ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 29, 2016

உடலின் உணர்வுக்குக் கல்வி - உயிருடன் ஒன்றும் உணர்வுக்கு அருள் ஞானம்

இன்று கல்விச்சாலையில் நாம் கற்பது உடல் வாழ்க்கைக்கு. வாழ்க்கை எப்படி நடத்த வேண்டும்? என்று தெரிந்து கொள்கிறோம்.

அதே சமயத்தில் அருள் ஞானத்தைப் போதிக்கும் பொழுது கல்வி கற்றிருந்தாலும் இதை நாம் வாழ்க்கையில் உணர்வின் செயலாக எப்படி மாற்றியமைப்பது? என்ற நிலை பெறவில்லை.

உதாரணமாக, பல விதமான பாட நிலைகளைப் படிக்கின்றார்கள். அதனதற்குத் தக்க படிப்பின் நிலைகளைப் பதிவாக்குகின்றார்கள். திருப்பி அதைச் சொல்கின்றார்கள்.
ஆனால், படித்ததை அதையே திருப்பி எழுதப்படும் பொழுது
தேர்ச்சி (PASS) பெற்று விடுகிறார்கள்.

படிக்கும் பொழுதே அதனின் கருத்தின் ஆழம் எது?
என்று சிந்திக்கும் மாணவன் அவன் பரீட்சையில் தேர்வதில்லை.

படித்ததை அப்படியே மனதில் வைத்துத் திருப்பிப் பாடமாக ஒப்புவிப்பவர்கள்
பரீட்சையில் முதல் நிலையில் (FIRST CLASS) தேர்ச்சி
என்ற நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

அந்தப் படிப்பின் அறிவைச் சிந்தித்து எது குறை? எது நிறை? என்ற நிலைகளில் அவரால் வர முடியாது.
படித்ததை மட்டும் தான் சொல்வார்.
தன் வாழ்க்கையில் வரும் சிந்தித்துச் செயல்படும் திறன் இருக்காது.

அவர் கற்றுணர்ந்த உணர்வு எதுவோ அதை மட்டும் பேசுவார். மற்றவர்களைப்பற்றிக் குற்றமாகவே பேசுவார்.

படிப்பில் கல்வியில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அவர் சிந்திக்கும் திறனை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அந்தச் சிந்திக்கும் நிலை வரப்படும் பொழுது
அவன் தொழிலில் இயக்கும் போது
ஒவ்வொன்றிலும் சிந்தித்துச் செயல்படத் தொடங்கிவிடுகின்றான்.

யாம் இங்கே உபதேசம் செய்கின்றோம்.

படித்தவர்கள் சாமி சொல்வது சரியா தவறா? சரியா தவறா? சரியா தவறா?
என்று வாதம் செய்து கொண்டே இருப்பார்கள்,
பெரும்பகுதி நீங்கள் இதைப் பார்க்கலாம்.

“சாமி என்ன சொல்கிறார்..,?” என்று பதிவாக்கிக் கொள்கின்றார்கள்.
“அன்று சொன்னார்..., நாம் அதைச் செய்து பார்ப்போம்..,”
என்று உணர்வைத் தூண்டும் பொழுது
படிக்காதவர்கள் ஞானத்தைப் பெறுகின்றார்கள்.

படித்தவர்கள் என்ன செய்கிறார்கள்? நான் மகாபாரதத்தைப் படித்தேன், கந்த புராணத்தைப் படித்தேன் பிரம்ம சூத்திரத்தைப் படித்தேன், ஆனால், அதையெல்லாம் சாமி இதில் சொல்லவில்லையே என்பார்கள்.

அவர்கள் படித்ததை அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.

இப்பொழுது யாம் சொல்லும் ஞானத்தின் நிலைகளை அந்த அருள்ஞானிகள் பெற்றதைச் சொல்லப்படும் பொழுது
இந்தச் சூத்திரத்தை விட்டுவிடுவார்கள்.
யாம் சொல்வதைக் காலி செய்து கொண்டேயிருப்பார்கள்.
தனக்குள் பதிவும் ஆக்க முடியாது, உபதேசிப்பதைப் பெறவும் முடியாது.

ஆக, பிரம்ம சூத்திரத்தைத் தெளிவாக எடுக்கின்றார்கள்.

மனு நீதி சாஸ்திரத்தில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
·         மனிதனான பின் இந்தத் தீமைகளை அகற்றுவது எப்படி?
·         தீமைகளை அகற்றியவன் யார்?
·         தீமையை அகற்றியவனின் உணர்வுகளை நாம் எப்படி எடுப்பது?

மனு நீதி சாஸ்திரத்தில் இது உண்டு. இது மனுஷாள் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால், அந்தச் சாஸ்திரத்தைத் தெளிவாக்கும் நிலைகள் இல்லை.

அவர்கள் படித்திருப்பார்கள். நான் மனு நீதி சாஸ்திரத்தைப் படித்திருக்கின்றேன். சாமி சொல்வது எங்கே அதிலே இருக்கின்றது? ஒன்றும் காணோம் என்பார்கள்.

இந்த நிலைகள் தான் வரும். மகாபாரதத்தைப் படிக்கும் பொழுது படித்த நிலைகள் வருகின்றது. ஆனால், சாமி சொல்வதை அதில் காணவில்லையே என்பார்கள்.

ஏனென்றால், படித்தைதை மட்டும் தான் அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள். படித்த உணர்வுகள் எதுவோ அதுவே தான் இங்கே வருகின்றது

கேரளாவில் மொக்கை அரிசி சாப்பிடுகின்றார்கள். அதனுடைய ருசி வேறாக இருக்கின்றது. சன்ன அரிசியைப் போட்டுச் சாப்பிட்டால் ருசி வேறாகிவிடுகின்றது. அப்பொழுது அந்த ருசி இதில் காணவில்லையே என்பார்கள்.

. அதே மாதிரி இங்கே தமிழ் நாட்டில் உள்ளவர்கள் மொக்கை அரிசியைச் சாப்பிடும் பொழுது அந்த ருசி இதில் காணவில்லையே என்பார்கள்.

மொக்கை அரிசி சாப்பிடுபவர்கள் அதைத்தான் ருசி என்பார்கள்.
சன்ன அரிசி சாப்பிடுபவர்கள் அதைத்தான் ருசி என்பார்கள்.
ஆக, உணர்வுகளின் சுவை எதுவோ அதனால் வளர்ந்த அணுக்களும் அதே தான்.

இதைப் போன்றுதான் மதங்களானாலும், இனங்களானாலும்  எதன் மேல் பற்று வைத்து நாம் பதிந்து கொண்டோமோ அதன் சுவைதான் அவர்களுக்கு இரசிப்பாக இருக்கும்.

அருள் ஞானிகளின் உணர்வை நாம் பெறவேண்டும். இருள் சூழா நிலைகளில் எப்படிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? என்று இதனைப் பதிவாக்கிக் கொண்டால் அதன் சாரமாக
அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் பெருக்கி
நம்மை அறியாது வரும் தீமைகளை மாற்ற முடியும்.

இல்லையென்றால் படித்ததை வைத்து நாம் தெளிவாக்க வேண்டும் என்றால் படித்தது பாதைகளை அறிவதற்குத்தான் உதவும்.

ஆனால், ஞானத்தின் நிலைகள் வளர்வதற்கு
அருள் ஞானிகளின் உணர்வைப் பெறுதல் வேண்டும்.

அந்த ஞானத்தை வைத்துத் தான் படித்த கல்வியின் நிலைகளின் ஞானத்திற்கும் கொண்டு செல்ல முடியும்.

உடலின் உணர்வுக்குத் தான் கல்வி உதவுமே தவிர, உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை வளர்க்கும் ஞானத்திற்கு இது உதவாது.

கல்வி நமக்கு நல் பாதையைக் காட்டுவதற்குத்தான் அந்தக் கல்வியை நாம் சீராக எண்ணி அருள் ஞானியின் உணர்வுடன் ஒன்றிப் பார்த்தால் இன்று விஞ்ஞான உலகில் வந்த நச்சுத் தன்மையையும் மாற்றியமைக்கலாம்.

February 28, 2016

உடலின் இச்சைக்கு அடிகோலுவது விஞ்ஞான அறிவு - உயிருடன் ஒன்றி நிலைத்து வாழச் செய்வது மெய்ஞான அறிவு

ஒருவருக்கொருவர் துணையில்லாது ஒருவரும் வாழ முடியாது.

ஒருவரும் துணையில்லாது வாழ்ந்த ஒரு உயிரினம் அது சுத்தமாகவே அழிந்துவிடுகின்றது. அந்த உணர்வின் தன்மை மடிய மடிய அந்த இனத்தின் ரூபங்களே மடிந்துவிடுகின்றது.

கடந்த காலத்தில் மனிதன் ஆவதற்கு முன் உணர்வின் வலிமை கொண்ட மிருகங்களானாலும் அந்த இனத்தின் வலிமையாக்கப்படும் பொழுது அதற்குள்ளே அது கொன்று புசிக்கும் நிலை வந்தபின் அது இறந்தபின் அதனுடைய அலைகள் வந்தபின்
அதை நுகர்ந்த அதனின் இனங்கள்
பற்று கொண்டது வளர்ந்தது அனைத்துமே அழிந்து விடுகின்றது.

இதைப் போன்ற பல இனப் பெருக்கங்களும் தடைப்பட்டு கடந்த காலங்களில் உள்ள ரூபங்கள் எப்படி மறைந்தது என்பதை குருநாதர் இமயமலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று சில பகுதிகளிலும், அவர் சூட்சம நிலைகளில் சில பிரதேசங்களுக்கு அழைத்துச் சென்று காட்டினார்.

இனப் பெருக்கங்களான பல மிருகங்களின் ரூபங்களே இன்று இல்லாதிருக்கின்றது. அவைகளின் உணர்வின் நிலைகள்
எந்தெந்த அலைகள் அங்கே பதிந்துள்ளது?
அவைகள் எப்படி மாற்றியுள்ளது?
அதனுடைய அலைகள் எப்படியுள்ளது?
அவைகளின் ரூபங்கள் எப்படி உள்ளது? என்று காண்பித்தார் குரு.

ஆனால், இதை நீ வெளியில் சொன்னால் போற்றுவதற்குண்டான நிலைகள் வரும். அந்த ரூபத்தை வரைந்து கொடுத்தால் உனக்குப் பணமும் வரும்.

அதனின் செயலாக்கத்தை குணங்களை எடுத்தால் இன்று விஞ்ஞான அறிவு கொண்டு இந்த உணர்வை வைத்து அந்த அலைகளைக் கம்ப்யூட்டரை வைத்துப் பிரிப்பான்.

பிரித்து கொண்டபின் இந்த உணர்வின் எண்ன நிலைகளும்
இதன் தொடர் கொண்டு காற்றில் இருப்பதையும் பிரிப்பான்
என்று இதைச் சொன்னார் குருநாதர்.

உனக்குள் விளைந்த உணர்வின் தன்மையை கம்ப்யூட்டரில் இணைக்கப்படும் பொழுது உன் உணர்வின் அலைகள் தொடரை வைத்து அந்த ரூபத்தையும் அறிவான்.
அதனின் நிலைகளைக் காணும் நிலைகளும் வரும்.
ஆனால், அது ஜீவன் உள்ளதாக வராது.

அதை அவன் இந்த உணர்வு கொண்டு கம்ப்யூட்டரில் அவன் ரூபத்தைப் போட்டாலும் இவன் நுகர்ந்த உணர்வுகள் மீண்டும் அந்தக் கடந்த கால நிலை எதுவோ அந்த உணர்வின் தன்மை வளர்க்கப்பட்டு இந்த நினைவாற்றலை விஞ்ஞான அறிவு கொண்டு கண்டுணர்வான்.

கண்டுணர்ந்தாலும் அவனின் நினைவாற்றல் இந்த மனிதன் ரூபத்தை விட்டு அந்த விகாரமான அந்த உணர்வின் தன்மை அமைக்கப்பட்டு இந்த உடலின் தன்மை வெளி வந்தபின்
இன்றைய சூழ்நிலைக்கும் இல்லாது
கடந்த கால சூழ்நிலைக்கும் இல்லாத உணர்வின் தன்மை கொண்டு
இந்த உயிர் இதற்கிணையான ரூபத்தை மாற்றி
கொடூர மிருகமாக மாறும்.
இதுதான் இந்த விஞ்ஞான அறிவால் வரும்.

இன்று ரூபங்களைப் பார்க்கும் பொழுது உடல் இச்சைக்கு இவன் செய்தாலும் அதனுடைய பின் விளைவின் தன்மை இப்படி இருக்கும் என்று அதையும் காட்டுகின்றார் குரு.

ஏனென்றால், இன்று விஞ்ஞன அறிவால் உள்ளோர்கள் மண்ணினை எடுத்து ஒரு பொருளை எடுத்து அதில் உள்ள நுண்ணிய அலைகளின் தன்மை கொண்டு ஆசிட்டின் (அமிலம்) பவரை விடப்படும் பொழுது மேலெழுந்தவாறு ஆவியாக மாறுகிறது.

ஆவியாக மாற்றி அதனுடைய வலிமை பெற்ற பின் படிப்படியாக அந்த உணர்வின் தன்மை திரவகத்தைக் கூட்டக் கூட்ட
இன்னென்ன காலங்களில் இது இவ்வளவு வலிமை பெற்றது,
இதனுடைய வலிமையை இவ்வளவு காலங்களில் பெற்றது
இந்த உணர்வை இந்தத் திரவகத்தை ஊற்ற ஊற்ற
அதிலே வலிமை கொண்டு கரைந்து கரைந்து போவதை
இத்தனை காலம் பெற்ற பாறை என்று
அந்தக் கால கட்டத்தை விஞ்ஞான அறிவால் அறிகின்றான்

இதைப் போலத்தான் நம் குருநாதர் விண்ணுலகின் ஆற்றலின் உணர்வுகள் இந்தக் காலங்களில் விளைந்தது (என்று) அதை நுகர்ந்து பார்

இந்த உணர்வின் தன்மை அலையின் ஒலி(ளி) அலைகள் எப்படி வருகிறது? என்று அதனை அறிந்து கொள்.

இதற்காக வேண்டி நீ காலத்தைச் செலவழிக்க வேண்டியதில்லை.
நீ அறிந்து கொள்ளவே இதைக் கொடுக்கின்றேன்.

இந்த அறிவின் தெளிவை நீ மற்றவர்களுக்குச் சொன்னால் விஞ்ஞான அறிவிற்கே இது அடிமையாகி மனிதனின் உடலின் இச்சைக்கே இது உருவாகி அதன் வழியில்தான் அறியும் பருவத்தையே பெறுவாயே தவிர
என்றும் நிலை கொண்டு
உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமான
அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீ இணைய முடியாது
என்று தெளிவாகக் காட்டினார்.

ஆகவே, அதன் வழிப்படி நான் (அறியும் விஞ்ஞானத்திற்கு) அந்த ஞானத்திற்குச்  செல்லவில்லை.

அந்த மெய்ஞான உணர்வுடன் வளர்ந்து கொண்டிருக்கும்
ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கும்
அருள் மகரிஷிகளின் உணர்வுடன் உங்களை ஒன்றச் செய்கின்றேன்.

மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் விளையச் செய்து இந்தக் காற்று மண்டலத்திலுள்ள நச்சுத் தன்மையை அகற்றச் செய்யவேண்டும்.

என் ஒருவனால் முடியாது.

நீங்கள் அனைவரும் இந்த உணர்வின் தன்மை எடுத்து உங்களுக்குள் இந்த நினைவு கொண்டு
·         மகரிஷிகளின் ஆற்றல் பெறவேண்டும்.
·         எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்.
·         எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும்.
·         நாங்கள் பார்ப்போரெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.
·         என்னைப் பார்ப்போருக்கெல்லாம் கிடைக்க வேண்டும்.
·         நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலெல்லாம் படர வேண்டும்
என்ற இந்த உணர்வை உங்கள் எண்ணத்தால் பரப்ப வேண்டும்.

அப்படிப் பரப்பினால் இது சிறுகச் சிறுகப் படரும்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இது விளையும்.
மகரிஷிள் உணர்வின் அலைகளைப் பெருக்கும்.

இதனின் வலிமை கொண்டு இந்தக் காற்று மண்டலத்திலுள்ள விஞ்ஞான அறிவால் வரும் நச்சுத் தன்மைகள் நிச்சயமாக மாறும்.

February 27, 2016

சொந்த பந்தம் - உயிரே நமக்குச் சொந்தம், அருள் மகரிஷிகளே நமக்குப் பந்தம்

அடிக்கடி சொல்லியுள்ளேன். சாமியை நம்புகின்றீர்கள், சாமியாரை நம்புகின்றீர்கள், ஜோதிடத்தை நம்புகின்றீர்கள், மந்திரத்தையும், யந்திரத்தையும் நம்புகின்றீர்கள்.

ஆனால், அனைத்துச் சக்தியும் படைக்கக்கூடிய திறன் (மனிதனுக்குள்) உங்களுக்கு உண்டு.

அப்படிக் கண்டுணர்ந்தவர்கள் அந்த மகரிஷிகள் அந்த வழியைச் சொல்லியுள்ளார்கள். அதன் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெறுவதற்கு அரும் பெரும் சக்திகளையும் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். உங்களுக்குள் பதிவு செய்வதை அடிக்கடி சொல்லியுள்ளேன்.

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல.
இந்த உலகம் நமக்குச் சொந்தமில்லை.

இந்த உலகம் நமக்குச் சொந்தம்தான்.
இந்த உடலை நமக்குச் சொந்தமாக்கி
இதனுடைய பந்தம் எப்படி இருக்க வேண்டும்?

என் கௌரவத்தைக் காக்கும் நிலையாக,
“என்னை இப்படிச் சொல்லிவிட்டான்...,
இருக்கட்டும்.., அவனை நான் பார்க்கின்றேன்”
என்று நான் சொல்கிறேன்.

இப்படி இந்த உடலின் பற்று வரப்படும் பொழுது அந்த பந்தமாகின்றது.

ஆனால், இந்த உடல் பற்று எப்படி வரவேண்டும்?

இந்த உடலில் இருக்கும் பொழுதே அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்திட வேண்டும். இருள் சூழா நிலைகள் நாங்கள் பெறவேண்டும் என்று இப்படிப் பற்றுக்கு வரவேண்டும். மகரிஷிகளின் பந்தத்தை வளர்த்திடல் வேண்டும்.

யாராவது நம்மை அவமதித்தாலும்
அந்த அவமதிக்கும் உணர்வை நமக்குள் வராதபடி
அதைத் தடுத்தல் வேண்டும்.

ஏனென்றால், நம்மை அவமதித்து விட்டார்கள் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நம்முடைய காரியங்கள் அனைத்தையும் நாமே தடைப்படுத்துகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அவருக்கும் நல்ல அறிவு வர வேண்டும். எங்களைப் பார்க்கும் பொழுது அவருக்கு நல்ல ஞானம் பெறவேண்டும் என்று இப்படி எண்ணிப் பழகுதல் வேண்டும்.

எப்பொழுது இங்கே தபோவனத்திற்கு வந்தாலும் சரி, பௌர்ணமி தினத்தன்று இங்கே வருகிறீர்கள் என்றால் அந்த நாள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் நாள் ஆகும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்று
தீமைகள் வராது அந்த சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும்
என்ற இந்த எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே, இது வளர்ந்து விட்டால் உங்களுக்குள் தீமையை நாடாது. அப்படித் தீமைகள் வந்தாலும் அதை அகற்றும் எண்ணம் உங்களுக்குள் வந்து அந்தத் தீமைகள் அகற்றி நல் வழியைக் காட்டும் நிலைகள் வளரும்.

அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளின் எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் இந்த உணர்வுகள் அடுத்து உங்களைப் பிறவியில்லா நிலையை அடையச் செய்யும்.
உங்களைத் துன்பமில்லா வாழ்க்கை வாழச் செய்யும்.
வாழ்க்கையில் மகிழ்ச்சி பெறும் சக்தியும் நீங்கள் பெறமுடியும் 

February 26, 2016

உலகை மீட்டிடும் நிலை அகஸ்தியன் உணர்வைப் பெற்ற தென்னாட்டிலே தோன்றியவருக்குத்தான் வரும்

விஞ்ஞான அறிவால் கதிரியக்கப் பொறிகள் அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் பெண்கள் கருவுறும் நிலைகள் வரப்படும் பொழுது விகாரத் தன்மை கொண்ட மனிதனின் ரூபங்களாக மாற்றமாகிவிடும்.

அத்தகைய பிறவிகள் வரும் இந்த நேரத்தில் அக்காலத்தில் நம் நாட்டில் அகஸ்தியன் தோன்றியது போல இங்கே தெற்கிலே தோன்றிய உணர்வின் அணுக்கள் இந்தக் கருக்களிலே (திருமணமான கணவன் மனைவி) நீங்கள் வளர்த்திடல் வேண்டும்.

ஆகவே, துருவ தியான நேரத்தில் அருள் மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் விளைய வைத்து அதன் துணையால் உங்கள் கருவில் இருக்கும் சிசுக்களை வளர்த்திட வேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் இந்தத் தியான வழியில் பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் அந்த அருள் ஞானம் கிடைக்கச் செய்யவேண்டும் என்று உலக ஞானம் பெறவேண்டும் என்று ஏங்குதல் வேண்டும்.

அந்த அறிவின் ஞானத்தை ஊட்டி நீ உலகைக் காத்திடும் அருள்ஞானியாக வளரவேண்டும் என்று உணவு ஊட்டும் பொழுதும், பாலூட்டும்போதும் தாலாட்டும் பொழுதும் இந்த உணர்வுகளை நாம் ஊட்ட வேண்டும்.

இப்படிச் செய்வோம் என்றால் இதன் தொடர் வரிசையில் எதிர் கால சந்ததியர் அகஸ்தியனைப் போன்று வளர்ந்து வருவார்கள்.

இன்று இந்த உலகம் முழுவதற்கும் நஞ்சின் தன்மை இருந்தாலும்
உலகை மீட்டிடும் அந்த நிலை
தென்னாட்டில் தோன்றியவருக்குத்தான் வரும்.

உலகப் பேரழிவின் தன்மை விஷத் தன்மையால் மடிந்து கொண்டிருக்கும் நிலையில் அதை மாற்றிட இது உதவும்.

ஏனென்றால், மத பேதம், இன பேதம், மொழி பேதம் என்ற உணர்வுகள் உருவாகி மனிதனை மனிதனே கொன்று புசிக்கும் நிலைகளே வருகின்றன. அதை இரசித்துப் பார்க்கும் நிலைகள் வருகின்றது.

இன்று மற்ற நாடுகளில் பார்க்கின்றோம்.
நம் நாட்டில் அந்த அளவிற்கு இல்லை.
இப்பொழுதுதான் தலை காட்டுகின்றது.

உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே வெடி குண்டுகளை வீசுவதும் மக்களை மடியச் செய்வதும் அதைக் கண்டு இரசிப்பதும் இதைப் போன்ற நிலைகள் வருகின்றது. உலக நாடுகளில் இது ரொம்பவும் துரிதமாக நடந்து கொண்டுள்ளது.

நீர் நிலைகளிலும் காற்று மண்டலத்திலும் நச்சுத் தன்மைகளைப் பரவச் செய்து மக்களை மடியச் செய்து அதை இரசித்து சுவாசித்துக் கொண்டிருக்கும் அசுர உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

நம் நாட்டிலே இந்தத் தென்னாட்டில் தோன்றிய அகஸ்தியன் உணர்வால்
அத்தகைய பிழைகள் வராது இங்கே தடுத்து நிற்கின்றது.

அதை மீண்டும் அவர்களின் (அகஸ்தியனின்) உணர்வே தான் பேசுகின்றதே தவிர நான் பேசுகின்றேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

ஏனென்றால், என்னால் பேசும் தகுதியோ
இந்த உணர்வைக் கவரும் தகுதியோ
அத்தகையை நிலை பெற்றவன் அல்ல நான்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இத்தகையை உணர்வின் தன்மை இந்த உலகை மீட்டிட
அந்த உணர்வுகளே இயங்குகின்றது.
அந்த உணர்வுகளே இயக்கிக் கொண்டுள்ளது.
அந்த உணர்வின் அலைகளே பரவுகின்றது.

உங்களால் எனக்கும் இலாபம் கிடைக்கின்றது.

ஏனென்றால், நீங்கள் அனைவரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகளை விளையச் செய்யும்போது அந்த உணர்வின் தன்மை அந்தப் பேரானந்தக் காற்று மண்டலத்தை நானும் சுவாசிக்க நேரும்.

ஆகவே, நீங்கள் வளர நான் வளர முடியும்.

நான் வளர நீங்கள் வளர வேண்டும் என்று எண்ணினால்
உங்களை எல்லாம் அடிமையாக்கத்தான் முடியும்.
நான் வளர்வதற்காக உங்களை அடிமையாக்கினால்
அது அரசியல் போன்ற நிலைகள் ஆகிவிடும்.

இன்றைய அரசியலில் உலகைக் காக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் அவர் வாழ பல நிலைகளைப் பேசுவார்கள். அதன் நிலைகள் கொண்டுதான் மதங்களானாலும் சரி மந்திரவாதியானாலும் சரி அதன் வழிகளில் எல்லாம் உலகைக் காக்கிறேன் என்பார்கள் – அவர் வாழ.

நம் குருநாதர் காட்டிய அருள் வழி
நீங்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்பதுதான்.
நீங்கள் அந்த உயர்ந்த நிலைகள் பெறவேண்டும்.  

இந்த உணர்வினை நான் பெற்றேன் என்றால் நீங்கள் உயர்வதைக் கண்டு நான் ஆனந்தப்பட்டால் உங்களில் விளைந்த அந்த உணர்வின் தன்மை எனக்குள் உயர்ந்ததாக மாற்றும்.

ஆனால், இங்கே விளைந்த வித்து ஒன்று தான். ஆனால், உங்களுக்குள் விளையப்படும் பொழுது அந்த ஒவ்வொன்றும் பல வித்துக்களாகின்றது. தீமைகள் அகற்றும் சக்தியாக மாறுகின்றது.

இந்தச் சக்தியின் தன்மையைக் கண்டு நான் அதிலே பேரின்ப பேரானந்த நிலையை நான் பெறுவேன். அப்பொழுதுதான் அந்தப் பேரின்ப வாழ்க்கையின் தன்மையும் என்னிலே இந்த உணர்வின் தன்மையை வளர்க்க முடியும். நீங்கள் வளரவேண்டும். அதைக் கண்டு நான் மகிழ வேண்டும்.

இதைப் போன்று நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் பார்ப்போரெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் வாழ்க்கையில் தெளிந்த நிலைகள் பெறவேண்டும் மகிழ்ந்து வாழும் நிலைகள் பெறவேண்டும் என்று எண்ணினால் நீங்களும் வளர்கின்றீர்கள்.

இதனுடைய வரிசைத் தொடர் இவ்வாறு வந்தால் தான் நாம் வாழ முடியும். வளர முடியும். இந்தக் காற்று மண்டலத்திலுள்ள நச்சுத் தன்மையிலிருந்து நாம் அனைவரும் மீள முடியும்.

February 25, 2016

மிகவும் மின்னிப் பிரகாசமாக இருக்கும் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் உண்டு - பாருங்கள்

இன்று ஒருவன் கொடூரமான நிலைகளில் இரக்கமற்று மற்றொருவனைத் தாக்குக்கின்றான். அதை நாம் பார்க்க நேரிடுகின்றது
.
இந்தச் சந்தர்ப்பத்தில் பாவம் செய்பவன் அவன்.

ஆனால், அதை வேடிக்கையாக நாம் பார்க்கும்போது பயத்தால் அச்சப்படும் நிலை ஏற்பட்டு அவன் செய்யும் கொடூரமான உணர்வுகள் நமக்குள் வந்தபின் இதே உயிர் அந்த அணுக்களை மாற்றிவிடுகின்றது.

ஆகவே, அதே தீமையின் விளைவுகள் இங்கே வரப்படும் பொழுது என்ன சொல்வோம்?

நான் தவறே செய்யவில்லை.
இரக்க உணர்வுடன் ஒருவர் செய்வதைப் பார்த்தேன்.
“இப்படிச் செய்கிறாரே.., பாவம்..,” என்ற நிலைகளில்
இரக்க உணர்வுடன் தான் பார்த்தேன்.

ஆனால், “எனக்கு ஏன் ஆண்டவன் இப்படிச் சோதிக்கிறான்” என்றுதான் நீங்கள் எண்ணுவீர்கள்.

“நம்மை ஆள்பவன் உயிர்”. நாம் எதைப் பார்க்கின்றோமோ அதை அணுவாக மாற்றுகின்றது.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு கார்த்திகேயா என்று நமக்குள் சொல்லும் இந்த உணர்வின் துணை கொண்டு நாம் அந்த மகரிஷிகளின் உணர்வவை இப்பொழுது தெளிந்தோம்.

இந்த உபதேசத்தின் வழியாகத் தெரிந்து கொண்டோம். தெளிந்த மனதின் உணர்வை நமக்குள் செலுத்தத் தவறினால் நாம் பார்த்த நிலை எதுவோ அதுவாகிவிடுவோம்.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்.

ஆகவே எதனைப் பார்த்தோமோ அதனின் வலுவாகிவிட்டால்
அதனின் எண்ணமே தான் வரும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மாறுதல் வேண்டும்.

“மாறுபட வேண்டும்” என்பதைத் தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வரபட்டர் இதைத் தெளிவாக்கினார்.

வான இயல், புவி இயல், உயிர் இயல் என்ற நிலையில் அந்த உயிரின் தன்மையை வான இயலின் தத்துவத்தை அந்த ஒளிக்கதிரின் தன்மையை இன்று தனக்குள் கணவனும் மனைவியும் இதைப் போன்று எடுக்கட்டும்.

எந்த நட்சத்திரத்திலிருந்தும் ஒளி மின்னல்கள் வரட்டும்.
அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் கவரப்படும் பொழுது
தனக்குள் இருக்கும் தீமைகளை அது சுட்டுப் பொசுக்கும்.
ஆனால், உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் நிலைகளும் வரும்.

ஆகவே அவர்களே மிகவும் வீரியம் அடைந்த நிலைகள் கொண்டு
பேரண்டத்தின் நிலைகளில் எங்கும் எண்ணத்தைச் செலுத்தி
இந்த 2000 சூரியக்குடும்பத்தில் விளையும் உணர்வைத் தனக்குள் கவர்ந்து
தனது பிரகாச ஒளியைச் சுடராகச் செய்வோரும் உண்டு.

இதன் வழியில் வந்தோர் அனைவரும் இதைப் போன்று உள்ளோர்
இன்று சப்தரிஷி மண்டலங்களில்
மிகவும் மின்னிப் பிராகசமாக இருக்கும்
சில உயிரான்மாக்களும் உண்டு.

சப்தரிஷி மண்டலங்களில் உற்றுப் பார்த்தால் இதைக் காண முடியும்.

சாமி பார்க்கின்றார். ஆனால், நமக்கு ஏன் சாமி காமிக்கவில்லை. நாம் எந்தக் காலம் இதைப் பார்ப்பது? என்று நீங்கள் சோர்வடைய வேண்டியதில்லை.

அதை உங்களைப் பெறச் செய்வதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றேன். உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் அதை ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.

நமது குருநாதர் இதை என்னைப் பெறச் செய்வதற்காக எனக்குள் எப்படி உயிர் வழி பாய்ச்சினாரோ அதே போன்று
நீங்கள் அனைவரும் பார்க்க வேண்டும், உணர வேண்டும்,
உங்களுக்குள் அந்த உணர்வுகளை விளைய வைக்க வேண்டும்
தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.

இது தான் என்னுடைய தவமே. எமது அருளாசிகள்.