ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 27, 2012

குரு காட்டிய வழியில் மகரிஷிகள் உலகம்

1. கர்ப்பிணிப் பெண்கள் செய்ய வேண்டியது
தியானம் செய்யக் கற்றுக் கொண்டவர்கள், கர்ப்பமாக இருக்கும் தாய்மார்கள், “ஓம் ஈஸ்வரா என்று, புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி. அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று. நன்றாக ஆத்ம சுத்தி செய்துவிட்டு, கருவிலே இருக்கும் அந்தக் குழந்தைக்கு,
மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று
அந்தக் கருவிலே இருக்கும் குழந்தையை
சிறிது நேரம் நினைத்து, அதை தியானியுங்கள்.

கருவிலே இருக்கும் குழந்தைக்கு, அந்தத் தாய் தான், ஞானப் பாலை ஊட்ட வேண்டும். அப்படி ஞானப் பாலை ஊட்டி, அந்தக் குழந்தை வெளி வரும்போது அது ஞானக் குழந்தையாகவே பிறக்கும்.

உலகிற்கு, அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சொல்லும், மிளிரும் தன்மையாக, அது பெற்ற உணர்வின் சக்தி பேரண்டத்தின் பேருண்மைகளைச் சுலபமாகப் பெற்று, தனக்குள் விளைய வைத்து, அந்த மூச்சுஅம்மாஎன்ற மழலைச் சொல்லின் நிலைகள் உங்களுக்குள் இனிமையூட்டும். அந்த மெய் ஒளியின் தன்மைகள், உங்களுக்குள்ளும் வளரச் செய்யும். அதுவும் வளரும்.

அந்தக் குழந்தை இடும் மூச்சலைகள், இந்த நாட்டுக்கும் உதவும், மற்றவர்களுக்கும் உதவும். ஆகவே, எதிர்கால சிசுக்களை இப்படி உருவாக்குங்கள். அதற்காக வேண்டி, வீட்டிலே கூட்டுக் குடும்ப தியானம் செய்யுங்கள்.
2. கர்ப்பிணிப் பெண்கள் உள்ள வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்
ஒவ்வொரு குடும்பத்திலும், பெண்கள் கர்ப்பமுற்றபின், அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும், தெய்வீகக் குடும்பமாக மாற்ற வேண்டும். அது சமயம், ரோஜாப்பூவும், குங்குமப்பூவும், கல்கண்டும், தேனும் கலந்து, ஒரு பாட்டிலில் ஊற வைக்க வேண்டும். அதைப் பத்து மாதமும், கர்ப்பமுற்ற தாய்க்குக் கொடுத்து பழகுதல் வேண்டும்.

அதிகாலையில், குடும்பத்துடன் துருவ தியானத்தை எடுத்து, அகத்தியர் துருவனாகி, அணுவின் இயயக்கத்தை அறிந்து, துருவத்தின் ஆற்றலை நுகர்ந்து துருவ மகரிஷியாகி, கணவனும், மனைவியும் ஒன்றென இணைந்து, ஒளியின் சரீரமான அவர்களின் பேரருளை, கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும், என்று தியானிக்க வேண்டும்.

கருவிலிருக்கும் அந்தக் குழந்தை, உலக ஞானம் பெற்று, உலகைக் காத்திடும் அருள்ஞானியாக உருவாகிட வேண்டும். உலகைக் காத்திடும் பேரருள் ஞானியாக ஆக வேண்டும் என்று, குடும்பத்துடன் அனைவரும் சொல்லப்படும் பொழுது, இதனின் உணர்வுகளை கருவுற்றிருக்கும் தாய் தன் செவி வழி கவர்ந்து, தன் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது, இதனின் உணர்வுகள், கருவினில் இருக்கும் குழந்தைக்கு கிடைக்கின்றது. இப்படிச் செய்தோமென்றால்,
நமது குடும்பத்தில் சாப அலைகள் இருப்பினும்,
தீய அலைகள் இருப்பினும்,
பாவ அலைகள் இருப்பினும்,
பூர்வ ஜென்ம அலைகள் இருப்பினும்,
இதையெல்லாம் தகர்த்தெறியும் பெரிய ஞானியாக அவன் உருவாகுகின்றான்.

அவன் வளர வளர, குடும்பத்திலுள்ள சர்வ தோஷங்களையும், சர்வ ரோகங்களையும் நீக்கிடும் தன்மையும், பேரருள் என்ற உணர்வை வளர்க்கும் தன்மையும், பெறுகின்றான். இதனால், அந்தக் குடும்பத்தில் மட்டுமல்ல, அவர்களுடைய ஊரிலும், தெருவிலும், அருள்ஞானியின் உணர்வுகள் படர்கின்றன.

இப்படி இதன் வழியில் குழந்தைகளை உருவாக்கினால், அவர்கள் பிறந்தபின், இருளை அகற்றி, மெய்யுணர்வை வளர்க்கும் தன்மை பெறுகின்றது.
நாமும் இந்த நிலை பெற்றால், அந்தக் குழந்தைகள்
நம்மைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்வதும்,
நமக்குள் இருக்கும் சாப அலைகளை மாற்றிடும்,
அருள் ஞானியாகவும் ஆகின்றான்.
3. அன்று ஆண்ட அரசர்கள் செய்தது
பண்டைய காலங்களில், அரசர்களின் மனைவிமார்கள் கர்ப்பமுற்றால், அரசர்கள் கர்ப்பமுற்ற தங்கள் மனைவிமார்களை அமர வைத்து, தங்களுடைய நாட்டின் பெருமைகளையும், பிற நாடுகளை எப்படி வெல்ல வேண்டும் என்றும், எதிரிகளை வெல்ல எந்த நிலை பெற வேண்டும் என்றும், மற்ற பிற நிலைகளையும் குருகுலமாக வைத்து ஓதி, கருவில் வளரும் குழந்தைக்கு ஊட்டுவார்கள்.

ஆக மிக பலசாலியாகவும், அதே சமயத்தில் தன் தாய்நாட்டைக் காக்கும் நிலைகளிலும், அந்தக் குழந்தை வளரும். இப்படி, அரசர்கள் தங்கள் நாட்டைக் காப்பதற்காக வேண்டி, தங்கள் குழந்தைகளை இது போன்று உருவாக்குவார்கள்.

அன்று அரசர்கள் எடுத்துப் பயன்படுத்திய கத்தி, வாள் போன்ற ஆயுதங்களை, நாம் இரண்டு கையாலும் தூக்க முடியாது ஆனால், அவைகளை அரசர்கள் ஒரு கையாலே தூக்கி, விளையாடுவார்கள். ஏனென்றால், மிருக தசைகளை அதிகமாகக் கொடுத்து, மிருகங்களுக்கு உண்டான வலுவை, உடலிலே ஏற்றியிருப்பார்கள்.
4. அருள் ஞானக் குழந்தையாக உருவாகும்
ஆனால், நீங்கள் குடும்பத்துடன் துருவ தியானத்தில் அமர்ந்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை, இல்லம் முழுவதும் படரச் செய்து, குடும்பத்தினர் அனைவருக்கும் அந்த சக்தியைக் கிடைக்கச் செய்து, தெய்வீகக் குடும்பமாக, சஞ்சலங்களும், குறைகளும் இல்லாது நிறை கொண்டவர்களாக வாழ்ந்து, துருவ தியானத்தின் பொழுது கர்ப்பமுற்ற பெண்ணிற்கு, குங்குமப்பூவும், தேனும், கலகண்டும், ரோஜாவும் கலந்த பாகை, குடும்பத்துள் உள்ளோர் அனைவரும், கொடுங்கள்.

இது சமயம், கருவில் வளரும் குழந்தை, மலரைப் போன்ற மணமும், மகிழ்ந்து வாழும் சக்தியும் பெற்று, அருள் மகரிஷியாக வளர வேண்டும். அவனுடைய பார்வையில், சர்வ தோஷங்களையும் நீக்கிடும், சர்வ நோய்களைப் போக்கிடும் அருள் சக்தியும் அவன் பெற வேண்டும்.

விஞ்ஞான உலகால் வரும், அஞ்ஞானத்தை அகற்றி, மெய்ஞானத்தைப் பெறச் செய்யக்கூடிய அருள் சக்தியும், அவன் பெற வேண்டும் என்று எண்ணி, தேன் கலந்த பாகை கருவுற்ற பெண்ணிற்குக் கொடுங்கள்.

இதைப்போன்று 10 மாதமும் கொடுத்து உருவாக்கிவிட்டால்,
இன்று விஞ்ஞான உலகில் வரும் அஞ்ஞானத்தை அகற்றிடும்,
உங்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த சாப அலைகளை நீக்கிடும்,
பாவ அலைகளைப் போக்கிடும்,
எத்தகைய நிலைகளையும் மாற்றும்
அரும்பெரும் சக்தி கொண்ட ஞானியாக,
அந்தக் குழந்தை வளரும்.

நாம் ஒருவருடன், அன்புடன் பண்புடன் பழகியிருந்தால், அவர் இறந்தபின் அவருடைய ஆன்மா, பற்றுக்கொண்ட நமது உடலுக்குள் வந்துவிடுகின்றது. பின், அந்த ஆவியின் உணர்வே உங்களுக்குள் இயக்கச் செய்கின்றது.

இப்படி, குடும்பத்தில் அறியாது தீய வினைகளைச் சேர்த்த ஒருவர் சாபம் விடும்பொழுது, உற்று நோக்கினால் அந்தச் சாப அலைகள் உங்களுக்குள் வந்து, உங்களுடைய குடும்பத்தைச் சீரழிக்கின்றது.

யாரும் உங்களுக்கு சாபம் விடவேண்டாம். வேறு யாருக்கோ விடும் சாபம் கூட, உங்களில் இணைந்து உங்களைச் சீரழிக்கும்.

இதைப் போன்று, சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அறியாமலேயே, நமது குடும்பத்திலும், உடலிலும், ஆட்டிப்படைக்கும் நிலை வருகின்றது.

இது போன்ற நிலைகளை நீக்க வேண்டுமென்றால், உங்களுடைய குடும்பமே ஒரு தெய்வீகக் குடும்பமாக மாற வேண்டும். கர்ப்பமுற்ற பெண்களை, அருள்ஞான நூல்களைப் படிக்கச் செய்யுங்கள். அருள்ஞானவழி, வயிற்றில் வளரும் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

தபோவனத்தில் வெளியிடப்பட்ட நூல்களையும், வாங்கிப் படிக்கச் செய்யுங்கள். பிறரைப் படிக்கச் சொல்லி, செவி கொடுத்து கேட்கச் செய்யுங்கள். இதனால், பிறக்கும் குழந்தை அருள்ஞானக்  குழந்தையாகப் பிறக்கும்.

குடும்பத்தில், சாப அலைகளை நீக்கும் அருள் சக்தியும், உலகத்தை ஞானத்தின் வழி அழைத்துச் செல்லும் நிலையும், குடும்பத்தில் தொழில் வளத்தைப் பெருகச் செய்யும் நிலையும், கருவில் உள்ள குழந்தைப் பெற்று அருள் ஞானியாக உருவாவான்.
5. மகரிஷிகள் உலகமாக உருவாக்க வேண்டும்
ஆயுத உணர்வுகள் பெருகி, உலக அரசியலில் ஆயுதங்கள் பெருகி உலகமே சீர் குலையும் தன்மை வருகின்து. நான்கு வருடங்களுக்கு (2004) மேல், இத்தகைய தீவிரவாத தன்மை பெருக இருப்பதனால்,
14 வருடத்திற்குள் (2014க்குள்)
ஞானிகளின் உணர்வுகளை உருவாக்கி,
அவர்களுடைய உணர்வுகளை பரவச் செய்து,
உலகில் பரவி வரும் தீவிரவாதத்தை அடக்கிடும்
அருள் ஞானக் குழந்தைகளை உருவாக்குதல் வேண்டும்.

ஏனென்றால், பேரருளின் உனர்வுகள் கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்குப் பெறச் செய்யப்படும் பொழுது, அவனின் உணர்ச்சிகள் உலகில் பரவிப் படரும் நிலை வரும்.

அனைத்து மக்களும், தம்முள் துருவ நட்சத்திரத்தின் பேரருளை, பேரொளியைப் பெற்று, தம்முள் அறியாது சேர்த்த இருளை அகற்றி, நஞ்சினை வென்று, பேரருள் உணர்வுகளை தம்முள் பெருக்கி, மெய்ப்பொருள் காணூம் திறன் பெற்று, இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள்ஞானம் பெற்று, பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள்சக்தி பெற்று, பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருள்ஞான வாழ்க்கை அமைந்து, இவ்வாழ்க்கையில் பேரின்ப பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட, எமது அருளாசிகள்.

December 22, 2012

ஞானிகள் காட்டிய மெய்வழி

1. பிறருடைய தோஷங்களை நீக்கும் வழி
விஞ்ஞான அறிவு கண்டதைக் காட்டிலும், மெய்ஞானிகள் கண்டுணர்ந்தவைகள் ஏராளம். இவைகளையெல்லாம் விஞ்ஞானிகள் கண்டறிய வெகு காலமாகும். இப்படிப் பல உண்மைகளின் நிலையை மக்களுக்கு உணர்த்தும் நிலையாகத்தான், ஆலயங்களை அமைத்தனர் ஞானிகள்.

ஆலயங்களில் தெய்வச் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொழுது, நல்ல உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து,
பாலைப் போல மணம் பெறவேண்டும்,
மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்,
கனியைப் போன்ற சுவையான சொல்லைப் பெறவேண்டும்,
பன்னீரைப் போன்ற தெளிந்த மணம் பெறவேண்டும்,
என் குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்,
இந்த ஆலயம் வருவோரெல்லாம் நல் உணர்வுகள் பெறவேண்டும்
என்று நம்மை எண்ணும்படி செய்தனர் ஞானிகள்.

ஞானிகள் சொன்ன முறைப்படி நாம் இவ்வாறு எண்ணும் பொழுது, நமக்குள் என்ன செய்கின்றது நியூட்ரான்? நம்மிடத்திலிருந்து கவலை, சஞ்சலங்களை எல்லாம் மாற்றுகின்றது. எனென்றால், அதிர்ச்சி கொண்டு உள் செலுத்துவது ஒருவிதம். ஆனால், ஆலயங்களில் அமைதி கொண்டு நல் உணர்வுகளை நமக்குள் செலுத்தும்படி செய்தனர், ஞானிகள்.

அனைவரின் உணர்வுகளும் நமக்குள் இருக்கின்றது. பயந்திருப்போம், வெறுப்படைந்திருப்போம், கோபப்பட்டிருப்போம், ஆத்திரப்பட்டிருப்போம், வேதனையைக் கேட்டறிந்திருப்போம். இப்படி, இத்தனை உணர்வுகளும் நமக்குள் இருக்கும்.

ஆகையால், இந்த ஆலயம் வருவோரெல்லாம் மலரைப் போன்ற மணம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும் என்றும் இந்த ஆலயத்திற்கு வரும் குடும்பமெல்லாம் பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் உள்ளோர் அனைவரும், இந்த நிலை பெறவேண்டும் என்று என்ணி, நமக்குள் கேட்டறிந்த, பிறருடைய தோஷங்களை நீக்க வேண்டும்.
அப்படி நீக்க வேண்டுமென்றால்,
துருவ நட்சத்திரத்தின் உணர்வின் உணர்ச்சிகளை
நமது உடலில் சேர்த்து, மகிழ்ச்சியாக்க வேண்டும்.
நாம் பண்பும் பரிவும் கொண்டு செயல்படுவோம். ஒருவர் தவறு செய்வதைப் பார்த்து, அவர் தவறு செய்கிறார், தவறு செய்கிறார்” என்று சொல்லப்படும் பொழுது, கடைசியில் அவரைக் காட்டிலும் பன்மடங்கு தவறு செய்யத் தொடங்குவோம். யார் செய்தது?
தவறு செய்பவரின் உணர்வை நுகர்ந்தோம்.
தவறின் நிலையைத் துடைக்க மறந்தோம்.
அந்தத் தவறின் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

ஆகவே, இப்படி நம்மை அறியாமல் வரும் தீமைகளைத் துடைக்கும் நிலையாகத்தான் ஞானிகள் ஆலயங்களை அமைத்து, நம்மைப் பரிசுத்தமாக்க வைத்தார்கள். ஆகவே, நாம் அனைவரும் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் வாழ்வோம், எமது அருளாசிகள்.
2. கருப்பணசாமி
கருப்பணசாமிக்கு, மோப்ப நாயை வைத்திருக்கின்றார்கள். காரணம்
ஒருவர் நம்மைப் பார்த்து, பழி தீர்ப்பேன் என்று
சொன்ன உணர்வை நுகர்ந்தபின்,
நமக்குள் என்னவாகின்றது?
நமக்குள் இருள் சூழுகின்றது. வேதனை பெருகுகின்றது.

ஓம் நம சிவாய, சிவாய நம ஓம் எனும் நிலையாக, அவர் நம்மைப் பழி தீர்ப்பதற்கு முன்னால், நாம் அவரைப் பழி தீர்க்க வேண்டும், வெட்ட வேண்டும், குத்த வேண்டும் என்ற நிலை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் நிலை இல்லை. இதனின் உணர்வின் தன்மை உடலில் விளைகின்றது.

கருப்பணசாமியின் கையில் அரிவாளையும் கொடுத்து, மோப்ப நாயையும் கொடுத்திருக்கிறார்கள். கருப்பணசாமிக்கு என்ன செய்கிறோம்? ஆட்டை வாங்கி உனக்குக் கொடுக்கிறேன். படையல் செய்கிறேன், என்னைக் காப்பாற்று என்று சொல்லி வணங்குகின்றார்கள்.
ஆட்டை அறுத்துக் கொலை பண்ணி சாப்பிட்டு, மிச்சத்தைக் கருப்பணசாமிக்குக் கொடுத்தால், கருப்பணசாமி என்னைக் காப்பாற்றுவான், என் மகனைக் காப்பாற்றுவான், என்று இருக்கின்றார்கள்.

இப்படி ஆட்டைப் பலி கொடுத்து வணங்கினால் என்னவாகும்? இது சமயம், நாம் நுகர்ந்த உணர்வுகள் நமது உடலில் "நல்ல குணங்களைக் கொல்லுகின்றது".
இது என்ன செய்யும் என்றால்,
நாம் தீமையின் நிலைகள் கொண்டு,
பிறரிடம் இதே செயலைச் செயல்படுத்தச் செய்யும்.

புற வாழ்க்கையில் இப்படி என்றால், நமது அக வாழ்க்கையில் நமது நல்ல குணங்களைக் கொல்லுகின்றது. இதற்காகத் தான் கருப்பணசாமியை முச்சந்ததியில் வைத்தார்கள்.

சாலையில் சென்று நடந்து கொண்டிருக்கும் பொழுது, யாராவது சைக்கிளில் வந்து மோதி விட்டால், நமது உணர்வுகள் இருள் சூழ்ந்துவிடுகின்றது. “அடித்துவிடுவேன், உதைத்து விடுவேன்” என்று சந்தர்ப்பம் இப்படி ஆகின்றது.

ஆனால், “சாலையில் கவனமாக வண்டி ஓட்டு” என்று கூறினால், சாந்தமும் அமைதியும் அங்கே நிலவும். அதை விடுத்து, சைக்கிளில் வந்து மோதியவன் சிறுவனாக இருந்தால், “பளார் பளார்” என்று நான்கு அறை விடுவோம்.

இதை உணர்த்தத்தான் கருப்பணசாமி சிலை வைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏதாவது ஒன்று என்றால் தாக்குவதுதான்.

ஆனால், இது போன்ற சந்தர்ப்பங்களில், நாம் என்ன செய்யவேண்டும்? துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணி, அந்த அருள் உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொண்டு, பின், அவர் அறியாமையிலிருந்து விடுபட்டு, பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா, என்று எங்கி தியானிக்க வேண்டும்.

ஏனென்றால், துருவ நட்சத்திரம் நஞ்சை வென்றது. உணர்வின் தன்மையை ஒளியாக்கும் திறன் பெற்றது. துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வை நுகர்வதால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம் உயிரில் பட்டு, இதனின் உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களில் கலக்கும் பொழுது, அரங்கநாதன்.

இதனின் உணர்வின் உணர்ச்சிகளை, ஒளி அலைகளாக மாற்றுகின்றது. துருவ நட்சத்திரம், இருண்ட உலகிலிருந்து நம்மை மீட்கின்றது.
நமக்குள் சிந்திக்கும் தன்மை வருகின்றது.
அதைத்தான் நாம் செய்ய வேண்டும்.
3. இன்றைய  பக்தி நிலை -- ஞானிகள் காட்டிய "மெய்வழி"(நாம் செல்ல வேண்டிய வழி)
பழனி கோவிலுக்குச் சென்றால் அங்கே, “இது அபிஷேக விபூதி” என்று ஏமாற்றுகின்றார்கள். "விபூதி" அபிஷேகத்திற்கு போகவில்லை என்று தெரிகின்றது.ஆனாலும், பரவாயில்லை பழனியாண்டவர் சன்னதிக்கு வந்து விட்டோம் என்று, விளம்பரத்தைப் பார்த்து வாங்குகின்றோம்.

பழனில் முருகனின் அருளைப் பெறலாம் என்று வருபவர்களை ஏமாற்றிக் கொண்டுதான் உள்ளார்கள். நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றோம்.
நாம் முருகன் ஆலயத்தில், நேரடியாகச் சென்று வணங்க தடை ஏதும் இல்லை. ஆனால், பழனி ஆலயத்திற்குச் சென்று, தன் கண் திருஷ்டி தீரவேண்டும் என்று, சிதறு தேங்காய் போடுவார்கள். இதில், சிதறு தேங்காய் எடுக்கும் உரிமை பெற்ற காண்ட்ராக்டர்கள் என்ன செய்வார்கள்?

தேங்காய் உடைக்க வருபவர்களிடம், இங்கேதான் உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில், வேறு ஒரு இடத்தில் உடைத்தால், வேறு காண்ட்ராக்டருக்குத்தான் போகும் என்று, அப்படிச் சொல்கின்றார்கள்.

சிதறு தேங்காய் உடைக்க வருபவர்கள், “நான் சாமிக்கு முன்னாடிதான் உடைப்பேன்” என்று சொன்னால் கூட, இந்தக் காண்ட்ராக்டர்கள் விடுவதில்லை. அவரை மறித்து, “இங்கே தேங்காயை உடை” என்று கட்டாயப்படுத்துவார்கள்.

“நம்மை தெய்வம் காக்கும்” என்று நினைக்கின்றோம் அல்லவா!
நாம் தெய்வத்தை வணங்கி வந்தோம் அல்லவா!
அந்த தெய்வம், இங்கே அவர்களுக்கு
நல்ல வழியைக் காட்ட வேண்டும் அல்லவா?
ஆசையின் நிலைகொண்டுதான் இதையெல்லாம் செய்கின்றனர்.

இதைத்தான், இராமாயணத்தில் என்ன சொல்கின்றார்கள்? வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்கு பிரம்மகுரு, என்று அதில் உணர்த்தியுள்ளார்கள்.

நாம் என்ன செய்கிறோம்? சிதறு தேங்காய் போட்டால், கடவுள் நமக்கு நல்லது செய்வார் என்று நம்புகின்றோம். அப்பொழுது, இது வசியம். அதைக் கவர்ந்து கொள்ளுகின்றோம்.

நுகர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் பிரம்மமாகின்றது.
நாம் எண்ணிய எண்ணம் அருந்ததி,
நமக்குள் பதிவாகி விடுகின்றது.
எப்படியும், கஷ்டப்பட்டாவது செய்தால்தான் நன்றாக இருக்கும். செய்யவில்லை என்றால், சாமி கோபித்துக் கொள்ளும் என்ற நிலைகளில் தான் போகின்றார்கள்.

சிதறு தேங்காயைப் போட்டால், காண்ட்ராக்டர் எடுத்து விற்றுக் கொள்கிறார். இதே போன்று, பக்தர்கள் கோவிலுக்கு சேவலையும் நேர்த்திக்கடனாகக் கொண்டு போய் விடுகின்றார்கள். கோவிலில் கொண்டு போய் கோழியையோ, சேவலையோ விட்டால், அவைகள் பத்து நாளைக்கு பட்டினி இருக்கும்.
            
“சேவற்கொடியோனே” என்று சொன்னால், நாளை வரக்கூடிய நிலைகளை, தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றது. ஆறாவது அறிவு.
இதற்குத்தான், முருகனை “சேவற்கொடியோனே” என்று ஞானிகள் அழைத்தார்கள். காலையில் சேவல் கூவுகின்றது. விடியப் போவதைக் காட்டுகின்றது. இதைப்போன்று, ஆறாவது அறிவு பெற்றவர்கள், உண்மையின் உணர்வை அறியக்கூடியவர் என்று, “சேவற்கொடியோனே” என்ற தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

ஆனால், சேவலை நேர்த்திக்கடன் கொடுக்கிறேன் என்று சொல்லி, தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு, காண்ட்ராக்டர் எடுத்துச் சென்று, சேவல் கொல்லப்படும் வரையிலும், அது இரண வேதனை அடைகின்றது.

சேவலை சாமிக்கு அர்ப்பணித்து, காண்ட்ராக்டர் கையில் கொண்டு போய்க் கொடுத்து, சேவலைப் பத்து நாளைக்கு பட்டினியாகப் போடும்பொழுது, சேவல் இவருடைய உணர்வை நினைத்தால், சேவலின் ஜீவன் என்ன பண்ணும்? “பாவி, என்னைப் பட்டினி போட்டுக் கொல்கிறானே? என்று எண்ணும்.

சேவல்களை ஏலம் போடுவதற்கு முன்னால், அவைகள் படும் அவஸ்தையைப் பார்த்தால், நமக்கு மிகவும் வேதனையாக இருக்கும். சேவலை முருகனுக்கு வேண்டி, சும்மா பறக்க விட்டு விட்டுச் சென்றால் கூட, யாராவது பிடித்துக் கொண்டு சென்று விடுவார்கள். தொந்தரவு இல்லை.

சேவல் கொடி கட்டியிருக்கும் இடத்திலேயே, சேவலைப் போட வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
நம்முடைய ஆசையின் நிமித்தம்
நம்முடைய அறிவை இழந்து, என்ன செய்கின்றோம்?
அருள் ஒளியை நமக்குள் கூட்டி,
இருளை நீக்கி உண்மையின் உணர்வை ஊட்டும்,
நமது ஆறாவது அறிவைத் தெளிவாக்கும் ஞானஸ்தானத்தையே, சூனியமாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

மனிதரை அறியாமையிலிருந்து விடுபடச் செய்து, உண்மையை அறிந்துணர்ந்து, தெளிந்து வாழச் செய்யும் நிலைக்கே ஆலயங்கள் ஞானிகளால் உருவாக்கப்பட்டன.

ஆகவே, இதனின் உண்மைளை அறிந்த நாம் ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் பொழுது, கனியின் சுவையின் இனிமை, என் சொல்லிலும், செயலிலும் நான் பெற வேண்டும், மலரைப் போன்ற மணம் நாம் பெற வேண்டும், என்று எண்ண வேண்டும்.

தெய்வச் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளைக் காணும் பொழுது, “தங்கம் போன்று மனம் மங்காத நிலை” நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இந்த ஆலயம் வருவோர் அனைவரும், இதன் நிலைகள் பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரது குடும்பங்களிலும், அருள் சக்தி படரவேண்டும். அவர்களது குடும்பங்களில் உள்ள அனைவரும் தெளிந்த ஞானமும், மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும், என்று எண்ணுதல் வேண்டும்.

இதன் நிலைகள் கொண்டு, நம்முள்ளும் அருள் ஞான சக்தி பெருகுகின்றது. நமது வாழ்க்கையும், அருள் ஞான வாழ்க்கையாக அமைகின்றது.

ஆலயங்களுக்குச் சென்றால், இப்படித்தான் ஞானிகள் காட்டிய வழியில் எண்ண வேண்டும்எமது அருளாசிகள்.

December 19, 2012

தியானப் பயிற்சியும் பலன்களும்

ஞானகுரு:      
நான் சக்தி கொடுக்கிறேன்,  நீங்கள் பயிற்சி கொண்டு அதை எடுக்க வேண்டும். உங்கள் எண்ணம் எப்படியோ.,  என்னுடைய குறை அல்ல. நான் எப்படிச் செய்ய முடியும்,  
உங்களுக்காக நான் சாப்பிட்டால், என் பசிதான் தீரும்., 
நீங்கள் மீண்டு கரை ஏற வேண்டியது 
உங்கள் தன் பலம் கொண்டு.

பயிற்சி எது:    
நமக்கு எது பயிற்சி?  நமக்குள் என்ன நடக்கிறது என்பதையும்,  எது நம்மை மாற்றுகிறது என்பதையும்,  இவ்விதம் நம்மை நாமே அறிந்துஎப்படி வாழ வேண்டும் என்பதையும் அறிந்து உணர்ந்து, அருள்வழியில், குரு காட்டிய வழியில் "நடப்பதுதான் பயிற்சி".

உயிரணு பூமிக்கு வந்து சேர்ந்ததும், தாவர இனச் சத்தைக் கவர்ந்து கருவாகி, பல கோடி சரீரங்கள் எடுத்தபின், மனிதனாகப் பிறப்பதற்குரிய அனைத்து உணர்வுகளின் தன்மைகளும் உயிரான்மாவில் இணைந்ததும், அவ்வுயிரணு அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் பொழுது, மனித உடலைப் பெறக்கூடிய தன்மை பெறுகின்றது. அப்பொழுது, பூமியில் நாம் மனிதனாகப் பிறக்கின்றோம்.

ஆக உயிருடன் ஒன்றி, இந்த மனித உடலை அல்லது உயிருடன் கூடிய இம்மனித உடலை இந்த உயிர், தான் முன்னதாகவே நுகர்ந்தெடுத்து, இணைத்துக் கொண்ட உணர்வுகளின் தன்மைக்கொப்ப உடலை அமைத்துக் கொள்கின்றது.

இம்மனிதப் பிறவியில் இந்த உடலை எடுத்து வந்த உயிரணு, சூரியனிலிருந்து வந்து, அதன் ஒரு பகுதியாக, அதன் ஓர் அங்கமாக, இந்த பூமியில் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆனால், உடல், இந்த பூமியில் பரமாத்மாவில் படர்ந்துள்ள உணர்வுகளின் உறைவிடமாக அங்கமாக, அதன் உணர்வுகளுக்கொப்ப இந்த உடல் உயிர் உருவாக்கும் தன்மையில் உருவாகி, பூமியில் உலா வருகின்றது.

ஆக, உயிர் சந்தர்ப்பவசத்தால்  உடலை விட்டுப் பிரியும் நேரம்,  உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் கலந்து உணர்வுக்கு ஒப்ப மறு உடல் பெறுகின்றது. உணர்வுகள் அழிவதில்லைஉணர்வுகள் மாறிக்கொண்டேதான் உள்ளது.

ஆனால். உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம். அதை அறிந்து,  புரிந்துஉணர்ந்து, முதல் பாடமாக நமக்குள்  பதிய வைத்துக் கொண்டால்தான், மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.

பரிணாம வளர்ச்சியில் உணர்வுகளின் நுகர்வால்உடல்கள் மாறி மாறிமனித உடல் பெறும் இந்த உணர்வுகள் இம்மனித உடல் அழியும்பொழுது,  ஜீவன் பெற்று, ஜீவ அணுக்களாக இருக்கின்றது.

அப்படி இருந்தாலும்,  ஜீவன் பெறமுடியாத,  ஆனால் ஜீவன் பெற்று உடலாகும் தகுதியான அத்தனை உணர்வுகளும், உயிரணுக்களாகவோ அல்லது மாறுபட்ட நிலைகளிலோ,  இப்பூமியின் தன்மையில் பரமாத்மாவாகவும்,  சூரியனின் காந்தப் புலனில் கவரப்பட்டால், அது எடுத்துச் செல்லும் நிலைக்கும்,சுழன்று கொண்டுதான் உள்ளது.

அருள் ஞானிகளின் உணர்வுகள், மற்றும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் தவிர,  ஏனைய உணர்வுகள் அனைத்தும் இருளானவைகள்.  அதன் செயலாக்கங்களும் இருளானவைகள்.

இவையனைத்தும் சிவன் இராத்திரி நிகழ்வுக்கும்,
மகா சிவன் இராத்திரி என்ற நிலைகளுக்கு மட்டுமே பயன்பட்டும்,
மற்றும் இம்மண்ணுலகில் உயிரணுக்கள் உடல் பெறவும்,
ஜீவராசிகளாகி,  மனிதனாகி வரும் நிலைக்குத்தான்,
இதுவரை பயன்பட்டு வந்துள்ளன.

இன்று நாம் மனிதன் என்ற நிலை பெற்று இருந்தாலும், (பரிணாம வளர்ச்சி என்ற நிலையில்) மீண்டும், மீண்டும், இப்பூமியில் சுழன்று கொண்டே இருக்க வேண்டுமா?

அப்படி சுழன்று கொண்டு, இங்கே இருக்கும் இருளான உணர்வுகளையே நுகர்ந்து,  அதற்குரிய உடல்களைப் பெற்றும்ந்த பூமிக்குள்ளேயே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா?  என்பதைச் சிந்திக்க வேண்டும்.
                                                                                            
நாம் எண்ணியவற்றைநாம் நுகர்ந்ததை நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றதுநமது உயிர் எலெக்ட்ரிக்,  நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிரில் மோதி,எலெக்ட்ரானிக்காக இயங்குகின்றது. 

அதாவது, நாம் நுகர்ந்த உணர்வுகள்,  நம்முள் எலெக்ட்ரிக்,  எலெக்ட்ரானிக் என்ற நிலையில் நம்உடலை இயக்குகின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இதைக் கேட்டுணரும் அன்பர்கள், தங்களது வாழ்க்கையில் தமக்குள் அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட,  துருவ தியானம்,  ஆத்ம சுத்தி,  இரவு தியானம் ஆகியவற்றை, கண்டிப்பாகக்கடைப்பிடிக்க வேண்டும். எமது அருளாசிகள்.
ஆத்ம சுத்தி
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று,
புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும்.
பின், தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

அடுத்துஇந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், ஞானகுரு,  சற்குரு,  சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும். 

பின்ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள
அருள் ஞானிகளின் உணர்வுகளை எண்ணி ஏங்கி,
கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று
வலுவாக எண்ணி ஏங்க வேண்டும். 
இவ்வாறு, வலுக்கூட்டிய  இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவி செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால்,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து,
உயிர் வழி நுகர வேண்டும்.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி,ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து என் இரத்த நாளங்களில் கலந்துஎன் உடலில் உள்ள ஜீவ ஆன்மா,  ஜீவ அணுக்கள்,  என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று  எண்ணி,
நம் உடலுக்குள்,
அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.
இதுவே ஆத்ம சுத்தி.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணர வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு “ஆழமாக” பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெறமுடியும்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் படரவிடும் பொழுது, நம் உடலுக்குள் எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளிச் சுடராக மாற்றிடும் திறன் பெற்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், நாம் பெறவேண்டும் என்று, நாம் ஏங்கி ஆசைப்பட்டு, காலை பிரம்ம முகூர்த்த வேளையில் நாம் அறிவின் ஞானம் கொண்டு, தியானிக்க வேண்டும்.
பிரம்மம் என்றால் உருவாக்குதல்.
முகூர்த்தம் என்றால், இணைத்தல்.

பிரம்ம முகூர்த்த வேளை என்பது, அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை. அந்த நேரத்தில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், பூமியில் நேரடியாகப் பரவும் நேரம். அந்த நேரத்தில், தியானித்து, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம்முள் பிரம்மமாக்க வேண்டும்.

ஆறாவது அறிவு என்ற நம் உடலில் விளைந்த உணர்வினை எண்ணி, அதன் துணை கொண்டு,உடலுக்குள் அந்த அருள் உணர்வுகளை இயக்கச் செய்யவேண்டும். 
இதைத்தான், “ஓம்” என்ற பிரணவத்தை, “சிவனுக்கே ஓதினான் முருகன்” என்றார்கள் ஞானிகள்.

நட்சத்திரத் துகள்கள் மின்னலாகி, பூமியில் படர்ந்துவிட்டால்,  காற்றில் இருப்பதை புவியின் ஈர்ப்பால் கவர்ந்து,  வைரங்கள்  விளைகின்றது.
அதுபோல் இந்த உடலை உருவாக்கிய அணுக்களும்  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைக் கவர்ந்து உயிருடன் இணைத்து தியானிக்கும்பொழுதுஅவை அனைத்தும் இந்த உயிரைப் போலவே சிறுகச் சிறுக மாறி ஒளியாக மாறிவிடும். 

இனியாகிலும் உடல் பற்று கொள்ளாமல், உயிர் மீது பற்று கொண்டு, உயிருடன் ஒன்றுதல்தான், உண்மையில் செயல்படவேண்டிய இயக்கம்  என்று அறிதல் வேண்டும். எமது அருளாசிகள்.
தியானத்தின் பலன்கள்
உயிரைக் கடவுளாக மதித்து,  உடலை கோவிலாக மதித்து,  உணர்வுகளை தெய்வமாக மதித்து துருவ தியானம்,  ஆத்ம சுத்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

  • சிந்திக்கும் தன்மைகளும்,  தெளிவான நிலைகளும் நமக்குள் வருகின்றன.
  • நமது ஆன்மா (உணர்வுகள்) தூய்மை அடைகிறது.
  • கண் கவர்ந்து பதிய வைத்த தீமைகளைஅதே கண் கொண்டு அகற்றும் திறன் நாம் பெறுகின்றோம்.
  • தீமைகள் உட்புகாது தடுக்க முடிகின்றது.
  • மன வலிமைஉடல் நலம்தொழில் வளம் பெருகுகின்றது.
  • துருவ நட்சத்திரத்தின் பேரருள்பேரொளி உணர்வுகள் நமக்குள் புயலென பெருகி,  ஜீவ அணுக்களாகி,  மற்ற தீய உணர்வுகளை வெளியேற்றி,   இரத்த நாளங்களில் ஜீவ அணுக்களாகி,  துருவ நட்சத்திரத்தின் பேரருள்,  பேரொளி உணர்வுகள்,  நமது  எலும்புகளுக்குள் (ஊழ்வினையில்) அருள் வித்துகளாகி,  நமது உயிராத்மாவின் செயலாக்கமாகி, நம்மை மாற்றிக் கொண்டே இருக்கும்.
  • துருவ நட்சத்திரத்தின் பேரருள்  பேரொளியின், காந்தப் பாதுகாப்பு வட்டத்திற்குள் செயல்படும் நிலை பெறுவோம்.

  • கணவன் மனைவி இணைந்து எடுக்கும் துருவ தியானம்,  நம் ஆத்மாவை வைரமாக ஜொலிக்க வைத்திடும். பரிணாம வளர்சியான ரிஷி நிலை பெறும் தகுதியை அடைகின்றோம்.
  • நமக்கு தீமை புரிபவர்களது உயிரையும் கடவுளாக மதித்து,  அந்த உயிரில் தீமை புகாது தடுத்திடும் நிலையை உருவாக்குகின்றோம். அதனால் அவர்களையும் காக்கமுடியும்;  அவர்கள் படும் துயரம் நம்முள் புகாமலும் தடுக்கமுடியும்.
  • அறியாது சேர்ந்த சாப,  பாப,  தீய வினைகள் வலு இழந்து விடுகின்றன.
  • மெய் பொருள் காணும் திறனும், மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியும் பெறுகின்றோம்.
 
ஒளியின் சரீரம்
  • அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகள், நம் சிந்தனைக்குள் இருக்க வேண்டும்.
  • ஞான குருவின் உபதேசங்களை நூல்கள் கேசட் மூலம் அறிந்து உணர்ந்து அதை நம் நினைவிற்குள் கொண்டு வர வேண்டும்.
  • மகிழ்வான உணர்வுகளை, குருவிற்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும்.
  • நம் எண்ணம்,  சொல்,  செயல் வெளிப்படும் பொழுது,  இவற்றில்,  துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நாம் கண்டிப்பாக நுகர்ந்து,  ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முன்னிலைப்படுத்த வேண்டும்.
  • மற்றவர்களின் எண்ணங்கள்,  சொல்,  செயல்களால் நாம் நுகரும், எத்தகைய உணர்வுகளுக்கும் முன்பாக,  துருவ நட்சத்திரத்தின் பேரருள்பேரொளியின் உணர்வுகளை உடனுக்குடன் நுகர்ந்துஅவற்றை உணர்ந்து முன்னிலைப்படுத்த வேண்டும். சந்தர்ப்பங்கள் கிடைக்கும் பொழுதெல்லாம், இதை செய்துகொள்ள வேண்டும். இதை ஒரு பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
  • நாம் ஒவ்வொருவரும் இரவு தூங்கச் செல்லும் முன்,  அரை மணி நேரமாவது,  துருவ நட்சத்திரத்தை எண்ணி,  துருவ நட்சத்திரத்தின் பேரருள்,  பேரொளி என் உடல் முழுவதும் படர்ந்துஎன் உடலில் உள்ள ஜீவ அணுக்கள்,  ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை நமக்குள் தியானித்து, இணைக்க வேண்டும்.
  • உயிருடன் இணைந்த உணர்வுகளை,  குரு காட்டிய வழியில்,  குருவின் துணை கொண்டு ஒளியின் சரீரமாக மாற்றும் சந்தர்ப்பங்களை உணர்ந்து, அதை கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை சதா முன்நிலைப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். 
  • மருத்துவர் கொடுக்கும் மருந்தினை நாம் கட்டாயமாக்கி உட்கொள்வது போன்றுவிஞ்ஞானிகள் உயிரினத்தின் செல்களை இணைக்கும் நிலையில் (இரு உயிரணுக்களை) கட்டாயப்படுத்தி,  ஓர் புது ரூபத்தை மாற்றி உற்பத்தி செய்வதுபோல்,  கட்டாயப்படுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை இணைக்க வேண்டும்.
  • துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வை,  நாம் கவர்ந்து,  நமக்குள் ஒளி சுடராக மாற்றும் நிலையைத்தான்,  நமது இன்றைய செயல்களாக அமைத்து,  நாளைய சரீரமாக நமது உயிராத்மாவை ஒளி சரீரம் பெறச் செய்ய வேண்டும்.