ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2021

இந்தப் பிரபஞ்சத்தின் முடிவு

  

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் என்று இப்படி நான்கு ஐந்து நட்சத்திரங்கள் தனக்கென்று ஒரு பிரபஞ்சமாக அமைத்து விட்டது.

சூரியன் தனக்குள் கோள்களை வளர்த்து... நட்சத்திரங்களையும் வளர்த்து... தனித் தன்மையாக முதலில் எப்படி உருவானதோ அதைப் போல
1.இதிலே வளர்ச்சியடைந்த நட்சத்திரங்கள் அனைத்தும்
2.நம் சூரியனைப் போல ஒரு பிரபஞ்சமாக உருவாக்கி நகர்ந்து கொண்டே இருக்கின்றது.

குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் ஒவ்வொருவரும் கல்யாணம் செய்து தனக்கென்று ஒரு குடும்பமாகிப் பிரிந்து செல்கிறார்கள் அல்லவா...!

அப்பொழுது அங்கிருக்கும் தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லாம் ஒரு காலத்தில் காணாமல் போய் விடுகின்றார்கள். கொள்ளுப் பேரன் என்றெல்லாம் வந்த பிற்பாடு யாரையாவது பார்க்க முடிகின்றதா...! அல்லது அப்படியே இருந்தாலும் வயதானவர்களை அவர்கள் கவனிப்பதில்லை.

இதே மாதிரித் தான் இந்த நட்சத்திரங்கள் தனக்கென்று பிரபஞ்சத்தை உருவாக்கி விட்டால் இந்தச் சூரியனைக் கவனிப்பதில்லை. அது தன் வளர்ச்சியைப் பெருக்க ஆரம்பித்துவிடும்.

இந்த இருபத்தி ஏழு நட்சத்திரங்களும் சூரியனாக மாறும் பொழுது இது உருவாகக் காரணமாக இருந்த சூரியனுக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது அழிகின்றது.

உதாரணமாக நம் உடல் அழிந்த பின் பார்த்தோம் என்றால்... அந்த உடலை உருவாக்கிய அணுக்கள் அந்த உடலையே உணவாக உட்கொண்டு வெளி வந்துவிடுகின்றது.

1.ஆனால் நல்ல உடலாக இருக்கும் போது முதலில் வெறும் அணுக்களாகத் தான் இருந்தது
2.பின் உயிரணுக்களாக மாறும் தன்மை வருகின்றது.
3.உயிரணுக்களாக ஆன பின் அதனதன் உணர்வுகளை தன் இரைகளைத் தேடி அதன் வளர்ச்சி பெறுகின்றது.

மனிதன் இறந்தால் அந்த உடலிலே உருவாகும் அந்த உயிரணுக்கள் மற்ற உடலிலே சேர்த்து அதை உணவாக எடுத்து வளர்க்கும் தன்மை வருகின்றது.

அதைப் போலத் தான்...
1.சூரியன் அழிந்தால் அந்த உணர்வுகள்
2.புதிதாக உருவாகும் பிரபஞ்சங்களுக்கு உணவாகப் போய்ச் சேரும்.

சூரியன் அழிந்த பின் அந்த உணர்வின் சக்தி ஒரு புயல் போன்று இருக்கும். அதில் ஏதாவது ஒரு கோளோ அல்லது மற்ற பாறையோ அதில் சிக்கினால் அதை மீண்டும் ஆவியாக மாற்றித் தனது நிலைகளுக்குள் பரப்பும்.

அப்பொழுது இந்தப் புதிய பிரபஞ்சங்கள் ஒவ்வொன்றும் தனது ஈர்ப்பு வட்டத்தில் அதைக் கவர்ந்து அந்தந்தப் பிரபஞ்சத்திற்கு அது உணவாக ஊட்டுகின்றது.

குருநாதர் அவர் கண்ட அகண்ட அண்டத்தின் உண்மைகளை எல்லாம்
1.உன்னால் நுகர முடியும்... பார்க்க முடியும்... என்று தான் எனக்குச் சொன்னார்.
2.அவர் சொன்ன வழியில் இதை எல்லாம் நான் (ஞானகுரு) பார்த்துத் தான் சொல்கிறேன்.
3.நீங்களும் பார்க்க முடியும்.

எண்ணத்தின் வலுக் கொண்டு இந்த உணர்வின் தன்மைகளை உங்களுக்குள் பதிவாக்கும் பொழுது இது வளர்ச்சி அடைய அடைய நமது பிரபஞ்சமும் நமது பிரபஞ்சத்திற்கு மற்ற பிரபஞ்சத்திலிருந்து எப்படி உணவு கிடைக்கிறது...? என்பதையும் நீங்கள் அறிய முடியும்.

ஆனால் கல்வி அறிவு இல்லாதவன் தான் இத்தனையும் பேசுகிறேன். இருந்தாலும் படித்தவர்கள் நீங்கள் இதைக் குறித்து வைத்துக் கொண்டு நிச்சயம் எடுக்க முடியும்.

எனக்குக் குறித்து வைக்கக் கூட நேரமில்லை. குருநாதர் சொன்னதை மனதில் பதிய வைத்து அதைத்தான் உங்களிடம் இப்பொழுது சொல்கிறேன்.

நீங்கள் சொன்னதை இரண்டாவது தரம் திருப்பிச் சொல்ல வேண்டும் என்றால்
1.வாழ்க்கையில் வருவது எனக்கு நினைவு இல்லை
2.குருநாதர் கொடுத்த அந்தப் பேரருள் கொண்டு எனக்குள் அது பதிவான பின்
3.நினைவு கொண்டு எண்ணும் போது அந்த உணர்வை அறிய முடிகின்றது.

இந்த உணர்வின் தன்மை இப்பொழுது வெளிப்படும் பொழுது செவி வழி நீங்கள் கேட்ட பின் நுகர்ந்தறிந்து இந்த உணர்வின் தன்மை உங்கள் உடலுக்குள் கருவாக உருவாக்கி விடுகின்றது. கூர்ந்து கவனிக்கும் உணர்வுகள் ஊழ்வினை என்ற ஞான வித்தாக உங்களுக்குள் உருவாகின்றது.

இதை எல்லாம் நீங்கள் வளர்த்துக் கொண்டால் நான் எதையெல்லாம் பார்த்தேனோ...
1.அதையெல்லாம் நீங்களும் காட்சியாகக் காண முடியும்
2.தீமைகளை அகற்றும் அந்த வல்லமையும் நீங்கள் பெற முடியும்.

இந்த அருள் உணர்வுகளை உங்களுக்குள் பெருக்கினால் பிறவியில்லா நிலையையும் நீங்கள் அடைய முடியும்.

இன்றைய மருத்துவ முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை உணர்ந்து “அளவறிந்து மருந்து கொடுப்பது...” என்பது அனுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்...” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை...” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதி முறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு “அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி” நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்... “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் வருகிறது...” அவ்வாறு ஏற்படக் காரணம் என்ன...?

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைபடுகிறது.

இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்...?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம் மீது மோதும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது... அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு...” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.வாழ்க்கை நிலையும் கூட... உயர்வு பெற முடியும்.

March 30, 2021

கணஹோமம்

 

எந்த ஆலயத்திற்குள் நாம் சென்றாலும்...
1.இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும்... மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பம் எல்லாம் மகிழ்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.இந்த உண்மைகளை எல்லாம் உணர்த்திய மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற வேண்டும்
4.எங்கள் அனைவரது உடல்களிலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்
5.எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி
6.ஆலயத்திற்குள் வருவோருக்கெல்லாம் நல் வாழ்வு கிடைக்க வேண்டும்
7.அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தான் உண்மையான பக்தி...!

இதைக் கணங்களுக்கு அதிபதி ஆக ஆக்கினால் கணஹோமம்...!

கோவிலில் அர்ச்சனை அபிஷேகம் என்று எப்படிச் செய்கின்றோமோ அது போல்
1.புருவ மத்தியில் இருக்கும் உயிருக்குள் அருள் உணர்வுகளை எடுத்து... அதை உயிரான நிலைகள் கொண்டு ஹோமம் ஆக்கி
2.அந்த அருள் உணர்வின் தன்மைகளை உடலுக்குள் பரப்பி
3.அதிலே வரும் மணத்தின் தன்மையை வெளிப்படுத்தி
4.எல்லோரும் போற்றும் நிலையாக... நம்மைப் பார்க்கும் பொழுதே மற்றவர்களுக்கு அந்த மகிழ்ந்த நிலை வர வேண்டும்.

இதைத் தான் ஒவ்வொருவரும் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்த்தால் இந்தப் பரமான பூமியில்
1.பரமாத்மாவைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாகவும்
2.நமது ஆன்மாவைத் தெளிவுபடுத்தும் நிலையாகவும்
3.நமக்குள் இருக்கும் ஜீவாத்மாவை உயர்வுபடுத்தும் நிலையாகவும்
4.நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றுவதும் ஆகும்.

ஆகவே இருளைப் போக்கி... ஒளி பெறும் நிலைகளாக உருவாக்குவதுதான் பக்தி. இதைத்தான் நாம் தியானமாக இருக்க வேண்டும்.

தனித்துத் தியானித்தாலும்... மேலே சொன்ன நல்ல ஒழுக்கத்தைத் தனக்குள் சேர்க்க்கவில்லை என்றால் அந்தத் தியானம் கைகூடாது.

அருள் ஞானிகளின் அருள் உணர்வைப் பதிவு செய்து... அருள் ஞானிகள் கண்டறிந்த உணர்வை நமக்குள் தெளிவாக்கி... அதனின் நினைவு கொண்டே வாழ்க்கையில் கடைப்பிடித்து வர வேண்டும்.

வாழ்க்கையில் எத்தகைய தீமை செய்வோரைக் கண்டாலும்
1.அதனின் உணர்வின் தன்மை நமக்குள் பதிவாக்கி விடக்கூடாது.
2.அவர் நிலைகளைப் பகைமையும் ஆக்கிவிடக் கூடாது.

நாம் மற்றவர்களுக்கு நல்லதையே செய்கின்றோம் வைத்துக் கொள்வோம். நம்மிடம் உதவி பெற்றவர்களில் ஒருவரைப் பார்த்தவுடன் அவரைக் கூப்பிடுகின்றோம்.

ஆனால் அவரோ ஏதோ அவசரத்தில் போகின்றார். (அது நமக்குத் தெரியாது...!) நம்மிடம் வரவில்லை. அப்பொழுது நாம் என்ன நினைக்கின்றோம்...?

அன்று என்னிடம் காசு வாங்கும் பொழுது என்னை மதித்தார். இப்பொழுது பார்... அவர் பாட்டுக்குப் போகின்றார்... கொஞ்சம் கூடக் கவனிக்காது செல்கிறார்...! என்று அவர் மேல் வெறுப்பை ஊட்டிக் கொள்கின்றோம்.

இத்தகைய வெறுப்பு நமக்குள் வளராது அந்தப் பகைமையற்ற நிலைகளாக உருவாக்க வேண்டும் என்பதற்குத் தான் ஆலயத்தை அமைத்தார்கள் அன்று ஞானிகள்.

அந்த ஆலயத்திற்குச் சென்று...
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்துக் கொண்டு
2.நம் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்துவதும் ஜீவாத்மாவைத் தூய்மைப்படுத்துவதும் தான் கணஹோமம் என்பது.

ஆனால் அபிஷேகம் என்ற நிலையில் அங்கே ஆராதனை செய்து விட்டுக் கணஹோமம் என்று நெருப்பிலே பல பொருள்களைப் போட்டு வேக வைத்தால் இது தான் பக்தி என்று இன்று செய்கின்றோம்.

இப்படி மறைமுகமாக எடுத்துக் கொள்ளும் நிலைகள் கொண்டு “காசை விட்டெறிந்தால் ஆண்டவனை விலைக்கு வாங்கலாம்...” என்று இறுமாப்புடன் செய்யக் கூடியவர்களும் மந்திரத்திலே சிக்கி... அடுத்தவன் கையில் சிக்கி... அவர்களுக்குப் பொருள் தேடும் நிலைகளுக்குத் தான் பயன்படுவார்கள். ஆக அவனும் அழிந்து இவனும் அழிந்தது போன்ற நிலைள் தான் ஏற்படும்.

யார் மந்திரத்தை ஒலித்தாலும் சரி... அல்லது அதைக் கேட்டாலும் சரி... அதன் நிலையிலே தான் சிக்க முடியும்... அதிலிருந்து தப்ப முடியாது.

நம்முடைய பற்று அதுவாக இருக்கக்கூடாது. ஞானிகள் காட்டியது அது அல்ல...!

ஆக... அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளை எண்ணி ஏங்கி அந்தப் பக்தி கொண்டு யாரெல்லாம் எண்ணுகின்றார்களோ அந்த உணர்வு கொண்டு தான் அங்கே விண் செல்ல முடியுமே தவிர இங்கே சுற்றிக் கொண்டிருப்பதற்கு அல்ல...!

1.பிறர் நலமுடன் வாழ வேண்டும் என்று ஒவ்வொருவரும் எண்ணுங்கள்... இந்தப் பக்தியை கூட்டுங்கள்.
2.தீமையாகப் பேசுகிறார்கள் என்றால் அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
3.அவரும் உண்மையை அறியும் ஞானம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
4,அதைச் செயல்படுத்துங்கள்... இது தான் தியானம் என்பது.

ஒவ்வொருவரும் இதைக் கடைப்பிடியுங்கள். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காத்திடும் சக்தியாகப் பெருகட்டும். உங்கள் உணர்வுகள் மற்றவர்களின் தீமையை அகற்றும் சக்தியாக வளரட்டும்.

இதன் வழி செயல்படுவோர் பேரின்பப் பெருவாழ்வு பெற்று ஒளியின் சரீரம் பெற்றுப் பிறவி இல்லா நிலையை அடைவீர்கள் (ஞானகுரு).

கணங்களுக்கு அதிபதி கணபதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும் அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் சிலை வடிவில் சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்கள் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து... ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்... பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி... அறிவொழிந்து...! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.

1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே... பக்தி என்ற குளிரை விரட்டும்...! என்று அறியாமல் போனதென்ன…?
2.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை...!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி... ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு... பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்... பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்... அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயல்படும் தொடர்புகளை அறிந்து கொள்வதே “பிரம்மம்...!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்...!”

அவர் உயிரணுவின் செயல்... சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில்... வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர்...! என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த... தான் பெற்ற தன்மை கொண்டு... ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது...” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை...” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே காரணம்...” என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால் தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்...!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி...”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி... தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டும் நிலையே கணங்களின் பதியான கணபதி ஆவான் என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே “விநாயகர்...” என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

March 29, 2021

அகண்ட அண்டத்தின் சக்தியைத் தியானத்தின் மூலம் அவசியம் பெற வேண்டும்

 

1.2000 சூரியக் குடும்பத்திற்குள் விளையும் அந்த உணர்வின் தன்மையையும்
2.அந்த அண்டத்திலிருந்து வரக்கூடிய கோள்களின் உணர்வுகளையும் ஊடுருவி
3.துருவ தியானத்தின் மூலம் வலுக் கொண்டு எடுத்து அதை நாம் நுகர முடியும்.

அதை நுகர்ந்து சிறுகச் சிறுகப் பெருக்கிக் கொண்ட பின் அதனின் வலுக் கொண்டு இந்தப் பிரபஞ்சத்தில் மனிதன் தனது உணர்வின் தன்மை வளரச் செய்து கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இவ்வாறு நாம் வளர்ந்த பின் அந்த அகண்ட அண்டத்தில் வரும் உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று பெரும் சக்தியாகத் திகழ முடியும்.

1.ஒன்றின் பின் ஒன்று வளர்ச்சி அடைவதும்
2.ஒன்றில் சிக்குண்டு ஒன்றுக்குள் மடிந்து அது மாற்றங்களாவதும்
3.இயற்கையின் உண்மை நிலைகள் மாறிக் கொண்டு வரும் இந்த நேரத்தில்
4.உயிருடன் ஒன்றிய உணர்வுகள ஒளியாக மாற்றிடும் நிலையாக
5.அனைத்தையும் அறிந்திடும் அருள் சக்தி பெற்ற நாம் அந்த அகண்ட அண்டத்தின் சக்தியைச் செயல்படுத்துவோம் என்றால்
6.இந்த வாழ்க்கையில் என்றுமே ஏகாந்த நிலை என்ற நிலைகளில் வாழ முடியும்
7.அது தான் நமக்கு நிரந்தரமானது...!
8.இந்த உடல் நிரந்தரமானதல்ல... நாம் வாழும் இந்தப் பிரபஞ்சமும் நிரந்தரமானது அல்ல.

ஆகவே நம் உயிரின் உணர்வுடன் ஒன்றி அருள் உணர்வுகளை வலுக் கொண்டதாகச் சேர்க்க வேண்டும்.

அதைத் தான் இந்தப் பூமிக்கு ஓசோன் திரை என்றும் சூரியனுக்கு ஓசோன் திரை என்றும் மற்ற கோள்களுக்கும் அதனதனதற்குத் தக்கவாறு அந்தப் பாதுகாப்புக் கவசம் இருக்கின்றது.

ஆடு மாடுகளுக்கும் அது ஓசோன் திரையாக உள்ளது. ஏனென்றால் அது தன் உணர்வை மாற்றி விடாதபடி தனக்குள் எடுத்துக் கொள்வதும் இருந்தாலும் மற்றொன்று ஊடுருவிச் செயல்படுத்தும் பொழுது அதனுடைய மாற்றங்களானால் பல நோய்கள் ஆகி அது கெடுவதும் போன்ற நிலை ஏற்படுகின்றது.

நம் பூமிக்கும் இதே போன்று தான் அது நுகர்ந்த உணர்வுகள் பாதுகாப்பற்ற நிலைகளாகி... தீமையின் உணர்வுகள் ஊடுருவும் போது மாற்றமடைந்து ஓசோன் திரை கிழிகின்றது.

1.இருந்தாலும் இதை எல்லாவற்றையுமே பிளந்து
2.எதையுமே தகர்த்து எறியும் சக்தி பெற்றது தான் துருவ நட்சத்திரம்.
3.அது எத்தகைய விஷத்தையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது.
4.அதை நாம் பெறுதல் வேண்டும்... நமக்குப் பாதுகாப்புக் கவசம் அது தான்...!

உதாரணமாக சர்க்கரை ஆலைகளில் சர்க்கரைப் பாகு உற்பத்தி செய்யும் போது அதிலே சில கெமிக்கல்களைப் போட்டு அது போகும் போதே அதில் உள்ள அழுக்கை பிரித்துவிட்டு தூய்மையான சர்க்கரையாக மாற்றுகின்றார்கள்,

அது போன்று தான் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் எடுத்து ஒவ்வொரு நொடியும் நமக்குள் தூய்மைப்படுத்தும் உணர்வின் தன்மையாக ஒவ்வொரு அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் சேர்க்கும் பழக்கம் வர வேண்டும்.

நமக்குள் தீமைகளை மறந்து நமது உணர்வின் தன்மையை அது வருகின்றது

ஒரு சிலர் நான் எதைச் செய்தாலும் சரியாகவில்லை... என் காரியங்கள் தோல்வி அடைந்து விட்டது... என் பையன் இப்படி இருக்கின்றானே...! என்றே எண்ணுவார்கள்.

இப்படி எண்ணுவதற்கு மாறாக... பையன் இப்படித் தான் நல்லவனாக வர வேண்டும் எங்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் உட்புகாது மன உறுதியும் மன வலிமையும் பெறும் சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சோர்வோ சங்கடமோ வந்தால் அதை எல்லாம் மறந்துவிட்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை எடுத்து நாம் பழகிக் கொண்டால் அந்தச் சோர்வு அகலும். புதிய உணர்வு நமக்குள் தோன்றும்.

பரிவு பண்பு கொண்டவர்கள் பிறருடைய துன்பங்களைக் கேட்க நேர்ந்தால் அது எல்லாம் அவர்கள் உடலில் எளிதில் ஊடுருவிவிடும்.

அப்பொழுது பூமிக்கு ஓசோன் திரை எப்படிக் கிழிகின்றதோ இதைப் போல நமது ஆன்மாவில் இருக்கும் நல்லதைப் பிளந்து விட்டு உள்ளுக்குள் சென்று விடுகின்றது.

உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகளைக் குறைவாக்கச் செய்கின்றது. அதனால் நம் உடலில் வேதனை ஏற்படும் நிலையும் நல்ல சிந்தனையை மாற்றிடும் நிலைகளும் வருகின்றது.

1.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் விடுபட குருநாதர் கொடுத்த அருள் வழிப்படி
2.இந்த உலகத்தையும் அகண்ட அண்டத்தையும் அறியக் கூடிய சக்தியையும்
3.தீமைகளை அகற்றக் கூடிய வல்லமைகளையும் நீங்கள் பெற வேண்டும் என்று
4.உங்களுக்குள் துரிதமான நிலைகள் கொண்டு அரும் பெரும் சக்திகளைப் பதிவு செய்கிறேன்.
5.இந்த அருள் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே ஒவ்வொருவருக்கும் “கடமை என்ற விதியாகும்” - ஈஸ்வரபட்டர்

 

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டவன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாக “பேரருள்...” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதத்தால்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலக நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான்.

குரு என்றால் என்னப்பா...? குரு என்றாலே “ஒளி நிலை...” (வழி காட்டும் நிலை) என்பது பொருள்...!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு என்பவர்... எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி... சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் அது குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி... உலக நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானு கோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர்.
1.ஆனால் சிலரே அனைத்து உயிர்களும்
2.அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்...!” என்ற நிலை இல்லையப்பா...!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்...! என்ற சொல்லும் எதற்கப்பா...?

“தனித்துவமான சக்தி...” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்... மாமகரிஷிகளின் ஆசியுடன்... “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை...” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது...?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்... சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்... கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே...?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்...! குருதேவரே ஊட்டட்டும் என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே...?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்...? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

March 28, 2021

வீட்டையும் ஊரையும் நாட்டையும் உலகையும் தூய்மைப்படுத்தும் சக்தி

 

தியானம் எடுத்துக் கொண்டவர்கள் அனைவருமே கூட்டுத் தியானம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு குடும்பத்திலும் நான்கு பேர் சேர்ந்தாலும் கூட்டுத் தியானங்கள் அமைக்கலாம்.
1.ஏனென்றால் ஒருவர் கை தட்டுவதைக் காட்டிலும்
2.பலர் சேர்ந்து கை தட்டும் போது ஓசை அதிகரிக்கும்.

அதைப் போன்று தான் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்... குடும்பத்தில் கணவன் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்... என்று எல்லோரும் சேர்ந்து எண்ணுதல் வேண்டும்.

அதே போல் அருள் ஞானிகள் காட்டிய அருள் உணர்வுகளைக் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் தியானத்தில் கலந்து கொள்ளும்படி பழக்க வேண்டும்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக வாழ வேண்டும்... தொழில் வளம் பெருக வேண்டும்...! என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்சி... இந்த உணர்வுகளை கூட்டிக் கொண்டே வரவேண்டும்.

1.இதைப் போன்று எண்ணி எடுக்கும் இந்த உணர்வுகள் ஒவ்வொன்றும்
2.நமக்குள் தெளிந்த மனம் பெறச் செய்யும்...
3.அது நமக்குள் பேரருளாக மாறும்... பேரொளியாக மாறும்

இந்தப் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பிறருக்கு எடுத்துச் சொல்லப்படும்போது அவர் மனதைத் தெளிவாக்கி... அவர்களையும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும்.

அந்தத் தெளிவான மனதையும் தெளிந்திடும் மனதையும் அங்கே உணர்த்தும். அதே சமயத்தில் நமக்குள்ளும் அந்த தெளிவான உணர்வும் தெளிந்த மனமும் உருவாகும்.

இதைப் போன்ற ஒரு பழக்கத்திற்கு வந்தால் மனிதன் என்ற முழுமையை நாம் அடையலாம். பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையலாம்.

வீட்டைப் புதிதாகக் கட்டினாலும் அதை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொண்டே தான் வருகின்றோம்.

இங்கே இந்தத் தியான மண்டபத்தையே அமைத்திருக்கிறோம் என்றாலும் சில காலம் அதைத் தூய்மைப்படுத்தவில்லை நெடி ஏறி விடும். பின் இங்கே வரும் போதே உள்ளுக்குள் நுழையும் போதே சங்கடம் வந்து விடும்.

அதே போல் தான் நம் வீட்டைச் சில காலம் திறந்து உபயோகப்படுத்தாதபடி விட்டு விட்டால் வீட்டிற்குள் நுழைந்தால் நெடி வரத் தான் செய்யும்.

அன்றாடம் நாம் குளிக்காமல் இருந்தால் உடம்பில் அரிப்பு வரும். நாம் அணிந்திருக்கும் துணியைத் துவைக்காமல் விட்டு விட்டால் அது இற்றுப் போகும். எல்லோருக்கும் இது தெரிந்தது தான்.

ஆகவே நம் ஆன்மாவை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் தூய்மைப்படுத்த வேண்டுமா இல்லையா...?
1.அருள் ஞானிகளின் அருள் உணர்வைக் கொண்டு
2.நமது ஆன்மாவை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்
3.நம் வாழ் நாள் முழுவதுமே தூய்மைப்படுத்திக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

இப்படி எந்த அளவிற்கு நாம் அதைத் தூய்மைப் படுத்துகின்றோமோ அது அனைத்தும் நமக்குள் பேரருளாக மாற்றும். எதனையுமே நல் சொல்லாகவும் நல் செயலாகவும் நாம் செயல்படுத்தும் அந்த அருளாக மாறும்.

1.நமது வாழ்க்கை பிறருடைய தீமைகளை அகற்ற உதவும்.
2.நம் சொல்லின் உணர்வுகள் நமக்கும் நன்மை செய்யும் உணர்ச்சிகளை ஊட்டும்.

பிறருடைய நிலைகளை மகிழச் செய்யும் பொழுது தான் அது பேரொளி ஆகின்றது. நமக்குள் பேரொளியின் அணுக்களாக விளைஉஅத் தொடங்குகின்றது.

ஒவ்வொருவரும் இதனை மனதில் வைத்து இந்த இல்லற வாழ்க்கையில் ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து வாழச் செய்யுங்கள். அதற்குண்டான உணர்வுகளையும் உபாயங்களையும் கூட்டுங்கள்.

நீங்கள் கணவன் மனைவி ஒன்றுபட்டு வாழ்ந்தால் வீட்டுக்கு மட்டுமல்ல... ஊருக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும் நன்மை பயக்கும்.

1.ஒரு பத்து குடும்பங்கள் இது போன்று ஒன்றுபட்ட உணர்வுகள் கொண்டு வளர்ந்தால் அந்தத் தெருவே சுத்தமாகும்
2அங்கு வசிக்கக்கூடிய மக்களும் தெளிவு அடைவார்கள்.
3.ஒருவருக்கொருவர் அறியாமல் வரும் பகைமை உணர்வையும் மாற்றிடும் அரும் பெரும் சக்தியாக இது மாறும்.
4.அந்த வீடோ தெருவோ ஒரு சொர்க்கலோகமாக மாறும்
5.மற்ற இடத்திலிருந்து அங்கே யார் வந்தாலும் அவர்களுக்கும் மகிழ்ச்சியூட்டும் சக்தியாக இது வரும்.

ஆகவே தெளிந்த மனதுடன் வாழ்ந்திடும் உணர்வினை முதலில் உங்கள் குடும்பங்களில் இத்தககைய உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதனை அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற முயற்சிகளை நாம் ஒவொருவரும் அவசியம் கொண்டு வர வேண்டும்.

ஆத்மாவின் முழுமை எப்பொழுது புலப்படும்...? - ஈஸ்வரபட்டர்

 

ஒவ்வொரு உயிராத்மாவும் தன்னைப் பற்றிய உண்மையை உணரச் சிந்திக்கும் தொடரில் “நான் என்பது யார்..?” என்கிற வினா எழும் பொழுது தன் சுயத்தின் வளர்ப்பாகத் தியானத்தின் வழியாக உணர்ந்து கொள்ளும் பொழுது “ஆத்மாவின் முழுமை” புலப்படும்.

உடலுக்கு உயிர் குரு. உயிரின் குரு சூரியன் என்ற விளக்கத்தின் பொருளில் ஆத்மா என்பதே மறை பொருளாக்கப்பட்டு விட்டது.

எண்ணத்தின் செயல்பாட்டில் செயல்பாட்டின் வினைப் பொருள் எதுவோ அதுவே விளை பொருளாக ஆக்கம் பெறுகிறது
1.எண்ணத்தின் செயல்பாட்டில் “நான்...” என்பது வினையானால்
2.அந்த வினையின் விளை பொருள்
3.விளைப் பொருளாக ஆக்கும் “சக்தி” வலுக் கொண்டு ஒன்றுவது எங்கே..? என்ற வினாவின் மூலத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும்.

ஆத்ம பலம் பெற வேண்டும் என்று சொல்வது எதற்கப்பா...?

ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்று உரைத்த உரையில்... இயற்கையின் கதியில் சூரியனை மையம் கொண்டே சுழன்றோடும் கோளங்களும்... ஒன்றுடன் ஒன்று ஒளி காந்த ஈர்ப்பில் சக்தி பெற்றுப் பரிணாம வளர்ச்சி கொண்டு வளர்ந்திடும் செயலை ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வளர்ப்பின் சக்தியில் முழுமை பெற்றிட
1.அந்த இயற்கையின் கதியில் ஒன்றி
2.சுய சக்தி வளர்ப்பாக்கும் நிலைக்கு வளர வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் ஒரு உயிராத்மா மற்றொரு உயிராத்மாவை எண்ணியே சக்தி பெறும் பாஷாண்டகம் - பிற ஆத்மாக்களை அடிமை கொண்டு தன் உயிராத்மாவின் சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலுக்குச் சென்றால் இறந்த ஆவி ஆத்மாக்கள் செயல் கொள்ளும் நிலைக்கே செல்ல வேண்டி வரும்.

1.உண்மையின் சக்தி...
2.என்றும் நிலை பெறும் பரிபூரணத்துவ...
3.அகண்ட... பிரகாச... பேரின்ப ஜோதியாக...
4.ஆத்மாவாக - உயிராத்மாவாகச் செயல் கொள்ளும் செயலுக்கு
5.ஆத்மாவிலிருந்து பெற்றிடும் ஒளியே அறிவின் செயல்பாட்டின் காரணமாக
6.அந்தக் காரணத்தின் உண்மையை உணர்ந்து கொள்ளும் செயலில் ஆனந்தமும்
7.இவைகளின் செயல்பாட்டில் எண்ணத்தின் வலுவாக வினையின் பொருள் “நான் என்பதே ஆத்மா” என்று உணர்ந்திடும் பக்குவத்தில்
8.அறிவு... காரணம்... ஆனந்தம்...! அனைத்துச் செயல்பாட்டின் நிகழ்வில் ஒன்றுடன் ஒன்று ஒன்றி
9.ஆத்மாவிலிருந்து ஒளி பெற்று வளர்ச்சியின் வலுவை எப்படிக் கொண்டதோ...
10.அந்த வலுவே ஒளியாக மீண்டும் ஆத்மாவின் வலுவை வலுவாக்கும் சூட்சமமே மூல சக்தி...!

ஆக மொத்தம் பேரானந்தப் பேரருளின் ஒளியின் ஒளிக் கதிர்களில் “ஒரு ஒளிக் கதிர் தானப்பா ஓர் ஆத்மா என்பது...!”

March 27, 2021

நச்சுத் தன்மை உலகில் பரவினாலும் அதை அடக்கிடும் சக்தியை நம்மால் பெருக்க முடியும்

இந்தக் காற்று மண்டலத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பரவிக் கொண்டே உள்ளது. அந்த அகஸ்தியன் பெற்ற இயற்கையின் உண்மைகளையும் அவன் நஞ்சினை நீக்கிய உணர்வுகளையும் உங்களுக்குள் சிறுகச் சிறுகப் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

ஒரு இயந்திரத்தையோ உபகரணத்தையோ விஞ்ஞான அறிவால் காட்டப்படும் பொழுது... “இன்னது... இன்னது...” (FEATURES) என்று சொல்லி அதிலே முழுமையின் நிலைகள் காட்டி அதனைப் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு வருவார்கள்.

அதைப் போன்று தான்
1.மெய் ஞானத்தின் நிலைகள் கொண்டு முழுமை அடைந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும்
2.அகஸ்தியனுக்குள் விளைந்த உணர்வுகளையும் அவன் ஒளியின் உணர்வாகப் பெற்றதையும் உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவாக்கியதை நீங்கள் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து வலுவாக்கிக் கொள்ளுங்கள்.

1.வாழ்க்கையில் தீமைகளும் கஷ்டங்களும் துயரங்களும் நுகரப்படும் பொழுது
2.அது உள் புகுந்து தீமையை உருவாக்கும் அணுக்களாக உருவாகிடாது
3.அருளொளி என்ற உணர்வுகளை நீங்கள் நுகர்ந்து அதை அடக்கி
4.தனக்குள் இணைந்த நிலைகள் கொண்டு செயல்படும் நல்ல சக்திகளாக அதை மாற்றி அமைத்தல் வேண்டும்.

உங்களை நீங்கள் திரும்பிப் பாருங்கள்...! கோபிப்பது நீங்களா...? வேதனைப்படுவது நீங்களா...?

இல்லை...!

நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது. ஆக ஆறாவது அறிவு கொண்ட நாம் அந்தத் தீமைகளை நீக்கும் வலிமையை எப்படிப் பெற வேண்டும் என்று சீராக்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக எண்ணைய் சம்பந்தப்பட்ட வகையில் (பிசுபிசுப்பு) கையிலோ மற்ற இடத்திலே அழுக்காகப் படிந்திருந்தால் வெறுமனே தண்ணீரை வைத்துக் கொண்டு அதைக் கழுவ முடியாது.

ஆனால் மண்ணெண்ணை வைத்து அழுத்தமான நிலைகள் கொண்டு தேய்த்தால் எளிதில் அதை நீக்கி விடலாம். அது தன்னுடன் இணைத்து இணைத்து அந்த அழுக்குகளைப் பிரித்துவிடும்.

இதைப் போலத் தான் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் கலந்து மெய் உணர்வின் தன்மையை நீங்கள் பெற்றால் அது இரண்டறக் கலந்த தீமைகளைப் பிரித்து அகற்றிவிடும். ஆன்மா சுத்தமாகிவிடும்.

1.ஏனென்றால் விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளவும்
2.பிறவியில்லா நிலையை நீங்கள் அடைய வேண்டும் என்ற இந்த ஆசையில்தான் இதை உபதேசிக்கின்றேன் (ஞானகுரு).

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்போர் உங்களை நீங்கள் காத்து உங்கள் அருகில் உள்ளவருக்கும் இந்த அருள் வழியினைச் சொல்லி அந்த ஞானிகளின் உணர்வைப் பதிவாக்குங்கள்.

நீங்கள் எடுக்கும் தியானத்தால் அந்தப் பொது விதிப்படி வெளி பரப்பப்பட்ட அருள் உணர்வுகளை அனைவரும் நுகர... எதிர்காலத்தில் தீமையை வென்றிடும் சக்தியாக எல்லோரையும் வளரச் செய்வது... “நமது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்...” என்று வேண்டிக் கொள்கின்றேன்.

உயிரே கடவுள்... நுகர்ந்ததை உருவாக்கும் போது உடலாக அதுவே சிவமாகின்றது. ஈசன் வீற்றிருக்கும் ஆலயம் அது என்ற நிலையில் நாம் ஒவ்வொரு மனிதனையும் எண்ணி மதித்திடல் வேண்டும்.

பகைமை உணர்வு புகாதபடி தடுக்கச் செய்யும் இத்தகைய உயர்ந்த ஞானத்தை நாம் வெளிப்படுத்தும் போது இந்த உணர்வின் தன்மை பதிவாகி அந்த உடலான ஆலயம் பரிசுத்தமாக நம் உணர்வுகள் செயல்படும்.

அதே சமயத்தில் நமக்குள் தீமை புகாது தடுக்கவும் இது உதவும். ஆகவே நீங்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். இருந்த இடத்திலிருந்தே நீங்கள் அருள் உணர்வைப் பெருக்க முடியும்.

ஒவ்வொரு நிமிடமும் இந்த எண்ணங்கள் வளர்ச்சியாகி...
1.டி.வி.யில் ஒளிபரப்பு செய்வது போன்று எல்லா இடத்திலும் இது பரவி
2.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் தீமைகளிலிருந்து மீட்டிக் கொள்ளும் சக்தியாக இது வளரும்.

ஆங்காங்கு உள்ளோர் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை அமைத்து கூட்டமைப்பாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஏங்கிப் பெறுங்கள்.

1.இந்த உலகில் பரவி வரும் நச்சுத் தன்மைகள் நீங்க வேண்டும்
2.மக்கள் மத்தியில் அருள் ஒளி பரவ வேண்டும் ...இருளை அகற்றும் அருள் ஒளி பரவ வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று நாம் பரப்ப வேண்டும்.

ஏகோபித்த நிலைகள் கொண்டு அருள் உணர்வுகளை இப்படிப் பரப்பப்படும் பொழுது நாம் வாழும் பகுதிகளில் நஞ்சை வென்றிடும் அருள் சக்திகள் படரும். சிறுகச் சிறுக மற்றவரையும் காத்திடும் அரும் பெரும் சக்தியாக வளரும்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டே வருகின்றோம். காலம் நெருங்க நெருங்க...
1.உங்களைக் காத்திடும் சக்தியாக நீங்கள் வளர்த்து அதன் மூல்ம் உங்கள் சார்புடையோரைக் காத்திடவும்
2.அவர்கள்... அவர்களுடைய சார்புடையோரைக் காத்திடவும்
3.இந்த பூமியில் அசுர குணங்களை மாற்றி அருள் ஒளி என்ற உணர்வை பரப்பச் செய்திடவும்
4.அருள் ஒளி என்ற உணர்வினைப் பரவச் செய்து விஷத்தன்மை கொண்டு இயக்கும் உணர்வுகளை மாற்றிடவும்
5.உலகில் வாழும் மனிதருக்குள் பேரருள் என்ற உணர்வினை உருவாக்கிடவும்
6.இது உதவ வேண்டும் என்று உங்கள் அனைவரது உயிரான ஈசனை வேண்டுகின்றேன்
7.உங்கள் உடலுக்குள் அரும் பெரும் சக்தி பரவ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் (ஞானகுரு).

குரு என்ற பெயரில் தனி மனிதனின் துதி தேவையில்லை - ஈஸ்வரபட்டர்

 

மனிதன் தன்னாலே சிந்திக்கத் தலைப்பட்டுத் தன்னுள் எழுந்த வினாவாக “நான் என்பது யார்…?” என்றே தன்னைத் தான் அறிந்து கொள்ளும் முயற்சியாகத்
1.தான் கண்டுணர்ந்த வழி வகைகளை... மெய் உணர்வுகளை
2.மறை பொருளாக்குபவர்களும் உண்டு.

ஏனென்றால் மேன்மேலும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ள மனித எண்ணத்தின் செயல்பாட்டில்
1.“விதி முறைகள்…!” என்றே சூட்சமப்படுத்தி
2.அப்படி இருக்கக்கூடாது… இப்படிச் செய்யக் கூடாது…
3.அது தீட்டு… இது தோஷம்… இது பாவம்…! என்பார்கள்.

இப்படி உணர்த்திக் கொண்டு அவ்வாறு உபதேசிப்பவனையே (தன்னையே) எண்ணும்படியும்… தன்னையே ஜெபித்திடும் நிலைகளுக்கும்… ஏற்படுத்திக் கொண்டு
1.குரு என்ற பெயரில் குருவின் சரீரத்தையே எண்ணி ஜெபித்திடும்
2.பிற ஆத்மாக்களின் எண்ணத்தின் செயல்பாட்டின் வலுவைத் தான் ஒருவனே பெற்று
3.தன்னை உயர்த்திக் கொள்ளச் செயல்படும் புறச் செயல்களில் “உருவ வழிபாடும் ஒன்று…”

“நான் என்பது எண்ணத்தின் செயல்பாடு..” என்றால் அந்தச் செயல்பாட்டின் உந்துதல் கொண்டு எதை வளர்ச்சிப்படுத்துதல் வேண்டும்…?

பழி தீர்க்கும் உணர்வு கொண்டு மற்ற ஆன்மாக்களைத் தன்னுடன் இணைக்கும் செயலாக (மாந்திரீகமும் தாந்திரீகமும் செய்யும் சில சாமியார்கள்) தன் எண்ணத்தின் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு உலவிடும் ஆவி ஆத்மாக்களின் தன்மைகளையும்... இறந்தபின் அதன் தன்மைகளையும் பல முறை விளக்கி வந்துள்ளேன்.

உடலுடன் உள்ள பொழுதே சரீர பக்தியெனும் போர்வையில் தான் கொண்ட எண்ணத்தையே ஊட்டி
1.தன் சரீர பிம்பத்தையே… தன் உருவத்தை எண்ணி ஜெபிப்போரிடம் பதிவு நிலைப்படுத்திக் கொண்டு
2.தன் ஆன்மாவிற்குப் பிற ஆன்மாக்களையும் அடிமையாக்கிக் கொண்டு
3.உபதேசிகன் ஒருவன் தன்னை உயர்த்திடும் செயல்… அன்றைய “பாஷாண்டகம்..!”
4.அந்த எண்ணத்தின் செயல்பாட்டில் இரு விதம் உண்டு.

பிறிதொன்றின் ஈர்ப்பில் ஒன்றுவது ஒன்று… மற்றொன்று தன் உயிராத்ம சக்தியை வலுக்கூட்டும் “தன் நல வளர்ப்பு…”

நான் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் பிறிதொருவன் சக்தியை ஈர்த்துக் கொண்டு தனக்களித்துத் தான் வளர்வது என்ற தன் எண்ணம் தன்னுள் வளர்ந்து விட்டால் அந்த எண்ண வளர்ச்சியின் முதிர்வே சூட்சமப் பொருள் பதிந்த பாஷாண்டகமாம்.

1.தன் ஆன்மாவைத் தான் வளர்க்க…
2.உயிர் கொண்ட உடலே கருவிகளாக..
3.உணர்வு கொண்ட தியானத்தின் வழியாக…
4.எண்ணத்தின் செயல்பாடே நான் என்று உணரும் பொழுது…
5.இரு விதச் செயல் நிலைகளை ஆங்கு தெளிந்து கொண்டால்
6.நான் என்பது உடலா…?
7.நான் என்பது உயிரா…?
8.நான் என்பது உணர்வா…?
9.நான் என்பது எண்ணமா…? ஆத்மாவா…? என்ற வினாக்களுக்கும்
10.தன்னுள் தெளிந்த தெளிவைப் பெற்றிடலாம்…!

ஆத்ம முலாமின் வலுவை வலுவாக்கிக் கொண்டு
1.“தான்..” என்பதே ஆத்மாவாக உயிருடன் ஒன்றியே.. உயர் நிலை பெற்றே…
2.எண்ணத்தின் செயல்பாட்டில் நானும் வேண்டுமப்பா…!

ஒவ்வொரு உயிராத்மாவும்… ஒன்றுடன் ஒன்று ஒன்றி…!
1.ஒன்றில்லாமல் ஒன்றில்லை… ஒன்றுடன் ஒன்றியே பல வளர்ந்து… சக்தி ஈர்த்தல்…! என்று கூறியதிலும்
2.அதற்குள் இருக்கும் உண்மைகளை அறிந்துணர்ந்து கொண்டால்
3.தன் உயிராத்மாவின் சுய வளர்ச்சி நிலை... “மிக மிகத் தெளிவு பெறும்…!”

March 26, 2021

நாம் எண்ணியபடி நடப்பதும் நாம் எண்ணாமலே நடப்பதும் எதனின் தொடர் கொண்டு செயல்படுகிறது...? ஈஸ்வரபட்டர்

 

1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து... பொருள் புரிந்து... அறிந்து... தெளியும் வகைகள் புலப்பட “எழுத்தில் வடிக்கும் ஆசானும்...”
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு... கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போனது…?

கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைத்து விட்டான் இன்றைய மனிதன்...! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?

எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்...” என்றால் வெறும் உலக நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்குத் தான் சென்று விட்டது இன்றைய “அறிவு...”

எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால் ஆத்மாவா…. நான் என்பது…?
1.எண்ணத்தின் அலையே சுவாசமாகி...
2.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி...! என்று பாடுகின்றோம்.

ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது. அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.

சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்...” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்... உறங்குவதும்... புறத் தொழில் புரிவதும்... கழிவுகளை நீக்குவதும்... பார்த்தல்... கேட்டல்... நுகர்தல்... சுவைத்தல்... ஸ்பரிசித்தல்... அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே... இயல்பாக... “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்...”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?

சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?

எண்ணத்தின் அலையே சுவாசமாக... சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி... என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான்.

“நான்...” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெற வேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி அந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட... மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்...!”

இப்பொழுது நான்...! என்பது யார் என்று புரிந்ததா…?

கை வலி... கால் வலி... மூட்டு வலி... தலை வலி... மேல் வலி... இவை வரக் காரணமும் அதை நீக்கும் வழி முறையும்

 

நாம் கோபமோ ஆத்திரமோ படுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அந்த வேதனையான நிலைகளில் சுவாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கடினமான ஒரு பொருளை அந்த வேதனையுடன் தூக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

1.அப்பொழுது சுவாசிக்கும் இந்த உணர்வுகள் உடல் முழுவதற்கும் பாய்ந்தவுடன்
2.இந்த உடலை மடக்கிய நிலைகள் கொண்டு பிராணவாயு செல்லும் பொழுது இங்கே தேங்கிச் செல்லும்.

மூட்டிற்கு மூட்டு அது தேங்கிச் செல்லும் பொழுது அந்த மூட்டினுடைய நிலைகளில் அவயங்கள் வேலை செய்யும் பொழுது, அந்த வேதனையான நிலைகள் வந்தவுடன் அந்த வேதனையான விஷமான உணர்வுகள் அங்கங்கே தேங்கிவிடும்.
1.அது சுவாசத்திற்குள் சென்று கரைக்கும் நிலையை இழந்து
2.அது ஓடிச் சென்று வெளியிலே வரும் முன்பாகவே - நாம் சுவாசிப்பது உள் செல்வதனாலே,
3.இது ஒவ்வொரு இடத்திலும் தேங்கிக் கொள்ளும்.

இதனால்தான் சிலருக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது.

சிலருக்குத் தொழில் நிலைகளில் வேலைகள் செய்யும் சந்தர்ப்பத்தில் எல்லம் இந்த வேதனையை எடுத்தார்கள் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி மூட்டுகளில் வலி வரும்.

நமது பூமி சுழலும் பொழுது விண்வெளிகளிலே இருக்கக்கூடிய காந்த அலைகளுடன் மோதுகின்றது. இதைப் போன்று நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு உணர்வுகளைச் சுவாசிக்கின்றோமோ அது உயிரிலே பட்டு எண்ணங்களாக இயங்குகின்றது.

அப்படி இயக்கினாலும் அந்த வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்து அது நம் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த வேளைகளில் கூர்ந்து செயல்படும் பொழுது கவன நிலைகளில் எடுக்கப்படும் பொழுது கண் குத்தல்... மண்டைக் குத்தல்... போன்ற நிலைகள் வரும்.

அதைப் போன்று சுவாசத்தினுடைய நிலைகள் சிந்தனையினுடைய நிலைகளை அதிகமாகச் சேர்த்தால் மூக்கு துவாரத்திற்குள் சில நிலைகள் வரும்.

அடிக்கடி சிந்தனை செய்து கொண்டு குனிந்திருந்து சில வேலைகள் செய்து கொண்டிருந்தால் மடக்கிய நிலைகள் கொண்டு பிடரியில் பிடரி சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

சில நேரங்களில்... ஒரு புறம் சாய்ந்திருந்து இடைஞ்சலான நிலைகளில் நாம் இருந்தால் நாம் சுவாசிக்கும் பிராணவாயு செல்லும் பொழுது சப்பைகள் மூட்டுகளிலே போய் இந்த வேதனையைக் கொடுக்கும். சாதாரணமாக இதை நிவர்த்தி பண்ண வேண்டுமென்றால், வைத்தியர்களால் கொஞ்சம் சிரமம்தான்.

ஏனென்றால்...
1.நரம்பியல்களிலே இருக்கக்கூடிய நிலைகள்
2.எலும்புகளிலே ஒட்டியிருக்கக் கூடிய காந்தத்தினுடைய சக்தி
3.நாம் எடுக்கக்கூடிய இந்த அமிலத்தின் தன்மை (ACID POWER) நமக்குள் ஈர்க்கப்படும் பொழுது
4.அதே சமயத்தில் நாம் பிராண வாயுக்களை எடுத்து அதன் ஓரத்திலே இயக்கித்தான்
5.அதற்குள் இருக்கக்கூடிய வெப்ப காந்த அணுக்களை இயக்கச் செய்து நரம்பியலின் தன்மைகளை இயக்க வேண்டும்.

அப்பொழுது அந்த நரம்புகளில் விஷத் தன்மைகள் பாய்ந்து விட்டால் அதே இடத்தில் அது துடித்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட இடங்களில்தான் அது வேலை செய்யும். இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

சில பேர் கவலைப்பட்டுக் கொண்டே நின்று கொண்டிருந்தால் வேதனையை அதிகமாக உண்டாக்கும். கை நிமிர்த்துவதே கஷ்டம்... பிடரியில் அதிகம் வலி ஏற்படும்.

எந்த அளவிற்குக் குனிந்து கொண்டிருந்தார்களோ அதற்குத்தகுந்த மாதிரி விஷங்கள் படர்ந்திருக்கும். நிமிர்ந்தவுடன் வலி அதிகமாக இருக்கும்.

வேதனையும் கவலையும் கூடிய நிலையில் நாம் சுவாசித்து அந்த பிராண வாயுக்கள் செல்லும் பொழுது...
1.அதற்குள் நாம் சுவாசித்த உணர்வின் விஷத்தன்மைகள்
2.நம் உடலில் எல்லா இடங்களுக்கும் போய்,
3.எல்லா இடத்திலும் பாய்ச்சி அவற்றை இயங்கச் செய்யும்.

இதையெல்லாம் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதை நாம் வெல்ல வேண்டுமென்றால் நம் எண்ணத்தினாலேதான் எடுக்க வேண்டும். எண்ணத்திற்கு வலு கூட்ட வேண்டுமென்றால் தியானமும் ஆத்ம சுத்தியும் தேவை.

1.ஓ...ம் ஈஸ்வரா... என்று அழுத்தமாக நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி,
2.“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்” என்ற சுவாச உணர்வுகளை
3.நம் உடலுக்குள் பாய்ச்சச் செய்வதே ஆத்ம சுத்தி.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு நமக்கு எங்கெல்லாம் நோவு இருக்கின்றதோ அந்த இடத்தில் “கூர்மையான நிலைகளில், நினைவைச் செலுத்தி” மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் படரச் செய்யுங்கள்.

அந்த வேதனையை உண்டாக்கும் உணர்வின் சக்திகள் மறைந்து எங்கள் உடலிலே மகரிஷிகளின் அருள் ஒளி வளர வேண்டும் என்று சிறிது நேரம் நீங்கள் தியானித்தால் போதும்.

உங்கள் உணர்வின் சக்தியைக் கொண்டு நீங்கள் ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று உடலில் நோவு வரும் இடங்களில் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த நோவின் தன்மை குறையும். மகரிஷிகளின் அருள் சக்தி அந்த இடத்திலே அதைக் கரைக்கும்.

இவ்வாறு தியானமும், ஆத்ம சுத்தியும் செய்து வந்தால்... வாத நோயோ ஆஸ்த்மாவோ குஷ்ட ரோகமோ கேன்சர் நோயோ இருந்தாலும் அதை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்.

March 25, 2021

ஒருவருக்கொருவர் பதிவாகிக் கொள்ளும் உணர்வின் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்து நடந்தது என்றால் அதை ஒரு மனிதன் கண்ணுற்றுப் பார்த்த பின் நண்பரிடத்தில் இதைச் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த மாதிரி மோதி விபத்தாகி விட்டது.. அடிபட்டு உடல்கள் சிதைந்து விட்டது...! என்று அவன் பார்த்த உணர்வுகளைச் சொல்லப்படும்போது அதை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் இது நம் ஆன்மாவாகிறது.

இரவு புலனடங்கித் தூங்கும் பொழுது...
1.நாம் எங்கேயோ சென்ற மாதிரியும்
2.அங்கே விபத்தான மாதிரியும்
3.யாரோ துரத்துவது மாதிரியும் போன்று கனவுகளாக வருகின்றது.

இது எல்லாம் நமக்குள் பதிந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் நுண்ணிய உணர்வுகளாக இயக்கி நாம் புலனடங்கித் தூங்கினாலும் அந்த உணர்ச்சிகள் நம்மைத் தட்டி எழுப்புகின்றது... அறியச் செய்கிறது...!

ஆனால் விடிந்தவுடன் இதை எல்லாம் நினைவுக்கு வரும் போது கலக்கம் வருகின்றது. காரணம் நாம் இரவிலே நுகர்ந்த உணர்வுகள் அது பதிந்து தீமையான அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.

நம்மை அறியாது வரும் கனவுகள் எல்லாம் இப்படித்தான் இயக்குகிறது. ஒரு சிலருக்கு இதனால் சில தீமையின் விளைவுகளும் ஏற்படக் காரணமாகின்றது.

இது போன்ற உண்மையின் இயக்கத்தை நீங்கள் அறிய வேண்டும்... இந்த மனித உடலில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றோம்.

ஈஸ்வரா... என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்...! என்று ஏங்கித் தியானித்தால் இந்த வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றி நஞ்சின் தன்மைகளை மாற்றிடும் நிலை வருகின்றது.

அதிகாலை துருவ தியானத்தின் மூலம் தொடர்ந்து நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

கடவுளின் அவதாரம் வராகன் என்று காட்டியதில்...
1.நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வினை நுகர்ந்து மனிதனாக எப்படி உருவாக்கியதோ
2.மனிதனான பின் நச்சுத் தன்மைகளை எல்லாம் நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிய
3.அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் சேர்த்து
4.எதிர்காலத்தில் வரும் நச்சுத்தன்மையை நீக்கிடும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும்.

திரும்பத் திரும்பச் சொல்கிறேன் (ஞானகுரு) என்றால் உங்கள் வாழ்க்கையில் இருளினை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

உங்கள் செவிகளில் இப்பொழுது பதிந்தாலும் ரேடியோ டி.வி. அலைகள் போன்று இந்த அருள் உணர்வுகள் பரவுகின்றது.

உங்கள் நண்பரிடத்தில் சொன்னால் அவருக்குள்ளும் இது பதிவாகிறது. அவரும் சிந்தித்து அந்த உணர்வினை நுகர்ந்து வரும் பகைமை உணர்வினை வளராது தடுக்க இது உதவும்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்... தவமிருப்போம்.

தன் உயிராத்மாவுடன் உரையாடுவதே உண்மையான மௌனம் - ஈஸ்வரபட்டர்

 

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனமான நிலை கொண்டே அருள் சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாகத் தன் உயிராத்மாவை எண்ணி...
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெறத் தான் “மௌனம்...”

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே.. சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால்... பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல...!

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெறும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏட்டறிவின் வழி கற்றவர் அன்றி... படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கலலா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக...
1.அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து
2.ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி
3.அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின்... தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொள்ளும் சப்தரிஷிகளின்
2.ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
3.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
4.என் நிலைக்கு உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தன்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில்
1.ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில்
2.உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”

March 24, 2021

உங்களைக் காக்க வேண்டும் என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம் - ஞானகுரு

 

இன்று பார்க்கின்றோம்... விஞ்ஞான அறிவால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரைத் தயார் செய்து கொண்ட பின் பூமியிலிருந்து வரும் எதிர் அலைகள் அந்த எக்கோ (ECHO) வருவதை அளந்தறிகின்றனர்.

கம்ப்யூட்டர் சாதனத்தில் நாடாக்களில் இந்த விஷமான உணர்வின் (கெமிக்கல்) ஓலி அலைகளைப் பதிவாக்கி வைத்து... அதன் முகப்பில் இருக்கக்கூடிய நிலைகள் (PROBE) பூமியை உற்று நோக்கிக் காட்டப்படும் பொழுது... பூமிக்குள் இருக்கும் நிலைகளைக் காட்டுகின்றது.

அதாவது...
1.இவர்கள் பாய்ச்சும் உணர்வின் தன்மை அந்த எலக்ட்ரிக்கின் உணர்வின் அதிர்வுக்குத் தக்கவாறு
2.அதன் நிலைகளில் அந்த மணத்தையும் உணர்ச்சியின் வேகங்களையும் கண்டறிந்து நாடாக்களில் பதிவு செய்கின்றனர்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த மிருகங்களின் உடல்கள் மண்ணுடன் மண்ணாக மறைந்திருக்கும் நிலைகளையும்... பாறைகளாகக் கூட ஆன நிலைகளையும் கண்டறிந்து... அங்கே தேடிச் சென்று குறைந்தது 100 அடிக்குக் கீழ் அமிழ்ந்து கிடப்பதைத் தோண்டி எடுத்து அந்த உருவத்தையே கண்டறிகின்றனர்.

உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கின்றான். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் இதை கம்ப்யூட்டரில் இணைத்து அதில் வரும் அலைகளை எடுத்து
1.அதனுடைய தசைகளின் அமைப்பையும் அதன் உணர்ச்சியின் செயலாக்கங்களையும்
2.வாழும் போது அந்த மிருகம் எதை எல்லாம் உணவாக உட்கொண்டது என்றும்
3.உணர்வின் அதிர்வுகளைக் கண்டு அந்த மிருகத்தின் உருவத்தையே கம்ப்யூட்டர் காட்டுகின்றது.
4.விஞ்ஞான உலகில் இதைப் பார்க்கின்றோம்... விஞ்ஞானம் இன்று அதை நிரூபிக்கின்றது.

முந்தைய காலங்களில் எல்லாம் திருடர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் கைரேகை பட்டால் அதை வைத்துத்தான் பார்ப்பார்கள். ஓரே கைரேகை உள்ளவன் என்று இருந்தாலும் அந்த ரேகைகளைக் கண்டு ஒத்துப் பார்த்து “இவன் தான்...” என்று அது கண்டுணர்ந்தார்.

இப்பொழுது அதுவெல்லாம் இல்லை...! எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஓரு கைரேகை பட்டால் அவனின் உணர்வின் அதிர்வுகள் அங்கே பதிவாகி இருக்கின்றது என்று அதை வைத்துக் கம்ப்யூட்டரில் அந்த அதிர்வினைப் பதிவாக்கி ஆயிரம் மடங்கு கூட்டுகின்றனர்.

1.அப்பொழுது இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் மோதப்படும் போது
2.அந்த மனிதன் எப்படிப்பட்ட ரூபம் உள்ளவன்...?
3.அவனுடைய குணங்கள் என்ன...? எப்படி இருக்கின்றான்..? என்று அவனின் ரூபத்தையே காட்டுகின்றது கம்ப்யூட்டர்.

இப்படி எல்லாம் நுண்ணிய நிலையில் விஞ்ஞான அறிவு இன்று காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்கின்றோம்...? என்றால் இன்னும் அறியாமையில் தான் வாழுகின்றோம்...!

1.மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொல்லும் உணர்வு தான் வருகின்றதே தவிர
2.மனிதனைக் காக்க வேண்டும்... தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்வு இம்மியளவும் வரவில்லை...
3.இயந்திரத்தின் துணை கொண்டு எல்லாமே செயல்பட்டாலும் அந்த இயந்திரம் கூட ஒன்றைக் கட்டுப்படுத்துகின்றது (CONTROL)
4.ஆனால் மனிதன் தன் மனதைக் கட்டுப்பபடுத்த முடியாதபடி
5.பிறரின் உணர்ச்சியின் தன்மை கொண்டு தவறுகள் செய்வது... கொலைகள் செய்வது... தன் இச்சைக்குச் செயல்படுத்துவது
6.தான் இன்பத்தைப் பெறுவதற்காக மற்றவருக்குத் துன்பத்தை ஊட்டுவது என்று
7.இது போன்ற நிலையில்தான் இந்த உலகம் இருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளுவதற்குத் தான் இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

ஏனென்றால் யாம் சொல்வது சாதாரணமானது அல்ல. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால் அது உங்களைத் தெளிவுபடுத்தும் சக்தியாக வரும்.

உங்கள் உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கம் கொண்டது. அதிலே இந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கப்படும் போது
1.வாழ்க்கையில் எதிர்ப்படும் உணர்வுகளில்
2.இது பிழை கொண்டது... இது தேவையற்றது...! என்று அதை நீக்கி
3.உங்களைக் காக்க இது உதவ வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவு செய்கின்றேன்

உங்கள் கவனத்தைத் திருப்பாது உற்று நோக்கி இந்த உபதேசத்தின் உணர்வினை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான உலகிலிருந்து உங்களைக் காத்திடும் சக்தியாக இது வரும்.

காயகல்பம் பற்றிய சூட்சமங்கள் - ஈஸ்வரபட்டர்

 

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் பால்வெளியில் உள்ள மற்ற கோள்களின் தொடர்பு கொண்டே பல சக்திகளை ஈர்த்துச் சமைத்துச் சுவாச அலைகளாக வெளிவிடுகின்றது.

பூமி சூரியனைச் சுற்றி வரும் நிலையில் நெருங்கியும் விலகியும் சுழன்றோடும் நீள் வட்டத் தொடரில் பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களை “பருவ காலங்கள்…” என்று அன்றே ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்.

ஒவ்வொரு பருவ காலத்தையும் அந்த இயற்ககையின் செயல் நிகழ்வுகளைத் தன் சரீர உணர்வு கொண்டு அனுபவ ஞானத்தால் உணர்ந்து கொண்டார்கள்.

அவ்வாறு உணர்ந்து கொண்ட அந்த இயற்கையின் சூழலில்
1.அண்டத்தின் அதி உன்னதத் தன்மைகள் அனைத்தையும்
2.சமுதாய நல அமைப்பிற்கு நல் வாழ்க்கை நெறிகளாக
3.பல வழிகளில் பேருண்மைகளை நமக்குக் காட்டினர் அன்றைய மகரிஷிகள்.

வானியல்... புவியியல்... உயிரியல்... என்றே மூன்று வகைக் கோணத்திலேயும் இயற்கையின் செயல்பாட்டை அவர்கள் உணர்ந்து தெளிந்தனர்.

அதே சமயத்தில் அந்த வானியல் தன்மைகள் பூமியின் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளும் கிரியைகள் அனைத்தையும் தன் சரீரத்தில் கண்ட பொழுது உயிரியல் தத்துவமாக அதை உலகிற்கு உணர்த்திக் காட்டினார்கள்.

1.அறிந்ததை அறிந்ததாக எண்ணப் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டு
2.மௌனம் என்ற பூட்டால் பூட்டப்பட்டு
3.உணர்ந்து கொண்ட உணர்வின் அனுபவ ஞானங்கள் அனைத்தும் (காலத்தால்) மறைக்கப்பட்டதால்
4.வாழ்க்கையின் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல செயல்களை அவர்கள் உரைத்திருந்தாலும்
5.இன்றைய சமுதாயத்தின் எண்ணங்களால் மாற்றமே காணப்படுகின்றது.

காயகல்பத் தொடருக்கு உணர்த்தப்பட்ட மண் வள குணத் தன்மைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…!

1.வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் அலைகளைப் பூமி அதிகமாக ஈர்த்திடும் காலகட்டங்களில்
2.பருவ காலத்தின் சுழற்சியில் குளிர்விப்பு குணத் தன்மைகளும்
3.கார்த்திகை மாதம் தொடங்கி… மார்கழியில் செயல் கூடி.. தை மாதத்தில் உருவாகும் “உவர் அமில அடர்வாக…”
4.பூரணச் சந்திரனின் “தண் ஒளி…” (குளிர்ச்சியான) கலந்திடும் செயலின் உருக்கோலமும் வண்ணமும் காட்டி
5.இரவுக் காலங்களில் பூமியின் வெக்கையால் மண் நெகிழ்ந்தே இருக்கும் நிலையில்
6.அமில அடர்வின் குணம் லேசான தன்மையாக வெளிப்படும் செயலை அறிந்து கொள்ள வேண்டும்.
7.ஆகாய நீர் உரித்தே எடுத்துக் கொள்ளவும்
8.சூரிய வெப்ப அலையில் அந்த நீரினுள் மறைத்துக் கொள்ளவும்
9.சுடாத நெருப்பில் காய்ச்சிக் கொள்ளவும்
10.உயர் ஞானத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்.........

இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்து அனுபோக மருத்துவ முறைப்படி இதையே குரு என்ற பெயர் நாமமிட்டு குருக்கோளின் (வியாழன்) தொடர்பினால் பெற்றதையே ஔஷதங்களில் கலந்து உடல் பிணிகளை அகற்றிடும் செயலுக்கே செயல் கொண்டனர்.

அனுபவ முறைகளைச் செவிப்புலனறிவால் அறிந்து கொண்ட சிலரால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்திடும் நிலைக்கும் இதே முறையைப் பயன்படுத்துகின்றனர்.

1.ஆனால் இந்தச் செயல்கள் அனைத்தையும் மெய் ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் - “காயகல்பமாக…”
2.மேன்மேலும் ஆக்கத்தின் செயலுக்கு உண்மையைக் காட்டும்.
3.அதைப் பெற்று நீங்கள் உயர்ந்திட எமது ஆசிகள். (ஈஸ்வரபட்டர்)

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய் ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே...! (திருமூலர்)

March 23, 2021

“கல்லா அறிவு…” பெற்றவர்கள் தான் மெய் ஞானிகள் - ஈஸ்வரபட்டர்

 

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.

அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழி உண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர். ஆனால் சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலக ஆசையின் எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும்… உரை நடையும்… மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.

அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
1.செருக்கின் தொடரில் எழும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.
2.உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும் நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?

அதற்கு எது முக்கியம்..?

நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை. ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொள்ளும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடாத…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடும் வழியாக்கிக் கொண்டதே “வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்…”

1.செவிக்கு உணவு… வயிற்றுக்கு உணவு… என்பது போன்றே
2.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
3.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது.

ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும்.

வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது. வாய்மை மொழியே தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
1.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி
2.அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

March 22, 2021

அகஸ்தியன் அவன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான அகஸ்தியனை அவன் தாய் தந்தையர் “கடவுள் பிள்ளை” என்றே எண்ணுகின்றனர்.

ஏனென்றால் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் போனால் மற்ற துஷ்ட மிருகங்கள் எல்லாம் ஒடுங்கி விடுகின்றது. “அந்தக் குழந்தையினால் இவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது...”

ஆனால் மிருகங்களிடமிருந்தும் நஞ்சு கொண்ட விஷ ஜெந்துக்களிலிருந்தும் தப்ப
1.முதலில் பச்சிலையைத் தான் இவர்கள் நுகர்ந்தார்கள்... பல பல மூலிகைகளைத் தான் உபயோகப்படுத்தினார்கள்.
2.அதன் வழி அகஸ்தியன் என்ற அந்தக் கருவின் தன்மை விளைந்தது.

அந்தக் குழந்தையை கையில் எடுத்துச் செல்லப்படும் போது மற்ற மிருகங்கள் அருகில் வருவதில்லை என்று கண்டுணர்ந்த பின் அவன் கடவுள் பிள்ளை என்று போற்றுகின்றனர்.

அந்தக் குறுகிய காலத்தில் அங்கே வாழும் ஒரு ஐம்பது குடும்பங்களில்... ஒரு நூறு பேர் இருக்கும் இடங்களில் அவனைப் போற்றித் துதிக்கும் நிலை வருகின்றது.

உதாரணமாக பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் துகள்களால் “மின்னல்கள்” வருகிறதென்றால் அது எல்லாம் விஷத் தன்மை கொண்டது.

1.ஆனால் அந்தக் குழந்தை அதை உற்றுப் பார்த்து அதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதும் மகிழ்வதும் போன்ற தன்மைக்கு வருகின்றது.
2.இதே போல் சூரியனையௌம் கண் கூசாது உற்றுப் பர்க்கின்றான்,

இன்று நாம் தீபாவளிக் காலங்களில் மத்தாப்புக்களைக் கொளுத்தினால் அவைகளிலிருந்து பொறிகள் எப்படி வருகிறதோ அது போல் சூரியன் மற்ற கோள்கள் நட்சத்திரங்கள் இவை வெளிப்படுத்தும் கதிர்கள் மோதி வான்வீதியில் பல வர்ணங்களில் எப்படி வருகின்றது...? என்று அவன் வேடிக்கை பார்க்கின்றான்.

சூரியனும் மற்ற கோள்களும் அதனின் உணர்வுகளின் மோதலினால் ஏற்படும் இந்த மின் பொறிகளைப் பார்த்து அவன் அறியாமலே அதைக் கண்டு சிரிக்கின்றான்.

1.அங்கே வானிலே நடக்கும் நிகழ்ச்சிகளில்
2.அதில் வரும் விஷத்தின் தன்மை அவனுக்க்ள் ஒடுங்கும் பொழுது
3.சாந்தமான நிலை கொண்டு அகஸ்தியன் பார்க்கின்றான்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்பவர்களும் சூரியனைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கென்ற கண்ணாடிகளில் விஷத் தன்மைகளை அடக்கும் அந்தச் சக்திகளைப் பூசி அதனைக் கலக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் பார்க்கின்றனர்.

சூரியனை நேரடியாக இவர்கள் பார்ப்பதில்லை. அந்தக் கண்ணாடிகள் மூலம் பார்க்கும் போது அதிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் என்ற விஷம் இவர்களைத் தாக்குவதில்லை.

அதே போலத் தான் நட்சத்திரங்கள் பல வகைகளில் ஒன்றுக்கொன்று உராயப்படும் போது தூசிகள் வருகின்றது. அவைகள் மோதினால் மின்னல்களாக மாறுகின்றது.

அந்த மின்னல்களையும் இந்தக் கண்ணாடி வழி தான் விஞ்ஞானிகள் கண்டு அதனுடைய கலர்களையும் அதனுடைய இயக்கத் தன்மைகளையும் காணுகின்றார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியனோ இத்தகைய தன்மைகளை நேரடியாக உற்றுப் பார்க்கின்றான்.
1.அவன் கருவிழி அதைப் பதிவாக்குகிறது.
2.அதிலிருந்து வெளி வரும் ஆற்றல்களை அவன் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் நுகரச் செய்கின்றது.

அப்படி அவன் நுகர்ந்த உணர்வோ உயிரான ஈஸ்வரலோகத்தில் இணைந்து
1.அந்த விஷத்தின் தன்மையை அவன் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
2.வீரிய சக்தியாக ஊட்டும் சக்திகளாக மாறுகின்றது.

இது எல்லாம் அகஸ்தியனின் சந்தர்ப்பம்...! அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்ற ஆற்றல்மிக்க மெய் ஞானியாக ஆகலாம்.

பிறப்பு இறப்பு என்று இருந்தாலும் அதிலே "வளர்க்கப்பட வேண்டியது எது...?" என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சூரியனை மையப்படுத்திக் கொண்டு பூமி சுழன்று ஓடும் நிலையில் ஏற்படும் இயற்கையின் பருவ மாற்றங்களின் செயலால் பரவெளியில் படர்ந்துள்ள அமில குணத்தன்மைகளைப் பூமி தன் ஈர்ப்பின் சுவாசம் கொண்டு ஈர்த்துக் கொள்கிறது.

அவ்வாறு பூமி தன்னை வளர்ச்சிப்படுத்திடும் செயலில் எண்ணம் கொண்டே ஆத்மாவாக உயிரணுக்கள் பல பிறப்பிற்கு வருகின்றன.

1.ஜீவன் என்ற சரீர பிம்பம் பெறும் இந்த உயிராத்மா
2.இயற்கையின் கதியில் சரீரம் கொண்டு வளர்ச்சி கொள்ளும் செயலின் தொடராக இருந்தாலும்
3.தான் பெற்ற இந்தச் சரீரத்தையே “இறப்பு…” என்ற கதி நிகழ்வுக்கு உட்பட்டே வினைச் செயல் புரிகின்றது.

ஒரு உயிரணு சிசுவாக வளர்ச்சி கொள்ளும் காலத்தில்... தான் எடுத்துக் கொண்ட (ஏற்கனவே முந்தைய பிறவியில்) எண்ணத்தின் செயலில் உணர்வுகளாகத் தாய்மை கொண்ட எண்ணமுடன் தன் உணர்வுகளையும் கூட்டித்தான் உருவத்திற்கு வருகின்றது.

அந்த உருக்கோலம் கொள்ளும் பிம்பத்திற்கு வேண்டிய ஆகாரத்தைத் தாயின் இரத்த நாளங்களுடன் ஒன்றியே எடுத்து வளர்த்துக் கொள்கிறது.

பஞ்ச பூதங்களின் அமைப்பாகத் தனக்கு ஒவ்வொரு அவையங்களும் அமைவு கொள்ள தாயின் ஆகாரத்திலிருந்து அமில குணத் தன்மைகளை ஈர்த்துக் கொள்கிறது.

1.எந்தத் தாயின் சரீரத்தில் இணைந்து தன்னை உருவாக்கிக் கொள்கின்றதோ
2.அந்தச் சரீரத்தில் அமைந்துள்ள சகல நாடிகளில் ஓடும் சுவாசத்தின் செயல் தன்மைகளையும் ஈர்த்துத் தான் அந்தச் சிசு முழுமை பெறுகிறது.

முழுமை பெற்ற பின்... தாயின் உடலிலிருந்து வெளியேறும் உந்துதலை உணர்த்தி... அந்த உந்துதலின் செயலைத் தாய்க்கும் ஊட்டுகின்றது.

அந்த உந்துதலில் தாயின் சரீரத்தில் செயல்படும் நாடிகளில் உலவிடும் “மறைமுகக் காற்று ஒன்று...” பிறப்பின் செயலுக்குத் துணை புரிந்து சிசு வெளியேற உதவுகிறது.

ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற இந்த மூன்று வகையான தொடரின் சூட்சமத்தை இயற்கையின் கதியில் அறிந்து கொள்ள வேண்டும்.

1.பூமித் தாயின் செயலுக்கும்
2.பூமி ஈர்த்து வெளிக்கக்கும் சுவாச அலைகளில் பூமிக்குள் நிறைந்திருக்கும் காற்றின் தொடர்பிற்கும்
3.பற்பல செயல்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளது.

கடல் நீரிலிருந்து உப்பு விளைவதுவும்... கற்பாறைகளின் முதிர்விலிருந்து உப்பு வெளிப்படுவதுவும்... மண்ணின் குணத்தன்மைகளில் சில இடங்களில் உயர் அமிலமாகி... அதுவே பொருளாக வெளிப்படும் செயலுக்கும் காற்றின் தொடர்பு உண்டு.

இது எல்லாம் தன்னை உணர்ந்திடும் பக்குவமாக... இயற்கையின் கதியைத் தன்னுள் கண்டுணரச் செய்திடும் தெளிந்த உயர் ஞானமாக... மெய் ஞானமாக... ஞானிகளால் உலகினுக்குப் போதனைகளாகக் கொடுக்கப்பட்டது.

அந்த மெய் ஞானிகளின் நிலையை நாமும் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து காட்ட வேண்டும்.

March 21, 2021

பூமியைச் சமப்படுத்திய “அகஸ்தியன் உணர்வுகள் தான்” இன்று தேவைப்படுகின்றது

 

இன்றைய உலகம் மிகவும் துரித நிலைகள் கொண்டு மாற்றமாகிக் கொண்டே உள்ளது.

மனிதனுக்கு மனிதன் காட்டு விலங்குகள் எப்படி ஒன்றுக்கொன்று அஞ்சி வாழ்கின்றதோ இதைப் போன்றுதான் கிராமந்தோறும்… ஊர் தோறும்… நகரம் தோறும்… ஒவ்வொரு நொடிக்கும் அஞ்சி வாழும் தன்மை வந்து விட்டது.

பின் தொழிலை எப்படி நீங்கள் பார்ப்பது…? கிடைப்பதைத் தட்டிப் பறித்து உணவாக உட்கொள்ளும் இந்த உணர்ச்சியின் தன்மை வளர்ந்து விட்டது.

இதைப் போன்று நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்…
1.காற்று மண்டலத்தில் கலந்துள்ள அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை நாம் தியானித்து
2.இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்கி
3.அத்தகைய மூச்சலைகளைப் பெருக்குவோம் என்றால் சிந்திக்கும் மனிதர்கள் உருவாவார்கள்.

ஆகவே தீமையிலிருந்து மீட்டிடும் அருள் சக்திகளை நமக்குள் உருவாக்க முடியும்…! என்ற இந்தத் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடிவதில்லை. அது அறுந்து விடுகின்றது. ஆனால் பல நூல்களை இணைத்துக் கனமான… கடினமான பொருளையும் தூக்க முடிகின்றது.

கதிரியக்கப் பொறியின் உணர்வுகளை… அந்த அழுத்தத்தை அதிகமாகச் சேர்க்கும் பொழுது இராக்கெட்டை விண்ணில் உந்திச் செலுத்துகின்றான் விஞ்ஞானி. அது சிறுதுளி என்று இருக்கும் பொழுது ஒரு இயந்திரத்தைத் தான் இயக்க முடிகின்றது

1.அத்தகைய உந்து விசையின் உணர்வுகள் வலு கொண்டு வருவது போல
2.நமது உணர்வுகளும் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
3.உந்துதலின் தன்மையை அதிகமாக எடுத்துச் செலுத்தினால்
4.அது தீமை என்ற நிலைகளைக் கலைக்கவும்… மோதலில் இதைக் கருக்கவும் செய்யும்.

ஆகவே உங்களில் இதைப் பக்குவப்படுத்தி இந்த அருள் உணர்வின் தன்மை வளரச் செய்து கொண்டால் பூமியில் வரும் தீமைகளை அகற்ற முடியும்… நம்மையும் காத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞானத்தால் வரும் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்து கொள்ள வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்தால் தான் அது முடியும்.

1.இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் எதிர் நிலையான உணர்வுகளை… (அந்தத் தூசிகளை)
2.மின்னல்களைக் கவர்ந்து தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது துருவ நட்சத்திரம்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் நுகர்ந்தால் நமக்குள் வரும் விஷத் தன்மைகளை மாற்றி விட்டு
1.நமக்குள் அறிவின் ஞானமாக வளரச் செய்யும்… உயிருடன் ஒன்றி வாழச் செய்யும்
2.இதையெல்லாம் உங்கள் மனதில் தெளிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் சிந்தனை மிகவும் உயர்ந்ததாக மாறும்
4.வாழ்க்கையில் வரும் எத்தகைய பகைமையான உணர்வுகளும் உங்களைச் சாடாது
5.பகைமை உணர்வு என்று தாக்கும் உணர்வை உங்களால் அறியவும் முடியும்
6.பகைமையை நீக்கும் அறிவின் வளர்ச்சியும் உங்களுக்குள் வளரும்

இதை வளரச் செய்வதற்கு நமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்களிலே இதைப் பதிவாக்கும் போது…
1.என்னால் என்னை அறியச் செய்யும் சக்தியாக
2.குரு அருள் தன்மை கொண்டு நான் என்னை அறிய முடிகின்றது.

இதைப் போலத் தான் இந்த உலகிலே வாழும் நீங்கள்… சந்தர்ப்பவசத்தால் நீங்கள் நுகரும் உணர்வுகள்
1.உங்களைத் தவறான வழிக்கு அது அழைத்துச் சென்றாலும்
2.உயிரான ஈசனை ஈஸ்வரா…! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தை இணைத்தால்
3.தவறின் பாதையில் இருந்து அது திசை திருப்பி
4.உங்களை அருள் வழியில் அழைத்துச் செல்ல இந்த உணர்வின் தன்மை உதவும்.

ஏனென்றால் இத்தகைய நிலைகள் “இன்று” தேவைப்படுகின்றது. அதை நீங்கள் பெறுவதற்குண்டான உணர்வைத்தான் இப்பொழுது இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பாய்ச்சப்படுகின்றது.

கார்த்திகை ஜோதி… தீப வணக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணம் கொண்டே வாழ்க்கை நிலைகளுக்குப் போதனையாக உரைத்து வந்ததில்… மனதின் பக்குவம் பெற முயற்சிக்க வேண்டும்.

உலக வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணங்கள் அலை அலையாக வந்து நம் மீது மோதினாலும்
1.துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளின் மீதே சென்று சேர வேண்டிய இடம் சேர்வதைப் போல்
2.நம் நிலையிலும் எல்லா உணர்வுகளையும் சமப்படுத்த வேண்டும் என்ற அந்த நல் எண்ணத்தின் உந்துதலாக
3.அதன் வழி முறைகளை நம் சிந்தையில் இருத்திச் “சித்தன் நிலை…” பெற வேண்டும்.

ஏனென்றால் பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு தாழ்வு முறைகளுக்கு அல்ல. மருத்துவ குணங்களாகப் புகட்டினலும் “எண்ணத்தின் நிறைவன்றோ சரீர சுகம் அளிக்கின்றது….!”

நம் உடல் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்து வீரியம் கொண்டு எதிர் மோதல் குணத் தன்மைகளில் நோயை விலக்கிட்டாலும்…
1.மீண்டும் அதே நிலை காணப்படுவதெல்லாம் எண்ணத்தின் செயல் தான்.
2.ஆக… நோய் உடலிலா…! எண்ணத்திலா…? அல்லது…
3.நம் சுவாச நிலையின் இயல்புத் தன்மையை மாற்றி விட்டாலே
4.எண்ண ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்கள் இயற்கை கொண்டா…? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்
5.எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பில் நல்லாக்கம் பெற்றிடலாம்.

கார்த்திகை ஜோதியைப் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருள் புரிந்ததா…? இன்றைய நடை முறைக்கு அது எல்லாம் பெரும் சடங்காக மாறி விட்டது.

அன்று சித்தன் கண்ட உண்மைப் பொருள் என்ன…?

பௌர்ணமி நிலவின் ஒளி சக்தியும் நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் பூமியின் ஈர்ப்பில் செயல் கொண்டே சில சூட்சம வித்தின் தன்மைகள் பூமித் தாய் நமக்கு அளித்திடும் செயலை மறைபொருளாகக் காட்டினர்.

அந்த ஜோதியின் உட் பொருளை உணர்த்த… கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியில் பூமி ஈர்த்துப் பெற்றிடும் சக்தியின் செயலையே அந்த மாதத்தில் “தீபமேற்றி வணங்கிடும் முறையாகக் காட்டப்பட்டது...!”

எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில் அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில் உயர் ஞானம் கொண்டே அறிந்த காயகல்ப முறையே “கார்த்திகை ஜோதி…” என்று தீப வணக்கமாகக் கூறப்பட்டது.

1.இந்த மாதக் காலங்களில் சிற்றின்ப நுகர்வுகள் விடுத்து
2.தன் மனதை… தன் சிந்தையை ஒருமுகப்படுத்தித் தியானிக்கச் செய்து…
3.பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகளைப் பெற்றிட
4.ஞானிகளால் சிஷ்யர்களுக்கு உணர்த்திய வழி முறைகள் தான் அது…!

தியான நிலையறியாத வாய்மையின் சக்தி கொண்டோரும் இந்தச் சக்தியைப் பெறுகின்றனர்.

March 20, 2021

உள் நின்று இயக்கும் “உயிர்” எப்படி... எதனால் கடவுளாகின்றது...?

 

உலகில் வாழும் மனிதர்கள் எத்தனையோ கோடித் தெய்வங்களை வணங்கினாலும் அந்தத் தெய்வம் காக்க வருவதில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்... இதையெல்லாம் எங்கே உருவாகின்றது என்று...!

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தும் நம் சிரசின் பக்கம் இருக்கும் உயிர் தான் இயக்குகிறது... உருவாக்குகிறது. அதை “ஈஸ்வரலோகம்...” என்று ஞானிகள் காரணப் பெயர் இடுகின்றனர்.
1.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ
2.அதை அணுவாக உருவாக்கும் கருவாக
3.உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

அப்படி உருவாக்கிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது “பிரம்மலோகமாக...” மாறுகின்றது. அதே சமயம் நம் உடலுக்குள் அந்தக் குறித்த காலத்தில் வளரத் தொடங்குகிறது.

கோழி அடை காப்பது போன்று என்னை இப்படிச் செய்தான்... இப்படிச் செய்தான்... இப்படிச் செய்தான்...! என்று இந்த உணர்வின் தன்மை எண்ணினால் அந்தக் கரு முழுமையடைந்து அணுவின் தன்மை அடைகின்றது.

அப்படி அணுவின் தன்மை அடைந்த பின் அது தன் உணவுக்காக ஏங்குகின்றது.

உதாரணமாக முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வெளி வந்தபின் புற நிலையில் இருக்கக்கூடிய உணவை அகநிலையில் உட்கொள்ளும் நிலை வருகின்றது.

இதைப் போன்றுதான்...
1.உடலில் உருவான இந்த அணு முழுமை அடைந்த பின்
2.நம் உடல் உறுப்புடன் ஒன்றி இரத்தத்தில் வரும் உணர்வினை
3.உணவாக உட்கொள்ளும் பழக்கம் வந்து விடுகின்றது.

ஆகவே அந்த அணுவின் தன்மை அடைந்தால் பிரம்மலோகம் என்ற நிலை அடைகின்றது.

இரத்தத்தின் வழியாக உணவாக உட்கொள்ளும் நிலை வரும் பொழுது அந்த அணுக்கள் நம் உடலுக்குள் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

ஒரு வித்தினை நிலத்திலே ஊன்றினால் அந்த வித்து செடியாக... மரமாக வளர்ந்து... தன் இனத்தை உருவாக்குகின்றது. ஒரு கோழி முட்டை இட்டுக் குஞ்சு பொரித்தால் அந்தக் குஞ்சுகள் வளர்ச்சியாகி அது மீண்டும் முட்டைகள் இட்டுப் பல குஞ்சுகளை வளர்க்கும் தன்மை வருகின்றது.

இதைப் போலத்தான் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுகின்றோமோ அத்தகைய அணுக்களின் இன விருத்தி நம் உடலுக்குள் அதிகமாகின்றது.

இப்படி வளர்ச்சியாகி வளர்ச்சியாகித்தான் நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.

காட்டிலே வாழும் மான் சந்தர்ப்பத்தால் புலியைப் பார்த்து விட்டால் அதனிடமிருந்து தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை எண்ணி எண்ணி அதன் உணர்வினை மான் அதிகமாக நுகர்கின்றது.

ஆக... புலியின் உணர்வை மான் பயத்தால் நுகர்ந்த பின் மானின் உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தப் புலியின் உணர்வைக் கருவாக உருவாக்கும் அணுக்கள் அங்கே பெருகி விடுகின்றது.

1.அப்பொழுது மானின் சாந்தமான உணர்வுக்குள் அது ஊடுருவி அதை மடியச் செய்து விடுகின்றது
2.அது தன் நினைவை இழக்கச் செய்கின்றது.

புலியோ மானின் தசைகளை உணவாக உட்கொண்டு விடுகின்றது. மான் புலிக்கு இரை ஆகின்றது.

ஆனால் புலியின் உணர்வை மானின் உயிர் கருவாக மாற்றி அந்த (மானின்) உடலை விட்டுச் சென்றபின் புலியின் உடலுக்குள் சென்று புலியின் ரூபம் அடைகின்றது.
1.அப்பொழுது கடவுள் யார்...? இந்த உயிரே கடவுள்.
2.உயிர் தான் இத்தகைய நிலையைச் செயல்படுத்துகிறது...!
3.பல கோடிச் சரீரங்களில் ஒன்றிலிருந்து மீண்டு ஒன்றுக்குள் இரையாகும் பொழுது நரக வேதனைப்பட்டு
4.அதன் நிலை கொண்டு கொன்ற உடலுக்குள் உயிர் அழைத்துச் சென்று
5.இப்படி உருமாறி... உருமாறி உருமாற்றி... நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர் தான் என்ற நிலையை
6.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மை இது...!

சுவாசத்திற்கும் நாடிகளின் இயக்கத்திற்கும் உண்டான தொடர் இயக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக ஐம்புலன்களில் செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்…” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்துச் செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழி ஓடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும் முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும். உணரவும் முடியும்.

March 19, 2021

நம் எண்ணத்தால் வந்த நோயை அதே எண்ணத்தால் போக்க முடியும்

 

உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாது அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.இந்த விஷத் தன்மைகள் கூடி சிறுநீரகங்களின் இயக்கம் பாதிக்கப்படுகின்றது.
2.இரத்தத்தில் கலந்து வரும் அசுத்தங்களை நீக்கும் சக்தியை அது இழந்து விடுகின்றது.
3.விஷத் தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
4.இதனால் “உப்புச் சத்து” என்ற நிலை உருவாகி வருகின்றது.

உப்பை வெளியிலே வைத்தால் அந்த வைத்திருக்கும் இடங்களில் எப்படிக் கசிவாகின்றதோ இதைப் போல நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் கசிவு அதிகமாகி விட்டால் அதனால் அவர்களுக்கு அடிக்கடி “வாந்தி” வரும்.

சர்க்கரையைச் சமப்படுத்தும் சக்தியும் இழந்து விட்டால் அதுவும் இணைந்து விடும். இத்தகைய நிலை ஏற்பட்டால் உணர்வின் உந்து விசை அதிகமாகிவிடும். இரத்தக் கொதிப்பும் இதனுடன் சேர்ந்து கொள்ளும்.

இத்தகைய நிலைகள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுப்பதும் வேதனை உணர்வு அதிகமாகி இந்த உடலை விட்டே ஆன்மா பிரியும் தன்மையும் வந்துவிடுகின்றது.

ஆனால் இத்தகைய நோய்கள் இருப்பினும் இது போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு
1.அதிகாலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று
2.அதைச் சீராகப் பயன்படுத்தினால் உங்கள் உடலில் எத்தகைய நோய்கள் இருப்பினும் அதை நீக்க முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி தியானித்தால் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீங்களே அகற்ற முடியும்.

1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது...
2.அதே எண்ணத்தைக் கொண்டு நோய் நீக்கும் அருள் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டு
3.அறியாது வந்த நோயினைப் போக்க முடியும் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.
4.உங்களால் முடியும்... நீங்கள் அந்தச் சக்தியைப் பெறுவீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா... என்ற இந்த நினைவுடன் எண்ணி ஏங்கித் தியானித்து விட்டு மீண்டும் கண்ணை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை “உடலுக்குள் சர்க்குலேசன் (CIRCULATION) செய்வது போன்று செலுத்துங்கள்...!”

உதாரணமாக... கிட்னியில் குறைபாடு இருந்தால் உங்கள் நினைவினை அங்கே அந்தப் பாகத்தில் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் நஞ்சினை நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உறுப்பு சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

வாத நோயோ கீழ்வாதம் முடக்குவாதம் போன்ற நோயோ ஆஸ்த்மாவோ சர்க்கரைச் சத்தோ இதைப் போல எந்த நோயாக இருப்பினும் அந்தந்த நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும். எங்கள் உடலில் அந்த அரும் பெரும் சக்தி படர வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்... என்பது போல்
2.உங்கள் கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி விட்டு
4.அடுத்த கணம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
5.இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை கலக்கச் செய்ய ஏங்கித் தியானியுங்கள்.

டி.பி.யிலிருந்து கேன்சர் வரை எந்த நோயாக இருந்தாலும் இதைப் போல் உங்கள் எண்ணத்தை உடலுக்குள் செலுத்தினால் அந்த நோயை நிச்சயம் நீக்க முடியும். உடல் நலம் பெற முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.

ஐம்புலனை இயக்கும் நாடிகள் மூலம் தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில்
1.காட்சிப் புலனறிவு... (கண்)
2.செவிப் புலனறிவு... (செவி)
3.உணர்வுப் புலனறிவு... (மெய்)
4.நுகர்தல் புலனறிவு... (மூக்கு)
5.சுவைத்தல் புலனறிவு... (வாய்) என்று
6.ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும் புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது... தோன்றும்
“எண்ணங்களும்... உணர்வுகளும்...” இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை
5.இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா...?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா...! உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும்... ஆத்ம பலமும்... பேரின்பப் பெரு வாழ்வும் பெற
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டப்பட...!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா...!

“ஈஸ்வரா...!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு “ஒலிக் காற்று...” என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை “விழிக் காற்று” என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையில் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்...?

சோம்பல் ஏற்படுத்துவதும்... வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்...
1.சுவாசத்தில் சுதியும்... விழிக் காற்றும்...
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்...!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே...! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

இதை எல்லாம் தெளிவாக உணர்தல் வேண்டும்.

March 18, 2021

தீமை வரும் பொழுதெல்லாம்... டி.வி.யில் சேனலை மாற்றுவது போல் நம் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்கு மாற்ற வேண்டும்

 

இந்தத் தியான வழியினைக் கடைப்பிடித்து வருவோர் எப்பொழுதுமே “விழித்திருத்தல்” (CONSCIOUS) வேண்டும். சந்தர்ப்பவசத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அதைத் தடுக்கும் விதமாக நாம் எடுக்கும் தியானத்தை உஷார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்படுகின்றோம். அவருக்கு உதவி செய்வதற்காகச் செல்கின்றோம். பார்த்ததும் அவருடைய கஷ்டத்தைக் கேட்டறிகின்றோம்.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்...?

அவருடைய நோயினைக் கேட்டு அறிந்து கொண்டபின் ஈஸ்வரா...! என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்... அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்... எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

நோயுற்றிருக்கும் அந்த நண்பனிடம்...
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறுவாய்..
2.நோயிலிருந்து விடுபடுவாய்... உன் உடல் நலம் பெறும்...! என்ற உணர்வுகளைச் சொல்ல வேண்டும்.
3.அவருடைய வேதனை நமக்குள் புகாதபடி இப்படி விழித்திருத்தல் வேண்டும்

ஏனென்றால் வேதனைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நமக்குள் தீமை வராது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு
3.மற்றவர்களுக்கும் இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால்
4.அவர்களையும் காக்க முடியும்... நம்மையும் காக்க முடியும்.

இத்தகைய தெளிவான உணர்வு கொண்டு செயல்பட்டு நோயுற்றவரிடம்... துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்... உங்கள் நோய் நீங்கிவிடும்...! என்று சொல்லுங்கள். இந்த உணர்வை நாம் அவர்களுக்குள் வித்தாகப் பதித்து விட வேண்டும்.

ஏனென்றால் நோயிலிருந்து அவர் விடுபட முடியாத நிலை இருக்கும் பொழுது இந்த உணர்வைப் பாய்ச்சி அவருக்குள் இந்த உணர்வை ஏற்ற வேண்டும்.

அவரும் நாம் சொன்னபடி இதை எண்ணத் தொடங்கினால் அவர் நோய் நீங்கக் காரணமாகின்றது. அவர் ஓரளவுக்கு மன உறுதியைப் பெறவும் இது உதவுகின்றது.

நமது வாழ்க்கையில் எதிர்ப்படும் பல தீமையின் உணர்வுகளை நாம் கேட்டறிந்தாலும் மேலே சொன்ன முறைப்படி செய்து... துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் வலிமை கொண்டு... நம்மைக் காத்து நம் நண்பர்களையும் காத்திட வேண்டும்.

ரேடியோ டிவிகளில் ஒலி/ஒளிபரப்பு செய்யும் பொழுது எந்த அலை வரிசையில் வைக்கின்றனரோ அந்த அலையைத் தான் அது கவர்கின்றது... நாம் கேட்கவோ காணவோ முடிகின்றது.

ஆனால் பிடிக்கவில்லை என்றால் வேறு அலை வரிசைகளை உடனுக்குடன் மாற்றுகிறோம்.

இதைப் போன்றுதான் அன்றாட வாழ்க்கையில் நாம் பலருடைய உணர்வுகளைக் கேட்டாலும் நுகர்ந்தறிந்தாலும் அந்தத் துயரத்தின் உணர்வுகள் நமக்குள் வந்தால் அடுத்த கணமே...
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.இந்த அலை வரிசையை நமக்குள் எடுத்துத் தீமைகள் புகாது தடுத்து நிறுத்த வேண்டும்.

நாம் எடுத்துக் கொள்ளும் அந்த துருவ நட்சத்திரத்தின் உண்ர்வு கொண்டு நண்பனைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் இது உதவும்.

இதை ஒரு பழக்கமாக நாம் வளர்த்துக் கொண்டால் நமது வாழ்க்கையில் அறியாது சேரும் தீய வினைகள் இருந்து உடனுக்குடன் நாம் விடுபட முடியும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஞானிகளின் உணர்வினை நாம் பெற்று நமது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாமும் அடைதல் வேண்டும்.

இதன் மூலம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரான ஈசனை நாம் யாரென்று அறிய முடிகின்றது
1.அவனையே வேண்டி... அவனுள்ளேயே கேட்டு
2.நாம் விரும்பியதை இங்கே உருவாக்க முடியும்

தெளிந்த மனம் கொண்டு நாம் அருள் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்ததை அவன் (உயிரான ஈசன்) உருவாக்கி அவன் வழியிலேயே நம்மை வழி நடத்தி நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வான்.

ஆகவே ஞானிகள் காட்டிய வழி சென்றால் இந்த வாழ்க்கையில் நாம் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலை அடையும் சக்தி பெறுகிறோம்.

நாடிகள் சங்கமிக்கும் நெற்றிப் போட்டு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.

சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.

அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.

மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே...”
2.”திரிவேணி சங்கமம்...!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.

சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை...” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.

இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.

எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திட வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.

1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது.

ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.

1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.

சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.