ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 2, 2018

“மின்னலைப் பாருடா…!” என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை (ஞானகுரு) “மின்னலைப் பாருடா மின்னலைப் பாருடா..,” என்று சொல்வார்.

எனக்குப் பயமாக இருக்கிறது. என் கண்கள் குருடாகிவிடும் என்று சொல்வேன். எனக்கும் அவருக்கும் இதனால் தர்க்கமாகும்.

27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத் தன்மைகளை அடக்குகின்றது. அதே சமயத்தில் அந்த மின்னல்கள் கடும் விஷத் தன்மை கொண்டது

1.ஆனால், அகஸ்தியன் அவனுக்குள் இதை அடக்கிடும் உணர்வை எடுத்து ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டவன்.
2.அகஸ்தியன் மின்னலின் அலைகளைத் தனக்குள் கவர்ந்து எப்படி அடக்கினான்?
3.மின்னல் எப்படி அவனுக்குள் அடங்குகிறது? என்பதனை அங்கே உணர்த்துகின்றார் குருநாதர்.

அந்த நட்சத்திரங்களிலிருந்து வருவது எதற்குள் இந்தக் கலவைகள் சேருகின்றதோ அதற்குத்தக்கவாறு அந்த உணர்ச்சிகளை ஊட்டி அது செயல்படுத்தும் சக்தி பெற்றது என்று காட்டுகின்றார்.

குருநாதர் என்னை அந்த மின்னலையும் பார்க்கச் சொல்லி அகஸ்தியன் எப்படி விஷத்தை அடக்கினான் அந்த மின்னணுவின் தன்மையைத் தனக்குள் ஒளியாக்கினான் என்பதையும் காட்டினார்.

அகஸ்தியன் துருவன் என்று வரப்படும் பொழுது 27 நட்சத்திரங்களிலிருந்து வரும் பல கோடி மின்னல்களையும் பார்க்கின்றான்.

அதையெல்லாம் அடக்கி “ஒளியின் அணுவாகத் தனக்குள் மாற்றும் நிலை” பெறுகின்றான். 

அகஸ்தியன் எப்படி ஒளியாக மாற்றினான் என்ற அந்த உணர்வின் சத்தை உங்களுக்கு ஊட்டுகின்றோம். அதை நீங்கள் பெற்றால் உங்கள் வாழ்க்கையிலும் அவன் நஞ்சை மாற்றி ஒளியாக ஆனது போன்று மாற்றிடும் ஆற்றல் பெறுவீர்கள்.