ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2023

இன்றைய உலகில் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதை “நாம் தெரிந்து நடப்பது தான் நல்லது…!”

விஞ்ஞான உலகில் இன்று வாழுகின்றோம் ஆனால் அஞ்ஞான வாழ்க்கையே வாழுகின்றோம்.

ஆனால்
1.வாழ்க்கையில் வரும் துன்பங்களை எவ்வாறு நீக்குவது…?
2.மனிதன் ஆன பின் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எப்படிப் பெருக்குவது…?
3.தீமை இல்லாத வாழ்க்கையாக எவ்வாறு வாழ்வது…? என்பதனை நமது சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறியுள்ளது.

அவ்வாறு காட்டியிருந்தாலும்… இன்றைய உலகில் அரசர்கள் காட்டிய வழியில் அவர்கள் தத்துப்படித் தான் ஜாதகம் ஜோதிடம் யாகங்கள் வேள்விகள் என்று அனைத்துமே செயல்பட்டு கொண்டுள்ளது.

அரசன் வழியில் எடுத்துக் கொண்டால் “சத்ரிய தர்மம்” என்ற நிலையில் அவன் வாழ்க்கையில் தான் எதை ஆசைப்படுகின்றனோ அந்த ஆசையை நிறைவேற்ற எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று தான் உருவாக்கி வைத்தனர்.

உதாரணமாக ஒரு நாட்டிற்கு சென்று எனக்கு சிறிதளவு இடம் வேண்டும் என்று கேட்பான்.

இல்லை… கொடுக்க முடியாது என்றால் போர் முறை கொண்டு அதை எடுத்துக் கொள்வான். இப்படித்தான் ஆட்சிகள் நடந்து ஓர் அரசன் மற்ற அரசனை அடிமையாக்கி… தன் வாழ்க்கை என்ற நிலை வரும் பொழுது எல்லோரையும் அரசனுக்குக் கீழ் அடிமையாக்கும் நிலைகள் வளர்ந்து வந்தது.

ஆனால் அரசனை மதிக்கவில்லை அரச வழியில் நடக்கவில்லை என்றால் அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதும் பின் குற்றவாளியாக ஆக்கி உதைக்கவும் செய்கின்றார்கள். இதற்குச் சாட்சிகள் யாரும் இல்லை (பழைய சரித்திரத்தைப் படித்தால் தெரியும்).

இப்படித்தான் அந்த அரசர்கள் வெளிப்படுத்தியது மக்கள் மத்தியில் பரவி தர்மம் நியாயம் சத்தியம் என்று பேசுவது அனைத்தும் “வெறும் பேச்சு தான்…”
1.தர்மமும் நியாயமும் எல்லாம் எங்கே இருக்கிறது என்றால் அதர்மவாதி கையில் தான் இருக்கின்றது
2.அதர்மம் எவன் செய்கின்றானோ அவன் கை ஓங்கி வலு இருக்கின்ற நிலையில்
3.தர்ம நியதிப்படி ஒருவன் நடந்தான் என்றால் அவனை அதர்மவாதி என்று இவன் குற்றத்தைச் சுமத்தி அவனை அடக்குகின்றான்…
4.அவன் வழியில் தான் இவன் நடக்க வேண்டும்.

விஞ்ஞான உலகமாக இருந்தாலும் இப்படித்தான் இன்று நாம் வாழுகின்றோம்.

ஆனால் எந்த வழியில் வாழ்ந்தாலும் “செல்வம் இல்லை” என்று ஒருவர் வேதனைப்படுகின்றார்… அது ஒரு புறம். அடுத்து அவருக்குச் செல்வம் வந்து விட்டாலோ தேடிய செல்வத்தைப் பாதுகாப்பதற்கு எத்தனையோ பயப்பட வேண்டியுள்ளது.

செல்வம் இல்லாதவன் திடீரென்று செல்வத்தைச் சேர்த்து விட்டால் “நேற்று வரையிலும் இவன் ஓன்றுமில்லாதவனாக இருந்தான்… இப்போது எங்கிருந்தோ கொள்ளையடித்து வந்து விட்டான்” என்று ஒரு சாரார் சொல்கின்றனர்.

இவன் கடுமையாக உழைத்தான்… நல்ல முறையில் சம்பாதித்தான் பரவாயில்லை…! என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர்.

நேற்று வரையிலும் சாதாரணமாக இருந்தவனுக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்று இன்னொருவர் சொல்கிறார்.
1.செல்வத்தைத் தேட இப்படிப் பல வகைகளிலும்
2.எதிரிகளை உருவாக்கும் நிலை தான் நடந்து கொண்டிருக்கிறது.

இது எல்லாம் அவருடைய செவிகளில் படும்பொழுது நான் நியாயமாகத்தான் சம்பாதித்தேன்… ஆனால் இப்படிப் பேசுகின்றார்களே என்ற வேதனை உணர்வுகளை நுகர்கின்றார்.

அவர்கள் எவ்வளவு பொறாமைப்பட்டனரோ அந்த உணர்வினை நுகரப்படும் பொழுது உடலுக்குள் பொறாமையின் உணர்வின் அணுக்கள் கருவாகி… அணுவாக உருவாகத் தொடங்கி விடுகிறது.

பிறர் பேசும் அத்தகைய நிலையை உற்றுப் பார்த்தால் அதை நகர நேர்ந்தால்
1.உயிர் அந்த உணர்வை இயக்கிக் காட்டுகின்றது…
2.இயக்கினாலும் அந்த உணர்வின் அணுவாக மாற்றி விடுகிறது.

ஆனால் அணுவின் கருவாக அது உருவாக்கி விட்டால் மீண்டும் அவன் எப்படிப் பொறாமைப்பட்டனோ அதன் உணர்வை மீண்டும் எண்ணி “என்னை இப்படிப் பேசுகின்றார்களே… என்னை இப்படிப் பேசுகின்றார்களே…! என்ற அந்த உணர்வை எடுத்து அதனின் அணுக் கருக்களாக உருவாகின்றது. அதன் வழி பேதமடையச் செய்யும் உணர்வுகள் உடலில் வளரத் தொடங்குகிறது.

நல்லதைச் செய்ய வேண்டும் என்றாலும் அடுத்து என்னை இப்படிப் பேசுகின்றான்… அப்படிப் பேசுகின்றான்… என்ற உணர்வுகளைத் தான் தோற்றுவிக்கின்றது. உண்மையின் இயக்கத்தை அறியாத நிலைகள் கொண்டு மாறுபட்டு வந்து விடுகிறது.

இப்படி இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்…? என்பதை “நாம் தெரிந்து நடப்பது தான் நல்லது…!”

காரணம்…
1.பகைமை உணர்வுகள் உலகெங்கிலும் அதிகரித்து விட்டது
2.எல்லோருடைய உடல்களிலும் அது விளைந்து விட்டது
3.பகைமையினால் ஏற்பட்ட அணுக்கள் அந்த உணர்வைத் தான் உணவாக எடுத்து கொள்ள நேர்கின்றது
4.அதை நுகர நேர்ந்தால் பகை உணர்ச்சிகளும் வெறுப்பு உணர்ச்சிகளும் காழ்ப்புணர்வுகளையும் தான் நமக்குள் தோற்றுவிக்கின்றது.

எந்தெந்தக் குணங்களை நுகர்ந்தோமோ அனைத்தும் உடலுக்குள் அந்த அணுவாக மாறிய பின் அதற்கு இரை தேவை… அந்த உணர்ச்சிகளைத் தூண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதன் வழி இந்த உயிர் எடுத்துக் கொடுத்து அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

இதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் காட்டிய அருள் வழியில்… அந்த மெய் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்ட மெய் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

1.அதை நீங்கள் வளர்த்து தீமைகளை அகற்றிடும் சக்தி பெற்று
2.என்றென்றும் அவர்களின் அருள் வட்டத்திலே வாழ்ந்திட வேண்டும்.
3.விஞ்ஞானத்தால் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்.

மெய் உணரும் தியான முறை

பஞ்சு மிட்டாய் செய்யும் பொழுது... வேகக்கூடிய உஷ்ணமும்... அவ் இயந்திரம் ஓடக்கூடிய ஓட்டத்திலும்... “ஒரே பக்குவ நிலையில் ஓடும் பொழுது தான்...” ஒன்று போல அம்மிட்டாய்களைச் செய்ய முடிகின்றது. சிறிது பக்குவம் மாறினாலும் அமைப்பின் தன்மை மாறி விடுகின்றது.

அதைப் போன்றே... இயந்திரங்களில் நூற்பாலைகளில் பஞ்சின் தரத்தில் நூற்கப்படும் நூல்கள் ஓட்டத்தின் சமத்தைக் கொண்டு ஒரே போல் தரமுடன் நூல் நூற்கப்படுகின்றது. இயந்திர விசையின் வேகமோ... செயலாக்கும் திறமையில் மாற்றமோ ஏற்படும் பொழுது... நூலின் தரம் மாறுபடுகிறது இது செயற்கை.

ஓர் மரத்தில் காய்க்கும் காய்கள் அனைத்தும் ஒன்று போல் உருவத்தில் இருப்பதில்லை. பெரிதாகவும் சிறிதாகவும் கரடு தட்டியும் பூச்சி புழுக்கள் அரித்தும்... பூக்களானாலும் சரி... காய் கனிகளானாலும் சரி... ஒரே மரத்தின் கனியிலேயே மாறுபாடுகள் அந்தந்தக் கிளைகளில் எடுக்கப்படும் சத்தின் ஈர்ப்பைக் கொண்டு கனியின் வளர்ச்சி பிரிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

அதைப் போன்று ஒரு தாயின் குழந்தைகள் உணர்வின் தன்மைக்கொப்ப குணங்கள் மாறுபடுகின்றது. ஆனால் ஒரே சூலில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து... தன் எண்ணத்தின் உணர்வு கொண்டு தானாய் வளரும் தருணம் வரை... இரண்டு குழந்தைகளின் உணர்வுகள் ஏறக்குறைய ஒன்று போல் இருக்கின்றன.

சூரியனின் ஒளி ஈர்ப்பில் பூமியின் எந்த நட்சத்திர ஒளிகளின் அலைத் தன்மை அதிகப்படுகின்றதோ அத்தருணத்தில் உருவாகக்கூடிய குணத்திற்கொப்ப... பிறப்பின் நிலை... ஜீவ அணுக்களின் வளர்ச்சி வலுக் கொள்கின்றது.

அந்தந்தத் தருணத்திற்கொப்ப நொடிக்கு நொடி மாறிக் கொண்டுள்ள சுழற்சி ஓட்டத்தில்... உணர்வின் எண்ணத்தில் மெய் அறியக்கூடிய பக்குவத்தை வளர்க்கும் மெய் ஞானியின் தன்மையும்... ஒன்றை ஒத்து ஒன்று இருக்காமல்.. மாறு கொண்ட நிலை இயற்கையின் உணர்வில் வளர்கின்றது.

செயற்கையின் தன்மையில் இயந்திர விசையின் ஓட்டத்தில் ஒன்றைப் போன்ற செயலைத் தரத்தில் செயலாக்க முடிகின்றது.

எப்படி மனிதனின் எண்ண உணர்வு செயற்கையின் விஞ்ஞானத்தில் பல செயல் திறமைகளை வளர்க்க முடிகின்றதோ... அதைப் போன்று இயற்கையில் மெய் உணரும் பக்குவ வழிமுறையை...
1.உணர்வின் எண்ணத்தில் எடுக்கக்கூடிய ஞானத்தை
2.நாம் ஒன்றை எண்ணும் பொழுது... மீண்டும் மீண்டும் அதையே எண்ணிக் கொண்டுள்ள தருணத்தில்
3.அவ் எண்ணத்திற்கு ஜீவித வலுவை ஆத்மாவின் பதிவாகச் செயல்படுத்தி விடுகின்றோம்.

எப்படி தோசையை சுட்டுப் போடும் பொழுது முதலில் சுட்ட தோசைக்கும் மேல் மேலும் அதற்கு மேலேயே சுட்டுப் போடும் பொழுது மேலிருக்கக்கூடிய உஷ்ணத்தை எடுத்து கீழிருக்கக்கூடிய தோசையும் சூடாகவே இருக்கின்றது அல்லவா...!

அதைப் போன்று...
1.நல்ல வழியோ தீயவையோ ஒன்றின் தொடரை எண்ணி எண்ணி
2.அதே தொடரில் எண்ணத்தை ஓட்டும்பொழுது
3.அதன் வலுவின் தன்மைதான் ஆத்மாவின் பதிவு.

ஜீவ ஆத்மாவின் உயிர் காந்தத்திற்கு... உண்மையான நல் உணர்வின் ஒளித் தன்மையை நம்மில் பெறுவதற்கு...
1.உயர் ஞானிகளின் எண்ணத்தை
2.சரீர ஓட்டத்தின் வாழ்க்கைத் தொடர் “கனவில்” அதிகமாக எண்ணத்தைச் செலுத்தாமல்
3.ரிஷிகளின் எண்ணத்தில் நம் எண்ணம் செல்லும் பொழுது
4.அவர்கள் பெற்ற ஒளித் தன்மையின் வலுவின் வட்டத்தில் நம் உயிர் ஜீவ அலைகள் பதிவாகி
5.நம் ஒளி வட்டமே உண்மைத் தன்மையை அறியக்கூடிய மெய் ஞானத் தன்மை பெற்று விடுகின்றது.

உணர்வில் மோதப்படும் வாழ்க்கையின் விருப்பு வெறுப்பற்ற வழித் தொடர் அடைய... நம் ஒளியின் தன்மை வளர்ச்சியின் வலுவினால்...
1.சலிப்பு சோர்வு என்ற வேண்டாத நிலைகள்... தீயவை எதுவாகிலும்...
2.அதை எல்லாம் சுட்டுப் பொசுக்கக்கூடிய ஒளித் தன்மையாக
3.ஆத்மாவில் மோதப்படும் எதுவாகிலும் அதை நம் இச்சைக்குக் கட்டுப்படக் கூடிய செயலுக்கு
4.உணர்வின் எண்ணத்தை நாம் செலுத்தி எடுக்கக்கூடிய ஞானத்தின் தன்மை தான் “மெய் உணரும் தியான முறை...!”

July 30, 2023

வேண்டியதைப் பற்றிக் கொள்ள வேண்டும்… வேண்டாததைப் பிடுங்கி ஏறிய வேண்டும்

காட்சி:
பெரிய குரங்கு ஒன்று மரத்தில் அமர்ந்து எதையோ ஒரு பொருளை விடாப்பிடியாகப் பிடித்து ஆட்டுவது தெரிகின்றது.

மற்றொரு காட்சியில் ஒருவருக்குக் காலில் முள் குத்துவதைப் போன்றும்... முள்ளைக் காலிலிருந்து எடுத்துத் தூர எறிவதைப் போன்றும் தெரிகின்றது.

விளக்கம்:
குரங்கு ஒன்றைப் பிடித்ததென்றால் ”குரங்குப்பிடி…” என்பதைப் போன்று
1.மதியைக் கொண்டு மெய்யுணரும் பக்குவமற்ற ஜீவனால்
2.எத்தொடரில் எதைப் பிடித்ததோ… அதன் தொடரில் தான் அதனுடைய எண்ணமிருக்கும்.

ஆனால் மெய் என்ற மதியைக் கொண்டு பகுத்தறியக் கூடிய மனிதன் “தான்...” என்ற அகந்தையின் பிடியில் வலுப்படுத்தினால் தன் வளர்ச்சியின் வலுவை இழக்கும் நிலைதான் மனித உணர்வின் ஒளிக்குச் செயல்படும்.

இச்சரீரத்தில் உணர்வுகளினால் வளரும் உயிரணுக்கள் யாவையுமே ஜீவகாந்த மின் அலைச் சக்தியை வளர்க்கவல்லவை.

அவ்வளர்ப்பின் தொடருக்குத் தன்னில் உயர்ந்த ஒளி சக்தி பெற்றிருந்தாலும்...
1.மனித உணர்வின் தொடர்பில் பாசப் பிணைப்புடன்
2.அன்பு பரிவு என்ற அறுகுணத்தின் நற்குணத்தைச் செலுத்தி மெய் உணர்வின் அறத்தை
3.இச்சரீரத்தையே மெய்யுணர்வின் தொடர்பில் செலுத்தும் பொழுது
4.இச்சரீரம் ஆண் பெண் என்ற நிலை மாறி… தாயான ஜீவ சரீரமாக
5.பலவற்றையும் வளர்க்கும் ஆதிசக்தியின் ஜீவ சக்தியின் வித்துக்களாய்
6.ஒவ்வொரு ஒளித் தன்மை கொண்ட ஜீவாத்ம உயிரும் வளர்ச்சி பெறும்.

இன்றெப்படி சூரியன் பல கோள்களின் ஜீவனை வளர்க்கின்றது...? பூமி எப்படி பல ஜீவன்களை வளர்க்கின்றது...?

அதைப் போன்று ஒளி சக்தி பெற்ற ஒவ்வொன்றும் ஒளியின் உருவப் படைப்பாய்… உருவில் பலவற்றையும் படைத்துப் படைக்கவல்ல தன்மைக்கு… இச்சரீர உணர்வில் எடுக்கும் மெய் உணர்வின் ஒளித் தன்மையைக் கொண்டுதான் அந்த “ஆதிசக்தியின் சூட்சுமமே அடங்கி உள்ளது…”

மனித உணர்வில் வேண்டாத எண்ணங்கள் நம்மைத் தாக்குபவையாக சந்தர்ப்பத்தில் வந்து மோதினாலும்
1.காலிலே முள் ஏறியவுடன் அதைப் பிடுங்கி எறிவதைப் போன்று
2.எண்ணத்திலிருந்து அதை எல்லாம் அப்புறப்படுத்திடும் செயலுக்கு வரவேண்டும்.

முள்ளின் வேதனையை… எடுக்க முடியாமல் காலில் தைத்து விட்டால் அந்த முள் புரையேறி... காலையே எடுக்கவும் ஏன்… சரீர ஜீவனுக்கே கூட ஆபத்து ஏற்பட்டு விடுகிறது...!

அதைப் போன்று... நம் உணர்வில் மோதும் எதிர் நிலை எண்ணத்தை ஒளி கொண்ட தெய்வ குணங்களில் எண்ணத்தைச் செலுத்தி... வேண்டாத எண்ணங்களை வளர்க்காமல்..
1.மெய் உணர்வின் மெய் ஞானியாகக் கூடிய வழியறியும் பக்குவத்தால்
2.வான மண்டலத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் கோள்கள் வளர்ந்து ஓடுவது போன்று
3.மனித உணர்வின் எண்ணம் கொண்ட ஒவ்வொருவருமே
4.ஒளி சக்தி கொண்ட உயர் தன்மை பெற முடியும்.

குருநாதர் என்னை உதைத்தார்… உங்களை நான் அடித்தால் என்ன செய்வீர்கள்…!

என் குருநாதர் சொன்னதை நான் (ஞானகுரு) செய்யவில்லை என்றால் உதை கொடுத்தார். உங்களை நான் அடித்தால் என்ன செய்வீர்கள்…! வாங்கிக் கொள்வீர்களா…?

எனக்குத் திருப்பிக் கொடுப்பீர்கள்…!

என்னடா… சாமி என்னென்னமோ சொல்ல்லிவிட்டுக் கடைசியில் உதைக்கின்றார் என்பீர்கள்…! உங்களை நான் உதைக்க முடியுமா…?

ஒருவர் என்ன செய்தார்…? ஐயோ… என் கஷ்டம் என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று அலறுகின்றார். நான் என்ன சொன்னாலும் அவர் கேட்க மாட்டேன் என்கிறார்.

போய்யா…… உனக்குக் கஷ்டமும் இல்லை ஒன்றுமில்லை போ…! என்று சொன்னேன்.

என்ன… சாமி இப்படிக் கோபிக்கின்றார்…? என்கிறார். உங்களிடம் நான் இப்படிச் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்…?

1.இந்த அழுத்தத்தைக் கொடுத்த பின் என்ன செய்யும்…?
2.சரி.. இதனுடன் அந்தத் துன்பம் போனது என்று நீங்கள் நினைத்தால் பரவாயில்லை. துன்பம் போய்விடும்.

இது நடந்த நிகழ்ச்சி.. ஒரு அம்மாவிற்கு ரொம்பக் கஷ்டம்… சொத்துக்களை இழந்துவிட்டது. வீட்டையும் கூட எடுத்துக் கொண்டு தொல்லை கொடுக்கின்றார்கள்.

எப்படியாவது இந்தச் சொத்துகள் கிடைத்து விட்டால் நான் பிழைத்துக் கொள்வேன் என்று என்னிடம் கேட்டது.

சரி.. நீ நான் சொல்வது போன்று செய் என்றேன். அவருடைய கஷ்டத்தையும் மற்ற நிலைகளையும் பார்த்துவிட்டு இது போன்ற நிலைகளைச் செய்து வந்தால் உங்களுக்கு அது கிடைக்கும் என்று தெளிவுபடுத்தினேன்.

ஆனால் சொத்தை வைத்துக் கொண்டு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
1.கொடுக்கவே மாட்டேன் என்கிறார்கள் என்று நீ சொல்லாதே… அதை விட்டுவிடு…
2.”கிடைக்க வேண்டும்…” என்று சொல்லித் திருப்பி எண்ணிப் பாருங்கள்… உங்களுக்குக் கிடைக்கும்…! என்று நான் சொன்னேன்.

எங்கெங்கே… எங்கெங்கே…! என்று அப்படியே கேட்கின்றது.

பின் நான் கோபமாகச் சொல்லி “உங்களுக்குக் கிடைக்கும்மா…” இந்த மாதிரிச் செய்யுங்கள் என்று அழுத்தமாகச் சொல்லி அடுத்து நீங்கள் அடுத்து நல்ல செய்தி கொண்டு வருவீர்கள்…! என்று சொன்னேன்.

அப்படிங்களா… சரி…! என்று அதன்படி செய்தது. முதலில் கேஸ் நடத்துவதற்கே பணம் இல்லை என்று சொல்லி இருந்தார்கள். எப்படியோ எல்லாம் கிடைத்து… கேசும் ஜெயித்து விட்டது… வீடும் கிடைத்தது அந்த அம்மாவிற்குச் சந்தோஷமானது.

அதோடு விட்டார்களா என்றால் இல்லை… “விடவில்லை...!” அன்றாடப் பிழைப்புக்குத் தொழில் செய்யலாம் என்றால் அதற்குப் பணம் இல்லையே என்று அடுத்து இதைச் சொல்கின்றது.

அதற்கு நான் என்ன செய்வது…?

திரும்பத் திரும்ப… திரும்ப திரும்ப… பணம் இல்லை… பணம் இல்லை என்று கஷ்டத்தைச் சொல்லி அழுகின்றது. எல்லாம் வந்ததுங்க… இருந்தாலும் இப்பொழுது தொழில் செய்யாமல் எப்படி வாழ்வது…? என்று தெரியவில்லை. வீட்டை வைத்துத் தான் ஏதாவது வாங்க வேண்டும் என்று சொல்கிறது.

முதலிலே கடன் வாங்கி எல்லாம் போனது அல்லவா..! ஆனால் அதிலிருந்து மீண்டு வந்தது அல்லவா…! அதே போன்று
1.இப்போது ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என்று விரும்பி அதைச் செயல்படுத்துங்கள்
2.“அதற்குண்டான வாய்ப்புகள் வரும்…” என்று சொன்னேன்.

எங்கெங்கே நடக்கப் போகின்றது…? என்று இப்படியே என்னிடம் பேசுகின்றது. இதற்கு நான் என்ன சொல்வது…!

சொத்து இல்லை என்று முதலில் வந்தாய்… அது எப்படி அம்மா உனக்குக் கிடைத்தது…? அதன் வழியில் இதுவும் வரும் அல்லவா…! என்று சொன்னேன்

வரும்…! ஆனால் இன்றைக்குப் பிழைப்புக்குச் சொல்லுங்கள்… நான் என்ன பண்ண வேண்டும்.

ஏனென்றால்
1.நான் சொன்னதை விடுத்து விட்டு
2.அந்தக் கஷ்டத்தை எடுத்துக் கொள்கின்றது அதையே பேசிக் கொண்டிருக்கின்றது.

நடந்த நிகழ்ச்சி.

எனக்குக் கோபம் வந்துவிட்டது ஏனம்மா…! நான் சொன்னபடி செய்யாதபடி மீண்டும் மீண்டும் இந்தத் தரித்திரத்தையே எண்ணிக் கொண்டிருக்கின்றாய்… “இந்தத் தரித்திரத்தை விட்டு விடம்மா… நன்றாக இருப்பாய்…!” என்று சொன்னேன்.

எங்கெங்கே என் தரித்திரம் என்ன விட்டுப் போகின்றது…? என்று மீண்டும் அழுகின்றது.

சீ… போ…! என்று அந்தத் தரித்திரத்தைச் சீ… போ…! என்று நான் சொன்னேன்.

அந்த அம்மா உடனே என்ன சொல்கிறது…!

சாமி என்னைப் போகச் சொல்லிவிட்டார். சாமியைத் தேடி நான் வந்தாலும் கூட அவர் என்னிடம் கோபித்துப் பேசுகின்றார் பாருங்கள்… என்று அதனுடைய உணர்வையே பேசுகிறது.

1.தரித்திரமே - சீ… போ…! நல்ல காலம் வரட்டும்… என்று யாம் கொடுக்கக்கூடிய வாக்கு
2.தீமை என்ற உணர்வை மாற்றுவதற்கு இப்படிச் சொன்னாலும் கூட ஏற்றுக்கொள்ள மனமில்லை.

கோ… என்று அழுக ஆரம்பித்து விட்டது. என் கஷ்ட காலம் பாருங்கள் சாமி கூட என்னைக் கோபமாகப் பேசுகின்றார்கள்.

ஏனென்றால் நான் எதைச் சொல்கின்றேன் என்ற அர்த்தம் கூடப் புரியாதபடி அதனுடைய உணர்வுகளிலேயே தான் நிற்கின்றது.

சாமி போகச் சொல்லிவிட்டார் என்று அழுது கொண்டே செல்கின்றது. அதனுடைய அழுத்தங்கள் அப்படி இருந்தாலும் நான் கொடுத்த வாக்கு எப்படியோ அங்கே நிறைவேறுகின்றது.

வட்டி இல்லாமல் ஒருவர் பணம் கொடுக்கின்றார் கடை வைத்து வியாபாரம் நடந்தது பணம் வந்தது. எல்லாம் நடந்த பின் இரண்டாவது தடவை என்னிடம் வந்து “என்னை நீங்கள் காப்பாற்றுங்கள்…” என்று சொல்கிறது.

அன்று தான் நான் விளக்கத்தைச் சொல்கின்றேன்.
1.உன்னுடைய தரித்திரத்தைத் தான் நான் போகச் சொன்னேன்
2.நீ கோபித்துக் கொண்டு சென்று விட்டாய் அம்மா…! என்று சொல்கின்றேன்.

என்ன பண்ணுவது…! அந்தத் தரித்திர நேரத்தில் என்னால் நல்லதைக் கேட்க முடியவில்லை. ஆனால் இப்பொழுது தரித்திரம் போய்விட்டது கடையில் வியாபாரம் நன்றாக நடக்கின்றது. கஷ்டமெல்லாம் நிவர்த்தியாகி விட்டது என்று சொல்கிறது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.சந்தர்ப்பத்தில் வரும் அந்த தரித்திரத்தைத் தான் உங்களுக்குள் இழுத்துக் கொள்கின்றீர்களே தவிர
2.அதை நான் “போ…!” என்று சொன்னவுடன் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது…?

ஏனென்றால் முதலில் அந்த அம்மாவிடம் நான் இதைச் சொன்ன பின் கோபித்து என்னிடம் ஒன்றும் சொல்லாமலே சென்று விட்டது. போய்… எல்லாம் நன்றாக ஆன பின்பு தான் இங்கு வருகின்றது.

ஆக “நான் மறைமுகமாகச் சொன்னாலும் கூட” ஏற்றுக் கொள்ளும் பண்புகள் இல்லை. சொல்வது அர்த்தமாகின்றது அல்லவா…!

July 29, 2023

உயிரான்மா ஒளியாக மாறினால் “அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும்”

இன்று மனிதனாக இருக்கின்றோம்… இந்தச் சூரியக் குடும்பம் அழிந்துவிட்டால் அணுக்களாகத் தான் செல்வோம்… பிரபஞ்சத்தில் மிதப்போம். பின்
1.ஏதாவது ஒரு கோளுக்குள் இழுத்துக் கொண்டு போகும்
2.அங்கே அதற்குண்டான உணவு (சத்து) இருந்தால் புழுவாக பூச்சியாக அல்லது கிருமியாக வளர வேண்டி இருக்கும்
3.விஷத்தன்மையாகத்தான் மாற்றிக் கொண்டிருக்கும்.

தாவர இனங்கள் அழிந்து விட்டால் அதை விட்டு வெளியே சென்று விடும். மற்ற கோளுக்குள் செல்கின்றது. ஆனால் எந்த பிரபஞ்சத்திற்குள் செல்லும்…? என்று சொல்ல முடியாது.

எல்லாமே அகண்ட நிலையிலிருந்து வளர்ந்தது தான். ஆனால் சூரியன் செயலிழந்தால் பூமி நகர்ந்து ஓடிப் போய்விடும். இதிலிருந்து தப்புவதற்குத் தான் நம் குருநாதர் காட்டிய வழியில் இத்தனை வேலையும் செய்கின்றோம்.

காரணம் இன்று நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த நட்சத்திரங்கள் தனக்கென்று தனித்துத் தனித்துச் சூரிய குடும்பங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றது.

ஒரு குடும்பத்தில் பிள்ளைகள் வளர்ச்சி அடைந்தால் அவர்களுக்குத் திருமணம் ஆகி தனக்கென்று ஒரு குடும்பம் உருவாவது போல்
1.நட்சத்திரங்கள் தன் வளர்ச்சியில் சூரியனாகும் போது பிரிந்து சென்று விடும்.
2.பிரிந்து செல்லச் செல்ல நாளுக்கு நாள் நம் சூரியனும் செயல் இழக்கும்
3.சூரியனின் ஈர்ப்பில் உள்ள பூமி கரைந்து ஓடும்
4.இதில் உள்ள உயிரணுக்கள் மற்ற உயிரணுக்களுக்குக் குருவாக அமையும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் இது போன்றுதான் பிரிக்கப்பட்டு நம் பிரபஞ்சத்திற்கு அது குருவாக வந்தது. அதிலே இன்னும் உயிரணுக்களின் தன்மைகள் நிறைய மாற்றங்கள் உண்டு. ஆனால் இப்போது உயிரினங்கள் அங்கே இல்லை.

அதிலிருந்து வரக்கூடிய உயிரணுக்கள் தான் சிறுகச் சிறுக பிரபஞ்சத்திற்குள் வந்து உயிரணுவாக மாறும் தகுதி கிடைக்கின்றது.
1.வியாழனில் கதிரியக்கப் பொறிகள் ஏற்படுவதால் தான் உயிரணுக்களே உண்டாகிறது.
2.அந்தக் கரு சேர்ந்த பிற்பாடு தான் உயிரணுக்களுக்கு மூலமாகிறது
3.இல்லை என்றால் உயிரணுக்கள் தோற்றமே இல்லை
(சில இதுகள் அதில் இருக்கின்றது… சுருக்கமாக உங்களுக்குச் சொல்லிப் பதிவு செய்கிறேன்).

ஆகவே… அண்டத்தில் இருக்கும் உணர்வுகள் அனைத்தும் நம் உடலான இந்தப் பிண்டத்திற்குள் இருக்கின்றது. மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றி… நுகரும் உணர்வுகளை எல்லாம் ஒளியின் சுடராக நாம் மாற்றி விட்டால்
1.அகண்ட அண்டத்தில் எங்கு வேண்டுமென்றாலும் நாம் செல்ல முடியும்
2.”என்றும் பதினாறு” என்று இந்த வளர்ச்சி… வேகா நிலை அடைகின்றது... எதிலுமே நம் உயிரான்மா வேகாது.

நம் 2000 சூரியக் குடும்பத்தையும் முதலிலே வட்டமிடும். பின் இதைக் கடந்து மற்ற 1000, 2000, 3000 என்ற சூரியக் குடும்பங்களின் கூட்டமைப்பிற்குள் செல்லும்.

ஆரம்பத்தில் இருண்ட உலகமாக இருந்து அதிலிருந்து வளர்ச்சி பெற்று ஒளியின் சிகரமாக அண்டம் வளர்ந்தது,,, எத்தனையோ கோடி வருஷங்களாக வளர்ந்தது.

எல்லாமே ஒளியாக மாறி விட்டால் அதற்கப்புறம் “மனித இனங்களை ஒவ்வொன்றாகச் சீக்கிரமாக ஒளியாக மாற்றும் நிலை வரும்…” ஒளியின் சுடராக ஒளிக்குள் எல்லாமே இது மாறும். எப்படி எத்தனையோ ஆண்டுகள் வளர்ச்சியின் பாதையிலே வந்து கொண்டிருக்கிறது.

ஆதிமூலம் என்ற உயிர் “மனிதரான பின் முழு முதல் கடவுள்…!” இதை ஞானிகள் நமக்கு தெளிவாக்கி உள்ளனர். உலகில் உள்ள அனைத்துமே அடக்கி ஆளும் சக்தி பெற்றது
1.பிரபஞ்சத்தில் இருப்பதை அடக்கி ஆளும் தன்மையைப் பெற்று ஒளியின் சரீரமாக ஆகிவிட்டால் முழுமை பெறுகின்றது
2.மற்ற அகண்ட அண்டத்திலிருந்து வரும் எதையுமே தனக்குக் கீழ் கொண்டு வர முடியும்

அப்படி ஆனது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும்.

எல்லாமே வினைப் பயன்தான் - விதி…! என்ற முத்திரையை... “தானே குத்திக் கொள்ளக் கூடாது”

பருத்தி என்றால் அதிலிருந்து பஞ்சை எடுத்து ஆடைகளை நெய்வதும் பருப்பைப் பதப்படுத்தி உண்ணவும் அதனதன் வளர்ச்சிக்கொப்ப... “இன்னதை இன்னதிற்குப் பயன்படுத்தலாம்...” என்பது மனித ஞானம் அறிந்த உண்மை.

மேலும்... இன்று மனிதன் இயற்கையில் வளரும் தாவரங்களுக்குச் செயற்கையில் உரமிட்டு இயற்கைத் தன்மையின் வளர்ச்சியை மாறுபடச் செய்து அதை வளரச் செய்யக்கூடிய பக்குவத்தை வளர்ப்பவனும் இதே மனிதன் தான்.

ஆனால் அதே மனிதன் தான்...
1.தன் உயிராத்மாவின் ஜீவித வாழ்க்கையை
2.தன் உணர்வின் எண்ணத்தைக் கொண்டு
3.தன்னைத் தானே தான் உணர்ந்து உயர் நிலை பெறுவோம் என்ற வழியறியாது
4.தன் வாழ்க்கையில் நடப்பவை யாவும் ஊழ்வினை - “விதி” என்ற
5.வினைப் பயனை விதைத்துக் கொள்கின்றான் தன் எண்ணத்தில்.

இயற்கையையும் செயற்கையாக்கி விஞ்ஞானத்தில் பல உண்மைகளை மனிதச் செயல்தான் வளர்த்தது. அதே மனிதன் ஜீவாத்மாவின் உண்மையின் உண்மையை உணர்ந்து தன்னைத்தான் ஆள வேண்டும்.

அறம்... பொருள்... இன்பம்...
1.அறம் - நல்லொழுக்கத்தைச் சத்தியம் என்ற நேர் கோட்டில் உணரவும்
2.பொருள் - அறத்தைச் செயலாக்கி சத்தியத்தை வளர்த்து
3.இன்பம் - என்ற பிறவா ஒளி நிலை ஆனந்த உணர்வை இவ்வாத்மா அடைவதற்காக
4.முந்தைய பல ஆண்டுகளாக ஞானிகள் மகரிஷிகள் உயர் தத்துவத்தை உணர்த்தியுள்ளனர்.

இக்கலியிலும் புறநானூறு அகநானூறு திருக்குறள் நல்லொழுக்கம் ஆத்திச்சூடி போன்ற பல நூல்களில் வந்துள்ள தத்துவங்கள் யாவும்... மனித உணர்வின் எண்ணம் நல்லொழுக்கம் பெற்று... அகத்தின் பொருளறிந்து... “அகிலத்தின் பொருளாகும் உண்மையைத் தான் வழிகாட்டின...”

ஆகவே நம் உயிராத்மாவின் உயர் நிலை பெற ஊழ் வினை என்ற வினைப்பயனை எண்ணத்தில் எண்ணாமல்... எண்ணத்தில் நற்குணத்தை ஒவ்வொருவரும் பெற்று... விதியை மதி கொண்டு... ஞானம் கொண்டு செயல்பட வேண்டும்.

1.முதலில்... தன் சரீர உணர்வில் வெளிப்படக்கூடிய இச்சைகளை
2.தன் எண்ணத்தின் சிந்தனை கொண்டு
3.இச்சரீர ஏக்கத்தின் இச்சைகளை அடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

சரீர ஏக்கத்தின் இச்சை என்பது விருப்பு வெறுப்பு பசி தூக்கம் கோபம் ஆசை இன்பம் துன்பம் காமம் இவை யாவையுமே தன்னில்தான் தன் உணர்வில் தோன்றக்கூடிய உந்தல்கள் தான்.

அதன் இச்சையின் செயலுக்கு நம் உணர்வின் எண்ணம் செல்லும் பொழுது உ
1.உடல் உபாதையினால் உணர்வின் எண்ணம் பாதிக்கப்பட்டுத் தன்னைத் தானே வலுவிழக்கச் செய்து
2.வினைப் பயன் என்ற முத்திரையை... “தானே குத்திக் கொள்ளும் நிலைதான்...”

உடல் உபாதையையும்... உடல் உணர்வுகளினால் எண்ணத்தின் வலுவைக் கொண்டு... இச்சரீரத்தின் எச்செயலையும் தன்னுள் உள்ள “இறை உயிரைக் கொண்டு” நல்லதாக மாற்றிட முடியும்.

இச்சரீரம் எத்தனை கோடி ஆண்டுத் தொடரில் புழுவாய் பூச்சியாய் மனிதனாய் பல உணர்வுகளில் பல உருவில் உருப்பெற்று உயிர் ஜீவனில் இன்றுள்ள நிலைக்கு வினைப்பயனின் வித்தாய் வளர்ந்து வந்துள்ளது.

எவ்விதை ஊன்றப் பெற்றதோ... அச்செடியாக அது வளர்ந்தாலும்...
1.அதை மாற்றி அமைக்கக்கூடிய மெய் ஞானம் என்ற மதி கொண்டு
2.மனித எண்ணத்தின் உயர் ஞானத்தால்
3.அறம் பொருள் இன்பம் என்ற இனிய நிலையை ஒவ்வொருவரும் பெற முடியும்.

அதைப் பெறக்கூடிய பக்குவத்தைத்தான் இங்கே தொடர்ந்து போதனையாக வழங்குகின்றோம்.

இச்சரீரம் உறங்கும் பொழுது “உறக்கம்” என்றும்... செயல்படும் பொழுது “விழிப்பு” என்றும் சொல்கின்றோம். ஆனால்..
1.ஆத்மாவின் செயலில் இச்சரீரத்தை இயக்கக்கூடிய தன்மை பெற்றல்
2.உண்மைத் தன்மை விழிப்பு நிலை பெறுகின்றது.

வாழ்க்கை நடைமுறையில் இச்சரீர உணர்வுக்கொப்ப எண்ணுபவை யாவும் ஆத்மாவில் பதிவு பெறுகின்றது. அதே தொடரின் வாசனைதான் உணர்வு பெற்று இஜ்ஜீவித இயக்கத்தில் காந்த மின் அலையான இச்சரீர இயக்க ஓட்ட ஆத்மாவில் பதிவாகி விடுகின்றது.

எப்பதிவை எண்ணத்தின் உணர்வு கொண்டு நாம் பேசி மகிழ்ந்து வாழ்கின்றோமோ அவ்வலையைத்தான் ஆத்மா பெறுகின்றது.

அவ்வலையைத்தான் நம் உணர்வின் எண்ணமும் பெற்று நம்மையறியாமல் பேசவும் செயல்படுத்தவும் செய்கின்றது. நம்மைச் செயலாக்கும் நிலையும் அதுவேதான். ஆக.. அந்நிலை இச்சரீர ஆத்மாவை இப்பூமியின் பிடிப்பில் உறங்க வைத்த நிலை.

இப்பூமியின் பிடிப்பிலிருந்து விழிக்கும் நிலை என்பது...
1.தன்னைத்தானே தான் உணர்ந்து...
2.இச்சரீர உணர்வின் வாசனையை... இவ்வாத்மாவில் பதிய வைத்து வளர்த்துக் கொண்ட நிலையை...
3.உயர் ஞானத்தைக் கொண்டு தன்னை இயக்கும் ஆத்மாவின் உண்மையை உணர்ந்து
4.ஆத்மாவிற்கு நல் ஒலிகளை... நற்குணமுடன் கொண்ட உயர் தன்மையை...
5.அறம் பொருள் இன்பம் என்று பெரியவர்கள் நமக்குக் காட்டிய உயர் குணத்தின் சத்தியத்தை வளர்க்க
6.மாறிப் போகக் கூடிய இச்சரீரத்தில் உயர் குண சத்தியத்தைக் கொண்டு
7.இஜ்ஜீவ உயிராத்மா - உயர் காந்த மின் சக்தியினால்
8.இச்சரீரத்தில் வாழக்கூடிய வாழ்நாளில் – விழிப்பு நிலை நாம் முதலில் பெற வேண்டும்.

July 28, 2023

போற்றலுக்காக ஏங்கினால் ஆற்றலை இழந்து விடுவோம்

விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளில் ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்தால் எந்த நிலை ஆகிறது...? என்று பார்ப்பார்கள். அதைச் செய்து முடித்து ஓட்டும் போது செயலிழந்து விட்டால் அது எப்படி... ஏன் தவறாக ஆனது...? என்று உடனே கண்டுபிடிப்பார்கள்..

உதாரணமாக ஒரு இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றார்கள் என்றால் கால சூழ்நிலை எல்லாம் பார்த்துத் தான் அனுப்புகின்றார்கள்.
1.போகும் பாதையில் 27 நட்சத்திரங்களுடைய அதிர்வுகள் வரும்.
2.இராக்கெட் செல்லும் பாதையில் இந்த அதிர்வுகள் அதிகமானால் இயந்திரத்தைத் தாக்கும் தன்மை வரும்.
3.அதிர்வுகளிலிருந்து மீட்பதற்காக மேக்னட்டை (காந்தத்தை – SENSOR) வைத்திருப்பார்கள்.

அதிர்வினால் தாக்கப்பட்டு கீழே விழுந்தாலும் அந்த உணர்வின் தன்மையை பூமியில் (தரையில்) தொடர்பு வைத்திருப்பார்கள்.

இராக்கெட்டில் சென்றவன் இறந்தாலும் இது எந்த அதிர்வினால் தாக்கப்பட்டது...? என்று கண்டறிந்து... இதற்கடுத்து பாதுகாப்பான நிலைகள் கொண்டு இராக்கெட்டை அனுப்ப முற்படுகின்றார்கள்.

ஏற்கனவே அனுப்பியது எரிந்து கடலிலே விழுந்து விடுகின்றது. ஆனாலும் அதிலே எதிர்மறையான உணர்வின் எக்கோ (ECHO) அதிலே பதிய வைத்திருப்பான்.

பதிவானதை எடுத்துப் பரிசீலித்து
1.இராக்கெட் எதனால் செயல் இழந்தது...?
2.எதனுடன் எது மோதியது...? ஏன் இவ்வாறு பாழடைந்தது...?
3.எதனால் கீழே விழுந்தது...? என்று கண்டுபிடித்து அதைச் சரி செய்து மீண்டும் இராக்கெட்டை விண்ணுக்கு அனுப்புகின்றனர்.

அது ஏற்கனவே நடந்த நிகழ்ச்சி. ஆரம்பத்தில் அமெரிக்கா... இராக்கெட்டை விண்ணிலே செலுத்தி அதை மீண்டும் திரும்பத் தரையில் இறக்கலாம் என்று விரும்பினார்கள்.

ஆனால் ரஷ்யா அதை என்ன செய்தது...?

விஞ்ஞானத் தத்துவப் பிரகாரம்
1.மனிதனின் உணர்வுகளை அந்த இயந்திரத்தில் (அமெரிக்க செலுத்திய இராக்கெட்டில்) பின்னாடி அது இணைக்கப்பட்டு
2.எக்கோ (ECHO)... கண்களைக் கொண்டு உடலில் பதிவு செய்து “எர்த்” ஆக்கி
3.இராக்கெட் விண்ணிலே சென்ற பின் உணர்வைப் பாய்ச்சி எரியும்படி செய்தான்.

இரண்டு மூன்று தடவை இவ்வாறு செயல்படுத்தினார்கள். அமெரிக்கா இராக்கெட்டுகள் இப்படி வீழ்ச்சி அடைந்தது.

பின்பு இது எதனால் வந்தது...? அந்த எக்கோ எதிலிருந்து பாய்ச்சப்படுகிறது...? என்று அவன் அறிகின்றான். ரஷ்யாவில் இருந்து தான் இது பாய்ச்சப்பட்டது என்று அறிந்து கொள்கிறார்கள்.

அறிந்த பின் அமெரிக்கா என்ன செய்கின்றது...?

ரஷ்யா தான் தன் இராக்கெட்டுகளை வீழ்த்தியது என்று கண்ட பின் ரஷ்ய அணு மின் நிலையத்தைக் கதிரியக்கங்களைப் பாய்ச்சி அதைச் செயலிழக்கும்படி செய்தான் அமெரிக்கா.

விஞ்ஞானத்தின் இவன் உணர்வுகள் எப்படி வளர்ந்தாலும் இதை எல்லாம் குருநாதர் காட்டிய வழியில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம்.

ரஷ்ய அணு மின் நிலையம் வெடித்த பின் விவசாயம் மற்றது எல்லாம் அங்கே பாழ்பட்டது. விஷத்தின் தன்மை அதிகமான பின் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்டது.

அந்த நாட்டிற்குள் கடவுளின் தன்மையைப் புகுத்தி மதப் போர்கள் இனப் போர்கள் அதிகமாகி... மக்களை அதை வைத்துப் பிரிக்கும் தந்திரத்தைக் கையாண்டது அமெரிக்கா.

அதனால் ரஷ்யா வல்லரசாக இருந்தாலும் பிரிந்து... வீழ்ச்சி அடைந்து விட்டது. இருந்தாலும் எல்லாப் பக்கமும் சேர்ந்து நெருக்கடி ஆகும் பொழுது அமெரிக்காவும் இன்று செயலிழக்கும் தன்மை வந்து கொண்டிருக்கின்றது.

உலகம் சுருங்கிக் கொண்டிருக்கும் இத்தகைய வேளையில் உலகைக் காக்கும் ஞானிகள் நம் நாட்டில் இருந்து வருவார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எந்தத் தாய் தந்தையர் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டார்களோ அவர்கள் கருவிலே ஞானக் குழந்தைகள் உருவாகி அவர்கள் தான் அதைச் செயல்படுத்துவார்கள்.

மெய் ஞானிகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பின் அந்த உயர்ந்த சக்திகளை நீங்கள் எடுக்கப் பழக வேண்டும் ஒவ்வொரு நிமிடத்திலும் அதை சேர்த்துப் பாருங்கள்.
1.உடலில் அந்த அணுக்கள் விளைந்து கொண்டே வரும்
2.நீங்கள் எண்ணக்கூடிய காரியங்கள் ஜெயமாகிக் கொண்டே வரும்
3.நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை செல்வம்.. தன்னாலே தேடி வரும்
4.உங்கள் சொல் பேச்சு இவைகளுக்கு மரியாதை கிடைக்கும்
5.பிறருடைய கஷ்டங்களும் நீங்கும்... உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணங்களும் வரும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் விளைய வைத்து அதை நீங்கள் வெளிப்படுத்தும் போது நண்பர்களுக்குச் சொன்னால் அவர்களுக்கும் நல்லதாகும்.

உங்களிடம் பேசி விட்டுச் சென்ற பின் என் தொழிலில் நன்றாக நடந்தது குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைத்தது என்று சொல்வதை நீங்கள் கேட்க முடியும். இதை எல்லாம் உங்கள் அனுபவத்தில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

அருளைப் பெற வேண்டும் என்று சென்றால் நல்ல சிந்தனை வரும் எல்லாமே நம்மைத் தேடி வரும். உங்கள் எல்லோரையும் உயர்த்தும்.

அதைக் கண்டு மற்றவர்கள் போற்றலாம்
1.போற்றலுக்கு ஆசைப்பட்டு அதன் வழி சென்று விட்டால் நம்முடைய ஆற்றல் போய்விடும்
2.நாம் போற்றலுக்காக ஏங்கக் கூடாது.

எல்லோரும் உயர வேண்டும் என்ற அந்த உணர்வைத் தான் நாம் போற்ற வேண்டும். இல்லை என்றால் ஆற்றலை இழந்து விடுவோம்... நல்லதைச் செய்தும் பலன் இல்லாது போகும்.

எதுவாக இருந்தாலும் போற்றலுக்காக வேண்டி அதைச் செய்தால் பின்னாடி வெறுப்பின் தன்மையைத் தான் ஊட்டும். வெறுப்பான பின் நாம் செய்தும் பலன் இருக்காது. வெறுப்பு வளர வளர எல்லார் மேலும் அதிகமாகி கார உணர்ச்சிகள் தான் அதிகமாகும்.

ஆகவே... உடலுக்குப் பின் நாம் எங்கே செல்ல வேண்டும்...? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் கார்த்திகேயா என்ற நிலையில் ஞானிகள் உணர்வைச் சேர்த்துச் சேர்த்து ஒளியின் சரீரமாக நாம் உருவாக்குதல் வேண்டும்.
1.மீண்டும் இன்னொரு உடல் பெறக் கூடாது
2.இந்தச் சரீரத்திலிருந்தே ஒளிச் சரீரம் பெறுதல் வேண்டும்
3.உயிருடன் ஒன்றும் உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்

விஞ்ஞானத்தால் இன்றைய மனிதன் தன் ஞானத்தால் வெகு வேகமாகச் செயல்படுத்தும் இத்தருணத்தில்…
1.மந்திர ஒலியின் யாகத்தால் தன் ஆத்மாவை
2.இப்பூமியின் பிடிப்பலையிலுள்ள ஆவி ஆத்மாக்களின் ஈர்ப்பு சுழற்சியில் சிக்க விட்டுவிடக் கூடாது.
3.ஆலயத்தில் ஆண்டவனை வணங்கும் வழிமுறையறிந்து வணங்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வமுண்டு...!

யாகத்தின் தொடர்பில் மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆலய வழிபாட்டின் உண்மை நிலை என்ன…? தெய்வத்திற்கு ஓதப்படும் மந்திர ஒலியினால் மனிதன் வணங்கும் தெய்வத்திற்கு என்ன பலன்…? மந்திர ஒலியை ஒலிக்கக் கூடிய ஆத்மாக்கள் அதனுடைய உண்மைத் தொடர்பை அறிந்து ஒலிக்கின்றார்களா…?

ஒலியின் நாதம் கொண்டு தான் தன்னுடைய இயக்கத்தின் தொடர்புக்கு ஜீவன் பெற வருகின்றது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முதலில்..
1.மனிதன் தான் வணங்கும் தெய்வ நிலைக்கு ஜீவன் ஏற்படுத்தக்கூடிய தருணத்தில்
2.மனிதனின் முதல் நிலையான “புகழ்…” என்ற
3.பேராசைக் குணம் ஏற்பட்ட காலத்தில் வளர்ந்ததுதான் மந்திரமும் யாசமும்.

இயற்கையின் தொடர்பில் ஜீவ சரீரத்திற்கு வலு ஏற்படுத்திக் கொள்ள இம்மனிதனின் உடலிலுள்ள மின் காந்த ஒலி அலைக்கு மீண்டும் வலுத் தன்மை கூட்டிக் கொள்ளக் கூடிய வளர்ச்சிக்காக மந்திர தந்திரங்களை வடித்துக் கொண்டார்கள் அரசர்கள்.

மாய உருக்களைக் கொண்டு… தன் ஈர்ப்பு வட்டத்திற்கு இவ் ஒலியையும் ஒளியையும்… ஜீவனற்ற ஆத்ம உயிர் அலைகளைத் தன் சரீர ஆத்ம அலையுடன் ஈர்ப்புப்படுத்தி… மந்திரத்தால் அரசர்கள் மாய வித்தைகள் நடத்தினர்.

அத்தகைய சூட்சுமத்தின் முதல் வித்து தான்… யாகங்களை நடத்தி யாகங்களில் பலியிடும் நிலைகள்…!

யாகத் தீயிலே பலியிடக் கூடிய உயிர் ஜீவனின் ஆத்ம ஒலியைத் தன் சரீரத்தின் ஈர்ப்பு வட்டத்துடன் வளர்த்துக் கொண்ட வழித் தொடரில்தான் யாகங்களும் மந்திர ஜெபங்களும் அரசர்கள் ஆண்ட காலம் தொட்டு வளர்ந்து வந்தது.

அரசன் அதற்கென்று குருமார்களை நியமித்த பின்…
1.குருவிற்கு அரசன் அடிமையா…?
2.அரசனுக்குக் குரு அடிமையா..! என்ற தொடரில்
3.இயற்கையின் உண்மைத் தத்துவத்தை ஆரம்பத்தில் சித்தர்கள் காட்டிய இயற்கைத் தொடரில் வளர்க்காமல்
4.இறைவன் என்ற உருவத்தைக் காட்டி…!
5.மனிதன் தன்னைத் தானே அடகு வைத்திடும் நிலைதான்
6.மந்திரமும் தந்திரமும் யாகங்களும் வேள்விகளும் ஆசார அனுஷ்டானங்களும்.

எவ்வொலியின் ஈர்ப்பில் உணர்வின் எண்ணம் செல்கின்றதோ அதற்கொத்துத் தான் ஆத்ம உயிர் ஜீவன் பெறுகின்றது. அவ்வொலியின் தொடர்பு கொண்டுதான் ஈர்ப்பின் தொடர் வலுக் கொள்கின்றது.

இறைத் தன்மை என்பது எங்குள்ளது.. இறைவன் யார்…? மனிதன் யார்…?

மனிதனின் அறியக் கூடிய உயர் ஞானத்தை மனிதனுக்குள் உள்ள உயிர்த் தெய்வம் பிரிந்ததென்றால் இவ்வுடல் அழியக் கூடியதுதான்…!

இந்தத் தத்துவத்தை தன்னுள் அறிந்த மனிதன் “தான் யார்…?” என்பதை உணராமல்… கலியின் செயலில் தெய்வமென்ற உணர்வில் ஆத்மாவை அடகு வைக்கும் வழித்தொடரிலேயே இன்று உலகம் செல்கின்றதப்பா…!

ஆனால்…
1.மெய் ஞானத்தின் உண்மையின் தத்துவத்தை உணரக்கூடிய பக்குவம்
2.இஜ்ஜீவ சரீரத்தில் இவ் உயிராத்மா இயங்கக்கூடிய காலம்தான் என்பதை உணர்ந்து
3.ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே உணர்ந்திடல் வேண்டும்.

July 27, 2023

சுவாசித்த உணர்வுகள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

காட்டிற்குள் குருநாதர் அழைத்துச் சென்றார் பல அனுபவங்களைக் கொடுத்தார்... நான் பெற்றேன். அது எப்படி...? என்ன...? என்று அறிந்து கொள்ளும்படி செய்தார்.

ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனையோ வேதனைகளை நான் அனுபவிக்க நேர்ந்தது. வேதனையை நுகர்ந்த பின்
1.என் உடலுக்குள் எப்படி எல்லாம் மாற்றங்கள் ஏற்படுகிறது...?
2.உடலுக்குள் எப்படி எல்லாம் மாறுபடுகின்றது...? என்று அதையெல்லாம் காண்பிப்பார்.

அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்தாலும் திடீரென்று சில நேரங்களில் வயிற்றால் போய்விடும்... ஒன்றுமே செய்ய முடியாது.

சாமி எனக்குக் கிரக்கமாக வருகின்றது என்பேன்.

1.நீ இதையெல்லாம் பார்த்தாய் அல்லவா... நுகர்ந்தாய் அல்லவா
2.அது உன் உடலுக்குள் சென்ற பின் மற்ற அணுக்களை எல்லாம் அடக்கி
3.உன் உறுப்புகளைச் சீராக இயக்க விடாதபடி எப்படி இயக்குகிறது...? பார்...!

ஆனால் நீ தவறு செய்யவில்லை.

1.நீ நன்றாகத்தானே சுவாசித்துக் கொண்டிருந்தாய்
2.நீ ஆகாரம் ஒன்றும் சாப்பிடவில்லை.
3.சாப்பிடவில்லை என்றாலும் இது எப்படி வயிற்றால் போகின்றது...?

இப்படித்தான் பல வகைகளிலும் என்னைச் சிரமப்படுத்தி அதை அறிந்து கொள்வதற்குச் சூழ்நிலைகளை உருவாக்கினார்.

அதே போன்று உங்களுக்கும் இத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கலாமா...? சொல்லுங்கள் பார்க்கலாம்...!

சாதாரணமான நிலைகள் நீங்கள் நுகர்ந்த உணர்வு உங்களுக்குள் சென்ற பின் “சாமி எங்களை ரொம்பச் சோதிக்கின்றார்...!” என்று எண்ணுவீர்கள்.

ஏனென்றால் சாமி சொன்னதைக் கேட்டு அதன் வழி நடந்து வரும் பொழுது சாமியை நினைப்பார்கள்.
1.சாமி சொன்னார் என்று நான் பொறுமையாக இருந்து கொண்டிருக்கின்றேன்
2.ஆனால் என்னை எப்படி எல்லாம் பேசுகின்றார்கள்...?
3.என்னால் பொறுக்க முடியவில்லை... என்னால் தாங்க முடியவில்லை நான் எப்படி இப்படியே பொறுமையாக இருப்பது..? என்று
3.நான் சொன்ன உயர்ந்த கருத்துக்களை விட்டு விடுகின்றார்கள்... பிறர் உணர்வை எடுத்துக் கொள்கின்றார்கள்.
4.நான் சொன்னதை நிறுத்திவிட்டு அதைத் தான் வளர்க்க முடிகிறது.

சந்தர்ப்பங்கள் இப்படி எல்லாம் இயக்குகின்றது. இதை எல்லாம் மாற்றிப் பழக வேண்டும்.

சில குடும்பங்களில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடும் பொழுது ஒருவருக்கொருவர் கவலையாக... சங்கடமாக... பேசிக்கொள்வார்கள்... சஞ்சலமாகப் பேசுவார்கள்.

சாப்பிடும் போது இப்படிக் கவலையாகப் பேசுவது எல்லாம் என்ன ஆகும் என்றால் அவர்கள் பட்ட வேதனை எல்லாம் அந்த உணவோடு சேர்த்து உடலில் அணுக்களாக உருவாகும்.

1.ஒருவர் சொல்வதை எல்லோரும் உ..ம் கொடுத்துக் கேட்பார்கள்.
2.இது வளர்ந்த பின் சாப்பிடும் பொழுதெல்லாம் அந்த எண்ணங்கள் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்
3.அந்த அணுக்கள் வளர்ச்சி அடைவதற்கு இதுவே ஏதுவாக மாறிவிடுகின்றது.

ஆனால் சந்தோஷமாகச் செய்து அந்த மகிழ்ச்சியான உணர்வு கொண்டு சாப்பிட்டுப் பாருங்கள். எல்லாமே சந்தோஷமாக இருக்கும்.

ஆனால் சாப்பிடும் போது வேதனையாகச் சொல்லிப் பாருங்கள். அது எத்தகைய வேதனைகளை உருவாக்குகிறது...? என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதனால் பல நோய்கள் வரக் காரணமாகின்றது.

தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் என்ற உயர்ந்த வித்திலிருந்து… எடுக்க வேண்டிய பலன் எது…?

இயற்கையில் அமிலத்தின் ஒளி பெற்று மண்டலக் கோள்களின் ஈர்ப்பு வட்டத்தில் பூமியின் நட்சத்திரக் கோள்களின் அமில வளர்ச்சியால் உருவானது தான் இவ்வுயிர் ஆத்மாக்கள்.

அவை வளர்க்கக் கூடிய வளர்ச்சியும்… உருவான அந்தத் தொடர் நிலையின் வழித் தொடரில்தான் வளர்த்துக் கொள்ள முடியுமேயன்றி
1.வளர்ச்சித் தொடருக்கு எதிர்ப்பு நிலை ஏற்படும் பொழுது
2.வளர்ச்சியின் உருமாறக்கூடிய தன்மை தான் வளர்ப்பில் காண முடியும்.

நம் பூமியின் இயற்கைத் தன்மையின் ஜீவ வித்தின் பலன் நிலையே… மனிதனின் உயர் ஞான ஒளி சக்தி பெறக்கூடிய… “தெய்வ நிலை தான்…”

எந்த வித்தின் தொடரிலும்…
1.ஒரு பயிர் வளர்ந்து அதனின் பலன் தந்தாலும்…
2.அந்தத் தொடரின் மகசூல் பலவாகப் பெருகும் பக்குவத்தில்தான் பலவும் நடைபெறுகின்றன.

அத்தொடரின் தொடரில் தான்… ஆதி மனிதனின் உணர்வில் மனித உரு எண்ண வளர்ச்சி ஞானம் கொள்ளும் உயர்வு நிலை…. மனித வித்தின் உணர்வின் உயர் மண்டலமாம் பூமி மண்டலத்தில் உருவான மனிதச் செயல்.

இருந்தாலும் இதிலே மனிதன் வளர்ச்சி கொண்டு வாழும் காலம் மிகக் குறுகியதுதான்.

ஓர் விதையை நாம் விதைத்து… அந்த விதை வளர்ந்து செடியாகி.. மரமாகி… பக்குவம் பெற்றுப் பலனாய் அதனுடைய மகசூல் திரும்பிப் பெறக்கூடிய காலம் நீண்ட நாட்களாகி விடுகின்றது.

அதைப் போன்று தான் இப்பூமியும் வளர்ந்து வந்தது.

அதனுடைய வளர்ச்சியின் பக்குவ முதிர்வு நிலைக்குப் பிறகு… வளர்ச்சியின் பயனாய் மனித உணர்வின் உயர் ஞானம் கொண்டு செயல்பட்ட காலம்தான்… பூமி வித்தின் பலன் கண்ட காலம்…!

கண்ட பலனை… மீண்டும் பயிராக்கினால்தான் பலனின் தொடர் வளர்ந்து கொண்டே இருக்கும்.

ஓர் மரம் பலன் தரும் காலங்கள் முடிந்து… அம்மரத்தின் வளர்ச்சியை ஒத்து… மரத்தின் முதிர்வைக் கொண்டு பட்டுப் போன பிறகு… அம்மரத்தின் விதைகள் பல கோடியாய் வளர வைக்கக் கூடிய பயனை அம்மரம் தருகின்றது.

அப்படித் தந்ததை விரையமாக்காமல் வளர்க்கும் வளர் தொடர்ச்சியைப் போன்று தான்
1.இப்பூமியின் வித்தின் தொடரில் விதையான நம் ஆத்மாவும்
2.மீண்டும் பல வித்துக்களை வளர்க்கக்கூடிய விதையாகும் பக்குவத் தொடரில் வளர வேண்டும்.

மனிதனுடைய எண்ணத் தொடர் தன்னைத் தானே தான் உணர்ந்து… இயற்கையின் ஒலி ஒளித் தொடர் கொண்டு உயர் ஞானத்தை அறியும் உண்மைத் தத்துவ ஞானியாய் உயர்ந்திட வேண்டும்.

தன் ஆத்ம உயிரின் ஜீவ காந்த மின் தொடருக்கு…
1.இக்காற்றலையில் கலந்துள்ள மகரிஷிகளின் ஒளி அலைகளை
2.தன் உயர்வின் எண்ணத்தால் நுகர்ந்தெடுக்கும் தியான வழி கொண்டு
3.இஜ்ஜீவ ஒளியின் ஒளி நாதத்தால் மனிதன் தெய்வ நிலை பெற வேண்டும்.

July 26, 2023

ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறையைத் தான் இங்கே உணர்த்துகின்றோம்

மனித உணர்வின் சூட்சுமத்தை... “மனிதனே அறியக்கூடிய ஒளி சக்தி வளரும் சுயநலச் செயலினால்தான்...” பொதுநலனின் பரிமாணத்தை விரிவுபடுத்த முடியும்.

மனிதனுக்குகந்த வீரிய மின் காந்த ஒளி சக்தி மிருகத் தன்மையின் சரீர இயக்கத்தில் அதிகப்பட்டிருந்தாலும் உணர்வின் செயலைப் பக்குவப்படுத்தக்கூடிய தன்மை அவைகளுக்குக் குறைவு.

ஆகவே “மனித எண்ணத்திற்குத்தான்” பகுத்தறிவின் சூட்சும ஒளியை வளர்க்கும் தன்மை... இப்பூமியின் சூட்சுமமுடன் வளர்ந்த “ரிஷிகளின் செயலினால் செயல்படுகின்றது...!” ஒன்றின் வளர்ச்சியில் ஒன்றின் பக்குவத்தால்.

மிருகங்களுக்குப் பிரித்துப் பார்க்கும் தன்மை மனிதனை ஒத்து இருப்பதில்லை. ஆனால் மிருகங்களும் இப்பூமியின் ரிஷிகளின் சூட்சுமத்தில் வளர்க்கப்பட்ட இறை சக்தி தான்.

அவைகளுக்குக் கழிவும் உணவும்... ஒரே இடத்தில் ஒன்றாக இருந்தாலும் மனிதனை ஒத்து அருவருப்பு... நாணம்... முதலியன மிருகங்களுக்கு இருப்பதில்லை.

மனிதனின் பகுத்தறிவால் தனக்குகந்ததை உயர்ந்ததாய்ப் பெற்று மகிழக் கூடிய பக்குவம் கொண்ட செயல் வளர்ச்சி வீரியம் பெற்ற ஜீவ இறையருளின் உன்னதத் தன்மை கொண்டவன்.

தாவரங்களும் மிருகங்களும் மனிதனும் இப்பூமியின் இறை சக்திகள் தான்.
1.இறை சக்தியே இறையுணர்வு பெற்று
2.இறைத் தன்மையில் பக்குவப்படுத்தக்கூடிய குணம் தான் தெய்வ குணம்.

இப்பூமியில் ஆரம்ப மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய மனித வாழ்க்கைக்கும் நிறைய மாற்றங்கள் உண்டு. மனிதத் தேவைக்குகந்த உணவு... உடை... இருப்பிடம்... ஒவ்வொன்றிலும் தன் ஞானத்தால் மனித வாழ்க்கையின் வசதிக்குகந்த பக்குவத்தை மனிதன் இன்று பல வகையிலும் வளர்த்துக் கொண்டுள்ளான்.

அதைப் போன்று... இச்சரீர சுகத்தின் தேவையில் வளர்ச்சியுற்ற மனிதன் ஆத்ம தேவையின் பக்குவத்தை... இறை குணத்தின் வளர்ச்சியை வலுக்கூட்டும் தெய்வத் தன்மையால்... இக்கலியின் மாற்றத்தில் கல்கியில்...
1.இன்றைய மனிதனைக் காட்டிலும்
2.மனித எண்ணத்தின் வீரியத்தின் தெய்வத் தன்மையால்
3.மனிதன் “பறக்கும் நிலை” கொண்ட உயர்ந்த செயல் நிலைக்கு வர முடியும்.

ஒன்றைப் பக்குவப்படுத்தி அப்பக்குவத்தின் பொருளை எப்படி நமக்குகந்ததாக ஏற்படுத்தி சரீர வாழ்க்கையில் இன்பத்தைக் காண்கின்றோமோ அதைப் போன்று... ஆத்மாவின் பக்குவத்தில் அகிலத்திலும் கலந்துள்ள ஆதி சக்தியின் செயல் சக்தியில் “உயர்ந்த தன்மையான சூட்சும ஒளியால் ரிஷி சக்தியை மனிதன் பெற முடியும்...”

மனிதனின் ரிஷி சக்தியைக் கொண்டுதான்... மூவுலக சக்தியான “ஆக்கல் காத்தல் மாற்றல்” என்ற வழித் தன்மையில்... வளர்ச்சியில் வளரும் அண்டக் கோள்களில்... பால்வெளி மண்டலத்தில் எண்ணிலடங்கா இறை சக்தியில் இறையுணர்வாகும் தெய்வ சக்தியில்... ஆண்டவன் என்ற படைப்பின் தன்மைக்குச் செயல் கொள்ளும் ரிஷித்தன்மையால்... அந்தந்த அமிலத்தின் உருத்தன்மையில் உருவாகும் உயிர்த் தன்மையில் பக்குவம் கொள்ளும் படைப்பின் ஒளித் தன்மையை... ரிஷித்தன்மையின் ஒளித் தன்மையால் தனக்கொத்த செயலுக்கு மண்டலங்களை உருவாக்கி... உருவின் உருக்களை உணரும் வளர்ச்சியைத் தன் வலுவாக்கி... அண்டக் கோள்களையும் படைக்கும் ரிஷிகளால்... படைப்பின் பலனாய்ப் பக்குவப்படுத்தப்பட்ட உணர்வின் தெய்வ குணத்தின் “ஆண்டவனாக்கும்” வழிச் செயல்தான்... “அண்டத்தின் சூட்சுமத்தில் ஆதி சக்தியின் உண்மைச் சக்தி - உருப்பெறும் நிலை...!”

இச்சரீரத்தின் உணர்வை... “மின் காந்த ஒளி சக்தியை” இப்பூமியின் பிடிப்பில் இச்சரீர வாழ்க்கையில் அடையும் சுகத்தால் உணர்வின் எண்ணம் ஆத்மாவை வளர்க்க உதவாது.

இச்சரீரத்தை இப்பூமியின் பிடிப்பிற்கு அடகு வைக்கும் மனித உணர்வினால் அடையப் போகும் நன்மை எதுவுமில்லை...!

ரிஷிகளின் சக்தியால் பல கோடி ஆண்டுகளாய் பலவற்றில் வளர்ந்து வலுவாகி உள்ள இவ்வுயிராத்மாவை... ஆத்ம உயிரின் வீரியத்தின் உண்மையை உணரும் எண்ணத்தில்.. மனிதன் தன்னைத் தானே உணரும் பக்குவத்தால்... ஆத்ம உயிரின் சுயநலத்தைக் கொண்டு பொது நலத்தை வளர்க்கும் சூட்சுமத்தை உணர முடியும்.

தான் உண்ணும் உணவிற்கு...
1.நெல்லை எடுத்து அதிலுள்ள உமியை ஊதிப் பிரித்து விட்டு
2.மணியை (அரிசி) எடுத்துப் பக்குவப்படுத்தி உண்ணும் மனிதன்
3.தான் எடுக்கும் எண்ணத்தின் உணர்வைப் பக்குவமாக்கி
4.ஆத்மாவின் ஒளியை வளர்க்கும் தன்மை ஏன் பெற முடியாது...?

தன்னில் உள்ள இறைத் தன்மையை... தெய்வமாக்கும் நற்குணம் கொண்ட பக்குவத்தால்
1.ஆத்ம உயிரை ஆண்டவனாக்கும் வழிமுறைதான்
2.இங்கே உணர்த்தப்படுவதன் சக்தி நிலையின் உண்மை நிலை.

July 25, 2023

”என்னுள்ளே நான்...” என்ற இறை தெய்வமான “உயிர் தெய்வத்தை ஒளிர வைக்க வேண்டும்…”

1.என்னுள்ளே நான்... என்ற நிலைக்கொப்ப
2.தன்னுள் உள்ள தன் உயிராத்மாவை
3.தன்னை இயக்கும் எல்லாமில் எல்லாமாய்ப் படர்ந்துள்ள இறை உயிரை
4.தன்னுள் உள்ள உயிர்த் தெய்வத்தைத் தான் வளர்க்க
5.இச்சரீரத்தைப் பதராக்கி உயிரை மணியாக்க
6.ஜீவ வளர்ச்சி ஓட்டத்தில் வளரும் காலத்தில்
7.வளர்ச்சியின் முதிர்வு நிலை முற்றிய பிறகு மணியைப் பிரித்து
8.”என்னுள்ளே நான்...” என்ற இறை தெய்வமான உயிர்த் தெய்வத்தை ஒளிர வைக்க முடியும்.

ஜீவ உணர்வின் எண்ண சரீரம் ஆத்ம உயிருக்கு உயர்வு நிலையின் எல்லாவற்றையும் கடந்து ஒளி சக்தியின் தெய்வநிலை பெறத்தக்க வழிக்கு வளர்க்கும் செயல் சரீர உருநிலை.

நெற் பயிர் வளர்ந்து முதிர்ந்து மணியை வெளிப்படுத்துவதைப் போன்று இவ்வுயிராத்மா உடலில் இயங்கும் பொழுதே.. “இவ்வுடலைச் சக்கையாக்கி உயிரை மணியாக்கி வளரும் பக்குவத்திற்கு” நாம் வருதல் வேண்டும்.

மனிதனுக்குக் கிடைத்துள்ள எண்ணத்தின் ஞானத்தை ஒன்றை அறியக் கூடிய வளர்ச்சியை உயர்ந்த எண்ணத்தில் செயல்படுத்த வேண்டும்.

இப்பூமி பிற கோள்களின் துணை கொண்டு சுழன்று கொண்டே ஓடிக் கொண்டே உள்ள ஓட்டத்தில் பிற கோள்களின் தொடர்பு கொண்டு தான் வளர்ந்து வளரக்கூடிய நிலை பெற்றது.

இந்தப் பூமியின் மண்டல ஓட்டத்திற்கொப்ப…
1.இப்பூமியில் வளரக்கூடிய நம் உயிராத்மாவையும் ஓர் மண்டலமாக உருவாக்கக் கூடிய தன்மைக்கு
2.எதையும் வளர்க்கவல்ல எண்ணத்தின் சைவ சித்தம் மனிதனின் உணர்வில் இருக்க வேண்டும்.

“மனிதனின் எண்ணம்தான்” வீரியம் கொண்டு இப்பூமியின் பிடிப்பு வாழ்க்கையில் ஒன்றை வளர்க்கவும் அழிக்கவும் செயல் கொள்கின்றது. எதையும் சாதிக்கவல்ல சக்தி மனித ஆற்றல் திறமைக்கு உண்டு.

மனிதன் தெய்வமாகக் கூடிய வழி முறைக்கு எண்ணத்தைச் செலுத்தி இப்பூமிப் பிடிப்பின் இறுக்கத்திலிருந்து இப்பூமியின் சுழற்சியிலிருந்து விடுபடலாம்.

விஞ்ஞானிகள் இன்று தன் ஞானத்தால் கண்டுபிடிக்கும் விஞ்ஞானக் கருவிகளினால் வான மண்டலத்தில் உள்ள இரகசியங்களையும் ஒவ்வொரு கோள்களில் உள்ள உண்மைகளையும் அறிந்து பூமியில் மனித ஆத்மாக்களுக்கு வேண்டிய வளர்ச்சிக்கு மனித அறிவின் ஆற்றலை விஞ்ஞானத்தில் பெருக்க முயற்சிக்கின்றார்கள் அல்லவா..!

அந்தத் திறனைப் போன்று மனிதனும் தன் உயிராத்மாவைப் பிற கோள்களில் எண்ணத்தைச் செலுத்தி
1.அவ் எண்ணத்தின் தொடர்பை இச்சரீர உணர்வுடன் எடுக்க எடுக்க
2.இச்சரீரத்திலுள்ள உயிரணுக்கள் யாவையுமே எவ் அமிலத்தை இச்சரீர உணர்வுடன் அதிகமாக எடுக்கப் பழகிக் கொள்கின்றதோ
3.அத்தொடரின் வலுத் தன்மையால் இச்சரீரம் சக்கையாகி
4.ஆத்ம உயிர் தனித்துச் செயல்படக் கூடிய வளர்ச்சியால் இச்சரீரம் ஒளிச் சரீரமாகி
5.மற்ற ஈர்ப்பின் பிடிப்பில் இவ்வுயிராத்மா சிக்காமல் ஒளி நிலை பெறுகின்றது.

எவ்வித்து வளர்ந்தாலும் அவ்வித்தின் தொடர் அதனதன் ஜீவ வளர்ச்சியில் பலவாகப் பலன் தருகின்றது. மனித சரீரத்தின் வித்தின் உண்மைப் பலன் தன் பிறப்பில் பிறக்கக்கூடிய ஜீவ குழந்தைகள் மட்டுமல்ல… மனித சரீரத்தில் இம்மனிதனாய் ஆத்ம உயிர் ஜீவன் கொண்டு வளர... “பல கோடி கோடி ஜீவ அணுக்கள்” இச்சரீரத்தில் வளர்கின்றன.

ஓர் நெல் செடியாகி அதனின் பலனில் பல நெல்களைத் தருகின்றது. அதைப் போன்று
1.இச்சரீரத்தை இயக்கும்… “உயிராத்மாவை வித்தாக்கி”
2.உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வித்தின் பலன்களாக
3.உயிரின் பருமனை ஒளியாக்கக் கூடிய உயிர் காந்த வளர்ச்சிக்குப் பக்குவப்படுத்துவதுதான்
4.தியானத்தின் மூலம் எடுக்கக்கூடிய உயர் ஞானத்தின் மனோ வேகத்தை
5.மகரிஷிகள் காட்டிய சைவத்தின் சித்த குணமான நற்குணத்தைச் சம உணர்வுடன் கூடிய எண்ணத்தில் பக்குவபடுத்தி
6.மின் காந்த சக்தியை இச்சரீரம் எடுக்கும் வழிமுறையில்
7.இவ்வுயிராத்மா இவ்வுடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களையும் பலனாக எடுத்து
8.தன் வளர்ச்சியின் வீரியம் பெற முடியும்.

தனக்குள் உள்ள உணர்வின் எண்ணத்தில் இருந்துதான் மனிதன் சக்தியைக் கூட்டி உயர்வு நிலைக்குச் செல்ல முடியும். இதனை உணர்ந்து பக்குவ முறையில் ஒவ்வொருவரும் பலன் பெறலாம்.

வாழ்க்கையில் வரும் சிக்கல்களுக்குக் காரணம் தாய் கருவிலே உருவானதும்… சந்தர்ப்பத்தில் நுகரும் சாப அலைகளும் தான்

குடும்பத்தில் குறைபாடுகள் வந்தால் அந்தக் குறைகள் வருவதற்கு நாம் காரணம் அல்ல. நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை அது இயக்குவது தான். அதை மாற்றி அமைக்க ஆத்ம சுத்தி செய்து குடும்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.குடும்பத்தில் ஏற்படும் அந்த நிகழ்வுக்குக் காரணம் இன்று மட்டும் அல்ல
2.தாய் கருவிலிருந்தே சில நிலைகள் வந்து கொண்டிருக்கிறது

அது மட்டுமல்ல…! ரோட்டிலே செல்லும் பொழுது நாம் பார்க்கின்றோம்… ஒருவருக்கு ஒருவர் சாபம் விடுகின்றார்கள்… அதை நாம் கேட்டிருப்போம்… நமக்குள் பதிவாகி இருக்கும். அதனாலும் குடும்பத்தில் தீமைகள் வரும். நாம் தவறு செய்து அந்த நிலைகள் வரவில்லை.

1.இந்த மாதிரி சாப அலைகள் எத்தனையோ வகைகளில் எத்தனையோ விதமாக நமக்குள் பதிவாகியுள்ளது
2.அதெல்லாம் மிகவும் சக்தி வாய்ந்தது.

உதாரணமாக ஒரு கேமராவிலே படம் எடுக்கின்றார்கள் என்றால் யாராவது குறுக்கே வந்தால் அந்த0 படம் ஆடும். அதுவும் பதிவாகும் அதே போன்று நாடாவில் ஒலிப்பதிவு செய்கிறார்கள் என்றால் குறுக்கே யாராவது சப்தம் போட்டால் அதுவும் பதிவாகத்தான் செய்யும்.

இது போன்று நமக்குள் ஊழ்வினை என்ற நிலையில் நாம் எண்ணும் அந்த எண்ணங்களுடன் சேர்த்து மற்றதும் (தீமைகளோ குறைகளோ) பதிவாகத் தான் செய்யும்.

அந்த நேரத்தில் நாம் எண்ணும் பொழுது சில உணர்வுகள் ஊடுருவி நமக்குள் வருவதும் தெரியவரும். அதே சமயத்தில் அது நம் போகும் காரியங்களுக்குத் தடைப்படுத்தும் உணர்வாக வந்து விடும்.

1.தடைப்படுத்தும் உணர்வோ சாபமிடும் நிலையோ நாம் நுகர்ந்த பின்
2.அடுத்து நாம் ஒரு நல்ல காரியத்திற்குச் செல்கிறோம் என்றால்
3.அங்கே அவர்கள் பேசுவதைக் கேட்டாலும் இதுவும் சேர்ந்து அதனுடன் ஜாயிண்ட் ஆகும்
4.எப்படியெல்லாம் கெட்டுப் போக வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்களோ இந்த வேலையெல்லாம் நமக்குள் நடக்கும்

இது எல்லாம் உணர்வின் ஒலி அலைகள் நமக்குள் வரும் பொழுது உயிரிலே பட்டு அதற்குத் தக்கவாறு இந்த மன(ண)மாகி நமக்கே மீண்டும் எதிரியாக வரும்.

இதைத் துடைப்பது யார்…?

இயற்கையின் நிலைகளில் பரிணாம வளர்ச்சி அடைந்தவர்கள் நாம். அதுதான் “பலராம்” - பலருடைய எண்ணங்களை அறியும் சக்தி. அந்த எண்ணங்கள் இயக்கவில்லை… நமக்குள் உண்மைகளை உணர்த்துகின்றது.

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்…? நரசிம்மா…!

எப்பொழுது தீமை என்று உணர்கின்றமோ அது நமக்குள் புகாதபடி பிளக்க வேண்டும் தீமைகளைப் பிளக்க வேண்டும் என்றால்
1.இங்கே புருவ மத்தியிலே… உயிர் வழி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்ளுக்குள் அனுப்ப வேண்டும்.
2.தீமை உள்ளே போகாதபடி இது பிளந்து தள்ளிக் கொண்டே இருக்கும்
3.இதுதான் ஆத்ம சக்தி என்பது.

இது எல்லாம் காவியத் தொகுப்புகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழியில் நாம் செய்து பழக வேண்டும். சிறிது நாளைக்குச் செய்து பழகிவிட்டால் தன்னிச்சையாக (AUTOMATIC) வந்துவிடும்.

முந்திய பழக்கத்தில் நாம் இருக்கப்படும் பொழுது… யாராவது ஏதாவது சொல்லிவிட்டால் அந்த எண்ணத்திலேயே தான் இருப்போம் ஆத்ம சுத்தி செய்ய முயற்சி செய்யும் பொழுது “இடைவெளியில் அதைத் தடுக்கும்… அதைக் கூட நீங்கள் கவனித்துப் பார்க்கலாம்…!”

ஆனால் சிறிது காலம் யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்து பழகிக் கொண்டால்
1.உடனே அந்த உணர்வுகள் ஆத்ம சக்தி செய்யும்படி செய்து
2.தீமையைப் பிளக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும்.

அழுக்குத் தண்ணீரில் நன்னீரை ஊற்றும் பொழுது அந்த அழுக்குகள் எப்படிக் குறைகின்றதோ… அதை ஊற்ற ஊற்ற நல்ல தண்ணீரின் அடர்த்தி கூடுகிறதோ…
1.அந்த அந்த ஞானிகள் உணர்வுகளை நமக்குள் போடப் போட அது பெருகும்
2.அது முழுமை அடைந்து விட்டால் “தன்னிலை அடைந்து விட்டது என்று பொருள்…”

July 24, 2023

நல்லதை வளர்ப்பதற்காக நாங்கள் சேவை செய்கிறோம் என்பார்கள்

மனதில் நாம் எதைப் பதிவு செய்கிறோமோ அது தான் இயக்கும்.

உதாரணமாக... உங்களுக்கு முன்னாடியே நல்லது செய்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
1.ஆனால் அதை நீங்கள் மோசமாக எண்ணுகின்றீர்கள்
2.அப்போது நல்லது செய்தார்கள் என்று அதை ஏற்றுக் கொள்வீர்களா...?
3.அதில் எப்படிக் குறை காணுவது...? என்ற உணர்வு தான் வரும்.
4.அது உங்களுக்கே தெரியாது... உங்களுக்குத் தெரியாமல் அது இயக்குவது தான்.

ஆகையினால் குறையான உணர்வுகள் வந்தபின் நல்லது செய்கிறார்கள் என்றால் அதிலே எப்படியெல்லாம் குறைகளைக் காண வேண்டுமோ அப்படி எல்லாம் அதைத் திருப்பிக் கொண்டு வரும். ஆக நல்லதாக்கும் நிலைகளுக்கு வராது. இது எல்லாம் மனிதனுடைய இயற்கையின் நிலைகள்.

எவ்வளவு பெரிய சக்தி எடுத்தாலும் எல்லாம்... எல்லாம் அனுபவித்தாலும் “நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த ஆதங்கம்”
1.மற்றவருடைய நிலைகளைப் பார்க்கப்படும் போது
2.தன்னை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தும் நிலை வருகின்றது.

நன்மை செய்வதற்கு நான் பற்று கொண்டுள்ளேன்... ஆனால் மற்றவருக்குப் பற்று இல்லை என்கிற பொழுது இந்த மாதிரிக் குறைகளை வடிவமைக்க ஆரம்பித்து விடுகின்றோம். இதனால் எத்தனையோ பிழைகள் வருகின்றது.

இத்தகைய உணர்வுகள் ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றும். நாம் போகும் பாதையை விட்டுவிட்டுத் திசைகளைத் திருப்பும்... ஆனால் சேவை செய்ய வேண்டும் என்ற பற்று இருக்கும்.

எல்லா உணர்விலும் அது சாம்பிள் போட்டுக் கொண்டே இருக்கும் நன்றாக இருக்கின்றது நல்ல ருசியாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு ஸ்ஸ்...ஆ...! காரமாக இருக்கிறது நல்லதைக் காரமாகச் சொல்வது போன்று காண ஆரம்பிக்கும்.

இது எல்லாம் அன்பைக் காட்டுகின்றது ஆனால் பேராசையைக் காட்டுகின்றது ஆனால் கடைசியில் நிராசையாக மாறுகின்றது.
1.இந்தப் பேராசை (நல்லது செய்ய வேண்டும்) என்ன செய்யும்...?
2.நிராசையாக மாற்றிக் கொள்ளும் சக்தி தான் வருகின்றதே தவிர நல்லாக்கும் நிலை இல்லை.

பேராசை என்கின்ற பொழுது எப்படி இருக்க வேண்டும்...?

நீங்கள் (அடுத்தவர்கள்) உயர வேண்டும் என்றால் இது பேராசை.
1.நான் உயர வேண்டும்...
2.நான் உயர்ந்திருக்கின்றேன் என்ற இந்தப் பேராசை வரக்கூடாது.

இதுவும் பேராசை தான்... அதுவும் பேராசை தான்.

மற்றவர்கள் உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டு எப்படியும் தெளிந்த மனம் எல்லோருக்கும் வர வேண்டும் என்ற இந்தப் பேராசை நம்மைக் குறைகளிலிருந்து மீட்கச் செய்யும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் குறை காணும் இயல்புகள் உண்டு எனக்கும் கூட உண்டு உங்களிடம் எல்லாம் சொல்கின்றேன் அந்த மாதிரி உணர்வு... சில நேரங்களில் எனக்குள்ளும் (ஞானகுரு) வரும்.

இதனால் தான் குருநாதர் என்ன செய்தார்...?

ஒரு சந்தர்ப்பம் காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒரு மரத்தைக் காண்பிக்கின்றார். “தூக்கி வீசுடா.....!” என்றார் அவர் சொன்ன முறைப்படி செய்த பின் மரம் பறந்து போய் அங்கே விழுகின்றது.

1.அடுத்து எனக்குத் திமிரே வருகின்றது
2.யாராவது ஏதாவது செய்யட்டும்... நான் தூக்கிப் பந்தாடுகின்றேன் பார்...! என்று சொல்கின்றேன்.

“இப்போது உனக்குத் திமிர் வந்து விட்டது” என்று குருநாதர் சொல்கின்றார். எதற்காக வேண்டி உன்னை மரத்தைத் தூக்கி எறியச் சொன்னேன் தெரியுமா...?

ஒருவருக்குள் ஆட்டிப் படைக்கும் தீய சக்திகளைத் தூக்கி எறிய வேண்டும்.

சாதாரணமாக ஜீவனுடன் வாழும் அந்த மரத்தைத் தூக்கி எறிந்த உடனே உனக்குத் திமிர் வருகின்றது. அதை வைத்து யாரை வேண்டுமென்றாலும் தூக்கி எறிந்து விடலாம் என்ற எண்ணம் தானே உனக்கு வருகின்றது என்று அந்த இடத்தில் அதைச் சுட்டிக் காட்டுகின்றார்.

அந்தத் திமிர் வருவதனால்... யாராவது கோபித்துச் சொன்னால் அல்லது தவறாகச் செய்தால்
1.இருக்கட்டும்... கொஞ்சம் சுண்டிப் பார்க்கலாம்
2.அப்போதுதான் அவருக்கு அந்த அனுபவம் வரும் என்று நான் இதைச் செய்தால் எப்படி இருக்கும்...?

குறைகள் தான் வரும்.

அதை நிவர்த்திப்பதற்குண்டான வழியைத் தானே நான் சொல்ல வேண்டும்.
1.இன்னென்ன காரணத்தால் குறைகள் ஏற்பட்டது
2.அதனால் அது உங்களை இப்படிப் பாதிக்கின்றது என்று வழி காட்ட வேண்டுமே தவிர
3.அங்கே குறையைக் குற்றமாக ஆக்கி அவரைத் தண்டிக்கும் நிலைகளுக்கு வரக்கூடாது.

குருநாதர் எனக்கு முதலில் இதைத் தான் உணர்த்தினார்.

என்னைப் பெரிய ஆளாகக் காட்டுவதற்கும்... என்னை மெச்சும்படி செய்வதற்கும்... உங்களுக்கும் அந்தச் சக்தியைக் கொடுத்து மரத்தை தூக்கி எறியச் செய்யலாம்.

அப்போது உங்களுக்கும் அதே எண்ணம் தான் வரும். மனிதனுக்குள் இது போன்ற சக்திகள் கிடைத்தால் உடனே... அப்போதே... அந்தத் திமிர் வரும்.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால்
1.நல்லது என்ற எண்ணத்தில் மற்றவருக்குச் சேவை செய்யும் நேரங்களில் இது போன்ற சில உணர்ச்சிகள் நிச்சயம் வரும்.
2.நாம் அல்ல... நாம் எடுத்துக் கொண்ட ஆர்வத் துணிவு குற்றத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதில் குற்றத்தைப் பெருக்கத்தான் செய்யும்.

குற்றம் என்ற நிலையில் அவர்கள் தாழ்ந்து போனால் “பேசாமல் போகின்றார்கள் பார்...” என்ற நிலை வந்துவிடும். அதைக் கொண்டு குற்றங்களை எப்பொதுமே மாற்ற முடியாது. இதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

ஆகவே சேவை செய்ய நாம் அணுக வேண்டிய முறைகள் எப்படி இருக்க வேண்டும்...?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் என்று அவர்களை மதித்து
1.அங்கே அமைதி பெறும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
2.அமைதி பெறச் செய்யும் அந்தச் சக்தியை கொண்டு வந்தால் தான் அது சீராகும்.

அது அல்லாதபடி மற்ற எத்தனையோ பெரிய நிலைகளைச் செய்தாலும்
1.ஞானத்தின் வழியில் தேர்வு பெறுவது கடினம் தான்...
2.ஒரு சிலர் தான் தேற முடியும்.

கூட்டமாக ஒரு பக்கம் வந்து கொண்டே இருந்தாலும் “இதிலே என்னடா இருக்கின்றது...?” என்று களைந்து வெளியில் போய்க் கொண்டு தான் இருப்பார்கள்.... வர முடியாது... இதை வளர்க்கவும் முடியாது.

உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா...!

ஞான வழியில் வளர்வதற்கு மாறாகத் “தன்னுடைய செயல்கள்தான் உண்மை...” என்று அதை நிலை நாட்டும் போது நல்லதை நிலைநாட்ட முடியாது போய் விடுகிறது.

உடலின் தரம் உயிராத்மாவின் தரம்

காட்சி:
நெல் குவியல் தெரிவதைப் போன்றும் அக்குவியலில் உள்ள நெல்லை ஒருவர் எடுத்துக் கையில் வைத்துத் தேய்த்துப் பதரை நீக்கி அரிசியான மணியை வாயில் போடுவதைப் போன்றும் தெரிகின்றது.
விளக்கம்
நெல்லைப் பதம் பார்த்து நெல் காய்ந்து விட்டதா... அதை அரைத்துச் செயலுக்குக் கொண்டு வரலாமா...? என்பதற்காகவும் பதம் பார்த்திருக்கலாம். அல்லது நெல்லிலுள்ள பதரை நீக்கி அரிசியைச் சுவைக்கவும் பார்த்திருக்கலாம்.

முதலில் சொன்னது போல் நெல்லில் உள்ள மணியைப் பிரிக்க வேண்டும் என்றால் அந்த நெல் காய்ந்து பக்குவப்பட்டிருந்தால் தான் அதைச் செயலுக்குக் கொண்டுவர முடியும்.

அதைப் போன்று இவ்வுடலான நெல் பக்குவப்பட்டிருந்தால் தான் இவ்வுடலின் உயிராத்மா செயலுக்குக் கொண்டு வர முடியும்.

காய்ந்த நெல்லில் உள்ள உமியை நீக்கி அரிசியைப் பயன்படுத்துகின்றோம்.
1.மணியான அரிசி உள்ளே இருக்கும் வரை நெல் என்று சொல்கிறோம்
2.நெல்லிலிருந்து அரிசி விடுபட்டவுடன் பதர் என்று அந்த உமியை ஒதுக்கி விடுகின்றோம்

அதே போல் தான்
1.உயிராத்மாவானது (உயிர்) இச்சரீரத்தில் இயங்கும் வரை மனிதன் என்ற நாமகரணத்துடன் செயல் கொள்கிறது.
2.உடலை விட்டு உயிராத்மா பிரிந்தவுடன் பதரைப் போன்று உடல் கழிக்கப்படுகின்றது.

உடலில் இருக்கும் உயிராத்மாவின் உண்மையின் ஒளி சக்தியின் செயலை... ஆத்ம உணர்வை அறியாமல்... எண்ணத்தின் ஓட்டம் ஒவ்வொருவருக்கும் தன் தேவையின் செயலுக்காகத்தான் தெய்வங்களை வணங்குவது என்ற நிலையில் இன்று உள்ளார்கள்.

தனக்கு மேல் உயர்ந்த ஞானிகளையும் ரிஷிகளையும் சந்தித்தால் கூடத் தன் உணர்வின் தேவைக்காக மட்டும் தான் அந்தச் சந்திக்கும் நிலையையும் பயன்படுத்த எண்ணுகின்றார்கள்.

அதே சமயத்தில் தனக்கு மேல் உயர்ந்தவர்களுக்கு ஓர் இன்னல் ஏற்பட்டால்...
1.இவர்களுக்கே இந்த நிலை...
2.நாம் எல்லாம் சாதாரணமானவர்கள்... நாம் என்ன செய்ய முடியும்...! என்ற எண்ணத்தில்
3.தன்னையே ஒதுக்கிக் கொண்டு... மீண்டும் பிறிதொரு ஈர்ப்புக்கே தன் எண்ணத்தைச் செலுத்தி
4.உடலே பிரதானம் என்று “தான்... தனது...” என்ற செயலுக்குத்தான்
5.மனித உணர்வின் தத்துவம் செயல் கொள்கின்றது இந்தக் கலியில்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள சூரியன் மற்ற கோள்களின் தொடர்பு கொண்டு... பல விதமான குண அமிலத்தைத் தனக்குள் எடுத்து... அதைத் தன் சக்திக்குகந்தாக்கி... மீண்டும் வெளிக்கக்கித் தன் வளர்ச்சியை வளர்த்து ஓடிக் கொண்டே உள்ளது.

அதைப் போன்று மனிதனின் உணர்வின் எண்ணம் சூரியனைப் போன்று...
1.தன் உணர்வுடன் மோதக்கூடிய எந்த எண்ணத்திற்கும் தான் அடிமையாகாமல் தனக்குள் அதைச் சேர்க்கும் பொழுது
2.தன்னிலிருந்து வெளிப்படும் அலையானது மாற்று எண்ணங்களைத் தனக்குள் பஸ்பமாக்கி
3.தன்னிலிருந்து வெளியாகும் உணர்வின் எண்ணம் “சாந்தம்” என்ற ஒளியுடன் சமைக்கப்படும் பொழுது
4.மனிதன் தெய்வ நிலை கொண்ட செயலுக்கு வந்துவிடுகின்றான்.

நெல்லில் மணி இருக்கும் வரை தான் நெல்லிற்குத் தரமுண்டு. அதைப் போன்று இவ்வுடலில் உயிராத்மா இருக்கும் வரைதான் உடலுக்குத் தரமுண்டு. ஆகவே
1.இவ்வுடலில் இருந்து உயிராத்மாவை ஒளி கொண்ட முத்தாகப் பக்குவப்படுத்தக் கூடிய வழி முறையை
2.நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் கொள்ள வேண்டும்.

July 23, 2023

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்லதை உருவாக்க வேண்டும் என்பதற்குத்தான் “அஷ்டமி நவமி…”

1.கண் வழி தான் நாம் பெரும் பகுதி அனைத்தையும் கவருகின்றோம்… அது பதிவாக்குகின்றது
2.கண்ணின் காந்தப் புலனறிவு எதைக் கவர்கின்றதோ அதையே நம் ஆன்மாவாக மாற்றுகின்றது
3.இந்த உடலுடன் இணைந்தது எதுவோ அது பதிவானபின் உயிர் அந்த உணர்வின் தன்மை இழுக்கின்றது.

இப்படி நமக்குள் எத்தனை விதமான அணுக்கள் இருப்பினும் கண் கொண்டு பதிவாகி உணர்வின் தன்மை நாம் எதை எண்ணுகின்றோமோ காற்றிலிருந்து அதைப் பிரித்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

மாற்றிய பின் “இந்த உயிர் தான் அதை இயக்குகின்றது… இது நவமி. அதாவது (உயிர் நுகர்ந்த உணர்வுகள்) எதன் உணர்ச்சிகளை எண்ணுகின்றோமோ “எண்ணம் நவமி…”

1.அஷ்டமி…! கண்கள் வழியாக நாம் ஒன்றை நுகரப்படும் பொழுது அது ஆன்மாவாக மாறினாலும் அது இயக்கச் சக்தி இல்லை…!
2.உணர்வின் தன்மை நுகர்ந்து உயிரிலே பட்டபின் இயக்கமாகிறது… எண்ணங்கள் தோன்றுகிறது நவமி.
3.ஆக… அஷ்டமி என்றாலும் “உயிருடன் ஒன்றி” அந்த உணர்வின் அறிவாக நாம் தெரிந்து கொள்வது தான்.

ஆகையினால் அஷ்டமி என்றால் இருள் சூழ்ந்த நிலைகள். இருளில் எதையும் செய்யாதீர்கள் என்பார்கள்.

ஆனால் இப்போது நாம் என்ன செய்கின்றோம்…? நவமியில் எதுவும் நல்லதைச் செய்யக்கூடாது அஷ்டமியிலும் எதையும் செய்யக்கூடாது… என்று இருக்கின்றோம்.

எதன் உணர்வின் தன்மை சேர்த்து உண்மையின் உணர்வை அறிகின்றோமோ அந்த அறிந்து கொண்ட உணர்வாக… அறியச் செய்வது யார்…? இந்தக் கண்கள் தான்.

ஆகவே
1.அறிந்து கொள்ளும் அறிவின் தன்மை கொண்டு எந்த நல்லதை எண்ணுகின்றோமோ அதன் அறிவாக நம் உயிர் இயக்கும்..
2.”அஷ்டமி… நவமி…” என்கிற பொழுது எதன் தெளிவின் தன்மை வருகின்றதோ அவ்வாறு இருக்கும்.

ஒருவர் வேதனைப்படுகின்றார்… அதை நாம் உற்றுப் பார்க்கும் போது அஷ்டமி என்றாலும் அதன் உணர்வுகள் இருள் சூழ்ந்த நிலைகள் பெற்றது. ஆகவே இருள் சூழச் செய்யும் “அந்தத் தீயதை எண்ணாதே…” என்று தான் சாஸ்திரங்கள் கூறுகின்றதே தவிர இவர்கள் சொன்னது போன்று அல்ல.

வேதனை அந்த இருள் சூழ்ந்த நிலையானால் உயிரில் படும் போது இருள் சூழச் செய்கின்றது. உயிரிலே பட்ட பின் நவமி ஒன்பதாவது நிலைகள் என்றாலும் வேதனை உணர்வுகள் நமக்குள் வருகின்றது. அந்த வேதனையை நவமி காலங்களில் எண்ணக்கூடாது

1.அஷ்டமி… இருள் சூழும் உணர்வுகளை கண் கொண்டு அதைத் தெரிந்து கொண்ட பின்
2.தீமையை நீக்கும் உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிவதற்குத் தான் இந்தக் கண்கள் பற்றி இங்கே உணர்த்தப்படுகிறது.

ஆனால் அந்தக் காலங்களில் நாம் நல்லது செய்ய வேண்டும் நல்லவராக ஆக வேண்டும் நல்ல பலன்களைப் பெற வேண்டும் என்று இந்த அடிப்படையில் எண்ணினால் அதன் உணர்வின் தன்மை நமக்குள் அதனின் அறிவாக அது இயக்குகின்றது

இதனால் தான் வேத நூல்களில் மூலங்களை இப்படிக் கொடுத்தது…

ஆனால் மூலத்தை மற்றவர்கள் யாரும் அறிந்து கொள்ளாதபடி அந்த இரண்டு நாளும் நல்லதை எண்ணாதே… நல்ல காரியத்தைச் செயல்படுத்தாதே…! என்று மாற்றி விட்டார்கள்.

நல்ல காரியத்தை நாம் முழுமையாகச் செய்தால் அது சந்தோஷப்படஸ் செய்யக்கூடியது. காரணம் நம் உயிர் அதன் உணர்வின் உணர்ச்சியாக அதை இயக்குகிறது.

அதே போன்று
1.ஒருவர் வேதனைப்படுகிறார் என்று கண் கொண்டு உற்று நோக்கினாலும்
2.அந்த உணர்வை நுகராதபடி அவன் நல்லவனாக வேண்டும் என்று அந்த உயர்ந்த உணர்வை எடுக்க வேண்டும்.

அஷ்டமி நவமி காலங்களிலே நல்ல காரியங்களைச் செய்து அந்த உணர்வின் தன்மை தெளிவாக்க வேண்டும் என்று தான் வேத நூல்களில் தெளிவாகக் கூறப்படுகின்றது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகின்றது அல்லவா…!

இருண்ட நிலைகளிலிருந்து நம் கண்தான் அங்கே சரியான வழியைக் காட்டுகின்றது உடலுக்குள் இருக்கும் உணர்வின் தன்மையை நாம் ஒரு தீமை என்ற நிலைகளைப் பார்க்கப்படும் பொழுது உயிர் அகக்கண்ணாக இருந்து அதை வெளிப்படுத்துகிறது.

அதனால் தான் நம் கண்களுக்கு கண்ணன் என்று தெளிவாக சாஸ்திரங்கள் கூறுகின்றது

ஆகவே கண் கொண்டு நாம் அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கவர்தல் பெறுதல் வேண்டும். அந்தச் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் நல்லதை இப்படி உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் அஷ்டமி நவமி…!

ஒளியாகும் பருவம் பெற்றவர்களப்பா நீங்கள் எல்லோரும்…!

ஒவ்வொரு மனிதனுக்கும்...
1.தன் தன் உடல் தேவைக்குகந்த எண்ண ஓட்டம் தான் ஓடிக் கொண்டே உள்ளதேயன்றி
2.தன் ஆத்மாவின் உயர்வை... உண்மையான சேவையில் உணரும் பக்குவம் இக்கலியில் வளரவில்லை.

இந்தப் பூமியின் சக்திக்கு வலு கூட்டக்கூடிய வலுத் தன்மைக்கு... இன்றைய இக்கலியின் உணர்வில் மனித ஆத்மாவின் சேவை உணர்வு செயல்படல் வேண்டும்.

சேவை என்பது... தான் பெற்ற உயர் ஞானத்தில் அறியும் உண்மை ஒளி சக்தியைக் கொண்டு ஒன்றை உருவாக்கி வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் சேவையை மனிதன் பெற வேண்டும்.

உடலின் சுகத்திற்குச் சேவையும்... புகழின் பேராசைக்குச் செல்லக்கூடிய சேவையும் உண்மையின் வளர்ச்சியின் சேவையல்ல...!

மனிதனின் உணர்வின் எண்ணத்தை ஒளியாக்கக் கூடிய ஆத்ம பலம் பெற வேண்டும்.
1.எந்த மனிதனின் உணர்வையும் பாதிக்கக்கூடிய எண்ணத்தையும்
2.அழிவின் குரோதத்தையும் எடுக்காமல்
3.தன் சரீரத்தையே சம குணம் கொண்ட நற்குணத்தின் சாந்தத்தைப் பெறவல்ல தன்மை பெற வேண்டும்.

இப்படிப்பட்ட செயல் வழியில் இவ்வாத்மாவை வளர்த்திடும் பக்குவத்தில் எந்த ஒரு ஈர்ப்பலைக்கும் ஆத்மா சிக்காமல் ஒளி சரீரமாகக் கூடிய முதிர்வு நிலையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

இப்பூமியில் வளரக் கூடிய தாவரங்களிலும் மற்ற கனி வளம் ஒவ்வொன்றிலுமே முதிர்வு நிலைக்குச் சேருவது மீண்டும் ஆவியாகக் கூடிய திராவக எண்ணை வித்து நிலை.

1.இப்பூமியையே சத்தாக்கி
2.அச்சத்தின் வளர்ச்சியின் முதிர்வு நிலைதான்
3.இப்பூமியில் இருந்து நாம் எடுக்கும் எண்ணை வித்துக்கள் யாவையும்.
4.இப்பூமியின் உலோகங்களான உலோகச் சத்தையும் வளர்ச்சியின் முதிர்வில் எடுத்து வளர்ந்தது தான் அந்த எண்ணை வித்து.

ஆவியாகி... குளிர்ந்து நீராகி... நீரின் தொடர்பு கொண்டு... தான் எடுக்கும் அமிலத்தில் ஓர் செடி வளர்ந்ததென்றால் அந்தச் சத்தை வித்தாக்குகின்றது.

சாதாரணமாக நீரை எடுத்து உறிஞ்சித்தான் கடலைச் செடியே வளர்கின்றது. அதன் வித்தான நிலக்கடலையிலிருந்து எண்ணைச் சத்தைப் பிரித்தெடுத்த பிறகு அந்த எண்ணை நீருடன் ஒட்டுவதில்லை.

மேலும் அந்த எண்ணையில் ஊன்றிக் கவனித்தோமென்றால்
1.நீரின் மேல் சிறிது அந்த எண்ணெயை விட்டால்
2.வானவில்லில் காணக்கூடிய ஏழு நிறங்களையும் இவ் எண்ணையிலும் காணுகின்றோம்.

அதாவது... நீரிலிருந்து உருவான தாவரங்களின் முதிர்வு வளர்ச்சியே
1.மீண்டும் நீருடன் ஒட்டாமல் எண்ணையாகி
2.எரி நிலையில் ஆவியாகிக் கூடிய வலுப் பெற்று விடுகின்றது.

அதைப் போன்று தான் மனிதனின் உணர்வின் எண்ணத்தால்
1.விண்ணிலிருந்து வரும் மின் காந்த சக்தியைச் சம குணமுடன் எடுத்து ஆத்ம பலத்தை வளர்த்து
2.இவ்வாத்மாவையே ஒளியாக்கக் கூடிய உயர் ஞானத்தின் ஒளி ஆத்மாக்களாக ஆக முடியும்
3.ஒளியாகும் பருவம் பெற்றது தான் (மனிதர்கள்) இப்பூமியின் வித்துக்களப்பா...!

இதை அறிந்து நீங்கள் ஒவ்வொருவரும் உயர் ஞான ஜோதிகளாக உருவாகுங்கள்...!

July 22, 2023

இயந்திரத்தனம் கொண்ட உருக்களை உருவாக்குவதால் எந்த வளர்ச்சியும் கிடைக்காது

காட்சி:

ஓர் மனிதன் முயற்சியால் செயற்கையில் “பல இயந்திர உறுப்புகளைக் கொண்டு ஓர் வாகனத்தை உருவாக்கி...” பின் அதை ஓட்டுவதைப் போன்று தெரிகின்றது.

இன்னொரு மனிதன் “தன் உடலையே” இயந்திரத்தின் நிலைக்கொப்ப சர்க்கஸ் விளையாடுவதைப் போன்று உடலைப் பல கோணங்களில் வளைத்து வித்தைகள் செய்யும் காட்சி தெரிகின்றது.

சூரியனும்... சூரியக் குடும்பத்தின் நாற்பத்தி ஏழு மண்டலங்களும்... சனிக் குடும்பத்தின் பன்னிரண்டும்... பூமியைச் சுற்றியுள்ள இருபத்தியேழு நட்சத்திர மண்டலங்களும்... பூமியின் அதி தொடர்பு கொண்ட அருகிலுள்ள சில மண்டலங்களின் காட்சிகளும்... பூமியும்... பூமியின் வளர்ச்சியும்... பூமியின் எண்ணத்தின் உணர்வின் எண்ணம் கொண்ட மனிதச் செயலும் காட்சியாகத் தெரிகின்றன.

விளக்கம்:
(முதலில் தெரிந்த) வாகனத்தின் நிலை... மனிதனால் ஜடப் பொருள்களைக் கொண்டு மனிதனின் செயலின் தேவைக்கொப்ப உருவாக்கியது.

மனிதன் தன் எண்ணத்தைச் செலுத்தி எண்ணத்தின் உணர்வைக் கொண்டு தனக்கு இசைவுபட்ட வாகனத்தை உருவாக்க... ஜடப்பொருளைத் தன் எண்ணத்திற்கொப்ப உருவாக்கிச் செயலுக்குக் கொண்டு வருகின்றான்.

தன் தேவையின் உணர்வுக்கொப்ப எண்ணத்தைச் செலுத்தும் பொழுது தன் ஞானத்தை வளர்ச்சிப்படுத்தி தனக்குகந்த உருவாக்கும் செயல் தான் அது.

1.அத்தகைய வளர்ச்சியின் செயல் திறமை கொண்டு
2.சரீர உணர்வில் உடலில் ஓடக்கூடிய உயிர் அணுக்கள் ஒவ்வொன்றையுமே தன்னிச்சைக்குச் செயல்படுத்தி
3.ஓர் காரியத்தைக் கூர்மையாகத் தன் ஞானத்தின் வலுவில் பழக்கப்படுத்தும் செயல்படுத்தும் வழிமுறையினால்
4.மனிதனுடைய ஆத்மா குறுகிய நிலைக்கோ வலுவிழந்த தன்மைக்கோ செல்வதில்லை.

(இரண்டாது) அதே சமயம் மனிதனுடைய உடலையே வித்தையாக்கித் தன் உடலைப் பல நிலைகளில் அவ்வுறுப்புக்களைச் செயல்படுத்தும் பொழுது மனிதனுடைய உடலிலும் இயந்திர நிலைக்கொப்பத்தான் அந்தச் செயல் நிலை செல்கின்றது.

ஆகவே…
1.பிறிதொரு பொருளை உருவாக்குகின்ற இயந்திர நிலைக்கும்
2.உடலை இயந்திரம் போன்று சாகசம் புரிந்து... வித்தை காட்டும் வழி முறைக்கும் மாறுபாடு ஏதுமில்லை.

ஆனால் மனிதனின் உணர்வின் எண்ண ஓட்டமானது… இச்சரீர உயிராத்மா ஜீவன் பெற… இப்பூமியின் உணர்வின் எண்ணத்தில் செயல் புரிகிறது என்றால் அச்செயலுக்கு மூலத்தின் வழி முறை சூரியனும் சந்திரனும் சூரியக் குடும்பத்தின் நட்சத்திரக் கோள்களும் தான்...!

அப்படிப்பட்ட வழித் தொடரில்... பல உணர்வின் அமில வழி ஒளி சக்தியின் தொடர்பு கொண்டு இச்சரீரத்தின் உணர்வின் எண்ண ஓட்டம் எப்படிக் கிடைத்தது...? என்பதை மனிதன் தன்னைத் தானே உணர்ந்து... சிந்தனையில் உணரல் வேண்டும்.

ராகு கேது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் வியாழன் சுக்கிரன் சனி என்ற நவக் கோள்களை எல்லாம் நவக்கிரகமாக அன்றே சித்தன் பூமிக்கும் நவக்கோள்களுக்கும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் தொடர்பு ஏற்படுத்திக் காட்டினான்.

பூமியின் சுழற்சியில் பூமிக்கு அருகிலுள்ள சந்திரனின் தொடர்பைக் கொண்டு அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பூமியில் ஏற்படக் கூடிய தொடர் போன்றே நவக்கோள்களின் தொடர்பில் இருபத்தியேழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டு நவக்கோளையும் அதனின் இயக்கங்களையும் காட்டினான்.

1.அதே சமயத்தில் நட்சத்திர மண்டலத்தின் ஈர்ப்பில் வரும் அமிலத் தன்மைகளையும்
2.அதனால் இப்பூமியின் தொடர்புடன் சுழலுகின்ற காந்த ஒளி அலையில் உருவாகக்கூடிய உயர் சக்திகளின் குண நிலையையும்
3.மனிதப் பிறப்பும் தாவரங்களின் குணம் மணம் சுவை ஜீவன் யாவையுமே உருவாகக்கூடிய தன்மையையும்
4.ஒன்றின் தொடர் கொண்டு ஒன்று ஈர்ப்பு கொண்டு சுழலக்கூடிய கால மாற்றத்தில் வளரக்கூடிய உண்மைகளை
5.பல ஆயிரம் காலங்களுக்கு முதலிலேயே மகரிஷிகளினால் பூமியின் ஜாதகங்கள் குறிக்கப்பட்டன.

அந்தந்தக் கோள்களின் ஈர்ப்பின் தொடர்புக்கு ஒத்த கால மாற்றங்களினால் நம் பூமியின் செயலில் செயல்படும் வழி முறைதனை “இந்த நாளில்... இந்த நேரத்தில் மழை வரும்...! என்பதையும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் போன்ற கிரகணங்களின் சந்திப்பின் காலத்தையும்...” குறித்தனர்.

அன்றைய மகரிஷிகளால் வானசாஸ்திர உண்மை ஞானத்தில் அறியப்பட்ட வழித் தொடரைத்தான் இன்றைய விஞ்ஞானமும் பேசுகின்றது. ஆனால்... மெய் வழி அறிந்து வந்த அந்த வளர்ச்சி விஞ்ஞான சாஸ்திரத்தால் “தன் ஞானம்” இன்று மறைக்கப்பட்டு விட்டது.

1.உணர்வின் எண்ண ஓட்டத்துடன் கூடிய தன் ஞானத்தின் உயர் ஞானத்தை
2.இப்பூமியில் உணர்வின் எண்ணத்தில் மனித ஆத்மாக்கள் வாழ்ந்த விதத்தை வளர்த்த
3.ரிஷிகளின் வம்சத்தின் தொடரின் ஜீவ நிலை வளரும் சக்தி நிலை வளர்ந்தால்தான்
4.மீண்டும் உணர்வின் எண்ணத்தின் செயல் வளர்ச்சி மனிதச் செயலின்
5.உயர் ஞானம் வளரக்கூடிய ஜீவ உருக்களை உருவாக்க முடியும்.

மனிதன் உருவாக்கிய இயந்திரங்களோ மற்ற தாவரங்களோ எல்லாமே தன் தன் தேவைக்குகந்த... தன் தேவையினால் அழியக் கூடியவை தான். அதனால் இப்பூமியின் சக்திக்கு வலுகூட்டக் கூடிய பலனோ பயனோ இல்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்...!

இரக்கப்படும் குணத்தைப் பற்றிய உண்மை - "நன்றிக்கடன்"

உதாரணமாக நாம் இரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம். அப்பொழுது பக்கத்திலே ஒருவர் கடுமையாக வேதனைப்படுகின்றார்… பார்க்கின்றோம். நாம் இரக்கம் ஈகை பண்பு கொண்டவர்கள்.

இதற்கு முன்பு தனிப்பட்ட முறையில் அவரிடம் அதிகமான பழக்கமில்லை. இரயிலில் போகும் பொழுது தான் அவரிடம் நாம் யதார்த்தமாகப் பழகுகின்றோம்.
1.அவர் படும் வேதனையை நாம் மிகுந்த இரக்கத்துடன் பார்க்கின்றோம்.
2.ஆனால் அவருடன் கூட வந்தவர்கள் சலிப்பாக சஞ்சலமாகத் தான் பேசுவார்கள்.
3.ஏனென்றால் அடிக்கடி அவர்களிடம் துயரப்பட்டுப் பழகியதால் அந்த நிலை.

இருக்கிற இடத்தில் சும்மா இரு…! ஏன் இந்த மாதிரி அடிக்கடி அது வேண்டும்… இது வேண்டும்… என்று கேட்கிறாய்…? என்பார்கள்.

ஆனால் நாம் இரக்க மனம் கொண்டு ஏனம்மா…! என்ன செய்கிறது…? உனக்கு என்ன வேண்டும்…? என்று இரக்கத்துடன் கேட்கின்றோம். ஏனென்றால் அன்று ஒரு நாள் தானே நாம் பழகியது…!
1.அது அவருக்குள் பதிவாகிறது.
2.அவருக்கு ஆதரவாக நாம் அப்படிப் பேசுகின்றோம்.
3.பண்புடன் நாம் அங்கே சொல்லப்படும் பொழுது அவர்களுக்குக் கொஞ்சம் தணிவாகின்றது.
4.இந்த உணர்வு “அவருடைய உடலில் வலுப்பெற்று விடுகின்றது…”

நாம் என்ன நினைக்கின்றோம்…? அந்த அம்மா இவ்வளவு தூரம் சிரமப்படுகின்றது ஆனால் கூட வந்தவர்கள் கொஞ்சம் கூட இரக்கமில்லாதபடி இப்படிப் பேசுகிறார்கள்… சமுதாயம் இப்படி இருக்கின்றதே…! என்று “அவர்கள் உணர்வை நமக்குள் பதிவு செய்கிறோம்…”

ஆனால் ஊர் போய்ச் சேர்ந்தவுடன் அவரை சார்ந்தவர்கள் வரப்படும் பொழுது நோயாளிக்குள் எண்ணங்கள் அதிகமாகிறது.

பார்…! ஆரம்பத்திலிருந்து இவர்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்தோம்… எத்தனை வசதிகள் செய்தோம்… நல்லது செய்தோம்…! நம்மை இவர்கள் சரியாகக் கவனிக்கவில்லை…!

ஆனால் இரயிலில் பயணம் செய்யும் பொழுது அந்த மகாராசி எனக்கு அவ்வளவு ஆதரவாக உதவி செய்தார்… எந்த அளவுக்கு உபசாரம் செய்தார்…! என்று இந்த உணர்வுகள் வலுப்பெறுகின்றது.

நாம் அவர்கள் பட்ட வேதனையை வலுப்பெற்று வைத்திருக்கின்றோம்
1.அவர்கள் உடலில் விளைந்தது நமக்குள்ளே…
2.நம்முடைய உணர்வுகள் பதிவானது அங்கே….
3.அவர் வீட்டில் அவரைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்பு.

கடைசியில் உடலை விட்டுச் செல்லும் போது தனக்கு இரயில் பிரயாணத்தில் உதவி செய்த நல்லவர் மீது… அதாவது நம் மீது இந்த எண்ணங்கள் அதிகமாகிறது.

விதிப்படி அவர்கள் எண்ணுகின்றார்கள்…!

அப்படி எண்ணிய உடனே அந்த உயிரான்மா
1.நாம் இங்கே இருந்தாலும் எதனின் வலுப்பெற்றதோ இங்கே இழுத்துக் கொண்டு வந்து விடுகிறது.
2.நம் உடலில் புகுந்து விடுகிறது… நமக்குத் தெரியாது… ஒன்றுமே தெரியாது.

ஆனால் தன் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது வெறுப்படைந்த உணர்வைப் பதிவு செய்தது… “எல்லோரும் பாவிகள்” என்று அங்கே அந்த எண்ண அலைகளைப் பரப்புகின்றது.

அந்தச் சாப அலைகள் அந்தக் குடும்பத்தையே சாடுகின்றது. இந்த உடலில் விளைந்தது அங்கே போகின்றது

தன் மீது பற்று கொண்ட உணர்வின் நினைவுடன் “மகராசி எனக்கு உதவி செய்தார்…” என்று அவர் உடலில் விளைந்தது இங்கே வந்து… விஷத்தில் பாதாமைப் போட்டால் எப்படி இருக்குமோ அது போன்று அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்து விடுகின்றது.

கடைசி நேரத்தில்
1.என்னென்ன வேதனைப்பட்டுப் புலம்பல் ஆனதோ
2.தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் பாவிகள் என்று வெறுப்புடன் எப்படிப் பேசியதோ
3.அது எல்லாம் இங்கே வந்து அவர் செயல்படுத்தியது போன்றே தன் குடும்பத்தில் வெறுப்பாகப் பேசும்.

குடும்பத்தில் சிலருடைய நடவடிக்கைளைப் பார்க்கலாம்…! நேற்று வரை எல்லாம் செய்தார்… இப்பொழுது என்னமோ தெரியவில்லை “கண்டபடி வெறுத்துப் பேசுகின்றார்…! நல்லது செய்தவர்தான்… ஆனால் வெறுத்துப் பேசுகின்றார் என்று அவருடைய செயலாக்கங்கள் திடீரென்று மாறுவதைப் பார்க்கலாம்.

சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா.

இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே ஏற்படக்கூடிய சில தீங்கான நிலைகள்…!

இதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவு செய்கிறோம்.
1.அறியாமல் வரக்கூடிய தீங்குகளை… அதனின் உண்மையை உணர்ந்து
2.ஞானிகள் காட்டிய வழியில் அதை அகற்றிடும் சக்தியாக உங்களுக்குள் இப்பொழுது பதிவு செய்கின்றோம்.

பிறருக்கு நாம் எப்படி உதவி செய்ய வேண்டும்…? உதவி செய்தாலும் அவர் பட்ட துன்பங்கள வேதனைகளும் நமக்குள் வராதபடி நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்…?

1.நம்மையும் காத்து பிறரையும் காக்கும் சக்தியாக
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும்…? என்பதற்குத்தான்
3.இதை உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறேன் (ஞானகுரு).

July 21, 2023

இராமாயணம் சாதாரணமானது அல்ல

சந்தர்ப்பத்தால் நமக்குள் பதிவான உணர்வுகள்… அது எதன் வலுவோ அதனைக் கொண்டு நம்மை இயக்குகின்றது. எதன் உணர்வு நம் உடலுக்குள் அதிகமாகின்றதோ “உள் நின்று இயக்குவது தான்…” அதன் தன்மை.

அதனைத் தான் தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு என்று இராமாயணத்தில் தெளிவாகக் கூறுகின்றனர்.

ஒருவன் சண்டை இடுகிறான் என்றால்
1.அது என்ன...? என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்துகின்றோம்...
2.அதனை நாம் கவர்கின்றோம்... அது தான் வசிஷ்டர்.

எதை உற்றுப் பார்த்து அந்த உணர்வின் தன்மை கவருகின்றோமோ... கவர்ந்த உணர்வுகள்
1.நம் உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்…
2.இந்த உணர்வுகள் நமக்குள் பிரம்மமாகி (சிருஷ்டியாகி) விடுகின்றது

கவர்ந்து கொண்ட உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது என்பது தான் வசிஷ்டர் பிரம்மகுரு. பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர் பிரம்மகுரு.

ஒருவனின் செயலை நாம் பார்க்கும் போது
1.அவன் என்ன செய்கின்றான்... ஏது செய்கின்றான்...?
2.தவறு செய்கின்றானா...? குற்றங்கள் செய்கின்றானா...?
3.ரொம்பவும் பிழைகள் செய்கின்றானா...? பிறரை வேதனைப்படுத்துகின்றானா...? என்று உற்று நோக்கினால்
4.அந்த உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டபின் வசிஷ்டர் பிரம்மமாகின்றது.

சூரியனிலிருந்து வெளிப்படக்கூடியது வெப்பம் காந்தம் விஷம். அதிலே காந்தம் ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால் வசிஷ்டர்... ஆண்பாலாக மாறுகின்றது.

ஆண்பாலாக மாறும் பொழுது பிரம்மம் என்று பெயர். பிரம்மாவின் மனைவி சரஸ்வதி... எந்தச் சத்தின் தன்மை அது இயக்குகின்றதோ “அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்...” என்று பொருள்.

1.இந்த உலகம் எப்படி இயக்குகின்றது...? இயற்கை நம்மை எப்படி இயக்குகின்றது...?
2.எதன் வழி நாம் செல்கின்றோம்...?
3.நாம் குற்றவாளியா... குற்றமற்றவர்களா...? குற்றங்கள் செய்வதன் காரணம் என்ன…?
4.குற்றத்தின் இயல்பை உண்டாக்குவது எது...? என்ற நிலையில்
5.நம்மை நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை முதலிலே உங்களுக்குத் தெளிவாக்குகின்றோம்.

இந்த உண்மையின் இயக்கங்களை நாம் அறிய வேண்டியது மிகவும் அவசியம்.

உடலில் தூசி பட்டால் பிசு…பிசு… என்று ஆகிறது. ஒரு பக்கம் மிளகாய் தூற்றுகின்றனர் என்றால் அது நம் மீது பட்டால் எரிகின்றது விஷத்தன்மையான பொருள்கள் நம் மீது பட்டு விட்டால் அரிக்கின்றது.
1.நாம் தவறு செய்கின்றோமா…? இல்லை.
2.ஆனால் காற்றுடன் காற்று கலந்து வந்து நம் மீது மோதும் பொழுது இத்தகைய உணர்ச்சிகளைத் தருகிறது.

இதே போல் தான் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் செல்லப்படும் போது “தீமை என்ற உணர்வுகளும்” நமக்குள் வருகிறது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரைக் குற்றவாளியாக ஆக்குவதற்கு முன்
1.அந்தக் குற்றங்கள் எப்படி எதனால் செயல்படுத்தப்படுகிறது…?
2.அவரா…? சந்தர்ப்பமா… சூழ்நிலையா…? என்று இந்த உணர்வுகளைத் தெரிந்து
3.அந்தக் குற்றத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்…
4.தெளிந்த மனம் பெற வேண்டும்… தெளிவான நிலை பெற வேண்டும் என்று உணர்வினை நுகர்ந்து பழக வேண்டும்.

அப்படி அல்லாதபடி அவர் குற்ற இயல்புகள் நமக்குள் வந்துவிட்டால் அதன் உணர்வு நம்மை இயக்கி… அதன் உணர்வினை நாம் அறிந்து… அதன் உணர்ச்சியின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது நாம் கவர்ந்தது அனைத்தும் வசிஷ்டர்.

இரத்தத்தில் கலந்து கொண்ட பின் இந்திரலோகம் என்றாலும்… அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பிரம்மமாகி உடலுடன் ஐக்கியமாகி விடுகிறது.

பிரம்மகுருவின் மனைவி அருந்ததி…! இராமாயணத்தில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. காரணம் இராமாயணம் சாதாரணமானது அல்ல.

1.நாம் நுகர்ந்த உணர்வின் உணர்ச்சிகளுக்கொப்ப எண்ணங்கள் எப்படி வருகின்றது…?
2.எண்ணத்தின் உணர்ச்சிகள் உடலை எப்படி இயக்குகின்றது…?
3.அந்த உணர்ச்சியின் உணர்வுகள் நம் உடலில் எப்படி விளைகின்றது…? என்பதை
4.இராமாயணக் காவியத்தில் வான்மீகி உணர்த்தியுள்ளார்.

July 20, 2023

ஆத்ம சுத்தி செய்வதன் மூலக்கூறு

புலி தன் குட்டிகளுடன் இன்பத்தைக் காணுகின்றது அதே சமயத்தில் மற்ற உயிரினங்களைத் துன்புறுத்தி இம்சித்துத்தான் தன் உணவை உட்கொண்டு வாழுகின்றது.

தன் குட்டியைக் கண்டு மகிழ்ந்து வாழுகின்றது ஆனால் மற்றொன்றை இம்சிக்கும் பொழுது அது இரையாக்கி ரசித்து வாழ்கின்றது இருந்தாலும் தன் இரையை எடுத்து ரசித்து உட்கொள்ளும் பொழுது
1.தனது இனம் அருகே வந்தாலும் கூட வெறுக்கின்றது.
2.பசியின் உந்துதல் வேகம் அதிகமாகும் பொழுது குட்டியாக இருந்தாலும் கூட விரட்டுகின்றது..

இரை உட்கொள்ளும் போது பார்க்கலாம். அதனுடைய குட்டி இரையைத் தன் பக்கம் அதிகமாக இழுத்தால் போதும். குட்டிக்குப் பாலை அரவணைத்துக் கொடுக்கும். ஆனால் அதே சமயத்தில் இரையை இப்படி இழுக்கும்பொழுது உடனே விர்ர்ர்…” என்று ஒரு தட்டு தட்டும்.

ஏனென்றால் தன்னுடைய வாழ்க்கை என்று நிலை வரும் பொழுது தன் இனமாக இருந்தாலும் தனக்கு இரை கிடைப்பதைத் தடை செய்யப்படும் பொழுது இந்த நிலை ஆகிவிடுகிறது.

மனிதன் நாம் நம்முடைய குழந்தைகளை வளர்த்தாலும் கூட நாம் சொன்னபடி குழந்தை கேட்கவில்லை என்றால் என்ன வருகிறது…?
1.அவன் மீது வெறுப்பான உணர்வுகளைப் பதிவு செய்துவிட்டால்
2.”இவன் இப்படித்தான் இருப்பான்…” என்ற உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்

அது ஒரு தரம் பதிவாகிவிட்டால் பல காலம் அவன் மீது பேரன்பை வளர்த்து வைத்திருந்தாலும் ஒரு தரம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வு முன்னணியில் வந்து விடுகின்றது.

அப்பொழுது அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பான எண்ணங்களே வருகின்றது… அது வளர்ச்சியாகும். ஆனால்
1.அவனை நல்லவனாக மாற்றும் நிலைகள் நமக்குள் மாறி விடுகின்றது.
2.நமக்குள் அவன் மீது இருக்கும் பற்றைத்தான் மாற்றும்.
3.ஆனால் அவன் மீது வைத்திருக்கும் பற்றில் தீமையிலிருந்து அவனை மாற்றி நல்வழிக்குக் கொண்டு வரும் எண்ணம் வராது.

சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறது அல்லவா…!

இது எல்லாம் இந்த உணர்வின் இயக்கங்களில் “தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…” ஆக இது போன்ற நிலைகளை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்றால் இரவிலே புலன் அடங்கி நாம் தூங்கும் நேரத்தில் ஆத்ம சுத்தி செய்து தூய்மைப்படுத்தி ஆக வேண்டும்.

தினசரி காலையிலிருந்து இரவு வரை நாம் எத்தனையோ தடவை ஆத்ம சுத்தி செய்தாலும் தூங்கப் போகும் நேரத்தில் குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது
1.நம் நினைவை துருவ மகரிஷிகளுடன் ஒன்றச் செய்து
2.துருவ நட்சத்திரத்துடன் இணையச் செய்து
3.சப்தரிஷி மண்டலங்களுடன் இணையச் செய்து
4.அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.
5.அதாவது தீமையான உணர்வுகளுக்கு ஆகாரம் கிடைக்காதபடி
6.அந்த மகரிஷிகள் உணர்வுகளை நாம் பற்றும்படி செய்தல் வேண்டும்

இதுதான் ஆத்ம சுத்தி செய்வதில் உள்ள “முக்கியமான மூலக்கூறு…”

ஒரு மிருகம் முன்னாடி சென்றால் அதன் பின் மிருகக்கூட்டம் செல்வது போல் தான் இன்றைய மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது

இப்பூமியின் காற்று மண்டலமே விஷமாகிக் கொண்டுள்ள இக்கலியின் கடைசியில் மனிதனின் உணர்வுகளெல்லாம்…
1.மனிதன் உண்ணக் கூடிய உணவு முறையாலும்
2.வாழ்க்கை நெறியில் நாகரீகத்தின் வளர்ச்சியாலும்
3.மிருகங்களின் நிலையில் எப்படி ஆடு மாடுகள் ஒன்றைப் போன்றே பிறிதொன்றும் செய்கின்றதுவோ (ஒரு ஆடு போனால் அதற்குப் பின்னாடி எல்லா ஆடுகளுமே செல்வது போல்)
4.அதைப் போன்று மனிதனின் வீரியத் தன்மை தன்னைத்தானே தான் உணராமல்
5.மிருகத்தின் நிலைக்கொப்பத் தான் மனித அறிவின் ஞானம் சென்று கொண்டுள்ளது.

அந்தந்தச் சரீரத்திற்குகந்த அமிலத்தின் வீரிய குணத்தைக் கொண்டு அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்கித் “தன் அறிவால் உயர் தன்மை பெறக்கூடிய சக்தி மனிதனுக்கு உண்டு...!” என்பதை அறியவில்லை... உணரவும் இல்லை.

இப்பூமியின் தொடர்பு கொண்ட நட்சத்திரங்களின் தொடர்பில் உயிர் பெற்ற ஜீவ ஆத்மாக்கள் அனைத்துமே ஒன்று போல இருப்பதில்லை.

எந்தெந்த நட்சத்திரத்தின் வலுவுடன்… எந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு நிலையுடன் தொடர்பு கொண்டு இப்பூமி சுழல்கின்றதோ அத்தருணத்தில் உயிர் பெற்ற ஜீவாத்மாக்கள்
1.குணங்களிலும்…
2.செயல்களிலும்…
3.உருவ மாற்றத்திலும்…
4.வண்ணத்திலும்…
5.ஒருவரை ஒத்து ஒருவரில்லாமல் தான் இருக்கும்.

இதை முதலில் உணர்ந்து கொண்டு... மனிதனுக்குண்டான “உயிர்த் தன்மையின் உயர்வு நிலையை...” உணர்ந்து செயல்படுதல் வேண்டும்.

சூரியன் எப்படி நாற்பத்தி ஏழு கோள்களின் தொடர்புடன் தன்னையும் வளர்த்து... தன் குடும்பக் கோள்களின் தொடர்பிலும் வளர்ச்சி பெற்றுச் சுழலும் செயல் நடக்கின்றதோ... அதைப் போன்றே ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதனதன் ஈர்ப்பின் சுழற்சி தொடர் நட்சத்திர மண்டலங்கள் உண்டு.

நம் பூமியின் தொடர் நட்சத்திரம் இருபத்தி ஏழும் பூமியுடன் இருபத்து எட்டாகச் சுழலும் தொடர்ச்சியில் பூமியின் ஈர்ப்பு வளர்ச்சிக்குத் துணைக் கோள்களாக இந்நட்சத்திரங்களின் வலுவைக் கொண்டுதான் “ஜீவ ஞான சரீரங்கள் (மனிதர்கள்)” இந்தப் பூமியில் மட்டுமே உருப்பெற்று உள்ளது.

அதாவது ஜீவ அலையின் ஞான ஒளி உணர்வின் எண்ணத்தின் மையக் கருவின் செயல் வலுப் பெற்று வாழக்கூடிய தகுதி நாற்பத்தி எட்டுக் கோள்களில் இப்பூமிக்கு மட்டும் உண்டு என்றால் இப்பூமியைச் சுற்றியுள்ள வலுக் கொண்ட இவ் இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் “ஜீவன் கொடுக்கும் ஜீவ நட்சத்திரங்கள் தான்...!”

ஜீவனை வளர்க்கவல்ல அத்தகைய ஜீவ நட்சத்திரங்களும் நட்சத்திரங்களிலேயே பல மாற்றுச் செயலை நிலைக்கத்தக்க பல கோடி தன்மைகள் கொண்ட நட்சத்திரங்களும் உண்டு.

இப்பூமியின் வடிவ நிலையையும் இப்பூமியின் தன்மையையும் ஆதிகாலத்தில் ஒலி ஒளி தொடர்பு நிலை விஞ்ஞான ரீதியில் பெறாத காலத்தில்…
1.வான சாஸ்திரத்தின் பல உண்மைகளையும்
2.பூமியின் இயற்கை மாற்றத்தின் நிலைகளையும்
3.இப்பூமிக்கும் மற்றக் கோள்களின் சந்திப்பு நிலைகளையும்
4.இவ் இருபத்தி ஏழு நட்சத்திரத்தின் தொடர்பு கொண்டுதான் மனிதன்
5.விஞ்ஞானம் வளராத காலத்தில் தன் ஞானத்தால் அன்றே அறிந்தான்.

பல ஆயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்பு ஆழ்கடலில் பயணம் செய்தவர்களெல்லாம்
1.துருவ நட்சத்திரத்தையும் விடிவெள்ளி போன்ற சில நட்சத்திரங்களையும்
2.இப்பூமியின் ஈர்ப்புத் தொடர்பில் பூமியின் ஈர்ப்புடனே சுழலக்கூடிய நிலையை அறிந்த ஞானத்தால்
3.இயற்கை நிலைகளை மனிதர்கள் அன்றே அறிந்தார்கள்.

அவர்கள் அறிந்த வழியிலேயே நம் அறிவின் ஞானத்தை உயர் ஞானமாக்க வேண்டும் என்பதனை உணர்ந்து அந்த ஞானிகள் காட்டிய வழியில் செயல்பட வேண்டும்.

ஏனென்றால் மனிதனுடைய உணர்வின் எண்ண ஜீவ சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளியை “எந்நிலை கொண்டு அதிலே வீரியத் தன்மையைப் பெற வேண்டும்...?” என்ற பக்குவத்தைத்தான் பல வழிகளில் இது நாள் வரை போதித்துள்ளோம்.

July 19, 2023

ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு

தியானம் செய்யும் அன்பர்களுக்குள் கொஞ்சம் குறையாக வந்து விட்டால் குறையை வளர்த்துக் கொள்ளத்தான் முடியுமே தவிர “மகரிஷிகள் உணர்வை எடுக்க முடியாது...”

1.கூட்டமைப்பாக இருக்கும் ஸ்தாபனத்தைக் காக்க வேண்டும் என்ற நிலை வரும் ஆனால் குறைகள் தான் வளரும்...
2.மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்பது முதலில் வராது.

தன்னுடைய நிலைகள் முன்னணியில் எது போகும்...?

எதன் வளர்ச்சி வந்ததோ நம்மை அறியாமலே ஸ்தாபனத்தின் உணர்வுகள் குரு கொடுத்த உணர்வுகளை பெறாதபடி தடுக்கும் நிலை தான் வருமே தவிர இதை வளர்க்க முடியாது. காப்பதாக நினைப்போம்... அதைக் காக்க முடியாது.

காப்பதாக நினைத்துக் கொண்ட பற்று என்ன செய்யும்...?
1.உயர வேண்டும் என்று ஆசை இருக்கும்
2.ஆனால் காக்க வேண்டும் என்ற நிலை இருக்காது
3.நம்மை அறியாமலே காக்கும் நிலைகள் தவறிவிடும்.

காக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கும் ஆனால் அந்தப் பற்றின் தன்மை என்ன செய்யும்...? அறியாதபடி “பிழைகளாக” வந்துவிடும்.

எப்படி...?

நான் (ஞானகுரு) ஸ்பின்னிங் மில்லுக்குள் இயந்திரம் எவ்வாறு ஓடுகின்றது என்று பார்ப்பதற்குச் செல்கிறேன். அப்பொழுது என்ன நடந்தது...?

வழியில் இருந்த சாக்கடையைத்தான் நான் கவனித்தேன் தலைக்கு மேல் உயர்ந்த இடத்தில் இருக்கும் கம்பியை நான் பார்க்க முடியவில்லை.

ஆனால் உங்களுக்கு நான் எல்லாவற்றையும் உபதேசிக்கின்றேன் அதே சமயத்தில் அந்த அவசர காலம் அதில் மோதுகின்றது மோதும் பொழுது மண்டையில் இடித்து விட்டது.
1.தவறிப் போய் இடித்து இருந்தால் ஆள் அவுட் ஆயிருக்கும் (நான் இறந்திருப்பேன்). அந்த மாதிரியான இடத்தில் தான் மோதி இருக்கின்றது.
2.ஆகவே... தவறுகள் யார் எதைச் செய்தாலும் அந்த சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி இயக்குகின்றது...?
3.அதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் செல்லும் பாதைகளில் அது போன்ற சந்தர்ப்பங்கள் வரும் பொழுது அந்த தீமை நம்மை இயக்கி விடாதபடி அந்த நேரத்தில் “நம்மைப் பாதுகாக்கும் உணர்வை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்...”

ஒரு சந்தர்ப்பம் இப்படி நடந்து விட்டது என்றால் உடனே
1.ஈஸ்வரா...! என்று அந்த உணர்வை நுகர வேண்டும். உயிரை எண்ணி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நாம் தடைப்படுத்திப் பழக வேண்டும்.

உதாராணமாக சமையலே செய்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பிலே வைத்திருக்கின்றோம்... அதிலே வேறு ஒரு பொருள் தவறி விழுந்து விட்டால் என்ன ஆகும்...? ஒரு பல்லியே விழுந்து விட்டால் சமைத்த பொருள் அனைத்தும் விஷமாக மாறிவிடும்.

நல்ல குழம்பை வைக்கின்றோம் அதிலே கசப்பை அதிகமாகப் போட்டு விட்டால் குழம்பின் ருசி கேட்டுவிடும் அதை நாம் மாற்ற வேண்டும் அல்லவா...?

இதைப் போன்று நாம் நல்ல செயல்கள் செயல்படும் பொழுது
1.பிறிதொரு தீமையின் உணர்வுகள் நமக்குள் “வந்தே தீரும்...!”
2.அப்படி வரும் பொழுது அதை நீக்கிப் பழகுதல் வேண்டும்.

அதை நீக்குவதற்கு வழி...?

அதற்குத் தான் “குரு வழி” என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடனுக்குடன் தீமைகளைத் தடைப்படுத்த வேண்டும் என்று திரும்பத் திரும்ப உங்களுக்குச் சொல்வது...!

இதை இராமாயணத்தில் தெளிவாகவே காட்டுகின்றார்கள். இராமன் குகை மீது இருக்கும் பாறையைத் தட்டி வாலி வெளியே வர முடியாதபடி பாதையை மூடி விடுகின்றான். வாலி செயல் இழந்து விடுகிறான்.

குகை மேல் என்கிற பொழுது...
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இங்கே நம் புருவ மத்தியில் வைத்து மூடி விட்டால்
2.தீமை உள்ளே புகுவதற்கு வாய்ப்பு இல்லை... புறத்தால் தடுக்கப்படுகிறது.

உடலுக்குள் வாலி என்ற (தீமை செய்யும்) உணர்வுகள் அதிகமாகி விட்டால் இரண்யன் நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும் ஆகவே தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்து அதை நிறுத்த வேண்டும் என்று சொல்வது.

எல்லோருக்கும் நன்மை செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “சுக்ரீவன்” என்று காரணப் பெயராக வைக்கிறார்கள்.

“கலியும்… கல்கியும்”

அன்றைய மெய் ஞானிகளின் செயலால்... மனித ஞானத்தை உயர் ஞானத்தில் மெய் ஞானப்படுத்தச் செயல்படுத்திய சக்தியின் தொடர் இப்பூமியில் உள்ளதனால்தான் மனித அறிவே வளரக் கூடிய வளர்ச்சி இன்றும் உள்ளது.

இருந்தாலும் இன்று... இப்பூமியில் உள்ள பல கோடி ஆத்மாக்களின் உணர்வின் எண்ண சுவாச அலையின் வீரியத் தன்மை...
1.விஞ்ஞான வளர்ச்சித் தொடரில் செயல்படச் செயல்பட
2.மனித உணர்வின் வீரிய காந்த சுவாச அலையின் தொடர் அதிகப்பட
3.அதற்குகந்த உணவான தாவர இன வளர்ச்சி நிலை குறைவுபட்டு விட்டது.
4.அதனால் மெய் ஞானிகளின் செயல் தன்மைக்கு வேண்டிய ஞான வளர்ச்சிக்கு
5.அந்த ஞானிகள் செயல் நிலை யாவும் இப்பூமியின் அடுத்த பிரளயத்தில் கல்கியின் செயலுக்குச் செயலாகப் போகின்றது.

பொருளைச் சமைக்கவல்ல பக்குவமான உஷ்ணத்தைத் தந்தால் அந்தப் பக்குவப்பட்ட பதத்தில் அதைச் சமைத்து உணவாக உட்கொள்ளலாம்.

ஆனால் அதி உஷ்ணம் ஏறும் பொழுது எல்லாமே கருகும் நிலை ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட உஷ்ணத்தைப் பக்குவப்படுத்தக் கூடிய காலமாகத் தான் இன்றைய “கலியின் மாற்று நிலை...!”

ஏனென்றால் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
1.மனித ஜீவாத்மாக்களின் காந்த உணர்வின் ஒளியின் வலுவிற்கு வலுக்கூட்டும் தாவர இனங்களின் வளர்ச்சி குறைந்து விட்டது.
2.இப்பூமிக்குள் இருக்கும் கனி வளங்களையும் செயற்கைக்காக மனிதன் பிரித்தெடுத்து விட்டான்.. அதனுடைய வளர்ச்சியும் குறைந்து விட்டது
3.அதே சமயத்தில் செயற்கை மின் காந்த ஒலி/ஒளி சக்திகளையும் இக்காற்றலையில் அதிகமாக கலக்க விட்டுள்ளனர்

இத்தனை விபரீத பாதிப்புகளால்... மனித எண்ண உணர்வுகள் தன் ஞானத்தை உயர் ஞானமாக்கி... மெய் ஞானத்தால் மனித சக்தியின் வளர்ச்சி நிலை வளரும்... அறிவின் உருவில் உயரும் நிலையைக் காட்டிலும்... குறுகிய நிலை கொண்டு மனிதனின் வீரியத் தன்மை விஷம் கொண்ட நிலைக்கே சென்று கொண்டுள்ளது.

இத்தகைய தருணத்தில்...
1.யாம் சொன்ன தியான முறையால் இக்கலியின் மாற்றத்திற்குள்..
2.தன்னைத்தானே மனிதன் உணரும் பக்குவச் செயலில் பதமாக வேண்டும்.

நற்குணத்தை வளர்க்கும் அந்தத் தியானத்தையும் சகல மாமகரிஷிகளின் தொடர்பு எண்ணத்தையும் தியானத்தால் கூட்டிக் கொள்ளும் வழிக்கு வர வேண்டும்.

இந்தச் சரீரத்தில் இருக்கக்கூடிய காலத்திலேயே இச்சரீரத்தையே மெய் ஞான உணர்வு பெறக்கூடிய ஒளித் தன்மையைச் செயல்படுத்திக் கொண்டோமானால் இச்சரீரத்தையே ஒளிச் சரீரமாக ஒளிரும் நிலையை நாம் நடைமுறையில் காண முடியும்.

1.உணர்வில் முன் கூட்டி அறியக் கூடிய சூட்சுமத்தைப் பெறக் கூடிய செயலினால்
2.ரிஷி சக்திகளின் தொடர்பை இச்சரீரமே ஏற்கும் செயலுக்கு
3.இச்சரீரமே ஆத்மாவின் ஒளியை ஒளிர வைக்கும் இயந்திரமாகவும் செயலாக்க முடியும்.

இந்த உடலுடன் வாழும் நிலையில்... உயர் காந்த மெய் ஞான உணர்வுடன் நாம் எடுக்கக் கூடிய மூச்சலையின் சுவாசக் காற்று இப்பூமியில் பதியும் பொழுது
1.ரிஷிகளுடன் தொடர்பு கொண்டு...
2.ரிஷி சக்தியின் செயலுக்காக இச்சரீர உணர்வின் மெய் ஞான மூச்சலையைப் பரவச் செய்தால்
3.இப்பூமி எத்தனை ஆண்டு காலங்கள் செயல்பட்டாலும் ஜீவ உடலுடன் எடுக்கக் கூடிய மூச்சலையில்
4.அந்த மெய் ஞானிகளின் மூச்சலைகள்... அது என்றுமே வளர்க்கக் கூடிய வளர்ச்சியின் வித்தாக
5.ஜீவித உணர்வுகளுக்கு ஜீவ உணர்வு செயலாய்ச் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.