ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2021

வியாழன் பனிப் பாறையாக ஆனது போல்... பூமியும் பனிப் பாறையாக மாறலாம்...!

 

நம் நாட்டிலே தோன்றிய மகரிஷிகள் இந்த உலகம் உய்ய எத்தனையோ நிலைகளில் உயர்ந்த சக்திகளை இங்கே படரச் செய்துள்ளனர்.

“தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...” என்பது போல தென்னாட்டிலே தோன்றிய அந்த அகஸ்தியன் தான் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பூமியைச் சமப்படுத்தினான்.

பூமியின் துருவத்திலே பனிப் பாறைகள் உறைய உறைய... எடை கூடிக் குடை சாயும் நிலைகளுக்குச் சென்றதை
1.துருவத்தில் உறையும் பனிகளை... வெப்பத்தின் தணல் கொண்டு உருகச் செய்து
2.பூமியிலே நடு மையமாக மனிதனாக உயிர் வாழச் செய்யும் நிலையாக அவன் செயல்படுத்தினான்.

இல்லை என்றால் வியாழன் கோள் பனிப் பாறைகளாக எவ்வாறு பெரிதாக ஆகி இருக்கின்றதோ அதைப் போல சிறிதளவு ஒரு நொடி மாறினாலும் நமது பூமியும் பெரும் பனிப்பாறையாக மாறி உயிரினங்கள் வாழ முடியாத நிலை ஆகிவிடும்.

அப்படியே வாழ்ந்தாலும் பனிப் பிரதேசங்களில் மீன் இனங்களும் மற்ற உயிரினங்களும் வாழ்வது போல
1.மனித இனமே அல்லாத மற்ற உயிரினங்களாக மாற்றிவிடும்.
2.பனிக்குள் வாழும் உயிரினமாகத்தான் நாம் திரிய முடியும்.

நம் பிரபஞ்சத்தில் உள்ள வியாழன் கோளும் நம்மைப்போல மனிதர்களாக வாழ்ந்த இடம்தான்.

அங்கே விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியாகி அதற்குண்டான செயற்கைக் கருவிகளை அதிகமாகச் செயல்படுத்தப்பட்டு அதன் வழிகளிலேயே பெரும் பனிப்பாறையாக மாறிச் சுழற்சியின் வேகம் கூடி இன்று ஓடிக் கொண்டுள்ளது.

இப்போது எப்படிப் பனிப்பிரதேசங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவோ அதே போல
1.மனிதனாக இருப்பவரும் வளர்ச்சியற்ற நிலைகள் கொண்டு
2.உயிரினங்களாக இன்றும் வியாழனில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் சில உணர்வலைகள் இன்றும் இந்த பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டு வருகின்றது. பிரபஞ்சத்தில் மிதந்து வந்தாலும் அவ்வாறு வந்த அந்த நிலைதான் நம் பூமியில் உயிர் அணுக்களாக தோன்றி உயிரணுவின் நிலையிலிருந்து மனிதனாக உருப்பெரும் நிலைகளை நாமும் பெற்றிருக்கின்றோம்.

1.இந்தப் பூமியில் மனித இனம் இன்று வந்ததல்ல
2.வியாழன் கோளின் நிலைகளில் இருந்து நாம் வந்திருக்கின்றோம்.
3.இதை அறிந்து கொள்வதற்குத் தான் நம் பிரபஞ்சத்திலேயே சூரியன் இயக்கச் சக்தியாக இருந்தாலும்
4.வியாழன் கோளைக் “குருவாக...” வைத்தது.
5.உயிரணுவின் ஆற்றலை உயிர் அணுவாக உடலின் தன்மை பெறச் செய்தும் வியாழனின் நிலை தான்.

இங்கே நம் பூமியில் இன்று இருக்கும் விஞ்ஞான அறிவைக் காட்டிலும் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அன்று வியாழன் கோளில் விஞ்ஞான அறிவின் வளர்ச்சியால் தான் மனித இனங்கள் முழுமையாக அழிந்தது.

இங்கே இப்போது அணு ஆயுதங்களைச் செய்து வைத்திருப்பது போல பல கோடி ஆண்டுகளுக்கு முன் வியாழன் கோளில் வாழ்ந்த மனிதர்கள் அதைச் செய்து தான் இருள் சூழச் செய்து விட்டனர். பனிப் பாறைகளாகிக் பெரும் கோளாக மாறி விட்டது.

அங்கிருந்து தான் உயிரினங்கள் கடக்கப்பட்டு இந்தப் பூமியில் மனிதனாக உருவாகி இருக்கின்றோம். அன்று வியாழனில் மனிதர்கள் உருவானாலும் உயிரணுவின் தோற்றங்கள் இதே சூரியனின் இயக்க நிலைகள் கொண்டு வளர்ந்ததனால் மாற்றம் இல்லாதபடி இதே பிரபஞ்சத்தில் பூமியில் இன்று மனிதனாக வாழ்கின்றோம்.

அது போக... நம் பிரபஞ்சத்தில் உள்ள கார்த்திகை நட்சத்திரம் போன்ற ஏனைய பல நட்சத்திரங்கள் தனித்தன்மை கொண்டு தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக இயக்கும் நிலைகளில் சிறுகச் சிறுக (சுமார் 25 வருடங்களுக்குள்) பிரிந்து விட்டது.

பிரிந்ததனால்...
1.இந்தப் பிரபஞ்சத்தில் உருவான மனிதர்களுக்குக் கிடைக்கும் அறிவின் சிந்தனைக்குரிய நிலைகளும்
2.அனைத்தும் தெரிந்து கொள்ளும் ஆற்றலும் குறைந்து கொண்டே இருக்கின்றது.

அதனின் விளைவால் விஞ்ஞான அறிவால் இருள் சூழ்ந்த நிலைகளாக மாறி
1.நம்மையே அழித்துக் கொள்ளும் நிலையும்
2.நமக்கு நாமே தண்டனை கொடுக்கும் உணர்வாக இன்றைய விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்டது.

குடிபோதையில் உள்ளவர்களை என்ன தான் அவர்களை அதை நிறுத்தச் சொன்னாலும் அது தான் அவருக்கு ரசனையாக இருக்கும்... கேட்க மாட்டார்கள்.

உடலின் இன்பத்திற்காக மதுவை அருந்துபவர்களும் மற்ற சிந்தனையற்றுத் தன் நிலைகளில் அதையே தான் செய்து கொண்டிருப்பார்கள்.

அதே போல் விஞ்ஞான அறிவிலே சிக்கிய நாமும் இந்த உடலின் சுகத்திற்காக மற்றதை மறந்து தன் செயலை மறக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.

போதைப் பொருளை உபயோகிப்பது போலவே நாமும் விஞ்ஞான உணர்விலே சிக்குண்டு மனித உணர்வின் செயலைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கின்றோம்.

மனித இனமே பூண்டோடு அழிந்திடும் நிலை வளர்ந்து கொண்டிருக்கின்றது...!

முக்காலத்தையும் அறிய முடியுமா...! - ஈஸ்வரபட்டர்

 

இஜ்ஜீவ காந்த சரீரத்தில்… எண்ணத்தின் அலைத் தொடர்பு அனைத்தும்… நினைவின் வளர் காலம் (நினைவு தெரியும்) முதற் கொண்டு பூமியில் பிறந்த சரீரத்தின் ஆத்ம அலையுடன் பதிவு பெற்று விடுகின்றது.

மீண்டும் மீண்டும் எண்ணும் எண்ணம் இச் சரீர ஜீவகாந்த அலையுடன் மோதப் பெற்று… இச்சரீரத்தை இயக்கும் ஆத்ம அலையில் பதிவு நிலை பெற்று…
1.ஒலியின் எதிர் தொடர்புடன் எண்ணத்தின் செயல் வாழ்க்கை
2.இப்பூமி ஈர்ப்பு பிடியில் நாம் வாழுகின்றோம்.

அதாவது மின்காந்தத்தால் ஒலி அலையை நாடாக்களில் பதிவு செய்து மீண்டும் அதே மின் காந்தத்தைப் பாய்ச்சி பதிவான ஒலியை கேட்கின்றோம் அல்லவா…!

அதைப் போன்று… ஜீவ காந்த சரீரத்தின் உணர்வுடன் கூடிய எண்ண அலைகள்… ஆத்மாவில் பதிவானதை… மீண்டும் அவ்வலைத்தொடர் இச்சுவாசமுடன் ஜீவகாந்த அலையுடன் மோதியவுடன்… அதன் பிடிப்பிலேயே மீண்டும் மீண்டும் பூமியின் பிடியிலேயே சிக்க வேண்டியதிருக்கும்.

இப்பூமிப் பிடிப்பிலிருந்து விடுபடத் தன் ஆத்ம வலுவைப் பெற வேண்டுமென்றால் இஜ்ஜீவ காந்த சரீர உணர்வின் எண்ணத்தில் ஏற்கனவே பதிவு பெற்ற தொடர்பு நிலைகளை மாற்றி அமைக்க வேண்டும்.

வலுவான ஒலி சக்திகளை… காந்த மின் அலைத் தொடர்பைப் பெற்று… உணர்வின் எண்ணத்தில் இப்பூமி வளரத் தொடர்பு கொண்ட நம் சூரிய குடும்ப ஒளி சக்திகளுடன் எண்ணத்தைச் செலுத்தி பல சமைப்பின் முலாமைப் பெற வேண்டும்.

அதனின் வளர்ச்சியில்… பகுத்தறியும் விழி ஒளியைப் பாய்ச்சி எதிர்படும் பொருளறிந்து வழி செல்லும் வாழ்க்கைதனை… “ஞான ஒளி பாய்ச்சி” எதனையும் அறியும் தொடர்பைப் பெற முடியும்.

இஜ்ஜீவ காந்த சரீரத்தில் இன்று செயல்படும் ஆத்ம வலுவின் வளர்ச்சித் தொடருக்கு மேலும் வலுக்கூட்டும் “சப்தரிஷிகளின் தொடர்பில்” உணர்வின் எண்ணத்தைச் செலுத்தி…
1.ஜீவகாந்த சரீரத்தின் எண்ண அலைக்கு
2.வலுவான ஒளி காந்தத்தை மேன்மேலும் நாம் எடுக்கும்போது
3.ஞானத்தின் ஒளி நிலையைப் பெற முடியும்.

ஞானத்தின் ஒளித் தன்மையை இவ்வாத்மாவின் பதிவு நிலைப்படுத்தப்பட்ட வீரிய சக்தியினால்… “முக்காலமும் அறியும் மூல மந்திரத்தை” ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

ஆதிசக்தியின் சக்தியாக… ஜீவசக்தியின் சமைப்பு நிலைக்கு நம் சூரியக் குடும்பமல்லாத
1.வேறு பல சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த ரிஷி சக்திகளின் சமைப்பு நிலை கொண்டு
2.அதற்குகந்த வலுக்களை… ஒளியின் வண்ணச் சமைப்புகளால் சுவை கூட்டும் ரிஷித் தொடர்பில்தான்
3.கரு உரு வார்ப்பக வழித் தொடர்கள் வளருகின்றது.

அத்தகைய வழித் தொடர் பெற்று உயர்ந்த நிலையில் வளரும் மனித உயிராத்மாக்களுக்கு மீண்டும் உரம் சேர்க்கும் வளர்ப்பிற்கு வளர் சக்தியின் ஒளி சக்தியான “ரிஷி சக்தியின் ஒளித் தொடர்பால் தான்” உயர்வு நிலை கிட்டும்.

December 30, 2021

மகரிஷிகளுடன் நாம் என்றுமே இணைந்த நிலையில் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்

 

பால் எவ்வளவு சுவையாக இருந்தாலும் அதிலே காரம் விழுந்து விட்டால் அதனின் சுவையை அது எப்படி மாற்றுகின்றதோ அதைப் போல் தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் பண்புள்ளவர்களாக இருந்தாலும் பிறருடைய தீமையின் நிலைகளை நுகரப்படும் போது இயக்கங்கள் மாறி அந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி விடுகிறது...

காரணம்…
1.மனிதர்களான நாம் எவரும் எவரிடமிருந்து பிரிந்து இல்லை.
2.அனைவருடன் சேர்ந்து தான் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஒருவரின் தீமையான செயல்களைப் பார்த்தாலும் கேட்டுணர்ந்தாலும் அவருக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லை என்று. எண்ணலாம்.

ஆனால் அவருக்குள் விளைய வைத்த தீமையின் தன்மை கொண்டு “தீயவன்…” என்று அவரை எண்ணினாலும் அதனுடைய தொடர்பு கொண்டு அந்தத் தீய உணர்வுகள் நமக்குள் விளைந்து
1.அவனை எண்ணும் போதெல்லாம் நம்மைத் தீய வழிகளுக்கு இட்டுச் செல்லும்
2.தீய சொல்களைச் சொல்ல வைத்துவிடும்
3.தீயதையே நமக்குள் விளையச் செய்து தீயவனாக நம்மையும் மாற்றும் நிலை வந்து விடுகிறது.

ஆகவே எதிலேயும் நாம் தொடர்பு கொண்டவர்கள் தான். யாரிடமிருந்தும் பிரிந்து சென்றவர்கள் இல்லை.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி… மனிதனாகப் படைத்த நம் உயிரை நாம் மதித்து நடக்க வேண்டும்.

விநாயகர் தத்துவத்தை உணர்த்திச் சென்ற அகஸ்தியனின் வழிப்படி ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்க்கையில் எந்தக் குறைகள் வந்தாலும் அதை நிவர்த்திக்க வேண்டும்.

நாம் செய்யும் தொழில் நஷ்டமானாலும் வீட்டிலுள்ளோர் அனைவரும் சேர்ந்து தியானமிருந்து மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பின்… எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாழ்வில் நலம் பெற வேண்டும் என்று இந்த எண்ணங்களை எடுத்து அந்த அருள் உணர்வுகளை வளர்க்க வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகள் பெருகும். வியாபாரம் சீராகும். நமக்குள் வரும் துயரங்களையும் நோய்களையும் மாற்ற முடியும். நம் சொல்லின் நிலைகள் பிறரின் இருளைப் போக்கிடும் சக்தியாக வரும். மெய் உணர்வின் தன்மையை நாம் பெற முடியும்.

அத்தகைய நிலைகள் நீங்கள் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் இதைச் சொல்கிறேன்.

1.நான் (ஞானகுரு) படிப்பறிவில்லாதவன் தான்.
2.மூடனாக இருந்த என்னைக் குருநாதர் பக்குவப்படுத்தி அறியும் ஆற்றலைக் கொடுத்தார்
3.அவர் கொடுத்ததை எல்லாம் இப்போது உங்களுக்கு உப்தேசமாகவும் கொடுக்க முடிகிறது.
4.அந்த மேய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து சொல்லாகவும் செயல்படுத்த முடிகிறது.
5.என் வாக்கினைக் கேட்போர் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கவும் முடிகிறது.

அவர்கள் இருள்கள் எப்படிப் போகிறதோ அதைப் போல் இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்து அதைப் பின்பற்றுவோர் நீங்களும் வளர முடியும். உங்கள் சொல்லினைக் கேட்போருக்கும் அது இருளைப் போக்கும் சக்தியாக வளரும்.

இன்றைய உலகில் நாம் அறியாதபடியே
1.இருள் சூழும் தன்மைகள் உருவாகி நஞ்சுகள் பரவி நல்லவனையும் தீயவனாக ஆக்கி
2.ஒன்றும் அறியாத பாமர மக்களையும் அழித்திடும் உணர்வுகளாக வெளிப்பட்டு
3.உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எத்தனையோ வெறித் தன்மையான நிலைகளும் செயல்பட்டு
4.உலகிலே படர்ந்து கொண்டிருக்கும் அத்தகைய தீய விளைவுகளை
5.நீங்கள் விடும் மூச்சலைகள் இதை மாற்றி அனைவரையும் நல்வழிப்படுத்தும் சக்தியாகப் படரும்.

உலகைக் காத்திடும் அரும் பெரும் சக்தியாக நாம் ஒவ்வொருவரும் வளர வேண்டும்.

இமயமலையில் சப்தரிஷிகளின் செயல்பாடுகள் - ஈஸ்வரபட்டர்

 

போகர் தன் உயிராத்மாவின் வளர் சக்திக்காக… முருகா என்ற ஆறுகுண. அமில வழி… ஜீவித நீர் நிலை வளர்க்கும் மூல வித்தினை… இப்பூமியின் ஜீவ வளர்ப்பில்… புவனம் வளர்க்கும் புவனேஸ்வரித் தாய் சக்தியை வணங்கி… முருக குண வித்தை வளர்க்க… நவபாஷண அமிலத்தை முருக குணச் சமைப்பாக்கிச் சிலை செய்து வைத்துள்ளார்.

1.எச்சிலையை நவபாஷணத்தால் முருகனின் உருவத்தைச் செய்தாரோ
2.அதன் தன்மையில் அமில ஜீவ வளர்ப்பின் வித்து இப்பூமியில் வளரும்
3.ஜீவ முருக அறுகுண வண்ண அமிலத்தின் வலுவைக் கூட்டும் முருக குண சக்தி நிலை
4.போகரினால் இப்பூமியில் இன்று செயல்படுகின்றது.

இப்பூமியின் இமயமலையில் பல ரிஷிகளின் செயல் நடக்கின்றது…!

“ரிஷிகளின் ஜெபமிடம் அதுதான்…!” என்ற நிலை மட்டும்தான் மனித உணர்வில் தெரிகின்றதோ தவிர உண்மையில் இமயமலையின் உச்சியில் நடுத் தாழ்வான ஓர் இடத்தில் உச்சிக்கு அப்பால் இந்திய கண்டத்தின் பின்புறத்தில் “சப்தரிஷியின் ஜீவித மனித ஆத்மா வளரும் வித்தின் உணர்வு சமைப்பு தாவர வலுவிற்கு… அங்கு குளம்…” ஒன்று உண்டு.

அந்நீர் கொப்பளிக்கும் தன்மையில் செயல்பட்டுக் கொண்டே உள்ளது.

1.போகர் எப்படி நவபாஷணத்தால் முருகன் சிலையைச் செய்வித்தாரோ…
2.அதைப் போன்று ஜீவ நீரில் வடித்தெடுத்த அமில சேர்க்கையால் திடமாக்கப்பட்ட
3.சிவலிங்கம் ஒன்றை அங்கு ரிஷிகள் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர்.

அதற்குச் சுற்றிலும் அந்நீர் நிலை கொதி நிலை பெற்றுச் செயல்பட்டுக் கொண்டுள்ளது. அதன் தொடர்பில் பல மாற்று நிலைகள் இப்பூமிக்கு மனித உணர்வின் செயல் வலுவைச் சப்தரிஷிகளினால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளது.

ஆக சப்தரிஷிகள் செயல்படும் ஞான விருட்சக மலை தான் இமய மலை…!

1.இயற்கையின் மாற்றத்தில் மனித நிலை வாழ வலுக் கூட்டும் ரிஷி சக்தியுடன் நம் எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி
2.இஜ்ஜீவ காந்த சரீரத்தில் ஒளிக் காந்தத்தின் மின் அலையை செலுத்தச் செலுத்த
3.விழி பார்த்துப் படமெடுக்கும் வாழ்க்கையை ஞான விழி கொண்டு ஜோதி நிலைக்கு மனித நிலை உயர முடியும்.

December 29, 2021

ஞானகுருவின் புத்தாண்டு வாழ்த்தும் அருளாசியும்

 

ஞானிகள் கண்டுணர்ந்த இயற்கையின் உண்மை நிலைகளை யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது “சாமி என்னமோ சொல்கிறார்...” என்று விட்டு விடாதீர்கள்.

காரணம் உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்யவே இதைச் சொல்கிறேன். பதிவானதை மீண்டும் நீங்கள் நினைவு கூறும் பொழுது நிச்சயம் அது உங்களுக்குள் இயங்கத் தொடங்கும்.

ஒருவன் கடுமையாத் திட்டி விட்டால் நீங்கள் அதைக் கூர்மையாகப் பதிவு செய்து கொள்கிறீர்கள்.
1.அதைத் திரும்பத் திரும்ப எண்ணும் பொழுது பன்மடங்கு ஆத்திரமூட்டும் செயலாகவும்
2.அறிவை இழக்கச் செய்யும் செயலாகவும் உங்களுக்குள் கொடூரத் தன்மைகளையும் விளைவிக்கச் செய்கிறது.

அப்படி விளைந்து விட்டால் சகோதர உணர்வுடன் நீங்கள் இருந்தாலும் இந்தச் சொல்லின் தன்மை கடும் சொல்லாக வெளிப்படும். நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வலைகள் உடல் நோயாக மாறும் நிலையும் வந்து விடுகிறது.

ஒருவன் செய்த கொடூரத் தன்மையின் நிலைகள் இங்கே ஊடுருவி நல்ல பண்பை இழக்கச் செய்து தீமை செய்யும் உணர்வின் தன்மையாக நம்மை இயக்கச் செய்து விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்றுப் பழக வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தாண்டு
1.மகிழ்ச்சி பெறும் நன்னாளாக அது வளர வேண்டும்
2.மகிழ்ச்சி பெறும் செய்தியாக நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்
3.மகிழ்ச்சி பெறும் செயலாக அனைவரும் பெற வேண்டும்
4.நீங்கள் விடும் மூச்சலகள் அனைவரையும் மகிழ்ந்து வாழச் செய்யும் சக்தியாகப் படர வேண்டும்
5.உங்கள் வாழ்க்கையில் அறியாது வந்த இருள்கள் அனைத்தும் நீங்கிட வேண்டும்
6.அந்த மெய்ப்பொருள் காணும் மெய் வழிகள்… மெய் ஒளிகள் நீங்கள் பெற வேண்டும்
7.குருநாதர் காட்டிய வழியில் அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும். என்று பிரார்த்திக்கின்றேன்.

எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும்... மக்களுக்குள் அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்... என்ற நிலையில் ஞானிகளும் மகரிஷிகளும் எதை ஆசைப்பட்டார்களோ அந்த நிலையை ஒவ்வொருவரும் நீங்கள் பெற வேண்டும்.

உதாரணமாக மாங்கனியாக இருக்கும் பொழுது அது சுவையாகவும் பிஞ்சாக இருக்கும் பொழுது துவர்ப்பாகவும் காயாக இருக்கும்போது புளிப்பாகவும் இருக்கிறது.

மனிதர்களாக இருக்கும் நாம் காயின் தன்மையில் இருக்கின்றோம். அந்த ஞானிகளோ கனியின் தன்மை அடைந்து உயிருடன் ஒன்றிய ஒளியாக முழுமை பெற்றவர்கள்.

அவர்கள் உணர்வை நாம் பெற்று நம் ஒவ்வொரு உணர்வையும் இனிமை கொண்டதாக மாற்றி அந்தக் கனியின் தன்மை அடைந்த அந்த ஞானிகள் சென்ற வழியில் நாம் அனைவரும் நிச்சயம் செல்ல முடியும். உங்களை நம்பிப் பாருங்கள்.

எப்படித்தான் இன்று இருந்தாலும் நாம் எண்ணியதற்குத் தகுந்த மாதிரி அடுத்த உடலாக மாற்றி விடுகிறது நம் உயிர். அதே போல்
1.நாம் அருள் உனர்வுகளை எடுத்து வளர்த்துக் கொண்டால்
2.இந்த உடலை ஒளிச் சரீரமாக மாற்றுவதும் இதே உயிர் தான்.

ஆகவே...
1.ஒளியாக மாற்றி விண் சென்ற அந்த மெய் ஞானிகளின் அருளப் பெறுவோம்.
2.நமக்குள் அறியாது வந்த இருளைப் போக்குவோம்
3.நம் சொல்லும் செயலும் கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கச் செய்து பொருள் காணும் சக்தியைப் பெறச் செய்வோம்.
4.நம் பேச்சும் மூச்சும் அனைவரையும் மகிழ்ச்சி பெறச் செய்யட்டும்
5.உலகம் முழுவதும் சகோதர உணர்வுகளை வளர்க்கச் செய்வோம்.

மனிதனுக்கு மனிதன் ஒருவருக்கொருவர் துன்பத்தை நீக்கும் நிலையாக உண்மையை உணரச் செய்யும் சக்தியாகப் பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்... தவமிருப்போம்.

உலகில் சுழன்று கொண்டிருக்கும் அசுர உணர்வுகளிலிருந்து அனைவரும் மீண்டு மெய் ஒளிகள் மெய் உணர்வின் தன்மை இங்கே படர வேண்டும் என்ற நமது குருவின் ஆசைகள் உங்களுக்குள் பதிவாகி அது ஓங்கி வளரட்டும்.

1.குருவின் ஆற்றல் மிக்க அந்தச் சக்தி உங்களுக்குள் விளைந்து
2.நீங்கள் இடக்கூடிய மூச்சலைகள் சூரியனுடைய காந்த சக்தியால் கவரப்பட்டு
3.உலகில் வரும் இருளைப் போக்கி மெய்ப் பொருள் காணும் சக்தியாக இந்தப் புத்தாண்டில் மலரட்டும்.

மெய்... உண்மை... சத்தியம்...! - ஈஸ்வரபட்டர்

தீக்குச்சியில் பூசப்பட்ட மருந்தும் பெட்டியில் பூசப்பட்ட மருந்தும் உராயும் பொழுது தீக்குச்சி எரிந்து அம்மருந்தின் வேகம் உள்ளவரை ஒளி தருகின்றது.

இவ்வுராய்வைப் போன்றே திரவக எரி பொருளும் அதன் தொடர்பு கொண்ட உராய்வுக் கல்களைச் செலுத்தும் பொழுது தன் ஒளியினைத் தருகின்றது.

ஒன்று போல் உள்ள இரண்டு கற்களை உரசும் பொழுதும் அதிலிருந்து ஒளி பிறக்கின்றது.

இப்படி உலக உணர்வில் மனித ஞானத்தின் சமைப்புத் தன்மை கொண்டு செயற்கை ஞானத்தில் வழிப்படும் உண்மைகளும்… இயற்கையின் உணர்வில் பிறக்கப்பட்ட உண்மையும்… சூரியனின் சமைப்பு தன்மையால் சுழன்று ஓடிக் கொண்டேயுள்ளது.

சூரியனின் ஈர்ப்புப் பிடியில் உந்தித் தள்ளும் காற்றலையில் மோதப் பெறும் அமில ஒளி நிலையில் ஜீவன் கொண்ட “உயிரணு…”
1.சூரியனின் பிடிப்பலையை விட்டுக் காற்று மண்டல நிலையற்ற பால் வெளி மண்டலத்தில் மிதந்து வரும் அவ்வுயிரணு
2.பூமியின் ஈர்ப்புப் பிடியில் தான் எச்சுவைக் கொண்டு உயிர் பெற்றதோ
3.அதன் தொடர்பில் ஜீவ வளர்ப்பு நிலை மாற மாற
4.ஒன்றின் சமைப்பிற்கு முலாம் பெற்று… ஜீவ வளர்ச்சியின் உஷ்ண நிலையில் ஓர் தொடர்பு வளர்ச்சி நிலை மாறி
5.மீண்டும் பிறிதொரு வளர்ச்சிக்கு வரும் வழித் தொடர் மாற
6.அவ்வுயிரணுவின் வலுத்தன்மையைக் கூட்டிக் கூட்டி… உயிரணுவின் பரிமாணம் கனம் பெற்று
7.எல்லாவற்றையும் அறியக்கூடிய செயல்… சொல்… ஞானம் பெறும்… சரீர நிலைக்கு (மனித உடல்)
8.அவ்வுயிர் காந்தம் ஜீவ காந்த உணர்வு நிலை செயல் கொள்ளப் பல சமைப்பில் புல்லாகிப் பூண்டாகி என்ற வழி நிலைக்கொப்ப
9.பல கோடி அமிலத் தன்மையில்… பல மோதலில்… பிம்ப நிலை மாற்று நிலை மாறி… மாறி…
10.சமைப்பின் அமில வீரிய சக்தியான உயிர் ஜீவாத்மா ஒளி பெற்ற சரீர இயக்கத்தில்
11.பல மோதலில் உருப்பெற்ற உணர்வின் எண்ணச் சரீரத்தில்
12.மெய் ஞான சக்தி பெறுவதுதான் மனிதனுக்கு அடுத்த நிலை.
13.மெய் என்றால் உண்மை என்ற பொருள் தான்… உலக இயல்பின் செயல்படும் உண்மையாக உள்ளது.
13.இன்று நடப்பவை சொல்லப்படும் சொல் சத்தியம் என்றால் அதுவே நாளை கனவாகி விடுகின்றது.

இவ்வுடலில் உயிர் இயக்கமும்… வாழும் வாழ்க்கையும்… “சத்தியம்” என்றால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின் எது சத்தியமாகின்றது…?

சொல்லப்படும் சொல்லிலேயோ வாழும் வாழ்க்கையிலேயோ சுழலும் ஓட்டத்தில் சத்தியம் இல்லை. சத்தியத்தின் உண்மை நிலையை ஒவ்வொருவரும் உணரல் வேண்டும்.

1.சூரியனின் ஒளி பூமியில் படும் போதுதான் பூமிக்கு வெளிச்சம்.
2.பூமியின் மேல் சூரியனின் ஈர்ப்பு வட்டம் இல்லா இடத்தில் அங்கு சத்தியம் செயல்படுவதில்லை.
3.சூரியனின் ஒளி நிஜம் இல்லை என்று இரவில் பூமி சொல்ல முடியுமா…?

ஒளிரும் மங்காத் தன்மையான உயிர் ஜீவ ஜோதி நிலை தான் “சத்திய நிலை…!” சத்தியத்தின் ஒளியை ஒளிரச் செய்யும் சக்தியாகத் தான் மனித உணர்வின் எண்ணத்தின் ஞானத்தைச் செயல்படுத்த வேண்டும்.

உலகப் பிடிப்பில் நீ சிக்காதே…
உலகத்தையே நீ வெறுக்காதே…
உலகத்தையே நீ உனக்கு சொந்தமாக்கு…!

உலகம் உனக்குச் சொந்தமல்ல…
உலகுக்காக நீ வாழவில்லை…
உலகத்தில் தான் நீ வாழுகின்றாய்…!

உலகம் உறங்குவதில்லை…
உலகத்தில் நீ உறங்காதே…
உலக சுகத்தை நம்பாதே…!

உலகத் தேரில் பவனி வா…!
உலக ஞானம் நீ பெற்றால்…
உலகையே நீ படைக்கலாம்…!

December 28, 2021

ஹைட்ரஜனிலிருந்து வரும் கன நீரும்… மகரிஷிகளின் ஆற்றல்களும்

 

விநாயகர் தத்துவத்தை ஞானிகள் மக்களுக்குக் காட்டியிருந்தாலும் அவர்களை நாம் “முன்னே பின்னே பார்த்ததில்லை…”

1.அந்த மெய் ஞானி நல்லதைச் செய்து “தன்னையறிந்தான்…” என்ற நினைவை ஊட்டி
2.சிறுகச் சிறுக அவர்கள் பெற்ற சக்தியை நமக்குள் வலுவை ஏற்றுவதற்கு
3.காலையில் எழுந்தவுடன் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும் என்று
4.வானை நோக்கி எண்ணி ஒவ்வொருவரும் எடுப்பதற்காக விநாயகரை வைத்தார்கள்.

அப்போது… தன் வாழ்க்கையில் வந்த இருளைப் போக்கி மெய் ஒளியைப் பெற்று பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று தன் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிச் சென்ற “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா…” என்று எண்ண வேண்டும்.

எந்த மகா ஞானி உண்மையை அறிந்தானோ…
1.விண்ணிலே ஒளியின் சுடராக இருக்கும் அவனை நினைவு கொள்ளும் பொழுது
2.சூரியனின் காந்த சக்தி அந்த அலைகளைக் கவர்ந்து கொண்டு வரும் அவனின் உணர்வை நாம் சுவாசித்து
3.நமக்குள் அந்த உணர்வின் வலுவை ஏற்ற வேண்டும்.

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுகுண்டுகள் செய்து அதை ஹைட்ரஜனைக் (கன நீர் – DUTERIUM) கொண்டு அடக்கி வைக்கின்றனர்.

நீருக்குள் இருக்கக்கூடிய சக்தியை… அதாவது ஒரு அணுவிற்குள் இருக்கும் சக்தியை அணுவின் தன்மை பிளந்தாலும்
1.மற்றதுக்குத் தீமைகளை விளைவிக்காத ஹைட்ரஜன் என்ற கன நீரை
2.அதாவது நீரை வடித்து உப்பின் சக்தியை அதிகமாக்கி வெடிக்க விடாது அதனுடைய ஆற்றலைக் கலந்து கொள்வது.
3.ஏனென்றால் கன நீரின் அழுத்தத்தின் தன்மையால் வெடிக்கும் நிலையைச் செயலற்றதாக மாற்றிவிடும்.

உப்பைப் போட்டால் எப்படி ஊறுகின்றதோ அதைப் போல் ஹைட்ரஜன் கதிரியக்கத்திற்குள் இருக்கும் “பசப்பை நீக்கி” தன் உணர்வின் தன்மை கொண்டு அதை அடக்கிவிடும்.

விஞ்ஞானி அணுப் பிளப்பை இவ்வாறு கட்டுப்படுத்துவது போல் மெய் ஞானி என்பவன் விண்ணிலிருந்து வரும் எத்தகைய நஞ்சினையும் (கதிரியக்கச் சக்திகளை) அடக்கிடும் கன நீராக… ஹைட்ரஜன் ஆனான்.

அந்த மெய் ஞானியின் உணர்வின் ஆற்றலை நாம் விண்ணிலிருந்து எடுத்து நம் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் அடக்கச் செய்ய வேண்டும் என்பது தான் விநாயகர் தத்துவம்.

இன்றைய வாழ்க்கையில் நல்லதை எண்ணுகின்றோம்… பிறர்பால் இரக்கமும் படுகிறோம். ஆனால் அவர்கள் உடலில் விளைந்த துன்பமும் துயரமும் குறைகளும் நமக்குள் வந்து அந்த உணர்வின் சக்தியாக நமக்குள் மாறித் தீய வினைகளாக விளைந்து விடுகிறது.

அதை நீக்க வேண்டுமல்லவா...!

ஆகவே விநாயகரைப் பார்த்ததும் நாம் விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ஈஸ்வரா என்று உடலுக்குள் அந்த ஆற்றலைச் செலுத்த வேண்டும்.

கருவில் இருக்கும் குழந்தைக்குக் கண்ணன் உபதேசித்தான் என்று காவியங்கள் உண்டு. அதாவது நாம் சுவாசித்தது ஒவ்வொன்றுமே உடலுக்குள் கருவாகி அணுவாக விளைகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
1.அந்த நினைவலைகளைச் சிறுகச் சிறுகக் கூட்டிப் பின்
2.மொத்தமாக உடல் முழுவதும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற நினைவைக் கூட்டி
3.உடலில் உருவாகிக் கொண்டிருக்கும் அணுக்களுக்குள் எல்லாம்
4.கண்ணின் நினைவு கொண்டு அந்த ஞானியின் நினைவலைகளை இங்கே உபதேசிக்க வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியின் வீரியத் தன்மை கொண்டு அது நமக்குள் ஓங்கி வளரும். தீமையிலிருந்து “நம்மைக் காக்கும் சக்தியாக வளரும்…”

பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கும் வழி - ஈஸ்வரபட்டர்

 

மனித எண்ண ஓட்டங்கள்… உணர்வின் எண்ணம் கொண்டும் எண்ணத்தின் உணர்வு கொண்டும் பலவாக ஓடிக் கொண்டே உள்ளது. உறக்கத் தன்மையிலும் மயக்க நிலையிலும் கூட ஓடிக் கொண்டுள்ளது.

உணர்வின் அவயங்கள் சோர்வுபட்டு உறங்கும் தருவாயில்
1.எண்ணத்தின் அலை உறக்க நிலையில் சரீரமுடன் சுவாசத்தில் மோதப் பெறும் காற்றலையின் அலைத் தன்மை
2.சுவாசம் எடுத்துக் கவன நரம்பில் மோதும் பொழுது
3.காற்றலையில் ஏற்கனவே பதிவு பெற்ற அலைத் தொடர்பின் தொடர் தன்மை
4.உடல் கூறின் அமில சமைப்பு வலுத் தன்மையின் ஈர்ப்புடன் மோதும் பொழுது உணர்வுடன் ஒத்த தன்மையும் மோதுகின்றது.

இந்த உடலிலிருந்து வெளிக் கக்கும் அமிலத் தொடர்பின் ஈர்ப்புக்கு வரும்… “காற்றலையின் சந்திப்பும்” இச்சுவாசத்தில் மோதும் பொழுது… உறக்க நிலையில் காணப்படும் கனவுகள்… வாழ்க்கைத் தொடரில் விழிப்புடன் உள்ள செயலுக்கொத்த தொடர் போன்றே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே காணுகின்றோம்.

இப்படிக் காணக்கூடிய கனவின் செயலும்… இஜ்ஜீவ காந்தச் சரீரத் தொடருடன் எடுக்கப்படும் அலையினால் “வலுவான சில கனவுகள்” தம் எண்ணத்தை உருவாக்கும் ஆத்மாவிலும் பதிவாகி விடுகின்றது.

நினைவின் உணர்வுடன் உள்ள பொழுது… மீண்டும் கனவில் நடந்த அந்த நிலை நம் நினைவிற்கு வருகின்றது.

ஆத்மாவின் “பதிவு” தான் எண்ணத்தின் ஓட்டம்…!

ஆத்ம இயக்கம் இச்சரீர வாழ்க்கையில் வலுக் கொள்ளும் தன்மையும்… சரீரமுடன் கூடிய ஜீவ காந்த மின் அலையின் வலுக் கொண்டுதான்… ஆத்மாவை மீண்டும் வலுவாக்க முடியும்.

முந்தைய பாடங்களில் சொன்னபடி உயிர் ஆத்மா உடல் பிம்ப சரீரத்தின் தொடரை உணர்த்தியுள்ள முறையில் “ஆத்மாவின் செயலை” உணர்ந்திருப்பீர்.

இச்சரீரக் கூறில் சேர்க்கப்பட்ட சுவையின் அமிலத்தின் வார்ப்பு ஜீவ சரீரச் செயலுக்கொப்ப…
1.ஆத்மாவின் செயல் எண்ண அலையின் மோதலைக் கொண்டு
2.எண்ணத்தின் உணர்வும்… உணர்வின் எண்ணமும்… செயல் கொள்கின்றன.
3.பலவாக ஓடும் எண்ணத்தின் ஆத்மாவின் பதிவில் உள் மனம் வெளி மனம் என்று
4.இப்படி ஒரே சமயத்தில் பல நினைவு கொண்ட செயலில் எண்ண ஓட்டம் செயல் கொள்கின்றது.

பூமி சமைப்பில் சரீரத் தொடர் வாழ்க்கையில் சாதாரணத் தொடர்பு கொண்டு நாம் பெற்ற ஒலித் தன்மைக்குகந்த எண்ணத்தைச் செயல்படுத்தி வாழும் போது என்ன நடக்கின்றது…?

நாம் பரிணாம வளர்ச்சியில் நாம் பெற்று வளர்ந்து வந்த வளர்ச்சிக்கு உரம் செலுத்தாமல்… பெற்ற வலுவைச் சரீர எண்ண ஓட்ட சமுதாய எண்ணப் பிடியுடன் செயல்படுத்தும் உணர்வினால்…
1.மீண்டும் மீண்டும் இப்பிடிப்பலையில் சிக்கி
2.வலுப் பெற்ற ஆத்ம ஒளியை மங்கவிடும் இழி நிலை தான் ஏற்படும்.

ஆகவே வாழ்க்கையில் உணர்வின் எண்ணத்தில் மோதப்படும் குண நிலையில் நாம் சிக்கக் கூடாது. மேலும் எண்ணத்தில் செயல்படும் பல நிலை கொண்ட நினைவு எண்ண ஓட்டத்திலும் சிக்கிடக் கூடாது.

சந்தர்ப்பத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஈர்க்கப்பட்டு சஞ்சலப்படும் காலங்களில் எல்லாம்
1.நம் உணர்வின் எண்ணத்தை வலுவாக்கும் முறையான
2.உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு மின் காந்த ஒளி சக்தியின் உரத்தை
3.அந்த மாமகரிஷிகளின் ஒளி காந்த சக்தியை நுகர்ந்து.. சுவாசித்து.. உடலுக்குள் செலுத்தும் பொழுது
4.பலவாக ஓடும் எண்ணத்தை ஒன்றாக்கலாம்.

ஒளி நிலை பெற்ற அந்த ஒளி சக்தியை… இச்சரீர உணர்வில் எடுக்கும் பொழுது நம் எண்ணத்தின் வலுக் கூடும். ஆத்மாவின் வலுவையும் வலுவாக்க முடியும். மெய் ஞானத்தில் தொடர் வளர்ச்சி காண முடியும்…!

December 27, 2021

அடுத்தவரின் கஷ்டத்தைப் பரிவுடன் கேட்போர் அனைவரும் வேதனையைத் தான் விலைக்கு வாங்குகிறார்கள்

 

மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் அடுத்தவருக்கு எல்லா உதவிகளையும் செய்வோம். உதவி செய்த பின்... கடைசியில்

1.இந்தப் பாவிப் பயலுக்கு இப்படியெல்லாம் உதவி செய்தேனே…
2.எனக்கு அவன் ஒன்றும் செய்யவில்லையே…! என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.

வேதனைப்பட்டவர்களுக்கு எல்லாம் முதலில் உதவி செய்திருப்போம். கஷ்டங்களை எல்லாம் பரிவுடன் கேட்டு அவர்களிடம் இருக்கும் வேதனைகளை எல்லாம் விலைக்கு வாங்கி விடுவோம்.

வேதனையாகி நோயான பின் என்ன சொல்வோம்…?

நான் இங்கே இவ்வளவு உதவி செய்தேனே... அங்கே அவர்களுக்கு அந்த உதவி செய்தேனே…! எனக்கு இப்படி வந்துவிட்டதே…! என்ற இந்தத் துன்பப்படும் உணர்வுதான் மீண்டும் மீண்டும் வரும்.

காரணம்… உதவி செய்த பின் நாம் நினைத்தவுடன் மற்றவர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்போம். ஆனால் அவர்கள் ஏதாவது ஜோலியாகச் செல்வார்கள்.

அன்றைக்கு நான் எப்படி எல்லாம் உதவி செய்தேன்...! இன்று நான் கூப்பிடுகிறேன்… அவர்கள் வரவில்லையே…! என்று அவர்கள் மீதே எண்ணமே இருக்கும்.

1.உதவி செய்தேன் வரவில்லையே… உதவி செய்தேன் வரவில்லையே… என்று
2.பிறரின் உணர்வைத் தான் எண்ணி வேதனையை இங்கே வளர்த்துக் கொண்டிருப்போம்.

அவர்கள் உணர்வு பூராம் இந்த உடலில் சேர்த்து நோயாகி இறந்தபின் எங்கே செல்வோம்...?

நான் அவனுக்கு உதவி தான் செய்தேன். ஆனால் அவனோ எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தான் பாவி…! என்று எண்ணி வேதனையாகி நோயாக மாறி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு யாருக்கு உதவி செய்தோமோ அந்த உடலுக்குள்ளே தான் போவோம்.

இங்கே வேதனைப்பட்டு எரிச்சல் கொண்டு வெளியேறிய உயிரான்மா அந்த உடலுக்குள் போய் மனிதனாகவும் பிறப்பதில்லை.
1.அங்கே சென்று வேதனையை மீண்டும் உருவாக்கி நோயாக மாற்றி
2.அவனை வீழ்த்தத்தான் செய்யும்... குழந்தையாகப் பிறப்பதில்லை.

அந்த உடலிலும் வேதனையை அதிகமாக வளர்த்துக் கொண்டபின் உயிரான்மாவில் விஷம் அதிகமாகி விடுகின்றது.

பாலில் விஷத்தைக் கொஞ்சம் போட்டால் குடித்தால் மயக்கம் வரும். அதிகமான விஷத்தைப் போட்டு விட்டால் சுத்தமாகவே நினைவை இழக்கச் செய்துவிடும்

அது போல் கடைசியில் மனிதனுடைய நினைவுகள் எல்லாம் இழந்த பிற்பாடு எந்த அளவிற்கு விஷத்தை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அதற்குத்தக்க விஷம் கொண்ட உயிரினமாகப் பிறக்கச் செய்யும் நம் உயிர்.

புழுவிலிருந்து மிருகமாக வரும் வரையிலும் அவைகளின் உடலில் விஷம் அதிகமாக இருக்கும். பூனை விஷமான உயிரினத்தை அடித்துச் சாப்பிடுகிறது. அது போல் மற்ற உயிரினங்களும் விஷத்தைத் தாராளமாக உட்கொள்கிறது. அந்த உடலுக்குள் ஒன்றும் செய்வதில்லை.

ஆனால் சாதாரண ஒரு பல்லியின் எச்சம் நம் மீது பட்டாலே உடலில் கொப்புளம் ஆகிவிடும். விஷம் பட்டவுடனே நம் உடலில் இத்தனை நிலையும் ஏற்படுகிறது.

நாம் விஷத்தை நீக்கும் உடலாகப் பெற்றிருந்தாலும் விஷமான உணர்வு நமக்குள் கலந்து விட்டால் நம்மைச் செயலற்றதாக ஆக்கி விடுகிறது.

ஆனால் மற்ற உயிரினங்கள் விஷத்தைத் தனக்கு உணவாக ஏற்றுக் கொண்டால் உடலிலே அது வலுவின் தன்மையாகக் கொண்டு வருகின்றது. அந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை

புழுவிலிருந்து மற்ற எல்லா உயிரினங்களுக்கும் விஷம் உண்டு. தேளுக்கு ஒரு விஷம் பாம்புக்கு ஒரு விஷம் கட்டுவிரியனுக்கு ஒரு விஷம் புலிக்கு ஒரு விஷம் பூனைக்கு ஒரு விஷம் நாய்க்கு ஒரு விஷம் இப்படி எல்லாவற்றிலும் விஷத்தின் வலிமை உண்டு.

ஆனால் மனிதன் எடுத்துக் கொண்ட குணம் அடிக்கடி யாரிடமாவது சள்... சள்... சள்... என்று பேசும் நிலைகள் வந்து விட்டால்
1.“என்னை இப்படிச் செய்து கொண்டே இருக்கின்றான்…” என்று சள்..சள்…சள்… என்று சொல்லச் சொல்ல
2.யாரைக் கண்டாலும் வெறுத்துப் பேசச் செய்யும்.

இப்படிப் பேசி வெறுக்கும் நிலைகள் வளர்ந்தால் அந்த நஞ்சின் தன்மை உடலிலே விளைந்த பின் உடலை விட்டுச் சென்றபின் எங்கே செல்வோம்...?

1.நாயிடம் இருக்கும் விஷமும் இந்த உயிராத்மாவில் வளர்த்துக் கொண்டே விஷமும் ஒன்றாகி
2.உயிர் நம்மை அடுத்து நாயாகப் பிறக்க வைத்துவிடும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள். நாம் நினைக்கின்றோம் ஒன்றுமே செய்யவில்லை என்று…!

ஆனால் உயிரின் வேலை… நாம் சுவாசித்து எடுத்ததை எல்லாம் உடலாக உருவாக்கி உடலில் விளைந்த சத்தை உயிராத்மாவாக மாற்றி அதிலே எது வலுவோ அதற்குத் தக்க அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்தந்த உடலாக மாற்றிவிடும்.

மனிதனாக இன்று இருக்கும் நாம் அடுத்து எங்கே செல்ல வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்…!

உயிராத்மாவின் பரிமாணத்தைப் பெருக்க வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

அண்டத்தின் தன்மையை நாம் மனிதர்கள் அறிய முடியும். ஆனால் அண்ட கோளங்கள் நம்மை அறியாது.

உணர்வின் எண்ணத்தைக் கொண்டு மனிதனின் பகுத்தறிவு உணரும் பக்குவத்தில்…
1.ஆதிசக்தியின் படைப்பான உயிர் காந்தத்தில் வளர்க்கப்பட்ட
2.ஆத்ம சரீர உயிர் அணுக்களின் வலுவைக் கொண்டுதான்…
3.சரீர ஆத்ம உயிரின் வலுவின் பரிமாணத்தை
4.மங்காச் செயல் நிலைக்குச் செயல் கொள்ள முடியும்

அதாவது எண்ணத்தின் உணர்வைச் சமம் கொண்டு நாமெடுக்கும் சுவாச உணர்வின் ஜெப அலையில் சேர்க்கப்படும் மகரிஷிகளின் மின் காந்த அலையின் தொடர்பினால் “அது சாத்தியமாகும்…”

தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது அங்கங்கள் உருப்பெறும் காலத்தில் அதற்குகந்த உஷ்ண அலையின் இயக்க உருவக அமைப்பாய் நுரையீரலும் இதயமும் சதையும் மயிர்க்கால்களும் நகமும் பல்லும் உருவாக ஊன் தன்மையின் அலை சக்தியில் ஆவியாகி எலும்பின் வளர்ச்சியைக் கொண்டு உருப்பெற்று அங்கத்தின் கூட்டு இயக்கங்களாய் உயிர் அணுக்களின் வளர்ச்சி பெற்று பிறப்பு நிலை பெற்றோம் அல்லவா…!

அதைப் போன்று… சரீர இயக்கத்தில் மனித உணர்வின் எண்ண வளர்ச்சியில்… ஆத்ம உயிர் இயக்கத்தின் வலு நிலை கூடக் கூட… அங்கங்களின் உயிர் அணுக்கள் வீரியத் தன்மை பரிமாணம் பெறும்.

1.உடலின் பசிக்கு உணவும் உணர்வின் உந்தலுக்குகந்த செயலும் கொள்ளும் தன்மை தான் மனிதச் சரீர இயக்கம் உள்ளது.
2.பல கோடிச் சரீரங்களில் இந்த உயிராத்மா பெற்ற வலுத் தொடரை
3.சரீர வாழ்க்கைத் தொடர்பு காலங்களில் சேர்க்கப்படும் சலிப்பு சஞ்சலத் தொடர்புடன் சரீர வாழ்க்கை முடிவுற்று
4.உயிராத்மாவின் ஒளியைச் சரீர இயக்கமுடன் முடிவுற்று மங்கச் செய்யாமல்
5.ஆதியிலே எந்த ஒலி கொண்டு ஒளி பெற்று ஆத்ம உயிரின் உயிர் அணுக்கள் வளர்ந்து…
6.ஒலி… ஒளி… சுவை… உணர்வு… மணம்… குணம்… ஆகியவற்றை இச்சரீரம் பெற்றதோ
7.அத்தன்மையில் வளர்ச்சியின் வலுத் தொடரை மனித வாழ்க்கையில்
8.அடுத்த நிலைக்கு உணர்வின் எண்ணத்தை ஜெபம் கொண்டு வலுவாக்கினால்
9.மனிதத் தன்மையின் சித்துத் தன்மையைச் செயலில் ஒவ்வொருவரும் காண முடியும்.

சாதாரண வாழ்க்கை நிலையில் கிடைக்கும் ஞான வளர்ச்சி… ஆரோக்கிய நிலை… அங்கங்களின் செயல் தன்மை… இவற்றின் நிலையைக் காட்டிலும்
1.ஜெப சக்தியின் உயிர் அணுவின் வீரிய வளர்ச்சியின் செயலைக் கொண்டு – “ஒளி பாய்ச்சி”
2.நினைத்ததை மனிதன் செயலாக்கக் கூடிய வலு வீரியத் தன்மை செயல் கொள்கின்றது.

ஆங்காங்கு உள்ள சிற்றாறுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரும் கடலாகச் செயல்படுகிறது. அதைப் போன்று நம் செயலின் தன்மையில் வேகத்தைக் கூட்டும் பொழுது “துரிதத் தன்மை” ஒவ்வொன்றிலும் ஏற்படுகிரது.

ஆக… இச்சரீர இயக்கத்தின் உயிர் அணுக்களை வீரியப்படுத்த வேண்டும் என்றால்
1.ஒலி நாதத்தைக் கொண்டு ஒளி பாய்ச்சி
2.எண்ணத்தின் கூர்மையால் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் வீரியப்படுத்தி
3.“உயிரின் பரிமாணத்தின் வளர்ச்சி கொள்ள…” எண்ணத்தால் எடுக்கும் தியானத்தைக் கொண்டு
4.மங்காத ஒளித் தன்மையைப் பெற முடியும்.

December 26, 2021

“எங்கே சென்றாலும்” அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருளாற்றலை எளிதில் பெறலாம்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் “வான இயல் புவிஇயல் உயிரியல்” அனைத்தையும் அறிந்தவன்.

அகஸ்தியன் தனக்குள் பேரண்ட இயக்க உணர்வின் தன்மையை எப்படிக் கற்றான்…? இந்த உணர்வின் ஈர்ப்புத் தன்மை அவன் உடலிலே எப்படி வந்தது…? என்ற நிலையை எல்லோரும் அறிய முடியும்.

1.நட்சத்திரங்களின் இயக்கங்களையும் கோள்களின் இயக்கங்களையும் தன்னில் அறிந்தவன்
2.வான இயல் தத்துவம் புவிஇயலின் நிலைகளாக எவ்வாறு மாறுகின்றது…? என்பதையும் அறிந்து கொண்டான்.
3.விண்ணுலக ஆற்றல் அது புவியியலுக்குள் வந்து அது கலக்கப்படும் பொழுது
4.“தாவர இனங்களாக…” புவியியலாக எப்படி மாறுகின்றது…? என்பதையும் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

இவ்வாறு அவன் தனக்குள் அறிந்த “உணர்வின் எண்ண அலைகளை” இன்று நீங்களும் பார்க்கலாம்… உணர முடியும்.

ஏனென்றால் இதெல்லாம் ஆரம்பக் காலங்களில் அவருக்குள் விளைந்த உணர்வின் தன்மையை அது வெளியில் படர்ந்திருப்பதை நாம் நுகர முடியும்.

இன்று நாம் ரேடியோக்களிலும் டி.விகளிலும் நாம் எப்படி ஒலி ஒளியைக் காணுகின்றோம்…?

காந்த ஈர்ப்பு கொண்ட நாடாக்களில் இயந்திரத்தின் மூலம் ஒலி ஒளியாக அது பதிவு செய்து அதற்குண்டான சாதனங்களை வைத்து ஒலி அலைகளாக அனுப்பப்படும் பொழுது சூரியனின் காந்தப் புலன் கவர்ந்து அலைகளாகப் படர்கின்றது.

பின்… நாம் அதே அலைவரிசையில் வைக்கப்படும் பொழுது அதனின் தொடர் கொண்டு இதைக் கவர்ந்து உருவங்களைப் பார்க்கின்றோம். ரேடியோ டி.விக்களில் பாடல்களை நாம் கேட்கின்றோம். பல உருவங்களையும் நாம் காணுகின்றோம்.

இதைப் போலத்தான் அன்று வாழ்ந்த அந்த மெய்ஞானிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இன்றும் இங்கே படர்ந்துள்ளது. சூரியனின் காந்தப் புலனறிவுகள் அதைக் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துள்ளது.

நாம் அதைக் கவரும் தன்மை வரப்படும் பொழுது அந்த அருள் ஞானியின் உணர்வுகளைப் பார்க்கும் திறனும் நமக்குள் வருகின்றது.

1.நமக்குள் “அருள் ஞானத்தின் அடர்த்தியின் வளர்ச்சி…” எவ்வளவு வருகின்றதோ
2.அதன் தொடர் கொண்டு இந்த உணர்வின் வலிமை கொண்டு
3.இந்தக் “காற்றிலே மிதந்திருக்கக்கூடிய… மெய் ஞானிகளின் உணர்வலைகள” நாம் அனைவருமே எளிதில் பெற முடியும்.

நீங்கள் அந்த மெய் ஞானிகளின் ஆற்றல்களைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

ஏனென்றால்... ஒவ்வொரு தன்மையும் நமக்குள் எது பதிவாகின்றதோ அந்தப் பதிவின் தன்மை எண்ணங்கள் வரப்படும் பொழுதுதான் அதை நுகரும் ஆற்றல் வருகின்றது.

“ஒருவன் தீமை செய்தான்” என்று நாம் பதிவு செய்து கொண்டால் நம் உடல் சோர்வடையப்படும் பொழுது அந்தத் தீமை செய்தோனின் நினைவு வருகின்றது.

அப்பொழுது அவனை எண்ணப்படும் பொழுது அந்த உணர்வுகள் வந்து நம்மையறியாமலே நம் உடலுக்குள் நடுக்கமும் பல தீமைகளும் உருவாகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டிட வேண்டும்.

அதைப் போன்றுதான் அகஸ்திய மாமகரிஷியைப் பற்றி உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். உங்களுக்குள் பதிவாக்கிய இந்த நினைவு கொண்டு நீங்கள் எண்ணினால் “உங்கள் நினைவாற்றல்” அந்த அகஸ்தியன் பால் செல்லும்.

அதன் மூலம் அகஸ்தியர் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வுகளையும் விண்ணை நோக்கி எடுத்த அந்த துருவத்தின் ஆற்றலையும் நீங்கள் பெற முடியும்.

அகஸ்தியன் துருவ மகரிஷியான பின் அவரில் விளைந்த உணர்வுகளும் இங்கே பரவியுள்ளதை
1.“இதை வரிசைப்படுத்தி” உங்களில் இதை நுகரும் ஆற்றல் பெறச் செய்வதற்குத்தான் இதைச் சொல்வது.
2.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியர் “அவரின் பாதம் பட்ட இடங்களில்… அவரின் ஆற்றல்கள்… இங்கே பதிவாகியுள்ளது”
3.அவரின் ஈர்ப்பு வட்டத்திற்குள் அவருடைய அருள் உணர்வுகள் இங்கே சுழன்று கொண்டுள்ளது.

“அதைப் பெற வேண்டும்” என்பதற்குத்தான் சிறுகச் சிறுக உங்களின் நினைவாற்றலை அகஸ்தியர் வாழ்ந்த காலங்களுக்குக் கொண்டு செல்கின்றோம்.

அதன் மூலம் அவர் பெற்ற ஆற்றல்மிக்க உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றோம். அந்தப் பதிவின் துணை கொண்டு அவர் ஆற்றலைப் பெறச் செய்கின்றோம்.

இப்பொழுது இதைப் பதிவாக்கும் பொழுது உங்களின் நினைவின் ஆற்றல் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்திகளைப் பருகும் தகுதியைப் பெறுகின்றீர்கள்.

இந்தத் தகுதி பெற்றுவிட்டால்…
1.நீங்கள் “எங்கே சென்றாலும்” அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருளாற்றலை எளிதில் பெறலாம்
2.பெற்று அந்த அகஸ்தியனைப் போன்று உலகைக் காக்கும் மெய் ஞானியாக அருள் மகரிஷியாக
3.விண்ணிலே என்றுமே அழியா ஒளிச் சரீரம் பெற்று ஏகாந்தமாக வாழலாம்.

மண்ணிலே வளரும் வைரமே மங்கா ஒளி நிலை பெறும்போது உயிராத்மாவை ஒளியாக்க முடியாதா…? - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
எண்ணெயை ஊற்றி விளக்கு எரிகின்றது... மெழுகுவர்த்தி எரிகின்றது… தீவட்டி எரிகின்றது… மின்சார ஒளி பல்புகளும் எரிகின்றன. இதைப் போன்றே காட்சியில் ஒவ்வொரு எரிக்கப்பட்டு ஒளி தரும் சாதனமும் தெரிகின்றது.

சூரியனும் நட்சத்திர மண்டலங்களும்… பூமியின் ஒளியும்… வைரக் கற்களின் ஒளித் தன்மையும்… மாணிக்கக் கல்லின் ஒளியும்… சிறு மின் மினிப் பூச்சியின் ஒளியும்… வரிசையாக இன்னும் பலவும் காட்சியில் தெரிகின்றன.

விளக்கம்:
செயற்கையில் எரிக்கப்படும் பொருள் ஒவ்வொன்றுமே நம் தேவையின் பலனுக்குகந்த ஒளித் தன்மை பெற அதற்குகந்த பொருளைச் செலுத்தித் தொடர்ந்து ஒளியைக் காண்கின்றோம்.

பூமியும் சூரியனும் மற்றக் கோளங்கள் யாவையும் தன்னைத் தானே சுழன்று ஓடும் ஓட்டத்தில் மற்றக் கோளங்களின் தொடர்பைக் கொண்டு தன் சுழற்சி ஓட்டத்தில் ஒளியை வெளிப்படுத்துகின்றது. தன்னையும் ஒளியாக்கி பிறவற்றையும் ஒளிப்படுத்துகின்றது.

பூமிக்கு பூமியைக் காட்டிலும் சக்தி வாய்ந்த சூரியனின் வளர்ச்சித் தன்மையின் குழந்தையாய்… சூரிய ஈர்ப்புப் பிடியில் தொடர் கொள்ளும் ஓட்டத்தில் இரவும் பகலும் மாறி மாறி வருகிறது.

சம நிலை வெளிச்சமும் சம நிலை இருளும் கொண்டு பூமி சுழன்று கொண்டே ஓடினாலும் சூரியனின் சந்திப்பு ஏற்படும் இடத்தில் மட்டும் வெளிச்சம் கொண்டு பூமியின் இயக்கம் உள்ளது.

வளர்ச்சியின் வளர் நிலை கொண்ட பூமியைப் போன்றுதான் சூரியக் குடும்பங்களில் ஒவ்வொரு மண்டலமுமே ஒளி நிலை கொள்ளுகின்றது. ஆனால் சூரியனுக்குப் பகல் இரவு என்ற இருள் தன்மை குறைவாக உள்ளது சூரிய பூமியில்.

சூரியனுக்கு அதன் வளர்ப்பு மண்டலங்களின் (மற்ற பிரபஞ்சங்கள்) அமைப்புத் தன்மையினால்… வளர்ந்த பெரிய கோளமாய் வளர்ச்சியுற்றுச் செயலுறும் ஈர்ப்புத் தொடரில்…
1.சூரியனுக்கு மேல் வளர்ந்த சூரியக் குடும்பமில்லா இரண்டு கோளங்களின் எதிர் எதிர் தன்மையினால்
2.மற்றக் கோளங்களுக்கில்லா ஒளித் தன்மையும் உயர் வளர்ப்பு செயல் தன்மையும் நம்மை வளர்த்த சூரியனுக்கு உண்டு.
3.அண்ட சராசரங்களில் சூரியனை ஒத்த பெரிய கோளங்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும்
4.நம் சூரிய வளர்ப்பின் வளர் ஞான எண்ணச் செயல் பகுத்தறியும் சரீர உருநிலை பெற்ற
5.ஜீவத்தன்மை கொண்ட வளர்ச கதியின் சூரிய சக்தியின் நிலை ஒத்தவை சில தான்.

இப்பூமியில் மண் வளத்தில் வளரும் வைரத்தின் ஜொலிப்பும்… மாணிக்கமும்… இன்னும் ஒளி நிலை பெற்ற கற்கள் எத்தனையோ…
1.மண்ணின் சத்தை எடுத்து ஒளியின் மங்காத நிலை பெற்று
2.ஒளி வீசும் அத்தன்மையின் முதிர்வைப் பூமியின் வளர்ப்பே வளர்க்கும் பொழுது
3.எண்ணத்தின் பகுத்தறிவைக் கொண்டு ஒளி பாய்ச்சி ஒளி நிலை கண்டு உண்மை உணரும் வழி நிலையில்
4.எதிர்படும் பிம்பத்தைப் படமாக்கிக் காணும் நாம்
5.எண்ணத்தின் பகுத்தறிவின் ஞானத்தால் ஞான ஒளியின் கூர்மையைக் கொண்டு
6.அனைத்தையும் அறிந்து பார்த்து செயல்படுத்தும் ஒளி ஞானம் கொண்டு
7.ஒளியின் ஒளி வித்தின் வளர் ஞானத்தின் சித்து நிலை பெற்று
8.சிவசக்தி என்ற வளர்ப்பின் வளர்ப்பை என்றுமே மங்கா ஒளி நிலைத் தன்மையால் வளர்ச்சிப்படுத்தலாம்.

December 25, 2021

கல்கியின் கையிலே வாள் எதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது…?

 

விஞ்ஞான உலகில் உருவான நச்சுத் தன்மைகள் மனிதனுடைய சிந்தனைகள் முழுமையாக அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியினை எடுத்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.

1.உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ளப் பத்திரிக்கையையோ டி.வியையோ பார்த்தாலும் போர் முறை தான்
2.வீட்டிலே பிள்ளைகள் சொன்னபடி கேட்கவில்லை என்றால் போர் முறை தான்
3.வியாபாரம் செய்யும் இடத்திலும் கொடுக்கல் வாங்கலில் போர் நடக்கின்றது

இப்படி ஒவ்வொரு இடத்திலும் சங்கடம் சலிப்பு கோபம் ஆத்திரம் என்று நாம் எடுத்துக் கொள்ளும் போது அங்கே போர் நடக்கின்றது. கடைசியில் ஒன்றும் நடக்கவில்லை என்றால் வேதனை வருகிறது.

அந்த வேதனையான உணர்வுகளுக்கும் உடல் இருக்கக்கூடிய நல்ல அணுக்களுக்கும் போர் முறையாகி அம்மா… அப்பா… என்று மேல் வலி.. இடுப்பு வலி.. கை கால் வலி… என்று உடலுக்குள் மகாபாரதப் போர் நடக்கின்றது.

உடலுக்குள் நடக்கும் இத்தகைய போரிலிருந்து மீளும் நிலையில்லாது இருக்கும் இதற்கு மாற்றாக நாம் குருக்ஷேத்திரப் போரை நடத்தியே தீர வேண்டும்.

உயிர் தான் நம்மை மனிதனாக உருவாக்கி இருக்கிறது. உடலுக்குள் இருக்கும் அனைத்திற்கும் உயிரே குருவாகவும் இருக்கின்றது. ஆகவே
1.புருவ மத்தியில் உயிரான குரு இருக்கும் அந்தச் க்ஷேத்திரத்தில் “குருஷேத்திரப் போராக…”
2.அந்தக் குருவின் (உயிரின்) துணை கொண்டு மெய் ஒளியை நமக்குள் சேர்த்து
3.நமக்குள் இருள் சூழும் நிலையிலிருந்து அந்தப் போரிலே வென்று
4.குருவுடன் ஒன்றி... உயிரைப் போன்று ஒளியாக மாற்றி
5.மெய் ஞானிகள் சென்ற அருள் வழிகளில் நாம் செல்ல வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிப்பது.

குருசேத்திரப் போரை நாம் நடத்த வேண்டும். அந்த பழக்கம் வர வேண்டும். உயிர் குருவை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நமக்குள் வந்த வெறுப்பு கோபம் ஆத்திரம் இவைகளை அகற்றிட வேண்டும்.

காரணம்… தான் வாழ வேண்டும் என்ற ஆசையில் இரக்கமற்ற நிலையில் ஒருத்தரை வீழ்த்திடும் அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சுவாசிக்கப்படும் பொழுது அது நல்ல உணர்வை வீழ்த்தும் தன்மையாக வருகிறது.

அது போன்ற நிலையை அகற்ற குருவிடமே வேண்டி அந்த மெய் வழி சென்ற அந்த மெய் ஞானியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா...! என்று அடிக்கடி ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

அருள் ஞானிகளின் உணர்வுகளை நாம் பெறுவோம் என்றால் இந்த குருக்ஷேத்திரப் போரில் விஞ்ஞானத்தை வென்று நாம் அந்த மெய் ஞானிகள் காட்டிய வழியில் விண் செல்ல முடியும்.

நாம் எல்லாம் சாதாரணமான மக்கள் என்று எண்ண வேண்டாம்.

இந்தப் பூமியில் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட நச்சுத் தன்மைகளை வீழ்த்தி மெய் ஞானிகளின் அருள் வித்துக்கள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்ற ஆசையிலே தான் ஆற்றல்மிக்க வித்தை உங்களுக்குள் விளையச் செய்து கொண்டிருக்கின்றேன் (ஞானகுரு).

வயலைப் பண்டுத்தியது போல் உங்கள் மனதைப் பண்படுத்தி மெய் ஞானிகளின் ஆற்றல் மிக்க சக்தியின் வித்தை உங்களுக்குள் விதைக்கச் செய்கின்றேன். அந்த அருள் வித்தை நீங்கள் வளர்க்க வேண்டும்.

யாம் பதிவு செய்த ஞான வித்தை வளர்க்க
1.இடைவிடாது குரு அருளை நீங்கள் பெற்று
2.ஒவ்வொரு நிமிடமும் உயிருடன் ஒன்றி… அவனுடன் இணைந்து…
3.அந்த மகரிஷியின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அவனிடமே வேண்டி
4.உயிர் குருவின் துணை கொண்டு விஞ்ஞான விஷத்தின் தன்மை தனக்குள் இணையாது அதை வீழ்த்தி
5.மெய் வழியில் மெய் ஒளியாகப் பெற்று... சப்தரிஷி மண்டலங்களில் இணைந்து
6.கல்கியின் அவதாரமாகப் பறக்கும் நிலை பெற வேண்டும்.

குதிரையைப் போட்டுக் கையிலே வாளைப் போட்டுக் காட்டி இருப்பார்கள். வாளைப் போட்டுக் காட்டியதன் உட்பொருள் என்ன..?

தானியங்கள் மற்ற காய்கறிகளை எல்லாம் வேக வைத்து அதிலிருந்து வரக் கூடிய காரலை நீக்கிவிட்டுப் பக்குவப்படுத்திச் சமைத்துச் சாப்பிடுகின்றோம்.

சுவையான உணவை உட்கொண்டாலும் நம் உடல் அதில் உள்ள விஷத்தைக் கழிவாக மாற்றிவிட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகிறது. ஆறாவது அறிவின் செயல் இது.

அந்த நஞ்சுகளை அகற்றுவது போன்றுதான் விஞ்ஞான அறிவினால் வரும் விஷத்தன்மை உடலுக்குள் போவதற்கு முன் உயிரான ஈசனிடம் வேண்டி குருக்ஷேத்திரப் போரை நடத்த வேண்டும்.

1.எப்போது இந்த உடலை விட்டுச் சென்றாலும்
2.இன்னொரு ஆத்மா நம்மைக் கவர்ந்து இழுத்து விடாதபடி அதை வீழ்த்தி (அதற்குத் தான் வாள்)
3.மெய் ஒளியின் தன்மையை விண்ணை நோக்கி அங்கே பறந்து செல்ல வேண்டும்.

பேரண்டத்தில் எண்ணிலடங்காத சூரிய குடும்பங்கள் ஒவ்வொன்றும் அது பல பல நச்சுத் தன்மைகளை உமிழ்த்திக் கொண்டிருக்கின்றது. நஞ்சுகள் வந்தாலும் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் அதைத் தன்னுடைய கதிர்வீச்சால் மாய்த்து இங்கே நல்லதாக மாற்றிக் கொடுக்கின்றது.

அதைப்போல
1.நம் உயிராத்மாவின் நிலைகள் அந்த நச்சுத் தன்மைகளை எல்லாம் மாற்றும் ஆற்றலாக
2.தனக்கு தானே அந்த நச்சுத் தன்மையை மாற்றிடும் சக்தியாக
3.உணவுகளைச் சுவைமிக்கதாக ஆக்கி இந்த உடலில் எப்படி மகிழ்ச்சியாகின்றோமோ
4.அதைப் போல ஒளிச் சரீரத்தில் மகிழ்ச்சியாக என்றும் பதினாறாக நீடித்த நாள் வாழ முடியும்

ஆனால் இந்த உடலின் தன்மை “அற்ப நிலை தான்...!”

இருந்தாலும் இந்த உடலில் இருக்கும் போது தான் அந்தத் தகுதியை வளர்க்க முடியும்.

துருவ நட்சத்திரம் சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வலைகளைச் சுவாசித்து… சுவாசித்து…
1.நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு பேரண்டத்தில் விண்ணிலே சுழன்று
3.தீயதை வீழ்த்தி உணர்வின் ஒளிச் சுடராக மாற்றி நாம் பேரானந்த நிலை பெறலாம்.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! - ஈஸ்வரபட்டர்

 

இச்சரீரக் கோளம் ஆணாயும் பெண்ணாயும் சிவசக்தித் தன்மை கொண்டது.

எத்தன்மையின் செயல் உடல் உருவம் பெறவும்… அதிலே சேர்க்கையின் அமில அணுக்கள் ஜீவன் பெற்று… உருவ உருப்பெறும் தன்மையில் எதன் நிலை அதிகமாக உருநிலை கொள்கின்றதோ…. அத்தன்மையின் உருவக ஜெனிப்பு ஆணாகவும்… பெண்ணாகவும்… உரு நிலை கொள்கின்றது.

ஆண் இன அமிலச் சேர்க்கையும்… பெண் இன அமிலச் சேர்க்கையும்…
1.வார்ப்பகத்தில் இரண்டு நிலை கொண்ட மோதல் நிலை கூடும் பொழுதுதான்
2.ஜீவ சக்தி சேர்ந்தவுடன் “உருவ நிலை” ஒன்று உருவாகின்றது.

 

பெண் சரீரத்தில் ஆணின் அமிலத் தன்மையின் செயல் கொண்டுதான் பெண் உருவ உடலும் சுவாசத்தின் அமில மோதலின் ஜீவத்தன்மை பெண்ணாகி… செயல்நிலை கொள்ளும் சிவ சக்தியாய் ஒவ்வொரு உடல் தன்மையும் உருவ நிலை ஜீவிதம் பெறுகின்றது.

ஆண் பெண் அமிலச் சேர்க்கையின் ஜீவ சக்தியில் சேர்க்கப்படும் அமிலக் கூட்டின் விகிதத்தன்மையில் கூடப் பெறும்
1.ஆண் அமில… பெண் அமிலச் சேர்க்கை… விகிதத்தின் வீரியத் தன்மை கொண்டு
2.கூடும் தன்மையில் எது அதிகமாக உள்ளதோ அதற்குகந்த உருவ உடல் தன்மை கொள்கின்றது.

ஆணாயும் பெண்ணாயும் நின்றான் அவன்…! என்று உணர்த்திய உண்மை நிலை தான் இது.

மூலத்தின்… ஆதி மூல ஆதிசக்தியின் படைப்பு அனைத்தும்… மூலம் சிவனாகி… உருவாகும் உருநிலை சக்தியாகி… ஜெனிப்புத் தொடர் உருவாகும் திட உருவத் தொடரில்… ஆவியாகி… அமிலமாகி… தொடர் பெறும் தொடரில்
1.ஆண் பெண் இனச் சேர்க்கை மாற்றச் செயலில்
2.ஆண் பெண் எல்லாமே ஒன்றுதான்...!

இரண்டு தன்மையின் அமிலம்… ஈர்ப்பு வளர்ப்பின் உயிரணு… இவற்றில் ஆண் பெண் சேர்க்கையின் உயிரணு “ஆதி சக்தியின் தெய்வமாகின்றது…” உயிரணு யாவையுமே படைப்பின் படைப்புத் தெய்வம் தான்.

படைப்பின் படைக்கப் பெற்ற தொடர் நிலை… அது அது சேர்க்கப்படும் செயல் தன்மை தான் அவரவர்களுக்குச் சொந்தமாகின்றது.

உயிரின உயிரணுத் தன்மையில் ஆண் பெண் இன “வேறுபாடில்லை…”

சேர்க்கப்படும் அமிலக் கூறின் ஆத்ம பிம்பம் தான் இனத் தன்மையின் (அமிலத் தன்மை) சேர்க்கப்படும் விகித நிலைக்கொப்ப ஆண் பெண் திடச் சரீர உரு நிலை அமைகின்றது.

மனிதனுக்கு மட்டுமல்லாமல் உருவாகும் உருவ நிலை அனைத்திற்குமே… இதன் தொடர்ச்சி செயலில் தான் அண்ட சராசர கோளங்களும் அவற்றின் வளர்ப்பு வளர்ச்சி நிலை ஒவ்வொன்றுமே… இத் தொடரில் வடிவம் பெறுகிறது.

அவ்வாறு வடிவம் பெற்று வளரும் தன்மையில்…
1.ஆதிசக்தியின் பொதுத் தன்மை கொண்ட
2.உயிரணுவின்… வலுத் தன்மையின்… ஒளித் தன்மை மங்காத் தன்மை கொண்டு
3.ஒளியின் ஒளி வீரியம் கொண்ட பிரகாசத்தின் வளர்ச்சியை…
4.மனித எண்ணத்தின் வளர்ச்சியின் பகுத்தறிவால் (தான்) வளர்க்க முடியும்.

December 24, 2021

செடியில் பிஞ்சு காயாகிக் கனி வித்தாவது போல் உயிரைப் போன்று ஒளியின் வித்தாக நாம் ஆக வேண்டும்

 

உதாரணமாக ஒரு மாமரத்தின் வித்தை நிலத்தில் ஊன்றினால் அந்த வித்திற்குள் மறைந்த சத்துக்கள் அனைத்தும் பூமியின் துடிப்பின் நிலைகள் கொண்டு பூமியின் காந்த ஈர்ப்பின் துணை கொண்டு முளைக்கத் தொடங்குகிறது.

அந்த வித்திற்குள் எடுத்துக் கொண்ட காந்த உணர்வுகள் அது மீண்டும் ஜீவன் பெற்று... காற்றிலே சூரியனின் காந்த சக்தியால் தாய் மரத்தின் உணர்வலைகள் கவர்ந்து அலைகளாகச் சுழன்று கொண்டிருப்பதை இழுத்துக் கவர்ந்து செடியாக அது வளரச் செய்கின்றது.

ஆனால் அந்த வித்திற்குள் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் அது ஈர்த்துக் கவரும் பொழுது தழைகளாகச் செடியாக மாறுகின்றது.

1.பின் தன் உணர்வின் சத்தை அது வளர்த்து மரமாகிப் பிஞ்சு ஆகும் பொழுது துவர்க்கின்றது.
2.காயாகும் பொழுது புளிக்கின்றது
3.புளித்தபின் இனிக்கின்றது
4.இனிக்கும் போது வித்தின் சத்து அனைத்தும் அந்த வித்திற்குள் ஒடுங்குகின்றது.
5.அந்தப் பழம் சுவையாக இருக்கின்றது.

ஒரு மாங்கனி எப்படித் தன் உணர்வின் சத்தை அது வித்தாக மாற்றியதோ இதைப்போல ஜீவராசிகளின் “உயிரின் தன்மை என்பது ஒரு வித்து...”

ஆனால் மனிதனாக வளர்ச்சி பெற்று வரும் பொழுது காயிலிருந்து கனியாகும் பருவம். மனித உடலில் இருக்கக்கூடிய அனைத்தும் கனியின் தன்மை அடைந்து விட்டால்
1.இந்த உயிருடன் ஒன்றிய உணர்வின் சத்து
2.மாவித்திற்குள் எப்படி இந்த உணர்வின் தன்மை அடைந்ததோ
3.இதைப்போல நம் உயிர் எப்படி ஒளியானதோ இந்த உணர்வின் தன்மை அனைத்தும் மாற்றி
4.உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாறி விண் செல்ல முடியும்.

ஒளியான பின் விண் செல்வதே முழுமை. அப்படிக் கனியாக்கி விண் சென்றவர்களே மாமகரிஷிகள். அவர்கள் அடைந்த முழுமையை நாமும் அடைய வேண்டும்.

உயிராத்மாவைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டிய முறை - ஈஸ்வரபட்டர்

 

இப்பூமியில் வளர்ப்பு கனிவளத்தில்...
1.தங்கத்தின் நிலை மங்காத ஜொலிப்புடன் எப்படி வளருகின்றது…?
2.வைரத்தின் நிலை ஒளித் தன்மை கொண்டு எப்படிப் பிரகாசிக்கின்றது…?

பூமீயின் மார்பகச் சத்து வளர்ச்சியில் உயர் நிலை பெற்ற உலோகங்கள் பல நிலைக் கற்களாக… பல நிலைகளில் வளர்கின்றன.

அந்தந்த இடங்களில் வளரக்கூடிய வளர்ச்சி நிலை கொண்டு… காலத் தன்மைகளுக்கு மங்காத் தன்மையில் வெளிக் காக்கும் அமிலத்தின் தொடர் பாயப் பெறும் தருவாயில்… பூமியின் வளரும் உலோகங்களிலேயே இத்தன்மை கொண்ட “மங்காத் தன்மையும்… ஒளிக் கற்களும்” வளர்வதைப் போன்று… சில தாவரங்கள் பல காலங்கள் வளர்ந்து முற்றிய நிலை ஏற்பட்ட பிறகு அம்மரத்தின் வலுவில் வைரம் பாய்ந்த வைரத்தின் வளர்ப்பு நிலை வளர்கின்றதல்லவா…!

அம்மரத்தின் வளர்ப்புக் காலத்தின் வலுக்கூடிய வளர்ச்சி முற்றலினால்…
1.மண்டலங்களின் சந்திப்புக் காலங்களில்
2.இம்மரங்களின் ஈர்ப்பிற்கு அவ்வொளித் தன்மை பாய்ந்தவுடன்
3.வைரம் பாய்ந்த மரமாகி வளர ஆரம்பிக்கின்றது.

பூமியின் நிலத் தன்மையில் ஒளித் தன்மையும் தாவரங்கள் பெற்ற ஒளித் தன்மையும்
1.சில நிலைகளில் எப்படிப் பிரகாசிக்கின்றதோ அதைப் போன்றும்
2.மாணிக்கத்தை ஒளியாய் வளர்த்துக் காக்கும் ஜீவ இனப் பாம்பின் ஒளித்தன்மை போன்றும்
3.பூமி தாவர ஜீவராசிகள் இவற்றிக்கில்லா பகுத்தறியும் எண்ணத்தை மனிதன் உணரும் பக்குவத்தால் இவ்வுயிராத்மா ஒளியைத் தங்கத்தின் மங்காத் தன்மை போன்றும்
4.வைரத்தின் ஒளி கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் போன்றும் பிரகாசிக்கச் செய்ய முடியும்…!

எப்படி…?

உணர்வின் எண்ணத்தைச் சமம் கொண்டு ஓ…ம் என்ற நாதத்தின் ஜெப நிலை கொண்டு புருவ மத்தியில் நினைவச் செலுத்தி மகரிஷிகளின் காந்தமின் அலைத் தொடர்பைப் பெற்றிடல் வேண்டும்.

அந்த எண்ண சுவாசத் தொடரினால் உடலிலுள்ள உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே அந்தக் காந்த மின் சக்தியின் வலுவை வளர்க்கவல்ல வளர்ச்சியில் செயலைக் கொண்டு மனிதனுக்கு அடுத்த நிலையான தெய்வ நிலையை உருவாக்க முடியும்.

பாம்பு... தான் எடுத்த அமிலக் கூட்டின் வளர்ப்பு வலுவைக் கொண்டு மாணிக்கத்தின் ஜொலிப்பைப் பெறுவது போன்று… மரத்தின் அமிலக் கூட்டிற்கொப்ப அம்மரம் பெற்ற ஜீவ ஒளித் தன்மையை வலுவைக் கொண்டு அதன் ஈர்ப்பை வைரம் பாய்வது போன்று… பூமியின் சில இடங்களில் சில உயர்ந்த தாதுப் பொருள்கள் அந்தந்த இடங்களில் அமில வளர்ப்பு உயிர் வலுவின் தன்மைக்குகந்த வளர்ப்புகள் வளர்வதைப் போன்று…
1.இஜ்ஜீவ சரீரத்தின் (மனித) உயிராத்ம வலுவின் காந்த சக்தியின் ஆத்ம வலு கூடிய தன்மையில்
2..பூமி சந்திப்பு ஓட்டத்தில் செல்கின்ற மண்டலங்களின் உயிர் ஒளித்தன்மை
3.இச்சரீரத்திற்கு நேராகவே பாயும் தன்மை ஏற்படும்.

சரீர ஜீவனில் அப்படி மோதப் பெறும் ஒளித் தன்மையைக் கொண்டு உயிராத்மாவின் ஒளி வட்டம் பிரகாசிக்கும்… ஜொலிப்புத் தன்மை பெறும்….!

இப்படி ஆனவர்கள் தான் மாமகரிஷிகள்…!

December 23, 2021

உயிரையும் குருவையும் எண்ண வேண்டிய முறை

 

ஒவ்வொரு நிமிடமும் நம் குருவான உயிரை ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று எண்ண வேண்டும். காரணம் நம் குருநாதர் பெயரும் அது தான்.

1.அவர் தனக்குள் அந்த உயிரின் நிலைகள் ஒன்றி
2.அந்த உணர்வின் தன்மை தனக்குள் உருவாக்கி
3.குருவின் நிலைகள் கொண்டு மெய் உணர்வின் சக்தியைப் பெற்றார்.

அதனால் ஈஸ்வரா குருதேவா…!

அவர் பெயர் ஈஸ்வரா என்று வரும் பொழுது எனக்கு (ஞானகுரு) அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்ததனால்
1.ஈஸ்வரா குருதேவா என்று என் உயிரை நான் எண்ணினாலும்
2.என் குருவை நான் எண்ணினாலும் இரண்டும் ஒன்று தான்.

குருவாக இருந்து அந்த உணர்வின் தன்மையைப் படைக்கப்படும் பொழுது அது உடலாக உருவாகின்றது ஆகவே ஈஸ்வரா குருதேவா என்பது உயிரின் இயக்கம் ஈசன் ஆகிறது.

நமக்குள் உருவாக்கிக் (சிருஷ்டி) கொண்டிருக்கும் அந்த ஈசனின் துணை கொண்டு நம் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி விண் செல்வதே குருநாதர் காட்டிய மெய் வழி.

அவர் காட்டிய அருள் வழியில் இந்த உலகத்திற்கு வழிகாட்டிகளாக நாம் வளர வேண்டும். நாம் விடும் மூச்சின் அலைகள் பிறரின் துன்பத்தை மாய்க்கக்கூடிய நிலைகளாகப் படர வேண்டும்.

1.நம் சொல்லின் நிலைகள் பிறரை இன்பத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சியின் உணர்வாக உருவாக்கி
2.மற்றவரை இருள் சூழச் செய்யும் விஷத்தை மாய்த்து
3,ஒளிச் சுடராகப் பெறும் அந்தத் தகுதியைப் பெறச் செய்ய வேண்டும்

எனக்குள் (ஞானகுரு) பல இன்னல்களோ அல்லல்களோ வந்தாலும் அதனின் நிலைகள் எனக்குள் சேராத வண்ணம் மெய் ஒளியின் தன்மையை எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று குருநாதர் உபதேசித்து உணர்த்தினார்.

1.அவர் எனக்கு எப்படி அந்த ஆற்றலைப் பெறும் சந்தர்ப்பமாக அதைப் பதிவு செய்தாரோ
2.அவர் சொன்ன வழியில் அரைத் தொடர்ந்து அந்த உணர்வின் தன்மையை நான் நினைக்கப்படும் பொழுது
3.அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் படைக்கப்படுகிறது.
4.அதிலே விளைந்த உணர்வின் சத்தைத் தான் ஞான வித்தாக உங்களுக்குள் செலுத்துகின்றேன்.

வயலைப் பண்படுத்தி அதற்குள் நல்ல விதைகளை விதைத்த பின் அந்த விதையின் தன்மை காற்றிலிருந்து தன் சக்தியை எடுத்துச் செழித்து வளர்கிறது.

அதைப்போல மெய் ஒளியைப் பெறும் தகுதியை நீங்களும் பெற வேண்டும். குருநாதர் அருளிய அந்த அருள் சக்திகளை நாம் எல்லோரும் பெறுவோமேயானால் விஞ்ஞான அழிவில் இருந்து நாம் மீட்டி மெய் ஞானத்தின் வழிகளில் நாம் செல்ல முடியும்.

எதுவாக இருந்தாலும் இயற்கையின் நிலைகள் இனம் இனத்துடன் தான் சேர்க்கும். மெய் ஞானியின் அருள் ஒளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
1.அந்த இனத்துடன் நாம் இணைந்து… அந்த ஆற்றலைப் பெற்று
2.அவர்கள் எங்கே விண் சென்றார்களோ அங்கே செல்ல முடியும்.

ஆகவே…
1.குருநாதர் அருளிய ஆற்றல்மிக்க சக்தி எனக்கு மட்டும் சொந்தமல்ல. நம் அனைவருக்குமே சொந்தம்.
2.ஒன்றில்லாமல் ஒன்றில்லை. ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் செயல்படுகிறது.

நீர் சிறு துளியாக விழுந்தால் பூமிக்குள் பட்டு ஈர்க்கப்பட்டு விடுகின்றது. ஆனால் பெரும் துளிகள் ஒன்றாகச் சேர்ந்து மழையாகப் பொழியும் பொழுது பெரும் வெள்ளமாகப் பாய்ந்து அனைத்தும் சேர்ந்து வலுக் கொண்டதாகக் குப்பை கூளம் செத்தைகள் அனைத்தையும் அடித்துச் செல்கிறது.

அதைப் போல நாம் அனைவரும் அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வு கொண்டு ஒரே உணர்வாக ஓ...ம் ஈஸ்வரா... என்ற உணர்வின் குரலை எழுப்பப்படும் பொழுது பெரும் வெள்ளமாக அருள் சக்திகள் நமக்கு முன் குவியும்.
1.அதன் மூலம் நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கும் உணர்வுகளையும்
2.இருள் சூழச் செய்யும் உணர்வின் தன்மைகளையும் மாய்த்திட முடியும்.

மெய் ஞானிகளின் அருள் ஒளிகள் பெரும் வெள்ளமாகப் பாயும் போது மெய் வழியில் மெய் ஒளியைப் பெறும் அந்த ஆற்றல் மிகுந்த சக்தியை நாம் அனைவருமே பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நமக்குள் ஆற்றல் மிகுந்த சக்தி உண்டு. இந்த மனித உடலில் இருந்துதான் அந்த உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.

அத்தகைய நிலைகளை நாம் அனைவரும் நிச்சயம் பெறுவோம்…!

எலும்புக்குள் இருக்கும் ஊனில் மகரிஷிகளின் அருள் சக்தியை வலுவாக்கினால் தான் உயிராத்மாவிற்கு வலுக் கூட்ட முடியும் - ஈஸ்வரபட்டர்

 

எல்லாமில் எல்லாமாய் உள்ள “இறை சக்தி” பொதுவான சக்தியாய்ச் செயல் கொள்ளும் தன்மைக்கு அவரவர்களின் எண்ணச் செயலை ஒவ்வொரு சாராரும் தன் எண்ணத்திற்குகந்த செயலைச் செய்விக்கத் தெய்வத்தின் துணையை நாடுகின்றனர்.

தெய்வத்தின் துணையை எப்படி அவரவர்கள் பெறுகின்றனர்...?

மருத்துவர் தன் மருத்துவத்தில் கற்ற செயலுக்காகவும்... தன் ஜீவாதாரப் பொருளுக்காகவும்... தான் கற்ற மருத்துவத் தொழிலுக்காக “வியாதியஸ்தன் வரவேண்டும்” என்று எண்ணுபவனும் உண்டு.

தன் தொழில் நடக்க வேண்டும் என்று எண்ணுவதே தன் சுயநல வளர்ப்பிற்காகத்தான்...!

வியாதியஸ்தன் தன் வியாதியைக் குணமாக்க தெய்வத்திடம் எண்ணத்தைச் செலுத்துகின்றான்.
1.வைத்தியனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வருவாய்க்காக)
2.வியாதியஸ்தனும் இறைவனை வேண்டுகின்றான் (தன் வியாதி நீங்க)

இந்த இரு சாரரில் யாருக்கு அந்த இறைவன் சொந்தம்...?

வைத்தியன் மற்றவர்களுக்கு வியாதி வந்து அவதிப்பட வேண்டுமென்று எண்ணவில்லை. ஆனாலும் தன் ஜீவாதாரத் தேவைக்காகவும் தான் வளர்த்துக் கொண்ட... வழி முறை செயல் வளரவும் தெய்வத்தை வேண்டுகின்றான்.

வைத்தியனின் வைத்திய முறையில் அவன் கற்ற திறமை கொண்டு அந்தத் திறமைக்குகந்த ஜீவ ஆத்மாக்கள் அவனை நாடி வருகின்றன.

நோயாளியின் தன்மையிலும்...
1.தன் வியாதி குணமாக வேண்டுமென்ற உந்தலில் எடுக்கப்படும் எண்ணத்தால் ஆத்ம செயல் உருவாகி
2.அவனுள் உள்ள இறை சக்தியே அவனுக்கு அவன் வியாதியை சொஸ்தப்படுத்துகின்றது.

ஆகவே தெய்வத்தின் செயல்... நன்மை தீமை பார்த்துச் செயல்படவில்லை...!

உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு... சாதாரணத் தலைவலி போன்றவைகளுக்கு தலையில் மட்டும் மருந்தைத் தேய்க்கின்றோம்.

அதுவே நிற்காமல் அதிகப்படும் பொழுது... மாத்திரைகளாக உட்கொள்கின்றோம். அது ஆகாரமாகி... ஆவியாகி.. அதன் செயலைச் செய்கின்றது.

அதற்கும் முற்றிய நோய்களுக்கு... உதிரமுடன் கலக்கச் செய்யும் வீரிய மருந்துகளை ஊசியின் மூலம் ஏற்றுகின்றார்கள். அதற்கும் அடுத்தநிலை நரம்புகளிலேயே மருந்துகளைச் செலுத்துகின்றார்கள்.

அதற்கும் முற்றிய நிலையில்... எலும்புகளில் துவாரமிட்டு அதன் தொடரில் வைத்திய நிலை முற்றியுள்ள விஞ்ஞானச் செயலில் உடல் உபாதையை அகற்ற மருத்துவம் செயல்படுகின்றது. (இது எல்லோருக்கும் தெரிந்தது தான்...!)

இவைகளைப் போன்றே
1.இவ்வுடலில் நாமெடுக்கக் கூடிய மகரிஷிகளின் மின் அலைத் தொடர்பினால்
2.ஊடுருவல் நிலை கொண்டு அதைச் சுவாசமாக்கி
3.அதன் வளர்ச்சியில் உதிரமாகி... நரம்புக் கோளங்கள் வலுப் பெற்று
4.உடலில் உள்ள எலும்புக்குள் இருக்கும் ஊன் நிலையில் வலுவாகும் வழி முறையில் தான்
5.உயிராத்மாவிற்கு நாம் வலுக் கூட்ட முடியும்...!

December 22, 2021

திரும்பத் திரும்ப ஒன்றையே பேசிக் கொண்டிருந்தால் நம் ஆன்மாவிலே என்ன நடக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

 

ஒருவர் நம்மைத் திட்டிவிட்டால் என்னை இப்படிப் பேசினான்... என்னை இப்படிப் பேசினான்... என்னை இப்படிப் பேசினான்...! என்றெல்லாம் சொல்கிறோம்.

இந்த உணர்வின் தன்மை திரும்பத் திரும்ப ஜெபிக்கப்படும் பொழுது
1.சூரியனுடைய காந்தப் புலன்கள் சும்மா இருப்பதில்லை
2.நாம் பேசுவதை எல்லாம் எடுத்துக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

என்னைப் பேசினார்கள்... பேசினார்கள்... என்றே நாம் சொல்லிக் கொண்டிருந்தால் யார் திட்டினாரோ அவர்கள் காதிலும் இது விழுந்தால் நம்முடன் சண்டைக்கு வருவார்கள்.

கேட்கவில்லை என்றாலும்... இந்த உணர்வின் சத்து காந்த அலைகளை இழுத்து நமக்குள் அதை விளைய வைத்துக் கொண்டிருக்கும்.
1.அந்த உணர்வினை எண்ண... எண்ண... எண்ண...
2.விளைய வைத்ததை உடல் இழுத்து வைத்துக் கொண்டே இருக்கும்.
3.நமக்குப் பின்னாடியும் முன்னாடியும் (ஆன்மாவிலே) அது தான் நிற்கும்.

அதனின் இயக்கமாக என்னை இப்படிப் பேசினான்... என்னை இப்படிப் பேசினான்... என்னை இப்படிப் பேசினான்... அவன் மோசமானவன்... என்று சொல்லி நாம் பாட்டுக்குப் பேசினாலும் “வேறு என்னென்னமோ… நம்மிடமிருந்து கிளம்பும்...”

பேச்சின் தொடர்கள் அனைத்தும் வெறுப்பை ஊட்டும் உணர்வாகவே வரும். அப்படிப் வெறுப்பாகப் பேசுவது அனைத்தையும் இந்தக் காந்த அலைகள் கவர்ந்து கொண்டு நாம் பேசப் பேசப் பேச நம் உடலின் முன் பக்கமாகவே நிறுத்திவிடும்.
1.முன்னாடி நின்றவுடன் மீண்டும் அந்த நினைவுகள் வரும் பொழுது
2.எங்கே பார்த்தாலும் இந்த நினைவுதான் வரும்.
3.ஏதாவது ஒரு நல்ல பொருளைச் செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் அது சீராக நடக்காது.

வெறுப்பான நிலையில் நாம் வேலை செய்யும் போது பார்க்கலாம். எந்தக் குணத்தின் அடிப்படையில் வெறுப்பாக இருக்கின்றீர்களோ நீங்கள் எரிச்சலாக இருந்தால் குழம்பு வைக்கும்போது மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.

என்னை இப்படியே பேசிக் கொண்டிருந்தான் என்ற வேதனை அதிகமாகி விட்டால் உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். உங்களை அறியாமலே உப்பை அதிகமாகக் கையில் அள்ளிப் போட வைக்கும்.

வேண்டும் என்றால் சங்கடமாக இருக்கும் போது பார்க்கலாம். குழம்பு வைக்கும்போது உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். குழ்ம்பிலே உப்பு அதிகமாக இருக்கிறது…! என்று வீட்டில் சண்டை வரும்.

கோபமாக இருந்தீர்கள் என்றால் குறைந்தது இரண்டு மிளகாயாவது சேர்த்து அதிகமாகப் போட்டு விடுவீர்கள்... அப்புறம் எரிச்சலாகும். சலிப்பு சங்கடம் அதிகமாயிருந்தால் சீரகம் அதிகமாகிவிடும். சீரக வாசனை அதிகமாகி விட்டால் உமட்டலாகும்.

அந்தந்தக் குணத்திற்குத் தக்கவாறு தான் குழம்பு வைக்கச் சொல்லும்.
1,சலிப்பான எண்ணத்துடன் அதிகமாகப் பேசியிருந்தால் புளிக்குழம்பைத் தான் வைக்க வேண்டும் என்று சாதிப்போம்.
2.புளியை அதிகமாகக் கரைத்து விட்டு விடுவோம்... உப்பைக் குறைத்து விடுவோம்.
3.குழம்பிலே புளிப்பு அதிகமாகிவிடும்.

அனுபவத்தில் நீங்கள் இதை எல்லாம் தெரிந்து கொள்ளலாம்.

அதே மாதிரி இட்லிக்காக மாவை அரைத்து உப்பைப் போட்டுக் கரைத்து வைத்தால் மறு நாள் காலையில் இட்லியைச் சுட்டால் அதிகமாகப் புளித்துவிடும். இட்லி கல் மாதிரி ஆகிவிடும்.

ஐய்யய்யோ... நான் நன்றாகத் தானே செய்தேன்…! என்று சொல்லலாம். ஆனால் அந்தக் குணத்திற்குத் தக்கவாறு உணர்வின் தன்மை இயக்கிவிடும். மனிதனுடைய ஆற்றல் அந்த அளவிற்கு இருக்கின்றது.

வாழ்க்கையிலே ஒவ்வொன்றும் இவ்வாறு நம்மை இயக்குகிறது. திரும்பத் திரும்ப... திரும்பத் திரும்ப… பிறரின் குறைகளைப் பேசும்போது இத்தகைய உணர்வெல்லாம் வந்துவிடுகிறது.

இதை எல்லாம் அகற்றுவதற்குத் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை உடனுக்குடன் எடுத்து உடலுக்குள் சேர்த்து தீமைகள் உருவாகாதபடி மாற்றி அமைக்க வேண்டும் என்று அடிக்கடி யாம் (ஞானகுரு) சொல்கிறோம்.

ஆத்ம வலுவினால் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை “முன் கூட்டியே அறிய முடியும் - ஈஸ்வரபட்டர்

 

காட்சி:
ஆற்றின் குறுக்கே பழைய பாலம் ஒன்று; புகை வண்டியின் போக்குவரத்தின் தண்டவாளமுடன் தெரிகின்றது.

அதிவேகமாய் ஒரு புகை வண்டி வருவதைப் போன்றும்… வரும் வேகத்தில் ஓடக்கூடிய நிலையில் அப்பாலத்தின் நடு மையம் சரிந்து… புகைவண்டிப் பெட்டிகள் எல்லாம் பாலத்துடன் ஆற்றில் விழுவதைப் போன்றும்… இரண்டு பெட்டிகள் மட்டும் பாலத்தின் இக்கரையில் உடையப் பெற்று நிற்கும் பாலத்தில் நிற்பதைப் போன்றும் தெரிகின்றது.

இதன் பொருள் என்ன…?

இயற்கையில் தன் இச்சையுடன் சுழலத்தக்க மண்டலங்களின் கால நிலை… அவைகளின் சந்திப்புத் தன்மை… சீதோஷ்ண நிலை… வரப் போகும் மாற்றத்தின் முன் அறிவிப்பு… நிகழ் இயற்கைத் தன்மை… பூகம்பம்… கடல் கொந்தளிப்பு… காற்று… மழை…
1.பூமியில் அந்தந்த இடங்களில் எந்தெந்தக் காலத்தில் உஷ்ண நிலை மாறும் கொள்ளும் செயல்
2.இப்படி இயற்கையில் வரும் தன்மை வருவதற்கு முதலிலேயே
3.இன்றைய மனித விஞ்ஞானத்தில் அறியும் ஆற்றலைச் செயல்படுத்தி அறியும் விஞ்ஞானத்தின் செயலைப் போன்று
4.தன் ஞானத்தினாலேயே… அன்றையக் கால நிலையை அறியும் ஜோதிடத் தன்மையில்… இவ் ஒலி ஒளித் தன்மையை உணர்த்தினர் ஞானியர்.

கால ஜோதிட விஞ்ஞான கால சாஸ்திர செயல் முறையிலும் இயற்கையில் நிகழப்போகும் நிலையை அறியும் நிலையுண்டு.

காட்சியில் கண்ட செயற்கையின் விபத்துகளை உணர முடியுமா…?

காட்சியில் கண்ட செயற்கை நிலையில் நிகழும் விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மை எப்படி ஏற்படுகின்றது…?

சில பொருட்களின் உறுதியையும் தேய்மானத்தையும் கணக்கில் கொண்டு… பார்க்கும் பொருளின்… அதன் உறுதியான உழைக்கும் காலத்தைக் கணக்கிடுகின்றோம்.

எதிர்பாராமல் நடக்கும் செயற்கை விபத்துகளை முன் கூட்டி அறியும் தன்மைகளை…
1.இச்சரீர உணர்வு எடுக்கும் ஒலியைக் கொண்டு ஒளி அலையை…
2.இக்காற்றின் அமிலத் தன்மைக்கும்… இச்சரீரத்தில் வளர்த்துக் கொண்ட காந்தமின் அலையின் வீரிய நிலையான அமிலத் தன்மைக்கும்
3.இரசத்தன்மையின் (அதாவது பாதரசம்) உணர்வின் எண்ணமுடன் ஜீவ சரீர இயக்கத்தில் மோதும் பொழுது
4.இச்சரீர உணர்வு எண்ண ஒலி கொண்டு ஒளி நிலை பெற்ற தன்மையினால்
5.இப்பூமியின் வளர்ச்சித் தன்மையின் மாற்று நிலை நிகழப் போகக் கூடிய இடங்களின் செயலை அறியலாம்.

இச்சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் ஒளி சக்தியில்… ஆத்ம வலுவின் ஒளி கூடிய தன்மையில்… சூரிய ஒளிக்கும் பூமியின் ஒளிக்கும் இடையில் மாறு கொள்ளும் தன்மையில்… பூமி எடுத்து வெளிப்படுத்தும் அலைத் தன்மையை “இச்சரீர இயக்கம் ஒளி கொண்டு காண முடியும்…!”

புகைவண்டி விபத்துக்குள்ளாகின்றதென்றால்…
1.விபத்து நடக்கக்கூடிய காலத்திற்கு முன்பாகவே
2.பூமியின் அலையில் பூமி வெளிப்படுத்தும் ஆவித்தன்மையில்
3.அந்தந்த இடங்களில் நடக்கும் செயல் நிலை “தடுமாற்றம் கொள்ளும்…”

பூமியில் சில இடங்களில் மட்டும் எப்படிச் சூறாவளி என்ற சுழல் காற்று சுழல்கின்றதோ… அதைப் போன்று பூமியின் உள் நிலையிலிருந்து வெளிக்கக்கும் ஆவி அமிலத் தன்மையிலும் சில நிலைகள் வெளிப்படும்.

அத்தகைய காலத்தில்… அந்த இடங்களில் செயல் கொள்ளும் மனித உணர்வே… புகைவண்டியில் பலர் சென்றாலும்
1.ஜீவ சரீர உணர்வின் அலையுடன் அத்தொடர்பலை மோதியவுடன்
2.திகில் கொண்ட தடுமாற்றம் ஏற்பட்டு… அதனால் செயல்கள் மாறி விபத்துக்கள் ஏற்படும்.

மனித செயலினால் செயல்படுத்தப்பட்ட தண்டவாளத்திலும்… பாலத்தின் வலுத் தன்மை குறைந்திருந்தாலும்… இப்பூமியின் இயக்கமும் ஒன்றி… இப்பூமியின் வளர்ப்பில் சரீர இயக்கத்தில் ஒளி சக்தி பெற்ற தன்மையினால் செயல் தன்மை வலுக் குன்றி… விபத்துக்கள் உண்டாகும்.

இப்படி நடக்கக்கூடிய தன்மையை… உணர்வின் ஒலி சக்தி கொண்டு ஒளித் தன்மையால்
1.அணுவுக்குள் அணு ஊடுருவும் செயல் தன்மையில்
2.மாற்றுத் தன்மையினால் நிகழும் விபரீதங்களையும் ஞான ஒளியினால் அறிய முடியும்.

இச்சரீரமே ஒளி நிலை கொண்ட ஞான ஜோதியாய் ஒளித் தன்மை கொள்ளும் வளர்ப்பினால்
1.இயற்கை மாற்றம்…
2.செயற்கை வழி… செயற்கை மாற்றம்…! ஒவ்வொன்றையும் அறிய முடியும்.

ஆவியாகி பிம்பமாகி மீண்டும் ஆவியாகும் செயல் முறையில் இயற்கை செயற்கை எல்லாமே இவ்வொலித் தன்மையின் ஒளி நிலை பெற்ற ஆத்ம சரீரத்தில் அறிய முடியும்.

ஜெபம் கொண்டு தியானத்தால் தன் உணர்வைச் சமப்படுத்தி அறியும் நிலை இது.
1.சரீர இயக்கச் செயலுடனும்
2.சரீரமற்ற ஆத்ம உயிரின் தொடர்புடனும்
3.சித்து விளையாட்டின் சித்துச் செயலிலும் நிகழும் நிலையை அறிய முடியும்.

ஆனால்… பலனற்ற தன்மை தான் சரீரமற்ற உயிராத்மாவின் (ஆவி…. ஏவல்… மந்திரம்) தொடர்பு கொண்டு செயல்படுத்தும் முறை

ஆகவே... ஒவ்வொரு ஆத்மாவும் தனக்குள் உள்ள குருவான தன்னுயிரைத் தெய்வமாக்கி…
1.ஒலி கொண்டு ஒளி பெறும்
2.எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கும்... அறியும் ஞானத் தொடர் கொண்டு
3.தன் ஜீவ ஆத்மாவில் இருந்தே “வளர்ச்சி நிலை” ஒவ்வொன்றையும் அறியலாம்.

December 21, 2021

எது வந்தாலும் “ஈஸ்வரா…” என்று சொல்லச் சொல்வதன் காரணம் என்ன…?

 

அன்றாட வாழ்க்கையில் எந்த நிமிடமாக இருந்தாலும் சரி… யாராவது நம்மிடம் சங்கடமாகப் பேசினாலும் சரி… யாம் (ஞானகுரு) சொல்லிக் கொடுத்த ஆத்ம சக்தியை நீங்கள் கடைப்பிடியுங்கள்.
1.ஈஸ்வரா...! என்று வானை நோக்கி எண்ணுங்கள்
2.அந்தச் சங்கடமான உணர்வுகளை அதை வைத்து மறைத்துக் கொள்ளுங்கள்.

“ஈஸ்வரா...’ என்று அதை மறைக்கச் சொல்வது என்ன...?

மனிதனுடைய உணர்வின் அலைகள் “இங்கே இழுக்கின்றது...” கடிகாரம் போன்று இருக்கின்றது. உடல் முழுவதற்கும் இருப்பதை இது முன்னாடி குவித்துக் கொடுக்கும்.

அப்பொழுது ஈஸ்வரா… என்று தடைப்படுத்தி... அந்த நினைவை மகரிஷியின் அருள் சக்தி பெற... வானை நோக்கி அங்கே கூட்ட வேண்டும். இல்லை என்றால் இதுவும் கலந்துவிடும். (நல்ல உணர்வுடன் பிறரின் உணர்வும் கலந்துவிடும்)

ஆகையினால் எண்ணத்தை வானிலே செலுத்தி
1.அங்கிருந்து எடுக்கப்படும் பொழுது அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் நம் கையிலேயும் பாய்கின்றது.
2.ஈஸ்வரா... என்று ஏங்கி எடுக்கப்படும் போது தீமைகள் இங்கே அமுங்கிவிடுகிறது.
3.ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை “ஈஸ்வரா...” என்று எண்ணி எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

காரம் மிளகாய் உப்பு கசப்பு இதையெல்லாம் தனித்தனியாக உட்கொண்டால் சுவையற்றதாக இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் சமமாக இணைத்துச் சுவையாக ஆக்கும் பொழுது நாம் ரசித்துச் சாப்பிடும் நிலை வருகின்றது.

அதைப் போல் தான் எத்தனை பேர்... எவ்வளவு சங்கடமாகப் பேசினாலும்… எதிர்த்துப் பேசினாலும் கூட
1.நிச்சயம் அவர்கள் நல்லது பெறுவார்கள்… நல்லது செய்வார்கள்…
2.என் எண்ணம் அவர்களுக்கு நல்லதைச் செய்யும் என்று இந்த உணர்வை ஊட்டிக் கொண்டே வாருங்கள்.

என் கடையில் வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை… வியாபாரம் இல்லை…! என்று சொல்லாதீர்கள்.

என்னிடம் சரக்கு வாங்குவோர் அனைவரும் நலம் பெற வேண்டும்.. அவர்கள் வளம் பெறுவார்கள்... மகரிஷியின் அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்கும். என்னிடம் பொருள் வாங்குவோர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே வாருங்கள்.

உங்கள் வியாபாரம் நன்றாக ஆகிக்கொண்டே இருக்கும்.

ஒரு தொழிலே புதிதாகச் செய்கிறோம் என்றால் அங்கே தொழில் செய்பவர்கள் உடல் நலம் பெற வேண்டும்… மன பலம் பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும். அவர்கள் எதை உற்பத்தி செய்கின்றார்களோ அதைப் பயன்படுத்துபவர் எல்லோருக்கும் நல்லதாக வேண்டுமென்று இதைத் தியானம் செய்யுங்கள்.

இன்று ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் எவ்வளவு அழகாகக் கட்டுகின்றோம். நம் ஆறாவது அறிவின் தன்மை அழகான கட்டிடங்களைக் கட்டச் செய்கிறது.

ஆகவே அந்த ஆறாவது அறிவினைப் பயன்படுத்தி ஒவ்வொரு நிமிடமும் நம்மை இயக்கக்கூடிய பிற உணர்வுகளைத் தடைப்படுத்த அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று ஏக்க உணர்வை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.எல்லோரும் உயர வேண்டும் என்ற எண்ணத்தில் மேல் நோக்கி நினைவினைச் செலுத்தி
2.அந்த ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

நமது குருநாதர் காட்டிய மேல் நோக்கிய சுவாசம் இது தான். அதன் மூலம் நாம் விண்ணின் ஆற்றலைப் பெறலாம் அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.

மனித வளர்ப்பின் பலன் “ஞான வளர்ப்பின் பலனைக் கூட்டுவது தான்…” - ஈஸ்வரபட்டர்

 

கடலைக் காயை நாம் பயிரிடும் பொழுது தனி விதையாகத் தான் பயிரிடுகின்றோம். ஆனால்… செடி வளர்ந்து பலன் தரும்போது அக்கடலைக்காய் “இரண்டு விதையுடன்… பெட்டி போன்ற அமைப்பு பெற்று…” தன் வளர்ப்பின் வளர்ப்புப் பலனாக… அது எடுத்த சத்தின் ஊட்டப்பலனைப் “பலவாய்த் தருகின்றது…”\

அப்பலனின் தொடர்பலன் அதன் பயிர் நிலை ஒரே தன்மையில்தான் வளர்ந்து கொண்டுள்ளது. அது எடுத்த அமிலத் தன்மைக்கொப்ப சத்தின் வித்து பலன் தருகின்றது.

அந்தக் கடலையை நம் தேவைக்கொப்ப உணவாகவும்… எண்ணையாகவும்… எடுத்துக் கொள்கின்றோம்…

அதே போல அச்செடியிலிருந்து வெளிப்பட்ட வளர்ப்புத் தன்மை யாவையும் பல நிலைகளில் கலக்கப்படுகின்றன.
1.கடலைச் செடியை மாடுகள் உட்கொண்டாலும்…
2.மாட்டின் சத்தான பாலைத் தான் அது தருகின்றது.

அதே கடலைச் செடியை உரமாக வேறு பயிர்களுக்குச் செலுத்தினோமானால்… எந்தப் பயிருக்கு கடலைச் செடியின் சக்கையை உரமாக இட்டாலும்…
1.நெல்லுக்கோ மற்ற பயிர்களுக்கோ இவ்வுரத்தைத் தந்தாலும்
2அதனுடைய சத்தை எடுத்து நெற் பயிர் தன் பலனைத்தான் தருகின்றது.

அதாவது… ஒரு பொருளின் தன்மை பலவாகப் பலவற்றில் கலக்கப் பெற்றாலும்… பலவற்றில் சேர்ந்தாலும் சேர்க்கப்படும் செயலினால் தன்னுடைய உண்மை நிலையைத் தான் பெறுவதில்லை…! பிற செயலுக்குச் சத்தாய்த்தான் அது அமைகிறது. ஆனால்…
1.தன் வித்தின் பலன்
2.தான் வளரும் பொழுது
2.தன் சக்தின் உண்மை வளர்ச்சியை வளர்த்துக் கொண்டே உள்ளது.

இத்தன்மையைப் போன்றுதான் பூமியின் வளர்ப்பின் வளர்ப்புகளுக்கு மற்றெல்லா வளர் தன்மைகளும்,..!

இதன் தொடரைப் போன்று… மனித ஆத்ம ஞானத்தில் பெறப் பெற்ற ஒலித்தன்மையின் ஒளி ஞானத்தைப் “பிற ஈர்ப்பில் எண்ணத்தைப் பலவாகக் கூட்டப்படும் உணர்வினால்” தன்னுடைய உண்மைத் தன்மையின் சத்து நிலை வளர்க்கும் வளர் தன்மை இழக்கப்படுகின்றது.

கடலைக் காயின் வித்தை மீண்டும் ஊன்றி வளர்க்காது அதை உணவாகவும் எண்ணையாகவும் மற்றவைகளுக்கு உரமாகவும் பயன்படுத்தினால் அதன் வளர்ச்சி தடைப்படுவது போல்
1.மனிதன் உணர்வின் எண்ணத்தைப் பலவாக மோதச் செய்து விட்டால்
2.“ஞானம் என்ற உயர்வின் வளர்ச்சி” தடைப்படுகின்றது.

ஆகவே ஞானம் என்ற உண்மை வித்தை மனிதன் ஊன்றச் செய்து தனக்குள் உள்ள சத்தின் பலனை வளர்ச்சி கொள்ளும் பலனினால்தான்
1.மனித உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுவுமே வித்தாகிப்…. பலவாகி…
2.பல ஞான வளர்ப்புகளைத் தன் வளர்ப்பால் வளர்க்க முடியும்.

தன் உணர்வின் எண்ணத்தில் கலக்கப்படும் ஒவ்வொரு சத்திற்கும் இவ்வுடலே செயல் கொள்கின்றது. எண்ணமுடன் மோதும் எவ்வெண்ணமும் உணர்வாகி… இவ்வுடல் தன்மையின் செயலுடன்… அதற்குகந்த வளர்ப்புத் தன்மையில் உருவாகிறது.

இத்தொடரிலிருந்து தன் ஞானத்தை அறியக் கூடிய உருவாக எண்ணத்தில் மோதும் செயலைச் சமமாக்கி…
1.இவ்வாத்ம பிம்ப சரீரக் கோளமெடுத்த ஒலி சக்தியின் ஒளியை…
2.எண்ணமும் பகுத்தறியும் ஆற்றலும் செயல் திறமையும் கொண்ட ஒளி சக்தியை
3.ஞான சக்தியாக உயர் ஞானச் சக்தியாக வளர்க்க வேண்டும்

சூரியனைச் சுற்றி அதனின் குடும்பக் கோளங்கள் சுழன்று ஓடினாலும்… அதன் சத்தைத் தானெடுத்துத் தன் சமைப்பின் ஒளியாகச் சூரியன் தன்னைத்தானே ஒளிப்படுத்தி… தன் ஒளியின் பலனாய்த் தன் தொடர்பில் வளரும் மண்டலங்களை வளர்த்து… தன் ஒளியைக் கொண்டு பிறவற்றையும் வளர்க்கின்றது.

அதைப் போன்று
1.தன்னுள் உள்ள நாத விந்துவை “குருவாக… ஒளி பெறும் ஜோதி நிலையாக்க…”
2.எண்ணத்தின் உணர்வைத் தனக்கேற்ற சத்தாக எடுத்து
3.தான் பெற்ற நாத ஒலியின் உண்மை வளர்ப்பின்… நாத விந்துகள் வளரும் வளர்ப்பில்தான்
4.எண்ணத்தின் உணர்வைச் செலுத்த வேண்டும்.

தாவரங்களுக்கோ… கனிவளங்களுக்கோ… எண்ணத்தின் உணர்வு பகுத்தறியும் செயல் நிலை இல்லாததினால் தன் தன் சத்தின் வளர்ப்பு ஜீவநிலையுடன்… அது அது வளர்ச்சி கொண்ட அமிலத் தொடர்புக்கொப்ப தொடர் வளர்ச்சி வளர்கின்றது.

இதை எல்லாம் “இயற்கை” என்கின்றோம்.

ஆனால்… எல்லாவற்றையும் பார்த்து… உணர்ந்து… செயல் கொண்டு அறியும் மனிதன்… தன் எண்ணத்தின் உணர்வை இயற்கையின் தொடர்பற்ற “செயற்கையின் நிலையைப் பெறுகின்றான்..”

இதை ஒவ்வொருவரும் உணர்ந்து… தன்னுள் உள்ள ஜீவகாந்த நாத விந்துவை வளர்க்கும் உயர் ஞானத்தின் வளர்ச்சிக்குச் செலுத்துவதே மனித வளர்ப்பின் உண்மையான பலன்…!

December 20, 2021

இயற்கையின் படைப்பு

 

உதாரணமாக ஒரு கண்ணில்லாத புழுவை குளவி கூட்டிலே எடுத்துக் கொண்டு வைக்கின்றது. இதை எல்லாம் நாம் பார்த்திருப்போம்.

ஆனால் கூட்டிலே எடுத்து வைப்பதற்கு முன் முதலிலே குளவி மண்ணைப் பிசைகின்றது. எதை வைத்து…?

குளவிக்குள் உமிழ் நீர் ஊறும். உமிழ் நீர் ஊறும் ஊற்றுக்குத் தக்கவாறு அது மண்ணை நோண்டுகின்றது. தன் உமிழ் நீரை அதற்குள் கொட்டி மண்ணைப் பிசையும்போது கொய்ங்…கொய்ங்… டுங்...டுங்... என்று அதிலே இரைச்சலைக் கொடுக்கின்றது.

தன் உணர்வின் தன்மை கொண்டு இரைச்சலைக் கொடுக்கின்றது. இறக்கையாலும் இந்த நாதத்தைக் கொடுக்கின்றது. நாதத்தைக் கொடுத்து மண்ணை உருண்டையாகச் சேர்க்கின்றது,

அந்த மண்ணிற்குள் கலந்திருக்கக் கூடிய காந்த ஈர்ப்பிற்குள் குளவியின் நாதங்கள் இணைகிறது. ஏனென்றால் மண்ணும் அது ஒன்றோடு ஒன்று இணைந்து தான் அது வளர்ச்சியின் தன்மை பெற்றது.

தன் ஒலிகளைச் செருகி உருட்டி எடுத்து வந்த மண்ணை வைத்து கூட்டைக் கட்டுகிறது. கூடு கட்டிய பின் ஒரு புழுவைத் தேடிச் செல்கின்றது. புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து கூட்டிற்குள் வைத்த பின் புழுவை இலேசாகக் கொட்டுகின்றது.

கொட்டிய பின்
1.குளவியின் பால் புழுவினுடைய நினைவுகள் அனைத்தும் திரும்புகின்றது.
2.அதே சமயத்தில் புழுவின் உயிரின் துடிப்பின் வேகம் அதிகமாகக் கூடுகின்றது. அதாவது இயக்கச் சக்தி அதிகமாகிறது.

தேள் கொட்டியவுடன் நாம் துடிக்கின்றோம் அல்லவா…! அல்லது விஷமான குளவி கொட்டி விட்டாலும் நாம் துடிக்கின்றோம் அல்லவா…!

அதைப் போல அந்தப் புழுவை குளவி கொட்டிய பின் இந்த உணர்வுகள் தூண்டி எழுந்து அது உற்சாகத்துடன் வருகிறது. வேகத்தின் நிலைகள் அதிகமாகின்றது.

குளவி கொட்டிய விஷத்தின் தன்மை அந்தப் புழுவின் தோலைச் சீக்கிரம் கருகச் செய்துவிடுகின்றது. கருகிய பின் சருகு போல் ஆகிறது. சருகு போல் ஆகும்போது அடுத்து இரண்டாம் தடவை குளவி கொட்டுகிறது. புழுவின் துடிப்பு இன்னும் அதிகமாகின்றது.

குளவி கொட்டிய வேகத்தில் புழுவின் மேல் தோல் சருகு போல ஆகும் பொழுது
1.கோழி முட்டைக்கு எப்படி ஓடு உருவாகின்றதோ
2.அதைப்போல புழுவின் தசைகளுக்குள் விஷங்கள் ஊடுருவி
3.அந்தத் தசைகள் அனைத்தும் அழுகி சருகு போல ஆகி ஒரு கருவாக உருவாகின்றது.

ஆனால் புழு உடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் இந்த துடிக்கும் நிலைகள் பெறுகின்றது. அப்போது மண்ணை வைத்து அந்தப் புழுவைக் குளவி மூடி விடுகின்றது.

குளவி கொட்டியதால் கருவிற்குள் அடங்கிய இந்த புழுவின் உயிர் துடிப்பு துரிதம் ஆகிறது. குளவியையே அப்போது எண்ணி எங்குகிறது.

ஆனால் அடைப்பட்ட மண் கூட்டிலே
1.குளவி உமிழ் நீருடன் கலந்து விஷத்தைக் கொட்டியிருப்பதால்
2.புழுவிற்குள் இருக்கக்கூடிய காந்தம் வேகத் துடிப்பாகும்போது
3.கூட்டிற்கு வெளியில் இருக்கக்கூடிய காந்த அலைகளைத் தனக்குள் ஈர்க்கும் நிலைகள் வருகின்றது.

அவ்வாறு ஈர்க்கப்படும் போது இந்த உயிரின் துடிப்பு வேகும் போது காந்தப் புலன்கள் அதிகமாகிச் சூடாகிறது. சூட்டினால் உடலுக்குள் இருக்கும் அழுகிய புழுவின் தசையை ஆவியாக மாற்றித் தன் உயிரின் துடிப்பிற்குள் கொண்டு வருகிறது.

தீபாவளிக் காலங்களில்…
1.மத்தாப்பை நெருப்பை வைத்துக் கொளுத்தினால் அது எப்படிப் பல ரூபங்கள் ஆகின்றதோ
2.அதைப் போல குளவியினுடைய உணர்வலைகளை… கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளாகச் சேர்த்து
3.புழுவின் தன்மை குளவியாக மாறுகின்றது.

இப்படிக் குளவியாக மாறி வந்த பின் அந்தக் குளவிக்கும் உமிழ் நீர் வருகின்றது. அப்பொழுது அந்த கூட்டிற்குள் உமிழ் நீரைக் கொட்டுகின்றது. அது ஈரமானபின் கூட்டிலே துவாரமிட்டுத் தன்னிச்சையாக வெளியே வருகின்றது.

ஆனால் முதலில் கூட்டை அடைத்து வைத்த அந்தக் குளவி வந்து இந்தக் கூட்டைத் திறப்பதில்லை. புழு குளவியான பின் அதற்குள் உமிழ் நீர் சுரந்து அந்த உமிழ் நீரைக் கொட்டித்தான் உருவான குளவி வெளியே வருகின்றது.

குளவியாக வெளியே வந்தபின் முதலில் உருவான குளவி எதைச் செய்ததோ… அதே போல் இதுவும் புழுவைத் தூக்கி வந்து மீண்டும் தன் இனத்தை உருவாக்குகிறது.

செயற்கை மின் காந்த அலையில் தான் உலகம் இன்று அடிமைப்பட்டுள்ளது - ஈஸ்வரபட்டர்

 

எறும்பிலிருந்து யானை வரை ஊர்வன… பறப்பன… நடப்பன… எல்லா ஜீவ சரீரத்திற்கும் அவை பெற்ற “ஆத்ம உயிரின் ஒளி” ஒன்று போல் தான் இருக்கின்றது.

ஆனால் ஜீவ காந்த சரீர உணர்வின் நாத ஒலி கொண்ட செயல்… இம்மனித சரீரத்தின் இயக்கத்தில் அதிகம் உள்ளது.

உணர்வின் எண்ணச் செயலை இச்சரீர இயக்கம் செயல்படுத்தக் கூடிய அங்கக்கூறுகள் பெற்ற ஜீவ காந்த சரீரத்தைப் பக்குவப்படுத்தி… அதன் பக்குவத்திற்குகதந்த ஆகாரத்தை நாம் செலுத்த ஜீவ இயக்கத் தொடர் தேவை.

மின்சாரத்தின் மூலம் விளக்கின் ஒளியைப் பெற அவ்வொளியின் செயலுக்குகந்த காந்தமின் அலை தொடர்பைச் செலுத்திக் கொண்டே இருப்பதால் தான் விளக்கின் மூலம் ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கிறது.. தொடர்பு அற்றால் ஒளி பெறும் தன்மையும் தடைப்படுகின்றது.

அதைப் போன்றே…
1.ஜீவ காந்த மின் அலையின் தொடர்பிற்கு
2.தன் ஒளி என்றுமே ஒளிர்ந்து கொண்டே இருக்கும் வளர் ஒளியை வளர்க்க
3.ரிஷிகள் தம் வட்டத்தின் வளர்ப்பின் தொடருக்கு
4.உணர்வின் எண்ணம் கொண்ட சரீர பிம்பங்களின் ஜீவ காந்தத் தொடர்புடன்
5.தான் பெற்ற வலுத் தன்மையின் தொடரை இப்பூமியிலே பதியச் செய்து
6.அத்தொடரின் ஈர்ப்பு வட்டத்தில் இருந்து தன் வலுவை வலுவாக்கிக் கொண்டே
7.தொடர் ஜீவ சத்தைத் தன் தொடர் வட்டத்தின் சுழற்சி கொண்டு எடுத்துக் கொண்டே
8.அத்தொடர் அலை பிரியா வண்ணம் உணர்வின் எண்ண ஜீவித தொடர்பில்
9.தன் நினைவைப் பதிய வைத்த நிலையிலேயே செயல் கொள்கின்றனர்.

அதைப் போன்றே… எண்ணத்தின் உணர்வு கொண்ட தொடர்பானது ஜீவகாந்த மின் அலை செலுத்தும் உணர்வினால் எந்த ரிஷி பெற்ற தொடர்பிலும் எண்ணத்தைச் செலுத்திட முடியும்.

அவ்வாறு செலுத்தித் தன் ஞானத்தை வளர்க்கும் வலுவை… அறிய வேண்டிய எண்ணமுடன் தொடர்பைக் கொண்டு செலுத்தக் கூடிய எண்ணத்தின் தொடர்பினால்…
1.ரிஷித் தொடர்பின் அலையை வளர்க்க
2.அந்த காந்த மின் அலைத் தொடர்பை எண்ணத்தின் பால் எடுக்கப்படும் வலுவைக் கொண்டு
3.நம் வளர்ப்பின் தொடர் சுழற்சி வலு கூடிக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் ஒருவர்பால் ஒருவர் செலுத்தக்கூடிய உணர்வின் எண்ணத் தொடர்பில் தொடர் கொள்ளக் கூடிய மின் காந்த ஜீவ இயக்க வலுத் தன்மை நம் வளர்ப்பின் வலுவிற்கு மிகச் சக்தி வாய்ந்ததாக அமைகின்றது.

இதே ஜீவ காந்த வலுவை பிராணிகளிடத்திலிருந்தும் பட்சிகளிடத்திலுருந்தும் நம் உணர்வைச் செலுத்தத்தக்க வழி முறைக்கொப்ப வலுத் தன்மை பெற முடியும்.

ஜீவ காந்த சரீர எண்ண உணர்வின் செயலை…
1.நமக்குள் உள்ள உயர்ந்த தெய்வத் தன்மையை வளர்க்கும் ஞான வலுவைக் கொண்டுதான்
2.வளர வேண்டிய வலுவிற்கே சக்தி கூடுகின்றது.

விஞ்ஞானத்தால் மின் காந்த தொடர்பில் இன்று நாம் சிக்குண்டு… நாத ஒளி ஈர்ப்பை மின் அலைத் தொடர்புடன் அதிகமாகப் பெற்று… அவ்வலையின் செயலையே இப்பூமியின் காற்று மண்டல அலைத் தொடர்பில் அதிகமாய்ச் சுழல விட்டுக் கொண்டுள்ளோம்.

அதிலேயே சிக்குண்டு அதன் பிடியிலேயே எண்ணத்தைச் செலுத்தி அந்த ஒலி நாதங்களையே பெறுவதினால்
1.செயற்கை மின் காந்த செயலுக்கு…
2.இச்சரீர இயக்கமே அடிமைப்பட்டு… அதன் செயலாக ஆகிவிடுகின்றது.

ஆக.. ஒரு ரேடியோ… காற்றில் கலக்கப்படும் செயற்கைப் பதிவின் ஒலிகளை ஏரியல் மூலம் எடுப்பதைப் போன்று இச்சரீர இயக்கத்தின் ஒலி நாதத்தால்… நாதத்தின் ஒலித் தொடர்பை…
1.எண்ணத்தின் உணர்வு அறியும் தொடர்பு கொண்ட
2.எத்தொடர் அலையையும்… பதிவு கொண்ட ஒலி அலை யாவையும்… கேட்க முடியும்.
3.ஒலி பாய்ச்சிக் கேட்கும் ஒலியையும் காட்சியாகப் பார்க்க முடியும்.

இச்சரீர உணர்வின் ஜீவ காந்த மின் அலைத் தொடர்பைச் செயல்படுத்தும் ஜெப சக்தியினால் நம்மையும் வளர்த்துக் கொள்ள முடியும்.

பின்… நம் வலுவைக் கொண்டு பிறருக்கும் அந்த அலைத் தொடர்பை ஊட்டி…
1.அத்தொடர்பின் வலுவை நாம் பெற்று
2.நம் வலுவை வளர்த்தோரின் (ரிஷி சக்திகள்) வலுவுடன் செலுத்தி
3.அறிவோம்…! என்ற நிலை பெற்றுத் தன்னுள் இருக்கும் தெய்வத்தின் செயலை உணர முடியும்.

படைப்பின் படைப்பாகப் பலவற்றையும் படைக்க... ஒவ்வொரு உயிரணுவிலும் தெய்வத்தின் செயல் தன்மை செயல்படுத்துவதை செயலாக்க கூடியது இவ்வெண்ணம் தான்…!

எண்ணத்தின் உணர்வைக் கர்ம காரியத்தில் உள்ள இருளில் உள்ள உண்மையை… “ஒளி கொண்டு அறிந்து…!” ஆத்ம உயிரை வலுவாக்கி… வளர்ச்சி கொள்ளும் “தெய்வ வளர்ப்பாய்…” ஒவ்வொருவரும் வளரலாம்.

December 19, 2021

ஆத்ம ஜோதி ஜொலிக்கும் சந்தர்ப்பம் - ஈஸ்வரபட்டர்

 

கர்ம காரிய இருளிலிருந்து ஒளியான ஞானம் பெற உணர்வின் எண்ணத்தைக் கர்ம காரிய வாழ்க்கை இருளிலிருந்து உண்மையை… “ஒளி பாய்ச்சி” அறிதல் வேண்டும்.

சூரியனின் மோதல் பூமியின் மேல் நேர் பார்வையில் மோதும் பொழுது தான் இருளான இப்பூமியின் ஒளி வெளிப்படுகின்றது. அதைப் போன்று…
1.உணர்வின் எண்ணத்தை… “அறிவோம்” என்ற ஞான வழிக்கு இவ்வெண்ணத்தைக் கூட்டும் பொழுதுதான்
2.வாழ்க்கையில் ஏற்படும் கர்ம காரியச் செயலில் இருந்தெல்லாம்
3.நம் ஆத்ம ஒளிக்கு ஒளி பெற முடியும்.

பூமியின் நீர் நிலை உப்புக் கலந்ததாய் உள்ளது. கடல் நீரும் உப்பு. இப்பூமியில் கடல் மட்டத்திற்கு மேல் பல ஆயிரம் அடிகள் உயர்வாக உள்ள மலைப் பிரதேசங்களில் உள்ள கிணறுகளில் நீரும் உப்பாய் உள்ளது.

ஆனால்…
1.ஆழ் கடலிலும் ஆங்காங்கு பல இடங்களில் உப்பில்லாமல் “நல்ல நீர்” கிடைக்கின்றது.
2.அதே போல் இப்பூமியிலிருந்து வெளிப்படும் ஆவி அலையின் சத்தில் பெய்யும் மழை நீரும் உப்புக் கரிப்பதில்லை.

மழை நீர் குணம் கொண்டதாக… இப்பூமி சுழற்சியில் பெய்யும் மழை நீர் எல்லாமே சுவை கொண்டதாகத்தான் பெய்கின்றது. பூமியுடன் கலந்து செயல்படும்போது அந்த நீர் உப்பாகி விடுகின்றது.

அதைப் போன்று…
1.இவ்வாழ்க்கை கர்ம காரிய உடலில் இருந்து வெளிப்படும் இருளான உண்மையிலிருந்து
2.ஒளி கண்டு… காணும் அறியும் நிலையை…! நாம் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

அதாவது… கடல் நீரும் கிணறுகளில் உள்ள நீரும் உப்பாயிருந்தாலும் கடலின் மத்தியிலே சுவை கொண்ட நல்ல நீரை நாம் காண்பது போன்று
1.இவ்வுடலில் ஏற்படக்கூடிய உணர்வின் எண்ணச் செயலில் மோதும் எச்செயலையும்
2.இருளான நிலைப்படுத்தி மோதும் அந்தச் செயலிலுள்ள உண்மை ஒளியை
3.நமக்குகந்த சத்தாக… “ஒளி” பெற வேண்டும்.

பூமியில் பல கோடி மண் வள கனி வள சத்து நிலைகள் மாறி மாறிப் படர்ந்திருந்தாலும் அச்சத்தின் சத்தாய் அங்கங்கு… சில இடங்களில்… வைரத்தின் ஒளிக் கற்கள் (வைரங்கள்) வளர்கின்றதல்லவா..!

அதைப் போன்று இவ்வுடலின் உணர்வு எண்ணக் கோள கர்ம காரிய சரீர இயக்கத்தில் உள்ள உண்மை வெளிப்பட…
1.ஞானமென்ற ஒளியை…
2.காரிய சிந்தையை…
3.காரிய சித்தாய்
4.“நம் ஒளி ஞானம்” செயல்படல் வேண்டும்.

பிறர் பால் உள்ள குறைவினாலேயே… உயர்வினாலேயே… நம்மை உயர்த்தியும்… குறைத்தும்… எண்ணத்தைச் செலுத்தாமல்…
1.அறியும் ஞான ஒளித் தொடரில் மோதப்படும் ஒவ்வொரு நிலையில் இருந்தும்
2.நம் உயிர் ஆத்மாவிற்கு ஜீவ காந்த வளர்ப்புக்குகந்த சத்து நிலை உணர்வில்
3.நாம் கூட்டும் ஒளி நிலை கொண்டு தான்… ஆத்ம ஜோதி ஜொலிக்க வேண்டும்.

எண்ணமுடன் கூடிய உணர்வினால்தான்… ஒளி நிலையான ஜோதி நிலைக்கு… “இவ்வாத்ம உயிரை” ஜீவ காந்த மின் அலையைக் கொண்டு… வலு கூட்ட முடியும்.

இஜ்ஜீவ காந்தமின் அலை உணர்வு சரீரத்தைக் கர்ம காரியத்தில் சுழலும் மாய வாழ்க்கை இருளிலிருந்து எண்ணத்தை அறியும் ஞான ஒளி பாய்ச்சி… உண்மையை உயிராத்மா வலுக் கூட்டிக் கொள்ள வளர் ஞானம் கொள்ள வேண்டும்.

அந்த வளர் ஞானம் கொண்டோமானால்… இன்றெப்படி வாழ்க்கையில் சுவை… மணம்… உணர்வு… உறக்கம்… போன்றவற்றில் இன்ப நிலையை உணர்கின்றோமோ…
1;இவற்றிற்கு மேல் பேரின்ப நிலையான ஒளி சக்தியைக் கொண்டு
2.மனித பிம்பத்தில் உணர முடியாத உன்னதமான… இனிமையான…
3.சுவை கலந்த இன்ப நிலையைப் பெற முடியும்.

December 18, 2021

குருக்ஷேத்திரப் போர்

 

இந்த மனித வாழ்க்கையில் நம்மை இருள் சூழச் செய்யும் பிற உணர்வுகளைத் தாழ் பணியச் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற வேண்டும்.

1.மெய் உணர்வின் தன்மை பெற நம் நினைவை மேலே செலுத்தினால் “இமயமலை...”
2.உயர்ந்த சக்திகளைப் பெறக்கூடிய தகுதி பெற்றது நம் உயிர்.

ஆனால் கீழே நினைவுபடுத்தும் போது அந்தச் செயலின் இயக்கத்தில் வாழ்க்கையை ஓட்டலாம். ஆக வாழ்க்கைக்கு நம் உடலின் உணர்வு கொண்டு செயல்பட்டாலும்
1.இடர்கள் வந்து நம்மை ஆட்டிப் படைக்கும் சந்தர்ப்பம் எல்லாம்
2.ஈஸ்வரா... என்று நமக்குள் உச்சியிலிருக்கும் உயிரை நினைவு கொண்டு
3.அவனின் துணை கொண்டு நினைவை அங்கே செலுத்த வேண்டும்.

இது தான் கீதையின் தத்துவம் குருக்ஷேத்திரப் போர்.

வாழ்க்கையில் வரக்கூடிய நிலைகள் மகாபாரதப் போராகப் பலருடைய எண்ணங்கள் நம்மிலே மோதுகிறது. அப்போது நம் நல்ல சிந்தனைகள் செயல்படாத நிலையில் நாம் சுவாசித்த உணர்வுகள் பதட்டமாகிறது.

அத்தகைய பதட்டம் ஏற்பட்டால் ஒன்றை அழிக்கக்கூடிய எண்ணம் உருவாகி நல்ல பொருள்களை அழிக்கும் நிலைகள் வருகின்றது.

ஆனால் ஞானிகளோ தீமை செய்யும் உணர்வைத்தான் அழிக்கச் சொன்னார்கள்.
1.நம்மை அறியாமல் வரும் தவறு செய்யும் உணர்வுகளை
2.அதைச் சுவாசிக்கும் நிலையை நாம் மாற்ற வேண்டும்.

பிறர் செய்யும் தவறான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்து நம்மை அறியாது இழி நிலையான செயல்களைச் செயல்படுத்த வைக்கும் அந்த உணர்வின் தன்மையை மாற்ற ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உயிரிடம் வேண்ட வேண்டும்.

கண்ணின் புலனறிவு கொண்டு நம் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வின் துணை கொண்டு அந்த உணர்வை நாம் எடுக்கும் பொழுது இது குருக்ஷேத்திரப் போர்.

புற நிலையில் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது பிறருடைய எண்ணங்கள் நம்மை வெறுப்போ பயமோ ஆத்திரமோ மற்ற நிலைகள் அதனுடைய செயலுக்கு ஆளாக்கிவிடுகிறது.

அக்கணமே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கி இங்கே போர் நடத்த வேண்டும்.

நாம் எவ்வளவு பெரிய வல்லமை கொண்டவராக இருந்தாலும் ஒரு விஷத்தின் ஆற்றல் நம்மை ஆட்டிப் படைத்துவிடும்.

ஒரு சிறு எறும்பு கடித்து விட்டால் உடனே நாம் கை கால்களை உதறுகின்றோம். அதே போன்று அந்தக் கடுகடுப்பான விஷத்தின் ஆற்றல் நம் உணர்ச்சிகளைத் தூண்டப்படும் போது உடல் முழுவதும் பதட்டம் ஆகிறது. நல்ல சொல்களைச் சொல்ல முடியாதபடி செயலிழக்கக் கூடிய நிலையும் வந்து விடுகின்றது.

இதைத் தடுப்பதற்கு எந்த நிமிடம் ஆனாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் நாம் எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்
2.மெய் ஞானிகளின் அருள் வழி நாங்கள் நடக்க வேண்டும்
3.அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
4.எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று
5.எப்பொழுதெல்லாம் தீமைகளைச் சந்திக்கின்றீர்களோ அப்போதெல்லாம் இத்தகைய குருக்ஷேத்திரப் போராக மாற்றுங்கள்.

அந்த மகரிஷிகள் அருள் ஆற்றலை உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த ஆற்றலைப் பெறச் செய்வதற்கே இந்த உபதேசம்.

பல எண்ண மோதல்கள் வந்தாலும் அதிலிருந்து ஞானம் பெறுவது எப்படி…? - ஈஸ்வரபட்டர்

 

நீந்தத் தெரியாதவன் நீரில் சிக்குண்டு தவிக்கும் பொழுது… தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உதவியை நாடுவதைப் போன்று தான் வாழ்க்கையின் கர்ம காரியக் கடலில் ஏற்படக்கூடிய இன்னலிலிருந்து தப்ப எண்ணும் நிலையும்….!

நீந்தத் தெரிந்தவன்… ஆயிரம் அடி (ஆழம்) கடல் நீரிலும் தன்னைப் பாதுகாக்கும் சாதனைத் திறன் பெற்ற நீச்சலினால் தத்தளிக்கும் நிலையோ… பாதுகாப்பை நாடும் நிலையோ இன்றி… தன்னைக் காத்து கொள்கிறான்.

அதைப் போன்று தான்..
1.உணர்வின் எண்ணத்தைச் சமமாக்கி… ஆத்ம பலம் பெற்று
2.உடல் என்ற இக்கோளத்தில் உருவாக்கும் உயிரணுவின் வளர்ப்பைக் கொண்டு
3.தன் நிலையைத் தான் உணர்ந்து
4.எந்த நிலையான கர்ம காரிய சஞ்சலங்கள் ஏற்பட்டாலும்
5.தன்னை அது தாக்காமல் தன்னைத்தான் பாதுகாத்துத் தன் வலுவைக் கூட்டி
6.ஆத்ம ஞானத்தால் - இரு விழியால் பார்க்கும் படர் ஒளியின் பார்க்கும் இவ்வுடல் உறுப்பின் பார்வை நிலையையே
7.இவ்வுடலின் ஒவ்வொரு உயிரணுக்களையும் “ஒளி நிலை காணும்… விழி நிலை ஆக்கலாம்…!”

உடல் கோளத்தின் ஜீவ சரீரம் செயல் கொள்ள சுவை மிக்க உணவை உண்டு உணர்கின்றோம். உண்ணும் பொழுதும்… சுவைக்கும் பொழுதும்… ஏற்படும் உணர்வு உண்ட பின்… கழிவு நிலையாகச் சென்று விடுகின்றது.

மீண்டும் பசியெடுத்து அதன் சுவை கொண்டு அந்தந்தக் காலத்தின் நிலையில் உணவைச் சுவைப்படுத்தி உண்கின்றோம்.

உண்ணும் பொழுதோ… சுவை உணரும் பொழுதோ… அவ்வின்பத்தின் உணர்வு தவிர உடலைப் பற்றியோ… உண்ணும் உணவு உடலில் செயல்பட்டு உடல் வலுவை வளர்க்க வழி பெறுகின்றது… என்ற எவ்வெண்ணத்தையும் நாம் கூட்டுவதில்லை.

ஆசையின் உந்தலுக்குகந்த சுவையை மட்டும் தான் அந்தந்தத் தருணத்தில் நாடுகின்றோம்.
1.உடலின் தேவை நிலை உந்தலின் செயலை நாம் அறியாமல்
2.எண்ணத்தில் உணர்வு மோதலைக் கொண்டு ஆசை உணர்வால் செயல்படும் இந்நிலை
3.ஜீவ பிம்ப உடல் உறுப்புகளின் வளர்ச்சியில் தன்னிச்சையில் செயல் கொள்கின்றது.

ஆக… ஆத்ம உணர்வின் வேட்கை நிலைக்கு எண்ணத்தின் உணர்வை நாம் யாரும் செயலாக்குவதில்லை.

புற உலக வாழ்க்கையில் ஒன்றை ஒத்து… ஒன்று கண்டு… வளர்த்து… வாழ வேண்டும்…! என்று “எதிர்ப்பலன் எண்ண உணர்வுதான்” செயல்படுகின்றது.

ஒவ்வொன்றின் வளர்ப்பிற்கும் உருவாக… மாற்று நிலை ஏற்பட்ட பிறகு தான் பிறிதொரு செயல் நடக்கின்றது.

தருண காலத்திற்கொப்ப உயிரணுத் தோன்றிக் கருவாகி… உருவாகி… வளர்ச்சி பெற்று… உணர்வின் உந்தலின் இரு நிலை மோதலுக்குப் பிறகு உருவாகும் பிறிதொரு நிலை போன்று… வழித் தொடர் ஒவ்வொன்றிலும் உருவாகின்றது அல்லவா…!

அதைப் போன்று தான்
1.இவ்வுடல் பிம்பச் சரீர கோளத்தின் ஆத்ம ஞானம் பெற
2.சமமான எண்ண உணர்வுகள் ஏற்படும் காலத்தில்
3.பல உணர்வு மோதல்கள் ஏற்படும் செயலிலிருந்து “ஞானம்…” பிறக்க வேண்டும்.

அறிந்த நிலை…
அறிய வேண்டிய நிலை…
அறியும் நிலை… ஆகிய ஒவ்வொரு ஆத்ம நிலையும்
1.தன்னுள் உள்ள உயர் சக்தியான தன் ஞானகுருவான உயிராத்மாவை உயர்வுபடுத்த
2.எண்ணத்தில் ஏற்படும் மோதலைக் கொண்டு பகுத்தறியும் நல் வழியில் தன் ஞானத்தைக் கூட்டி
3.உயர்வு கொள்ளும் ஒளி நிலையாய்
4.சூரியனின் நேர் நிலை பூமியின் மேல் படும்பொழுது பூமி எப்படி தன்னைத்தானே ஒளிப்படுத்திக் கொள்வது போன்று அறியும் நிலைப்படுத்தி
5.அறிந்தோரின் (மகரிஷிகள்) தொடர்பு கொண்டு
6.மனித ஜீவித வாழ்க்கைக் காலத்திலிருந்தே தான் எடுக்கும் அறிவென்ற ஞான வழித் தொடரினால்
7.இச்சரீர பிம்ப கோள உயிரணுக்கள் யாவையுமே விழி நிலைகொள்ளும் ஒளி நிலையை
8.எண்ணத்தின் உணர்வால் நிச்சயம் பெற முடியும்.