ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2016

“அடுத்தவரை நம்பினேன்.., மோசம் போனேன்” என்ற நிலைகள் நமக்கு வேண்டாம்

தந்திரமாக ஏமாற்ற எண்ணுகிறவன் என்ன செய்கிறான்?

நாம் ஒன்றின் மேல் ஆசைப்படுகிறோம். ஆசைப்பட்டவுடன் அவனும் ஆசைப்படுகிறான். இந்த மனிதனிடம் எப்படிச் சொன்னால் நாம் காசு வாங்கலாம் என்று ஆசைப்படுகிறான்.

ஆகவே, காசை வாங்கும் ஆசையை ஊட்டும் போது நாமும் செல்வம் தேட வேண்டும் என்கிற ஆசையில் அவனிடம் சிக்குகிறோம்.

சிக்கியபடி, அவன் செய்து தருவான் என்ற நம்பிக்கையில் நாம் இச்சைப்படுகிறோம். அந்த உணர்வுகள் கிரியையாகின்றது. அதன் வழியில்  நாம் செல்லத் தொடங்கி விடுகின்றோம்.

ஆனால், வள்ளி என்ற வலிமை மிக்க சக்தியை நாம் பயன்படுத்தியிருந்தால் அது வேறு. 

நாம் ஆசை என்ற இச்சையைச் சேர்க்கப்படும்போது மனிதன் என்ற வலிமையை இழந்து விடுகின்றோம்.

வள்ளி என்ற நிலையை மறந்து, இச்சை என்ற உணர்வுகளுக்கு நாம் செல்கின்றோம்.

அதன் உணர்வின் தன்மை நாம் கவரப்படும்போது அவன் ஏமாற்றும் நிலை கொண்டு அவனை வாழ வைக்க நம்மை ஏமாற்றுகின்றான். அதன் வழிகளில் செல்லும்போது அவன் வளர்கின்றான்.

அவனை நம்பினேன்.., நான் மோசம் போனேன் என்ற வேதனையைத்தான் நாம் எடுக்க வேண்டியுள்ளது.

இச்சையினால் வரும் ஆசை நம்மைறியாமல் வேதனை என்ற விஷத்தின் தன்மையைத் தான் வளர்க்க உதவுகின்றது, வாலி. 

இதுதான் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி.

வள்ளி - வலிமைமிக்க சக்தி கொண்டு தெளிந்த மம் பெற வேண்டும் என்று அந்த வலிமை பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் அதன் வழி தெய்வானையாகி ஏமாற்றும் உணர்வைப் புரிந்துகொள்ளும் நிலையும் அவனுக்குள் நம் உணர்வு அடிமையாகாதபடி காத்துக் கொள்ள முடியும்.

ஆனால், ஏமாற்றுபவர்களிடம் காசைக் கொடுத்துவிட்டு பின்னாடி துரத்திக் கொண்டே போகிறவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள், இன்றும் இருக்கின்றார்கள்.

நீங்கள் வேறு எங்கேயும் போக வேண்டியதில்லை. லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் வருகிறது என்ற விளம்பரத்தைப் போட்டால் இருக்கின்ற பணம் எல்லாவற்றையும் போட்டு ஒரு கோடியில் சம்பாரித்துவிடலாம் என்று செல்வோர் பலர் உண்டு.

அதிலே இச்சைப்பட்டுக் கொண்டு இருக்கிற காசையெல்லாம் விட்டுவிட்டு காடு மேடு, தொழிலை எல்லாவற்றையும் விட்டுவிடுவார்கள்.

நிச்சயம் நாளைக்கு ஒரு கோடி வரும் என்ற கற்பனை கட்டிக் கொண்டு அந்த இச்சையின் கிரியையில் வரப்படும்போது கற்பனையில் மிதந்து இங்கே வீட்டில் சொல்வதும் இல்லை.

சாப்பாட்டுக்கு இல்லை என்று கூடக் கவலைப்படுவது இல்லை. வாங்குகிற காசை விட்டுவிட்டு, வீட்டில் குழந்தை குட்டியைக் கூட கவனிப்பதில்லை. இச்சையெல்லாம் அந்த கோடி ரூபாய் மேல் தான் இருக்கும்.

இப்படி உலக நிலையில் நாட்டைக் காக்கும் அரசாவது மக்களை ஏமாற்றக்கூடாது என்ற நிலைக்கு வருகின்றார்களா என்றால் இல்லை.

ஏனென்றால், ஆசையை ஊட்டி அதன் வழியில் வரக்கூடிய வருமாத்தை. வைத்து நாட்டைக் காக்கலாம் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள். கோடி பணம் வந்து விடும் என்று விளம்பரம் செய்கிறார்கள்

நாட்டுக்குள் வாழும் மக்களுக்குள் அந்த இச்சையை ஊட்டும் போது அரசே செய்யப்படும்போது நாம் நுகர்வதற்கு என்ன? ஆகவே, நாம் எதிலே போகிறோம்?

ஆனால், மக்களை நல்வழிப்படுத்தத்தான் அரசு. செய்கின்றார்களா என்றால் இல்லை.

இன்று உலகம் முழுவதற்கும் நமது நாடு மட்டும் அல்ல. அவன் நாட்டைக் காக்க இத்தகைய தவறுகளைச் செய்து, மக்களை அவன் நிரந்தர நிலைகள் பெற வேண்டும் அதற்காக வேண்டி உபாயத்தைத் தேடுகிறான்.

செல்வத்தைத் தேடும் மக்களுக்காக சில நிலைகளைப் போட்டு விட்டால் அதன் வழிகளில் கிடைக்கும் என்ற எண்ணத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், தன் கையிலிருந்து காசு போவது தெரியாது.

இதில் எத்தனையோ பேர் ஏழ்மையாகின்றார்கள். பணம் எல்லாம் போய் விட்டால் என்ன ஆகும்? கடைசியில் விரக்தியாகிவிடுவார்கள்.

முடியவில்லை என்றால் அடுத்து என்ன செய்வார்கள்? திருடப் போகிறார்கள். அதே சமயத்தில், கொடுத்த காசு என்ன ஆனது என்று திரும்பக் கேட்டால் கொலை கூடச் செய்கின்றார்கள்.

இதற்கு மூலம் யார்?

இந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் போது முடியவில்லை என்றால் தன் உணர்வின் தன்மை இப்படிச் செய்யும்.

அதிலேயும் முடிவு இல்லை என்றால் விஷத்தைக் குடித்து மனிதன் எத்தனை கோடி காலம் வாழ்ந்தனோ, மனிதனானோ ஒரு நொடிக்குள் விஷத்தைக் குடித்து இவன் அந்த கௌரவப் பிரச்சினையால் இந்த உடலையே அழித்து விடுகின்றான்.

விஷத்தின் தன்மை குடித்த பிறகாவது தப்புகிறானா என்றால் இல்லை.

விஷத்தின் உணர்வுகளை அந்த அணுக்களில் சேர்த்து உயிரிலே சென்றால் எவன் அதற்குக் காரணம் என்று எண்ணினானோ அவன் உடலுக்குள்ளே சென்று அந்த விஷத்தைப் பாய்ச்சி அவனையும் வீழ்த்துகின்றான்.

பின் அந்த விஷத்தின் தன்மை ஆனபின் என்ன செய்கின்றது? இந்த உடலை விட்டுச்  சென்றபின்  விஷத்தைப் பாய்ச்சி ரசித்துச் சாப்பிடும் பாம்பினமாகப் பிறக்கின்றது.

இது தான் கண்ட பலன்.

ஆனால், ஞானிகள் காட்டியது ஆறாவது அறிவு கொண்டு நாம் வள்ளி தெய்வானை. நாம் தீமைகளை எல்லாம் நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து உயிரிலே மோதினால் இது அபிஷேகம்.

து தான் பஞ்சாபிஷேகம். அதன் உணர்வுகள் மகிழ்ச்சி என்ற உணர்வு ஆறாவது அறிவு ஒளி. தெளிந்து வாழ முடியும், தெரிந்து வாழ முடியும். நாம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ முடியும்.

எனக்குள் வந்த துன்பமோ, தீமைகளோ மற்றவர்களுக்கு வரக்கூடாது என்று எண்ணினால் அது "மதி"

நான் (ஞானகுரு) எனது எட்டாவது, ஒன்பதாவது வயதில்லாம் எங்கள் வீட்டில் தண்ணீர் இறைக்கும் கிணற்று மேட்டில் ஒரு பொந்து உண்டு.

அந்தப் பொந்திற்குள் ஒரு மைனா குஞ்சு பொரித்திருந்தது. வெளியில் தெரிகின்றது. இந்தப் பக்கத்தில் வராது.

அந்தக் குஞ்சின் கால் தெரிகின்றது. அதில் கயிறைக் கட்டி இழுக்கின்றேன். இழுத்ததும் ஒரு சப்பையைப் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது. ஆனால், அது எப்படி இம்சைப் பட்டிருக்கும்?

நான் இதைச் செய்து சந்தோசப்பட்டிருக்கின்றேன். அது வேதனைப்பட்டதை நான் எண்ணவில்லை. ஆனால், அந்த மகிழ்ச்சியான உணர்வை எடுக்கும்போது அணு எனக்குள் விளைகின்றது.

இதே மாதிரி குருவிக் குஞ்சுகளை எடுத்து அப்படியே தீயில் போட்டு உயிருடன் வாட்டுவது. இதெல்லாம் இளம் பிள்ளையில் அறியாது நான் செய்த செயல்கள்.

இப்பொழுது அதனுடைய உணர்வுகள் அது எப்படி எரிந்ததோ உண்மையிலே என் உடலிலே அந்தந்தப் பருவம் வரும் பொழுது கால் எரிச்சல், உடல் எரிச்சல் எல்லாம் வருகின்றது.

நான் அறியாது செய்தது தான். எண்ணிய உணர்வை நுகர்ந்தேன். அது எப்படி எரிச்சலாகியதோ அந்த உணர்வின் தன்மை நான் நுகரப்படும் பொழுது அந்த அணுக்களாக விளைகின்றது.

சில பேர்களுக்கெல்லாம் மற்றவர்களை வேதனைப்படும் படி எரிச்சல்படும் படி இந்த மாதிரிச் செய்வோர்களுக்கெல்லாம் இந்த எரிச்சல் நிச்சயம் இருக்கும்.

மீன்களைப் பிடித்து வாங்குகின்றார்கள். உயிருடன் இருக்கும் பொழுது அதை உராய்ந்து உராய்ந்து தோலை நீக்குவார்கள். அதற்கு எப்படி எரிச்சல் இருக்கும் என்று பாருங்கள்?

அதனுடன் மிளகாய்க் காரத்தைப் போட்டால் பார்த்து இரசிப்போம். இந்த மாதிரிச் செய்த பெண்களுக்கெல்லாம் நிச்சயம் பாத எரிச்சல் இருக்கும்.

அதை அடித்துக் கொன்றால் மட்டுமல்ல. மீனை இப்படி உராய்ந்து கொண்டிருப்பதை வேடிக்கையாகப் பார்த்தாலும் நம் உயிர் என்ன செய்யும்? எரிச்சலான அணுக்களை உடலுக்குள் உருவாக்கிவிடும்.

இதைத்தான் குருநாதர் சொன்னார். நீ முந்தி செய்த வினைகள் எல்லாம் அந்தப் பருவம் வரும் பொழுது வந்துவிடும். இது வரும் பொழுது நீ எதை எண்ண வேண்டும்?

என்னை அறியாத அந்த இருள்கள் நீங்க வேண்டும். அந்த மெய்ப் பொருள் கண்டுணரும் சக்தி பெறவேண்டும். நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும் என்று அந்த அருள் ஒளி பெறவேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்.

சிறு குழந்தையாக இருக்கும் பொழுது அறியாது நான் செய்த செயல்கள் அனைத்தும் என் பாதங்கள் எரிவதும் உடல் எரிச்சலாகும். நான் சிறு வயதில் செய்த பாவங்களை எல்லாம் சொன்னால் நீங்கள் பயந்து விடுவீர்கள்.

ஒடைக்காய் இருக்கின்றது, அதைப் பிடிப்பேன். அதைப் பிடித்து என்ன செய்வேன்?

மூக்கில் போடும் மூக்குப் பொடியை எடுத்து அந்த ஒடைக்காயின் கண்களில் தூவுவேன். கண்ணுக்குள் போட்டவுடன் தலையை ஆட்டும். பார்.., பேய் ஆடுகிறது என்பேன்.

இப்படியெல்லாம் செய்ததால் எனக்குக் கண் எரிச்சலும் வரும். இதையெல்லாம் நம் குருநாதர் எனக்குச் சுட்டிக் காண்பிக்கின்றார்.

சிறிய வயதில் அறியாத நிலைகளில் இதைச் செய்தாய். ஆனால், உன் உயிர் இதையெல்லாம் உனக்குள் அணுக்களாக விளைய வைத்துள்ளது. அது விளையப்படும் பொழுது உன்னுடைய அனுபவம் ஒவ்வொன்றாக வரும்.

அப்பொழுது இதை நீக்க வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?

இது எப்படி உன் நல்ல குணத்துடன் சேர்த்து எரிச்சலானதோ இந்த எரிச்சல் வரும் போது நீ எதைச் செய்ய வேண்டும்? அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்ட வேண்டும். இந்த நிலையைப் பெறவேண்டும்.

சாதாரணமாக நான் ஒன்றும் செய்யவில்லை. எல்லோருக்கும் நன்மை தான் செய்தேன். சாக்கடையில் கவிழ்ந்து விட்டுவிட்டது, கையைக் கொண்டு போய் ஊன்றுகின்றேன். எனக்கு வலு இருக்கின்றது. எலும்பு முறிந்துவிட்டதே.

நான் தவறு செய்தேனா? இல்லை.

இதைத்தான் குருநாதர் சொல்கின்றார். ஒவ்வொரு நிமிடத்திலும் நீ பெற்ற நிலைகள் இது வரும். இதன் விதிப்படி இது நடக்கும்.

ஆனால், மதி கொண்டு இதை மாற்ற வேண்டும்.

மனிதனான பின் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வின் தன்மை தனக்குள் எடுக்க வேண்டுமென்றால் இந்த மதி கொண்டுதான் விதியை வெல்ல முடியும்.

இல்லையென்றால் ஒடிந்துவிட்டதே எம்மா.., எப்பா.., என்றால் வருகிறவர்கள் எல்லாம் என்ன சொல்வார்கள்? என்னுடைய வேதனையை நீங்கள் கேட்பீர்கள், பின் உங்களிடமும் விளையும்.

பிறகு உங்களிடம் விளைந்து இரண்டு பங்காகி என்னிடம் கொடுப்பீர்கள். இதைத்தான் எனக்குள் வளர்க்க முடியும். இதைப் போன்ற தீய விளைவுகளிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

என்று நாம் செய்திருந்தாலும் அந்த விதிப்படி அந்தந்த உணர்வுகள் வளர்ச்சியடையப்படும் பொழுது வரும். நம்மை அறியாது செய்த பிழையின் உணர்வுகள் திரை மறைத்து இந்த உணர்வின் தன்மை அது அணுவின் தன்மை வளரும்.

அதனுடைய வித்தின் தன்மை நிச்சயம் அது விளையத் தான் செய்யும்.

நாம் எத்தனையோ கோடிச் சரீரங்கள் எடுத்து இந்த விஷத்தின் அணுக்கள் மாற்றிவிட்டால் விஷம் கொண்டு பாம்பினமாகத்தான் மாற முடியுமே தவிர இந்த நிலை விதியாகிவிடுகின்றது.

அடிக்கடி வேதனைப்படுவோரைப் பற்றி நாம் கேட்டுணர்ந்தால் இந்த விஷத்தின் தன்மை கொண்டு நமக்குள் வளரத்தான் செய்யும். இந்த விஷம் வளரத்தான் செய்யும் என்ற நிலையை ஒவ்வொரு நிமிடத்திலும் காட்டுகின்றார் குருநாதர்.

ஆகவே, இதை மாற்றவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்னைப் போன்று மற்றவர்களுக்கு வரக் கூடாது என்று எண்ணுதல் வேண்டும்

.எனக்குத் தலை வலிக்கின்றது என்றால் இதே மாதிரி மற்றவருக்குத் தலை வலி வந்துவிடக் கூடாது. அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற இந்த உணர்வினை இந்த விதியை மதி கொண்டு வெல்லுதல் வேண்டும்.

வெறுமனே எண்ணி எண்ணக் கூடாது. அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அடிக்கடி அந்த மகரிஷிகளை உங்களிடம் சொல்கின்றேன் என்றால் அந்த உணர்வின் அணுக்களை நீங்கள் எண்ணி மகரிஷிகளின் உணர்வுகளை அதிகமாக்கப்படும் பொழுது இது சாம.

அருள் ஞானிகள் இந்த உணர்வை வென்றவர்கள். அதர்வண. அதே சமயத்தில் யஜூர். உங்களுக்குள் திரும்பத் திரும்பச் சொல்வதும் உங்களை அறியாது வந்த இருள்களிலிருந்து மீள்வதற்கு இதை வளர்த்துக் கொண்டால் மதி கொண்டு விதியை வெல்ல முடியும்.

ஆக, இன்னொரு பிறப்பு இல்லாத நிலையை அடைகின்றோம். நான் இத்தனை பேருக்கு ஆசீர்வாதம் கொடுத்தேன் எனக்கு ஏன் கை உடைந்தது என்று எண்ணினால் என்ன ஆகும்?

இந்த விதிப்படி நான் இதை வளர்த்துக் கொள்கின்றேன். மீண்டும் எத்தனையோ தொல்லைகள் வரும். அதிலிருந்து மீள வேண்டும்.

தொல்லைகள் மனிதனுக்கு எப்பொழுது வருகின்றதோ இது விதி. ஆனால், மதி கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளி பெறவேண்டும் என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

March 29, 2016

இரத்தத்தில் உருவாகும் கரு முட்டைக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்ச வேண்டும்

நாம் காலையிலிருந்து இரவு வரை வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் சங்கடம் கோபம் குரோதம் என்ற உணர்வுகள் உமிழ்நீராக மாறி மாறி மாறி ஆகாரத்துடன் கலந்து கலந்து அது இரத்தமாக வருகின்றது.

அதனால் எதன் உணர்வு அதன் இயக்க உணர்வாக மாறியதோ உடலுக்குள் போனவுடனே அது கருத்தன்மை அடைந்து விடுகின்றது, முட்டையாகின்றது. அதிகமாகிவிட்டால் அந்த முட்டை வெடித்த பிற்பாடு அணுவாகின்றது.

சாதாரணமாக ஒரு தட்டான் பூச்சி அது ஏதாவது ஒரு பூச்செடியில் கொண்டு போய் முட்டையிட்டால் அந்த பூவின் மணத்தை எடுத்து பூவின் நிறத்தில் பட்டாம்பூச்சியா மாறுகின்றது.

இதைப் போன்று தான் நாம் வேதனை வெறுப்பு என்ற உணர்வை எடுத்துக்  கருத்தன்மை அடைந்தால் நல்ல அணுக்கள் வேதனை உருவாக்கும் முட்டைகளாக மாறிவிடும்.

இதை மாற்றியமைக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின்  பேரருள்  பேரொளி  நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். அதைப் பலவீனப்படுத்த வேண்டும்.

அப்பொழுது அந்தக் கரு முட்டைக்குள் என்ன செய்யும்?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை  முட்டைக்குள் இதன் மேல் பாய்ச்சும். அது பாய்ச்சப்படும்போது அதற்கு தக்கவாறு அந்தக் கருமுட்டைகள் அணுக்கள் மாற்றமடைகிறது. தீமையை நீக்கிடும் நிலை பெறுகின்றது.

ஆனால் அதே சமயத்தில் முட்டை அணுவாகி விட்டால் மாற்றாமல் விட்டுவிட்டால் அதனுடைய இனத்தை அது பெருக்கி முட்டைகள் அதிகமாக இட்டுப் பெருக்க ஆரம்பித்துவிடும்.

வேதனை அணுக்கள் நமக்குள் பெருகி விட்டால் நல்ல அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காது தடைப்படுகின்றது. உடல் உறுப்புக்களின் செயல்கள் குறைகின்றது. பின் நோயாகிவிடுகின்றது.

வேதனை உணர்வுகளை அடிக்கடி நாம் எண்ணப்படும் போது ஆத்ம சுத்தி எடுத்தால் உடனுக்குடன் அந்த அணுக்களை மாற்றி நல்லதாக மாற்றிக்கொள்ள முடியும்.

இது ஒரு பழக்கத்திற்கு வந்தால் நாம் அந்த அகஸ்தியன் எப்படி அகண்ட அண்டத்தையும் அறிந்து உணர்வை ஒளியாக மாற்றினானோ அவன் பெற்றதையெல்லாம் நமக்குள் பெற்று நாமும் இந்த உடலுக்குப்பின் அவன் பிறவியில்லா நிலை அடைந்தது போல் அடைய முடியும்.

நமக்குச் சொந்தம் அதுதான். இந்த உடல் சொந்தம் நமக்கு வேண்டாம்.

அந்த உயிருடன் அவன் தான் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றான். உணர்வால் அதை அறிய முடிகின்றது. ஆகவே, அறியும் ஆற்றல் பெற்ற ஆறாவது அறிவை உயிருடன் இணைக்கப்பெற்றால் ஒளி என்ற உணர்வாகின்றது.

இதை நாம் எல்லோரும் பெறமுடியும். எல்லோருக்கும் பெறக்கூடிய தகுதி பெறத்தான் இதைச் செய்தது. 

March 28, 2016

கடவுள் நம்மைத் தண்டிக்கின்றாரா? அந்தக் கடவுள் யார்?

இன்று உலகில் ஒரு சட்டத்தை இயற்றி இதன் வழி நாம் நடந்தால் நமக்கு "ஆண்டவன் இதைச் செய்வான்..," என்கிறார்கள். 

ஏனென்றால், நாம் எதை எண்ணி இந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்து உடலுக்குள் பதிவு செய்து கொள்கின்றோமோ இதை ஆள்பவன் யார்?

உயிர். ஆக ஆண்டவன் என்று இதற்குக் காரணப் பெயரை வைக்கின்றார்கள்.

ஆனால், அதே சமயத்தில் ஒரு மதம் என்ற சட்டத்தை இயற்றி அதன் உணர்வின் எண்ணத்தைத் தனக்குள் பதிவாக்கிவிட்டால் இந்த உடலுக்குள் கடவுள் உள் நின்று இயக்கும் சக்தியாக வருகின்றது.

எந்தெந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் வளர்த்துக் கொள்கின்றோமோ இதை மீண்டும் எண்ணும் போது அந்த எண்ணத்திற்கு விரோதமாக வேறொன்றைக் கலந்தால் இது குற்றமாகிவிடுமோ என்ற உணர்வைச் சேர்த்து இதனை இயக்கிவிட்டால் அது "கடவுள் நமக்குத் தண்டனை கொடுப்பான்..," என்ற நிலைகளாகிறது.

எதைக் கலக்கப்பட்டு மதங்கள் கொடுக்கப்பட்ட நிலைகள் இதில் தவறு செய்துவிட்டோமோ என்ற உணர்வுகளைக் கலந்துவிட்டால் இந்த உயிர் அதையே மாற்றி இந்த உணர்வின் தன்மையை அணுவாக மாற்றிவிடுகின்றது.

மீண்டும் அந்த நினைவின் தன்மை வந்துவிட்டால் "கடவுள் என்னைத் தண்டிக்கின்றான்..," என்ற நிலைகள் வரும்.

ஆகவே, இதை நம் உடலுக்குள் நாம் எண்ணிய உணர்வுகளே நமக்குள் அந்த உணர்வின் தண்டனையை அந்த வேதனை என்ற அணுக்களைப் பெருக்கச் செய்துவிடுகின்றது.

இப்படித்தான் உலகில் அரசர்கள் மதம் என்ற நிலையில் சட்டத்தை இயற்றி மக்களைத் தன் பால் இழுத்துக் கொள்ள அந்த நிலைகளைச் செய்தார்கள்.

அரசன் காட்டிய உணர்வுகள் எந்தச் சட்டத்தை இயற்றினார்களோ அது தெய்வம் என்றும் கடவுள் என்றும் இறைவன் என்றும் காரணப் பெயரை வைத்து விடுகின்றார்கள்.

ஆகவே, கடவுள் யார்?

"ஒன்றுடன் ஒன்று இணைத்து.., ஒன்றுக்குள் இயக்கக்கூடிய நிலை தான் கடவுள்..," என்ற நிலைகளைத் தெளிவாக்குகின்றார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

March 27, 2016

நோயை நீக்குவதற்காக அல்ல, மகரிஷிகளின் அருளைச் சேர்த்து உயிருடன் ஒன்றி ஒளிக்கதிராக மாற்றிடவே இந்த உபதேசம்

எமது அருள் ஞான உபதேசத்தினைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் யாம் சொல்வது புரியவில்லை என்ற இந்த உணர்வை இணைத்துவிட்டால் அடுத்து நீங்கள் சிந்தித்தாலும் இந்த நினைவுகள் வராது.

ஆகவே, உபதேசிக்கும் இந்த உணர்வைப் பெறவேண்டும், இதை அறிய வேண்டும், அந்த அறியும் உணர்வுகள் எனக்குள் வளரவேண்டும் என்று ஏங்கிப் பெற்றால் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் அணுக்கருவாகி நினைவு கொள்ளும் போது அதனின் இயக்கமாக வரும்.

ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கிறார் என்றால் சொல்வது எனக்கு அர்த்தமாகவில்லை என்று ஏங்கிப் பெற்றால் அடுத்து அவர்கள் பார்த்தாலும் அந்த அறிவு அவர்களுக்கு வராது.

ஆகவே, நாம் எதனைக் கூர்மையாக எண்ணுகின்றோமோ அதுதான் நமக்குள் பதிவாகும், உயிர் அதைத்தான் நமக்குள் அணுவாக உருவாக்கும், அதனின் செயலாகவே நம்மை இயக்கும்.

இன்றைய நிலைகளில் வேதனையாக இங்கே வருகின்றார்கள் இந்த நோய்கள் எல்லாம் நீங்கும் என்று சொன்னால் அதை உற்றுப் பார்த்தால் அந்த நோய்க்கு மட்டும் உணர்வுகளை நுகர்வார்கள்.

அந்த உணர்வைத் தனக்குள் பருக ஏங்குவார்கள். ஆனாலும், இந்த உண்மையின் உணர்வின் தன்மையைப் பெறும் தன்மையை இழந்துவிட்டு நோய் தீர்ந்தால் சரி என்ற உணர்வில் தான் வரும்.

இது ஒன்று மட்டும் இது உதவாது.

அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் சேர்த்தால்தான் பின் வரும் உணர்வின் அந்த நஞ்சின் அணுக்களை இது மாற்றியமைக்கும். அதனை அடக்கி அதனின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக மாற்றும் நிலை வரும்.

ஆகவே, நம் எண்ணத்தின் வலிமை கொண்டு தான் உபதேசிக்கும் உணர்வுகளை நமக்குள் வளர்த்து அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நம் உயிரை நமக்குச் சொந்தமாக்க வேண்டும். இந்த உடலிலே விளைந்த உணர்வின் அணுக்களை நமக்குள் சொந்தமாக்க வேண்டும் என்றால் அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் பாய்ச்ச வேண்டும்.

உயிர் ஒளியானது, உணர்வை ஒளியாக இதை இணைத்து இந்த உயிரின் துணை கொண்டு இந்த உணர்வின் தன்மை தனக்குள் இணைத்து இந்த உடலை விட்டுச் சென்றால் ஒளியின் கதிராக மாற்றிடும் உணர்வுகள் பெறவேண்டும்.

ஆகவே, இவ்வாறு மாற்றிடும் நிலை பெறவேண்டும் என்றால் தான் பெற்ற சக்தி தன் மனைவி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். கணவனால் பெற்ற சக்தி கணவன் உயரவேண்டும் என்று கணவனும் மனைவியும் இந்த உணர்வு இரண்டையும் ஒன்றியே செயல்படுத்த வேண்டும்.

இதைத்தான் காலை துருவ தியானத்தில் நாம் இதையெல்லாம் எண்ணி ஏங்குதல் வேண்டும். இதுதான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி.

எல்லாம் விதிப்படி நடக்கின்றது என்று சொல்கிறோம் அந்தத் தலை விதி எது...?

நான் (ஞானகுரு) குழந்தைப் பருவத்திலிருக்கும் போது நான் பொதுவாக குருவிகளையோ, ஒடைக்காய்களையோ, மற்ற பூச்சிகளையோ அதைத் தட்டிக் கை கால் அங்கங்களை இழக்கச் செய்து வேடிக்கை பார்த்ததுண்டு.

வேடிக்கை பார்த்த உணர்வின் அணுக்கள் எனக்குள் விளைந்து அது விதி என்ற நிலைகள் வரப்படும் பொழுது அந்தப் பருவம் பெறப்படும் பொழுது அதே உணர்வால் இயக்கப்பட்டு எம்மை முடக்கச் செய்கின்றது.

நான் இன்று சக்தி பெற்றவனாக இருப்பினும் ஆனால், இதை எண்ணத்தால் பல பேருக்கு உதவி செய்கின்றேனே, எனக்குள் இப்படி வந்துவிட்டதே என்றால் மரண பயத்தால் நான் மீண்டும் பிறவிக்கே வருகின்றேன்.

ஆகவே, தான் செய்த உணர்வுகள் எதுவோ அது என்னை அழைத்துச் சென்றது. இத்துடன் செல்லட்டும். அருள் ஒளி எனக்குள் பெருக வேண்டும்.

என்னைப் போன்று பிறருக்கு இந்த நிலை வரக் கூடாது என்ற உணர்வை நான் எண்ணி ஏங்கப்படும் பொழுது இந்த மரண பயத்திலிருந்து விடுபடுகின்றேன். அருள் ஒளியின் உணர்வுடன் தொடர்பு கொள்கின்றேன்.

ஆகவே, குரு காட்டிய அருள் வழியில் அடுத்த எல்லை எதுவோ அதைத்தான் நாம் பெறவேண்டும்.

இந்த வாழ்க்கையில் நான் அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்ற எண்ணங்கள் இருப்பினும் எதையும் எவரும் செய்ய முடியாது. நாம் ரோட்டில் செல்லும் பொழுது அந்தப் பக்கம் இருக்கும் ஒரு பொருளை அடைவேன் என்று நாம் எண்ணினால் அந்தப் பொருள் மேல்தான் எண்ணம் வரும்.

ஆனால், அதே சமயத்தில் நாம் எதிர் நிலையில், வரக்கூடிய வாகனங்களோ நாம் எதிரிகள் என்ற நிலைகளில் அந்தப் பொருளைப் பெற முடியாது தடுக்கும் உணர்வுகள் மற்றவர்களுக்குள் வளர்ந்திருந்தால் அதை நாம் அறிய முடியாது.

இதன் வழியில் அதை அடைய முடியவில்லை என்றால் வெறுப்பும் வேதனையும் கொண்டு கொதிக்கும் தன்மை கொண்டு ஆனால், இதை அடைவதற்கு முன் மற்றவர்களை அழித்திடும் உணர்வு நமக்குள் தோன்றும் பொழுது அந்தத் தோற்றத்தின் உணர்வு கொண்டு நமக்குள் கடும் நோயாக விளைந்து நல்ல உணர்வுகளை அழித்துவிடுகின்றது.

நாம் எண்ணியதை நம் உயிர் அணுக்களாக மாற்றுகின்றது. அதன் வழியே நமக்குள் தீமைகளை விளைவிக்கின்றது. ஆக, மனித உருவை மாற்றுகின்றது. மனிதன் இந்த உடலில் நிலைத்தவன் இல்லை. இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.

ஒரு நிலத்தில் ஒரு வித்தை ஊன்றினால் அந்த வித்து நிலத்தின் துணை கொண்டு தன் இனத்தின் சத்தைக் கவர்ந்து அது செடியாக விளைந்து தன் இனத்தின் வித்தைப் பெருக்குகின்றது.

இதைப் போலத்தான் நம் உடலும் ஒரு நிலம். நம் உயிரின் இயக்கத் துணையால் அதிலுள்ள காந்தப் புலனால் நாம் கவர்ந்து கொண்ட உணர்வுகள் நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாக விளைந்து விடுகின்றது.

அதன் உணர்வுகள் பெருக்கங்கள் அதிகமாக்கப்படும் பொழுது அந்தப் பெருக்கத்தை வளர்த்துக் கொண்டால் அது நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாற்விடுகின்றது.

ஆகவே, நாம் அருள் ஞானத்தின் வித்தை உங்களுக்குள் ஊன்றி விளைவிக்கும் பொழுது இந்த நஞ்சினை வென்றிடும் உணர்வுகள் உங்களுக்குள் அது விளைகின்றது.

இது அருள் ஞானத்தால் உங்களுக்குள் பெருக்கிவிட்டால் அருள் ஒளியுடன் நாம் சுடராக விளைந்திடும் இந்த உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. நமக்குள் இருள் சூழ்ந்த நிலைகளை அது ஒடுக்குகின்றது.

இந்த உடலைவிட்டு நாம் செல்லும் பொழுது எதனைப் பற்றுடன் பற்றினோமோ அங்கே செல்கின்றோம்.

March 25, 2016

துருவ நட்சத்திரத்தைத் திரும்பத் திரும்ப நினைவூட்டி அதை ஈர்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறோம்

நமக்கு சம்பந்தமில்லாதபடி ஒருவர் கோபப்படுகிறார் என்ற உணர்வைப் பார்க்கிறோம். அப்பொழுது நமக்குள்ளும் கோபம் வருகின்றது. அவர் மேல் வெறுப்பு வருகின்றது. ஆத்திரம் வருகின்றது.

வேதனைப்படுவோர் உணர்வை எடுத்து நாம் கோபப்பட்டு அந்த வேதனைப்படுவோரைப் பார்க்கும்போது அந்த வேதனை நமக்குள் கலந்து வருகின்றது.

இதைப்போல கோபமும் வேதனை என்ற உணர்வு நமக்குள் விளைந்து அது இரத்தத்தில் கலக்கப்படும் போது இத்தகைய உணர்வின் அணுக்கள் நமக்குள் உருவாகி அந்த உடல் முழுவதற்கும் பரவப்படும்போது நமது உடல் உறுப்புகளை வீணாக்குகின்றது.

நீங்கள் வேதனைப்படுவோரை நுகர்ந்திருந்தால், சங்கடப்படுவோரை நுகர்ந்திருந்தால், நுகர்ந்த அத்தகைய உணர்வுகள் உங்கள் இரத்தத்தில் கருவாகின்றது, முதலில் முட்டையாகின்றது.

முட்டையாகப்படும்போது தொடர்ந்து அதைச் செய்தால் அந்த முட்டை தன் இனக்குஞ்சாக மாறுகின்றது.

அதற்குண்டான கருத்தன்மை இல்லை என்றால் இந்த விஷத்தின் தன்மை இதே இரத்தத்துடன் கலந்து மற்ற உறுப்புகளுக்கு அதை வீணாக்கும் ணர்வுகளை அது தொடர்ந்து விடுகின்றது.

அணு ஆனாலும் சரி அணு ஆகாதபடி அந்த முட்டை அழுகிச் சென்றாலும் சரி, அழுகிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் எந்த உறுப்புகளில் கலக்கின்றதோ ந்த உறுப்பையும் வீணாக்கிவிடுகின்றது.

இதைப்போல நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் உடலுக்குள் பல விதமான உறுப்புக்களை கெடுக்கும் அணுக்களாக மாற்றிக் கொண்டே உள்ளது.

இதைப்போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடுவதற்கு என்ன செய்வது?

அதற்குத்தான் இப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களை நுகர்ந்து அதை பழக்கப்படுத்தச் செய்கின்றோம்

துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வை நுகரும் பழக்கம் வந்துவிட்டால் உங்கள் இரத்தங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் விளையத் தொடங்கும்.

ன்றைய மனிதனின் நிலையில் இதைப்போன்ற தீமைகள் நமக்குள் உருவாகும் நிலையிலிருந்து விடுபடுவதற்குத்தான் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

துருவ நட்சத்திரம் தீமைகளை வென்று அதை ஒளியின் சுடராக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையாக அகண்ட அண்டத்தில் என்றுமே ஒளியாக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்கிறோம். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் பரவச்செய்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களைப் பெறச்செய்கிறோம். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் திரும்பத் திரும்ப நினைவூட்டி அதை ஈர்க்கும் சக்தியை இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்படுத்துகின்றோம்.