ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2023

நல்ல நேரத்தைத் தான் நாம் உருவாக்க வேண்டும்…!

சாங்கிய சாஸ்திரத்தைச் செய்து நல்ல நேரம் வருகின்றதா… கெட்ட நேரம் வருகிறதா…? என்று தான் இன்று பார்த்துக் கொண்டு வாழ்கிறோம்.

உதாரணமாக ஒரு மனிதன் திடீரென்று கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்படுகின்றான்… அவனுக்கு மூச்சுத் திணறலாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.

மருத்துவரிடம் உடனடியாக அழைத்துப் போனால் தான் அவனுக்குச் சரியாகும். நல்ல நேரம் பார்த்து அவனை மருத்துவரிடம் கொண்டு போக முடியுமா…?

நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் “அந்த நல்ல நேரம் அவரைக் காப்பாற்றுமா…?”

இப்படி… நம்மை அறியாமலேயே நல்ல நேரம் கெட்ட நேரம் என்று தான் சாங்கியப்படி எண்ணிக் கொண்டிருக்கின்றோம். அதிலே உண்மை இல்லை.

ஆக அவரைக் காக்க வேண்டும் என்று எண்ணத்தில் உடனே சென்றால் அவருக்கு நல்ல நேரம் வருகிறது… அவரை நிச்சயம் பிழைக்க வைக்க முடியும்.

நல்ல நேரம் எங்கே உருவாகின்றது…?
1.நமக்குள் தான் உருவாகின்றது
2.நல்ல நேரத்தைத் தான் நாம் உருவாக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

நல்ல நேரத்தை உருவாக்க வேண்டும் என்றால்…
1.இப்போது ஒரு கஷ்டம் வருகின்றது என்றால்
2.அந்த நேரத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
3.அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
4.எனக்கு நல்லது நடக்க வேண்டும்…! என்ற இந்தச் சந்தர்ப்பத்தை அங்கே உருவாக்க வேண்டும்
5.அப்பொழுது அந்த நல்லது நடக்கும்… இது நல்ல நேரம் ஆகின்றது

ஆனால் ஒருவர் வருகிறார். “ஜாதகப்படி இந்த நேரம் மோசமான நேரம்… இந்த நேரத்திலே நீங்கள் நல்ல காரியத்தை ஆரம்பிக்கின்றீர்கள்…!” என்று நம்மிடம் சொல்கிறார்.

அவர் சொல்வதைப் பதிவு செய்தால் போதும்.
1.அவர்கள் சொல்லும் அந்தக் கெட்ட நேரம் நமக்குள் வந்து
2.அது கெட்ட நேரமாகவே ஆகிவிடுகிறது.

ஆக கெட்ட நேரமும் நல்ல நேரமும் எங்கே எப்படி உருவாகின்றது…? என்பதை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டில் இந்தக் கஷ்டம் அந்தக் கஷ்டம் என்று சொல்வார்கள். பின் என்னுடைய நேரம் கெட்ட நேரம்… அதனால்தான் இப்படியானது…! என்று சொல்லிவிடுவார்கள்.

இதை எல்லாம் எடுத்துவிட்டு
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் நாம் எண்ணி உயிரிலே உருவாக்கப்பட்டால்…
1.அந்த உணர்வின் வழி அந்த உணர்ச்சி… அது நம்மை ஆளத் தொடங்கும்
2.நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வைக் கண்களால் நினைக்கப்படும் போது
3.அந்த உணர்வு வலுவாகி உயிரிலே மோதும் போது அதை நல்ல நேரமாக உயிர் சமைக்கும்.

ஆக… நல்ல நேரமும் கெட்ட நேரமும் மனிதனுக்கு இல்லை.

நம்மிடம் இருக்கும் “அரிதான சக்திகளை” அறியாதபடி தான் வாழ்ந்து கொண்டுள்ளோம்

இன்று விஞ்ஞானத்தில் ஒலிப் பதிவு செய்த நாடாக்களில் காந்த அலையை மின்சாரத்தினால் பாய்ச்சி அதனை ஒலிக்கச் செய்து கேட்கின்றனர்.

 

அதைப் போன்று இவ்வுடல் என்ற கூட்டு அமிலமுடன் உயிர் அணு தோன்றி ஜீவ உணர்வு எண்ண சக்தி வளர்ந்த நாள் தொட்டே பல கோடிச் சரீரங்களில்.. ஒவ்வொரு உயிர் ஜீவனின் உணர்வு எண்ண சுவாசத்தில் எடுத்த நினைவலைகள் அனைத்துமே நம் உடலில் பதிவாகியுள்ளது.

1.அப்படிப் பதிவான உணர்வெண்ண அலையில்

2.பல ஜென்மங்களில் எடுத்த எண்ண நினைவலைகளும் உண்டு.

 

அதன் குண நிலைத் தொடரில் தான் இன்றைய பிம்ப உடலின் உணர்வு நினைவு எண்ண ஓட்டங்கள் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அப்படிப் பதிவாகியுள்ள உடல் கூறு தான் இது.

 

ஆகவே

1.இவ்வுடல் உணர்வு எண்ணமுடனே (அந்த ஓட்டத்திலேயே) நம் எண்ணத்தைச் செலுத்தினோமானால்

2.ஆத்ம சக்தி நல்லுணர்வின் வழித் தொடர் பெற முடியாமல்

3.அணைகட்டாமல் செல்லும் நீரைப் போல் தான் அதன் வேக நிலைக்கொப்ப செல்லும்.

 

உணர்வின் எண்ணம் கொண்டு நற்சக்தியின் ஞான ஒளி அலையை இவ்வுடலில் ஏற்கனவே பதிவாகியுள்ள பலவான உணர்வுகளில் “கலக்கச் செய்திட வேண்டும் (இது முக்கியம்)…”

 

1.அத்தகைய எண்ணங்களையும் நினைவுகளையும்

2.நற்சக்தியின் நல் எண்ண குணத்தை வழிப்படுத்தக்கூடிய எண்ணத்தில் நம் வாழ்க்கை நடைமுறை இருந்திட்டால்

3.நாம் எச்சக்தியைப் பெற வேண்டும் என்று உணர்வின் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ

4.அச்சக்தியின் எண்ணமுடன் நம் வாழ்க்கை செயல் இருந்திட்டால்தான்

5.நம் ஆத்மாவும் நல் ஞானச் சக்தியின் வழித் தொடரைப் பெற முடியும்.

 

உடலில் மட்டுமல்லாமல் உடலை விட்டுப் பிரிந்தவர்களின் (இறந்தவர்களின்) எண்ண நினைவு சப்த அலைகள் அந்தந்த உயிராத்மாவின் சுழற்சியுடன்இக்காற்று மண்டலத்தில் சுழன்று கொண்டே அழியாமல் தான் உள்ளது.

 

இதனை உணர முடியுமா…?

 

இன்று நாம் பேசியதை நாடாக்களில் அமிலத்தைப் பூசி காந்த மின் அலையின் சக்தியினால் பதிவு செய்து பல காலங்களுக்கு அதனைக் கேட்க முடிகின்றது.

 

உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மாக்களின் தொடர்பலையையும் நாம் நம் எண்ணத்தால்அவர்கள் பால் செலுத்தும் உணர்வு ஞானத்தால்எந்த ஒரு உடலை விட்ட ஆத்மாக்களுடனும் தொடர்பு கொள்ள ஜீவ பிம்ப மனித உடல் கொண்டோரால் முடியும்.

 

இம்மனித ஞானத்தில் மட்டும் தான் முடியும் என்பதல்ல…!

 

நம்முடன் வாழ்ந்த ஜீவன் பிரிந்த ஆன்மாக்கள் அவர்கள் அவர்களால் விரும்பி வாழ்ந்த காலத்தில் அவர்களின் உடம்புடன் தரித்திருந்த பொருள்களில் காந்த மின் அலையின் சக்தியை சில அமிலங்களின் கலப்புக் கூட்டைப் பூசி அவர்கள் பேசிய அலையையும் எடுக்கலாம். அவர்களின் இன்றைய எண்ண ஒலியையும் எடுக்கலாம்.

 

இவ்வுடல் கூட்டிற்கு ஜீவ நீர் சக்தியினால் எச்சக்தியையும் செயலாக்கவல்ல ஆற்றலுண்டு. “சகல லோகங்களையும் காணவல்ல ஆத்மக் கூடு இது” (நம் ஆன்மா).

 

1.ஆனால் நம் உணர்வின் எண்ணமெல்லாம் இவ்வாழ்க்கைஎன்ற ஏக்கச் சலிப்பு நிலையுடனே இருப்பதாலும்

2.பெரும்பாலும் தன் சக்தி குண அமிலத்தையே கூட்டும் வழியிலிருந்து

3.குறைக்கும் ஈர்ப்பு ஓட்டமான ஓட்ட கதியில் செலுத்தி விடுவதாலும்

4.நம் ஆன்மாவுக்குண்டான சக்தியை அறியாமலேயே வாழ்கின்றோம். 

 

இவ்வுணர்வின் எண்ணத்தையே நாம் நல்லெண்ண குண அமில நிலையில் வளர்த்துக் கொண்டோமானால்

1.ஒவ்வொரு மனித ஆத்மாவும் எந்த ஒரு பேரின்ப நிலை பெற வேண்டும் என்று

2.அன்றைய ஞானிகளும் சப்தரிஷிகளும் உணர்த்தி உள்ளார்களோ அதன் உணர்வெண்ண நினைவுப்படி

3.அவர்கள் அடைந்த  நிலையை நாமும் அடைய முடியும்.

January 30, 2023

எந்தச் சூழ்நிலையிலும் இனிமேல் பதட்டமடையாது… “மன உறுதி கொண்டு குரு காட்டிய அருள் வழியில் நடந்து வாருங்கள்…”

நான் சம்பாதிக்கின்றேன்… நீயும் சம்பாதிக்கின்றாயா…? என்று ஆசைப்பட்டாலும் இனி உலகப் போர் நடந்தால் அணு குண்டு யுத்தம் தான் நடக்கும்.
1.எந்த நிமிடம் அணுகுண்டோ மற்ற நிலைகளோ எங்கே… எப்படி விழுகப் போகிறது…! என்று சொல்ல முடியாது
2.அடுத்தவன் நம் மேல் போடப் போகின்றான்… நாம் அவன் மீது போடப் போகின்றோம்…
3.இது தான் நடக்கப் போகிறது…

அந்த நிலை ஆவதற்கு முன் இந்த உடலை விட்டுச் செல்லும் முன் “நாம் எதைச் சேமிக்க வேண்டும்…?” என்பதைத்தான் இங்கே உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

துருவ நட்சத்திரம் வேகா நிலை பெற்றது. நம் உயிரும் எந்த நெருப்பிலும் வேகுவது இல்லை.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களில் சேர்த்துக் கொண்டு வந்தோம் என்றால் உயிரைப் போன்று வேகா நிலை பெற்றுத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

என் சொத்து உன் சொத்து…! என் காசு உன் காசு…! கௌரவம்…! அனைத்தும் போய்விடும். காரணம் உலக யுத்தம் மிக அருகில் இருக்கின்றது;. ஆரம்பித்தால்…
1.ஒரு பத்து நிமிடம் அல்லது குறைந்தது ஒரு பதினைந்து நாட்களுக்குள் உலகம் முழுவதற்குமே விஷத்தன்மை பரவப் போகின்றது.
2.நாம் என்ன செய்யப் போகின்றோம்…?

உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் மீண்டும் அடுத்த உடலுக்குள் சென்று விடக்கூடாது இன்னொரு பிறவிக்கு வந்து விடக்கூடாது

ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சாதாரணமாக யார் உடலை விட்டுப் பிரிந்தாலும் நஞ்சின் தன்மையைத் தான் அடைகின்றார்கள்.

ஆக… இந்தக் காற்று மண்டலமே நஞ்சின் தன்மையாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய சக்தியை நாம் இப்போதே சேர்த்துக் கொண்டு வரவேண்டும்.

எது எப்படி இருந்தாலும்
1.உயிர் உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் நாம் செல்ல வேண்டும்.
2.தோக்கி உள்ள விஷங்களை அங்கே கரைத்துப் பழகுதல் வேண்டும்

அதற்குத் தான் இப்பொழுது பயிற்சியாக உங்களுக்கு மீண்டும் மீண்டும் கொடுத்துக் கொண்டே வருகின்றோம்.

எத்தனை பேர் இதை நீங்கள் எடுக்கிறீர்கள்…! என்று தெரியவில்லை. ஏனென்றால் நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
1.எந்தச் சாமியும்… எந்தச் சாமியாரும்… “உங்களை யாரும் காக்கப் போவதில்லை…”
2.உங்கள் உயிர் தான் உங்களைக் காக்க முடியும்.

உயிரின் துணை கொண்டு எந்த உயர்ந்த சக்தியை நீங்கள் எடுக்கின்றீர்களோ… அந்த உணர்வை வைத்து அருள் வாழ்க்கை வாழ்ந்திடவும்… இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைவதற்கும்… இந்த ஒன்றைத் தவிர வேறு வழி இல்லை.

ஏற்கனவே பல முறை உங்களுக்கு இதை எல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம். இனி எந்த நேரம்… எது நடக்கும்…? என்று சொல்ல முடியாது அந்த அளவுக்குத் தான் இந்த உலகம் இருக்கின்றது. ஆகவே
1.நம் குருநாதர் காட்டிய வழியில் தியானத்தைக் கூட்டுங்கள்
2.ஆத்ம சுத்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் செய்து கொண்டே வாருங்கள்
3.மன அமைதியைக் கொண்டு வாருங்கள்
4.எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டமடையாதபடி மன உறுதி கொண்டு அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த உலகம் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றது…!

இதிலிருந்து நீங்கள் தப்ப வேண்டும் என்றால் தியானத்தைச் சரியான முறையில் கடைப்பிடித்து துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடலில் இருக்கக்கூடிய ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்த்துப் பழகுங்கள்.

இதைச் செய்தால் தான் தப்ப முடியும்.

பிறவிக் குணத்தை மாற்ற முடியுமா...! எப்படி...?

1.உணர்வையும்
2.எண்ணத்தையும்
3.ஒவ்வொருவரும் செலுத்தி வழிப்படுத்தும் முறை கொண்டு தான் “ஞான ஈர்ப்பு” வளரும்.

இவ்வுணர்வையும் எண்ணத்தையும் ஞானத்தில் செலுத்திட நற்குணங்களின் சக்தி அலை ஆறு வகையை உணர்த்தினோம். மனித குண அமிலங்கள் பன்னிரெண்டு இருந்தாலும் அதிலே அந்த ஆறு நற்குணங்களின் அமிலங்களின் சக்தி நிலை மனிதனுக்குள் பெருக வேண்டும்.

ஒவ்வொரு மனிதனின் குண அமிலத்தின் உணர்வு உந்தச் செய்யும் எண்ண ஓட்டம் உடலின் உணர்வைக் கொண்டே மீண்டும் மீண்டும் வரத்தான் செய்யும். அதனால் ஏற்படும் சலிப்பைச் சாந்தமாக்க வேண்டும்.

இவ்வுடல் பிம்ப உணர்வு கொண்டு வாழும் வாழ்க்கையில்
1.ஒவ்வொரு நிலையையும் காணும் பொழுதே
2.நாம் எடுக்கும் சுவாசத்தினால் அவ்வுணர்வலைகள் இவ்வுடலில் சாடத்தான் செய்யும்.
3.இன்று நாம் காணும் உணரும் எண்ணத்தால் மட்டும் நம் சுவாசம் அத்தகைய நிலையை ஈர்க்கும் நிலை ஏற்படுவதல்ல.

ஏன்… எப்படி…? எதனால்..?

ஜீவ பிம்ப உணர்வு (மனித) உடலில் “எல்லா உணர்வின் நிலையையும் உணரவல்ல ஈர்ப்பு குணங்கள்” இப்பிம்ப உடலின் அமில குணச் சேர்க்கை வடிவெடுத்த ஆரம்பக் காலத்திலிருந்தே…! பல ஜென்மங்களின் கூட்டுக் கலவை வளர்ப்பு அமிலங்கள் இந்த உடலில் உண்டு.

1.முந்தைய காலத்தில் நாம் எடுத்துக் கொண்ட உடலின் உணர்வலைகள்
2.இன்று… இப்பொழுது… நாம் எடுக்கும் நற்சக்தியின் அலையின் உணர்வினால் மட்டும் தடைப்படுத்திட முடியாவண்ணம்
3.நம் உடலின் கூட்டு உணர்வமில… முந்தைய சேமிப்பு அமிலத்தில் “உயர்ந்து நிற்கும் குணத் தொடர் உணர்வு” (முன் ஜென்மத் தொடர்)
4.அதன் ஈர்ப்பு வட்டத்திலிருந்து நம்மை மாற விடாமல் தடைப்படுத்தும்.

இயற்கையின் உரு குண நிலையே இதன் அடிப்படை குண ஈர்ப்பு ஓட்டத்தில் தான் இவ்வுலகம் முழுமைக்கும் ஓடிக் கொண்டுள்ளது.

1.அதி மழை காலத்தில் அதன் வேகத்தைக் கொண்டு பெய்யும் மழை நீர்
2.அதே ஓட்டத்தில் சுழன்று அதி வேகமாக ஓடிக் கலக்கின்றது.
3.அதே நீர் தான் அமைதியாகவும் தெளிந்த நிலையிலும்
4.நாம் அணை கட்டி விடும் வேகத்தின் விகிதப்படி நிதானமாக ஓடுகின்றது.

உணர்வின் வேகத்தை மழை நீரானது மழை பெய்யும் வேகத்தைக் கொண்டு அதன் ஓட்ட நிலையில் விட்டு விட்டால் அதே வேகத்தில் பாய்வது போல் நம் உணர்வின் வேகத்தையும் அப்படியே விட்டால் அதனின் வேகத்திலேதான் பாயும்…!

ஆனால் மழை நீரை அணையைக் கட்டித் தேக்கி அந்நீரை நமக்கு வேண்டியபடி வெளிப்படுத்தும் விகிதம் கொண்ட ஓட்டத்தில் திறந்து விடும் பொழுது அதே நீர் அதற்கு உகந்த வேக நிலை ஓட்டத்தில் தான் அது ஓடும்.

ஆக.. இவ்வெண்ணத்தை நம் வாழ்க்கையில் நடத்திடும் எந்தச் செயலுக்கும் அச்செயலை ஈர்க்கவல்ல எண்ண ஓட்ட கதியில் விட்டு விட்டோமானால் என்ன ஆகும்…?

வாழ்க்கையில் நடந்திடும் எந்த ஒரு செயலையும் அணை கட்டி ஒழுங்குமுறைப்படுத்தி விடும் நீரைப் போல் இல்லாமல் விட்டு விட்டால்
1.மழை நீரின் வேகத்தைக் கொண்டு பாய்ந்தோடும் துரிதத்தைப் போலவும்
2.மழையின் தன்மை குறையக் குறைய மழை நின்ற பிறகும் அதன் செயல் நிலைக்கொப்பச் செல்லும்
3.நீரின் வேக நிலையைப் போலவும் தான் இவ்வெண்ண உணர்வும் செயல்படும்.
4.காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்ற பிறகு அது நிதானப்பட்டாலும் “வெள்ளத்தின் பாதிப்பு பாதிப்புத்தான்…!”

அதைப் போன்று நம் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நொடிக்கும் நாம் எடுக்கும் சுவாசத்தின் உணர்வு எண்ணம் கொண்டு பல மோதல்கள் வருகிறது.

ஏனென்றால் நம் பூமியின் காற்று மண்டலத்தில் இயற்கையின் அமில சக்திகளுடன் இம்மனித எண்ணத்தின் சுவாச அலையின் குண அமிலங்கள் நிறைந்தே சுழல்வதால்
1.நாம் எடுக்கும் சுவாசத்துடன் இக்காற்று மண்டல அமில சப்தங்கள்
2.நம் உணர்வு எண்ணத்தில் மோதிக் கொண்டே தான் உள்ளன.

ஒவ்வொரு நொடிக்கும் நம் சுவாச நிலைக்கொப்ப உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் சக்திகள் இவ்வுடல் பிம்ப அமில சப்த அலையுடன் பதிவாகிக் கொண்டே தான் உள்ளது… அதனின் இயக்கமும் இருந்து கொண்டே தான் உள்ளது.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆகவே எதிர் மோதலாகும் அந்தந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம்… நம் உணர்வையும் எண்ணத்தையும் சமப்படுத்திச் சீராக்கத் தான் நமக்கு வழி காட்டிக் கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும்படி சொல்கிறோம்.

January 29, 2023

ஆத்ம சுத்தியைச் சீராகக் கடைப்பிடித்து வந்தால் “உள் உணர்வு (ஞானிகள்)” சரியான பாதையில் உங்களை வழி நடத்தும்

நம் நண்பரைச் சந்திக்கின்றோம்… பார்த்தால் சோர்வாகத் தெரிகின்றது ஏன் இப்படி இருக்கின்றாய்…? என்று கேட்கின்றோம்.

ஆமாங்க... என் பையன் ஏதேதோ செய்து விட்டான்…! கடன் கொடுத்தது பணம் திரும்ப வரவில்லை… குடும்பத்தில் ஒரே ரகளையாக இருக்கின்றது… என்ன செய்வது என்று தெரியவில்லை…! என்று சொல்கின்றார்கள்.

நம் நண்பர்களிடம் நல்லதைத்தான் விசாரிக்க விரும்புகின்றோம் ஆனால் அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் சொல்கின்றார்கள்.

அப்படிச் சொல்லும் பொழுது “இதையெல்லாம் என்னிடம் சொல்லக் கூடாது.. போங்கள்…!” என்று சொல்ல முடியுமா...?

அப்படி அவர்கள் சொன்னாலும் நாம் அந்த இட்ட்தில் விழித்திருக்க வேண்டும். அவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டிருந்தாலும்…
1.அவருடைய கஷ்டம் எல்லாம் நீங்க வேண்டும்
2.அவர் தொழில் சீராக வேண்டும்
3.அவர் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற இந்த ராகத்தை
4.இந்த உணர்வை நாம் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் “அவர் நலம் பெற வேண்டும்… நலம் பெற வேண்டும்…” என்று இதைச் சொல்லிக் கொண்டிருந்தால்
1.அவருடைய கஷ்டம் நமக்குள் புகாது அதை இழுக்காது
2.வெளியில் தான் தேங்கி நிற்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும். எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும். எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர வேண்டும். எலும்புக்குள் ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உடலுக்குள் இதைச் செலுத்தி வலுவாக்க வேண்டும்.

“ஒரு நிமிடத்திற்குள்” இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த நண்பரிடம் மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள் உங்களுக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும்… உங்கள் தொழில்கள் சீராகும்… “கஷ்டம் என்ற வார்த்தையை விட்டு விடுங்கள்…!” என்று சொல்லிப் பாருங்கள்.

அவர் படும் கஷ்டங்கள் உங்களுக்குள் விளையாது. இப்படி நமது சகஜ வாழ்க்கையில் பிற தீமைகள் வந்தால் விழித்திருக்க வேண்டும்.

ரோட்டில செல்கின்றோம். சந்தர்ப்பம் ஒரு விபத்தைக் காண நேர்கின்றது உற்றுப் பார்த்த பின் நமக்குள் அது வந்து விடுகின்றது… ரெக்கார்ட் ஆகிவிடுகிறது.

இப்படிப் பதிவான அனைத்துமே நாம் எப்பொழுது சோர்வடைகின்றோமோ அப்பொழுது நினைவுக்கு வரும். அந்த மாதிரி நேரங்களிலும் ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் எண்ணி… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரை எண்ணி அதைத் தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்.

ஊனை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அங்கே இணைத்துப் பழகுதல் வேண்டும்.
1.நாம் கண்ணிலே பார்த்தது இங்கே தான் ரெக்கார்ட் ஆகும்
2.விலா எலும்புகளில் தான் அதிகமாகப் பதிவாகும்…
3.காரணம் அங்கு அதிகமான மேக்னெட் (காந்த சக்தி) இருக்கின்றது.. அங்கே இழுத்து வைத்துக் கொள்ளும் ரெக்கார்ட் ஆகும்
4.பதிவானதன் துணை கொண்டு காற்றிலிருந்து இழுத்துத் தன் ஆன்மாவாக மாற்றிக் கொள்ளும்
5.ஆன்மாவில் எது வலுவாக இருக்கின்றதோ… அது உயிரிலே மோதும்
6.அதனுடைய வேலையைச் செய்யும்… “உங்களுடைய எண்ணத்தை நிறைவேற்ற விடாது…”

தியானத்தில் நீங்கள் இருக்கும் போது இது எல்லாமே தெரியும். எத்தனையோ நினைவுகள் உணர்வுகள் ஓடிக்கொண்டிருப்பதைக் காணலாம்.

என்னால் ஒருநிலைப்படுத்த முடியவில்லை என்று சொல்வார்கள்.

அந்த ஆன்மாவில் வலுவாக இருப்பது முன்னாடி வந்தபின் தியானம் எடுப்பதை மறந்து விட்டு அதற்குள் சென்று விடுவார்கள். பின் “இப்படி வருகிறதே…” என்று எண்ணும் பொழுது
1.அதைக் காட்டிலும் வலுவானது வந்தால் அது இயக்கும்
2.அதற்கடுத்து மனதிலே சோர்வு வந்துவிடும்… நல்ல சக்திகளைப் பெற முடியாது.

இதைச் சீர்படுத்த வேண்டும் என்றால் அவ்வப்பொழுது வரக்கூடிய தீமைகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஆன்மாவைச் சுத்தம் செய்து கொண்டே வர வேண்டும்.

சிறிது நாட்கள் இதைச் செய்து நீங்கள் அனுபவத்திற்கு வந்தால் பின் தன்னிச்சையாகச் (AUTOMATIC) செயல்படுத்த முடியும்… மன நிம்மதி கிடைக்கும்.

கலக்கமான நேரத்தில் யாம் சொன்ன ஆத்ம சுத்தியைச் செய்தால் நல்ல சிந்தனைகள் வரும்
1.அந்த நேரத்திற்கு வேண்டியது - என்ன செய்ய வேண்டும் என்ற உபாயங்களும் வரும்
2.அந்த வழியும் தெரியும்… உள் உணர்வை ஊட்டும்.

ஆனால் இருள் என்ற உணர்வுகள் வரப்படும் போது அதை அப்படியே விட்டு விட்டால் அந்த உள் உணர்வைக் கூட நாம் அறிய முடியாதபடி தடைப்படுத்தி விடும்.

அதற்குத்தான் அந்தந்த சந்தர்ப்பங்களில் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுவதற்கு இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அண்டசராசரங்களையும் நாம் காண முடியும்

பல நிலைகளால் பூமியின் நிலையே பூமியின் சுவாச நிலையே மாறு கொள்ளும் இத்தருவாயில் நம் உணர்வின் எண்ணத்தால் ஆத்ம பலத்தைக் கூட்டிக் கொண்டால் இவ்வுலக மாற்றத்தில் மடியப் போகும் உயிரினங்களின் வழித் தொடர் செல்லும் மிகவும் ஈன நிலையிலிருந்து மீள முடியும்.
1.இப்படி உயர் செயல் குணமுள்ளது இன்றைய மனித உடல் உள்ளவர்களுக்கு
2.உடல் இல்லாதவர்கள் என்ன செய்வது…? (உடலை விட்டுப் பிரிந்து சென்ர நம் முன்னோர்கள்)

தன் உணர்வின் எண்ணத்தால் தான் எடுக்கும் ஜெபத்தால் தான் மட்டும் சக்தி பெறுவதோடு அல்லாமல் தன் உணர்வின் எண்ணத்தைப் பாய்ச்சி தான் வணங்கும் தன் முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்களையும் உயர் நிலைப்படுத்திட முடியும்.

1.எவ்வுடலில் இருந்து உடல் பெற்று வழி வந்துள்ளோமோ
2.அவ்வுடலின் முன்னோர்களையும் தம் ஈர்ப்பு ஜெபத்தால் நாம் வணங்கி
3.நாம் செல்லும் சப்தரிஷி மண்டலக் கூட்டுடன் சுழல விட்டுக் கொள்ள முடியும்.

ஏனென்றால் உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்குத் தன் உணர்வினால் மனம் சுவை இவைகளைத்தான் எடுக்க முடியும். ஞானத்தை வளர்த்துக் கொள்ள உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களால் முடியாது.

அவர்களின் நிலை சிதறாமலும் மாறுபடாமலும் இருக்க உடலுடன் கூடிய ஜீவ பிம்ப உடல் மனிதனால்தான்
1.தன் எண்ண உணர்வில் அவர்களை நினைத்து வணங்கினால்
2.அவர்களின் உயிராத்மா வேறு ஈர்ப்பலைக்குச் செல்லாமல்
3.நாம் பாய்ச்சும் ஞானிகளின் எண்ண உணர்வு ஈர்ப்புக்குள் அவர்களின் நிலையும் சுழன்று கொண்டிருக்கும்.

ஏனென்றால் இன்று விஞ்ஞானத்தால் பூமியினுள் உள்ள நுண்ணிய காந்த அலையையும் காற்றில் கலந்துள்ள இவ்வலையையும் ஈர்த்தெடுத்து “எலெக்ட்ரானிக் காந்த மின் அலை ஈர்ப்புச் செயல் காண்பதினால்…” மிகச் சக்தி வாய்ந்த உடலை விட்ட உயிராத்மாக்கள் கூட ஈர்ப்புச் சிதறல் நிலை இன்றுள்ளது... உயர் நிலை பெறத் தடையாகி விட்டது.

இன்று விஞ்ஞானத்தில் இவ்வலையைப் பிரித்தெடுத்து பல செயல்களை செயற்கைக்கு உணர்த்துகின்றான்.

ஆனால் அதே காந்த நுண்ணிய மின் அலை ஈர்ப்பை ஈர்த்துத்தான் ஜீவன் கொள்கின்றது ஒவ்வொரு ஜீவனும். மனிதனின் உடல் பிம்பச் செயலே இக்காந்த நுண்ணிய மின் அலை ஓட்டம் தான்.

விஞ்ஞானத்தில் உலோகத்தின் இம்மின் அலை ஈர்ப்பைக் கொண்டு பல மண்டலங்களுக்கும் பல சாதனங்களைச் செலுத்தி உணர்ந்து வருகின்றான். ஆனால்
1.இஜ்ஜீவ பிம்ப உடலிலேயே…
2.இவ்வுலகம் மட்டுமல்ல எவ்வுலகையும் சென்று காண வல்ல
3.அமிலப் படைப்பு ஈர்ப்பு காந்த மின் அலைகள் உண்டு.

இக்காந்த மின் அலையை எவ்வெண்ணத்தில் எவ்வுணர்வைக் கொண்டு பாய்ச்சுகின்றோமோ அதன் நிலையை நாம் அறிய முடியும். இவ்வுடலில் எல்லா உணர்வலையையும் ஈர்க்க வல்ல சக்தியுண்டு.

இதனை உணர்த்தத்தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் கதை வடிவில் இராமனையும் கிருஷ்ணனையும் படைத்தான் அன்றைய ஞானி.

நற்குணங்களின் உருவமாய் இராமனின் கதையைப் படைத்தான். உலகத்தையே இம்மனித பிம்ப ஈர்ப்பில் காண முடியும் என்பதனை உணர்த்த கிருஷ்ணனைப் படைத்துக் கிருஷ்ணனின் வாயைத் திறந்தால்… அண்ட சராசரங்களையும் கண்டதாகக் கதை உருக்காட்டினான் அன்றைய ஞானி.

இக்காற்றில் தான் பூமி ஈர்த்து வெளிக்கக்கும் அனைத்துச் சக்திகளும் உண்டு.
1.உணர்வுடன் உருவமுடன் உள்ள நாம்
2.இவ்வெண்ணச் சுவாசத்தால் இராமனின் குண அமிலத்தை ஈர்த்துக்
3.கிருஷ்ணனின் வாயில் கண்ட அண்ட சராசரங்களையும் காண முடியும்.

மனித பிம்ப உணர்வு எண்ணச் சுவாசத்தால் காந்த மின் நுண்ணிய அலை ஈர்ப்பை எச்செயலில் செலுத்தி நம் உணர்வு எண்ணச் சுவாசம் செல்கிறதோ அதன் செயலை நாம் செயலாக்க முடியும்.

நம்மைக் காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்த நம்மையே படைக்க வழி தந்த சப்தரிஷிகளின் தொடரில் இவ்வெண்ண உணர்வு சுவாச ஈர்ப்பிற்குச் செயலாக்க முடியும்.

1.முதலில் இராமனைப் போன்ற குணமாகுங்கள்
2.பிறகு கிருஷ்ணனின் காந்த நுண்ணிய மின் அலை உருவாகுங்கள்.
3.உருவை உணர்த்தி வழி அமைப்பான்… “நம்மை வழிப்படுத்தி வளர்ந்தவன்…!”

யாம் சொன்னதைப் பதிவு செய்து… “அதை எண்ணி எடுப்பவர்களுக்குத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தி கிடைக்கும்…”

புதிதாக வாங்கும் போது ஓரு பாத்திரம் அழகாக இருக்கின்றது. ஆனால் அதிலே அழுக்குகள் படிந்து விட்டால் இருண்டு விடுகின்றது. அப்போது அந்தப் பாத்திரத்தை பார்த்தால் எப்படி இருக்கும்...? நன்றாக இருக்காது.

பாத்திரத்தில் அழுக்குப் படும்போது அவ்வப்பொழுது அதைத் துடைத்துக் கொண்டு அல்லது தூய்மைப்படுத்திக் கொண்டு வந்தால் அது “பளிச்...” என்று இருக்கும்.

ஆனால்
1.அழுக்குகள் ஏறிய பின் தேய்த்துப் பார்த்தால் போகாது... களிம்பு ஏறி இருக்கும்
2.அதிகமான களிம்பு ஏறிவிட்டால் சொர சொரப்பு அதிகமாகிவிடும்
3.மீண்டும் அதைச் சுரண்டி அல்லது சாணை பிடித்துத் தான் சரி செய்ய முடியும்.

இது போன்றுதான் இயற்கையின் நிலைகளில் நாம் சுவாசிக்கும் உணர்வுகளில் நம்மை அறியாது ஆன்மாவில் அழுக்குகள் சேர்கிறது. அதைத் தூய்மைப்படுத்தாது விட்டுவிட்டால் பாத்திரத்தில் களிம்பு ஏறியது போல் தீயவினைகளாக உடலில் சேர்ந்து அதனால் பல பல தொல்லைகள் வந்து சேர்கிறது.

ஆகவே ஆன்மாவை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா...!

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ தியானத்திலும் சரி... மற்ற கூட்டுத் தியானத்திலும் சரி… உயர்ந்த சக்தியை எடுத்துப் பழகிக் கொண்டவர்கள் நீங்கள் ஆத்ம சக்தி என்ற ஆயுதத்தை மறவாது பயன்படுத்துங்கள்.

தீமைகளைச் சந்திக்கும் போதெல்லாம் அல்லது நுகரும் பொழுதெல்லாம்… அல்லது எதிர்பாராது தீமைகள் வந்து மோதும் போதெல்லாம்… அதை மாற்றிக் கொண்டே வாருங்கள்.

1.எத்தனையோ வகைகளில் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று யாம் (ஞானகுரு) அந்த அலைகளைப் பாய்ச்சிக் கொண்டேயிருக்கின்றோம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருந்து கொண்டிருக்கின்றோம்.
3.அந்தச் சக்தி உங்களுக்குள் வந்து கொண்டு இருக்கின்றது... வலுவும் கூடுகிறது.
4.நினைத்தவர்களுக்குத் தான்...!

நினைக்காதவர்களுக்கு இல்லை… காரணம் உணவை எடுத்துச் சாப்பிட வேண்டும் என்று விரும்பினால் தானே உள்ளே போகும்.

எலக்ட்ரிக்... எலக்ட்ரானிக்...! வீட்டிலே டிவி.யில் எந்த ஸ்டேஷனைத் திருப்பி வைக்கின்றோமோ அந்த ஸ்டேஷனில் இருந்து ஒளிபரப்பு செய்தார்கள் என்றால் காற்றிலிருந்து அதை இழுத்து நாம் பார்க்கவும் கேட்கவும் முடியும்.

ஆனால் நீங்கள் உங்கள் எண்ணத்திற்குள் எத்தனை ஸ்டேஷனை வைத்திருக்கிறீர்கள்...?

சண்டை போட்டவன் ஏமாற்றியவன் கேலி செய்தவன் திட்டியவன் கொலை செய்ய வந்தவன் என்று இப்படி எல்லா ஸ்டேஷனும் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

இப்படிப்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் போது என்ன செய்கிறது…?

சிரமமான நேரத்தில் அவர்களை எண்ணும் பொழுது அந்த ஸ்டேஷனுக்குள் இணைந்த பின் அடுத்து நமக்குள் நல்ல சிந்தனைகள் வருவதில்லை.
1.என்னை இப்படி ஏமாற்றினார்களே... அவர்களை என்ன செய்யலாம்…?
2.என்னைஇப்படித் திட்டினார்களே... அவர்களைச் சும்மா விடுவதா... இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்று
3.இத்தகைய உணர்வு தான் மனதில் ஓடிக்கொண்டிருக்குமே (டி.வி.யில் படம் ஓடுவது போல்) தவிர நல்ல உணர்வுகள் வருவதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாம் செயல்படுத்த வேண்டியது எது…?

ஈஸ்வரா… என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
1.வரக்கூடிய தீமைகளை மறக்க இதை நாம் எடுத்தால் அதனுடைய வலு குறைகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் பெருக ஆரம்பிக்கிறது
3.ஆகவே இந்த ஸ்டேஷனைத் தான் நாம் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

January 28, 2023

வியாழனின் ஞான ரிஷி – ஈஸ்வராய குருதேவர்

ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்கின்றது. வளர்ப்பின் படர் பலவாகிப் பலவின் பல வளர்ந்தே உருவாகி உருவாகி உருண்டோடும் உரு குண வளர்ப்புச் செயலில் தொடர் கொண்ட நிலையில் வளர்வது தான் அனைத்துமே.

ஒன்றிலிருந்து ஒன்று பிறந்து ஒவ்வொன்றாக வளரும் வளர்ச்சி கதியில் உருவாகி உணர்வாகி செயலாகி செயலில் வழி பெறுவது பல.

1.இயற்கையின் உண்மை உணர்வில் உருண்டோடும் சக்திகள் எல்லாமே “அவன் படைப்பென்றாலும்”
2.அவன் படைப்பிலிருந்து நல் ஒளி படைப்புப் பெறுவது தான் “இறை ஞானம்..” என்பது.

பலவாக உள்ள இந்த உலகில் இயற்கைப் படைப்பில் மற்றெல்லா உயிரினங்களைக் காட்டிலும் மனித ஞானத்தை உயர்வாகச் செயலாக்கும் சக்தி உருவாகியுள்ளது.

1.இறை ஞானத்தின் சக்தியை உணர்ந்து வழி ஞானம் பெறவல்ல ஆற்றல் மனித குண ஞானத்திற்குத் தான் உண்டு.
2.உயர்த்துபவன்… உயர்ந்தவன்…! என்ற வமிசக் கோட்பாட்டை அறியும் ஞானம் மனிதனுக்குண்டு.

மனிதன் வாழ மற்ற இயற்கையும் துணை கொள்கின்றது. தீயது என்ற நிலை உள்ளதினால் தான் நல்லதைப் பிரித்துக் காண முடிகின்றது. நற்சக்தியின் செயலிலே சகல வளர்ப்பும் இருந்ததென்றால் ஞானத்தின் வளர்ப்பு நிலை பெறுவது எப்படி…?

1.சக்தியின் ஸ்வரூபத்தில் சகலமும் உண்டு.
2.சகலமும் இருந்தால் தான்… சகலத்திலும் இருந்து “உயர் உணர்வு எது…?” என்று செயல் கொள்ள முடியும்.

உயர் நிலை உணர்ந்து… உயர் ஞான இறை சக்தி அடைய… ஞானத்தை உணர்ந்து செயல் கொள்ளக்கூடிய நிலை “மனித உரு வளர்ச்சி கொண்ட வழித் தொடரில் தான் உண்டு…!” என்பதை உணர்ந்து இந்தப் பூமியில் மனித இன வளர்ச்சியை ஊக்குவித்தனர் சப்த ரிஷிகள்.

குருவாக இன்று நாம் சொல்லும் “வியாழனின் ஞான ரிஷி” தான் வியாழனின் மனிதக் கரு உரு நிலையிலிருந்து மனிதனின் அமில குண வளர்ச்சி சக்தியை அம்மண்டலத்தில் மனித இனங்கள் வாழ முடியாத வளர்ப்பு நிலை கொண்ட மண்டலமாக வியாழன் மாறும் தருவாயில் இங்கே பூமியில் மனிதக் கருவை வளரக் காரணமானவர்.

அதாவது அந்தச் சூட்சம ஞானச் செயல்… மனித இனத்தின் சுழற்சி வட்டம் சப்தரிஷியினால் ஈர்த்தெடுக்கப்பட்டு மீண்டும் மனிதக் கரு உருவாகவும்… மண்டலமாக நம் பூமியின் சக்தி அலையை வளர்க்கவும் செய்து… இப்பூமியின் ஈர்ப்பிற்கு மனித இனக் கருவை வளர்க்க விட்டனர் அன்று சப்தரிஷிகள்.

1.இன வளர்ச்சியில் ஞானத்தை உணர்ந்த அவர்கள் செயல்
2.அந்தந்தக் கால நிலைக்கொப்ப அவர்கள் பதித்த வளர்ச்சியிலிருந்தே
3.தன் வளர்ச்சிக்குப் பலம் கூட்ட தன் வளர்ப்பில் பயிராக்கிய பயிரிலிருந்து
4.மீண்டும் பயிராக்க “விதையைத்தான்” இன்று அவர்கள் சேமிக்கின்றார்கள்.

சப்தரிஷி உருவான அமிலக் கூட்டு இன நிலைக்கொப்ப தன் குண உணவையே தான் எடுத்து தான் வளர்ந்து இவ்வின வளர்ச்சி மங்கா நிலைக்காகத்தான் “சப்தரிஷிகளின் செயல்” இன்றுள்ளது.

1.இறைவனின் படைப்புத்தான் ஒவ்வொன்றும்
2.படைப்பின் படைப்பெல்லாம் அவனே தான்
3.அவனின் படைப்பில் இறை ஞானம் பெறும் மனித ஞானம் கொள்வது தான்
4.படைக்கப்பட்டவன் படைப்பின் பொருள் காணும் நிலை.

நாம் நம் வாழ்க்கையில் சாதாரண நிலையில் உணர்ந்து வாழ்ந்து ஜீவன் பிரிந்து செல்லும் நிலையில் உள்ள நிலையை அந்தந்தக் காலங்களில் சப்தரிஷிகள் பல உடல்களை ஏற்றுப் பல ஞானிகளை உருவாக்கிச் சென்றார்கள்.

ஆனால் இன்று வளர்ந்து பெருகியுள்ள மனிதனின் குண வழித் தொடர் யாவையுமே விஞ்ஞானம் என்ற உடல் பிம்ப சுகம் காணும் செயல் ஞானமாக வளர்ந்து வேரூன்றிக் கிளை விட்டுப் படர்ந்து விட்டது.

1.இதனை மாற்றியமைத்து
2.உயர் ஞானமான ஆத்ம ஞானத்தை வளர்த்து
3.இறை ஞானம் என்ற மனித அமில குண சக்தி ஈர்ப்பு வளர்ச்சி தரும் சப்தரிஷியின் ஞானமுடன்
4.நம் உணர்வின் செயல் இன்றுள்ள கால கட்டத்தில் செல்ல வேண்டிய குறுகிய காலமிது…!

January 27, 2023

“வேதனைகள் வரும் போது தான்…” நம்மைப் பாதுகாக்கும் சக்தியைக் கூட்ட முடியும்

நமது வாழ்க்கையில் நல்லதைத் தான் எண்ணுகின்றோம். அதன் படி நடக்கவில்லை என்றால் ஒவ்வொரு செயல்களிலும் வேதனை கலந்தே வருகின்றது. ஆனாலும்…
1.”வேதனைப்படுகிறோம்… கஷ்டப்படுகிறோம்…” என்ற எண்ணங்கள் இப்படி வரும் பொழுதுதான்
2.நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சக்தியும் உண்டு.

இருப்பினும் வேதனை வெறுப்பு சோர்வு என்ற உணர்வு அதிகரித்து விட்டால்… எத்தகைய நல்ல செயல்களாக நாம் செயல்படுத்திக் கொண்டிருந்தாலும் அதைச் செயல்படுத்த முடியாதபடி ஒரு சோர்வு வந்து விடுகிறது.

சோர்வடைய… சோர்வடைய… நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களும் சோர்வடையத் தொடங்குகிறது. சோர்வால் மீண்டும் வேதனை வருகிறது.
1.இப்படி வேதனைகளை நாம் அடுக்கடுக்காக இந்த உடலிலே
2.இப்போது சேர்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் - எந்த நிலையில் யாராக இருந்தாலும் சரி… அப்படித்தான்.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் வேதனையிலிருந்து விடுபட வேண்டும் என்ற வலுவான எண்ணத்தில் தான் வளர்ச்சியாக வந்தது.

இப்படி எல்லா வகைகளிலும் பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக வந்த நாம்… வீட்டிலே ஒரு காரியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றோம். அந்த நேரத்தில் ஒரு கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.

நேற்றுத் தான் வாங்கி வந்தேன்... அதற்குள் இப்படி உடைந்து விட்டதே...! என்று மன திருப்தி இல்லாதபடி வேதனைப்படுகின்றோம். அன்றாட வாழ்க்கையில் இப்படி நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால் வேதனை அல்லது சோர்வு அல்லது சஞ்சலம் என்ற இந்த உணர்வுகளைத் தான் கவர நேர்கின்றது... அதைத்தான் சுவாசிக்கின்றோம்.

இப்படி நுகர நுகர... நம் உடலுக்குள் அத்தகைய அணுக்கள் உருவாகத் தொடங்கி விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிந்து நாம் விடுபட வேண்டும்.
1.இருந்தாலும் இது எல்லாமே உடலின் இச்சைகள் கொண்டு வருவது தான்.
2.ஆனாலும் இந்த உடல் வேண்டும்
3.இந்த உடல் அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நம்மை அறியாது வரும் தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

ஈஸ்வரா...! என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

அதாவது
1.பிற உணர்வுகள் நம் உயிரிலே பட்டு அது இயக்காதபடி
2.உடலுக்குள் அது அணுவாக உருவாகாதபடி தடைப்படுத்திப் பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் மூக்கு வழி நுகர்ந்தது (சுவாசித்தது) உயிரிலே பட்டுத்தான் அந்தந்த அறிவின் இயக்கமாக இருக்கின்றது. ஆகவே புருவ மத்தியில் (உயிரில்) அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து இந்த வலுவைக் கூட்டி தீமையான உணர்வுகள் புகாதபடி தடுத்தல் வேண்டும்.

பின் கண்களை மூடி உடலில் இருக்கக்கூடிய எல்லா அணுக்களுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று “ஒரு நொடிக்குள் கண்ணின் நினைவை உள்ளே செலுத்தி விட வேண்டும்…”

இப்படி ஒரு பழக்கம் வந்து விட்டால் உடலுக்குள் தீமை செய்யும் அணுக்கள் உருவாகாதபடி தடுத்துவிடலாம். இதற்கு முன்னாடி பதிவான உணர்வுகள் விளைந்தது… உடலிலிருந்து மீண்டும் அந்த நினைவுகள் வந்தாலும்… அதையும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆக... இந்த உடலுக்குப் பின் நாம் கொண்டு செல்வது எது...?

செல்வமோ சொத்தோ எல்லாம் இருந்தாலும் கடைசியில் நோயாகி விட்டால் அதை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது. முதலிலே சொன்னபடி வேதனைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பமாகத் தான் ஆகிவிடுகின்றது.

அதைப் போன்ற நிலையிலிருந்து தப்புவதற்கு ஒவ்வொரு நொடிகளிலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இந்த ஆத்ம சுத்தியைக் கையாளுங்கள்.
1.தீமைகளை நீக்குங்கள்
2.அருளைப் பெருக்குங்கள்
3.இருளை அகற்றலாம்
4.அமைதியான வாழ்க்கை வாழலாம்
5.சிந்தித்துச் செயல்பட முடியும்
6.சிந்தனையுடன் வாழ்க்கை நடத்த முடியும்.

இதை எல்லாம் மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம் (ஞானகுரு).

படைப்பது எல்லாம் இறைவன் என்றால் தீமையானதைப் படைக்காது நல்லதை மட்டும் படைக்கலாம் அல்லவா...!

புல்லைப் படைத்தான்… பூண்டைப் படைத்தான்… செடி கல் மண் நீர் அனைத்தையும் படைத்தான்… சகல ஜீவராசிகளையும் படைத்தான்… மனிதனையும் படைத்தான்…! இறைவன் படைப்புத் தான் எல்லாமே…!

1.மனிதனைப் படைத்த இறைவன்
2.மற்ற எல்லா நிலைகளைக் காட்டிலும் “மனிதனை” உயர் ஞானத்துடன் படைத்துள்ளான்
3.ஆனால் அவற்றை எல்லாம் படைத்த இறைவன் நம்மையும் படைத்து… அவ்விறைவனையும் வணங்கச் செய்கின்றானா..?

இயற்கையின் படைப்பில் படைப்புகள் அனைத்தும் அவன் படைப்பென்றால்
1.அவன் படைப்பில் “தீமைகளை எதற்குப் படைக்கின்றான்…?”
2.நல்லுணர்வையை படைத்து நற்சக்தியின் செயலையே அவன் பெற்றிருக்கலாம் அல்லவா…!

படைப்பில் ஏன் இறைவனுக்கு ஓரவஞ்சனைகள்…? நீங்கள் வணங்கும் ஆண்டவனுக்கு ஏன் படைப்பில் இப்படி மாற்றம்..?

தீயோனையும் நல்லவனாக்கலாம். தீய படைப்புகள் அனைத்துமே படைக்கப்படுவதற்கு முதலிலேயே நல்ல படைப்புகளாகப் படைத்திருக்கலாம் அல்லவா…!

1.கொடூர குணம் படைத்தவனும் நயவஞ்சகனும் இறைவனை வணங்கினால் இருள் நீங்கும்…!
2.இறைவன் ஒருவன் தான் அவர்களை மாற்ற முடியும்…! என்று
3.இறைவன் படைப்பையே… இறைவனிடம் வேண்டச் சொல்கிறான்
4.அப்படி என்றால் இறைவன் படைப்பில் “இனியவன்” என்பவன் யார்…?

ஆக… இறைவன் என்பவன் யார்…? அவன் எங்குள்ளான்…?

மனிதன் பிறப்பெடுத்து வாழும் காலத்திலேயே தன் பிறப்பை உயர்வாக உணர்ந்து தெய்வத்தின் படைப்பிலேயே உயர்ந்து நிற்கும் மனிதனுக்கு
1.எந்த இறைவனால் பலவும் படைக்கப்பட்டன என்று உணர்கின்றானோ
2.அவற்றின் துணை இல்லாவிட்டால் இவனால் வாழ முடியுமா..?

இயற்கையில் கலந்துள்ள தாவர இனங்களிலிருந்துதான் உணவை எடுக்கின்றான். நீரும் காற்றும் நிலமும் இவனை வளர்க்கிறது. இவன் உணர்வில் “தீயது” என்று உணர்த்தப்பட்ட ஒவ்வொன்றிலும் இருந்துதான் “நன்மை எது…?” என்று இவன் (மனிதன்) உணர்ந்து வாழ முடிகிறது.

1.படைக்கப்பட்ட இறைவனுக்கு எது சொந்தம்…?
2.அவன் படைப்பில் உருவான உரு அனைத்துமே “இப்படி இப்படித்தான் வளர வேண்டும்…” என்ற அவன் படைத்தானா…?
3.இறைவன் படைப்பு என்பது யாது…? உருவானது எந்நிலை கொண்டது…?
4.படைப்பில் பலவும் உள்ள பொழுது இறை ஞானம் என்று உயர்ந்து காண்பது எது…?
5.இன்றைய இவ்வுலகின் உண்மை நிலை என்ன…?
6.உலகை உருவாக்கி உருளச் செய்த உணர்வு உண்மை நிலை என்ன…?
7.இயற்கையின் படைப்புத்தான் எல்லாமே…! என்றாலும் படைப்பின் உரு நிலை எப்படிக் கொள்கிறது…?
8.இறை ஞானத்தின் உண்மையை உணர முடியுமா…?
9.உணர்ந்தோர் சொல்லும் நிலை உண்மைதானா…? என்ற எண்ணமும் எழலாம்.

மின்சாரத்தினால் நீங்கள் உபயோகிக்கும் சாதன முறைகளுக்கு எப்படி அந்த மின் விசை எந்தெந்த நிலையில் பாய்ச்சப்பட்டு அதற்குகந்த சக்தி வெளிப்படும் தன்மையில் மின் விசிறியும் மின் இயந்திர இழுவை நிலையும் ஒளி விளக்குகளும் செயல்படுகின்றனவோ அதைப் போன்று
1.ஒவ்வொரு மனிதனும் தன் உணர்வின் எண்ண ஞானத்தை
2.எச்சக்தி அலையின் ஈர்ப்பில் பதிய விடுகின்றானோ
3.அதற்குகந்த சாதனை செயல் ருப வழியில் தான் மனிதன் இன்றுள்ளான்.

இது தான் உண்மை…! இறைவன் தனியாக யாருக்கு என்றும் எதுவும் கொடுக்கவில்லை.

January 26, 2023

புலி வருகிறது துப்பாக்கியால் சுடுங்கள் என்று சொல்கிறோம்…! பயன்படுத்த வேண்டுமா இல்லையா…?

செல்ஃபோன் எல்லோருமே வைத்திருக்கின்றோம். காந்தப் புலனால் இயக்கும் செல்ஃபோன்… அதற்குள் தொடர்பு என்ன இருக்கின்றது…?

வயர் (WIRE CONNECTION) இல்லை…
1.ஆனால் காந்தப் புலனால் கவரப்பட்ட உணர்வுகள் அது ஈர்க்கும் சக்தி… விஞ்ஞான அறிவால் வைத்த நிலைகள்
2.அதனுடன் தொடர்பு கொண்டு எங்கிருந்தாலும் நாம் இயக்க முடிகின்றது.
3.குறித்த எல்லைகள் வரையும் கொண்டு செல்ல முடிகின்றது.

வெகு தொலைவில் இருந்தால் சேட்டிலைட் மூலமாக அமெரிக்கா மற்ற ஏனைய நாடுகளுக்கும் தொடர்பு கொள்ள முடிகின்றது… பேசவும் முடிகின்றது… பார்க்கவும் முடிகின்றது.

இப்படி எப்போது வேண்டும் என்றாலும்… எங்கே வேண்டுமானாலும் நம்பரைத் தெரிந்து அழுத்தினால் உடனடியாக மற்றவர்களிடம் தொடர்பு கொள்ள முடிகின்றது. அவர்களுக்கும் :இன்னார் தான் பேசுகிறார்…” என்று அந்த நம்பரை வைத்து அறிய முடிகிறது.
1.அடுத்து அவர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றால் அதை அணைத்துக் கொள்ளவும் (SWITCH OFF)
2.தொடர்பே வேண்டாம் (BLOCK) என்று நிறுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

இதைப் போன்று தான் சிலருடைய உணர்வுகளை உங்களுக்குள் அது இயக்காமல் தடைப்படுத்த… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.

இது எல்லாம் உணர்வின் இயக்கங்கள் தான்…!

உங்களுக்குள் பதிவான தீமையான உணர்வுகளைத் தடைப்படுத்த “மிக மிகச் சக்தி வாய்ந்த நிலையைத் தான்…” இந்தத் தியானத்தின் மூலம் கொடுப்பது. ஆகவே இதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

துப்பாக்கியைக் கையிலே கொடுத்துப் “புலி வருகிறது… சுட்டு விடுங்கள்…!” என்று சொன்னால்
1.புலி வருகிறது… புலி வருகிறது… என்று சொல்லிக் கொண்டு
2.நீங்கள் சுடாமல் இருந்தால் என்ன ஆகும்...? புலி தாக்கத்தான் செய்யும்…!

அது உங்களைத் தாக்காது பாதுகாப்பதற்குத் தான் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம் “அதை நீங்கள் பயன்படுத்தும் முறைகளில் தான் இருக்கின்றது…” (ஞானகுரு)

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஆசையின் உணர்வுகள் எங்கே அழைத்துச் செல்கின்றது...?

1.நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் உடனே வேதனை வருகின்றது.
2.அந்த வேதனை வந்த பின் சிந்தனை தவறினால் உடனே கோபம் வருகிறது.
3.கோபம் வந்தபின் அதைக் காட்டிலும் வெறுப்பான செயல்களைச் செயல்படுத்தும் நிலை வருகின்றது.

இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக்கூடிய செயல்கள்… நாம் செயல்படுத்தவில்லை. நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டுத் தான் அவ்வாறெல்லாம் இயக்குகின்றது.

ஆனால் அதை எல்லாம் மாற்றி அமைக்கக் கூடிய சக்தியாக நம் ஆறாவது அறிவு இருக்கின்றது. அதை நாம் பயன்படுத்த வேண்டுமா இல்லையா...!

கருணைக்கிழங்கில் இருக்கக்கூடிய விஷத்தை வேக வைத்துப் புளியைக் கரைத்துவிட்டு… காரம் உப்பு என்று பல சுவையான சரக்குகளைப் போட்டு ருசியாக மாற்றுகின்றோம்.

இதைப் போன்று தான்
1.வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதை மாற்றிப் பழகுதல் வேண்டும்
2.இல்லையென்றால் மனிதனாகப் பிறந்தும் பயன் இல்லாது தேய்பிறையாகப் போய்
3.இன்று மனிதன்… நாளைக்கு மனிதன் அல்லாத மற்ற உயிரினங்களாக உயிர் உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து எல்லாம் தப்புவதற்குத் தான் மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகள் கிடைக்க வேண்டும் என்று பதிவு செய்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

யாம் சொன்னதைப் பயன்படுத்தும் போது “தக்க சமயத்தில்” உங்களுக்கு அந்தத் தீமையை நீக்கக்கூடிய உபாயங்களும் உயர்ந்த ஞானங்களும் உதயமாகும். அந்த ஞானத்தை வளர்த்தால் தீமை புகாது தடுக்கும் அந்தச் சக்தியும் உங்களுக்குக் கிடைக்கும்.

சாமி தீர்ப்பார் சாமியார் தீர்ப்பார் என்ற எண்ணத்திற்கு மாறாக “யாம் சொன்ன முறைகளைக் கடைப்பிடித்தாலே…”
1.உங்களுக்குள் இருக்கும் சக்திகளை நீங்கள் பயன்படுத்தித் தீமைகள் புகாது தடுத்து
2.உங்களையும் காத்து உங்கள் குடும்பத்தையும் காத்து அனைவரையும் காக்கும் சக்தியாக
3.பண்பை வளர்த்து அன்பை வளர்த்து மற்றவர்களுக்கும் பண்பினை ஊட்டி
4.நீங்கள் இடும் மூச்சுலைகள் காற்றிலே படர்ந்து தீமைகளை அகற்றும் சக்தியாக வரும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உயிரான ஈசனை மதித்து அவனால் அமைக்கப்பட்ட உடலை ஆலயமாக மதித்து நடத்தல் வேண்டும்.

“மகரிஷிகள் ஞானிகளின் தொடர்பு கிடைத்தால் தான்” கடுமையான தீமைகளிலிருந்தெல்லாம் விடுபட முடியும்

மனிதன் நல் உணர்வு கொண்டு வாழ்ந்தாலும் சந்தர்ப்பத்தால் ஏற்படும் அவரின் பக்குவ முறை மாற்றத்தினால் ஏக்கம் சலிப்பு என்ற தொடர் குண ஆவேச எண்ணம் கொண்ட உணர்வலையில் சென்ற பின் உடலை விட்டு ஆவி பிரிந்தவுடன் அவர்கள் எங்கே செல்கிறார்கள்….?

பல எண்ண ஈர்ப்பில் சுழன்று ஆவி மிருக ஈர்ப்பிற்குச் சென்றும் மனிதனை ஒத்த அங்க அவயங்கள் அற்ற மிருக ஜீவிதத்திற்குச் செல்ல ஏதுவாகிறது.

உணர்வலையின் மாற்ற நிலை கொண்ட ஆத்ம பிம்பமே பல காலச் சேமிப்பு அமில ஈர்ப்பு உரு மாறி மனிதக் கருவிலிருந்து மிருகக் கரு நிலைக்குச் செல்லும் பொழுது
1.மாந்திரீக நிலைக்கு வசமாகிக் கொண்ட ஆவிகளின் உணர்வின் ஈர்ப்பும்
2.மாந்திரீகனின் ஆன்மா பிரிந்த பிறகு அவன் வசப்பட்ட ஆவிகளின் உணர்வு அமில சக்தி எந்நிலை பெறுகின்றது…?

மிருக ஜெந்துவிலேயே பல நிலை கொண்ட குண வளர்ச்சி ஜெந்துக்கள் உண்டு. மாந்திரீக வசப்பட்ட ஆவிகளின் ஈர்ப்பு மாந்திரீகன் வசப்படுத்தி வைத்துள்ள கால நிலை மாறுபட்டவுடன் இவ்வாவிகளுக்கும் சக்தி நிலை குறைந்து மீண்டும் பிறப்பு எடுக்க நாய்… குள்ள நரி… இவற்றின் ஈர்ப்பலை பிம்ப உடல் தான் பெற முடியும்.

நாய்க்கு உணர்வலைகள் அதிகம். மனிதனைக் காட்டிலும் நாய்க்கு மோப்பத்தால் ஈர்க்கும் நிலை துரிதப்படுகின்றது. சுவாச ஈர்ப்பின் நிலைக்கொப்பத்தான் செவி ஈர்ப்பும் கண் ஒளியும் அதற்கு உண்டு.

மாந்திரீகனால் வசப்படுத்திய ஆவிகள் மற்ற சாதாரண ஆவிகளைக் காட்டிலும் அதற்கு அதன் மாந்திரீக பூஜிப்பினால் ஈர்ப்பலை அதிகம் கொண்டுள்ளதினால் “நாயின் பிறப்பிற்குத் தான் செல்ல முடியும்…!”

ஆவிகளின் நிலையை உணர்த்தி வருகின்றேன். இதன் உண்மை நிலை என்ன…? ஆவிகள் உண்டா இல்லையா..? இதை உணர்வது எப்படி…? என்ற வினா எழும்பலாம்.

இன்று உலகின் பல பாகங்களில் மாந்திரீக முறையில் பல அதிசயங்கள் நடப்பதை “ஆண்டவனின் ரூபம்…” என்று காட்டி ஏமாற்றி லிங்கமும் வேலும் விபூதியும் வருகின்றதல்லவா…!

அதுவுமல்லாமல் சில பொருள்கள் தானாக ஆடுவதும்… சிலர் பல மொழிகளில் பேசுவதும்… இந்த ஆவிகளின் தொடர் தான்.

மாந்திரீகனால் வசப்படுத்தப்பட்ட ஆவிகள் அவன் சொல்படி செயல்படுகின்றன. இந்த ஆவிகளுக்கு விமோசனம் இல்லையா…? என்ற வினா எழும்பலாம்.

எல்லாமே ஆவி தான். மாந்திரீகனின் வசத்தில் சிக்குண்டு தன் நிலை உணராமல் செயல்பட்ட ஆவிகளுக்கும் உணர்வால் தன் நிலை பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

சித்தர்களினால் அமைக்கப்பட்ட சில கோவில்களில் உடலுடன் கூடிய ஜீவ சக்தி கொண்ட “பல சித்தர்கள்” உள்ளார்கள்.
1.அவர்கள் உடலில் ஏற்றிக் கொண்ட சக்தி வாய்ந்த நுண்ணிய மின் காந்த ஈர்ப்பு ஒளியினால் இன்றும் சித்தாகி
2.உடலின் உணர்வு கொண்டு கோவில்களில் அவர்களுக்கென்று சமாதி குகை அமைத்திருகின்றனர்.
3.நல் நிலை பெற வேண்டும் என்ற உணர்வு கொண்டுள்ள மாந்திரீகர் வசத்திலிருந்த ஆவிகளானாலும் சரி…
4.கொடூர வேட்கையில் ஜீவன் பிரிந்த ஆத்மாவாக இருந்தாலும் சரி…
5.ஜீவ சக்தி கொண்ட சித்தனிடம் தன் உணர்வின் எண்ணத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு - அவர்களின் ஆசி கிடைத்தால்
6.சித்தர்களின் ஜீவ உடல் ஈர்ப்பில் சென்று தன் உணர்வு ஈர்ப்பை மீண்டும் “நல் உணர்வு கொண்ட மனித இன வளர்ச்சியில் வரலாம்…”

January 25, 2023

பிறருடைய தீமையான உணர்வுகள் என்பது சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் – “வால் நட்சத்திரம் போன்றது தான்…”

உதாரணமாக நாம் வாழும் இந்தச் 2000 சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் தான் வால் நட்சத்திரம் என்பது. அக்காலங்களில் இதைத் “தூம கேது…” என்றும் சொல்வார்கள்.

சூரியனால் இழுத்து வரப்படும் போது வேகத்தால் வான் வீதியில் மற்ற அணுக்களோடு மோதும் பொழுது “ஒளி வெள்ளமாக… நீளமாக…” அது தெரிகின்றது.

ஆனால் சூரியனுக்குப் போகும் பாதையில் நம் பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து விட்டால்… பூமி இழுத்துக் காற்றழுத்த மண்டலத்தில் மோதும் போது நெருப்பாக மாறி… நம் பூமிக்குள் விஷத்தன்மையாகப் பரவி விடுகின்றது... “சுத்திகரிக்கும் நிலை இல்லாது போய் விடுகின்றது...”

எந்தப் பிரதேசத்தில் இது அதிகமாகப் பரவுகின்றதோ
1.அந்த இடத்தில் வாழும் மக்களுக்கு அதிகமான நோய்கள் வரும்
2.தாவர இனங்களுக்கும் மாற்றங்கள் வரும்...
3.விஷத்தன்மை கொண்ட கிருமிகளை உருவாக்கும் சக்தியும் பரவும்.

அரசர்கள் ஆட்சி புரியும் காலத்தில் வால் நட்சத்திரம் (தூமகேது) தெரிந்தாலே அவர்கள் மத ஆச்சாரப்படி அங்கே உணவுப் பற்றாக்குறையும் பஞ்சமும் ஏற்பட்டு… மனிதர்கள் சிந்தனை குறைந்து… அதனால் சாம்ராஜ்யத்தை ஆட்சி புரியும் நிலையை அரசன் இழந்து விடுகின்றான்… அல்லது அழிகின்றான்.

ஆகவே வால் நட்சத்திரம் எந்தப் பிரதேசத்தில் தென்படுகின்றதோ “அந்த அரசனுக்கு ஆகாது…!” என்று அக்காலங்களில் சொல்வார்கள்.

ஏனென்றால் இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.பிறர் உடலில் விளைந்த தீய உணர்வுகள் (வால் நட்சத்திரம் போல்) சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
2.இந்த பரமாத்மாவில் காற்று மண்டலத்தில் அலைகளாகப் பரவினாலும்
3.நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்து விட்டால் ஊழ்வினை என்று வித்தாக நம் செல்களில் பதிவாக்கி விடுகின்றது.

வேதனைப்படும் உணர்வுகள் உயிரிலே பட்ட பின் தான் “வேதனைப்படுகிறார்…” என்று அறியத் தெரிகின்றது. ஆதே போல் அதிர்வான செயல்களைக் கண்டு நுகர்ந்த பின் நமக்கு அச்சத்தை ஊட்டி விலகிச் செல்லும்படியும் செய்கிறது… அந்த உணர்வுக்கொப்ப.

உயிரிலே பட்டால் பயம் வருகிறது… வேதனை வருகின்றது. இதைப் போன்ற உணர்வுகளை நுகர்ந்தால் இரத்தத்தில் அது கலந்தால் இதே அணுக்களை உருவாக்கி விடுகின்றது. (அதாவது வால் நட்சத்திரத்தின் விஷத் தன்மைகள் பூமிக்குள் கவரப்பட்டால் அந்தந்த இட்த்தில் விஷத்தன்மைகள் பரவுவது போல்).

அதைத் தடுத்து நாம் நல்லதாக மாற்றி அமைக்க வேண்டுமல்லவா. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை இரத்த நாளங்களில் செலுத்தி
1.எங்கள் உடல் உறுப்புகள் முழுவதும் அது படர வேண்டும்.
2.எங்கள் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் படர வேண்டும்
3.ஊனை உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று
4.முந்தி இது போன்ற உணர்வுகளை எண்ணங்களைச் செலுத்தி விட்டால்
5.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் ஆழமாகப் பதிவாகி விடுகின்றது.

இப்படிச் செய்யும் போது அந்த்த் தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் புகாது தடுக்கப்படுகின்றது… இரத்தத்தின் வழி உள்ளே செல்லாதபடி தடுக்கப்படுகிறது.

இப்படி அடிக்கடி நாம் தடுத்துப் பழகும் இந்த உணர்வுகள் தான்… சிறிது நேரம் இதை எடுத்துக் கொண்டால்
1.உள்ளுக்கே இது பிடிக்கவில்லை என்றால்… அதாவது அதன் மீது பற்று இல்லை என்றால் “உள்ளே இழுக்காது…”
2.ஒரு காந்தத்தை (MAGNET) வைக்கும் போது இடையிலே ஒரு காகிதத்தையோ அல்லது ஒரு அட்டையையோ கொடுத்துவிட்டால் அது எப்படி இரும்பை இழுக்காதபடி தடைப்படுத்துகின்றதோ அது போன்று
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இடைமறித்து உள்ளே செலுத்தி விட்டால்
4.அந்த வேதனைப்படும் உணர்வுகளை இழுக்காதபடி அனாதை ஆக்கி விடலாம்.

ஏனென்றால் நம் உடலில் ஏற்கனவே உருவான அல்லது புதிதாக உருவாகும் தீய அணுக்களுக்கு “ஆகாரம் செல்லாதபடி தடைப்படுத்தும் முறை தான் இது…” (மேலே உள்ள Sl No 2 - மிகவும் முக்கியமானது)

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதைச் செய்து பழகினாலே தீமையான உணர்வுகள் நமக்குள் புகாதபடி அனாதையாக்கப்படுகின்றது. ஈர்க்கும் சக்தி இவ்வாறு இழக்கப்படும் போது பிடிப்பில் இல்லாத இந்த உணர்வுகளை எல்லாம் சூரியன் கவர்ந்து மாற்றிவிடுகின்றது.

ஏனென்றால் இந்தப் பூமியின் பிடிப்பில் எது இல்லையோ அதை அனைத்துமே சூரியன் கவர்ந்து கொள்ளும். நம் ஆன்மா… ஜீவான்மா… உயிரான்மா… எல்லாமே தூய்மையாகிறது.
1.ஞானிகள் எல்லாம் இத்தகைய ஆற்றலைப் பெற்றவர்கள் தான்.
2.தீமை வராது தடுத்து அவருக்குள் விளைந்த உணர்வுகள் சொல்லாக வரும் பொழுது நாம் கேட்டால்
3.அந்த உணர்வுகள் நமக்கு நிச்சயம் நல்வழி காட்டும்
4.சிந்தித்து செயல்படும் தன்மையும்… தீமைகள் புகாது… நோய்கள் வராது… பாதுகாக்கும் தன்மைகளும் பெறுகின்றோம்.

மனிதனின் ஞானத்தை வெளிப்படுத்தும் அங்கமே “கைகள்”

நாசி சுவாசிக்கின்றது… கண் பார்க்கின்றது…!
1.கண் பார்க்கவும் செவி கேட்கவும்… வாயில் உமிழ் நீர் சுரக்கவும்…
2.உடலில் எல்லா நரம்பும்… அணுக்கள் துடிக்கவும் உணர்வுகள் உந்தவும்
3.எண்ண ஓட்ட நிலைகள் சர்வ சதா காலத்திலும் சுழன்றே
4.ஆத்ம பிம்பமுடன் ஜீவ உயிர் வாழுகின்றது.
5.உறக்கத்திலும் உணர்வுள்ளவனுக்கு எண்ணமுண்டு.

இவ்வெண்ணத்தின் ஓட்டம் எப்படி… எப்பாதையில் ஓடுகின்றதோ… அந்தப் பாதையின் உணர்வுடன் மீண்டும் மோதி அவ்வுணர்வின் சுவாசம் எடுத்து எண்ண ஓட்டத்தின் வழிப்படிச் செயலாக்க அங்க அவயங்களில் எச்சக்தியையும் செயல்படுத்திக் காட்டிடக் கையின் நிலை இல்லாவிட்டால் செயல் ரூபம் இந்த உலகில் எதுவுமே இல்லை.

1.செயலை வெளிப்படுத்தும் அவயம் தான் “கை…”
2.கையின் ஈர்ப்பிலே பிம்பத்தின் (உடலின்) சக்தி அனைத்தும் வெளிப்படுகிறது.
3.மற்ற அவயங்களின் சக்தியை வெளிப்படுத்துகின்றது.
4.ஞானத்தை உணர்த்துவதும் இக்கை தான்.

பலவாக உள்ள ஒன்றான பிம்ப உடலை… செயலை… எப்படி இந்தக் கை வளர்க்கின்றதோ அதைப் போன்று தான் பலவாக உள்ள உலக வாழ்க்கையில் பக்தி கொண்டு தெய்வ நம்பிக்கையை வழி காட்டினான் நம் சித்தன்.

ஆத்ம பிம்ப மனிதச் சக்திக்கே செயலாக்கும் அங்கமாகக் கையைக் கொண்டு தான் செயல்முறை வெளிப்படுகிறது.

இந்த உடல் பிம்ப ஜீவன் பிரிந்த பிறகும் மீண்டும் மனிதக் கரு வளர்ச்சியில் வரும் சிசுக்கள் பிறந்து சில மாதங்கள் கருவின் வளர்ப்பிலேயே அவயங்களின் முக்கியமான கையை மூடிக் கொண்டே தான் பிறக்கும்.
1.கையை மூடிக் கொண்டு சுவாசம் எடுக்கும் பொழுது
2.உடலின் சக்திகள் விரயப்படாது.

மனித பிம்ப செயலை உணர்த்த வல்ல இக்கையின் ஈர்ப்பு குண அமிலம் மாறுபடாத ஈர்ப்புடனே தான் சிசு உற்பத்தியாகின்றது.

பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு கையின் அவயங்கள் செயல்படும் முறை கொண்டு தான் அக்குழந்தை வளரும் முறையை அறியலாம். பிறந்ததும் மற்ற அவயங்களின் உணர்வை அக்குழந்தை கையை ஆட்டித் தான் வெளிப்படுத்துகின்றது. சில நாட்களுக்குப் பின் காலை ஆட்டும்.

பிறந்த குழந்தைகள் சில பிறந்தவுடனே கையை ஆட்டிக் கொண்டிருக்கும். அக்கையை ஆட்டும் குழந்தையின் ஞானமும் அக்கை ஆட்டும் முறை கொண்டு ஞானத்தின் நிலையும் அறியலாம்.

1.மனிதனின் ஞானத்தைச் செயலாக்கும் கை என்ற உறுப்பு மனிதனுக்கு இல்லா விட்டால்
2.மிருக நிலைக்கும் மனித நிலைக்கும் மாறுபாடில்லை.
3.மனிதனின் ஞானத்தை வெளிப்படுத்துவது கை.

ஞான நல்லறிவு குறைந்த உடலை விட்டுச் சென்ற ஆத்மாக்களுக்கு அவ்வாத்மா மற்ற ஈர்ப்பலையில் சென்று மனிதக் கருவிற்கு வர முடியாத நிலை ஏற்படுகின்றது.

இன்று இந்தக் கலியின் மாற்ற காலத்தில் மனிதனின் ஞானம் குறைவுபட்டுக் கல்கியுக வளர்ச்சிக்கு ஞானத்தின் குறைவு கொண்ட மனித அமில குண பிம்ப உடல்கள் பெறும் ஆத்மாக்களுக்கு.. மீண்டும் இன்றுள்ள அங்க அவயப் பொலிவு இழந்தே… மிகவும் குறுகிய உடல் அமைப்பும் குரங்கினத்தின் அவயங்களை ஒத்த கை கால்களின் வளர்ச்சி பிம்பம் தான் ஏற்படும்.

மனிதர்களிலேயே இன்று சிலருக்கு அமில ஈர்ப்பு வளர்ச்சி அமையப்படாமல் கை கால்கள் சூப்பிய நிலையில் குறுகிய உடலமைப்பு கொண்டவர்களைப் பார்க்கின்றோம்.

மிகவும் அல்லல்பட்டு துன்புற்று ஜீவிதத்திற்கே கஷ்டப்படும் ஆத்மாக்களின் தாய்மார்கள் சிலருக்கு.. சிலருக்கென்ன…!
1.இந்நிலையில் உள்ள பல தாய்மார்களின் குழந்தைகள்
2.இப்படித்தான் இன்றும் பிறக்கின்றன.
3.இதன் தொடர்ச்சி குண குழந்தைகள் தான் வரப்போகும் ஆண்டுகளில் அதிகமாகப் பிறக்கப் போகின்றன.

ஏனென்றால் எண்ணத்தில் வளர்ச்சி ஞானம் அற்று இம்மனித பிம்ப வாழ்க்கையில் அல்லலுறும் ஆத்மாக்கள் மலிந்து விட்டன. மனிதனான அமிலத்தை அழித்தவனே மனிதன் தான்.

ஞானமற்ற வாழ்க்கையை... சலிப்புடனும் சங்கடத்துடனும் ஏக்கமுடன் ஏங்கி வாழும் வாழ்க்கை முறை மாற வேண்டும்.

ஆண்டவனிடம் ஏங்கிக் கேட்கின்றான் மனிதன்…!
1.ஏக்கத்தில் வளரும் சலிப்பு சங்கட குண மனிதனுக்கு
2.ஞானத்தால் வெல்லும் நிலையற்றதாகி விடுகிறது.

இத்தகைய உணர்வுச் சுற்றல் குணங்கள் நிறைந்துள்ள இன்றைய இக்கலி மனிதனின் வளர்ச்சி இதே சுழற்சி ஓட்டத்தின் ஈர்ப்பு குண அமிலம் அவனுக்குள் கூடிக் கூடி… இதன் செயலில்தான் அடுத்த கல்கியுக இனக்கருவும் வளருமப்பா…!

வறுமையும் இன்னலும் அற்று மற்ற மேற்கத்திய தேசங்களிலுள்ள மனித ஆத்மாக்களில் பலரோ போதை நிலையின் அடிமையினால் எண்ண ஞானமற்ற நிலையில் வாழ்கின்றனர். அவர்களின் பிம்ப உடல் ஆத்மா பிரிந்து சென்ற பின் அந்நிலைக்கொப்ப வளர்ச்சி அமில குண கரு தோன்றி வரும்.

1.எண்ணத்தின் ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி அவயமான கை தான் மனித இனத்திற்கே மிகவும் முக்கியமானது…
2.ஆனால்… ஞானத்தின் வளர்ச்சி எடுக்காத பிறப்பற்ற உணர்வலையில் செல்லும் பொழுது
3.தான் பல ஜென்மங்களில் சேமித்த அமில குண சக்தியையே இழக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு
4.மனிதக் கரு உருவ நிலை மாறு கொண்ட பிம்பத்திற்குச் சென்று
5.அங்க அவயங்களின் சக்தியை வெளிப்படுத்தும் செயலாக்கும் திறமையுடைய – “கை இல்லாமல் பிறப்புக்கு வருகின்றது…!”

அதாவது “பிறப்பு…!” என்பது மற்ற ஜீவராசிகளின் “ஈர்ப்பலையின் பிறப்பு...!”

January 24, 2023

“கஷ்டமான நேரங்களில் தான்…” யாம் கொடுக்கும் சக்தியை அதிகமாக எண்ணி எடுக்க வேண்டும்

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எல்லோரையும் தியானிக்கச் சொல்கிறோம். இது ஒன்றும் புதிது அல்ல… சாஸ்திரங்களில் ஏற்கனவே சொல்லப்பட்டது தான்…!

1.ஆனால் துருவ நட்சத்திரம் என்றால் என்ன…? என்று கேட்கின்றார்கள் அந்த அளவுக்குத் தான் இருக்கின்றது பிழைப்பு…
2.துருவ நட்சத்திரம் என்றால்… “அது என்ன…? புதிதாகச் சொல்கிறீர்கள்…!” என்று கேட்கின்றார்கள்.

இராமாயணத்தில் இருக்கின்றது… மற்ற எல்லாவற்றிலும் இருக்கின்றது. அந்த உண்மைகள் எல்லாவற்றையும் அறுத்துத் துண்டாக்கி விட்டார்கள்… நாம் புரிந்து கொள்ளாதபடி ஆக்கிவிட்டார்கள்.

காலையில் ஒரு அரை மணி நேரமாவது வடகிழக்கிலே விண்ணிலே நினைவைச் செலுத்தித் தியானிக்க வேண்டும்.
1.வடகிழக்கில் தான் விநாயகரை வைத்திருப்பார்கள்…
2.சிவனுடைய நிலைகளும் சில இடங்களில் அப்படித்தான் அதுவும் வடக்கிழக்கில்தான் இருக்கும்.

வடகிழக்கைப் பார்த்து ஈஸ்வரா…! என்று சொல்லி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று புருவ மத்தியில் ஏங்கி… அந்த உணர்வுகளைக் கவர்ந்து நம் உடலுக்குள் சேர்ப்பிக்க வேண்டும். சாஸ்திரப்படி இது உண்மை…!

உங்களுக்கெல்லாம் இதைப் பதிவாக்கி வைத்துவிட்டோம். நீங்கள் வடகிழக்கைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
1.எப்பொழுது வேண்டுமென்றாலும்… எந்தத் திசையை நோக்கினாலும்… காற்றிலிருந்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியைப் பெற முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் இங்கே மிதந்து கொண்டிருக்கின்றது.

காரணம்… நீங்கள் எண்ணிய உடனே அந்தச் சக்தி கிடைப்பதற்குத் தான் இத்தனையும் செய்து கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

திட்டியவனை எண்ணியவுடன் எப்படி அவனுடைய நினைவுகள் உங்களுக்கு வருகின்றதோ அது போன்றுதான் என்னைச் சந்தித்து “யாம் சொன்ன முறைப்படி எண்ணுபவர்களுக்கெல்லாம்…”
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்றும்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியால் அவர்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகள் துன்பங்கள் துயரங்கள் அகல வேண்டும் என்றும்
3.நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் சாதாரண நிலையில் பிறரை எண்ணும் போது உங்களுக்கு எத்தனையோ துன்பங்கள் வருகின்றது. ஆனால் நான் பதிவு செய்யும் ஞானிகள் உணர்வுகள்… கஷ்டம் போக வேண்டும் என்று அந்த உணர்ச்சிகளை யாம் உந்தப்படும் பொழுது அதை நீங்கள் எண்ணினால் உங்களுக்கு அது கஷ்ட்த்தை நீக்கக்கூடிய சக்தியாக வருகின்றது.

நான் உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது… அதை விடுத்து விட்டு
1.என் பையன் இப்படி இருக்கின்றான்
2.என் தொழில் இப்படி இருக்கின்றது
3.என் குடும்பம் இப்படி இருக்கின்றது
4.கடன் கொடுத்தவன் திரும்பக் கொடுக்கவில்லையே
5.என் உடலில் ஏதாவது நோய் வந்து கொண்டே இருக்கின்றது என்று இப்படி எண்ணினால் அதைப் பெற முடியாது.

எப்படியும் அந்த உயர்ந்த சக்திகளை கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்று தான் தொடர்ந்து இதை நான் குரு இட்ட கட்டளைப்படி செயல்படுத்திக் கொண்டிருக்கின்றேன்.

நான் ஆசைப்பட்டு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்துகின்றேன். ஆனால் நீங்கள் ஆசைப்பட வேண்டுமா… இல்லையா…!

சாமி நன்றாகத் தான் சொல்கின்றார்…! என் கஷ்டம் என்னை விட்டுப் போக மாட்டேன் என்கிறது… என்னை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்னைத் திட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்… என்று அதன் மீது எண்ணங்களை வலுவாக்கி விட்டால் யாம் சொல்லும் நிலைகளை எண்ணவே வராது.

வேதனை… வேதனை… நோய்…! என்று தான் எண்ண முடியுமே தவிர “அதை நீக்கிப் பழக வேண்டும்…” எண்ணத்திற்கு அது விடுவதில்லை ஆக மொத்தம் தெய்வத்திடம் சென்று முறையிட்டு… என்னை “இப்படிச் சோதிக்கின்றாயே…!” என்று கேட்பது போன்று தான் எண்ணுகிறார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் துன்பங்களிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா…? யாம் சொல்லும் முறைப்படி எண்ணுகின்றார்களா…!

ஆனால் எல்லாவற்றையும் பதிவாக்கிக் கொடுக்கின்றோம்.
1.கஷ்டமான நேரங்களில் தான் “இதை எடுக்க வேண்டும்…” என்று சொல்கின்றோம்
2.ஆனால் கஷ்டமான நேரங்களில் தான் இதை விட்டு விடுகின்றார்கள்…!

ஏனென்றால் குருநாதர் எனக்கு இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து மிக மிக உயர்ந்த சக்தியைப் பெறும்படி தகுதி ஏற்படுத்தினார். அதையே தான் உங்களுக்கும் செயல்படுத்துகிறோம்.

“பறக்கும் நிலை”

சப்தரிஷிகள் தான் பூமியின் வளர்ச்சியில் மனிதக் கரு தோன்றி மனித ஞானம் பெற வழி வகுத்தனரே…!
1.இக்கலி மாறி கல்கியில் மனிதக் கரு வளரவும் மனித ஞானம் வளரவும்
2.சப்தரிஷிகளே ஏன் மீண்டும் அவர்களின் செயலைச் செயலாக்கிடக் கூடாது..? என்ற வினா எழும்பலாம்.

செடி சிறிதாக உள்ள பொழுது அதற்குகந்த ஆகாரத்தைச் செலுத்தினால் போதும். வளர வளர வளர்ச்சிக்குகந்த ஆகாரம் தேவைப்படுகிறது. வளர்ந்து முதிர்ந்த மரமாக ஆன பிறகு தன் உணவைத் தானாகவே எடுத்துக் கொள்ளும் வளர்ச்சியில் மரமுள்ளது.

சிறிய பயிர்களுக்கு நீர் ஊற்றித் தான் வளர்க்க வேண்டும். முற்றிய மரத்திற்கு அதன் உணவை அதுவே எடுத்துக் கொள்ளும்

அதைப் போன்று சப்தரிஷிகள் அவர்களின் சக்தியைப் பூமியின் கரு வளர்த்துச் செயல்படுத்த ஆரம்ப வளர்ச்சிக்கு ஆரம்ப நிலைக்குகந்த உணவு படைத்தால் போதும்.

வளர்ச்சியின் பெருக்கம் கொண்ட பிறகு வளர்ச்சிக்குகந்த உணர்வலைகளை அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இன்று பலவாகப் பெருகியுள்ள மனித எண்ணங்களின் ஈர்ப்பு நிலைக்கும் கிருஷ்ணாவதாரம் இராமாவதாரம் காலங்களின் (3000 – 4000 ஆண்டுகளுக்குள்) எண்ண ஈர்ப்பிற்கும் பல மாற்றங்கள் உண்டு.

1.பெருகியுள்ள இன வளர்ச்சியின் அழிவு நிலை நெருங்கிவிட்டது.
2.மனித ஆத்மாக்களுக்குத் தன் உணர்வைத் தான் அறியும் பக்குவ முறைகள் எல்லாம் மாறிவிட்டது
3.உலகப் பொது எண்ணச் சுழற்சி ஈர்ப்பே நாகரீகம் என்ற உணர்வின் பேராசைப் பிடிப்பில் செயல்பட்டு விட்டது
4.ஆகவே அவ்வாறு பெருகிய மனித இனக்கரு இக்கலி மாற்றத்தில் மாறப் போகின்றது.

இந்த மாற்றக் காலத்திற்குள் சப்தரிஷிகளினால் இவ்வளவு காலங்களும் அங்கங்கு செடியாக உள்ள பயிருக்குகந்த உணவளித்த நிலையில்… அந்தப் பயிரே மரமாகித் தன் உணவை எடுத்துக் கொள்ளக்கூடிய ஞான நெறி முறைக்கு ஈர்த்துச் செல்கின்றனரப்பா…!

பஞ்சாக உள்ள எண்ணங்களை பஞ்சைப் பக்குவப்படுத்தி பதம் பிரித்து அதனதன் குணத்திற்கொப்ப நூற்பு நிலை ஏற்படுத்தி இந்தப் பஞ்சுடன் கலக்கும் அமில வண்ணத்தை ஏற்றி ஆடை நெய்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று பஞ்சாக உள்ள பக்தி நெறி முறை உணர்த்தி அந்தந்தக் கால நிலைகளுக்கு ஒப்ப சப்தரிஷிகளின் உணர்வலையால் அவர்களின் உணர்வுக்குகந்த பக்குவ முறைகளை ஏற்றித் தன் ஈர்ப்பின் ஞானச் சுழற்சியுடன் சுழல விட்டுக் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளின் நிலையை… சப்தரிஷி தான் ஆண்டவன் என்று உணர்த்துகின்றீரே…!
1அப்பொழுது இந்தப் பூமியின் சக்திகளை எல்லாம் தந்தது அவர்கள் தானா…? என்ற வினா எழும்பலாம்.
2.இவ்வினாவிற்கு விடை ஆம் என்பது ஒன்றே தான்.

சப்தரிஷியினால் ஏற்படுத்திக் கொண்ட மண்டலங்களின் நிலையினால் தான் ஒவ்வொரு மண்டலத்தின் தொடர்பைக் கொண்டு… அதனதன் ஈர்ப்பு சக்தியைக் கொண்டு… அது வெளிப்படுத்தும் உணர்வு குணத்தினால் தான் மணமும்… மணத்திற்குகந்த சுவையும் வண்ணங்களும் நம் பூமியில் தோன்றின.

பல சக்தி அலைகள் நிறையப் பெற்ற நம் பூமியில் மனித இன ஞானங்கள் வளர்ந்தோட வளர்த்தியதே “பல மண்டலங்களின் ஈர்ப்பு உணர்வினால் தான்…!”

1.ஒவ்வொரு ஞானியும் அவனவன் எடுத்த உணர்வின் குண அமிலத்தை வளர்த்த ஞானத்தால் மண்டல நிலை எய்தி
2.இம்மண்டல வளர்ச்சி ஞானத்தால் இன்றைய இந்நிலை உருப்பெற்றுள்ளது.

அத்தகைய ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் பல ஆத்மாக்கள் நிலை என்ன…?

இக்கலி மாறி கல்கி தோன்றி இச்சுழற்சி வட்டத்திலிருந்தே மாறி இம்மனிதக் கரு ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் பிறிதோரு மண்டல வளர்ச்சிக் கருவுடன் பிறப்பில் மனிதக் கரு வளரும் நிலையில்
1.மனிதனின் உருவ அழகுப் பொலிவு பெற்று
2.இன்று பூமியின் ஈர்ப்பில் நடக்கும் மனிதன்
3.நாளை “பறக்கும் நிலை” கொண்ட வளர்ச்சி ஞானம் பெறுகின்றான்.

சப்தரிஷியின் உணர்வின் வட்டத்திலுள்ள மனிதக் கருக்கள் எல்லாம் இந்நிலை பெறுகின்றன. இன்று சித்து நிலையில் சுழன்று ஓடும் பல ஆத்மாக்களும் இவ்வுணர்வின் கூட்டத்துடன் செல்கின்றன.

சப்தரிஷியின் உணர்வின் சுழற்சி ஈர்ப்பில் உள்ளவர்களுக்கே இந்நிலை என்றால்…!
1.சப்தரிஷியின் உணர்வுடனே சப்தரிஷியின் செயலாகச் சுழலப்பெறும் ஆத்மாக்கள்
2.இன்றெப்படி சப்தரிஷி மண்டலம் என்று உணர்த்துகின்றனரோ அந்நிலையின் ஒளி ஞானம் பெற்று
3.ஒவ்வொரு மண்டலத்துக்குமே தன் ஈர்ப்பின் உணர்வு சக்தியைப் பரப்பித் தன் உணர்வின் இன்பத்தை உணர முடியும்.

மனித வாழ்க்கையில் வாழும் இந்தக் குறுகிய காலத்தை “இவ்வாழ்க்கை என்ற… கூட்டுக் குடும்பப் பொருள் சேர்க்கையில் தான் அந்த இன்பம் உண்டு…!” என்பது மனிதனின் எண்ணம்.

1.இந்த மனித வாழ்க்கையில் காணும் இன்பம் சிற்றின்பம் தான்.
2.பேரானந்தப் பெரு நிலை என்னும் உணர்வு ஞான வளர்ச்சி இன்பம் தானப்பா அழியா இன்பம்.
3.ஆனாலும் எவ்வின்பம் பெறவும் இந்த மனித வாழ்க்கை நிலையின் சமமான உணர்வு எண்ணச் சுவாச நிலையில் தான் பெற முடியும்.

January 23, 2023

“புருவ மத்தியில்…” துருவ நட்சத்திரத்தினை நிலை நிறுத்த வேண்டியதன் அவசியம் என்ன…?

வாழ்க்கையில் யாருக்குமே நாம் தொல்லை கொடுக்க வேண்டாம்… “சும்மா தான் இருக்கின்றேன்…” என்று சொன்னாலும் தொல்லைப்படுவரையும் கஷ்டப்படுபவரையும் வேதனைப்படுபவரையும் வெறுப்படைபவரையும் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்காமல் இருக்க முடியாது… அந்தந்த உணர்வுகளை நுகராது இருக்கவும் முடியாது.
1.நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம்
2.உயிரிலே பட்ட பின் தான் அதைத் தெரிந்து கொள்ள முடிகின்றது.

கண்களால் பார்க்கின்றோம் பிறருடைய செயல்களை உற்றுப் பார்க்கின்றோம். ஆனால் அவர் செயலின் உணர்வுகள் வெளி வருவதை நாம் நுகர்ந்து தான் அவர் இன்ன நிலையில் இருக்கின்றார் என்று அவர் கோபப்படுகின்றாரா.. வேதனைப்படுகின்றாரா...! வேதனைப்படுத்துகின்றாரா...? என்ற உணர்வால் அறிகின்றோம்.

இந்த உணர்வை ஈர்த்து நம் உயிர் சரியாகச் செயல்படுத்தவில்லை என்றால் “என்ன தான் நடந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியாது…”

வாழ்க்கையில் சிலர் மிகவும் விரக்தி ஆகி இருப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் உள்ளோருக்கு…
1.எதிர்த்தாற்போல் இருக்கக்கூடிய ஒரு பொருளை அறிய முடியாது... காண முடியாது... தெரிய முடியாது… அவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.
2.வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் “தன் வீடு” எங்கே இருக்கிறது…? என்று தெரியாது.
3.அவருடைய நண்பரே அருகில் வந்தாலும் அந்த நண்பரை அவரால் அறிய முடியாது... தெரியாது.

ஏனென்றால் இந்த உணர்வின் அறிவு அங்கே மழுங்கி விட்டால் இந்த உணர்வுகளை அங்கே செயலாக்குவது இல்லை. உதாரணமாக…
1.கண்களிலே பூ விழுந்தால்… அதாவது கண் கருவிழிக்குள் கருமணியில் அழுக்குகள் சேர்ந்து விட்டால் எப்படிப் பார்வை சரியாகத் தெரியாதோ இதே மாதிரி
2.நம் உயிரிலே உணர்வுகள் (நாம் சுவாசிப்பது) மோதும் இடத்தில் ஒரு “தடயம்…” ஒன்று உண்டு
3.அடிக்கடி வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்தால் உயிரைச் சுற்றி அழுக்குகள் அதிகமாகிவிடும்.

அந்த அழுக்கு என்பது வேதனையின் நிலையாக உருவாவது உண்டு. அதிகமான அழுக்குகள் அங்கே சேர்ந்து விட்டால் சோர்வின் தன்மை வந்துவிடும்.

1.எதை நினைத்தாலும் அது சரியான நினைவுகள் வராது
2.என்ன செய்கின்றோம்… ஏது செய்கின்றோம்…? என்று எதையும் அறிந்து கொள்ள முடியாது (தன்னை மறந்த நிலை என்று சொல்கிறோம் அல்லவா)

இத்தகைய உணர்வு கொண்டு இந்த உயிரான்மா வெளியே சென்றால் எங்கே செல்லும்...? மனிதன் யார் மீதும் நினைவில்லை.

ஆனால் இதைப் போன்று சில உயிரினங்கள் அடிக்கடி தன்னை நினைத்து மறந்து போகும். அத்தகைய உடலைப் பெறும் நிலையாக இந்த உயிர் நம்மை அங்கே அழைத்துச் சென்றுவிடும்.

உயிர் ஒன்றுதான்... பல உடல்களாக எடுத்து எடுத்து இன்று மனிதனாக வந்தது. இருந்தாலும் “உயிர் தான் நம்மை உருவாக்கியது…” என்று மனிதனாக ஆன பின் தான் நாம் தெரிந்து கொள்கின்றோம்.

தெரிந்தாலும் அதை மதித்து ஞானிகள் காட்டிய வழியில் நாம் செயல்பட வேண்டுமா இல்லையா...?

1.புருவ மத்தியில் ஈஸ்வரா…! என்று சொல்லித் துருவ நட்சத்திரத்தைப் அடிக்கடி எண்ணச் சொல்வதன் முக்கியத்துவம் இப்போது புரிகிறதா…?
2.தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் போது கண்ணின் நினைவு புருவ மத்தியில் இருக்க வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை அங்கே நிலை நிறுத்த வேண்டும்.

அப்போது தான் உயிருடன் ஒன்றும் உணர்வுகள் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியாக மாறும். நம் உணர்வுகள் தெளிவாகும்… பேரருளாக பேரொளியாக மாறும்.

இந்தப் பிறவிக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

ஞானம் பெறுபவன் மட்டும் உலக மாற்றத்திலிருந்து தப்ப முடியுமா...!

ஞானத்தின் வழி செல்லும் போதனை முறையையும்… தியான வழிபாட்டின் முறையையும்… மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்வதின் நிலை என்ன…?

இந்தப் பூமி தோன்ற இந்தப் பூமியின் ஜீவன் பெற அஜ்ஜீவனின் வளர்ச்சியினால் மனித ஆன்மாக்கள் தோன்ற…
1.இவர்கள் சொல்லும் “இயற்கைச் சக்தி…” என்றாலும்
2.இதற்கு மூல சக்தி வளர “ஒரு சக்தி” தேவை.

அச்சக்தி அமிலக்கூட்டு நிலை பெற்றோர்கள் நம் சப்தரிஷிகளின் செயல் வடிவம்தான் நம் பூமியும்… பூமியில் வளர்ச்சியான எல்லாமுமே…!

பல கோடி ஆண்டுகளாக எண்ணிலும் கருத்திலும் எடுத்துச் சொல்ல முடியாத மாற்றங்களின் செயல் திறனில் வழி வந்த நிலையில்
1.மனித இனம் தோன்றி மனித இன குண அமில வளர்ச்சியிலிருந்து தான்
2.மீண்டும் மீண்டும் சகல சக்திகளையும் சக்தி வழி பெறச் செயலாக்க முடியும் என்ற உண்மையின் தத்துவத்தில்…
3.தான் வடித்த வடிவான “மனித மகசூலான ஞான ஒளியைத்தான்…” நம் சப்தரிஷிகள் காணத் துடிக்கின்றனர்.

தன் செயலின் பலன் தான் மனித இனம். இந்த மனித இனம் தோன்றி வளர சப்தரிஷிகளின் செயல் காலத்தில் பல கோடி ஆண்டுகள் ஆகிவிடுகின்றன.

இவ்வினம் தோன்றி அவ்வினத்தின் ஒளியை எடுத்தால் தான் மீண்டும் மீண்டும் இவ்வின வளர்ச்சிக்கு அவர்கள் பயிர் செய்ய முடியும். செய்த மகசூலில் வரும் பயிரை எல்லாம் உணவாக உண்டு கழித்து விட்டால் மீண்டும் பயிர் செய்ய “விதை நெல்” தேவைப்படுகின்றது.

அவர்கள் செய்த பயிருக்கு மகசூல் பெற்று அந்த மகசூலில் மீதமான விதை நெல் இருந்தால் தான் மீண்டும் மகசூல் காண முடியும்.

இதன் அடிப்படையின் நிலையை ஒத்துத்தான் நம் சப்தரிஷிகளின் நிலையும் மகசூலைக் கண்டு அதிலுள்ள பலனால் மீண்டும் மீண்டும் பயிர் செய்யச் செயல் புரியும் நிலை தான் “இங்கே உணர்த்தும் நிலை…!”

இதனை ஒத்துப் பல நிலைகளில் செயல் புரிந்து வருகின்றனர் சப்தரிஷிகள்.

இந்த மனிதக் கரு தோன்றி இது நாள் வரை அவர்களின் ஒளி வட்டத்தில் கலக்கும் நிலை கொண்ட ஆன்மாக்களின் வளர்ச்சியைக் காண பல காலமாகப் பல செயல்களைப் புரிந்து வருகின்றனர். ஆனால்
1.இம்மனித ஆன்மாக்களின் எண்ண வாழ்க்கையில்
2.அவ்வொளி ஞானத்தின் சித்து நிலை பெறப்படுவது மிகவும் குறைந்தே வருகின்றது.

தன் ஞான வளர்ச்சியை உலகுக்கு உணர்த்தத்தான் அந்தந்தக் கால கட்டத்தில் அச்சப்தரிஷிகளே தோன்றி அக்கால மாற்றத்தின் சில நிலைகளைச் செயல் புரிந்து அவர்கள் நல் ஒளியின் ஆத்மாக்களை எடுத்ததின் நிலை தான் நாம் இன்று கேள்விப்படும் “பல மகான்கள்” தோன்றிய நிலை எல்லாம்.

அந்த மகான்கள் தோன்றியதன் நிலை எல்லாம் தான் வளர்த்த பூமியின் சக்தியிலிருந்து தன் சக்தியின் பலனைப் பெற்றால் தான்… மீண்டும் சப்தரிஷிகளுக்கு அவர்களின் செயலின் மண்டலம் தோன்றி வளர்ந்து “ஜீவனை வளர்க்க முடியும்…”

சூரியனைச் சுற்றியுள்ள நாற்பத்தியேழு மண்டலங்களில் நம் பூமியில் மட்டும் இன்று மனித ஆன்மாக்கள் வாழ முடிகின்றது. இன்று வாழும் இதே நிலை இக்கலியின் மாற்றத்தில் அழியப் பெறுவதனால் மீண்டும் மனித ஜனனம் தேவை.

காற்று மண்டலமே விஷக் கோளமாகச் சுழலும் இந்தக் கலியில் இதன் வளர்ச்சி நிலையின் மாற்றத்தின் பொழுது மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ளச் செயலாக்கியுள்ள இந்த விஷக் குண்டுகள் வெடிப்பதற்கு முதலிலேயே இம்மனிதனின் ஞானம் ஒளி பெற்றால் அச்சப்தரிஷிகளின் ஒளிக் கூட்டு அதிகப்படும்.

உலகமே விஷமாகி ஜீவராசிகள் அனைத்துமே மடியப் போகின்றன என்றால் ஞானம் பெறுபவன் மட்டும் எப்படித் தப்புவான்…?

ஒரு பானை சாதம் வடிக்கின்றோம்.
1.அப்பானையில் இட்ட அரிசி எல்லாம் வெந்து சாதமாக ஆனாலும்
2.அதில் உள்ள கல் வேகுவதில்லை அல்லவா…!

பூமியில் உற்பத்தி செய்தது தான் அந்தப் பானையும் அக்கல்லும் விறகும் கரியும் அடுப்பும் எல்லாமே…! அதனதன் வளர்ச்சி கொண்டு விறகு எரிந்து உஷ்ணத்தைக் கக்கிச் சாம்பலாகின்றது.

சுட்ட சட்டி எந்த உஷ்ணத்தை ஏற்றி அடுப்பு எரிந்தாலும் அது தாங்கி நீரை அவியாக்கி அரிசி எல்லாவற்றையும் வேக வைத்தாலும் அந்தக் கல் மட்டும் எந்த உஷ்ணமாக ஏறினாலும் அப்படியே உள்ளது.

அதைப் போன்று ஒளியின் சக்தியால் பிம்பம் கொண்ட “நாம்” அச்சக்தி பிம்பத்தின் பிம்ப ஞானம் பெற்றால் இந்தப் பூமியின் மாற்றத்தினால்
1.நீரும் நெருப்பும் விஷ வாயும் நம் ஒளியை எந்தப் பின்னமும் படுத்தாது
2.சாதத்தில் கொதித்து வந்த கல்லைப் போன்று…!

January 22, 2023

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… நமக்குள் வளர்க்க வேண்டும்... அது தான் முக்கியம்…!

கண்டார் விண்டதில்லை… விண்டார் கண்டதில்லை…! இதன் பொருள் என்ன…?

கண்டார்..! என்பதற்கு…
1.இந்த உலகின் உண்மை ஞானத்தைக் கண்டவர்கள் விண்டு…
2.வீண் விரய நிலையில் புரளிகளாக எந்த உண்மையையும் சொல்ல மாட்டார்.

விண்டார் கண்டதில்லை… என்பதன் பொருள்
1.விண்டவன் தன் எண்ணத்தில் ஏற்றிக் கொண்ட செயலைத்தான் விண்டு புகட்டுகின்றான்.
2.இவன் கண்டது எவற்றை…?
3.ஞானப் போர்வையைப் புகழ்படுத்திக் காண்பவன் விண்டு உணர்த்தும் நிலையாகத் தான் அது இருக்கும்.

ஞானத்தைப் புகழ்ந்து சொல்வது முக்கியமில்லை… அதை நமக்குள் வளர்க்க வேண்டும்.. அது தான் முக்கியம்…!

ஆக…
1.தன் ஞானத்தை வளர்க்க வேண்டும் என்றால் தியானம் வேண்டும்..
2.தியானம் பெற ஞானம் வேண்டும்.

ஞானம் என்பது மனிதனுக்கு எப்படி வளருகின்றது..?

பல குண நிலையில் வாழும் மனிதன்
1.தன் எண்ண கதியிலேயே… தன் குணமுடனே… ஞானம் பெறல் வேண்டும் என்றால் எந்த ஞானமும் வளராது.
2.பல குணங்களுடன் உள்ளவனால் தியானத்தின் செயல் முறைக்கே வர முடியாது.

தியானம் என்பது… மனிதனின் குணத்தைச் சமமான சாந்த நிலை பெற்ற பிறகு
1.சாந்தத்தினால் இவ்வெண்னத்தை ஓ…ம் என்ற நாதமுடன் எடுக்கும் முறைப்படுத்தி
2.தன் கவன நிலையை அதன் வழி செலுத்தும் பொழுது தான் ஞானம் பிறக்கின்றது.

மனிதனின் வாழ்க்கையில் சலிப்பு சங்கடம் கோபம் ஆத்திரம் இப்படியெல்லாம் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று வளர்வது இயற்கையே.

இருந்தாலும்… அந்த இயற்கையின் கதியில்… அதே வேகத்தில்… நம் எண்ணத்தைப் பாய்ச்சி விட்டால் வளரும் நிலையற்று அழிக்கும் நிலைக்குச் செல்கின்றான் மனிதன்.

நம் ஆடையில் ஏற்படும் கறையை…
1.எப்படி அகற்றினால் அது போகும் என்று “பாங்காக…” (பக்குவமாக)
2.மற்ற இடத்தில் கறைபடியாமல்…
3.படிந்த இந்தக் கறையைப் போக்க நம் செயல்கள் இருந்தால்…
4.துணி பாழ்படாமல் சுத்தமாக அகற்றி விடலாம்.

கறை படிந்து விட்டதே…! என்று சலிப்புப் பட்டு அதை அடித்துத் தோய்த்துச் செயல்பட்டால் அந்தக் கறையும் போகாது… துணி தான் நைந்து போகும்.

மின்சாரத்தைப் பாய்ச்சி ஒளியைக் காண்கின்றோம். எந்த அளவு விகிதம் செலுத்தப்படுகின்றதோ அதற்குகந்த வெளிச்சத்தைத் தான் அந்த மின் ஒளி ஏற்றித் தருகின்றது.

அதைப் போல்… இவ்வெண்ணத்தை எந்த ஒரு செயல்முறைக்கும்
1.சாந்தமாக ஞானத்தைக் கொண்டு ஆராய்ந்து செயல்பட்டால்
2.வாழ்க்கையில் ஏற்படும் குறைகளுக்கு வழி முறை அமைத்துக் கொள்ளலாம்.

சலிப்பையும் சங்கடத்தையும் ஏற்படுத்திக் கொண்டால் கோபமும் அழுகையும் தான் ஏற்படும்.

எந்த ஒரு சூழ்நிலையானாலும்…
1.எண்ணத்தால் ஞானத்தைப் பாய்ச்சி அதிலுள்ள சிக்கலை அகற்றி விட்டால் சாந்தமான சமநிலை பெற முடியும்
2.மேன்மேலும் நம் எண்ணத்தின் சாந்த நிலை கூடக் கூட… நம் எண்ணமே சாந்தமாகி
3.ஞானத்தால் எடுக்கும் வழித் தொடருக்குச் “சக்தி நிலை கூடுகிறது...”

சாந்தமான நிலை பெற ஞானத்தால் நம் வாழ்க்கையை வழிப்படுத்திக் கொண்டோமானால் தான் நாம் எடுக்கும் வளர்ச்சிக்கு வழி அமைத்துக் கொள்ள முடியும்.

எந்த ஒரு சிக்கலுக்கும் எண்ணத்தைத் தெளிவுபடுத்தும் ஆத்மாவினால்… சாந்த நிலை பெறுவது என்பது கடினமல்ல.
1.பல சிக்கல்கள் வந்தாலும்…
2.தன் எண்ணத்தைக் கொண்டு அவர்கள் தெளிவு ஏற்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.

ஆனாலும் அவர்களின் குண அமிலத்தில் அவர்கள் வளர்த்துக் கொண்ட “அவர்களுக்குச் சொந்தமான வளர்ச்சி நிலை தான்…” மேலோங்கி நிற்கும்.

எண்ணத்தைச் சாந்தப்படுத்தி சமநிலை பெறும் ஆத்மாவினால் நிச்சயம் ஞான ஒளி ஈர்ப்பின் வழியில் செல்ல முடியும்.

மந்திரமும் இல்லை மாயமும் இல்லை… எனக்கு நோய் இல்லை “எப்போதும் நான் நலமாக இருப்பேன்” என்று உங்களால் சொல்ல முடியுமா…?

யாரை நான் ஜெபிக்கின்றேன்…? யாரை எண்ணி நான் தவமிருக்கின்றேன்…?
1.குரு காட்டிய அருள் வழியில் அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுகின்றேன் (ஞானகுரு)
2.பெற்று யாரையெல்லாம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினேனோ
3.நான் பார்த்தவர்களுக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று தவமிருக்கின்றேன்.

ஆனால் நீங்கள் முக்காடு போட்டுக் கொண்டு “என்ன..? சாமி சொன்னார் நமக்கு ஒன்றுமே நடக்கவில்லை… ஒன்றுமே நடக்கவில்லை…” என்று எண்ண வேண்டியதில்லை.

சிலர் “என் கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது…” என்று எண்ணுகின்றார்கள். கை கால் குடைச்சல் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது.. தீராத நோயாக ஒரே தலைவலியாக இருக்கிறது…! என்று கேட்பார்கள்.

தலை வலி நீங்க வேண்டும்… கை கால் குடைச்சல் நீங்க வேண்டும் என்று கேட்கின்றார்களா…? என்றால் இல்லை.

1.அதை “மற்றவர்களுக்குச் சரியாகும்…” என்று யாம் சொல்லியிருப்போம்.
2.ஆனால் “அவர்களுக்குத் தானே சொன்னார்…” என்று இதைத் திரும்பத் திரும்பக் கேட்பார்கள்.

தீராத தலைவலியாக இருக்கின்றது, உடலெல்லாம் வேதனையாக இருக்கின்றது என்று கேட்கிறார்கள்.

இப்பொழுதுதானே அவருக்குச் சொன்னோம் என்று சொன்னால் “அதற்குச் சொல்லவில்லை…” என்பார்கள். என்னுடைய வேதனைகளை என்னால் தாங்க முடியவில்லை…! என்பார்கள்.

ஏனென்றால் இந்த எண்ணத்தை முதலில் நீக்கிவிட்டால் உங்கள் நோய் நீங்கிவிடும்.

நீங்கள் மந்திரமும் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை… ஒன்றும் வேண்டியதில்லை.
1.இந்தத் தியானத்தை ஒழுங்காகச் செய்து
2.“எனக்கு நோய் இல்லை… நான் நலமாக இருப்பேன்…” என்ற எண்ணத்தை மட்டும் கூட்டிப் பாருங்கள்.

உங்கள் எண்ணத்தை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும். உங்களுக்குள் அந்த நன்மையின் பயனைக் கூட்டும்.

நீங்கள் எண்ணியவுடன் கிடைக்கும்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை உங்களுக்கு ஏற்படுத்துகின்றேன்.

ரேடியோ, டி.விக்களில் எந்தெந்த அலை வரிசையில் வைக்கின்றோமோ அந்த அலை வரிசையில் வைத்து ரசித்துப் பார்க்கின்றோம்.

அதைப் போன்றுதான் உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் நஷ்டம் என்று பார்க்கின்றீர்கள் சாதாரண மனிதனைப் பார்க்கின்றீர்கள் நல்லதைப் பார்க்கின்றீர்கள்.

ஆனால், அந்த வேதனை என்ற விஷத்தன்மைகளைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது அதை உடனடியாக அறிய முடிகின்றது. அந்த வேதனை உங்களை இயக்கிவிடுகின்றது.

இதைப் போல் தான் “உங்கள் மனதைத் திருப்பி..,” அருள் ஞானிகளின் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்கள் உடலில் உள்ள அணுக்களில் இணைக்கச் செய்கின்றோம்.

இந்த உணர்வை ஆழப் பதிவு செய்து கொண்டபின் அதை நீங்கள் நினைவு கொண்டால் மகரிஷிகள் உணர்த்திய உணர்வலைகளை எளிதில் பெற்று நீங்களே உங்கள் துன்பங்களை நீக்கிக் கொள்ள முடியும் உங்கள் எண்ணத்தால் உயர்ந்த நிலைகள் பெற முடியும்.

இதைவிட இன்னும் சுலபமாகக் கொடுப்பதற்கு என்ன இருக்கின்றது?

மக்கள் யாரும் குறை உள்ளவர் அல்ல. சந்தர்ப்பம் இத்தகைய நிலைகள் அமைந்து விட்டது. அவர்களை மீட்டிட நீ என்ன செய்யப் போகின்றாய்..,? என்று குருநாதர் கேட்டார்.

அவர்களின் உயிர்களை நீ கடவுளாக மதி. உடல்களைக் கோவில்களாக மதி. மனிதனாக உருவாக்கிய உயர்ந்த குணங்களை நீ அங்கே வரம் கேள். அங்கே உயர்ந்த குணங்கள் வளர வேண்டும் என்று நீ எண்ணினால் உனக்குள் அது வளர்கின்றது.

அவர்கள் காக்கப்பட வேண்டும் என்று எண்ணினால் உனக்குள் காக்கும் சக்தி வளர்கின்றது.

ஆகவே, “குறைகளைக் காணாதே…,” குறைகளிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய், உயர்ந்த தியானத்தை நீ எடு. அவர்கள் குறைகளிலிருந்து மீள வேண்டும் என்று நீ தவமிரு.

அவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது நீ உயர்கின்றாய். அவர்கள் அதைப் பெறவேண்டும் என்று ஏங்கு. அதை உன்னால் பெற முடியும் என்று தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்தினார்.

எனக்குக் குரு கொடுத்தது இது தான்.