ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2023

"கர்ம தியாகம்"

மனிதனின் நெற்றியும்... நெற்றிப்பொட்டில் அறுகோணக் கருவறை குணங்களும்... சிருஷ்டியையே... சிருஷ்டியைப் பிணைத்திடும் செயலும் காட்டப்பட வேண்டும்.
1.இந்த நிலை உணர்ந்து கொண்டால்
2.இவைகள் குவிப்பு "அகஸ்திய போக இடும்ப சூட்சம இரகசியங்கள்...!"

"மகரிஷிகளின் சர்வோதய சக்தி" வலுக்கூட்டும் கூட்டு தியானத்தின் போது கார்மேக வான் எழுந்த ஓசையுடன் விண் நீர் பெய்திடும் சூழலில்... தியானத்தின் ஈர்ப்பலையாக மின் நுண் காந்த சக்தி எனும் பதிவு படுத்திட்ட நிலை நிறைவின் போது... உபதேச உரையாக உரைத்திட்டதன் செயலில் "கர்ம தியாகம்" என்ற சூட்சமம் உள்ளது.

சூரியனை எண்ணி ஈர்த்திடும்... "ஓர் ஜெப மந்திரம் - கர்ண முறை வழி" என்று இரகசியப்படுத்தப்பட்டு உலகினுக்கு உரைத்திடாத் தன்மையாக வந்தது தான்.
1.ஆசான் சிஷ்யனுக்கு வெளியில் நீ இதை உரைத்திட்டால் உரைப்பவன் நரகம் எய்துவான்
2.ஆனால் இந்த வேத மந்திரம் கேட்பவன் சொர்க்கம் பெறுவான்.

இருந்தாலும் "இதை வெளியில் உரைத்திடாதே...!" என மொழிந்தார் ஆசான் தன் சிஷ்யனிடம்.

ஆனால் அப்பொழுது மௌனமாக அமர்ந்திருந்த அந்த சீடன் காலைப் பொழுதில் உயர்ந்த ஓர் மதில் மீது நின்று அனைவரையும் அழைத்தான்
1.எல்லோரும் நன்நிலை பெற்றிட வாருங்கள் என்று
2.அவன் ஆசானிடம் பெற்றுக் கொண்ட சூட்சும மந்திரத்தை "உலகறிய உரைத்தான்..."

ஆசான் கனன்று எழுந்து... அடா... என்ன காரியம் செய்தாய்...! இரகசியப்படுத்தப்பட்ட நிலையை உரைத்தாயே... ஏன்...? என்று கேட்கின்றார்.

சீடனோ... "கேட்டவர் அனைவரும் சொர்க்கம் புகுவர்" என உரைத்த ஆசானே...!
1.இதோ இத்தனை ஆத்மாக்களும் கடைத்தேறட்டும்...
2.நான் ஒருவன் மட்டும் கேட்பதில் "ஸ்ரீமன் நாராயணன் பதம் பெறுவேன்..." என்ற எண்ணத்தை
3.இதோ...! இங்கே குழுமி இருக்கும் சிரத்தை மிக்க ஆத்ம ஜீவன் ஒவ்வொருவரிலும் நான் அந்தப் பரந்தாமனையே காண்கின்றேன்.
4.இந்தக் "கர்ம தியாகம்" உள்ளன்புடன் உவந்த எனக்கு "என் நிலை செய்வதாகிலும் ஆகுக...! என்றே உரைத்திட்டான்.

அப்படி வெளிப்படுத்திய அந்தப் பெரியோர் இன்றும் ஒளி நிலை பெற்றிருக்கின்றனரப்பா.

அதே சமயத்தில்... மறைமுகப்படுத்துவது வளர்ச்சிக்கே...!

நுணுகி ஆய்வு செய்வதிடும் சிந்தனையின் வளர்ச்சி... பக்குவம் கொண்டிட்ட நிலையின் அடுத்த வளர்ச்சிக்கு "மகரிஷிகள் உவந்து வழிகாட்டுகின்றார்கள்..."

நீர் பாய்ச்சித் தானியங்கள் விளைச்சல் எனும் மகசூல் பெற்றிடும் ஓர் உழவன் "கேணியில் நீர் நிறைந்திருக்கின்றதே...!" என்று உட்கொண்டிடும் தேவைக்கு மேல் பாய்ச்சிட்டால்... வளர்ப்பின் பலன் செழிப்பைக் காட்டினாலும்... பெற்ற பயனைப் பெற்றுத் தந்திடும் சூட்சும நிலை காட்டிடாது.

1.பக்குவம் கண்டு உபதேசங்கள் அளிப்பதில் தடை ஒன்றுமில்லை.
2.மாமகரிஷிகள் ஆசிகள் என்றும் உனக்குத் துணை நிற்கும்.

ஞானத்தின் வளர்ச்சி எப்போது வரும்...?

நமது உயிரின் தன்மை இயக்கப்படும் போது பிறரின் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகளைச் (நல்லதோ கெட்டதோ) சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்ந்தாலும்

1.கண்ணின் புலனறிவு நமது ஆன்மாவாக இங்கே மாற்றுகின்றது.
2.இதைத் தான் நாம் நட்சத்திரங்கள் என்று சொல்வது.

எதன் தன்மை வருகின்றதோ ஒன்றுக்கொன்று கலவையாகும் பொழுது அந்தக் கலந்த உணர்வு நாம் சொல்வோம் "எனக்குப் பதட்டாமகிறது என்று...!"

தீமை செய்கின்றான் என்று அவன் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வுகள்... கண் அவனைப் பதிவாக்கி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் இழுக்கப்படும் பொழுது... அதாவது துருவம் எந்தப் பகுதியில் இருக்கின்றதோ அதனின் நேர் வரிசையில் தான் இழுக்கும்... அதே போன்று
1.நமது கண்ணின் பார்வை எதன் பாதையில் இழுக்கின்றதோ நாம் எண்ணிப் பார்க்கும் பொழுது
2.அதை இழுக்கும் அந்தப் பகுதி வழியாக அதன்வழி பதிவான பின் அந்த உணர்வுகள் ஆன்மாவாக மாற்றுகின்றது.

எந்த மனிதனை நாம் உற்றுப் பார்க்கின்றோமோ அந்த உணர்வு அந்த உடலில் இருந்து வெளிவருவதை இழுத்து நம் ஆன்மாவாக நம் ஈர்ப்பு வட்டதிற்குக் கொண்டு வந்து சேர்ப்பிக்கின்றது.

அப்படிச் சேர்ப்பிக்கும் போது பல விதமான உணர்வும் உள் அடங்கி உணர்வுகள் எதிர்த்து வந்த பின் கலக்கங்கள் வருகின்றது.
1.நல்ல உணர்வுகளும் அவருடைய தீமையான உணர்வுகளும் இங்கே கலக்கப்படும் பொழுது
2.நுகர்ந்த பின் நமக்குள் பதட்டம் ஆகின்றது.

இது எல்லாம் இயற்கையில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகள் தான்.

அகஸ்தியன் இந்த உண்மைகளை உணர்ந்தவன் அவன் தன்னுடைய வளர்ச்சியின் பருவத்தில் வரப்படும் போது அவனுக்குத் திருமணத்தைச் செய்து வைக்கின்றார்கள்.

திருமணமான பின் தன்னுடைய மனைவிக்குத் தான் பெற்ற உணர்வுகள் அனைத்தையும் செவி வழி ஓதுகின்றான். உண்மையின் இயக்கம் இதுதான்... இதையெல்லாம் நீயும் பார்க்க வேண்டும் என்று உணர்த்துகின்றான்.

அதைக் கேட்டறிந்த மனையாளும் அதை ஏற்றுக் கொண்டு அதே வழியில் வழி நடந்து வருகிறது.

கணவனால் கண்ட உண்மைகள் தனக்குள் வளர்ந்து அதையெல்லாம் தன் கணவன் பெற வேண்டும் என்று எண்ணுகிறது.

தான் சொன்ன உணர்வுகள் மனைவி கண்டுணர்ந்ததை அகஸ்தியன் தன் மனைவி மீண்டும் உயர வேண்டும் என்று இரு உணர்வுகளும் ஒன்றாகும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
1.இதுவும் ஒரு சந்தர்ப்பம் தான்.
2.இவ்வாறு இருவரும் இணையப்படும் பொழுது உயர்ந்த உணர்வாக அங்கே வளருகின்றது.

காரணம் ஆண் பெண் என்ற செடிகள் இருந்தால்தான் அது விளைகின்றது... நல்ல அலனைக் கொடுக்கின்றது.

நட்சத்திரங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் தான் உண்டு. ரேவதி கார்த்திகை ரோகிணி என்று ஆண் பெண் என்ற நிலையில் வரப்படும் பொழுது... அது மின்னலாக உருவாகி சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிப் பல அணுக்களாக மாறினாலும்... எந்த நட்சத்திரத்தின் துகள்கள் எதனுடன் எது கலக்கின்றதோ... அதற்கொப்ப தான் வளர்ச்சியும் இயக்கங்களும்.

பெண்பாலின் நட்சத்திரம் ஆனால் அது மற்றொன்றைக் கவர்ந்து செடிகளையோ பாறைகளையோ வளர்க்கும் தன்மை வருகிறது. அதன் வழி வளர்ந்த பின் மற்றதுடன் கலந்து இந்த உணர்வு வளர்ச்சி பெறும் தன்மை வருகின்றது.

இதைப் போன்று தான் நமது உயிரும்...!

கார்த்திகை நட்சத்திரத்தின் தன்மை ஆண் பாலாக இருந்தாலும் ரோகிணி நட்சத்திரம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அதன் உணர்வின் துகள்கள் தூசிகள் மோதப்படும் பொழுது இந்த மோதலில் அதனைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும்... வியாழன் கோளிலிருந்து வரக்கூடிய சத்து "குரு" - விஷத்தன்மையான கதிரியக்கங்கள் வரும்பொழுது இதைக் கண்டு இது அஞ்சி ஓடுவதும் கார்த்திகை நட்சத்திரத்துடன் மோதும் பொழுது அதற்குத்தக்க மோதி "ஒன்றுக்கொன்று துடிப்பின் நிலைகள் வருகின்றது..."
1.துடிப்பின் நிலை வரும் பொழுது மற்ற கோளிலிருந்து வரும் தூசிகளை இதை ஈர்க்கும் சக்தி வருகின்றது
2.ஈர்க்கும் சக்தி வந்த பின் அது அடைபட்டுவிடுகிறது... அந்தத் துடிபின் நிலையே உயிர்...!

எந்தெந்தக் கோளின் தன்மை அடைபட்டிருக்கின்றதோ துடிப்பால் ஈர்க்கும் நிலை வரும் பொழுது... உராய்ந்து.. அதே உணர்வின் தன்மை தனக்குள் இணைந்து அது அணுவின் தன்மையாக உருவாக்கி... அதன் மலத்தின் தன்மை கொண்டு அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து விடுகிறது.

இதைப் போல் இந்த உணர்வின் தன்மை உருவான இந்த நிலைகளை அன்று அகஸ்தியன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். இப்படித்தான் உயிர் உருவானது என்று...!

மற்ற துகளின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று கலக்கப்படும் பொழுது எதன் ஈர்ப்புக்குள் வருகின்றதோ சூரியன் ஒளிக்கற்றைகளால் தாக்கப்படுகின்றது.

அந்த உணர்வு பொறியாக மாறி அதன் உணர்வுக்கொப்ப பாறைகள் விளைகின்றது என்பதை அகஸ்தியன் அறிந்த அந்த உண்மைகளை நாமும் அறிந்து கொள்வது நல்லது.

விஞ்ஞான அறிவில் எத்தனையோ பாட நிலைகளை புரட்டி பார்த்து அவர்கள் படித்துணர்கின்றார்கள். ஒரு இன்ஜினியரிங் என்றால் நான்கு வருடம் படிக்கிறார்கள் பௌதீகத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்... டாக்டர் என்ற நிலைக்கு வர வேண்டும் என்றால் அதற்கு ஐந்து வருடம் என்று படிக்கின்றார்கள்... தெளிவாகத் தெரிந்து கொள்ளும் நிலை வருகின்றது.

ஆனால் இப்பொழுது உபதேசிப்பது அனைத்தும்
1.நான் படித்து வரவில்லை... கற்று வரவில்லை...
2.குரு காட்டிய உணர்வின் தன்மையை மோதலில் உணர்வின் உணர்ச்சியாக நான் அறிய முடிகின்றது.

குரு எனக்குப் பதிவாக்கியது போன்று... அதை நான் அதை நுகர்ந்தது போன்று...
1.அந்த இயற்கையின் உணர்வுகள் உங்களுடன் மோதப்படும் பொழுது அதை அறிந்திடும் அறிவாக உங்களுக்குள் வரும்.
2.ஞானம் என்ற நிலையில் உங்களுக்குள் வளர்ச்சியாகும்

விஞ்ஞானத்தால் வரக்கூடிய எத்தகைய விஷத்தன்மையிலிருந்தும் மீட்டிட... அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் அதைப் பிளந்து நமக்குள் அறிவின் தன்மைகொண்டு காக்கும் தன்மையாக உங்களை மாற்றி அமைக்கும்.

அத்தகைய நிலை நீங்கள் பெற வேண்டும் என்றும் வளர்ச்சியின் பாதையில் நீங்கள் வரவேண்டும் என்று தான் என்பதற்குத்தான் இதை உங்களுக்கு தெளிவாக ஊட்டிக் கொண்டு வருகின்றேன்.

மனிதனாக உயிர் உருவாக்கிய பின் பிறவி இல்லாத நிலையை நீங்கள் அடைய வேண்டும். அப்படிப்பட்ட நிலை அடைந்தவன் தான் அகஸ்தியன்.

December 30, 2023

சோமாஸ் ஸ்கந்தன்

சிருஷ்டியின் தொடராக மகரிஷிகளால் மறைமுகப்படுத்தப்பட்ட நிலைகள் தெளிவு பெறும். படைப்பாக்கும் உயிரணுக்கள் ஜீவன் கொள்ளும் செயலில்

1.சிதாகால மண்டலம் என்றே தன்னுள் கவன ஈர்ப்பு நரம்பு நெற்றி பொட்டினுள் எண்ணங்களும்...
2.எண்ணத்திற்கொப்ப வாசனைகளும் வாசனைக்கொப்ப ஜீவன் கொண்டிடும் அணுக்களின் செயலாக
3.சிருஷ்டிக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிரம்மனே.

உலகோதய நிலை நாடிடும் மனிதன்... நொடிப்பொழுதினுள் அதற்கும் குறைவாக உயிரணுக்கள் எண்ணத்திற்கொப்ப ஈர்த்து... சிருஷ்டியின் செயல் உலகோதய நாட்டமாக மோகத்தின் குணங்கள் முதன்மையாகக் கொண்டிடும் பொழுது... சரீரத்தின் சகல அணுக்களும் சக்தி கொண்ட சூட்சுமம் "ஓம்" பொருள் என்னும்... ஓங்கார ஒலி கொண்டு ஒளி காட்டும் "தன் ஆத்ம வலுவை உணர்வதில்லை..."

வேல் என்ற அறிவு நற்குணங்கள் என்ற முருகன் கைக்கொள்ளும் செயலில்... அகங்காரம் ஆணவம் மோகவலைப்படுத்தும் "சிருஷ்டி என்றிட்ட குணங்களென்னும் பிரம்மன்..." தன் செயல் ஒழித்து நற்குணங்கள் வசம் சிறைப்படுகின்றான்.

பின் துர்க்குணங்கள் தன் செயல் விடுக்க
1.நற்குணங்கள் சிருஷ்டிப்பதே அதுவும் பிரம்ம தத்துவமாக
2.உலகோதயம் எனும் ஈர்ப்பின் நிலை விடுத்து கை கொண்ட அறிவாகக் காட்டுவதே
3.சிருஷ்டியையே முருகன் சிருஷ்டித்தான்... "பிரம்மாவைச் சிறை பிடித்தான்...!" என்று சொல்வதில் ஓர் சூட்சமப் பொருள் உண்டு.

நெற்றிப்பொட்டு எனும் கவனத்தின் ஈர்ப்பில் உள் நுழைந்திடும் ஈர்ப்பினும் எண்ண நினைவலையாம்... அணுக்கள் அறுகோணக் கருவறை என்ற அறிவின் சூட்சமம் செயல் கொண்டிட... அணுக்களின் எந்த வீரிய குண சக்தியோ அந்தச் சக்தியே செயலாக வேல் தோன்றுவதும் தோன்றாதிருத்தலும் துர்க்குண சம்ஹாரச் செயலுக்கு மனிதன் கொண்டிடும் வைராக்கியம் அந்தச் செயலின் வலுக் கூட்டும்.

1.சப்த கன்னிகள் சாப விமோசனம் என்பதுவும் சூட்சமப் பொருள் தான்
2.ஒளி கொண்டு செயல்படும் சப்தரிஷிகள் சப்தத்தின் நாத வாகினி "உலகத்தின் ஈர்ப்பில் செயல்படுவது சாபம்..."

அத்தகைய சிருஷ்டி அன்றி "சக்திவேல் எனும் அறிவு செயல் கொண்டிட..." உலகோதயம் மாற்றிட்ட சப்த நாதங்களைத் தன்னுள் மெய் ஒலி ஒளி சக்தியாகச் சப்தரிஷிகளின் படைப்பே "நேர்முகமாகக் கொள்தல் என்பது ஈர்ப்பின் நிலை விடுத்த சாப விமோசனம்..."

1.எண்ணத்தின் உயர்வே அறுகோணக் கருவறை உயர்த்திட்ட பீடம்...!
2.அதனில் உயிராத்ம சக்தியை அளந்திடச் செய்திட "நீல வண்ணம்" காட்டும் குளிர்விப்பு சக்தியாகத் தோற்றம் காட்டும்.

பர வெளியில் உருக்கொள்ளும் உயிரணுக்கள் அதனின் சுழற்சி அறுகோணத் தன்மையதாய் அமில குண ஈர்ப்பின் எண்ணம் கொண்ட ஜீவன் பெறுகின்றது. சிருஷ்டியின் இரகசியங்களை இப்படி பிண்டத்தில் கண்டனர் மகரிஷிகள்.

சரீரத்தில் கண்ணுற்ற செயல் எண்ண ஜீவித செயல்பாடு "சிரசின் நெற்றிப் பொட்டில் அறுகோணக் கருவறையாக"
1.அதனுள் எண்ண குண வாசனை சுவாச அலை எனும் ஈர்ப்பாகச் செயல் கொண்டிட
2.சிவசக்தி சுழுமுனை நாடிகள் மூலாதாரம் தொடங்கி பிடரிக்கண் பார்வையுடன் இணைந்து கொண்டு
3.அறுகோணக் கருவறையின் உள் நிகழ்வாகச் செயல் கொண்டு எண்ணங்களின் ஜிவித சிருஷ்டியே நடைபெறுகின்றது.

பர வெளியின் உயிரணுக்கள் தன்மையில் உள்நிகழ்வாகச் செயல் கொண்டிடும் சூட்சுமங்களை... சித்தர்கள் மனித சரீரத்தில் செயல் கொண்டிடும் சூட்சுமத்தையே ஒப்பு நோக்கி... உதயம் கொண்டிடும் அணுக்களின் தன்மையை உணர்த்தினர்.

அணுக்களின் செயல்பாட்டைச் சரீர நிகழ்வாகக் கண்ட மாமகான்கள்
1.சிவன் கையில் முத்தலை சூலாயுதம் சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் என்றே
2."சூல்" என்று அணுக்களின் ஜீவித செயலின் கரு என்றே மறைபொருள் காட்டினர்.

ஏழு பிறவிகள் என்று கூறியவற்றுள் அணுக்களின் உதயம் காட்டிடும் செயலில்... "அறுகோணங்கள்" உலகின் ஜீவித அணுக்கள் கொண்டிடும் "பிறப்பின் இரகசியங்கள்" எனவும்... அந்த உயிரணு தனக்கு ஒத்த அமில குணத்தன்மைகள் ஈர்த்துக் கொண்டிட்டு அறுகோண சூட்சுமத்துள் எந்நிலை வலுக்கொள்கின்றதோ அதுவே அந்த உயிரணுவின் ஜீவித நிலை.
1.அறுகோணத்தின் மையப் பகுதியே
2.தெய்வப்பிறவி எனும் ஏழாம் நிலை.

அறுகோணச் சக்கரம் என்று உரைத்த பின்பு... வாசனையின் குணங்கள் மனிதச் சரீரத்தினுள் கவன ஈர்ப்பெனும் நெற்றிப்பொட்டில்... அறுகோணங்களின் உட்குவிந்த பகுதிகள் நற்குணங்கள் எனவும்... பிறப்பின் சூட்சுமத்தில் தாய்மைப் பேறு குழந்தைக்கு ஊட்டுவது அன்பு பரிவு பாசம் என்ற முத்தொடர்களும்... உயிரணு கருக் கொண்ட நிலைத் தொட்டு ஜீவித சரீரம் பெற்றிடும் எண்ணத்தின் ஈர்ப்பில் தாய்மையால் ஊட்டப்படுகின்றது.

ஞானம் வீரம் சாந்தம் என்றிட்ட குணங்களுக்கே... உள்முகமாக உயிராத்ம சக்தி வலுக் கொண்டிடும் அந்தச் செயலுக்கே
1.அந்த மூன்றின் குணங்களுக்கு வீரிய சக்திகளை
2.ஈர்ப்பினால் ஊட்டப்படல் வேண்டும் "அதுவும் தியானம் கொண்டே..."

சக்தியின் கையில் முத்தலை சூலாயுதம் "இடப்பக்கம் வளைந்திட்ட நிலை கரு கொண்டிடும் உயிரணுக்களின் ஈர்ப்பு... பின்பு அந்த உயிரணுவைப் பேணுகின்ற தன்மை மையப் பகுதியின் கூர்வேல்... முத்தலை சூலாயுதத்தின் வலப்புற வளைவே அந்த ஜீவனை ஈன்றிடும் தாய்மைப் பெறும் என..." - சிருஷ்டியின் இரகசியங்கள் காத்தலாகக் கரங்களில் கொண்ட நிலையும் "சித்தர்களால் காட்டப்பட்டதே..."

ஈஸ்வரரின் கையில் முத்தல சூலாயுதம் உயிரணுக்கள் உதயம் காட்டித் தாய்மைப் பேற்றின் முழுமைக்கு அளித்தலால்... ஈஸ்வரர் கொண்ட முத்தலை சூலாயுதம்
1.சரீர அமைப்பில் சிவசக்தி நாடிகள் சுழுமுனையில் ஒன்றி உயர் ஞானம் வாய்க்கப் பெறின்
2.அங்கு "சோமாஸ் ஸ்கந்தன்" (சிவம்+சக்தி+முருகன்) உதயமாகின்றான்.

சூரிய சந்திர ஒளி பெற்றவன் என்ற பெயர் நாமச் சூட்சுமம் மூலாதாரச் சக்தியாக எழுகின்ற ஊர்த்துவ சக்தி... அருகோணக் கருவறையுள் முத்தலை சூலாயுதம் செயல் கொண்ட நிலை... ஞானவேல் என்ற சக்தியாகக் காட்டுவது...
1.உயர் ஞான நற்குண எண்ணங்கள் நெற்றிப்போட்டில் மோதிடும் செயலாக
2.தெய்வப் பிறவி எனும் மைய நிலையை அறிவால் பொருத்தி... சுடர்தலால் "மனிதனே சிஷ்டிக்கும் பிரம்மன் ஆகின்றான்..."

எலக்ட்ரானிக் கருவிகளை அதிகமாக உற்று நோக்குபவர்களுக்குத் "தலைவலியும் தலை சுற்றலும் வருவதன் காரணம்..."

விஞ்ஞான அறிவால் இந்த உலகமே நச்சுத்தன்மை அடைந்து கொண்டுள்ளது. ரேடியோ டிவி ஒலி/ஒளிக் கற்றைகளாக அது பரவிக் கொண்டுள்ளது. மனிதன் உற்றுப் பார்த்துக் கேட்டறியும் போது தனக்குள் பதிவாகி விடுகிறது.

எப்படி...?

1.கெமிக்கல் கலந்த உணர்வுகளை இயந்திரத்துணை கொண்டு எலக்ட்ரிக் எலக்ட்ரான் என்று ஒலி/ஒளிக்கற்றைகளாக மாற்றுகின்றனர்..
அதன் மூலம் உருவங்களைப் பார்த்து அந்த உணர்வின் ஒலிக்கற்றைகளை நாம் செவி வழி கேட்டு
3.உணர்வின் தன்மை நுகரும் பொழுது நம் உடலுக்குள்ளும் இது கலந்து விடுகின்றது.

ஒளிக்கற்றைகள் பரவப்படும் பொழுது கண்ணுற்று இந்த உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வின் அறிவாகத் தெரிகின்றோம். "எந்தக் கெமிக்கலில் கலந்து" இதைச் சேர்த்தானோ நிச்சயம் இது இயக்கும்.

எதிலே கலக்கின்றதோ விஷத்தின் உணர்ச்சிகளாக அது இயக்கப்படும் பொழுது இரத்த நாளங்களிலே சிறுகச் சிறுக... சிறுகச் சிறுகச் சேருகின்றது.

நம் உடலில் உள்ள அணு செல்களுக்கும் இந்த உணர்வின் விஷத்தன்மைகள் கலந்து விடுகின்றது
1.அதிகமாக டிவி கம்ப்யூட்டரைப் பார்த்தவர்களுக்கு தலைவலி நிச்சயம் வரும்
2.அதே சமயத்தில் கை கால் குடைச்சலும் அதிகமாக இருக்கும்.
3.சில நேரங்களில் அதைப் பார்த்த பின் இந்த உணர்வின் அழுத்தங்கள் ஆகி மோதலாகும்போது
4.நடந்து போகும் போது சில பேருக்கு தலை சுற்றும்... கீழே தள்ளுகின்ற மாதிரிக் கொண்டு போகும்.

ஆனால் டாக்டரிடம் சென்றால் இரத்தக் கொதிப்பு... அது... இது... என்று எதையெதையோ பரிசீலனை செய்து காசை பறிக்கும் நிலைகள் தான் வரும்.

ஏனென்றால் டி.வி. கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் கருவிகளை "நெருங்கி உற்றுப் பார்க்கப்படும் போது" இத்தகைய நிலை வருகிறது.

பார்க்கலாம்... ஆனாலும் பார்த்த பின் மாற்றி அமைக்க துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்து அந்த வீரியத்தைத் தணித்துப் பழகுதல் வேண்டும்.

சாதாரணமாக... அசுத்தமான இடங்களை நம் கையை வைத்துத் தான் அதைத் தூய்மைப்படுத்துகின்றோம். ஆனால் அதற்குப் பின் அந்தக் கையில் இருக்கக்கூடிய அழுக்கைத் துடைக்கின்றோம் அல்லவா.

அதைப் போன்று நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை அதை எல்லாம் மாற்றி அமைத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து பழகுதல் வேண்டும்.

இயற்கையின் இயக்க நிலைகளை ஆதியிலே அகஸ்தியன் கண்டுணர்ந்தான். நஞ்சை வென்றிடும் சக்தி பெற்றான். விஷத்தை ஒடுக்கிடும் சக்தியாக அவன் வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்தப் புலன் கவர்கின்றது.

அவன் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்து அந்த அறிவின் உணர்ச்சியாக மாற்றி அமைத்தானோ அதன் உணர்வுகள் இங்கே பரவிக் கொண்டுள்ளது. அதை எல்லாம்
1.நமது குரு துணை கொண்டு அவர் ஊட்டிய அந்த உணர்வின் தன்மையை உற்று நோக்கி
.அதன் உணர்வைக் கவர வேண்டும் என்ற ஏக்கத்தால் அதைப் பெற்றுக் கொண்டதனால்
3.அகஸ்தியன் கற்றுணர்ந்த உணர்வின் அறிவும் எனக்குள்ளும் (ஞானகுரு) வருகின்றது.
4.அதை நீங்களும் பெற வேண்டும்... உங்களுக்குள்ளும் அது வளர வேண்டும்.
5.அவன் நஞ்சை ஒளியாக மாற்றிய ஆற்றலை நீங்களும் பெற வேண்டும்.
6.விஞ்ஞானத்தால் வரும் நஞ்சுகளை எல்லாம் வென்று அதை ஒளியின் சுடராக மாற்ற வேண்டும்.

December 29, 2023

"குரு அருள்" என்றுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்

வேதனை என்ற உணர்வு உட்புகுந்து உடலுக்குள் சென்று தீமைகள் செய்யாது தடுத்தல் வேண்டும். அவ்வாறு தடுக்க வேண்டும் என்பதற்காகத் துருவ நட்சத்திரம் ஒளியின் கற்றையாக இருக்கும் அந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் பதிவாக்கி உள்ளேன்.

1.அதை எடுக்கும் திறன் உங்களுக்குள் வர வேண்டும் என்பதற்காக மணிக்கணக்கில் உபதேசித்து
2.ஒவ்வொரு உணர்வின் மாற்றங்களை நீங்கள் அறிந்திடவும்
3.அறிந்த உணர்வு (ஞானம்) உங்களுக்குள் பதிவாகவும்
4.அதனின் நினைவு கொண்டு தீமைகளை அகற்றிடும் அந்த வலிமை பெற வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

எப்பொழுது தீமை என்ற உணர்வுகள் வருகின்றதோ அப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துப் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வை எண்ணும் போது உயிர் எலக்ட்ரிக்... எண்ணங்கள் எலக்ட்ரானிக்.

கோபமான உணர்வைப் பதிவாகிவிட்டால் அதை நினைக்கும் பொழுது அது எலக்ட்ரானிக்காக மாறி... கம்ப்யூட்டரில் இயக்குவது போன்று அவன் உணர்ச்சி கொண்டு நமது உணர்வின் குணங்கள் அப்படி இயங்கி விடுகின்றது.

ஆகவே தான் தீமை என்ற உணர்வு நமக்குள் உட்புகாதபடி தடுக்க உயிரான ஈசனை எண்ணி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரவையின் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

பல முறை துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்துள்ளேன் அந்த உணர்வினை மீண்டும் எண்ணி... காற்றுக்குள் மறைந்திருக்கும் உணர்வின் தன்மை நீங்கள் கவர்ந்து இங்கே இடைமறித்தால் இந்த வேதனை உள்ளே புகாதபடி தடுத்து நிறுத்தப்படும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு தனக்குள் பாதுகாப்புக் கொடுத்து...
2.தீமை செய்யும் அணுக்கள் அந்த அருள் ஒளி கண்ட பின் அது அடைபட்டு விடுகிறது.

ஒவ்வொரு அணுவின் தன்மையும் நம் இரத்தத்தில் சுழன்று வரும் போது தீமை செய்யும் உணர்ச்சிகளை உந்தினால் தான் அது தன் உணர்வை அதிகமாகக் கவரும்.

ஆனால்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரரொளி பெற வேண்டும் என்று உள் செலுத்தினால்
2.உடலுக்குள் இருக்கும் நிலைகளை எல்லாம் இது மறைத்து விடுகின்றது.

தீமையான உணர்வு உள்புகாதபடி தடுத்து நின்ற பின் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் யார் துன்பப்படுகின்றாரோ வேதனைப்படுகின்றாரோ அவர்கள் உடலில் அது படர்ந்து அவருடைய துன்பங்கள் அகல வேண்டும் என்று நம் உணர்வின் சொல்லால் அவர் செவிகளில் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது அவர் நம்மை உற்றுப் பார்த்தால் நம்மிடமிருந்து வெளிப்படும் உணர்வுகளை நுகர்ந்து அந்த உணர்வு உயிரிலே பட்டு அந்தத் தீமைகளை அகற்றும் சக்தியாக மாறும்.

இதைச் செய்... நீ துருவ நட்சத்திரத்தின் சக்தி பெறுவாய்...! என்றால் அந்த நினைவைக் கூட்டினால் அவர்களும் காக்கப்படுவார்கள்.

நடைமுறை வாழ்க்கையில் வேதனைப்படுகிறான் என்று நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் பதிவானால்... அந்த உணர்ச்சிகள் உந்தி... கண் வழி ஆன்மாவாக மாற்றி... உயிருடன் இணைக்கச் செய்து... இரத்தத்தில் கலக்கச் செய்து... அதை உணவாக எடுத்து வேதனைப்ப்டும் அணுக்களாகப் பெருகத் தொடங்கி விடுகின்றது. நல்ல அணுக்களுக்கு இடமில்லாது போய்விடுகிறது.

அதை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்ற ஆசையில் இதைச் சொல்கிறேன்.
1.குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்
2.அவரால் தான் நாம் இதை அறிய முடிகின்றது.
3.அவரின் உணர்வை உங்களுக்குள் பாய்ச்சுகிறேன்

அதை நீங்கள் ஏங்கிப் பெறும் போது நீங்கள் நுகர்ந்ததை உங்கள் உயிர் அதைக் கருவாக்கி உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கிவிடும்.
1.அதன் துணை கொண்டு உங்களைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக
2.குரு அருள் உங்களில் வளர வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்வது..

அறுகோணக் கருவறை எழுதி... அதன் மீது முத்தலை சூலாயுதம் எழுது

அறுகோணக் கருவறை என்பதும் கர்ப்பவாசம் எனப்படுவதும் ஜீவன் கொள்கின்ற அணுக்களின் செயலாக நடைபெற்றிடும் ஓர் சிருஷ்டி..
1.சகல ஜீவன்களும் இதனுள் அடக்கம்.
2.சிருஷ்டிக்கும் காரண மூலம் அதன் செயலைக் காட்டுவதே முத்தலை சூலாயுதம்.

அறுகோணக் கருவறை சிருஷ்டிக்கும் நிலையில்... எண்ணத்திற்குகந்த பிறப்பிற்கு வந்திடும் உயிரணுக்கள்... ஈர்த்து நிலையாக நின்று உயர்த்திச் செயல்படுகின்ற சுழற்சி.

பஞ்சபூதங்களின் சேர்க்கையாய் உருக் கோலம் கொள்கின்ற அந்த உயிரணுக்கள் உலகின் ஜீவித வாழ்க்கை கொண்டு செயல்படும் ஜீவன்கள் தாவரங்கள் நீர் வாழ்பவை ஊர்வன உலவுகின்ற மிருகங்கள் பறக்கும் பறவைகள் மனிதன் என்பவையே அறுகோண சக்கரத்துள் உயிரணுக்களின் சிருஷ்டியாக ஜீவன் கொள்பவை.

1.முத்தலை சூலத்தின் வளைந்த பகுதி... சரீரத்தினுள் நுழைந்திடும் அணுக்கள்
2.சூலத்தின் கூர்மையான மையப்பகுதி... உயிரணுக்கள் அறிவின் தொடராக கர்ப்பவாசம் காக்கப்படும்
3.மற்றொரு வளைந்த பகுதி... ஜீவன் கொண்டு பிறப்பின் செயலாக வெளி வருவது.

December 28, 2023

காளிதாசன் உணர்த்திய மெய்ஞானப் பாடம்

 

"சாதாரணமாகத் தன்னைக் காட்டிக் கொண்டிட்ட வேதாந்த நாதன்" வார்த்தைகள் ஆடி மௌனமாக அமர்ந்திட்ட விசாலவதி தேவியைப் பேச வைத்திட்ட செயல்... சாகுந்தலம் என்ற விசுவாமித்திர காலபங்கம் வெளிப்பட்டு உண்மை நிலையை உலகத்தவர் உணர்ந்திட வாயுரைத்த பிள்ளையாகக் "காளியின் தாசன்" ஆயினர்.
1."ஓர் தாயின் இரு குழந்தைகள்" என்ற சூட்சுமமே
2.விசாலவதி தேவியைப் பேசிட வைத்தது.

எங்கும் வியாபகமாய் இந்த பூமியின் சுவாசத்தில் செயல் கொண்டிடும் காற்று... அனைத்து உயர் ஜீவன்களும் சுவாசம் கொண்டே அந்தக் காற்றினை உட்கொள்கின்றன.

மெய்ஞான விழிப்பாக்கும் செயல் கொண்டிடும் ஆத்ம ஞானம் பெற்றிட விளையும் செயல் தன்மை கொள்பவர் யாராயினும்...
1."சுவாச கதியினால்"
2.இந்த பூமியில் மாத்திரமன்று...! எங்கும் எதிலுமாக வியாபித்தே படர்ந்துள்ள சூட்சும சக்திதனைப் பெற்றே உயர்வு நிலை காணலாம்.

தன் நிலை வளர்ப்பாக்கிடும் செயலின் பக்குவத்திற்கு வரும் போது... ஞானி எண்ணிட்ட அனைத்து செயல்படு காரியங்கள்... தங்கு தடையற்ற வழிப் பாதையாக ஆக்கம் காட்டும்.

வேதாந்த நாதன் செயல் கொண்ட காரியங்கள் பேரருள் சூட்சும இலயமாக விளங்கிதை... அதனை எண்ணி உணர்ந்து செயல்படுகின்ற நிலை பெற்றோர்களுக்கெல்லாம் இன்றளவும் அவை அமுதமான செயலாகத்தான் உள்ளது.

வாக் தேவியின் அம்சம் கொண்டவள் விசாலவதி தேவி வாய் திறந்திட... மௌனம் பூண்டு தனக்குத்தான் ஒரு செயலை வகுத்துக் கொண்டிட்டவள்.

வேதாந்த நாதன் முன் திரை மறைவில் அமர்ந்திட்ட அவளின் அருகே உடன் இருந்த தோழிப் பெண்... கல்வியின் சகல பந்தனங்கள் கொண்ட வினாக்கள் தொகுத்திட... பதிலுரைத்து வந்தான் வேதாந்த நாதன்.

பின் அவன் வினா எழுப்பினான்...
1.அம்மணி...! ஒரு தாயின் இரு குழந்தைகள் தமக்கு விருப்பமுடைய பொருளை வேண்டுகின்றனர்.
2.அவற்றில் ஒன்று... தனியே இருந்து தான் பெற்றுக் கொண்ட "அகப்பொருளைக் காக்கின்றது..."
2.மற்றொரு குழந்தை தான் பெற்றுக் கொண்ட பொருளும்... தன் உணர்வும் கொண்டு... "மற்றொன்றுடன் போராடும் செயல் வன்மம் கொள்கின்றது..."
3.தாயின் நிலை சமநோக்கு எனினும் உட்பொருள் தெளிந்திடும் ஞானம் "இடை புகுவோர் பெறுவது என்ன...?"

திரை மறைவில் "ஆ...!" என்ற குரல் எழுந்தது.

வேதாந்த நாதன்... தோழிப் பெண்ணே...! தலைவிக்காக நீ வினாக்கள் தொகுத்தாய்... ஆனால் உன் குரலின் தோனி திரை மறைவின் புதிர் விடுத்து விட்டது. உன் தலைவியே உனக்காக விடை உரைத்திடல் வேண்டும் என்று கூறினான்.

நிலைமையின் நிகழ்வு... விசாலவதி தேவியைத் தன் மௌனம் விடுக்கச் செய்து... பின் வாக் தேவியாக அவள் விடை பகர்ந்தாள்.

ஒரு பொருள் நிறைந்த அங்காடி... அந்தப் பொருளின் உரிமம் கொண்ட பொறுப்பின் மிக்கவர் இருவர். இருவரில் ஒருவர் மற்றவர் அறிந்திடாமல் பொருளைக் கவர்ந்திடும் வழியாக... அந்த அங்காடியில் விற்பனைப் பொறுப்புள்ள சிறுவனிடம் பொருளைக் கவர்ந்திடும் சூட்சும வழிகள் உரைத்திட்டாலும்... அன்றி அந்தச் சிறுவனே அவ்வழி உரைத்தான் எனினும்... "செயல் ஒன்றே..."

1.அங்காடியே - இந்தச் சரீரம்
2.பொறுப்பின் மிக்கவர் - ஆத்ம நிலை...
3.உணர்வுகளின் வழி - உயிர் சக்தி
4.பொருள் விற்பனை காவலர் - செயல் கொண்டிடும் குணங்கள்.

ஆத்ம நிலையின் நோக்கு நீர் கேட்ட வினாவிற்கும் விடை இதில் அடங்குவதே. ஞானத்தின் ஒப்புமை நீரே காட்டும். பின் விடையை உரைக்கின்றேன்...! என விசாலவதி தேவி வாய் மலர்ந்து அருளிட்டாள்.

வேதாந்த நாதன்...
1.நற்குண காரியங்கள் உயிர் சக்தியின் செயலாக அதுவே ஆத்மன் என்ற வலு
2.குணங்களின் செயல்பாட்டில் மாற்று நிலைத் தன்மைகள் உயிர் கூட்டிக் கொண்டிடும் உயர் நிலையைப் பேதப்படுத்தி
3.அச்செயலினால் "ஆத்மாவும்... உயிரும்" சூட்சுமமாக இரு குழந்தைகளாகக் காட்டப்பட்டது.
4.இங்கு "தாய் என்று கூறுவது - பேரருள் சூட்சமம்" என்றான்.

உடனே விசாலவதி தேவி... மனிதனாகப் பிறப்பிற்கு வந்தாலும் குணங்களின் செயல்பாட்டை எப்பொழுது மனிதன் உணர்கின்றானோ... அப்பொழுதுதான் மனிதன் என்ற பெயர் பெறுகின்றான்.

ஞானம் இடை புகுந்தவர் யார்...? குணங்களின் பேதத்தை உணர்ந்து கொண்டு உயர் ஞான சித்திக்குத் தான் பெற்றார் உயர்வின் உருவாக.

அந்தக் குழந்தைகளின் பேதங்கள் நீங்கி... ஒன்றுடன் ஒன்று உறவாடி மகிழும் பேரின்ப இலயத்தில் உணர்வதும் ஒன்று.
1.ஜீவன் கொள்ளும் உயிரணு - உயிராத்ம வலு எனும் சுழற்சியாக
2.பிறப்பெனும் மாய இருளை விலக்கிடும் சக்திக்கே அன்று பெற்ற உயர்வு.

இவ்வாறு விடை பகர்ந்ததும் இருவரும் ஒரே நேரத்தில் திரைகளை விலக்கினர். "மங்கள நாண்" பூட்டிடும் விழா எழுந்தது.

தன்னை ஆட்கொண்ட சூட்சமத் தொடர்பை வேதாந்த நாதனது உயிர் சக்தி விழிப்பாகப் பெற்றுக் கொண்டிட வேதாள மகரிஷி தவமியற்றும் மாகாளிப்பட்டினத்திற்கே தன் துணைவியுடன் வாழ வந்தான்.

அங்கே குப்த மன்னனும் வேதாந்த நாதனும் சீரிய நட்பு வளர்ப்பாகி... நவநீதியர்கள் குழுவில் தலைமை பீடம் ஏற்று பற்பல சூட்சுமங்களுக்கே "காளிதாசனாக" வழி காட்டினான்.

December 27, 2023

நல்லதைப் பெற வேண்டும் என்று விரும்பினால் தீமை செய்வோரைப் பற்றிய எண்ணமே நமக்கு வரக்கூடாது

1.கிராமப்புறங்களில் இன்று படிக்காத மக்களாக இருந்தாலும்… கவனித்து ஒரு நிலை பெற்று…
2.சிலருடைய உண்மைகளைப் பேச்சிலிருந்து அறிந்து கொள்ளும் தன்மைகள் கொண்டுள்ளார்கள்.

கல்வி கற்றோரைக் காட்டிலும் கிராமத்தில் உள்ளவர் ஒரு சொல்லை கேட்ட பின் இவன் திருடன் இவன் திருடன் அல்லாதவன் என்ற நிலைகளைப். புரிந்து கொள்வார்கள்.

ஆனால் திருடன் என்ற நிலை வரப்படும் பொழுது அவனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற உணர்வு வந்து விடுகிறது.
1.அந்தத் திருடும் அறிவை நீக்க வேண்டும்…
2.அவனை நல்லவனாக்க வேண்டும் என்று வந்தால் ஒழித்துக்கட்டும் உணர்வுகள் இங்கே வராது.

ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வரும் பொழுது அவன் அழின்றான். ஆனாலும் அவன் அழிந்த பின் அவன் வேகத்தின் உணர்வுகள் பரவுகின்றது. அதனால் தான் ஒரு அசுரன் இறந்தால் அதிலிருந்து பல அசுரர்கள் வருகிறார்கள் என்று காவியங்கள் காட்டுகின்றது.

ஒரு அசுரச் செயல் வளர்ந்து…
1.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து விளைய வைத்து விட்டால்
2.அந்த அசுர உணர்வின் அணுக்கள் அதை நுகர்வோரையெல்லாம் அதே செயல்களைச் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

மகாபாரதத்தில் இராமாயணத்திலும் இது காட்டப்பட்டுள்ளது.

அந்த அசுரன் இறந்த பின் அவனுடைய உணர்வின் அலைகள் எவ்வாறு பரவுகின்றது…? கேட்டுணர்ந்தோருக்கும் இதே செயல்களை எப்படிச் செயல்படுத்துகின்றது…? இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…? என்று காவியப் படைப்பாக நமது ஞானிகள் கொடுத்துள்ளார்கள்

அதனை நாம் சற்றும் சிந்திக்கவில்லை.

இன்று நான் என்ன செய்தாலும் நாளை என்னவோ…! என்ற நிலையில் நாளைக்காகச் சேமிக்க வேண்டும் என்றால் மற்றவர்களை இம்சித்துத் தன்னைப் பாதுகாக்கும் நிலை வருகின்றது.

நாளை என்னவோ…? சரி நடப்பது நடக்கட்டும்…! என்று இருப்போரும் உண்டு. ஆனால் “நாளைக்குஸ் சேமிக்க வேண்டுமே” என்ற ஏக்கத்தில் உள்ளவர்கள் தன்னிடமிருந்து பறித்துச் சென்றுவிடுவார்களே… என்ற துன்பத்தைக் கொண்டு… அந்த பணத்தைச் சேமிக்கும் நிலை வருகிறது.

அப்படிச் சேமிக்கும் தன்மை வரும் பொழுது… அதை மற்றவன் பறிக்கும் தன்மை வருகிறது. இதைப் போன்ற உணர்வுகள் மனிதனுக்குள் மாறி மாறி… மனிதனுடைய சிந்தனையை அழித்திடும் நிலைகள் பரவி வருகின்றது.

ஆகவே இத்தகைய நேரத்தில் குருநாதருடைய உணர்வுகளைத் தான் இங்கே வெளிப்படுத்துகின்றோம்.
1.அவருடைய உணர்வுகள் தான் செயல்படுத்துகிறது… நான் பேசவில்லை…!
2.குரு அருளைத்தான் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
3.அவர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்… அதையே தான் உங்களுக்குள்ளும் உணர்த்துகிறோம்

இன்று நல்லதை எண்ணி ஏங்கும் நிலைகள் அனைவர் உள்ளங்களிலும் தீமையான உணர்வுகள் புகுந்து அவருடைய நல்லதைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டுள்ளது… வேதனையில் துடிக்கின்றனர்.

1.நல்லதுக்காக ஏங்கும் அனைவரும் பிறர் செய்யும் தீமைகளை நுகர்ந்து நல்லதை வளர்க்க முடியாதபடி தடுக்கப்பட்டு
2.அதனால் கடும் நோயும் வேதனையும் வெறுப்பும் கொண்டு
3.என்ன வாழ்க்கை…? என்று கடைசி நிமிடத்தில் ஒதுக்கும் தன்மையை வருகின்றது.

அசுர உணர்வு கொண்டவர்களோ… மற்றவரைத் தாக்கித் தான் வாழ வேண்டும் என்று பிறரைத் துன்புறுத்தும் நோக்கிலேயே செயல்படுகின்றனர். மிருகங்கள் தன் பசிக்கு மற்றவைகளைக் கொன்று பூசிப்பது போன்று மனிதன் இரக்கம் இல்லாத மிருகமாக இன்று மாறிக் கொண்டுள்ளான்.

பிறரைத் தாக்கி அவரைக் கொன்று விட்டு அவன் செல்வத்தை அபகரித்து அதைக் கண்டு ரசித்து வாழுகின்றார்கள்… அவர்கள் மகிழ்ந்தே வாழ்கின்றார்கள்… அப்படி இருந்தால் மகிழ முடியும் என்ற நிலை தான் உருவாகி உள்ளது.

இது போன்ற நிலைகள் தான் இன்று அதிகரித்துள்ளது. இதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அதிலிருந்து காத்துக் கொள்ளும் சக்தியாகத்தான் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோம். பதிவான நிலைகளை நீங்கள் எண்ணி ஏங்கி அந்தச் சக்திகளைப் பெற முடியும்.
1.காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து
2.உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய கொடிய துன்பங்களையும் அகற்ற முடியும்.

அதற்காகத்தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக உபதேசித்துக் கொண்டு வருவது.

விசாலவதியின் செருக்கு அடங்கிய விதம்

வேதாந்த நாதன் வேதாள மகரிஷிடம் கற்றுக் கொண்டது மௌனமாக அமர்ந்திருக்கும் ஓர் நிலை. அஃது அன்றி அறிந்திடாத வேதாந்த நாதன் மடந்தையின் (விசாலவதி தேவி) முன் நின்றிட்ட பொழுது “அவனைச் செயல்படத் தூண்டிய சக்தியாக அகப்பொருள் காத்திட நின்றது வேதாள மகரிஷியின் அருள் சக்தி…”

மடந்தை வேதாந்த நாதனிடம் உரைத்த வினா... ஒரு கை ஓசையும்… ஒரு விரல் அறிவும்… நான் என்பதுடன் கூடி நிலை பெற்றால்… “நீ என்பது என்ன…?”

1.அபரிதமான சிந்தனை உடையவள் அந்த மடந்தை கொண்ட அறிவு...!
2.ஆனால் “அவளின் அகங்காரமின்றேல்” அவள் அம்மன் சக்தியாய் செயல் கொண்டிருக்க முடிந்திடும்.

கூர்ந்த மதி கொண்ட வேதாந்த நாதன் பெற வேண்டிய உயர்வின் தன்மைக்கு… பெறுகின்ற அனுபவ நிலைகள் “கவிகாளிதாசன்” என்றிட்ட சொல் நாமத்திற்கு... வித்தின் நிலை போல் செயல் கொண்ட விதம் வேதாள மகரிஷியினுடையது.

1.ஆலமரத்தின் வித்து சிறியது தான் என்றாலும் அதன் திறத்தை அறிந்து கொண்டிட முடிவது
2.அந்த வித்து முளைத்து கிளைத்து அறியதாகிய வளர்ப்பாக ஈர்த்து வளர்ந்த பின்
3.அந்நிலையில் அதனை நாம் முழுமையாக உணர்கின்றோம்.

தெளிந்த மனம் கொள்கின்ற பாங்கு செயல் உருவாக வளர்ச்சியின் விதம் காண்பிக்கப்படுவதாக… சிறப்பரிய ஆலின் வித்து போல் உயர் ஞானத்தின் வளர்ச்சி... “ஆலின் வித்து தழைப்பதைப் போல் ஞானத்தின் பாங்காக வளர்ச்சி நிலை பெறுதலும் உண்மை…”

1.வேதாந்த நாதன் மடந்தையின் முன் நின்று அவள் வினவிய பொருள் தன்மை உணர்ந்திடாத நிலையிலும்
2.அவன் உள்ளத்தை ஆட்கொண்டது வேதாள மகரிஷி காட்டும் “சின் முத்திரை…”
3.அதுவே மன மண்டலத்தில் வியாபிக்க... அந்த முத்திரை கூட்டித் தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.

மடந்தையின் வினாவிற்கு வேதாந்த நாதனின் இந்நிலை கண்ட அவள்… சொல்லாமல் சொல்வித்த பதில்… அவள் கரம் கூப்பிக் கண்களில் ஆனந்த நீர் சொரிய சிரம் தாழ்த்தித் தொழுதாள்.

கூடி இருந்த புலவர் பெருமக்கள்… அம்மணி...! வேதாந்த நாதன் பதில் உரைத்திடா வண்ணம் தியானத்தில் அமர்ந்து விட்டான். வினா தொடங்கிய நீயே இதற்குரிய பதிலும் அளித்திட சூழ்நிலையை அவரே உருவாக்கி விட்டார். பதில் உரைத்திடல் வேண்டும் என்று கேட்டனர்.

மடந்தையோ… கல்வியின் செருக்கு என் மனக்கண்ணை மூடி அகங்காரம் கொண்டுவிட்டேன்... கல்வியின் சிறப்பை அவமதித்துவிட்டேன். இவர் ஒருவர் பதில் உரைத்து என் அகக்கண் திறந்து... ஆட்கொண்டிட்டார்.

1.ஒரு கை ஓசையே - பிருகிருதியின் நாதக்தம் (இயற்கையின் நெறி)
2.அதனைச் சுட்டிக்காட்டும் மாமகான்கள் - “பரப்பிரம்ம பெருநிலை அறிவு என்பர்...”
3.“நான்” - என்றிட்ட தன்மையைத் தெளிந்து
4.பிருகிருதியின் சூட்சுமத் தன்மைகள் தன்னில் கலந்தே - “தானும் அதுவாகி”
5.சிவமென்று அழைக்கப் பெற்றிட சுட்டும் அறிவும் தன்னுள் தெளிந்த “நான்” என்னும் நிலை தெளிவுபடுத்தவே
6.சுட்டு விரலும் கட்டை விரலும் இணைந்து... அந்தப் பொருளை முத்திரையாக... சிவ ஜீவ ஐக்கியமாக மறைபொருள் காட்டுகின்றனர்.

என் செருக்கு நீங்கிடப் பெற்றேன்...! என்று உரைத்தாள் அந்த மடந்தை (விசாலவதி).

December 26, 2023

“துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனித்துப் பிரித்தெடுக்கக்கூடிய வல்லமையை” நாம் பெற வேண்டும்

விஞ்ஞான அறிவு கொண்டு டிவிக்களில் மனித உருக்களைப் படமாக்கிக் காட்டுகின்றார்கள்… ஒலி/ஒளி அலைகளாகப் பரப்புகின்றார்கள். எந்த அலைவரிசையில் திருப்பி வைக்கின்றோமோ அந்தப் படக் காட்சிகளையும் அதிலிருந்து வரும் சொல்களையும் காண்கின்றோம்.

இதைப் போன்று தான் ஒரு தெய்வத்தை வழிபட்டு வருகிறோம் என்றால்… அதை நமக்குள் பதிவாக்கி விட்டால்
1.பதிவான உணர்வுகள் அங்கு இருப்பது கல் சிலை தான்
2.அதிலே பல நிறங்கள் பல ஆடைகள் பல ஆபரணங்கள் எத்தனையோ விதமான அலங்காரங்கள் எல்லாவற்றையும் கண்களால் உற்றுப் பார்த்து
3.அந்த உணர்வின் அலைகளாக மாற்றித்தான் நாம் நுகர்ந்து அதை அறிகின்றோம்.

அதாவது அதன் மீது சூரியனுடைய ஒளிக் கதிர்கள் படப்பட்டு எத்தகைய கலர்கள் இருந்ததோ அந்த உணர்வலைகள் கவரப்பட்டு அந்த அலைகளாகக் கவர்ந்து வெளி வருகின்றது.

அதன் உணர்வைத் தான் நம் கண்ணின் கருவிழி தனக்குள் இதைப் பதிவாக்குகிறது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனோ சூரியனால் கவரப்படும் இந்த அலைகளைத் தனக்குள் எடுத்து இந்த பூமியில் பரவுவதைக் கருவிழி இங்கே பதிவாக்கியதனால் இதைக் கவர்ந்து கொள்கிறது.

கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றி நம் உயிரிலே இணைக்கச் செய்து இந்த உணர்வின் அலைகளை உடலில் பரப்பச் செய்து அதன் உணர்ச்சிகள் எதுவோ அதன் செயலாக்கங்களை நம்மை அறியச் செய்கிறது.

மனிதனாக இருக்கக்கூடிய நாம் அறிந்து இதை கொள்ள வேண்டும்.

நான் (ஞானகுரு) படிக்காதவன் தான்…! குரு அருளைப் பதிவு செய்து அதன் வழி உணர்ந்து கொண்ட… தெரிந்து கொண்ட நிலையைத் தான் என்று வெளிப்படுத்துகின்றேன்.

சாமி என்னமோ சொல்கின்றார்…! விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார்…! என்று எண்ண வேண்டியதில்லை.
1.விஞ்ஞான அறிவு கொண்டு எதைச் செய்கின்றார்கள்…? என்று குரு அருளால் இங்கிருந்து அதை நான் காண முடிகின்றது.
2.அந்த அலைகள் பரவி இருப்பதை என்னால் நுகரவும் அறியவும் முடிகின்றது.

காரணம்… விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியால் தீமைகள் பயக்கின்றது. அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களில் இதைப் பதிவாக்குகின்றேன்.

நீங்கள் நினைவு கொண்டு அந்த அருள் ஞானிகளின் அருள் உணர்வை எடுத்து “விஞ்ஞான விஷத்தன்மையால் வரும் பேரழிவிலிருந்து… உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்…”

எப்படிப் பல ஸ்டேஷனில் இருந்து அலைகள் வந்தாலும் டிவி.யைத் திருப்பி வைத்தவுடன்… அந்த ஸ்டேஷனுக்குரிய அலைகளை மட்டும் பிரித்து எப்படி எடுக்கின்றதோ… அதைப் போல்
1.துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளி அலைகளைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி வருவதை
2.இப்பொழுது பதிவாக்கிப் பதிவு கொண்ட நிலையை நினைவைக் கூட்டி அந்த வலுவினை எடுத்துக் கொண்டால்
3.நாளைக்கு எத்தனை விபரீதங்கள் விஞ்ஞானத்தில் வந்தாலும் அதிலிருந்து பிரித்து
4.நீங்கள் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உங்களைக் காக்க முடியும்
5.உங்கள் சார்புடையோரையும் நஞ்சிலிருந்து மீட்க முடியும்.

அந்த நிலையை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் குரு இட்ட ஆணையை… அந்த வழிப்படி செய்கின்றேன்

சூரியன் வாழ வேண்டும் என்றாலும் தனக்கு ஒத்த கோள்களின் தன்மை சமப்படுத்தினால் தான் இதுவும் வாழ முடியும். தனக்கொத்த நிலைகளில் வந்தால் தான் சூரியக் குடும்பமே ஜீவனுடன் இருக்க முடியும்.

உதாரணமாக குடும்பத்தில் குழந்தை பிறந்து வளர்ச்சியடைந்து திருமணமான பின் தனிக் குடும்பமாக செல்கின்றார்கள்.

இது போன்றுதான் இந்தச் சூரிய குடும்பத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று நிலையில் வரப்படும் பொழுது… கார்த்திகை நட்சத்திரம் அதுடன் சேர்ந்து ஏனைய நான்கைந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு குடும்பமாக சூரியக் குடும்பமாக பிரிந்து சென்று விட்டது.
1.அவை எடுத்துச் சமைத்து நம் சூரியனுக்குக் கொடுக்கும் உணர்வுகள்
2.சூரியனுக்குக் கிடைக்காது போய் விட்டது (அதனால் மங்கல் ஏற்பட்டுக் கொண்டுள்ளது).

இருப்பினும் நட்சத்திரங்களால் வெளிப்படுத்தப்பட்டு மின்னல்களாக வருவது… அதன் உணர்வுகள் பல நிலைகள் மாறினாலும் நமது பூமிக்குள் அந்த மின்னல்கள் தாக்கப்படும் பொழுது செடி கொடிகள் கருகி விடுகின்றது.

அதே மின்னல்கள் பூமிக்குள் ஊடுருவினால் எதிர் நிலையான நட்சத்திரங்களின் அலைகள் ஒரு இடத்தில் குவியப்படும்போது இங்கு எதிர் நிலைகள் உருவாகின்றது.

சாந்த குணங்களும் நல்ல பண்புகள் கொண்டிருக்கப்படும் பொழுது ஒருவன் பயமுறுத்தும் உணர்வினை வெளிப்படுத்துகிறான் என்றால் அதை நுகர்ந்தால் உடலையே அது எப்படிக் கலக்குகின்றதோ நம்மை அஞ்சச் செய்கின்றதோ… சிலருக்கு பேதி கூட ஆகிவிடும். அவன் தன்னைக் கொன்று விடுவான் என்றால் அந்த உணர்வின் தன்மை வந்தபின் பேதியாகி விடுகிறது.

இதைப் போன்றே நட்சத்திரங்களுடைய மின் கதிர்கள் ஊடுருவி விட்டால்
1.எதிர்நிலை கொண்டு கொதிக்கலனாக மாறுகிறது… பாறைகளை உருக்கி விடுகின்றது.
2.இந்த பாறைகள் உருகி வரும்பொழுது நட்சத்திரங்கள் தாக்கிய ஒளிக்கற்றைகள் அது பலவீனமாகும் வரையிலும் குழம்பாகி
3.ஒரு நொடிக்குள் ஒரு குலுக்கு குலுக்கி விட்டு நின்றுவிடும் (நிலநடுக்கம்).

அதன் பின் பார்த்தால்… சில பாறைகளில் வெடிப்பாக இருக்கும். உருகிக் குழம்பான ஆவியின் கற்றைகள் வெளிச் செல்லும் பொழுது பாறைகளில் பல பல உலோகத் தன்மைகளும் மருந்துத் தன்மையும் பாறைகளின் நிறங்கள் மாற்றம் கைரேகை போன்று இருக்கும்.

எங்கே வெடித்ததோ அந்த ஆவியின் தன்மை சேர்ந்து மறுபடியும் அந்த சந்தை அடைத்துக் கொள்ளும்.

இவைகள் எல்லாம் இயற்கையின் நியதிகள்… ஆதியிலே கண்டவன் அகஸ்தியன்.
1.அவனுடன் சேர்ந்து விஞ்ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வுகளை இணைத்துப் பார்த்து
2.உலகம் எப்படி இருக்கின்றது…? என்று உங்களை நீங்கள் அறிந்து
3.இனி வரும் விஷத்தன்மைகளிலிருந்து நீங்கள் மீண்டிட வேண்டும்.

அந்த அகஸ்திய மாமகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் எண்ணம் தான் அதற்கு உதவும். எந்த சாமியாரும் எந்தக் கடவுளும் நம்மைக் காப்பாற்றப் போவதில்லை.

உலகோதய மோதலிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளும் வழி

காற்றோலம்… வாயோலம்…! என்றால் என்ன…?
1.காற்றின் ஓலம் மிகுந்து விடும் பொழுது அது கடும் மழையைக் காட்டும்.
2.அதே போன்று வாய் ஓலம் மிகுந்தது எனில் அது கோபத்தைக் காட்டும்.

காற்றின் ஓலத்தால் வருவது மழை மாத்திரம் என்று. அந்த மழை நீர் பெருக்கத்தால் ஏற்படுகின்ற பெரும் வெள்ளமானது… அலை கடலெனப் பொங்கி… நீரின் கரைகளை உடைத்து விடுகின்ற வேகம் கொண்டு நீர் கரையை உடைக்கின்றது.

அதே போன்று மனிதனின் வாய் ஓலம் “அவனின் கோப குணத்தை உணர்த்துவதோடு மட்டுமின்றி…” அந்தக் கோப நீர் பெருகி மனிதனின் ஆற்றல் சிந்தனா சக்தி செயற் கொள்ளும் நிலையைத் தகர்த்துவிடும்.

நீரின் கரைகள் உடையாது இருக்க… அந்த நீர்க் கரையைக் காக்கக்கூடிய பயிர்கள் நடப்பட்டு அந்தப் பயிர்கள் வளர்ந்து பூமியில்
1.ஒன்றுடன் ஒன்று வேர் தொகுதியினால் பின்னிப் பிணைந்து
2.எத்தகைய வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும் அந்த நீர்க் கரையைப் பெரு வெள்ளத்தினால் உடைத்திடாமல் காப்பதைப் போன்று
3.தியானத்தின் மூலம் எடுக்கும் ஞான சக்திகள் சாந்தப் பயிர்களாக ஊன்றப்பட்டு
4.”நிறை பேணல்” என்பதன் வழியாகக் காக்கும் பயிராக வளர்ந்து… சிந்தனையின் சக்தியைக் கட்டிக் காத்து
5.”உலகோதய மோதல்” எனப்படும் செயலில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.

மரத்திலே காயும் உண்டு… கனியும் உண்டு… அந்த மரத்தைப் பாதுகாத்திட்டவன் பிறருக்கு அதைத் தந்திடும் செயலும் உண்டு. அக்கனி கொண்ட மரத்தினைக் காத்திட்டவர் நிலையே “வேதாள மகரிஷியின் நிலை…”

1.”ஞானம் என்ற கோல் தந்து எண்ணம் போல் பெற்றிடுக…” என உரைத்ததில்
2.அந்தக் கோல் கொண்டு காயை விடுத்துவிட்டுக் கனியைக் கவர்ந்திட முயற்சித்திடும் செயலில்
3.அந்தக் கனி விழுகின்ற வேகப்பொருளாக… அதையும் ஆடை கொண்டு காத்திட்டு அளிக்கின்ற பக்குவம் “ஞான நிலைக்கன்றோ வாய்த்தது…”

ஒளி நாதம் கூட்டும் சொல் என்ற சொல்லின் வன்மை பெற்றிட… கனி என்பதே பெற்றிடும் பக்குவ நிலை…. இனியவை இன்னாதவை என்று திருவள்ளுவர் உரைத்த முறையின் பொருள் உணர்ந்க்திருக்கின்றாய் அல்லவா.

சொல் நாத வேறுபாடும் உரைத்து வந்திருக்கின்றோம். அத்தனையும் சூட்சம சக்தியாக மாமகரிஷிகள் வழிகாட்டிட்ட தன்மைக்கு… மனது ஒன்றிச் செயல் கொண்டிடும் சூட்சம உபாயங்கள் கொண்டு… பெற்ற பயனைப் பெற்றுத் தருகின்றேன் என்றே பாடுகின்றாய். அவ்வாறு
1.ஊன் உயிர் கலந்து பெறுகின்ற முயற்சிக்குக் காட்டுகின்ற வழியைக் கூர்மதி கொண்டவன் கலப்பாகப் பெற்றாலும்
2.காக்கின்ற பொருளின் மறைபொருளை உணர்ந்து கொள்…!

December 25, 2023

பகலவர்

சேகைத் திறந்த வழி என் நிலை அண்டியதோ…?
பேண் அகத்து என்ற நிலை பெற்று
முன் நிலை தவிர்த்து…
ஒளி கொண்ட தலைமை காண வேண்டும்.

1.அரசின் தலைமை கண்டவன் அகத்தின் தலைமை கண்டான்
2.அத்திரி மகரிஷியின் தொடர்பு அன்று அரவணைத்தது… தொடர்ந்து அமுதம் ஊட்டுகின்றது.

மகா புருஷன் என்போரே பகல் (ஒளி) அறிந்தவர்…! சிருஷ்டிக்கும் பாங்கு செயல்படும் நிலையே விழிப்பும்… அறிவின் ஆற்றலும் இணைந்து… உணர்வென்னும் ஊற்று எண்ணத்தின் வழி ஊட்டப் பெறுகின்ற செயல் அதுவாக உள்ள தன்மைகளை பிரம்மன் படைக்கின்றான் என்று சொல்வது. அது பல யுகங்கள் ஒன்று சேர்ந்த ஒரு பகல் காலம்.

இவை அனைத்தும் உலக மாற்றம் செயல் கொண்டிடும் காலம் வரை அனைத்து ஜீவன்களும் இயக்கம் கொண்ட செயலினையே சகல சிருஷ்டிகளும் ஓர் பகல் என்றும்… இரவு காலத்தில் பொருட்கள் கட்டுப்படாத் தன்மை போல் இருக்கின்ற பொருட்கள் அனைத்தும்… இருள் எனும் போர்வைக்குள் அடங்கி இருத்தல் தன்மையாகச் சிருஷ்டியின் ஒடுக்கம் அதன் அதன் அமிலக் கூறாகக் கலத்தல்…! என்று முந்தைய பாட நிலைகளில் உரைத்திருக்கின்றோம்.

1.சிருஷ்டியின் ஒடுக்கமே இரவென்றும் (இருள்)
2.மீண்டும் “உயிர் அணுக்கள்” ஜீவன் கொண்டு பலவெனப் பெருகத் தொடக்கம் பெறும் யுகம்
3.அதுவே பிரம்மனின் விழிப்புக் காலம் என்றும் மறைபொருளாக மாமகான்கள் உரைத்திட்டது… தத்துவ நோக்கின் படிகள்.

சிருஷ்டியின் பாங்கை அறிந்து கொண்ட… சிருஷ்டிக்கும் செயலின் கர்த்தா தியான ஒடுக்கவெனவும்…
1.அந்நிலை செயல் கொள்வதைத் “தூங்காமல் தூங்கிடும்… அரிதுயில்” என்றெல்லாம் விளக்கம் காட்டி
2.ஆற்றல் என்பது புருஷ குணம் சிருஷ்டியின் பாங்கைத் தன்னுள் தெளிந்து சிருஷ்டியின் ஒடுக்கமற்று
3.வியாபித்த பகலாகச் சிருஷ்டிக்கும் தன்மைகளை உணர்ந்து கொண்டிட்டவர்களே மகா புருஷர்கள் எனும் மாமகான்கள்.
4.அவர்கள் அடைந்த ஒளித்தன்மைக் குறிப்பிடவே அவர்களைப் (மகரிஷிகளை) “பகலவர்” என்று சுட்டிக்காட்டிய நிலை.

அகங்காரம் எனப்பட்டது… புவி ஈர்ப்பின் பிடிப்பில் துர்க்குண நிலைகளைக் காட்டி… மேலாம் அறிவு சித்தித்திடும் தன்மைகளைக் கேடுறுத்தி… கீழாம் அறிவு எனும் மோக நிலையில் வசப்படுத்திடும் நிலை தான் அது.

பிரம்மா விஷ்ணு என்று சிருஷ்டியைச் சித்தர்கள் காட்டியதைப் போல் அகங்கார குணம் மோகத்தின் வசம் நம்மை ஆழ்த்தி… வீர குணம் வீழ்த்தி… இந்திரீய நீக்கம் காட்டிச் செயல்படும்.

இதே குணத்தன்மை “மேலாம் அறிவு சித்திக்கும் செயலில்” மோகவலைப்படுத்தும் நிலையைச் சம்ஹரித்தது
1.சிவத்தின் தன்மை காட்டி விந்து நிலை ஒளித்தன்மையாக ஊர்த்துவ சக்தியாக மேலெழுந்து…
2.”வீணையின் நாயகன் எனும் உயிர்சக்தியை” வலுக்கூட்டும் உணர்வுகளின் கவச முலாம் ஆத்மாவாகச் சிருஷ்டிப்பதே
3.மெய்ஞானச் சுடர் எனும் காரண மூலம்.

உலகம் அழியப் போகிறது என்றால்… விஷ உலகம் அழிகின்றது… ஞானிகள் தோன்றுவார்கள்

இயற்கையின் உண்மையின் நிலைகளை எல்லாம் குருநாதர் என்னை (ஞானகுரு) அறியும்படியும் செய்தார். பல கஷ்டங்களைக் கொடுத்து வேதனைப்படவும் செய்தார். பல சிரமப்பட்டுக் கஷ்டப்பட்டு அனுபவபூர்வமாகப் பெற்ற உண்மைகளைத் தான் உங்களிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

1.வேதனைப்பட்டதைச் சொல்லிக் கொண்டு வந்தால் என்ன ஆகும்…? வேதனை தான் வளரும்.
2.ஆனால் நல்லதாகும் என்று சொன்னால் நல்லதாகும்.

இதே மாதிரித் தான் குடும்பத்தில் கஷ்டங்கள் வந்தால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் நலம் பெற வேண்டும்… நன்றாக இருக்க வேண்டும் என்று உயர்ந்ததாக எண்ண வேண்டும்.

ஆனால் பையன் படிக்கப் போனானே… என்ன ஆச்சோ…? போனானா வந்தானா… என்ன ஆனது என்று தெரியவில்லையே…! என்று எண்ணி அவன் சரியாகப் படிக்கவில்லையே… படிக்கவில்லையே…! என்று இந்த உணர்வை எடுத்தோம் என்றால் “அங்கே அவனால் சரியாகப் படிக்க முடியாது…”

பையன் சுட்டித்தனம் பண்ணுகின்றான்… அவன் செய்யும் குறும்புத்தனம் தாங்க முடியவில்லை…! என்று இப்படியே எண்ணினால்
1.அவனுக்குள் குறும்புத்தனம் செய்யும் உணர்வைத் தான் வளர்க்க முடியும்.
2.அவனைக் காணும் பொழுதெல்லாம் வெறுப்பு தான் வளரும்.

அதற்குப் பதிலாக… அவனுக்கு அருள் கிடைக்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் அவனுக்கு ஞானம் கிடைக்க வேண்டும் அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்லிப் பாருங்கள். “நாளடைவில் அவன் ஞானமாக வருவான்…”

ஏனென்றால் குடும்பத்தில் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும் இன்றைக்கு இருக்கின்றோம்… நாளை எங்கே செல்கின்றோம்…? என்று யாருக்குத் தெரியும்…! என்ற நிலை தான் இருக்கின்றது.

சேர்த்து வைத்த சொத்துக்களோ சம்பாதித்து வைத்த பணமோ நம்முடன் வருகின்றதா…? இல்லையே.
1.ஆக நமக்கு அழியாச் சொத்து அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தான்…
2.அதை வளர்த்தால் அங்கே போகின்றோம்.

என் பிள்ளை இப்படி இருக்கின்றானே… என் பிள்ளைக்கு இப்படியெல்லாம் இடைஞ்சல் செய்தார்களே…! என்று
1.இது போன்று உணர்வுகளை யாரை எண்ணி அதிகமாக வளர்த்தோமோ
2.இந்தச் சொத்தை தேடி வைத்த நிலைகள் கொண்டு அவன் உடலுக்குள் தான் செல்ல முடியும்.

அவர்களையும் தரித்திரமாக்கி உணர்வின் தன்மை மாற்றிவிட்டு ஆடாகவோ மாடாகவோ பிறக்கத்தான் நேரும். இல்லையென்றால் அடுத்த உடலுக்குள் பேயாகச் சென்று அந்தக் குடும்பத்தையும் அழித்துவிட்டு நாயாகவோ பாம்பாகவோ தேளாகவோ பிறக்க வேண்டி வரும்… மீள முடியாது.

ஏனென்றால் இதைத்தான் குருநாதர் காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று பல நிலைகளைக் காட்டி அந்த உண்மைகளை உணரும்படி செய்தார்.

இன்றைய விஞ்ஞான உலகில் கடுமையான விஷத்தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. எந்தக் காரணத்தை கொண்டும் அந்த விஷம் நம்மை அழித்து விடக்கூடாது. உலகம் அழியப் போகிறது என்கிறார்கள்… விஷ உலகம் தான் அழிகின்றது

எம்மைச் சந்தித்த ஏராளமான குழந்தைகளுக்கு அருள் ஆசி கொடுத்துள்ளேன்… கருவுற்ற தாய்மார்களுக்கு ஆசி கொடுத்துள்ளேன்.

அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்… உலகைக் காத்திடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அவர்கள் ஆர்வத்தில் வரும் பொழுது இதைக் கொடுத்துள்ளேன். அந்த மாதிரிக் குழந்தைகள் ஞான குழந்தைகளாக வருவார்கள்.

1.அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்தியின் துணை கொண்டு எப்படி உலகை அறிந்தானோ உலகைக் காக்கும் சக்தியாக வளர்ந்தானோ
2.அவன் உணர்வை எடுத்து இங்கே கர்ப்பமான பெண்களுக்குப் பாய்ச்சப்படும் பொழுது அந்த அறிவின் ஞானம் வளர்கின்றது
3.விஞ்ஞான உலகில் இருந்து மீட்கக் கூடிய சக்தியாக அவர்கள் வளர்வார்கள்
4.விஷத் தன்மைகள் அழிந்துவிடும்.. அரும் பெரும் ஞானிகள் தோன்றுவார்கள்.

காரணம் தென்னாட்டில் தோன்றியவன் தான் அகஸ்தியன். அதே தெற்கிலிருந்து தான் இந்த உலகை மீட்டிடும் சக்திகளும் வரப்போகின்றது.

விஞ்ஞானத்தால் பல பேரழிவுகள் வந்தாலும்… அகஸ்தியனின் உணர்வுகள் இங்கே பரப்பப்பட்டுப் பேரழிவிலிருந்து தப்பும் மனிதர்களாக உருவாக்கும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

இனிமேல் இதை எல்லாம் காணலாம்

இன்றைய உலகம் எங்கோ போவதாகத் தெரிந்தாலும்… நாம் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தகைய துன்பங்கள் வந்தாலும்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இதை மட்டும் கூட்டிக் கொள்ளுங்கள்.

நோயுற்றவர்களைக் காண நேர்ந்தால் அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் அவர் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.அது தான் நாம் சொந்தமாக்க வேண்டியது
2.என்னை இப்படிப் பேசினானே… அவனைச் சும்மா விடுவதா…? என்று இதைச் சொந்தமாக்க வேண்டாம்.

அதைச் சொந்தமாக்கினால் மீண்டும் பிறவிக்குத் தான் அந்த உடலுக்குள் தான் செல்ல வேண்டி வரும்.

ஆகவே அருளை நாம் சொந்தமாக்குவோம். இருளை அகற்றுவோம்… மெய்ப்பொருளைக் காண்போம்… மெய் வழி வாழ்வோம்… அருள் ஞானம் பெறுவோம்… அருள் வாழ்க்கை வாழ்வோம்.

December 24, 2023

மகரிஷிகள் காட்டும் கற்பு

அருந்துகின்ற நன்னீர் உடைய அழகிய ஒரு பொய்கை உள்ளது. அருமருந்து போல் தித்திக்கின்ற சிறப்புடைய அந்தக் குளத்தின் நீரை… அந்நீரின் தூய்மை கெடாத வண்ணம் பாதுகாத்தலே சிறப்பாகும்.

அந்த நன்னீர் பொய்கையைக் கண்டவுடன் அந்த நீரில் நமது ஆடைகளைச் சுத்தம் செய்வதற்குச் சிறப்புடையது என்ற எண்ணம் கொண்டிட்டால்… ஆடை தூய்மை பெறும்.
1.ஆனால் குளத்தின் நீர் தன்மை மாறு கொண்டுவிடும்.
2.அதன் தூய்மை கெட்டு அருமருந்தை விருந்தாக்கிடும் செயலும் அற்றுப்போகும்.

நீண்ட நெடும் அறிவின் தர்க்கத்திற்கே… “தர்க்கம் என்பது வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்ற நல்ல வாய்ப்பு…” என்றால் மிகையன்று.

சிறப்புடைய ஓர் காலகட்டத்தின் மன அசைவு நிலை… பாடத்தின் தன்மை கருத்தோவியமாக விளங்குதலினால்… காட்சிப்புலன் உலகோதய நடைமுறை ஆத்ம ஞானம் கூட்டிடும் சிறப்பு என்று சுருங்கக் கூறினாலும்… விளங்கிக் கொள்கின்ற தன்மையாக அதன் தொடரை இதில் உரைப்போம்.

நன்னீர் பொய்கை என்று உரைத்திட வந்ததே…
1.உயிராத்மா வலு வேண்டி உயர் ஞான முகிழ்விப்பில்
2.தன் உயிராத்மா சக்தியின் முலாமை வளர்த்துக் கொண்டிட வேண்டும் என்ற உத்வேக உந்துதல் தான்.

அந்த முயற்சியின் வித்து… அஷ்ட பேதங்கள் கூட்டிடும் “சிருஷ்டியின் உதயத்திலும்” அதே செயல் தன்மை “உயர் ஞான வளர்ப்பிலும்” உண்டு.

நெருப்பாகவும் நீராகவும் காற்றாகவும் நிலமாகவும் ஆகாயமாகவும் அமில குணத்தன்மைகளாகப் பால்வெளியில் படர்ந்து விளங்கிட்ட சக்தியின் சக்தியையே பஞ்சபூதங்களாகக் காட்டிட்ட அத்தன்மைகள்…
1.ஒன்று கலந்த உயிரணுவாக பரிணமித்திடச் செய்வது “அகங்காரம்” என்ற பேதம்.
2.இந்நிலையின் கூட்டுச் சுழல் தன்மையால் மனம் “எண்ணம்” என்ற பேதத்தைக் காட்டுகின்றது.
3.இதனினும் சூட்சும பேதமே “அறிவேனும் புத்தி”
4.ஆக ஓர் சிருஷ்டியின் அஷ்ட பேத குணங்களின் சங்கமத்தின் மூலம் தான் ஆத்ம நிலை ஐக்கிய ஜீவன் பெறுகின்றது.

இத்தன்மைகளின் மூலத்தையே பிரகிருதி (இயற்கையின் நியதி) என்பார் வியாச பகவான்.

“எத்தனை பேதங்கள் ஒன்றுபட்டு” அற்புதமான இந்த மனிதச் சரீரம் வாய்க்கப் பெறுகின்றது…? காலத்தின் தன்மையைத் தவறவிட்டால் அது தகுமா…?

இயற்கையின் சிருஷ்டியே பேதங்களாகப் பாகுபடுத்திக் காட்டிட வீரியத் தன்மைகள் கிடைத்தற்கரிய பாக்கியம் பெற்ற இந்த மானிட ஜென்மத்தின் சக்தி பெற்றிடும் வழி அறிந்தும்…
1.பஞ்சபூதங்கள் எனும் பரந்த பேரருள் செல்வத்தை மனிதன் தேடியே அலைந்து
2.அதைக் கூவி அழைத்தாலும் அது பருப்பொருளாகக் (கண்ணுக்குப் புலப்பட்டதாகக் கையில்) கிடைக்குமா…!

பஞ்சபூதங்களை இவனில் ஐக்கியப்படுத்திவிட்டு… ஒன்றில்லாமல் ஒன்று இல்லை என்றே பின்னிப் பிணைந்திட்டு… சுவாசத்தின் தன்மையாகச் சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள சக்தியைத் தன்னுள்ளே ஈர்த்துக் கொண்டு வளர்வதில்… “தான் எத்தகைய பேதமும் உரைத்திட முடிந்திடாது…”

மகா ஞானியாக இருந்தாலும் இச்சுவாச அலை ஈர்ப்பில்… தன் ஆத்ம சக்தியைப் “பிறரைப் போற்றி அடிமை கொண்டிடும் பொழுது… பஞ்சபூதங்களே பேதங்கள் காட்டும்…”

இனி உயர்ஞான வளர்ப்பில் சிந்திக்கலுறும் மனித ஜீவன்… அஷ்ட பேதங்களை ஒன்றுபடுத்திடும் உயர்வான ஜெப அலையை ஈர்த்திடும் பொழுது… சரீரம் கொண்டிட்ட உணர்வுகள் பஞ்சேந்திரியங்களாகச் செயல்படும் காலத்தில்… அதி நுட்ப உணர்வுகள் கிளைத்தெழும் தன்மையை வளர்த்துவிடும் “காந்தப்புலம்…”
1.இங்கு தான் மனத்தின் பேதம்
2.புத்தி எனும் அறிவின் பேதத்தை நாடுகின்றதா…?

அன்று பஞ்சேந்திரியங்கள் கட்டவிழ்த்து ஓடும் ஓர் பிடிப்பின் தன்மைக்கு… அறிவின் ஆற்றலையே உண்டுவிடும் ஈர்ப்பில் அது செயல் கொள்கின்றதா…? என்ற வினாவிற்குப் “புலன் காத்தல் கற்பு” என்பார் வேதாள மாமகரிஷி.

பரிவு எனும் பேதம் கொண்டது நன்னீர் பொய்கை. ஆடை என்பது உலகோதயப் பிடிப்பு எனும் அதி ஆசை நிலை.

அந்த ஜெபநீரைப் பெற்றிடவே… பேரருள் செல்வமாக விளங்கிடும் அந்தப் பேரானந்தப் பெருநிலையை… அறிவு என்னும் தீட்சண்யம் கொண்டு விளங்கிச் சுடர்ந்திடும் அத்தன்மையை… மனிதன் உலகோதயப் பிடிப்பில் செயல் கொண்டு வாழ்ந்திடும் செயலின் நிலையே - நன்னீர் பொய்கையும்… அதிலே ஆடை சுத்தி செயல் தன்மையும்…!

தனக்குள் கட்டுக்குள் அடங்கி நிற்கின்ற பேத குணத்தன்மைகள் அது கட்டவிழ்ந்து ஓடும் செயல் நிகழ்வு புலன்கள் காத்திடாத் தன்மையாக உள்ளதே மௌடீக (மூடத்தனம்) நிலை.

கற்பு என்றிட்டால் சிற்றின்ப நிலை அடக்கும் தன்மையையே இன்றைய மனித மனம் உரைத்திடும். அது அல்ல…!

பஞ்சபூதங்கள் தன்னுள் செயல் கொண்டு… பஞ்சேந்திரியங்களான…
1.மனம் புத்தி அகங்காரம் என்ற சூட்சுமத் தன்மைகளைத் தன்னுள் தெளிவுபடுத்திக் கொண்டு
2.இயற்கையுடன் ஒன்றி வாழ்பவனுக்கு பேரின்ப நாட்டமன்றோ சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கிடும்.

இதையே கற்பு என்பர் மகரிஷிகள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் சேர்க்கச் சொல்வதன் முக்கியத்துவம் என்ன…?

மனிதனின் வாழ்க்கையில் நம்மை அறியாமல் அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் இந்த விஷத் தன்மைகள் நம் சிறுநீரகத்தைச் சீராக இயக்க விடுவதில்லை.

இரத்தத்தில் கலந்து வரும் அந்த அசுத்தத்தின் தன்மைகளை… அது நீக்கும் சக்தி இழந்து விடுகிறது. இந்த விஷத்தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
1.காரணம் உப்புச் சத்து என்ற நிலைகள் அதிலே உருவாகிவிடுகின்றது.
2.உப்பை வைத்தால் எப்படி ஒரு பசபசப்பாகக் கசிகின்றதோ அதைப் போல் நுரையீரல் கல்லீரலில் கசிவுகள் அதிகமாகி விடுகின்றது
3.அதனால் அடிக்கடி வாந்தி என்ற நிலையும் வருகின்றது.
4.அதே போல் சர்க்கரையை நீக்கும் உடலிலே அதைச் சமப்படுத்தும் சக்தி இழந்து விட்டால் அதுவும் இணைந்துவிடும்.
5.இத்தகைய நிலைகள் ஏற்பட்டால் “உணர்வின் உந்துவிசை அதிகமாகி விடும்…: இரத்தக் கொதிப்பும் இதனுடன் கலந்துவிடும்.

இதைப் போன்ற உணர்வு நமக்குள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுக்கும். பின் வேதனை உணர்வு அதிகமாகி… உடலில் இதே உணர்வு கொண்டு உயிரான்மா வெளியில் சென்றுவிடும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து நாம் விடுபடுவதற்கு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெறச் செய்ததைச் சீராகப் பயன்படுத்தி… உங்கள் உடலில் எத்தகைய நோய் இருப்பினும் யாம் சொல்லும் முறைப்படி தியானித்து,,, உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீக்க முடியும்.
1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது
2.அதே எண்ணத்தால் அதை நீக்கிடும் அருள் சக்தி பெறுவீர்கள்.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஒரு நிமிடம் எண்ணி ஏங்கிவிட்டு… கண்களை மூடி அந்த அருள் சக்திகள் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.சிறுநீரகத்தில் குறை இருந்தால் அந்தப் பாகத்தில் நினைவைச் செலுத்துங்கள்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்பிலே படரப்பட்டு நஞ்சினை நீக்கி…
3.என உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

அதே போன்று உங்கள் உடலில் வாத நோயோ கீழ்வாதமோ முடக்கு வாதமோ சர்க்கரைச் சத்தோ ஆஸ்த்மாவோ அந்தந்த நோய்கள் நீங்கி நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்து உடல் நலம் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

உங்கள் எண்ணத்தை இவ்வாறு செலுத்தினால் உடல் முழுவதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் படர்ந்து டிபி.யிலிருந்து கேன்சர் வரையிலும் நீக்கும்.

“கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்…” என்று சொல்வது போல் உங்கள் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி அதை உடலுக்குள் செலுத்தி உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.

கண்ணின் நினைவை உடலுக்குள் இவ்வாறு செலுத்தச் சொல்வதன் நோக்கம் என்ன…?

நண்பன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றால்… இரண்டு பேரும் சண்டையிட்டு அவனை நினைத்து “இப்படிச் செய்தானே பாவி” என்று எண்ணினால்… கண்களால் செலுத்தப்படும் போது உடனே அங்கே புரையோடித் தீமையின் செயலாக இயக்குகிறது.

அதே சமயத்தில்… “தக்க நேரத்தில் எனக்கு நன்மை செய்தான்…” என்று எண்ணினால் உடனே விக்கல் பாய்ந்து அங்கே நல்லதாகிறது.

இதைப் போல்
1.நம் உடலுக்குள் கண்களால் பதிவான துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்
2.கண்ணால் நுகர்ந்தறிந்த அந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்ததை
3.கண்ணின் நினைவை அடிக்கடி துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்த உணர்வின் சக்தியை உடலுக்குள் பரப்பி
4.நம் உடலில் உள்ள ஜீவ அணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று எளிதில் இணைத்து… அதைப் பெறச் செய்ய முடியும்.

ஏனென்றால் சந்தர்ப்பத்தில் நாம் நுகர்ந்த தீமைகள் கருவாகி அணுவாகி விட்டால் அது தன் உணவுக்காக உணர்ச்சியைத் தூண்டி தன் இனத்தைப் பெருக்கும்.

இவ்வாறு அதன் இனத்தைப் பெருக்கும் அந்தச் சக்தியைக் குறைக்கத் தான் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் உடலுக்குள் செலுத்தி அதை வளர்த்துக் கொண்டே வாருங்கள் என்று சொல்கிறோம்.

1.உங்கள் வாழ்க்கையில் உடல் நலம் பெற்று மன நலம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட
2.எமது அருளும் குரு அருளும் உறுதுணையாக இருந்திடப் பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

December 23, 2023

அலைபடுபேதம்

“காசினி” என்று அழைக்கப்படும் பூமியின் நடு மையத்தில் ஆழ் உறைகின்ற நெருப்பானது... “ஈர்ப்பின் அலைபடுகின்ற பேதத்தினால் எதிர் மோதல் நிலைபெற்றுப் பொங்கிப் பிரவாகித்து (எரிமலை)… காசினியை விட்டு ஆசினி என அழைக்கப்படும் விண்ணை நோக்கி உயர்ந்து எழ.. மலை வாயின் வழி வழிவிட்டு அலைபடுத்தும் பேதத்தை நீக்கித் தன்னுள் சமன்படுகின்றது.

“ஆழ் உறையும் நெருப்பு” மலை வாயின் வழியே சொரிந்து வெளிப்படுத்துகின்ற செயலின் காரணம் “அலைபடுபேதம்…” (எதிர் மோதல் அலைகள்).

மனித மனத்தின் மாண்பு உலகோதய நடைமுறை ஈர்ப்பின் செயல் வசத்தில் வண்ணம் கொண்டு விளங்கிடும் மனக்கடல் அலையை
1.”உலகோதய நாட்டம்” எனும் மிகைப்பட்ட குணங்கள் (TENSION) அலைபடுகின்ற பேதத்தால்… அந்த அலைபடு பேதத்தை நீக்கிடவே…
2.காசினியின் நெருப்பு ஆசினியின் வழி ஓடி மலைவாயின் வழி சொரிதல் போல்
3.தெய்வீக நெறி நின்று வண்ண நிலை கொண்ட மனத்தின் பாங்கையே கேடுறுத்தும்
4.உலகோதயம் என்னும் அலைபடுபேதத்தைப் “பிடர் வழி போக்கிவிடு…”

எப்படி…?

“உந்துவிசை குணங்கள்” (தியானத்தின் மூலம் உந்தி எடுக்கக்கூடிய நல்ல எண்ணங்கள்) எண்ணியது எண்ணி ஆங்கு நிகழ்த்தப் பெறும் செயல்திறத்தால்
1.எடுக்கப்படும் உயர் குணத்தன்மைகள்… கொடுக்கப்பெறும் நற்குணங்களின் பிடர்தல் எனும்… “உந்துவிசையின் வழி”
2.மனதினை அலைக்கழிக்கின்ற அந்தப் பேதங்களைப் போக்கும்… சமன்படுத்தும்.

போகும் என்பது செயல்வழி போக்கும் என்பதே முயற்சி வழி.

ஆனால் சமன்படுத்தாதபடி… அலைபடு பேதத்தின் செயல்வழியாய்ச் சென்றிடுங்கால்… அலை கடலில் துடுப்பற்ற படகு தத்தளிக்கின்ற நிலைக்கு… அந்தந்தக் குணங்களின் ஆவேச உந்துதல் தன் வழியில் பற்றி இழுத்து நல்ல குணங்களைக் கேடுறுத்தும்.

ஆகவே… படகை (வாழ்க்கையை) நீ எங்கு செலுத்திட விரும்புகின்றாயோ அந்த இடத்திற்குச் செலுத்திட
1.“முயற்சி எனும் துடுப்பிட்டு” அலையைத் தணிவாக்கி
2.விரைந்து செலுத்தப்படுகின்ற தன்மையில் நிலை பெற்று நின்று வாழ்ந்திட எமது ஆசிகள்… அத்திரி மாமகரிஷி…!

தீமை வரும் போதெல்லாம் “அலைவரிசையை (FREQUENCY) மாற்றப் பழகிக் கொள்ளுங்கள்”

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வுகளை ஏங்கிப் பெற்று நமக்குள் பதிவாக்கிக் கொண்டே வர வேண்டும். பதிவானதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அதை அடிக்கடி எடுத்துப் பழக வேண்டும்.

1.மனித வாழ்க்கையில் தீமைகளைக் காண நேர்ந்தால் அந்த இடத்திலே நாம் “விழித்திருத்தல்” வேண்டும்.
2.வேதனைப்படுகிறார்கள் கஷ்டப்படுகிறார்கள் சங்கடப்படுகிறார்கள் வெறுப்படைகிறார்கள் கோபப்படுகிறார்கள் நோயால் அவதிப்படுகிறார்கள் என்றால் அந்த ரெக்கத்தில் எப்பொழுதுமே விழித்திருத்தல் வேண்டும்.
3.காரணம் நாம் எடுத்த தியானத்தை உஷார்படுத்தித் தெளிவுபடுத்தி சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

கஷ்டப்படுகிறார் என்று பார்க்க கேட்க நேர்ந்தாலும் நன்மை செய்ய வேண்டும் என்று நிலையில் தான் அவரின் கஷ்டத்தை அறிய விரும்புகின்றோம்.

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்…?

கேட்டறிந்த அடுத்த கணமே ஈஸ்வரா என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று ஆன்மாவை உடனடியாகத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து அந்தச் சிரமப்பட்டவர்களுக்கு… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறுவாய். நோயிலிருந்து நீ விடுபடுவாய் நீ உடல் நலம் பெறுவாய் என்று சொல்லிவிட வேண்டும்.
1.அவருடைய கடும் வேதனைகள் நமக்குள் புகாதபடி விழித்திருந்து
2.வேதனையை வென்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் அந்த இடத்தில் வலுவாக்கிக் கொண்டு வர வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் அவர்களைக் காக்க முடியும்… நம்மையும் காத்துக் கொள்ள முடியும்.

அவரிடம் சொல்லி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஏங்கி உன் நோய்கள் நீங்கிவிடும் என்று சொல்லுங்கள்.

காரணம் அவரால் வேதனையிலிருந்து மீள முடியாத அந்த நேரத்தில் நாம் அந்த அருள் ஒளியை அவருக்குப் பாய்ச்சினால்… அவரும் எண்ணத் தொடங்கினால்… நம்முடைய சொல் அவர் நோயை நீக்கக் காரணமாகும். ஓரளவுக்கு மன உறுதி பெறவும் உதவும்.

நமது வாழ்க்கையில் எதிர்படும் பல தீமையின் உணர்வுகளைக் கேட்டு அறிந்தால் நம்மைக் காத்து மற்றவர்களையும் காத்திடும் நிலையாக வர வேண்டும்.

ரேடியோ டிவிகளில் ஒலி/ஒளிபரப்பு செய்யப்படும் பொழுது அதை எந்த அலைவரிசையில் வைக்கின்றோமோ அந்த அலைகளை இழுத்துக் கவர்ந்து ஒலி ஒளியாக நமக்குக் காட்டுகின்றது.

அன்றாடம் பலருடைய உணர்வுகளை நாம் நுகர்ந்தாலும்
1.நமக்குப் பிடிக்கவில்லை என்றால் ரேடியோ டிவிகளில் எப்படி வேறு அலைவரிசைகளை மாற்றுகின்றோமோ அதைப்போல
2.பிறர் படும் துயரத்தை நுகர்ந்தோம் என்றால் அடுத்த கணமே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
3.இந்த அலைவரிசையை நமக்குள் எடுத்து தீமைகள் (அந்த அலைவரிசை) நமக்குள் புகாது தடுத்து நிறுத்த வேண்டும்.

“இப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நாம் வந்தால் தான்” வாழ்க்கையில் அறியாது சேரும் தீயவினைகளிலிருந்து நாம் விடுபட இது உதவும்

ஆகவே நாம் ஒவ்வொருவரும் ஞானிகள் காட்டிய மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் பிறவியில்லா நிலை அடைந்த அவர்களின் உணர்வை நாம் பெற்று… இந்த வாழ்க்கையைச் சீராக அமைத்து… உடலுக்குப் பின் நாம் விண் செல்ல வேண்டும்.

பல கோடிச் சரீரங்களிலிருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது இந்த உயிரான ஈசந் தான். நாம் விரும்பியதை உருவாக்குவதும் அவனே.
1.நம் ஆறாவது அறிவால் தெளிந்த மனம் கொண்டு அருள் உணர்வினை நுகர்ந்தால் உயிர் அதை உருவாக்கி
2.அதன் வழியில் நம்மை வழிநடத்தி இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெரு வாழ்வு பெறச் செய்யும்.

December 22, 2023

கோவிலிலே காசைக் கொடுத்துச் செய்வது போல் அல்ல “யாம் சொல்லும் இந்த ஞானத்தின் வழி”

எப்படியும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும்
1.உங்கள் நினைவுக்கு அது அடிக்கடி வர வேண்டும்
2.உங்கள் நினைவால் உங்களைக் காக்கும் அந்த அரும்பெரும் சக்தி நீங்கள் பெற வேண்டும்… அந்த எண்ணம் வளர வேண்டும் என்று
3.குருநாதர் சொன்ன முறைப்படி நீங்கள் பெற வேண்டும் என்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

ஆதே போல் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று நீங்களும் ஆசைப்பட்டால் எனக்குள்ளும் அந்த தீமையிலிருந்து விடுபடும் ஆசை பிரம்மம் ஆகிறது.

நான் எண்ணுவது போல் நீங்களும் எண்ணினால் வசிஷ்டர் பிரம்மகுரு. அதாவது ஒரு நோயாளியைப் பார்த்தால் தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வைக் கவர்ந்து உடலில் எடுத்துக்கொண்டால் தீமை நீக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பிரம்மம் ஆகிறது.

அந்தத் தீமையை நீக்கும் சக்தி உங்களில் வளர்ந்து சொல்லாக வெளி வரும் பொழுது… மற்றவர்களுக்கும் அது தீமை நீக்கும் சக்தியாக வருகின்றது. ஆகவே சாஸ்திரங்கள் நமக்கு காட்டிய அந்த அருள்வழிப்படி தெளிவாக வாழ்வோம்… அந்த அறிவின் தன்மை கொண்டு வாழ்வோம்.

1.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டியது
2.ஆனால் இந்த உடலின் இச்சைக்காகத் தான் பெரும் பகுதி இதைச் செயல்படுத்துகின்றோமே தவிர உயிர் இச்சை யாருக்கும் வரவில்லை.

உயிரை யார்…? என்று அறிந்து கொள்ளும் மனிதனாக ஆன பிற்பாடு உயிரை மதித்துப் பழகுவதே நல்லது. அவன் தான் நம்மை மனிதனாக உருவாக்கினான் என்ற நிலையில் அவனை மதிக்க வேண்டும்.

வேதனை வெறுப்பு சலிப்பு சங்கடம் இது போன்ற குணங்களை உள்ளே விடாதபடி தடுத்தல் வேண்டும்.
ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தில் அடிக்கடி வரும் தீமைகளை துடைத்துப் பழக வேண்டும்… துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.அதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களைப் பெறச் சொல்கிறோம்.

தீமைகள் புகாது தடுத்தால் உங்கள் ஆன்மா சுத்தமாகின்றது. உணர்வின் தன்மை ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள். எளிதில் நீங்கள் இதைச் செயல்படுத்த முடியும்.

காசு கொடுத்து அல்ல… நடந்து சென்று (பாத யாத்திரை) அல்ல…! அப்படி யாரும் விலைக்கு வாங்க முடியாது. விலை கொடுத்து இந்த ஞானத்தை வாங்க முடியுமா…?

1.என் பிள்ளை இப்படிச் செய்கின்றான் என்று தெய்வத்திடம் முறையிட்டு…
2.அதற்காக வேண்டிக் கோவிலிலே காசைக் கொடுத்து அர்ச்சனை செய்தால்
3.அந்தத் தெய்வம் வரம் தரும் என்று சொல்லிப் போகின்ற மாதிரி அல்ல யாம் சொல்லும் நிலை.

நாம் எண்ணியதையெல்லாம் நமது உயிர் ஓ என்று இயக்கி உருவாக்கிக் கொண்டே உள்ளது. நான் எண்ணியதையெல்லாம் ஓ…ம் நமச்சிவாய…! என்று உடலாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆகவே… அந்த உயிரான ஈசனை வேண்டி அந்த அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறுவோம்… அருளைப் பெறுவோம்… இருளை அகற்றுவோம்… பிறவியில்லா நிலை அடைவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்… என்றும் ஏகாந்த வாழ்க்கை என்று பெற தியானிப்போம்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம்முடைய மூதாதையர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்துவோம். காரணம்… நமக்காக அவர்கள் எத்தனையோ துயர் பட்டார்கள்.

சப்தரிஷி மண்டலத்தில் அவர்களை இணையச் செய்து… அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாக நம் முன்னோர்கள் வாழத் தொடங்குகின்றனர்.

1.அதை எண்ணும் போதெல்லாம் நாமும் அந்த உயர்ந்த சக்தி பெற முடியும்
2.அதைப் பெறச் செய்வதற்குத் தான் கூட்டுத் தியானங்களை அமைத்துள்ளோம்.

தனி ஒருவரால் ஒன்றும் செய்ய முடியாது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமையான உணர்வு கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால் இருளை அகற்றலாம்… உலகையும் காக்கலாம்… நம்மையும் காக்கலாம்… குடும்பத்தில் வரும் சர்வ தோஷங்களை நீக்க முடியும்.

அந்தச் சக்தி பெறவே உங்களுக்குள் இந்த நிலையை உபதேசித்தது. மன உறுதி கொள்ளுங்கள் அருளைப் பெருக்குங்கள் இருளை அகற்றுங்கள் பேரானந்தம் பெற்று ஏகாந்த வாழ்க்கை வாழ உயிரான ஈசனை வேண்டி அருள் உணர்வுகளை நமக்குள் சேர்ப்போம்.

தெளிந்த மனம் கொண்டு வாழ இந்த வாழ்க்கையை அர்ப்பணிப்போம்...!

 

ஆத்ம பொக்கிஷத்தை எடுக்கும் வழி

உஜ்ஜயினி மாகாளியம்மன் கும்பேஸ்வரி பிரதிஷ்டைக்குப் பின் பிருகு மகரிஷி “கதிரி” (மங்களூர்) சென்று செயல் கொள்ளும் முன்…
1.தன்னுடைய படைப்பின் வித்து செயல் கொள்ளப் போகும் காலத்தின் நியதியை ஞான நோக்கால் அறிந்து கொண்டு…
2.தீர்க்கதரிசன வாக்குகள் என்றே மூன்று குறிப்புகள் பதிப்பித்து அவற்றை ஓரிடத்தில் இட்டு… வாய்ப்பாகம் சிலை செய்து
3.உஜ்ஜயினி மாகாளிப்பட்டினம் உருக் கொள்ளும் எல்லைக்குள் அந்தப் பெட்டகத்தின் காப்பென பூமியினுள் புதைத்து வைத்து
4.நல் ஆக்கத்தின் வளர்ச்சிக்கு அது பிற்காலத்தில் பயன்பட வேண்டும் மானசீக ஆசி அருளி
5.தெற்கு திசை நோக்கி நிர்விகல்ப சமாதி எனும் செயல் கொண்டிடும் கதிரி எனும் இடத்தில்
6.செவ்வேள் எனும் சூட்சும ஆன்ம நேய வளர்ப்பு என்றே பக்குவம் கொண்டு
7.மண்டல சூட்சும செயலுக்குத் தன்னைத்தான் தெளிவுபடப் பொருந்திக் கொண்ட இடம் மூடுபத்திரி (கர்நாடகா).

பிருகு மகரிஷியின் அருள் சக்தி பெறுவோம்… பெற்று அவர் பதித்த வாக்குகளை அனைவரையும் பெறச் செய்வோம்.

மூவிரண்டு நிலை (ஆறு குணங்கள்) என்னும் நற்குண செயல்பாட்டையே மனமெனும் ஆழ்கிணறு – அதனுள் சுவை நீர் – தண்ணமாய் (ஒரு பக்கம் உள்ள பறை) ஒலிக்கும் அகப்பொருள் தின்மையாகக் (வலிமை) கொண்டிடும் உறுதி என்பார் வேதாள மாமகரிஷி.

மனக்கிணற்றின் நீர்… “எண்ணத்திற்கொப்ப” சுவை மாறு கொண்டிடும் இயல்பு கொண்டிட்டது. ஆழம் கண்டிட முடியாத அந்த மனக்கிணற்றினுள் “வண்ணமாய்… அழகிய ஒரு பொருளும் உண்டு.
1.அதுவே “பால் கடல் அமுது” எனும் நிலையாம் “ஆத்ம பொக்கிஷம்..”
2.அதனைப் பெற்றிடும் உறுதி… மூவிரண்டு முனை கொண்டிட்ட பொருள் பற்றிக் கொண்டிடல் வேண்டும்… அதுவே நற்குணங்கள்.

அதாவது… நற்குணங்கள் கொண்டு தான் ஆத்ம பொக்கிஷத்தை எடுக்க முடியும். கிணற்றில் விழுந்துவிட்ட வாளியைப் “பாதாள குறடு (கரண்டி)” கொண்டு எடுக்கின்றோம் அல்லவா.
1.அதுவே தன்மையாக ஒலிக்கின்ற அகப்பொருள்
2.அகப்பொருளைப் பற்றினால் ஒளி நிலை பெறுவது தன்னுள் சாஸ்வதம்.
3.“தனது உடலின் வால் தனைக் கண்டு மிரண்டு ஓடி” இடம் தேடி அலைகின்ற பூனை போல்
4.நம் மனதின் நிலை செயல் கொள்ளல் தகாது
5.அறிந்துணர்தல் என்ற “ஞானத்தைக் கொண்டு” நிலை நிற்றலே விவேகம்…!

December 21, 2023

எந்தப் பிள்ளையை வளர்க்கச் சொன்னார்கள் ஞானிகள்… எந்தப் பிள்ளையை நாம் வளர்த்துக் கொண்டுள்ளோம்…?

சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று நம் சஸ்திரம் கூறுவதன் பொருள் என்ன…?

ஒரு நோயாளி வேதனைப்படுவதை நாம் பார்க்கின்றோம்.
1.அந்த உணர்வுகள் சித்திரம்… நுகரும் போது அதற்கொப்ப எண்ணங்கள் வருகின்றது
2.நம் உடலுக்குள் அது அணுவாக (புத்திரனாக) உருவாகின்றது.

அந்த வேதனை என்ற கணக்குகள் அதிகமாகும் போது உடலில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகி உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தன்மை கொண்ட பாம்பாக உயிர் மாற்றி விடுகின்றது.

அதாவது நோயாளி வேதனைப்படுகிறார் என்ற எண்ணம் அதிகமாகும் போது சித்திர புத்திரனின் கணக்காகி… அந்த எண்ணம் நமக்குள் எமனாக வருகின்றது.

என்னை இப்படிக் கோபிக்கின்றானே… பாவிப்பயல் இப்படிச் செய்கின்றானே என்ற உணர்வின் தன்மை தனக்குள் எடுத்தால்… சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம்
1.எந்த மனித உடலை உற்றுப் பார்த்து இந்த உணர்வை நுகர்ந்தோமோ அதே வேதனையை நமக்குள் எடுத்து…
2.உடலை விட்டுச் சென்ற பின் அவன் உடலுக்குள் சென்று அங்கேயும் வேதனையை உருவாக்கி விஷத்தினைக் கூட்டி
3.அங்கேயும் நரக வேதனையைத் தான் படும்.

அந்த உடலில் இருக்கும் மகிழ்ச்சிகள் நீங்கி அவன் உடலில் விஷத்தைத் தான் உருவாக்கும். விஷத்தை உருவாக்கிய பின் அந்த உணர்வின் வழிப்பிரகாரம் அந்த எண்ணமே எமனாக மாறி அந்த உணர்வுக்கொப்ப இதைப் போன்று மாற்று உடல்களை உருவாக்கி விடும்.

அதனால் தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது அந்த எமன் யார்…? “நமது எண்ணம்தான்…!”

உதாரணமாக ரோட்டிலே ஒருவன் வேதனைப்படுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம்… நுகர்கின்றோம். கண்ணிலே பார்க்காமல் செல்ல முடியுமா…?

பார்த்தவுடனே அந்த வேதனைப்படும் உணர்வுகள் “அது சித்திரம்” எனக்குள் வந்து அது புத்திரனாக மாறுகின்றது அதே வேதனையை உருவாக்குகின்றது. நான் அதைப் பிள்ளையாக எடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றேன்.

ரோட்டிலே கிடந்தான் வேதனைப்பட்டான் துயரப்பட்டான் என்று
1.அவனுடைய உணர்வை எடுத்துச் சாப்பாடாகக் கொடுத்து இந்த பிள்ளையை
2.அவனால் நுகர்ந்து உடலுக்குள் உருவான அணுக்களுக்கு உணவாக்க கொடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றோம்.

இப்படிப்பட்ட உணர்வை வளர்த்தால் இதுவே நமக்குள் “நோய்” என்ற எமனாக வருகின்றது

எந்த வேதனைப்பட்டு அவன் வேதனையால் துடித்தானோ அல்லது மடிந்தானோ அதன் வழிப்படி அதே அளவுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும்…! என்பதைத்தான் சித்திர புத்திரனின் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று கதையாக எழுதி நமக்கு இந்தப் பேருண்மையை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

எல்லாம் படிக்கிறோம் அல்லவா…! ஆனால் படித்துவிட்டுச் சித்திர புத்திரன் எங்கே இருக்கின்றான்…? என்றால் அவன் எங்கேயோ இருக்கின்றான்… நாம் செய்யும் தவறுகளைக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றான்… எங்கேயோ இருக்கின்றான் என்று எண்ணுகிறோம்
1.ஆனால் “நமக்குள்ளே தான் அவன் இருக்கின்றான்…” என்பதை மறந்து விட்டார்கள்
2.அதைத்தான் ஞானிகள் நமக்கு நினைவுபடுத்துகின்றார்கள்

வேதனைப்படுவோர் உணர்வை நுகர்கின்றோம் உயிரிலே பட்டபின் விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான் உடலுக்குள் செல்வதற்கு….!

உள்ளே சென்ற பின் “ஓ… பிரணவம்” அந்த வேதனைப்பட்ட உணர்வு பிரம்மமாகின்றது. ஏனென்றால் நுகர்ந்த உணர்வு இரத்தத்தில் கருவாகின்றது. பின் அந்த உணர்வே இயக்கச் சக்தியாக மாறும்பொழுது பிரம்மம் ஆகின்றது.

அவன் எத்தனை வேதனைப்பட்டானோ அந்த வேதனை உருவாக்கும் அணுவாக உருவாகிறது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி…!
1.ஐயோ… அம்மா… என்று அவன் கத்துவான்
2.அதை உணர்வு இங்கே ஆன பின் இந்த உடலிலும் ஐயோ… அம்மா… என்ற நாதங்களைச் சொல்லும்படி வைக்கும்.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா.

சித்திர புத்திரன் கணக்கின் பிரகாரம் பிரம்மம் ஆன பிற்பாடு அந்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் கலந்து உடலுக்குள் சிவமாகின்றது. சிவமாக மாறும்பொழுது உடலில் வேதனை…!

இந்த உடலில் நல்லதை உருவாக்கும் அனைத்துமே அலறத் தொடங்குகிறது. ஐய்யய்யோ இந்திரலோகத்தில் இரணியன் புகுந்து எங்களுக்கு தொல்லை கொடுக்கின்றான் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சொல்வதாக இப்படி ஒரு கதை எழுதி நமக்கு உண்மை உணர்த்துகின்றனர் நாம் புரிந்து அருள் வழி வாழ்வதற்கு.

ஆனால் இதை விளக்கம் கொடுப்பவர்கள் இந்திரலோகமும் தேவர்களும் “எங்கேயோ இருக்கின்றார்கள்…” என்று தான் சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

ஆனால் உணர்வின் இயக்கம் இந்த உடலுக்குள் எப்படி நடக்கின்றது…? என்று தான் சாஸ்திரங்கள் நமக்குக் காட்டுகின்றது. அதை நாம் புரியாத நிலையில் எங்கெங்கோ கொண்டு போகின்றோம்..

ஆனால் இத்தனையும் ஞானிகள் காட்டிய வழியிலே குருநாதர் சொன்ன முறைப்படி இதை நான் சொல்லும் பொழுது “நான் சொல்வது புரியவில்லை” என்று சொல்கின்றார்கள்.

மற்றவர்கள் சொன்ன கதையைப் பதிவாக்கி வைத்திருக்கின்றார்கள்… அது அவர்களுக்குள் வலுவாக இருக்கின்றது. இப்பொழுது நான் சொல்லிக் கொண்டு வருவதைக் கேட்டு விட்டு
1.சாமி சொல்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நிறையப் பேர் இப்படித் தான் சொல்கின்றார்கள்
2.எனக்குப் புரியவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிடுவார்கள்.

இந்த தத்துவங்கள் எல்லாம் இயற்கையின் நிலையில் “எண்ணங்கள் எப்படி உருவானது…?” அன்று அகஸ்தியனால் கொடுக்கப்பட்ட இராமாயணம்.

1.அகஸ்தியன் கண்ட உண்மைகளை அவன் உணர்த்திய உண்மையைத்தான் வான்மீகி வெளிப்படுத்தினான்
2.அந்தத் தத்துவங்களைத் தான் இங்கே சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

அத்திரி மாமகரிஷி நமக்குக் கொடுக்கும் "மெய்ஞான விழிப்பு"

1.உன்னைக் கண்டு திகைப்பின் வசம் ஆழ்த்திடக்கூடாது
2.இது வலைபடு பாசமாக உட்கிடந்த நிலை…! அந்நிலை நீக்கிடவே தவத்தின் கடுமை காட்டினோம் (அத்திரி மாமகரிஷி சொன்னது)

அஞ்சற்க…! யாரும் காண முடிந்திடாத நிலையே உமக்குக் காணும் வாய்ப்பு கிடைத்தது. “அதிபாசம்” கொண்டு செயல்படுகின்ற உலகோதய வாழ்க்கை முறை வலியினைப் போன்றது. அவ்வலை பாசமாக உட்கிடந்த நிலை.

உலகப் பிடிப்பினில் அகப்பட்டே விடுபடாத் தன்மையாக இருந்திட்டாலும்
1.பாசத்தின் வலையையே பாதுகாவல் எனப் போர்த்திக் கொண்டிட்டவன்
2.அவனுள் கிளர்ந்து எழுகின்ற அதி ஆவேச உணர்வுகள் நச்சு அரவம் (நஞ்சு கொண்ட பாம்பு) போல் தோற்றம் காட்டி…
3.தான் எங்கு வளர்ந்து… அந்த வளர்ச்சியின் முதிர்வை அடைந்ததோ…
4.சுவரில் எறிந்த பந்து திரும்பி வருவதைப் போல் அந்தக் குண நிலைகள் அவனையே தீண்டிட வருகின்றது.

ஆகவே…
1.வலைக்குள் விழிப்புடன் இருப்பது வேறு…
2.அதுவே (வலை) சாஸ்வதம்…! என எண்ணிப் பாதுகாவல் எனக்கொண்டு கிடந்து உறங்குகின்ற செயல் வேறு.

உலக வாழ்க்கையின் சுழற்சியில் சிக்கி அகப்பட்ட தன்மையையே உறங்குகின்ற செயல் என்று உரைக்கின்றோம்.

உலோகதய நிலையாக… அதன் பிடிப்பில் அகப்பட்டுவிட்ட மனது என்ன செய்யும்…?
1.தீதெண்ண குணங்கள் என்னும் நச்சரவம் தீண்டிட வருகின்றதே என்று
2.சங்கட உணர்வுகளை மேன்மேலும் வளர்க்கும் நிலை… அந்த நச்சரவத்திற்கே பால் வார்த்திடும் செயலினை ஒத்தது.

அந்தத் தீதெண்ண நச்சரவத்தை வளர்த்த செயலில்… அது மீண்டும் தீண்டிட வருங்கால்… பாசமெனும் பிடிப்பின் நிலையை மனிதன் “உலகோதய நாட்டம்” என்று எங்ஙனம் பலப்படுத்துகின்றான் தெரியுமா…?

அதிபாசம் எனும் உணர்வுகளின் தன்மையை…
1.ஒளியும் காற்றும் உள் சென்றிடாத் தன்மைக்குப் பலப்படுத்திடும் சுவர் எடுத்து…
2.அதையே சுகம் என அதனுள் கடந்து உறங்கிட்டாலும்…
3.நச்சரவம் வாழ்ந்திடும் புற்று… “எது தனக்குப் பாதுகாவல்” என எண்ணி மனிதன் உலகோதய நாட்டத்தில் செயல் கொண்டிட்டானோ…
4.அந்த இடமே புற்றாகக் கிளைத்து… அந்த நச்சுப்புற்றாக வளர்ந்துவிடுகிறது…!

ஆகவே… அதனுள் எழுகின்ற நச்சரவம் உன்னைத் தீண்டிடும் முன் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்.

1.அந்த நிலையை விட்டு வெளிவந்து பார்
2.தெய்வத்தன்மை பெற்றிடும் சிறப்பு ஒன்று கிட்டிடும்.

நல்ல சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் மண்ணினுள் வாசம் செய்யும் பிராணியான எலி போன்று (காம விகார குணங்கள்) அதி பாசம் உட் சென்றிடவே வழி அமைக்கும்…. இதனை உணர்ந்து நீ நட…!

December 20, 2023

துருவ நட்சத்திரத்தின் முழு உண்மைகளை அறிந்த பின்பு தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வதெல்லாம் நம் உயிர் ஓ… என்று இயங்கிக் கொண்டே உள்ளது. நாம் பார்ப்பது கேட்பது இவை அனைத்தையும் ஜீவ அணுவாகப் பெறும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நாம் எண்ணியது அனைத்தும் அணுத்தன்மையாகி நம் உடலாகச் சேர்ப்பதைத் தான் ஓ…ம் ஈஸ்வரா…! என்றும் உடலுக்குள் எத்தகைய குணங்களைச் சேர்த்து மனிதனாக உருவாக்கியதோ அவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எந்தெந்தக் குணங்களை நாம் நுகர்ந்து அறிகின்றோமோ அறிந்த உணர்வுகள் அனைத்தும் ஓ…ம் நமச்சிவாய ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலாக உருவாகி விடுகின்றது.

அதே சமயம் நல்லது கெட்டது என்று எத்தனை வகையிலே நாம் நுகர்ந்தறிகின்றோம். ஆனால் அவை அனைத்தையும் நமது உயிர் அந்த குணத்தின் அணுவாக உருவாகும் கருவாக உருவாக்கி விடுகின்றது.

நம் உடலில் நல்ல அணுக்கள் உருவானால் மகிழ்ச்சி என்ற உணர்வு வருகின்றது. வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்துவிட்டால் வேதனை உருவாக்கும் கருவாக உருவாகிவிடுகின்றது.

எந்தெந்த உடலில் இருந்து எத்தகைய குணங்கள் வெளிப்பட்டதோ அதை அனைத்தையும் சூரியனுடைய காந்தப் புலனறிவு கவர்ந்து வைத்துள்ளது.

நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நம் உடலுக்குள் ஊழ்வினை என்று வித்தாக நமக்குள் அமைந்து விடுகின்றது
1.நாம் நல்ல குணங்கள் கொண்டு பலதைச் செய்தாலும்
2.தீமையான குணங்களைப் பிறர் வெளிப்படுத்தும் போது நாம் அதை நுகர்ந்து விட்டால்
3.அதன் உணர்வின் அணுக்கள் உடலுக்குள் பெருகிவிட்டால் நாமும் தீமை செய்வோராகவே மாறி விடுகின்றோம்.
4.அதே சமயம் நமக்குள் நோய்களும் வந்து விடுகின்றது.

இது போன்ற நிலைகள் வருவதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது. மனித வாழ்க்கையில் நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று வடக்கு திசையில் விண்ணிலே வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நமது பூமி கவர்ந்து பரவச் செய்து கொண்டே உள்ளது.

சாதாரண மனிதனுடைய வாழ்க்கையில் அவர்கள் பேசும் பேச்சுக்களை நாம் கேட்டுணர்ந்தால் உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக உருவாகி விடுகிறது.

ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவு இல்லை. நமது குருநாதர் அதை எவ்வாறு நம் உடலில் பதிவாக்க வேண்டும்…? என்று கூறியிருந்தார்.

அதன் வழி கொண்டு அவர் காட்டிய நெறிகள் கொண்டு பத்து இருபது வருடமாகக் காடு மேடெல்லாம் அலைந்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்…? என்று
2.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன அந்த முழு உண்மையின் உணர்வுகளை அறியும்படி செய்து
3.அதன் பின் அதனை வரிசைப்படுத்தி எவ்வாறு ஆனது…? என்று உணர்ந்த பின்
4.எனக்குள் அது பதிவாகி அதை நினைவு கொண்டு நுகறும் ஆற்றல் வந்தது (ஞானகுரு). அதனைக் கவர்ந்து கொண்டேன்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தினைப் பதிவு செய்தாரோ… அதே போன்று தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கிறேன்.

உபதேசிக்கும் போது நீங்கள் கூர்ந்து எந்த அளவிற்குக் கேட்கின்றீர்களோ அந்த அளவுக்கு அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அதன் மூலம்… உங்கள் வாழ்க்கையில் வரும் இருளினை அகற்றி மெய்ப்பொருள் கண்டுணரும் உணர்வின் சக்தி நீங்களும் பெற வேண்டும் என்ற அந்த ஆசையிலே தான் இதை உபதேசித்து வருகின்றேன்.

அந்தச் சக்தியை உங்களுக்குள் பெருக்கும் மார்க்கம் தான் குருநாதர் காட்டிய அருள் வழி தியானம்.

1.உபதேச வாயிலாகப் பதிவான இந்த உணர்வின் தன்மையை அடிக்கடி நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து
2.அதை ஏங்கிப் பெற்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள் பெருக்க முடியும்.

இல்லற வாழ்க்கையில் இருளை அகற்ற முடியும் இந்த மனித வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் பெற முடியும் இந்த மனித வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் உணர்வாக வளர இது உதவும்.

மக்களின் கணிப்பும்… மகரிஷிகளின் கணிப்பும்…!

வினைக்கு அஞ்சிடுவோர் வலைக்குள் உட்படுவோர் (சிக்கப்படுவோர்) ஆயினர். ஓர் சாதனையின் நிகழ்வே சகாப்தம் காட்டியது எனில்

1.ஆத்ம வலு கூட்டிடும் செயலில்… பெற்றுக் கொண்ட வலு
2.உலகினையே ஆட்டிடும் சித்தனாகச் செயல்படும் காரிய நிகழ்வுக்கு
3.அடிப்படையே “நம்பிக்கை தான்…”

எப்படி என்றால்
1.வெளியில் நிகழ்வுறும் சம்பவங்களால்… “எண்ணத்தின் நிலை கருத்தின் தெளிவை மாறுபடுத்திடும் என்பது” மக்களின் கணிப்பு
2.எண்ணத்தில் விளைந்திடும் செயல்களே… “நம்மைச் சுற்றி நிகழ்ந்திடும் சம்பவங்களாய் நடைபெறுதல் என்பது” மகரிஷிகளின் கணிப்பு.

அரைத்த நெல் மாவை வெளி வாசலில் உலர்த்திடும் பொழுது அந்த மாவைக் கரைக்க மழை வந்துவிட்டால் நம்மை அழைத்து உரைப்பது எது…?

மலை கரைத்திடும் மாவினை எடுப்பாயா…? அன்றே மழை பெய்யும் முன் அதை விரட்டி விடுவாயா…?

வேதாள மகரிஷி அன்று உரைத்த சொல்லில் இன்றைய உலகின் நடைமுறையில் தெளிந்து ஆட்கொண்டவர்கள்… ஆத்ம வலுவின் நம்பிக்கை கொள்பவர்கள்… கொள்ளப்படும் எண்ணங்கள் அரிதாகி வருகின்றது.

சூரசம்ஹார நிலை என்று காட்டியது மனத்தில் எழும் துஷ்ட குண சம்ஹாரம் தானே.

உடலின் தாவு என்றிடும் செருக்கு மிகுந்து விட்ட கால நிகழ்வு… இடருகின்ற சிறு கல் அடலேறு போன்ற நடையை பிரளச் செய்திடில்
1.இடருகின்ற அந்தக் கல்லை நோவதில் பயன் என்ன…?
2.வலிமையான ஆத்ம வலுப்பெற்றவர் முன் மற்ற குணத்தின் செயல்கள் அனைத்தும் காற்றினிலே சருகு.
3.இடர் வராது இருக்கின்ற வழியைக் காண்பதே உயர்வாம்… “குணம் வளர்க்கும் ஞானத்தின் வலுவில் அன்றோ…!”

முள்முனை முள் எடுப்பதற்கே காப்பான் ஜெபம் வேண்டும் என்கிறோம். பட்ட நிலை சிறிது தான் என்றாலும்… அதனால் உண்டான வேதனையின் வலிமை பெரிது என எண்ண வேண்டியதில்லை.

December 19, 2023

நம் நினைவுகளுக்குண்டான “சரியான சுவிட்ச்… கண்கள் தான்”

சந்தர்ப்பத்தினால்… குடும்பத்தில் கஷ்டமும் நஷ்டமும் நமக்கு அதிகமாக வந்து விட்டால் “எதிரி நமக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்…” என்று அந்த உணர்வை எடுத்துக் கொண்ட பின் கஷ்டம் அதிகமாகிறது. அடுத்து மந்திரவாதிகளிடம் செல்கின்றோம்.

எனக்கு இப்படியெல்லாம் இவன் கெடுதல் செய்தான் என்போம். சரி யாகத்தை வளர்க்க வேண்டும்… இதற்கு 100… அதற்கு 100… என்று இப்படி வரிசையாக நூறு நூறாகச் சொல்லி அவன் பணத்தை வாங்கிக் கொள்வான்.
1.இதைக் கொண்டு இன்ன இடத்தில் புதைத்து வைத்து விடுங்கள்… அவன் கெட்டுப் போவான் என்று சொல்வான்
2.கெட்டுப் போவதற்காக வேண்டிக் காசு கொடுத்து மந்திரத்தைச் சொல்லி செயல்படுத்துகின்றோம்.

கெட்டுப் போக வேண்டும் என்ற உணர்வை நுகர்ந்தால் நம் உயிர் என்ன செய்யும்…? அலுங்காமல் இன்னும் கொஞ்சம் வேதனையைத் தான் உருவாக்கும்…!

நாம் நினைக்கின்றோம்… அவன் கெட்டுப் போக வேண்டும் என்று.
1.அவனும் கெடுவான்… செய்ய நினைத்தவனும் கெடுவான்.
2.செய்வினை செய்தவர்கள் யாராவது தப்பியிருக்கின்றார்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!
3.தீமையைத் தான் நமக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர நன்மையின் உணர்வுகளை நாம் பெற முடிவதில்லை

இது எல்லாம் நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகள்.

அதனால்தான் குருநாதர் எம்மைச் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார். அந்தச் சாக்கடையில் உள்ள நாற்றத்தைப் பன்றி எப்படி தள்ளுகின்றதோ… அது போல் உனது வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பிளந்து தள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்தக் காற்று மண்டலமே ஒரு சாக்கடையாக இருக்கின்றது. இந்தச் சாக்கடைக்குள் இருந்து நீ நல்ல பொருளை எடுக்க வேண்டும்.
1.அதற்குத் தானப்பா இந்த உபதேசமே கொடுக்கின்றேன்…!
2.அந்த இடத்திலே அவர் சொன்ன முறைப்படி என்னை எண்ணும்படி சொல்கின்றார் குருநாதர்.
3.அவர் சொன்ன முறைப்படி எண்ணும் போது அந்த நாற்றம் மறைகிறது.

சில நேரங்களில் என்னுடன் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும் அருகில் நாற்றம் இருந்தால் எனக்குத் தெரிவதில்லை. ஞாபகப்படுத்தினால் தான் எனக்குத் தெரிய வரும். சாக்கடையாக இருக்கின்றது… சாமி இங்கே நின்று பேசிக் கொண்டிருக்கின்றார் என்று கூட நீங்கள் சொல்லலாம்.

ஏனென்றால் அதை நான் நினைப்பதில்லை அது என்னைத் தாக்குவதுமில்லை. ஆனால் கண்ணிலே பார்த்து விட்டால் விலகிச் சென்று விடுகின்றேன்.

சில பேர்… வந்த உடனே நுகர்ந்து பார்ப்பார்கள்… சங்கடம் சலிப்பு எல்லாம் வந்த உடனே ஐயோ நாற்றமாகின்றது என்பார்கள்.

இதுகள் எல்லாம்
1.நம்முடைய உணர்வினை எதிலே செலுத்துகின்றோமோ அதன் வழி தான்
2.இந்த உயிரும்… நம் உடலில் உள்ள காந்தப்புலனும்… கண்ணுக்கு நினைவு வரப்படும் பொழுது…
3.அந்த உணர்வு தான் ஆன்மாவில் முன்னணியில் நிற்கும்… சுவாசித்து அதுவே இயக்கும்.

முன்னிலையில் நம் ஆன்மாவில் இருப்பது எதுவோ இந்தப் பரமான பூமியில் பரமாத்மாவாக இருக்கின்றது. நம் கண்ணுக்குப் பெயரும் பரமாத்மா என்று தான் ஞானிகள் வைத்திருக்கின்றார்கள். அதனுடன் இணைந்தே நாம் வாழுகின்றோம்.

உணர்வுகள் ஒவ்வொன்றாகச் சேர்த்து நம் ஆன்மாவாக அதை மாற்றி உடலாக மாற்றிவிடும். நமது கண் பரமாத்மாவுடன் கலந்து தான் இருக்கின்றது. எதை நினைவுபடுத்துகின்றோமோ உடனே அது வருகின்றது

டி.வி.க்கு ஆண்டன்னா வைத்து இணைப்பு கொடுக்கின்றார்கள். எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ… காற்றிலிருந்து பிரித்து அந்தப் படக் காட்சிகளைக் காட்டுகின்றது.

1.நமக்கு எது ஆண்டன்னா…? நமது கண் தான்…!
2.அதன் உணர்வின் வழிப்படித் தான் நுகர்ந்து உயிர் வழி உணர்த்துகின்றது.
3.இந்த ஆண்டன்னா பழுதாகிவிட்டால் எந்த ரெக்கார்டை நீங்கள் எடுக்க முடியும்…?

அடிக்கடி வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் விஷத்தின் தன்மை கருவிழி ஈர்க்கும் சக்தி குறைகின்றது அதனால் நல்ல அணுக்களுக்கு வலுவான சக்தி கிடைப்பதில்லை.

கண்ணின் தன்மையிலே விஷத்தன்மை அதிகமாக படர்ந்து விட்டால்
1.விஷத்தின் உணர்வையே மீண்டும் இழுத்துக் கவர்ந்து வேதனை என்ற உணர்வுகளை ஊட்டிக் கொண்டே தான் இருக்கும்.
2.ஏனென்றால் கண்ணின் நரம்பு மண்டலம் அவ்வளவு சீக்கிரம் பாதித்துவிடுகிறது.
3.விஷத்தைக் கவரும் சக்தி தான் வருகின்றது.

அதிகமான வேதனைப்பட்டவர்களைப் பார்த்தால் தெரியும். அவர்கள் வாழ்க்கையில் நலிந்த சொல்லும் நலிந்த செயலும் வரும்… நரக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட தீமை வரப்படும் பொழுது கண் பலவீனம் ஆகிறது. அந்தச் சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் சாமானை ஒருவன் திருடிக் கொண்டு போவான் என்றால் அவனை எண்ண வைக்காது… யாரோ செல்கின்றார்கள்…! என்று தான் தெரியும்.

பார்வை நன்றாக இருக்கப்படும் பொழுது ஒருவர் வித்தியாசமாகச் சென்றால் கூடத் தெரிய வருகின்றது. நடையைப் பார்த்த உடனே என்ன… ஏது…? என்று திரும்பிப் பார்க்கின்றோம்.

நம் பொருள் தெரிகின்றது… அது அவன் கையில் இருக்கும். ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது பார்க்க முடியாது. மகாபாரதத்தில் இதைக் காட்டுகின்றார்கள்.

1.கண்ணன் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகொண்டு தான் அர்ஜுனனுக்கு வலு.
2.அப்போது அர்ஜுனன் எல்லா வகையிலும் தெளிவாக இருக்கின்றான்

ஆனால் கண்ணன் பரலோகத்திற்குச் சென்று விடுகின்றான் அர்ஜுனனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடி… ஓட்டிக்கொண்டு செல்கின்றார்கள்.

இவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை… ஆக அவனால் பார்க்க முடியவில்லை யாரோ எவரோ…! என்ற நிலையில் தான் இருக்கின்றான். எவ்வளவு தெளிவாக ஞானிகள் நமக்கு உண்மையை அறிந்து கொள்ளும்படியாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

மகாபாரதத்தைப் படித்தவர்கள் இதை வேறு விதமாக அர்த்தம் கற்பிக்கின்றார்கள். “கண்ணன் இறந்துவிட்டான்... அதனால் அர்ஜுனனுக்குச் சக்தி இல்லை…” என்று இப்படித்தான் அவர்கள் சொல்கின்றனர்.

நீங்கள் வேதனையுடனும் சோர்வுடனும் இருக்கப்படும் பொழுது கண்ணின் பார்வைகள் குறைகிறது. கண்ணுக்கு முன்னாடி திருடன் சென்றாலும்… வீட்டில் இருக்கும் பொருளை எடுத்துச் சென்றாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிறிது தூரம் சென்ற பிற்பாடு தான் யாராவது பார்த்து… என்ன…? உங்கள் வீட்டிலிருந்து பொருளை எடுத்துப் போகின்றான் திருடன்…! என்று சொல்லும் போது தான். ஆ…! என்று அப்பொழுதுதான் நினைவு வரும்.

1.நம்முடைய உணர்வுகள் எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைத் தான் தத்துவங்களும் சாஸ்திரங்களும் தெளிவாக நமக்குக் காட்டுகின்றது.
2.அதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் அவசியம்

நஞ்சை அமுதமாக்கிடும் “நீலி”

உணர்வுகள் முன்னறிவிப்பாக அனைத்தும் தெளிவுபட... அறிவில் பொருந்துதல்… அதுவே உயர் ஞான வளர்ப்பின் சித்து.

கனியாகும் முன் காயின் நிலை கண்டு… மனத்தின்கண் நினைப்பது கனிந்து விருந்தாக்கும் என்று நினைப்பதே நன்று.

வாயுள் படும் அந்தப் பொருளை (கனி) அதன் சுவையை முன்னறிதல்... சுவாச செயலாக நின்று...
1.உயிரின் உயர் நிலை கண்டு உண்டு களித்திருத்தல்...
2.ஞானமாகப் பயிர் வளர்த்திடும் வித்தகம் என்று பூரணத்துள் ஞான திருஷ்டி ஏற்பட்டுவிடும் பாங்கு வளர்ப்பின் நிலையின் “ஓர் அனுபவம்…”

இதுவே பிருகு மகரிஷி உண்டு… கண்டே உண்டு… களிப்பு எனும் பேரானந்தப் பெருநிலை அனுபவித்தல் தன்மையாக வேதாள மகரிஷி உரைத்திட்டது.

சரீரத்தின் தன்மைகள் கண்டு காற்றலையில் ஈர்த்திடும் விஷத்தின் குணங்களும் அன்றி… சரீரத்தில் நேரடியாக உட்கொண்டு விடும் விஷ அமிலத்தன்மைகள் எதுவாக இருந்தாலும் “நீலி கொண்டு தான்” சித்தர்கள் சரீர வைத்தியத்தில் அனுபோக முறைகள் கண்டு உரைத்துப் போயினர்.

நீலன் என்று உரைப்பது மனிதன் பெற்ற இந்தச் சரீரத்தையே...!
1.தவசியாய்ச் செயலுறும் பாங்கில்... விஷ அமிலத்தன்மைகளின் ஈர்ப்பில் தாக்குண்டு
2.அதனால் பெற்றிடும் அக்குணத்தன்மைகளை “அமுதமாக்கிடும் சக்தி நிலை கண்டமே நீலி…”

மருத்துவக் குறிப்புகள் நீலியைக் காட்டும் அந்தப் பெயர் படைத்திட்டது ஓர் மூலிகை. விஷத்தின் முறிவு சக்தியாக அதனை கைக்கொள்வோர் மிக அரிது.

மனமாகிய உலகினில் கண்டு தெளிதல்...
1.நாபியின் நாடிக்குள் பச்சை நிற வண்ணம் காட்டிடும் அமைப்பின் உள் நிலையை நீலி என்று புகழ்வது..
2.பிடரிக்கண்... சக்தி கொண்ட மூலாதாரத்தை நோக்கிடுங்கால்…
3.கிளர்ந்து எழுந்திடும் கந்தன் எனும் ஜோதி நீலியின் உட்பகுந்து சென்றிடும் பொழுதே…
4.எண்ணத்தால் உட்கண்டு தெளிதல் என்பது ஆங்கு செலுத்தப்படும் எண்ணமானது
5.தூய நிலை கொண்டு மாற்று நிலைத் தன்மைகளையும் மாற்றி…
6.உயர் நுண் காந்த அலையின் உயர்வாகச் சேர்க்கும் மனித இனத்தை வழி நடத்திட…
7.வழிகாட்டிடும் அவ்வின மாமகரிஷிகள் உரைத்திட்ட வழி நடத்தலே
8.நீலி கொண்டு நீலன் நஞ்சு முறித்திட்ட “ஸ்தூல… சூட்சம…” இரு நிலையின் “ஒரு பொருள்” காட்டும்.

December 18, 2023

எம்முடைய உபதேசங்களை “அடிக்கடி பதிவாக்கினால் தான்” தீமைகளை நீக்கும் வலிமை கிடைக்கும்

உங்கள் வாழ்க்கையில் எப்போதெல்லாம் சங்கடத்தைப் பார்க்கின்றீர்களோ... அடுத்த கணமே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் உள்ளுக்கே அடைத்துப் பழக வேண்டும்.

காலை நான்கு மணிக்கெல்லாம் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய சக்திகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்துக் கவர்ந்து நமக்கு முன் கொண்டு வருகின்றது.

அதை நாம் நுகரும் பொழுது உடலுக்குள் செல்கின்றது இது வலுப்பெற்று விடுகிறது.

அன்றாட வாழ்க்கையில்... காலையிலிருந்து இரவு வரை எத்தனையோ உணர்வுகளை சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் வேதனை இத்தனையும் எடுத்திருக்கின்றோம்... அது நமக்குள் பதிவாகி இருக்கின்றது.

1.இந்தப் பதிவுகள் நம் ஆன்மாவில் இருக்கும்
2.ஆன்மாவிலிருந்து நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொன்றாக வரிசையாக நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் சுவாசிக்க ஆரம்பித்தால்
3.அந்த உணர்வுகள் உயிரில் மோதினால் அந்த எண்ணங்கள் எல்லாம் நமக்கு வரும்.

சும்மா உட்கார்ந்து இருந்தாலும் கூட... அவன் சண்டை போட்டான் இவன் என்னை ஏமாற்றினான்... சம்பந்தமில்லாமலே ரோட்டிலே ஒருவன் போனான்... கீழே விழுந்தான்...! என்று எல்லா உணர்வும் வரும்.

பதிவான அந்த உணர்வுகள் நமக்குள் மீண்டும் நினவாகி... தனது இனமான உணர்வை உணவாக எடுத்து வளரத் தொடங்கும். அப்படி அதை நுகரும் போது என்ன ஆகிறது...?

உயிரிலே பட்டால் அந்தந்த உணர்ச்சிகளை நாம் அறிய முடிகின்றது உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கின்றது. கலந்த பின் உடலில் இருக்கக்கூடிய நல்ல அணுக்கள் சோர்வடைகிறது... சிந்திக்கும் தன்மை இழக்கின்றது.
1.இங்கே யார் தவறு செய்தது...? யாரும் தவறு செய்யவில்லையே.
2.ஆனால் சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான் அதற்குக் காரணம்.

வேதனைப்படுபவரைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நம் உயிர் உடலுக்குள் உருவாக்குகிறது... அது ஒரு சந்தர்ப்பம்.

அதை மாற்றி அமைக்கத் தீமைகளை நீக்கிய துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறுதல் வேண்டும். அதை நுகர்வதற்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி அதை வளர்த்தால்... தீமையை நீக்கும் சந்தர்ப்பமாக நமக்குள் வரும்.

சந்தர்ப்பத்தால் நுகரும் உணர்வு தான் பரப்பிரம்மமாகிறது. மனிதன் அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கி உயிரிலே நுகர நேர்ந்தால்... அதை உருவாக்கினால்... “துருவ நட்சத்திரத்தின் சக்தி நமக்குள் பிரம்மமாகிறது...”

பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன். கார்த்திகேயா...! இந்த ஆறாவது அறிவால்... தீமை என்று தெரிந்து கொண்ட பின்... அந்தத் தீமையை நீக்க வேண்டும் என்று அறிந்து கொண்ட உணர்வை வைத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நுகர்ந்தால் அருள் ஒளியை உருவாக்கலாம்.

அந்தச் சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கும் போது தீமையை நீக்கும் சக்தி கிடைக்கும். ஏன் இது நம்மால் முடியாதா...?

அதற்காக வேண்டித் தான்
1.அவ்வப்பொழுது தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்... நினைவூட்டுகின்றோம்.
2.உங்களைக் காக்க இது உதவ வேண்டும் என்பதற்காகத் தான் மணிக்கணக்கில் உபதேசிக்கின்றேன்.

சிறிது நேரம் சொல்லிவிட்டுச் சென்றால் “நன்றாக இருக்கின்றது...” என்று சென்று விடுவார்கள்... உள்ளே பதிவாகாது. பதிவாகவில்லை என்கிற போது குருநாதர் என்ன சொன்னார்...? என்று கேட்பார்கள்.

அதற்காக அழுத்தமாகக் கொடுக்கப்படும் பொழுது அதைப் பெற வேண்டும் என்ற உணர்ச்சிகள் வருகின்றது அதை வைத்து உங்களைக் காக்கும் எண்ணங்கள் வரும்.

இப்படித் தான் உங்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்கிறோம்.... அடிக்கடி பதிவாக்குகின்றோம்.
1.இதை நினைவு கொண்டால் அந்த அருள் உங்களுக்குள் வலுப்பெறுகின்றது
2.இருளைப் போக்கும் சக்தியை நீங்கள் பெறுகிறீர்கள்