ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2023

குப்பையா...! அல்லது... அது உயர் ஞானத்தை வளர்க்கும் உரமா...?

கை வண்டியில் பல மூட்டைகளைப் போட்டு வண்டியை இழுத்துச் செல்வதைப் போல் ஒரு காட்சி தெரிகின்றது.

அந்த மூட்டையில் உள்ள பொருள் எது..? என்று அறியாமல் அந்த மூட்டையைப் பார்த்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம் உதயமாகின்றது.
1.அரிசியாக இருக்கும்… பருப்பாக இருக்கும்…! என்று சில எண்ணங்களும்
2.சிலருக்கு அதே தொடர்புத் தொழிலில் ஊறிய நிலை பெற்றவர்கள்
3.அந்த மூட்டையின் கோணத்தைக் கொண்டே பருப்பு மூட்டை சர்க்கரை மூட்டை அரிசி மூட்டை என்று யூகிப்பவர்களும் உண்டு.

ஆனால் அந்த மூட்டையைக் கட்டியவனுக்கும் இழுத்துச் செல்பவனுக்கும் “அதில் என்ன உள்ளது…?” என்று தெரியும்.

இதைப் போன்றே இந்த உடல் மூட்டையில் எந்த எண்ணத்தைப் போட்டு வளர்த்திருந்தாலும்… அந்த மனிதனின் புற உருவத்தைக் கொண்டு… செய்யும் தொழில் உற்ற பந்தங்களின் தொடர் பொருளாதார நிலை இதனைக் கொண்டு… ஒரு மனிதனின் நிலையை யூகிக்கும் தன்மை தான் புற உலக எண்ணங்களில் பருப்பாக இருக்குமோ… அரிசியாக இருக்குமோ… என்ற நிலைப்படி….!

கலந்துறவாடித் தொடர்பு கொண்டவர்கள் தொடர்பு நிலையால் மூட்டையின் வடிவ நிலையைக் கொண்டு அதனதன் பொருள் தான்… என்று எப்படி உணர்த்துகின்றோமோ இதைப் போன்று தான் கலந்து வாழ்பவர்கள் “ஒரு மனிதனின் குணத்தை இந்தக் குணமுடையவன் தான்…” என்று உணர்கின்றார்கள்.

1.ஆனால் இந்த உடல் என்ற மூட்டையில்..
2.எதை எண்ணத்தால் ஒரு மனிதன் போடுகின்றானோ
3.அதன் நிலை போடுபவனுக்கு எப்பொருள் என்று தெரிகின்றதோ அதைப் போன்றே
4.ஒரு மனிதனின் எண்ண குணம் அவனுக்குத் தான் தெரியும்.

அவன் எண்ணத்தால் போட்டதன் பொருள் நிலை அறிந்து… அவனை இயக்கிச் செல்லக்கூடிய அவன் எண்ணத் தொடர்பு கொண்ட உயர் சக்திகளுக்கும்… அவ்வண்டியோட்டியின் நிலையை ஒத்த நிலையில் அறிய வாய்ப்பு உண்டு.

இந்தச் சரீர பிம்ப மூட்டையே பல எண்ணத்தில் சுழல்கின்ற உருவ மூட்டை தான்…!

இச்சரீர பிம்பத்தில் ஓடக்கூடிய எண்ண ஒலியின் உணர்வலைகள் இப்பொழுது வாழும் வாழ்க்கையும்… முந்தைய காலச் சேமிப்புத் தொடர்பையும்… சுழன்று ஓடும் இந்த எண்ண ஓட்டத்தின் செயலில் வாழ்ந்தது… உண்டது… கழித்தது… ஆகிய
1.எல்லா நிலைப்பட்ட குப்பையின் மத்தியில் தான்
2.உயர் ஞானத்தை வளர்க்கவல்ல உயிர் ஆத்மா உள்ளது.
3.இந்த உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்டிக் கொள்ள…
4.இந்தக் குப்பையான சரீர எண்ணத்தில் உள்ள சத்து நிலையை உரமாக இவ்வாத்மா எடுத்து
5.உயர் ஞான வித்தாக பிறிதொரு ஈர்ப்புச் சுழற்சியில் சிக்காவண்ணம் உயர் ஞானம் பெறல் வேண்டும்.

குப்பையின் மத்தியில் வளரும் மணியான வித்து தன் வளர்ப்பில் அக்குப்பையின் சத்தை எடுத்து பல வித்துக்களைத் தரவல்ல சக்தியைப் போன்று நாம் பிரிக்கும் சக்தி பெற வேண்டும்.

இச்சரீர பிம்ப மூட்டையில் சேமித்துள்ள குப்பையான பல வாழ்க்கைத் தொடர்புகளையும் இவ்வுலகப் பந்தச் செயல் எண்ண உருவத்தில் எல்லாம் “இந்த எண்ண ஓட்டத்தை... எப்படியும் செலுத்தி வாழலாம்...” என்று இருக்கக் கூடாது.

ஏனென்றால் வாழ்க்கையில் எந்தெந்த நிகழ்ச்சி ஓட்டத்தில் எல்லாம் நம் எண்ணங்கள் மோதுகின்றதோ அதன் வழித் தொடர் பெற்ற அதன் அலை ஈர்ப்பு வார்ப்பாகத்தான் இச்சரீர பிம்பம் வளர்க்கும் ஆத்ம நிலையும் செல்லும்.

அவ்வாறு ஆகாதபடி… நமக்குத் தொடர்பு கொண்ட இச்சரீர எண்ண மோதலின் வாழ்க்கை தொடர்பு நிலையிலுள்ள செயலில்
1.குப்பையான உணர்வை எடுத்து இந்தச் சரீரத்தை மேலும் குப்பையாக்காமல்
2.நம்மைச் சுற்றியுள்ள நாம் செல்லும் செயல் வழியிலும் இவ்வெண்ணத்தை நாம் செலுத்தும் முறையே
3.குப்பையில் உள்ள சத்தை எப்படி அவ்வித்து தனக்கு உரமாக எடுத்து வளர்கின்றதோ
4.”அதைப் போன்ற எண்ணமுடன்...” நம் ஞானம் செல்லுமானால்
5.நம் உயிராத்மாவின் வலு வலுவாகும் சக்தி நிலையை நாம் பெற முடியும்.

மின்சாரத்தை எடுத்து அதன் சக்தியைப் பல சாதனையாக ஒளி பெறவும் நாம் இயக்கக்கூடிய இயந்திர ஓட்டங்களுக்கும் அதன் உபயோகத்தைக் கொண்டு குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சாதனைக்குகந்த செயலாக உபயோகப்படுத்திக் கொள்கின்றோம்.

சக்தி கொண்ட அந்த மின்சாரம் ஒரு நொடிப்பொழுது இந்த மனித ஜீவனுடன் மோதினால் மனிதனையே அழிக்கக்கூடியது. அப்படிப்பட்ட வலுக் கொண்ட மின்சாரத்தைத் தனக்குச் சாதகப் பக்குவத்தைக் கையாண்டு பல செயல்களை அதன் உதவி நிலையில் பெறுகிறோம்,.

அதைப் போல் இந்த வாழ்க்கைச் சுழற்சியில் ஓடக்கூடிய மின் அலையின் வீரிய சக்தியே விஷமான உணர்வுடன் சுழல்வதால்… இவ்வெண்ணத்தின் ஈர்ப்பை ஒரு நொடி அவ்வலையில் செலுத்தினாலும்… மின்சாரத்தின் தாக்குதலைப் போன்று அழிவு நிலைக்குத் தான் செல்ல முடியும்.

1.அதனையே நாம் அந்த மின்சாரத்தின் செயலை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் வழி முறை போன்று
2.நம் ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்… நம்மால் முடியும்…!

“மின்னலுக்குள் இருக்கும்…” உயர்ந்த ஆற்றலை நாம் பெற வேண்டும்

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற உயர்ந்த சக்திகள் கொண்டு தாவர இனங்களுடைய சக்திகளை அறியும் ஆற்றல் பெற்றான்.
1.தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்து நுகர்ந்து தனக்குள் அதை எடுக்கும் பொழுது
2.இந்த தாவர இனங்களுக்கு ஜீவ நீராக ஊட்டும் மேகங்கள் கூடுவதை அறிகின்றான்
3.இவன் எண்ணத்தால் எண்ணினால் அவன் உணர்வுகள் மேகங்களை அழைத்து வருவதும்
4.அப்பகுதியில் அதிகமாக மழை பெய்வதும் போன்ற நிலை உருவாகிறது.

ஏனென்றால் அகஸ்தியன் விஷத்தின் தன்மை கொண்டு அதை ஒடுக்கிடும் தன்மை பெற்றவன். ஆதியிலே பொருள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி அடர்த்தியாகி ஆவியாகும் போது தான் மேகத்தின் தன்மை அடைகின்றது. மாறுபட்ட சத்துகள் கலந்ததும் நீராக வடிகிறது.

அந்த ஆற்றலைத் தான் அகஸ்தியனும் பெறுகின்றான். அந்த நீரின் தன்மை மற்ற தாவர இனங்களிலும் படுகின்றது இதைப் போன்ற உணர்வுகள் இவனுக்குள் படரப் படும் பொழுது
1.இவன் எங்கே அமர்ந்து சிறிது காலம் செயல்படுகின்றானோ
2.இவன் உடலில் இருந்து உணர்வுகள் அங்கே படரப்பட்டு
3.மேலே மேகங்கள் படர்ந்து செல்வதை அது கவர்ந்து நீராக மாற்றிடும் நிலை பெறுகிறது.

அதே போல் அகஸ்தியன் மின்னலை உற்றுப் பார்த்தான் என்றால்
1.இவன் உயிர் அதை மின் அணுக்களாக மாற்றுவதும்
2.நுகர்ந்ததை அடக்கி ஒளியின் உணர்வாகப் பெறும் தகுதியும் பெறுகின்றான்.

ஒரு சமயம் குருநாதர் காட்டிய வழியிலே நாசிக் என்ற இடத்திற்கு நான் (ஞானகுரு) செல்லப்படும் பொழுது அங்கே ஒருவனைச் சந்திக்கும்படி செய்தார். அவனுக்கு வயது பதினேழு இருக்கும்.

அவன் வேறொரு மனிதனைக் கோபமாக உற்றுப் பார்த்தால் போதும்...! கண்ணின் ஒளிகள் பாய்ந்து அங்கே ஓட்டையே போட்டு விடும். சுரீர்ர்ர்ர்…! என்று இந்த உணர்வுகள் பாயும். அவன் அலற வேண்டியது தான்.

அவனுக்கு இது எப்படி வந்தது…?

தாய் கருவிலே இவன் இருக்கப்படும் பொழுது தாய் மின்னலை எட்டிப் பார்த்தது. அப்போது அந்த மின்னலின் உணர்வுகள் கருவிலே இணைந்து விட்டது. ஆனால் தாய் தன் கண் பார்வையை இழந்துவிட்டது.
1.கருவில் இருக்கும் சிசுவிற்கு அந்த மின்னலின் ஒளிக் கற்றைகள்
2.இரத்தத்தின் வழி கூடி உடலிலே கலந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பெறுகின்றது.

தாய் கண் இழந்த பின் நெற்றியின் உணர்வு கொண்டு பார்க்கும் நிலையும் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கர்ப்ப காலங்களில் இந்த உணர்வுகள் கருவிலே இணைந்து அது விளைந்து கொண்டே வருகின்றது.

குழந்தை பிறந்த பின் அவன் இளம் வயதிலே அதை அறியவில்லை பதினேழாவது வயதை அவன் எட்டப்படும் பொழுது
1.இவன் எண்ணத்தின் கோப உணர்வுகள் பொறிகள் கிளம்புவது போல வருகிறது.
2.ஒரு இரும்பை அவன் பார்த்தால் அது சூடாகும்… அப்படியே வளைக்கலாம்

அதாவது சிறிது நேரம் ஒரு இரும்பை அவனை உற்றுப் பார்க்கும்படி செய்தால் அது சூடாகிவிடும்… வளைத்து விடலாம். இந்த மாதிரி மின் கதிர்கள் அவன் கருவிலே விளயப்படும் பொழுது வந்த சக்தி.

(அவன் நீடித்த நாள் வாழவும் இல்லை சுற்றுப்பயணம் சுற்றி விட்டு இரண்டாவது தடவை நான் அங்கே வரும் பொழுது அவன் இல்லை).

அவன் உணர்வுகள் அந்த அறிவின் தன்மை கொண்டு வெளி வரப்படும் பொழுது மற்றது கெடுகிறது. ஆனால் முதலில் தெரியாது.
1.அடுத்தவனை இவன் உற்றுப் பார்த்தால் அவன் மயங்கி விழுந்து விடுவான்.
2.இவனால் தான் அப்படி ஆனது என்று ஒருவருக்கும் தெரியாது.

இப்படி அவனை அறியாமலே பல நிலைகள் வந்து விபத்துகள் ஆகிறது. பின்னாடி மற்றொருவர் கூறும் பொழுது தான் தெரிய முடியும்.

ஆக… ஒரு மனிதன் மீது மின்னல் பட்டால் அவன் எப்படிக் கருகி விடுவானோ அதே போன்று இவன் பார்வை பட்டால் அடுத்தவர்களை அது கறுக்கி விடுகின்றது.

அனுபவ ரீதியாக குருநாதர் எமக்குக் காட்டிய உண்மை நிலைகள்

மின்னலைப் பார்த்ததால் முதலில் தாய்க்குக் கண்கள் போனது ஆனால் கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்கோ அது வளர்ந்த பின் “ஈர்க்கும் சக்தி பெருகி அணு செல்களாக அது பெருகுகின்றது…”

மின்னலைப் பார்த்துவிட்டு அடுத்தவனைப் பார்த்தால் சுட்டுப் பொசுக்குகின்றது. அப்போது அவனைக் கண்டாலே மற்றவர்கள் அஞ்சி ஓடும் நிலைகள் வந்துவிட்டது.

அவனை வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி செய்துவிட்டார்கள் எல்லோருக்குமே பயம்… அவன் மீது கோபப்படவும் முடிவதில்லை.

ஆனால் அவனுக்கு எப்போது இந்த நிகழ்ச்சிகள் நடக்கிறது என்றால்
1.மின்னல் பாயும் பொழுது இழுத்து அந்த உணர்வுகள் பார்வைக்குள் வந்து
2.எக்கோ (ECHO) மறுபடியும் அந்த உணர்வுகள் இயக்குகின்றது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன்…
1.அவன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது மின்னலை அடக்கும் அந்தச் சக்தி கிடைக்கின்றது
2.பிறந்த பின் குழந்தை அவன் தரையில் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில்
3.இவனுக்குள் கதிரியக்கப் பொறிகளை அடக்கிடும் சக்தியும் வருகின்றது.
4.இந்த அணுக்கள் இவனுக்குள் பெருகிப் பெருகி வானுலகை உற்று நோக்கும் அறிவின் தன்மை வந்து வான இயல் ஆற்றலைப் பெறுகின்றான்.
5.அதன் மூலம் எதனையுமே வென்றிடும் சக்திகளும் ஒளியாக மாற்றிடும் ஆற்றலும் அவனுக்குள் பெறுகின்றது

ஆனால் அகஸ்தியன் சக்தி வாய்ந்த நிலைகள் இப்படிப் பெற்றதை மக்களுக்கு இந்த உண்மைகள் தெரியாதபடி…… கிடைக்க முடியாதபடி காலத்தால் அது மறைக்கப்பட்டு… அரசர்கள் தடைப்படுத்தி விட்டனர்.

March 30, 2023

அகஸ்தியன் உடலில் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஜீன்களை நாம் பெற வேண்டும்

விஞ்ஞான அறிவு கொண்டு பார்க்கலாம்… போல அணு ஜீன்களை எடுத்து அதைப் பல விதமாக மாற்றி அமைக்கின்றனர். ஒரு தாவர இனத்தில் உள்ள ஜீன்களை எடுத்து மற்ற தாவர இனங்களில் இணைத்துப் புதுப்புதுக் காய்கறிகளையும் கனிகளையும் உருவாக்குகின்றனர்.

1.இது போக நாம் அணியும் உடைகளின் நிறங்களுக்கு உண்டான சாயங்களையும் புதிதாக உருவாக்கக் கற்றுக் கொண்டார்கள்
2.எந்த வகையான நிறம் வேண்டுமோ அந்த நிறத்தைத் தாவரங்களின் வித்துக்களில் இணைத்து விட்டால்
3.அதிலே உருவாகும் பஞ்சு அந்த நிறத்திற்கு வந்து விடும் என்று…!

இவர்கள் நினைத்தனர்… கெமிக்கல் கலந்த சாயத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது… அதில் இருக்கும் விஷத்தன்மைகள் நீரிலும் கலந்து ஆவியாகவும் சென்று காற்று மண்டலமும் நச்சுத்தன்மையாகின்றது… இதை மறைக்க இப்படி நேரடியாக வித்திலிருந்தே மாற்றி விடலாம் என்று…!

எதுவுமே விஷத்தின் தன்மை கொண்டு தான் மற்றதுக்குள் ஊடுருவச் செய்ய முடியும். வித்துக்குள் இந்த ஜீன்களை இணைக்கப்படும் பொழுது இதே விஷத்தின் தன்மை பெருக்கி அதனுடைய மலத்தின் தன்மை பஞ்சின் நிலையும் மாறுகிறது.

ஆனாலும்…
1.இப்படி உற்பத்தி செய்து அந்த உடைகளை நாம் மேலே ஆடையாக அணிந்தால்
2.உடலின் துடிப்பின் வெப்பத்தினால் அதில் துணியிலிருந்து வெளிப்படும் அலைகளால் உடலில் கடும் நோய்களாக வரத் தொடங்கும்.
3.ஆக… அதைச் சுவாசிக்கப்படும் பொழுது உடலுக்குள் விஷத்தின் தன்மை கொண்ட அணுக்களாக மாறும் என்பதை விஞ்ஞானிகள் மறந்து விட்டனர்.

எதைச் செயற்கையின் தன்மையில் கொண்டு வருகின்றோமோ இவை அனைத்தும் நமக்குள் பெரும் மாற்றங்களைத் தான் உண்டாக்கும்.

நிறங்களை மாற்ற வேண்டும்… உருவாக்க வேண்டும்… என்றால் விஷத்தின் தன்மை கொண்டு தான் அவைகள் இயங்குகின்றது. மனிதன் இப்படி எத்தனையோ நிலைகளில் அந்த இயற்கையின் நியதிகளை மாற்றிக்கொண்டு வருகின்றான்.

ஆகவே
1.இப்பொழுது நாம் எதை நுகர வேண்டும் எதை உடலுக்குள் அணுவாக மாற்ற வேண்டும் என்று
2.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உண்மைகளை உணர வேண்டும்.

அக்காலத்தில்… அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும்போது பல விஷத்தை வென்றிடும் ஆற்றல்களைப் பெற்றான். எப்படி…?

அவனுடைய தாய் தந்தையரோ காடுகளில் வாழப்படும் போது விஷ ஜந்துக்களும் கோடூர விலங்குகளும் அவர்களைத் தாக்கி விடாமல் இருக்க
1.விஷத்தை ஒடுக்கும் மூலிகைகளை அரைத்து அதை உடலில் முலாமாகப் பூசிக் கொண்டு
2.அந்த மணத்தால் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் கர்ப்பமுறும் காலத்தில் உடலிலிருந்து வெளிப்பட்ட மூலிகைகளின் மணங்கள் சுவாசத்தின் வழி உடலுக்குள் பரவி இரத்தத்தின் வழியாகக் கருவில் இருக்கக்கூடிய அந்தச் சிசுவிற்கும் அது கலந்து விடுகின்றது.

அதாவது முதலில் சொன்னபடி… வித்துகளில் எப்படி விஞ்ஞானிகள் செயற்கையாக ஜீன்களை இணைக்கின்றனரோ அது போல் அகஸ்தியனுக்கு நஞ்சினை வென்றிடும் சக்தி இயற்கையாகவே இப்படிக் கிடைக்கிறது.

ஆனால் விஞ்ஞானிகள் விஷத்தின் ஆற்றலைக் கலந்து ஒரே நிலையை பல நிலைகளாகப் புதிது புதிதாக மாற்றிக் கொண்டு வரும் போது ஒரே வித்தாக இருந்தாலும் அது கலந்த நிலையில் சாயங்களை (நிறங்களை) மாற்றுகின்றது. இருந்தாலும் அதிலே விஷத்தின் தன்மை ஓங்குகிறது.

இத்தகைய சாயத்தை வடித்துக் கொண்ட அந்த வித்துக்களையோ அந்தச் செடிகளையோ (பருத்திச் செடி) மாடுகள் உட்கொண்டால் அதுவும் விஷத்தன்மையாக மாறுகின்றது.

1.மாட்டின் உடலும் விஷமே இதுவும் விஷமே
2.இருந்தாலும் அதனுடைய குணங்கள் மாறுகின்றது
3.பால் கறக்கும் மாடுகளுக்கு இதை கொடுத்தாலும் பால் பச்சையாகக் கறக்கும்.
4.ஆனால் பின்னாடி தான் இதை அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தெரிந்த பின் இதை உரங்களாகக் காட்டுகளுக்கு போட முடியுமே தவிர அதே சமயத்தில் மற்ற உயிரினங்கள் அதை உணவாக உட்கொண்டால் அங்கேயும் வித்தியாசமாக மாறும்.

காளைகளுக்கு இதை கொடுத்தாலும் அதனுடைய உணர்வுகள் அமிலங்களாக மாற்றப்பட்டு அது தன் இனத்தை உருவாக்கும் இணை சேரும் காலங்களில் அது கன்றுகளாக உருவாகும் நிலை வரும் பொழுது “அந்த மாட்டின் கன்றுகளுக்கும் இது மாறத் தொடங்குகின்றது…!”

1.இப்படி ஒரு ஜெனரேஷன் மாற ஆரம்பித்தால்
2.அது மூன்றாவது நிலை நான்காவது நிலை என்று மாடுகளின் உருமாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்.

இப்பொழுது நாம் சொல்கிறோம் அல்லவா…! கடந்த காலம் போய் இன்று விஞ்ஞான காலம் வந்துவிட்டது என்று. அது போன்று தான் ரூப மாற்றங்களும்.

விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தால் இயந்திரங்களிலும் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். ஆனால் ஏற்கனவே செய்தது பழமை ஆகி விடுகின்றது.

புதிதாகக் கண்டுபிடித்தது வேகத்துடிப்பு அதிகமாகவும் அதனுடைய செயலாக்கங்களும் அதிகமாக வருகிறது. விஷத்தின் சேமிப்பாக இப்படி மாறிக் கொண்டே போகின்றது. இது இன்றைய நிலை.

ஆனால் அக்காலங்களில் நஞ்சினை வென்றிடும் அணு ஜீன்கள் தாய் கருவில் இருக்கும் போது அகஸ்தியன் உடலில் விளைந்தது.

அவன் பிறந்த பின்
1.மற்ற விஷத்தின் தன்மைகள் தனக்குள் நாடாது…
2.அப்படியே வந்தாலும் அதை அடக்கி ஒளியின் உணர்வாக மாற்றும்
3.அறிவின் தெளிவாக இயக்கக்கூடிய சக்தியாக அவனுக்குள் வந்தது.

காரணம் தாய் நுகர்ந்த உணர்வுகள் பூர்வ புண்ணியமாக அமைந்து நஞ்சை வென்றிடும் சக்தியாக வருகின்றது பிறந்த பின்
1.நஞ்சினைக் காணுகின்றான்… அதனின் இயக்கத்தை அறிகின்றான்
2.நஞ்சினை அடக்கிடும் எண்ணங்கள் உருவாகி… அந்த யுக்தியின் தன்மைகள் பெருகுகின்றது.
3.அதன் வழி அந்த உணர்வை அவன் சுவாசிக்கின்றான் நஞ்சினை வென்றிடும் அணுக்கள் அவன் உடலில் அதிகரிக்கின்றது.

இப்படி வளர்ந்தவன் தான் அகஸ்தியன்…!

தாவர இனங்களுடைய சக்திகளை நுகர்ந்தான். விஷத்தின் தன்மை ஒடுக்கினான். சிந்தித்துச் செயல்படும் தன்மையாக அவனுக்குள் வருகின்றது.

பல விதமான தாவர இனங்களின் சக்திகளை எடுக்கும் பொழுது அதனுடைய உணர்வின் இயக்கம் தெளிந்திடும் உணர்வின் அறிவாக அவனுக்குள் வருகிறது. இது எல்லாம் அவன் இளம் வயதில் பெற்ற சக்திகள்.

1.நஞ்சினை வென்றிடும் சக்தியாக உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகரப்படும் போது
2.அவன் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அறிவாக அவனை இயக்குவதும்
3.கண்ணுக்குள் இருக்கும் கருவிழி அதன் இனமான உணர்வினைத் தனக்குள் நுகர்ந்து
4.அந்த அறிவாகவே அவனை இயக்கத் தொடங்குகிறது.

அகஸ்தியனின் அருள் சக்திகளைப் பெறுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் அகஸ்தியனைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்வது.

அவன் பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல்களைப் பெறக்கூடிய தகுதியை நீங்கள் பெற்று… இனி வரக்கூடிய எத்தகைய கடுமையான நஞ்சாக இருந்தாலும் அதை மாற்றிட வேண்டும் என்று தெளிவாக்கிக் கொண்டு வருகின்றோம் (ஞானகுரு).

“தன் வலுவைத் தானே தான் கூட்ட முடியும்...” என்ற தெளிவு ஒவ்வொருவருக்கும் வருதல் வேண்டும்

1.தன்னைத்தான் நம்பாமல்…
2.தனக்கு மேல் வலுவான பூஜிப்பு முறையால்…
3.பல அலைத் தொடர்புகளின் சக்தி அலையை நம்பி…
4.அதன் தொடர்புடன் தான் இன்றளவும் “பக்தி பூஜிப்பு வழி முறை…“ இருக்கின்றது.

நமக்கு மேல் சக்தி கொண்ட தெய்வங்களை அடிபணிந்து… அருள் வேண்டி… அவ்வலையின் வசத்தில் நாம் வளரும் பக்குவத்திலேயே இன்றளவும் காலம் சென்று விட்டது.

1.தன் வலுவைத் தான் கூட்டி
2.தன்னையே தான் நம்பி
3.தானும் வலுவான தெய்வ சக்தியின் சக்தியாகலாம்…! என்பதையே இன்று மறந்து வாழ்கின்றனர்.

மற்றொன்றிடம் யாசித்து… பக்தி உணர்வு கொண்டு வேண்டிப் பெறும் குண வழிச் செயலாகத் தான் இன்றளவும் செயல்கள் உள்ளது.. ஞானத்தை எட்டிப் பார்க்கும் தன்மை இல்லை…!

ஒவ்வொரு ஜீவ சக்தியிலுமே தன் வலுவை வளர்க்கக்கூடிய வலுத் தன்மை உண்டு.
1.உடல் வேறு… ஆத்மா வேறு…!
2.ஆத்மா பிரிந்து விட்டால் உடல் செயல் இழந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்த மனிதன்
3.தன் ஆத்ம இயக்கத்தின் உண்மையை உணரவில்லை.

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கும் ஆத்ம உயிர் உண்டு. சரீர பிம்ப உடலை இயக்குவதும் அவ்வாத்ம பிம்பம் தான். உடலைச் சுற்றி இவ்வாத்மாவின் இயக்கம் செயலாற்றும் தன்மைக்கு… “ஜீவத் துடிப்பு கொண்ட” இயக்க இயந்திரம் தான் இவ்வுடல் கோளம்.

எண்ணம் எப்படி உதயமாகின்றது…?

மூளையின் பதிவு நிலையிலோ… மற்ற சரீர பிம்ப உடல் உறுப்பின் நெஞ்சிலிருந்தோ… எண்ணம் உதயம் பெறவில்லை…!

இவ்வாத்மாவின் உந்தலின் எண்ணம் கொண்டுதான்… இவ்வுடல் இயந்திரத் துடிப்புக் கோளத்தின் ஆத்ம உயிரின் மோதலினால்.. இச்சுவாசம் எடுத்த உயிர்த் துடிப்பின் மோதல் இருந்தால்தான் சுவாசம் எடுக்க முடியும்.

1.ஆத்மாவின் செயலாக இந்த உயிர்த் துடிப்பு ஏற்பட்டு
2.உயிர்த் துடிப்பின் உந்தலுக்கு இச்சுவாசத்தின் மூலமாக
3.ஆத்மாவின் எண்ண செயல் கவன நரம்பில் மோதி
4.சிறு மூளையின் இயக்கத்தால் செவி ஒலி ஈர்த்து எண்ணச் செயல் நடக்கின்றது.
5.ஆத்மாவின் உந்தலுக்குகந்த எண்ணச் செயலை
6.உடல் கோளத்தைக் கொண்டு செயலாக்கிக் கொள்கின்றனர்.

காற்றலையில் கலந்துள்ள ஒலி அலையை வானொலிப் பெட்டி மின் தொடர்பு ஏற்படுத்தியவுடன் எவ்வலைத் தொடரில் அம்முள்ளை வைக்கின்றோமோ அவ்வலையின் ஒலி கேட்பதைப் போல்
1.இவ்வாத்மா அலையின் உந்தல் இவ்வுயிர் சிரசில் பட்டு
2.உயிர்த் துடிப்பைக் கொண்டு… சுவாசத்தின் எண்ணச் செயல் நடக்கின்றது.

இவ்வெண்ணத்தின் செயலை மாற்றியமைக்கும் நிலை… வளர்க்கும் நிலை… குறைக்கும் நிலை… எதுவாக இருந்தாலும்
1.இஜ்ஜீவத் துடிப்பு கொண்ட சரீர இயக்க அணு வளர்ப்பின் வளர்ப்பில் இருந்து தான்
2.இவ்வாத்மாவின் வலுவையே வலுவாக்கக்கூடிய வழித் தொடர் பெற முடியும்.

ஆத்மாவின் செயலான எண்ணத்தை உயர் அலையின்பால் செலுத்தி அதை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

“உயர் அலை...” என்பது இந்தப் பூமியின் பிடிப்பலையில் இந்தப் பூமியின் சுழற்சியுடன் சுழலும் அலைத் தொடர்பின் வட்ட ஈர்ப்பில் வாழும் நிலையிலிருந்து
1.மகரிஷிகளின் அலைத் தொடர்பு ஞானத்தை
2.மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கப் பழகுதல் வேண்டும்.

எண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் முறை வழியால் அந்த உயர் காந்த மின் அலையின் தொடர்பை நாம் எடுக்க எடுக்க இந்த உடலில் இருந்தே சரீர அணுக்களின் ஈர்ப்பு வளர்ப்பலையால் ஆத்மாவின் வலுவைக் கூட்டி இவ்வாத்மாவை எந்த நிலைக்கும் செலுத்திச் செயலாக்ககூடிய வலுவை இந்த மனிதச் சரீரம் பெற முடியும்.

தன்னைத் தான் நம்பி…! தனக்குள் உள்ள இறை சக்தியின் உயர் அலையைப் பிற அலைகள் தங்க இடம் தராமல் நல்லதாக மாற்றிட முடியும்.

ஏற்கனவே நம் உடலில் குடிவந்துள்ள எந்த வகையான குண வலு கொண்ட ஆத்மா இருந்தாலும்… நம் ஆன்மா வலு கூடக் கூட… நம் வசப்பிடி வலுவாக… அதனையும் செயலாக்கும் வலுவாக்கி… நம் ஆத்ம சக்தியை நாம் வளர்த்து… “ஒவ்வொருவருமே இறைவனாகலாம்…!”

எங்கோ இல்லை இறைவன்…! இங்குள்ள இறைவனை நாம் தூசிக்காமல் ஒவ்வொருவருமே நாம் இறைவனாகலாம்.

மனிதனும் தெய்வமாகலாம் என்பது… போற்றலில் பிறர் போற்றி வணங்கும் தெய்வமல்ல…!
1.மனிதன்தான் தெய்வ சக்தியைப் படைக்கவல்லவன்.
2.தெய்வ குண வழி முறை செயல்பாடு உருவக குண செயலையே உருவாக்க வல்ல சக்தி… “மனித சக்தி தான்…”

ஒவ்வொரு ஆத்மாவும் அந்த நிலை பெறலாம்.

March 29, 2023

நாடி சாஸ்திரம்

அக்கால ஞானிகள் எல்லாவற்றிற்கும் “காரணப் பெயர்களை வைத்து” நம் வாழ்க்கையில் வரும் தீமை என்ற உணர்வுகளை அறிந்து அதிலிருந்து விடுபட்டு நாம் எவ்வாறு தெளிந்து வாழ வேண்டும் என்பதற்காக சாஸ்திரங்களையும் காவியங்களையும் படைத்துக் கொடுத்தார்கள்..

வியாசகர் பாரதம் என்று சொல்வார்கள்.
1.அதிலே வியாசகர் அவ்வப்போது வருவார்…
2.அதே போன்று அகஸ்தியரும் அவ்வப்போது வருவார்… போவார்…!

வாதாபி என்ற ஒரு அரக்கனையும் அவனுடைய சகோதரனையும் காட்டியிருப்பார்கள். மற்றவர்களைக் கொன்று உணவாக உட்கொள்கிறார்கள் என்றும் காட்டியிருப்பார்கள்.

ஆனால் அகஸ்தியனை ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லியிருப்பார்கள்.

வாதாபி ஆடாக மாறுவதும் அதை அடுத்தவன் அறுத்துச் சமைத்து அங்கு வருபவருக்கு உணவாகக் கொடுப்பதும் அவர்களுடைய வழக்கம். சாப்பிட்டு முடிந்த பின் வாடா வாதாபி…! என்று கூப்பிட்டால் வயிற்றைப் பிளந்து அவன் வெளியிலே வருவான்.

இப்படிக் கொன்று விட்டு அவனை இருவரும் சேர்ந்து சாப்பிடுவது அவர்களுடைய வழக்கம். சுருக்கமாக வேட்டையாடும் நிலையாக மீனைப் பிடிக்கத் தூண்டிலில் இரை வைத்துப் போடுவது போன்று அவர்கள் செயல்படும் நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.

அகஸ்தியன் அங்கே செல்லப்படும் பொழுது அதே போன்று வாதாபி ஆடாக மாறுவதும் சமைத்து இவன் உணவாக உட்கொண்ட பின் “வாடா வாதாபி…!” என்று இவன் கூப்பிடுகின்றான்.

அவன் வரமாட்டான்… அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டான்…! என்று அப்போது அகஸ்தியன் சொல்கின்றான். வாதாபியைக் கொன்று விட்டான்…! என்று சொன்னதும் இவனுக்குக் கோபம் வருகிறது.

அகஸ்தியனைக் கொல்வதற்கு முயற்சிக்கின்றான். அகஸ்தியனோ அவனை உற்றுப் பார்க்கின்றான்… எரித்து விடுகின்றான்.
1.அகஸ்தியனுடைய சக்தியை அங்கே காட்டுகின்றார்கள்.
2.ஆனால் அவன் கண்டுணர்ந்த வானவியல் புவிஇயல் உயிரியல் தத்துவங்கள் எங்கும் வரவில்லை.
3.ஏதோ வருவார் போவார்… எங்கேயோ காட்டிலே வருவார் போவார்… என்று காட்டிவிட்டார்கள்.

அதே போன்றுதான் வேத வியாசர் என்று பெயரை வைத்திருப்பார்கள். ஆனால் வேதங்களைக் கற்றுணர்ந்தவன் அவன் அல்ல. கண்டுணர்ந்த உணர்வுகளை வேதங்களாக மாற்றிக் கொண்டது பின் வந்தோர்.

அவனை நீசன் என்று வைத்து அவனை ஒதுக்கப்பட்டு அவனின்று வந்த உண்மை உணர்வுகளை மாற்றிவிட்டனர்.

வியாசகர் கண்டதை பிருகு எடுத்தான். அவன் அரசாட்சி நிலையில் வந்தவன். நட்சத்திரங்களின் இயக்கங்கள் எப்படி…? என்று உணர்ந்தான். நட்சத்திரங்களின் சக்திகளைத் தனக்குள் எடுத்து மக்களின் மீது பாய்ச்சி இந்த உலகையே ஆள விரும்பியவன்.

இதே போன்றுதான் அத்திரியும்…! ஒரு அத்தி மரத்தில் இடை இடையிலே கனிகள் எப்படி முளைக்கின்றதோ அதைப் போல் அவன் எடுத்துக் கொண்ட எண்ணங்கள் மக்களை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்டு போர் முறை செய்தவன்.

போர் முறைக்குச் சென்று தன் உணர்வுகளை நிறைவேற்றத் தவத்தை அங்கங்கே மேற்கொண்டு அரச சாம்ராஜ்யமாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்தான்…! இந்த உடலுக்குத் தான்… விண் செல்லும் முறையே இல்லை.

1.இது போன்ற ஏழு ரிஷிகளைக் காட்டியிருப்பார்கள்
2.ஏழு குணங்களின் உணர்வைத் தனித்துத் தனித்துப் பிரித்து
3.வியாசகன் சொன்னதை எழுத்து வடிவில் கொண்டு வந்து
4.மகாபாரதப் போர் என்று காட்டி அதை அரசனுக்கு உகந்த நிலையாக
5.தன்னுடைய போர் முறைகளுக்காக பல நிலைகளைக் கையாண்டு கொண்டார்கள்.

அதன் வழி தான் இன்றும் நாம் நடந்து கொண்டு வருகின்றோம்…!

உலக ரீதியிலே “சத்திரியன்…” என்று அரசனைக் காட்டி எவனுக்கும் அவன் அடிமை ஆவதில்லை என்றும் மற்றவர்களை அடிமையாக்கி அவன் வாழ்வான் என்றும் அரசன் செய்வதில் தவறில்லை என்று உருவாக்கி இருப்பார்கள்.

அதே போல் “குரு…” என்று உருவாக்கி அந்தக் குருவிற்குத் தவறு செய்யாத நிலையில் அடிபணிதல் வேண்டும் என்றும் சட்டம் இயற்றி இருப்பார்கள்.

“வணிகன்…” அவன் எத்தனை பொய்கள் வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளலாம் அவன் வியாபாரத்தைக் காக்கப் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும் ஏனென்றால் உண்மையைச் சொன்னால் வியாபாரம் ஆகாது.

சத்திரிய தர்மத்திலும் வணிகர் தர்மத்திலும் இப்படியெல்லாம் உருவாக்கி உள்ளார்கள். ஆனால் வர்ணாசிரம தர்மத்தில் நாமெல்லாம் (மக்கள்) கீழ் மட்டத்தில் தான் வருகின்றோம்.
1.மக்களை அடிமைப்படுத்தினான் அரசன்
2.அவன் சொன்ன நிலைகளில் அடிமைகளாகத்தான் இன்றும் வாழ்கின்றோம்.

அடிமை என்ற நிலைகள் கொண்டு அரசன் பல உயிர்களைப் பலியிட்ட பின்… பலியிட்ட உணர்வின் தன்மை (ஆவிகளை) கைவல்யப்படுத்தி அவன் சுகபோகமாக வாழும் நிலை தான் அன்று வந்தது.

அதன் வழி எழுதுகின்றான் அந்த அரசன் ஆட்சி புரிந்த நிலையை விஸ்வாமித்திரர் நாடி… அகஸ்தியர் நாடி… போகர் நாடி… அந்த நாடி இந்த நாடி…! என்று அப்படி எழுதி உருவாக்கிய மந்திர ஒலிகளை மனிதனுக்குள் பாய்ச்சி அவன் இறந்த பின் அதைக் கவர்ந்து அவன் சுழற்சி வட்டத்தில் வந்தது தான் (ஆவியின் தன்மை கொண்டு) நாடி சாஸ்திரங்கள்…!

அதிலே அந்தந்தக் காலத்திற்கு ஒப்ப எழுத்துக்கள் மாறும். அதே சமயத்தில் “யட்சிணி…” என்று மாற்றப்பட்டு என்றோ எழுதிய நாடியை இன்றும் அதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

1.போன ஜென்மத்தில் நீ இப்படி இருந்தாய்… இங்கெங்கெல்லாம் வந்தாய்
2.இதனுடைய நிலைகள் இப்படி ஆனாய்… இன்று நீ மனிதனாக இருக்கின்றாய்
3.இன்னார் மகனுக்கு இந்த திசையில் இருக்கின்றது என்றெல்லாம் சொல்லும்.

இப்படி யட்சிணி என்று இந்த உணர்வின் அலைகளைக் கவர்ந்து சொல்லும் பொழுது
1.“தான் என்னமோ மோட்சத்திற்குப் போகின்றோம்…”
2.வாழ்க்கையில் அதைச் செயல்படுத்த வேண்டும் என்று நாடிகளைத் தேடிச் செல்வார்கள்.
3.காசைக் கொடுத்துவிட்டுத் தேடி அலைவார்கள்

ஞானிகள் சொன்னது அனைத்தையும் இப்படித் தான் தலைகீழாக மாற்றி… காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் பொருளாக மாற்றி விட்டார்கள்.

தன் பக்தியைக் காட்ட “வணங்கும் முறையைக் கொண்டு வந்தது அரசர்கள் தான்...”

ஆதிசங்கரர் காலங்களிலும் அதற்கு முந்தைய காலங்களிலும் இப்பூமியில் பல மகான்கள் வளர்ந்தார்கள். தன் ஞானத்தால் தெய்வசக்தி பெற்று சப்தரிஷியின் தன்மைக்குத் தன் வலுவையும் வலுவாக்கிக் கொண்ட மகான்களை வளர்த்த பூமி தான் “நம் தாய் பூமி…”

1.அதன் தன்மையின் தொடர் வளர்ப்பு நிலையற்று
2.அந்த ஞானச் செயலே விஞ்ஞானச் செயலாக
3.ஞானத்தின் தொடர் அலையின் செயல் “செயற்கை ரூபத்தில்…”
4.ஏட்டுப் படிப்பு வழி முறையிலும் இவ்வொலி அலை மின் சாதனத் தொடர்பலையிலும் சென்று விட்டது.

இதுவல்லாமல் தன் ஞானத்தால் வளர்ந்த சக்தியைச் செயல்படுத்த வந்தவர்கள் எல்லாம் தன் வலுத் தன்மையின் வலுவை எடுக்கவல்ல ஆத்ம வளர்ச்சி ஞானம் குன்றிய தன்மையில்
1.கல்லில் சிலை செய்து ரூப வழிபாட்டு முறைப்படுத்திக் கொண்டு
2.தன் பக்தியைக் காட்ட “வணங்கும் தொடரை” ஏற்படுத்திக் கொண்டார்கள்.

அதுவுமல்லாமல் இந்தப் பூமியின் வளர்ப்பில் சுழற்சி ஓட்ட கதியில் மண்டல ஈர்ப்பு சந்திப்பு நிலைகளிலெல்லாம் இப்பூமியின் வளர்ப்புத் தன்மையினால் பல மாற்ற “பிரளய காலங்கள்” ஏற்பட்டது.

ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இப்பூமியின் ஈர்ப்பு வளர்ப்பு செயல் ஓட்டமானது வளர்ப்பின் நிலைக்குகந்த மாற்றச் செயலினால் அந்தந்த மாற்றத்திற்குப் பிறகு வளரக்கூடிய அணு வளர்தன்மையும் மாறியே வந்தது.

1.குண ஈர்ப்பின் அமிலமே பிரளய மாற்றத்திற்கு முன் இருந்த நிலை வேறு…
2.மாறிய பிறகு வளரும் நிலை வேறாக
3.இப்பூமியில் படியும் அமில வலு மாறி விடுகின்றது.

தங்கத்திலோ மற்ற உலோகத்திலோ செய்யப்படும் பொருள்களை மாறி மாறி அதை அழித்து நாம் மற்றொன்றாக உருவாக்கும் பொழுது அதனுடைய தரத்தில் மாற்றம் ஏற்படுகின்றதல்லவா.

அதைப் போன்ற நிலை தான் இத்தொடரில் வந்துள்ள ஞான வளர்ப்பு நிலை வளர்ச்சி தொடர் அலையே இப்பூமி வெளிக்கக்கும் அமில வளர்ப்பின் நிலைக்கொப்பத்தான் ஞானமும் வளர்கின்றது இன்றளவும்.

இந்த ஞானத்தின் செயல் முறை வழித் தன்மையே ஆதிசங்கரரின் காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்து அவரின் காலம் வரைக்கும் ஞான சக்தி வளர்ச்சியின் பாதையில் இருந்தது.

அவருக்குப் பிந்தைய காலத்தில்…
1.அரசர்களின் போற்றலின் பேராசை உணர்வு நிலை அதிகப்பட்டு விட்டதாலும்
2.மனித இன (மக்கள் தொகை) வளர்ச்சிப் பெருக்க நிலையினாலும்
3.மனிதனின் எண்ண ஈர்ப்பே இப்பேராசை உணர்வில் சிக்கி
4.அரசர்கள் ஆண்ட கால உணர்வில் அவர்களின் ஆதிக்க ஈர்ப்புப் பிடிப்பில் சிக்கிய தொடர்பலை வளர்ப்பாக
5.ஒன்றின் தொடர் கொண்ட தொடர் வட்டச் சுழற்சியில் சுழன்று வருகின்றது இன்றளவும்.

அரசர்களின் காலத்தில் தான் இப்பக்தி வழி முறை அதிகமாக வளர்ந்தது.

அதுவுமல்லாமல் இவ்வரசர்களினால் சில அலைத் தொடர்களைச் சில சக்தி வாய்ந்த பக்தி கொண்ட தெய்வ குண சித்து நிலை கொண்ட அலைத் தொடர்புடைய தெய்வ ஆவி அலைகளைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.

தன் ஆதிக்க அரசு வாழ பிற அரசர்களின் போர்த் தொடர்புகளுக்கு இவ்வாவி அலை தெய்வ குணச் சக்திகளை இவர்களின் பூஜாபலனால் உருவேற்றிக் கொண்டார்கள்,

விக்கிரமாதித்தன் காலத்திலும் அசோக சக்கரவர்த்தி காலத்திலும் அதைப் போன்றே வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்திலும் பல அரசர்களும் இப்பூஜை வழிபாட்டுச் சித்து முறை பெற்று ஆவிகளின் தெய்வ குண தேவதைகளின் தாய் சக்தியை வணங்கி வந்தார்கள்.
1.அவர்கள் நாட்டை அரசாண்ட காலத்தில்
2.அரசர்களின் வலுவுக்கு வலுவாக இச்சக்திகள் தான் ஆண்டன.

புராண இதிகாச நூல்களில் சித்தர்கள் பால் தொடர் கொண்ட காவியங்களில் எல்லாம் ஆண் பெண் குண சக்தியின் தொடர்பில் உணர்த்தித்தான் உண்மை நிலைகளை எல்லாம் காட்டினார்கள்.

சிவ சக்தி… விநாயகன்… முருகன்… விஷ்ணு… என்றும் நாரதர் என்றும் ஆணின் தொடர்பு முறையை வலியுறுத்திய தெய்வ குணங்களாக இராமரையும் கிருஷ்ணரையும் ஒவ்வொரு பிரளய மாற்றத்திலும் இராமரின் குண சக்தியையே பல ரூப அலை ஞான செயல் குண இராமனாக உணர்த்தினார்கள்.

சீதாராமன்… பலராமன்… பரசுராமன்… இப்படிக் கால மாற்றத்தின் குண நிலை வளர்ப்பு அமில எண்ணத்திற்குகந்த செயல் உருவ வளர்ப்பிற்கு அந்தந்தக் காலங்களின் வீரியத் தன்மைக்குகந்த நாமகரணங்களைச் சூட்டி ஆண் குண அமிலத் தன்மைக்குகந்த தெய்வச் செயலைத்தான் “சப்தரிஷிகளின் சித்தர்களின் காலங்கள்” உணர்த்தின.

“அரசர்கள் காலத்தில்” வணங்கிய தெய்வங்கள் யாவையுமே பெண் சக்தியான காளி மாதா… என்றும் அதன் தொடர்புடைய ரூபத்தில் பராசக்தி… என்றும் ஜக்கம்மா… என்ற தாய் சக்தியும் உஜ்ஜயினி காளி சக்தியும்… சௌண்டம்மனின்.. தொடர்பும் இத்தொடரால் வந்தவை தாம்.

1.மனித சக்தியின் தெய்வ சக்தி பெற்ற
2.சித்து நிலை கொண்ட தாய் குணத்தின் பூஜிப்பின் அலைத் தொடர் வசச் செயலினால் தான்
3.அரசர்கள் பலர் அத்தொடர்பினால் தன் வலுவுக்கு வலு கூட்டிக் கொண்டு அரசர்களின் காலம் நடந்தது.

அந்தத் தொடர்பின் வழி முறையில் தான் “இக்கலியே நடக்கின்றது...!”

March 28, 2023

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியன் “எரிமலையாக இன்று உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது”

கடும் விஷத்தன்மை பரவிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் உலகம் முழுவதுமே நஞ்சு பரவும் நிலை இருக்கின்றது.

அணுகுண்டுகளும் மற்றும் அதைப் போன்ற எத்தனையோ கெமிக்கல் கலந்த குண்டுகளையும் வெடித்துப் பரிசீலித்துப் பார்த்த
1.அந்த விஷமான கதிரியக்கங்கள் அனைத்தும் நம் சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களும் கவர்ந்து விட்டது.
2.சூரியனும் அதைக் கவர்ந்து தனக்குள் கடும் எரிமலைகளாகக் காந்தப் புயல்களாகக் கக்கிக் கொண்டே உள்ளது
3.அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான உணர்வுகள் நம் பூமிக்குள் அடிக்கடி அடிக்கடி பாய்ந்து கொண்டிருக்கின்றது.

தினமும் பத்திரிகை படிப்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும்.

மின்னல்கள் பாயும் பொழுது அது கடலிலே அடங்கி யுரேனியமாக மாறுவதும் 27 நட்சத்திரங்களுடைய உணர்வு பல கலவைகள் கொண்டு வித்தியாசமான வெடி பொருள்களுக்கு உகந்த மணல்களாகவும் வருகின்றது.

இது எல்லாம் பூமியில் தாக்கப்படும் பொழுது அது நடு மையம் அடைந்து கொதிககலனாக மாறி நிலநடுக்கங்கள் போன்று ஆகி கீழே இருப்பது மேலே வருவதும் மேலே இருக்கும் நிலம் கீழே இறங்குவதும் பூமிக்குள் பல பல மாற்றங்கள் அதுவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இதையும் பத்திரிகையில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒரு சீராக இயங்கிக் கொண்டிருந்த சூரியனின் நிலைகள் மாறி மனிதனால் உருவாக்கப்பட்ட விஷத்தன்மைகள் அங்கே பெருகி விட்டது. “எரிமலைகளாக அது உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது…!”

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு யாம் (ஞானகுரு) சொன்னது இப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றது. அந்த எரிமலைகள் இங்கே பரவி
1.ஒன்றுடன் ஒன்று உராயப்படும் பொழுது எலக்ட்ரிக் என்ற நிலைகள் அதிகரிக்கும்… அது இரு மடங்காகப் பரவும்.
2.அப்படி உருவான உணர்வுகளை மனிதன் எடுத்துக் (மின்சாரம் தயாரிக்க) காந்த புலன்களில் மோதப்படும் பொழுது
3.இது எலக்ட்ரிக் பவரை அதிகரிக்கும்… மோதலில் வெப்பத்தின் தன்மையும் கூட்டும்.

இப்பொழுது நீங்கள் பார்க்கலாம். சூரியனுக்குள் எரிமலையாகப்படும் பொழுது பூமிக்குள் எந்தெந்தப் பகுதியிலே பரவுகின்றதோ அங்கே வெயிலின் கொடுமைகள் அதிகமாகிறது (CLIMATE CHANGE).

எலக்ட்ரிக் என்ற நிலை மனிதனுக்குள் வரப்படும் போது
1.உயிரின் துடிப்புகள் அதிகரித்து வேகம் அதிகமாகும்
2.உடலுக்குள் சீராக இயங்கிக் கொண்டிருக்கும் அணுக்களின் தன்மையும் துடிப்பு அதிகமான பின்
3.இந்த உணர்வின் இயக்கம் மனிதனின் சிறுமூளையில் உள்ள நுண்ணிய நரம்புகளைத் தெறிக்கச் செய்யும்
4.அதனால் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டு மனிதனைச் செயலிழக்க வைத்துவிடும்.

உதாரணமாக ஒரு மோட்டார் அதனுடைய பளு (LOAD) அதிகமாக எடுக்கிறது என்றால் மின் இணைப்பில் உள்ள ஃப்யூஸ் வயரில் மின் அழுத்தம் அதிகமாகி அது கருகி விடுகின்றது… இருண்டு விடுகின்றது… மோட்டார் நின்று விடுகின்றது.

அது போன்று தான் மனிதனுக்குள் பாய்ச்சப்பட்டு சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் தெறித்து விட்டால் சிந்திக்கும் தன்மை இழந்து விடுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

கடும் நஞ்சுகளையும் வென்ற அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை நாம் அதிகமாக நமக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.நம் உணர்வுகள் ஷாக் அடிக்காது ஃப்யூஸ் ஆகிவிடாது நம் சிந்தனைகள் செயலற்றதாக ஆகாதபடி தடுக்க
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஒருவருக்கொருவர் பாய்ச்சி… இரு உயிரும் ஒன்றாகி… உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றுங்கள்.

இதன் வழி சீராகச் செயல்பட்டால் உங்கள் வாழ்க்கையில் அருள் மகரிஷிகள் உணர்வின் துணை கொண்டு சிந்தனைகள் சிதையாது… உடலை விட்டுச் சென்றால் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று நிச்சயம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

இந்தச் சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் உயிரான்மாவில் விஷம் அதிகரித்து விஷப் பூச்சிகளாக ஒன்றை ஒன்று கொன்று விழுங்கும் உயிரினங்களாக உயிர் மாற்றிவிடும்.
1.அடுத்து மனிதனாக உருவாகும் காலம் எப்பொழுது…? என்று சொல்ல முடியாது.
2.இன்று நல்ல நினைவு இருக்கும் போதே குருநாதர் காட்டிய வழியில் நாம் அருள் உணர்வுகளைப் பெருக்கிடல் வேண்டும்.

ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத் தான் ஆத்ம சுத்தி பயிற்சி

உயிரணுவாகத் தோன்றிய பின் அவ்வுயிரணுவின் வளர்ப்பு முலாம் ஒவ்வொரு செயலிலும் வளர்ப்பு செயல் மோதுண்டு மோதுண்டு… அவ்வுயிரணுவின் மோதலின் வளர்ப்பு வலுக் கொண்டு… ஆத்ம நிலை பெறும் நிலையை முந்தைய பாடத்தில் உணர்த்தினேன்.

உயிரின் ஆத்ம நிலைக்கு எப்படி அதன் உராய்வுத் தன்மையால் வலுக் கூடுகின்றது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு தென்னை மரத்தின் பலனாக அதன் உச்சியிலே பல காய்கள் வருகின்றது.
1.அந்தக் காய்களில் இளநீர் வளர்ந்து
2.அந்த நீரானது அதன் உஷ்ண அலையில் அம்மட்டையில் உள் பாகத்தில் உராய்ந்து
3.வேடு கட்டி… வேடு கட்டி… நீரின் நிலை சுண்டி… பருப்பு வளர்ந்து… பின் முற்றி…
4.அதன் பலனான எண்ணை வித்தை வளர்க்கின்றது

தென்னை மரத்தின் வேர் நிலையிலிருந்து அது சத்து எடுப்பதில்லை.

மேல் நோக்கிய சுவாசம் கொண்டு தாவர இனத்தின் ஈர்ப்பு நிலையில் மோதலில் ஒளி பட்டு அது ஈர்த்துக் கீழிருந்து மேல் வளரும் வளர்ப்பின் பலனின் தன்மையில் பல வித்துக்களைத் தென்னை மரம் வளர்த்துக் கொள்கிறது.

இதைப் போன்று தான் ஒவ்வொரு வளர்ப்பின் வித்தின் தொடர் வளர்ப்பும். அதாவது ஒரு அணு வளர்ச்சியின் முலாம் ஒன்றில் மோதி வலுக்கொண்ட தன்மை பெறுவது போன்றே
1.இந்த மனித ஆத்ம உயிரின் வளர்ப்பு நிலையின் வலுவை
2.இவ்வாத்மா சேமித்துக் கொள்கின்றது.

சேமித்த வலுவின் தன்மை எத்தகையது…?

1.நீரில் மிதக்கும் மரங்களைப் போன்ற வலுக் கொண்ட நிலையை
2.இந்த ஆத்ம உயிர் பெற்றதென்றால்
3.எவ்வீர்ப்பின் பிடிக்கும் சிக்காமல்
4.இச்சரீர பிம்பமே காந்த மின் அலை ஒளி சக்தி பூண்ட உயர்வு நிலை கொண்ட ஆத்மாவாகலாம்.

அன்றைய சித்தர்களும் சப்தரிஷிகளும் தன் சரீர பிம்பத்தையே இந்நிலைக்குகந்த வளர் நிலைக்கு உட்படுத்தித்தான் தன் வளர்ப்பின் வளர் நிலையைப் பெற்றார்கள்.

நல் வழியின் ஒளி நிலை கொண்ட உயர் ஆத்ம வழித் தொடர் பெறாத நிலையில் பல எண்ண நிலையுடன் வாழக்கூடிய தன்மையில் பிரிந்து சென்ற ஆன்மக்கள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள இக்காற்றலையில் படர்ந்தே உள்ளது.

அத்தகைய பல எண்ணங்கள் கொண்ட ஆத்மாக்கள் அதற்குகந்த அதன் செயலைச் செய்விக்க அதற்குச் சொல்லாற்றலும் செயல் திறமையும் இல்லாத தன்மையில் அதன் எண்ண ஆசையை நிறைவேற்றிக் கொள்ள உடலுடன் வாழும் மனித உடலில் சாடுகிறது.

1.அப்படிச் சாடும் பொழுது தான் சிலருக்கு வாதத் தன்மையும் இதன் தொடர்பு கொண்ட சில வியாதிகளும்
2.அந்த அலைகள் உடல் மேல் பாய்ந்தவுடன் அதன் தன்மையை உடல் ஏற்காத பட்சத்தில்
3.எந்த இடத்தில் எவ்வலை சாடியதோ அவ்விடத்தில் வளரும் அணு வளர்ச்சி குன்றி
4.பாய்ந்த பிற ஆன்மாவின் குணத் தன்மைக்குகந்த அணுவை வளர்ப்பதனால்
5.அந்த வளர்ப்பின் வலுவை உடலுக்குகந்த ஆத்மா ஏற்காத பொழுது
6.உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானது அவ்விடங்களுக்குத் தன் அலையை அனுப்ப முடியாதததனால்
7.அந்த இடங்களில் உள்ள உறுப்புகள் செயலிழந்த நிலை ஆகின்றது

இளம்பிள்ளை வாதங்களில் செயலற்ற தன்மையிருந்தாலும் அங்கங்களின் நரம்பு மண்டலத்தில் உதிர ஓட்டங்களும்… துடிப்பு நிலையும் உள்ளது.

உதிர ஓட்டம் இல்லாவிட்டால் உடல் அழுகிய தன்மையல்லவா பெற்றிருக்கும். உடல் முழுமைக்கும் தொடர்பு கொண்டல்லவா அச்செயல் இருக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் பாய்ந்த மாறு கொண்ட அணு வளர்ப்பின் நிலையினால் இவ்வாதத் தன்மை கொண்ட வியாதியின் வளர்ப்புகள் வளர்ந்துள்ளன.

சமமான வாழ்க்கையற்றவர்களின் வாழ்க்கையில் எல்லாம்… அவரவர்களின் குண நிலைக்குகந்த சுவாசத்தால்… அதற்குகந்த பலனான தொடர் அலை செயலைத்தான்… இந்தக் காற்று மண்டல ஈர்ப்பிலிருந்தும் பெற முடியும்.

அதாவது காற்றில் கலந்துள்ள ஆத்மாக்களுக்கு நாம் தரும் இடத்திற்குகந்த வலுவாகத்தான் நம் சரீர பிம்பத்தின் ஆரோக்கிய நிலையே வளர்கின்றது.

1.எதனையும் செயலாக்கக்கூடிய எண்ண சக்தியின் வலுவைக் கொண்ட மனித ஆத்மாக்கள்
2.ஆவி உலக ஆத்மப் பிடியில் தான் இன்றைய காலத்தில் சிக்கியுள்ளது (இது தான் உண்மை)
3.அதிலிருந்து மீளும் நிலையில்லாத செயலாகத் தான் தொடர்ந்து கொண்டுள்ளது.

இந்த ஆவி உலக ஆத்மாக்களின் பிடியிலிருந்து விடுபடத்தான் “ஆத்ம சுத்தி...” பயிற்சியே கொடுக்கின்றோம்.. இந்தப் பாட நிலைகள் அனைத்துமே அதற்குத்தான்…!

March 27, 2023

பாட நிலையாக யாம் உபதேசிக்கவில்லை… “உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறோம்…”

1.அகஸ்தியன் பெற்ற உண்மைகளையும் அவனுக்கு பின் வந்த ஏனைய மகரிஷிகள் உணர்வுகளையும்
2.அவர்கள் அறிந்துணர்ந்த உண்மையின் உணர்வுகளையும்
3.சந்தர்ப்பத்தால் அகஸ்தியன் உணர்வை நுகர்ந்தறிந்த ஞானிகளின் உணர்வுகளையும் உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இந்த அருள் உணர்வுகளைப் பெற வேண்டும்… பதிவாக வேண்டும்…! என்ற “ஏக்கம் உள்ளவருக்கு…” நிச்சயம் அது கிடைக்கும்.

சாமி சொல்கிறார்… ஒன்றும் அர்த்தமாகவில்லையே என்று எண்ணாதபடி
1.“அர்த்தமாக வேண்டும்…” என்று எண்ணினால் அது பதிவாகும்
2.”அந்த நினைவு…” மீண்டும் அர்த்தத்தை உங்களுக்குள் விளக்கும்.

சொல்கின்றார்… எனக்குப் புரியவில்லையே…! என்று நிலைக்குக் கொண்டு வந்தால் அந்த உணர்வைக் கவர்ந்து புரியாத நிலையை உருவாக்கிவிடும்.

ஆகவே… புரிய வேண்டும் என்ற எண்ணத்தில் எண்ணினால் புரியும்.

ஆரம்பத்தில் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் பொழுது புரிவதில்லை ஆனால் படித்துப் படித்து அந்த உணர்வுகள் வளர்ந்த பின் எழுத்தறிவு வடிவில் கொஞ்சம் கொஞ்சமாக அறிகின்றோம்.
1.எழுத்தின் கூட்டமைப்புகளில் சொல்களை உணர்கின்றோம்
2.அதன் மூலமாக மற்ற நிலைகளை அறியும் தன்மையும் வருகின்றது.

இதைப் போன்று தான்
1.உணர்வின் தன்மையை யாம் பதிவாக்கும் போது
2.அது அர்த்தமாக வேண்டும்… அதை அறியும் ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வு இருந்தால் இது பதிவாகும்.

சாமி சொல்கிறார்… நல்லதைத்தான் சொல்கின்றார்…! சாமியிடம் விபூதி வாங்கினால்… ஆசீர்வாதம் வாங்கினால் “உடல் நோய் போகும்… தொழில் நன்றாக இருக்கும்…” என்றால் இது இந்த உடலுக்குத் தான். அந்த ஆசைகள் தான் வளர்கின்றது.

இதுவும் நடக்கும் அதுவும் நடக்கும்…! ஆனால் உடலின் இச்சைக்குச் “சிறிது காலமே வரும்…” அடுத்து வரும் எதிரியின் நிலைகளை எனக்கு இவன் இப்படிச் செய்கின்றான்… என்னைத் தொல்லைப்படுத்தினான்…! என்று இந்த உணர்வைக் கூட்டினால்… வளர்ந்து வரும் தொழிலையும் செல்வத்தையும் காக்க முடியாத நிலை ஆகிவிடும்.

ஆகவே… அருள் செல்வத்தைக் கூட்டி இருள் புகாது நம்மைக் காக்கும் நிலையாகச் செயல்பட வேண்டும். செல்வத்தைக் காக்க வேண்டும் என்றால் ஞானம் தேவை.

செல்வத்தைத் தேடித் தன் குடும்பத்தில் வரும் சந்ததிகளுக்கு என்று கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த ஞானம் இல்லை என்றால் ஒரு நொடிக்குள் செல்வம் மறைந்துவிடும்.

ஞானம் இல்லாது செயல்படும் போது…
1.நான் சேமித்த செல்வத்தை இவன் எப்படிக் காக்கப் போகின்றான்…?
2.அதைச் சேர்ப்பதற்கு நான் எத்தனையோ சிரமப்பட்டேனே…! என்று எண்ணினால்
3.வேதனையைத் தான் தனக்குள் வளர்க்க முடியும்.

இதைப் போன்ற நிலையிலிருந்து எல்லாம் நாம் விடுபட வேண்டும்.

உயிர் ஒளியாக எவ்வாறு இருக்கின்றதோ அந்த அருள் ஒளியைப் பெற்று… வாழ்க்கையில் வரும் இருளை அகற்றிடும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று
1.எவரொருவர் இதைப் பதிவு செய்து அந்த நினைவுடன் வாழுகின்றனரோ
2.அந்த அருளைப் பெறலாம்… இருளை அகற்றலாம்… மெய் ஒளியைப் பெறலாம்… பொருளறிந்து செயல்படும் திறன் பெறலாம்
3.வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ முடியும்… மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை உடலில் விளைய வைக்க முடியும்
4.என்றும் ஏகாந்த நிலையை அடைய முடியும்.

“மகரிஷிகளைப் பின் தொடர்ந்து” அவர்கள் பெற்ற பிறவியில்லா நிலையை அடைய முடியும். அதுவே மனிதனின் கடைசி எல்லை.

உயிர் நெருப்பு… உடல் அடுப்பு… சுவாசிப்பது அதிலே சமைக்கப்படுகிறது

1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி
2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா எடுத்து
3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர் செயல்படுத்துகிறது.

சரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி.. ஆத்மாவின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.

ஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது
1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து
2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற முறையில்…
3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா நிலையில்…
4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்
5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்
6.இந்நாதத்தின் துடிப்பு இயக்கத்தால்
7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்
8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை மட்டுமல்லாமல்
9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத் துடிப்பு உள்ளதுவோ
10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும் அலை உணர்வைத் தான்
11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும் சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப் பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல் மோதுகிறது.

மோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின் நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர் கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.

அங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில் போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது...” அந்த ஆவியின் சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.

அப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.

தான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும் பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.

அதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப் பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்
1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்… வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை எடுத்து எடுத்து
2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்
3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.

இச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும் ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு கொண்டு விடுகின்றது.

1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும் பொழுது
2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம் காணுகின்றது.

இதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

March 26, 2023

கையை வைத்து உடல் வலிகளை நமக்கு நாமே போக்கிக் கொள்ளக்கூடிய பயிற்சி

உதாரணமாக காலில் மூட்டில் வலி இருக்கிறது… நடக்க முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்…?

1.ஈஸ்வரா…! என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி
2.கொஞ்ச நேரம் கையை அந்த மூட்டில் வைத்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.காலில் இருக்கக்கூடிய மூட்டு வலி நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்
4.அந்த வலி நீங்க வேண்டும்… நல்லதாக வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்.

அந்த வலி குறைய ஆரம்பிக்கும்.

இதே போன்றுதான் இருதயத்திலோ மற்ற இடங்களிலோ வலி இருந்தால் இதே மாதிரி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அந்த உணர்வை எடுத்து “அங்கே கையை வைத்து… இந்த உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்…”

அங்கே சளி இருந்தாலும் இரண்டு கையையும் நெஞ்சிலே வைத்து அந்தச் சளி நீங்க வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று பாய்ச்சிப் பழகுங்கள்.

1.சொல்லிக் கொடுக்கின்றோம்… ஆனால் இதை நீங்கள் செய்ய வேண்டும்
2.ஒரு நாளைக்கு வைத்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும்.
3.(ஏனென்றால் முதலில் ஆர்வமாக கேட்பார்கள் பின்னாடி அதைச் செயல்படுத்துவதில்லை)

எங்கே வலி இருக்கின்றதோ அந்த இடத்திலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று நினைத்துக் கையை வைத்து அந்த வலி குறைய வேண்டும் என்று உணர்வுகளை
1.இதன் வழி பாய்ச்சி அந்த எண்ணத்தைக் கொண்டு வாருங்கள்
2.வலி குறைவதைக் காணலாம்…!

உதாரணமாக சங்கடமாக இருந்து ஒரு காயையோ அல்லது குழம்பையோ சமையல் செய்து பாருங்கள்… அது ருசி கெட்டுப் போகும். சந்தோஷமாக இருக்கும் பொழுது செய்து பாருங்கள்… நன்றாக இருக்கும்.

காரணம்,,, அன்றன்று உள்ள குணத்திற்குத் தக்க மாதிரித் தான் இதனுடைய செயல்கள் நடக்கும். நீங்கள் சலிப்போடு அரிசியை வேக வைத்துப் பாருங்கள்… சாதம் தண்ணீர் பட்டுப் போகும். இதெல்லாம் நீங்கள் பார்க்கலாம்.

சங்கடமாக இருந்து சமையல் செய்தால் அந்தக் காய்கறிகளை சல…சல… என்று ஆகிவிடும்… குழம்பின் ருசியே மாறிவிடும்.

யாம் (ஞானகுரு) சொல்லும் வழிகளில் நீங்கள் செயல்பட்டால் உங்கள் உடல் நலமாக உதவும். இந்த உடல் நமக்குச் சதமானது அல்ல…! அவ்வப்போது மனது அமைதி பெறுவதற்கு… மகரிஷிகளின் அருள் சக்தியால் உடல் வலி நீங்க வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஐயோ… எனக்கு அங்கே வலிக்கிறது இங்கே வலிக்கிறது என்று அதைச் சொல்ல வேண்டியதில்லை.
1.எழுந்திருக்க முடியவில்லை நடக்க முடியவில்லை என்று சொல்லாதபடி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… வலி நீங்க வேண்டும்
3.நான் எழுந்து நடக்க வேண்டும்… நடக்கக்கூடிய சக்தி பெற வேண்டும் என்று
4.வலி வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியைச் சுவாசித்து நன்றாக வேண்டும் என்று எண்ணி
5.இதைக் கூட்டிக் கொண்டு வாருங்கள்… அந்த வலிகள் நீங்குகிறதா இல்லையா என்று நீங்கள் பாருங்கள்.

சாமி…! நீங்கள் சொன்ன தியானத்தைத் தான் நாங்கள் செய்கிறோம் என்று இப்படித்தான் எண்ணுகின்றார்களே தவிர “தியானம் என்றால் என்ன…?” என்று முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா…!

நீங்கள் சொன்னீர்கள்… ஆனால் நடக்கவில்லை நடக்கவில்லை என்று அந்த இராகத்தைப் பாடக்கூடாது.
1.உடலின் இச்சைக்கு நாம் செல்லக்கூடாது.
2.அருளைப் பெருக்கும் பொழுது இந்த இருள் நிச்சயம் நீங்கும்.

இன்று சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையே அற்றுப் போய் விட்டது

நம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது. நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.

அது மட்டுமல்லாமல்
1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை
3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ
4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து
5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

அதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து.. சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.

பூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே
1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு குண நாத அலைகள்
2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி
3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.

தன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்
1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்
2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.

இதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…!

இன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

1.ஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்…
2.அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்…
3.இக்காற்று மண்டலத்தில் பல விதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள்.
4.இன்று… இது இல்லாத இடமே இல்லை…! என்று கூடச் சொல்லலாம்.

ஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.

1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்
2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்
3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்
4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று...!

தன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…!

March 25, 2023

நம்முடைய எல்லை மீண்டும் பிறவிக்கு வருவதற்கு அல்ல...!

இன்று நாம் இருக்கக்கூடிய இந்தச் சூரிய குடும்பம் எப்பொழுது செயல் இழக்கும்…! என்று சொல்ல முடியாது.
1.மனிதர்கள் வயதாகி உடலை விட்டுப் பிரிவது போன்றுதான்
2.இந்தச் சூரிய குடும்பமும் முதுமை அடையக் கூடிய காலம் வந்து விட்டது… அதனுடைய சத்து எல்லாம் போகிறது.

பிரபஞ்சம் செயல் இழந்தால் இந்தப் பூமியும் அனாதையாகத் தான் செல்லும். ஏற்கனவே 30 வருடங்களுக்கு முன் பிற சூரியக் குடும்பத்தில் இருந்து செயல் இழந்த பூமி… அது எப்படி நம் வியாழன் கோளிலே விழுந்து பஸ்பமாகியதோ அதே போன்று இந்தப் பூமியையும் திக்கெட்டுச் செல்லும்.

அது போகும் வேகத்தில் மற்றதுடன் உராய்ந்து கரைந்துவிடும்… அமிலமாக மாறும். எதிலேயாவது போய் விழுந்து மடிந்துவிடும்.

ஆனால் இதிலே இருக்கும் உயிரணுக்கள் அனைத்தும் பிரபஞ்சத்தில் மீண்டும் பரவும்.
1.உயிரினங்கள் வாழக்கூடிய கோளுக்குள் நாம் வந்தால் மனிதனாகப் பிறக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது
2.ஆனால் பூமியே கெட்டுப் போனது என்கிற பொழுது என்ன செய்ய முடியும்…?

மற்ற சூரியக் குடும்பத்திலே ஏதாவது பூமி உருவானால் அங்கே போய்ச் சேரும். அங்கே போய் மனித உடல் பெறும் வரை இந்த உயிரிலே நரக வேதனைப் பட வேண்டியது தான்.

இதை இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடிக்கின்றது…!

ஒரு உயிரணுவின் தன்மை அடைந்தால் அந்த அணுவிற்குள் இருக்கக்கூடிய எதிர்மறையான துடிப்பினால் அது எவ்வளவு வேதனைப்படுகிறது…? என்று அதற்கென்று சாதனங்களை வைத்துக் கம்ப்யூட்டர் மூலமாக உணர்வின் இயக்கங்களை அறிகின்றார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் அன்று மெய் ஞானிகள் சொன்னது… (இறந்த பிற்பாடு) உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் “அதனுடைய கடைசி நேரம்…” எந்த வேதனைப்பட்டதோ அதே நிலைகள் கொண்டு அது நரக வேதனைப்படுகிறது. “சாகாக்கலை…” என்று அதைத் தெளிவாகக் காட்டினார்கள்.

இப்போது மனித உடலுடன் இருக்கும் பொழுது மாற்றிக் கொள்ளலாம்.
1.ஆனால் உடலை விட்டுச் சென்றால் உயிரோடு ஒன்றி இருக்கும் போது
2.அந்த வேதனைகள் அனுபவிப்பதை இவ்வளவுதான்…! என்று சொல்ல முடியாது.

செத்துப் போனால் என்ன தெரியப் போகிறது…? செத்த பிற்பாடு ஒன்றும் தெரியாது…! என்று நினைப்போம். ஆனால் அந்த ஆன்மா மனித உடலுக்குள் சென்றால் எத்தனை வேதனைகள் படுகிறது,,,? எத்தனை வேதனைகள் கொடுக்கிறது…! என்று பார்க்கலாம்…!

பேய் பிடித்து விட்டது என்று சொல்கின்றோம். மருந்து குடித்துச் செத்தது என்றால் அந்த ஆன்மா அடுத்த உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.

ஒரு சமயம் நான் (ஞானகுரு) சுற்றுப்பயணம் செய்யும் பொழுது கோயம்புத்தூரில் பீளமேடு என்ற இடத்தில் இருந்தேன். ஆவிகள் என்ன செய்கிறது…? நோய்கள் எப்படி வருகிறது…? என்று இதையெல்லாம் அறிந்து கொள்வதற்காக ஆரம்பத்திலே சுற்றி வந்ததுதான்.

அப்பொழுது அங்கே ஒருவரைக் கூட்டிக் கொண்டு வந்தார்கள். குடம் குடமாக அவர் வாயிலிருந்து தண்ணீர் வருகின்றது. குருநாதரை நினைத்து இது எப்படி..? என்கிற வகையில் தியானித்தேன்.

வந்த ஆளோ ஊமை பேசுவது போன்று தான் பேசுகின்றார். ஆனால் அவர் நன்றாகப் பேசக் கூடியவர் தான். இதைச் சரி செய்வதற்குப் பல இடங்களுக்குச் சென்று ஒன்றும் முடியவில்லை என்கிற பொழுதுதான் இங்கே வருகின்றார்கள்.

அவர்களிடம் நான் விசாரித்தேன். அவர் வசிக்கக்கூடிய இடத்திலே ஒரு ஊமைப் பெண் மாடு மேய்த்துக் கொண்டிருக்கின்றது. அவர்கள் வீட்டில் ஏதோ திட்டி விட்டார்கள் என்று ஓடிப் போய் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்றது.

கிணற்றில் விழுவதை இவர் பார்த்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தப் பெண்ணைக் கிணற்றிலிருந்து தூக்கியிருக்கிறார். வண்டிச் சக்கரத்தில் வைத்துச் சுற்றி அது குடித்த தண்ணீரை எல்லாம் வெளியேற்றுகின்றார்.

இருந்தாலும் அந்தப் பெண் இறந்து விட்டது...!

இவர் எந்த அளவுக்குக் காப்பாற்ற வேண்டும் என்று முயற்சித்தாரோ இவர் உடலுக்குள்ளேயே அந்த ஆன்மா வந்து விட்டது.

உடலுக்குள் ஆவி வந்த பின்…
1.அது தன் உடலுடன் இருக்கப்படும் பொழுது கடைசி நேரத்திலே எவ்வளவு நீரைக் குடித்ததோ
2.இந்த உடலுக்குள் வந்த பின் அந்த அணுக்கள் காற்றிலிருந்து அந்த நீர் சக்தியை இழுத்து
3.அதே உணர்ச்சியை ஊட்டித் தண்ணீராக வருகிறது.

ஒரு குடம் நீர் வருகின்றது. அடுத்து நான்கு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு குடம் தண்ணீர் வருகிறது. இப்படிக் குடம் குடமாக வந்து கொண்டே இருக்கிறது.

இது நடந்த நிகழ்ச்சி.

ஒவ்வொரு குடும்பத்திலும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கிறது…? இறந்தபின் ஆவி அடுத்த உடலுக்குள் சென்றால் என்னென்ன எல்லாம் செய்யும்…? என்று பார்ப்பதற்குத் தான் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்யச் சொன்னார் குருநாதர்.

நாம் சுவாசத்தால் எடுக்கும் மணத்தைக் கொண்டு தான் இவ்வுயிராத்மா அவ்வலையைச் சேமிக்கின்றது என்று முதல் பாடத்திலிருந்தே சொல்லி வருகின்றேன்.

1.அமிலத்தின் மோதலின் நாத ஈர்ப்பு உயிரணுத் தன்மை
2.எந்தெந்த அமிலமுடன் எவ்வலைச் சேர்க்கை சேர்ந்து அதன் நாதமாகப் பிறக்கின்றதோ
3.அந்த நாதத்திற்குகந்த சேமித அணுத் தன்மை தான்
4.எக்கூட்டுச் சேர்க்கை சேர்ந்ததோ அதன் வளர்ப்பு அணுவாகப் பிறக்கின்றது.

இவ்வுடல் பிம்பத்தின் எண்ண உணர்வில் எடுக்கும் சுவாச நாதத்தின் மோதலின் அணுத் தன்மையால் தான் இஜ்ஜீவ பிம்ப உடல் வளர்ந்து அதன் மூலம் இந்த ஆத்மா வலுக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் உணர்வு அணுக்களின் வளர் தன்மையில்
1.நாதத்தின் இனிமையான இசையின் (சங்கீதம்) தன்மையால் மகிழ்ச்சியானாலும்
2.அதிர்வு… வெடி… இடி.. இவற்றைப் போன்று பயங்கர ஒலி ஏற்பட்டால்
3.ஈர்ப்பின் நிலை செவிக்கு ஏற்கும் மோதலைக் கொண்டு
4.இச்சுவாச அலை உணர்வில் அச்சப்படக்கூடிய அணுக்களைத் தன் ஈர்ப்பில் வளர்க்கின்றது.

இந்த மனித ஆத்ம நாத… ஒலி… ஈர்ப்பு… செவி செயல் தன்மை… மற்றெல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் ஒலி ஈர்ப்பு விகித வீரியத் தன்மை கொண்டது.

மற்ற ஜீவராசிகள் “ஒளி பாய்ச்சி… சுவாச மண நுகர்வுத் தன்மை கொண்டு தான்” அதன் ஈர்ப்பு நாதத் தன்மை உள்ளது.

பார்வையின் ஒளி பட்டு… சுவாச மணத்தின் நுகர் தன்மை மனிதனைக் காட்டிலும் மிருக நிலைக்கு (சிலவற்றுக்கு) கூடி இருந்தாலும்… மனிதனை ஒத்த செவி ஈர்ப்பு நாத வளர் சக்தி மற்ற மிருகங்களுக்குக் குறைவு.

1.உணர்வால் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப
2.சுவாச மோதல் வளர்க்கும் அணு வளர்ச்சி அலை சக்தியால் தான்
3.இந்த உடலைச் சுற்றியுள்ள ஆத்மா வலுப் பெறுகின்றது.

ஆத்மாவின் நிலைக்கொப்ப உணர்வுகளைத் தான் இந்த உடல் வெளிப்படுத்துகின்றது.
1.ஆத்மாவின் உணர்வையும்
2.உணர்வின் ஆத்மாவையும்
3.இவ்வெண்ணத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு ஒளி பாய்ச்சி… ஒலி கேட்டு…
4.இந்த மனித ஆத்மா மாற்றி அமைக்க முடியும்.

ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பின் நிலைக்கொப்ப இவ்வண்ணக்கலவை (படம்) அமில வளர்ப்பு மோதலின் பிம்ப நிலையை எப்படிக் காண்கின்றோமோ அதைப் போன்றே
1.இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்க்கும் எண்ணத்தின் ஓட்ட நிலையை
2.இந்தப் பிம்பமல்லா ஆவி அணுச் சேர்க்கையின் நிலை முறையை
3.பிம்பத் தன்மை மாறிய அமிலக்கூட்டின் ஆத்ம வடிவுகளை
4.அமில உருவாக பிம்பமில்லாத் தன்மையில் நிழல் பட உருவத்தில் காண முடியும்.

இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்த்து இவ்வெண்ண ஓட்ட நிலைக்கொப்ப எதனையுமே அறியும் ஆற்றல் சப்தரிஷிகளுக்கு உண்டு.

எத்தகைய ஜீவ பிம்ப மாற்றம் கொண்ட ஆவி அமிலச் சேர்க்கை ஆத்ம உயிர்களையும்… அருகிலுள்ள இடங்களையும்… அல்லது எண்ணத்தில் செலுத்தும் எந்த இடமாக இருந்தாலும் இவ்வெண்ணத்தைச் செலுத்திச் செயல் முறைப்படுத்தும் நிலையில் காண முடியும். ஞானத்தின் வழித் தொடரில் இது சாத்தியமே…!

இதைப் போன்றே அச்ச அதிர்வு நிலையினாலும் ஒலி ஒளி படங்களைக் காண முடியும்…! சில ஆத்மாக்களின் அலைத் தொடர்புடன் இது வரும்.

அதாவது ஒளி ஒலி ஈர்ப்புத் தன்மையில்… அச்ச உணர்வுடன் உடலை விட்டுச் சென்ற ஆவி உலக உயிரின் தொடர்பில்… சில கோவில் விழாக்களில் எழுப்பப்படும் சில மண ஒலி ஈர்ப்புத் தன்மையில் அதே உணர்வு கொண்ட அலை உணர்வு மோதல் எற்பட்டவுடன்… என்ன நடக்கின்றது…?

உடல் இல்லாத ஆத்மாவின் மோதலும் உடலுடன் உள்ள ஜீவ பிம்ப ஆத்மாவின் மோதலும் ஒன்றுபட்டவுடன் அதன் தன்மையில்
1.அது சேமித்து வாழ்ந்த நிலைக்குகந்த தன்மை உணர்வு செயல் எல்லாவற்றையும் இங்கே இயக்கப்பட்டு
2.உடலுடன் உள்ளவர் தன்னையறியாமல் ஆடி அதன் நிலை எல்லாம் பேசத் தொடங்கும்.
3.பல மொழிகளிலும் பேசும்
4.அதன் சுவைக்குகந்த உணவை எல்லாம் கேட்டு அதை உட்கொள்ளும்
5.தெய்வமே வந்து தனக்கு உணர்த்தியதைப் போல் பேசும்.
6.(சாமியாடி அருளாடி மருளாடி வாக்கு சொல்வது எல்லாம் இது தான்)

கடைசியில் இவ் ஈர்ப்பலையின் நிலைக்கொப்ப ஆத்ம எண்ணம் சென்று விட்டால் “தன் நிலை மறந்து…” எவ்வலைத் தொடர் ஆத்மாக்களின் எண்ணத்தையெல்லாம் எடுத்ததோ அவ்வாத்மாவின் நிலைப்படி தான் இந்த ஜீவ ஆத்மா (உடலுடன் உள்ளவர்) வாழ முடியும்.

ஆகவே இந்நாதத்தால் எடுக்கப்படும் உருவங்கள் தான் அனைத்துமே…! இந்நாதச் சேர்க்கை எண்ணத்தை உணர்ந்து மெய் ஒலி பெற்று மெய் ஒளியாக உருவாகுங்கள்.

March 24, 2023

மகரிஷிகள் நடத்திய யாகம்

ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள “யாக பூஜை முறை” மேற்கொண்டார்கள்.

இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாகக் குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.

1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.

வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.

1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மைகளை அறிய முடியாத நிலையில் தான் இன்று நாம் உள்ளோம்.

இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.

நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும் சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள் என்றும் அறிந்திருப்பீர்கள்.

1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
2.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.

இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக… தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு… அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும்… இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.

அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.

இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்து
3.இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது.
4.அப்பொழுது பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.

ஏனென்றால் பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.

இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.

இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.

1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

குருநாதர் எமக்குக் கொடுத்த “அழியாச் சக்தி”

1.குருவிடம் சிக்கிக் கொண்டோம்…
2.காடு மேடெல்லாம் அலைய வைக்கின்றார்… பல துன்பங்களைக் கொடுக்கின்றார்
3.என்ன வாழ்க்கை…? என்று நான் (ஞானகுரு) வெறுக்கின்றேன்.

என் குழந்தைகள் என்ன செய்யும்…? அவர்களையெல்லாம் விட்டுவிட்டு குருநாதர் பின்னாடி வந்து விட்டோமே…! என்று மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு இக்கட்டான நிலை…!

ஏனென்றால்
1.முதலிலே ஒரு மலை மீது ஏற்றி வைத்தார்
2.இரண்டாவது இமயமலையில் சீனா பார்டர் அருகிலே கொண்டு என்னை நிற்க வைத்து விட்டார்.
3.இந்தப் பக்கமும் வர முடியாது… அந்தப் பக்கமும் செல்ல முடியாது.

இரண்டு மலைகளுக்கு மத்தியில் உறை பனி அதிகமாக இருக்கின்றது. நான் முதலில் அதை தாண்டித் தான் இந்தப் பக்கம் வந்தேன். இருந்தாலும் அந்தப் பனிப்பாறைகள் அனைத்தும் திடீரென்று திடு…திடு… என்று இடிந்து விழுந்தது.

வந்த பாதையைக் காணவில்லை…!

நான் நடந்து வந்திருக்கும் போது விழுந்திருந்தால் என்ன ஆகியிருப்போம்…? என்று பயம் வருகிறது. பயந்து கொண்டிருக்கும் பொழுது வீட்டு மேல் ஞாபகம் வருகின்றது.

பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ…? ஏதானதோ…? பெண்டு பிள்ளைகள் என்ன ஆனார்கள்…? என்று இந்த எண்ணங்கள் வருகின்றது.

அந்தப் பனிப்பாறைகளில் நடந்து செல்லும் போது குளிர் பாதிக்காமல் இருப்பதற்காக
1.குருநாதர் சில இதுகளைச் சொல்லி நீ இதைத் தியானி.
2.இந்த பனியின் குளிர் தெரியாதபடி உன் உடலில் சூடு உருவாகும்.

இப்படி நான் (ஈஸ்வரபட்டர்) உனக்குச் சொன்ன நிலைகளில்
1.நீ எதை எதையெல்லாம் எண்ணுகின்றாயோ “அந்த உணர்வுகள் உனக்குள் வளர்ந்து”
1.அந்த அருள் சக்தி கொண்டு எதிர்காலத்தில் உன்னைக் காத்துக் கொள்ளலாம் என்று பல முறை எனக்குச் சொல்லி உள்ளார்.

இருந்தாலும் நடந்து வந்த பாதை இடிந்து விழுந்த பின் எந்னுடைய எண்ணங்கள் குழந்தை மீதும் குடும்பத்தின் மீதும் செல்கிறது. நான் நடந்து வரும் போது இடிந்து விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்…? என்று சிந்தனைகள் வருகின்றது

இப்படி எண்ணும் பொழுது உடலில் கிர்..ர்ர்ர்… என்று ஒரு இன்ஜின் ஓடினால் எப்படி இரையுமோ என் உடல்… இருதயம்… எல்லாம் இரைய ஆரம்பித்து விட்டது. கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது ஒரு நிமிடம் ஆனால் மொத்தமாக இன்ஜின் ஆஃப் ஆவது போல ஆகிவிடும் போல இருந்தது.

அந்த நேரத்தில் குருநாதர் என் வீட்டில் நடப்பதையும் காட்டுகின்றார். அந்தக் காட்சி தெரிகிறது.

என் பையன் சிறியவன் ரோட்டில் முச்சந்தியிலே உட்கார்ந்து கொண்டு இரத்த இரத்தமாக அவனுக்கு வெளியே செல்கின்றது அவன் நானா… நானா… என்று என் பெயரைச் சொல்லி அவன் இருந்து கொண்டிருக்கின்றான்.

என் மனைவியோ அப்பொழுதுதான் அது நோயிலிருந்து விடுபட்டது. தன் குழந்தையைத் தேடி வந்து பார்க்கக்கூடிய நிலைகள் முடியாது இருக்கிறது. கவலையோடு மற்றதை எண்ணிக் கொண்டிருக்கிறது.

இவனுக்கு இங்கே ரோட்டில் இரத்தமாகப் போய்க்கொண்டிருக்கிறது இதை எல்லாம் நான் காட்சியாகக் கண்டபின் எனக்கு உணர்வுகள் மாறுகின்றது.

பனிப் பாறைகளுக்கு மத்தியில் அந்தக் குளிர் பாதிக்காது இருப்பதற்கு குருநாதர் எடுக்கச் சொன்னதை மறந்து விட்டேன். பின் இந்த உடல் இரையும் போது உயிரே போய்விடும் போலிருக்கிறது.

இப்பொழுது நான் யாரைப் போய்க் காப்பது…?

குருநாதர் காட்சி கொடுக்கின்றார்…! மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே…! மனமே இனி மயங்காதே…! மனமே இனி மயங்காதே…! என்று பாடலைப் பாடுகின்றார்.

உன் உயிர் போய்விட்டால் சொத்து சுகம் எல்லாம் எங்கே போகப் போகின்றது...? பல எண்ணங்கள் கொண்டு வாழ்ந்தாலும் இந்த உடலை விட்டு ஒரு நாள் போய்த் தான் ஆக வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தம் அல்ல… செல்வமும் சொந்தமல்ல ஆகவே நீ எதைச் சொந்தமாக வேண்டும்…? என்று வினா எழுப்புகிறார்.

1.எல்லோரையும் நலமாக்க வேண்டும் என்றும்
2.எல்லோருக்கும் அந்த அருள் உணர்வுகள் கிடைக்க வேண்டும் என்றும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி நான் பெற வேண்டும் என்றும்
4.அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அழியாச் செல்வமாகக் கூட்டி
6.அனைவரும் அதைப் பெற வேண்டும் என்ற வலுவைக் கூட்டினால் இது மறைவதில்லை.
7.உன் உடல் மறைகின்றது… ஆனால் உணர்வுகள் ஒளியாக மாறுகின்றது
8.நீ பிறவியில்லா நிலை அடைகின்றாய்… ஆகவே நீ அதைப் பெறு.

இந்த உடலே சதம் அல்ல நீ தேடிய செல்வங்கள் எப்படிச் சதமாகும்…? அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உனக்குள் பெருக்கி… அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து…
1.அனைவரும் நலம் பெறுவர்… அனவரும் நலம் பெற வேண்டும் என்ற உணர்வை உனக்குள் வளர்த்துக் கொள்.
2.இது தான் உனக்குச் சதமும் சொந்தமும் எல்லாமே…!

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பல இன்னல்கள் படுகின்றனர் அத்தகைய நிலையில் இருந்து “அவர்களை மீட்ட வேண்டும்… அவர்கள் மீள வேண்டும்…” என்ற உணர்வை வளர்த்துக் கொள்…! என்று அடிக்கடி சொல்வார்.

மலைப்பகுதியில் அழைத்துச் சென்று பல துயரங்களை ஒவ்வொரு நிமிடம் எனக்கு ஊட்டித் தான் இந்த உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

March 23, 2023

ஞானிகள் யாகத்தைச் செய்ததன் நோக்கம்

நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!

பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு… இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத் தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.

அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத் தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு தானப்பா… யாவையுமே…!

விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச் செல்கிறது.

அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச் செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி வளர்கின்றது.

புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா இவ்வளர் நிலை யாவையும்..?

இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத் தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.

இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித் தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த நிலையில் வளர்கின்றது.

மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை…? என்ற செயலற்ற நிலையில் உள்ள இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.

காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?

இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர் நிலைக்குகந்த மிகக் குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித் தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச் சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத் தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.

1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.

சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லா நிலை என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால் இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும் “இந்நாத விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”

வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல் தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!

1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை
3.வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்.

எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான் இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்ம சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.

இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.
3.இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!

அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.

அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக ஒளிர்ந்தனரப்பா…!

பல வருட காலமாக யாம் சொன்ன உண்மைகளை “இனிமேல் தெரிந்து கொள்வீர்கள்…”

விஞ்ஞான முன்னேற்றத்தின் அணு விசைகளால் வெளிப்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் சூரியனுக்குள் சென்று விட்டது. அதன் விளைவாக எத்தனையோ கடும் புயல்கள் அங்கே அடிக்கடி உருவாகி விஷமான அலைகளைக் கக்கிக் கொண்டுள்ளது. பூமிக்குள்ளும் அது பரவி வருகிறது.

அதனின் விளைவுகள்… உதாரணமாக மின்சாரம் செல்லும் இரண்டு வயர்கள் இரண்டும் சேர்ந்து விட்டால் எப்படி ஒரு எர்த் ஆகி… இரு மடங்கு மின் அழுத்தம் கூடி அனைத்தையும் கருக்கிவிடுகிறதோ இதைப் போல
1.உலகெங்கிலும் உயிரணுக்களிலும் மற்ற அணுக்களிலும் இது படரப்படும் போது
2.வயர்கள் கருகி பல்புகள் ஃப்யூஸ் ஆவது போன்று மனிதனின் சிந்தனைகள் சிதறும் தன்மை
3.இனி எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம்.

அதற்கு முன் நீங்கள் எதைச் சேமிக்க வேண்டும்…? என்று முடிவு செய்து கொள்ளுங்கள்…!

அருள் ஞானிகள் உணர்வைச் சேமித்துக் கொண்டால் அது உங்களைக் காக்கும். கடுமையான நஞ்சுகளையும் வென்றவன் அகஸ்தியன். அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி… துருவ நட்சத்திரமாக ஆனது.

அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியினை நீங்கள் நுகர்ந்து இத்தகைய கொடுமையிலிருந்து மீள நீங்கள் முற்படுங்கள்.

இல்லையென்றால் இந்த விஷத்தின் தன்மை… அன்று அணுகுண்டினால் (கதிரியக்கங்கள்) ஜப்பானில் அழிந்தது போன்று… மனிதர்கள் முழுமையாக வளராதபடி இன்றும் எப்படி இயக்கிக் கொண்டுள்ளதோ…
1.அதிலே தாக்கப்பட்டு இறந்தவர்கள் விஷப் பூச்சிகளாக உருவாகி
2.பல கோடிச் சரீரங்களைக் கடந்து தான்… அந்த விஷங்களை வடிகட்டிய பின்பு தான் மீண்டும் மனிதனாக வர முடியும்.

இனி வரக்கூடிய உலக யுத்தமும் அது போன்றது தான். ஒருவரை ஒருவர் அழிக்க வேண்டும் என்ற நிலையில் அந்த அணு விசைகள் வெளிப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதே போன்று மின்சாரத்தை அதிகமாகத் தயாரிப்பதற்காக வேண்டி பல அணு உலைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதனுடைய கசிவுகளும் பரவப்பட்டு சூரியனுடைய காந்த சக்தி அலைகளாக மாற்றிக் கொண்டே உள்ளது.

ஆகவே விஷத்தன்மை கொண்ட அணுக்கதிரியக்கங்கள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து மனிதனுக்குள் அதிகரித்து அதிகரித்து மனிதனல்லாது உருப்பெறும் சக்திகளாக வளரப் போகின்றது.
1.இதிலிருந்து மீள வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
2.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் சக்திகளை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும்
1.இருவருமே நினைவை விண்ணிலே செலுத்தி
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளை வளர்த்துக் கொண்டால் இரு உயிரும் ஒன்றாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வின் கருவாக உருவாக்கி உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக அதைத் தயார் செய்து கொள்ளுங்கள்.

தன் உடலையே சொந்தமாக்க முடியாத நிலைகள் வரும் போது இப்போது சம்பாரிக்கும் எந்தச் செல்வமும் நம்முடன் வரப்போவதில்லை.
1.ஆனால் அந்த அழியாச் செல்வமான அருள் ஒளியைச் சேர்த்துக் கொண்டால்
2.விஞ்ஞானத்தின் மூலம் எதிர்பாராதபடி விபரீதமான நிலைகள் ஏற்பட்டாலும்
3,நாம் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம்மைப் பாதுகாக்கும் சக்தியாக வருகின்றது.

அன்று தான் தெரியும் இப்பொழுது யாம் (ஞானகுரு) சொன்னதை ஏன் செய்யவில்லை என்று…! - செய்யத் தவறியவர்களுக்கு…!

March 22, 2023

“ஓ.........ம்” என்ற தெய்வீக நாதத்தின் பயன்பாடு

எங்குமே… எதிலுமே… “எல்லாமே…” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் “நற்சக்தியும்… தீய சக்தியும்… எதுவாக இருந்தாலும்…” இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.

இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.

நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.

ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!

அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.

இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!

இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”

1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”

இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.

இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ...ம் என்ற நாதத்தை… உள் நாதமான ஓமுக்குள்.. ஓ...ம் ஆக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.
ஓ...ம் க்குள்... ஓ...ம் ஆக இருந்து...
1.அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி
2.அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால்
3.எந்தச் சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.

எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.

அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.

தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.

“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுயிராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும்…
6.“இவ்வெண்ண நாதத்தால்...!”

மனிதனின் கடைசி நாள்களில் செல்வத்தால் நிம்மதி கிடைப்பதில்லை… இருந்தாலும் ஆசை அவனை விடுகிறதா…?

கோடிச் செல்வம் சம்பாதித்து வைத்திருப்போருக்கும்
1.இன்று அவர்களுக்கு நிம்மதி இருக்கின்றதா…? என்றால் இல்லை..!
2.தேடி வைத்த செல்வத்தைச் சீராக அனுபவிக்கின்றார்களா…? என்றால் அதுவும் இல்லை.

செல்வத்தைக் கண்டு அதனால் வெறுப்பும் வேதனையும் அதிகமாக வளர்த்துக் கொள்ள முடிகின்றதே தவிர இந்த உடலில் அமைதி பெரும் உணர்வைப் பெறும் சக்தியினை இழந்து விடுகின்றார்கள்.

இந்த உடலே நமக்குச் சொந்தமில்லை என்கிற பொழுது நாம் தேடும் செல்வம் நமக்கு எப்படிச் சொந்தமாகும்…?

ஏனென்றால் கோடிக்கணக்கில் செல்வத்தைத் தேடி வைத்திருப்பினும்
1.நமக்குப் பின் குழந்தைகள் அதைச் சீராகப் பயன்படுத்த முடியாதபடி
2.வேறு யார் யாருக்கோ சென்று விடுகின்றது.

சேலத்தில் இது நடந்த நிகழ்ச்சி…! கணவன் மனைவி ஒரு குடும்பத்தில் அவர்களுக்கு வயது 80 க்கு மேல் இருக்கும்… செல்வங்கள் இருக்கின்றது… அவர்களுக்குக் குழந்தை இல்லை கடைசி நேரம்… ஆனால் மன நிம்மதி இல்லை.

கையில் 10 லட்சம் பணம் இருக்கின்றது. யாரிடமாவது கொடுத்தால் அதைக் கொண்டு சென்று விடுவார்களோ…? அல்லது ஏமாற்றிவிடுவார்களோ…? என்று இதே சந்தேக நிலையில் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னைப் பற்றி விசாரித்து இதற்குண்டான வழி வேண்டும் என்று எம்மிடம் கேட்டார்கள்.

அதே சமயத்தில் ஒரு சொந்த வீடும் அவர்களுக்கு இருந்தது. 25 லட்ச ரூபாய் பெருமானம் உள்ளது. முக்கியமான ரோட்டிலே அந்த வீடு இருக்கின்றது.

அதை விற்கச் செல்லும் பொழுது ஒருவர் அந்த வீட்டை வாங்க மூன்று லட்சம் ரூபாய் முன் பணம் கொடுக்கிறார். ஆனால் மொத்தத்தையும் கொடுத்து வீட்டை உடனே வாங்கவில்லை… நாளாகிவிட்டது…!

இதையும் என்னிடம் சொல்லிக் கேட்டார்கள்… ஆசீர்வாதம் கொடுங்கள்…! என்று கேட்டார்கள். பின் வீட்டை விற்று அந்தப் பணம் எப்படியோ அது வந்து சேர்ந்தது.

குழந்தை இல்லை என்று சொல்கிறீர்கள். ஒரு சிறு ஆசிரமத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏழைக் குழந்தைகளை அதில் வளர்ப்பதற்குக் கூடுமானவரை முயற்சி செய்யுங்கள். பண வசதி இல்லாத குழந்தைகளுக்குக் கல்வியும் ஞானமும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்… என்று சொன்னேன்.

சரி… சரி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு டிரஸ்ட் போன்று அமைத்து ஆசிரமத்தை ஏற்பாடு செய்து அதற்கென்று ஒரு ஆசிரியரை வைத்துக் குழந்தைகளைப் பராமரித்துக் கொள்ளுங்கள். நீங்களும் அங்கே ஒரு இடத்தில் அமர்ந்து சமையல் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருங்கள் என்று சொன்னேன்.

சரிங்க சாமி… சரிங்க சாமி…! என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மொத்தம் 35 லட்சம் ரூபாய் கையிலே வந்த பின் அவர்களாகவே ஆலோசனை செய்து நான் சொன்னபடி செய்வதற்குப் பதிலாக ஒரு “கல்யாண மண்டபத்தைக் கட்டலாம்…” என்ற முடிவுக்கு வந்தார்கள்.

தன் பெயரைப் போட்டு மண்டபத்தைத் தொடங்கலாம் அதில் நிறையத் திருமணங்கள் நடக்கும் என்று அப்படிச் செய்து விட்டார்கள்.

அதற்குண்டான முயற்சிகளை மற்றவர்களிடம் சொல்லி எடுக்கும் போது உங்கள் பேரை வைத்து டிரஸ்ட் என்று அமைத்தால் சரியாக இருக்காது என்று சொல்லி விட்டார்கள்.

பணத்தைக் கையில் வாங்கும் வரை இவர்களைச் சமாதானப்படுத்தி வைத்துவிட்டு அவர்கள் கைக்குப் பணம் வந்தபின்
1.நீங்கள் இங்கே வேலை செய்து சாப்பிட்டு கொள்ள வேண்டியது தான்.
2.பொதுவாகத்தானே இதைச் செய்திருக்கின்றீர்கள்
3.நாங்கள் டிரஸ்ட் அமைத்து எத்தனையோ பேரைச் சேர்த்து இருக்கின்றோம்
4.பணத்தை வசூல் செய்திருக்கின்றோம் என்று சொல்லி இவர்களை “அம்போ…” என்று ஆக்கிவிட்டார்கள்.

நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். உன் மனைவி பேரில் ஒரு லட்சம் ரூபாயாவது பத்திரப்படுத்தி வை…! என்று சொல்லி இருந்தேன்… ஒரு பாதுகாப்புக் கிடைக்கும் என்று சொல்லியிருந்தேன்.

அது எல்லாம் வேண்டியதில்லை… சாப்பாடு போடுவார்கள்… நாங்கள் பிழைத்துக் கொள்வோம்…! என்று நான் சொன்னதைக் கேட்காமல் செய்தார்கள்.

கடைசியில் மண்டபம் முடிந்தபின் சோற்றுக்கு வழியில்லாமல் போய்விட்டது இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின் “இப்படி ஆகிவிட்டதே…!” என்று மனது விரக்தி ஆகி இறந்து விட்டார்கள்.

சம்பாதித்த பணம் யாருக்குச் சென்றது…? இத்தனையும் இறுக்கிப் பிடித்து வேதனையைத் தான் வளர்க்க முடிந்தது. கோடிக்கணக்கில் இவ்வாறு செல்வத்தைச் சேர்த்தாலும் இந்த நிலை தான் ஆகின்றது.

உடலே நம்முடன் வருவதில்லை… செல்வம் நம்முடன் வருமா…? ஆனாலும் பணத்தின் மீது நமக்கு ஆசை விட்டபாடில்லை...!

இப்படி… செல்வத்தைத் தேடும் எண்ணத்திலேயே தான் நாம் மனித வாழ்க்கையை வாழ்கின்றோமே தவிர வேறும் ஒன்றும் இல்லை. இருந்தாலும்
1.செல்வத்தைக் காக்கும் நிலைக்கு நமக்கு ஞானம் தேவை
2.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது.

செல்வத்தை வைத்து ஞானத்தைப் பெற வேண்டும் என்றால்
1.செல்வம் இருக்கும் பொழுது செருக்கின் தன்மை தான் வரும்.
2.ஞானத்தின் நிலைகள் வருவது கொஞ்சம் சிரமம் தான்.

இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நம்மை ஆட்டிப் படைக்கும் சில உணர்வுகளில் இருந்து நம்மை நாம் காக்க அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நுகர்ந்து அவைகளைத் தணித்துப் பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நுகர்ந்தால் தான் எத்தகைய நிலையையும் சீராக்க முடியும். நம்மைக் காக்கும் சக்தி அது தான்…!

March 21, 2023

அகஸ்தியனிடமிருந்து வெளிப்பட்ட ஒளிக் கதிர்கள்

அகஸ்தியன் மூன்று வயதுக்குள் இயற்கையின் உண்மை நிலைகளை அறியும் சக்தி பெறுகின்றான். உயிர் அணுக்களின் தோற்றங்களையும் அதனின் உண்மைகளையும் அறிகின்றான்.

விஷத்தின் தன்மையை அடக்கி… அந்த அருள் ஒளியின் தன்மை கொண்டு தான் எடுக்கும் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றான்.

ஒரு மின்னட்டாம் பூச்சியை எடுத்துக் கொண்டால்… மற்ற பூச்சிகளைக் காட்டிலும் அது உணவாக உட்கொள்ளும் பொழுது…
1.பின் பாகம் உணர்வின் மூச்சலைகள் வரப்படும் பொழுது பளீர்…. பளீர்… என்று மின்னும்.
2.இது எடுத்துக் கொண்ட உணவுகள் மெர்குரியாக மாறுகின்றது
3.இது போன்றுதான் அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் அணுக்கள் ஒளிக்கதிர்களைப் பாய்ச்சுகின்றது.

இதைக் கண்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் அகஸ்தியனை “மகரிஷி” என்ற நிலையிலும் ஒரு “தெய்வீகப் பிறவி” என்றும் “கடவுள்” என்றும் “உயர்ந்த சக்தி வாய்ந்தவன்” என்றும் அவனைப் பின் தொடர்ந்து செல்கின்றனர்.

காட்டுக்குள் அவன் செல்லப்படும் பொழுது விலங்குகளும் இவனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது… விஷ ஜந்துக்களும் அஞ்சி ஓடுகின்றது.

இப்படிப் பெற்றவன் தான் ஐந்தாவது வயது வரப்படும் பொழுது பூமிக்குள் துருவத்தின் வழி வரும் சக்திகளை எல்லாம் நுகர்ந்தறிகின்றான். துருவத்தின் ஆற்றலைப் பெறுகின்றான்.

அப்போது அவனுக்குத் துருவன் என்று காரணப் பெயர் அக்காலத்தில் வைக்கின்றார்கள்… அகஸ்தியன் துருவன் ஆகின்றான்.

ஐந்தாவது வயதில் வானுலக இயக்க உண்மைகளையும் அவன் கவர்ந்து… அதை உணர்வைத் தனக்குள் எடுத்து இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்திகளைப் பெறுகின்றான்.

பதினாறாவது வயது வரும் பொழுது அவனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றார்கள்.
1.தான் பெற்ற சக்திகள் அனைத்தும் தன் மனைவி பெற வேண்டும் என்றும்
2.கணவனால் பெற்ற அந்தச் சக்தி கணவனுக்கு அது மேலும் கிடைக்க வேண்டும் என்று மனைவி எண்ணுவதும்
3.இப்படி இருவருமே உணர்வுகள் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றாகி உணர்வினை ஒளியாக மாற்றும் தன்மை பெறுகின்றார்கள்.

எந்தத் துருவப் பகுதியைக் கூர்மையாகப் பார்த்து… எதை எல்லையாக வைத்தனரோ… அந்த எல்லையில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக இருக்கின்றனர்.

மனிதனில் தீமைகளை வென்று… பிறவியில்லா நிலை அடைந்து ஒளிச் சரீரம் பெற்ற… அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களைப் பெறச் செய்வதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம். அது தான் துருவ தியானம்…!
1.அந்தப் பயிற்சியின் பிரகாரம்…
2.யாரெல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை முறைப்படுத்தி
3.தனக்குள் எடுத்து வளர்த்துக் கொள்கின்றனரோ அவர்கள் இந்த உடலில் பிறவி இல்லா நிலை அடைகின்றனர்.
4.மனிதனான பின் தான் அதைச் செயல்படுத்த முடியும்.

ஆகவே… நாம் சொந்தமாக்க வேண்டியது உயிருடன் ஒன்றி அருள் ஞானிகள் உணர்வை “அருள் செல்வமாக… ஒளிச் செல்வமாக…” நமக்குள் பெருக்கிப் பிறவி இல்லா நிலை அடைதல் வேண்டும்.

மனித வித்தின் வளர்ப்பின் முற்றல் ஒளிச் சரீரமாகத் தான் இருக்க வேண்டும்

அணு தோன்றி எத்தகைய வித்தான உயிரின் தாவரமாக வளர்ந்தாலும் அந்த வித்து துளிர் கொண்ட இலை விட்டு அதன் மூலம் ஈர்த்து வளரும் தன்மைக்கு வருகின்றது.

1.அந்த இலை பசுமையாக இருக்கும் அதன் காலத்திற்கு உகந்த அமிலச் சேர்க்கையின் வளர்ப்பு
2.அவ்விலை ஈரப்பசை கொண்ட வளர்ப்பின் முற்றிய நிலையில் தன் சக்தியை
3.தண்டுப் பாகத்தில் வளர்ப்பு வலு எடுத்த பிறகு
4.அந்த முற்றிய இலை உதிர்ந்து விடுகிறது “சருகாக…!”

வித்திட்ட அந்த விதையின் வளர்ப்பு தன் வளர்ச்சியிலே விழுதுகளாகி
1.அவ்விழுதின் வலுவைத் தன் வளர்ப்பின் வலுவாக்கி
2.வித்தின் வளர்ப்பின் வளர்ப்புகளை வளர்க்கின்றது.

ஆக சிறு வித்து பல வித்தாக வளர்ப்பெடுத்து மாறு கொண்ட வளர்ப்பை உருவாக்குகிறது.

இப்படி ஒவ்வொரு அணு வளர்ச்சியின் வளர்ப்பிலும் தொடர் வளர்ச்சி வளர்வதைப் போல் இந்தப் புவி மட்டுமல்லாது… ஒவ்வொரு மண்டலமுமே… தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே உள்ளது…!

சூரியக் குடும்பத்தின் வளர்ப்பைப் போன்றே ஒவ்வொரு மண்டல வளர்ப்பின் வளர்ப்பு வளர்ந்து கொண்டே தான் உள்ளது. அதாவது
1.மனித இனப் பெருக்க சுழற்சியைப் போன்றே
2.ஒவ்வொரு செயலும் தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே தான் உள்ளது.

சுழற்சி ஈர்ப்பு வளர்ப்பின் நிலைக்கொப்பச் சுழலவிடும் வளர்ப்பிலேயே
1.வளரும் தன்மை ஒன்றொன்றின் தொடர்ச்சி கூடக் கூட
2.வளர்ச்சியின் தன்மை வலு அதிகமாகின்றது.

தங்கத்தின் வளர்ப்பானது அவை வளரும் இடங்களில் ஆரம்ப இடத்தைக் காட்டிலும் அடுக்கடுக்காக அந்தத் தங்க வளர்ப்பு மண்ணானது சிறிது சிறிதாக வலுப் பெற்று அதன் தொடர்ச்சியில் கிடைக்கப்பெறும் இந்த உலோகச் சேர்க்கை வடிவமைப்பு மிகவும் உயர்ந்ததாகக் கிடைக்கின்றது.

அதைப் போன்றே இந்த உயிராத்மாவிற்கு சேமிக்கப்படும் சேர்க்கையின் தன்மை…
1.இந்த உடல் பிம்ப ஜீவனுக்கு அளிக்கப்படும் உணவிலிருந்தும்
2.சுவாசத்தால் எடுக்கும் எண்ணத்திலிருந்தும்… உணர்வின் தன்மை கொண்டும்
3.வளர்ச்சி பெறும் அணுக்களின் காந்த ஈர்ப்பு நிலைக்கொப்ப இந்த ஆத்மா அது வளர்கின்றது.

எண்ணத்தால் எடுக்கும் ஞான வளர்ச்சியின் வாழ்க்கை நெறி முறைச் செயல் உணர்வுகளில்… “எண்ண ஈர்ப்பை” நாம் செலுத்தும் உணர்வின் வலு அணுக்களைத்தான் இந்தப் பிம்பக் கூடு வளர்த்து “அந்த வளர்ப்பின் வலுவைத்தான்…” இந்த ஆத்மா பெறுகின்றது.

1.செடியின் ஆரம்ப வித்துத் தன்மை வளர வளர அதனின் பலன் பலவாக முற்றித் தருவதைப் போல
2.எண்ண ஈர்ப்பால் நாம் எடுக்கும் வலுத் தன்மையை இந்த ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.

இந்த ஆத்ம உயிரின் வலுத் தன்மையானது உணர்வின் ஈர்ப்புச் செயல் நிலைக்கொப்ப எல்லாம் வலு ஏறுகின்றது. நாம் சொல்லக்கூடிய ஜெப முறையாலும் தியான முறையாலும் மட்டும் வலு ஏறுவது என்பதல்ல.

இவ்வாத்ம உயிரின் வலு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பின் செயல் வலுவை எதன் வழியில் செலுத்தி வீரிய குணம் பெற்றிருந்தாலும் அதன் குண நிலைக்கொப்பவே வளரும்.

ஆக… தீய வழிகளில் செல்லும் ஆவேச அலை ஈர்ப்பில் உள்ளவர்களின் உயிராத்மாவின் வலுத் தன்மையும்… இதன் ஈர்ப்புப் பிடியில் வலுவாகிச் செயல் கொள்கின்றது.

அதே போல இந்த உணர்வின் ஈர்ப்பு வீரத்தின் செயலைச் சாந்த குண ஞான வழிக்குச் செலுத்தினாலும்… அசுர குண வஞ்சனையில் இவ்வீரத்தைச் செலுத்தினாலும்… இவ்வலை ஈர்ப்பு காந்த சக்தியின் வலுத் தன்மையை இவ்வுயிராத்மா எப்படி வலுவாக்கிக் கொள்கின்றதோ அதைப் போன்ற அசுர குண ஈர்ப்பு நிலைக்கும் வலு கூடுகின்றது.

இதை உணர்ந்து..
1.இந்த மனித உடலில் நாம் வாழும் காலத்தில்
2.நம் ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து விளையச் செய்து
3.அந்த முற்றலாக நாம் ஒளி சரீரத்தைப் பலனாக எடுக்க வேண்டும்.

March 20, 2023

புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து விடுபட வேண்டும்

இப்புவியின் நாதம் ஓ…ம்… என்ற நாதம் அமிலமானது… சுவை கொண்டு பால்வெளி மண்டலத்தில் மிதந்துள்ள அமிலத்தின் சுவை சேர்க்கையின் கனம் கொண்டு தன் ஈர்ப்பின் சுழற்சி சக்தியிலேயே அந்தச் சுவையின் ஒளி பிறக்கின்றது.

அமிலச் சுவையின் ஒளி ஈர்ப்பாகி ஒளியாகின்றது. உயிர் அணு பிறக்க சுவையின் ஒளி கொண்ட ஒளியான அணு பிறக்கின்றது.

இந்த வழித் தொடரின் நிலைக்கொப்பச் சுவை.. குணம் வளர்ச்சியின் ஒலி கொண்டு ஒளியாகி… வழி பெறும் ஒவ்வொரு தன்மையிலுமே… இயற்கை வளர்ச்சி ஒவ்வொன்றின் ஈர்ப்பிற்கும் அந்தத் துடிப்பின் நாதம் பிறக்கின்றது.

சுவையில் எப்படி ஒன்றை ஒத்து ஒன்று இல்லையோ அதைப் போன்றே இவ்வொலியும் ஒன்றுக்கொன்று மாறிய நாதமாகத்தான் பிறக்கின்றது.

செயற்கையின் சேர்க்கைப் பொருள் கொண்டு வாகனங்களில் அதனதன் உலோகச் சேர்க்கையின் நிலைக்கொப்ப மாட்டு வண்டிக்கும் புகை வண்டிக்கும் மிதி வண்டிக்கும் விமானத்திற்கும் நாத ஒலி மாறுபடுகின்றது.
இது ஒவ்வொன்றையும் பிரித்துக் காட்டுவதன் பொருள்…
1.செயற்கைச் சேர்க்கைப் பொருளைப் போன்றே
2.இயற்கைச் சேர்க்கையின் ஒலி நாதமும் மாறுபடுகின்றது.

ஞான வளர்ச்சிக்கு ஆத்ம ஜெபத்தால் உயர் ஞான தியானமாக ஒவ்வொரு சக்தி அலையின் ஒலி அலையையும் இந்த ஆத்ம உயிருக்கு எடுக்க வேண்டியுள்ளது.

அணுவுக்குள் அணுவாக பல சுவை முலாமைச் சித்தர்கள் தன் உயிராத்மாவிற்குச் சேமிக்கின்றனர் என்று ஏற்கனவே சொன்னேன்.

அதே போல் எண்ணத்தால் எடுக்கும் ஒலியின் நாதத்தைத் தியானத்தில்
1.சப்தரிஷிகளின் அவரவர்களுக்கு உகந்த சூட்டப்பட்ட நாமகரணத்தின் நாதத்தை
2.அகஸ்தியர் போகர் வியாசகர் வான்மீகி கொங்கணவர் கோலமாமகரிஷி இவர்கள் பால் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் ஜெபத்தால் அவர்களின் நாத ஒலியை நம் ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.

மேலும் நம் சூரிய குடும்ப வளர்ச்சி கொண்ட உயர் சக்திகளின் மண்டல ஈர்ப்பின் ஒலியையும் எண்ணத்தின் ஈர்ப்பு கொண்டு எடுக்கும் சுவாசத்தால் அந்தந்த மண்டலங்களின் அதற்குகந்த ஒலிகளையும் நம் ஆத்ம உயிர் சேமித்துக் கொள்கின்றது.
1.நாம் எடுக்கும் ஜெபத்தால் இவ்வுயிராத்மாவின் சக்தி கூடினால் தான்
2.“எந்த மண்டலத்திற்கும் செல்லலாம்...!” என்று ஏற்கனவே சொன்னேன்.

ஆக எண்ணத்தால் எடுக்கும் ஒலி சேமிப்பின் தொடர் வளர்ச்சி விகிதத்திற்கொப்பத்தான் இந்தப் புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து எந்த மண்டலத்திற்கும் செல்லத்தக்க சக்தி இவ்வொளி ஈர்ப்பினால் (தியானத்தில்) கிட்டுகின்றது.

மெய் ஞான ஈர்ப்பின் பக்தி பூண்ட பெரியோர்களின் ஆத்ம உயிரின் சேமித ஒளி சக்தியினால் தான் சிலரின் சொல்லாற்றல் சக்தியே… உயர்ந்த சொல்லாக வெளிப்பட்டு அந்தச் சொல்லின் செயல் நடப்பது பலிதம் கொள்வது எல்லாமே...!

சுவையின் தன்மைக்கே இவ்வொலிச் சேர்க்கை கொண்டு தான் வலுக்கூடுகின்றது.
1.எந்தெந்த எண்ணத்தில் எல்லாம் சுவாசம் எடுக்கின்றோமோ
2.அச்சுவாசத்தால் பிறக்கும் ஒலி.. ஒளியைக் கொண்டுதான்
3.இவ்வாத்ம உயிரின் நிலை உயருகின்றது.

இதன் நிலைக்கொப்பத்தான்… ஜெப முறை கொண்டு தியானத்தில் எண்ணத்தை எவ்வலை ஈர்ப்பு செயலில் செலுத்துகின்றார்களோ… அதன் ஒலி ஈர்ப்பைச் சித்து நிலை பெற்ற தன்மை கொண்டு… உடலுடன் வாழும் காலத்திலேயே ஒவ்வொரு மண்டலத்தின் ஒலி ஈர்ப்பையும்… தன் எண்ணத்தால் செலுத்தும் தியானத்தால்… ஆத்ம உயிரின் வளர்ச்சிக்கு ஒலி முலாமை ஏற்றார்கள் அன்றைய சித்தர்கள்.

இப்பொழுது உணர்த்தப்படும் முறைகள் எல்லாமே… ஒவ்வொரு மனிதனும் இந்தப் புவி வாழ்க்கைதான் வாழ்க்கை என்ற “இச்செயற்கைப் பிடியிலிருந்து... மீண்டிடக் காட்டப்படும் முறைகள் ஆகும்…!”