ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2013

நம் உடலும் ஒரு நிலம் தான்

1. நம் உடலும் ஒரு நிலம் தான்
இன்று நாம் வயலில் ஒரு பக்கம் மிளகாயை விதைக்கின்றோம், ஒரு பக்கம் சோளத்தை விதைக்கின்றோம், ஒரு பக்கம் எள்ளை விதைக்கின்றோம், ஒரு பக்கம் நிலக்கடலையை விதைக்கின்றோம் என்றாலும் ஒரே நிலம்தான்.

நாம் சிறுகச் சிறுகப் பிரித்துப் போட்டாலும், நாம் எந்த இடத்தில் எந்த வித்தினைப் போட்டோமோ, அந்த வித்து, தனக்குள் இருக்கும் உணர்வின் சத்தின் துணை கொண்டு, பூமியில் படர்ந்து கொண்டிருக்கும் தன் இனமான சத்தைக் கவர்ந்து, மிளகாய்ச் செடியாக, எள்ளுச் செடியாக, கடலைச் செடியாக, சோளமாக விளைகின்றது. இந்த நிலம் எப்படியோ, அதைப் போன்று நம் உடலும் ஒரு நிலமே.

நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ, அந்த குணங்கள் அனைத்தும் ஊழ்வினையாகப் பதிவாகி, அது ஒரு வித்தாக மாறிவிடுகின்றது. அந்த வித்தின் சத்தான நிலைகள் (அந்த உணர்வுகள்) நமக்குள் கிளர்ந்து கொண்டேயிருக்கும்.
2. பரமாத்மா ஆன்மா, ஜீவாத்மா, உயிராத்மா
அந்த உணர்வின் சக்தி,
நமது உடலிலிருந்து இழுக்கப்படும் பொழுது,
காற்றிலே இருக்கும் தன் இனமான சத்தை
நமதுஆன்மாவாக” மாற்றிவிடும்.
எந்த உணர்வு அதிகமோ, அது முன்னிலையில் இருக்கும்.

உதாரணமாக, நாம் ஒரு குழம்பு வைக்கின்றோம் என்றால் காரம், புளிப்பு, உப்பு, துவர்ப்பு, இனிப்பு, எல்லாவற்றையும் சேர்க்கின்றோம். இதில் எது அதிகமாகின்றதோ, அதன் மணமும் ருசியும்தான், முன்னிலையில் இருக்கும்.

இதைப் போலத்தான், நமது உடலுக்குள் நாம் எந்த எண்ணத்தைப் பதிவு செய்தாலும், பதிந்த அந்த உணர்வுகள் காற்றிலிருந்து தன் இனமான சத்தைக் கவர்ந்து, தன் ஆன்மாவாக மாற்றும்.

நமது பூமி ஒரு பரம். நம் பூமிக்குள் படர்ந்து கிடக்கும் நாம் இடும் மூச்சலைகள், தாவர இனத்திலிருந்து வெளிப்படும் சத்துக்கள், பாறைகளில் இருந்து வெளிப்படும் சத்துக்கள், விண்ணிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் அனைத்தும்,
இந்தப் பரமான எல்லையில் “பரமாத்மாவாக”,
பல உணர்வுகள் இங்கே பரமாத்வாகப் படர்ந்து கொண்டிருக்கின்றது.

நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ, அதை நம் உயிர் ஜீவனாக்கி, அந்த உணர்வின் சத்து வித்தாக, நமக்குள் எண்ணங்களாகப் பதிவு செய்துவிடுகின்றது.

பதிந்த உணர்வின் எண்ணங்கள், அது மீண்டும் உணர்வுகளைத் தூண்டி, இந்தப் பரமாத்மாவிலிருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாற்றும்.
நமது ஆன்மாவாக மாற்றிவிட்டால்,
அதை நம் உயிர் ஜீவன் பெறச் செய்து,
நமது உடலுக்குள் “ஜீவான்மாவாக” மாற்றுகின்றது.

நம் உடலில் ஜீவாமாக்களாக விளைந்தது, அதில் வடித்துக் கொண்ட சத்து உயிரோடு இணையும் பொழுது அது ”உயிராத்மாவாக” மாறுகின்றது. ஆக, உயிராத்மாவில் விளைந்த சத்துக்கொப்ப அடுத்த உடலை உயிர் உருவாக்கும்.

நாம் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, இந்தப் பரமாத்மாவில் படர்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்தியை நம் ஆன்மாவாக மாற்றி, நம் உடலில் இருக்கும் எல்லா அணுக்களையும் பெறச்செய்வோம்.

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றுவோம்.
இந்த மனித உடலுக்குப் பின்,
அழியா ஒளிச் சரீரம் பெறுவோம், எமது அருளாசிகள். 

September 29, 2013

நல்ல குணங்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரே சக்தி...!

1. யாம் சிறு வயதில் செய்த தவறு
எமது சிறு வயதில் செய்த தவறின் உணர்வுகள், எமது உடலில் உண்டு. சின்னஞ்சிறு வயதில், குருவியைக் கயிற்றில் கட்டி, எரியும் நெருப்பில் காண்பித்து, அக்குருவியை எரியச் செய்திருக்கின்றோம்.

குருவியைக் கொன்றாயல்லவா, அதனின் அணுக்கள் உனக்குள் இருக்கும். அதை அடக்குவதற்கு என்ன செய்யவேண்டும்? என்று குருநாதர் சொன்னார்.

சிறிய வயதில், அறியாது செய்த உணர்வுகள் என்றாலும்கூட, அந்த உயிரினங்கள் படும் வேதனையை இரசித்திருக்கின்றோம். ஆனால், அந்தக் குருவி அனுபவிக்கும் வேதனைகள் வரப்படும் பொழுது, இதெல்லாம் எங்கேயும் போகாது. ஆனால், அதனை உடனடியாகக் கொன்றிருந்தால் வேறு. 

சிறுகச் சிறுக வேதனை அடையச் செய்து, அதிலிருந்து வரும் வேதனையின் உணர்வை நுகரப்படும் பொழுது, வேதனைகள், நமக்கும் வந்துதான் தீரும்.

இதெல்லாம் எமக்குத் தெரியாது. எமது சிறு வயதில் நடந்ததையெல்லாம், குருநாதர் எனக்குச் சொல்லிக் காண்பித்தார்.

சிறு வயதாக இருந்தாலும் கூட, நாம் அறியாது தவறுகள் செய்தாலும்,  
நம்மிடத்தில் உள்ள காந்தம், அவ்வுணர்வுகளை ஈர்த்து,
நம்மிடத்தில் அணுவாக்கி விடுகின்றது. 

அணுவாகி விட்டால், அதன் தன்மையாக மாறும். இது போன்ற சில உணர்வுகள், நமக்குள் உணடு.  அதன் வளர்ச்சி வரப்படும் பொழுது, அந்த அணுக்களுக்குச் சாப்பாடு தேவை.

அந்த உணர்ச்சிகள் உந்தும் பொழுது, கண் வழி நுகர்கின்றோம். அந்த உணர்ச்சியால், நம்மை அறியாமலே,  தவறுகள் செய்யும் நிலை வரும்.
2. நாம் சிறு வயதில் செய்த தீமைகள், வளர்ந்தபின் அதன் வழியிலே நம்மை இயக்கிவிடும்
இப்பொழுது நல்ல மனிதர்களாக, பெரியவர்களாக இருப்பார்கள். சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது, செய்த சேஷ்டைகளினால், பதிவான உணர்வுகள், இப்பொழுது, அது தன் உணர்ச்சிகளை அவர்களிடத்தில் உந்திக் கொண்டிருக்கும்.

இன்று பூமியில், விஷச் செடிகள் அதிகமாக வளர்கின்றன. மழை இல்லை என்றால், அவை பட்டுப்போகின்றன. மழை பெய்தால், அவைகள் துளிர்த்து விடுகின்றன.

நமது உடலும், ஒரு நிலத்தைப் போன்றதுதான். எதை உற்றுப் பார்க்கின்றோமோ, அது. ஊழ்வினைஎன்ற வித்தாக நம்மிடத்தில் பதிவாகின்றது.

பின், அதன் தொடராக, அதன் உணர்வை நுகர்ந்து உயிரிலே பட்டு அறியச் செய்து, இரத்தத்தில் கலந்து, அணுக்களாகின்றன. இப்படி மனிதரான நம்மிடத்தில், இதன் உணர்வுகள் அதிகமாக வளரும்.

ஆகையினால், இதன் உணர்வுகளை அதிகமாகச் சேர்த்துச் சேர்த்துநம் உடலுக்குள் மகாபாரதப்போர் நடக்கத் தொடங்கிவிடுகின்றது.
பெரியவர்கள் சில பேர்,
என்னுடைய எண்ணம் அப்படிப் போகின்றது, இப்படிப் போகின்றது,  
தடுக்க முடியவில்லை என்று சொல்வார்கள்.

தடுக்கத் தெரிந்தவர்கள் தடுத்துக் கொள்கின்றார்கள். தடுக்க முடியாதவர்கள் அதில் சிக்குண்டு, தீய அணுக்களைத் தம்முள் வளர்த்துக் கொள்கின்றார்கள்.
3. நல்ல குணங்களைப் பாதுகாக்கும் ஒரே சக்தி துருவ நட்சத்திரம்
என்னால் முடியவில்லை. முயற்சி செய்கிறேன், ஆனாலும் முடியவில்லை என்று சொல்லுகின்றார்கள். ஆக, அந்த உணர்வின் அணுக்கள் தானாக வேலை செய்யும். அதை அடக்குவதற்கு ஒரே சக்தி, துருவ நட்சத்திரம்.

நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வின் தன்மையை நுகர்ந்து,
தீமைகளை அடக்கத் தவறினால்
அந்தத் தீமை செய்யும் உணர்வுகள்
நம்முடைய நல்ல குணங்களை, நிச்சயம் அடக்கியே தீரும்.

ஆக, நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டும் ன்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நாம் நுகர்ந்தே ஆகவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை நாம் நமக்குள் வலிமையாகச் சேர்த்து,  நமது ஆன்மாவைத் தூய்மையாக்க வேண்டும். ஆக, நாம் அடிக்கடி, நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை சேர்த்துக் கொண்டே வந்தால், அந்த உணர்வின் வலு நமக்கு சேரும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் நமக்குள் முழுமை அடைந்தால், நாம் இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலையாக, இந்த உயிர் எப்படி ஒளியானதோ, இதைப் போன்று, நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை, ஒளியாக மாறுகின்றது, நாம் அழியா ஒளிச்சரீரம் பெறுகின்றோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா என்றால் யார்? - ஞானகுருவின் விளக்கம்

நாம் “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று சொல்கின்றோம். பக்தி மார்க்கங்களில் சொல்லும் பொழுது, ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான், குருதேவர் எங்கேயோ இருக்கின்றார் என்ற எண்ணம் இல்லாதபடி, இந்தச் சொல்லின் நிலையை முதலிலே தெரிந்து கொள்வது நல்லது.

நமது சாஸ்திர விதிகளின்படி, ஓம் என்பது பிரணவம், நமது உயிர் நமக்குள் ஜீவனாக இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குப் பெயர் ஓ.

“ஓ” என்றால் ஜீவன் என்று பெயர்.
நமக்குள் உயிர் ஜீவனாக இயங்குகின்றது என்று பொருள்.
இந்த உயிர் எதையெல்லாம் கவருகின்றதோ,
அவையனைத்தும் “ம்” என்று நமது உடலாக அமைந்துவிடுகின்றது.

நாம் எண்ணியது எந்த குணமோ, அந்த குணத்தின் தன்மை நமது உடலானாலும், அந்த குணத்திற்கு குருவாக இருப்பது உயிர். நாம் எண்ணியதை இயக்கி, அந்த உணர்வின் சக்தியை உடலாக மாற்றும் நிலைதான் ஈஸ்வரன் என்பது.

என்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைக்கு, ஈஸ்வரா. இந்த உடலிலுள்ள குணங்கள் அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது, குருதேவா. ஆகவே, நாம் ஒம் ஈஸ்வரா குருதேவா என்று நமது உயிரைச் சொல்கின்றோம்.

நமது உடலில் எத்தனையோ வகையான குணங்கள் இருக்கின்றது. நாம் பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நம் உடலில் எத்தனையோ எண்ணங்கள் இணைந்தாலும், எண்ணினாலும், இவையனைத்திற்கும் நமது உயிரே குரு. அதுதான் ஓம் ஈஸ்வரா குருதேவா என்பது.

உதாரணமாக ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். அது “ஓ” என்று இயங்கி, “ம்” என்று எனது உடலாக அமைகின்றது.
நாம் எதை எண்ணுகின்றோமோ,
அந்த உணர்வின் சத்து நமது உடலாக மாறுகின்றது.

அந்த குணத்தின் தன்மை உடலாக அமையப்படும் பொழுது, நாம் எண்ணிய குணத்தின் சக்தி உடலுக்குள் இயங்குகின்றது. இதுதான் ஓம் நமச்சிவாய. உடலுக்குள் இயங்கிய குணத்தின் சக்தி சொல்லாகவோ, செயலாகவோ வெளிப்படுவது சிவாய நம ஓம்.


நாம் யார்? கடவுள் யார்? ஆண்டவன் எங்கிருக்கின்றான்? 
நம்மை இயக்குவது எது? என்ற உண்மைகளை 
அந்த மெய்ஞானிகள் கண்ட நிலைகளைத்தான் யாம் சொல்லி வருகின்றோம்.

September 28, 2013

பிறரின் உணர்வுகள் நமக்குள்ளும் உண்டு, அதற்குள் அருள் சக்தியை இணைக்க வேண்டும்

மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில்
நாம் எண்ணத்தால் எண்ணிய உணர்வுகள்
இங்கே ஒரு அணுவாக மாறுகின்றது.

உதாரணமாக, ஒருவன் நம்மைத் திட்டினான் என்று வைத்துக் கொள்வோம். அவன் அமெரிக்காவில் இருக்கின்றான் என்றால், “நமக்குத் துரோகம் செய்தான், நம்மை ஏமாற்றினான், அவன் உருப்படுவானா” என்று எண்ணினால், அவன் உணர்வு நமக்குள் உண்டு, நம் உணர்வு அவனுக்குள் உண்டு, ஆனால், காற்றிலும் இது உண்டு.

நாம் எண்ணியவுடனே அங்கே பதிவாக்கிவிடுகின்றது. ஆனால், அங்கே அவன்
உணவு உட்கொள்ளும் பொழுது புரையோடுகின்றது.
வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் விபத்தாகின்றது.

இதைப் போன்று, நம் குழந்தை மேல் பற்று கொண்டு அவனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால், “இப்படி இருக்கின்றானே” என்று வேதனைப்பட்டால், அந்த வேதனையான உணர்வு குழந்தைக்குத் தாக்கப்பட்டு, சிந்தனை இழந்து, அவனுக்கு விபத்தாகும், அல்லது கல்வியில் சிறப்பை இழக்க நேரும்.

ஆனால், சரியாகப் படிக்கவில்லை என்று “இப்படி இருக்கின்றான்” என்று அடிக்கடி எண்ணினால், இந்த உணர்வுகள் அவனை மாற்றியமைத்து நல்லவனாகக் கல்வி கற்கும் நிலையை மறந்து, அவனை மறந்திடும் இந்த நிலையைச் செய்யும்.

ஆகவே, ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு,
எதன் உணர்வோ அவனை வைத்து
நமக்குள் இதை வளர்த்து, நம்முடைய எண்ணங்கள்
அவனைக் குறை கூறும் உணர்வுக்கே சென்றுவிடுகின்றது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து மாற்றுவதற்குத்தான் வாழ்க்கையே தியானம்.

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் அனைவருமே உங்கள் வாழ்க்கையையே தியானமாக்குங்கள்.
துருவ நட்சத்திரத்தின் பேரருளை
உங்கள் இரத்த நாளங்களிலே கலக்கச் செய்யுங்கள்,
உங்கள் உடலில் உள்ள
எல்லா அணுக்களையும் பெறச் செய்யுங்கள்.

வெளியே போகும் பொழுதும், தொழிலுக்குப் போகும் பொழுதும் தியானித்துவிட்டுச் செல்லுங்கள். அங்கே சென்ற உடனே இதே மாதிரி தியானியுங்கள், இரண்டு நிமிடமோ அல்லது ஐந்து நிமிடத்திற்குள்ளோ, அங்கே தியானத்தை முடித்துக் கொள்ளலாம்.

தொழிலிலிருந்து வீட்டிற்கு வந்தாலும், இதைப் போன்று அமைதிப்படுத்தி தியானித்துவிட்டு மற்ற நல்ல பேச்சுகளைப் பேசிப் பழக வேண்டும். இப்படி ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால், தீமைகள் நமக்குள் வராது.

அன்பர்களுக்கு ஞானகுரு, ஈஸ்வராய குருதேவர் இருவரின் அருளாசிகள்

உங்கள் அனைவரது வாழ்க்கையிலும், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்கள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்து, உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறச் செய்து, உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து,
உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த
தீய வினைகள் அனைத்தும் நீக்கி,
குரு அருளைப் பெற்று, அருள் வழி வாழ்ந்து,
வாழ்க்கையில் சிந்தித்துச் செயல்படும் தன்மையும்,
தெளிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடவும்,
தெரிந்து உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும்,
பொறுப்புடன் வாழும் தன்மையும்,
தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற்று,
நமது குரு அருளை என்றென்றும் நீங்கள் துணை கொண்டு,
துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று,
உங்கள் வாழ்க்கையில் அருள் வழி வாழ்ந்து,
பேரின்பப் பெருவாழ்வு பெற
எமது ஆசிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

அருள் வழி வாழுங்கள்.
ஆனந்த வாழ்க்கை வாழுங்கள்.
பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையுங்கள்.
என்றும் பேரானந்த நிலை என்ற ஏகாந்த நிலை பெற எமது அருளும், குரு அருளும் நீங்கள் பெற்று, பேரின்பப் பெருவாழ்வு பெற எமது அருளாசிகள்.

September 27, 2013

சில நோய் நமக்கு ஏன் வருகின்றது?

1. நோய்கள் எப்படிப் பரவுகின்றது?
ஒரு நோயாளி வேதனைப்படுகின்றான். எந்த உறுப்பில் நோயானதோ, அது வேதனையானதோ அந்த உறுப்பிலிருந்து வெளிப்படும் உணர்வு சொல்லாக வரப்படும் பொழுது, அதை நாம் கேட்டு நுகரப்படும் பொழுது, நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலக்கின்றது.

பின், நோயாளிக்கு எந்த உறுப்பில் நோயானதோ, அதே உறுப்புகளில் நம் உறுப்புகளிலும் நோயாகும் உணர்வுகள் வந்துவிடுகின்றது.
நமக்கு ஏன் வந்தது?
எப்படி வந்தது? என்று நம்மால் அறிய முடியாது.

காரணம் நாம் நுகர்ந்த உணர்வுகள் எந்த உறுப்பில் உருவாகியதோ, அதே உறுப்பில் இணைந்து அவருக்கு வந்த நோயை நமக்குள் உருவாக்கும்.

இதைப் போன்று ஒருவன் தற்கொலை செய்துகொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதை அதிகமாக நேசித்து, அதன் உணர்வை நாம் அதிகமாக ஏங்கிவிட்டால், அந்தத் தற்கொலை செய்த மனிதனின் உயிரான்மா நம் உடலுக்குள் வந்து அது உணர்ச்சிகளைத் தூண்டும்.

ஆகவே நம்மை அறியாதபடி, அவன் எப்படி இக்கட்டான நிலையானோ, அவன் சிந்தனை இழந்து தற்கொலை செய்து கொண்டானோ, அதே உணர்ச்சிகள் நம்மைத் தூண்டி, நாம் ஏன் இறக்கின்றோம் என்று தெரியாதபடி, நமக்குள்ளும் அந்தத் தற்கொலை செய்யும் உணர்வுகளைத் தூண்டும்.

உதாரணமாக, ஒருவர் HEART ATTACK வந்து உடலை விட்டுப் பிரிகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் மேல் ஒருவர் அதிகமான பாசம் வைத்துக் கொண்டிருந்தால், அதே உணர்வுகள் நுகரப்பட்டு, அவர் மேல் பற்று கொண்ட உணர்வுகள் அதைப் பற்றிவிடுகின்றது.

பின், அதைத் துடைக்கத் தவறினால்,
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை
நுகர்ந்து தியானிக்கத் தவறினால்,
அவர் உடலுக்குள் இந்த உணர்ச்சிகளைத் தூண்டி, இவருக்கும் HEART ATTACK வரும். உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஏனென்றால், நோயாளி வெளிப்படுத்தும் உணர்வுகள் இந்தப் பூமியில் பரவுகின்றது. கண் கொண்டு அவர்களைப் பார்க்கும் பொழுது, ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது. அவர் உடலிலிருந்து வரக்கூடிய உணர்வினை நம் கண்ணின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, நம்மை நுகரச் செய்கின்றது.

நுகர்ந்த உணர்வோ நம் உயிரிலே படுகின்றது. அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. பரிவுடன் பண்புடன் உதவி செய்கின்றோம். ஆனால், அவர் உடலிலிருந்த நோயான உணர்வுகள் நாம் பண்பாகச் செய்தாலும், நமக்குள் அந்த வேதனை உணர்ச்சிகளையே தூண்டிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நாம் எல்லோரும் அன்புடன்தான் பழகுகின்றோம். இதைப் போல வேதனையான உணர்வுகள் வந்தால், அதைத் தடுப்பதற்கு வழி வேண்டுமல்லவா.
2. நோய்களைப் பற்றாது, துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றவேண்டும்
நாம் தங்கநகை செய்ய, செம்பு, வெள்ளி, பித்தளை மற்ற பொருள்களை இணைத்துத்தான் செயல்படுத்துகின்றோம்.
ஆனால், அடுத்த நகை செய்யப்படும் பொழுது,
எப்படி திரவகத்தை ஊற்றிச் சுத்தப்படுத்துகின்றோமோ,
அதைப் போல நாம் சுத்தப்படுத்திப் பழக வேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்து, நம் உடலுக்குள் இரத்தத்தில் கலக்கச் செய்து, நம் உடல் உறுப்புகளுக்கெல்லாம் நினைவைச் செலுத்த வேனண்டும்.

அப்பொழுது, தங்கத்தில் திரவகத்தை ஊற்றியவுடன், செம்பும், வெள்ளியும் எப்பபடி ஆவியாக மாறி தங்கம் பரிசுத்தமாகின்றதோ, அதைப் போல
நாம் அறியாது நுகர்ந்த தீய உணர்வுகளை
வேக வைத்துப் பிரித்து விடுகின்றது.
நம் ஆன்மா சுத்தமாகின்றது.

நம் உடலிலுள்ள நல்ல அணுக்களை இப்படிக் காத்துக்கொள்ள முடியும். ஆக, தீமைகள் வரும்பொழுதெல்லாம் அவைகளை நீக்குவதற்கு இப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எண்ணும் பொழுது, தீமைகளைப் பற்றற்றதாக்கி, துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் பழக்கம் வந்துவிடுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழும் நிலை பெறுகின்றோம். நாம் அனைவரும் ஏகாந்த நிலை அடைய முடியும். எமது அருளாசிகள்.

வேடிக்கையாகப் பார்த்தாலும் நமக்குள் தீமைகள் புகுந்துவிடுகின்றது

1. நம் ரோட்டில் நடப்பதை வேடிக்கைதான் பார்க்கின்றோம்!
நமது வாழ்க்கையில் நாம் நல்லவர்கள்தான். எல்லோருக்கும் நன்மை செய்யவேண்டும் என்றுதான் எண்ணுகின்றோம், ஏங்குகின்றோம். ஆனால், ரோட்டில் ஒருவன் ஒருவனைத் தாக்குகின்றான். கோபத்துடன் அவன் கடுமையாகப் பேசுகின்றான், ஏசுகின்றான்.

நாம் வேடிக்கை பார்க்கின்றோம்.
நாம் உற்றுக் கண்ணால் பார்க்கின்றோம்.
நம் கருவிழி ருக்மணி நமது எலும்புக்குள் ஊழ்வினை என்ற
ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கிவிடுகின்றது.

இந்தப் பதிவின் நினைவுகள், அவன் உடலிலிருந்து வரக்கூடிய
கோபமான, காரமான உணர்ச்சிகளை நுகர நேருகின்றது.

ஆக, உயிரிலே பட்டு உணர முடிகின்றது. கண்ணிலே பார்க்க முடிகின்றது. இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகின்றது. கோபத்தாலும், ஆத்திரத்தாலும் அவன் உடலில் எப்படி பதட்டங்கள் ஏற்பட்டதோ, அதே உணர்வுகள் நம் உடலுக்குள் உணர்ச்சிகளை அது இயக்கச் செய்துவிடுகின்றது.

இப்படி இயக்கினாலும், இந்த உணர்வுகள் அனைத்தும் உமிழ்நீராக மாறி, நம் ஆகாரத்துடன் கலக்கின்றது. சிறுகுடலும், பெருங்குடலும், நம் ஆகாரத்தை அமிலமாக மாற்றும் திறன் பெற்றது.

ஆகவே, ஆகாரத்திலே இந்த காரமான, வேதனையான உணர்வின் உமிழ்நீர் இரண்டும் கலக்கப்படும் பொழுது, சிறுகுடலையும், பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் பலவீனமடைந்துவிடுகின்றது.
2. வேடிக்கை பார்த்த உணர்வுகள் நமக்குள் எப்படி நோயாக மாறுகின்றது?
நாம் இப்படி வேடிக்கை பார்ப்பதற்கு முன்பு, நிறைய சத்துள்ள ஆகாரத்தைச் சாப்பிட்டு இருப்போம். ஆனால், இப்படி நமது சிறுகுடலையும், பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் பலவீனம் அடையப்படும் பொழுது, ஆகாரத்தை ஜீரணிக்காதபடி அதை நஞ்சாக மாற்றிவிடுகின்றது.

அதன் உணர்வு, நமது இரத்த நாளங்களில் கலந்தபின், கார உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது. பின், நம் இரத்த நாளங்களில் கலந்தபின், இரத்தங்கள் உடல் முழுவதும் படருகின்றது.

நுரையீரலிலோ, கல்லீரலிலோ, மண்ணீரலிலோ படரும் பொழுதும், இதயத்திலும் இந்த உணர்ச்சிகள் தாக்கப்படும் பொழுது, இதயத்தில் ஒரு விதமான வலியும், அதிலே ஒரு எரிச்சலும் வருகின்றது.

நாம் தப்பு செய்யவில்லை. வேடிக்கைதான் பார்த்தோம். நுகர்ந்தறிந்தோம். அறிந்தாலும் உணர முடிகின்றது. நுகர்ந்த உணர்வுகளோ, நமக்குள் அந்த உணர்வுகளைத் தூண்டும் அணுக்களாக மாற்றுகின்றது.

இப்படி மாறும் அணுக்களை நாம் தடுக்கவில்லையென்றால் நம் உடலுக்குள் சிறுகச்சிறுக ஆரம்பித்து
நெஞ்சுவலி, கல்லீரல் வலி, மண்ணீரல் வலி என்றும்,
கிட்னிக்குள் வலியும், இதயத்தில் வலியும், நுரையீரல் வலியும்,
இந்தக் கார உணர்ச்சிகளால் வந்துவிடுகின்றது.
இதன் உணர்வின் அழுத்தம் மூளை பாகம் சென்று,
நாம் சிந்திக்கும் பொழுது,
மூளையிலும் இந்த இரத்தங்கள் கார உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அப்பொழுது, நம் கண்கள் சிவந்து விடுகின்றது. அதாவது, சிரசு பாகங்கள் மிகக் கடினமாகி, “கின்” என்று ஆகிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால், அவர்கள் தவறு செய்வதை, வேடிக்கை பார்த்துத் தெரிந்து கொண்டோம்.
அந்த உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.
இதை நீக்க வேண்டுமா? வேண்டாமா?
அதற்குத்தான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்து நம் உடலுக்குள் இரத்தத்தில் கலக்கச் செய்தால், ஒவ்வொரு நொடியிலும் இந்தக் கார உணர்வுகளைத் தணித்து, நல்ல உணர்வுகளாக மாற்ற முடியும்.

September 26, 2013

இன்று இருப்பது நாளை இல்லை... இயற்கையின் நியதி...!

1. இன்று இருப்பது நாளை இல்லை
இன்று நமது பூமியில், மனிதர்கள் உருவாகி பல நிலைகள் பெற்றாலும், பல நகரங்களை உருவாக்கினாலும், பூமியில் பூகம்பங்கள் ஏற்பட்டு, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பல நகரங்கள் பூமிக்குள் புதைபட்டு விட்டன. இந்த நகரங்களுக்கு மேல், இரண்டடுக்கு, மூன்றடுக்கு கூட பூமிக்கு உள்ளே சென்றுவிட்டன.

பூகம்ப நிலைகளால், சிந்து நதியின் கரையின் ஓரங்களில் உருவான நகரங்களான, சிந்து மாகாணங்களில் ஒன்று, முதல் பூகம்பத்தில் உள்ளே சென்று விட்டது. இரண்டாவது பூகம்பத்தால், இன்னொரு நகரம் பூமியின் உள்ளே சென்றுவிட்டது. மூன்றாவது பூகம்பத்தால், மற்றொரு நகரமும் உள்ளே சென்றுள்ளது.

இதைப் போன்று, நகரங்கள் உள்ளே செல்லும் பொழுது, அழுத்தம் அதிகரித்து, கடல் நீர் பொங்கி நில அரிப்பு ஏற்பட்டு, அங்கே ஒரு மேடாகவும் மாறிவிட்டன.

நமது ஊர்களிலும் பூமிக்கடியில் சில நகரங்கள், சில ஊர்கள் புதைந்துள்ளன. கடல் அலைகள் பெருகப்படும் பொழுது, நகரங்கள் கடல் நீரால் மூடப்பட்டு விடுகின்றன.

இதைப் போன்று, கடலுக்கடியிலும் பல நகரங்கள் புதைந்துள்ளன. கடலுக்கடியில் பூமி கொதிக்கப்படும் பொழுது, கடல் அலைகள் ஓங்கி வளர்ந்து, மற்ற இடங்களை அடித்துச் சென்று, அமிழ்த்து விடுகின்றன. இதுவெல்லாம், இயற்கையின் சில மாற்றங்கள்.

இன்று இருப்பது நாளை இல்லை”, என்பதை நாம் அறிந்து கொள்தல் நல்லது.
2. உடல் பற்று வைத்துத்தான் நாம் வாழ்கின்றோம்
ஏனென்றால், நாம், நம் உடலில் பற்று வைத்துத்தான் வாழ்கின்றோம்  உயிர் பற்று யாரும் வைப்பதில்லை.

மனிதராக உள்ள நாம், பூகம்பத்தில் சிக்கி மரணமடையப்படும் பொழுது,  இதன் உனர்வின் தன்மை கொண்டு பூமிக்குள் அடைபட்டு கற்தேரைகளாக வளரும் சந்தர்ப்பம் வருகின்றது. 

கொதிகலனாகி ஏற்பட்ட பூகம்பத்தால் அமிழ்ந்த உயிர்கள், திலிருந்து மீண்டும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், வெளியில் வந்தால்  எரிப்பூச்சிகளாக  மாறும் தன்மை வருகின்றது.

கவர்ந்து கொண்ட உணர்வுக்கொப்ப, உயிரின் இயக்கம் எப்படி அமைகின்றது,  என்பதனை குருநாதர் தெளிவாக உணர்த்தியருளினார்.

பூமியில் பரிணாம வளர்ச்சியில், எத்தனையோ கோடி உடல்களைப் பெற்று, மடிந்து, இன்று மனிதராகப் பிறந்துள்ள நாம், இப்பொழுது எப்படி வாழ்கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 

மனிதர் தாம் வாழ, செல்வத்தைத் தேடுகின்றோம். 
தேடிய செல்வத்தைப் பாதுகாக்க,
மனதைப் பறிகொடுக்கின்றோம்.
வேதனை என்ற உணர்வானால்,
உணர்வின் சோர்விற்குள் சிக்குகின்றோம். 

வேதனை என்ற நிலையாகி, நமக்குள் எத்தனையோ நோய்களை உருவாக்குகின்றோம். இப்படி இதன் உணர்வாகும் பொழுது, இதுவே நம்மை வழி நடத்திச் செல்லுகின்றது.

நமது பூமியே பெரும் கொதிகலனாக மாறிக் கொண்டு வருகின்றது. நமது பூமி மட்டுமல்ல, நமது பிரபஞ்சமும் மாறி வருகின்றது. பிரபஞ்சத்தில் உருவாகிய மனிதன், மின்னல் கடலில் தாக்கப்படும் பொழுது மணலாக மாறியதை பிரித்தெடுத்து, அதனைக் கதிரியக்கங்களாக மாற்றும் தன்மை பெற்றான்.

இப்படி எடுத்துக் கொண்டு, தான் வாழ, தன் நாட்டைக் காக்க, பிற உயிரினங்கள் மற்றொன்றைக் கொன்று புசிப்பது போன்று, மிருகங்கள் தன் இனத்தையே கொன்று புசிப்பது போன்று, மனிதர் தம் இனத்தையே கொல்லும் நிலை உள்ளது.

இன்று மனிதரிடையே விஞ்ஞான அறிவு வளர்ந்திருந்தாலும் கூட, மிருக உணர்விலிருந்து அவன் மாறவில்லை.
3. விஷத்தைப் பரவச் செய்து, மனிதரை மடியச் செய்யும் நிலைதான் இன்றைய உலகின் நிலை
ஆக, மனிதராகப் பிறந்தோம்,
தீமைகளை அகற்றும் வலிமை பெற்றோம்,
தீமையிலிருந்து விடுபடுவோம் என்ற உணர்வு
விஞ்ஞானத்திலும் சரி, அரசாங்க நிலைகளிலும் சரி, மனிதர்கள் உருவாக்கவே இல்லை.

பிறரைத் துன்பப்படுத்துவதும், துன்பப்படுவதும் என்ற உணர்ச்சிகளில் மனித நிலைகள் மாறி, மனித உடலுக்குள் ஏற்பட்ட இந்த உணர்வுகள், இன்று, காற்று மண்டலத்தில் நச்சுத் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது.

இது போன்ற உலகில்தான், நாம் வழுகின்றோம். இன்னும் சிறிது காலத்தில், பூமியின் சிதைவு எவ்வாறு ஆகும் என்று சொல்ல முடியாது.
விஞ்ஞான அறிவால் எடுத்துக் கொண்ட உணர்வுகள்,
தனது நாட்டைக் காக்க,
உலகெங்கிலும் விஷத்தின் தன்மையை உருவாக்கி,
விஷத்தைப் பரப்பி, ஒரு நொடிக்குள்
மனிதரை மடியச் செய்திடும் நிலை உள்ளது.

இதனால் இன்று விஷத்தைத் தாங்கிய உயிரணுக்களாக வெளிவருவதும், உயிரணு வெளிவந்த பின், விஷத்தைப் பாய்ச்சி உணவாக உட்கொள்ளும் உடலாக உருவாக்கும் தன்மை, விஞ்ஞான அறிவால் ஏற்பட்டுவிட்டது.

இன்று மனிதராக இருக்கின்றோம், விஷத்தை நுகரப்படும் பொழுது, மீண்டும் விஷ ஜந்தாக மாறும் நிலைகளே, உருவாகி வருகின்றது என்பதனை யாரும் மறந்திட வேண்டாம்.

ஆகவே, இந்தத் தீமைகளில் இருந்து விடுபடும் நிலையாக, மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் காண்பித்த அருள் வழியில், நாம் அனைவரும் வாழ்வோம்.