ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2022

“கதிரியக்கப் பொறிகளை நுகர்ந்து… அதை அடக்கி…” ஒளியான அணுக்களாகத் தனக்குள் உருவாக்கினான் அகஸ்தியன்

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் காட்டிற்குள் செல்லப்படும் பொழுது மிருகங்கள் எல்லாமே அஞ்சி ஓடுகின்றது அதனால் அவனுக்குப் பெயர் காட்டு ராஜா என்று வந்தது.

அவன் குழந்தையாக இருக்கும் பொழுது அவனுக்கு இவ்வாறு பட்டங்களைச் சூட்டி எல்லா நிலைகளையும் கொண்டாடுகின்றனர். அவனுக்கு ஐந்து வயது வரப்படும் பொழுது அவன் எண்ணங்கள் சில நிலைகளைப் பிரதிபலிக்கும் பொழுது தாவர இனங்களைப் பற்றி அறிகின்றான்.

காரணம்… அவன் தாய் கருவில் இருக்கும் போது தாய் நுகர்ந்த நஞ்சினை அடக்கும் பல பல மூலிகை மணங்களையும் பச்சிலை வாசனைகளையும் பூர்வ புண்ணியமாகப் பெற்றவன்… அதன் வழி பிறந்தவன்.

ஆகவே…
1.தாவரங்களில் இருக்கும் சக்திகளை அவன் அறியும் நிலையில்
2.அந்தத் தாவர இனங்களுக்கு எங்கிருந்து உணவு வருகின்றது…? என்று
3.இவனுக்குள் தோன்றும் உணர்ச்சிகள் சிந்திக்கச் செய்கின்றது... உற்று நோக்குகின்றான். வானை நோக்கிப் பார்க்கின்றான்
4.அப்பொழுது துருவப் பகுதியில் இருந்து நம் பூமிக்குள் சக்தி எப்படி வருகிறது…? என்று அறிகின்றான்.

துருவத்திலிருந்து வரக்கூடியது அனைத்தும் விஷத்தின் உணர்ச்சிகளை உருவாக்கும் உணர்வு பெற்றாலும் இவன் அவைகளை நுகரப்படும் பொழுது அந்த விஷத்தின் ஒளிக்கதிர்களாக மாற்றுகின்றான்.

இன்று நாம் மின்னல்களைப் பார்க்கின்றோம். நட்சத்திரங்கள் ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அதிலிருந்து உமிழ்த்தப்பட்டு வரும் துகள்கள் எதிர்நிலை ஆகி ஒன்றுடன் ஒன்று மோதும்போது சுக்குநூறாக அதனுடைய அலைகள் மாறும்.

மாறி வருவதைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து அதனுடைய கலவைகளில் வித்தியாசமாக வரும். அதை... அந்த மின்னலாக மாறி வருவதைத்தான்… குருநாதர் என்னைப் பார்க்கும்படி சொல்கின்றார். “என் கண்கள் குருடாகி விடுமே...” என்று எனக்கு அந்தப் பயம் வருகின்றது.

ஆனால் இதை அடக்கிடும் உணர்வுகளை அகஸ்தியன் எடுத்து மின்னல்களை அவன் எப்படிப் பார்த்தான்…? என்று பார்க்கச் சொல்கிறார்.
1.அந்த மின்னலின் அலைகளை அகஸ்தியன் எப்படி எடுத்தான்...?
2.மின்னலின் வீரியம் அது எப்படி அவனுக்குள் அடங்குகின்றது...?
3.அகஸ்தியன் விஷத்தை அடக்கியது எவ்வாறு…? என்று காட்டுகிறார் குருநாதர்.

ஏனென்றால் அது மிகவும் விஷத் தன்மை கொண்டது...!

இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வருவது எதில் எதில் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத் தக்கவாறு உணர்ச்சிகளை ஊட்டி அதைச் செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று
1.“மின்னலையும் என்னைப் பார்க்கச் சொல்லி...
2.அகஸ்தியன் அதை எப்படி அடக்கினான்...?” என்பதையும்
3.அந்த மின் அணுவின் தன்மையைத் தனக்குள் எப்படி ஒளியாக்கினான்…? என்பதையும் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு செடியிலோ மரத்திலோ மின்னல் தாக்கினால் அது கருகி விடுகின்றது... அதிலுள்ள சத்தை எடுத்து விடுகின்றது.

அதைப் போல
1.இந்த விஷத்தை ஒடுக்கிடும் உணர்வு வரப்படும் பொழுது
2.கதிரியக்கப் பொறிகளாக வருவதை அகஸ்தியன் உற்றுப் பார்த்தாலும்
3.அதை ஒ\டுக்கித் தன்னுடன் ஒளியாக மாற்றும் அணுத் தன்மையாக மாற்றிவிடுகின்றான்.
4.அப்படி அவன் உடலில் உருவான அந்த ஆற்றலைக் கொண்டு தான் எதையுமே மாற்றிடும் சந்தர்ப்பம் வருகின்றது.

இது எல்லாம் குருநாதர் அனுபவரீதியில் எனக்குக் கொடுத்தது..

ஆகவே... அகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது எல்லா மின்னல்களையும் பார்க்கின்றான். அவன் பெற்ற அந்த உணர்வின் சத்தை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது போல் நாமும் ஒளியாக முடியும்.

அடிமையாக எண்ணி மகான்களைப் பணிந்து வணங்காது மகானுடனே மகானாக நாம் கலந்திட வேண்டும் - ஈஸ்வரபட்டர்

எண்ணத்தில் உயர் ஞானத்தையும் நற்செயலையும் ஆத்மீக நெறி கொண்ட அன்பு வாழ்க்கையையும் வழி நடத்திட்டால்… அந்த நிலையில் பெறும் சக்தியின் திறன் தானப்பா நாம் அடைந்திடும் பேரானந்த வாழ்க்கை.

ஆரம்ப வழித்தொடர்…
1.வாழ்க்கையுடனும் பிற எண்ணங்களின் மோதலினாலும் தொடரை வழிப்படுவதற்கு சிரம நிலை கொண்டிடலாம்
2.அச்சிரம நிலையிலிருந்து வழி நடந்து வந்திட்டால் இப்பேரின்ப நிலையை அடைந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தினால் செயற்கைக்கோளை இப்பூமியிலிருந்து மற்ற மண்டலங்களின் நிலையறிய ஏவுகின்றனர்.

இப்பூமியின் காற்று மண்டலத்தையும் இப்பூமிக்கு மேல் சில தூர விகிதத்திற்கு அந்த ஏவுகணையைச் (இராக்கெட்) செலுத்திட இவ்வமிலங்களின் (அணுகாந்த மின் அலை) உதவியினால் செலுத்தி அதற்கு மேல் உள்ள நிலைகளுக்கு எந்த அமில சக்தியின் நிலையில்லாமலே இயக்கிடும் நிலைக்கு அவ் ஏவுகணை செல்கின்றது.

குறிப்பிட்ட தூர விகிதத்திற்குத்தான் மற்ற அமில சக்தியின் நிலையினால் இயங்குகிறது. அந்த ஏவுகணை. பிறகு செல்லும் நிலைக்கெல்லாம் எரிபொருள் செலவு நிலை இல்லாமலே செல்லும் நிலையைத்தான் செய்வித்து அனுப்புகின்றனர்.

அதைப் போலவே நம் எண்ண சக்தியின் வழித் தொடரினை நற்சக்திக்கு வழிப்படுத்திட்டால் ஆத்மீக நெறிக்கு நம்மை வழி நடத்திட நம் உயிராத்மாவின் சக்தியினால் முடிந்திடும்.

1.இவ்வுடல் என்னும் அமிலங்கள் நிறைந்த இப்பிம்பத்தின் காந்த சக்தியின் நிலையை நாம் உணர்ந்திட்டால்
2.இப்பிம்பத்தையே பறக்கும் நிலைக்கும் பதப்படுத்திடலாம்.
3.நம் உடலிலுள்ள அமில சக்தியின் சக்தியே பெரும் சக்தி…!
4.இச்சக்திதனை நாம் உணர்ந்திடாமல் நம்மையே நாம் விரயப்படுத்தித்தான் வாழ்கின்றோம்.

செயற்கையினால் இன்று காணும் அனைத்து நிலைகளையுமே… அனைத்து நிலையென்பது ஒலி… ஒளி… இவற்றின் ஈர்ப்பு சக்தி கொண்ட நிலையை எல்லாம் இவ்வுடல் என்னும் அமில சக்தியின் தொடபினாலேயே கண்டிடலாம்.

“இவ்வெண்ண சக்தியின் வழித்தொடர் பெற்றோரின்…” சொல் செயல் பார்வை இவற்றின் சக்தி நிலையினால் அவர்கள் சொல்லும் சொல்வாக்கு பலிதம் கொள்ளும்.

ஒருவரைக் காணும் பொழுது அவரின் மேல் எவ்வெண்ணத்தின் நினைவுடன் அவரின் சுவாசக் காற்று பட்டுக் காண்கின்றனரோ அவ்வெண்ண நிலைப்படியே அவர்களைக் காண்பவரின் நிலையும் நடக்கும்.

1.ஆத்மீக நெறியறிந்து சக்தி நிலை பெற்றோரின் சொல்வாக்கும்
2.அவர்கள் எண்ணத்தில் பாய்ச்சிடும் விழியின் ஒளி நிலையும் பலிதம் கொள்ளும்.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பேரின்ப சக்தியுண்டு. மகான்களின் நிலையிலெல்லாம் இந்நிலையுண்டு.

1.மகான்கள் சென்ற இடமெல்லாம் சிறப்பு
2.அவர் புண்ணிய பாதம் பட்ட இடமெல்லாம் செழிப்பு
3.அவரின் பார்வை பட்டாலே புண்ணியம்
4.அவரின் ஆசியினால் பேரின்பம் கிட்டும் என்ற வழித் தொடரிலுள்ள நாம் அத்தொடரினையே
5.அம்மகானின் புண்ணிய நிலையை நம் ஆத்மாவுடனும் கலந்து நாமும் அம்மாகனைப் போன்ற மகான்கள் ஆகலாம்.

இந்த உண்மை உணர்ந்து… உயர்ந்த நிலையிலுள்ளோரைத் தாழ்ந்தே வணங்கி… “தாழ்ந்த நிலையிலேயே இருந்திடாமல்…” அவரின் அடிச்சுவட்டைப் பற்றியே உயர்ந்து… அவரின் நிலையுடனே உயர்நிலை பெறும் மகான்களாய் நல் ஆத்மாவாய் நாமும் கலந்திடல் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும்.

1.அடிமை கொண்டு வணங்கி வாழ்ந்திடுவதல்ல வாழ்க்கை.
2.அன்பு கொண்டே வணங்கிடல் வேண்டும்.
3.அன்புடனே அன்பாய்க் கலந்து வாழ்ந்திடல் வேண்டும்.

ஆனால் நம் வழி முறையும் செயல் முறையும் அடிமை கொண்ட நிலையில்தான் மகான்களின் நிலையையும் பணிந்து பற்றி வாழ்கின்றனர்.

மகானுடனே மகானாய்க் கலக்கும் மனப்பக்குவ நிலையை வளர்த்து இவ்வுலகின் சக்திச் செல்வமான சக்தி ஆத்மாக்கள் அனைவருமே
1.சக்தி ஜோதியாய்த் திகழ்ந்திடும் உண்மையினை உணர்ந்து
2.உன்னத வழி பெற்றே மகாமகான்கள் ஆகிடுங்கள்.

April 29, 2022

மறதிப் பூடு

காட்டிற்குள் சில வகையான செடிகள் உண்டு அந்தச் செடிகளின் மீது மிதித்து விட்டால் நம் நினைவையே இழந்து விடுவோம். அடுத்து எங்கே போகின்றோம்...? என்ன செய்கிறோம்...! என்றே தெரியாது.

அந்தச் செடியைத் தூசி போல் ஆக்கி… வீட்டு வாசல்படியில் தேய்த்து விட்டால் உங்கள் நினைவுகள் மறந்துவிடும். உங்கள் கடையில் கொண்டு போய்ப் போட்டால் உங்களுக்குச் சிந்திக்கும் தன்மை வராது. இதை “மறதிப் பூடு...” என்று சொல்வார்கள்

குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் எமக்கு (ஞானகுரு) ஞாபகப்படுத்திக் காட்டுகின்றார்.

நாங்கள் ரெண்டு பேரும் செல்லும் பொழுது திடீரென்று அவர் ஒதுங்கிச் செல்கிறார்... என்னைச் செடி மீது மிதித்து விட்டு வாடா...! என்று சொல்கின்றார்.

செடியை மிதித்து நான் கடந்து சென்றவுடன் என் நினைவே இல்லை...! எந்த பக்கம் போகின்றேன்… என்ன செய்கின்றேன்...? என்றே எனக்குத் தெரியவில்லை

செடிகளுக்குச் சத்து எப்படி இருக்கிறது பாருடா...! என்கிறார்.

1.மனிதனான பின் காட்டிற்குள் அவன் அடிபட்டு வேதனையுடன் கீழே விழுந்து தன்னை மறந்த நிலைகள் மடிந்த பின்
2.அவனுடைய உணர்வுகள் செடியுடன் கலந்து அதை அது உணவாக உட்கொண்ட பின்
3.அதன் விழுதுகளில் இப்படி எல்லாம் ஆற்றல் வருகிறது.... அதை மிதித்தால் நம் சிந்தனையை இழக்கச் செய்கின்றது

பிறகு குருநாதர் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே செல்கின்றார். ஆனால் என்ன செய்வது... எந்தப் பக்கம் போவது...? என்று எனக்குத் தெரியவில்லை.

வேகமாக என் கையை பிடித்து இழுத்து... வாடா... வாடா... வாடா... வாடா... என்று என்று கூப்பிட்டுக் கொண்டே சென்றார்.

பின் வேறு சில செடிகளைக். காண்பித்து... “அதன் மீது உட்கார்...” என்றார். உட்கார்ந்த பின் அப்புறம் எனக்கு நினைவு வருகின்றது.

இப்படி அனுபவரீதியில் தான் குருநாதர் எனக்குக் கொடுத்தார். வெறும் வாயால் சொல்கிறேன் என்று அல்ல.

1.உங்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களைத் திரை மறைவாக்கும் தீமைகளிலிருந்து விடுபட்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் செல்ல வேண்டும்
3.விஞ்ஞான உலகில் வரும் கடுமையான தீமைகள் இருந்து விடுபட வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கின்றேன்.

குருநாதர் இத்தனையும் கற்றுக் கொடுத்தார். இருந்தாலும் இதை எல்லாம் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் விட்டால் என்னவாகும்...! எனக்குள் அது மறைந்து விடுகின்றது.

அப்படி இல்லாதபடி உங்களுக்குள் அதை எல்லாம் உணர்த்தப்படும் போது
1.உங்கள் பார்வையால் மற்றவருடைய தீமைகளைப் போக்க முடியும்
2.சிந்தனை இழக்கச் செய்யும் நிலையிலிருந்து மற்றவர்களை மீட்கும் சக்தியும்
3.அதனை மாற்றியமைக்கும் சக்தியாகத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றி ஒளியின் உணர்வாக
4.அந்த ஞானத்தின் வழிகளில் உங்கள் வாழ்க்கை அருள் வாழ்க்கையாக அமையும்.

இதன் வழியில் ஒவ்வொருவரும் சென்றால் சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம் உங்களுக்குள் கிடைக்கின்றது. ஆகவே... நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும்.

உங்கள் உணர்வைக் கேட்போருக்கும் அருள் ஞானத்தை ஊட்டி மறைத்திருக்கும் தீமையான உணர்வுகளை நீக்கி அருள் ஒளியின் உணர்வை அவர்களும் பெருக்க வேண்டும்... உங்களுக்குள்ளும் அருள் சக்தி பெருக வேண்டும்.

அத்தகைய நோக்கத்தில் தான் குருநாதர் காட்டிற்குள் அழைத்துச் சென்று எமக்குக் காட்டிய உண்மைகளை உங்களுக்குள்ளும் தெளிவாக்குகின்றேன்.

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” - ஈஸ்வரபட்டர்

“கண்ட மணி… துளசி மணி… அகஸ்திய மணி…” இப்படிப் பல மணிகளைத் தன் ஜெபத்தினால் செய்வித்துச் சித்து நிலை பெற்றவர்கள் தம் உடலில் இந்த மணிகளை அணிந்து கொண்டு அவற்றின் ஈர்ப்பு சக்தியின் நிலையினால் தன் ஆத்மாவிற்குச் சில நிலைகளை அறிந்திட இப்படிப் பல நிலைகளை ஜெபம் கொண்டு செய்வித்தனர்.

சந்திர மண்டலத்தில் இருந்தும் சூரிய மண்டலத்திலிருந்தும் நம் பூமியின் தொடர்புடைய மற்ற மண்டலங்களில் இருந்தும் நமக்குக் கிடைக்கும் அணுக்கதிர்களின் சக்தியை உணர்ந்து அமாவாசையில் சந்திரனின் சக்தி இல்லாமல் சூரியனின் ஒளிக்கதிரையே பெற்றிடும் இப்பூமியை நிலைப்படுத்தி மூலிகைகளை வளரச் செய்யும் நாள் கணக்குப்படி அதை நீர் மட்டத்தின் தூர விகிதப்படுத்தி இம் மூலிகைகளை ஒன்றுக்கு நேர்ப்படுத்தி மற்றவற்றை வைத்து அதன் நாள் கணக்கில் வளரும் நிலைப்படுத்தி பக்குவமுடனே இரசமணியுடன் கலந்த ஜெபம் செய்கின்றார்கள்.

துளசி நாமத்தையும் அகஸ்தியர் நாமத்தையும் எம்மணியை உருவாக்குகின்றார்களோ அம்மணிக்குகந்த நாமத்தை ஜெபித்து தம் உடலுடன் ஜெபம் கொண்ட அந்த மணிகளை அணிந்து கொண்டு அதன் ஈர்ப்பு சக்தியின் தொடரினால் பல நிலைகளைச் செய்கின்றார்கள்.

1,இவ்வுடலையே ஒருவர் கண்ணுக்கும் காணாத நிலையெல்லாம் செய்விக்கின்றனர்
2.இவ்வுடலை விட்டு ஆத்மாவைப் பிரித்துப் பல சக்தி நிலைகளை அறிந்திடும் நிலைக்கும் பல நிலைகளைச் செய்கின்றனர்.
3.இயற்கையுடன் வளர்ந்திட்ட இம் மூலிகையின் நிலையறிந்து
4.இயற்கையின் சக்தியினாலேயே ஞான வழியில் சித்து பெற்றவர்கள் செய்திடும் நிலை இவையெல்லாம்.

ஆனால் சூனிய நிலை கொண்ட தீய சக்தியிலும் இந்நிலைகள் செயல்படுகின்றன.

குடுகுடுப்பு ஆண்டிகளும் இன்னும் சில சூனிய சாமியார்களின் நிலையிலும் மை போட்டு மந்திரித்து கறுப்புக் கயிற்றில் தாயத்துக்களை அளித்துப் பல நிலைகளை அவர்கள் செய்கின்றனர்.

இந்தியாவிலும் சீனாவிலும் திபெத்திலும் இன்னும் ஒரு சில நாடுகளிலும் இச்சூனியக்காரர்களின் ஆதிக்க நிலை நிறைந்துள்ளது.

குறைப் பிரசவத்தில் போன சிசுக்களையும் பிறந்த சிசுவையும் அதைப் புதைத்த நிலையிலிருந்து எடுத்துச் சென்று… அதன் ஜீவ சக்தியைத் தன் உடலுடன் ஏற்றிக் கொள்ளும் மந்திர ஜெபங்கள் செய்து தன் உடலுடன் ஏற்றிக் கொள்கின்றார்கள்.

குட்டிச் சாத்தான் வேலையும் இதுவே…!

கூடுவிட்டுப் பறந்து செல்லும் நிலையும் தன் உடலையே பிறர் கண்ணிற்குக் காணாமல் ஆவி உருவப்படுத்தும் நிலையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.

இவர்களினால் பல தீய நிலைகள் இன்றும் நடந்து வருகின்றன. தீய எண்ணத்திற்கு இத்தீய சக்தியின் தொடர்பும் கிட்டுகின்றது.

நல்வழிக்கும் தீய வழிக்கும் இந்நாடு கலந்த நிலையில்தான் உள்ளது.

இவ்வெண்ண சக்தியை மேம்படுத்தி இவ்வுலக சக்தியில் ஆத்ம சக்தியை ஒன்றச் செய்தால் நம் ஆத்மாவுடன் நாம் வளர விடும் நற்சக்தியின் பயனால் நாம் வாழ்ந்திடும் காலத்தில் இக் காற்றுடன் கலந்துள்ள தீய சக்திகளின் அணுக்கதிர்களை வளரவிட்டு சோர்வும் நலிவும் இவ்வுடலை அண்டாமல் இவ்வுடல் அகால மரணம் எய்திடாமல் அன்பு கொண்ட ஜீவாதார அறம் கொண்ட நல் வாழ்க்கை வாழ்ந்தே சூட்சும உலகிற்குச் சென்றிடும் பக்குவ நிலைக்குச் சென்று வாழ்ந்திடலாம்.

தீயோரின் சக்தி நிலை வளர்ந்து நற் சக்தியைக் குறைத்துக் கொண்டு வருவதினால் நம் சக்தியையும் நம்மைச் சார்ந்தோரின் சக்தியையும் அவர்களின் தொடர்பு கொண்டோரின் சக்தியையும் கீழான நிலைக்கே அழைத்துச் செல்கிறது.

தன் இனத்துடன் தன் இனத்தைச் சேர்த்தே ஒவ்வொரு மண்டலமும் ஈர்த்து எப்படி வளர்ந்ததுவோ அந்த நிலை போன்றே…
1.இவ்வுலகில் உதித்த ஆத்மாக்கள் அனைவருமே ஒன்றுடன் ஒன்றை நற்சக்திகளாக்கி
2.இவ்வுலகையே நல் உணர்வு கொண்ட நல் பூமியாக வாழ்ந்திடும் பக்குவம் பெற்ற ஆத்மாக்களாய் வந்திட
3.நல்லுணர்வையே நலமாக்குங்கள் என்றே வழிப்படுத்தி வாழ்த்துகின்றேன் நல் வாழ்த்துக்களை…!

காலமறிந்து… கருத்தறிந்து… ஞானத்துடன்… செயல்பட வேண்டும் என்று தான் நம் சாஸ்திரங்கள் கூறுகிறது

சாஸ்திரங்களில் சித்திரை மாதத்தைப் பற்றிய உள் மூலக்கூறைத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் நாம் அந்தச் சித்திரை மாதத்தை எப்படி நினைக்கின்றோம்…!

இந்த வருடம் சித்திரை மாதம் பிறந்திருக்கிறது…
1.இந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் அவன் ஓடுகாலியாக வருவான்..
2.குழந்தைகள் அந்த மாதத்தில் பிறக்கக்கூடாது… குடும்பத்திற்கு அது ஆகாது.
3.சித்திரை மாதத்தில் ஏதாவது செய்தால் எல்லாம் சிதறிப் போகும்… ஆகையினால் நல்ல காரியம் செய்யாதே…! என்றெல்லாம் சொல்கிறார்கள்.

சித்திரை மாதத்தில் நாம் உயர்ந்த ஞானத்தைப் பெறும் நிலையாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் போது இந்தச் சித்திரையை நீக்குகின்றோம். நமக்குள் நல்லதை மறைத்திடும் அந்த்த் தீமைகளை அகற்றுகின்றோம்.

ஆகவே “உத்தராயணம்…” என்ற மனிதனின் ஆறாவது அறிவைக் கொண்டு மீண்டும் அது தெளிவு கொண்ட பின் இந்தப் புது வருடம் வரப்படும் போது… ஒவ்வொன்றையும் தெளிந்து தீமைகளை அப்புறப்படுத்தும் நிலை வருகின்றது.
1.அதனால் தான் மாதத்தை இணைத்து… காலத்தையும் இணைத்து…
2.மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து செயல்பட வேண்டும் என்று விநாயகர் (தத்துவத்தில்) அகவலில் பாடுகின்றனர்.

மூலாதாரம் என்றால் புருவ மத்தியில் இருக்கும் நம் உயிர்…!

நாம் எண்ணக்கூடிய எண்ணங்கள் அது உயிரிலே மூளும் போது மூண்டெழும் கனலை… எந்தக் காரணத்தால் நாம் பார்த்தோமோ அந்த உணர்வின் தன்மை உயிரிலே மோதும் தன்மை கொண்டு அதனின் இயக்கமாக நம்மை இயக்குகிறது.

அதனால் தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலத்தால் அறிந்து கருத்தறிய வேண்டும்” என்று பாடலைப் பாடுகின்றோம்.
1.பாடலைப் படித்தோம்… கருத்தை விட்டுவிட்டோம்.
2.மூலத்தையே விட்டுவிட்டோம்… அந்த உண்மைகளை உணரவில்லை.

காரணம்… நாம் எந்த நிலையைக் காலத்தால் அறிகின்றோமோ… அது நம் மூலமான உயிரில் இது ஆதாரமாக இணைக்கப்பட்டு அது உணர்வின் தன்மை கனலாக எழும்புகிறது.
1.அதைக் காலத்தால் அறிந்து ஆறாவது அறிவால் ஞானம் கொண்டு அறிந்துணர்ந்து
2.மகரிஷிகளின் அருள் உணர்வைக் கணங்களுக்கு அதிபதியாக நம் உடலுக்குள் இணைத்து நாம் செயல்பட வேண்டும்.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களில் தவறில்லை. சாங்கிய சாஸ்திரங்களில் நாம் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாதபடி துயர்களையே நாம் அனுபவித்துக் கொண்டுள்ளோம்.

இதைத் தான்…
1.ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் எந்தெந்த நிலைகள் வளர்கிறது என்ற நிலையில்
2.பங்குனி உத்திரம்… திசை மாறும் நிலைகள் கொண்டு
3.மனிதனான பின் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை அகற்றும் நிலையாக நாம் திசை திரும்ப வேண்டும்…
4.ஞானிகள் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்று காட்டுகின்றார்கள்… உத்தராயணம்…!

பங்குனி உத்திரம் முருகனுக்குகந்த நாள் என்று தேரோட்டம்… காவடி ஆட்டம்… என்று ஆடிப் பாடி மகிழ்கின்றோம்.

இருந்தாலும் அதனின் உணர்வின் வேகம் கொண்டு பக்தியில் முருகா… முருகா… முருகா… என்று “அவன் செய்வான்…” என்ற நம்பிக்கையுடன் இருந்து உணர்வின் தன்மை நமக்குள் பேயாக்கி… இந்த ஆசை கூடி… உடலை விட்டுச் சென்ற பின் அதே உணர்வின் தன்மை கொண்டு அடுத்த உடலுக்குள் சென்று… ஆசையின் நிலைகள் பேயாகத் தான் ஆக்க முடியும்… அடுத்த உடலுக்குள் சென்ற பின் ஆசை தான் வளர்கிறது… ஆறாவது அறிவு சூனியமாகிறது.

காவடி ஆடுபவர்கள் உடலை விட்டுப் இறந்த பின் எங்கே செல்கிறார்கள்…? முருகன் மீது பக்தியாக இருந்து அடுத்தவர்கள் காவடி எடுத்தால் போதும்.. அந்த ஆன்மா புகுந்து தன்னாலேயே ஆடத் தொடங்கும்.

இதிலிருந்தெல்லாம் விடுபட்டு அந்த அருள் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு உத்தராயணம் என்ற நிலையில் ஆறாவது அறிவு கொண்டு அருள் உணர்வை எடுத்துச் செயல்படுத்த வேண்டும்.

அதற்குத் தான் இதை உங்களுக்குள் விளக்க உரையாகக் கொடுப்பது.

April 28, 2022

நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும் - ஈஸ்வரபட்டர்

தீப ஜோதியைக் கண்டிடவே தீபங்களை ஏற்றி வைத்துப் புனித நன்னாளாய்க் கார்த்திகைத் திருநாளைத் தீபத்தின் ஜோதியிலே ஜோதியாய் வணங்குகின்றீர்.

தீபம் ஏற்றி வணங்கிடும் நாளில்…
1.தீப ஜோதியையே உம்முள் ஐக்கியப்படுத்திடும்
2.ஜோதி தீபங்களாய் வாழ்ந்திடும் “எண்ண தீபத்தை ஏற்றிடுங்கள்…!”

எண்ணெயும் திரியும் ஏற்றுவதற்குத் தீக்கோளப் பெட்டியும் செயற்கை கொண்டு தீபம் ஏற்றி தீப விழாவாக்கி மகிழ்ந்திடும் நன்னாளை…
1.என்றுமே தீபமாய்ச் சுடர்விடும் ஆத்ம விளக்கை
2.”எண்ண தீபத்தில் இயற்கையின் சக்தியில் கலக்கவிடுங்கள்…!”

நம் பூமியின் ஒலியினால் ஒளியாகி ஒளியுடனே வாழ்ந்துள்ள நாம் நம்மைப் போன்ற ஒவ்வொரு மண்டலமும் ஒலி கொண்டு ஒளி பெற்று வாழ்வதைப் போல்…
1.மற்றச் சாதனங்களினால் எரிந்து ஒளிவிடும் ஒளியாய் இல்லாமல்
2.தானாய் ஒளிரும் ஜோதி ஒளியை ஒவ்வொருவரும் தன்னுள் ஏற்றி ஒளி பெற்றிடுங்கள்.

சூரியனும் மற்ற அனைத்து மண்டலங்களும் தானாகவே தன்னுள்ளேயே ஒளியினால் ஒளி பெற்றுச் சுற்றிடும் ஜோதி மயம் போல் ஒவ்வோர் ஆத்மாவுமே…
1.அவரவர்களின் ஆத்மாவுடன் ஜோதியின் சக்தியைப் பெற்று
2.ஜோதி மயமான ஜோதியுடனே கலந்தும் தனிப்பெரும் சக்தியினைப் பெற்றிடலாம்.

நம் ஆத்மாவிற்கு உள்ள சக்தியினை நாம் உணர்ந்திடல் வேண்டும். நம் ஆத்ம சக்தியை நற் சக்திகளின் சக்தியாய் ஒளிரச் செய்திடல் வேண்டும். ஆனால் நம் சக்தியை நாம் அறிந்திடாமல் பல தீய சக்திகளுக்கு நம்மை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம்.

1.வாழ்க்கையுடனே தியான வழியின் ஜோதித் தொடரை வளரவிட்டு வாழ்பவருக்கு
2.நம் ஆத்ம ஜோதியின் சக்தியினைப் பூர்ணமாக அறிந்திடும் சக்தி நிலை வந்தடையும்.

வாழும் காலம் குறுகியதுதான்…! “மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் காலத்தில்தான்…” நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் வளர்ச்சி நிலையெல்லாம் கிட்டுகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாக்களுக்கு… ஆத்ம வளர்ச்சி வளர்ச்சி என்பது சக்தி நிலை கூடிடும் நிலையில்லை. உடலுடன் கொண்ட ஆத்மாக்களினால்தான் வாழ்ந்திடும் பக்குவத்தில் ஆத்மாவை ஜோதியாக்கிட முடிந்திடும்.

வாழ்வும் சாவும் என்ற இரண்டு நிலைகளைத்தான் உணர்ந்துள்ளோம்.
1.பிறந்த பின் நம் நிலையை நாம் உணரப் போகின்றோமா…? என்ற பக்குவம் பெறாத நிலையில்
2.நாம் பிறப்பதுவே நம் தாய் தந்தையரின் நிலையினால் வந்தது... நாமாகப் பிறவிக்கு வரவில்லை…
3.ஆகவே வாழும் காலத்தை அனுபவித்து வாழலாம் என்றெல்லாம்
4.நம் ஆத்ம சக்தியைப் புரிந்திடாமல் எண்ணி வாழ்ந்திடும் நாம்
5.இனி வரும் காலத்தை நாம் எடுத்திடும் சுவாச நிலையின் ஒளியினால்
6.நம் ஆத்மாவை ஒளி கொண்ட ஒளியாக்கித் தீப ஒளியாக வாழ்ந்திட வேண்டும்.

எமது அருளாசிகள்…!

April 27, 2022

ஆறாவது அறிவைப் பயன்படுத்தி நாம் ஒளியாக மாறும் பருவத்தைத் தான் உத்தராயணம் என்றார்கள் ஞானிகள்

 

சித்திரை…! என்றால் ஒவ்வொரு நிலைகளிலும் (சந்தர்ப்பத்தால்) நம் எண்ணத்தால் வரும் பிறிதொரு தீமையின் நிலைகள் நாம் உண்மையை உணர முடியாத நிலைகள் கொண்டு மறைத்துவிடுகிறது… அதனால்தான் சித்திரை.

பங்குனி கடைசியில் உத்தராயணம் பிறக்கின்றது. “உத்தராயணம்…” என்கிற பொழுது புழுவிலிருந்து மனிதனாக வரப்படும் பொழுது
1.ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமைகளை மாற்றியமைத்து
2.இயற்கையின் நிலைகளை மாற்றி ஒளியின் சுடராக அறிவின் தன்மையாக
3.தனக்கு வேண்டியதைத் தனக்குள் சேமிக்கும் நிலை

உத்தராயணம் வரப்படும் பொழுது தான் வெயிலின் தன்மையும் அதிகமாகிறது. இந்த பூமியில் விளைந்த உணர்வின் சத்துகள் அது எதுவானாலும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகச் சேமிக்கின்றது,

அந்தத் தருணத்தில் ஒவ்வொரு தாவர இனத்திற்கும்.. மரங்களுக்கெல்லாம் இலை உதிர் காலமாகிறது. ஆனால் செடிகளுக்கோ… வளர்ந்த நிலைகள் கொண்டு அதனுடைய சத்தைக் கவர்ந்து கொள்கின்றது

அதில் விளைந்த வித்துக்களை மறுபடியும் அந்த நேரம்… பருவம்… பார்த்து விதைக்கும் பொழுது
1.மாரிக்காலத்தில் தட்சிணாயணம் என்ற நிலைக்கு வரும் பொழுது
2.மழை நீரும் நீர் மற்ற நிலைகளும் வரும் பொழுது
3.அந்த வெப்பத்தின் தன்மை துடிப்பு கொண்டு தன் இனத்தை விருத்தி செய்கின்றது.

உத்தராயணம் தட்சிணாயணம் என்று இப்படி வரும் போது அந்தக் காலப் பருவத்தில் ஆக… மனிதனான பின் உத்தராயணம் “ஒவ்வொன்றையும் வேக வைத்து மாற்றி அமைக்கின்றோம்….!”

அதாவது மனிதனான பின் ஒரு பொருளை வேக வைத்துத் தனக்கு வேண்டியதை மாற்றி அமைத்துப் புது விதமாக நாம் சமைக்கின்றோம்… உணவாக உட்கொள்கிறோம் அல்லவா…!

உத்தராயண நேரங்களில் அந்த வெப்ப காலங்களில் தாவர இனங்களிலிருந்து கவர்ந்து கொண்ட இந்த உணர்வின் சத்து… அந்த அலைகள் அதிகமாகும் பொழுது பார்த்தால் பெரும் புயல்கள் வரும்… பெரும் அலைகளும் வரும்.

இந்தக் காற்றலைகள் எங்கிருந்து வருகின்றது…? எங்கிருந்து உருவாகின்றது…?

ஒவ்வொரு தாவரமும் தன் உணர்வின் வலுவால் வளர்ந்தாலும்… அதனின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாகப் படரும் பொழுது
1.ஒரு விஷத்தன்மை கொண்ட நிலையோ
2.ஒரு உணர்வின் உந்து விசை கொண்ட உணர்வுகளையோ எடுத்து அலைகளாக வரப்படும் பொழுது
3.தாழ்ந்த உணர்வு கொண்ட சாந்தமான உணர்வு கொண்ட அலைகள் இதைக் கண்ட பின் அஞ்சி ஓடி வருகின்றது

அஞ்சி ஓடி வரும் பொழுது ஒவ்வொரு நிலையிலும் எதிர்ப்படும் நிலைகள் மோதித்தான் சுழல் காற்றுகளும்… பின் மற்றொன்றைச் சுழலச் செய்வதும்… அதன் உணர்வின் தன்மை அணுக்களின் தன்மைகளை உருமாற்றுவதும்… எல்லாம் ஒன்றாகச் சேர்த்துத் தனக்குள் கவர்ந்து கொள்ளும் போது புதுப் புது வித்தாக மாறுகின்றது.

இதைப் போன்றுதான் ஆறறிவு கொண்ட மனிதன்… “வாழ்க்கை…” என்ற சுழற்சியின் நிலைகளில் வளர்ந்து வரப்படும் பொழுது எத்தனையோ எதிர்மறையான உணர்வுகள் மோதி நமக்குள் புயலாக மாறுகின்றது

மாறினாலும் அந்த ஆறாவது அறிவை வைத்துப் அந்தப் புயலை அடக்க முடியும்.

எப்படி…?

1.வாழ்க்கையில் வந்த நஞ்சினை அடக்கித் தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றி
2.ஒளியின் சரீரமாகச் சப்தரிஷி மண்டலமாக நிலை கொண்டிருக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம் என்றால்
3.அந்தப் புயல்களை நாம் அடக்க முடியும்.

அதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்று சொல்வது.

நம் ஆறாவது அறிவை வைத்து ஒளியாக உருவாக்கும் நிலையை நமக்குள் எவ்வாறு வளர்ப்பது…? என்ற உண்மைகளைத் தான் நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் காட்டுகின்றது.

புத்தர் ஞானம் பெற்ற நிலை - ஈஸ்வரபட்டர்

புத்தரை ஆண்டவனாய் வழிபடுகின்றனர். புத்தரின் நிலையென்ன...?

சித்தார்த்தராய் அரச குடும்பத்தில் அவதரித்து வாழ்ந்தவருக்கு ஒரே நாளில் துறவு நிலை கொண்ட ஞான நிலை போதி மரத்தடியில் பெற்றார். எந்த நிலையில் அவரின் நிலை இப்படி வந்தது...?

பிறவியின் ஆரம்ப நாள் தொட்டு வாழ்ந்த காலத்தில் அவரின் நிலை எல்லோரின் நிலையை ஒத்த வழியில்தான் வந்தது. ஞான நிலைக்கு அவர் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திடாமல் போதி மரத்தடியில் வந்ததின் நிலையென்ன...?

அவரின் நிலை சித்தார்த்தராய்ப் பிறவி எடுத்து அவர் அரச காலத்துடன் மட்டும் ஏற்பட்டதல்ல.

இவ்வுலகில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி பல ஜென்மங்கள் வாழ்ந்த நாட்கள் தொட்டே...
1.அந்நிலையில் அவரின் தொடர்புடைய ரிஷிகளின் நிலையிலிருந்தெல்லாம் அவர் சேமித்து வைத்து
2.அவருடனே வளர்ந்த ஜீவ சக்தி எந்தப் பிறவியிலும் செயல்படாமல்
3.அவர் கடைசியாக எடுத்த உடலில் ராஜ வம்சத்தில் பிறந்ததின் நிலையினால்
4.வளர்ந்த சூழ்நிலை வளர்ப்பின் நிலை இவற்றினால் அவரின் முன் ஜென்மத்தில் சேமித்த நற்சக்தியுடன் மோதுண்டவுடனே
5.இக்கலவையின் சக்தி கூடி அந்த ஞானி வழிதனை அவரும் வழி நடத்தி ஞானோதயம் பெற்று
6.சூட்சும உலகினில் பலருடன் கலந்து... ஆண்டவனாய் அருள் செய்திடும் அன்பு நிலையில் உள்ளார்.

இவ்வுலகினில் உதித்து... உலகுடனே ரிஷிகளாய் சப்த ரிஷிகளாய்க் கலந்தவர்களின் எண்ணக் கலவைகளின் நற்சக்திகள் அனைத்துமே ஒன்று கூடி இப்பூவுலகிற்கே பூ மழையாய்ப் பல நிலைகளைச் செய்விக்கின்றன.

ஆத்மீக நெறிதனில் ஞானியாய் சித்தனாய் ரிஷியாய் சப்த ரிஷியாய் ஓங்கி நிற்கும் அனைத்து நற்சக்திகள் கொண்ட நல் ஆத்மாக்களின் நிலையில் இன்று நீங்கள் வழிபடும் ஆலயங்களில் இருந்தெல்லாம் அவரவர்களின் எண்ண நிலைக்கேற்ப அவர்களின் சக்தி நிலை ஒன்று கூடிய ஆண்டவனாய்ச் செயல்படுகின்றது.

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று... கோயிலில்லா ஊரில் குடியிருத்தல் வேண்டாம்...!" என்றெல்லாம் உணர்த்தினர் நம் முன்னோர்.

பக்தி நிலையை வளர்க்கவும் ஆத்மீகத்தை நிலைநிறுத்தவுமே இந்நிலைகளை எல்லாம் நமக்குப் போதித்தனர்.

காட்சி:
ஒரு பெரிய யானை விபூதிப் பட்டையுடன் காட்சியளித்து பக்தர்களுக்கு பக்தரின் சிரசில் தும்பிக்கை வைத்து ஆசிர்வாதம் செய்கின்றது. அந்த யானையே ஒரு மகா ரிஷியாய் உருமாறிக் காட்சியளித்து ஆசிர்வதிக்கின்றார்.

மக்களின் எண்ணத்தில் அந்த யானையையே ஆண்டவனாய் வணங்கிடும் பொழுது யானையின் நிலையிலும் அந்த ரிஷிகளே வந்து வணங்கிடும் ஆத்மாக்களுக்குச் சில நிலைகளில் பக்தி கொண்டவருக்கு ஆசிர்வதிக்கின்றனர்.

காட்சி:
பாடை கட்டி நான்கு பேர் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வது போலவும்... “கோவிந்தா...!” என்ற கோவிந்த ஜெபம் செய்து கொண்டே செல்வது போலவும்... காரியம் முடிந்து வந்து கை கால் அலம்பி ஜோதியைக் காண்பது போலவும் காட்சி தெரிகிறது.

ஆண்டவனின் நிலையை உணர்த்திவிட்டு இந்நிலையின் காட்சியை “ஏன் அளித்தேன்...?” என்று எண்ண வேண்டாம்.

1.புத்தருக்கே இந்த நிலையைக் கண்ட பிறகுதான் ஞான நிலையே வந்தது.
2.எந்த நிலையையும் ஒரு நிலையாய்க் காணும் ஆத்ம ஜெபம் நமக்கு வேண்டும்.

ஆண்டவனின் அருள் ஆலய நிலையில் மட்டும் தான் கிட்டும் என்பதல்ல.

ஆலயங்களுக்குச் சென்று ஆத்ம ஜெபம் பெறும் பொழுது நம் ஆத்மா அமைதி பெறுவதற்குத் தான். வாழ்க்கையுடன் வந்து மோதிடும் பல நிலைகளில் இருந்தெல்லாம் நம் எண்ணப் பயத்தையும் எண்ணச் சோர்வையும் அந்த நிலைக்குச் சென்றிட்டால் அமைதி கொண்டு வந்திடவே நமக்கு வழிப்படுத்தி வைத்தனர் நம்மில் கலந்த ஆண்டவன்கள் எல்லாம்.

காட்சி:
ஜெகஜோதி மயமாய் ஒரு தேர் தானாக ஆடி வருவது போல் காட்சி. அந்தத் தேரே புஷ்பமாய் ஒரு மகா சப்தரிஷியால் அருள் புரிந்து ஆசிர்வதித்திடும் காட்சி தெரிகிறது.

1.காட்சியில் கண்டிடும் இந்த ரிஷியின் அரும் பெரும் சக்திகள் அனைத்துமே
2.இதைக் காண்பவருக்கும் இதை எழுதுபவருக்கும் இவற்றைப் படிக்கும் என் ஆசிகள்.

தேரில் வந்தவர் புத்தர்...!

April 26, 2022

யாம் கொடுக்கும் உபதேசங்களைப் பதிவு செய்து கொண்டால் மற்ற “எதுவுமே கடினமில்லை...”

உதாரணமாக... பள்ளியில் பாடங்களைப் படிக்கும் போது “விஞ்ஞான அறிவு வந்த பின்...” விஞ்ஞானத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதில்லை.
1.பதிந்த நிலைகள் மீண்டும் அதைப் படித்துணரப்படும் போது மூலத்தின் கூறை அறிந்து
2.தன் வாழ்க்கைக்குப் பாட நிலைகள் கொண்டு வாழ வழி வகுக்கின்றது.

இதைப் போன்று தான் இந்த இயற்கையின் நிலைகளை மகரிஷிகள் காட்டிய உணர்வின் அடிப்படையில் அவர்கள் இட்ட காரணப் பெயரை வைத்து (சாஸ்திரங்கள்) நாம் வளர்ந்து கொண்டால் இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும்…? என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆகவே அதை நாம் பதிவு செய்து கொண்டால் தான் மீண்டும் நினைவு கொள்ள முடியும்.

பள்ளியில் படிக்கப்படும் போது
1.முதலில் “பதிவாக்கிக் கொள்கின்றோம்...”
2.அந்தப் பதிவின் தன்மை நினைவு வரும் போது தான் படித்த நிலைகளை “உணர முடிகின்றது...”
3.உணர்ந்த நிலைகள் கொண்டு அது “செயலாக்கத்திற்கு வருகிறது…”

அதாவது… தான் படித்த நிலைகள் கொண்டு இணைத்து மற்ற நிலைகளை வைத்து ஒரு புதுப் பொருளை உருவாக்க முடிகின்றது.

ஆக… விஞ்ஞானி தான் படித்துணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு டெக்னிக்கல் (TECHNICAL) என்ற இந்த உணர்வின் தன்மை கொண்டு இயந்திரத்தின் உறுப்புகளை உருவாக்க முடிகிறது.

மனிதன் பதிவு செய்து கொண்ட உணர்வின் இயக்கம் எதுவோ அதனின் நினைவின் இயக்கமாகத் தான் இயக்குகின்றது.

இதைப் போன்று தான்
1.மெய் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை நீங்கள் பதிவாக்கி
2.அந்தப் பதிவான நிலைகளை இயக்கப்படும் போது இந்த மனித வாழ்க்கையில் தவறில்லாமல் செயல்பட முடியும்.

சந்தர்ப்பங்களில் நமக்குள் தவறுகள் உட்புகுந்து உருப்பெறும் சில நிலைகள்
1.தவறின் நிலையாக இயக்கச் செய்வது எது…? தவறை அடக்குவது எது…? என்ற நிலைகளை நமக்குள் பதிவு செய்து கொண்டால்
2.தவறு வரும் நேரங்களில் யாம் உபதேசிக்கும் உணர்வின் தன்மைகளை நினைவுக்குக் கொண்டு வந்தால்
3.அது உங்களுக்குத் தெளிவின் நிலையை ஊட்டும்.

அதனின் அடிப்படையில் கூட்டுத் தியானத்தின் மூலம் எடுக்கும் வலுக் கொண்ட சக்தியால் ஞானிகள் பால் நினைவின் ஆற்றல் நமக்குள் பெருகி தவறின் நிலைகள் நம்மை இயக்காது… அந்தத் தவறைத் தடுத்து அதைத் தவிர்த்து நமக்குள் இயக்காவண்ணம் தடுக்க முடியும்.

அத்தகைய அந்த நிலை பெறச் செய்வதற்கே இந்த உபதேச வாயிலாக ஞானிகள் உணர்வுகளை உணரும் தன்மையை “உங்களுக்குள் ஒவ்வொரு உணர்விலும் தொட்டுக் காண்பிப்பது…”

அதன் வழியில் ஒவ்வொரு உணர்வின் இயக்கத்தையும் அது எவ்வாறு இயக்குகிறது…? என்று அறிகின்றோம்.
1.அந்த உணர்வின் அறிவைக் கிளர்ந்து எழச் செய்து அந்த ஞானிகளின் உணர்வை இணைக்கச் செய்து
2.தீமைகளை அகற்றும் மார்க்கங்களை உங்களில் இணைக்கப்படும் போது தான் இந்த உணர்வின் அறிவாற்றல் பெருகி
3.இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை அடக்கி அதனின் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் திறன் பெறுவீர்கள்.

அவ்வாறு பெற்றவர்கள் தான் மகரிஷிகள்…. அவர்கள் பெற்ற உணர்வின் தன்மையைத் தான் மீண்டும் மீண்டும் உங்களிடம் பதிவு செய்து உணர்த்துகின்றோம் (ஞானகுரு).

உலக மாற்றத்தைப் பற்றிய உண்மைகளை வெளிட அச்சத்துடன் உள்ளார்கள் - ஈஸ்வரபட்டர்

மாறப் போகும் இக்கலியின் கால நிலைக்காக… இதை உணர்த்துகின்றேன்.

1.இக்கலியுடனும்… இக்கலிக்கு முந்தைய காலங்களிலும்
2.இப்பூமியில் உயிரணுவாய் உதித்து உயிராத்மாவாகி உங்களுடனே வாழ்ந்த
3.இவ்வுலகுடன் ஒன்றிய நிலை கொண்ட ரிஷிகளின் அருளாசியினால்
4.இவ்வுலகத் தன்மை மாறப் போகும் தற்போதைய காலத்தில்
5.உங்களுடன் கலந்து வாழ்ந்த எங்களின் ஆசையினால்
6.இம்மாற்றத்திலிருந்து அணுவாய்… ஆத்மாவாய்… அனைத்து அறிவும் ஆற்றலும் சக்தி கொண்ட மனித உடல் பெற்ற ஆத்மாக்களை
7.இப்பேறு பெறும் பாக்கிய நிலை அடைந்தவரை நம்முடன் அழைத்திடவே (ரிஷிகளுடன்)
8.இந்நிலையில் இப்போதனை வழியினைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

பூமியின் பூமத்திய ரேகையின் நிலையைப் பற்றி இங்கே உணர்த்துகின்றோம். இவ்வுலக நிலை கால நிலைகேற்ப உஷ்ண நிலையும் மாறு கொள்கின்றது. காற்றும் மழையும் பனியும் குளிரும் அனைத்துமே மாறி மாறி வருகின்றன.

அது எவ்வாறு என்ற நிலையில்… இப்பூமியின் பூமத்திய ரேகையின் நிலையில் அதன் சுற்றும் தன்மையில் சூரியனின் நிலைக்கு சூரியனின் தூர விகிதப்படி இவ் இயற்கையின் நியதிகள் மாறுபட்டு வருவதாகப் பண்டைய காலம் தொட்டு இன்றளவும் உணர்ந்து வருகிறீர்கள்.

பல நாட்களுக்கு முதலிலேயே வான சாஸ்திரப்படி என்றென்று சந்திர சூரிய கிரகணங்கள் வருகின்றன என்றும் சரியாக உணர்த்துகின்றனர்.

1.இவ்வான மண்டலங்களில் சுழற்சியில் ஏற்படும் நிலைகளையெல்லாம் பல நிலைகளில் அறிந்துள்ளனர்
2.இருந்தாலும் எல்லாவற்றையும் வெளியிடும் அச்ச நிலையில் உள்ளனர்.

இப்பூமி சுழலும் தன்மையில் ஏற்படும் ஒளி (சூரியனின் ஒளிக்கதிர்கள்) சில இடங்களில் படுவதே இல்லை. என்றுமே இருண்ட பூமியாக சில இடங்கள் உள்ளன.

ஆனால் இப்பூமியின் அசைவு காலத்தில் (மாறப் போகும்) அவ்விருண்ட நிலை கொண்ட இடங்களெல்லாம் ஒளிக்குச் சிக்கிடும் இடங்களாக வந்துவிடும்.

சில இடங்களை இப்பூமியின் மாற்றத்தின்போது ஏற்படும் அசைவுக்குக் குறிப்பிடுகின்றேன்.
1.இன்று மக்கள் நிறைந்து வாழ்ந்திடும் சீனாவும் அமெரிக்காவும் இம் மாற்றத்திற்குச் சிக்கிடும் நிலையில் உள்ளன.
2.அதிக மாற்றம் கொள்ளும் நாடுகள் இவை இரண்டும்தான்…!

மற்ற நாடுகளில் மாற்றம் வந்தாலும் சில நிலைகளில் அந்நீரின் மட்டம் ஏறாமல் நிலமாக இருந்திடும்.

இவ்வுலக மாற்றத்தினால் இன்று இருண்ட நிலையில் உள்ள பூமிகள் எல்லாம் ஒளிக்கு வந்துவிடும்.
1.இன்று செயற்கையுடன் ஒன்றிய வளர்ச்சியடைந்த நாடுகள் என்று நாம் செப்பிடும்
2.பூமிகளில் சில இருண்ட நிலைக்குச் சென்றிடும்.

இம் மாறப்போகும் இப்பூமியின் தன்மையுடன் இயற்கை சக்தியும் இன்றுள்ள நிலையிலிருந்து மாறும் தன்மை படுகின்றது. சித்திரையில் உள்ள வெயிலும் மார்கழியின் குளிரும் இம்மாற்றம் கொள்ளும் இப்பூமியின் நிலையினால் மாற்றம் கொண்டு சுழலப் போகின்றது.

அனைத்து நிலைகளையும் நீங்களும் காணப் போகின்றீர்கள்...!

1.இவ்வெண்ண சக்தியின் செயலைக் கொண்டு ஜெப சக்தியை உயர்வாக்கி
2.ஜெபம் கொண்ட வாழ்க்கையை ஜெயித்தே வந்திடுங்கள்.
3.வழியின் தொடர்பினை அறிந்துள்ளீர்… இனி வருவதற்குச் சிரமம் இல்லை.

ஞானத்தின் வழியறிந்து செயல்பட்டு எல்லோரும் ஞானியாகி… அந்த வழித்தொடரினை வழிப்படுத்தியே “சப்த ரிஷிகளுடன் சங்கமித்தே சகல நிலையுடன் கலந்திடுவோம்…” என்ற ஓ…ம் என்ற நிலையினிலே மன நிலையை ஒன்றச் செய்திடுங்கள்.

இவ்வுலகம் மட்டுமல்ல… அனைத்து உலகங்களுமே நமதாக்கி அனைத்து உலங்கங்களுக்கும் சொந்தமான அவ் ஆதி சக்தியுடனே கலந்திடுவோம்… என்ற “ஒரு நிலை கொண்ட தைரியமுடன் கலந்திடுங்கள்…!”

1.எவ்வாண்டவனும் வந்து நம்மை அழைத்துச் செல்வதல்ல அந்நிலைக்கு…
2.நம்முடன் கலந்துள்ள நம் ஆத்மாண்டவனை (உயிரான ஈசனை) நாம் வழி நடத்திட்டால்
3.அனைத்து ரிஷிகளின் அருளைப் பெற்று… அனைத்துடனும் நாமும் கலந்திடலாம்.
4.ஒன்றிடும் பக்குவ நிலையையே அறிந்து… பக்குவப்படுத்தி வளர்ந்து கல்கியின் நிலைக்கே வந்திடுங்கள்.

April 25, 2022

ஒலி... ஒளி... அலைவரிசையில் தான் நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்தாகிறது... அடிபடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வின் ஒலி ஒளிகளைச் சூரியனுடைய காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.

இன்று டி.வி.யில் படங்களை எவ்வாறு பார்க்கின்றோம்...?

இயந்திரத்தின் துணை கொண்டு ஒரு மனிதனைப் படமாகி அதை ஒலிப் பேழைகளில் பதிவு செய்கிறார்கள்... வீடியோ. அப்போது அதனுடைய படச்சுருள்களில் அந்த உருக்களை நாம் பார்க்க முடியவில்லை.

பதிவு செய்ததை மீண்டும் காந்தப் புலனறிவால் ஒரு இயந்திரத்தின் துணை கொண்டு இயக்கப்படும் போது ஒலி/ஒளிப் பேழைகளிலிருந்து அலைவரிசைகளை வெளிப்படுத்துகிறது. அதைத் தான் நம் டி.வி பெட்டி கவர்கிறது.

காந்தப் புலனறிவால் எந்த மனிதனைப் படமாக உருவாக்கப்பட்டதோ அவன் எந்த நிலையில் இருந்தானோ அதைத் திரைகளில் நாம் காணுகின்றோம்.

இதே காந்தப் புலனறிவால் தான் அதுவும் கவர்கின்றது அதனின் உணர்வின் தன்மை ஒலி ஒளி என்ற நிலைகளில் அது பரப்புகின்றது. இது விஞ்ஞானம்.

அதே போன்று தான்
1.அடிபட்ட அந்த மனிதனின் உடலிலிருந்து வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் பொழுது
2.ஒலி ஒளி என்ற நிலையில் அலைவரிசைகளில் வெளிப்படுகின்றது... சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்கின்றது.
3.அப்போது எந்த மனிதனை நாம் அங்கே உற்றுப் பார்க்கின்றோமோ அதே ஒலி ஒளி என்ற நிலைகளில்
4.நமக்குள் அந்த உடலின் உருவத்தையும் அதிலிருந்து வெளி வரும் சோக நாதத்தையும் நாம் பார்க்கின்றோம்.

அதை நமக்குள் உணர முடிகின்றது.

உயிரில் இருக்கும் காந்தப்புலன் மகாலட்சுமி என்றாலும் நாம் உற்றுப் பார்க்கும் ஒவ்வொன்றையும் லட்சுமி தனக்குள் கவர்ந்து விஷ்ணு என்ற தன் கணவனுடன் இணைந்து அந்த உணர்வின் சக்தியை (விபத்தான) அதே வேதனைப்படும் உணர்வின் அணுவாக மாற்றுகின்றது பிரம்மமாக.

நாம் கண்ணுற்றுத் தான் பார்த்தோம்... ஆனால் உயிர் அதனின் ஜீவ அணுவாக மாற்றுகின்றது விபத்தில் சிதைந்து போன அந்த உணர்வின் தன்மை அது நமக்குள் உருப்பெறப்படும் பொழுது
1.அவன் எத்தகைய வேதனைப்பட்டானோ அதே உணர்வின் தன்மை கொண்டு வரும் போது
2.இரவிலே அவன் சிதைந்த உணர்வின் தன்மை கனவாக வருகின்றது
3.அவன் உடலைப் பார்த்திருந்தாலும் அவனின் உருவம் வராது... வேறு உருவமாகத் தெரியும்.

உடல்கள் சிதைவதையும் சிதைந்து கொண்டே இருப்பதும் போன்ற இந்த அச்சுறுத்தும் உணர்வுகள் நம் ஆன்மாவிலிருந்து உடலுக்குள் செல்லும் போது ஒவ்வொரு குணத்திலும் இந்தச் சிதைந்திடும் உணர்வுகள் பரவிப் பரவி நாம் மனிதனாக உருப்பெற்ற நிலைகள் மறைந்துவிடுகிறது.

அச்சுறுத்தும் நிலைகளும் அஞ்சிடும் நிலைகளும் நமக்குள் வலுப் பெற்ற நிலைகளாக உருப்பெற்று அந்த அணுவின் தன்மை நமக்குள் பரப்பத் தொடங்குகிறது.

அந்த மனிதன் விபத்தில் அவன் எப்படிச் சிதைந்தானோ அதிலே உருவான அணுவின் தன்மை அதனின் மலத்தை உமிழ்த்தும் போது நம் உடல்கள் சிதைந்து விடுகிறது.

எந்த எலும்பு அவனுக்குள் ஒடிந்ததோ அதிலிருந்து வந்த உணர்வின் அலைகளை நமக்குள் இருக்கும் காந்தப் புலனறிவுகள் நுகர்ந்த பின்
1.அதாவது முறிந்த எலும்பின் உணர்வுகள் நம் எலும்புகளில் இது பட்டுவிட்டால்
2.நம் உடலில் எலும்பை உருவாக்கும் அந்த அணுவின் மலங்கள் அது குறையத் தொடங்கிவிடும்.
3.பின் எலும்புகளிலே சிதைவின் தன்மை ஆகி அடுத்து ஏதாவது பட்டால் உடனே சடக் என்று முறிந்துவிடும்…. ஆக மாவு போல் ஆகும்.

ஆகவே அங்கே எலும்புகள் நொறுங்கியது... நொறுங்கிய உணர்வின் தன்மை வெளி வந்தது.
1.அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகளை இங்கே கவர்ந்தது நமது கண்.
2.இந்த உணர்வின் தன்மை ஓ என்று நமக்குள் ஜீவனாகின்றது... ஜீவ அணுவாகச் சிவமாகின்றது (உடலாகிறது)

சிவத்திற்குள் அணுவின் தன்மை ஆன பின்... அது தன் உணர்வினை ஏங்கிப் பெற்று நொறுங்கிய உணர்வின் மலத்தை நமக்குள் விடும் போது நம் எலும்புகளைத் தேய்பிறையாக மாற்றுகின்றது.

இது போன்ற நிலைகளிலிருந்து விடுபட
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள்வழிப்படி,
2.அந்த மெய்ஞானியரின் அருள் ஒளியை நமக்குள் கூட்டி
3.இந்த அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழக வேண்டும்.

நாம் இரவில் படுத்து உறங்கும் பொழுது
1.அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணி
2.நம்மைத் தாக்கும் தீமைகளிலிருந்து
3.நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும்.

“நான்…” செய்வது தான் சரி…! என்ற எண்ணத்துடன் இருந்தால் வளர்ச்சியே இருக்காது - ஈஸ்வரபட்டர்

கேள்வி:
எண்ணத்தில் தூய்மையும் நற்செயலுடனும் இருக்கும் ஒருவருக்குத் தியானம் அவசியமா…?

மற்றவரை நோக வைக்கும் எண்ணமோ செயலோ இல்லை. தான் செய்யும் காரியமும் எண்ணமும் சரியானதாகவும் இருப்பதாக இருக்கின்றது. தான் செய்வது சரியா…? நியாயமா…? என்பது தெரியவில்லை.

1.எனக்கு நியாயம் என்று தோன்றுகிறது.
2.ஆனால் மற்றவர்கள் அதை ஏற்பது இல்லை...!

என் நினைவிலும் செயலிலும் தவறு இருந்தால் அதைத் திருத்திக் கொள்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

பதில்:
எண்ணமுடனும் உணர்வுடனும் நல் நிலை பெற்றிருந்தாலும் பக்தி என்ற அன்பு நிலையை வளரவிடாமல் “நான்…” என்ற நிலைப்படுகின்றது இந்த வினாவின் நிலை.

கேள்வி கேட்டவர்:
அது சரியா… தவறா..! என்பது தெரியவில்லை. “நான்…” என்று எனக்கு உணரும் நிலை எனக்கு நன்றாகத் தெரிகின்றது.

பதில்:
உணர்வுடனே… “தன் நிலையை நல் நிலை என்றுணர்ந்து.. நான்…!” என்ற உணர்வையும் கலக்கிவிட்டதினால் வந்த நிலை உன் நிலை.

1.ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இவ்வியற்கையின் சக்தியில் எவையுமே இல்லை
2.இந்த நிலையில் தன் உணர்வை நல்லொழுக்கப்படுத்தி அவ்வொழுக்க நிலைக்கே அடிமைப்பட்டு
3.அந்த நிலையையே தெய்வமாக்கித் தன் உணர்வுடன் நானாக இருந்து என்னம்மா பயன்…?

அனைத்து நிலைகளை அறிந்த சப்தரிஷிகளுமே தனித்த நிலையில் இயங்குவதில்லை. உணர்வுடன் உணர்வை ஒன்றச் செய்து தான் செயலாக்குகின்றார்கள்.

1.நீ அமைத்துக் கொண்ட இந்நிலையிலிருந்து விடுபட்டால் தான்
2.உன் உணர்வுடன் சேமித்துள்ள நற்சக்திகள் செயல் கொண்டிட முடியும்.

நல் எண்ணமும் அவ்வெண்ணமுடன் கூடிய உணர்வினால் நம் பார்வையின் சக்தியும்… நாம் செப்பிடும் சொல் அழகும்… அன்பான ஆசை வாழ்க்கை நிலையும் தான் ஜெப வாழ்க்கையம்மா.

“ஜெபம் என்பதுவே வாழ்க்கையுடன் ஒன்றிட்ட நல் உணர்வைப் பெற்றதுவே…”

எண்ண நிலையை ஒரு நிலை கொண்டு உண்மையுடனும் அன்புடனும் அன்பாசையுடனும் உள்ளவர்களுக்குத் தெய்வ நிலை கிட்டும். தெய்வம் என்பதுவே இந்த நிலை பெற்றோரைத்தான்.

1.ஆதிசக்தியின் இயற்கை சக்திகள்தான் அனைத்து சக்திகளும்.
2.நம்மையே நாம் இவ் இயற்கையுடன் தெய்வமாகக் கலக்கவிட்டு வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இப்பேராசைக்கும் வெறி உணர்வுகளுக்கும் மற்றத் தீய சக்திகளின் உணர்வுகளுக்கும் நாம் அடிமையாகாமால் வாழ்வதற்கே “நல் ஜெபம் எடுத்திடுங்கள்…” என்று மீண்டும் மீண்டும் சொல்வது.

April 24, 2022

நன்றிக் கடனை எப்படித் தீர்ப்பது…?

நாம் யாரும் தவறு செய்யவில்லை. பிறருக்கு நாம் பல நன்மைகளைச் செய்து இருக்கின்றோம். ஆனால் நாம் நன்மை செய்த நிலைகள்…
1.அந்த உதவி செய்த நன்றிக்காக நண்பன் உடலை விட்டுப் பிரியும் போது
2.நம் மேல் பற்று கொண்டு அந்த ஆன்மா பிரிந்து விட்டால்
3.அந்த ஆன்மா நம்மை அறியாமலேயே நம் உடலுக்குள் வந்துவிடும்.

நண்பனை நாம் உடலுடன் எப்படிப் பார்த்து உதவி செய்தோமோ அதே போல் நமக்குள் வந்தாலும் அந்த சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் என் உடலில் உள்ள அந்த ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.இந்த நண்பன் நம்முடன் ஒன்றி வந்தாலும்
2.அந்த நண்பனிடத்தில் விளைந்த தீய வினைகள் நம்மிடத்தில் விளையாது நம்மையும் காக்கலாம்
3.அந்த நண்பனின் உயிர் ஆன்மாவையும் பிறவியில்லா நிலை அடையச் செய்யலாம்.

அதாவது உங்களின் நிலையிலிருந்தே அந்த ஆன்மாவை உயர்ந்த நிலை பெறச் செய்ய முடியும்

ஒவ்வொரு நாளும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும்… எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ணி அந்த வலுவைச் சேர்க்க வேண்டும்.

அந்த இன்னொரு உடலில் தான் வாழும் போது குடும்பத்தில் சங்கடத்தினாலோ வெறுப்பாலோ வேதனையாலோ உருவான உணர்வுகள் அங்கே எப்படி நோயாக விளைந்ததோ… அந்த உடலை வீழ்த்தியதோ… அதே சமயத்தில் “உதவி செய்தான் நண்பன்…!” என்ற எண்ணத்துடன் பற்று கொண்ட நிலையில் அந்த ஆன்மா நம்முள் வந்தாலும் அதைப் போன்ற தீமைகளை அகற்ற சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ண வேண்டும்.

அவ்வாறு பல முறை செய்யச் செய்ய நம் உடலில் இருக்கக்கூடிய நண்பருடைய உயிரான்மா நமக்குத் தீமை விளைவிக்காது அதற்கும் அந்த நன்மைகளைப் பெறச் செய்கின்றது,

ஆகவே பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தாலும் அந்தக் கஷ்டத்தை உருவாக்கும் உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளையாது தடுக்க…
1.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மக்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.பிறருடைய கஷ்டங்களையோ நஷ்டங்களையோ பத்திரிக்கை வாயிலாகப் படித்துணர்ந்த நிலையில்
4.அது நமக்குள் தீமை விளைவிக்கும் வித்தாக விளைந்திடாது தடுக்கவும் நம்மைக் காத்திடவும் முடியும்.

ஆகவே மேல் அழுக்கைப் போக்க நீரை ஊற்றி எப்படிக் குளிக்கின்றோமோ… தங்கத்தில் செம்பும் வெள்ளியும் சேர்ந்து விட்டால் திரவகத்தை ஊற்றி எப்படிச் சுத்தப்படுத்துகின்றோமோ… கைகளில் அழுக்குப்பட்டால் சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்துவது போன்று
1.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியை நம் உடலுக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த தீவினைகளை அகற்றி
2.நன்றியின் உணர்வாக எண்ணி நம்முள் வந்த ஆன்மாக்களுக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைச் செலுத்தி
3.நமக்குள் தீமையாக விளைவிக்காத அதைத் தடுத்து
4.சப்தரிஷி மண்டலத்துடன் அவர்களை இணையும் நிலையைச் செய்வதே நல்லது.

நாம் அனைவரும் உலகிற்கு வழிகாட்டியாக வாழ்ந்து காட்ட வேண்டும் - ஈஸ்வரபட்டர்

1.இயற்கை உணர்வுடனே கலந்திட்ட நல் நிலை பெற்றோரின் எண்ணச் சக்திக்கு
2.இவ்வெண்ணத்துடன் கலந்திட்ட இயற்கை சக்தியும் உறுதுணையாக நிற்கும்

இயற்கையின் தன்மையில் ஒரே நிலை இருப்பதில்லை.

காற்றும் மழையும் குளிரும் உஷ்ணமும் கால நிலைக்கேற்ப மாறிக் கொண்டு வருகின்றன. இயற்கை அனைவருக்கும் பொதுவான சக்தி தான்.

அச்சக்தியின் அருளைச் சாதக நிலைப்படுத்தி எண்ணத்தில் உயர்வு கொண்டோரின் நிலையின் ஜெபத்திற்கு அவர் எண்ண ஜெபத்தின் நிலைக்கு இயற்கையும் ஒத்துழைக்கும்.

எண்ணத்தில் ஏற்றுவித்த இந்நல் சக்தியின் நிலை கொண்டு இயற்கையின் சீற்றத்தையும் நாம் கட்டுப்படுத்திடலாம்.

1.நம் எண்ணமே அத்தெய்வ சக்தியை ஈர்த்து ஜெப நிலையில் உள்ள பொழுது…
2.இவ் இயற்கையில் கலந்திட்ட பல நிலை கொண்ட அமில சக்தியை நம் எண்ணத்தின் சக்தியைக் கொண்டு திசை திருப்பிடவும்…
3.ஜெபப்படுத்தி அவ் இயற்கையின் சக்தியையே நம் எண்ண நிலைக்கொப்ப நிலைப்படுத்திடலாம்.

ஆனால் எண்ணத்தில் கறையுண்டோருக்கு இயற்கையும் ஒத்துழைப்பதில்லை.

இன்றைய மனித ஆத்மாக்கள் தன் நிலை உணர்ந்திடாமல்… தான் பிறவி எடுத்து வாழ்ந்த நிலையையும் மடியும் நிலையையும் எண்ணத்தில் கொண்டு
1.இவ் இடை கொண்ட வாழ் நாட்களில் இருந்தென்ன பயன்…? என்றும்
2.இவ்வுடலுடன் நாம் இருந்து அடையும் நன்மை என்ன…? என்றும்
3.இயற்கை எய்திடும் (இறப்பு) நாம் இவ்வாழ்க்கையில் சிக்கி மனக் கலக்கப்பட்டு வாழ்ந்து என்ன பயன்…? என்றும்
4.எண்ணும் எண்ணத்தில்தான் பல ஆத்மாக்கள் உள்ளன.

எண்ணத்திலேயே தன் நிலையை வினாவாக்கி வாழ்பவருக்கு… இவ்வுடலுடன் மட்டுமல்ல… இவ்வுடலை விட்டுச் சென்றிட்ட ஆத்ம நிலையிலும் “இவ்வினா நிலைதான்…” சுற்றிக் கொண்டே இருக்கும்.

இயற்கையின் சக்தியில் இயற்கையே அளித்திட்ட இயற்கையுடன் ஒன்றிய நம் உயிராத்மாவை இவ்வுடலுடன் வாழ்ந்திடும் நாட்களிலும் சரி… ஆத்மா பிரிந்து ஆவியுடன் சுற்றிக்கொண்டுள்ள நிலையிலும் சரி… இவ் இயற்கையுடன் ஒன்றியே தான் உயிரணு உதித்த நாள் முதற் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையும் அமில சக்தியும் நம் எண்ண சக்தியுடன் என்றென்றும் அழியாமல் சுற்றிக் கொண்டுள்ளன.

இப்பிறவிக்கு நம் எண்ணம் கொண்டுதான் வருகின்றோம்… ஈன்றவரின் நிலையினால் மட்டுமல்ல…!

நாம் பிறவி எடுத்த நற்பயனையே நற்சக்தியாக்கி… இவ்வுலகுடன் ஒன்றியே நம் உயிராத்மாவும் தொடர்பு கொண்டு… நம் பிறவிப் பயனைப் பெற்று…
1.நாம் பிறந்திட்ட உண்மை சக்தியினை இவ்வுலகில் நிலை நிறுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.
2.அகஸ்தியனைப் போன்றும் போகனைப் போன்றும் கொங்கணவரைப் போன்றும் ஒவ்வொரு நிலையிலும் நல் உணர்வு கொண்டு
3.நம்முடன் நம்மை வழி நடத்திச் செயல் கொண்டு செயலாக்கிடும் பல ரிஷிகளின் நிலை பெற்று வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

இயற்கையின் சக்தி அனைத்திற்கும் பொது சக்தி. அச்சக்தியின் நல் உணர்வை ஈர்த்து நம் ஆத்மாவை நிலைப்படுத்தி வாழ்ந்து காட்டிடல் வேண்டும்.

April 23, 2022

அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் பரவுவது போல் மெய் ஞானிகளின் அருள் சக்தியைப் பரவச் செய்யுங்கள்

 

இன்று பெரும்பகுதியானவர்கள் என்ன நினைக்கின்றார்கள்...? சாமி (ஞானகுரு) வந்தார்... ஆசீர்வாதம் கேட்டேன்...! என்னைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னார்...! அவர் தான் காப்பாற்ற வேண்டும்... என்று சாமியைத் தான் எண்ணுகின்றார்கள்.

உங்கள் கஷ்டம் எல்லாம் நீங்கிவிடும் என்று யாம் வாக்கைக் கொடுத்தால் அதை யாரும் பிடித்துக் கொள்வதில்லை...!
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெறுவீர்கள்
2.உங்கள் உடலில் உள்ள நோய்களை அது பிளந்துவிடும்
3.நல்லது நடக்கும்... அதை நீங்கள் பெறுங்கள்...! என்று தான் இங்கே உபதேசிக்கின்றோம்.

ஆனால் அதை யாரும் எண்ணுவதில்லை.

விபூதி வேண்டும்... பிரசாதம் வேண்டும்... சாமி காப்பாற்றி விடுவார் என்ற இந்த எண்ணம்தான் வருகின்றது.
1.சாமி சொன்ன வழியினைப் பின்பற்றினால் அந்த எண்ணம் நம்மைக் காப்பாற்றும் என்பது நினைவுக்கு வருவதில்லை
2.சாமி சொன்னதைப் பதிவு செய்து இந்த காற்றிலிருக்கும் நல்லதை எடுத்தால் நான் நல்லவனாவேன்... என்ற எண்ணமும் வருவதில்லை.

காரணம்... எதைக் குறிக்கோளாக வைத்து எடுக்கிறோமோ அது தான் நடக்கும்.

சாமி ஆசிர்வாதம் கொடுத்தார் என்று சிறிது நாளைக்குப் பார்ப்பார்கள்... பின் அடுத்து ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் “என்ன இந்தச் சாமி...?” என்று எண்ணிச் சென்று விடுகின்றார்கள்.

பிறர் படும் கஷ்டத்தைக் கேட்டாலே அது நம் நல்ல உணர்வை மறைத்து விடுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் இப்படித் தன்னை மறைக்கும் நிலை வந்தால் அது சித்திரை.

அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி இதைப் பிளத்தல் வேண்டும். ஞானகுரு காட்டிய வழியில் அந்த மகரிஷியின் அருள் சக்திகளைப் பெறுவேன் என்ற நிலைக்கு நீங்கள் வர வேண்டும்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து ஒருக்கிணைந்து அதை வெடிக்கச் செய்கின்றனர். கல்லுக்குள்ளும் உலோகத்திற்குள்ளும் அணுக் கதிரியக்கம் இருக்கின்றது.

அணு ஆயுதங்களை வெடித்து அதைப் பிளக்கப்படும் பொழுது தன் இனத்தை அது சேர்த்துச் சேர்த்து ஒரு நொடிக்குள் இரும்பாக இருந்தாலும் இரும்பே உருகிக் காணாமல் போய்விடுகின்றது... கல்லாக இருந்தாலும் உருகிக் காணாமல் போய் விடுகின்றது... அதே கதிரியக்கம் தான்.

இதைப் போன்றுதான்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை சிறுகச்சிறுக நமக்குள் சேர்த்து அதை நமக்குள் சேமிக்க வேண்டும் (அதுவும் கதிரியக்கச் சக்தி தான்)
2.அதை வளர்த்த பின்... நம் எண்ணத்தால் உணர்வால் எடுத்து வளர்த்த இந்த மனித உடலை... “உடல் பெறும் உணர்வை...” இது காணாது செய்துவிடும்
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நம் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும்.

ஆகவே... அந்த மகரிஷிகள் எதைப் பெற்றார்களோ அந்த வழியினைப் பெறும் நிலைகளுக்கே காரணப் பெயர் வைத்து கருத்தினைக் காட்டி “அதுவே தன்னை வாழ வைக்கும்...” என்று காவியங்கள் மூலம் நமக்குக் காட்டினார்கள்.

அதன் முறைப்படி நம் வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்கி உடல் நலம் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நம் நினைவாற்றல் சென்று... “அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல...” என்ற நிலையை அடைய வேண்டும்.

அணுகுண்டுகளை வெடித்த பின் மற்றதைப் பொசுக்கி விட்டு அந்த அணுக்கதிரியக்கங்கள் உலகம் முழுவதும் எப்படிப் பரவுகின்றதோ அதைப் போன்று
1.மெய் ஞானிகளின் அருள் உங்களுக்குள் பரவி இருள் சூழும் அந்த நஞ்சினைப் பிளந்துவிட்டு
2.உலகைக் காத்திடும் சக்தியாக உங்கள் நினைவாற்றல்கள் பெருகி
3.உலக இருளைப் போக்கி... மெய்ப் பொருளுடன் ஒன்றி... மெய் ஞானிகளுடன் ஒன்றி... என்றும் பேரானந்தப் பெரு வாழ்வு நீங்கள் பெற்றிட
4.சர்வ மகரிஷிகளின் அருள் ஆற்றல் நீங்கள் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் (ஞானகுரு).

மனிதன் உயர்ந்த நிலை பெற ஞானிகள் காட்டிய மிக மிக எளிதான வழி - ஈஸ்வரபட்டர்

இவ்வுலகில் உதித்திட்ட அனைத்து உயிராத்மாக்களும் உயிரணுக்களும் அனைத்துமே தெய்வம் தான்.

1.தெய்வம் என்று அன்பு கொண்டு நாம் காணும் சிறு துரும்பும்
2.நாம் தெய்வம் என்று எண்ணும் நிலையிலேயே
3.நம் உயிராத்மாவும் அத்தெய்வ சக்தியைப் பெறுகின்றது.

கல்லையும் மண்ணையும் ரூபப்படுத்தித் தெய்வமாக வணங்குவதெல்லாம்
1.நம் ஆத்மாவையே அத் தெய்வ நிலையில் அன்பு கொண்டு வணங்கிடுங்கால்
2.அச்சக்தியின் திறன் நம் ஆத்மாவிற்கே பதிவு கொள்கின்றது.

உருவ வழிபாடெல்லாம்.. குண நிலையை உணர்த்திட நம் முன்னோர்கள் வழி நடத்திட்ட நல் வழி முறைகள் தாம்.

இம்மனித எண்ணங்களில் வாழ்க்கையுடன் கூடிய பல நிலைகள் கொண்ட எண்ணக் கலவையிலிருந்து
1.ஆண்டவனைப் பக்தி கொண்டு பூஜிக்கும் நிலை ஏற்படும் பொழுதே
2.ஒவ்வோர் ஆத்மாவும் அமைதி கொள்கின்றது.

பாட நிலையில் இந்நிலைகள் அனைத்திற்கும் எல்லா நிலைகளையும் புரியும்படி விளக்கியுள்ளோம். வழிப்படுத்தும் முறைக்காகத்தான் இப்பக்தி நிலை.

நாம் வாழ்ந்த… வாழும் இந்த நாட்டில் உள்ள பக்தி நிலையின் தொடர்பினால்தான் இங்குள்ள மக்களின் எண்ணத்தில் அன்பு நிலையும் சில இடங்களில் ஆத்மீக நெறி முறையும் உள்ளன.

ஆனால் இப்பூமியிலேயே மற்ற மேலை நாடுகளில் உள்ள நிலையினை அறிந்திருக்கலாம் எப்படி இருக்கிறது என்று...!

ஏனென்றால் அவரவர்கள் தான் அமைத்துள்ள வழியில்... வந்த தம் தம் தொடர்புப்படி பெற்ற... எண்ணக் கலவையின் வழித்தொடரிலேயே இன்றளவும் எண்ண நிலையுள்ளது.

ஆனால் மனித எண்ணத்தில் அனைத்து நிலைகளையும் அறியும் சக்தித் திறனுண்டு. அதை நல் நிலைப்படுத்தி… எடுத்த பிறவியின் பலனை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும் என்பதற்கே இந்தப் போதனைகள்.

April 22, 2022

பூமியின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது…?

விஞ்ஞான அறிவால் இன்றைய மனிதன் தன் அறிவைக் கொண்டு மற்ற எதிரி நாடுகளில் எத்தகைய தீங்கான நிலைகள் உருவாக்க வேண்டும் என்று எண்ணத்தால் எண்ணினோ
1.அதற்குண்டான ஆயுதங்களை (அணு, இரசாயண, கிருமிகளை) உருவாக்கியதால்
2.அந்த உணர்வின் அலைகளை எல்லாம் சூரியனுடைய காந்தசக்தி கவர்ந்து இந்தப் பூமியிலே பரமாத்மாவாகப் படரச் செய்துள்ளது.
3.அந்த விஷக்கதிரியக்கங்கள் பூமி ஈர்ப்பின் நடு மையம் அடையப்படும் பொழுது பூமியில் கொதிகலனாக மாறுகின்றது.

கொதிகலனை அதிகமாக உருவாக்கினாலும் அதனின் விளைவுகளை அவர்கள் யாரும் அறியவில்லை. காரணம்... மனிதன் தன் சுகபோகங்களுக்காகப் பல காலம் ஒரு வருடமோ பத்து வருடமோ கடல் நீருக்குள் மறைந்திருந்து (நீர்மூழ்கிக் கப்பல்) எதிரியை வீழ்த்த வேண்டும்... மற்ற நாட்டை அடக்கி ஆட்சி புரிய வேண்டும்... என்று பல ஆயுதங்களையும் அணுக் கதிரியக்கச் சக்தியால் வீரிய உணர்வு கொண்டு செயல்படுத்தினார்கள்.

இதனின் உணர்வுகள் ஹைட்ரஜன் (கண நீர்) என்ற நிலைகள் அங்கே மாறி கடல் வாழ் உயிரினங்களில் அது இணைந்து கொண்டாலும் அது எல்லாம் வீரிய உணர்வின் அணுக்களாகவே மாறுகின்றது.

ஆனால் அதை மனிதன் உணவாக உட்கொண்டு வளர்ச்சி பெற்ற பின் மனித உடலில் இந்த உணர்வுகள் சிதைந்து... மீண்டும் நலிந்திடும் நிலையே அடைகின்றது. உடலைக் காக்கும் நிலை இல்லை...!

விஞ்ஞான அறிவில் இதை எல்லாம் வளர்ச்சி என்று கண்டுணர்ந்தாலும் இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மை இவ்வாறு தான் அது பதிவாகின்றது.

மனிதன் விஞ்ஞான அறிவால் இத்தகைய நிலைகளைச் செய்து செய்து செய்து நாம் வாழும் இந்தப் பூமியின் காற்று மண்டலத்தையே நச்சாக மாற்றி விட்டனர்.

இவர்கள் பரப்பிய கதிரியக்கச் சக்திகள் பூமியின் நடுமையத்தில் அடையப்படும் பொழுது
1.ஏற்கனவே இருக்கும் பாறைகளைக் காட்டிலும்
2.விஷத்தன்மை கொண்ட பாறைகளாக மாற்றிடும் நிலை வந்துவிட்டது.

அதனால் பூமியின் உள் பகுதியில் கொதிகலன் அதிகமாக உரு பெற்றபின் துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீர் நிலைகள் பெருகிக் கொண்டே உள்ளது.

அணுவைப் பிளக்கும் போது ஹைட்ரஜனை வைத்துக் கொதிகலனாக மாற்றி எப்படி அடக்குகின்றானோ (அடக்கும் நிலையில் வரும் கசிவுகள்) அதனால் நீர் நிலைகள் மாறி (கடல் நீர்)
1.விஞ்ஞான அறிவால் உருவாக்கப்பட்ட இந்த அணுவின் தன்மை நடு மையம் அடைந்து உருகிடும் நிலையில்
2.ஹைட்ரஜன் என்ற நீரின் தன்மை மீண்டும் மூடி மறைத்து இந்த உணர்வின் தன்மை அதிகமாகும் பொழுது
3.இந்தப் பூமியே மிகத் துரித நிலைகள் கொண்டு குறுகும் நிலையும் (கடல் நீர் பெருகி நிலத்தைக் குறுக்கும்)
4.குறுகிய நிலத்திற்குள் மனிதர்கள் மிகவும் விஷத்தன்மை கொண்டவர்களாகி
5.விஷப்பூச்சிகள் மற்றொன்றைத் தீண்டினால்... அது எதுவாக இருந்தாலும் எப்படி மடிகின்றதோ
6.இதைப்போல விஷத்தின் தன்மை அடையும் காலம் வந்து கொண்டுள்ளது.

ஹைட்ரஜன் எப்படி அடக்குகின்றதோ... இதைப்போல விஷத்தின் தன்மை அடக்கியபின் கொதிகலனில் வெடிப்பது போல இந்த உணர்வின் தன்மை கொண்டு கோளாக இருக்கும் பூமி நட்சத்திரமாக மாறும்.

ஆனால் இயற்கையில் விளைந்த உணர்வின் தன்மை வேறு. இன்று விஞ்ஞான வீரியத்தால் அணுக்களைப் பிளக்கச் செய்து அது எல்லாம் ஒருக்கிணைந்த நிலையில் வரும் போது
1.மற்றதைச் சுட்டுப் பொசுக்கி தன் இனத்தின் தன்மை பெருக்கி
2.அது வளரும் தன்மை வரப்படும் பொழுது “பூமியே நிலைகுலைந்து போகும்...”

அத்தகைய விஷத்தின் தன்மையைச் சேர்த்துக் கொண்ட உயிரணுக்கள் இங்கே அதிக அளவில் பெருகும் போது அது மனிதனின் வளர்ச்சியைக் குன்றச் செய்து
1.நீருக்குள்ளோ அல்லது பனிப் பாறைகளுக்குள்ளோ அடைபட்டு
2.உடலை விட்டுப் பிரிபவர்கள் அனைவரும் நச்சுத் தன்மை கொண்டு வெகு காலம் நரகத்தையே அனுபவிக்க நேரும்.

அதற்குப் பின் இன்னோரு பிரபஞ்சத்திற்குள் சென்று அடுத்த உடலாக உருவாக வேண்டும் என்றால் பல கோடிக் காலம் ஆகும்.

எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம் – ஈஸ்வரபட்டர்

 

இந்த உலகின் ஈர்ப்பு நிலை போன்றே... எண்ணத்தின் நினைவும் தொடர் நிலை கொண்டதாக ஒவ்வோர் உயிரணுவும் அது தோன்றிய நாள் தொட்டே உயிராத்மாவுடனும் சேர்ந்து வருவது தான்.

இவ்வுலகின் சுழற்சி நிலை வேகத்தின் நிலைக்கொப்ப அது பெற்ற ஈர்ப்பு சக்திதான் இந்த உலகிற்கு உண்டு. அந்த நிலை போன்றே... நம்முடனே வளர்ந்திட்ட அமில நிலைக்குகந்த எண்ண சக்திதான் ஒவ்வொருவருக்கும் உண்டு.

பல நிலை கொண்ட குண நிலைகள் அமைவதெல்லாம்
1.நம்முள் உள்ள நாம் ஈர்த்துச் சேமித்த உயிரணுவாய்த் தோன்றிய நாள் தொட்டே
2.வளர்ந்த நிலை கொண்ட... குண நிலை கொண்ட நாம்
3.அந்நிலைக்கே... அச்சுழற்சியுடனே... இன்று வரை வழி நடந்தும்
4.எண்ண நிலை பெற்றும் வாழ்ந்து வருகின்றோம்.

எப்பிறவிக்கு வந்தாலும் நாம் நம் உயிரணுவுடன் சேமித்த அமில சக்தியுடன் தான் (உயிராத்மாவில் விளைந்தது) இன்றளவும் வாழ்ந்து வருகின்றோம்.

பல உலோகங்களும் தாவரங்களும் அதனதன் நிலைக்குகந்த அமிலத்தை ஈர்த்து ஒரே நிலை கொண்ட தன்மையில் வளர்கின்றன. பல உலோகங்களும் திரவங்களும் ஆவியான தன் இனத்திற்கு உகந்த இனத்தையே மேன்மேலும் ஈர்த்துச் செயல்படுகின்றன.

வான மண்டலத்தில் இடியும் மின்னலும் ஓர் இனத்துடன் மற்றோர் இன அமில நிலை மோதிடும் பொழுது “சத்ரு... மித்ரு...” நிலையினால் ஏற்காத நிலையில் இடியும் மின்னலும் ஏற்படுவதாக உணர்த்தியுள்ளேன்.

இவ்வுலகினில் மற்ற எல்லா மண்டலமும் அதனதன் இனத்துடன் தான் வாழ்கின்றன. ஆனால்...
1.இம்மனித ஆத்மா நிலை கொண்ட நம்மால்
2.நம் இன நிலையான இவ்வெண்ண நிலையை
3.நாம் எடுத்திடும் சுவாச நிலையினால் நல் நிலைப்படுத்திட முடியும்.

மண்டலங்களுக்கும்... மண்டலங்களில் தோன்றி வளர்ந்திடும் இயற்கை வளங்களுக்கும்... மற்றத் தாவர இன வர்க்கங்களுக்கும் எவற்றுக்குமே இம் மனித உடல் கொண்ட ஆத்மாவுடன் கூடிய நாம்... வாழ்ந்திடும் இந்த மனிதப் பிறவியின் பாக்கியத்தை... நம்மால் நம் நினைவினில் நமக்குகந்த நிலையினை ஈர்த்து வாழ்ந்து காட்ட முடியும்.

ஆனால்...
1.எண்ணத்தில் அடிமைப்பட்டு உள்ளவரை என்றென்றும் மாற்றுவது கடினம்.
2.வெறி உணர்வுக்கும்... பேராசைக்கும் அடிமை கொண்டு... பக்தி நிலையை வளர்த்தாலும் பலன் பெறுவது கடினம்.
3.பக்தி என்பதனையே அடிமைப்படுத்திடும் நிலையாக்கிடாமல்
4.அவரவர்களின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி அன்பாக்கி
5.அந்நிலையின் தொடரினால் ஜெப நிலையில் நல்லுணர்வு கொண்ட அமிலத்தையே நம் ஆத்மாவின் சொத்தாக்கி
6.மாறப் போகும் கலியில் இருந்து மீண்டு பல மகரிஷிகளுடன் கலந்திடலாம்.
7.இன்று இவ்வுடலில் நாம் சேமித்த ஒளி சக்தியின் தொடர்புடனே மனித வாழ்க்கைக்கும் உயர்ந்த வாழ்க்கையான
8.மகரிஷிகள் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழும் நிலை பெற்றிடலாம்..!

இப்பூமியின் அமில சக்தி உன்னத சக்தி. அனைத்து நிலைகளும் கலந்த சக்தி. இப்பூமியின் தன்மை மாறுபடத்தான் போகின்றது. சூரியனின் நிலையும் மாறுபடத்தான் போகின்றது. ஆனால் நம் எண்ணத்தில் எண்ணிடும் நிலையில் இல்லை.

சூரியனையே நெருப்புக் கோளமாக எண்ணுகின்றனர். ஆனால் அது குளிர்ந்த பூமி. எச்சக்தியையும் அறிந்திடும் நிலை இம்மனித ஆத்மா ஒன்றுக்குத்தான் உண்டு.

யாம் உணர்ந்த ஆத்மீக நெறியையே அனைத்து உலக நிலைகளையும் உணர்த்திட்டால் “நான்...” என்ற அந்நான் நிலை வந்துவிடும்.

1.ஆத்மீக நெறியினில் அன்பு கொண்டே ஜெபம் கொண்டு அறிய வருபவர்களுக்கு
2.அந்நிலையின் தொடரை வழிப்படுத்தி
3.அனைவருக்கும் பொதுவான சக்தியின் சக்தியை உணரும் நிலையை
4.எமக்குக் கிட்டிய சக்தியின் வழித் தொடரை வழிப்படுத்துகின்றோம் (ஈஸ்வரபட்டர்).

April 21, 2022

பனிரெண்டு மாதங்களிலேயும் நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப் பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும்

 

ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை அனைவரும் எளிதில் பெறும் வண்ணம் அருள் ஞான வித்தை உங்களுக்குள் பதியச் செய்கிறோம். ஆக… சித்திரையை நீக்கிக் கனியின் தன்மை அடைய வேண்டும்.

உயிரான அந்த ஒளியின் வித்தைக் கொண்டு நமக்குள் இருக்கும் உணர்வுகள் அனைத்தையும் அந்த ஒளியின் வித்தாக மாற்றிடல் வேண்டும்.

அது தான் சித்திரைக்கனி என்ற நிலைகள் கொண்டு
1.அந்தக் கனியின் தன்மை அடைந்தால் தான் நாம் முழுமை அடைய முடியும்.
2.உயிரான உணர்வை ஒளியாக நாம் பெற்று என்றும் பேரானந்த நிலை என்ற பெரு நிலையை அடைய முடியும்.

அதைப் பெறச் செய்வதற்கே உபதேசிக்கின்றோம்.

1.சித்திரை என்பது நமக்குள் எடுத்துக் கொண்ட சிறு திரைகளை மாற்றி அமைக்கின்றோம்.
2.வைகாசி… தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை அந்த துருவ நட்சத்திரத்தின் ஒளியைக் கொண்டு “தனக்குள் தெளிவாக்கு…” என்பது.

ஒவ்வொரு மாதமும் இப்படித் தெரிந்து தெளிந்து கொள்வதற்காகத்தான் பன்னிரெண்டு மாதங்களிலும் விழாக்களை அமைத்தார்கள் ஞானிகள்,

பன்னிரண்டு இராசிகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டிப் போகும் போது இந்த இராசியைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த இராசிக்குச் செல்லும் பொழுது மீண்டும் குறைகள் வந்தால் அந்த இராசியைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படிப் பன்னிரண்டு மாதங்களிலேயும்
1.ஒவ்வொன்றையும் சுத்தப்படுத்தி
2.நம் ஆன்மாவைத் தூய்மையாக்கிப்
3.பேரொளியாக மாற்றிக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் இதை அறிந்து கொள்ளச் சொன்னார்கள்.

ஆகவே… இந்தப் பனிரெண்டு மாதத்தையும் வீணாக்கி விடாது ஒவ்வொரு காலப் பருவத்திலும் எந்தெந்த நிலைகள் வருகின்றதோ எல்lலோரையும் உண்மைகளை உணரச் செய்…! என்றார் குருநாதர்

அவர்கள் யார்…? என்ற நிலையை அந்த மெய்யை அவர்களை அறியச் செய்து… அருள் உணர்வின் தன்மை பெறச் செய்து… எந்த அளவில் அவர்கள் அதைப் பெறுகின்றனரோ
1.அதைக் கண்டு நீ மகிழ வேண்டும்…
2.அந்த மகிழ்ச்சி பெறும் சக்தியாக உன்னில் நீ வளர்த்திடல் வேண்டும் என்று எனக்கு உபதேசித்தார்.

அவர் உபதேசித்த அந்த உணர்வின் வழிப்படித் தான் குரு அருளை உங்களில் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குள் திரு அருளாக மலர்ந்து
2.மெய்ப் பொருளைக் கண்டுணரும் அருள் சக்தி பெற்று
3.இந்த வாழ்க்கையில் கனியின் பருவம் (ஒளி நிலை) பெறும் அந்தத் தகுதியை நீங்கள் பெற வேண்டும்.

சுவாச நிலையின் மகத்துவம் – ஈஸ்வரபட்டர்

  

நாம் ஈர்த்து வெளியிடும் சுவாசத்திற்கு “ஈர்க்கும் நிலையை ஒத்த சக்தியே...” நாம் வெளியிடும் சுவாச சக்திக்கும் உண்டு.
1.நாம் எடுக்கும் சுவாசத்தை நேராக நம் உயிரணு ஈர்க்கிறது
2.உயிராத்மா ஈர்த்த நிலையில் அச்சக்தி நம் நெற்றியில் வந்து பாய்ந்து...
3.இவ்வுடல் அனைத்திற்கும் நாம் ஈர்க்கும் சுவாசம் பரவுகிறது.

எந்த நிலையில் அந்த ஈர்த்த நிலை செயல்படுகின்றதோ அந்நிலை போன்றே நாம் வெளிப்படுத்தும் சுவாசமும் வெளிப்படுகின்றது. நாம் எடுத்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் நிலையினால்தான்... நம் நினைவலைகளும்... சப்த ஒலிகளும்... நாம் காணும் பிம்ப ஒலிகளும்.. நமக்குத் தெரிகின்றன.

இச்சுவாசத்தின் நிலை கொண்டேதான் அனைத்துச் சக்தி நிலைகளையும் நாம் செயல்படுத்துகின்றோம். இந்நிலையில் நாம் செயல்படுத்திடும் நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாச நிலை நம் உயிராத்மாவுடன் கலந்துதான் நம் உடல் நிலையும் நம்மைச் சுற்றியுள்ள ஒலி ஒளி அலைகளும் உள்ளன.

இச்சுவாச நிலை என்னும் பொக்கிஷ நிலையை நாம் உணர்ந்திட வேண்டும். எந்தெந்த நினைவலைகளுடன் நாம் இருக்கின்றோமோ அந்த நினைவலைகளுடன் நம் எண்ண நிலை உள்ள பொழுதில்... நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தில் நம்முடன் ஒலியாகவும் ஒளியாகவும் அனைத்து நிலைகளும் சுற்றிக் கொண்டுதான் உள்ளன.

நம் வாழ்க்கையில் நடந்த பழைய நினைவுகளை நாம் எண்ணிடுங்கால் “அன்று நாம் கண்ட அக்காட்சியின் பிம்பமும்... ஒலி அலைகளையும்...” நாம் கண்டு கொண்டுதான் உள்ளோம்.

நாமாக நினைவுபடுத்திக் கற்பனையாக அக்காட்சியை நம்முள் காண்பதாக எண்ணுகின்றோம். நாம் எண்ணும் நிலைப்படி அல்லாமல்... ஒலி அலைகளைப் போலவே இவ்வொளி அலைகளும் நம் உயிராத்மா தோன்றிய நாள் கொண்டு நாம் எடுத்திட்ட சுவாச நிலையுடன் நம்மைச் சுற்றிக் கொண்டே உள்ளன.

1.நம் நினைவை ஒரு நிலைப்படுத்தி பல எண்ணங்களின் நினைவின் மோதலைத் தாக்கவிடாமல்
2.ஒரே நினைவுடன் நல்லுணர்வு கொண்ட நிலையில்
3.அவரவர்களுக்கு உகந்த அன்புருவம் கொண்ட எவற்றையும் ஒரே நிலையில் நம் எண்ண சக்தியில் செலுத்தி
4.அந்நிலையில் நாம் எடுத்திடும் சுவாசத்தின் சக்தியினால்
5.நம் உயிராத்மாவில் கலந்து வெளிப்பட்ட அனைத்து நிலைகளையும் அறிந்திடலாம்.

நாம் நம் ஆத்மாவுடன் கூடிய நிலையினைத்தான் அறிந்திடும் நிலையை இந்நிலையில் வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்நிலை போன்றே நாம் உள்ள நிலையில் நம் எண்ண நிலையை ஒருநிலைப்படுத்தி இப்பூமியும் இப்பூமியைச் சார்ந்த அனைத்து நிலைகளையும் நம் எண்ண சக்தியையும் ஒரே நிலையில் பாய்ச்சும்போது நாம் ஈர்த்து வெளிப்படுத்தும் அக்காந்த நிலை கொண்ட இச்சுவாச சக்திக்கு நம் எண்ணமுடன் நாம் எண்ணிடும் இடத்திலுள்ள நிலைகளையெல்லாம் அறிந்திடலாம்.

இன்றைய விஞ்ஞானத்தில் வானொலியிலும் தொலைக்காட்சிகளிலும் காந்த நிலை கொண்ட அமிலக் கற்களைப் பதிய வைத்துப் பல அலைவரிசைகளை ஓர் இடத்தில் ஒலிபரப்பப்படும் ஒலியையே இருந்த நிலையில் இவ் வானொலியின் மூலமாக அவ்வலை வரிசையிலேயே மோதவிடும் பொழுது அங்கு நடக்கும் ஒலியின் அலையையே வானொலியின் மூலமாக நாம் கேட்கின்றோம்.

இந்தக் காற்றினில் கலக்கவிட்டுத்தான் விஞ்ஞானியும் பல செயல்களைச் செய்கின்றான்.
1.இக்காற்றையே சுவாசித்து நம் உயிராத்மாவுடன் மோதவிட்டு
2.அந்நிலையிலேயே எம்மண்டலத்திற்கும் நம் எண்ண நிலையைப் பாய்ச்சி
3.நாம் அந்நிலையில் எடுத்திடும் சுவாசத்தின் அலைகள் நாம் வெளிப்படுத்திடும் நிலையில் அங்கும் பாய்ந்து
4.எங்குள்ள நிலையையும் நம் உயிராத்மாவின் சக்தியுடன் நாம் இருந்த நிலையிலேயே அறிந்திடலாம்.

இத்தியான நிலையில் ஆரம்ப பக்குவ நிலையில் ஞானம் கொண்ட நிலைக்கு வந்திட்டால்... நம் விழியை நாம் மூடி அமர்ந்துள்ள நிலையிலேயே அறிந்திட முடியும்.

பக்குவ நிலைக்குப் பதம் பெற்றுச் செல்லச் செல்ல... இவ்விழியைத் திறந்தே
2.உள்ள நிலை அனைத்தையும்... நம் எதிரிலுள்ள பிம்ப நிலைகளையும் தாண்டி
3.எங்குள்ள நிலையையும் நாம் அறிந்திட முடியும்

ஞானமும் சித்தும் இவ்வாத்மீக நெறியிலுள்ள எந்த நிலைக்குகந்த சக்தி நிலை பெறவும் இவ்வெண்ண சக்தியை ஒரு நிலைப்படுத்தி... “சிறுகச் சிறுகப் பெருகச் செய்து... வழி நடந்திடல் முடிந்திடும்...”

April 20, 2022

உத்தராயணத்தின் சிறப்பு

 

உதாரணமாக வியாபாரமோ அல்லது தொழிலோ நாம் கூட்டாகச் செய்யும் போது அதிலே ஒருவருக்கொருவர் வெறுப்பாகி விட்டால் அது நமக்குள் ஆழமாகப் பதிவாகிவிடுகின்றது.

தொழில் செய்து முன்னுக்கு வர வேண்டும்… நற்பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணமே அடுத்து வராது. அந்த வெறுப்பையே வளர்க்கப்படும் போது அது நம் நல்ல குணங்களை எல்லாம் மறைத்து விடுகிறது… சித்திரை.

யாரை எண்ணி வெறுப்பை நமக்குள் பதிவு செய்து வளர்த்தோமோ அந்த உணர்வின் ஆக்கமாக நம்மை அது இயக்கி வியாபாரத்தையும் மந்தமாக்கிவிடும்... உடல் நலத்தையும் பாதிக்கும்.

ஒரு நிலத்தில் வித்தைப் பதிவு செய்த பின் அது எப்படி வளரத் தொடங்குகிறதோ அது போல்
1.நம் உடலும் நிலம் போன்றது தான்.
2.அதிலே எத்தனை குணங்களை நாம் பதிவு செய்கின்றோமோ
3.வேதனை என்ற விஷமான உணர்வோ அல்லது கோபம் என்ற காரத்தை ஊட்டும் உணர்வோ அந்த வித்துக்கள் பதிந்து விட்டால்…
4.நம் ஆன்மாவில் படரப்படும் போது நம் நல்ல குணத்தின் இயக்கத்தையே அது மாற்றி நமக்குள் எதிரியாகிவிடுகின்றது.

இது எல்லாம் மனித வாழ்க்கையில் நமது எண்ணம் கனியாகும் பருவத்தை இழக்கச் செய்து சித்திரையாக மாற்றிவிடுகின்றது… நல்ல குணத்தினை மறைத்து விடுகின்றது.

இதைப் பிளத்தல் வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்ட மனிதர்கள் நாம் அந்தத் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால் மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிகள் கொண்டு அதை நீக்கும் நினைவாற்றலைக் கொண்டு வர வேண்டும்.

அதைக் காட்டுவதற்குத் தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா என்று
1.தீமைகளைச் சரணமடையச் செய்யும் சக்தியாக
2.இந்த உடலான குகைக்குள் நின்று
3.வருவது அனைத்தையும் அறிந்து
4.தீமைகளை அகற்றி உருவாக்கத் தெரிந்து கொண்டவன் கார்த்திகேயா… என்று
5.காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறியுள்ளார்கள் ஞானிகள்.

இந்தப் புது வருடத்தில்
1.ஆறாவது அறிவைக் கொண்டு இருளைப் போக்கித் தீமைகளை அகற்றிடும் அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் பதிவு செய்து
2.பேரானந்தப் பெரு நிலை பெறும் அந்த உணர்வின் ஆற்றலை நமக்குள் வித்தாகப் பதிவு செய்து
3.தீமைகளை அகற்றும் உணர்வின் ஞானத்தை நமக்குள் வலுவாக்கிடல் வேண்டும்.

இதற்கு முன் தட்சிணாயணம்… இப்போது உத்தராயணம்…! இதனின் வளர்ச்சியில் ஒளி கண்ட பின் இருள்கள் மாய்கின்றது… நஞ்சு கொண்ட உணர்வின் தன்மையும் தடுக்கப்படுகின்றது.

அதே சமயம் அந்தத் தாவர இனங்களின் சத்தை எல்லாம் காய வைக்கின்றது. அதனின் சத்தைக் கவர்ந்து கொள்கிறது. ஆறு மாதம் கழித்துத் தட்சிணாயனம் என்று வரப்படும் போது அந்த மழைக் காலத்தில் அதனின் வித்துகளுக்கு இது உணவாகக் கொடுக்கின்றது.

1.ஆகவே ஆறாவது அறிவால் நாம் சேமித்துக் கொண்ட… நாம் தெளிந்து கொண்ட… அந்த அருள் உணர்வின் தன்மை கொண்டு
2.நமக்குள் சிறிது சிறிதாக மறைத்திருக்கும் தீமைகளைப் பிளந்து இந்தப் புதிய வருடம் நமது வாழ்க்கையைத் தொடர வேண்டும்.

வருடம் தோறும் பன்னிரெண்டு மாதங்களிலும் மக்கள் அருள் உணர்வுகளைப் பெறுவதற்கு நமது சாஸ்திரம் தெளிவாக வழி காட்டுகின்றது. இதனின் உண்மையின் உணர்வை நாம் உணர்ந்து அதன் வழியில் அருள் வாழ்க்கையாக வாழ வேண்டும்.

உலக மாற்றத்தில்… அனைவருக்கும் ஆவதே நமக்கும் நடக்கட்டும்… என்று எண்ணிடலாகாது…! - ஈஸ்வரபட்டர்

 

பல காலங்கள் வெளியிடாமல் இருந்திட்ட சக்தியின் உண்மை நிலையை இங்கு போதனைக்கு அளித்திட்ட நிலைக்குக் காரணம்
1.இப்பொழுது மாறப் போகும் கலியில்…
2.இன்றுள்ள இக்கலியில் வாழ்ந்திடும் அறிவாற்றல் கொண்ட மனித ஆத்மாக்களின் நிலையை
3.இம்மனிதரின் நிலைக்கு உணர்த்தவே இப்போதனை நிலை.

இன்றைய மனிதரின் வாழ்க்கை முறையும் எண்ணக் கலவையும் இன்று வாழ்ந்திடும் மனிதனால் ஏற்பட்டதல்ல. கல்கியில் தோன்றிட்ட கால நிலை தொட்டே வருவது தான்.

மனிதருடன் எண்ண நிலை சப்த அலையாக எப்படிச் சுற்றிக் கொண்டு உள்ளதோ… அந்த நிலையின் தொடர்ச்சியுடன் ஒவ்வொரு உயிராத்மாக்களின் எண்ணத்துடன் கூடிய சப்த அலைகளும் இப்பூமியில் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்… “இப்பூமிக்கே உகந்த சப்த அலை ஒன்று உண்டு…” என்று உணர்த்தினேன்.

ஓங்கார இசையுடன் ஓ…ம்… என்ற பிரணவ நாதத்தில் உருளுகின்ற இவ்வுலகினில் உயிராத்மாக்களின் சப்த அலையின் தொடர்ச்சியில் இவ்வுலகிற்கு எண்ண நிலையும் உண்டு. இந்த உலகில் உள்ள அனைத்திற்கும் சப்த அலையுண்டு.

சுவாசம் எடுத்திடும் நிலையிலேயே சப்த அலையுண்டு. ஒலி நிலை இல்லாமல் இவ் உலகமே இல்லை என்று உணர்த்தினேன்.
1.இயற்கையில் அமைத்திட்ட உன்னத ஒலிதனில்
2.இன்றைய செயற்கையும் கலந்து செயல்படும் நிலையில்
3.இப்பூமியே மிகவும் தத்தளித்த நிலையில் உள்ளது.

இப்பூமியில் அறிவாற்றல் கொண்டு வாழ்ந்திடும் மனிதர்கள் தன் சக்தியை உணர்ந்து செயல்படாமல் வாழ்ந்ததின் வினையினால் இவ்வினையின் செயல் இவ்வுலகுக்கு மட்டுமல்ல… “இவ்வுலகைச் சார்ந்த அனைத்து மண்டலங்களுக்கும் மாறு கொள்ளும் நிலை…” மிகவும் குறுகிய கால நிலையில் உள்ளன.

பயந்த நிலையில் எண்ணத்தைச் செயல் கொண்டு பேராசைக்கு அடிமைப்பட்டிடாமல் ஆத்மீக நெறியறிந்து ஒவ்வோர் உயிராத்மாக்களும் செயல்பட வேண்டும்.

1.மனித ஆத்மாக்களிடமிருந்து மட்டுமல்ல
2.நினைவாற்றல் உடைய மற்ற ஜெந்துக்களிலும் வெறியுணர்வு பேராசை நிலை இவற்றிலிருந்து விடுபட்டால்தான்
3.மாறப் போகும் இக்கலியிலாவது நாம் மீட்சி கொண்டிட முடியும்.

அடுத்து வரப்போகும் கல்கியில் இன்று இப்பூமியில் அவதார புருஷர்களாக அவதரித்தவரின் எண்ண நிலை கொண்ட பிறப்பு நிலையின் தொடரினால் “நல் நிலையில் அவதரிக்கலாம்…!”

இவ்வுலக நிலையே மாறப் போகின்றது என்றால்…
1.நம் உடல்களும் அனைத்து ஜீவராசிகளும்தான் இயற்கை எய்தப் போகின்றனவே
2.அடுத்த நிலைக்காக ஏன் நம்மை இப்பொழுது செயல் கொண்டிட வேண்டும்…?
3.நடப்பது நடக்கட்டும்… அனைவருக்கும் ஆனது நமக்கும்…! என்று எண்ணிடலாம்.

இயற்கையின் நியதியும் இயற்கையின் சீற்றமும் இயற்கையின் சக்தியுடனே தான் செயல்படுகின்றன.

இந்த இயற்கையில் தோன்றிய உயிரணுக்களிலிருந்து அந்நிலையின் தொடரினால் சக்தி கொண்ட உயிராத்மாக்களாகி… செயலாற்றும் திறமையுடைய “அதிக சக்தி நிலை கொண்ட இம் மனித ஆத்மாக்கள் வாழ்ந்திடும் மண்டலங்கள் சில தான்…”

இவ்வுன்னத பூமித் தாயின் குழந்தைகளாய் இப்பூமியின் சுவாசமுடன் கலந்துள்ள உயிராத்மாக்களான நாம்… நம் ஆத்மாவும்… நம் எண்ணமும்… நம் சப்த அலைகளும்.. என்றுமே அழிவதில்லை என்பதின் உண்மையினை உணர்ந்து… மாறப் போகும் இக்கலியில் நம் ஆத்மாவை உன்னத பொக்கிஷமாக நாம் உணர்ந்து…
1.பல தீய சக்திகளுக்கு நம்மை அர்ப்பணித்திடாமல்
2.நம்முடன் தொடர்பு கொண்டவரின் நிலைக்கும் நம்மிடமுள்ள தீய சக்தி பாய்ந்திடாமல்
3.நல்லுணர்வுகளையே அவர்களுடனும் கலக்கவிட்டு
4.அவர்களின் நற்சொற்களையே நம் ஆத்மாவிற்கும் சுழலச் செய்து
5.உலக சக்தியையே இவ்வியற்கையின் மாற்றத்தில் வரப்போகும் கல்கியின் சுழற்சியில்
6.நல் நிலையாக்கிடத்தான் இப்போதனை நிலையெல்லாம்.

மனிதர்களின் இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை இன்று அவர்களால் ஏற்படுத்திய நிலை மட்டுமல்ல…! கல்கியிலிருந்து கலி வரை வந்த நிலை. இவ்வுலகுடன் கலந்துள்ள சப்த ஒலிகளில் ஈர்த்து எண்ணமுடன் கலந்திட்ட நிலை. இந்நிலையிலிருந்து மீளும் நிலையைத்தான் நாம் அறிந்திடல் வேண்டும்.

“உயிராத்மாக்களின் பொக்கிஷ சக்தி நிலையை… ஆத்மீக நெறிதனில் அழைத்திடவே…” இப்போதனை நிலையெல்லாம் ஈஸ்வரபட்டனாகிய யான் கொடுக்கின்றேன்.

சித்திரைக் கனி

 

புது வருடம்… “சித்திரை… சித்திரைக் கனி” என்று சொன்னாலும் ஒரு கனியின் தன்மையை எடுத்துப் பார்த்தால் அந்தக் கனிக்குள் வித்து மறைக்கப்பட்டுள்ளது. அந்த வித்தின் தோடோ (மேல் ஓடு) அது சித்திரையாக மறைத்துள்ளது.

இதைப் போன்று ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிலைகள் கொண்டு மறைக்கப்பட்டே உள்ளது.
1.ஒரு நெல்லுக்குள் அரிசியின் தன்மை மறைக்கப்பட்டுள்ளது.
2.உமியைப் பிரித்துவிட்டால் அந்த நெல் முளைப்பதில்லை.
3.எந்த ஒரு வித்தாக இருந்தாலும் அதன் தோடைப் பிரித்து விட்டால் அதை மண்ணிலே ஊன்றினால் முளைப்பதில்லை.

இதைப் போன்று ஒரு தீமை என்று நமக்குள் வந்தாலும் அந்தத் தீமையின் நிலைகளைப் பிரித்து விட்டால் அது முளைப்பதில்லை (வளர்வதில்லை). இதைத்தான் நம்மை மறைத்திருக்கும் சித்திரை என்ற நிலையை ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நம் உயிரின் தன்மை அதுவும் ஒரு வித்தாகின்றது. ஆனால் அதை மூடி மறைத்திருப்பது உடல்… இதுவும் சித்திரை தான்…! அதாவது பல அணுக்களின் நிலைகள் கொண்டு உணர்வின் தன்மை உடலாகி… உயிரினை உள்ளடக்கி அதை மறைத்துள்ளது.

ஆகவே ஒரு வித்திற்குள் இருக்கும் உணர்வின் சத்து தனக்குள் எதனை வளர்த்துக் கனியாக ஆனதோ அதை மண்ணிலே ஊன்றினால்
1.அந்த வித்தின் மேல் தோட்டைப் பிளந்து
2.தன் உணர்வின் சத்தினை வெளியே நீட்டி
3.தன் தாய்ச் செடியின் சத்தை அது நுகர்ந்து தன் இனத்தின் சத்தை அது வளர்க்கின்றது.

அதைப் போன்று தான் நமக்குள் மறைந்திருக்கும் உயிர் ஒளியாக இருக்கின்றது. இந்த வாழ்க்கையில் மற்ற உணர்வுகள் சித்திரையாக மறைத்திருக்கின்றது. அதை நீக்கி ஒளியின் உணர்வை நாம் நுகரப் பழக வேண்டும்.

மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் அதை எல்லாம் இராசிகள் என்று சொல்வார்கள்… வருடம் தோறும் அந்தச் சுழற்சிகள் வரும். அந்தந்த இராசியின் நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வின் தன்மை கொண்டு நம் பூமியில் பரவும். ஆக சித்திரையால் மூடப்பட்டு அது செயல்படுகின்றது.

ஒரு வித்தை நாம் பூமியிலே ஊன்றும் போது அந்தப் புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு அச்சித்திரையை (மேல் ஓடை) விலக்கித் தன் உணர்வின் சத்தை வெளிப்படுத்தி அந்த உணர்வின் சத்தால் அது விளைகின்றது.

இதைப் போன்று தான்
1.நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் தனக்குள் வித்தாகும் போது
2.அது மறைத்திருக்கும் அந்த ஓட்டிலிருந்து நீட்டி… எத்தகைய தீமையின் நிலைகளையோ
3.அந்த உணர்வின் தன்மை பிளந்து தன் உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்க்கத் தொடங்குகிறது.

ஆனால் அது சித்திரையாக மறைத்திருப்பினும் அதை மாற்றி அமைக்க
1.நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு ஒளியின் சத்தை நாம் கவரும் நிலை வரப்படும் போது
2.தீமையான உணர்வின் சத்தைப் பிளந்து ஒளியின் சிகரமாக நமக்குள் வளர்க்க இது உதவும்.

பல கோடிச் சரீரங்களில் அந்தந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை நீக்கி நீக்கி… மறைக்கும் தீமைகளை அகற்றி அகற்றித் தீமைகளை அகற்றிடும் தன்மை கொண்டு நாம் மனிதனின் நிலைகள் இன்று அடைந்துள்ளோம்.

இதனின் நிலைகள் கொண்டு…
1.உயிர் எப்படி ஒளியானதோ நம் உணர்வுகளை ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை கனியாக்கி கனியின் தன்மை முழுமையாகும் போது
3.ஆறாவது அறிவு ஏழாவது நிலை அடைகின்றது… சப்தரிஷி.

நம் ஆறாவது அறிவைச் சிருஷ்டிக்கும் உணர்வின் ஒளியாக வாழ்ந்திடும் நிலையைத் தான் கனிகளை வைத்துச் “சித்திரைக் கனி…” என்று காட்டினார்கள் ஞானிகள்.

April 19, 2022

உலகம் மாற்றம் அடைந்து கொண்டுள்ளது - ஈஸ்வரபட்டர்

 

இவ்வுலகினில் தோன்றிய உயிர் அணுக்களுக்கும்… உயிரணுவாய் ஜீவ ஆத்மா கொண்ட உடல் பிம்பம் கொண்ட அனைத்திற்கும்… எப்படி மறு ஜென்மம் ஒன்றுள்ளதோ அந்த நிலை போன்றே
1.இவ்வுலகிற்கும் இவ்வுலகைப் போன்ற வளர்ச்சி நிலை பெற்ற ஒவ்வொரு மண்டலங்களுக்கும் ஜென்ம நிலை உள்ளது.
2.ஜீவன் கொண்டு தனி ஒரு சக்தி நிலை பெற்ற பெரிய மண்டலங்கள் அனைத்திற்குமே ஜென்ம நிலையுண்டு.

இவ்வுலகம் மாறு கொண்ட நிலையில் கல்கியில் தோன்றிய நாளில் உதித்திட்ட உயிரணுக்களின் செயல் சக்தியினை விளக்கியுள்ளோம்.

கல்கியில் தோன்றிய உயிரணுக்கள்… அன்றிருந்த நிலை ஜீவன் கொண்டு பிம்பக் கூடுகள் பெறும் நிலையில் அதிகச் சதை நிலை கொண்ட எலும்புகளின் வளர்ச்சி நிலையில்லா நிலையில்தான் பிம்ப உருவங்கள் இருந்தன.

கல்கியில் இருந்து தொடர்ந்த நிலை கொண்ட… மாறி மாறி வந்திட்ட ஜென்மத் தொடரில் ஈர்த்த சக்தி நிலைதான் இன்றுள்ள மனிதர்களும்… மற்ற இன வர்க்கங்களின் வளர்ச்சி நிலையும். இந்நிலை போன்றே இவ்வுலக நிலையும்.

1.அதிசக்தி நிறைந்த வளர்ச்சியில் வந்த நிலைதனை
2.இன்றைய வளர்ச்சி கொண்ட இக்கலியின் “செயற்கையின் நிலையினால்”
3.இப்பூமியின் சக்தியையே சிதறும் நிலைப்படுத்தி விட்டார்கள்.

ஆனால் நம் பூமியின் தொடர்பு நிலை கொண்ட இச் சூரியனைச் சுற்றியுள்ள மற்ற மண்டலங்களில்… நம்மை ஒத்த மனித பிம்பங்களும் இச்செயற்கையின் நிலையும் அந்நிலையில் இல்லாததினால் அம் மண்டலங்களின் சக்தி நம் பூமியையும் விட மென்மேலும் வளரும் நிலையில் அதிக சக்தி கொண்டதாக உள்ளது.

நம் பூமியும் வளர்ந்து கொண்டு தான் உள்ளது “பலன் இல்லாத நிலையில்…!”

அறிவு வளர்ச்சி கொண்ட… செயலாற்றும் திறமையும் அதற்குகந்த அங்கங்களும் பெற்ற… பிறவியிலேயே உன்னதப் பிறவி பெற்ற இம்மனிதனால் “தன் சக்தியை உணர்ந்திடாமல் வந்ததின் வினைதான்… இன்றுள்ள நம் பூமியின் நிலை…!”

தனக்குகந்த அறிவின் செல்வத்தைப் பேராசைக்கு அடிமை கொண்டு வாழ்வதின் நிலை இன்றைய மனிதனின் நிலையும் இம் மனிதனை வளர்க்கும் பூமிக்கும் உள்ளது.

இன்றைய பாட நிலையிலிருந்து ஜென்ம நிலையை உணர்த்தியதின் நிலை புரிந்ததா…?

இப்பூமியின் பொக்கிஷத்தைத்தான் இக்கலியின் மனிதனின் பேராசைக்காக எடுத்து விட்டீர்கள். இவ்வுலகனைத்தும் உள்ள எண்ண நிலையே இப்பேராசைப் பிடியில் சிக்குண்டு தவிக்கும் நிலையில் உள்ள பொழுது…
1.இந்நிலையில் இருந்து விடுபடும் எண்ணத்தை
2.இவ் உலகனைத்திற்கும் போதிக்கும் சக்தி நிலை இவ் உலகைக் காக்கும் சக்திக்கே இல்லை.
3.உலக நிலை மாறு கொள்ளப் போகின்றது.

அழிவு என்னும் நிலையே எதற்கும் இல்லை. எதுவுமே அழிவதில்லை…! மாறு கொண்ட நிலைதான் ஏற்பட்டிடும். மாறு கொண்ட நிலையில் இவ் உடல் என்னும் கூட்டிலிருந்தும் அனைத்து ஜீவராசிகளும் மாறு கொள்ளத்தான் போகின்றன.

எவ்வாத்மாவும் அழிந்திடாது. இவ்வுலகம் மாறு கொண்டு சுழலும் நிலையில் இவ் உடல் கூட்டை விட்டு வெளிப்படும் உயிராத்மாக்களின் நிலைக்காகவே இந்நிலையில் அளித்திடும் பாட நிலைகள் எல்லாம்…!

இப்பூமியில் வாழ்ந்திடும் இன வர்க்கங்களைப் போன்ற நிலை மற்ற மண்டலங்களில் மாறு கொள்கின்றது. இவ்வுலக நிலை மாறுபட்டு உயிராத்மாக்கள் இப்பால் வெளி மண்டலத்தில் உள்ள நிலையில் இப்பூமியில் வாழ்ந்த நாட்களில் இருந்த நிலை கொண்டு மற்ற மண்டலங்களின் நிலைக்குச் சென்று உடல் பெறலாம்.

அந்த நிலைக்காகத்தான் இப்போதனை நிலையும்… இப்பாட நிலையும்…!

இவ்வுலக நிலை மாறு கொள்ளும் நிலை நெருங்குவதினால் இந்த நிலையை உணர்ந்து ஒவ்வொரு மனித ஆத்மாவும் ஆத்மீக நெறிக்கு வந்து அந்நிலையின் மூலமாக மீட்சி பெறுங்கள்…!

April 18, 2022

நல்லது நடக்க வேண்டும் என்று ஆசையை மட்டும் கூட்டுவதைக் காட்டிலும் அதைச் செயல்படுத்தும் மார்க்கம் மிக மிக முக்கியமானது

 

எனது எண்ணத்தில் நான் அதீதமாக ஆன்மீக நிலைகள் பெற வேண்டும் என்று ஆசையை வைத்துக் கொள்கின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.

அதை ஒன்றை மட்டும் குறிக்கோளாக வைத்து விட்டால்... அந்த ஆசையில் அதைப் பெறுவேன் என்ற எண்ணம் கொண்டாலும் அந்த ஆசை ஒன்றேதான் தனக்குள் மிஞ்சுகின்றது.

ஆனால் அதை நான் பெறும் தன்மையை எதன் வழி...? என்ற நிலைகளை இழந்து விடுகின்றேன்

நான் எண்ணியபடி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் அந்த சக்தியின் தன்மை ஒன்றேதான் நினைவில் இருக்கின்றதே தவிர அந்தச் சக்தியை எவ்வழியில் பெற முடியும்...? என்ற நிலைகளில்
1.எனது குருநாதர் காட்டிய நிலைகளை நான் இழந்துவிட்டால்
2.அதை நான் பெறுவது மிகவும் கடினம்.

இதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனிடமும் எத்தனையோ ஆசைகள் வருகின்றது எத்தனையோ நிலைகள் விளைகின்றது.... இந்த வாழ்க்கையில் ஆசைப்பட்டபடி தான் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்.

அப்படி எண்ணினாலும் அதே சமயத்தில்
1.அவருடைய எண்ணத்திற்குள் அவரின் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் சித்திரை...
2.அடுத்து எதிர்ப்பக்கம் என்ன வருகிறது...? என்று சிந்தனையற்ற நிலைகள் இருப்பார்கள்.

அது மறைத்திடும் பொழுது அதனின் நிலை இல்லாதபடி இவர் ஆசைப்பட்டபடி வாழ்க்கையில் நடக்காது அந்த நல்ல உணர்வுகளும் மறைந்து விடுகின்றது.

அதனைத்தான் “இந்தச் சித்திரையை” (இடைமறிக்கும் தீமைகளை) நீக்க வேண்டும் என்று உணர்த்தினார் குருநாதர்.

உதாரணமாக ஒரு வியாபாரத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றோம். அப்போது வியாபாரத்தில் லாபம் வர வேண்டும் என்ற ஒரே நோக்குடனே செல்கின்றோம்.

ஆனால் அது எந்த காலப் பருவம்...? என்ற நிலைகளைத் தெரியாது “வியாபாரம் செய்ய வேண்டும்...” என்ற அந்த நோக்கம் ஒன்றுதான் நமக்குள் வருகின்றது

காலத்தை அறியாதபடி பொருள்களை வாங்கி வைத்து விட்டால் யாரும் வாங்கமாட்டார்கள். யாருமே வாங்கவில்லை... வியாபாரம் நடக்கவில்லை... என்றால் அங்கே அந்த உணர்வின் தன்மை
1.நாம் ஆசைப்பட்ட நிலைகளை இடைமறித்து அதை மறைத்துவிடுகிறது...
2.சித்திரையாக அது வந்து விடுகின்றது.

நாம் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் அதைக் காக்கும் நிலையற்று நாம் போகும் பாதையையே அது தடைப்படுத்திடும் சக்தியாக வந்து விடுகின்றது.

இதைப் போல சந்தர்ப்பத்தால் நாம் எடுக்கும் எத்தனையோ உணர்வுகள் சித்திரையாக நம்மை மறைத்து விடுகின்றது. இதைக் குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நோக்கம் கொண்ட நிலையில் வருவார்கள். அவர்களுடைய எண்ணம் அதுவாக இருந்தாலும்
1.அவருடைய சந்தர்ப்பம் சூழ்நிலை அங்கிருக்கும் நிலைகளைத் தெளிவாக்கி
2.இருளைப் போக்கிப் பொருள் காணும் உணர்வினை நீ அவர்களுக்குத் தெரியப்படுத்தினால்
3.அருள் உணர்வுகளை அவர்களுக்குள் விளைவிக்கும் சந்தர்ப்பத்தை நீ ஏற்படுத்தினால்
4.உனக்குள் இருக்கும் நிலைகளை உன்னில் தெரிந்திடும் நிலைகள் வரும்.

ஆகவே... கேட்போர் உணர்வுகளில் அருள் ஞானத்தைப் பதிவு செய்து... அறியாத நிலைகள் கொண்டு அவர்கள் நல்ல உணர்வுகளை மறைத்திருக்கும் சித்திரையை நீக்கி...
1.அவர்கள் உணர்வின் தன்மை ஒளி பெறும் சக்தியாகவும்
2.கனியின் தன்மை பெறும் நிலையாகவும் நீ உருவாக்கு...! என்றார் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர்.