ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 22, 2018

“கொசு மூலமாக…!” எப்படி வேவு பார்க்கின்றார்கள்...?

உலகப் போர் நடந்த சமயங்களில் அமெரிக்காவிலேயோ ஜெர்மனிலேயோ யுத்தக் காலத்தில் கொசுக்களில் ரேடியம் (RADIUM) என்ற உணர்வினைப் பதிக்கச் செய்து அதில் ஈர்க்கும் காந்தத்தை அனுப்பி மறைமுகமாக உளவு பார்த்தார்கள்.

அதாவது கொசுவின் மூலமாக இரகசியமாகப் பேசுவோர் ஒலி அலைகளை அறிந்து கொண்டார்கள்.

எங்கே இரகசியமாகத் திட்டம் தீட்டுகின்றார்களோ கொசு அங்கே தான் இருக்கும். அவர்களால் அதை அறிய முடியாது.

ஆனால் அது கவரும் உணர்வினை விஞ்ஞானக் கருவிகள் கொண்டு ஆயிரம் மடங்கு பெருக்கி ஒலி அலைகளை எவ்வாறு கவருகின்றான் என்ற நிலைகளை குருநாதர் காட்டினார்.

கொசுவில் ரேடியத்தை இணைத்து அதனைப் பரப்பச் செய்து உள்ளே செல்லும். ஆனால் அது மடிந்து விடும். மனிதனுக்குத் தொல்லை கிடையாது.

உள்ளே சென்று மடிந்த கொசுவிலிருந்து அங்கே இரகசியமாகப் பேசும் உணர்வுகளைக் கவர்ந்து அதற்குண்டான சாதனத்தின் மூலம் ஒலி அலைகளைப் பரப்பப்படும் போது சூரியனுடைய காந்த சக்தி அவைகளைக் கவர்ந்து கொள்கிறது. (WIRELESS – SATELLITE என்று சொல்கிறோம் அல்லவா)

அன்று அவர்கள் செய்த இராஜ தந்திரம் விஞ்ஞான அறிவால் எவ்வாறு செய்தார்கள்? அலைகளாக அது எப்படிப் படருகின்றது என்ற நிலையைக் குருநாதர் உணர்த்துகின்றார்.

தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே அவர்கள் பேசிய இரகசிய திட்டங்களை பதியச் செய்து ஆயிரம் மடங்காக அதைப் பெருக்கி தான் அறிந்து கொண்ட பின் அதற்குத்தக்க தன் படைகலன்களை மாற்றி அவர்களை இவன் அழிக்க முற்படுகின்றான்.

இது ரஷ்யாவிலே நடந்த நிலைகள்.

ஏனென்றால் வேதங்களின் சாரங்களைக் கற்றுணர்ந்த இந்த ரஷ்யாவில் இந்த நுண்ணிய நிலைகளைக் கொசுக்களின் ரூபமாக அறியத் தொடங்கினான். அதிலேதான் ஜெர்மனி வீழ்ந்தது.

இரகசியக் கூடங்களையும் அணுக்கதிரியக்கங்களையும் எவ்வாறு உருவாக்குகின்றான். இராக்கெட்1, D1, D2 என்று ஏவப்பட்டு அதன் முகப்பில் ஆயுதங்களைப் பரப்பித் திடீரென்று தாக்கும்படி குறித்த எல்லையில் அந்த நுகரும் சாதனத்தை வைத்தான்.

ஏனென்றால் அவன் சாதனத்தை வைத்த ஜெர்மனியின் இந்த உணர்வின் தன்மை தான் கொசு ரூபமாக அந்தப் தொழிற்சாலைக்குள் அனுப்பப்பட்டு அதனையும் கவர்ந்துணர்ந்து அதனை இதை எதிர்மறையாக செயலாக்கும் தன்மைக்குக் கொண்டு வந்தான்.

1.அந்த விஞ்ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வலைகளின் பதிவு எவ்வாறு இருக்கிறதென்றும்
2.இது எவ்வாறு இரஷ்யாவிற்கு வந்தது என்றும்
3.குருநாதர் காட்டவில்லை என்றால் எமக்கும் இது தெரியாது.

இந்த உலகத்தில் விஞ்ஞானம் தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் சாமிக்கு (ஞானகுரு) விஞ்ஞான அறிவு தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை இப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் அவருடைய உணர்வுகளைக் கவர்ந்த பிற்பாடு தான் அவருடைய ஆற்றல்களை என்னால் அறிய முடிந்தது.

இதையெல்லாம் அறிய முடிந்தது என்று சொன்னால் என் தாய் கருவிலே நான் (ஞானகுரு) பிறந்த பூர்வ புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.

1.பல கோடிப் பணம் செலவழித்தாலும்
2.இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால்
3.இந்த உடலுக்கு ஆயுள் பத்தாது. 

குருநாதர் காட்டிய அந்த அருள் வழியில் அவரால் இந்த நுண்ணிய நிலைகளை அறிய முடிந்தது. அதை உங்களிடம் தெரியப்படுத்தவும் முடிகின்றது.