ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2014

வித்தையைக் காண்பிக்கின்றேன் என்றார் குருநாதர்

ஒரு சமயம், பாப்பம்பட்டி இராமசாமி நாயுடுவின் கரும்புத் தோட்டத்தில் யாமும் நமது குருநாதர் நாங்கள் இரண்டுபேரும் இருந்து கொண்டிருக்கின்றோம். 
நான் வித்தையைக் காண்பிக்கிறேன்டா,
வித்தையைக் காண்பிக்கிறேன்டா 
என்று சொல்லி விட்டு குருநாதர் என்ன செய்தார்?

கரும்பு ஆலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. கரும்புச் சக்கை சுற்றி கிடக்கின்றது. கரும்பு ஆலையில் பாகு சரியாக வரவில்லை என்றவுடன் இருவரும் சென்றோம்.

கரும்பு ஆலைக்குள் போனவுடன் சாறை எடுத்துக் குடிடா என்றார்.

குடித்தேன், அந்த பாகு சரியாக வரவில்லை என்று சொல்லி எம்மை அழைத்துச் சென்றார்கள். 

குருநாதர் நானும் வருகிறேன் என்றார். கூட்டிக் கொண்டு சென்றோம்.

உள்ளே சென்றவுடன், அங்கே மிஷினை நிறுத்தி விட்டார்கள். வெல்லம் எதுவுமே சரியாக வரவில்லை என்று சொன்னார்கள்.

குருநாதர், இரண்டு பேரும் போகலாம், என்றார். போனோம்.

போனவுடன் என்னிடம் மிஷினை ஓட்டுடா என்றார்.

ஆயிலும் இல்லை.., ஒன்றும் இல்லை..! மிஷினை ஓட்டச் சொன்னால் எப்படி ஓட்ட முடியும் என்றேன்?

ஓட்டுடா என்கிறேன், சக்தியை வைத்துக் கொண்டிருக்கின்றான், திருட்டுப்பயல் ஓட்டுடா..! என்று மீண்டும் எமது குருநாதர் சொன்னார். எல்லாமே வைத்துக் கொண்டிருக்கிறாய். சுவிட்சைப் போட்டு வைத்திருக்கிறாய் உதை என்கிறார்.

எனக்கு ஒன்றும் தெரியாது சாமி என்கிறேன்.

இவன் என்னென்னமோ சொல்கிறான், இவன் என்னமோ பண்ணிவைத்துவிட்டான். இவன்தான் செய்து வைத்திருக்கிறான் என்று திட்டிவிட்டு என்னென்னமோ பண்ணினார்.

கரும்புச் சாறும் வந்தது. கரும்புச் சாறு வந்தபின் முதல் தடவை வெல்லம் நன்றாக வந்தது. அடுத்து என்னை இழுத்துக் கொண்டு போனார்.

இராமசாமி நாயுடுவுக்கு, எல்லாம் தெரியும். இரவு பனிரெண்டு மணிக்கு நான் எடுத்துக் கொண்ட துணிமணிகளையெல்லாம் குருநாதர் ஒரு பையில் எடுத்து வைத்துவிட்டார்.

கை கால் வராமல் முடங்கிக் கொண்டு அந்த இரவில் அவர் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்.

எங்களைச் சுற்றிக் கரும்புக் காடு. சோகைகள் நிறைய இருந்தது. தீயை வைத்துவிட்டார். இரண்டு பேரும்தான் உள்ளே இருக்கிறோம். எல்லோரும் வெளியிலே இருக்கிறார்கள்.

சுற்றி தீ எரிந்தால், கரும்புக் காடு எல்லம் எரிந்துவிடும்.

ஐய்யய்யோ, இவன் தீயை வைத்துவிட்டான், தீயை வைத்துவிட்டான் என்று என் பெயரைச் சொல்லி சத்தம் போடுகிறார். என்னைக் காப்பாற்றுங்கள்.., என்னைக் காப்பாற்றுங்கள்..!

என்னை நெருப்புக்குள் போட்டு வாட்டுகிறான், பாவிப்பயல் என்று சத்தம் போடுகிறார், கை கால்களை இழுத்துக் கொண்டே சத்தம் போடுகிறார்.

மற்றவர்கள் எல்லோரும் சுற்றி நின்று, பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு எங்கும் போகமுடியவில்லை. வேஷ்டியிலும் தீ பிடித்துவிட்டது. அணைப்பதற்கு தண்ணீர் கூட அந்த இடத்தில் இல்லை.

சாமி, வேஷ்டி எல்லாம் தீ பிடித்துவிட்டது என்றேன்.

ஏன்டா..? தீயை நீ வைத்துவிட்டு, என்னை ஏன்டா சொல்கிறாய் என்கிறார் குருநாதர்.

இப்படியெல்லாம் அவஸ்தைப்படுத்தினார். தீ சுற்றி சூழ்ந்துவிட்டது. இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது, அந்த அளவில் இருக்கப்படும்போது,

இந்த தீ எப்படி பரவுகிறது?
இந்தத் தீயிற்கு உண்டான ஆற்றல் என்ன?

அவனுடைய ஆசை, எப்படி இந்த கரும்புச் சாறுக்காக வேண்டி, எந்த ஆசையில் கொண்டு வந்து, இங்கே ஆலையை வைத்தான்? என்று  இத்தனை உணர்வை அங்கே காட்டுகின்றார்.

அவன் பணத்திற்காக வேண்டி, ஆசைப்பட்டு வைத்தான். நீ, சக்தி பெறவேண்டுமென்ற நிலைகளில், இங்கே வந்து கொண்டிருக்கின்றாய். நெருப்பு வந்து சூழ்ந்து கொண்டிருக்கின்றது,

நீ எங்கே தப்பப் போகின்றாய்? நீ ஆசையின் நிலைகளில் இருந்து கொண்டிருக்கின்றாய்.

அவன் ஆசையில் அங்கே இருக்கிறான்.  ஆனால், அவன் வெளியே இருக்கிறான். நீ இங்கே இருக்கின்றாய்.

அந்த இடத்தில் உபதேசம் எப்படி கொடுக்கிறார் பாருங்கள். எல்லாவற்றையும் போட்டு நசுக்கி தீயை அணைக்க முற்படுகிறார்கள். எல்லாம் நசுக்கினாலும், சுற்றி அனல் தாங்க முடியவில்லை, சோகை முழுவதும் அனல் பிடித்திருக்கிறது. இவ்வளவு அவஸ்தையில் இருந்து கொண்டிருக்கிறேன்.
அவன் ஆசையில் வந்தான். சொன்னான். கரும்புச் சாறு சரியாக இருக்கிறது என்றான். உன்னைப் போற்றினான், நீயும் எல்லாம் பண்ணினாய்.
இப்பொழுது தீ பிடித்துக் கொண்டது.
இப்பொழுது என்னை யாரடா காப்பாற்றப் போகிறார்கள்.
சக்தி என்ன ஆனது? என்று கேட்கிறார்.

தீ பிடிக்கிறது, எல்லாம் பண்ணிவிட்டு என்னமோ மந்திர வேலை பண்ணிவிட்டான். என்னைத் தீயை வைத்துக் கொல்கிறான், என்னைக் காப்பாற்றுங்கள் என்றார் குருநாதர்.

அவர்கள் அங்கே அருகில் நெருங்க முடியவில்லை. என் கரும்புக் காடெல்லாம் போகிறதே, இங்கே தண்ணீர் ஊற்று, அங்கே தண்ணீர் ஊற்று. மோட்டாரைப் போடு என்றாலும்கூட அங்கே கரண்ட் சுவிட்ச் தண்ணீராகி விட்டதால் மோட்டாரே பாயிலாகி போய்விடுவது போல இருக்கிறது.

இந்த அளவுக்கு ஆபத்தான நிலைகளில் சிக்க வைத்துவிட்டு நம்மைப் பார்க்கிறார். அப்படியெல்லாம் சிக்க வைத்து மக்கு உணர்த்தினார். அவ்வாறு உணர்ந்ததை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். 

கஷ்டத்தைப் போக்குவதற்கு, கஷ்டம் வரும்போது,  அதை நிவர்த்தி செய்யச் சொன்னால்,  நேரம் இல்லை  என்கிறீர்கள்.

இப்படி, அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தைப் புகுத்தி எனக்கு அப்படியே மரணமடையும் நிலை வந்துவிட்டது. அப்படி மரணமடையும் நிலைகளில்தான்,
அவருடைய ஆசை என்ன செய்தது?
அந்த ஆசையில் உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தாலும்,
அந்த ஆசையிலிருந்து அவரகள் தப்பிப் போக முடிந்தது.

அவர்கள் அங்கே இருக்கிறார்கள். ஆனால், நீ எல்லா சக்திகளை பெற்றாலும், புகழுக்காக வேண்டி இதைச் செய்தாய். நீ இதற்குள் மாட்டிக் கொண்டிருக்கும்போது, உன் புகழ் எங்கே போகப்போகிறது?

இவ்வளவு பெரிய சக்தியை வைத்துக் கொண்டு, நீ என்ன பண்ணப்போகின்றாய்? என்னையும் இழுத்துக் கொண்டு சிக்க வைத்துவிட்டாய். நான் என்னடா பண்ணட்டும்என்கிறார் குருநாதர்.

கொஞ்ச நேரம் கழித்து, ஹா.. ஹா! என்று சிரித்துவிட்டு, இந்த உணர்வின் நிலைகள் அத்தனையுமே மனிதனாகப் போகும்போது என்னவாகும்என்பதை உணர்த்தினார்.

என் வேஷ்டி தீ பிடித்து எரிகிறது. மரணமாகக் கூடிய தருணம், வேறு வழியே இல்லை. அப்பொழுது நெருப்புக்குள் இருந்து அந்த உணர்வின் அலையை எடுத்துக் காட்டுகிறார்.

ஆனால், நீ மரணமடையப் போகும்பொழுது எந்த நிலை? 

உன் உடலுக்குள் இருக்கக்கூடிய உணர்வின் அலைகள் என்னென்ன செய்கிறது? என்று சொல்லி, அந்த உணர்வைக் காட்டினார். என் உடலில் தீ பிடிக்க வைத்து அந்த மாதிரிச் செய்தார்

அணுக்களின் செயலும், உன் ஆசையின் நிலைகளும் உன் உடலுக்குள் வளர்ந்த முந்தைய அணுவின் நிலை எப்படி? என்று உணரச் செய்தார்.

இதையெல்லாம் முதல் புத்தகத்தில் கொடுக்கவில்லை. கொடுத்தால், பயந்துவிடுவீர்கள். இப்படியும் இருக்கிறதா? என்று கொடுக்கவில்லை.

இப்படியெல்லாம் உணர்ந்து இதை வெளிப்படுத்தியபின் அப்பொழுதுதான் அணுவின் ஆற்றலின் தன்மையைக் காட்டுகின்றார்.

இப்படிக் கண்டுணர்ந்த நிலை போல, இன்று உலகத்தின் நிலைகளில் விஞ்ஞான அறிவு இப்படி வந்துவிட்டது. அவனுடைய ஆசையில், தன்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளிலேயே இன்று அவன் அதற்குள்ளேயே போய் சிக்கிக்கொண்டான். இது இன்றைய விஞ்ஞான அறிவு.. 

ஏனென்றால், இன்று விஞ்ஞானிகள் மனிதனுக்குள் இயற்கையின் நிலைகளில், இதனுடைய அலைகளை வைத்து, ஒரு நொடிக்குள் அனைவரையும் மாய்க்க வந்துவிட்டார்கள்.

மனிதன், அந்த சூரியனிலிருந்து தோன்றிய உணர்வின் அணு கொண்டு வளர்ந்தான். இதையெல்லாம், பின்னாட்களில் இந்த விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள். ஒவ்வொரு நிமிடத்திலும், யாம் காலத்தை விரயம் செய்யவில்லை.

ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும், உயிரையும் ஈசனாக மதித்து, அந்த உடலுக்குள் இருக்கக்கூடிய உயிரை மதித்து, 
அந்த அணுவின் இயக்கங்களுக்குள்,
உங்களுடன் இரவும் பகலும் தொடர்பு கொண்டு,
உடலின் நிலைகளில் பதிவு செய்கின்றோம். 

இந்த உணர்வின் அலைகளை, நீங்கள் பெறவேண்டுமென்று, நமது குருநாதர் காட்டிய அருள்வழி கொண்டு சதா ஜெபித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், எவ்வளவு சிரமப்பட்டு உங்கள் நிலைகளையும் நீங்கள் விஞ்ஞான அழிவிலிருந்து மீளுவவதற்கு இந்த உணர்வைப் பாய்ச்சச் செய்து, உங்களுக்குள் ஆற்றல் மிக்க சக்தியைப் பெருக்கினாலும் இதை சிந்திப்பார் யாரும் இல்லை.

ஆனால்,  நமக்குள் எடுத்துக் கொண்ட, இவ்வளவு பெரிய ஆற்றல்களையும், நமது குருநாதர் எப்பொழுதும் இயக்கிக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், இந்த உடலிலிருந்து எவ்வளவு காலம் யாம் இயங்கமுடியும்? அதற்குள், இதை பெருக்கிக் கொண்ட நிலைகள் கொண்டு,
நாளை வரக்கூடிய விஞ்ஞான உலகத்திலே,
நாளைய எதிர்காலத்தைச் சிந்தித்து,
ஒவ்வொருவரும் இந்த நிலைகளைச் செயல்படுத்திக் கொள்ளுங்கள்.
அதற்காகத்தான் இவ்வளவு பாடுபடுகின்றேன்.

என் குருநாதர் இட்ட கட்டளைப்படி ஒவ்வொருவரது உடலிலும் இதைப் பதிவு செய்திருக்கின்றோம்.

ஆகவே, தவறான நிலைகள் கொண்டு, இன்று விஞ்ஞான நிலைகள் கொண்ட அலைகள் உலகையே கரைக்கும் நிலைகள் வரும்போது, அதை மாற்றும் நிலைவேண்டும்.

அதற்குத்தான், துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஒரு பத்து நிமிடமாவது எடுத்துக் கொள்ளூங்கள்.

அதே துருவ நட்சத்திரத்தின் பேரருளை தனக்குள் கூட்டியபின், மகரிஷிகளின் ஒளியை நீங்கள் பெறுங்கள். எல்லா மகரிஷிகளின் அருள்சக்திகளை நீங்கள் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

August 30, 2014

எமது இறுமாப்பை அகற்றினார் குருநாதர் - ஞானகுரு

பல சக்திகளையும், பல வித்தைகளையும் குருநாதர் எமக்குக் காட்டினாலும், அந்தச் சக்தியின் துணைகொண்டு எமக்கு இறுமாப்பு அதிகமாகவே விளைகின்றது.

எதையும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைகளில், பல சக்திகளை உணர்த்துகின்றார்.

அது வந்தவுடன் எமக்குள் இறுமாப்பு வருகின்றது. இறுமாப்பு வரப்படும்பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது, அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்பொழுது அவர்கள் வன்மம் கொண்டு சில நிலைகளைச் செய்வார்கள்.

மந்திரவாதிகளுக்குள் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு. தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால், அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது. அதே  மாதிரிதான் எமது புத்தியும் செயல்பட்டது. 

மனித வாழ்க்கையில் வந்த யாம், குருநாதர் சக்தி கொடுத்திருக்கின்றார் என்றால்இவனை ஒரு கை பார்ப்பதுஎன்ற நிலையில் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எமக்குள் தோற்றுவித்தது.

ஆனால், அருள்ஞானியான மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர்கள் உணர்த்திய உணர்வோ, நமக்குள் ஈர்க்கும் அந்த உணர்வின் இயக்கங்களைக் கண்டு அறிவதற்காக,
எத்தகைய வலு இருந்தாலும்,
நாம் எண்ணத்தின் வலு கொண்டு செயல்டும்போது  நமது எண்ணம் தீமையின் வழியில் எப்படி அழைத்துச் செல்கின்றது? என்பதைத் தெளிவாக உணர்த்தினார்.

குருநாதர் உயர்ந்த சக்தியினை எமக்குள் கொடுத்தாலும்,
எமக்குள் அகந்தை என்ற நிலைகள் ஓங்கி வரப்படும் பொழுது,
மற்றவர்களை எளிமைப்படுத்திப் பார்ப்பதும், 
தான் தான்
நான் தான்
என்று நான் என்ற அகந்தை கூடும்பொழுது,
அந்த நல்ல உணர்வைக் காக்காதபடி, 
இந்த ஆறாவது அறிவை செம்மையாகப் பயன்படுத்தாதபடி.
இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு,
குரு காட்டிய அறநெறியின் தன்மையை,
வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்குப் பதில்
தீமையை அது தூண்டச் செய்து
இரு நான் பார்க்கின்றேன்
என்று அவனின் நிலைகளுக்கு,
இந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகிறது? என்று பார் 
என்று குருநாதர் உணர்த்துகின்றார்.

இவ்வாறு உணர்த்திக் கொண்டே இருக்கும் பொழுது, நான் எங்கோ சென்று கொண்டிருக்கும் பொழுது இப்படிப் பல நிலைகளைச் செய்யும் பொழுது, “திடீர் என்று எம்மை அறியாதபடி ஒரு மலை மீது பாதம் வைக்க மட்டும்தான் உள்ள இடத்தில் எம்மை நிறுத்திவிட்டார். உட்கார முடியவில்லை”.

அங்கே எப்படி வந்தோம்? என்ன செய்வது? என்று தெரியாதபடி திகைப்பின் நிலையில் இருந்தோம். எந்த மந்திரவாதி இப்படிச் செய்தானோ? என்ற இந்த எண்ணம்தான் வருகிறது.

யாம் மந்திரவாதிகளைத் தொட்டுப் பரிட்சை செய்ததினாலே, யாரோ மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் எம்மை இப்படி அழைத்து வந்துவிட்டனர் என்று நினைத்தோம்.

எந்தப் பக்கம் பார்த்தாலும் தலை சுற்றியது, அந்த அளவிற்கு மோசமான இடத்தில் இருந்தோம். அந்த மலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது.

அப்பொழுதுதான் யாம் திகைத்து,  நமக்கு குரு எவ்வளவு சக்தி கொடுத்தாலும், அந்த குருவின் துணை நமக்கு இல்லையே, யாம் அகந்தை கொண்டு செயல்பட்டதால், ஏதோ மந்திரவாதி செய்துவிட்டான் என்ற எண்ணங்கள்தான் எமக்கு வந்ததே தவிர,  குருவின் வலுவை யாம் எண்ணவில்லை. 

எமக்குள் அகந்தையின் நிலைகள் கொண்டு, யாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்ற உணர்வே தோற்றுவித்தது. இந்த நிலைகளில் இருந்து எப்படி மீள்வது? என்று தவித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு மணி நேரம் ஆகிவிட்டது, நேரம் ஆக, ஆக, எமது உடல் எல்லாம் வேர்க்கின்றது. சறுக்குப் பாறைபோல் இருந்ததால், வேர்வை வியர்க்க, வியர்க்க கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகின்றது. எனக்கு எதையும் எட்டிப் பிடிக்கும் நிலையே இல்லை.

முன் பக்கம் போனாலும் மரணம்தான், பின்பக்கம் போனாலும் மரணம்தான். குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட நேரம் இல்லை.

சிறிது நேரம் போனால், போய்விடுவோமோ என்ற பய உணர்வுகள் அதிகமாக அதிகமாக, உடலின் தன்மையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, உடலிலிருந்து வியர்வை கொட்டத் தொடங்கியது.

ஆக, வலுவிழந்த நிலையில் யாம் இருந்தோம்.

இந்த நேரத்தில் மனமே இனியாகிலும் மயங்காதே”, என்ற குரல் வருகின்றது.
அது குருவின் குரலாகத் தென்பட்டபின்
எமக்குக் கொஞ்சம் ஜீவன் வந்தது.

நீ கொஞ்ச நேரத்தில் விழுந்துவிடுகின்றாய். நீ உன் எண்ணத்தால் பல மனக் கோட்டையை கட்டினாயே, கொஞ்ச நேரத்தில் மறையப் போகின்றது பார் என்றார் குருநாதர்.

அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மனிதனும் செல்வங்கள் குவித்து வைத்து அந்த செல்வத்தைக் காத்திடும் நிலையாக, தன் பந்துக்கள் தன் இனங்களையே இம்சிக்கின்றனர்.

கடைசி நிலையில், அந்த பொருளைக் காக்க முடியாத நிலையில் அவர்கள் எப்படி வேதனைப்படுகின்றனர். சம்பாதித்து வைத்தாலும் அவர்களுக்குள் வேதனையத்தான் வளர்க்க முடிந்தது.

ஆக, செல்வத்தைக் காத்திடும் நிலை அற்று, தனக்குள் வேதனை என்ற நஞ்சின் தன்மை உருப்பெறும் நிலையாக, நல்ல குணங்களை அழித்திடும் நிலைகள் பட்டு, சீர்கெட்டு இருக்கும் நிலைகளை, சினிமாப் படங்களைக் காட்டுவது மாதிரி, ஒன்று ஒன்றாகக் காண்பித்தார். அப்பொழுதுதான்,
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லா இவ்வுலகம் உனக்கு சதமா
மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
என்ற நிலையை உபதேசித்தார், குருநாதர்.

ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் எவ்வாறு செல்வத்தைச் சம்பாதித்தனர்? அந்த செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைப்பட்டனர்? அந்த வேதனை குடும்பத்திற்குள் எப்படித் தொடர்ந்தது?

அந்தச் செல்வத்தைக் காக்கமுடியாத நிலைகள் கொண்டு சாபங்களும், குடும்பத்தில் நலிந்த உடலாகவும், நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழ்கின்றனர்? என்ற நிலைகளைத் தெளிவாக எடுத்துக் காட்டி, குறைந்தது இரண்டு மணி நேரம் இருக்கும், அதன் பின் கீழே இறக்கி விட்டார்.

இனி நீ வலம் வரலாம், உலகை அறியலாம். நான் உனக்குக் கண்டுணர்த்திய அனைவரின் உண்மைகள், நீ செல்லும்பொழுது, செல்லும் பாதையில் உனக்கு உண்மையின் உணர்வுகள் வரும். 

நீ அங்கே சென்று பார்
அவர்களின் குடும்பத்தின் நிலைகளைப் பார்
ஊன்றிப் பார், அவர்களின் செயல்களின் தன்மையைப் பார்
அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று சிந்தித்துப் பார்
என்று பல நிலைகளை உணர்த்தினார் குருநாதர்.