமும் மன வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று இந்த எண்ணத்தை ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் நாம் சமையல் செய்யும் உணவுகளில் சுவை ஊட்டக் கூடிய நிலைகளாக ஏற்படுகின்றது. அதே சமயத்தில் உணவு உட்கொள்பவர்களிடத்தில் சாப்பிடும் உணவை நல்ல இரத்தமாக மாற்றிடும் நிலை ஏற்படுகின்றது.

அதனால் மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெற இந்தச் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது. 

“குடும்ப நலம் காக்கும்” முன்னோர்கள் உருவாக்கிய பழக்கம்

குடும்பம் ஒரு கோவில் போன்றது.

அங்கே அன்பும் ஒற்றுமையும் மிகுந்திருக்கும் பொழுது அருளும் பொருளும் தேடி வரும். இல்லறத்தில் நல்லறத்தை வளர்க்கும் பொழுதுதான் பேரின்பப் பெருவாழ்வான அழியா ஒளிச் சரீரத்தை எளிதில் நாம் பெற முடியும்.

நம் முன்னோர்கள் நல்ல பண்புகளை நமக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். அதில் ஒன்று காலையிலும் மாலையிலும் வீட்டைப் பெருக்கி வாசலைத் தெளித்துக் கோலமிடும் பழக்கம்.

வீட்டைப் பெருக்கி வாசலைத் தெளித்து அழகான கோலங்களைப் போட்டு வைப்பது வீட்டில் நிலவும் மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும்.

அது மட்டுமில்லாமல் வீட்டிற்கு வருகை தரும் நண்பர்களிடத்திலும் விருந்தினர்களிடமும் மகிழ்வான உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்யும். அந்த வீட்டில் அனைவரின் மகிழ்ந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது அந்த உணர்வுகள் வீட்டில் பதிந்து அந்த வீட்டிற்கு வருகை தரும் அனைவரயும் மகிழச் செய்திடும் நிலை அங்கே நிலவும்.

எனவே வீடுகளில் கோலமிடும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

மேலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் குடும்பம் முழுவதும் படர வேண்டும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரும் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

எங்கள் குடும்பத்தில் உள்ள அனவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற எண்ணத்துடன் கோலமிடுங்கள்.

இத்தகைய எண்ணங்களை எண்ணிக் கொண்டு கோலமிடும் கோலப்பொடியைத் தொடும் பொழுது அந்த உணர்வுகள் அந்தப் பொடிக்குள் படர்கின்றது. அதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் ம மகிழ்ச்சி பெற இது உதவுகின்றது. 

July 28, 2016

அகஸ்தியன் கண்ட அண்டசராசரத்தின் பேராற்றலை உங்களுக்குள் அணுவாக உருவாக்குங்கள்

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன் சந்தர்ப்பத்தில் தாய் கருவிலே வளரப்படும் பொழுது அவர்கள் பல விஷ ஜெந்துக்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இயற்கையில் விளைந்த விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்ட மூலிகைகளைத் தன் உடலிக் பூசிக் கொண்டார்கள்.

அப்பொழுது இந்த உடலிலிருந்து வரக்கூடிய மூலிகைகளின் விஷ உணர்வுகள் விஷ ஜெந்துக்களைத் தாக்கப்படும் பொழுது விஷம் கொண்ட உயிரினங்களின் வலு இழந்துவிடுகின்றது.

அந்த வாசனையை நுகர்ந்து அவைகள் அஞ்சி ஓடிவிடுகின்றது. இவர்கள் இருக்கும் பக்கம் வருவதில்லை.

ஒரு புலியானாலும் யானையானாலும் மற்ற தேளானாலும் பாம்பானாலும் விஷத்தின் வலிமை கொண்டு தான் இயக்குகின்றது.

அந்த விஷத்தை முறிக்கும் பச்சிலைகளைத் தங்கள் உடலில் அதை முலாமாகப் பூசிக் கொள்ளும் பொழுது இந்த மணத்தின் தன்மை கொண்டு இவர்கள் அருகில் வருவதில்லை.

அகஸ்தியன் என்று சொல்லும் அவன் தாய் தந்தையர்கள் தங்களைக் காத்துக் கொள்ள இத்தகையை பாதுகாப்பை வைத்துக் கொண்டார்கள். ஏனென்றால் இதையெல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் இதைக் கூர்மையாகப் படித்தாலும் (பார்த்து) உணர்வை நுகர்ந்தாலும் உங்களுக்குள் உயிர் இதை அணுவாக மாற்றுகின்றது உங்கள் நினைவுடன். ஆகவே, இதனின் தன்மையை உங்களுக்குள் அணுவாக்குவதற்கே உபதேசிக்கின்றோம்.

அன்று அகஸ்தியன் பெற்ற சக்தியும் அவனின்று வெளிப்பட்ட சக்திகளும் இன்று உண்டு.

இதைப் போல விண்ணில் தோன்றிய உணர்வும் அது எவ்வாறு என்று இணைத்து ஆதி முதல் இந்த உணர்வுகள் மாற்றமடைந்து வரும் உணர்வுகளை இணைக்கப்படும் பொழுது அண்டசராசரத்தையும் அது விளைந்த உணர்வும் உங்களுக்குள் நீங்கள் நுகர்வதற்கு ஏதுவாகின்றது.

அதே சமயத்தில் அண்டசராசரத்தை அறிந்த அகஸ்தியன் தனது வாழ்க்கையில் நஞ்சினை முறித்து உணர்வை ஒளியாக மாற்றிடும் நிலை பெற்று இன்று துருவ நட்சத்திரமாக அமைந்த உணர்வுகளும் இப்பொழுது உங்களுக்குள் கலக்க நேரும்.

இந்த உணர்வின் அணுக்களாகிவிட்டால் அது அணு தனது இரைக்காக இந்த உணர்ச்சிகளை உந்தி அது பெறும் தகுதியும் பெறுகின்றது. அதன் துணை கொண்டு உங்களுக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் சக்திகளை நீங்கள் பெற முடிகின்றது.

உதாரணமாக, ஒருவர் வேதனைப்படும் உணர்வை நாம் நுகர்ந்து விட்டால் அது நமக்குள் அணுவாகிவிட்டால் அதையே தான் சுவாசிக்க நேரும்.

அப்பொழுது நம் உயிரிலே பட்டு அந்த வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி “அம்மம்மா..,” என்று சொல்லும் பொழுது நமக்குள் வேதனை தெரிவதில்லை. ஆனால், வேதனை உணர்வுகள் அதைப் பெற்ற அணுக்கள் விளைந்துவிடும்.

பின் அமைதியாக இருக்கும் பொழுது அதனின் வேதனையின் துடிப்புகளை நாம் உணர முடிகின்றது.

இதைப் போன்று தான் அகஸ்தியனின் தாய் விஷ ஜெந்துக்களிடமிருந்து தப்பிக்க முலாம்களைப் பூசியது. ஆனால், விஷத்தை முறிக்கும் ஆற்றலை கருவிலிருக்கக் கூடிய குழந்தைக்கு அது சிறுகச் சிறுகப் பெருகும்படிச் செய்தது.

இவ்வாறு தாய் கருவில் பெற்ற இச்சக்தியால் எத்தகைய விஷத்தையும் அடக்கும் தன்மையும் விஷத்தை முறித்திடும் ஆற்றலும் கருவில் விளையும் பொழுதே அகஸ்தியனுக்குள் உருவாகின்றது.

அகஸ்தியன் பெற்ற அந்த ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெறுதல் வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொரு நிமிடமும் அகஸ்தியனின் உணர்வுகளை உங்களுக்குள் நினைவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நீங்கள் நுகரும் தருணத்தில் உங்கள் உடலுக்குள் அதனின் அணுவாக மாறுகின்றது. 

மீண்டும் நினைவாக்கும் பொழுது தன் இரைக்குத் தேடப்படும் பொழுது வானுலகில் உருவான உணர்வின் சத்தை நீங்கள் நுகரும் அந்த அணுவாக மாறும் நிலை உங்களுக்குள் உருவாகின்றது.

அந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு அகஸ்தியன் கண்ட அண்டசராசரத்தின் பேருண்மைகளை அறியும் ஆற்றல் உங்களுக்குள் வளர வேண்டும் என்பதற்காகத் தான் அடிக்கடி இதைக் கூறுவது. 

தியானமும் ஆத்ம சுத்தியும் செய்ய வேண்டிய முறை

ஓ...ம் ஈஸ்வரா குருதேவா என்று உங்கள் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

அம்மா அப்பா அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏக்க உணர்வுடன் ஏங்குங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உள்ள உங்கள் உயிரை நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் ஏங்கி இருங்கள்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி இருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள உறுப்புகள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவினைச் செலுத்தி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.

இதைச் சாதாராணமாகப் பேசும் நிலைகளில் புற நிலைகளில் சொல்லாமல் (வாய் விட்டுச் சொல்லாமல்) அக நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற வலுவான எண்ணத்துடன் இழுத்துச் சுவாசித்து உங்கள் உடலுக்குள் நினைவினைச் செலுத்துங்கள்.

இரத்தத்தில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள், உடல் உறுப்புகள் அனைத்திலும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப உணர்வுடன் எண்ணி இழுத்துச் சுவாசித்து உங்கள் நினைவினை அலை அலையாக உள் செலுத்துங்கள்.

இப்படியே சிறிது நேரம் தியானியுங்கள்.

பின்னர் கண்களைத் திறங்கள்.

எதனை நலம் பெறவேண்டும் என்று விரும்புகின்றீர்களோ அதனை எண்ணுங்கள்.

உங்களுக்கு எத்தகையை நோய் இருந்தாலும் உங்கள் குடும்பங்களில் எந்த வகையான இன்னல்கள் இருந்தாலும் குடும்பங்களில் ஒருவருக்கொருவர் மன பேதம் இருந்தாலும் தொழிகள் சீராக இயங்காமல் இருந்தாலும் பணம் கொடுக்கல் வாங்கலில் முடக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் குழந்தைகளால் மனக் குறைகள் இருந்தாலும் புத்திர பாக்கியம் இல்லாமலிருந்தாலும் இவைகள் அனைத்தையும் உங்கள் எண்ணத்தால் மாற்றியமைக முடியும்.

மாற்றியமைப்பதற்கு மேலே சொன்ன முறைப்படி தியானித்து நீங்கள் செயல்பட வேண்டும்.

முறைப்படி தியானித்து உங்கள் ஆன்மாவைச் சுத்தப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உணர்வுகளுக்குள் வலுவாகப் பதிவு செய்ய வேண்டும்.

அந்தப் பதிவின் துணை கொண்டு உங்கள் எண்ணங்கள் வலுப் பெற்று மன பலம் பெறுவீர்கள் உடல் நலம் பெறுவீர்கள் தொழில் வளம் பெறுவீர்கள் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.

உங்களையறியாது சேர்ந்த தீமையை விளைய வைக்கும் உணர்வுகளிலிருந்து விடுபட்டு மன மகிழ்ச்சி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வாக்கு பெற்று சொல்வாக்கு பெற்று செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வளர்ந்திட முடியும்.

ஆக, வாழ்க்கையே தியானம். ஒவ்வொரு நிமிடமும் துருவ நட்சத்திரத்தை எண்ணும் பொழுது நம்முடைய பற்று அனைத்தும் அங்கே செல்கிறது.

நாம் உடலை விட்டுச் சென்றாலும் நம் நினைவின் ஆற்றல் அந்தத் துருவ நட்சத்திரத்திடம் ஒன்றிவிடுகின்றது. துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிவிட்டால் இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் முழுமை அடைய முடியும்.

நான் யார்? இந்தப் பிள்ளை யார்? என்று தெளிவாக உணர்த்தியவன் அகஸ்தியன்

சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தங்கள் கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வலைகளிலும் நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சக்தியிலும் சந்தர்ப்பத்தால் மோதுண்டு  அணுவாகி, உயிரணுவாகின்றது.

பூமியின் சுழற்சியில் உயிரணு சிக்கி பூமியில் படர்கின்றது.

அப்படிச் சிக்கிய உயிரணு தான் புழுவாகி பூச்சியாகி தவளையாகி பாம்பாகி பறவையாகி, பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக உருப்பெறச் செய்கின்றது.

வலுவற்றதை வலுவானது விழுங்குகின்றது. வலுவானதின் உணர்வை இது கவர்கின்றது.

கவர்ந்த நிலையில் இதன் உணர்வுகள் மாறுகின்றது. சேர்த்துக் கொண்ட வினையான உணர்வுக்கொப்ப மறு உடல் பெறுகின்றது.

உதாரணமாக புழுவை தவளை விழுங்குகின்றது. தவளையைப் பாம்பு விழுங்குகின்றது. பாம்பினைக் கருடன் ஆகாரமாக விழுங்குகின்றது.

புழுவைத் தவளை விழுங்கினாலும் புழுவின் தசைகள் உணவாகின்றது. புழுவின் உயிரான்மா தவளையின் ஈர்ப்பில் சென்று அதனின் உணர்வு கொண்டு வளர்ச்சியின் நிலையில் தவளையாக உடல் பெறுகின்றது.

இப்படிப் பல கோடிச் சரீரங்கள் பெறுகின்றது. ஒவ்வொரு சரீரத்திலும் தன்னைக் காத்திடும் உணர்வுகள் பதிவாகின்றது. அந்தப் பதிவின் நிலைகள் கொண்டு உணர்வுகள் விளைந்து விளைந்த உணர்வுக்கொப்ப உடல்கள் மாற்றமாகின்றது.

உணர்வுகள் வளர வளர எண்ணங்களும் செயல்களும் வளர்ச்சியாகின்றது. வளர்ச்சியின் முழுமை நிலையாக ஆதியில் புழுவான உயிர் தான் மனிதனாக உருவாக்கியிருக்கின்றது.

பரிணாம வளர்ச்சியில் நாம் மிருக நிலையிலிருந்து மனிதனாக உருப்பெற்று இருக்கின்றோம்.

இதனை நாம் உணரும் வண்ணம் மனித உடலில் யானையின் தலையைப் பொருத்தி விநாயகனாக உருவாக்கி “நாம் யார்..,? எப்படி மனித உடலைப் பெற்றோம்..,? என்பதனைத் தான் தெளிந்து தெளிந்த நிலையில் உணர்ந்து “இந்தப் பிள்ளை யார்...,? என்று உணர்த்தியவர் அகஸ்தியமாமகரிஷி.

விநாயகனை ஆதிமூலம் என்பார்கள். ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக உடல்கள் மாறி மாறி இன்று மனித உடலைப் பெற்றோம்.

இவை அனைத்திற்கும் மூலமாக இயக்கியது நமது உயிர் தான். உயிரே கடவுள். நாம் எண்ணும் எண்ணங்களுக்கு ஏற்றபடி நம்மை இயக்குகின்றது. இயக்கும் உணர்வுக்கொப்ப செயல்பட வைக்கின்றது நம் உயிர்.

கிடைப்பதற்கு அரிய மனித உருப் பெற்றிருக்கின்றோம். ஆறாவது அறிவின் துணை கொண்டு சிந்தித்துச் செயலாற்றும் திறன் கொண்டவன் மனிதன்.

உடலின் உணர்வுக்கும் தீமையை விளைய வைக்கும் உணர்வுகளுக்கொப்ப நாம் நமது மனித வாழ்க்கையில் வாழ்வோம் என்றால் நாம் இந்த மனித சரீரத்தை இழந்து எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்குத் தகுந்தப்படி மிருக நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் நம் உயிர்.

வைரம் விஷம் கொண்டது தான். விஷத்தினை அடக்கி அதனை அது ஒளியாக மாற்றுகின்றது.

மகரிஷிகள் மனிதனாக இருந்த காலங்களில் விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெற்று தீமைகளை விளைவிக்கும் உணர்வுகளை ஒடுக்கி உணர்வுகளை ஒளியாக்கி இன்றும் சப்தரிஷி மண்டங்களாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

மகரிஷிகள் மெய்ஞானிகள் உணர்த்திய வழியில் நமது எண்ணங்களைச் செலுத்தி மகரிஷிகள் வெளிப்படுத்தும் ஆற்றல்களைக் குரு வழியில் கவரப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் மனித வாழ்க்கையில் ஏற்படும் வேதனைகள மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு மாய்த்து நாமும் நம் உயிரை ஒளியாக்கலாம். உயிருடன் ஒன்றிய ஒளிச் சரீரம் பெறமுடியும்.

உயிரின் இயக்கத்தையும் அதற்கொப்ப உடலின் செயலை அறிந்து நமது ஆறாவது அறிவின் துணை கொண்டு உணர்வுகளைப் புனிதப்படுத்துங்கள்.

உயிரை ஈஸ்வரனாக மதியுங்கள்
இயக்கத்தை விஷ்ணுவாக மதியுங்கள்
உடலைச் சிவனாக மதியுங்கள்
கண்ணைக் கண்ணனாக மதியுங்கள்.

July 26, 2016

மெய்ஞானிகளுடன் ஒன்றும் பாதையை குருநாதர் தெளிவாகக் காட்டினார்

சூரியன் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் உருவாக்கினாலும் இந்தப் பேரண்டத்தில் வந்த உணர்வின் துணை கொண்டுதான் ஒரு பிரபஞ்சமாக உருவாகின்றது.

பிரபஞ்சத்தில் உருவானதை ஒரு உயிரணு நுகர்ந்து உணர்வின் எண்ணங்கள் கொண்டு இயக்கும் தன்மை வந்து அதன் வழி கொண்டு மனிதனாக உருவாகின்றது.

மனிதனான பின் அகண்ட அண்டத்தில் பரவிக் கிடந்த உணர்வை தான் நுகர்ந்தவர்கள் சப்தரிஷி மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அவர்கள் அகண்டு சென்று எந்த அண்டத்திலிருந்து நுகர்ந்ததனரோ அதன் வழி வழி தொடர்ந்து என்றும் அழியாத நிலைகள் கொண்டு வேகா நிலையாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தச் சூரியன் அழியலாம். ஆனால், மனித உயிர் இந்த உணர்வின் தன்மையைப் பெற்றுவிட்டால் என்றும் அழியா நிலைகள் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

அந்த நிலை பெறுவதற்காகத் தான் ஞானிகள் அனைவரும் சென்றார்கள்.

அதிலே வீழ்ந்தவர்களும் ஏராளம். பின் அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தால் இன்று ஏங்கி இருப்போரும் ஏராளம்.

ஆனால், பாதை தவறிச் செய்து கொண்டிருப்போர் சாங்கியங்களைச் செய்துவிட்டு அதைப் பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்போர் பலர்.

நூற்றுக்கு ஒன்று இரண்டு என்று கூடச் சொல்லலாம். பத்து சதவீதம் தேறுவது கூட மிகக் கடினம். இதை குருநாதர் தெளிவாகக் காட்டினார்.

பல இன்னல்கள் எப்படிச் சேருகின்றது? நுகர்ந்த உணர்வுகள் எப்படி இருக்கின்றது? இதிலிருந்து நீ விடுபடும் மார்க்கங்கள் என்ன?

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நீ ஏங்கு. அதன் வலிமையை உனக்குள் சேர்த்துக் கொள். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உனக்குள் வளர்த்து அனைவரும் பெறவேண்டும் என்ற உணர்வை நீ செலுத்து.

அவர்கள் வளர நீ அதைக் கண்டு மகிழ்ச்சி பெறு. அதன் நிலைகளே உனக்குள் வளரும்.

அதை நீ  பெறுவாய். அனைவரையும் பெறச் செய்வாய் என்று குரு அருளை எமக்குள் பாய்ச்சிய நிலைகளைத் தான் உங்களுக்குள்ளும் பாய்ச்சுகின்றேன்.

இன்றைய செயல் நாளைய சரீரம். இன்று எந்த உணர்வை நாம் சேர்க்கின்றோமோ அடுத்து ஒளிச் சரீரம் பெறலாம்.

அதே சமயத்தில் இன்று வேதனை என்றால் வேதனையை உருவாக்கி அதைக் கொண்டு வேதனையை உணவாக உட்கொள்ளும் அந்தச் சரீரத்தைப் பெறலாம்.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு இன்று அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்ப்போம். நாளை ஒளியின் சரீரம் பெறுவோம்.

இந்த உடல் நமக்குச் சதமல்ல. ஆனால், இந்த உடலின் துணை கொண்டு தான் நாம் சப்தரிஷி மண்டலம் செல்ல முடியும்.

எனவே இந்த உடலில் இருக்கும் பொழுதே நம் நினைவின் ஆற்றலை மகரிஷிகளின் பால் செலுத்தி அதன் வலிமையை நமக்குள் வளர்ப்போம். தீமைகள் நம்மை நாடாது தடுத்துக் கொள்வோம்.

மெய்ஞானிகளுடன் ஒன்றுவோம். அந்த மெய்ஞானிகளுடன் ஒன்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

முந்திச் செய்யத் தவறிய நிலைகளிலிருந்து நம் மூதாதையர்களை விண் செலுத்த வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் மூலம் ஆயிரக்கணக்கோர் சேர்ந்த உணர்வுகளின் வலிமை கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்.

உடல் பெறும் உணர்வைக் கரையச் செய்வோம்.

அதன் துணை கொண்டு விண்ணின் ஆற்றலை அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பெறும் தகுதியைப் பெறுவோம். அந்த அருள் ஞானத்தைப் பெறுவோம்.

அழியா ஒளியின் சரீரம் பெறுவோம் என்று உறுதி கொள்வோம்.

July 25, 2016

நம் கண்ணின் நினைவாற்றலுக்குண்டான சக்தி

வீட்டிலே மிளகாயை வறுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அதிலே கருக்கல் வாசனை வந்து நாம் சுவாசிக்கும் பொழுது உயிரிலே பட்டால் நமக்குள் துடிப்பு வருகின்றது, திகைப்பு வருகின்றது, அந்த இடத்தை விட்டு நகர்ந்து போகும்படிச் செய்கின்றது.

ஆனால், நாம் பார்ப்பதோ மிளகாயின் நெடிதான் என்று எண்ணுகின்றோம். இதைச் சாதாரணமாக நினைக்கின்றோம். நாம் சுவாசித்த உணர்வுகள் உயிரிலே பட்டபின் அந்த உணர்வுகள் எரிச்சலாகின்றது அல்லது தும்மலாகின்றது, நமக்குள் நெடி கிளம்புகின்றது.

இது நம் உயிரிலே பட்ட பின் “ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றிவிடுகின்றது. எந்த வகையில் நுகர்ந்தாலும் முதல் முதலிலே நுகர்வதை ஜீவ அணுவாக மாற்றுகின்றது.

அந்த அணுவான பின் மீண்டும் அது நினைவாகின்றது. நினைவாகப்படும் பொழுது நம்மை என்ன செய்ய வைக்கின்றது? நம்முடைய நினைவினைக் கூர்மையாக எண்ண வைக்கின்றது.

பக்கத்து வீட்டில் மிளகாய் வறுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் இங்கே பேசிக் கொண்டிருந்தால் அந்த நெடி வந்தபின் இதை விட்டுவிடுவோம். அந்த நெடி மேல் கூர்மையாக நினைவைச் செலுத்துவோம்.

அந்த உணர்வின் தன்மையைச் சிறிது நேரம் அதைப் பாய்ச்சி விட்டால் அது அணுவாகவே மாறிவிடுகின்றது. அதற்கு ஆகாரம் அந்த நெடி கலந்த உணர்வுதான்.

அந்த மாதிரி நெடி கலந்த உணர்வுகள் நமக்குள் சேர்ந்துவிட்டால் நம்மையறியாமலே சில நேரங்களில் நமக்குத் தும்மல் வரும். மூக்கில் தண்ணீராக வரும்.

அந்த நெடி கலந்த உணர்வைச் சுவாசிக்கும் பொழுது எந்தெந்த உணர்வு வருகின்றதோ இவை அனைத்தும் அணுவாக உருவாகிவிட்டால் அதற்கு உணவு தேவை.

நாம் சோர்வடைந்திருக்கும் பொழுது அது உணர்வின் தன்மை உந்திவிட்டால் அந்த அணு அதற்கு வேண்டிய ஆகாரத்திற்கு உந்தும். அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

இந்த உடல் வழியாகக் காற்றிலிருப்பதை அந்த நெடி கலந்த உணர்வை அது கவரும்.

ஏனென்றால் மிளகாயை வறுத்து வைத்தாலும் அந்த உணர்வைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகத் தான் மாற்றுகின்றது. அதனுடைய வேலை அது.

நாம் நுகரப்படும் பொழுது அணுவாக மாற்றுகின்றது நமது உயிர். அந்த அணுவின் மலம் தான் நம் உடலாக மாறுகின்றது. உடலாக மாற்றுகின்றது உயிர்.

நன்மையானாலும் தீமையானாலும் நமக்குள் எப்படி வருகின்றது? அது எப்படி உடலுக்குள் விளைகின்றது என்ற நிலைகளை நாம் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

ஆகவே, அருள்ஞானிகளின் உணர்வுகளை உற்று நோக்கி அதன் மேல் நினைவினைக் கூர்மையாகச் செலுத்தினால் அது நமக்குள் அணுவாக உருவாகும்.

அப்படி உருவான அணு அது தன் பசிக்கு அந்த அருள்ஞானிகளின் உணர்வை உணவாக எடுத்து வளரும். அருள் ஞானம் நமக்குள் விளையத் தொடங்கும்.

July 24, 2016

ஞானிகள் காட்டிய நேரான வழிகளில் நாம் செல்லவில்லை, தவறான பாதையில் அழைத்துச் சென்றுவிட்டார்கள்

கடவுளின் அவதாரம் கூர்மை அவதாரம் இதிலே நம் நினைவினைச் செலுத்தச் செய்கின்றார்கள்.

தன் வாழ்க்கையின் நிலைகளில் மனிதன் நாம் எப்படி உருவானோம்?

மனிதனாக உருவான பின் பரமபதம் என்ற நிலையில் சொர்க்கத்தை அடைந்துள்ளார்கள். பல கோடி இன்னல்களிலிருந்து கடந்து இன்று துருவ நட்சத்திரமும் அதன் வழி பின்பற்றிச் சென்றவர்கள் அனைத்தும் இன்று சப்தரிஷி மண்டலங்களாக ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது நிலைகள் அடைந்துள்ளார்கள்.

இதைத் தெளிவாக்குவதற்காக பரமபதம் என்ற அட்டையையே வைத்துக் காட்டியுள்ளார்கள். வைகுண்ட ஏகாதசி அன்று இதை விளையாடுவார்கள். அதை எடுத்துத் தாயத்தை உருட்டுவார்கள். விடிய விடிய முழித்துக் கொண்டிருப்பதற்காக இதை விளையாடுவார்கள்.

விடிந்தபின் தூக்கமில்லாமல் சொர்க்க வாசல் என்று கோவிலுக்குள் சென்று தெய்வத்திற்கு அபிஷேகங்கள் செய்து சமையல் செய்து அவனுக்குக் கொடுத்துவிட்டால் சொர்க்கத்திற்கே நம்மை அழைத்துச் செல்வான் என்று செல்வார்கள்.

அதாவது வழக்கமாகப் போகும் பாதையை விட்டுவிட்டு இடைமறித்து குறுக்குக் பாதையில் சென்று சொர்க்க வாசல் என்று அதன் வழியில் சென்று அபிஷேகம் செய்வார்கள்.

குறுக்குப்பாதை வழியாகச் செல்வதை இதுதான் சொர்க்க வாசல் என்று ஆலயங்களில் காட்டியுள்ளார்கள். தவறாக யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் நம்மைத் தவறான வழிகளில் அழைத்துச் சென்றுவிட்டார்கள்.

ஞானிகள் காட்டிய நேரான வழிகளில் நாம் செல்லவில்லை. அந்த நேரான பாதைகள் அடைபட்டுவிட்டது. இன்றும் அந்தப் பாதையைத் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றது.

திறக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தாலும், “என்னமோ.., சாமி கதை விடுகிறார்..,” என்று சொல்பவர்களும் உண்டு. ஆக, நம்மால் முடியுமா என்று பலவீனப்படுத்துவோரும் உண்டு.

உண்மையின் இயக்கத்தைத் தெரிந்து கொள்வதற்கு குருநாதர் கடவுளின் அவதாரம் பத்து என்ற நிலைகளை எமக்குத் தெளிவாகக் காட்டினார்.

சாக்கடையிலிருந்து ஒரு பன்றி தன் உணவை எப்படி எடுக்கிறது என்றும் இந்தக் கூர்மையின் நிலைகள் எப்படி விளைந்தது என்றும் காட்டினார்.

இந்த உயிரணு உன்னை மனிதனாக்குவதற்கு எத்தனை இன்னல்கள் பட்டது? நீ எத்தனை வேதனைகள் பட்டாய்? புழுவிலிருந்து மனிதனாக எப்படி வந்தது? என்ற நிலையைத் தெளிவாக்கினார் குருநாதர்.

ஏனென்றால், நாம் புழுவிலிருந்து மனிதனாகப் பெற்ற அந்த ஒவ்வொரு உணர்வுகளும் இன்று இந்தப் பூமியில் உண்டு அது மறைந்துவிடவில்லை.

அதே சமயத்தில் வளர்ச்சியில் அதன் உணர்வின் துணை கொண்டு மனிதனாக வந்தாய். மனிதனாக வந்தாலும் இந்த வாழ்க்கையிலே நீ எதைக் கூர்மையாக எண்ணி உனக்குள் அதிகமாகச் சேர்க்கின்றாயோ அதன் வழி கொண்டு “மீண்டும் கீழே எப்படிப் போகின்றாய் பார்..,” என்று குருநாதர் அனுபவபூர்வமாகக் காட்டினார், உணர்த்தினார்.

நாம் நினைக்கின்றோம்…, மனிதனாகப் பிறந்தபின் வேறு வழிக்குப் போகமாட்டார்கள் என்று சில பேர் சொல்வார்கள்.

இதிலே விஷத்தின் அளவுகோல் எதுவோ அணுவின் தன்மை எப்படி மாற்றுகின்றது? என்று தெளிவாக எடுத்துக் காட்டினார் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அதைத்தான் உங்களுக்கு இப்பொழுது உபதேச வாயிலாகச் சொல்லி குரு காட்டிய வழியில் சாஸ்திரங்களில் காட்டிய பேருண்மைகளை உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

நமக்குச் சொர்க்கவாசல் நம் உயிர் தான். நம் குரு காட்டிய அருள் வழியினைப் பின்பற்றி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உயிர் வழியாகச் சுவாசியுங்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்யுங்கள். அருளாற்றலை உங்களுக்குள் விளையச் செய்யுங்கள். அருள் உணர்வுகள் நமக்குள் விளைந்தால் நேராக நம்மை அந்த ஞானிகள் இருப்பிடத்திற்கே அழைத்துச் செல்லும்.

அந்த ஞானிகள் காட்டிய வழியில் செல்வது கடினமல்ல எளிதானது தான். 

நாம் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் இந்த உடல் நமக்குச் சொந்தமாவதில்லை. ஆனால், அந்தச் செல்வம் சொந்தமாகின்றதா? இல்லை.

அருள் ஞானச் செல்வம் தான் நமக்குள் என்றும் நிலையாக இருக்கின்றது. இந்தச் செல்வத்தைக் காக்கவேண்டும் என்றாலும் இந்த உடலைச் சிறிது காலத்திற்குக் காக்க வேண்டும் என்றாலும் அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் சேமித்து வைக்க வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கை இருக்கும் வரையிலும் அந்தச் சேமிக்கும் தன்மை வரும்.

உதாரணமாக ஒரு குடத்தில் நீர் இருந்தால் அதில் ஒரு ஓட்டை விழுந்துவிட்டால் நீங்கள் ஊற்ற ஊற்ற வடிந்து கொண்டே இருக்கும். மிச்சம் இருக்காது.

இதைப் போல நமது வாழ்க்கை சிறிது குறை என்ற நிலை இருந்தாலும் அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியின் தன்மை தடையாகி நம்முடைய நிலையே தடுமாறச் செய்துவிடும்.

நாம் ஊற்றும் நன்னீரை அங்கே காண முடியாது. ஓட்டை சிறிது மேலே இருந்தால் அது வரையிலும் கொஞ்சம் தேங்கி இருக்கும்.

அது அடி பாகத்தில் இருந்துவிட்டால் ஊற்றிய பின் திரும்பிப் பார்த்தால் எல்லாமே காணாமல் போய்விடும். மனிதனின் வாழ்க்கையில் சேமித்த உணர்வுகள் அனைத்தும் மறைந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்குத்தான் உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி உங்களுக்குள் பாய்ச்சிக் கொண்டிருக்கின்றோம்.

எப்படி ஒரு குளவி புழுவைக் கொட்டி தன் உணர்வின் தன்மையைப் பாய்ச்சி அதனின் நினைவைக் கொண்டு வந்ததோ அதே போல உங்களுக்குள் திரும்பத் திரும்ப மெய்ஞானிகளைப் பற்றிய நினைவினைக் கொண்டு வருகின்றோம்.

ஒவ்வொரு மிருகமும் தன்னைத் தாக்கி உணவுக்காகத் தேடி மற்ற மிருகங்கள் வந்தாலும் அதனைக் கூர்மையாகப் பார்த்து தான் தப்பிக்கும் நிலையாக அதனின் உணர்வின் தன்மையைத் தன் உடலுக்குள் சேர்த்து அதனின் வலிமையைத் தனக்குள் வளர்த்துக் கொள்கிறது.

அந்த வலிமையத் தனக்குள் வளர்த்து உடலை விட்டு வந்தபின் அந்த அணுவின் மாற்றமாகி பரிணாம வளர்ச்சியில் வலுக் கொண்ட உடல்களாக மாறி அந்த வலுவின் துணை கொண்டு தீமைகளை அகற்றிடும் தன்மைகளைச் சேர்த்துச் சேர்த்து நம்மை மனிதனாக உருவாக்கியது நம் உயிர்.

மனிதனான பின் தீமைகளை அகற்றிய அருள் ஞானிகள் இன்றும் துருவ நட்சத்திரமாகவும் அதன் ஈர்ப்பில் சப்தரிஷி மண்டலமாகவும் வீற்றிருக்கின்றார்கள்.

உங்களின் நினைவாற்றலை உங்கள் உணர்வினை அங்கே அழைத்துச் செல்கிறேன்.

உங்களுடைய நினைவின் ஆற்றலை அங்கே துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்று சேர்த்துக் கொள்ளுங்கள்.

மகரிஷிகளின் அருள் உணர்வை இந்த வாழ்க்கையில் சேமிப்பாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தான் நம் உயிரான்மாவிற்குச் சேர்க்க வேண்டிய அழியாச் சொத்து.

இதை யாரும் அழிக்க முடியாது. இது என்றுமே வளர்ந்து கொண்டேயிருக்கும்.