ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2020

எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ... அந்தத் தெய்வமாகவே அவன் ஆக முடியும்...! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஒவ்வொரு செயலிலும் அதன் வளர்ப்பின் முதிர்வு நிலை (பலன்) எவ்வாறு தெரிகின்றதோ... அதைப் போன்ற மனிதன் பெறும் ஒளி சக்தியைக் கொண்டு...
1.இவ்வெண்ணத்தின் உயர் ஞானத்தால்
2.எதனையும் தெய்வம் நமக்குத் தரும்...! என்ற மனிதனின் உயர்வு குணமாய்
3.எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ... அத்தெய்வமாய் மனித நிலை ஆக முடியும்.

மனித உணர்வின் எண்ணத்தில் இப்புவியில் வளரவல்ல ஒவ்வொரு தொடரிலும் தன் ஞானத்தைச் செலுத்தி அதன் தொடர் வளர்ப்பின் செயலைப் பார்த்தால்... செயலின் முதிர்வின் தொடர் நிலை வளர்ப்பு முற்றலை அறியலாம்.

நீரின் சுவையே... ஒன்றிலிருந்து வளர்ப்பின் தொடர் பெற்றுப் பிரியும் பொழுது... “உராயும் தன்மையில்” தொடர் நிலை அச்சுவையுடன் ஒட்டி அச்சுவை சக்தியின் ஆவியாகி... அதே தொடரின் பிறிதொன்றில் அந்நீர் ஆவித் தன்மை திடம் கொண்டு... செயல் மோதலின் சுழற்சியில் பல செயல்கள் மாறி மாறி வளர்கின்றன. (நாம் சமைக்கும் நிலையிலிருந்து இயற்கையில் உருவாகும் அனைத்துமே இதற்கு உதாரணம் தான்)

எல்லாச் செயலுக்கும்... காற்று மண்டலத் தொடரில் இந்நீர் ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு மீண்டும் அதிலிருந்து பிரிக்கப்படும் தொடர் நிலையில் “கனம் கொள்ளும் செயல் வளர்ச்சி தான்..!”

“நீரான ஆதி சக்தியின் சக்தித் தொடர்” இஜ்ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து இச்சரீரத்தை இயக்கும் உயிர் பிரிவதற்குள்ளேயே... இச்சரீரத்தின் ஜீவ ஜெனிப்பில் நீர் சக்தியின் வளர்ப்பின் சத்தாய் இச்சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்... இஜ்ஜீவ நீரின் உணவைப் பெற்று வாழும் இதன் உணர்வின் எண்ணத்திலேயே உயர் நிலைபெற... நம் செயல் இருக்க வேண்டும்.

எப்படி நீரை ஊற்றி விதைப் பயிரில் அதன் பலன் மகசூலைத் தாவரம் தருகின்றது...?

எப்படி நீர் சக்தியின் தொடர்பில் பூமியில் கனி வளங்கள் அதனதன் வளர்ச்சிக்கொப்ப முற்றிய நிலை பாறையே தன் வளர்ப்பின் முற்றலாய் வைரத்தை வளர்க்கின்றது...?

மண் படிவங்கள் எத்தொடரில் எவ் உலோக வித்து வளர்ந்தாலும் அதன் முற்றலில் படிவங்களாக அதது எடுக்கும் நீர் சக்தியில் தங்கமே மண்ணுடன் கலந்த நிலையும் படிப்படியாகக் குவிந்த தன்மையில் அடர்த்தியாகத் தன் இனத்தைப் பெருக்கும் வளர்ப்பில் அதனதன் இனத் தொடரில் முதிர்வுத் தன்மை பெறுகிறது.

அதனின் தொடர் வளர்ப்பில் கனி வளர்ச்சிக்கு அடுத்த நிலை வளர்ப்பான... மண் வளத்தின் ஆவி அலையில் தாவர இன வளர்ப்பில்... புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, இப்படி வளர்ப்பின் முதிர்வுத் தொடர் வரிசையாக வருகின்றது.

இவை ஒவ்வொன்றிலுமே பல மாற்றத்தின் சுழற்சி ஓட்டம் அந்தந்தப் பூமியில் அது எடுக்கும் அலைத் தொடர்புக்கொப்ப ஆதி சக்தியுடன் ஜீவ சக்தியாய் நீர் சக்தியில் சுழற்சி ஓட்டம் சுழலும் முதிர்வில் மனித உரு வருகின்றது.

மனிதனான பின் அறியும் ஞானத்தின் உயர் ஞானப் பகுத்தறிவில் ஜீவநீர் இச்சரீரத்திலேயே முதிர்வின் தொடர் பெற்ற மனிதக்கரு உரு சொல் செயல் எல்லா நிலைகளையும் பெற்ற தன்மையினால் இத்தன்மைக்கடுத்த உயர் செயலுக்கு எண்ணத்தை உயர் காந்த மின் அணுக்களைக் கவரும் ஆற்றல் பெறுகின்றது.

ஆகவே நீருடன் கூடிய இச்சரீரத்தின்
1.ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையுமே வீரிய ஒளி பெறச் செய்ய...
2.எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தி வலுக் கூட்டி
3.எவ்வுணர்வின் அலையும் இச்சரீர இயக்கத்தில் வந்து மோதாமல்
4.இச்சரீர உணர்வின் அலை மட்டும் வீரியத் தன்மை பெற
5.எண்ணத்தின் செயலைக் கொண்டு உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வலுக் கூட்ட வேண்டும்.

அத்தகைய வலுக்கூட்டிக் கொண்ட... வீரிய சக்தி பெற்ற உயர் காந்த வலு ஆத்மாவை... இப்பூமி இயக்கத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும்... வார்த்தையோடும்... எந்த எண்ண உணர்வும் அது பாதிக்காது.

இவ்வாத்மாவின் வளர்ப்பும் இச்சரீர ஜீவ காலத்திலேயே ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ணத்தில் ஒளி சக்தியை ரிஷி சக்தியின் சக்தித் தொடர்புடன் வலுக் கூட்டும் செயலுடனே செயல்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.

1.இப்பூமியின் பிடிப்பிலிருந்தும்... வேறு எப்பூமிப் பிடிப்பிலும் சிக்காமலும்
2.எப்பூமியின் எம்மண்டலத்தின் தொடர்பையும் அறியும் வலுவையும் கூட்டி...
3.கூட்டப் பெற்ற வலுவின் செயலை... இச்சரீர இயக்கத்தின் தொடர்பில்
4.புதிய நிலையை ஜீவப் படைப்பில் படைக்கும் வழித் தொடருக்கு ஞானத்தைச் செலுத்திட வேண்டும்.

அத்தகைய முதிர்வை மனிதனால் தான் படைக்க முடியும்.

அன்று சித்தர்கள்... ரிஷிகள் எழுதிய காவியத்தில்...
1.மனித உருவம் கொண்ட தெய்வத்தைக் காட்டி
2.அத்தெய்வத்திற்கு நெற்றியில் கண்ணும் பல கைகளும்
3.ஒரு பாதி பெண்ணாகவும் மறு பாதி ஆணாகவும் காட்டிய தன்மையின் உள் அர்த்தங்கள் பல உண்டு.

ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் அறிந்து உயர்வு நிலைக்குச் செயல் கொள்ளும் மார்க்கத்தில்... காற்று மண்டலத்தில் தன் வளர்ப்பின் உயர்வை அறியும் ஞானத்திற்குப் பல சக்திகளை சரீர ஜீவிதத்தில் ஒளி பெற்றுப் பல நினைவுகளை அறியலாம்.

நம்மைக் காக்க வேண்டும்... என்று “நம் தாய் ஊழ்வினையாகப் பதிவு செய்த நல்ல உணர்வுகளை” நாம் எடுத்தே ஆக வேண்டும்


உதாரணமாக பள்ளிகளில் பாடங்கள் படிக்கின்றார்கள் குழந்தைகள். நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற ஏக்கமும் இருக்கின்றது.

ஆனால் பாடங்கள் தான் நினைத்தபடி வரவில்லை என்று
1.“எனக்கு ஞாபகம் இல்லையே...!” என்ற உணர்வினை
2.ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் அந்த உணர்வு “ஒரு வித்தாக” மாறுகின்றது.
3.பதிவாகவில்லை... பதிவாகவில்லை... பதிவாகவில்லை...! என்ற இந்த ராகம் தான் வரும்.

மீண்டும் எப்படிப் படித்தாலும் இதனுடன் கலந்து அந்த உணர்வு வரப்படும்போது... தன் நினைவை இந்த அலையுடன் கலந்து “நினைவற்றதாக மாற்றுகின்றது...”

அதை மாற்ற வேண்டும் என்றால் எந்த முறையைக் கையாள வேண்டும்...?

1.தன் தாயை எண்ண வேண்டும்...!
2.தாய் அன்பு கொண்டு நமக்குள் பதிவு செய்த அந்த தாயின் அன்புள்ளம் எனக்குள் பெருக வேண்டும்
3.அவர்கள் எனக்கு எந்த ஆசிர்வாதம் கொடுத்தாரோ அந்த ஆசியின் வழிப்படி கல்வியில் சிறந்தவனாக வர வேண்டும்
4.என் அன்னையின் அருள் என்றும் எனக்கு உறு துணையாக இருக்க வேண்டும்.     
5.கல்வியில் நான் உயர்ந்திருக்க வேண்டும் என்று இப்படி எண்ணினால்
6.சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை நிச்சயம் அகற்ற முடியும்.

ஏனென்றால் தாய் எப்போதுமே தன் குழந்தைகள் எல்லோரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டுமென்ற எண்ணத்தைத் தனக்குள் உருவாக்கி “ஊழ் வினை என்ற வித்தாக” நமக்குள் போட்டுள்ளது.

ஆனால் அதை நினைவு கொண்டு யாரும் எடுப்பதில்லை.

குழந்தைகள்... தன்னைத் திட்டியவர்களையும்... விளையாட்டுத்தனமாகப் பிறர் பேசும் தீமைகளையும்... தீமையான செயல்களையும் பதிவு செய்து... அதன் உணர்வின் நினைவாக அந்த எண்ணங்களைப் பெருக்கிக் கொள்வார்கள்.

பின்... இவர்கள் பாட நிலைகள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

ரோட்டிலே செல்லப்படும்போது ஒருவன் தீங்கான செயல்களைச் செய்கின்றான். இந்தக் குழந்தையோ நல்ல குழந்தை ஆனால் உயர்ந்த ஞானம் பெற்ற குழந்தை.

ஆனால் தீங்கான செயலைச் செயல்படுத்துவோரின் தாக்கும் உணர்ச்சியின் வேகம் வரப்படும்போது அன்பும் பரிவும் கொண்ட இந்தக் குழந்தை அதைப் பார்த்தபின் பயமும் பதட்டமும் அதற்கு வந்து விடுகின்றது. இது பதிவாகி விடுகின்றது.

அதற்கு அடுத்து... பள்ளிக்குச் சென்றபின் அதே பதட்ட நிலையில் இருக்கின்றது. அந்தச் சந்தர்ப்பத்திலிருந்து...
1.பாட நிலைகளைத் கவரும் போதெல்லாம்
2.அது இதனுடன் மோதும் போது... பய உணர்ச்சிகள் தோன்றி
3.நல்ல நினைவாற்றல் வராது சென்று விடுகின்றது... ஞாபக சக்தி குறைகின்றது.

அந்த ஞாபக சக்தி கூட வேண்டுமென்றால்... நான் (ஞானகுரு) உங்களுக்குள் உபதேசித்த உணர்வின் தன்மையையும் அம்மா அப்பா அருளாசியையும் நாங்கள் பெற வேண்டும் என்று குழந்தை எண்ணுதல் வேண்டும்.

தாய் அன்புள்ளம் கொண்டு... தனது குழந்தை கல்வியில் உயர்ந்த நிலை பெற வேண்டும்... உயர்ந்த ஞானம் பெற வேண்டும்...! என்று எண்ணி அது உடலில் உருவாகிய அருள் ஞானத்தைக் குழந்தை மேல் பாய்ச்சி வைத்துள்ளது.

தன் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்... என்ற எண்ணத்தை ஊட்டி அதை அவர்கள் வெளிப்படுத்திப் பதிவு செய்த நிலைகளும் குழந்தையிடம் உள்ளது.

ஆகவே குழந்தைகள் ஒரு அச்சுறுத்தும் உணர்வுகளைக் கேட்க நேர்ந்தால் உடனே...
1.ஈஸ்வரா...! என்று எண்ணியதை உருவாக்கும் உயிரைப் புருவ மத்தியில் நினைவில் கொண்டு
2.அம்மா அப்பா அருளால் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று
3.தன் அம்மாவை நினைத்தால்... இந்தச் சக்தியை எளிதில் பெற முடியும்

பெற்று விட்டால் யாரைக் கண்டு அஞ்சினோமோ அந்த உணர்வினை “தாய் அன்பும்... அதன் வழியில் யாம் உபதேசிக்கும் அருள் ஞானமும் கலந்து...” அச்சுறுத்தும் உணர்வுகள் விளையாது அதை அடக்கும்.

இது தான் கல்யாணராமன் என்பது.

இந்த வாழ்க்கையில் எத்தகைய கொடிய நிலைகள் பெற்றாலும் மேலே சொன்ன முறைப்படி நினைத்து அம்மா அப்பா அருளால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
1.தீமையின் செயலாக்கங்களை அது அடக்கி... அச்சுறுத்தும் உணர்வுகளை அடக்கி...
2.அந்த ஞானியின் உணர்வின் துணை கொண்டு மெய்ப் பொருள் காணும் அந்த வலிமையான நிலைகள் பெறச் செய்யும்.

April 29, 2020

இன்றைய மனிதர்களின் உண்மை நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

விஞ்ஞானத்தில் இன்று வரையிலும் இப்பூமியில் ஒலி அலைகளையும் ஒளிக் காட்சிகளையும் காற்றலையில் கலக்கவிட்டுப் பதிவு செய்கின்றார்கள்.

மேலும் இப்பூமிக்கும் மற்றக் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய... விஷமான அமிலத்தை (CHEMICALS) உலோகத்தில் செலுத்திப் பிற மண்டலங்களிலிருந்து இப்பூமியின் தொடர்பிற்கு வலுவாக்க... வளர்ச்சியுறும் உண்மை நிலை அறிய... விஞ்ஞான சாதனைகளைச் செயல்படுத்தவும்... மனிதனின் எண்ண உணர்வு செயல் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சரீர ஜெனிப்பில் சாதாரண வாழ்க்கை நிலையில் ஆயுட்காலம் அதது எடுக்கும் தன்மை கொண்டு எப்படியும் சராசரி அறுபதோ எழுபதோ எண்பதோ ஆண்டுகள் தான் இருக்கப் போகின்றது.

விஞ்ஞானத்தால்... பிற மண்டலங்களுக்குச் செல்லவும் அங்குள்ள உண்மை நிலையறியவும் கருவிகளின் நிலையால்
1.இன்றைய கருவியின் செயற்கைக்கு மின் காந்த அலையை
2.இயற்கையில் மனிதனின் உணர்வு எண்ணத்தை வளர்க்கவல்ல உயர்காந்த நுண்ணிய மின் அணுக்களை
விஞ்ஞானிகள் செலுத்தும் செயல் சாதனைக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் கிடைக்கப் பெற முடியாது...!

இன்று மனிதனால் பெறப்பட்டு வளரும் உயர் காந்த மின் அலையின் செயல்... இக்கோள்களில் (SATELLITES) செலுத்தப்பட்டு செயற்கையில் ஒலி பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் ஒளிப் படங்கள் வண்ண ஒளிப் படங்கள் ஒலி அலை வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றும் பல மின் ஒளிச் சாதனங்களுக்காகப் பிரித்து எடுக்கின்றனர்.

இவ்வாறு மின் காந்த அலைகளைப் பிரிப்பதினால் மனித எண்ண உணர்விற்கு நேரடியாகக் கிடைக்கப் பெற வேண்டிய... உயர் ஞான எண்ணத்தை அறியவல்ல... தன்னைத்தான் உணர்ந்து செயல்படச் செய்யும் இயற்கையான சக்திகளைப் பெற முடியாத நிலை உருவாகி விட்டது.

தனக்குள் உள்ள இறை சக்தியை.. எண்ணத்தின் உணர்வால் வலுவாக்கி வளரும் ஜீவித சரீரத்தை “இச்செயற்கை அலைகள்... சூழ்ந்து விட்டது...!

ஜீவ சரீரத்தில் ஜீவ சரீரமுடன் மனிதனுக்கு மனிதன் பேசப்படும் உறவு படுத்திக்கொள்ளும் உணர்வின் செயல் வளர்ப்பிற்கு...
1.வானொலியில் கேட்கப்படும் ஒலி அலைக்கும்
2.தொலைக் காட்சியில் காணும் ஒளி அலைக்கும்
3.இச்சரீரத்தின் உணர்வைச் செலுத்தும்பொழுது
4.அதே உணர்வைத்தான் இச்சரீரம் எடுக்க முடியும்.

செடிக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைத் தனக்குச் சத்தாக எடுத்து வளருகின்றது. அதுவே காய்ச்சிய நீரை... ஆற வைத்து ஊற்றினாலும் அச்செடிக்கு வேண்டிய ஜீவ சக்தி கிடைக்காது. அதனால் அத்தாவரம் வளர்வதில்லை.

அதைப் போன்று இச்சரீர உணர்விற்கு செயற்கை மின் காந்த ஒலியைக் கேட்கும் உணர்வினால் இச்சரீர ஜீவ ஆத்மாவானது...
1.தன் உயர்வு நிலைக்குத் தேவையான எண்ணத்தின் உணர்வு எடுக்கும் கவன நரம்பின் பொட்டின் பதிவிற்கு
2.உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி நிலை குன்றி விட்டது.

ஏனென்றால் எண்ணத்தின் உணர்வுகள் எவ்வலையை எடுக்கின்றதோ அதே நிலையைத்தான் இச்சரீர நிலைஇல் வளர்க்கும் நிலை உள்ளது.

இன்றைய மனித உணர்வின் எண்ணங்களே... செயற்கை அலையை அதிகமாகக் கேட்டு... பார்த்து... பழக்கப்படுத்தி வளர்த்துக் கொண்ட வலுவினால்... எதனையும் உணரும் பக்குவம் மாறி... இவ்வாத்மாவையே செயற்கை அலையுடன் செயல்படுத்தும் முறைக்கு மாறி விட்டது.

ஆகவே.. இவ்வாத்மாவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு அடகு வைக்கும் வாழ்க்கையையும்... தன்னைத்தான் உணராமல் பித்தனாக வாழும் மனிதச் செயல்களையும்... தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு மாற்றி ரிஷிகள் காட்டிய மெய்யை வளர்க்க வேண்டும்.

இப்பூமியின் மண் வளங்கள் அது எடுக்கும் அலை ஒன்று. அதே மண் வளத்தின் தொடர்பில் வளரும் தாவரம்... தன் உணவை எடுத்து வளர்ந்து பலன் தருகிறது. ஆனால் எண்ணமில்லாத உணர்வு... செயலுடன் அது வளருகின்றது.

மிருகத்தின் நிலையோ... தனக்கு வேண்டிய உணவைத் தேடவும் புசிக்கவும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறங்கவும் தன் உணர்வின் இச்சையில் தேவையை அறிந்து கொள்ளவும் தன் ஐந்தறிவைக் கொண்டு வாழ்கிறது.. வளர்கிறது.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இக்குறுகிய நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் பெருக்கத்தால் தன்னைத் தானே உணராத நிலைக்குச் சென்று செயற்கையின் பிடிப்பிலேயே சிக்குண்டு விட்டான்.

1.செயற்கை ஒலி அலைகளையும் தொலைக்காட்சி ஒளி அலைகளையும்
2.தன் எண்ணத்தின் உணர்வில் பதியவிடும் அலையினால்
3.மனிதனுக்குக் கிடைத்துள்ள ஆறறிவு பொக்கிஷமான பகுத்தறியும் உயர் ஞானத்தையே
4.தவற விடும் நிலைக்கு இன்று கொண்டு வந்து விட்டார்கள்.

இது தான் இன்றைய உண்மை நிலை...!

"ஊழ்வினை" என்று எலும்புக்குள் பதிவாகும் வித்தினைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்


ஒரு சமயம் காட்டிற்குள் செல்லும் போது (ஞானகுரு) ஒரு சிறு பூச்சி ஒன்று என்னைக் கடிக்கின்றது. அது கடித்தபின் எனக்கு மயக்கமே வருகின்றது.

குருநாதர் அதை விட்டுக் கடிக்கச் செய்கின்றார். என் உடல் முழுவதும் நஞ்சு பாய்கின்றது. அந்த விஷம் ஓடும்போது உடலில் ஒரு கருக்கல் போல்... அது இரத்த நாளங்களில் பட்டபின் இரத்த நாளங்களே கருப்பாகின்றது.

அப்பொழுது அதனின் உணர்வுகள் எவ்வாறு...? என்று எனக்குக் குருநாதர் காட்டுகின்றார்.

நீ இவ்வளவு பெரிய மனிதனாக ஆகியுள்ளாய். ஆனால் இதற்கு முன்னாடி இதைப் போன்ற பூச்சியாகவும் இருந்தாய். அந்தப் பூச்சியின் நிலைகளில் இருந்து தான் மீண்டாய்.

இப்பொழுது மீண்டும் அதே பூச்சி உன்னைக் கடிக்கும்போது உன் உணர்வின் நினைவாற்றல் அங்கே செல்கின்றது...?

அதனுடைய விஷம் படர்வதைப் பார். உன் கவன நரம்புகளைத் தாக்குவதைப் பார்... அங்கே தாக்குவதற்கு முன் நீ சிந்தித்துப் பார். ஆனால் இது உன் கவன நரம்பில் தாக்கிவிட்டால் உனது நினைவுகள் மறைந்துவிடும். நீ எங்கே செல்வாய்...? என்ற உணர்த்திக் காட்டுகின்றார்.

அந்த உணர்வலைகள் எனக்குள் படர்வதையும் என் நினைவாற்றல் முழுவதும்..
1.இந்தப் பூச்சி கடித்துவிட்டதே...
2.நான் மடிந்துவிடுவேனே...
3.இந்த உடலை விட்டுப் போய்விடுவேனே...! என்று
4.இந்த உணர்வுகள் தான் தோன்றுகின்றதே தவிர
5.தன்னைக் காக்கும் உணர்வுகள் வரவில்லை.

பரிணாம வளர்ச்சியில் பல கோடிச் சரீரங்களில் பூச்சியாக புழுவாக இருக்கப்படும்போது இன்று பார்க்கின்றோம். ஒரு பட்சி ஈயை விழுங்குகின்றது அதனைத் தன் இரையாக்கி கொள்கின்றது. ஆனால் ஈயின் உயிரோ பலியாகின்றது.

அதே சமயத்தில் பல்லியை ஒரு தேள் கொட்டுகின்றது. விஷத்தைப் பாய்ச்சுகின்றது. அது தசைகளை உணவாக உட்கொள்கின்றது.

இது போன்று பல கோடிச் சரீரங்களில் நீ எத்தனை இம்சைப் பட்டிருப்பாய்...? என்றார் குருநாதர்.

அதிலிருந்தெல்லாம் மீண்டிடும் நிலைகள் பெற்ற நீ.. மீண்டிடும் சக்தி பெற்றபின் உன்னால் ஏன் முடிவதில்லை...! ஒரு சிறு விஷம் கொண்ட அணு தான் இது...! ஆனால் கடித்தபின் அதனுடைய வலிமை உனக்கு எவ்வளவு பெரிய வேதனையாகின்றது.

உயர்ந்த ஞானங்கள் பெற்று உயர்ந்த நிலைகள் பெற்றதனால் அடுத்து விஷத்தை முறிக்கும் ஒரு மருந்தினை இதனுடன் இடப்படும்போது உனக்குள் அதைத் தடைப்படுத்துகின்றது.

ஆனாலும் அந்த விஷப் பூச்சி உன்னை கடித்ததல்லவா...!
1.அது கடித்தது உனக்குள் ஒரு வித்தாக ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.
2.மருந்தைக் கொண்டு புண்ணை ஆற்றிவிடலாம்.... இன்று நீ தப்பிவிட்டாய்.
3.ஆனாலும் இந்த விஷ அணுக்கள் ஊழ்வினையாகப் பதிவான பின் வித்தாகின்றது.

முதலிலே நீ நுகர்ந்த உணர்வுகள் ஓ... என்று இந்த உடலிலே அணுவாக மாறுகின்றது. மருந்தைக் கொடுத்து விஷத்தை நீக்கி நான் உன்னைக் காப்பாற்றுகின்றேன்.

1.கடித்த உணர்வின் தன்மை உன் எலும்புக்குள் அந்த விஷம் வித்தாக ஊன்றிவிடுகின்றது.
2.நீ நுகர்ந்ததோ ஓ என்று ஜீவ அணுவாக மாறுகின்றது
3.அந்த அணுவின் மலம் உன் உடலாக மாறுகின்றது.

நான் மருந்து கொடுத்து விட்டேன்... விஷத்தையும் முறித்துவிட்டேன்...! இதை நீ தெளிவாகத் தெரிந்து கொண்டாய்..
1.ஆனால் விஷத்தை உருவாக்கும் அந்த வித்து
2.உன் உடலுக்குள் ஊழ்வினையாக ஊன்றியுள்ளது.
3.இதை அடக்க முடியாது.

நிலத்திலே களைகளைப் பிடுங்குவது போல் மருந்தால் அந்த அணுக்களைக் கொன்றாலும் மீண்டும் அதை நினைவுபடுத்தினால் அந்த அணுக்கள் வளரத் தான் செய்யும். இதை நீ தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால்... இது போல் ஒவ்வொன்றும் தன் நினைவிற்கு வரவேண்டும்.

இந்தச் சந்தர்ப்பம் விஷம் என்று நீ அறிந்தது. இந்த உணர்வின் தன்மை பதிவானால் தான் அதே இனத்தின் தன்மை மீண்டும் வரப்படும்போது
1.இது தன் இனம் என்று கவர்ந்து... சுவாசித்து... உயிரிலே பட்டு...
2.இன்ன விஷம் கொண்டது என்பதனை நீ தெரிந்து கொள்ள உதவும்
3.மீண்டும் அத்தகைய விஷத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும்.

இத்தகைய அறிவில்லை என்றால் உனக்கு நினைவில்லை என்று எனக்குத் தெளிவாக உணர்த்துகின்றார் குருநாதர்.

April 28, 2020

பொட்டு வைக்கும் இடத்தில் “பருப்பு போன்று” சிறு அளவில் செயல்படும் கருவி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


நாம் மேல் நோக்கிப் பார்த்து எடுக்கின்ற சமமான உணர்வு கொண்டு வளர்க்கப்படும் எண்ணத்தின் உணர்வைப் புருவ மத்தியில் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நான்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அத்தகைய நுண்ணிய அலைகளைச் சுவாசித்து எடுக்கும் பொழுது நம் எண்ணங்கள் அனைத்தும் ரிஷிகளின் எண்ணமுடன் கலக்கின்றது.

ஆக… சப்தரிஷிகளினால் இன்று இப்பூமியில்… எப்பூமியிலிருந்து தான் வளர்ந்து வலுக்கூட்டி… இன்றும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக மனித எண்ணத்தின் பகுத்தறிவை வழி நடத்துகின்றனரோ… அவர்களின் எண்ணமுடன் நம் எண்ணத்தை செலுத்தி… அனுதினமும் தியானித்து அந்தச் சக்திகளை நாம் ஈர்க்க வேண்டும்.

அத்தகைய தியான ஒளி ஈர்ப்பினால்
1.இச்சரீரத்தை இயக்கவல்ல ஆத்மாவில்…
2.அன்று சித்தர்கள் காட்டிய ஞானக்கண் என்ற கவன நரம்பின் பொட்டுத் தன்மையின் மூலம்
3.நாம் எடுக்கும் சுவாசத்தால் எந்த ரிஷிகளின் அலையை எடுக்கின்றோமோ
4,அவ்வலையைச் சிறு மூளைக்குச் செலுத்தி
5.ஆத்மாவின் செயலுக்கு வலுத் தருகின்ற புருவத்தின் நடு மையத்தில் பொட்டில்
6.கவன நரம்பு செயல்படுகின்ற “பருப்பு போன்று… சிறு அளவில் செயல்படுகின்ற கருவி…”
7.இப்பூமியின் சமைப்புக்கு முன் நாம் எடுக்கின்ற நேரடி ஈர்ப்பால்
8.அதற்குகந்த எண்ணத்தின் வளர்ச்சியின் வலுவை அந்தக் காந்த நுண் அலைகள் மூலம் பெற முடியும்.

இயல்பாக… நம் கண்ணின் ஒளியில் எதிரில் காணும் பொருள்களை எல்லாம் சூரியனின் ஒளியோ மற்ற ஒளிகளோ உள்ள வெளிச்சத்தில் தான் கண் பார்த்துப் படம் எடுக்கின்றது.

ஆனால் இக்கவன நரம்பில் பொட்டின் பதிவு பெறும் காந்த நுண் அலையின் வளர்ச்சி கொண்ட வலுத் தன்மையினால் விழியை மூடிக் கொண்டே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் நிலைகளை
1.இருட்டிற்குள் எப்படி வெளிச்சத்தைக் காட்டி அதிலுள்ள உண்மைகளை இவ்விழி படமெடுத்து அறியும் இன்றைய நிலையை
2.வலுப்படுத்தப்பட்ட ரிஷிகளின் ஒளியிலிருந்து எடுக்கப்பட்ட காந்த நுண் அலைகள் கொண்டு
3.இச்சரீரத்தில் வளருகின்ற பல கோடி அணுக்களின் வீரியத் தன்மை உணர்வையும்
4.இப்பொட்டில் பதிவாக்கப்பட்ட ஒளித் தன்மை வளர்ச்சியினால்
5.விழியை மூடிக் கொண்டே பிரகாசத் தன்மையில் நாம் காணலாம்.

இதன் வலு வளர வளர… நாமிருக்கும் இடத்திலிருந்தே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி மண்டலத்தின் உருத்தன்மையும்… உருப்பெறும் மாற்றுத் தன்மைகளையும் அறிய முடியும்.

நடக்க இருக்கும் நிலைகளையும் முன் கூட்டியே அறிந்திட முடியும்…!

நாம் உயர்ந்த நிலையில் நினைப்பவர்களை… மற்றவர் குறையாகச் சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…?


உபதேசம் எல்லாம் கேட்போம்…! கேட்டுக் கொண்டிருக்கும்போது அந்த உயர்ந்த நிலைகளில் நாம் இருக்கின்றோம்…! என்கிற பொழுது என்ன அவர் பெரிய சாமியா…? என்று (ஞானகுருவை) யாராவது சொன்னால் உடனே அந்த உயர்ந்ததை விட்டுவிடுவோம்.

சாமிக்கு என்னய்யா தெரியும்…? என்று சொன்னால் உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்துவிடும். ஆனால் சமாளிக்கக்கூடிய திறன் வராது.  அவர்களுடைய உணர்வுகள் நம்மை மாற்றிவிடுகிறது.

அப்பொழுது என்ன செய்ய வேண்டும்…?

ஞானிகள் கொடுத்த உணர்வின் வலுக் கொண்டு…
1.அவர் அறியாமை நீங்க வேண்டும் என்று “மௌனம் சாதித்து…”
2.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர் பெற வேண்டும்.
3.உண்மையை நிச்சயம் அவர் உணர்வார்… உணரும் பருவம் வரும் என்ற
4.இந்த உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த உணர்வின் பலனை நீ சிக்கிரம் உணர்வாய்… பாரப்பா…! என்று இந்த உணர்வை அங்கே பதிவு செய்யுங்கள்.

அப்புறம் அப்படி…இப்படி.. என்பார்…! திரும்பித் திரும்பிப் பார்ப்பார்…! இந்த உணர்வுகள் உள்ளே போனவுடனே அவருக்குள் இருக்கக்கூடிய துன்பங்களை நிச்சயம் உணர்த்திக் காட்டும்.

1.நீ புரிந்து கொள்வாய்… புரிந்து கொள்ளக்கூடிய காலம் வரும்
2.நீ நிச்சயம் புரிவாய்… உன்னை நீ அறிவாய்
3.இந்த உலக இருளைப் போக்குவாய்…
4.உண்மை நிலையை நீ அறிவாய் என்று மட்டும் நீங்கள் சொல்லிவிடுங்கள்.

அப்படி இல்லாமல் அவரிடம் கடைசியில் எங்கள் சாமியைப் பற்றி இப்படிச் சொல்கிறாயா…? இரு நான் உன்னைப் பார்க்கின்றேன்…! என்று சொன்னால் அவர் உணர்வு தான் உங்களைப் பார்க்கும்.

இதை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால் அந்த உணர்வின் சக்தியை நாம் அறிந்திடல் வேண்டும்.

இதே மாதிரி வேறு சில நிலைகளையும் சொல்வார்கள். ஆனால் பற்று இருக்கும். நான்கு பேர் அப்படிச் சொன்னவுடனே அவர்கள் கோபம் குறைகளை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள்.

கடைசியில் போகும் பாதையை விட்டுவிட்டு என்ன சொல்வார்கள்..?

செ…! எங்கே பார்த்தாலும் அவன் இப்படிப் பேசுகிறான்.. இவன் இந்த மாதிரிப் பேசுகின்றான் என்று அந்தச் சண்டைகளை எல்லாம் கொண்டு வந்து வீட்டிலே விடுவார்கள்…  தொழிலிலேயும் விடுவார்கள்.

அப்புறம் நல்ல சிந்தனை செய்யும் நம் நிலையே மாறி நமக்கு நாமே தண்டனைக் கொடுக்கும் நிலை ஆகிவிடும்.

நம் உடல் உணவாக உட்கொண்ட உணவில் கலந்துள்ள நஞ்சினை மலமாக மாற்றி… நல்ல உணர்வை உடலாக மாற்றுகின்றது ஆறாவது அறிவின் மணம் கொண்டு…!

அத்தகைய தீமைகளை அகற்றிடும் நிலைகள் கொண்ட நாம் கேள்விப்பட்ட தீமையான நஞ்சினை நீக்கி… நல்ல உணர்வினைப் படைத்திடும் ஆற்றலைத் தான் நமக்குள் பெருக்க வேண்டும்.

அப்படிப் படைக்க வேண்டும் என்றால்…
1.அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்களுக்குள் இணைத்திட வேண்டும் என்பதற்குத்தான்
2.பல வட்டங்களை எழுப்பி இங்கே உபதேசிக்கின்றோம்.

உங்கள் உணர்வின் நினைவாற்றலை விண்ணிலே செலுத்தச் செய்து… அந்த மகரிஷிகளின் பால் இணைத்து உங்களுக்குள் அதைப் பெறும் தகுதியை தாவர இனங்களுக்கு உரம் கொடுப்பது போல் ஏற்படுத்துகின்றோம்.

ஆனால் நீங்கள் அதை நினைவு கொள்ள வேண்டும்

1.பிறருடைய குறைகள் எது வந்தாலும் அதை எண்ணத்தால் பதிவு செய்யக் கூடாது.
2.வந்தால்… உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்ற நினைவினை
3.அங்கே அதிகமாக்கி அந்தச் சித்திர புத்திரன் கணக்கைக் கூட்ட வேண்டும்.

April 27, 2020

“சப்தரிஷிகளின் நேரடி வலுவில்” நாம் இருந்தால் இன்றைய நச்சுக் காற்று நம்மைப் பாதிக்காது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இதுவரை சுட்டிக் காட்டிய எண்ணத்தின் உணர்வை “இறைவனுக்குள் நாம்... நமக்குள் இறைவன்...!” என்ற பகுத்தறிவில் மனிதனின் எண்ண உணர்வை இப்புவி ஈர்ப்பில் கர்ம காரிய வாழ்க்கையிலிருந்தே தன் எண்ணத்தின் ஞானத்தை “உயர் ஞானமாக்கிடல் வேண்டும்...”

இப்புவியில் தோன்றி இப்புவியிலுள்ள உயர் சத்தைத் தனதாக வளர்த்துக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

சூரிய மண்டலத்தின் சமைப்பில் தன் சப்த ஒளியைப் பாய்ச்சி... ஒளி கொண்ட வண்ண அமில உயிர் ஜீவ வித்து இப்பூமியில் மீண்டும் எண்ண உணர்வுடன் கூடிய செயல் தன்மைக்கு வளர்ப்பவர்களும் “அவர்கள் தான்...”

சப்தரிஷிகளின் செயல் தன்மையால் வளரும் நாம்... நம் எண்ணத்தின் உணர்வை விண்ணிலே செலுத்தி... அவர்கள் பால் நினைவைச் செலுத்தி அவ்வொளியின் நேரடி அலையை இஜ்ஜீவ ஆத்மாவில் வளரக்கூடிய உயிர் அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.

1.இறைவனுக்குள் நாம்... நமக்குள் இறைவன்...! என்ற நிலையில்
2.உயிர் தெய்வம் எப்படிச் செயல் கொள்கின்றதோ
3.அச்செயலின் தெய்வத்திற்கு... இவ்வுடலில் வளரும் ஒவ்வொரு அணுவையுமே
4.தெய்வமாக்கும் உயர் காந்த ஈர்ப்பில் செயல் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்து உதித்த நம் உயிர்... அவ்வுயிரின் உயிரணுக்களெல்லாம் உயிர் தெய்வ அணுக்களால் வளரும் காந்த ஜீவ வீரியத்தை... சப்தரிஷிகளால் பாதுகாத்து பக்குவப்படுத்தப்பட்ட சமைப்பின் தொடரை... நம் உணர்வின் எண்ணத்தை சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலந்து செயல்படும் பொழுது...
1.நாம் வேறல்ல...
2.அந்த ரிஷிகள் வேறல்ல...! என்ற நிலையை எய்துகின்றோம்.

அப்படிப்பட்ட ரிஷிகளின் தொடர்புடன் இஜ்ஜீவ ஆத்மா வலுப்பெறக் கூடிய வளர்ச்சியினால்... தினசரி வாழ்க்கையில் ஏற்படுகின்ற செயலில் எல்லாம்... தான் பெற்ற உயர் ஞானத்தால்... சமமான உணர்வு சமைப்பு கொண்ட நிலையில் செயல்படும் பொழுது... எத்தகைய தீய உணர்வுகளும் நம் சரீரத்தைப் பாதிக்காது.

இவ்வாறு நம் ஆத்மாவின் அலை வீரிய உணர்வு பெறும் பொழுது
1.இக்காற்றலையில் பலவாகக் கலந்துள்ள பல நிலை கொண்ட அமிலக் கூறுகளும்
2.பல உணர்வில் ஜீவன் பிரிந்த ஆவி ஆத்மாக்களின் அலையும்
3.இப்புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டுள்ள இன்றைய நச்சான காற்று மண்டல அலையும்
4.சப்தரிஷிகளின் நேரடி வலுவில் ஜெபம் கொள்ளும்போது
5.எந்த அலையும் நம் நிலையைப் பாதிக்காது.

மனித வாழ்க்கையில் இருந்தே...
1.புருவ மத்தியில் எடுக்கும் ஓ...ம் ஈஸ்வரா...! என்ற ஒளி நாதத்தின் சமைப்பால்
2.இச்சரீர வாழ்க்கையில் எந்நிலையயும் உணரும் பக்குவத்தையும்
3.முன் கூட்டி அறியும் செயலையும்
4.வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நடைமுறை நிலைகளுக்கும் தெளிவு காணும் பக்குவத்தையும்
5.முதலில் நாம் பெற வேண்டியது அவசியமாகும்...!

பல கோடி வருடங்களாய்... உயிர் பெற்று உருவாகி உருவாகி... உயர் தன்மை பெற்ற இம்மனித எண்ண உணர்வு சரீரத்தில்... ஒவ்வொரு உயிரும் ஒன்றைப் போன்று ஒன்றில்லாமல்... தான் வளர்ந்த வீரிய உணர்வின் அடுத்த நிலைக்குத் தனக்குள் உள்ள இறைவனை... தனக்குள் வளரும் இறை அணுக்களை... “இறைவனுக்கும் வீரியத் தன்மையாக...!” மகரிஷிகளின் அருள் ஒளியிலிருந்து எடுக்கும் ஜெபத்தால்... நிச்சயம் செயல் கொள்ள முடியும்.