ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2024

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

உங்கள் எண்ணங்கள் தன்னிச்சையாக விண்ணை எட்டும்

 

நீங்கள் எத்தகைய துயர் பட்டுக் கொண்டிருந்தாலும்… அல்லது சாபவினைகளோ பாவ வினைகளோ தீய வினைகளோ உங்களுக்குள் சேர்ந்திருந்தாலும்… அதை எல்லாம் நீக்க
1.யாம் உபதேச வாயிலாக… அருள் வாக்கின் தன்மையாக
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்தி உள்ளேன்.

ஆனால் வாக்கினைக் கொடுத்த பின்பும் அதை நீங்கள் விரயம் செய்தால் அது உங்களுடைய அதிர்ஷ்டம் தான்.

நீங்கள் எல்லோரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சதா உங்கள் உயிரை ஈசனாகவும் ஆண்டவனாகவும் குருவாகவும் மதித்து நான் தியானிக்கின்றேன் (ஞானகுரு).

நீங்களும் அதே போன்று மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் தொடர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

காலையில் எழுந்தபின் இவ்வாறு செய்யுங்கள். உங்கள் நோயை மறந்து விடுங்கள்… நோயின் தன்மை அது செயலிழந்து விடும்.

1.எந்த அளவுக்கு யாம் கொடுத்த வாக்கினை நீங்கள் கூட்டிக்கொண்டு வருகின்றீர்களோ
2.அது அனைத்தும் உங்களுக்குள் மிகச் சக்தி வாய்ந்ததாக மாறும்.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை விடும்பொழுது அந்த நஞ்சின் தன்மை வலு இழப்பது போன்று நீங்கள் “ஆயிரம் தரம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைக் கூட்டினால்” உடலில் உள்ள நோய்கள் தானாகவே போய்விடும் அது செயலிழந்து விடும்.

1.காலையில் படுக்கையில் கண் விழித்த பின் இதைச் செய்யுங்கள்
2.அதற்குப் பின் இடைவெளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யுங்கள்
3.வெளியிலே வாகனங்களில் சென்றால் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்
4.இரவிலே படுக்கையிலே படுக்கும் போதும் அதே மாதிரி எண்ணுங்கள்.

உயர்வான உணர்வுகள் உங்களுக்குள் பெருகத் தொடங்கும்… பின் நினைவின் எண்ணங்கள் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக மாறும்.

எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் எங்களை அறியாது சேர்ந்து தீய வினைகள் சாப வினைகள் பாவ வினைகள் நீங்க வேண்டும்.

மகரிஷிகள் அருள் சக்தி எங்கள் குடும்பத்தில் படர்ந்து எங்கள் தொழில்களிலும் படர்ந்து குடும்பத்தில் உள்ளோர் மன பலம் மன நலம் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ வேண்டும்.

எங்களிடம் தொழில் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று… மன பலம் மன நலம் உடல் நலம் பெற வேண்டும். அவர்கள் தொழில்கள் நலம் பெற வேண்டும் சீராக வேண்டும். அவர்கள் குடும்பம் நலம் பெற வேண்டும் என்று இதைப் போல் எண்ணுங்கள்.

இப்படி எண்ணும் போது இங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். உங்கள் மனமும் உயர்ந்த நிலையில் இருக்கும்.
1.உங்கள் எண்ணங்கள் விண்ணை நோக்கிப் பற்றும்.
2.இதற்கு முன் உங்களை அறியாது சேர்ந்த தீய வினைகள் நசியும்.
3.ஞானிகள் உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
4.இந்த உணர்வின் தன்மை எட்டா தூரத்தில் இருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகளை எட்டும்படி செய்யும்…
5.உங்களுக்குள்ளேயே அந்த இயக்கங்கள் வருவதைப் பார்க்கலாம்.

பின் எந்த சாப வினைகளும் உங்களை அணுகாது. அதே சமயத்தில் உங்கள் சொல்லால் மூச்சால் பேச்சால் பார்வையால் பிறருடைய சாப வினைகளைப் போக்கும் சக்தியும் பெறுவீர்கள்.

இதை நீங்கள் செய்து பாருங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இதே போன்று நோய்களைப் பற்றி எண்ணாது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணி அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.

“நாவின் சுவைக்கு...” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்

 

“நாவின் சுவைக்கு...” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்

 

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா...? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன...?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்...! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா...?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது... என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்...”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற வகையில் உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன...?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே...!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானுகோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்கு தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலகோதய வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொண்டிட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே...!”

மகரிஷிகளால் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்...
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்...” என்ற பாச உணர்வினால் தானப்பா...!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்...” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா...?

அறிந்து கொண்டிருக்கும்... அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்... அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்... அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்... “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்...!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே...!

“உணவின் மாறுபாடும்...” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு...” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு...” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான் என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்றுவிட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும் என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும் செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்...” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

March 30, 2024

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது...” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்...” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை...” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்... “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன...?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.
4.இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்...?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது... அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு...” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றைய மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையும் கூட உயர்வு பெற முடியும்.

நல்லது செய்பவர்களுக்கு (அவர்களை) அறியாமல் வரும் துன்பங்கள்

உதாரணமாக இரண்டு பேர் குடும்பத்தில் சண்டை இடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவனை இன்னொருவன் ஏசுவதைக் கண்டு (சமரசத்திற்காக) சரி… விட்டு விடு போகட்டும் என்று நாம் சொல்வோம்.

ஆனால் பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்….! என்பான்.

இவன் பேசிவிடுவான். ஆனால் அது அவனுக்குள் பட்ட உடனே உணர்ச்சிகள் பொங்கி
1.இவன் ஒரு சொல்லைச் சொன்னால் அவன் பல சொல்களைச் சொல்வான்.
2.அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் போது
3.தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் இருவருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மிளகாய்ச் செடி தனக்குள் கார உணர்வை எடுத்துத்தான் மிளகாயை உருவாக்கும்… மிளகாயை வித்துக்களாக. எதிலிருந்து மிளகாயாக விளைந்ததோ அந்த வித்தின் தன்மை தாய்ச் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தைத் தான் அது விருத்தி செய்யும்.

இதைப் போல்
1.ஒருவருக்கொருவர் ஏசிப் பேசிய உணர்வுகள் வித்தாகும் பொழுது
2.எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ… அடுத்தவனும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டே இருப்பான்.
3.இவர்கள் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தவரும் இதைப் போன்று சாபத்தை விட்டுக் கொண்டே இருப்பார்கள்.
4.இந்த அலைகள் படர்ந்து படர்ந்து… நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்தி விடும்.

சாப அலைகள் இவருக்குள் விளைந்து எதையெல்லாம் இவர்கள் சொன்னார்களோ அது அனைத்தும் அங்கே படர்ந்து… இருவருடைய குடும்பங்களிலும் வீரியமாகப் பேசுவார்கள்.

இந்த வீரிய உணர்வுகள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் அறுத்துவிடும். பாசத்துடன் இருப்போரும் ஒருவருக்கொருவர் வெறுப்பான நிலைகள் ஆகிவிடும். ஆனால் ஏசியவன் தப்பி விடுவான்.

குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோர் நிலைகளில் இது படப்பட்டு இந்த உணர்வு துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலிலே வீழ்த்தி விடும்.

ஆக அண்ணன் இப்படிப் பேசுகின்றானே…! என்று தம்பியோ… தம்பி தான் சொன்னபடி கேட்கவில்லை என்று அண்ணன் “இப்படிச் செய்கின்றானே…” என்று தம்பியைக் கோபித்தாலும்… ஒருவருக்கொருவர் இடும் சாப அலைகளை உற்று நோக்கினால் அவர்களுக்குள் தீயவினைகள் வளர்ந்து நோயாக மாறி… அவர் குடும்பத்திலே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.

அவர்களுடைய தாய் தந்தையரோ சரி விட்டு விடுடா…! என்று சொன்னாலும் “நீ பேசாமல் இரு” என்று வேகமான சொல் பாய்ந்து அங்கேயும் வெறுப்பைத் தூண்டும்… சாப அலைகள் அங்கேயும் படர்ந்து விடும்.

அதே சமயம் குடும்பத்தில் பெண்கள் கர்ப்பமாக இருந்தார்கள் என்றால் இதே சாப அலைகள் அந்தக் கருவிலும் பதிந்து… பிறக்கும் குழந்தையையும் சாப அலைகள் தொடர்ந்து… இயக்கத் தொடங்கி விடுகிறது.

இது அவர்களோடு போனாலும் பரவாயில்லை…!
1.மற்றவர்கள் வேடிக்கையாகப் பார்த்தாலும் அவர்களுக்குள்ளும் பாய்ந்து அவர் குடும்பத்திலே கர்ப்பமுற்றிருந்தால் இது பதிவாகி விடும்.
2.உன் கால் முடமாகும் உன் கண்கள் குருடாகிவிடும் என்று ஏசிப் பேசிச் சாபமிட்டிருந்தால்
3.கர்ப்பமற்ற தாய் அதைக் கேட்டிருந்தால் (வேடிக்கை பார்த்திருந்தாலும்) இந்த உணர்வுகள் கருவிலே இணைந்துவிடும்.
4.பிறக்கும் குழந்தையின் கால் மூடமாகிவிடும்… கண்கள் குருடாகிவிடும்
5.எதைச் சொல்லிச் சாபமிட்டார்களோ அதே உணவின் தன்மை வளர்ச்சி அடைந்து அந்தந்த உறுப்புகளைச் செயலற்றதாக ஆக்கிவிடும்.

பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையாக மனிதன் வளர்ச்சி பெற்று வந்திருந்தாலும் இந்த உணர்வின் இயக்கங்கள் இப்படி இயங்கத் தொடங்கி விடுகின்றது.

அது நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை இயக்க விடாதபடி தீய செயல்களாகி… தீய உணர்வுகள் உடலில் நோயாக மாறி
1.நம் சொல் பிறருக்கு தீமையை விளைவிப்பதாகவும்
2.சாப வினைகள் நம் ஆன்மாவாக ஆகும் பொழுது தொழில்களிலும் இந்த உணர்வு படரப்பட்டு
3.நண்பர்களையும் எதிரி ஆக்கி நம் தொழிலையும் கெடுத்துவிடும்.

ஒரு விஷச் செடியைக் கண்டால் நாம் எப்படி விலகிச் செல்கின்றோமோ அது போல் ஒருவன் சாபம் விடுவதாக இருப்பினும்… நாம் பலருக்கு நன்மை செய்பவராக இருப்பினும்… நாம் தவறு செய்யாமலேயே சாப நிலைகளே முன் நின்று “நமக்கு எதிரிகளை உருவாக்கிக் கொண்டிருக்கும்…”

விஷச் செடியை நுகர்ந்த பின் அதைக் கண்டு வெறுத்து ஓடுவது போன்று சாப வினைகள் முன் நிற்கும் பொழுது… நாம் எடுக்கும் வெறுப்பான உணர்வுகள் பிறர் நம்மைப் பார்க்கும் பொழுது அவர்களுக்கும் இந்த நிலை ஆகிவிடுகிறது.

ஆகையினால் தான் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களை யாம் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. எத்தகைய நிலையைச் சந்தித்தாலும்
1.அடுத்த கணம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து அதை நமக்குள் கலந்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்
2.நாம் நுகர்ந்த பிறிதொரு உணர்வு நமக்குள் இயக்கக் கூடாது… தீய வினையாக மாற விடக் கூடாது.

March 29, 2024

ஞானத்தில் உயர்வடைய… “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…”

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும்… அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும்… மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து… ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்... பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி... அறிவொழிந்து...! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே
2.பக்தி என்ற குளிரை விரட்டும்...! என்று அறியாமல் போனதென்ன…?
3.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை...!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி... ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு... பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்... பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்... அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்...!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்...!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த... தான் பெற்ற தன்மை கொண்டு... ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது...” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை...” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே...” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் “தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும்…” என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்...!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி...”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி… தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

காசு வாங்காமல் யாம் பயிற்சி கொடுத்தால் அதைச் சாதாரணமாக எண்ணிவிடுகின்றார்கள்

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலம் போக வேண்டும் என்று தனிப்பட்ட நிலையிலிருந்து சொல்லாதீர்கள். குடும்பத்தில் உள்ள பத்து பேர் சேர்ந்து இணைந்து அதைச் செயல்படுத்துங்கள். காரணம்…
1.சிலர் துர்மரணம் அடைந்திருக்கலாம் அல்லது மிகவும் கடினமான நோய்வாய்ப்பட்டு உடலை விட்டு வெளியே சென்றிருப்பார்கள்.
2.அவருடைய உணர்வின் தன்மை நம்முடைய உடல்களில் உண்டு.
3.அவர் மேல் உள்ள பாசத்தால் சப்தரிஷி மண்டலம் செல்ல வேண்டும் என்று எண்ணினால்
4.பாலிலே நஞ்சினை விட்டு அதிலே பாதாமைப் போட்டாலும் அது செயலற்றதாக மாறுவது போல்
5.அந்த ஆன்மாக்கள் நம் உடலுக்குள் வந்துவிடும்….!

அதைப் போன்று இல்லாதபடி குடும்பத்தில் கூட்டாக அமர்ந்து சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் எண்ணி “சப்தரிஷி மண்டல உணர்வுகளை வலுவாக்கிக் கொள்ள வேண்டும்…”

அதற்குப் பின் எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் ஒருங்கிணைந்து சொல்லுங்கள்.

அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் தியானம் செய்யக்கூடியவர்கள் ஒரு இருபது பேரை அழைத்துக் கூட்டுத் தியானம் இருந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை பிறவா நிலை பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு செய்யப்படும் பொழுது அவர்கள் விண் சென்று விடுகிறார்கள். உடல் பெறும் உணர்வுகள் சப்தரிஷி மண்டல ஒளிக் கடலிலே (கங்கை) பட்ட பின் அது கருகி விடுகின்றது. உயிருடன் ஒன்றிய அறிவாக ஒளியாக நிலைத்து விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் இவ்வாறு தான் செயல்படுத்த வேண்டும்.

அவர்களை விண் செலுத்திய பின் உங்கள் வாழ்க்கையில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அந்த நேரங்களில் எல்லாம் சப்தரிஷி மண்டலங்களின் சக்தியைப் பெற முடியும்…. அந்த நினைவாற்றலை நாம் பெருக்க முடியும். இடையூறுகளை அகற்றிட முடியும்.

சப்தரிஷி மண்டலங்களின் நினைவாற்றல் பெருகப் பெருக… இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் நாமும் அங்கே செல்ல முடியும்.

ஏனென்றால் முன்னோர்களின் ஆன்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அங்கே உந்தித் தள்ளுகின்றோம்… உடல் பெறும் உணர்வுகள் அங்கே கறுக்கப்படுகின்றது.

அதன் துணை கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலங்களை எண்ணும் பொழுது அந்த ஆற்றலை நாம் எளிதில் பெற முடியும். அனைவருமே இந்தத் தகுதி பெற முடியும்.

இதை எல்லாம் உங்களுக்குப் பயிற்சியாகத் தான் கொடுக்கின்றோம்… யாரும் செய்வதில்லை.

காசைக் கொடுத்துப் பணத்தை செலவழித்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள் என்றால்… எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கே காத்திருந்து அதைப் பெறுகின்றார்கள்.

1.நீங்கள் எல்லோரும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று குரு அருளைப் பாய்ச்சி
2.உங்கள் முன்னோர்கள் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று பயிற்சியாகக் கொடுத்தால்
3.எங்களுக்கு நேரமில்லை இதைச் செய்வதற்கு எங்களால் முடியவில்லை என்று சொல்லி விடுகின்றார்கள்.

மணிக்கணக்கில் காத்திருந்து இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் காசையும் கொடுத்து விட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் எளிமையாக யாம் (ஞானகுரு) சொன்னாலும் அதைக் கேட்பதில்லை. இது போன்ற நிலை இல்லாதபடி உங்களை நீங்கள் நம்பி இதைச் செய்து பழக வேண்டும்.

முன்னோர்களை விண் செலுத்துவது மிகவும் முக்கியமானது.

March 28, 2024

“தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்” பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்...” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான். குரு என்றால் என்னப்பா...?

குரு என்றாலே “ஒளி நிலை...” என்பது பொருள்...!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி... உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானு கோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்...!” என்ற நிலை இல்லையப்பா...!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்...! என்ற சொல்லும் எதற்கப்பா...?

“தனித்துவமான சக்தி...” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்... மாமகரிஷிகளின் ஆசியுடன்... “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை...” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது...?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்... சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்... கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே...?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்...! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே...?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்...? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

மூதாதையரின் ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று “ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணுங்கள்”

இந்திய மண்ணிலே தோன்றிய ஞானிகளால் வளர்க்கப்பட்ட ஆன்மீகத்தின் நிலைகளை எவரும் பழித்திடும் நிலை வராது… வரக்கூடாது என்பதை குருநாதர் அன்றே சொன்னார். அவர் காட்டிய வழியினைத்தான் நானும் (ஞானகுரு) இப்பொழுது சொல்கின்றேன்.

விநாயகரை வணங்கும் பொழுதெல்லாம்
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் மூதாதையர்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

மேலும்…
1.ஒரு நாளைக்கு ஆயிரம் தடவையாவது
2.எங்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து
3.பிறவா நிலை என்னும் பெரு நிலை அடைய வேண்டும் என்று எண்ணுங்கள்.
4.சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குள் அவர்களை உந்தித் தள்ளுங்கள்… அந்த உணர்வின் ஆற்றல் உங்களுக்குள்ளும் சேரும்.
5.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் படர வேண்டும்…
6.தீமைகளை விளைய வைக்கும் “தீய உணர்வுகள் அகல வேண்டும்” என்ற உணர்வுகளைப் பாய்ச்சுங்கள்.

தத்துவ ஞானிகள் வளர்ந்து தீமைகளை அகற்றிய நாடு இது. முதல் நிலையாக உலகெங்கிற்கும் மெய் ஞானத்தை உணர்த்திய பூமி இது. தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று நிலைகளை இங்கிருந்து தான் உலகிற்குத் தெளிவுற எடுத்துரைத்தது.
1.விண்ணுலகின் ஆற்றலை ஒளியின் சரீரமாகச் சிவமாக்கியவன் அகஸ்தியன்.
2.எந்த நாட்டவரும் அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெற முடியும்.

சீவலிங்கமாக இன்று இருக்கின்றோம். அகஸ்தியன் உணர்வை எடுத்து அதனின் துணை கொண்டு “உயிருடன் ஒன்றிய இராமலிங்கமாக” எண்ணத்தின் வழிகளிலே எண்ணத்தால் உருவாக்கப்பட்ட தன்மை கொண்டு… என்றும் ஒளிச் சரீரமாக இருக்க முடியும்.

இந்த உலகில் தீய சக்திகள் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் யாம் இதை வெளிப்படுத்த வேண்டி இருக்கின்றது.

தீமைகள் பரவாது தடுக்கச் செயுயும் அந்த ஞானிகள் உணர்வுகள் இங்கே அனைவரையும் காக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும் எல்லோருக்கும் பேரானந்த அமுதாக இது கிடைக்க வேண்டும் என்று தான் குருநாதர் கூறினார்.

அதன் வழியில் தான் நான் இதைச் செயல்படுத்துகின்றேன் சாமி வேகமாகப் பேசுகிறார் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை.

உலகில் நல்லது என்று சிந்தித்துச் செயல்படுத்தும் மக்களை வீழ்த்திடும் நிலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. எளிமையானவர்களிடமிருந்து பொருள்களைத் தட்டிப் பறிக்கும் நிலையே உருவாகிக் கொண்டுள்ளது

வளர்ச்சி அடைந்த நாடுகள் மற்ற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் (அங்கிருந்து) ஆணையிடுவதை சிரம் மேல் ஏற்று நடப்பவர்கள் அசுர உணர்வு கொண்டோர் இங்கே நம் நாட்டிலும் உண்டு. அதிலிருந்து மக்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கின்றேன்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ண வேண்டும்.

சாஸ்திரப் பிரகாரம் நரசிம்ம அவதாரமாக தீமைகளை அகற்றிய அந்த மகரிஷிகளை நினைவுக்குக் கொண்டு வந்து… உயிருடன் ஒன்றி… விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் என்ற வேட்கையைக் கூட்டி ஒருங்கிணைந்து செயல்பட்டு தீமைகளை அகற்றுங்கள்.

அதே போன்று
1.மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்களை விண் செலுத்தும் உணர்வுகளை அடிக்கடி கூட்டிக் கொண்டே வாருங்கள்.
2.அது உங்களுக்கு நல்ல பயனைத் தரும்
3.அவர்கள் முன் சென்றால்… அடுத்து நாமும் நிச்சயம் பிறவா நிலை பெற முடியும்.

March 27, 2024

ஆத்மாவின் முழுமை புலப்படும் வழி

ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..?” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.

உடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.

எண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது
1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்...” என்பது வினையானால்
2.அந்த வினையின் விளை பொருள் விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி”
3.வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே..? என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

ஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா...?

எண்ணத்தின் செயல்பாடு நான் என்பது புகழ் தேடும் வழியாக உபதேசித்தல் என்பது... விளை பொருள் ஆக்கும் செயல் கொண்ட எண்ணத்தின் “மாறுபாடே...!”

அஞ்ஞானத்தின் செயல்பாட்டில் வினைபொருள் செயல் கொள்ளும் எண்ணமாக எதை எண்ணி வலுக்கூட்டும் செயல் நிகழ்வோ அதுவும் ஆத்மாவில் பதிவு நிலை பெறுகின்றது.

1.செயல்பாட்டில் நான் என்பதில் உரைத்திட்ட
2.வேறுபாட்டின் பொருளில் செயல்பாட்டில் கொள்ள வேண்டிய நான்
3.ஆத்மாவின் மூலச் சக்தியாக நான் என்பதற்கு வலுக்கூட்டும் நானாக அமைவு பெற்றால் இரண்டும் ஒன்றே.

ஒன்றில்லாமல் ஒன்றில்லை உரைத்த உரையில்... இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்... ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட
1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி
2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் - பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.

1.உண்மையின் சக்தி...
2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ...
3.அகண்ட... பிரகாச... பேரின்ப ஜோதியாக...
4.ஆத்மாவாக - உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு
5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக
6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொண்டிடும் செயலில் ஆனந்தமும்
7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் நான் என்பதே ஆத்மா என்று உணர்ந்திடும் பக்குவத்தில்
8.அறிவு... காரணம்... ஆனந்தம்...! அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி
9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ...
10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி...!

ஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது...!”

வினைகளை நீக்கும் மகரிஷிகளின் அருள் ஞானம்

அன்றாட வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு வரையிலும் எத்தனையோ குற்றம் குறைகளைப் பார்க்கின்றோம்… எத்தனையோ தீமைகளைக் கேட்டுணர்கின்றோம். அவை எல்லாம் தீய வினைகளாக நமக்குள் வந்து விடுகின்றது.

அதே சமயத்தில் பிறர் செய்யும் தவறான உணர்வுகள்… சாப வினைகளாக வருவதை… நாம் உற்று நோக்கப்படும் பொழுது நம்மை அறியாமலே நமக்குள் அது புகுந்து விடுகிறது.

அதே சமயத்தில் ஒருவன் செய்யும் பாவச் செயல்களை உற்று நோக்கும் போது அந்தப் பாவ வினை நமக்குள் வந்துவிடுகிறது. சாப வினையும் பாவ வினையும் மிகவும் கடினமானது

காரணம் எத்தகைய தொழில் செய்தாலும்
1.பிறரை நாம் பார்க்காமல் இருக்க முடியாது பழகாமல் இருக்க முடியாது ரோட்டிலே நாம் செல்லாமல் இருக்க முடியாது.
2.பிறர்படும் துயரத்தையும் சாபமிடும் நிலைகளையும் வேடிக்கையாகப் பார்த்தாலும்
3.அது நமக்குள் புகுந்து சாப வினைகளாக விளையத் தொடங்கி விடுகின்றது.

நாம் விஷமான பொருளைக் கையில் எடுத்து வேலை செய்த பின் உடனே தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்தவில்லை என்றால் விஷம் நமக்குள் வந்து உடலைச் செயலற்றதாக்கிவிடும்.

அதே போல் ஒரு விஷ வித்தாக இருந்தாலும் மண்ணிலே விழுந்து விட்டால் அது முளைக்கத்தான் செய்யும். விஷ வித்து என்று அதைப் பிடுங்கி எறிந்தாலும் மறு பக்கம் விழுந்தால் அது அதனின் நஞ்சின் தன்மை இயக்கத்தான் செய்யும்.

ஆகவே நம்மை அறியாது சேரும் தீய வினைகளை சாப வினைகளை பாவ வினைகளை அகற்ற வேண்டும். நமது குருநாதர் இத்தகைய வினைகளை எல்லாம் நீக்கும் ஆற்றல்களை…
1.மகரிஷிகள் எவ்வாறு தனக்குள் கற்றுணர்ந்தார்கள்…?
2.தீய வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
3.சாப வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
4.பாவ வினைகளை எப்படி அகற்றினார்கள்…?
5.தீமைகளை நீக்கும் உணர்வுகளை எவ்வாறு சேர்த்துக் கொண்டார்கள்…?
6.அது எவ்வாறு அவருக்குள் விளைந்தது…?
7.அதன் துணை கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியாக இன்றும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…? என்ற உண்மையை எனக்கு உணர்த்தினார்.

அதை நீங்களும் பெற முடியும் அவர் காட்டிய மார்க்கத்தினைத் தான் உங்களுக்கும் இப்போது உபதேசிக்கின்றோம். இந்த உணர்வின் ஆற்றலை நல்வினையாகப் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு)

பதிவு செய்ததை ஓங்கி எண்ணும் பொழுது தீய வினைகளை அகற்றுவதும் பாவினைகளைப் போக்குவதும் உங்களால் முடியும்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்… என்னை அறியாத வந்த தீயவினைகள் சாப வினைகள் பாவ வினைகளை நீக்குவேன்…! என்ற உறுதி கொள்ளுங்கள்.

இதைச் செயல்படுத்தினால் அந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

March 26, 2024

உருவை எண்ணி ஜெபிப்பதா…? உணர்வை (சக்தியை) எடுத்து வளர்ப்பதா…?

மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொண்டிடும் முயற்சியாகத் தான் கண்டுணர்ந்த வழி வகைகளை மெய் உணர்வுகளை மறை பொருளாக்குபவர்களும் உண்டு.

ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில் “விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது… அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.

இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் அனைத்துப் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”

“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?

பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாகத் (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும் இறப்பின் பின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.

உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்…
4.அன்றைய “பாஷாண்டகம்..!” எண்ணத்தின் செயல்பாட்டில் இரு விதம் உண்டு.

பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”

நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.

1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இரு விதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!

ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!
3.ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
4.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
5.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து… உணர்ந்து கொண்டால்
6.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை “மிக மிகத் தெளிவு பெறும்…!”

சக்தி பெற்றால் இறுமாப்பு தான் வருகிறது…!

பல வித்தைகளையும் பல சக்திகளையும் குருநாதர் காட்டினாலும் அந்தச் சக்திகளின் துணை கொண்டு எனக்குள் (ஞானகுரு) இறுமாப்பு அதிகமாக விளைகின்றது.

எதையெதையோ எப்படி எப்படியோ செய்யலாம் என்ற பல சக்திகளையும் உணர்த்துகின்றார் அது வந்த உடனே எனக்குள் இறுமாப்பும் வருகின்றது

இறுமாப்பு வரப்படும் பொழுது சில மந்திரவாதிகளைப் போய் அணுகுவது… அவர்களைச் செயலற்றதாக ஆக்குவது. அப்போது அவர்கள் பதிலுக்கு வன்மம் கொண்டு சில நிலைகளைச் செயல்படுத்துவார்கள்

மந்திரவாதிகளுக்குள் ஒருவருக்கொருவர் இந்த மாதிரிப் பழக்கம் உண்டு.

தனக்குள் மந்திரம் இருக்கிறது என்றால் அடுத்தவனை என்னவென்று சுண்டிப் பார்ப்பது… அதே மாதிரித் தான் என் புத்தியும் செயல்பட்டது. ஏனென்றால்
1.மனித வாழ்க்கையில் வந்ததால் குருநாதர்ர் சக்தி கொடுத்திருக்கிறார் என்றாலும்
2.இவன் என்ன பெரியவனா…? என்ற நிலைகள் அகந்தை கொண்டு செயல்படும் உணர்வே எனக்குள் தோற்றுவித்தது.

ஆனால் மாமகரிஷிகள் உணர்த்தியதோ… நமக்குள் செயல்படும் உணர்வின் இயக்கங்களைக் கண்டறிவதற்காகத் தான். அதாவது எத்தகைய வலு இருந்தாலும்… எண்ணத்தின் வலு கொண்டு வரப்படும் பொழுது நம் எண்ணம் தீமைக்கு எப்படி அழைத்துச் செல்கின்றது…? என்பது தான்…!

குருநாதர் எனக்கு உயர்ந்த சக்தியைக் கொடுத்திருந்தாலும்
1.அகந்தை ஓங்கப்படும் பொழுது மற்றவரை எளிமைப்படுத்திப் பார்ப்பது.
2.தான் தான் நான் தான் என்று நான் என்ற அகந்தை கூடும் பொழுது அங்கே நல்ல உணர்வைக் காக்க முடியாதபடி
3.ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகச் செயல்படுத்த முடியாதபடி
4.குரு காட்டிய அருள் வழியில் வலுவாகத் தீமையை அகற்றும் நிலைக்கு வருவதற்கு மாறாக
5.தீமையையே தூண்டச் செய்து “இரு நான் பார்க்கின்றேன்…” என்று அவனின் நிலைகளுக்கே என் உணர்வுகள் சென்றது.
6.அந்த உணர்வுகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்று பார்…! என்று குருநாதர் உணர்த்துகின்றனர்.

இப்படி உணர்த்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று என்னை அறியாதபடி ஒரு மலை மீது என் இரண்டு கால் பாதங்கள் மட்டும் வைக்கக்கூடிய இடத்திற்கு வந்துவிட்டேன். அங்கே உட்காருவதற்கோ… சரியானபடி நிற்பதற்கோ வழியில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது அந்த மலை.

இந்த இடத்திற்கு நான் எப்படிச் சென்றேன்…? எதனால் இங்கே வந்தேன்…? இப்போது என்ன செய்வது…? என்று தெரியாதபடி திகைத்துக் கொண்டு இருக்கின்றேன்.

எந்த மந்திரவாதி நம்மை இப்படிச் செய்தானோ…? என்று நினைக்கின்றேன். மந்திரவாதிகளைத் தொட்டு நாம் பரிசீலனை செய்ததினால்… யாரோ மிக சக்தி வாய்ந்தவர் என்ன இப்படி அழைத்து வந்து விட்டார்…! என்ற எண்ணம் வருகின்றது.

எந்தப் பக்கமும் என்னால் திரும்ப முடியவில்லை. காரணம் மலை உச்சி அது…! எந்தப் பக்கம் பார்த்தாலும் பாதாளமாகத் தெரிகிறது… தலை சுற்றுகின்றது பின்னாடி… சுத்தமாகவே திரும்பிப் பார்க்க முடியவில்லை.

அந்த அளவுக்கு மோசமான இடத்தில் இருக்கின்றேன். அப்போது திகைத்து…
1.எவ்வளவு பெரிய சக்தியை குரு நமக்குக் கொடுத்திருந்தாலும் அந்தக் குருவின் துணை நமக்கு இல்லையே
2.நான் அகந்தை கொண்டு அல்லவா எண்ணிவிட்டேன்
3.யாரோ ஒரு மந்திரவாதி தான் நம்மை இப்படிச் செய்து விட்டான் என்ற எண்ணமே வருகிறது.
4.குருவின் வலுவை நான் எண்ணவில்லை.

அகந்தை கொண்டு நாம் செய்த செயலுக்கு மற்றவர்கள் இவ்வாறு செய்து விட்டார்கள் என்ற உணர்வுகள் தான் தோற்றுவிக்கின்றது இதிலிருந்து எப்படி மீள்வது…? என்ற நிலை இல்லாதபடி நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

அரை மணி நேரம்… ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நேரம் ஆக ஆக என் உடல் எல்லாம் வேர்க்கின்றது சறுக்குப் பாறை போல் இருக்கின்றது உடலில் வேர்வை அதிகமாக்க் கால்கள் தன்னிச்சையாக நகரும் தன்மை வருகிறது

பாதுகாப்பாக எதையாவது எட்டிப் பிடிக்க வேண்டும் என்றாலும் ஒன்றும் முடியவில்லை. முன் பக்கம் போனாலும் மரணம் தான் உயரமான இடமாக இருப்பதால் பின் பக்கம் போனாலும் மரணம் தான்… உடல் சுக்கு நூறாகிவிடும்.
1.இப்படிப்பட்ட எண்ணங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது
2.குருநாதர் கொடுத்த சக்தியை எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை.

சிறிது நேரம் ஆனால் மரணம் ஆகி விடுவோம் என்ற இந்த பய உணர்வு அதிகமாக அதிகமாக உடலில் வெப்பத்தின் தன்மை அதிகரிக்க உடலில் இருந்து வேர்வைகள் கொட்டத் தொடங்கி விடுகின்றது.

ஆக வலு இழந்த நிலையில் இருக்கின்றேன்.

அந்த நேரத்தில் “மனமே இனியாகிலும் நீ மயங்காதே…!” என்ற குரல் வருகின்றது. குருவின் குரலாக அது எனக்குத் தென்பட்ட பின் கொஞ்சம் ஜீவன் வருகிறது.

மனமே இனியாயாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே…!
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய்…!

சிறிது நேரத்தில் நீ விழுந்து விடுகின்றாய் என்றால்… உன் குடும்பம் உன் பெண்டு பிள்ளைகள் என்று நீ மனக்கோட்டை கட்டினாய் அல்லவா…! கொஞ்ச நேரத்தில் எல்லாம் மறையப் போகின்றது பார்…!

அதைத் தொடர்ந்து சில உண்மைகளை அங்கே காட்டுகின்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனும் செல்வங்களைக் குவித்து வைத்து அதைக் காத்திடும் நிலையாகத் தன் பந்துக்களும் தன் இனங்களும் என்ற நிலையில் மற்றவர்களை இம்சித்து… அவர்களைக் காத்துக் கொள்ளும் நிலை இருந்தாலும் “கடைசி நிலையில்” பொருளைக் காக்காத நிலையில் எப்படி வேதனைப்படுகின்றனர்…?

சம்பாதித்து வைத்த பணம் இருந்தாலும் அண்த நேரத்தில் வேதனையைத் தான் வளர்க்க முடிகின்றதே தவிர செல்வத்தைக் காத்திடும் நிலை இல்லாதபடி
1.வேதனையான நஞ்சு உருப்பெறும் நிலையாக
2.நல்ல குணங்கள் அழிந்திடும் நிலையாக சீர் கெட்டு இருக்கும் நிலையை
3.சினிமா படங்களில் காட்டுவது போன்று ஒவ்வொன்றாக அங்கே அந்த இட்த்தில் வைத்துக் காட்டுகின்றனர்.

பலருடைய நிலைகளைக் காட்டுகின்றார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போல மறைவதைப் பாராய் என்று பாடிக் காட்டுகின்றார்.

நேற்று இருந்தவர்கள் எல்லாம் இன்று இருக்கின்றார்களா…? நிலை இல்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…? மனமே இனி ஆகிலும் நீ மயங்காதே…! என்று தெளிவாக்குகின்றார்.

குறைந்தது ஒரு இரண்டு மணி நேரம் இருக்கும். இந்த உலகத்தில் உள்ள நான் முன் பின் பார்த்திராத ஒவ்வொரு குடும்பங்களையும் காட்டுகின்றார்.

1.அவர்கள் வாழ்க்கையில் செல்வத்தை எவ்வாறு சம்பாரித்தனர்…?
2.செல்வத்தைக் காப்பதற்காக எத்தனை வேதனைகள் படுகின்றார்கள்…?
3.அதனைத் தொடர்ந்து அந்தக் குடும்பங்களில் சாபங்கள் எப்படித் தொடர்ந்தது…?
4.சாபத்தினால் நலிந்த உடலாக நிம்மதியற்ற நிலைகளில் எவ்வாறு வாழுகின்றனர்…? என்பதைத் தெளிவுர எடுத்துக் காட்டுகின்றார்.

அதன் பின் அந்த மலையிலிருந்து என்னைக் கீழே இறக்கி விடுகின்றார். இனி நீ வலம் வரலாம்… இந்த உலகை அறியலாம்… நான் காட்டிய அனைவரைப் பற்றியும் நீ செல்லும் பாதையில் உனக்கு அந்த உணர்வுகள் வரும்

1.அதன்படி நீ அங்கே சென்று பார்…!
2.அந்தக் குடும்பத்தின் நிலையை ஊன்றிப் பார்
3.அவருடைய செயலைப் பார்… அதிலிருந்து அவர்கள் விடுபட என்னவென்று நீ சிந்தித்துப் பார்…! என்று
4.பல நிலைகளை உணர்த்துகின்றார் குரு.

அதன் வழியில் தான் இன்று வரையிலும் யாரையெல்லாம் காட்டினாரோ அவர்கள் அனைவருக்கும் கன்னியாகுமரியில் இருந்து இமயம் வரையிலும் கால்நடையாகப் பெரும்பகுதி நடந்து அவர் காட்டிய இடங்களுக்கு எல்லாம் அந்த உணர்வுகள் தோன்றி ஆங்காங்கு சென்று அந்தக் குடும்பங்களில் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்…? அவருடைய நிலைகள் என்ன…? என்று அறியும் வண்ணம் அறியச் செய்தார்.

அறிந்த நிலைகளை தான் இன்னும் அறிந்து கொண்டே இருக்கின்றேன்.

March 25, 2024

பல கஷ்டங்களைக் கொடுத்துத் தான்… அதிலிருந்து விடுபடும் சக்திகளைக் கொடுத்தார் குருநாதர்

என் (ஞானகுரு) காலிலே பல ஆணிகள் உண்டு. காலில் ஆணி உள்ளவரிடம் கேட்டால் தெரியும். ஒரு சிறிய கல் காலிலே குத்தினால் தலையில் இருக்கக்கூடிய… உச்சி மயிர் நட்டமாக நிற்கும்.

கால் ஆணி உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால் ஒரு குச்சியை வைத்துக் காலிலே பத்து அடி அடித்தாலே போதும் ஜீவனே பிரிந்து விடும். அப்போது அந்த வேதனை எப்படி இருக்கும்…? என்று தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு காலிலும் சேர்த்து 26 ஆணிகள் உண்டு…! ஒரு காலடி நான் எடுத்து வைக்க வேண்டும் என்றால் முள்ளிலே கால் வைப்பது போன்று தான் இருக்கும்.

சிலம்பு விளையாடுபவர்கள் எப்படிக் காலடி எடுத்து வைத்துச் செயல்படுகின்றார்களோ அது போன்று பாவ்லா போட்டுத் தான் நடக்க முடியும். ஒவ்வொரு நிமிடத்திலும் வேதனைகளைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கும்.

ஆனால் ஊரைச் சுற்றி உலகைச் சுற்றி நான் அனுபவம் பெறுவதற்காகப் போகும் போது… குருநாதர் எம்மை “நீ செருப்பு போட்டு நடக்கக் கூடாது…” என்று சொல்லிவிட்டார்.
1.செருப்பு போட்டு நடந்தால் கஷ்டத்தை நீ உணர முடியாது
2.எத்தனையோ பேர் இந்த உலகிலே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
3.அந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது…? என்று நீ உணர வேண்டும்.
4.அதை உணர்ந்தால் தான் மற்றவர்களுக்கு நீ உதவி செய்ய முடியும்… அதை நீக்கவும் முடியும்.

ஆகவே… உனக்கு வேதனை வரும் பொழுது அதை நீக்கக்கூடிய உணர்வுகள்… அந்த உபாயங்கள்… அது எப்படி…? என்பதை நீ அறிந்து கொள்ளவே இதைச் சொல்கிறேன் என்றார் குருநாதர்.

காலிலே ஆணி என்றாலும் நடக்கும் பொழுது உன் மனது என்ன ஆகிறது…? நீ சுவாசிக்கும் உணர்வு உடலுக்குள் சென்று என்ன ஆகின்றது…?

ஆணி வந்தவர்கள் கால்கள் எப்படி முடமாகின்றது…? நன்றாகத் தான் இருப்பார்கள் இந்த ஆணிகள் வந்துவிட்டால் உடல் குறுகி நலிந்த நிலை ஆகி விடுகின்றார்கள்… அவரின் மனதும் வேதனைப்படும் உணர்வாகவ ஆகி விடுகிறது.

இப்படி… தன்னை அறியாமலே எந்தெந்த நிலைகள் கொண்டு மனிதர்கள் வேதனைப்படுகின்றனர்…? அந்த வேதனை உருவாகவே எப்படி மாறி விடுகின்றார்கள்…?

இது போன்ற நிலைகளை நீ அனுபவபூர்வமாக அறிந்தால் தான் அதை நீக்க முடியும்…
1.அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி
2.அகஸ்தியன் காட்டிய அருள் வழிப்படி
3.வியாசகர் காட்டிய அருள் நெறிப்படி
4.வான்மீகி காட்டி அருள் நெறிப்படி
5.நாம் எதை எண்ண வேண்டும்… எதனை நாம் பருக வேண்டும்…?
6.எதனை நாம் வலுவாகச் சேர்க்க வேண்டும்…?
7.எதனை வினையாகச் சேர்க்க வேண்டும்…?
8.ஞானிகள் உணர்வினை வினைக்கு நாயகனாக எவ்வாறு ஆக்க வேண்டும் என்ற நிலையை
9.என் காலில் ஆணி இருக்கின்ற வரையிலும் நடந்து பல நிலைகளைச் செயல்படுத்தினார் குருநாதர்.

மகரிஷிகள் மனித வாழ்க்கையில் தீமைகளை அகற்றி விண்ணுலகில் இன்று சுழன்று கொண்டிருக்கிறார்கள். தீமையை அகற்றிய நிலைகள் அவர் உடலில் விளைய வைத்த சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது.

அதை நீ எவ்வாறு பருக வேண்டும்…? என்று உபதேசித்தார். இப்படித்தான் அனுபவங்களைக் கொடுத்து உண்மைகளை உணரும்படி செய்து ஞானிகளின் அருளாற்றல்களைப் பெறும்படி செய்தார்.

March 24, 2024

வழக்கத்தில் நாம் செய்வது ஒன்று… ஆனால் அதையே “நல்லதை உருவாக்கும் பழக்கமாக மாற்ற வேண்டும்”

புற உலகில் என்னென்ன வழி (மார்க்கம்) இருக்கிறதோ அது அத்தனையும் இன்று நம்புகின்றோம்… நம்மை நாம் நம்புகிறோமா…?

ஆக… ஒவ்வொரு மனிதனுக்கும்
1.அவனுக்குள் இருக்கும் சக்தி இன்னது தான் என்று யாம் (ஞானகுரு) தெளிவாகச் சொல்லி
2.உங்கள் எண்ணத்திற்கு வலுவையும் கொடுத்து… எண்ணத்தால் ஞானிகள் சக்தியைப் பெறச் செய்து
3.உங்கள் எண்ணத்தாலே உங்களை அறியாது வரும் தீமைகளை அகற்றிட உங்களுக்கு அந்த சக்தியையும் கொடுக்கின்றோம்.
4.ஆனால் இதை நீங்கள் வளர்ப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையே…!
5.யாரோ செய்வார் எவரோ செய்வார் என்ற எண்ணத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கென்று தனித்து நான் வரவில்லை குரு சொன்ன வழியில் நான் கண்டேன்… அருள் ஞானத்தினை அவர் காட்டிய வழியில் பெற்றேன்…! அதனின் உணர்வின் துணை கொண்டு
1.நீங்கள் அனைவரும் பெற முடியும் என்ற எண்ணத்தை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்
2.இந்தப் பதிவை மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்தச் சக்தி உங்களுக்குள் செயல்படும்.

ஒரு திட்டுகின்றார்… நீ கெட்டுப் போ…! என்று நம்மைச் சொல்லிவிட்டால் என்னைக் கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்… கெட்டுப் போக வேண்டும் என்று சொன்னான்…. அவன் உருப்படுவானா…? உருப்படுவானா…! என்று பதிலுக்கு நாம் சொல்வோம்.

அப்படிச் சொல்லும் போது அவன் சொன்ன உணர்வுகள் எல்லாமே உங்களுக்குள் புகுந்து… அவர் சொன்ன அந்தக் கெட்டுப் போகும் உணர்வை உங்களுக்குள் அதிகமாக வளர்த்து நல்ல குணங்களைப் பூராம் சீர் கெடச் செய்து கெட்டுப் போகும் உணர்வே உடலில் விளைகின்றது.

திட்டியவர்களைத் திரும்பத் திரும்ப இவ்வாறு எண்ணி அவர்கள் சொன்னதை நமக்குள் உருவாக்கிக் கொள்கின்ற மாதிரி…
1.மகரிஷிகளின் அருள் சக்தியை நான் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளைப் போக்குவேன்
3.மெய் உணர்வை எனக்குள் வளர்ப்பேன்
4.என் பார்வையால் எல்லோரையும் நலம் பெறச் செய்வேன்
5.என் பார்வையால் என் குடும்பத்தினரை நலம் பெறச் செய்வேன்
6.என் பார்வையால் என் தொழிலை வளரச் செய்வேன்
7.என் வாடிக்கையாளர்கள் நலம் பெறச் செய்வேன் என்று இப்படி எண்ணிப் பாருங்கள்.

இது தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்லப்பட்டது. அந்தக் கீதையைச் சொன்னது யார்…? கண்ணன். அந்தக் கண்ணன் யார்…? நம் கண்கள்…!

ஆகவே… “நல்லது செய்ய வேண்டும்…” என்று நாம் திரும்பத் திரும்ப எண்ணினால்
1.அதைப் பார்வையாக ஏற்று நமக்குள் சாரதியாக (கண்கள்) நின்று நல்வழியைக் காட்டுகின்றான்.
2.அந்தப் பாதையில் எந்த இடையூறு இருந்தாலும் விலக்கிச் செல்கின்றான்.
4.நம்மை நல்ல பாதையில் அழைத்துச் செல்கின்றான்
5.தீமையிலிருந்து அகற்றி நம்மைக் காக்கவும் செய்கின்றது

இதை நாம் செய்து பழகிக் கொள்ளலாம் அல்லவா…!

நான்...! (என்பது) யார் என்று புரிந்ததா…?

1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து... பொருள் புரிந்து... அறிந்து... தெளியும் வகைகள் புலப்பட எழுத்தில் வடிக்கும் ஆசானும்
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு... கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போயின…?

கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைக்கின்றான் மனிதன்...! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?

எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்...” என்றால் வெறும் உலகோதய நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்கன்றோ சென்று விட்டது “அறிவு...”

எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால்
1.ஆத்மாவா…. நான் என்பது…?
2.எண்ணத்தின் அலையே சுவாசமாகி...
3.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி...! என்று பாடுகின்றோம்.

ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது. அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.

சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்...” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்... உறங்குவதும்... புறத் தொழில் புரிவதும்... கழிவுகளை நீக்குவதும்... பார்த்தல்... கேட்டல்... நுகர்தல்... சுவைத்தல்... ஸ்பரிசித்தல்... அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே... இயல்பாக... “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்...”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?

சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?

எண்ணத்தின் அலையே சுவாசமாக சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான். “நான்...” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெற வேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி எந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட... மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்...!”

இப்பொழுது நான்...! என்பது யார் என்று புரிந்ததா…?

உயிருடன் நாம் உரையாடுகின்றோமா…?

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனம் கொண்டே சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்டிட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாக உயிராத்மாவை எண்ணி
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெற்றிடவே மௌனம்.

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே… சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால் பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல.

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெற்றிடும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏடறிவின் வழி கற்றவர் அன்றி படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கலலா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின் தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொண்டிடும் சப்தரிஷிகளின்
2.ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
3.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
4.என் நிலைக்கு உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தின்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில் ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில் உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”

March 23, 2024

“கல்லா அறிவு” பெற்ற மகான்களின் ஆசி நமக்கு வேண்டும்

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.

அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழியுண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர். சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலகோதய எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும் உரை நடையும் மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.
4.அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
5.செருக்கின் தொடரில் எழுந்திடும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.
6.உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும்
1.நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?
2.அதற்கு எது முக்கியம்..?
3.நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை.
4.ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொண்டிடும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடா…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடிடும் வழியாக்கிக் கொண்டதே வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்.

செவிக்கு உணவு வயிற்றுக்கு உணவு என்பது போன்றே
1.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
2.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது. ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும்.

வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது. வாய்மை மொழியே… தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
1.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி
2.அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்து உணர்த்தியது…!

எல்லா உயிரையும் ஈசனாக மதி…! அந்த உடல்களை ஆலயமாக மதி… அந்த ஆலயத்திற்குள் வீற்றிருக்கும் உயர்ந்த குணங்களை மனிதனாக உருவாக்க உதவிய நற்குணங்களை எல்லாம் தெய்வமாக மதி.

ஒவ்வொரு மனிதனும்… அவன் தீமையிலிருந்து அகன்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும்… என்றுமே ஒளியின் சரீரமாக நிலைத்திருக்கும் அருள் ஞானிகள் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றும்… “நீ பிரார்த்தனை செய்…”

1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று நான் எதைப் பிரார்த்தித்தேனோ… எதை உபதேசித்தேனோ
2.எவ்வாறு அதையெல்லாம் நீ கூர்ந்து கவனித்தாயோ அந்த உணர்வுகள் அனைத்தும் உனக்குள் பதிவாகி
3.அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது
4.நான் கூறிய உணர்வையும் நான் உணர்த்திய உணர்வையும் நீ பெறும் தகுதி பெறுகின்றாய்.

கீதையின் சாரத்தை” அன்று வியாசகர் உணர்த்தியது போன்று… நான் உனக்கு உபதேசித்ததை நீ எடுக்கப்படும் போது “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்…!”

ஆகவே… பிறருடைய தீமைகளை அகற்றி அதிலிருந்து அவர்கள் மெய் வழி பெற வேண்டும் என்று ஏங்கி ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு.

நான் உனக்கு உபதேசித்து உணர்த்திய ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு
1.விண்ணின் ஆற்றலைப் பருக வேண்டும் என்று நீ எண்ணு.
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் நீ அதைப் பெறுவாய் என்றால்
3.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது… அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியை நீ பெறுகின்றாய்.

மெய் ஞானிகள் உணர்வை நீ பெறும் பொழுது அது உனக்குள் விளைந்து சொல்லாக வெளிப்படும் போது அதைக் கேட்பவர் உணர்வுளிலும் ஆழமாகப் பதிகின்றது.

ஆழமாகப் பதிந்த பின் அவர்களை மீண்டும் அதை நினைவு கொள்ளும்படி செய். அவர்கள் எப்போது நினைவு கொள்கின்றனரோ அந்தத் தீமையிலிருந்து விடுபடுகின்றனர்.

அவர்களை அறியாது சேர்ந்த தீமையிலிருந்து விடுபட
1.நீ கண்டறிந்த உபாயத்தை
2.உனக்கு நான் உணர்த்திய உணர்வை
3.அதன் துணை கொண்டு நீ கண்டறிந்த அறிவிந் ஞானத்தை எல்லா மக்களுக்கும் உபதேசி.
4.அவர்களுக்குள் அது பதிய வேண்டும் என்று நீ செயல்படுத்து
5.அருள் ஞானிகள் உணர்வை அவர்கள் பெறும் தகுதியாக அந்த உணர்ச்சிகளை அவர்களுக்குத் தூண்டு.

அதன் வழியில் அவர்கள் அதைப் பெற்றார்கள் என்றால் அவரை அறியாது உள் புகுந்த தீமைகளை அகற்ற இது உதவும்.

காரணம்… அவர்களுடைய நல்ல குணத்தால் உயர்ந்த பண்பால் பரிவால் பிறரைக் காத்திடும் நிலைகள் கொண்டு… பிறரைக் காத்திடும் செயலாகச் செயல்பட்டாலும் பிறர் படும் துயரத்தின் உணர்வுகள் நுகர்ந்தறிந்தே அவர்களால் செயல்பட முடிகின்றது. அந்தத் துயரங்களை நுகர்ந்தறிந்த பின்
1.அதிலிருந்து பிறரை மீட்டிட வேண்டும் என்று செயல்படுத்தும் அந்த நல்ல மனிதர்களுக்குள்
2.அவரை அறியாது அந்த தீமைகள் புகுந்து விடுகின்றது.

பாலிலே ஒரு துளி விஷம் பட்டது போன்று… நல்லவையாக இருக்கும் இந்த உணர்வுக்குள் விஷம் கலந்த பின் அவர்கள் செயலற்றதாக ஆகிவிடுகின்றனர்.

1.பிறரைக் காக்கின்றனர்… ஆனால் அவர்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் மறைந்து விடுகின்றன.
2. நான் கொடுக்கும் உபதேசத்தினை அத்தகைய நல்லோரைக் காத்திடும் தன்மைக்கு நீ பயன்படுத்த வேண்டும்
3.தீமையை அகற்றிடும் செயலாக “எனது வாக்கு” உனக்குள் இருந்து வேலை செய்யும்.

ஆகவே ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அவன் அமைத்த ஆலயம் என்று அந்த உடல்களை நினைத்து அந்த உடலில் இருக்கும் உயர்ந்த குணங்களைக் காத்திடும் நிலையாக…
1.நான் சொன்ன உபாயத்தின்படி விண்ணை நோக்கி நீ ஏகி அந்த உணர்வின் தன்மை பருகி
2.அதனை நீ சொல்லாக வெளிப்படுத்தி கேட்பவர் உணர்வுக்குள் அருள் ஞானிகளின் வித்துக்களை ஆழமாகப் பதியச் செய்.

யாரெல்லாம் நீ சொல்வதைப் பின்பற்றித் தொடர்ந்து செய்து வருகின்றார்களோ… தீமை அகற்றிடும் சக்தி அவர்கள் பெறுகின்றனர்.

அவர்கள் பெற வேண்டும் என்று நீ அவர்களை நினைத்துத் தியானித்தாய் என்றால் அவர் எண்ணும் பொழுது அவர்களுக்கும் தீமை அகற்றும் சக்தி கிடைக்கின்றது.

ஒரு நெலைச் சமைத்து யாரும் அதை உணவாக உட்கொள்ள முடியாது நீ ஒருவனாக இருப்பினும் ஒரு நெல் மற்றவர்கள் பசியைப் போக்க உதவாது.

மற்றவர்கள் உணர்வுகள் எண்ணங்களை ஒருக்கிணைத்து…
1.உயர்ந்த எண்ணங்களை எல்லோரையும் வளர்க்கச் செய்து
2.அந்த அருள் ஆற்றல் மிக்க நிலைகளை “பெரும் குவியலாக” நாம் சேர்க்க வேண்டும்.

அனைவரும் தெரிந்து தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வளர வேண்டும் என்று எண்ணி ஏங்கி…
1.நான் உனக்குக் கொடுத்த உபதேசத்தின் சக்தியை
2.அதன் மூலம் நீ பெற்ற அந்தத் தகுதியினை…
3.எல்லோர் உள்ளங்களிலும் ஆழமாகப் பதிவு செய்து
4.அந்த உணர்வின் துணை கொண்டு அவர்கள் அனைவரையும் நீ ஒருங்கிணைத்து வலுப்பெறச் செய்.

அவர்கள் எல்லோரும் வலு பெற வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது நீ அதைப் பெறுகின்றாய். எல்லோரும் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று எப்பொழுதெல்லாம் ஏங்கி எண்ணுகின்றாயோ அது அனைத்தையும் பெறும் தகுதியை நீ பெற்று… உனக்குள் விளைந்து… அது சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்பார் உணர்வுகளிலும் அது பதிவாகி அவர்கள் அறியாத வந்த தீமைகளை நீக்கிடும் செயலாக ஆகின்றது.

குருநாதர் எனக்குக் கொடுத்த அனைத்தையும்… அப்படியே உங்களுக்கும் கிடைக்கும்படி செய்கிறேன் (ஞானகுரு).

March 22, 2024

“போகும் பாதை எது…?” என்று அறியாது தவித்துக் கொண்டிருக்கும் நிலையிலிருந்து விடுபடுங்கள்

நமது வாழ்க்கையில் எத்தகைய வேதனை வந்தாலும் அதைத் துடைக்க… துடைத்திட்ட அருள் ஞானிகள் உணர்வுகளை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத் தான் அன்றைய ஞானிகள் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

1.என்னை அறியாது வந்த பிழைகளை நீக்கிட அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று
2.எந்த உயிர் மனிதனாகச் சிருஷ்டித்ததோ அந்த உயிரிடமே “ஈஸ்வரா…” என்று வேண்டி
3.எந்த மனிதன் இவ்வாறு ஏங்குகின்றானோம் தன்னை அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.

நாம் எண்ணியது அனைத்தையும் உயிர் தான் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துவதற்குத் தான் இராமயாணம் மகாபாரதம் கந்தபுராணம் போன்ற காவியங்களை ஞானிகள் தீட்டிச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி செய்தனர்.

அதாவது
1.சூட்சுமத்தில் நமக்கு முன் இருக்கும் காற்றலைகளில் படர்ந்துள்ள நிலையையும்
2.நாம் எண்ணிய உணர்வுக்குள் சூட்சுமமாக மறைந்த நிலையினையும்
3.நம் உயிருக்குள் பட்டு ஓ… என்று ஜீவனாகி அந்த உணர்வின் சத்து ம்… என்று நாம் சரீரமாகும் நிலையையும் காவியத்தின் மூலம் காட்டினார்கள்.

எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்கி அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு… நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலையும் ஆனால் வேதனை என்று விஷமான உணர்வை ஒரு துளி எடுத்தாலும் உடல் சோர்வடைந்து நல்ல குணங்கள் எவ்வாறு மறைந்து விடுகின்றது…? என்பதையும் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

அத்தகையை தீமைகளை அடக்க வேண்டும் என்றால் ஆறாவது அறிவின் துணை கொண்டு தான் அதைச் செயல்படுத்த முடியும். நம்முடைய ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறை பிடித்தான் முருகன் என்றும் காட்டியுள்ளார்கள்.

முருகு என்பது மாற்றி அமைக்கும் சக்தி… முருகன் என்பது அழகுபடுத்தும் நிலை…! என்று
2.இப்படி நமது ஆறாவது அறிவு கொண்டு நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிட முடியும் என்றும் ஞானிகள் கொடுத்துள்ளார்கள்.

பித்தரைப் போன்று நமது குருநாதர் சாக்கடையிலும் அருவருப்பான இடங்களிலும் அமர்ந்து தான் எனக்கு (ஞானகுரு) இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்தினார்.

அந்தச் சாக்கடையை அவர் சாக்கடை என்று எண்ணவில்லை உலகையே சாக்கடையாகக் கருதினார்…
1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்ற நிலையில்
2.அருள் ஞானிகளின் உணர்வைச் சத்தாக நுகர்ந்து கொண்டிருந்தார்.

தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை உலகிற்கு எவ்வாறு காட்ட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக என்னையும் சாக்கடையில் அமரச் செய்து உபதேசம் கொடுத்தார்.

“எனக்குக் கல்வி அறிவே இல்லை என்றாலும்” அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழிப்படி… காட்டிய நெறிப்படி… ஆற்றல் மிக்க சக்திகளை நான் கவர்ந்தேன். எனக்குள் அதை வளர்த்துத் தீமைகள் வராதபடி காத்துக் கொண்டேன்.

உங்கள் அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உபதேசிக்கின்றேன். ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அருள் வழியைப் பின்பற்றுங்கள்.

இந்த மனித உடலிலேயே முழுமை பெறுவோம் என்று இந்த வாழ்க்கைப் பயணத்தை இவ்வாறு தொடருங்கள்.

கடலிலே செல்லும் பொழுது ஒரு எல்லையைக் குறிக்கோளாக வைத்துத் தான் செல்கின்றோம். ஒரு தீவுக்குச் செல்ல வேண்டுமென்றால் படகைச் செலுத்துகின்றோம்.
1.இடைவெளியில் வரும் அலைகளைப் பிளந்து விட்டு
2.”அந்தத் தீவை அடைய வேண்டும்” என்ற எண்ண வலு கொண்டு தான் அங்கே செல்கின்றோம்.

மீன் பிடிக்கச் சென்றாலும் மீன் இருக்கும் இடமாகத் தேடிச் செல்கின்றோம். கடலில் வரும் அலைகளைப் பிளந்து அந்த இடத்தை அடைந்து மீன்களைப் பிடிக்கின்றோம்.

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும் பல அலைகள் மோதிக் கொண்டே இருக்கின்றன
1.பழி தீர்க்கும் அலைகள் மோதுகின்றன
2.இடையூறு செய்யும் எண்ண அலைகள் மோதுகின்றன
3.தீமை செய்யும் உணர்வுகள் மோதுகின்றது
4.தொழில்களில் எத்தனையோ சங்கட அலைகள் மோதுகின்றன
5.குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பகைமையாகி வெறுப்பான அலைகள் மோதுகின்றன.

இதைப் போன்ற பல அலைகள் மோதி “நாம் போகும் பாதை எது…?” என்று அறியாது இன்று தவித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு குடும்பத்திலும் இதே நிலை தான்.

ஆகவே மகரிஷிகள் காட்டிய வழியினை நாம் பின்பற்றி… அவர்கள் வாழும் எல்லையை அடைய வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் துடுப்பாக வைத்து வாழ்க்கையில் வரும் அலைகளைப் பிளந்து
2.மன உறுதி கொண்டு இதைச் செயல்படுத்துங்கள்.

குரு நாடி

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில் காட்சிப் புலனறிவு... செவிப் புலனறிவு... உணர்வுப் புலனறிவு... நுகர்தல் புலனறிவு... சுவைத்தல் புலனறிவு... என்று ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும்… புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா...?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா. உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும் ஆத்ம பலமும் பேரின்பப் பெரு வாழ்வும் பெற்றிட
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டிட...!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா...!

“ஈஸ்வரா...!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு ஒலிக் காற்று என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை விழிக் காற்று என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையின் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்...?

சோம்பல் ஏற்படுத்துவதும் வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்
1.சுவாசத்தில் சுதியும்... விழிக் காற்றும்...
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்...!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே...! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக அகக்கருவிகளில் (ஐம்புலன்களில்) செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடிடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்..” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்து செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழியோடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும்முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும்… உணரவும் முடியும்.

March 21, 2024

தியானத்தில் சக்தி பெறும் போது சிரசின் பின்புறம் வலி ஏற்படுவது ஏன்…?

மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.

சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.

அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.

மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே...”
2.”திரிவேணி சங்கமம்...!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.

சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை...” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.

இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.

எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்பமில குணங்களை நல் நிலைப்படுத்திடவே வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.

1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.

1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.

சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.

தியானத்தின் மூலம் உயர்ந்த சக்தி பெறுவேன்…! என்ற “தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்”

சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகின்றீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள்… ஆனால் உங்களுக்குள் அனைத்தையும் பெறக்கூடிய தகுதி உண்டு….!
1.நீங்கள் ஏன் உங்களை நம்ப மாட்டேன் என்கிறீர்கள்…?
2.நான் (ஞானகுரு) என்னை நம்பியதால் தான் குரு காட்டிய வழியில் அனைத்து சக்திகளையும் பெற முடிந்தது
3.என்னைப் போல் நீங்களும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

விஞ்ஞான உலகத்தால் ஏற்படும் நஞ்சான சூழ்நிலையில் இருந்து மீட்டிக் கொள்ளும் எண்ணங்கள் உங்களுக்குள் வர வேண்டும். தீமைகளிலிருந்து அகற்றிடும் சக்தி உங்களுக்கு வேண்டும்.

அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்பதற்குத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில்… மெய் ஞானிகள் உணர்வைப் பதிவு செய்து உங்களுக்குள் உணர்ச்சிகளைத் தூண்டிக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் உங்களை அறியாது வந்து இருளை மாய்க்க வேண்டும்… பொருள் கண்டுணர்ந்து செயல்படும் ஆற்றல் பெற வேண்டும். இந்த மனித உடலிலிருந்தே ஒளியின் சரீரமாகும் ஆற்றல் பெற வேண்டும்.
1.அந்த அருள் ஞானிகள் எல்லையை நீங்கள் கைப்பற்றி அதை அடைய வேண்டும் என்று உங்களைப் பிரார்த்திக்கிறேன்
2.உங்களை நம்புங்கள்… உங்கள் உயிரைக் கடவுளாக மதியுங்கள்… உடலை ஆலயமாக மதியுங்கள்

ஆகவே… உங்களை மனிதனாக வளர்த்திட்ட உயர்ந்த குணங்களைத் தெய்வ நிலைகளாக எண்ணுங்கள்.

அனைத்தையும் அறிந்திடும் நிலையாக
1.உங்களுக்குள் அமைந்திருக்கும் “கலைவாணி” என்று சர்வத்தையும் அறிந்திடும் ஞானம் உங்களுக்குள் உண்டு.
2.சர்வத்தையும் உங்களுக்குள் வளர்த்திடும் “இலட்சுமி” உண்டு… சர்வத்தையும் உருவக்கிடும் “பராசக்தி” உண்டு
3.அனைத்தையும் அறிந்திடும் “சர்வ சக்தி” உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

ஆகவே… உங்களை முழுமையாக நீங்கள் நம்புங்கள்.

இந்த உணர்வினை அறிந்திடச் செய்திடும்… இந்த உபதேசத்தை இப்பொழுது கேட்டிடும் உணர்வும் உங்கள் உயிரின் நிலையே.

ஆகவே அந்த உணர்வின் தன்மையை நீங்கள் பருகும் நிலையாக ஏங்கினால்… உங்களை ஆண்டு கொண்டிருக்கும் ஈசனுக்கு நீங்கள் செய்யும் காணிக்கையாக இது அமையும்.

மகரிஷிகள் சென்ற எல்லையை அடைய உங்களுக்குள் ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசன் நிச்சயம் அதற்கு வழிகாட்டுவான்.
1.எண்ணி எடுக்கும் போது அதையே அவன் விளைய வைக்கின்றான்…
2.மகரிஷிகள் வாழும் எல்லையை அடையச் செய்கின்றான்.

அந்த நிலையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும்…! ஆகவே இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் இதன் வழி தியானித்து உயர்ந்த சக்திகளைப் பெறுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை குருநாதர் காட்டிய வழியில் தியானத்தின் மூலம் பெற முடியும்… நிச்சயம் பெறுவேன்…! என்ற தன்னம்பிக்கை கொண்டு செயல்படுங்கள்.

1.நீங்கள் எங்கே சென்றாலும் அருள் ஞானிகளை எண்ணினால் அந்தச் சக்தியை பெற முடியும்
2.எங்கே எந்த இடத்தில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அதிலிருந்து விடுபட முடியும்
3.அத்தகைய சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றேன் (ஞானகுரு).

March 20, 2024

மூச்சை அடைப்பதற்குப் பதில் நற்சுவாசம் எடுத்து சுவாசத்தின் கனத்தைக் குறைக்க வேண்டும்

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது...!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்...!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது... அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது...? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா...? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது...?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட... பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது...?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.

எல்லோருக்கும் நான் உதவி செய்தேன் என்று சொன்னாலும்… அதிலே பலன் அடைகிறோமா…?

உதாரணமாக நாம் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்ற காரணத்தால் கோபத்தால் கொதிப்பும்… வேதனை என்ற உணர்வும் எடுத்துக் கொண்டால் அதை நாம் சுவாசிக்கப்படும் பொழுது “உயிரிலே பட்டு” அது கொதித்தெழும் உணர்வாக உடல் முழுவதும் படரச் செய்கின்றது.

ஆனால் உடலை இயக்கப்படும் பொழுது
1.கொதித்தெழும் உணர்வுகளையே அதிகமாக சுவாசிக்கச் செய்து இந்த உணர்வின் சத்தினை உமிழ் நீராக வடித்து விடுகின்றது.
2.ஆகாரத்துடன் இது கலந்து கை கால் குடைச்சல் சோர்வு போன்ற நிலைகள் வந்து விடுகின்றது

கோபம் என்பது கார உணர்ச்சிகள்… வேதனை என்பது விஷத்தின் தன்மை கொண்டது. இது இரண்டறக் கலந்து ஆகாரத்துடன் கலக்கப்படும் பொழுது நமது உடல் அதை இரத்தமாக மாற்றுகிறது.

உதாரணமாக ஒரு இன்ஜினில் ஒரு பக்கம் பெட்ரோலை ஊற்றினால் அதிலிருக்கும் பிஸ்டன் அந்தப் பெட்ரோலை உறிஞ்சி ஆற்றலாக மாற்றி… அந்த இயந்திரத்தினைச் சுழலச் செய்து இயக்கச் செய்கின்றது.

இதே போன்றுதான் நாம் உணவாக எடுத்துக் கொள்வது வயிற்றுக்குள் சென்ற பின் கொதிகலனாகி ஆவியாக மாற்றி அதில் வருவதை இரத்தமாக மாற்றுகின்றது.

இஞ்சினில் உள்ள பிஸ்டன் பெட்ரோலை எப்படி இழுக்கின்றதோ அதே போன்று நாம் இருதய வால்வுகள் இரத்தத்தை இழுத்து… பின் சுத்திகரிக்கும் சிறுநீரகங்களுக்கு அனுப்புகின்றது.

ஆனால்
1.இரத்தத்தை இந்தப் பிஸ்டன் அதாவது இருதய வால்வு இழுக்கப்படும் போது…
2.அந்த வேதனையும் கொதிப்படைந்த உணர்வுகளும் இரத்தத்தின் வழியாகச் சென்று தாக்கப்படும் பொழுது
3.அந்த வால்வுகள் வீக்கம் அடைய ஆரம்பித்து விடுகின்றது.
4.அவ்வாறு வீக்கம் அடைந்து விட்டால் இருதயம் இயக்கப்படும் பொழுது எரிச்சலும் வலியும் ஏற்படுகின்றது
5.அதாவது அப்போது நெஞ்சு வலி ஏற்படுகின்றது என்று சொல்லலாம்.

உடல் முழுவதும் பரவும் பொழுது உடலிலும் எரிச்சல் ஒரு விதமான கொதிப்பு… மனதிலும் கொதிப்பு… அடுத்து நாம் செம்மையாக எந்த வேலையும் செய்ய முடியாத நிலை உருவாகி விடுகிறது.

நல்லதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாசத்தால் எடுத்துக் கொண்டாலும் உடலுக்குள் இத்தனை வேதனைகளை உருவாக்கிவிடுகிறது. எ
1.எவ்வளவு அழகான உடலாக இருப்பினும் அதை நலியச் செய்துவிடுகிறது. நம் எண்ணங்களையும் நலிவடையச் செய்து விடுகின்றது.
2.அடுத்து நம் சொல்லைக் கேட்பவர்களையும் நம் மீது வெறுப்படைய வைத்து விடுகின்றது.

இப்படித்தான் பாசத்தால் பண்பால் பரிவால் நம்மை அறியாமலேயே சில தீமைகள் உள் புகுந்து விடுகின்றது.

குடும்பத்திற்குள் சிறிது குறை காணும் போது வேதனைப்படுகின்றோம். வெளியிலே பழகுபவர்களிடம் பண்பாக நடந்து கொண்டாலும் நாம் எதிர்பார்த்த நிலைக்கு வரவில்லை என்றால் அங்கேயும் வேதனைப்படுகின்றோம்.

காரணம்… அவர்களுக்கு நாம் உயர்ந்த நிலைகள் கொண்டு உதவி செய்திருப்பினும்… சந்தர்ப்ப பேதத்தால் அவர்கள் நினைவில் அது வராதபடி சிறு குறைகள் செய்து விட்டால்
1.தக்க சமயத்தில் நாம் அவர்களுக்குச் செய்த உதவியை மறந்துவிட்டு
2.எனக்கு இப்படித் தீங்கு செய்கின்றார்களே…! என்று வேதனைப்படுகின்றோம்.

ஆக… நன்மைகள் பல செய்திருப்பினும் நம்மை அறியாமலே தீமைகள் நுழைந்து நம் நல்ல குணங்களை நல்ல உடலை நல்ல மனதைச் செயலற்றதாக ஆக்கி நோயாக மாற்றி விடுகின்றது.

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக நாம் வளர்ச்சி அடைந்து எத்தனையோ தீமையிலிருந்து விடுபட்டு மீண்டு வந்த நிலையில் இன்று சகலத்தையும் அறியக்கூடிய சக்தி பெற்றிருக்கின்றோம்.

ஆனாலும்… பாசத்தால் பண்பால் பரிவால் நல்லதைச் செய்யும் போது நம்மை அறியாது வேதனை வெறுப்பு கோபம் ஆத்திரம் சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளும் ஊடுருவி நமக்குள் வந்து விடுகின்றது.

பௌர்ணமிக்குப் பின் நிலா சிறுகச் சிறுக தேய்ந்து மறைவது போல் நம் நல்ல குணங்கள் மறையத் தொடங்கி விடுகிறது.

அதை மாற்ற வேண்டுமா இல்லையா…?

March 19, 2024

மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறும் தகுதி

நஞ்சு கொண்ட உணர்வுகள் எதுவாக இருந்தாலும் மகரிஷிகள் அனைவரும் அதனை அடக்கித் தன் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் நிலைத்துள்ளார்கள்.

இன்னொரு மனித உடலின் ஈர்ப்புக்குள் செல்லாதபடி
1.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகள்
2.அவர்கள் உடலிலிருந்து வெளிப்பட்ட உணர்வின் சத்தை நாம் கவர வேண்டும் என்றால் “நமக்கு வலு வேண்டும்…”

சாதாரண ஒரு நூலினைக் கொண்டு கடினமான பொருளைத் தூக்குவோம் என்றால் அந்த நூல் அறுந்து விடுகின்றது.

இது போன்று தான் சாதாரண மக்களாக இருக்கக்கூடிய நாம்
1.அந்த ஞானிகள் மகரிஷிகளின் மிக சக்தி வாய்ந்த ஆற்றல்களை அவருடைய உணர்வுகளை
2.நம் எண்ணத்தால் கவர வேண்டும் என்றால் அது முடியாத காரியம்.
3.நம்முடைய எண்ணத்திற்கு வலு இல்லை… செயலற்றதாக ஆகிவிடுகின்றது.

ஆக… அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எப்படிப் பெறுவது…?

சிறு கல்லாக இருந்தால் ஒரு மனிதன் அதைத் தூக்கி விடலாம். அதுவே பெரிய கல்லாக இருந்தால் பலரும் சேர்ந்தால் தான் அதைத் தூக்க முடியும். அதே போன்று ஒரு நூல் அது வலு குறைவாக இருப்பினும்… பல நூல்களை ஒருங்கிணைத்துக் கயிறாகத் திரிக்கும் பொழுது… எடை கூடிய பொருளையும் அதை வைத்துத் தூக்க முடிகின்றது.

அதைப் போன்று தான் “கூட்டுத் தியானங்களின் மூலம்”
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வை அனைவருக்குள்ளும் தூண்டச் செய்து
2.அந்த உணர்வால் உந்தித் தியானிக்கும் போது
3.காற்றிலே படர்ந்திருக்கும் அருள் ஞானியின் உணர்வை நம் உடலின் அருகே (நம்மிடம்) கொண்டு வர முடியும்.

ஆலயங்களிலே தேரை வடம் பிடித்து இழுக்கப்படும் பொழுது பலரும் ஒருங்கிணைந்த நினைவுடன் இழுத்தால் தான் அந்தத் தேர் எல்லை வந்து சேரும்.

ஒருவர் தெற்கே… ஒருவர் கிழக்கே… ஒருவர் மேற்கே… ஒருவர் வடக்கு… என்று அந்த வடத்தினைப் பிடித்து இழுத்தால் தேர் எல்லை வந்து சேராது

ஆகையினால்… அந்த மகரிஷிகளின் நினைவலைகளை நீங்கள் முன் வைத்து… அனைவரையும் ஒருங்கிணைத்த நிலைகள் கொண்டு… அந்தச் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று உங்களை எண்ணும்படி சொல்கிறோம்.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி உங்கள் உயிரை ஈசனாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… அந்த ஆலயம் புனிதமாக வேண்டும்… அதற்குள் இருக்கும் நல்ல குணங்கள் தெளிந்திட வேண்டும்… தெய்வ குணங்கள் அங்கே வளம் பெற வேண்டும் என்று உங்களை நான் (ஞானகுரு) தியானிக்கின்றேன்.

உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டச் செய்து…
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களை நான் எண்ணும் பொழுது
2.அந்த சக்தியின் துணை கொண்டு நீங்கள் பெற முடிகின்றது… அதைக் கவர முடிகிறது.

டி.வி..க்களுக்கு “ஆண்டனாவும்” அதற்கென்று சக்தி வாய்ந்த சில நுண்ணியக் கருவிகளையும் பொருத்தி இருப்பார்கள். ஆண்டனா அதனின் துணை கொண்டு தனக்கு முன் இருக்கும் மிக சக்தி வாய்ந்த அலைவரிசைகளைக் கவர்கின்றது.

கவர்ந்து… நிசப்தமான நிலைகள் சீராகத் திரைப்படங்களைக் காட்டுவதும்… ஒருமித்த நிலை கொண்டு இசையோ மற்ற எதுவாக இருந்தாலும் நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.

அது போன்று மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குச் சீராக எப்போதும் கிடைக்க வேண்டும் என்று நான் தியானிக்கிறேன். அப்போது நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று தியானித்தால் அந்தச் சக்தியை எளிதில் பெற முடிகின்றது.

குருநாதர் காட்டிய வழியில்
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெற வேண்டும்
2.உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் திறன் நீங்கள் பெற வேண்டும்
4.உங்கள் உயிரான ஈசனுக்கு மகிழ்ச்சியூட்டும் உணர்வாக வளர வேண்டும்
5.அத்தகைய சக்தி உங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இப்படித்தான் நான் (ஞானகுரு) எண்ணுகின்றேன்.

அதைப் போன்று தான் நீங்களும் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

உயிர்க் காற்று

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி அங்கங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது...!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது... செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.