ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 30, 2016

நம் நாட்டிலே தோன்றும் அருள்ஞானம் உலகெங்கிலும் படரும் - தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி

இன்று நாம் பார்க்கின்றோம். அரசியல் பேதத்தால் எத்தனையோ பேரழிவுகள் வருகின்றது இன பேதத்தால், மொழி பேதத்தால் எத்தனையோ பேரழிவுகள் வருகின்றது

அவைகள் தற்காலத்தில் நடந்து கொண்டுள்ளதை நாம் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம். இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் வளர்க்க வேண்டும்.
உலக மக்கள் மகிழ்ந்து வாழ வேண்டும்.
மனிதன் அந்தக் கடவுளின் தன்மையை அடைய வேண்டும்.

மனிதனுக்குள் அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடல் வேண்டும் என்ற உணர்வை நமக்குள் ஓங்கி வளர்த்திடல் வேண்டும்.

இதுவே நம் குருநாதர் காட்டிய அருள் வழி.

இன்று நீங்கள் சிறு கூட்டமாக இருக்கலாம். இதனின் உணர்வை வளர்க்கப்பட்டு கருவில் வளரும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறைப்படி செய்தால்
உலகைக் காத்திடும் பெரும் மகரிஷிகளை உங்களால் சிருஷ்டிக்க முடியும்.
இதன் உணர்வால் இந்த நாட்டில் வரும் தீமைகளை ஓட்ட முடியும்.
நல்ல அரசியலையும் நீங்கள் கொண்டு வர முடியும்.
இல்லையென்றால் கொண்டு வர முடியாது.
நமக்குள் நன்மையைப் பெறும் தகுதியைப் பெற முடியாது.
ஆகவே, நம் எண்ணத்திற்குள் மாற்றம் வேண்டும்.

இன்றைய நிலைகள் உலகைக் காத்திடும் நிலைகள் இழந்து உலகைக் குறை கூறிக் கொண்டே போகும் நிலையேதான் நமக்குள் வளர்ந்து கொண்டு வருகின்றது.
அதனால் நமக்குள் குறைகளைத்தான் வளர்க்க முடியும்.
தீமைகளைத் தான் வளர்க்க முடியும்.
பகைமைகளைத் தான் உருவாக்க முடியும்.
பகைமையற்ற உலகை நாம் சிருஷ்டிக்க முடியாது.

உலக அரசியல் சீராக வளர வேண்டும். இந்த எண்ணத்தை நீங்கள் பதிவு செய்யுங்கள். இந்த உணர்வின் தன்மை வரும் போது சீரான அரசியலும் பெருகும். சீரான தெய்வ பக்தியும் வரும்.

ஆக, குறைகளைக் கூறிக்கொண்டு இருக்க வேண்டாம்.

இந்த அரசியல் அந்த அரசியல் என்ற நிலைகளில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளை பிறர் எளிதில் குறை சொல்வார்கள்.

இவர்கள் ஆட்சிக்குப் போன பின்
அந்த அரசியல்வாதிகள் இவர்களுடைய ஆட்சியில் குறை
என்று சொல்வார்கள். இது வழக்கில் வரக் கூடியது.

ஆனால், நமக்கு இது வேண்டாம்.

யார் ஆட்சியில் அமர்ந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும். உலகைக் காத்திடும் உணர்வுகள் அவருக்குள் விளைய வேண்டும், இந்த நாட்டைக் காக்கும் நிலைகள் பெறவேண்டும் என்று இதை வினையாக உங்களுக்குள் சேருங்கள்.

இந்த மனதிற்குள் இந்த உடலுக்குள் இந்தத் தீமைகள் நுழையாது உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
எந்த நிலையிலும் எந்த வகையிலும் எதுவும் புகுந்து விடும்.
ஆக, நஞ்சு எதற்குள் சென்றாலும் அதை அழித்துவிடும்.

ஆட்சி புரியும் பீடத்திற்கு நாம் ஓட்டுப் போட்டு செல்லச் செய்தோம். பெரும் பகுதியான மக்களால் சென்ற அவர்களை நாம் தூஷிக்க்க் கூடாது.

அவர்களின் ஆட்சி சீராக இருக்க வேண்டும், அவர்கள் தெளிந்த மனம் பெறவேண்டும், மக்களைக் காக்கும் எண்ணங்கள் வர வேண்டும் என்று அரசியல் பேதமற்ற நிலைகளில் நாம் இந்த உணர்வுகளைப் பாய்ச்சினால் இந்த நாட்டிற்கு நம் உணர்வுகள் சில சேவையைச் செய்யும்.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அரசியலைப் பற்றி சாமி ஏதோ பேசுகின்றார் என்று எண்ண வேண்டாம். நமது குருநாதர் அனைத்து நிலைகளையும் அறிந்தவர்.

அவர் எமக்குக் காட்டிய நிலைகள் நாம் மனிதர்களுக்குள் விளைய வைக்கும் உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. அலைகளாகப் பெருக்குகின்றது.

மனிதனின் உணர்வுகள் எது பெருகுகின்றதோ அதனின் அலைகள்தான் இந்தப் பூமி முழுவதும் படர்கின்றது.

மனிதன் தன் எண்ணத்தால் எதை எதை ஆசையால் பெறுகின்றானோ
எதை எதை எண்ணத்தால் அழிக்க எண்ணுகின்றானோ
அந்த உணர்வுகள் வெளியில் இருந்து வருவது இங்கே படர்கின்றது.
கேட்போர் உணர்வுகளிலும் பதிவாகின்றது. விளைகின்றது.
அந்த உணர்வலைகள் படர்ந்து காற்றலைகளும் மாறுகின்றது.

மனிதனை அழித்திடும் உணர்வுகள் மனிதனுக்குள்ளே விளைகின்றது. இதிலிருந்து மாற்ற வேண்டும்.
இதை நீ செய்வாய்.
இதைச் செய்யக் கடவாய்.
உனக்குள் இதை விளையச் செய்.

ஒவ்வொரு உணர்வும் மனிதனைக் காத்திடும் உணர்வாக அவர்களுக்குள் விளையட்டும்.
தீமைகள் அகலட்டும், உலகம் மலரட்டும்.
மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு மலரட்டும்
என்று நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் சொன்னார்.

அவர் காட்டிய நிலைகளை உங்களிலே பெறச் செய்வதற்கு இதைச் செய்கின்றேன். அனைத்து பேதங்களையும் அகற்றுங்கள். நாடு நலம் பெறவேண்டும் என்ற உணர்வை உயர்த்துங்கள்.

இங்கே தோன்றும் நிலைகள் கொண்டு
எல்லோருடைய உணர்வுகளும் தோன்றும்.
நிச்சயம் இது படரும்.

நம் தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்பது போன்று நமது நிலைகளைச் செயல்படுத்துங்கள்.

நிச்சயம் அந்த நல்ல நிலைகளைப் பெற முடியும். ஆகவே இதை நாம் உருவாக்க முடியும். அதை நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே பார்க்கலாம்.

உங்கள் அனுபவத்திலும் பார்க்கலாம். 

January 29, 2016

குரு எம்மிடம் சொன்னது - எவரைக் கண்டும் வேதனையோ, சோர்வோ அடையாதே, அவர்கள் அருள் சக்தி பெறவேண்டும் என்ற வலுவை நீ கூட்டிக் கொள்

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியினை நம்முடைய முந்தைய காலங்களில் விட்டுவிட்டோம்.

முந்தைய காலத்தில் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை பெறும் தகுதியை ஏற்படுத்தினார்கள். அது காலத்தால் மறைந்துவிட்டது. அதனைப் பெறும் தகுதியே நம்மிடத்தில் இல்லாது போய்விட்டது.

மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் என்றால் எண்ணத்திற்கு வலு இழந்துவிட்டது. வலுவிழந்த நிலைகளில் நாம் எதைச் செய்யப் போகின்றோம்?

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்றால் அவர்களின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். உணர்வின் தன்மை வலுப் பெறச் செய்ய வேண்டும். வலுப் பெற்ற பின் இத்தகைய தியானத்தைச் செய்ய வேண்டும். தியானத்தில் மகரிஷிகளின் அருள் சக்தியைக் கவரும் திறன் பெறவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் வழியினை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார். மகரிஷிகள் காட்டிய அருள் வழியை நீங்கள் அனைவரும் இப்பொழுது எளிதில் பெற முடியும்.

குருநாதர் காட்டிய நிலைகளில் எம்மிடம் அவர் சொன்னது:-
1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணு.
2.கடவுளால் அமைக்கப்பட்டது அந்தக் கோட்டை என்று எண்ணு.
3.அதற்குள் நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட உடலை ஆலயம் என்று எண்ணு. ஆகவே இதை போதி.
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் நீ தியானி.
5.அவர்கள் பெறவேண்டும் என்று நீ இந்த உணர்வின் தன்மையைப் பதிவு செய்.
6.எவரொருவர் எண்ணி எடுக்கின்றனரோ அவர்கள் அந்த நற்பயனைப் பெறட்டும்.
7.அந்த ஆலயத்திற்குண்டான ஈசனை அவர்கள் மதிக்கட்டும்.
8.அந்த மனிதனாக உருவாக்கிய நல் உணர்வுகளை மதிக்கட்டும்.
9.அதன் உணர்வைப் பெறும் அந்த உணர்வின் தன்மையை நீ பதிவு செய்.
10.நினைவு கொள்ளட்டும். பெறட்டும். அவர்கள் வாழ்க்கை இது என்ற நிலையை எண்ணு.
11.இதைச் சொல்லியும் அதை அவர்கள் எடுக்கவில்லை என்றால் அதைக் கண்டு நீ வேதனைப்படாதே.
12.அவர்கள் பெறவேண்டும் என்று மீண்டும் நீ உன்னுடைய வலுவை ஏற்றிக் கொள்.
13.அவர்களிடம் சொன்னோம் கேட்கவில்லையே என்ற வேதனை உணர்வை உனக்குள் எடுக்காதே.
14.இது உன்னைத் தாழ்வின் நிலைகளுக்கு அழைத்துச் செல்லும்.
15.எப்படியும் அவர்கள் பெறவேண்டும் என்ற உணர்வின் வலுவைச் செருகேற்று.
16.உனக்குள் அவர் பெறவேண்டும் என்ற தியானத்தை நீ கூட்டு.
17.அந்த உணர்வின் அலைகளை உலகிலே பரப்பு.
18.அந்த உணர்வின் துணை கொண்டு பெறட்டும்.
19.அவர்கள் வாழ்க்கையில் அறியாத இருள்கள் நீங்கட்டும்.
20.மெய்ப் பொருள் காணும் உணர்வுகள் அவர்களுக்குள் விளையட்டும்.
21.மெய்ப் பொருள் கண்டுணரும் சக்தி அவர்கள் பெறட்டும் என்ற நிலையில் உன்னுடைய தியானத்தைக் கூட்டிக் கொள்
22.எவரைக் கண்டும் பெறவில்லை என்றால் நீ சோர்வடைந்துவிடாதே.
23.“எல்லோரும் பெறவேண்டும்” என்ற வலுவினை நீ கூட்டிவிடு என்றுதான் சொன்னார்.

அதனைத்தான் நான் செய்கின்றேன்.

பிறர் போற்றுவதற்காக நான் வரவில்லை. பிறர் புகழ்ந்த நிலைகள் அவருக்குள் மகிழ்ந்திடும் நிலை வரப்படும் போதுதான் என் உணர்வுக்குள் இருக்கும் நல்ல உணர்வுகள்
1.என் எண்ணமே என்னைப் போற்றும்.
2.எனக்குள் மகிழ்ந்திடும் நிலைகள் ஊட்டும்.

பிறர் எந்த அளவிற்கு மகிழ்கின்றார்களோ அவரிடமிருந்து வெளிப்படும் உணர்வே
1.உனக்குள் அந்த மகிழ்ச்சியூட்டும் உணர்வுகளாக வளர்ந்து
2.உயர்ந்த உணர்வின் சத்தாக உனக்குள் ஊட்டும்

3.அவர்கள் மெய்ப் பொருள் பெறுவதைக் கண்டு நீ மகிழ வேண்டும் என்றுதான் குருநாதர் கூறினார்.

அவர் எமக்குள் ஊட்டிய இந்த உணர்வின் தன்மைதான்
நீங்கள் அனைவரும் எளிதில் பெறமுடியும் என்று
எனக்கு நம்பிக்கை உண்டு.

நாம் எண்ணியது எதுவோ
அதை நம் உயிர் இயக்குகின்றது
என்று தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். 

January 28, 2016

“என்ன வாழ்க்கை?” என்று தற்கொலை செய்தால் மிருகமாகப் பிறப்பாய் போ..! குருநாதரிடம் பெற்ற அனுபவம்

நமது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்ந்திடச் செய்தார், உழலச் செய்தார், பல இன்னல்களைக் கொடுத்தார் அந்த இன்னல்களை நான் கண்டபின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன்.

“இப்படியெல்லாம் என்னைத் தொல்லைப்படுத்துகின்றாயே.., என்னைக் கஷ்டப்படுத்துகின்றாயே.., இதெல்லாம் எனக்கு வேண்டாம்.., நான் போகின்றேன்...,” என்று சொல்லிவிட்டு
இதைத் தாங்காது தற்கொலை செய்து கொள்ள முயற்சி எடுத்தேன்.
ஒரு முறை அல்ல பல முறை முயற்சித்தேன்.

அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலையில் “என்ன வாழ்க்கை..?” என்று எண்ணினேன்.

என் மனைவியைக் காப்பாற்றினோம். சில நேரங்களில் மகிழ்ந்திடும் நிலைகள் பெற்றோம்.

ஆனால், ஒவ்வொரு நொடிக்கும் இத்தகைய இன்னல் வருகின்றதே
என்ன வாழ்க்கை என்ற நிலைகளை எண்ணி
பல முறை தன்னைத் தற்கொலை செய்யும் உணர்வுக்கே
என்னை அழைத்துச் சென்றது.

அப்பொழுதுதான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.

உன்னுடைய உணர்வின் தன்மை கொண்டு பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்று எண்ணுகின்றாய்.

இதைப் போல அந்தத் தீமையின் உணர்வுகளை நீ உனக்குள் நுகரும் போது உன் நன்மையின் நிலைகளைச் செயலற்ற நிலைகளாக அது எவ்வாறு மாற்றுகின்றது?

இந்த உடலை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

எத்தனை உடல்களில் நீ உன்னைக் காத்திட வேண்டும் என்ற உணர்வின் நினைவு கொண்டாய். பரிணாம வளர்ச்சியில் இன்று நீ மனிதனாக ஆனாய்.

ஆனால், மனிதனான பின் இந்தச் சிறு குறைகளைத் தாங்காது இந்த உணர்வின் தன்மை உனக்குள் வளர்க்கப்படும் போது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது.

இந்த உடலை அழித்துவிட்டால்
இந்த உடலை அழித்துவிடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை
அந்த உடலையும் அழித்திடும் நிலைகளுக்குச் சென்று
இதைப் போன்ற உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட நீ மிருகமாகப் பிறப்பாய் போ..,” என்ற நிலைகளில் சாபமிடும் நிலைகள் கொண்டு நீ சிந்தித்துப் பார்.

இந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது? எதனை நீ அறிய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார் குருநாதர்.

ஆகவே, நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்? எதனை நமக்குள் பருக வேண்டும்? என்ற பேருண்மையை குருநாதர் அங்கே காட்டுகின்றார்.

இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியில் குருநாதர் எமக்குக் கொடுத்ததைத்தான் உங்களுக்குச் சொல்கிறோம்.

  •              நீங்கள் அனைவரும் இதைப் பெற முடியும்
  • ·         உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும்.
  • ·         தீமையற்ற உடலாக மாற்ற முடியும்
  • ·         தீமையற்ற நிலைகளை உங்கள் உடலுக்குள் விளைய வைக்க முடியும்.
  • ·         என்றும் பிறவா நிலை என்ற பெரு நிலைகளில் அடைய முடியும்
  • ·         உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும்.
  • ·         உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும்
  • ·         உங்கள் வாழ்க்கையினுடைய நிலைகள் மன நிம்மதி பெற முடியும்
என்ற இந்த நிலைகளைத்தான் உங்களுக்குள் தெளிவாகக் காட்டுவதும் இதை உங்களுக்குள் போதிப்பதும்.

ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் அந்தச் சக்திகளை எளிதில் பெற முடியும். வாழ்க்கையில் எதிர்படும் எத்தகைய சிக்கல்களையும் மாற்ற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

January 27, 2016

“பிறவிக் கடனை அற்றுச் சென்ற” மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெறக்கூடிய வழி

ஒரு கோவிலில் தேரை இழுக்கிறோம் என்றால் பல ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்துதான் அதை இழுக்கின்றோம்.

மிகச் சக்தி வாய்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் எப்படியும் கவர வேண்டும் என்பதற்காகவே யாம் உபதேசிக்கின்றோம்.

மகரிஷிகள் காட்டும் உணர்வுகளை உங்கள் உடல்களில் உணர்ச்சிகளை உந்தச் செய்கின்றோம். அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை உங்களுக்குள் உந்தச் செய்கின்றோம்.

அந்த உணர்வின் வலிமை கொண்டு நாம் ஏங்கித் தியானிக்கும்போது நமக்கு முன் படர்ந்திருக்கும் இந்தச் சக்தியை நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் கவர்ந்தால் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் கவர முடியும்.

ஏனென்றால், அந்த மகரிஷிகள் பிறவிக் கடனை அற்றுச் சென்றவர்கள்.

அந்த எண்ணத்திற்குள் நம் எண்ணம் வலுவற்றது.
“சுட்டுப் பொசுக்கிவிடும்” அவர்களின் நிலைகள்

அத்தகையை நிலைகளில் அவர்கள் இருப்பினும் அவர் இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் போது மனித உணர்வுக்குள் சிக்கியிருந்தால் பிறவி நிலைக்கே வந்திருப்பார்.

பிறவிக் கடனை அகற்றி
எந்த மனிதனும் இதை இழுக்காதபடி
விண்ணின் ஆற்றலின் வலுக் கொண்டு சென்றவர்கள் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே படர்ந்திருக்கும் போது அவர்களின் உணர்வுகளை நமக்குள் வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

வலுப் பெறச் செய்ய வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?

மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி யாம் உபதேசிக்கும்போது அந்த உணர்வின் தன்மை பதிவு செய்து எண்ணத்தை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

வலுக் கூட்டிய எண்ணத்தின் துணை கொண்டு ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து காற்றிலிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர வேண்டும்.

கவர்ந்து உலக மக்கள் எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வின் ஏக்கம் கொண்டு அதை இழுத்துச் சுவாசித்து அந்த மூச்சலைகளைப் படரவேண்டும்.

அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற நிலை வரும்போது
நம் ஈர்ப்பிற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
(ஒவ்வொருவருக்கும்) அது எளிதில் கிட்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவைகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

மகரிஷிகள் சென்ற பாதையில் சென்றால்
இந்த உடலுக்குப் பின் இன்னொரு பிறவி என்ற நிலை இல்லாது
என்றுமே அழியாத நிலைகள் கொண்டு
சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழ முடியும்.
எமது அருளாசிகள்.

புறக்கண் - அகக்கண் - நெற்றிக்கண் - முக்கண்

வேதனை என்ற உணர்வு வந்தால் உடனே நாம் எதைத் தியானிக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நம் உயிரான ஈஸ்வரனிடமே வேண்டித் தியானிக்க வேண்டும்.

நீங்கள் கண்ணிலே பார்த்துப் புற நிலைகள் கொண்டு நுகர்கின்றீர்கள்.
இது புறக் கண்.

நுகர்ந்தபின் உயிர் என்ன செய்கின்றது? அகக் கண்ணாக இருக்கின்றது.
அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை நம் உடலுக்குள் உணர்த்துகின்றது.
உணர்வின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

நம் கண் புறக் கண், உயிர் அகக் கண்

இந்த உடலுக்குள் இருக்கப்படும் போது
இந்த உடலான சிவனுக்கு நெற்றிக் கண் – உயிர்.

நம்முடைய சிவ தத்துவத்தில் இவ்வளவு அழகாகக் கொடுத்துள்ளார்கள். நாம் நுகர்வது நம் உயிரில் பட்டுத்தான் அந்த உணர்வுகளை அறியச் செய்கின்றது.

அதே சமயத்தில் மனிதனான நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்தக் கண்ணால் எடுக்கின்றோம். எடுத்து உயிரான நிலைகளில் இணைக்கின்றோம்.

அகஸ்தியன் எப்படி ஒளியின் சரீரம் பெற்றானோ அந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்று அந்த உணர்ச்சிகளை இங்கே எடுத்துச் செல்லப்படும் போது
கண்ணின் நினைவினைக் கொண்டு
முக்கண் என்ற நிலைகளில் இதை இழுத்து
இங்கே ஆன்மாவில் இருப்பதை இழுப்பதைக் காட்டிலும்
ஈஸ்வரா என்று தடைப்படுத்தி
துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெறவேண்டும் என்று இங்கே இணைத்தல் வேண்டும்.

அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் செல்லப்படும் போது இங்கே வரும் தீமைகளைத் தடைப்படுத்துகின்றது.

அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் செலுத்தப்படும் போது அந்த உணர்வுகள் வலுப் பெற வலுப் பெற இந்த ஆன்மாவிலிருந்து தீமைகளை நீக்கிவிடுகின்றது.

கோபமாக இருக்கும் போது ஒருவர் நல்லது சொன்னால்
நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

வேதனையாக இருக்கும் போது சிரித்து ஆடி சந்தோசப்படலாம் என்று
ஒருவர் வந்தால் எப்படி இருக்கும்?

வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.
சந்தோசப்பட வேண்டும் என்ற நிலையில்
உங்கள் முன்னாடி ஒருவர் வந்து ஆடினால் என்ன செய்வீர்கள்?

நம்மைக் கிண்டல் செய்கிறார், கேலி செய்கிறார் இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கின்றார் என்று உதைக்கத்தான் வருவீர்களே தவிர நல்லதை விடுவோமா?

இந்தப் புறக் கண் அந்த உணர்வின் தன்மையை வலிமை பெறச் செய்துவிடுகின்றது.

ஆகவே, இதைத் தடைப்படுத்தி ஈஸ்வரா என்று அகக் கண்ணின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுக்கப்படும் போது அதன் வழி உணர்வுகளை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

சிறிது நேரம் இழுத்தவுடனே
ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவினைச் செலுத்தி
அவனிடமே வேண்டுதல் வேண்டும்.

ஏனென்றால், அவன் தான் நாம் நினைப்பதையெல்லாம் உருவாக்குகின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்தப் புறக் கண்ணின் நினைவை அகக் கண்ணுடன் இணைத்து அதன் வழி நம் உடலுக்குள் செலுத்த வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் ஒருவரிடத்தில் பழகுகிறோம் என்கிற பொழுது எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணும் போது உடனே அது அங்கே இயக்குகின்றது.
அதே உணர்வு நம்மை இயக்குகின்றது.
நமக்குள் அந்தத் தவறைச் செய்ய வைக்கின்றது.
சிந்தனை இழக்கச் செய்கின்றது.

ஆனால், இதைப் போல நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நாம் உணர்வை உந்தப்படும் போது உள்ளுக்குள் இழுக்காது தடைப்படுத்தப்படுகிறது.

இந்த உணர்வின் தன்மை வலிமையான பின்
இங்கே நிற்பதற்கு வழி இல்லை.
தீமைகளைத் தள்ளிவிட்டு விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் நம் ஆத்மாவைச் சுத்தம் செய்ய வேண்டிய முறை இதுதான். 

January 26, 2016

தற்கொலை செய்யும் எண்ணத்திற்குப் பதிலாக உலகையே காத்திடும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் மாற முடியும்

ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்ப பேதத்தால் வெறுப்போ, வேதனையோ கோபமோ இதைப் போன்ற சந்தர்ப்பம் வந்தால் இன்று பெரும் பகுதி தற்கொலையில் தான் முடிகின்றது.

தற்கொலை செய்த அந்த உணர்வலைகள் படர்ந்தபின்
அந்தக் குடும்பத்திலே பரவி
அதனின் செயல்களைத் தொடர்ந்து
மற்றவர்களையும் வீழ்த்தும் நிலையே வருகின்றது.

தற்கொலை செய்து கொண்ட இந்த ஆன்மாவும் யார் மேல் பற்று கொண்டதோ அவர் மேல் ஊடுருவி அவரையும் வீழ்த்தும். அவர் மேல் பற்று கொண்டிருந்தால் அவரையும் வீழ்த்திவிடும்.

இதைப் போன்ற நிலைகளை அந்த உணர்வின் தன்மையை தாங்காது தற்கொலை செய்துகொள்ளும் உணர்வுகள் அந்தக் குடும்பத்தில் பரவிவிட்டால் இந்த எண்ணங்களே ஓங்கி வளர்ந்துவிடுகின்றது.

ஆக, சிரமம் வரும் பொழுதெல்லாம்
அந்த உணர்வுகளைத் தூண்டி
மனிதன் என்ற நிலையில்லாது உருக்குலையும் நிலைகளையைத் தான் உருவாக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா? பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக உருவாக்கிய நம் உயிரை மறந்து மீண்டும் புழுவாகப் பூச்சியாக, மிருகமாகவோ, விஷம் கொண்ட உயிரினங்களாகவோ நாம் செல்லலாமா?

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

 ஒரு நஞ்சின் தன்மை நம்மைத் தாக்கிவிட்டால் நினைவிழப்பது போல் இன்று நஞ்சு கொண்ட உணர்வாக விளைந்து கொண்டிருக்கும் உணர்வுகளைச் சுவாசித்தவுடன் நம்மையும் (தற்கொலை செய்யும் உணர்வுக்கே) தன்னை அழித்துக் கொள்ளும் சிந்தனைகள் வளர்ந்து விட்டது.

இன்று விஞ்ஞான அறிவால்
உலகில் நஞ்சு கொண்ட காற்று மண்டலமாகப் பரவி
மனிதனின் சிந்தனையை அழித்திடும் உணர்வுகள் விளைந்து
அதிலிருந்து மீளமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளோம்

உலகில் பேரழிவைத் தேடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கும்
மனித உருவைச் சீர்குலையச் செய்து கொண்டிருக்கும்
இந்த உணர்விலிருந்து மனிதன் மீள வேண்டும் என்றுதான்
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கூறினார்.

இப்பொழுது நான் இதைச் சொன்னாலும் “இவர் கடவுளே இல்லை என்று சொல்கிறார்.., ஊரை ஏமாற்றுகின்றார்..,” என்ற நிலைகளிலும் எம்மைப் பற்றிச் சொல்வோர் சிலர் உண்டு
எத்தனை பேர் ஏளனமாகப் பேசினாலும்
யார் எதைச் சொன்னாலும் அதை நான் எண்ணவில்லை.

ஆகவே, நீங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று தீமைகளிலிருந்து மீள வேண்டும்.
உங்களை அறியாத சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
மெய்ப் பொருள் காணும் நிலைகள் நீங்கள் பெறவேண்டும்.

உங்கள் பேச்சால் மூச்சால் உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களிலே விளைய வேண்டும். இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையை நீக்கிடும் உணர்வுகளாக மாறவேண்டும்.

உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் மகரிஷிகளின் அருள் உனர்வுகள் பதிந்திட வேண்டும். அவர்களுக்குள்ளும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் விளைய வேண்டும்.

இந்த நோக்கத்தில்தான் உங்களிடம் மகரிஷிகளின் அருளாற்றல்களைப்  பரவச் செய்து இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் விளையச் செய்து கொண்டுள்ளோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் வைராக்கியமாக இதைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் போகும் பாதை தெளிவாகத் தெரிய வரும். உங்களுக்குள் மகரிஷிகளின் அருளாற்றல்கள் விளைவதையும் உணர முடியும்.

தன்னை அழித்திடும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு தன்னைக் காத்து, தன் குடும்பத்தைக் காத்து, உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் ஒவ்வொருவரும் மாறுங்கள்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி,
இந்த மனித உடலுக்குப் பின் - பத்தாவது நிலை
கல்கி என்ற அழியா ஒளிச் சரீரம் பெறுங்கள்.