ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2018

அகஸ்தியர் பெற்ற பேராற்றல்களைப் பற்றிய காவியத் தொகுப்புகளில் மறைந்துள்ள உண்மைகள்...!

நட்சத்திரங்களின் கதிரியக்க மின்னல்களைத் தமக்குள் அடக்கிடும் உணர்வின் தன்மை வரும் பொழுது எதையும் வென்றிடும் தன்மையை அகஸ்தியர் பெற்றார். 

அவர் எதையாவது உற்று நோக்கி உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் அதனைக் கருக்கிவிடும்.

வாதாபிஎன்ற ஒருவன் அசுர குணம் கொண்ட ராட்சஸன், அவனுடைய சகோதரனும் ஒரு ராட்சஸன்.

இவர்கள் இருவரும் இருவரில் ஒருவர் ஆடாக உருமாறுவதும் பின் ஆடாக இருப்பவனை வெட்டிச் சமைத்து விருந்தாளிக்கு உணவாகப் பரிமாறுவதும் உணவாக உட்கொண்டபின்வாடா…. வாதாபி…“ என்றால் சாப்பிட்டவரின் குடலைப் பிளந்து வெளியே வந்து விருந்தாளியை உட்கொள்வதும் என்ற நிலையில் காவியத் தொகுப்புகள் உண்டு.

மலை வாழ் பகுதிகளுக்கு வந்து பேரருள் பெறவேண்டும் என்று எண்ணி வருபவர்களை இப்படி வேட்டையாடிக் கொன்று புசித்துள்ளார்கள்.

அகஸ்தியர் அப்பகுதிக்குச் செல்லப்படும்போது வழக்கமான அதே முறையில் அகஸ்தியரை ராட்சஸர்கள் வரவேற்றுள்ளார்கள்.

அகஸ்தியர் அவர்கள் அளித்த உணவை உட்கொண்டபின்வாடா..வாதாபி..என்றால் அவன் அப்போதே ஜீரணமாகிவிட்டான் என்று கூறுகின்றார்.

ராட்சஸனுக்கு ஆத்திரம் வருகின்றது. உன்னைக் கொன்று புசிக்கப் போகிறேன்என்றான்.

ஆனால் அகஸ்தியரின் வேகத் துடிப்புப் பார்வை ராட்சஸனைக் கருக்கிவிடுகின்றது.

இது போன்று அகஸ்தியரை அவர் கண்டறிந்த உண்மையின் நிலைகளை காவியங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் காண்பித்துள்ளார்கள்.

அகஸ்தியர் போவார் வருவார் என்றளவில் மட்டுமே உரைத்திருப்பார்கள். அகஸ்தியர் அனைத்திலும் வல்லவர் என்று மட்டுமே கூறி நிறுத்திவிடுவார்கள்.


இதனால்  அகஸ்தியர் கண்டுணர்ந்த பேருண்மைகளை நாம் அறிய முடியாமலே போய்விட்டது.

பிற்காலத்தில் வந்த சில படித்த வர்க்கத்தினரும் “வாதாபி கணபதி” என்று கணபதியைத் தொழுததினால் அகஸ்தியருக்குச் சக்தி வந்தது என்றும் காட்டி அகஸ்தியர் பெற்ற ஆற்றலை நாம் அறிய முடியாமலே செய்து விட்டார்கள்.

1.இருபத்தியேழு நட்சத்திரத்தின் ஆற்றல்களை எடுத்துப் பேரொளியாக மாற்றியவர் அகஸ்தியர். 
2.பேரண்டத்தின் சக்திகளையும் ஆற்றல்களையும் எட்டிப் பிடிக்கும் ஆற்றலைப் பெற்றவர் 
3.அவர். அதிலிருந்து வரும் கடுமையான விஷங்களையும் உணவாக எடுத்து ஒளியாக மாற்றும் திறன் பெற்றவர்.
4.அதை உணர்த்தவே வாதாபியை ஜீரணிப்பதாகவும் அவன் சகோதரனை ஒளியாக மாற்றுவதாகவும் காட்டினார்கள் அகஸ்தியனுக்குப் பின் வந்த ஞானிகள்.

கணவன் மனைவி தாய் தந்தை என்ற நிலையில் நான்கு பேரும் இணைந்து அகஸ்தியர் இன்றும் நம் பூமியின் வடக்குத் திசையில் துருவ நட்சத்திரமாக உள்ளார்.

அந்த அகஸ்தியருடைய பேராற்றல்களை நாமும் பெற்று அவரைப் போன்று விண்ணிலே “ஒளியாக... நட்சத்திரமாக... ஆக வேண்டும்...!”