ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2020

வயதாகி விட்டாலே நோய் வரும் என்று ஏன் சொல்கிறோம்...?

பெரும்பகுதியானவர்கள் எனக்கு வயதாகி விட்டது. அதனால் என் உடலில் நோய் வந்து விட்டது என்பார்கள். இப்பொழுது செய்ததனால் வந்ததல்ல அந்த உடல் நோய்.
 
இளமையிலிருந்தே ஏங்கிப் பெற்ற... சந்தர்ப்பத்தால் பார்த்துணர்ந்த தீமைகள் அதிலிருந்து விடுபட...
1.நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள் நமக்குள் விளைந்து
2.அது வளர்ச்சி பெறும் போது விதி என்ற நிலையாகி
3.விதிப்படி வினைகள் விளைந்து நோயாகி... வேதனையாக நமக்குள் வளர்க்கின்றது.
 
அப்படிப்பட்ட விதிப்படி விளைந்த உணர்வுகளை அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து “அந்த விதி என்ற இருளை நீக்கி அருள் ஞானியுடன் ஒன்றச் செய்வதே மதி...!” . மகரிஷிகளின் அருள் சக்தி என்ற மதி கொண்டு விதியை மாற்ற வேண்டும்.
 
தன் மதி கொண்டு தான் மனிதருக்குள் எத்தனையோ விஞ்ஞானம் உருப் பெற்றது... எத்தனையோ அருள் ஞானம் உருப்பெற்றது.
 
ஆகவே... அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்துவோம். நம்மை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுவோம்.
 
இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலேயும்... அந்த மகரிஷிகளின் ஆற்றலை நமக்குள் செலுத்தி நம்மை அறியாது சேர்ந்த நோய்களை அகற்றுவோம். 
 
ஏனென்றால் ஒவ்வொரு நோடியிலேயும் நம் வாழ்க்கையில் முன்பு செய்து கொண்ட வினையே (விதியாக) இது வருகின்றது.
 
ஒருவர் விபத்தில் சிக்கினாலோ அல்லது அதைக் கேட்டுணர்ந்தாலோ அந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற்றால் நம் நல்ல குணங்களையும் அது இருள் சூழச் செய்து விடுகிறது.
 
அந்த விபத்தைப் பார்த்துணர்ந்த... கேட்டுணர்ந்த... அதே நிலைகள் நம்மை இயக்கி நம்மை அறியாமலே சில நோய்கள் வந்து விடுகின்றது... விபத்தும் ஏற்பட்டு விடுகின்றது.
 
இதைப் போல் நாம் நுகர்ந்த உணர்வின் தன்மை கொண்டு நம்மை அறியாமலே அந்த உணர்வுகள் அழைத்துச் சென்று... அந்த வினைகளுக்கு ஆளாக்கி... அந்தத் தீவினையே நமக்குள் விளையச் செய்யும் நிலையாக உருவாகின்றது.
 
இதைப் போன்ற தீயவினைகளைக் கேட்டுணர்ந்தாலும் அடுத்த கணம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.
 
சுத்தப்படுத்திய பின்பு நாங்கள் பார்க்கும் அனைவரும் நலம் பெறவேண்டும்... அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெற வேண்டும்... அவர்கள் குடும்பங்கள் அனைத்தும் நலம் பெறவேண்டும்... என்ற இந்த உணர்வை நமக்குள் வளர்த்துக் கொண்டால் நாம் எண்ணும் இந்த நல் உணர்வுகளை உயிர் நமக்குள் விளையச் செய்கின்றது. அந்த வலுவாக வளரச் செய்கின்றது.
 
எண்ணியவுடன் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுவதற்குண்டான தகுதியை நாம் பெற வேண்டும்.
 
அதற்கு... நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.
 
இந்த வாழ்க்கையில் வந்த இருளை வென்று அங்கே உடல் பெறும் உணர்வுகளைக் கரைக்கச் செய்து அறிவின் ஒளியாக நம் முன்னோர்களை நிலைக்கச் செய்ய வேண்டும்.
 
அப்படி நிலைக்கச் செய்து... அந்த அறிவின் ஒளியின் தன்மையை நமக்குள் பெறும் போது...
1.நம்மை அறியாது வரும் இருளை நீக்கும் ஆற்றல் பெறுகின்றோம்.
2.பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலையும் நாம் அடையும் தன்மை பெறுகின்றோம்.
 

ஆகவே குருநாதர் நமக்குக் காட்டிய இந்த அருள் ஞான வழியில் செல்வோம்.

பால்வெளி மண்டலமும்... அதிலிருக்கும் அபரிதமான சக்திகளைப் பற்றியும் ஈஸ்வரபட்டர் சொன்னது

இந்தப் பூமி பால்வெளி மண்டலத்திலிருந்து சூரியனின் ஒளிக் கதிரினால் வந்துள்ள அணுக்கதிர்களை
1.எப்படித் தனதாக ஈர்த்துப் பல கனி வளங்களை வளர்க்கின்றதோ அந்த நிலை போல்
2.இந்தப் பூமி எனும் மண்டலத்தில் “நம் ஆத்ம மண்டலம் எந்தச் சக்தியையும் கண்டுணரலாம்...”
 
நம் பூமியில் சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு பூமியும் நாமும் மட்டும் பலன் பெறவில்லை. பூமிக்கும் மற்ற எல்லா மண்டலங்களுக்கும் பொதுவான பால்வெளி மண்டலத்தில் உள்ள சக்தி நிலையை யார் அறிவார்...?
 
இந்தப் பால்வெளி மண்டலத்திலும் பல கோடி உயிரணுக்கள் உயிர் பெற்று வாழ்ந்து... அந்த நிலையிலேயே மாற்றுடல் பெற்றுப் பல நிலைகள் நடக்கின்றன.
 
இந்தப் பால்வெளி மண்டலத்தில் பல அமில சக்திகள் நிறைந்தே திரவ நிலையில் படர்ந்துள்ளன.
 
இன்றைய நம் விஞ்ஞானிகள் இதை உணர்ந்தாலும்... அந்தத் திரவத்தையும் நம் பூமிக்கு ஈர்த்து எடுத்திடும் நிலைப்படுத்தி... “அந்த இயற்கையின் சக்தியையே தன் செயற்கையின் அழிவுக்குச் செயல்படுத்திடுவர்...”
 
இன்னும் இந்த வான மண்டலத்தில் எண்ணிலடங்கா சக்தி நிலைகள் படர்ந்துள்ளன. நாம் காணும் நிலைக்கு
1.மேகங்களும் பால்வெளி மண்டலமாகவும் காட்சி அளிக்கும் பால்வெளி மண்டலத்தினால் தான்
2.“அனைத்துக் கோளங்களுமே ஜீவன் கொண்டு சுழல்கின்றன...!”
 
இந்தப் பூமியும் சூரியனும் சந்திரனும் மற்ற எல்லா மண்டலங்களுமே தன் நிலையில் ஒரே இடத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டுள்ளது என்பதல்ல. சுழன்று கொண்டே... ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்காவண்ணம்... சுற்றிக் கொண்டே ஓடுகின்றன.
 
வழக்கமாகத் தெரியும் நட்சத்திரங்களைக் காட்டிலும் புதிய புதிய நட்சத்திர மண்டலங்களையும் வான்வெளியில் காண்கின்றோம்.
 
இந்தப் பூமியின் ஈர்ப்பு சக்தியின் நிலை கொண்டும்... இந்தப் பூமியின் அமில சக்தியின் தொடர்பு கொண்ட நட்சத்திர மண்டலங்களாக வாழ்ந்திடும் மண்டலங்களும்... இந்தப் பூமியின் ஓட்டத்துடன் தன் ஈர்ப்பு சக்தியையும் ஒன்றுபட்டுள்ளதால்... இந்தப் பூமியுடனே அவற்றின் நிலையும் சுழன்றே இதன் ஈர்ப்புடனே வருகின்றன.
 
புதிய நட்சத்திர மண்டலங்கள் என்பது இந்தப் பூமியின் ஓட்டத்தினால் அங்கங்குள்ள இப்பால்வெளி மண்டலத்திலிருந்து ஒன்றுபட்ட அமிலத்தினால் சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாக ஆங்காங்கு சுழலும் நட்சத்திர மண்டலங்கள்.
 
இச்சுழலும் வேகத்தில் ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குகின்றன. சில நட்சத்திர மண்டலங்கள் மாறு கொண்ட அமில கக்தி கலந்துள்ளனவாக இருந்தால் இவ் ஈர்ப்பில் வந்தடையாமல் உருகும் நிலையாக பரந்த நிலைப்படுத்திப் பிரித்து விடுகின்றது.
 
இன்று காணும் நட்சத்திர மண்டலங்கள்... இந்தப் பூமியைப் போலவும் இந்தப் பூமியின் நிலைக்கொப்ப வளர்ந்த நிலை கொண்ட பெரிய மண்டலங்களின் நிலை போலவும் இல்லாமல்... ஆவியான அமிலங்கள் ஒன்றுபட்டுக் கரையும் நிலை கொண்ட வடிவத்தில் தான் சுழன்று கொண்டுள்ளது பனிக்கட்டியைப் போல்.
 
பனிக்கட்டி என்பது குளிர்ந்து நீராகும் தன்மையில் உறைந்துள்ளது. ஆனால் நட்சத்திர மண்டலங்களின் நிலை அதுவல்ல.
1.அமிலமாக அமிலத்தையே ஈர்த்து அமிலக் கோளங்களாக
2.உயிரணுக்களை வளர்த்திடாமல் சுழன்று கொண்டுள்ளவை.
 
இந்தப் பூமியில் உள்ள எல்லாக் கனிவர்க்கங்களுமே கரைபவை தான். ஆவி நிலை கொண்டவை தான் என்று ஏற்கனவே உணர்த்தியுள்ளேன்.
 
சூரியனிலிருந்து வரும் எல்லா நிலை கொண்ட அமிலத்தையும் ஈர்க்கும் நம் பூமியில்... மண்ணும் கல்லும் ஈயம் பித்தளை செம்பு தங்கம் வைரம் இதற்கும் மேல் சக்தி கொண்ட பல படிவங்களும் கலந்துள்ளன.
 
நட்சத்திர மண்டலத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலை கொண்ட அமிலத்தை ஈர்ப்பதனால் நம் பூமியில் உள்ள பல நிலை கொண்ட கனிவர்க்கத்தின் நிலை போல் ஒவ்வொரு நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்கள் பல கோடி நிலைகள் உள்ளனன.
 
இன்றைய இந்தக் கலியில் தங்கத்திற்குப் பொருளாதாரச் செல்வமாக மதிப்புத் தந்திடும் “தங்கத்தையே கோளமாக...” ஒரு நிலை கொண்ட அமிலமாக ஈர்த்து நட்சத்திர மண்டலமாக பல கோடி சுற்றிக் கொண்டுள்ளன.
 
இந்தப் பூமியின் கனி வளங்களின் சக்தி நிலை கொண்ட அமிலங்கள் எல்லாமே தனித்துப் பல நிலைகள் கொண்ட நட்சத்திர மண்டலங்களாகச் சுழன்று கொண்டுள்ளன.

இன்றைய மனிதன் விஞ்ஞானத்தினால் பெரிய கோள்களின் நிலை அறிந்திடச் செல்கிறான். இந்தச் சிறிய கோளமான நட்சத்திர மண்டலங்களின் சக்தி அறியாததனால்...!

September 29, 2020

மெய்ப்பொருள் – மெய் எது...? பொருள் எது...?

சாஸ்திர விதியின் அமைப்பு எவ்வாறு என்ற நிலைகளில் நாம் அனைவரும் தெரிந்து கொண்டால் சாஸ்திரம் மெய் ஆகின்றது. மெய்ப் பொருளைக் காணும் நிலையையும் நாம் அடைய முடிகிறது.
 
ஆனால் அதற்குப் பதில் இன்று சாங்கிய சாஸ்திரத்தில் மூழ்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காண முடியாது மறைந்து விட்டது காலத்தால்...!
 
நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் இந்த உண்மையினை வெளிப்படுத்தி மெய்ப்பொருள் என்பது யாது..? என்ற நிலையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
 
1.நம் உயிரே நமக்குள் மெய் ஆகிறது...!
2.அதே சமயத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய நிலைகள் வெளிப்பட்டாலும்
3.அதிலிருந்து நாம் நுகர்ந்தறிந்த உணர்வின் தன்மையை...
3.அதனின் உண்மையின் உணர்வை நமக்குள் மெய்யாக எடுத்துரைக்கின்றது நம் உயிர்.
 
இதைத் தான் மெய்ப்பொருள் என்று சொல்வது.
 
ஆக... பேரண்டத்தில் எத்தகைய நிலைகள் இருப்பினும்
1.நமக்குள் மெய்யை உணர்த்துவதும்
2.மெய்யின் தன்மையை அறியச் செய்வதும்
3.மெய் வழி நம்மை இயக்கச் செய்வதும் நம் உயிரே.
 
மெய் ஞானிகள் அவர்கள் தன்னுள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையை உயிரின் துணை கொண்டு உலகின் நிலையையும் பேரண்டத்தின் நிலையையும் உண்மையை உணர்ந்தறிந்து அந்த மெய்ப் பொருளைக் கண்டுணர்ந்தனர்.
 
தன் உயிருடன் ஒன்றிய மெய்யாக... மெய்யின் நிலையாக... இன்றும் நிலை கொண்டு சப்தரிஷி மண்டலங்களாகத் திகழந்து கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்த எல்லையை அடையும் வழி முறைகளைத் தான் நமக்கு சாஸ்திரங்கள் எடுத்துக் கூறுகின்றன.

மகாத்மா காந்திஜியைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

இறைவனின் சக்தி பெற்ற இறைவன் தான் நாமுமே...!
 
நம் சக்தியை உயர்ந்த நிலைப்படுத்தி நாம் இவ்வளவு காலங்களும் நம்முள் வளர்த்து வந்த தீய சக்திகளை அடிபணிய வைத்து நம் இறை சக்தியை உணரும் முறை அறிந்தே வழி நடந்திடல் வேண்டும்.
 
இக்கலியின் கடைசி நூற்றாண்டில் தோன்றி மகானாக அவதரித்த அவரும் அவதாரத்தில் மகானாகத் தோன்றவில்லை.
 
எல்லோரையும் போல் பிறவி எடுத்து...
1.பிறப்புடன் பல தவறு கொண்ட வாழ்க்கையில் வழி நடந்து வாழ்ந்து தான் 
2.அந்த நிலையை உணரும் தருவாயில் தன் ஞான சக்தியை வளர்த்து
3.அதை அனைவரும் உணர்ந்திட பல இன்னல்களை ஏற்று அந்த ஞானத்தின் தொடரை தனதாக நிலைநாட்டி
4.இன்றைய மக்கள் உணரும் மகாத்மாவாக வாழ்ந்து காட்டினார்.
 
அந்த நிலையிலும் தான் என்ற தனதாக்கும் இறை பக்தியின் வழியின் பேராசை இல்லாததினால் சக்தி நிலை கொண்ட மகாத்மாவாக ஆனார்.
 
நாம் கண்டு நம்முடன் ஒன்றிய ஓர் ஆத்மாவே மகாத்மாவாக உயர்ந்துள்ளதை உணர்ந்து அவரையே ஆண்டவனாக அவர் அடி நடந்திட்டாலே “நம் ஆத்ம ஜெபமும் கூடும்...” என்ற உணரும் நிலை அவருடன் கலந்து வாழ்ந்தவருக்கும் அன்றும் இல்லை... இன்றும் இல்லை...!
 
1.அன்று நடந்ததுவும்... இன்று நடப்பதுவும் நாளை கனவு தான்...
2.நிலைத்து நிற்பவை அந்த மகாத்மாவைப் போன்றோர் சேமித்து வளரவிட்ட
3.அவர் ரூபத்தில் அவரால் ஏற்படுத்திய நற்போதனை நிலைகள் தான் கனவில்லாத உண்மை சக்தி நிலை.
 
ஆகவே... இன்று இந்தப் பூமியில் வாழ்ந்திடும் இப்பாக்கியத்தை... நம் உடலில் உள்ள இந்த ஈர்க்கும் சக்தியைக் கொண்டே... அனைத்து சக்தியையும் கண்டிடும் பக்குவ நிலையை உணர்ந்தே...
1.இறை பக்தியின் தொடர்பை ஈர்த்து
2.அந்த இறை ஞானம் பெற்றவர்களின் நல் வழித் தொடரில் சென்றிடுங்கள்.

September 28, 2020

தென்னாட்டில் தோன்றிய அக்காலத் தத்துவங்கள் எப்படி மாற்றப்பட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்

நான் (ஞானகுரு) ஏட்டைப் படித்து இதைப் பேசவில்லை. குருநாதர் இந்த உலகின் நிலைகள் அக்காலங்களில் என்ன செய்தார்கள் என்று உணர்த்தினார். அதன் வழிகளில் தான் வெளிப்படுத்துகின்றேன்.
 
அன்றைய அரசர்களும் சரி… அதற்குப் பின் மக்களாட்சி என்று வந்தாலும் சரி… மதத்தின் பேரால் “உலகைக் காக்க…” என்று சொல்லி அவரவர் சுயநலன்களுக்கு என்ன செய்தார்கள்…? அப்படிச் செய்த அரசர்களோ அல்லது அந்த அரசியல் தலைவர்களோ இன்று வாழ்கின்றாரா…? இல்லை…!
 
1.எத்தகைய விஞ்ஞான நிலைகள் முன்னேற்றம் பெற்றாலும்
2.அல்லது வேறு எந்தத் துறையில் அறிவு பெற்றாலும்
3.இந்த உடலிலேயே எவரும் வாழ்ந்ததில்லை.
 
இந்த உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப… எந்த மதத்தின் அடிப்படையில் இங்கே வாழ்ந்தனரோ… அதே மதத்தின் எண்ணத்தால் இந்த ஆன்மா மற்றவர் உடலுக்குள் ஈர்க்க்கப்பட்டு எவ்வாறு செல்கிறது…? என்று நீ தெளிவாகத் தெரிந்து கொள்…! என்று குருநாதர் காட்டினார்.
 
ஆனால் இந்தப் பூமியில் தோன்றிய மனித உடல் பெற்றவர்கள்… உடலை விட்டு நீங்கியவர்கள் இன்றும் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக விண்ணிலே இருக்கின்றார்கள். அப்படி விண் சென்றவர்கள் அக்காலத்தில் நிறைய உண்டு.
 
ஆகவே உனக்குள் நீ பெற வேண்டியது எது…? அதை எவ்வாறு பெற முடியும்…? என்று அந்த மெய் வழியினை உணர்த்தினார் குருநாதர்.
 
தென்னாட்டுடைய சிவனே போற்றி… எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்ற நிலைகளில் நாம் இன்றும் சொல்கிறோம்.
 
1.முதல் மனிதனாகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன்
2.தன் சந்தர்ப்பத்தால் விண்ணுலகை எட்டிப் பிடித்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
3.துருவத்தில் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக ஆனவன்
4.“இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் தான்” என்பதற்கே அவ்வாறு சொல்கிறோம்.
 
அவனில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை தான் வான இயலின் தன்மையில் அவன் பறக்கும் நிலை கொண்டு செல்லும்போது எகிப்து என்ற நாட்டில் இதனின் உணர்வின் அலைகள் அங்கே அதிகமாகப் பரப்பச் செய்தான். விண் அறிவின் தன்மையை அங்கே தான் முதன் முதலிலே வருகிறது.
 
1.விண்ணுலக சாஸ்திரமும்… மணிக்கணைக்கைப் பார்ப்பதும் நம் தென்னாட்டில் இல்லை
2.ஆனால் எகிப்து என்ற நாட்டில் தான் இது உருவாக்கப்பட்டது.
 
ஆண்டுகளை… மாதங்களை… நாள்களை வடிவமைத்து… அந்தக் கணக்குகள் எல்லாம் அந்த நாட்டில் தான் ஆரம்பத்தில் செயல்பட்டது. அழியா நிலை பெற வேண்டும் என்று இவருடைய தத்துவமும் அங்கே வெளிப்பட்டது.
 
சூரியன் ஒளிக்கதிர்கள் படப்படும் போது அந்த ஒளியின் தன்மையைப் பிரித்தெடுத்து இந்த உடல்கள் அழுகிடாதபடி… இன்று எப்படி ஐஸ் பெட்டியில் (REFRIGERATOR) வைத்து நாம் பாதுகாத்துக் கொள்கின்றோமோ இதைப் போல
1.சூரியனின் கதிரியக்கங்கள் அது தாக்காமல் அது இடைப்படும் போது
2.அந்த உணர்வின் தன்மை பிரித்துக் கொண்டு பூமியின் நிலைகள்
3.நீர் நிலை கொண்டு குளிர்ச்சியின் தன்மை அடைந்து அந்தப் பொருள்கள் கெடாது பாதுகாத்துக் கொள்ளும் நிலையைச் செய்தனர்.
 
அதாவது அக்கால மெய் ஞான அறிவால் காட்டப்பட்ட நிலைகளை அரசர்கள் பிரமிட்டுகளாக உருவாக்கிக் கொண்டனர்.
 
சூரியனின் ஒளி இத்தனை டிகிரி இத்தனை சாயலில் வருகிறது என்றும்… இதனின் உணர்வின் தன்மை கொண்டு தான் மணிக்கணக்கை அறிந்ததும்… அதைப் போன்று சூரியனின் இயக்கங்களை அங்கே ஆரம்ப நிலைகளில் கண்டுணரப்பட்டது என்று ஈஸ்வரபட்டர் எமக்குக் காட்டினார்.
 
நான் (ஞானகுரு) சரித்திரப் பாட நிலைக்குச் செல்லவில்லை. குருநாதர் காட்டிய நிலைகளில்தான் நான் இதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு விஞ்ஞான அறிவும் இப்படித் தான் தொடர்ந்தது.
 
ஆனால் அதே சமயத்தில் நம் தென்னாட்டில் தோன்றிய மெய் ஞான ஆறிவின் தன்மை தான் உலகெங்கிலும் பரவி அங்கே தொடர்ந்த நிலை மீண்டும் இங்கே வருகிறது.
 
இதை எல்லாம் குரு காட்டிய வழியில் தொட்டுக் (SAMPLE) காண்பிக்கின்றேன்.
1.ஏனென்றால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதை இணை சேர்த்துச் சொல்லும் போது தான்
2.உங்களுக்கு அதனின் காலத்திற்கு இது உகந்ததாக இருக்கும்.
 
அதற்குண்டான விளக்கங்கள் பதிந்த பின் உங்களுக்குள் இணைத்து வரும் போது “உலக அறிவுடன் ஒன்றி… இன்றைய இயக்கத்தின் நிலைகளைத் தெளிந்து கொள்வதற்கு இது உதவும்…!”
 
வானியல் புவிஇயல் உயிரியல் என்ற அடிப்படையில் உலகெங்கிலும் ஞானிகளால் கண்டுணர்ந்த.. அவர்களால் உருவாக்கப்பட்ட தத்துவங்கள் அனைத்தும்
1.அன்றைய அக்கால அரசர்கள் குறுகிய காலத்திற்குத் தனது சுகபோகத்தை உருவாக்குவதற்காக மறைத்து விட்டனர்
2.அவரவர்கள் இச்சைக்குத் தக்க உணர்வுகள் உருவாக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டு விட்டது.

பல பிறவிகளில் நன்மை தீமைகளைக் கடந்து வந்தாலும்… மனிதப் பிறவியில் நாம் சேமிக்க வேண்டியது ஞானிகளின் சக்தி தான் - ஈஸ்வரபட்டர்

மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”
 
மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்திநிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.
 
ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”
 
இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.
 
1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.
 
இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.
 
வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”
 
1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தேதான் வழி வந்துள்ளோம்.
 
ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.

September 27, 2020

நம் கண்களுக்கு.. கருவிழிகளுக்கு… கண்ணின் திரைகளுக்கு… நாம் கூட்ட வேண்டிய “உயர்ந்த சக்தி”நம் கண்களுக்கு.. கருவிழிகளுக்கு… கண்ணின் திரைகளுக்கு… நாம் கூட்ட வேண்டிய “உயர்ந்த சக்தி”

மெய் ஞானிகள் தன் உடலில் வந்த தீமைகளை எல்லாம் நீக்கி உணர்வின் தன்மைகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த உணர்வின் நிலையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இங்கே பூமியில் சுழன்று கொண்டிருப்பதை ஈஸ்வரபட்டர் எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்ததை நினைவு கொண்டு எண்ணும்போது அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நான் சுவாசிக்க நேருகின்றது.
 
என் உடலுக்குள் அது கலந்த பின்… தங்கத்தில் இரண்டறக் கலந்த செம்பும் பித்தளையும் திரவகத்தை ஊற்றிப் பிரிப்பது போல
1.அந்த அருள் ஞானியினுடைய உணர்வலைகள் என் உடலுக்குள் சென்று
2.தீமை விளைவிக்கும் உணர்வினை அது தணிக்கச் செய்கின்றது…
3.தீமைகளைப் பிரித்துவிடுகின்றது… அதைச் சுத்தப்படுத்துகின்றது
 
இதுதான் ஆத்மசுத்தி என்பது.
 
மற்றவர்களுடைய குறைகளை நான் கேட்டாலும் இந்த முறைப்படி சுத்தப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு முன்னாடி நான் எத்தனையோ வேதனைகளை அனுபவிக்க நேரும்.
 
உங்களுக்கு நன்மை செய்யலாம்… ஆனால் நீங்கள் பட்ட தீமைகள் எல்லாம் எனக்குள் அதிகமாக வந்து எனக்குள் நல்லதை மூடி மறைத்துவிடும்.
 
இதைப் போன்று தான் உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குவதற்கும் இந்த உபாயத்தை… அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையைக் காட்டிக் கொண்டு வருகின்றேன்.
 
எந்த அளவுக்கு நீங்கள் கூர்ந்து இதைக் கவனிக்கின்றீர்களோ இது ஊழ்வினையாக உங்கள் எலும்புக்குள் பதிவாகின்றது.
 
எப்போது நீங்கள் தீமைகளைச் சந்திக்க நேருகின்றதோ அப்பொழுதெல்லாம் ஈஸ்வரா…! என்று உங்கள் உயிரை எண்ணி
1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்ச்சியை நீங்கள் தூண்டப்படும் போது
2.அதைப் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கும்போது
3.நமக்கு முன்னாடி படர்ந்திருக்கும் அந்த மகரிஷிகளின் அருளுணர்வைச் சுவாசிக்க நேருகின்றது.
 
டி.வி.யுடன் சேர்ந்த ஆண்டன்னாவின் பவரைக் கூட்டும்போது வெகு தொலைவில்… செயற்கை கோள்கள் மூலமாக அங்கிருந்து ஒலி… ஒளிபரப்பச் செய்வதைக் கவர்ந்து அது காட்டுகிறது
 
அதை நாம் டி.வி.யில் பார்ப்பதைப்போல அந்த மகா ஞானிகளுடைய உணர்வுகளை இப்பொழுது யாம் சொல்லும்போது கூர்ந்து கவனித்தால் உங்கள் உடலில் ஊழ்வினையாகப் பதிவு ஆவது மட்டுமல்ல…
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிக்குள் நினைவின் ஆற்றல் வளரப்பட்டு
2.அதனின் நிலைகள் கொண்டு ஆழமாகப் பதிவானபின்
3.அந்த  நினைவின் அலைகளை… மகரிஷிகளை எண்ணும்போதே
4.ஆண்டன்னாவின் சக்தியைக் கூட்டியது போல்… நம் கண் (ஆண்டன்னா) மிக சக்தி வாய்ந்ததாக மாறி
5.அந்த ஆற்றல்களைக் கவர்தல் வேண்டும்.
 
ஆகவே இப்பொழுது கேட்டுணரும்போது உங்கள் கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை இணைந்து… நான் சொல்வதை அதே கண் தான் ஈர்த்து ஊழ்வினையாக உடலிலே பதிவு செய்கின்றது.
 
அதே சமயம்
1.உங்கள் கண்ணுக்குள் இருக்கும் கருவிழிகளுக்கு…
2.அந்தத் திரைகளுக்கு அனுப்பும் கண்ணின் நினைவை
3.ஒவ்வொரு நுண்ணிய அலைகளையும் இது சக்தி வாய்ந்ததாகச் சேர்க்கின்றது.
 
பின்பு அந்த ஆண்டன்னா பவர் போல… மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று ஏங்கினால் அதைக் கவர்ந்து உங்களைச் சுவாசிக்கச் செய்து உங்கள் உடலுக்குள் அந்த உணர்வுக்ள் சென்று அறியாது வந்த தீமைகளை நீக்கிட உதவும்.
 
இப்படிச் செய்யாமல் சாமியார் செய்வார்… ஜோதிடம் செய்யும் ஜாதகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் என்ற எண்ணம் இருந்தால்
1.நமக்கு நாமே ஏமாந்து நமக்கு நாமே காலத்தை விரயம் செய்து
2.நமக்கு நாமே தண்டனை கொடுத்துக் கொள்வதுபோல் தான் ஆகும்.
3.யாகங்களைச் செய்தோ வேள்விகளைச் செய்தோ இதை எல்லாம் நிவர்த்திக்க முடியாது.
 
யாகம் என்பதே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெற வேண்டும் என்று இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இது தான் யாகம்… அது தான் வேள்வி.
 
அந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணத்தை நமக்குள் செலுத்தினால் ஒழிய துன்பங்களை அடக்க முடியாது.
 
1.நம் உயிர் ஒரு நெருப்பு
2.அதிலே எதைப் போடுகின்றோமோ அந்த வாசனை தான் வரும்
 
ஒரு நஞ்சினை நெருப்பிலே போட்டால் அந்த நஞ்சின் வாசனை தான் வரும். ஆனால் அதிலே நல்ல மணத்தின் தன்மையைப் போட்டால் நல்ல மணத்தின் தன்மையை நாம் காணலாம்.
 
இதைப் போன்று தான் நம் உயிரில் நல்ல மணத்தின் தன்மையைப் போடும்போது நம் எண்ணங்கள் நல்லதாக வருகின்றது.
 
ஆகவே மிக சக்தி வாய்ந்த ஒரு நறுமணம் கொண்ட நிலையை நாம் இடும்போது அதிலிருந்து வெளிப்படுவதைச் சுவாசிக்கும்போது நல்ல வாசனை கொண்டதாக இருக்கின்றது.
 
ஆனால் நஞ்சான நிலைகள் நெருப்பிலே விழுகும்போது அதை நுகர்ந்தால் நாம் மயக்கம் போட்டுக் கீழே விழுந்து விடுகின்றோம்.
 
இதைப் போலத் தான் நாம் எந்த உணர்வின் தன்மை எண்ணுகின்றோமோ இந்த நெருப்பான உயிருக்குள் இந்த உணர்வின் அலைகளாக உடலுக்குள் சென்று அந்த குணங்களுக்கொப்ப இந்த உடலை இயக்குகின்றது.
 
ஆக அந்த ஞானிகளின் சக்தியை நமக்குள் எடுத்துத் தீமையின் உணர்வுகளை நீக்கி நல் உணர்வின் சத்தை நமக்குள் வலுக்கொண்டதாக மாற்றிக் கொள்வதற்குத்தான் எமது குருநாதர் எனக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்றுதான் உங்களுக்குள்ளும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெறச் செய்கின்றோம்.
 
1.நீங்கள் அனைவரும் மெய்ப்பொருள் காண வேண்டும்
2.உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.இருள் நீங்கிய உணர்வலைகள் கொண்டு நீங்கள் பேசப்படும்போது
4.நீங்கள் வெளியிடும் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவரப்படும்போது
5.பிறருடைய உணர்வுகளுக்குள் அது சென்றாலும் அல்லது
6.நீங்கள் யாருடன் தொடர்பு கொண்டு பேசினாலும்
7.உங்கள் மூச்சின் அலைகள் பிறருடைய தீமைகளை நீக்க இது நிச்சயம் உதவும்.

நாளை நடப்பது எல்லாம் இனி நல்லதாக இருக்கட்டும் – ஈஸ்வரபட்டர்

இன்றைய இவ்வுலக நியதியிலே “நீதி…” என்னும் சொல்லே
1.இக்காலத்திற்குகந்ததாக
2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்
3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி
4.அநீதியையே நீதி என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.
 
இன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது…? தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…!”
 
சத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியா பாமர மக்களுக்குத் தான்…! இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.
 
இச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும் செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில் தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.
 
அவரவர்களே தான்…
1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி
2.நம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்
3.நம் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… நம் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.
 
நம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…
1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்
2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.
 
இன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”
 
இன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.
 
விஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…?
 
இச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.
 
இவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.
1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை
2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.
 
இக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது...!
 
இப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப்போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.
 
அத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…
1இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை
2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.
 
ஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…!
 
வாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…
1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…
2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.

September 26, 2020

குரு பலம் நாம் பெற வேண்டும்

எனக்குள் (ஞானகுரு) வந்த தீமைகளிலிருந்து விடுபட மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “பல உணர்வின் ஒலிகளைக் கூர்மையாகக் கேட்டுணரும்ப்படி செய்து… அந்த உணர்வை எனக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்தார்…!” 
 
1.அவர் பதிவு செய்யும் போது
2.அவரைக் கூர்மையாகக் கவனிக்கும் போது
3.அவர் சொன்ன நிலைகளிலிருந்து
4.எனக்கு வரும் தீய விளைவுகளிலிருந்து என் குருவை எண்ணும் போதெல்லாம்
5.எனக்குள் வந்த தீமையை நீக்கி நல்ல வினைகளை எனக்குள் வளர்க்க முடிகின்றது.
 
அதே சமயம் மற்றவர்கள் என்னிடம் அவர்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கேட்க வரப்படும் போது அந்தக் கஷ்டமான உணர்வுகள் எனக்குள் கேட்டறிந்தாலும் “அந்தக் கஷ்டம்” என்னை இயக்காதவண்ணம் மாற்ற முடிகிறது.
 
இப்பொழுது கசப்பு புளிப்பு காரம் போன்ற பல சரக்குகளை இணைத்து எப்படிச் சுவையாகச் சமைத்து உணவாக உட்கொள்கின்றோமோ அதைப் போல் என்னால் மாற்றிக் கொள்ள முடிகிறது.
 
ஏனென்றால் ஒவ்வொருவரும் என்னை அணுகும் போது அவர்களின் துன்பத்தையும் கஷ்டத்தையும் சொல்லும் போது அதைக் கேட்டுணர்ந்து தான் நான் பதில் சொல்ல வேண்டியது வரும்.
 
1.உங்கள் உடலில் விளைய வைத்த துன்பங்களை நீங்கள் சொல்லும் போது 
2.நான் கேட்டறியப்படும் போது அந்தப் பலவும் சேர்த்து என் உடலுக்குள் வந்தால்
3.ஒரு நூறு பேர் சொல்கிறீர்கள் என்றால்.. எனக்குள் அது நோயாக உருவாக்கத் தான் தூண்டும்.
 
ஆனால் அவை அனைத்தும் எனக்குள் நோயாக விளையாதபடி குருநாதர் காட்டிய வழிகளில் விண்ணின் ஆற்றலை நுகர்ந்தறிந்து அதனுடன் கலக்கச் செய்து நான் மாற்றிக் கொள்கிறேன்.
 
ஒரு குழம்பை வைக்கும் போது காய்கறிகளையும் மற்றதையும் போட்டு வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை (காரலை) நீக்கிச் சுவைமிக்கதாக ஆக்குகின்றோம் அல்லவா...!
 
அதைப் போல் நீங்கள் பேசும்... எம்மிடம் கேட்க வரும் அந்த நிலையை
1.எனக்குள் சேராவண்ணம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
2.அந்தக் குழம்பைச் சுவையாக்கியது போல் எனக்குள் அந்தத் தீமை விளைவிக்காதபடி சுவைமிக்கதாக ஆக்கிக் கொள்கிறேன்.
 
மிளகாயை வாயிலே போட்டவுடனே ஆ… என்று அலறுகின்றோம். நம் உமிழ் நீரே காணாது போய்விடுகின்றது. ஏனென்றால் அதில் உள்ள விஷத் தன்மை அதனின் துடிப்பு நம் அங்கங்களை அவ்வளவு வேகமாக இயக்குகின்றது.
 
அது வேகமாக இயக்கினாலும் அதே மிளகாயைப் பல சரக்குகளுடன் சேர்த்து இந்தக் காரத்தை அதிலே அளவுடன் போடும் போது
1.இரசனை கொண்டு நம் உமிழ் நீரைச் சுரக்கச் செய்து
2.ஆகா..!. என்று நாம் ருசித்துச் சாப்பிடும் நிலையாக உணர்ச்சிகளைத் தூண்டி
3.மனிதனுக்குள் வலுவின் தன்மை கூடி சிந்திக்கக்கூடிய உணர்வை ஊட்டி
4.நம்மை மகிழ்ச்சி அடையச் செய்கிறது அதே காரம்...! (சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!)
 
இதைப் போல் தான் கோபமாகவோ வெறுப்பாகவோ சலிப்பாகவோ சஞ்சலமாகவோ வேதனையாகவோ பல சோர்வடைந்த நிலைகளில் அவரவர்களுடைய கஷ்டங்களை எம்மிடம் சொல்லி... அந்தக் கஷ்டத்திற்கு நிவாரணம் தேட என்னிடம் கேட்க வந்தாலும்... நீங்கள் கஷ்டப்படும் உணர்வின் தன்மை நான் கேட்டறியும் போது அந்த உணர்வுகளை என் செவிப்புலன் ஈர்த்தாலும்... அந்த உணர்ச்சிகளைத் தூண்டி நான் சுவாசித்து என் உயிரிலே பட்டு அதை அறிந்து தான் நான் பதில் சொல்ல வேண்டி வரும்.
 
1.குருநாதர் கொடுத்த சக்தி கொண்டு பல உபகாரங்களை உங்களுக்குச் செய்தாலும்
2.நான் அதை மாற்றவில்லை என்றால் நீங்கள் சொன்ன உணர்வுகள் என் உடலுக்குள் சென்று
3.கடுமையான தீய விளைவுகளை உண்டாக்கிவிடும்.
 
அத்தகைய நிலையை நான் சமப்படுத்துவதற்குத் தான் குருநாதர் அந்த விண்ணின் ஆற்றலை... அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை... நீ எப்படிப் பருக வேண்டும்…? என்று தெளிவாக்கினார்.
 
அதை எடுத்துச் சுத்தப்படுத்தி... வேக வைத்து... அதனைச் சமப்படுத்தி... சமைத்து... ருசியாக்கி...
1.யார் உன்னிடம் சொன்னார்களோ அவர்களின் தீமைகளை நீக்க
2.அருள் உணர்வின் வாக்கினை அங்கே அவர்களுக்குள் பதிவு செய்து
3.அவர்களைத் தீமையிலிருந்து விடுபடச் செய்வதற்கு நீ இதைச் செய்...! என்று குருநாதர் சொன்னார்.

உங்களை அறியாது உடலில் சேரும் தீமையிலிருந்து நீங்கள் மீள வேண்டும் என்பதற்காகத் தான் “குருநாதர் சொன்ன வழியில்... உங்களுக்கும் இதை உபதேசிக்கின்றேன்...!”