ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 29, 2020

ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை எடுத்து ஜோதி நிலை பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


சரீரமற்ற ஆவி ஆத்மாவிற்குச் சுவாச நிலை இல்லாததனால் அதனுடைய உண்மைத் துடிப்பு நிலை காற்றின் அலைத் தொடர்புடன் உயிர் ஆத்மாவானது இருக்கின்றது.

அதாவது நாம் எப்படி நட்சத்திரங்களைக் காணும் பொழுது மின்னும் நிலையைக் காணுகின்றோமோ அதைப் போன்றே
1.ஆத்ம அலையின் துடிப்பு நிலையின் செயல் கொண்ட சுழற்சியில் தான்
2.உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா செயல் கொள்கின்றது.

பூமியின் பிடிப்பலை எண்ண உணர்வுடன்… வாழ்க்கையுடன் ஒன்றிய வாழ் நாளில் எண்ணத்தின் சுவாசத்தை எடுத்து… அச்சுவாசம் சமைக்கும் தொடர்பு வாழ்க்கையின் வழி முறைப்படி… ஆத்மாவின் உயர் சக்தியை அறியாமல்… வாழ்க்கைப் பிடிப்பில் சிக்கி வாழ்ந்து மடியும் உயிராத்மா… அதன் உயர்வு நிலை பெறாமல்… வளர்ச்சியற்றுப் போய் மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியிலேயேதான் இருக்க முடியும். உயிராத்மா வளர்ச்சி கொள்ள முடியாது.

ஆகவே...
1.பல கோடி ஆண்டுகளாக வார்ப்புப் படுத்தி வார்ப்புப்படுத்தி வளர்ச்சி கொண்டு வந்த
2.ஆத்ம வளர்ச்சியின் மனிதச் சரீரத்தின் வலுப் பெற்ற வளர்ச்சி நிலையிலிருந்து
3.உயர் நிலை பெற - சுவாசத்தைக் கீழ் நோக்கிய பூமி ஈர்ப்பு எண்ணமுடன் செலுத்தாமல்
4.சூரியனின் சமைப்பின் வழித் தொடர் பல நிலையில் மாறு கொண்டு வளரும் தன்மையில்
5.பூமி சமைத்து வெளிப்படுத்தும் அலையை எடுக்காமல்
6.பூமி சமைப்பினால் சரீரம் பெற்று எண்ணத்தின் உணர்வு நல்ல நினைவு உள்ள காலங்களிலேயே
7.மேல் நோக்கிய சுவாசத்தால் நாம் எடுக்கும் நேரடி காந்த நுண் அலைகளைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

அதாவது ஏழு வகை வண்ணத்தில் சமைக்கப்பட்ட ஆறு நிலை கொண்ட வண்ண ஒளி அலைகளை… காந்த ஈர்ப்பு நுண் அலையின் தொடர் வளர்ச்சி நிலை எண்ணத்தின் மோதலினால் நேரடியாகப் பெற வேண்டும்.

இப்படிப் பெற்ற வளர்ச்சியைக் கொண்டு பூமியின் பிடிப்பற்ற நிலைக்கு வர முடியும். அதன் மூலம் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கும் வழி முறையிலிருந்து மனிதனுக்கு அடுத்த நிலையான வளர்க்கும் நிலையான “வண்ண ஒளி ஜோதியாகலாம்…!”

மனிதனின் எண்ணத்தால் எடுக்கும் நிலை கொண்ட வார்ப்பு நிலை தான் ஆத்மாவின் வளர்ச்சி நிலை. ஆகவே இவ்வாத்மாவில் சேமிக்கும் வண்ண ஒளியின் வளர்ச்சி நிலையில் தான் மனித நிலையிலிருந்து வளர்ச்சி பெறும் அடுத்த நிலை உருவாகின்றது.

சீப்பை எடுத்து நாம் தலையை வாரும் பொழுது கீழ் நோக்கி வாரும் பொழுது
1.பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியதாக ரோமக்கால்களின் அணு வளர்ச்சியும்
2.கீழ் நோக்கி வளரும் வளர் நிலைக்கொப்ப ஈர்ப்பில் சீவப்படும் நிலையில் எந்நிலையான பாதிப்பும் தெரிவதில்லை.
3.அதே சீப்பைக் கொண்டு மேல் நோக்கி நம் கூந்தலைச் சீவினோம் என்றால்
4.உடல் நிலையே சிலிர்ப்புத் தன்மை இவ்வுணர்வு பெறுகின்றது.

இதை எப்படி அனுபவத்தில் காணுகின்றோமோ அதைப் போன்ற உண்மை நிலையை சுவாச நிலையால் எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தும் பொழுதும்… நேரடி சுவாசத்தை மேல் நோக்கி எடுக்கும் அலையை இந்த உடல் உடனே பெறுகின்றது…!

இத்தொடர் வளர வளர… மனிதச் சக்தியின் வலுச் சக்தியை இந்த ஆத்மா பெற்று… இவ்வாத்மாவின் ஒளி அலைகளைத் தனித்து இயக்கவல்ல வளர்ச்சி வழி கொள்ள முடியும்…!  

இன்று மக்கள் துரித கதியில் இயங்குவதற்கும் வன்முறை உலகம் முழுவதும் பரவுவதற்கும் காரணம் என்ன…?


யார் நமக்குத் தீங்கு செய்தாலும் அருள் மகரிஷிகளின் உணர்வு பெறவேண்டும் என்று அதை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அந்தத் தீங்கின் உணர்வை எடுக்காதீர்கள்.

ஏனென்றால் இப்பொழுது இங்கே உபதேசிக்கும் உணர்வுகளைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது அது உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

பதிவு செய்த உணர்வின் வலிமை கொண்டு அந்த மகரிஷிகளை நீங்கள் எண்ணும் பொழுது
1.எத்தகைய தீமைகளோ பகைமைகளோ இருப்பினும்
2.இரக்கமற்றுக் கொன்று குவிக்கும் உணர்வுடன் மற்றவர்கள் வந்தாலும்
3.ஒருவனைத் தாக்கிக் கொன்றிட வேண்டும்…! என்ற உணர்வுகள் வருவதை
4.அந்த அசுர குணங்களிலிருந்து நாம் அவசியம் தப்புதல் வேண்டும்.

அதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். பதிவின் நினைவை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்களை ஒன்றச் செய்யுங்கள்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் இரத்தநாளங்களில் கலக்கட்டும்.
3.உங்கள் உடலில் உள்ள பகைமை உணர்வுகள் அனைத்தும் அதனுடைய வலிமை ஒடுங்கட்டும்.

ஆகவே அருள் ஒளியின் உணர்வை உங்களுக்குள் செலுத்துங்கள். அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஞானிகள் வாழ்ந்த வாழ்க்கையை நீங்கள் பெறவேண்டும்.

உங்கள் பார்வையில் இந்த நாட்டில் உள்ள பகைமைகள் அனைத்தும் நீங்க வேண்டும். மனிதன் என்ற தன் நிலையை அடைந்து சகோதர உணர்வுடன் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

1.நீங்கள் வெளி விடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள
2.விஞ்ஞானத்தால் வந்த அசுர உணர்வுகளை எல்லாம் அழிக்கட்டும்…!
3.அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளரட்டும்.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அணுகுண்டுகளைத் தயார் செய்து அதை வெடிக்கச் செய்து மற்றதை அழிக்கச் செய்கின்றான். அதே போல் அதை வைத்து மற்ற இயந்திரங்களையும் துரிதமாக இயக்கச் செய்கின்றான்.

அதாவது குறைந்த எடை கொண்ட கதிரியக்கச் சக்திகளை வைத்து அதிகச் செலவில்லாதபடி இயக்கத்தின் வேகத்தை அதிகமாகக் கூட்டி மற்ற சாதனங்களை இயக்கச் செய்கின்றான்.

அப்படி இயக்கினாலும்…
1.இந்த கதிரியக்கங்கள் கசிவாக்கப்படும் பொழுது இயக்க ஓட்டத்தை மிகவும் துரிதமாக்குகின்றது
2.மனிதனின் ஆசைக்குள் அந்தக் கதிர்வீச்சுகளை நுகரப்படும் பொழுது
3.நம்முடைய எண்ணங்கள் துரித நிலைகளில் இயக்கப்படுகின்றது
4.சிறிது தடைப்பட்டால் வெடிக்கும் நிலையே வருகின்றது.

நம் எண்ணங்கள் எதை உற்று நோக்குகின்றோமோ… சீராக வரவில்லை என்றால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் சிதறுண்டு போகும் மனங்களாகத்தான் மாற்றுகின்றது.

ஒன்றின் வீரியத் தன்மைகள் கொண்டு நுகரப்படும் பொழுது…
1.மற்றொன்று நாம் எதிர்பார்க்கும் உணர்வுகள் அது துரித நிலையில் நடக்கவில்லை என்றால்
2.உணர்வின் மோதலால் அது சிதறுண்டு நம் சிந்தனைகள் இழக்கப்படுகின்றது
3.நம்மைத் தவறு செயபவனாக மாற்றுகின்றது…
4.இந்த விஞ்ஞான அறிவால் வந்த நிலைகள் தான் இது…!

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டுமா இல்லையா..?

ஆனால்… இதை எல்லாம் நான் படித்துப் பேசவில்லை. அந்த உணர்வின் இயக்கத்தைக் குருநாதர் எனக்கு நேரடியாக உணர்த்தியதை உங்களுக்கும் அப்படியே சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

 இந்த உலகம் மிகவும் சுருங்கிக் கொண்டு வருகின்றது. இத்தகையை சூழ்நிலையில் அந்த அருள் ஞானிகளின் அருள் வட்டத்திலேயே நாம் ஒன்றி வாழ வேண்டும்.

February 28, 2020

உறக்க நிலையில் கனவுகள் எப்படிக் காட்சியாகத் தெரிய வருகிறது…? என்பது பற்றி ஈவரபட்டர் சொன்னது


விஞ்ஞானி ஓர் இடத்திலிருந்து வண்ண ஒளிக்காட்சிகளைப் படமாக அமிலமுடன் பதியச் செய்கின்றான். ஜீவனற்ற பொருள் நிலையை அந்தந்த வண்ண நிலையுடன் இவன் பூசிய முலாமின் பிடிப்பலையில் எடுக்கும் அந்தக் காட்சிகளைக் காற்றலையுடன் கலக்கட்ட்ஃஸ்வ்வ்ச் செய்து பரப்புகின்றான்.

பரப்பிய அலைகளின் அதே தொடர்பலையைப் பல நூறு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அதற்கென்ற சாதனங்களை உருவாக்கி அதை கவரச் செய்கின்றான்.

இப்படி ஒரு நொடிக்குள் அந்த வண்ணக் காட்சிகளைப் பார்க்கும் நிலைக்கு விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ளது.
1.ஒளி பாய்ச்சி ஒளி ஈர்க்கும்…
2.பார்வையால் படம் பிடிக்கும்…
3.ஒளி நிலை காணும்… விழி நிலையில் காணுகின்றோம்.

இதே போலத் தான் கனவுகளும் ஏற்படுகின்றன. காற்றலையின் அமில ஈர்ப்பு இந்த உடலின் மீது மோதுண்டு… சுவாசத்தின் ஈர்ப்புடன் இவ்வுடலின் அமிலத்தின் மோதலான பின்… ஆத்மாவின் தொடர்புடன் உடல் உறங்கினாலும் இவாத்மாவுடன் அமிலங்கள் மோதுண்டு அந்த மோதலினால் காட்சிகள் தெரிகின்றன.

உறக்கத்தில் விழி மூடிய நிலையில் எண்ணத்தைக் கொண்டு செயல்படுத்தாத அலை நிலையை உடல் சமைக்கும் அமில உராய்வின் காட்சி நிலைகள் கொண்டு… ஆத்மத் தொடர்புடன் செயல்படும் நிலைகளில் தான்… சம்பந்தம் இன்றிப் பல கனவுகள் வருகின்றது.

எண்ணம் கொண்டு செயல்படாத் தன்மையில் சுவாச அலையில் மோதும் அமிலத்தில் இவ்வுடல் எவ் அமிலச் சேர்க்கை எடுக்குமோ அதற்குகந்த ஈர்ப்பு அலைகள் சுவாச வட்டத்தில் மோதுண்ட பின் ஆத்மாவின் விழிப்பு நிலையில் அத்தகைய கனவுகளை எல்லாம் காணுகின்றோம்.

காட்சிகளைக் கண்ட நிலைகளில் சிலர் ஆவி பிடித்தது… அருளாடுகிறது… என்றெல்லாம் சொல்வார்கள்…! தனக்கே தெரியாத படி பல மொழிகளீல் பேசுவோரும் உண்டு.

ஆவி நிலை உணர்வு என்பது… இன்று மருத்துவத்தில் மன நோய் என்று உணர்த்தும் ஒரு சாராரின் விஞ்ஞான நிலையும்… தெய்வத் தொடர்பு கொண்டு பக்தி மார்க்கத்தாரால் அருளாடும் நிலையில் முருகன் வந்தான்… காளி வந்தாள்… என்று உணர்த்தும் நிலைக்கும் உள்ளது.

பேய் பிசாசு என்று பேயைக் கண்டேன்… இரத்தக் காட்டேரி வருகிறது என்று பயந்த நிலையும் மக்களிடையே உள்ளது.

அதே போல் அன்பு பாசப் பிணைப்புடன்… குடும்பத்தில் பற்றுடன் பல காலம் வாழ்ந்த முன்னோர்கள்… அவர்கள் ஆத்மா பிரிந்தவுடன்
1.குடும்பத்துடன் உறவாடும் நிலையில்
2.இறந்த பின்னும் அவர்கள் வருவது போன்றும் பேசுவது போன்றும்
3.சில நேரங்களில் குடும்பங்களுக்கு வழிகாட்டும் நிலை ஏற்படுத்திச் செல்வதும் நடக்கின்றது.

இது எல்லாம் எத்தொடர்பலையில் மனித ஆத்மாவின் எண்ணம் செயல் கொள்கின்றதோ… ஏற்கனவே பூமியில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து இறந்த ஆத்மாக்களின் அலை எண்ணத்தில் ஒன்றுபட்டவுடன் அவைகள் இயக்கத் தொடங்கும்.

அதாவது உடலுடன் உள்ள மனிதனின் எண்ணம் எதிலே அதிக எண்ணத்தைச் செலுத்திச் செயல்படுகின்றதோ அவ்வலை ஈர்ப்பின் நிலைக்கொப்ப உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் ஜீவ சக்தி கொண்ட அமில உணர்வுகள்
1.ஜீவ சக்தி கொண்டவர்களுடன் அவ்வலை மோதி
2.ஹிஸ்டீரியா என்றுணர்த்தும் மன நோய்க்கும்
3.பல மொழிகளில் பேசி அருளாடும் தெய்வ நிலைக்கும்
4.பேயாடும் நிலைக்கும்
5.முன்னோர்களைக் காணும் பாசப் பிணைப்பினால் வழி நடத்திச் செல்லும் நிலைக்கும் இயக்கத் தொடங்கும்.

ஆனால் மகரிஷிகளின் அலைச் சக்தியுடன் தொடர்புடன் நம் ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டால் எத்தன்மை கொண்ட வேட்கை அலையிலும் பிறரின் ஈர்ப்பின் சொல் செயல் எண்ணங்களிலும் நம் ஆத்மா சிக்காமல் சமநிலை கொண்ட நற்குண சாந்த ஞான வீரத்தால் இவ்வாத்மாவின் வலுக் கூடிய தன்மையைப் பெறலாம்.

இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே சொல்கின்றேன்.

வெளிச்சத்தில் பொருளைக் காண்பது போல் அருள் ஒளியை நாம் அனைவரும் பாய்ச்சி இருளை இந்த உலகை விட்டே அகற்ற வேண்டும்


தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…! என்று அன்றைய ஞானிகள் சொன்னதை நாமும் ஓதிக் கொண்டே உள்ளோம்.

நம் தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் தான்… அண்டத்தின் ஆற்றல்களை எடுத்துப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றி இன்றும் ஒளியாகத் துருவ நட்சத்திரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எந்நாட்டவரும் பின்பற்றி அந்த அகஸ்தியன் வழிகளிலே எல்லோரும் வளர முடியும்.

1.என் நாடு… உன் நாடு…! என்று நிலை இல்லாதபடி
2.எந்நாட்டவரும் அவன் வழியிலே சென்றால்
3.அருள் ஒளியின் சுடராக அகஸ்தியனைப் போன்று முழுமை அடையலாம்.

இந்த உடலை விட்டு அகன்ற பின்… என்றும் ஏகாந்த நிலையில்… ஏகாந்த வாழ்க்கை வாழும் உணர்வைக் காட்டிய அந்த அகஸ்தியன் அருள் வழியில் நாம் திகழ்தல் வேண்டும்.

1.இந்த வாழ்க்கையில் யார்… எதை… எப்படி… எந்த வகையில்… குறைகளைக் கண்டாலும்
2.இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் அந்தக் குறையை வளர்த்திடவே கூடாது.
3.அருள் ஒளி பெருக வேண்டும்…! என்ற உணர்வைத் தான் செலுத்திட வேண்டும்.

குறைகள் செய்வோரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.. தெளிந்திடும் மனம் வேண்டும்… தெரிந்து.. தெளிந்து… தெளிவாக வாழும் அந்தத் திறன் பெறவேண்டும் என்ற உணர்வைக் கலந்து நமக்குள் உருவாக்கிவிட்டால் “பகைமை உணர்வுகள் மாறும்…!”

இதை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது…
1.ஒரு காலம்… அவர்களுக்குள் இருக்கும் தவறை உணர்வார்கள்…!
2.நம்மைப் பற்றி எண்ணும் பொழுது அவர்களுக்குள் சிந்திக்கும் செயலும்… மாற்றியமைக்கும் திறனும் நிச்சயம் வரும்.  

ஆகவே மனிதர்கள் நாம் இந்த அருள் ஒளியின் தன்மையைப் பெற்று மற்றவர்களுக்கும் பாய்ச்சிட வேண்டும்.

ஒரு வெளிச்சத்தைக் காட்டினால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ அதைப் போல் ஒளியான உணர்வுகளை அவர்களுக்குள் நாம் பாய்ச்சும் பொழுது
1.பல தீமையான உணர்வுகளுக்குள் அவர்கள் அடைபட்டிருந்தாலும்
2.நம்மைத் திட்டி அவர்கள் ஏளனப்படுத்தியிருந்தாலும்
3.நாம் பதிக்கும் அருள் உணர்வுகள் ஒரு சமயம் இயக்கப்பட்டு
4.நாம் சொன்ன உணர்வின் நினைவுகள் அவருக்குள் கிளர்ந்தெழுந்து
5.அவருக்குள் இந்த ஒளியின் தன்மை பெறும் தகுதி பெறும்.
6.அவரை அறியாது சேர்ந்த இருளை அகற்றும் நிலையும் ஏற்படும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்…!

February 27, 2020

சாமியையும் குருவையும் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை…!


இந்த மனித வாழ்க்கையில் எந்தச் செல்வமும் நமக்குச் சொந்தமாவதில்லை.
1.அந்த அருள் ஞானத்தை நமக்குள் சொந்தமாக்கி விட்டால்
2.இருளை வென்று உணர்வை ஒளியாக்கும் தன்மை பெற முடியும்.
3.அதைத் தான் இந்த மனித வாழ்க்கையில் சொந்தமாக்க வேண்டும்.

ஏனென்றால் எந்த நிலைகளீல் வாழ்ந்தாலும் இந்த உடலும் சொந்தமாவதில்லை உடலால் சம்பாரித்த செல்வமும் நின்றதில்லை.

கோடிக் கோடி செல்வம் பெற்றிருந்தாலும்… பல ஆயிரம் பேரைக் கொன்று குவித்துச் சுகமாக வாழ்வேன்…! என்றாலும் அப்படிப்பட்ட அரசன் எவனும் இன்று இருந்ததில்லை. அவன் பேய் மனமாகத் தான் சென்றான்.... அவன் உணர்வுகளும் பேய் மனமாக மாறியது…!

அவனைப் போன்ற ஆசையைப் பின்பற்றியவர்கள் அனைவரும் அவன் வழியிலே சென்று மத வெறி கொண்டு மனிதனை மனிதனே அடித்துக் கொன்று… அதைக் கண்டு மகிழும் நிலையே இன்று உருவாகி விட்டது.

அரசன் அவன் எதிரிகளைக் கொன்று குவித்தான். பல வகையிலும் மதம் என்ற பேரால் பேதங்களை அவன் உருவாக்கினான்.

அதே மதத்தின் அடிப்படையில் இன்று நஞ்சு கலந்த உணர்வாக மதத்திற்குள் இனம் என்ற நிலைகள் பல இனங்களாக வளர்ந்து விட்டது. அவன் அவன் “தன் இனமே பெரிது…!” என்று மற்ற இனத்தைப் பழித்துப் பேசினான். அதனால் பழி தீர்க்கும் உணர்வுகளே வளர்ந்தது.

மனிதனுக்கு மனிதன் உருக்குலையச் செய்யும் நிலைகளும்… சிந்தித்து வாழும் நிலைகளும் செயல் இழந்து… சிந்தனையற்ற செயலாகவே நாம் இன்று வாழ்ந்து கொண்டுள்ளோம்.

சிந்தனையற்ற செயலை நாம் நுகரும் பொழுது
1.நஞ்சு கொண்ட உணர்வுகள் நமக்குள் வளர்ந்து
2.நஞ்சை உணவாக உட்கொள்ளும் நிலை வளர்ந்து
3.நஞ்சின் செயலாக்கங்களாகச் செயல்படும் நிலையும்
4.நஞ்சு கொண்ட உணர்வையே வளர்த்திடும் நிலையே வளர்கின்றது.

இதைப் போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட வேண்டும்…! என்று எமது குரு எனக்குள் பதிவு செய்திருந்தாலும் அவரை நமது குரு என்ற நிலைகளில் எண்ணி ஒவ்வொருவரும் நாம் வாழ்தல் வேண்டும்.

1.முன்பு எமது குருவாக இருந்தார்…
2.இந்த உணர்வின் தன்மை நீங்கள் நுகர்ந்தறிந்து அந்த உணர்வின் வழி சென்றால்
3.நமது குரு என்ற நிலையில் ஒன்று சேர்ந்து வாழும் நிலை வரும்.
4.சாமியையும் குருவையும் பிரித்து எண்ண வேண்டியதில்லை (இது முக்கியம்)
5.அருள் ஒளியின் தன்மை கொண்டு “நமது குரு…” என்ற நிலைகளில்
6.நாம் எல்லாம் ஒன்று…! என்ற நிலையில் ஒன்றி வாழ்தல் வேண்டும்.

குரு அருள் துணை கொண்டு உலக மக்கள் நஞ்சிலிருந்து விடுபட வேண்டும்… அருள் ஞானம் பெறுதல் வேண்டும்…! என்ற உணர்வை நாம் தியானித்து வளர்த்தல் வேண்டும்.

பகைமை என்ற உணர்வுகள் வந்தாலும் அது நமக்குள் வளராது தடுத்து அருள் ஒளியை நமக்குள் பெற்று
1.உலக மக்கள் அனைவரும் அருள் ஞானம் பெறுதல் வேண்டும் என்ற உணர்வை ஓங்கச் செய்து
2.அருள் ஞானத்தை வளர்த்திடும் புவியாக நாம் மாற்ற வேண்டும்.

அருள் ஞானிகள் பிறந்த இந்தப் பூமியில்… அருள் ஒளியின் சுடர்களை எண்ணி…
1.இந்தியா என்ற எல்லையை எண்ணும் பொழுதெல்லாம்
2.ஒவ்வொரு மனிதனின் மனமும் மாறி
3.அருள் ஒளிச் சுடராக மாறும் நிலைக்கு வளர வேண்டும்.

நாம் எல்லாம் உலகுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக வளர வேண்டும்…!

ஞானத்தை வளர்க்க உதவும் “உணர்வு” (உணர்ச்சிகள்) பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.ஜீவ சக்தி கொண்ட காந்த ஈர்ப்பு அணு வளர்க்கும்…
2.வளர்ச்சியின் வித்தான சரீரச் செயலின் ஜீவனுக்கு…
3.ஜீவாதார முக்கிய நிலையான “உணர்வு…” இல்லை என்றால் ஞானச் செயல் செயல்படாது.

உணர்வின் சமைப்பினால்தான் எச்செயலுக்கும் எண்ணத்தைச் செலுத்திட முடியும். எண்ணத்துடன் மோதும் அலையின் ஈர்ப்பிற்கு காந்த மின் தொடர் அலைகள் மோதுண்டு… அதன் பதிவு கொண்டு தான்… “ஆத்மா” ஜீவ சக்தியிலிருந்து தனக்கு வேண்டிய வலுவைப் பெறுகின்றது.

ரிஷிகளின் வளர்ப்பலையுடன் வளரும் சக்தியில்… “உயர்ந்த ஆதி சக்தியின் படைப்பு சக்தியைப் பெற்ற…” அவர்கள் படைப்பின் தொடரை நாம் முதலில் பெற்றுப் பழக வேண்டும்.

அடுத்து நாம் பெற்ற அந்தத் தொடர் அலையை நம்முடைய வளர்ப்பைக் கொண்டு வளரும் ஆத்மாக்களுக்கு நல் வழி காட்டிடல் வேண்டும். அவ்வலையின் தொடரை நாம் எடுத்து அந்தத் (நம்) தொடர்பின் அலையை ரிஷித் தொடர்பிற்குத் தந்திட வேண்டும்.

அதன் மூலம்… அந்த ரிஷி வளர்ப்பின் ஆதி சக்தியின் அனைத்து சக்திகளீலிருந்து வளரும் சக்தியை அவர்கள் பெற்றுச் சுழலும் சுழற்சி ஓட்ட அலையில்
1.உயர்ந்த ஒளி வட்டமுடன் கலந்து அந்த ஞான சக்தியைக் கொண்டு
2.தன்னுள் உள்ள இறை சக்தியை… இறை ஆத்மாவாக… ஆத்மலிங்க ஜோதியாக… அடையும் வழியை நாம் பெற வேண்டும்.

அதை அடைய வேண்டும் என்றால் இந்த வாழ்க்கையில் மோதும் எண்ண உணர்வை நாம் எடுக்கும் சமைப்பு பிறரின் ஈர்ப்பில் சிக்காமல் இருத்தல் வேண்டும். ஏனென்றால்
1.பிறர் செய்யும் தவறில் நாம் தண்டனை பெறுவது போன்று நம் உணர்வுகளை மாற்றிடாமல்
2.அவர்கள் செய்த நிலைக்கு நாம் தண்டனை பெற்றுச் செல்லும் நிலையிலிருந்து மீள வேண்டியது மிகவும் அவசியம்.

அத்தகையை நிலை பெற்று… நம் அலைச் சக்தியின் உயர்வலைகளைப் பிறர் மேல் செலுத்தி… மேல் நோக்கிய ஈர்ப்பில் ரிஷிகளின் சக்தியை நாம் வளர்த்தால்… நம் ஒளி ஈர்ப்பிலிருந்தும் சொல் ஆலையிலிருந்தும் வெளிப்படும் உயர்ந்த உணர்வலைகள் அங்கே பதிந்து… அவர்களும் வளர்வார்கள். பிறரின் சங்கட சோர்வும் எத்தன்மை கொண்ட மற்ற வழித் தொடரும் நம்மைப் பாதிக்காது.

எப்படித் திரவகத்தில் போடப்படும் பித்தளை செம்பு போன்ற மற்ற உலோகங்கள் எல்லாமே கரைந்தாலும் தங்கத்தின் நிலை கரைக்கப்படுவதில்லையோ அதைப் போன்று
1.இவ் ஆத்மாவின் வலுவைக் கொண்டு
2.ஞானத்தால் பயம் என்ற அச்ச உணர்வை நீக்கி
3.சாந்தத்தை ஞானம் கொண்டு வீரத்தால் செலுத்தும் எண்ணத்தின் சரீர உணர்வலையின் ஈர்ப்பு வழித் தொடரில்
4.காந்த மின் அலையின் தொடர்பலையை ரிஷிகளின் சத்தலையுடன் செலுத்தி 
5.அவர்கள் வளர்க்கும் ஒளி நிலைத் தொடருடன் நாமும் ஐக்கியமாகலாம்.

February 26, 2020

தொட்டவுடன் பொன்னாகும்…! என்ற அன்றைய காவியக் கருத்தில் சொல்லப்பட்ட உண்மை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


கதைகளிலும் காவியங்களிலும் “தொட்டவுடன் பொன்னாகும்…!” சில வழி முறைகளை முந்தைய காலங்களில் உணர்த்தியதன் உண்மை நிலை என்ன…?

ஒரு பொருளைத் தொட்டால் அந்தப் பொருள் எதுவாகிலும் பொன்மயமாக மின்னுவதாகச் சொல் வாக்கிய வழி முறையிலும் காவியக் கதைகளிலும் உண்டு.

ஒரே மரத்தில் பறித்த எலுமிச்சங்கனியைப் பத்து பேர்களிடம் கொடுத்து வைத்திருக்கச் சொல்லி விட்டுப் பிறகு பார்த்தோம் என்றால் அவரவர்கள் பெற்ற அமிலச் சேர்க்கையின் உருவக உஷ்ண அலையின் வெப்ப நிலைக்கொப்ப அந்த கனியின் தன்மை மாறுபடும்.

இதைப் போன்றே…
1.உயர் காந்த சக்தியின் எண்ண வலுக் கொண்டு
2.ஞானத்தின் வழி சக்தியால் உயர்ந்தோரின் தெய்வத் தொடர்புடன் சங்கமித்த வழித் தொடரில்
3.எவ்வலையையும் இச்சரீர இயக்கம் எடுத்துச் சமைத்து ஆத்மாவை வளர்க்கும் ஆத்ம ஜோதி நிலை கொண்டவர்களினால்
4.ஒரு பொருளை எவ்வமிலத்தினால் எவ் உலோகத்தில் செய்யப்பட்டிருந்தாலும்
5.சில அலைச் சக்திகளைக் கொண்டு அதனை உருமாற்றவும்
6.சில நிலைகளைச் சுட்டிக் காட்டும் தன்மையை உருவாக்கும் நிலையையும் உருவகப்படுத்தலாம்.

இந்நிலையில் ரிஷித் தன்மை கொண்ட ரிஷிகள் பலர் காயகல்ப சித்து என்ற சில சக்தி நிலைகள் பல செய்து காட்டினர்.

போகர் சித்து நிலை பெற்று ரிஷித் தன்மை வலுக்கூடிய நாளில் அவர் எடுத்த அலைகளின் சக்தியினால் இந்தப் பூமிக்குப் பல மூலிகைகளை மருத்துவச் செயலுக்காகப் பூமியில் பதிய வைத்து வளரும் தன்மையை உருவாக்கினார்.

இந்தப் பூமியில் சித்து நிலை பெற்று வளர்ந்த பல மகரிஷிகள்…
1.இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் சக்தியை
2.தான் பிறப்பெடுத்து வளர்ந்த பூமி அலையின் பதிவில்
3.ஜீவாத்மாககளின் வளர்ப்புக் காப்பக நிலைக்காக
4.பல ஆற்றல் மிக்க சக்திகளைப் பூமியில் பதித்து வளர வழி காட்டுகின்றனர்.

ஆனால் தன் இனத்தின் உண்மை குண நிலையைப் புரியாமல்… உண்மை உயர்வின் வழியில் செல்லாமல்… பூமிப் பிடிப்பில் புதையுண்டு மீண்டும் மீண்டும் பிறவிக்குள்ளேயே சுழன்று வாழ்கின்றனரப்பா…!  

கேட்க விரும்புவோருக்கு இந்த ஞான வழியினை எடுத்துச் சொல்லி வழி காட்டுங்கள்… விரும்பாதவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை…!


விஞ்ஞான உலகிலிருந்து உங்களை மீட்டிக் கொள்வதற்குண்டான நிலைகள் இதைக் கேட்போர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இதை உபதேசிக்கின்றோம்.

யாம் உபதேசிக்கும் மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் விளையச் செய்தால்
1.சில அற்புதங்களை உங்களால் செயல்படுத்த முடியும்
2.அதனால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி வரும்.

நீங்கள் சொல்லி… ஒருவருக்கு நன்றாகி விட்டால் உடனே சந்தோஷம் வந்து
1.உங்களுக்குள் நல்லதை உருவாக்கும் அந்த அணுக்கள் விளையும்.
2.அந்த நிலைக்கு ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்.

நீங்கள் தயாரானால் தான் நீங்கள் விடும் அந்த உயர்ந்த மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்திலே படரும். நாம் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த உயர்ந்த நிலைகளை வெளிப்படுத்தும் பொழுது இந்தக் காற்றலைகளிலே அபரிதமாகப் பரவும்.

அந்த உணர்வுகள்… நல்லதை எண்ணி ஏங்கி எடுப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.

ஒருவருக்கு இந்த அருள் ஞானத்தைச் சொல்லி முறைப்படி எடுங்கள் என்று சொல்லும் பொழுது உங்களுக்குள் சமைத்திருந்தால் தான் அங்கே கிடைக்கும். ஏனென்றால் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் “மிகக் கடினமானது...!”

அந்த ஞானிகளின் உணர்வை நாம் எடுத்து நமக்குள் சமைத்து “மற்றவர்கள் பெறவேண்டும்” என்று அதைப் பதித்து இந்த உணர்வை நம்முடன் தொடர்பு கொண்டவர்களின் நிலையில் இதன் வழி எடுக்க வைக்க வேண்டும். இப்படி ஒரு பழக்கங்கள் வர வேண்டும்.

இப்படி நாம் பழகி விட்டால் நாளை வரும் நஞ்சிலிருந்து எல்லோரும் மீளலாம். சகோதர உணர்வை நாம் வளர்த்துக் கொள்ளலாம்.

1.குறைகளைக் கூறும் நிலையை அடியோடு விட்டுப் பழக வேண்டும். அதை நீக்கிடல் வேண்டும்
2.குறைகளை யாரும் வேண்டும் என்று செய்வதில்லை.
3.சந்தர்ப்பத்தால் அவர்களுக்குள் நுகர்ந்த உணர்வுகள் தான் அவர்களைத் திசை திருப்புகின்றது.

அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்… அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்கள் பெறவேண்டும்… அருளாற்றல் அவர்கள் பெறவேண்டும்…. மெய்ப் பொருள் காணும் நிலைகள் வளர வேண்டும் என்று நாம் உடனுக்குடன் அதைப் பக்குவப்படுத்தி அருள் உணர்வைப் பாய்ச்சிப் பழக வேண்டும்.

குரு காட்டிய அருள் வழியில்… இப்படிச் சொல்வது நமக்கு நல்லது… நம்மை அறியாது இயக்கும் நிலைகளிலிருந்து விடுபட வேண்டும்…! என்ற உணர்வினை உயர்ந்த உணர்வுடன் எண்ணிச் சொல்லுங்கள்.

1.இதை எல்லாம் கேட்போருக்குச் சொல்லுங்கள்.
2.கேட்காதவருக்குச் சொல்ல வேண்டாம்…!
3.இவன் என்னமோ “பெரிய மனிதன்” மாதிரி நமக்குப் புத்தி சொல்ல வந்து விட்டான்…! என்று இதிலேயும் ஒரு உணர்வு வந்துவிடும்.

அந்த உயர்ந்த உணர்வுகளை மனதில் எண்ணி நாம் வளர்த்துக் கொண்டால் அவர்கள் பகைமை உணர்வு… அவர்கள் செய்யும் குறைகளையோ சொல்லவிடாது நமக்குள் தடுக்கும்.

இல்லை என்றால் அந்தக் குறையின் உணர்வு பதிவாகிவிடும். ஒரு நான்கு தடவை சொன்னால் குறையை வளர்த்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்து அந்த அணுக்கள் சேரச் சேர நம்மையும் குறை கொண்டவராக வளர்க்கும்.

அந்தக் குறை உணர்வுகள் நமக்குள் அதிகமாகிவிட்டால் கண்டிப்பாக நோயின் தன்மை வளரத் தொடங்கும். இதைப் போன்ற விபத்துகளிலிருந்து எல்லாம் நாம் தப்புதல் வேண்டும்.

1.ஏனென்றால் மனிதனின் வாழ்க்கையில் குறுகிய காலமே வாழ்கின்றோம்
2.இதற்குள் நிறைவான வாழ்க்கையாக… அகண்ட அண்டத்தில் என்றுமே ஏகாந்த நிலைகள் கொண்டு வளர்தல் வேண்டும்.

இதற்காக வேண்டித்தான்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஆலயத்தில் நற்பண்புகளை வளர்க்கச் செய்து எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற உயர்ந்த பண்புகளை ஞானிகள் நம்மை வளர்க்கச் செய்தனர்.

மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை… சந்தர்ப்பத்தால் அந்த நல்ல குணங்கள் மடிவதிலிருந்து மீள நாம் உயர்ந்த சக்திகளை அந்த ஆலயங்களில் எண்ணி எடுக்கும்படி வழிப்படுத்தினார்கள்.

ஆனால் இன்று ஆலயத்திற்குச் செல்பவர்கள்
1.தனக்குத் தான் கேட்கின்றார்கள்…!
2.மற்றவர்களை எண்ணும்போது எனக்குத் தொல்லை செய்தான் என்று வேதனையைத் தான் எடுக்கின்றார்கள்
3.ஆலயத்தில் ஞானிகள் காட்டிய நற்பண்புகளை உணரவில்லை.

இந்த ஆலயம் வருவோர் எல்லாம் நலம் பெறவேண்டும் என்று ஞானிகள் வகுத்துக் கொடுத்த நல்ல நிலைகளை மாற்றிவிட்டோம். அன்றைய அரசர்கள் காட்டிய நிலையைத் தான் இன்று கடைப்பிடித்துக் கொண்டுள்ளோம்.

அரசனுக்காகப் போராடிய உணர்வுகளும் அந்த மந்திரங்களைச் சொல்லி அந்த உணர்வின் தன்மை நாம் வளர்க்கப்படும் பொழுது இறந்த பின் அந்த மந்திரத்தால் அவர்கள் நம்மைக் கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

இப்படி… முந்தி அந்த அரசர்கள் கைவல்யம் ஆனோம். இன்று அதன் வழி வந்த மந்திரவாதிகள் கையிலே சிக்குகின்றோம். அவன் ஆட்டிப்படைக்கும் பொம்மையாகத்தான் மாறுகின்றோம்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் ஒவ்வொருவரும் மீள்தல் வேண்டும். 

February 25, 2020

பிறர் உணர்வு நம்மை அறியாமலே இயக்குவது போல் ஞானிகளின் உணர்வை அறியாமலே எப்படிப் பெறுவது என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.ஒருவர் நீர் அருந்தும் பொழுது நாம் பார்த்தால் நமக்கும் தாக நிலை ஏற்படுகின்றது.
2.ஒருவர் கொட்டாவி விட்டால் அதே நிலை நமக்கும் ஏற்படுகின்றது,

ஜீவ சக்தியில் சரீர பிம்ப வாழ்க்கை நிலையில்.. உணர்வுடன் கூடிய எண்ணத்தில் செயல்படும் வழிமுறை ஆற்றல்… மனிதச் சக்திக்கே ஒருவருடன் ஒருவர் கூடி வாழும் வாழ்க்கையில்… இவ்வீர்ப்பின் தொடர்பில் “ஒருவரை ஒத்து” ஒருவரை இப்படித்தான் சாடுகின்றது.

இதே போல் தான் ஆத்ம இயக்கத்தின் தொடர்பிலும் உண்டு. தாம்பத்ய எண்ண வாழ்க்கையில் ஆண் பெண் ஒத்த இல்லற உணர்வால் ஒருவரின் அலைத் தொடர்பைப் பிறிதொருவர் அதிவிரைவில் எடுக்கும் வல்லமை கூடிய இல்லற எண்ண ஒற்றுமைகள் நடைபெறுகின்றன.

1.உயர் அலையின் தொடர்பலையால்
2.காந்த மின் அலையின் வீரிய உயர் குண வழித் தொடரில்
3.ஜெபம் கொண்ட சக்திமிக்க வாழ்க்கை நிலை ஏற்படும் பொழுது
4.இரண்டு எண்ணங்களின் ஒருமித்த கூட்டு ஐக்கிய குண நிலை அமையும் பொழுது
5.அத்தொடரினால் பெறப்படும் உயிராத்மாவின் வலுவில் கூட்டு ஐக்கியம் கொண்டு
6.சிவசக்தி… என்ற “ரிஷிபத்தினி” நிலையைப் பெற முடியும்.

அந்நிலையின் வழித் தொடரில் தனித்த அலைத் தொடர்பைக் காட்டிலும் வளர்க்கும் தன்மைக்கு வளர்ச்சி பெறும் ஜீவ சக்தியைச் சிருஷ்டிக்கும் ஆற்றல் நிலை பெற முடியும்.

மனித ஆத்மாவின் அலைச் சக்தி எண்ணத்தின் ஆவி நிலையின் பதிவு நிலை… பூமி இழுத்து வெளிப்படுத்தும் அலையுடன் ஒன்றிய வாழ்க்கை நிலையில்… இவ்வுணர்வின் எண்ணத்தின் சரீர அலைத் தொடர்பு இந்த உடல் செல்லும் இடங்களில் எல்லாம் “பூமியின் ஈர்ப்பில் பதிந்து கொண்டே உள்ளது…!”

அதைப் போன்றே…. ஒத்த நிலையிலோ மாற்று நிலையிலோ உள்ளவர்களுடன் கூடிய எண்ண உறவாட்டத்தில்… பிறரின் அலை உணர்வை… நாம் ஒவ்வொரு நிமிடமும் சுவாசிக்கத்தான் செய்கின்றோம்.

எப்படி தாகம் எடுப்பதும் கொட்டாவி விடுவதும் பிறரின் தொடர்பு கொண்டு உள்ளது போன்றே
1.பிறர் வளர்த்த அலைத் தொடர்பை
2.ஒளி பாய்ச்சி உணர்வும் எண்ணமும் ஈர்க்கும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல்
3.பிறரின் சோகத்தையும் சஞ்சலம் சந்தோஷம் எதுவாகிலும் எடுக்கும் நிலையில் தான்
4.இன்றைய வாழ்க்கை நடைமுறையில் நாம் உள்ளோம்.

அதை மாற்றி எண்ணத்தால் எடுக்கும் ஞான உணர்வின் வழி முறையில் உயர்ந்த ரிஷித் தொடர்புடன் செயல்படும் வாழ்க்கை வழிமுறையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி அமைத்துக் கொண்டோமானால்
1.இவ்வாத்ம அலையை ஒளிரும் சக்தியில் வலுக் கொண்டு இயங்க
2.நாம் வளர்த்த உயர் தொடர்பின் வலுத் தன்மையுடன்
3.மாற்று நிலை கொண்ட பிறருடன் கலந்துறவாடும் எண்ண நிலை ஏற்பட்டாலும்
4.தணலில் போடும் பொருளைப் போன்று அவை நம்மைச் சாடாமல் பஸ்பமாக்கும் தன்மைக்கு
5.நம் ஆத்ம அலையின் வலு நிலை கூடிவிடும்.

டி.பி. கேன்சர் இருதய அடைப்பு போன்ற கடுமையான நோய்களைப் போக்கும் மருத்துவம்


வெள்ளாடு நஞ்சினை அடக்கும் சக்தி பெற்றது. விஷத்தைத் தன் உடலாக மாற்றிக் கொண்டுக நல்ல நிலையை அது வெளிப்படுத்துகின்றது.

அந்த வெள்ளாட்டுப் புழுக்கையை எடுத்து நன்றாகக் காய வைத்து… லேசான நிலைகளில் சூடாக்கி… அந்த ஆவி வருகின்ற மாதிரி… கொதிகலனாக ஆகாதபடி அதிலிருந்து ஒரு வெப்பம் வரும் பொழுது அதை நுகர்ந்து பாருங்கள்.

அதைச் சுவாசித்து உடலுக்குள் செல்லப்படும் பொழுது நீங்கள் மருந்து சாப்பிடுவது போன்று உடலில் அறியாது சேர்ந்த விஷத்தை இது ஒடுக்கும் வல்லமை பெறுகின்றது.

1.அந்த ஆவி இரத்தநாளங்களில் செல்லப்படும் பொழுது
2.டி.பி. ஆனாலும் கேன்சர் ஆனாலும் மற்ற கடும் நோயாக இருந்தாலும் அது எல்லாம் குணமாகும்
3.இருதய வாயிலில் அடைப்பாக இருந்தாலும் கூடக் கொஞ்ச நேரம் சுவாசித்துப் பழகுங்கள்… குணமாகும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானத்தை எடுத்து மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களிலே கலந்து எனக்குள் இருக்கும் தீமைகள் அகல வேண்டும் என்று தியானியுங்கள்.
1.எனக்கு அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும்
2.உங்களுக்கு எந்த நோயோ அது நீங்க வேண்டும் என்று எண்ணி அதைச் சுவாசியுங்கள்.

இன்று ஆஸ்த்மா நோயுள்ளவர்கள் அதிகம் உண்டு. இது எல்லாம் பரம்பரையாக வருவது. சர்க்கரை நோயும் கூட இப்பொழுது பரம்பரையாக வருகின்றது.

பிறந்த குழந்தைக்கே சர்க்கரைச் சத்து இருக்கிறது என்று சொல்கிறார்கள். மூன்று வயது நான்கு வயதிலேயே இன்சுலின் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் தாய் வழியில் வருகின்றது.

காசு இருக்கின்ற வரையிலும் போடுகின்றோம். காசில்லாதவர்கள் விட்டு விடுகின்றோம். போன பிற்பாடு ஐயோ.. இந்த மாதிரி இருந்தானே…! போய் விட்டானே,,,! என்று சொல்கிறோம். அந்த உணர்வை உடலில் எடுத்து இன்னும் கொஞ்சம் வளர்த்துக் கொள்கின்றோம்.

ஆக குறைக்க வழியில்லை…!

நான் கோவிலுக்குச் சென்றேன்… அதைச் செய்தேன்… விரதம் இருந்தேன்…! என்று இந்தப் பாவத்தைப் போக்க சிலதுகளைச் செய்து “காசைக் கொடுத்துப் பாவத்தைப் போக்கும்” இந்த நிலைகளில் தான் இன்று இருக்கின்றது.

இது எல்லாம் நம் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. வளர்ச்சி பெற்ற அந்த அருள் ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்து பழக வேண்டும்.

உயிரினங்கள் தன்னைக் காட்டிலும் மற்ற வலு கொண்ட உணர்வை நுகர்ந்து நுகர்ந்து அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ள இந்த உணர்வு வளர்ச்சி கொண்ட பின் அதன் உடலிலே புகுந்து அதன் தன்மைக்கு மாறுபட்டு வருகின்றது.

இதைப் போல்…
1.மனிதனின் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்ற
2.மெய் ஞானிகள் பாதையில் நாம் எடுத்து அவர்கள் உணர்வினை வளர்த்துக் கொண்டோம் என்றால்
3.அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்றிவிட்டு
4.பத்தாவது நிலை என்ற முழுமை அடைகின்றோம்.

அதைத்தான் “வைகுண்ட ஏகாதசி” என்று சொல்வது. ஏகாந்த நிலைகள் பெறும் தகுதியும் நமக்கு வருகின்றது.

மனிதனாக ஆன பின் ஏகாந்தம்… அகண்ட அண்டத்தில் எத்தகைய நஞ்சு வந்தாலும் ஒளியாக மாற்றிடும் திறன் நாம் பெறுகின்றோம்.

February 24, 2020

ஆத்மாவின் விழிநிலை ஜோதி நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


சகல ஜீவ சக்திகளிலும் சரீர உணர்வினால் செயல்படும் ஒளித் தன்மையின் விழி நிலை (கண் பார்வை) ஜீவராசிகளுக்குத்தான் உண்டு.

பூமியும் பூமி வளர்க்கும் தாவர இனம் மற்றைய தாதுப் பொருள்கள் ஒவ்வொன்றும் ஜீவ சக்தி கொண்டது தான். இருந்தாலும் அவற்றின் முலாம் வளர்ச்சியின் முதிர்வு நிலையில் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றாக மாறி மாறி வரும் நிலை வளர்ப்பு… அழிவு… வளர்ப்பு… என்றே வந்தது.

அதன் வளர்ச்சி நிலையில் அணு சமைத்து வளர்ந்த முலாம் கொண்டு உயிரணுவாகத் தோன்றியது. உயிரணுவாகத் தோன்றினாலும் அவை ஒவ்வொன்றூம் பல வார்ப்பு நிலையில் வளர்ந்து… அழிந்து… சக்தி கொண்டு… பல நிலைகளுக்குப் பிறகு ஜீவனுள்ள சரீரம் பெறுகிறது.

சரீரம் பெற்ற நிலையில் ஊர்வன நீந்துவன பறப்பன நடப்பன என்ற ஜீவராசிகளின் வளர்ச்சியில் விழிநிலையில் ஒளி காணும்… உருவக எதிர் நிலையை… அறியும் ஆற்றல் வருகின்றது. அதாவது
1.விழியின் ஒளியை எதிர்ப்படும் பொருள் கண்டு
2.விழியின் பாப்பாவில் படம் பிடித்து
3.அதனதன் உணர்வு கொண்ட எண்ணத்தில் அறிந்து செயல்படும் வாழ்க்கை நிலை நடக்கின்றது.

ஆனால் சாதாரண பிறப்பு இறப்பு என்ற நிலையில் ஜீவ சக்தி பிரிந்து உடலை விட்ட உயிராத்மாவிற்கு ஆத்ம ஒளி வட்டம் தான் உண்டு. இந்தக் காற்றலையில் தான் சுழலும்.

ஜீவன் பிரிந்த ஆத்மாக்கள் காற்றலையில் மிதந்து கொண்டே இந்தப் பூமி ஈர்ப்பில் சுழன்றாலும் விழியால் பார்க்கும் நிலை அந்த ஆத்மாக்களுக்கு இல்லை. சுவையையும் மணத்தையும் நுகரும் சுழற்சி வட்டத்தில் தான் அவை சுழலுகின்றது.

ஜீவனுடன் உள்ளவர்களின் சரீர எண்ணத்தால்…
1.உடலை விட்டுப் பிரிந்தவர்களின் நினைவில் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது
2.அவ்வலையின் உணர்வு இவர்களின் மேல் மோதி
3.அந்தத் தொடர்புடன் அவர்களுக்கும் ஜீவ காந்த அலைத் தொடர்பு கிட்டியவுடன்
4.அவர்கள் தொடர்புடன் ஆவி ஆத்மாவும் விழி அலை பிம்பத்தை எதிர் கொண்டு பார்க்க முடிகின்றது.

அலை உணர்வின் தொடர்பைக் கொண்டு “பார்க்கும் நிலையானது” எப்படி..?

ஒரு புகைப்படக் கருவியைக் கொண்டு (CAMERA) அதில் பூசப்பட்ட அமிலப் புகை பிம்பத் தாள்களை (FILM) அக்கருவியுடன் பொருத்தி அதற்குகந்த விசை அழுத்தத்தைத் தந்தால் எதிர் பிம்பத்தைப் பதிவு செய்வதைப் போன்று தான் ஆவி ஆத்மாக்களின் செயல்கள் உண்டு.

எதிர் நிலையில் காண்பதை விழியில் காணும் நிலை தான் மனித சரீரத்திற்கே உண்டு. தன் முதுகைத் தானே காண முடியாது. தன் பிம்பத்தையே எதிர் அலையின் நிலைக்கண்ணாடியிலோ நீரிலோ தான் பார்க்கும் நிலை உண்டு.

ஆதம தியான சக்தியைக் கொண்டு… ஞான திருஷ்டியால்… விழியை மூடிக் கொண்டு… ஞானத்தால் பெறும் தியான சக்தியில்… ஆத்ம சக்தியின் உயர்வு நிலையால்…
1.இச் சரீரக் கூட்டிலிருந்தே சகல சித்துக்களையும் பெறும் வழித் தொடர் கொண்டு
2.ஞானத்தால் காணும் விழியின் ஒளி நிலைக் காட்சிகளை
3.எண்ணியவை யாவையுமே காணத்தக்க விழி நிலையின் ஒளித் தன்மை… இவ்வாத்ம அலையைப் பெற்றுவிட்டால்
4.ஏகமும் ஒன்றான அகில சக்தியின் தொடர்பிலும் விழி அலை ஒளி நிலையில் காண முடியும்.

அத்தகைய நிலை பெற வேண்டும் என்றால் இச்சரீரக் கூட்டின் சமைப்பில் காந்த மின் அலையின் வலுத்தன்மையை எலும்புக் கூடுகள் பெற்றிருக்க வேண்டும்.

அப்படிப் பெற்ற தன்மை கொண்டு தான்…
1.ஆத்மாவின் விழி நிலையின் ஜோதி நிலை கொண்டு
2.நம் வளர்ப்பின் தொடருக்கு வழி காட்டிய ரிஷிச் சக்தியின் உயர்வுத் தொடர்புடன்
3.மகரிஷிகளின் அருள் வட்டமுடன் நம் ஐக்கியச் செயலையும் ஐக்கியப்படுத்தலாம்.

இது எல்லோராலும் சாத்தியமானதே…!

ஆகவே பிறவா வரம் கொண்ட ஜோதி நிலை பெறும் ஒளி நிலையின் உயர் தத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தீர்கள் என்றால் உயர்வு கொண்ட அந்த “ஒளி நிலையின்…” உண்மை புரியும்.