ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2018

குழந்தைகளைப் பக்குவப்படுத்தி ஞான வழியில் எப்படி வளரக்க வேண்டும் என்று தெரிந்து கொளுங்கள்…!


உங்கள் குழந்தைகளை முதலில் அன்னை தந்தையரை வணங்கப் பழக்கிக் கொடுங்கள். வணங்கவில்லை என்றால் குழந்தையை அழைத்து அம்மாவையும் அப்பாவையும் ஏன் வணங்கவில்லை…? என்று கேளுங்கள்.

அந்த ஒழுக்கத்தின் நிலைகளைக் கற்றுக் கொடுத்து வீடு குடும்பம் என்ற நிலைகளில் ஒற்றுமையாக வளரவேண்டும் என்ற நல் போதனைகள் கொடுத்து அன்புடன் அரவணைத்துப் பழகுங்கள்

1.வீட்டையும் மற்றவர்களையும் மதிக்கச் செய்யும் நிலைகளைக் குழந்தை உள்ளங்களில் உருவாக்கச் செய்து
2.உலகிற்கே எடுத்துக்காட்டாக உலகையே காத்திடும் நிலையாக வர வேண்டும் என்று
3,குழந்தைகளுக்கு நீங்கள் அருளாசி வழங்குங்கள்.

அதே சமயத்தில் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க நிலைகளைப் பிறருக்கு எடுத்துக் கூறும் நிலையும் இந்த உலகைக் காத்திடும் நிலைகளும் அந்தக் குழந்தைகள் வளரும் காலத்தில் தான் உண்டு.

ஆகவே இனி வரும் காலத்தில் விஞ்ஞான அறிவால் பேரழிவு கொண்டு வரும் நிலையிலிருந்து தன்னைக் காத்திடும் சக்தியை அவர்கள் பெறவேண்டும் என்று ஒவ்வொரு நாளும் அவர்கள் அந்தச் சக்தியைப் பெறும் நிலையாகப் பிரார்த்திக்கச் செய்து அவர்கள் எண்ணத்தால் சக்தி பெறும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

அதைப் போல அந்தக் குழந்தைகளுக்கு நம்முடைய வீடு… நம்முடைய சகோதரர்கள்… நம் விவசாயம் என்ன…? நம் அருகில் உள்ள நண்பர்களிடம் எப்படிப் பண்புடன் பழக வேண்டும்…? என்று நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் குழந்தைகளிடம் சில சில குறைகள் ஏற்பட்டாலும் அதைக் கோபித்துச் சொல்லாத நிலைகள் கொண்டு அரவணைத்து பக்குவமாகச் சுட்டிக் காட்டும் நிலை வர வேண்டும்.

1.எத்தகைய பாட நிலைகளை நாம் போதித்தாலும் உணர்வின் தன்மை வெளிப்படுத்தினாலும்
2.குழந்தைகள் உள்ளங்களில் மற்றவர்கள் படும் இச்சைகள் இணைக்கப்படும் பொழுது சில நேரங்கள் குழந்தைகள் மாறினாலும்
3.ஏன்… இவ்வாறு செய்கிறாய்…? என்று நாம் கோபித்துச் சொல்லாதபடி
4,அதைச் சுட்டிக் காட்டி… “இப்படித்தான் இருக்க வேண்டும்…!” என்று சிறிது காலம் நாம் போதிப்போம் என்றால்
5,அந்தக் குழந்தைகளின் உள்ளங்களில் அது ஆழமாகப் பதிந்து
6.அதன் வழிகளில் நமக்கே நல் வழி காட்டும் நிலையாக நிச்சயம் வளரும்.

ஏனென்றால் நாம் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அடுத்து நாம் எண்ணியபடி படிப்பில் குழந்தைகள் முன்னேறி வரவில்லை என்றால் உடனே வேதனைப்படுகின்றோம்.

வேதனை உணர்வுடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் விளைந்த வேதனை உணர்வுகள் நம் குழந்தைகளிடத்தில் கடும் சொல்லாக ஊடுருவி அது வித்தாக ஆழமாகப் பதிந்துவிடுகின்றது.
1.நம்மைக் காணும் பொழுதெல்லாம் அஞ்சும் நிலை வருகின்றது. வெறுக்கும் நிலை வருகின்றது.
2.உயர்ந்த நிலைகளைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும் என்றாலும்
3.நாம் முதலிலே பாய்ச்சிய கோப உணர்வுகளால் அங்கே மறைக்கப்படுகின்றது
4.நமக்குள்ளும் அதே உணர்வை எடுக்கப்படும் பொழுது கோபிக்கும் நிலைகளே வருகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட்டு நாம் குழந்தைகளை மகரிஷிகள் காட்டிய மெய் வழியில் வளர்க்க வேண்டும்.
1.ஞானக் குழந்தைகளாக உருவாக்கி
2.உலகையே காத்திடும் “உத்தம ஞானிகளாக…” வளர்த்துப் பழக வேண்டும்.

ஞான உபதேசங்களை நமக்குள் ஆழமாகப் பதிவாக்க வேண்டிய முறையும் அதற்குண்டான சரியான சந்தர்ப்பமும்…!

கேள்வி:-
ஞானகுருவின் உபதேசத்தை ஒட்டுக் கேட்பது போல் கேட்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளீர்கள்.இன்று உபதேசங்களை ஒலி நாடாக்களிள் கேட்கும் போதும் நேரடியாக அமர்ந்து கேட்ட பலன் கிடைக்குமா.முடிந்த அளவு அமைதியான இடத்தில் அமர்ந்து தான் உபதேசம் கேட்க வேண்டுமா..?

பதில்:-

சாமிகள் தன் உபதேசத்தை ஒட்டுக் கேட்பது போல் ஏன் கேட்கச் சொல்கிறார் என்றால் நம் கவனம் முழுவதும் அவர் என்னவெல்லாம் சொல்கிறார் என்ற முழுமையான நினைவு அதாவது
1.அவரின் நினைவு தான் நமக்கு இருக்க வேண்டும்,
2.நம் நினைவு கொண்டு அவர் உபதேசத்தைக் கேட்டால் நம் உணர்வு கலந்தே பதிவாகும். அதனால் அந்த அளவுக்கு அதிலே மூலத்தை (உண்மைகளை) நாம் உணர்வது கடினம்.

ஆகையினால் மனம் மகிழ்ச்சியாகவோ அமைதியாக இருக்கும் பொழுதோ குரு உணர்வை ஆழமாகப் பதிவாக்க முடியாது. கேட்கலாம். ஆனால் அடுத்த கணம் மறைந்துவிடும்.

இன்னும் ஒரு தடவை இரண்டு தடவை கேட்கலாம் என்று ஆசைப்பட்டால் நல்ல தூக்கம் தான் வரும்.

நம் வாழ்க்கையில் நம் சந்தர்ப்பம் எப்பொழுதெல்லாம் நமக்குப் பிடிக்காத நிலைகளில் எதிர் நிலைகளாகச் சந்திக்கின்றோமோ
1.அந்த நேரங்களில் தான் அதிகமாகச் சாமிகளின் உபதேசத்தைப் பதிவாக்க வேண்டும்.
2.படிப்பதை விட முடிந்தால் அவருடைய audio உபதேசத்தைக் கேட்க வேண்டும்.
3.கொதிப்பின் நிலைகளில் இருக்கும் நம் உணர்வின் அழுத்தத்தை அப்படியே ஆற்றலாக்கி அவர் சொல்வதைக் கூர்மையாகக் கேட்க வேண்டும்.
4.விழுங்கிவிடுவது போல் அதை உள் வாங்க வேண்டும்.
5.அப்பொழுது தான் அது ஆழமாகப் பதிவாகும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல தடவை சாமிகளை அடித்து உதைத்துப் புரியாத பாஷைகள் மூலமாகத்தான் மெய் (குரு உணர்வை) அவருக்குக் கொடுத்தார்.

சாமி அடி வாங்கினார் என்று சாதாரணமாக நாம் சொல்கிறோம். நம்மை இப்படி யாராவது அடித்தால் சும்மா இருப்போமா..?! அடி வாங்கிய சாமிகளுக்கு குருநாதர் மேல் எவ்வளவு கோப்ம் இருக்கும்…? என்று எண்ணிப் பாருங்கள்.

அந்த உணர்வின் வலு கொண்டு தான் குரு உணர்வை சாமிகளும் பெற முடிந்தது. குருநாதரும் கொடுக்க முடிந்தது. நம்முடைய வாழ்க்கையில் பிரச்னைகளுக்குப் பஞ்சமில்லை.

1.பிரச்னை வரும் பொழுதெல்லாம் உபதேசம் கேட்டால்
2.குரு உணர்வுகள் நமக்குள் நன்கு பதிவாகும்.

என்னுடைய அனுபவம் நான் நல்ல உணர்வு கொண்டு சாமிகள் பேசிய 2 நிமிட உபதேசத்தை type செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் அரை மணி நேரம் என்றால் ஒருவர் மீது கோபம் வந்த பின் அதே 2 நிமிட உபதேசத்தை என்னால் பத்து நிமிடத்தில் type செய்ய முடிகிறது.
1.விஷம் தான் அண்டத்தின் இயக்கம்.
2.அந்த விஷத்தையே ஒளியாக மாற்றும் பருவம் தான்
3.மகரிஷிகள் காட்டிய வழியில் நாம் செல்லும் இந்த மெய் ஞானப் பாதை…!

கீழ்க்கண்ட LINK மூலம் சாமிகளின் AUDIO உபதேசங்களைக் கேட்கலாம்.

நாட்டுச் சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன...?


நாமெல்லாம் மகிழ்ந்திட வேண்டும் என்றும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னைத்தானே அர்ப்பணித்த தியாகிகள் நம் நாட்டில் நிறையப் பேர் உண்டு.

தன் குடும்பத்தையும் எண்ணாது தன் சகோதரர்கள் குடும்பத்தைக் காத்துக் கொள்வார்கள்... அவர்கள் இருக்க நமக்கு ஏன் பயம்...? என்ற நினைவு கொண்டு தான் அவர்கள் செயல்பட்டார்கள்.

1.நம் நாட்டு மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஏக்கத்துடன்
2.தன் உடலையே அர்ப்பணித்து அதனின் நிலைகள் கொண்டு உயிர் நீத்துச் சென்ற
3.அந்த ஆன்மாக்கள் அனைத்தும் இங்கே காற்றிலே தான் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இன்றைய நிலையில் சுதந்திர வேட்கையான உணர்வுகள் நம் நாட்டிலே அற்றுப் போயிருப்பதால் நமது நாடு... நமது மக்கள்... நமது சகோதரர்கள்...! என்று எண்ணிச் செயல்பட்ட அந்த உயிரான்மாக்கள்
1.மறு பிறவி எடுக்க முடியாத நிலைகளிலும்
2.இன்னொரு உடலுக்குள் புகுந்து
3.அவர்கள் கண்டுணர்ந்த நல் உணர்வுகளை வழி நடத்திடும் நிலையும் இல்லாதே போய் விட்டது.

அதே போன்று ஒருவருக்கொருவர் பிரித்தாளும் நிலைகளில் இருந்து மக்களைக் காத்திட வேண்டும் என்ற எண்ணங்களை ஓங்கி வளர்த்துக் கொண்ட மகாத்மா காந்திஜியின் எண்ணத்தையும் எடுக்க நாம் யாரும் துணியவில்லை.

“நாம் எல்லாம் ஓர் இனம்...! நம் நாட்டைக் காத்திட வேண்டும் என்ற நிலையில் உயிர் நீத்த பகத்சிங் போன்ற ஏனைய எத்தனையோ பேர் இருந்தாலும் அவர்களைப் போல எண்ணங்கள் கொண்டுள்ளோரும் இன்று யாரும் இல்லை.

அவர்களை ஒத்த எண்ணங்கள் இருந்திருந்தால் அந்த உயிர் நீத்தோரின் ஆன்மாக்கள் அவர்களை ஒத்த எண்ணத்தைக் கொண்ட உடலுக்குள் புகுந்து
1.அவர்கள் செய்த வீரிய உணர்வின் நிலைகளில்
2.நம் நாட்டைக் காத்திடும் உணர்வின் எண்ணங்கள் இன்று ஓங்கி வளர்ந்து இருக்கும்.
3.காலத்தால் அத்தகைய நிலைகள் வழித் தொடராதபடி ஆகிவிட்டது.

நாமெல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று நாட்டுப் பற்றுடன் உயிர் நீத்த அந்த உயிரான்மாக்கள் இன்றும் பூமியில் பிறவியற்ற நிலைகள் சுழன்று கொண்டு இருக்கின்றது.

இருப்பினும் இன்று விஞ்ஞான உலகில் அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலை வளர்த்துக் கொண்ட நிலையில் கதிரியக்கச் சக்திகளைப் பாய்ச்சப்படும் போது அந்தக் கதிரியக்கங்கள் நம்மைக் காத்திட்ட அந்த உயிராத்மாக்களின் உணர்வின் தன்மையை அழித்து விடுகின்றது.

ஆனால் அந்த உயிராத்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் புகுந்திருந்தால் மக்களைக் காத்திடும் வலு கொண்டு நல் வழி காட்டி இருக்கும். நம்மைச் சகோதர உணர்வுடன் வாழச் செய்து கொண்டிருக்கும்.

அப்படி இல்லாதபடி விஞ்ஞான அறிவால் அணுவைப் பிளந்து கதிரியக்கச் சக்தி கொண்டு
1.அதை வெடித்தவுடனே ஒரு நொடிக்குள் உடலை அழிப்பது போன்று
2.உயிராத்மாவுடன் சேர்த்துக் கொண்ட சிந்தித்துச் செயல்படும் நல்ல மனித உணர்வுகளையும் அழித்து விடுகின்றது.

அதனால் நம்மைக் காத்தருளிய அந்த உயிரான்மாக்கள் குறுகிய உணர்வு கொண்டு புழுவாகவும் பூச்சியாகவும் அடுத்துப் பிறக்கும் நிலை ஏற்படுகின்றது.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டு அவ்வாறு உயிர் நீத்த உயர்ந்த எண்ணம் கொண்ட அந்த உயிராத்மாக்கள் விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே அணு விசையால் தாக்கப்பட்டு விஷம் தோய்ந்து விட்டது.

ஏனென்றால் மெய் ஞானிகள் காட்டிய நெறிகளை நாம் கடைபிடிக்காததனால் இந்திய மண்ணில் தோன்றிய அத்தகைய உயர்ந்த ஆன்மாக்கள் புழுவாகவும் பூச்சியாகவும் பிறக்கும் நிலை உருவாகி விட்டது.

விஞ்ஞான அறிவால் தீமைகள் வந்தாலும் அதிலிருந்து நம்மை மீட்டிடும் உணர்வாக மெய் ஞானிகள் உணர்வைப் பற்றுடன் பற்றி உலக மக்கள் அனைவரும் மொழியால் மதத்தால் பிரித்தாளாதபடி “நாம் அனைவரும் சகோதரர்கள் என்றும்... ஆண்டவனின் பிள்ளைகள் என்றும்...! ஒன்றி வாழ்தல் வேண்டும்.

நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில்
1.மதமல்ல நமக்குச் சொந்தம்
2.இனமல்ல நமக்குச் சொந்தம்
3.மொழியல்ல நமக்குச் சொந்தம்
4.அனைத்து மக்களின் “நட்பு கொண்ட உணர்வே நமக்குச் சொந்தம்...! என்ற நிலைகள் கொண்டு
5.நாம் வாழ்ந்து வளர்ந்திட வேண்டும்.

உலகில் உள்ள ஏனைய மக்கள் உடல்களிலும் தீமைகளை உருவாக்கும் உணர்வுகள் விளையாது தீமைகளை அகற்றிடும் மெய்  ஞானிகளின் உணர்வுகள் உட்புகுந்து மனிதன் என்ற நிலையில் சிந்தித்துச் செயல்படும் அந்த உணர்வின் ஆற்றல்கள் வளர்ந்திட வேண்டும் என்ற நினைவினை ஒவ்வொருவரும் நமக்குள் ஆழமாகப் பதியச் செய்து கொள்ள வேண்டும்.

அதே சமயத்தில் தீமைகள் அணுகாதபடி நம்மைக் காத்திட்ட நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட
1.அந்தத் தியாகிகளின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற அனைத்து உயிரான்மாக்களையும்
2.நாம் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்
3.அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம்.

தீமையான உணர்வுகள் நம் யாரையும் அடிமைப்படுத்தாதபடி நல்ல உணர்வுகள் என்றுமே சீராக இயங்குபடியான சுதந்திரத்தை நாம் அனைவரும் பெறுவோம்.  

October 30, 2018

இந்தச் சதமற்ற உடலுக்காக வேதனைப்பட்டு “நீ பெற வேண்டிய நல்லதை என்றும் இழந்து விடாதே…!” என்றார் குருநாதர்


மனமே இனியாகிலும் மயங்காதே      
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!
                                                    
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ                                            மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!
                                                           
“நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ                                        இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமா… …?”
என்று இமயமலையில் பனிப் பாறைகளுக்கு மத்தியில் கடுமையான குளிரில் வைத்து எம்மை (ஞானகுரு) இப்படிக் கேட்டார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஏனென்றால் அவர் எமக்குப் பல அரும் பெரும் சக்திகளைக் கொடுத்தாலும் நான் வீட்டிலுள்ள என் பெண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு அவர் சொன்ன வழிகளில் போகப்படும் பொழுது ஒவ்வொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் என் எண்ணங்கள் மாறுகின்றது.

நம் குடும்பம் பிள்ளை குட்டிகள் எல்லாம் எப்படி இருக்கின்றதோ…? நாம் இங்கே இந்தப் பனிப்பாறையில் இறந்து விட்டால் அவர்களை யார் காப்பாற்றுவது…? என்று வேதனைப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றேன்.

அப்பொழுது அவர்களுக்கு அதைச் செய்ய வேண்டுமே இதைச் செய்ய வேண்டுமே என்ற எண்ணங்களில் இந்த ஆசை தான் எனக்குள் வருகிறதே தவிர… குருநாதர் சொன்னதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

1.உனக்குள் பெற வேண்டியதை மறந்து…
2.நீ பெற வேண்டியதை இழந்து இப்படித் தவிக்கின்றாய்…!
3.ஆகவே எது உனக்குச் சதம்..?
4.உன் உயிர் உன்னை விட்டுச் சென்று விட்டால் சதமற்ற இந்த உடலுக்காகச் சதம் என்று நீ ஏன் வாதம் செய்து கொண்டிருக்கின்றாய்…? என்ற பொருள்படப் பேசினார் குருநாதர்

அன்று அகஸ்தியன் காட்டிய மெய் வழிப்படி என்றுமே சதமாக இருக்கும் உயிரான ஈசனுடன் நீ அவனிடம் ஒன்றி அவனின் நிலைகளாகப் போகும் போது அவனின் உணர்வாக நீ சதமாக ஒளியாக இருக்க முடியும்…!

இதை உணர்த்துவதற்காகத்தான் அந்தப் பாடலைப் பாடிக் காட்டினார். அவர் சொன்னதை மனதில் வைத்து நம் உயிரான ஈசனுடன் என்றுமே ஒன்றி வாழ வேண்டிய நிலையே அது.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ                                                           
இந்த நிலையில்லா உலகம் உனக்குச் சதமாமோ…?
ஆகவே இந்த மாய வாழ்வில் மண்ணுடன் மண்ணாய் மறைவதைப் பாராய்….! என்று தெளிவுற எடுத்துரைத்தார் குருநாதர்.

மனித உணர்வின் இச்சை கொண்ட நிலையில்
1,அந்தச் சதமற்ற உணர்வுக்கு
2.இந்தச் சதமற்ற உன் உடலுக்கு
3,நீ ஏன் இத்தனை வாதிடுகின்றாய்…? என்று சொல்லி விட்டு
4,உயிருடன் ஒன்றி ஒளியாக வாழும் நிலையைக் குருநாதர் எனக்குள் தெளிவாக எடுத்துரைத்தார்.

நீங்களும் அதை அறிந்து கொள்ள வேண்டும்..! உயிருடன் ஒன்றி என்றுமே ஒளியாக ஏகாந்தமாக வாழ வேண்டும்…! என்பதற்கே இதைச் சொல்கிறேன்.

தியானமிருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

மற்றவர்களுக்காக நாம் ஏன் தியானிக்க வேண்டும்?
சில பேர் சொல்வார்கள். எனக்காக வேண்டி நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். எனக்கு நன்றாக வேண்டும் என்று நீங்கள் செய்யுங்கள் என்று அடுத்தவர்களிடம் சொல்வார்கள்.

நீங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று பிரார்த்தனையோ தியானமோ நான் செய்தால் உங்கள் தீமைகளோ வேதனைகளோ எனக்குள் வராது.

ஆனால், அந்தச் சக்தியைப் பெறவேண்டும் என்று
நீங்கள் எண்ணினால்தான்,
நீங்கள் மகரிஷிகளின் அருளை நுகர்ந்தால்தான்,
நீங்கள் கவர்ந்தால்தான்
உங்கள் உயிர் உங்களுக்குள் அந்த ஆற்றலைப் பெறச் செய்யும்.

நீங்கள் நுகர்ந்த உணர்வை உயிர் உங்கள் உடலுக்குள் அணுவாக உருவாக்கும் கருவாக்கி பின் அணுவாக்கி அது தன் இனத்தைப் பெருக்கும் நிலையில் அந்த ஆற்றல் உங்களுக்குள் பெருகும்.

ஏனென்றால், உங்கள் பசிக்கு நீங்கள்தான் சாப்பிட வேண்டுமே தவிர உங்களை எண்ணி நான் உண்வை உட்கொண்டால் எனக்குத்தான் சத்து சேரும். நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஆகவே, நான் எண்ணியது போன்று மகரிஷிகளின் அருள் சக்தி மற்றவர்கள் பெறவேண்டும் என்று நீங்களும் எண்ணினால் பிறரின் தீமைகளோ துயரங்களோ உங்களுக்குள் வராது.

மற்றவர்கள் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணும்போதெல்லாம் உங்களுக்குள் அந்த ஆற்றல் கூடிக் கொண்டே வரும்.

மற்றவர்களும் அதை எண்ணினால் அவர்களும் அந்த ஆற்றலைப் பெறுவார்கள். ஏனென்றால்,
உங்கள் உயிரும் தவறு செய்யவில்லை,
உங்கள் உடலும் தவறு செய்யவில்லை
நீங்கள் “நுகரும் உணர்வுதான்” தவறுக்குக் காரணம்.
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அருள் ஞானப் பொக்கிஷத்தைக் கவரும் நேரம் தான் துருவ தியானம்
விஞ்ஞானிகள் மனித உடலுக்குள் இயங்காத, பழுதான உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி மாற்று உறுப்புகளைப் பொருத்துகின்றார்கள். நம்மைக் காக்கின்றார்கள்.

மாற்று உறுப்புகளைப் பொருத்தினாலும் அவைகள் தொடர்ந்து சீராக இயங்க வேண்டுமென்றால் பல உணவுக் கட்டுப்பாடுகளையும். மற்ற மருந்துகளையும் கொடுப்பார்கள்.

தண்ணீர் இவ்வள்வுதான் குடிக்க வேண்டும், அதைச் சாப்பிடக் கூடாது, இதைச் சாப்பிட்க்கூடாது. எங்கே சென்றாலும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்றும் சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்றவில்லை என்றால் அந்த உறுப்பு கழன்று விடும், இயக்கம் மாறிவிடும். பின் வேதனையைத்தான் அனுபவிக்க வேண்டும்.

எவ்வளவு நாள் இதைப் போன்ற நிலையில் வாழ முடியும்?

ஆனால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் உள்ள உறுப்புகளுக்குள் செலுத்தி,
நம் உறுப்புகளிலுள்ள தீமைகளை நீக்க முடியும்.
அந்த உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள்
துருவ நட்சத்திரத்தின் பேரொளியைப் பெறும்படி நாம் செய்ய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து, சுவாசித்த அந்த உணர்வலைகளை கண்ணின் நினைவு கொண்டு உள் முகமாக உடலுக்குள் செலுத்தி நேரடியாக எந்த உறுப்போ அங்கேயே செலுத்த முடியும்.

அந்த உறுப்பை உருவாகிய அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இணைத்தால் உடலை உருவாக்கிய அந்த நல்ல அணுக்கள் அனைத்தும் உற்சாகம் அடைந்து உறுப்பைச் சீராக இயங்கச் செய்யும்.
அந்த ஆற்றலைப் பெற
துருவ தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் பூமியின் வடதுருவப் பகுதி வழியாக வந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியான அருள் ஞானப் பொக்கிஷத்தைக் கவரும்  அந்த அதிகாலை நேரமே துருவ தியானம்.

துருவ தியானத்தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் இந்த உடலை விட்டு எப்பொழுது பிரிந்தாலும் உயிர் நேராக அந்த துருவ நட்சத்திரத்திலேயே உங்களைக் கொண்டு போய் நிறுத்தும்.

நமக்கு அழியாச் சொத்து அதுதான்.

உலகில் உள்ள எல்லா மொழிகளுக்குள்ளும் தமிழ் சொல்லின் சுருதி கண்டிப்பாக இருக்கும்...! ஏன்...? எதனால்...?


ஆதியிலே காடுகளில் வாழ்ந்த அகஸ்தியனின் தாய் தந்தையர் மிருக இனங்களிலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள நஞ்சை வென்றிடும் மூலிகைகளையும் தாவரங்களையும் அரைத்துப் பூசிக் கொண்டார்கள்.

அப்படிப் பூசிய மணத்தை நுகரும் மிருக இனங்கள் மற்ற விஷமான உயிரினங்கள் இவர்களிடமிருந்து விலகி அப்பால் செல்கின்றது. அதே சமயத்தில் தங்கள் உடலில் பூசிய மணங்களை அவர்களும் நுகர நேர்கின்றது.

ஆக கருவுற்ற அந்தத் தாய் தன்னை அறியாமலே அந்த மணங்களை நுகரப்படும் பொழுது கருவில் உருவான சிசுவிற்குள்ளும் நஞ்சை வென்றிடும் அந்த ஆற்றல் மிக்க சக்தி அணுக்களாக விளைகின்றது. அப்படிப் பிறந்தவன் தான் அகஸ்தியன்.

அவனுடைய வளர்ச்சியில் நஞ்சை வென்றிடும் ஆற்றலை வளர்த்து உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றி நம் பூமியின் துருவப் பகுதியை எல்லையாக வைத்து இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

1.நம் சூரியனோ ஒன்பதாவது நிலை - அதாவது ஒரு காலத்தில் அழியும்
2.ஆனால் துருவ நட்சத்திரமோ பத்தாவது நிலை - என்றும் அழிவதில்லை
3.அந்த அகஸ்தியனின் உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிர் அவன் ஈர்ப்பு வட்டத்தில் ஒளியின் சரீரமாகச் செல்லும்.
4.நாமும் அவனைப் போன்றே அழியாத நிலைகள் பெறலாம்.

இந்தப் பிரபஞ்சமே முழுமையாக நஞ்சு கலந்த நிலைகள் கொண்டு சிதறுண்டாலும் துருவ நட்சத்திரம் அகண்ட அண்டத்தில் என்றுமே ஏகாந்த நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும்.

“ஏகாதசி...! என்று சொல்கின்றோம் அல்லவா...!” ஏகாதசி என்றால் பத்தாவது நிலைகள் கொண்டு நாம் ஏகாந்த வாழ்க்கை வாழலாம்...! என்று
1.ஒரு சொல்லுக்குள் அந்தச் சுருதியை அடக்கி (தமிழ்)
2.மனிதனின் வாழ்க்கையில் எதை... எப்படி.. நுகர வேண்டும்...? என்று ஞானிகளால் விரிவாக்கப்பட்டது.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...! என்று இங்கே தோன்றிய அந்த உணர்வின் அந்த அலைகளைத்தான் “தமிழ்...!” அதாவது
1.நீங்கள் எந்த மொழியின் பிறப்பில் பார்த்தாலும் சரி
2.தமிழ் இலக்கணத்தின் நிலைகள் அதற்குள் உண்டு.

வேதங்களிலும் சரி... அல்லது அதை இன்று ஆங்கிலத்தில் படித்தாலும் சரி... இந்த உணர்வுகள் அதற்குள் இருக்கும். தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட அந்த உணர்வின் தன்மை
1.அதன் அறிவாகத் தோன்றிய வித்துகளை (ஒலிகளை)
2.எந்த மொழியில் மொழி பெயர்த்தாலும் இந்தத் தமிழ் இலக்கண மொழிகளே (நாதங்கள்) அங்கு வரும்.
3..நான் தமிழ் நாட்டிலே பிறந்தேன்...! என்ற நிலைக்காக இதைச் சொல்ல வரவில்லை.

அன்று முதல் மெய் ஞானியான அந்த அகஸ்தியன் அகண்ட அண்டத்தையும் அலசிய உணர்வுகள் இந்த உலகம் முழுவதற்கும் படர்ந்தததனால்
1.மனிதன் என்ற நல்ல உணர்வு வரும் போது “தன் இனமாக வளர்த்தது அது...!”
2.அதனால் தான் எல்லா மொழிகளிலும் அவன் உணர்வுகள் இணைந்தே இன்றும் வருகின்றது
3.தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அகஸ்தியரைச் சொல்வதும் இதை வைத்துத் தான்...!

அவன் கற்றுணர்ந்த மெய் உணர்வுகளை நமக்குள் இறையாக்கப்படும் போது அந்த உணர்வின் செயலாக்கங்களாக அவனைப் போன்றே ஒளியின் சரீரமாக நாமும் பெற முடியும்...! என்பதைக் காட்டுவதற்காகத் தான்
1.தென்னாட்டுடைய சிவனே... போற்றி... ... ...!
2.எந்நாட்டுக்கும் இறைவா... போற்றி... ... ...! என்று
3.ஒவ்வொரு செயல் செய்யப்படும் பொழுதெல்லாம் அந்தப் பாடலைச் சொல்லிக் கொண்டே போகின்றோம்.
4.ஆனால் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்...? என்ற மூலக் கருத்தை அறியாதபடி அதை இராகமாகப் பாடுகின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் அவன். இங்கே கதைகளில் இப்பொழுது சொல்லும் அகஸ்தியர் அல்ல அவர்.

அன்று அகஸ்தியன் எங்கெல்லாம் அமர்ந்தானோ அங்கெல்லாம் ஜீவ சக்தி உண்டு. ஜீவ நீர்களும் உற்பத்தியாகும்.

ஏனென்றால் நம் பிரபஞ்சத்தில் சனிக்கோள் முக்கியமானது.  பிரபஞ்சத்தில் வரும் ஆவிகளை எல்லாம் அது நீராக மாற்றும் திறன் பெற்றது. அதன் உணர்வு எதனில் கலக்கின்றதோ அந்த அணுவின் தன்மை ஒரு ஜீவ அணுவாக உருப் பெறுவதற்கு அது தான் மூலமாகும்.

அந்தச் சனிக்கோளின் உணர்வைப் பெறவில்லை என்றால் எதுவாக இருந்தாலும் அது அதனின் ஜீவ அணுக்களை அதாவது ஜீவனை இழந்துவிடும். உதாரணமாக
1.வான் வீதியில் உருவாகும் பல கற்கள் (ASTEROIDS) சனிக் கோளின் சத்தைக் கவரவில்லை என்றால்
2.அந்தப் பாறைகள் எல்லாம் கரைந்துவிடும்.
3.வளர்ச்சி பெறும் தன்மை அதற்கு இல்லை.

ஆகவே இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரு முக்கியமான நிலைகள் பெற்றது சனிக் கோள். அது செயலிழந்தால் இன்று நம் பிரபஞ்சம் இருக்காது.

இது எல்லாம் அன்று அகஸ்தியரால் கண்டுணர்ந்து வெளிப்படுத்தப்பட்ட பேருண்மைகள்.

October 29, 2018

“தியானத்தின் மூலம் உயர்ந்த சக்திகளை எல்லோரையும் பெறச் செய்ய முடியும்…!” என்பதற்காகக் குருநாதர் எமக்குக் கொடுத்த அனுபவப் பாடம்…!


குருநாதர் எம்மை அழைத்துச் சென்ற நிலையில் நான் (ஞானகுரு) இங்கே என் குடும்பத்தை விட்டு விட்டுப் போய்விட்டேன். என் மனைவிக்கு நோய் வந்து அதிலிருந்து மீண்டு அப்பொழுதுதான் எழுந்திருந்தார்கள்.

அப்பொழுது அவரின் தாயாருக்கு உடலுக்கு முடியாமல் இருக்கிறது. எமக்கு ஐந்து குழந்தைகள். ஆனால் கையில் இருக்கக்கூடிய பணத்தையெல்லாம் என் மூத்த பையன் கொண்டு போய் இறைத்துவிட்டான்.

1.அப்படி இருந்த அந்த சந்தர்ப்பத்திலும் தன் வலுவின் தன்மையை விடாதபடி
2.ஒரே நிலைகளிலே எப்படியும் நாளைக்கு ஜீவிக்க முடியும்…! நாளைக்கு நன்றாக இருப்போம்…! என்ற
3.அந்த எண்ணத்திலேயே என் மனைவி (சாமி அம்மா) இருந்து வந்ததினால்தான் தாக்குப் பிடிக்க முடிந்தது.

ஏனென்றால் அந்த வலுவான எண்ணத்தை இங்கே அதிகமாகக் கூட்டியதால்தான் மெய் ஞானத்தின் சக்தியை யாம் பெற முடிந்தது. என் மனைவி சோர்வையும் சஞ்சலத்தையும் எடுத்து அதை நான் பார்த்துக் கொண்டிருந்தால் மெய் ஞானத்தைப் பெற்றிருக்க முடியாது.

குருநாதர் எமக்குப் பல சக்திகளைக் கொடுத்தாலும் கூட என்னைச் சார்ந்தவர்கள் குடும்பங்கள் வேதனையிலும் சங்கடத்திலேயும் எத்தனையோ அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
1.நான் வெளியிலே போகப்போகும் போது எனக்குக் கஷ்டம்.
2.அதே சமயத்தில் வீட்டிலே கஷ்டம்.

கையில் வைத்திருந்த பணத்தையெல்லாம் என் பையன் வாரி இறைத்துவிட்டான். அதனால் பல நிலைகளிலும் தொல்லை வருகிறது. இங்கே வீட்டிலேயும் தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் நன்றாக நீட்டாக (NEAT) இருந்து கொண்டு போனாலும் போகிற பக்கமெல்லாம் எம்மைக் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். யாம் உதவி செய்தாலும் கூட அந்த உதவி பெற்றவர்களும் என்னைக் கேலி பண்ணுகிறார்கள். இத்தனை அவஸ்தைகள்…!

வீட்டிற்குள் நுழைந்தாலோ உணவு இல்லை.. உடுத்த உடை இல்லை…! என்று பிள்ளைகள் எம்மிடம் கேட்கிறது. அந்த அளவுக்கு இம்சை. அப்போது அந்த நேரத்திலே இதைத்தான் குருநாதர் கொடுக்கிறார். 

வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் இப்படி வரக்கூடிய ஒவ்வொரு இம்சைகளிலிருந்தும் எதை எதையெல்லாம் எப்படிப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எனக்கு இப்படித்தான் அனுபவபூர்வமாகக் கொடுத்தார் குருநாதர்.

அந்தச் சமயத்தில் வீட்டில் தியானம் எல்லாம் இருக்கவில்லை. அப்பொழுது எந்தத் தியானமும் செய்யவும் இல்லை. பொதுவாகக் குருநாதருடைய நிலைகளைத்தான் எண்ணத் தெரியும்.

எல்லோரும் அந்தத் தியானத்தைச் செய்வதற்குண்டான வழியை முதலில் அறிவதற்காக அந்தத் தியானம் என்றால் என்ன…? தியானம் எப்படிச் செய்வது…? தியானத்தின் மூலம் மகரிஷிகளின் ஆற்றலை எப்படிப் பெறுவது…? என்ற இந்த அனுபவத்தைப் பெறுவதற்கு பதினாறு வருட காலம் காடு மேடெல்லாம் அலையச் செய்து அதை உணர்த்தினார்.

அதாவது…
1.ஒரு எண்ணத்தின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து எப்படிச் சுவாசிப்பது…?
2,காற்றிலிருந்து நமக்கு வேண்டியதை மட்டும் எப்படிப் பிரித்து எடுத்துக் கொள்வது…?
3.அதைச் சுவாசித்து நம் உடலில் எப்படிச் சேர்ப்பது…?
4.உடலில் உள்ள எல்லா அணுக்களையும் எப்படி ஒளியாக மாற்றுவது...? என்ற
5.இந்த நிலைகளையெல்லாம் அறிந்து கொண்ட பின்புதான் உங்களுக்கு உபதேச வாயிலாக இப்பொழுது அதைப் பதிவு செய்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பதினாறு வருட காலத்தில் எமக்கு உணர்த்திய மெய் உணர்வுகளை யாம் கண்டுணர்ந்து எமக்குள் வளர்த்துக் கொண்ட அந்தச் சக்தி வாய்ந்த அருள் ஞான வித்துகளைத் தான் உங்களுக்குள்ளும் ஊன்றச் செய்து அதை நீங்களும் வளர்த்துக் கொள்வதற்கு அவர் உணர்த்திய அதே வழிப்படி உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

நீங்கள் அதை எல்லாம்  பெறவேண்டும் என்ற ஆசையில் இருந்தால் போதும். உங்களுக்குள் அது ஆழமாகப் பதிவாகும். நினைவு கொண்டு மீண்டும் அதை எண்ணி ஏங்கி எடுத்தால் அந்தச் சக்திகள் உங்களுக்குள் வளரத் தொடங்கும்.