ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2013

அகஸ்தியனைப் போன்று, நாமும் நம் பூமித் தாயைக் காக்க வேண்டும்

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று, அந்தத் தெற்கிலே தோன்றிய அகஸ்தியன் தான் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அதை நாம் பேசும் முறையில் எந்நாட்டவரும் அதைப் பெற்றால்,
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பூமிக்குள் படர்ந்தால்
மனிதனின் நிலைகள் தீமை அகற்றி
பூமியும் காற்று மண்டலமும் நன்றாக இருக்கும்.

ஏனென்றால், நமது பூமி எத்தனையோ நிலைகளிலிருந்து பல நல்ல சரக்குகளை எடுத்து, உயிரணுக்களை வளர்ப்பதற்கு தாவர இனங்களைக் கொடுத்து, நம்மை மனிதனாக உருவாக்கியது இந்தப் பூமித் தாய்தான்.

இதிலே பிறந்த நாம், பூமித் தாயைப் பரிசுத்தப்படுத்துவதற்கு, ஒளியின் உணர்வாகப் பெற்ற அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அனைவரும் நமக்குள் எடுத்து, அந்த ஒளியான உணர்வலைகளை மூச்சலைகளாக இந்த பூமி முழுவதும் படரச் செய்ய வேண்டும்

எந்தத் தாயின் இதயத்தில் தோன்றினோமோ, அந்தத் தாயைத் தீங்கற்ற தாயாக நாம் உருவாக்க வேண்டும்.

ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்தால், அந்தத் தாய்க்குத் தீங்கு வரும் பொழுது, அந்தத் தீமையிலிருந்து தாயைக் காப்பதற்கு நாம் என்னென்ன முறைகளைச் செய்வோமோ, அதைப் போலத்தான் பூமித் தாய்க்கு நம்முடைய சேவைகள் இருத்தல் வேண்டும்.

ஆக, இதிலிருந்து உருவானவர்கள் தான் நாம் அனைவருமே. நம்மை உருவாக்கி, வளர்த்து, உணவும் கொடுக்கின்றது. இதில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப நம்மை வளர்க்கின்றது.

இந்தப் பூமியிலிருந்துதான் வளர்ந்தோம் என்ற இந்த அறிவின் ஞானத்தால்,
தீமைகளை நீக்கி,
அருளைப் பெருக்கி,
இனி ஒரு பிறவியில்லை என்ற நிலை அடைவதே நல்லது.

ஏனென்றால், உயர்ந்த உணர்வுகளை எடுக்கப்படும்பொழுது, நம் பூமி அந்தச் சக்தி பெறுகின்றது. பூமியின் மண்ணுக்குள்ளும் படர்கின்றது. நம் வீட்டிலும் நாம் வாழும் இடங்களிலும் இது படர்கின்றது.

இது நமக்கும் நல்லதாகும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லதாகும். இது நம்முடைய தலையாகக் கடமையாகும்.

October 28, 2013

உயிர் உடலில் இல்லையென்றால், "நான்..," என்ற சொல் ஏது?

1. குருநாதர் இட்ட கட்டளை
நான் ஏதோ சொல்கின்றேன்,
நான் கல்வி அறிவு இல்லாதவன்
என்று எண்ண வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில், விண்ணுலக ஆற்றல் னைத்தும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.

நமது குருநாதர் எம்மிடம் சொன்னது:
அந்த உணர்வின் ஆற்றலை விண்ணிலே நீ வீசு,
உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து அறி.
அந்த உணர்வின் தன்மையை உனக்குள் வளர்த்துக்கொள்.
தீமையற்ற நிலைகளாக ஆக்கு,
தீமைகள் இருக்கும் மனிதனுக்கு, தீமைகள் நீக்க அது உதவட்டும் என்று என் குருநாதர் இட்ட கட்டளைப்படிதான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ, பொருள் தேவைக்கோ அல்ல.

எனக்குப் பொருள் ஒன்றும் தேவை இல்லை.
புகழும் தேவை இல்லை.
நீங்கள் மகிழ்ந்திருக்கவேண்டும்.
உங்களையறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.

உங்களின் மகிழ்ச்சியான உணர்வுகள், மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக மலர வேண்டும், அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். இது குருநாதர் இட்ட கட்டளை.

2. “உயிர்” நம் உடலில் இருக்கும் வரைதான் எல்லா மதிப்பும் மரியாதையும்
இந்த உடல் சதமற்றது, ஆனால், நிலையாக இருப்பது உயிர்.
என்னை சாமி என்று பல பேர் கூப்பிட்டாலும்,
உயிர் சென்றுவிட்டால்.., என்னவென்று அழைப்பார்கள்?
சவத்தை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்என்று தான் கேட்பார்கள். 

எனக்குள் இருக்கும் உயிரைத் தான் மதிக்கின்றார்கள். எல்லோரும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள்,

ஆகவே, நீங்கள் இப்பொழுது உடலில் இருக்கும் உயிரை மதித்து நடந்து பாருங்கள், அந்த ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பாருங்கள், இந்த உடலின் தன்மை தூசியாகும்.

3. உடலை மதிக்க வேண்டும், ஆனால் பற்று வைக்கக் கூடாது
ஆனால், இந்த உடலுக்குள் நின்றுதான் மெய்ஞானியின் உணர்வை வளர்க்க முடியும். இதில் வளர்த்துத்தான் உயிருடன் ஒன்றச் செய்யமுடியும்.
உடலை மதிக்கவேண்டும்,
ஆனால், உடல் மீது பற்று வைக்கக்கூடாது.

உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்னைக் கேவலமாகப் பேசிவிட்டானே, இரு, உன்னைப் பார்க்கின்றேன் என்று சொன்னால் போதும், உடலுக்கு முக்கியத்துவம் வந்துவிடுகின்றது.

அவனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றீர்கள், அவர்கள் சொன்ன வழியில் சென்று, இந்த சரீரத்தைக் காக்கும் திறன் இழந்துவிடுகின்றீர்கள்.

இதிலிருந்து விடுபட, அந்த மெய்ஞானிகளின் அருளைப் பெற தியானித்து, தீய வினைகளை நீக்கி, மெய் ஒளி பெறும் தகுதி நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன். 

நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்,
தியானிக்கின்றேன்,
வேண்டுகின்றேன்,
பிரார்த்திக்கின்றேன்.

உங்களை அறியாது சேர்ந்த இருள் நிலையைப் போக்கிடுவீர்.
அருள் ஞானியின் அருள் ஒளியைப் பெற்றிடுவீர்,
ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையினைப் பெற்றிடுவீர்,
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திடுவீர், 
உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாகிடுவீர்,
என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற்றிடுவீர்.

பூமியின் நஞ்சினை நீக்கும் ஆற்றல் இன்று உங்களுக்குத்தான் உண்டு

ன்றைய பூமியின் தன்மையில் நஞ்சினை அகற்றும் ஆற்றல் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. நஞ்சினை நீக்கிடும் ஆற்றல் நீங்கள் பெறவேண்டும் என்று யாம் உபதேசிக்கின்றோம்.

ஆக, கீதையிலே சொன்ன மாதிரி, நீ எதை நினைக்கின்றாயோ, அதுவாகின்றாய். நீங்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்; உங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்; மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் விளைய வேண்டும் என்ற உணர்வின் நோக்கம் கொண்டு நான் உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.

இதைக் கேட்டுணர்ந்த நீங்கள் அனைவரும் இதைப் பின்பற்றினால், 
பிறர் வாழவேண்டும் என்ற உணர்வு,
உங்களுக்குள் வாழும் சக்தியாக வளர்ந்து,
ங்களுக்குள் தீமையை விளைவிக்கும் நிலைகளை அது ஒடுக்குகின்றது.

அப்பொழுது, மெய் உணர்வைக் காணும் நிலைகளில் உங்கள் பேச்சும், மூச்சும் வெளிப்பட்டு, இன்று விஞ்ஞான உலகால் ஏற்பபடுத்தப்பட்ட நஞ்சினை வென்றிடும் உணர்வலைகளாகப் படர்கின்றது.

பூமியில் படர்ந்துள்ள நஞ்சினை அகற்றும் இத்தகைய ஆற்றல் உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அந்த அருள் ஞானியின் உணர்வை உங்கள் உடலுக்குள் செலுத்தி, இந்த உணர்வலைகள் மூச்சலைகளாக வெளிப்பட வேண்டும்.

விஞ்ஞஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட கடும் நஞ்சினை வெல்ல, ஒவ்வொரு மனிதனும் இந்த சக்தி பெறவேண்டும்.
அந்த அருள் ஞானியின் சக்தியை நீங்கள் பெற்றால் ஒழிய
இந்த நாட்டில் வரும் தீய விளைவுகளில் இருந்து
மனிதன் தப்பிப்பதே மிகக்கடினம்.

நம் நினைவின் ஆற்றலை விண்ணை  நோக்கி ஏகி, அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் பதிவு செய்துகொண்டு, நாம் இடும் மூச்சலைகளால் சிறிதேனும் சிறிதளவு காக்கமுடியும். 

எதைக் காத்திட்டாலும், இந்த உடலே ஒளியின் சரீரமாக வேண்டும். இது நமக்கு திண்ணமான நிலை.

ஒளி சரீரம் நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்,
என் குரு இட்ட கட்டளைப்படி
நான் உங்களை தியானிக்கின்றேன். எமது அருளாசிகள்.

"நாளை நடப்பது" யார் அறிவார்? யார் பார்ப்பது? என்றிருப்பவர்களை யாரும் தடைப்படுத்த முடியாது

1. நம் பூமி முதுமை அடைந்துவிட்டது
அடுத்துவரும் உலகத்தில் மனிதனுக்கு எப்படி வயது ஆகுகின்றதோ, பூமியும் முதுமை அடைந்துவிட்டது. முதுமை அடைந்ததினால், பூமி செயலற்றதாக மாறப்போகின்றது,

காரணம், இன்று அணு விசையால் உருவாக்கப்பட்ட உணர்வின் அலைகள் காந்தப்புலனால் கவரப்பட்டு, பூமியின் நடுமையம் சென்று அடையும் தருணம் வந்துவிட்டது.

வெப்பக்கனல் உள்ளே அதிக கொதிகலனாகப்படும் பொழுது பூமியில் நிலநடுக்கமும், மற்ற பாகங்கள் உள் செல்வதும்,
கடல் பெருகுவதும்,
கடல் வளருவதும்,
இதைப்போல் நிலங்கள் குறையும் தன்மை கூடியசீக்கிரம் வரப்போகின்றது.

னென்றால், பூமியில் பனிப்பாறைகள் அனைத்தும் உருகி, கடல்கள் பெருகி, நீர் நிலைகள் அதிகமாகிவிட்டால் சூரியனைக் கடந்து வெகு தூரம் சென்றுவிடும்.

வெகு தூரம் சென்றுவிட்டால், அன்று வியாழன் கோள் எப்படிப் பனிப்பாறைகளாக உறைந்ததோ, இதைப் போல துரித நிலைகள் கொண்டு நாமெல்லாம் பல ஆயிரம் அடிக்குள் பனிப்பாறைக்குள் உறைந்து, அதற்குள் நமது உயிரணு சிக்கிவிடும்.

எப்படி ஒரு ஐஸ் பெட்டியை இன்று நாம் வைத்திருக்கின்றோமோ, அதைப் போல அதற்குள் நாம் இருந்து, துடிப்பின் நிலைகள் கொண்டு இந்த மனித உடலில் எத்தனை வேதனைப்பட்டோமோ, உள்ளே சிக்கி அந்த வேதனை அனைத்தையும் நாம் அனுபவிப்போம், மீள முடியாது.

இந்த உயிரணுவுக்குத் தகுந்த வெப்பத் துடிப்பு கொண்டு நாம் சிக்கிக்கொண்டு, வேதனையை அனுபவித்துக்கொண்டே இருப்போம். அவ்வாறு ஆனால்
இந்த பூமியே மீண்டும் அதனின் இயக்கச் சக்தி மாறி,
இதனின்று கடந்து இந்த உயிரணு வெளி ந்தால்,
இன்னொரு பிரபஞ்சம் ஏற்படும் நிலைகளில்,
அதிலே கலந்தால்தான் நாம் செல்ல முடியும்.
2. கார்த்திகை நட்சத்திரம் நம் சூரியக் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றுவிட்டது
னென்றால் இந்த பூமிக்கே, மிகவும் முதன்மை பெற்றது கார்த்திகை நட்சத்திரம். நமது சூரியன் எப்படி மற்ற கோள்களை வளர்த்துக் கொண்டதோ, அதைப் போல கார்த்திகை நட்சத்திரம் தனக்கென்று கோள்களை உருவாக்கிக் கொண்டது,

கார்த்திகை நட்சத்திரம் அது முழுமை பெற்று ஒரு சூரியக் குடும்பமாக மாறிக் கொண்டு உள்ளது. ரேவதி நட்சத்திரமும் இதைப் போல ஆகிக்கொண்டுள்ளது. இதைப் போல ஏனைய இரண்டு, மூன்று நட்சத்திரங்கள் சூரியக் குடும்பமாக மாறிக்கொண்டுள்ளது

இப்படிப் பிரிந்து செல்வதால், நமது சூரியக் குடும்பத்திற்கு விண்ணின் ஆற்றலை மாற்றி, உணர்வினைக் கொடுக்கும் சக்தி அது இழக்கும் தருணம் வந்துவிட்டது. 

ஆகவே, சூரியனே மங்கும் நிலை வருகின்றது. அதற்குள் சிக்கிய நிலைகள், பூமி பிரிந்து செல்கின்றது.
நாம் எப்படி முதுமையாகிப் பிரிந்து செல்கின்றோமோ,
சூரிய குடும்பத்தில் வளர்ந்த நமது பூமியே,
இந்த சூரியக் குடும்பத்தில் இருந்து
பிரிந்து செல்லும் நிலையாகின்றது.

அப்பொழுது தனித்துச் செல்லும் நிலையும், இது வியாழன் கோள் போல ஆகி, மீண்டும் இது நட்சத்திரமாக அடையும் பருவம் வெகு காலம் ஆகும்.

அதற்குள் உயிரணுக்கள் சிக்கிய நிலைகள் கொண்டு, இதிலிருந்து வீசும் வெப்பத்தால் உயிரணுக்கள் அதனுடைய பிரபஞ்சத்திற்குள் சிக்கி, மீண்டும் மனித உணர்வோ, உயிர் இனங்களின் தோற்றங்கள் வருவதற்கோ, பல கோடி ஆண்டுகள் ஆகும்.
3. நாளை நடப்பது யாருக்குத் தெரியும்? என்றிருப்பவர்களை யாரும் தடைப்படுத்த முடியாது
அதுவரை இந்த மனித உடலில் நாம் எத்தனை வேதனைப்பட்டோமோ, அத்தகைய வேதனையை அனுபவித்தே தீரவேண்டும். உங்களுக்கு அது சம்மதமானால்,
நாளை நடப்பதை யார் அறிவார்?
யார் பார்ப்பது? என்ற நிலைகளில்
இன்றைய வாழ்க்கையே எங்களுக்குப் பிரதானம் என்று இருக்கலாம்.
அதை யாரும் தடைப்படுத்த முடியாது.

கார்த்திகை நட்சத்திரம் நமது குடும்பத்தில் இருந்து வெளி செல்கின்றது. இப்பொழுது உங்களுக்குச் சொல்கின்றேன், எலக்ட்ரானிக் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தின் உதவியுடன், பிரபஞ்சத்தை அளவிட்டுச் சொல்லும் டெலஸ்கோப் மூலம் துரித நிலைகள் கொண்டு பார்க்கலாம்,

கார்த்திகை நட்சத்திரத்தைச் சுற்றிக் கோள்கள் விளைகின்றது என்ற நிலையில், பின் நாளில் கண்டுபிடிப்புகள் வரும், விஞ்ஞான அறிவால் வெளிப்படுத்துவார்கள், நீங்கள் பார்க்கலாம்.

மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில், நீங்கள் தெரிந்து உணர வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்லுகின்றேன்

October 27, 2013

நாம் அடைய வேண்டிய எல்லையைப் பற்றி திருமூலர் வெளிப்படுத்திய பாடல்

ஓடிடும் போது ஒருமித்து வாசியை
நாடிடு திக்கை நலமாய் இதைஎண்ணி
கூடிடு மார்க்கத்தில் கோடி காணசித்தர்கள்
ஆடிடு மார்க்கத்தில் அறிந்துகொள் மூலமே
--திருமூலர்
1. ஓடிடும் போது ஒருமித்து வாசியை
நாம் எதை எதையெல்லாம் கண்களால் பார்க்கின்றோமோ, காதால் கேட்கின்றோமோ, அதற்குத் தக்கவாறுதான் நம் நினைவுகளும் எண்ணங்களும் செல்கின்றது.

ஆக, கீழ் நோக்கிய சுவாசமாக, மூக்கின் வழியாகவே நாம் சுவாசிக்கின்றோம். அப்படிப்பட்ட சுவாசமானது பல வகைகளிலும் அலைந்து கொண்டே இருக்கின்றது.

சுவாசத்தை (மனதை) ஒரு நிலைப்படுத்த வேண்டுமென்றால், புருவமத்தியில் வீற்றிருந்து நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் நம் உயிரை,
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று எண்ணி
உயிரான ஈசனிடம் நிலை நிறுத்த வேண்டும்.
எப்பொழுதும் உயிரின் நினைவாகவே, அவனுடன் இணைந்தே நாம் சுவாசித்துப் பழகவேண்டும். பல நூல்களை ஒன்றாகத் திரித்துச் சேர்க்கப்படும் பொழுது எப்படி அது வலுவான கயிறாக மாறுகின்றதோ, அதைப் போன்று நாம் சுவாசிப்பது அனைத்தும் உயிருடன் இணைந்தே இயங்கும்.
2. நாடிடு திக்கை நலமாய் இதைஎண்ணி
பரிணாம வளர்ச்சியில், பல கோடிச் சரீரங்களிலிருந்து, பல வலுவான ஆற்றல்களைச் சேர்த்துச் சேர்த்து, இன்று நம்மை முழு முதல் கடவுளாக மனிதனாக உருவாக்கியது, ஆதிமூலமாகிய நம் உயிர்தான் என்ற பேருண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

பரிணாம வளர்ச்சியில் வளர்ச்சி பெற்று, பூமியில் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன். பூமி துருவத்தின் வழியாகக் கவரும் ஆற்றல்களை, பூமி கவர்வதற்கு முன் அகஸ்தியன் சுவாசித்தான்.

நஞ்சினை வென்றான், உயிருடன் ஒன்றினான்
ஒளியின் சுடராக மாற்றினான்
துருவ நட்சத்திரமாக “என்றும் பதினாறு” என்ற நிலை அடைந்து இன்றும் வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளான்.
அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைச் சுவாசித்த, அதே வட  துருவத்தின் வழியாக நாம் சுவாசிக்கும் பொழுது, விண்ணிலே தோன்றிய நம் உயிர் பத்தாவது நிலையாக "கல்கி" என்று பேரொளியாக அடைய முடியும்.
3. கூடிடு மார்க்கத்தில் கோடி காணசித்தர்கள்
உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றிய, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஒளியான அணுக்களை யார் யாரெல்லாம் நுகரும் சந்தர்ப்பம் பெற்றார்களோ, அவர்கள் அனைவரும்
முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று
சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

சப்தரிஷி மண்டலம் என்பது ஒரு பெரிய உலகம். இன்று நாம் மனித உடலில் எப்படி வாழுகின்றோமோ, அதைப் போன்று, அவர்கள் “ரிஷி, ரிஷிபத்தினி”  என்ற நிலையில் கணவன் மனைவியும் இரு உயிரும் ஒன்றென இணைந்து, ஒளி உடலாக அழியாத நிலையில், இனி ஒரு பிறவியில்லை என்று வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

நாம் அனைவரும் அப்பேர்ப்பட்ட கோடிக்கணக்கான ரிஷிகளுடன் இணைந்து, அவர்கள் வேறல்ல நாம் வேறல்ல என்ற நிலையை எய்துவோம்.
4. ஆடிடு மார்க்கத்தில் அறிந்துகொள் மூலமே
பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தை அடைவதே, நமது இந்த மனித வாழ்வின் எல்லை என்று அறிந்து, அதை நாம் பற்றுடன் பற்றுவோம்.

ஆகவே, அந்த எல்லையை அடையும் விதமாக எத்தகைய துன்பம் வந்தாலும், நாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை உயிர் வழி சுவாசிப்போம். உயிரான ஈசனுக்குச் செய்யும் சேவையாக நாம் செயல்படுத்துவோம்.

நமக்குள் இருக்கும் தீயவினைகள், சாபவினைகள், பாவ வினைகள், பூர்வ ஜென்ம வினைகளை அனைத்தையும் அகற்றுவோம். நம் எண்ணம் சொல் செயல் புனிதம் பெறுவோம். நாம் பார்க்கும் அனைவரும் அந்த மகரிஷிகள் அருள் சக்தி பெறத் தவமிருப்போம். 

October 26, 2013

சுவாச நிலையைப் பற்றி திருமூலர் வெளிப்படுத்திய பாடல்

வாசிவா வென்று வாசியில் ஊடாடி
வாசியை அங்கங்கே வைத்து நீசாதித்தால்
வாசியும் ஈசனும் மருவியே ஒன்றாகும்
வாசியை போல்சித்தி மற்றொன்றும் இல்லையே
-- திருமூலர்
1. வாசிவா வென்று வாசியில் ஊடாடி
கண்ணின் (புறக்கண்) நினைவைப் புருவமத்தியில் வைத்து, அகக்கண்ணான உயிரோடு ஒன்றி, நினைவாற்றலை விண்ணிலே செலுத்தி,  
விண்ணிலிருந்து வரும் பேராற்றலை
உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும்.

அதாவது, விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைக் கவர்ந்து, இழுத்து நாம் சுவாசிக்க வேண்டும். அங்கிருந்து வரும் உணர்வலைகள் உயிரிலே மோதும் பொழுது பேரொளியாக அது மாறுகின்றது.

நம் சுவாசமானது இப்படி பூமி சமைத்ததை ஈர்க்காதபடி, நேரடியாக விண்ணிலிருந்து வருவதைச் சுவாசமாக்க வேண்டும்.
2. வாசியை அங்கங்கே வைத்து நீசாதித்தால்
அப்படி விண்ணிலிருந்து வரும் அருள் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து, நம் உடலில் இருக்கும் அனைத்து அங்கங்களிலும் கண்ணின் நினைவைக் கொண்டு அந்த ஆற்றலை இணையச் செய்யவேண்டும்.

நம் உடலிலுள்ள அங்கங்கள்:
சிறு குடல், பெருகுடல்
கணையங்கள்
கல்லீரல், மண்ணீரல்
நுரையீரல்
சிறுநீரகங்கள்
இதயம்
சிறு மூளை, பெருமூளை
கண்களில் உள்ள கருமணிகள்
நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், விலா எலும்புகள்
குருத்தெலும்பு, எலும்புக்குள் உறைந்துள்ள ஊன்
தசை மண்டலம், தோல் மண்டலம்

மேலும் நம் உடல் அங்கங்கள் அனைத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களிலும், உயிர் வழியாகச் சுவாசித்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டும்.
3. வாசியும் ஈசனும் மருவியே ஒன்றாகும்
நம் உயிர் ஓ என்று ஜீவனாகி, ம் என்று உடலாக மாற்றுகின்றது. அதாவது, ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம்.

உயிர் வழி சுவாசித்த அந்த அருள் சக்தி உயிரால் உருவாக்கப்பட்ட நம் உடலில் உள்ள கோடிக் கணக்கான அணுக்களிலும் சேர்கின்றது. அப்பொழுது, அனைத்து அணுக்களும் உயிரைப் போன்றே ஒளியாக மாறும் சந்தர்ப்பம் வருகின்றது.
நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும்
உயிருடன் ஒன்றுகின்றது.
இது பேரருளாக, பேரொளியாக மாறுகின்றது.
4. வாசியை போல்சித்தி மற்றொன்றும் இல்லையே
இப்படி, உயிர் வழியாக நம் சுவாசநிலை அமைந்து, அண்டத்திலிருக்கும் ஆற்றலை, இந்தப் பிண்டத்திற்குள் சேர்க்கும் பொழுது ஒளியின் சரீரமாகி, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் விண் சென்ற அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து, பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

உயிர் வழி சுவாசம் ஒன்றுதான் மனிதனை தெய்வீக நிலை அடையச் செய்யும். மனிதன் முழுமை அடைய இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

October 25, 2013

மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்தால், அது தீமையை நீக்கும் ELECTRONIC ஆகின்றது

1. கம்ப்யூட்டரைப் போன்று, ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவுசெய்து கொள்ள வேண்டும்
நமது வாழ்கையில், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில், அந்த மெய்ஞானிகள் உணர்த்திய பேருண்மைகளை நமக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 எப்படி ஒரு கம்ப்யூட்டரில் உள்ள உணர்வின் செல்களில் (MEMORY UNITt) பதிவு செய்து, அதை இயந்திரத்தில் இணைத்தபின் அது எதிர்நிலைகளைக் கண்டுணர்ந்து
பெரிய இயந்திரத்தையும்
தன் உணர்வுக்கொப்ப இயக்குகின்றது.

அதாவது, எதனை நாம் ஆணையிடுகின்றோமோ அதனின் உணர்வுக்கொப்ப தீயதை அகற்றுவதும், தன் இனத்தைச் சேர்ப்பதும், எலக்ட்ரானிக் அதனின் நிலைகள் கொண்டு இன்று செயல்படுகின்றது.
இன்று எலக்ட்ரானிக் சோக் (ELECTRONIC CHOKE) வந்துவிட்டது
அதிகமான கரண்ட் வந்தால் அதனை அடக்கி,
விளக்கு பழுதாகாத வண்ணம் (Fuse ஆகாமல்)
சமப்படுத்துகின்றார்கள். இது விஞ்ஞான அறிவு.

இதைப் போல, அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து, “எலக்ட்ரானிக்”.
பிறிதொருவரின் வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்தாலும்,
அதனைக் கழித்துவிட்டு
நம் உணர்வை மாற்றிடாத நிலைகள் அடையும் வண்ணமாக
மெய் உணர்வை ஊட்டினார்கள் ஞானிகள்.
2. கூட்டுத் தியானத்தில் நாம் பெறுகின்ற வலிமை
நாம் ஆலயங்களில் தேர் இழுக்கப்படும் பொழுது பலரும் ஒன்று சேர்ந்து, அந்தக் கடினமான தேரை இழுப்பது போன்று, உபதேசத்தில் கேட்டுணர்ந்த உணர்வு கொண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி தியானிக்கும் பொழுது காற்றுக்குள் மறைந்துள்ள மெய்ஞானிகளின் உணர்வுகளை நாம் வாழும் இடத்தில் படரச் செய்வதுதான் கூட்டு தியானம்.

இதை நுகரும் பொழுது, அது உங்கள் உடலுக்குள் பதிவாவது மட்டுமல்ல. தியானத்தில் அமர்ந்த அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று, அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்ற உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, உயர்ந்த எண்ணத்தின் வலுவாக அது கூடி, உங்களுக்குள் சக்தி வாய்ந்த உணர்வலையாகப் பதிவு செய்வதே கூட்டுத் தியானம்.

இதிலே பதிவானபின், அனைவரின் எண்ணத்தின் வலு கொண்டு ஒவ்வொருவரும் நாம் ஈர்க்கும் திறன் பெற்று, படரச்செய்த உணர்வுகள் நமக்குள் அது இணக்கும் சக்தியாக மாறியபின்,
அடுத்து நாம் தனித்துத் தியானித்தாலும்
அருள் சக்திகளை நமக்குள் பெறச்செய்கின்றது.