ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2014

தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்குக் கிடைக்கும் ஆற்றல் (PRACTICAL EXPERIENCE)

நாம் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்தவர்கள். மனிதனானபின், தீமையை அகற்றிய துருவ மகரிஷியின் உணர்வை நீங்கள் பெற, அந்தத் தகுதியைப் பெறும் நிலைகளுக்குதான், இதை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

எதிர்நிலைகள் உங்களை எப்படித் திருப்புகின்றது?
இதிலிருந்து நீங்கள் எப்படி விடுபட வேண்டும்? என்ற
மெய்யுணர்வை நீங்கள் பெறுவதற்குத்தான் உபதேசிக்கின்றோம்.

நீங்கள் பள்ளியில் பாடங்களைப் படித்தாலும், பயிற்சியின் நிலைகளுக்கு (PRACTICAL) என்று, தனியாகக் கொடுப்பார்கள்.

இயந்திரத்தைச் செய்யக் கற்றுக் கொள்வார்கள். இயந்திரத்தை இயக்கும் நிலைகளுக்கும் கொண்டு வருவார்கள். எல்லாம் கற்றுக்கொள்வோம்.
இயந்திரம் தவறாகிவிட்டால், அது என்னென்ன வழிகளில் தவறாகும்?
இதனுடைய தவறுகளை எப்படிச் சரி பண்ணுவது?
என்று விஞ்ஞானிகள் கொடுப்பார்கள்.

பாடநூல்கள் கொண்டு ஒரு இயந்திரத்தைச் செய்வதற்காக நீங்கள் செயல்பட்டாலும் அதனுடைய செயலாக்கங்கள் வரப்படும்போது, இதிலே தவறுகள் வந்துவிடும்.

அப்படித் தவறுகள் இழைக்கப்படும்போது,
தவறுகளை எப்படி நீக்குவது?
என்ற நிலையை அறியாவிட்டால்
உருவாக்கினாலும் பயன் இல்லை.

அதைப் போன்று, உங்களுக்குள் சீரும் சிறப்பும் பெறக்கூடிய தகுதி இருந்தாலும்,
உங்கள் வாழ்க்கையில் இடைமறித்துத் தவறாகிவிட்டால்,
அந்தத் தவறு எப்படி இயக்குகிறது?
என்று அந்த உணர்வுகள் தெரியவரும்.

சாமி சொன்னார். அவர் பெறுவார். நாம் எப்படிப் பெறமுடியும்? என்று எண்ணிவிடாதீர்கள். உங்களுக்குள் ஒவ்வொன்றாகப் பதிவுசெய்து வைத்திருக்கின்றோம்.
         
உயர்ந்த ஞானத்தைப் பெற்றாலும், அவ்வப்பொழுது,
இடைமறித்துத் தீமை செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்த

அந்த அருள்ஞானத்தை நீங்கள் பெருக்குதல் வேண்டும். எமது அருளாசிகள்.

January 30, 2014

இறந்தவர்கள் பிறவியில்லா நிலை (பேரின்ப நிலை) அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா?

1. பனிப்பாறை நிறைந்த இடத்திற்கு எம்மை அனுப்பினார் குருநாதர்
நமது குருநாதர் ஈஸ்வராய குருதேவர், எம்மைத் தெளிவாக்க இமயமலைக்கு அனுப்புகின்றார். பனிப்பாறைகள் நிறைந்த இடம். நான் சைனா (CHINA) பார்டர் பக்கம் போகவேண்டும் என்று கட்டளையிட்டார். நான் அதன்படி போய்க் கொண்டிருக்கின்றேன்.

அப்படிப் போகும் பொழுது அந்த உறைபனிகள் எம்மைப் பாதிக்காமல் இருப்பதற்காக, துருவ நட்சத்திரத்தைத் தியானிக்கும்படி செய்தார்.

அதை சதா என் உடலில் எடுக்கும் பொழுது,
அந்த உணர்வலைகள் எமக்குள்
ஒருவிதமான வெப்பத்தை உண்டு பண்ணியது.
ஆகவே, குளிர் எம்மைப் பாதிக்கவில்லை.

ஏனென்றால், வெறும் கோவணத் துணியுடன் தான் எம்மை அங்கே செல்லும்படி செய்தார் குருநாதர். அந்த அருள் உணர்வுகளை உனக்குள் செலுத்தும் பொழுது, அந்த வெப்பத்தின் தணல் கூடி, குளிர் பாதிக்காமல் நீ எப்படி பதனமாகச் செல்கின்றாய் என்று அவர் உபதேசித்த அதன் வழியில் செல்கின்றேன்.

ஆனால், ஒரு மலைக்கு ஒரு மலை போகும் பொழுது எனக்கு ஒரு பாதையாகத்தான் தெரிகின்றது. நான் நடந்து சென்று போய்க் கொண்டிருந்த சிறிது நேரத்தில் பார்த்தால், “திடு., திடு., திடு.,” என்று பெரிய ஒலி ஓசைகள் கேட்கின்றது.

நான் நடந்து வந்த பாதை எதுவோ, அந்தப் பனிப்பாறைகள் உடைந்து விழுந்து பெரிய பள்ளமாகத் தெரிகின்றது. பார்த்தால் இதற்கும் அதற்கும் தொடர்பு இல்லாது, நான் மறுபடியும் எப்படி இதன் வழியில் திரும்பப் போகின்றேன் என்ற அந்த சந்தேக உணர்வுகள் வந்துவிட்டது.

அதே சமயத்தில் நான் நடந்து வந்த நேரத்தில் இப்படி உடைந்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும்? என்ற இந்த உடலின் இச்சை வருகின்றது. (இது குருவினுடைய பரிசீலனை)

நாளைக்கு, திரும்பப் போகவில்லை என்றால் மனைவி, பிள்ளைகள் என்ன செய்யும்? என்று இந்த மனதில் இத்தனை எண்ணங்களை நான் (ஞானகுரு) எண்ணும் பொழுது, அந்த உணர்வுகள் என்ன செய்கின்றது?
2. உன் உயிர் போய்விட்டால் எதை நீ காக்கப் போகின்றாய்? கேட்கிறார் குருநாதர்
அந்த மாதிரி ஆகிவிட்டால், என் மனைவி குழந்தைகளை எல்லாம் எப்பொழுது நான் பார்ப்பேன்? என்னுடைய கடைசிப் பையன் தண்டபானி எப்பொழுதும் என் பேரைச் சொல்லிக் கொண்டிருப்பான். அவனை எப்பொழுது பார்ப்பேன்? என்றெல்லாம் என் நினைவுகள் சென்றது.

அப்படி நினைத்தவுடனே, இங்கே என் உடல் “கிர்..,” என்று இரைய ஆரம்பித்துவிட்டது. குரு சொன்ன வழியில் அருள் ஒளி பெற்றால் அந்த உறைபனி குளிர் பாதிக்காது, உடலின் வலு பெறுகின்றது. இங்கே வரும் தீமைகளிலிருந்து விடுபட முடிகின்றது.

அங்கே வீட்டின் நினைவு உனக்குள் வரப்படும் பொழுது உடல் இல்லையென்றால் நீ எதைக் காக்கப் போகின்றாய்? என்று குருவினுடைய எதிரொலி வருகின்றது.

உன்னுடைய நினைவு அங்கே சென்றது. உன் குழந்தையைக் காக்க வேண்டும் என்றால், இந்த உடல் வேண்டும். இந்த உடல் வேண்டுமென்றால் நான் சொன்னதை நீ நுகர்தல் வேண்டும்.

அந்த உணர்வின் தன்மை உன் உடலில் விளைந்தால் தான், அந்த வலு கொண்டு உன்னைக் காத்துக் கொண்டபின்தான் உன் குடும்பத்தையும், குழந்தைகளையும் காக்க முடியும்.

ஆகவே, நீ உலகைக் காக்க வேண்டுமென்றால் முதலில் உன் உடலைக் காக்க வேண்டும். உன் உடலைக் காக்க நான் சொல்லும் அருள் ஒளியை உனக்குள் கூட்டு. அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் பெருக்கு.

உறைபனியின் குளிரால், உன் உடல் இரையும் அந்த நிலைகளை நீக்கு. இருள் என்ற நிலைகளைக் கரைத்துவிடு.

உனக்குள் பற்றென்ற நிலை வரும் பொழுது, உன் குழந்தையை எண்ணி அவன் என்ன செய்வான்? என்ற வேதனையான விஷம் உனக்குள் புகாது அருள் ஒளி பெற்று, இந்த உணர்வினைக் கலந்துவிடு. அந்தத் தீமைகளைக் கரை.

ஆக, உடலில் இரைச்சலாகி சிறிது நேரத்தில் உயிர் போய்விடும் என்ற நிலையில் நீ எங்கே போகப் போகின்றாய்? என்று கேள்வியைக் கேட்கின்றார் குருநாதர்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போலே மறைவதைப் பாராய்!

இப்பொழுது, சிறிது நேரத்தில் நடுங்கி உன் உயிர் போய்விட்டதென்றால், ஒரு நொடிக்குள் உன் ஆசையெல்லாம் என்ன ஆகப் போகின்றது?

இந்த உயிர் போய்விட்டதென்றால், பொன்னடி பொருளை எல்லாம் நீ என்ன செய்யப் போகின்றாய்?

நேற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லா இவ்வுலகம் சதமாமோ
மனமே இனியாகிலும் மயங்காதே

நான் சொன்ன அருளை உனக்குள் பெருக்கு. அந்த உணர்வின் வலுவை உனக்குள் ஏற்று, அருள் ஒளி என்ற நிலையில் உனக்குள் உருவாக்கு.

அவர்கள் அருள் ஆனந்தம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழவேண்டும் என்ற உணர்வை உனக்குள் கூட்டு. அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும் என்று அதனுடன் உன்னுடன் இணைத்துக் கொள். அவர்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணு. இந்த உடலுக்குள் மகிழ்ச்சியாகும்.

அவர்கள் என்ன செய்வார்கள்? என்று சோர்வடையப்படும் பொழுது, உன்னையே உன்னால் காத்துக் கொள்ள முடியவில்லை. சோர்வடைந்து வேதனையானபின்
உணவு உட்கொள்ள முடியுமா?
உன் செயல்களைச் சீராகச் செயல்படுத்தமுடியுமா?
குழந்தைகளை உன்னால் காக்க முடியுமா?

தொழில் இல்லையென்றால் நீ எதைச் செய்யப் போகின்றாய்?
உடலில் வலு இல்லை என்றால் நீ எதைச் செய்யப் போகின்றாய்?
ஆகவே, நீ அருள் ஒளி பெறும் உணர்வினைப் பெறு.
3. இறந்தவர்கள் பிறவியில்லா நிலை (பேரின்ப நிலை) அடைய வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை
செல்வம் வைத்துள்ளோர் எத்தனையோ பேரை அப்பொழுது காட்டுகின்றார். கோடி கோடி செல்வம் வைத்திருப்போரின் நிலைகளும் இந்த உடலை விட்டுச் சென்றபின்,
அவர்கள் எதை எடுத்துச் செல்கின்றனர்?
எந்த வாழ்க்கை வாழுகின்றனர்?

அவர் உடலை விட்டுப் பிரிந்தபின், அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அழுகின்றனர் இவ்வளவு செல்வத்தைச் சம்பாதித்தீர்கள். எங்களையெல்லாம் காத்தீர்கள். இப்பொழுது போய்விட்டீர்களே என்றுதான் அலறுகின்றனர்.

ஆக, இங்கே துன்பப்பட்டோம், செல்வத்தைத் தேடினோம். பின், இன்பம் வரவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.

இந்த உடலை விட்டுச் சென்றபின், “எனக்குச் சுகத்தைக் கொடுத்தாய், செல்வத்தைத் தேடினாய், என்னை விட்டுச் சென்றுவிட்டாய்என்று எண்ணுகின்றனர்.

எத்தனையோ துன்பத்தைப் பட்டு இந்தச் செல்வத்தைத் தேடினாய். ஆகவே,
இந்த உடலை விட்டுச் சென்றபின்
நீ பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும்,
பேரின்பம் என்ற நிலையை நீ பெறவேண்டும்
என்று தான் எண்ண வேண்டும்.
4. சிவலோகம், இந்திரலோகம், பரலோகம், சொர்க்கலோகம்
இமயத்தைக் காட்டி, அங்கே உயிரான ஈசனிடம் நாம் நுகரும் உணர்வுகள அனைத்தையும் சிவலோகமாக மாற்றுகின்றது. இந்த உடலில் உள்ள உணர்வுகள் அனைத்தும் பரலோகமாக இருக்கின்றது.

அதை நுகரப்படும் பொழுது சிவலோகமாக மாறுகின்றது. உடலை மாற்றும் அந்த உணர்வாகவே மாற்றுகின்றது நமது உயிர்.

ஆக, நுகரும் அனைத்தும் இந்த உடலுக்குள் செல்லப்படும் இந்திரலோகமாக மாறுகின்றது. உணர்வின் கருவாக மாறுகின்றது. சிவலோகத்தில் உடலை உருவாக்கும் உணர்வின் தன்மை இந்திரலோகமாக மாறுகின்றது.

அருள் ஒளி பெற்று, என்றும் சொர்க்கம் என்ற நிலையில் ஏகாந்த நிலை கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை உனக்குள் சேர்த்து, இருளை அகற்றிப் பொருள் காணும் உணர்வினை உன் குழந்தைகளுக்கு ஊட்டு.

அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்று எண்ணு. அந்த ஏகாந்த நிலையை நீ பெறு. உன்னுடைய இந்த நினைவாற்றல் உன் குழந்தையை நலமாக்கச் செய்யும்.

மாறாக, உன் குழந்தையை எண்ணி வேதனை கொண்டால் உன் உடலே அவன், ஆக இந்த வேதனை உணர்வுகள் அவனுக்குள் வரும் பொழுது, அவனும் சிந்தனை அற்ற நிலைகள் அடைகின்றான்.

நண்பன் என்ற நிலையில் ஒருவருக்கொருவர் எண்ணும் பொழுது விக்கல் ஏற்படுகின்றது. நன்மை பயக்கின்றது. குழந்தை என்ற பாசத்தில் வரப்படும் பொழுது, துயரென்ற உணர்வை உன் குழந்தையின் பால் எண்ணும் பொழுது அந்த உணர்வே அவனையும் இயக்கும்.

ஆகவே, அவன் அருள் ஒளி பெறவேண்டும் என்ற உணர்வை நீ ஊட்டு. அந்த அருள் ஒளி உனக்குள் கூடுகின்றது. ஆக, இங்கே சிவலோகத்தில் ஒளி என்ற உணர்வைப் பெறும் இந்த சிவமாக மாற்றுகின்றது. அந்த உணர்வின் தன்மை இங்கே உடலுக்குள் இந்திரலோகமாக மாறுகின்றது.

அருள் ஒளியின் உணர்வின் தன்மையை நீ எடுத்தால் சொர்க்கலோகம் என்ற நிலையை உருவாக்குகின்றாய். ஆக, இந்திரலோகத்துக்குள் சொர்க்கலோகம் என்ற நிலை உருவானால், இந்த உடலில் என்றும் ஏகாந்த நிலையை அடைகின்றாய்.

நேற்றிருந்தார் இன்று இருப்பது நிஜமோ?
நிலையில்லா இவ்வுலகம் உனக்கு சதமாமோ?

இந்த நிலையில்லா உலகத்தில் நீ எதை சதம் என்று எண்ணுகின்றாய்? என்று குருநாதர் எம்மைக் கேட்டு அங்கே துயரப்படும் பொழுதெல்லாம் இத்தகைய உணர்வை எமக்குள் ஊட்டிக் கொண்டே வந்தார்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த வாழ்க்கையில் நாம் தேடும் செல்வம் நிலையானதா? இந்த உடலும் நிலையானதா?

உடல் இருக்கும் பொழுது நாம் எதைப் பற்றுதல் வேண்டும்?

என்றும் ஏகாந்த நிலைகள் பெற்ற அருள் ஒளியை நாங்கள் பெறவேண்டும், என் மனைவி பெறவேண்டும், எங்கள் இரு மனமும் ஒன்ற வேண்டும், இரு உயிரும் ஒன்றிட வேண்டும். எங்கள் பார்வையில் இருளை அகற்றும் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

மனைவி மக்களை நீ எண்ணுகின்றாய். மனைவிக்கு எது வேண்டும்? அருள் ஒளி பெறவேண்டும். மகிழ்ச்சி பெறும் சக்தி பெறவேண்டும். மனைவியின் பார்வை குழந்தைகளைக் காக்கும் நிலை பெறவேண்டும்.

இப்படி, அருள் ஞானம் பெறவேண்டும் என்று அருள் உணர்வைப் பாய்ச்சும் நிலைதான் வரவேண்டும் என்று உணர்த்துகின்றார் குருநாதர்.
5. எமலோகம் எது?
ஆனால், வேதனை என்ற உணர்வை எடுக்கும் பொழுது, நீ எமலோகத்துக்கு அல்லவா போகின்றாய். ஆக அந்த உணர்வின் தன்மை பெற்று உன் குழந்தைகளைப் பற்றி எண்ணுகின்றாய்.

அந்தக் குழந்தையின் உடலுக்குள் சென்று வேதனை என்ற உணர்வைத்தான் அங்கே உருவாக்க முடியுமே தவிர, நீ எமலோகத்துக்குச் செல்கின்றாய்.

ஆகவே, இன்று இந்த உடலிலிருந்து உன் உயிர் சென்று விட்டால் உடல் இல்லை. உடல் இல்லையென்றால் நீ எதை நினைக்கப் போகின்றாய்?

தவிர, வேதனை என்ற உணர்வை நுகர்ந்து அதை நீ நினைத்தால் அங்கே வேதனைப்படும் உணர்வே வருகின்றது. சிந்தனை சிதறும் தன்மை வருகின்றது.

உடலுக்குள் விளைய வைத்த உணர்வு கொண்டு
உன் பையனை நீ எண்ணினால்,
அவன் உடலிலேதான் புக முடியும்.
வேதனை என்ற உணர்வை நீ எடுக்கும் பொழுது
அங்கே நோயைத்தான் உருவாக்க முடியும்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அவனுக்குள் வேதனை உருவாக்கப்படும் பொழுது, இந்த விஷம் என்ற உணர்வுகள் வளரத் தொடங்குகின்றது.

ஆக, உன்னால் அவன் உடல் பெற்றான். உன்னுடைய நினைவுகள் அவனுக்குள் வளரப்படும் பொழுது அவன் நினைவு உனக்குள் வளர்கின்றது. ஆனால், நீ அவனுள் செல்கின்றாய்.

உன் குழந்தைக்குள்ளும் அந்த வேதனை உருவாக்கப்பட்டு,
அவனையும் காக்க முடியாத நிலையில்
நீ எமலோகத்துக்குத்தான் அழைத்துச் செல்ல முடியும்.
இந்த உடலின் தன்மையை (அவனையும்) அழிக்கின்றது.

அவனை விட்டு வந்தபின், நீ எந்த வேதனைப்பட்டாயோ, வேதனைப்படும் உணர்வின் தன்மை கொண்டு உடலை விட்டபின் உன் எண்ணமே எமனாகின்றது. ஆக, எமலோகம் செல்கின்றாய்.

மனிதன் என்ற சிந்தனை இல்லாதபடி,
கொன்று குவிக்கும் அசுர உணர்வு கொண்ட
பாம்பாகவோ, தேளாகவோ, புலியாகவோ
நீ பிறக்கப் போகின்றாயா?

ஆகவே, உனது எண்ணம் எதுவாக இருக்க வேண்டும்? உனக்கு எது தேவை? என்ற நிலையில் அங்கே இமயமலையில் வைத்து எனக்கு உணர்த்துகின்றார் நமது குருநாதர்.
7. துன்பத்திலும் இன்பம் எவ்வாறு காணவேண்டும்? என்று உணர்த்தினார் குருநாதர்
“துன்பத்திலும் இன்பம் எவ்வாறு காண வேண்டும் என்று அருள் ஒளி என்ற உணர்வினை உனக்குள் பெறு,
துன்பம் என்ற நிலைகள் மறைந்து,
பேரின்பம் என்ற நிலை பெற்ற
அருள் மகரிஷியின் உணர்வை உனக்குள் கவர்ந்து கொள்.

நீ எண்ணியது எல்லாம் இந்தப் பரலோகத்தில்தான் உண்டு. அதை நீ சிவலோகமாக மாற்று. ஆக, சிவலோகத்திற்குள் அந்த உணர்வின் தன்மை வரும் பொழுது இந்திரலோகமாக மாறுகின்றது.

எனவே, அந்த உணர்வின் தன்மை ஏகாந்த நிலை என்ற பேரானந்த நிலை பெறும் “பரமபதம், அதாவது அழியா ஒளி சரீரம் நீ பெறுவாய். அருள் ஒளி பெறுவாய். அருள் ஆனந்தம் பெறுவாய். அனவரும் அதைப் பெறவேண்டும் என்று நீ ஏங்கு.

அந்த உணர்வுகள் உனக்குள் கலந்திருக்கும் மற்றவர்களின் உணர்வுகளுடன் இணைகின்றது. ஒளியின் தன்மையாக மாறுகின்றது. பகைமையற்ற உணர்வுகளாக மாற்றுகின்றது. அருள் ஒளி என்ற உணர்வைக் கூட்டுகின்றது.

ஆகவே, பரலோகத்திலிருந்து
இந்த உடலின் சிவலோகத்திற்கு மாற்றி,
இந்திரலோகமாக இருந்து
சொர்க்கலோகமாக மாற்ற வேண்டும்.

வேதனை, வெறுப்பு என்ற நிலைகள் வரப்படும் பொழுது நரகலோகத்தைத்தான் உருவாக்குகின்றாய். மீண்டும் வேதனைப்படும் உடலை உருவாக்குகின்றாயா? அல்லது அருள் ஒளி என்ற உணர்வை உனக்குள் உருவாக்குகின்றாயா?

பேரொளி பெற்று பேரானந்தம் பெற்று, ஏகாந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, கணவனும் மனைவியும் இரு மனமும் ஒன்றென இணைந்து, அருள் ஒளி பெற்று, இரு உயிரும் ஒன்றெனெ இணைந்து ஒளியின் சரீரமாக நிலை கொண்டு வாழ்ந்து வருகின்றானே அந்த ஏகாந்த நிலை பெறுகிறாயா? என்று வினாக்களை எழுப்புகின்றார் குருநாதர்.

உனது வாழ்க்கையில், நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். ஆகவே, நீ அந்த துருவ மகரிஷியின் அருள் பெறவேண்டும், உன் குடும்பம் நலம் பெறவேண்டும், உலகம் நலம் பெறவேண்டும் என்ற அந்த உணர்வை நீ எடுத்தால், நீ நுகர்ந்த உணர்வு உனக்குள் நலம் பெறும் சக்தியாக மாறுகின்றது.

அந்த அருள் ஒளி பெறுவாய்,
பேரின்பம் பெறுவாய், பெருவாழ்வு வாழ்வாய்.
பார்ப்போர் அனைவரும் பேரின்பம் பெறவும்
பெருவாழ்வு வாழச் செய்யும் “அந்த அருளை நீ பெறுவாய் என்று, நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு ஆசி கொடுத்தார்.

ஆகவே, குரு அருள் நீங்கள் அனைவரும் பெற்று, உங்கள் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றும் அருள் சக்தி நீங்கள் பெற்று, பேரின்ப வாழ்வென்ற நிலைகள் நுகர்ந்து, இந்த சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக மாற்ற வேண்டும்.

பேரின்பம் என்ற அழியா ஒளி சரீரம் நீங்கள் பெற்று, பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

January 29, 2014

உயர்ந்த சக்திகளை எளிதில் பெறச் செய்கிறோம் - பதிவு செய்து கொள்ளுங்கள்

1. மகரிஷிகளினுடைய நிலை என்ன?
விண் வெளியின் ஆற்றலைத் தனக்குள் சேர்த்து,
ஆற்றல்மிக்க சக்தியாக தன் உடலில் சேர்த்து, உயிரின் தன்மையில்
உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றார்கள்.

அவர்கள் எதை எண்ணினாலும், அந்த உணர்வின் சக்தியைக் கவர்ந்து, திடீரென்று மழையை வரவழைக்க வேண்டுமென்றாலும், மழை வர வைப்பார்கள்.

எந்த எண்ணங்கள் கொண்டு, அந்த உணர்வின் தன்மையைக் கண் ஒளியாலே பாய்ச்சி, இந்த உணர்வின் அலைகளைப் பாய்ச்சினாலும், ஒன்றை உருமாற்றக் கூடிய சக்தியும் அவர்களுக்கு உண்டு.

அவர்கள் எந்த எணணத்தைக் குவித்தாலும், மகரிஷிகள் எதையுமே சிருஷ்டிக்க வல்ல சக்தி பெற்றவர்கள். அவர்கள் இந்தப் புவியின் ஈர்ப்பில் இல்லாதபடி, அதனின் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி, விண்ணிலே வரும் பேராற்றல் மிக்க விஷத்தின் தன்மையையும் ஒளியாக மாற்றி, ஒளிச் சரீரமாக இருக்கின்றார்கள்.

ஆக, அந்த ஒளி சரீரத்திற்குள் நின்று இன்றும் ஜீவித்துக் கொண்டு, விண்ணிலே தோன்றக் கூடிய, உணர்வின் சத்துக்களை இன்றைக்கும், நம் குருநாதர் முதற்கொண்டு பெற்று, வளர்த்து வருகிறார்கள். 

நமது குருநாதர், இன்று இந்தச் சரீரத்தில் கொடுத்தது வேறு, ஆனால், அதற்கு முன், அந்த ஒளியின் சக்திதான் அந்தக் குருநாதர் உடலிலிருந்து இயக்கியதே தவிர அவர் அதற்கும் முன் சென்று, சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்தவர்.

அங்கிருந்து இயங்கி, அந்த ஒளியின் ஆற்றல்தான்
இன்று நாம் ஈஸ்வரபட்டர் என்ற நமது குருநாதர்
உடலுக்குள், உணர்வுக்குள் அது சென்று,
அதன் தொடர் கொண்ட நிலைகளில்,
அந்த உணர்வின் ஆற்றல்களேதான் இயங்கியது.

அதன் வழியில் பல உண்மையினுடைய நிலைகளை அறிந்துணர்ந்து, அந்த உடலில் நின்று வெளிப்பட்ட நிலைகள்தான் குருநாதர், இன்று இந்த உடலில் நின்று நமக்கு வெளிப்படுத்தினார்.
2. உங்களுக்குள் பதிவுகள் ஏற்படுத்தத்தான் உபதேசிக்கின்றோம்
அவர் வெளிப்படுத்திய அந்த உணர்வின் ஆற்றல் கொண்டுதான் யாம் மெய்யை எடுத்து, உங்களுக்குள்ளும் இந்த நிலைகளை பரவச் செய்கின்றோம்.

விஞ்ஞான உலகத்திலே இன்று விஷத்தின் நிலைகள் பரவிக் கொண்டிருக்கக் கூடிய நிலைகளை முறியடிக்கக்கூடிய சக்தியாக, உங்கள் உணர்வின் தன்மையைக் கூட்டச் செய்வதற்குத்தான் இதைப் பதிவு செய்கின்றோம்.

ஏனென்றால், இதிலே தொட்டு, அதிலே தொட்டு, யாம் பேசுவது அர்த்தம் புரியவில்லை என்று எண்ண வேண்டாம்.

அர்த்தம் புரிவதற்காக வேண்டி, இதைச் செய்யவில்லை உங்களுக்குள் பதிவுகள் ஏற்படுத்த வேண்டும் என்பதற்குத்தான், இதைச் செயல்படுத்துகின்றோம்.
நீங்கள் தெரிந்து,
திரும்பி எதையுமே எடுக்க முடியாது.

ஆகவே, யாம் கொடுக்கும் உபதேசங்களைக் கூர்மையாக உற்று நோக்கி பதிவாக்கிக் கொண்டால், 
நீங்கள் அதை நினைவுபடுத்தும் பொழுதெல்லாம்,
காற்றிலிருந்து அந்த மகரிஷிகளின் 
ஆற்றல் மிக்க சக்திகளை எளிதில் பெறமுடியும்.

அதைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். எமது அருளாசிகள்.

January 28, 2014

துன்பத்தை விட்டுவிடுங்கள் - அது “ஓடிப் போகட்டும்...!”

1. கவலை, சஞ்சலம் போன்ற உணர்வுகள் கெடுதலை எப்படி ஏற்படுத்துகின்றது?
நீங்கள் மோசமான ஒரு துணியைக் கட்டி, சந்தோசமாக இருந்தால், அது பந்தோபஸ்தான நிலையில் இருக்கும். நீங்கள் எந்தப் பொருளை எடுத்தாலும், மனதிற்குத் தக்கவாறு உணர்வுகள் வேலை செய்யும்.

சஞ்சலம் சலிப்புடன் இருக்கும் பொழுது, ஒரு புதுத் துணியைக் கட்டிப் பாருங்கள். எப்படியும் அது கிழிந்தே தீரும்.

ஒரு பெரிய இரும்புக் கம்பியினுடைய தன்மைகள் இருந்தாலும், மனிதன் கவலையும், சோர்வும் அதிகமாக எடுத்து, அந்த நட்டை (NUT) முறுக்கினால், “டக்என்று தெறித்துப் போகும்.

ஏனென்றால், அந்த உணர்வின் அலைகளின் நிலைகள். வேறொன்றும் வேண்டியதில்லை. ஒரு இயந்திரம் ஓடிக் கொண்டிருக்கும் பொழுது சந்தேகப்பட்டு, அடுத்து கவலை அதிகமானால், ரிப்பேர் அதிகமாகிவிட்டால். அதைச் சரியாகக் கவனிக்கவில்லையென்றால், “SHAFT” தெறித்துப் போகும்.

அவ்வளவு பெரிய இரும்பு, இந்த மனிதனுடைய உணர்வுகள் பட்டவுடன், அந்த எண்ண அலைகள், “கண் பார்வைஎன்று சொல்கின்றோமே, அது தெறித்துவிடுகின்றது. அந்தப் பொருள் உடைந்து விடுகின்றது. இதைப் போன்ற நிலைகளை எப்படி தடுப்பது?
2. துன்பத்தை நினைக்கவே வேண்டாம், அது “ஓடிப் போகட்டும்”
இன்று விஞ்ஞான காலம். காலமே இல்லை. நாம் உண்மையைத் தெரிந்து கொண்டோம். நாம் எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. ஆகவே, இந்த நிலைகளைத் தெரிந்து கொண்டு, நாம் ஒவ்வொரு நிமிடமும் விழித்திருக்க வேண்டும்.

இப்பொழுதாவது உட்கார்ந்து கேட்கிறோம். வரும் காலங்களில் உட்கார்ந்து கேட்க முடியாது. அந்த மாதிரி நிலை வரும். நாளைக்கு உட்கார்ந்தும் பார்க்கலாம், சிருஷ்டிக்கவும் செய்யலாம்.
அந்த மன உறுதியின் தன்மையும் பெறலாம்.
எந்த உணர்வு தாக்கினாலும்,
இந்த உடலை விட்டு நாம் விண் செல்லலாம்.

ஆகையினாலே, சாமி என்னமோ சொல்கிறார் என்று இல்லாதபடி, இவையெல்லாம் உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். நல்ல விதைகளை விதைக்கின்றோம். இதற்கு நீர் ஊற்ற வேண்டியது தியானம்.

அடுத்து, ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைச் சொல்லியுள்ளோம். ஓம் ஈஸ்வரா என்று, புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ண வேண்டும். அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று. நன்றாக ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

உங்கள் உடலிலே எத்தகையை துன்பங்கள் வந்தாலும் சரி, துன்பத்தை விட்டுவிடுங்கள். நீ ஓடிப்போஎன்று அதை நினைக்கவே வேண்டாம்.

இந்த முறைப்படி ஆத்ம சுத்தி செய்து, தீமைகளை நீக்கினேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது,
பிறர் காது கொடுத்துக் கேட்டவுடன், அவர்கள்,
எங்கள் கஷ்டமெல்லாம் சுலபமாக விலகிவிடும்,
எங்களுக்கு நன்றாக இருக்கும்என்ற எண்ணங்கள் அங்கே தோன்ற வேண்டும்அதற்குத்தான் யாம் இதைச் சொல்வது.