ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2015

நலம் பெறுக - வளம் பெறுக - துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெறுக

இப்பொழுது நாம் பார்க்கிறோம். ஒருவர் நமக்குத் தீங்கு செய்துவிட்டார் என்றால் அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா. அவர் வாழ்க்கையில் நல்ல உணர்வுகள் வளம் பெறவேண்டும். நல்ல குணங்கள் அவருக்குள் வரவேண்டும் என்று இப்படி நாம் எண்ணிப் பழகவேண்டும்.

ஏனென்றால் தவறு செய்பவரைப் பார்த்தவுடன் “போகிறான்.., பார்”, என்று தவறு செய்பவனின் உணர்வை நமக்குள் எடுத்து கெட்டதை வளர்த்துக் கொள்கிறோம்.

ஏனென்றால், நாம் சாதாரணமான நிலையில் போய்க் கொண்டிருப்போம். நமக்கு வேண்டாதவன் வந்து என்ன சொல்வான்?

இந்த மாதிரி எல்லாம் உங்களுக்குத் தொந்தரவு செய்தான் என்று சொல்வார்கள். “உங்களைப்பற்றி” ரொம்ப அசிங்கமாகப் பேசுகிறான் என்று சொன்னவுடன் பதிவாக்கிக் கொள்கிறோம்.

பிறகு அவனைப் பார்த்தவுடன், “போகிறானா.., அயோக்கியன்” என்று இப்படிச் சொல்லி அந்த உணர்வை நாம் எடுத்து வளர்த்துக் கொண்டு அவனைக் குற்றவாளியாக்குவோம்.

ஆக, அந்த உணர்வு வந்து அவனைப் பார்த்ததும் நமக்குள் கெட்டதை வளர்க்க ஆரம்பித்துவிடுவோம். அப்பொழுது பகைமை என்ற உணர்வு வரும்.

முதலில் அவனிடம் நேசம் என்ற நிலையில் அவனிடம் நாம் நல்ல குணங்களுடன் இருந்திருப்போம். இந்தச் சந்தர்ப்பம் அவன் மேல் உள்ள நல்ல குணங்களை பகைமையாக மாற்றிவிடும்.

அந்த உணர்வை எடுத்தபின் அவனை எதிரி என்ற நிலையில் எண்ணி நோயின் தன்மை நமக்குள் வளரும். நன்றாகச் சிந்தனை செய்து பாருங்கள். அப்பொழுது அதைத் தடைப்படுத்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்ககள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை எடுத்து ஆத்மசுத்தி செய்ய வேண்டும்.

அடுத்து, எங்கள் சொல்லும் செயலும் பிறரைப் புனிதப்படுத்த வேண்டும். எங்கள் சொல் பிறரை நல்லதாக்க வேண்டும்.

அதைப் போல நாங்கள் பார்ப்போர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற்று அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகவேண்டும்.

நாங்கள் பார்க்கும் அனைவரும் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று தீங்கு செய்வோரைப் பற்றிய நினைவு வரும்பொழுதெல்லாம் எண்ண வேண்டும்.

நாம் அவர்கள் தீமைகளை மறந்துவிட்டு
நல்ல குணங்கள் வளர வேண்டும்
நல்ல செயல்கள் வளர வேண்டும்
என்று நாம் இவ்வாறு எண்ணுதல் வேண்டும்.

அவர்கள் வாழ்க்கையில் நல்ல குணங்கள் வளம் பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறும் உணர்வுகள் அங்கே வளரவேண்டும் என்று நாம் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

அப்பொழுது தீமையான உணர்வுகள் வந்து நமக்குள் பகைமையாக்குவது இல்லை. ஒன்றி வாழும் உணர்வுகள் வளர்கின்றது. மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியை நாம் வளர்த்துக் கொள்கிறோம்.

October 30, 2015

குருநாதர் எம்மைத் தேடி வந்துதான் சக்தியைக் கொடுத்தார் – அதை உங்களைத் தேடி வந்து கொடுக்கிறோம், ஞானகுரு

நன்மைகள் பல செய்யத் துணிவோம். நல்லது செய்வதற்கு நல்ல துணிவு வேண்டும்.

நீங்கள் நல்லதே செய்து கொண்டேயிருந்தால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்?

நல்லது செய்யப் போகும்போது எத்தனை தொல்லைகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்? உதவி மேல் உதவி செய்யப் போகும்பொழுது நல்லவர்கள் எத்தனை அவஸ்தைப்படுகிறார்கள்? இதற்காக வேண்டி
அந்த நல்லவர்களைக் காப்பாற்ற வேண்டும்.

நல்லவர்களைக் காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அதற்குண்டான சக்தி வேண்டுமென்றுதான் குருநாதர் எமக்குக் கொடுத்த சக்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

நன்மைகள் செய்யப் போகும்போது நாம் எப்படி இருக்க வேண்டும்?
அதற்குண்டான மன வலு” வேண்டும்.
இல்லையென்றால் இந்த நன்மைகள் பலன் தராது.

ஆனால், அதற்கு வேண்டிய சக்தி நல்லவருக்கு வேண்டுமா..,? வேண்டாமா..,?

அதற்காகத்தான், யாம் உங்களுக்குப் பல முறை துருவ நட்சத்திரத்தைப் பற்றி
திரும்பத் திரும்பச் சொல்லி
இந்த உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகிறோம்.

ஒரு முறை 1954ல் யாம் வேலையின் நிமித்தமாக அகமதாபாத் சென்றிருந்தோம். அங்கேயும் நம் குருநாதர் என்னைத் தேடி வந்தார்.

எப்படி வந்தீர்கள் என்றேன்

உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் என்றார் குருநாதர். அங்கேயும் எம்மை “டீ”யைக் குடிக்கச் சொன்னார். அப்புறம் என்னென்னமோ சொன்னார்.

நான் அவரிடம் “ஏன் சாமி நீங்கள் அங்கே பழனியில் அல்லவா இருந்தீர்கள் இங்கே எப்படி வந்தீர்கள்? என்று கேட்டேன்.

“நான் சும்மாதான் வந்தேன்டா..,” என்றார். பின் சென்றுவிட்டார். ஆக, என்னைத் துரத்திக் கொண்டேதான் குருநாதர் வந்திருக்கின்றார்.

குருநாதர் என்னுடைய குணத்திற்கோ அல்லது என்னுடைய பூர்வ புண்ணியமோ தெரியாது. ஆனால், எம்மைத் தேடி வந்துதான் எனக்கு இந்தச் சக்தியைக் கொடுத்தார். நான் உங்களைத் தேடி வந்து இதைச் சொல்கிறேன்.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா?

என்னைத் தேடி வந்து குருநாதர் கொடுத்தார். அதே மாதிரி அந்த அருள் சக்திகளை உங்களைத் தேடி வந்து
உங்களுக்கும் கொடுக்கின்றோம்.
உங்கள் தீமைகள் அகல வேண்டும் என்று சொல்கிறோம்.

ஏனென்றால், நன்மைகள் செய்யும் நிலைகளில் எவ்வாறு தீமைகள் வருகிறது? அதிலிருந்து உங்களைக் காக்க அந்தத் துணிவு வேண்டுமா இல்லையா?

அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு பேரருள் பேரொளி பெறவேண்டும் என்பதற்குத்தான் அருள் ஞானத்தைக் கொடுக்கிறோம், நல்லதைக் காத்திடும் சக்தியாக துருவ நட்சத்திரத்தைக் காட்டுகிறோம்.

உங்கள் வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி அந்தச் சக்திகளை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ள முடியும்.

ஆகவே, உங்களுக்கு நன்மைகள் செய்யும் அந்தத் துணிவைக் கொடுக்கிறோம். எமது அருளாசிகள். 

October 29, 2015

தீமைகளை நீக்கிடும் உபாயங்களையும் பயிற்சியையும் தான் உங்களுக்குக் கொடுக்கின்றோம்

தலைவலி வயிற்று வலியைப் போக்குவதற்குத்தான் எம்மைப் பார்க்க வருகிறார்கள்.

வயிற்று வலி வந்தவர்களைப் பார்த்தபின் இதை விடக் கொடூரமான நிலைகளில் “அட பாவமே..,” என்று எனக்குக் கூட அப்படித்தான் இருந்தது. சாமியிடம் (ஞானகுரு) போனால் நன்றாக ஆகின்றது என்று சொல்வார்கள்.

ஆனால், அடுத்தவர்களிடம் (வலி உள்ளவர்களிடம்) இதைச் சொல்லி அந்த வலியை மீண்டும் வாங்கிக் கொள்வார்கள். அப்புறம் என்ன சொல்வார்கள்.

சாமியிடம் சென்றேன். முதலில் வயிற்று வலி நீங்கியது. ஆனால், மறுபடியும் இப்பொழுது வந்து விட்டது. ஆகவே, டாக்டரிடம் போகப் போகிறேன் என்பார்கள்.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதைக் கேட்டபின் அடுத்தவர்களும் வருவார்கள். வந்து நல்லதான பின் அதே மாதிரி அடுத்தவர்களிடம் போய்ச் சொல்வார். மீண்டும் வந்துவிடும்.

ஆக மொத்தம், உங்களுக்கு வரும் தீமைகளைத் துடைக்கத் தெரிய வேண்டுமல்லவா?

தலை வலிக் கேஸ் உடல் வலிக் கேஸ் எல்லாம் இங்கே வந்து எம்மைச் சந்தித்த பின் நன்றாக ஆன பின் என்ன செய்வார்கள்? இந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.

கேன்சர் வந்தவர்கள் கூட நல்லதாக ஆனபின் இங்கே வருவதில்லை. ஆனால், சென்றாலும் மீண்டும் அதைத் துடைக்கத் தெரியவில்லை என்றால் என்ன ஆகும்?

ஏனென்றால், மண்ணுக்குள் வித்து மறைந்துள்ளது. மழை இல்லாத போது எல்லாம் காய்ந்து போய்விடுகிறது. ஆனால், மழை பெய்தவுடன் என்ன செய்யும்? மீண்டும் தள தள என்று தன் சத்தை எடுத்து வளரத் தொடங்கும்.

இதைப் போலத் தான் உங்களுக்குள் மறைந்த நிலைகளை அது அவ்வப்பொழுது துடைக்கத் தவறினால், சந்தர்ப்பமானால் அது மீண்டும் முளைத்துவிடும்.

டாக்டரிடம் சென்று நோய்க்கு மருந்து சாப்பிட்டாலும் விஷத்தின் (நோயின்) தன்மையை அடக்கினாலும் அந்த மருந்தின் தன்மை மற்றொன்றை அடக்கும்.

மீண்டும் அதன் வழியில் புதுப் புது நோய் உங்களுக்கு வரும். ஆக, அது தன் உணர்வை எடுத்து விஷத்தைப் பாய்ச்சி வளர்க்கும்போது இப்படித்தான் ஆகும்.
நான் இந்த மருந்தைச் சாப்பிட்டேன்
அப்புறம் இந்த மருந்தைச் சாப்பிட்டேன் என்று
வாழ்க்கையின் நிலைகளில் இப்படித் தான் நாம் சொல்வோம்.

இதைப் போன்று நமக்குள் மாறி மாறி வரும் நிலைகளை விதித் தன்மை கொண்டு நம் உடலிலே முன் குவித்து மதி கொண்டு இதை ஒளியாக மாற்றும் தன்மை பெறவேண்டும்.

வீட்டில் அழுக்குப்பட்டால் துடைக்கிறோம், கையில் அழுக்குப்பட்டால் கழுவுகிறோம், துணியில் அழுக்குப்பட்டால் துவைக்கின்றோம்.

அதைப் போல நம் வாழ்க்கையின் நிலைகளில் தீயவர்களையோ மற்றவர்களையோ பார்க்கின்றோம், அறிகின்றோம், அப்பொழுது உணர்வுகள் நம் உடலில் அழுக்காகச் சேர்கின்றது. இவைகளை அவ்வப்பொழுது துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்?

இதுதான் கடும் நோய்களாக மாறி மாறி நமக்குள் வருகிறது. சாமி செய்யும் சாமியார் செய்வார், மந்திரம் செய்யும் என்ற நிலைகளில் தான் நீங்கள் எண்ணுகிறீர்கள்.

தலை வலி, மேல் வலி, இடுப்பு வலி என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள் எல்லாம் போக்கிக் கொண்ட பின் யாம் சொல்வதை மறந்து விடுகிறார்கள்.

அடுத்தாற்போல் வேதனைப்படுபவர்களை உற்றுப் பார்த்து அதை நுகர்ந்து அந்த நோய் உருவாக்கும் அணுக்களைத் தட்டி எழுப்பி விடுவார்கள்.

ஆனால், அது வராமல் தடுக்க வேண்டுமல்லவா? தடுக்கத் தவறினால் மீண்டும் இழிநிலையான சரீரத்திற்குத்தான் செல்ல நேரும்.

அழுக்குகள் சேர,
       நல்ல ஞானங்கள் மறைய,
              இருண்ட நிலைகள் கொண்டு,
                     சிந்திக்கும் தன்மை இழக்க,
                            நமக்குள் விஷத்தின் தன்மை பெருக்க,
மீண்டும் ஊர்ந்து செல்லும் பாம்பினங்களாக நம்மை அழைத்துச் சென்றுவிடும் நம் உயிர்.

அறியாது வரும் தீமைகளையும் நோய்களையும் நீங்களே நீக்க்கிக்கொள்ளும் பயிற்சியைத் தான் யாம் உங்களுக்குக் கொடுக்கிறோம். துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை எடுக்கப் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி ங்கள் இரத்தங்களில் கலக்க வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று அதை எடுக்கப் பழகிக் கொண்டால் சுத்தப்படுத்திக் கொள்ள முடியும். உங்கள் ஆன்மாவை நீங்களே சுத்தப்படுத்திக் கொள்ள முடியும்.

பிறிதொரு சக்தி நமக்குள் வந்தால்
அதை மாற்றியமைக்கும் வழியைத் தான்
உங்களுக்கு உபதேசிக்கின்றோம்

October 27, 2015

“பதிவின் நினைவுகள்” எதுவோ அந்த நினைவின் நிலையைக் கவரும்

இன்று விஞ்ஞான அறிவுப்படி எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் (ELECTRIC, ELECTRONIC) என்று பதிவாக்குகிறார்கள்.

நமது உயிர் எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது
சூரியனும்  எலெக்ட்ரிக்கை உருவாக்குகின்றது.
அதன் இயக்கச் சக்தியினுடைய நிலைகள் அது பூமியில் படரப்படும்போது அதை இந்தப் பூமியில் விளைந்தை உணர்வின் சத்தை அது எதைக் கவர்ந்ததோ அதை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.

ஆகவே, இன்று மனிதனாக இருக்கும் நாம் நம் மனித உடலிலிருந்து வெளிப்படும் உணர்வினை இதே சூரியனின் காந்தச்சக்தி கவர்ந்தால்
இந்த மனித உடலில் உருவான
அந்த உணர்வின் உணர்ச்சிகளை இயக்கும்
இந்தச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால்
அதை எலெக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
அதன் உணர்வின் இயக்கமாக மாற்றுகின்றது.

இப்பொழுது நான் பேசுகின்றேன் (ஞானகுரு) என்றால் நான் பேசிய உணர்வுகளை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்தால் எலக்ட்ரானிக்காக மாற்றுகிறது.

படிக்காதவன் நான் சொல்கிறேன். நான் சொல்வது புரியவில்லை என்று விட்டுவிடாதீர்கள்.
பதிவின் நினைவுகள் எதுவோ
அது நினைவின் நிலையைக் கவர்கின்றது.

இசையை சிறு குழந்தைகள் கேட்டால் அது பதிவான பின் தன்னையறியாமலே அந்தக் குழந்தைகள் ஆடத் தொடங்கும், பாடத் தொடங்கும்.

அந்தக் குழந்தைகள் படிக்கவில்லை.

ஆனால், ரேடியோவையோ டி.வி.யையோ உற்றுப் பார்க்கின்றது. அந்த உணர்வின் இசையைக் கவர்ந்து கொண்டபின் அந்த உணர்வுகொப்ப குழந்தைகள் ஆட்டங்கள் ஆடுகிறது.

குழந்தைக்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் பாட நிலை இல்லையென்றாலும் சிறிதளவே பதிவானபின் அந்தக் குழந்தை பேசத் தொடங்கியவுடன் இந்தப் பாடலை எளிதாகப் பாடுகிறது.

இது குழந்தைப் பருவம்.

ஆனால் , பெரியவர்களான நாம் பலவிதமான உணர்வுகளை மாற்றிக் கொள்கிறோம். பல உணர்வுகள் நமக்குள் கலக்கும்போது சிந்திக்கும் தன்மைகள் இழக்கப்படுகிறது.

குழந்தைப் பருவத்தில் அத்தகையை நிலைகள் இல்லை.

குறுகிய உணர்வுகளும்
பார்க்கின்ற உணர்வுகளையும் பதிவாக்கிக் கொள்ளும்போது
அதனுடைய சிந்தனனை அதன் வழிகளிலே செல்லப்படும்போது 
அதை இயக்கும் சக்தி பெறுகின்றது.

ஆனால், பெரியவர்களாக இருக்கும் நாம் அதைக் காண முடிவதில்லை.

“சாமி எதை எதையோ சொல்கிறார்…, நமக்கெல்லாம் இது எங்கே புரிகிறது”. இன்றைய வாழ்க்கைக்கு இது தேவையா? நம்மால் இவ்வாறெல்லாம் செய்ய முடியுமா? கடைப்பிடிக்க முடியுமா? என்று எண்ணிணீர்கள் என்றால் யாம் பதிவாக்கக்கூடிய அருள் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் தள்ளி விடுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

அதற்குப் பதில், சாமி சொல்வதெல்லாம் நமக்குள் ஆழமாகப் பதிவாக வேண்டும் என்ற நிலையில் உற்று நோக்கினீர்கள் என்றால் விண்ணின் ஆற்றலைப் பெற\முடியும்.

ஒளியின் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அருள் உணர்வுகளை உங்களுக்குள் எளிதில் பெற முடியும்.

அதன் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளிலிருந்தும் இன்னல்களிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் கொடுத்தது அனுபவப் பாடம் தான். அவர் எனக்கு எதையுமே பாட நிலைகளில் கொடுக்கவில்லை. உங்களைப் போல நான் பாடங்களையும் புத்தகங்களையும் படிக்கவில்லை.

எல்லாமே இந்தக் காற்று மண்டலத்தில் அலைகளாகப் படர்ந்துள்ளது அருள் மகரிஷிகளின் உணர்வலைகளும் இந்தக் காற்றிலேதான் படர்ந்துள்ளது என்று உணர்த்தி குரு எமக்குள் பதிவாக்கினார்.

எனக்குள் அவர் பதிவாக்கிய நிலைகளை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர்ந்து எனக்குள் விளைய வைத்தேன். குருநாதர் உபதேசித்த நிலைகளை என்னால் உணர முடிந்தது. தீமைகளை அகற்ற முடிந்தது. ஒளியாகவும் மாற்ற முடிந்தது

அதே வழியில் தான் உங்களுக்குள்ளும் இப்பொழுது பதிவாக்குகிறோம். ஆஅகவே, யாம் பதிவாக்கும் அருள் உணர்வின் தன்மைகளை
நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால்,
அதைப் பெறவேண்டும் என்று நீங்கள் இச்சைப்பட்டால்,
அதை உங்களுக்குள் வளர்க்க வேண்டும் என்று இச்சைப்பட்டால்
உங்கள் உயிர் அதை உங்களுக்குள் உருவாக்கும்.

சிறிது காலம் பழகிக் கொண்டால் உங்களுக்குள் உருவான அந்த அணுக்கள் தன்னாலே இயங்கி அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை உங்களுக்குள் பெறச் செய்யும். இதில் சிரமம் ஒன்றுமில்லை.

உங்களுக்குள் பதிவு எதுவோ
       அது இயங்கி நினைவாகி
              அந்த எல்லைக்கே அழைத்துச் சென்று
                     அந்த அருள் சக்திகளைப் பெறச் செய்யும்.

ஒவ்வொரு நாளும் இதை வளர்க்க வளர்க்க, நீங்கள் செல்லும் பாதை உங்களுக்கே புலப்படும்.

அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் வாழ்வீர்கள். பேரின்ப பெருவாழ்வு பெற்று பேரானந்த நிலையாக அழியா ஒளியின் சரீரம் நீங்கள் பெறுவீர்கள்.

இதன் வழி கொண்டு அருள்ஞானிகளின் அருள் சக்திகளைப் பதிவாக்கிக் கொள்ளும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

October 26, 2015

நம் உயிரை எளிதாக மதித்தல் வேண்டாம்

ஞானிகளின் வழியைக் கண்டுணர்ந்தபின் நம் உயிர் என்ற நிலைகளில் நாம் பயந்து தவறு செய்யப் பயப்பட வேண்டும்.

ஆக நாம் தவறென்ற உணர்வை நுகர்ந்தால், நம் உயிர் அதை உருவாக்கி நமக்குள் அதை வளர்த்து நம்மை அறியச் செய்கின்றது.

நாம் நினைக்கின்றோம் ஒருவருக்கும் தெரியாமல் தப்பு செய்யலாம் என்று. ஆனால், உயிருக்குத் தெரியாமல் தப்பு பண்ண முடியுமா?

அங்கே தெரிந்து தான் நம்மை இயக்குகின்றது. அப்பொழுது அதை ஒரு உணர்வின் அணுவாக மாற்றிவிடுகின்றது.

அவனால் தான் நாம் அறிகின்றோம்.
அவனால் தான் நாம் இயங்குகின்றோம்.
அவனேதான் உருவாக்குகின்றான்.

மீண்டும் நினைவுபடுத்தும்பொழுது அந்தத் தவறு செய்த அணு உன் உடலில் வளரும். உனக்குள் என்ன செய்கின்றது பார். தப்பவே முடியாது. ஆகவே, நாம் தெரியாமல் பார்ப்பதே நமக்குள் வந்து உருவாகிவிடுகின்றது. அதைத் துடைக்கத் தெரியவில்லை என்றால் அந்தக் கெட்டது வளர்ந்துவிடும்.

நீ தெரியாமல் இன்று பார்த்தாய். அதை ஏன் துடைக்கவில்லை. இது வந்து, "உன்னை என்ன செய்கின்றது பார்" என்று சொல்லும் இந்த உயிர்.

ஆகவே நாம், நமது உயிரை எளிதாக மதித்தல் வேண்டாம்.

அருள் ஞானத்தை நமக்குள் பெருக்கிப் பழகுதல் வேண்டும்;
தீமைகளைக் குறைத்துப் பழக வேண்டும்;
மனதைத் தூய்மைப்படுத்திப் பழகுதல் வேண்டும்;
மனத் தூய்மை நமக்கு அவசியம் தேவை

மனத் தூய்மை தேவை என்றால் அகஸ்தியர் காட்டிய விநாயக தத்துவப் பிரகாரம் காலையில் நீங்கள் எழுந்தவுடன் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணுங்கள். அந்த உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
என் மனைவி/கணவன் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
எங்கள் குழந்தைகள் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
எங்கள் குடும்பத்திலுள்ள உற்றார் உறவினர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
நாங்கள் வசிக்கும் தெருவில் உள்ளவர்கள் நண்பர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
நாங்கள் தொழில் செய்யும் இடம் முழுவதும் படர்ந்து அங்கே பணிபுரிபவர்கள் அனைவரும் எங்களிடம் பொருள் வாங்குபவர்களும், அதைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

இப்படி எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
உங்களுக்குள் எல்லோரும் இருக்கின்றார்கள்.
யாரையும் நீங்கள் பிரிந்து வாழவில்லை.

இவ்வாறு செய்தால் இதுதான் ஏகாதசி விரதம். நாம் யாருடைய உணர்வையும் கவர்வதில்லை.

ஆக, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களும் உயிரின் ஈர்ப்பில் - உயிருடன் ஒன்றிய நிலையாக - அவனுடன் அவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் இணைகின்றோம்.

“நேற்றைய செயல்.., இன்றைய மனித உடல்,
இன்றைய செயல்.., நாளைய ஒளி உடலாக”
உயிருடன் நாம் ஒன்ற முடியும்.
ஒளியின் சரீரம் பெறுவது திண்ணம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா