ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 30, 2022

விஷத்தால் நெருப்பு உருவானாலும்… நெருப்பு அந்த விஷத்தையே ஒளியாக்குகிறது

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். அந்தப் பதிவை மீண்டும் நினைவாக்கினால் “உங்களை நீங்கள் அறிய முடியும்…”

உயிர் ஒளியாக இருக்கின்றது… நெருப்பிலே மனிதன் குதித்தால் உயிர் அழிவதில்லை… உடல் கருகுகின்றது. ஆனால்
1.அகண்ட அண்டத்தில் விஷத்தின் தன்மை தாக்கி மற்றதைக் கருக்கும் நிலை இல்லை.
2.விஷம் தாக்கித் தான் நெருப்பாக மாறியது
3.நெருப்பாக ஆனபின் விஷத்தைப் பிரிக்கின்றது… இது இயற்கை...!

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் விஞ்ஞான அறிவிலே படித்துக் கொண்டவர்கள். டெக்னிக்கல் (நுட்பம்) என்ற அறிவை வளர்த்துக் கொண்டவர்கள். குருநாதர் காட்டிய வழியில் மெய் ஞானிகள் சொன்ன உண்மைகளை யாம் நினைவுபடுத்தும் பொழுது உங்களிலே இது ஆழமாகப் பதிவாகும்.

1.பதிவானதை மீண்டும் மீண்டும் நினைவாக்கி
2.இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடையும் சக்தியாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் உங்களுக்குள் வரவேண்டும்.
3.தீமையான உணர்வுகளை நுகர நேர்ந்தாலும் அதனுடைய வளர்ச்சி உங்களை மாற்ற நேர்ந்தால்
4.அதை உங்கள் நிலைக்கு மாற்றி அமைக்கும் அந்தத் திறன் பெற வேண்டும் என்பதற்குத்தான்
5.நமது குருநாதர் காட்டிய வழியில் ஆயுட்கால மெம்பராக துருவ நட்சத்திரத்துடன் உங்களை இணைக்கச் செய்கின்றோம்.

குருவுடன் இணைந்து… துருவ நட்சத்திரத்துடன் இணைந்து… ஆயுள் கால மெம்பராக ஆகும் பொழுது 2000 சூரியக் குடும்பங்களில் விளைந்த உணர்வின் ஆற்றல்களை நீங்கள் பெற முடியும்.

1.ஒரு உயிரணு நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடல்களை எப்படி மாற்றி அமைக்கின்றதோ அதைப் போல்
2.உடல் பெறும் உணர்வுகளை மாற்றி உயிர் ஒளியாக இருப்பது போன்று
3.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக மாறும் நிலை தான்.

ஆகவே கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றென இணைந்து ஒளியாக மாறுதல் வேண்டும்

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி “துருவ நட்சத்திரமாக ஆன அந்த நிலையை… நாம் அனைவரும் பெற முடியும்… பெற வேண்டும்.

ஞான வழியில்… வளர்ச்சி பெறுவது என்பது தனக்குத் தானே தவிர அடுத்தவர் கொடுத்துப் பெறுவதல்ல அது

நாம் எடுத்த வினைக்கு நாயகன் இந்தச் சரீரம் என்றால் முழுமையின் பொருள் விளங்கிடுமா...? உருவத்தில் மனித உடலையும் யானையின் தலையையும் சித்தர்கள் காட்டியதன் சூட்சமப் பொருள் என்ன...?

மனித மனம் தீய குணத்தின் வசம் ஆட்படும் பொழுது எடுக்கும் எண்ணச் செயல் சோர்விற்குப் பின் உணர்வுகளின் உந்துதல் காமத்தின் வழி மோகமாகின்றது. அந்தச் சூட்சமப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1.விநாயகருக்குப் பெரிய வயிற்றினைக் காட்டி
2.சகல உலகமும் அதனுள்...! என்று தத்துவம் கூறினால் புதிர் விடுபடுமா...?

உணவாக உட்கொள்ளும் உணவின் அந்த அமில குணங்கள்
1.சலிப்பின் செயலுக்கு மனித மனத்தின் உணவின் மாறுபாட்டால்
2.பத்துத் தலைகள் கொண்ட உருவம் உதித்தது... என்பதுவே
3.”உணவினால் உண்டாக்கப்பட்ட மோக குணங்கள் தான்...”

அந்த மோகத்தின் செயலைச் சித்தரிக்கவே எலியை வாகனமாகக் காட்டினார்கள். பூமிக்குள் மறைந்து வாழும் எலியைப் போல்
1.மனித மனத்தில் புதைந்து கிடக்கும் காமமும்
2.உணவின் செயலால் உணர்வுகள் கிளர்ந்தெழுந்த மோகமும் உள்ளது என்ற வகையில் உண்மையை உணர வேண்டும்.

வினையின் நாயகனே விநாயகர் என்று சொன்னதன் உட்பொருள் என்ன...?

எண்ணம் கொண்டு எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உருவான இந்தச் சரீரமான நாயகனைக் கொண்டு தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும் என்பதே...!

பூமியின் ஈர்ப்பில் வாசனை கொண்டு எடுத்துக் கொண்ட எண்ணம் கொண்டு தன்னை அறியும் பக்குவ கதிக்காக வேண்டி
1.அன்று சித்தனால் வழியமைத்துக் காட்டிய
2.சூட்சம உருவகப்படுத்திக் காட்டப்பட்டதே விநாயக உருவம்.

இந்தச் சரீர பிம்பத்தில் இருக்கும் கோடானுகோடி உயிரணுக்களும் வினையின் நாயகன் செயலுக்கு தியான ஈர்ப்பின் தொடரில் ஆட்கொள்ளப்பட்டுச் சக்தி ஈர்த்துச் சக்தி அளித்திடும் செயல் வழியின் உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்திடல் வேண்டும்.

அதை உணர்ந்தால் உலகோதய வாசனைப் பிடிப்பில் வாழும் நாம் ஒலி கொண்டு ஒளி பெற்றிடும் நிலையில்
1.உயிர் குரு (நம் உயிராத்மா) தன் தனித்துவச் சக்தியைப் பெற்றுக் கொள்ள
2.கணங்களாகிய இந்தச் சரீரத்தில் உள்ள உயிரணுக்களுக்கு ஒளி சக்தியை ஊட்டி
3.அந்தக் கணங்களின் கூட்டத்தில் “பதியாக” ஓர் சிறப்பிடத்தை உயிராத்ம சக்தி பெற்று
4.தன் வலு ஈர்ப்பின் சக்தி கொண்டு வலுவின் வலு வீரியமாகத் தன்னை வளர்ச்சிப்படுத்திட முடியும்.

இப்படி ஒவ்வொரு உயிரும் ஆத்ம சக்தியின் கலப்பில் தன்னைத் தானே வளர்ச்சிப்படுத்திக் கொண்டிட முடிந்திடுமே அல்லாது “பிறிதொருவர் அளிப்பது அல்ல எந்த ஜெப சக்தியையுமே...!”

மகரிஷிகளால் சூட்சமம் கொண்டு உணர்த்திட வருவதெல்லாம்...
1.தங்களின் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக வரும் உயிராத்மாக்கள்
2.”நன் நிலை பெற வேண்டும்...” என்ற பாச உணர்வினால் தானப்பா...!

இந்தச் சரீரத்தின் செயலில் அகத்தியர் அன்று காட்டினார் “வாதாபி ஜீரணம்...” என்று. வாதாபி ஜீரணம் என்றால் என்னப்பா...?

அறிந்து கொண்டிருக்கும்... அனைத்தையும் உணர்ந்து கொண்டிருக்கும் நிலையில்... அறியாத நிலையில் அசுர குணங்கள் மனிதனின் எண்ணத்தில் ஆட்கொள்ளும் பொழுது உடலில் சோர்வும் ஜீரண அவஸ்தையும் ஏற்படுகின்றது.

அதன் பின் அந்த அசுர குணங்களினால் இந்தச் சரீரம் கொண்டு செயல்படுத்திட முற்படும் மோக உணர்வுகளையும்... அந்த மோக உணர்வுகளைத் தூண்டிடும் உயிரணுக்களையும்... “ஞானாக்கினியான எண்ணம் கொண்டு சுட்டெரித்ததே வாதாபி ஜீரணம்...!”

பத்துத் தலைகள் என்று காட்டியதெல்லாம் மோகத்தின் கிளைகளே...!

“உணவின் மாறுபாடும்...” மோக உணர்வுகளைக் கூட்டும். அதைச் சுட்டிக் காட்டுவதே விநாயக உருவத்தில் சிவப்புத் திலகமிட்டுக் காட்டப்பட்டது.

எடுக்கும் எண்ண வலுவில் ஈர்த்து ஒளியைக் கூட்டிக் கொள்ளும் ஜெப நிலை பெற்றவன் மனிதச் சரீரம் கொண்டே உயிராத்ம சக்தியை உயர்த்திடல் வேண்டும் என்றால் “நாவின் சுவைக்கு...” அடிபணிந்திடாத பக்குவத்திற்கு வர வேண்டும்.

1.உணர்வுகள் கிளர்ந்திடும் மூலமே “வயிறு...” என்றும்
2.மோகத்தின் கிளர்தலின் மூலமும் அங்கு தான் என்றும்
3.அந்த மோகத்தின் கிளைகள் வலுப் பெற்றுவிட்டால் அறிவின் ஆற்றல் சிதைந்து விடும் என்ற
4.அந்த உண்மையின் கருப்பொருளை உணர்த்திடவே ஞானக்கண் என்றும்… செந்தூரத் திலகம் என்று காட்டினார்கள் சித்தர்கள்.

நாம் கொள்ள வேண்டிய உயர் ஞான வலுவைப் பெற்று விட்டால் உரப்புயலாக எழுந்த அந்த மோக குணங்கள் அனைத்தும் ஞான அக்கினியில் பொசுங்கிவிடும்.

“எண்ண வலு கொண்ட ஜெப சக்தி பெற்றவனால்...” உணவின் உயிரணுக்களையும் அதனின் மோக குணங்களையும் மாய்க்க முடியும்.
1.அவைகளையும் தன் சரீர ஒளி உயிரணுக்களுடன் ஒன்றச் செய்து
2.அவைகளுக்கும் சக்தி அளித்திட முடியும் என்பதன் பொருளை
3.ஆய்ந்து தெளிந்து செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பாடத்தின் சிறப்பு.

September 29, 2022

(திரு)வில்லிப்புத்தூரார் உருவாக்கிய “ஆண்டாள் திருஸ்தலம்”

“நாத விந்துகள் ஆதி நமோ… நமோ… வேத மந்திர சொரூபாய நமோ… நமோ… வெகு கோடி…!”
1.நாம் எதனின் உணர்வை நுகர்ந்தோமோ அந்த உணர்ச்சியின் உருவமாக
2.பல கோடிச் சரீரங்களைப் பெற்று வந்தோம் என்ற நிலைகளை அருணகிரிநாதர் இப்படிப் பாடுகின்றார்.

ரிக் வேதத்தில் கூறியது போல வான் வீதியிலிருந்து வரும் ஆற்றல்கள் ரா…ரா…ரா… ரீ…ரீ…ரீ…ரீ… ரு…ரு…ரூ…ரூ… ரு…ரு…ரூ…ரூ… ரீ…ரீ…ரீ…ரீ… என்று இந்த உணர்வின் தன்மையைப் பாடலாகப் பாடுகின்றான்.

காரணம் 27 நட்சத்திரங்கள் அது வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் சூரியன் ஈர்க்கும் பாதைக்குள் வரப்படும் பொழுது ஒன்றோடு ஒன்று மோதிய பின்
1.அதனுடைய சப்தங்கள் பலவாறு எப்படி மாறுகின்றது…?
2.அதற்கொப்ப உணர்வுகள் எப்படி மாறுகின்றது…? என்ற உண்மைகளை இந்தப் பாடலின் மூலம் உணர்த்துகின்றார்.

ஆனால் பதஞ்சலி முனிவராக இருக்கும் நிலையில் உடலின் நிலைகளுக்கு ஆசைப்பட்டான். அந்த உடலிலிருந்து அதை மறுத்து உண்மையின் உணர்வை அறியப்படும் பொழுது திருமூலராகின்றான்.

தவறின் வழிகளில் சென்ற அருணகிரிநாதரைத் தெளிவான நிலைகள் கொண்டு வருவதற்காக அந்த்த் திருமூலர் கண்ட உண்மையின் உணர்வுகளை அருணகிரியின் சகோதரி படித்தது.

ஆனால் அருணகிரிநாதரைத் திருத்த முடியாத நிலையில் உடலை விட்டுப் பிரியும் சகோதரியின் ஆன்மா
1.அருணகிரியின் உடலில் புகுந்து அந்த உடலை இயக்கி
2.திருமூலர் கண்ட உண்மைகளைப் பாடலாக வெளிப்படுத்தச் செய்கின்றது
3.அருணகிரிநாதரைத் திருந்தி வாழச் செய்கின்றது.

வில்லிபாரதம் என்று சொல்லுகின்றோமே… அதை எழுதிய வில்லிபுத்தூரார் அருணகிரி வாழ்ந்த காலத்தில் இருந்தவர் தான்.

புலமை பெற்றவர்கள்… கவிநயங்கள் கொண்டு பாடும் பாடல்களுக்குச் சரியான விளக்கம் சொல்லவில்லை என்றால் அவமதிக்கும் நிலையில் துரட்டியைப் போட்டுக் காதை இழுத்து ஊனமாக்கி விடுவார்கள். அக்கால வழக்கம் இது.

அருணகிரிநாதர் அங்கே செல்லும் பொழுது ஆறாவது அறிவின் தன்மையின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றார். வான்வீதியிலிருந்து வரும் உணர்வின் தன்மைகளைப் பெறும் போது அதன் வழியில் ஆறாவது அறிவு எப்படித் தெரிந்து கொண்டது…? தெளிந்து கொண்டது…? என்று அதை எடுத்துச் சொல்கின்றான்.

அப்போது அருணகிரிநாதர் ரா…ரா…ரா… ரீ…ரீ…ரீ…ரீ… ரு…ரு…ரூ…ரூ… என்ற பாடலைப் பாடப்படும் பொழுது “இதற்குண்டான விளக்கங்கள் சொல்ல வேண்டும்…!” என்று சொன்னவுடனே வில்லிப்புத்தூரால் அதைச் சொல்ல முடியவில்லை.

1.ரா..ரா.. ரீ..ரீ… என்ற உணர்வின் ஒலி அதிர்வுகளையும்
2.உணர்வுகள் மாற்றத்தையும் உணர்வுக்கொப்ப உடல்களின் அமைப்பும்
3.கோள்களின் அமைப்பும் பிரபஞ்சத்தின் மாற்றமும் என்ற நிலைகளில்
4.உயிர் என்ற இந்தப் பிரபஞ்சத்தில் உணர்வின் இயக்கமாக உடல்கள் எப்படி மாறுகின்றது…? என்ற தத்துவத்தைத் தான் அவன் பாடுகின்றான்.

இந்த விடைகளை அங்கே கேட்கப்படும் பொழுது வில்லிபுத்தூரர் சொல்ல முடியவில்லை. ஆனால் அவன் பாடிய பாடல்களுக்கு அருணகிரி விடை கொடுக்கின்றான் ஆனால் இவன் பாடிய பாடலுக்கு அவனுக்கு விடை கொடுக்க முடியவில்லை,

மகாபாரதப் போர் என்ற நிலையில் வரப்படும் பொழுது வில்லி பாரதத்தை எழுதிய வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரிடம் இந்த விளக்கங்களைக் கேட்ட பின் “ஆண்டாள்…” என்ற நிலையிலே அந்த உணர்வின் தன்மையைப் பதியச் செய்கின்றான்.

ஏனென்றால்…
1.எதனின் உணர்வின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ அந்த உணர்ச்சிகள் தான் தன்னை ஆளுகின்றது (ஆண்டாள்).
2.நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே படும் பொழுது தான் அரங்கநாதன் என்றும்
3.உணர்வின் தன்மை தனக்குள் ஆளுகிறது என்றும் ஆண்டாள் என்று திருஸ்தலத்தை அவன் அமைக்கின்றான்.

அதன் வழி வில்லி பாரதத்தை எழுதி வில்லிப்புத்தூரார் (திருவில்லிப்புத்தூர்) திருந்தி வாழ்ந்தான்.

1.ஆகவே உடலை விட்டுப் பிரிந்த ஒவ்வொரு உயிரும் எந்த நிலையில்… எப்படிச் செயல்படுகின்றது..? என்பதை உணர்ந்து
2.இந்த மனித வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்குத்தான் இதைச் சொல்வது.

நம் மீது மோதும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது... அதற்கு அடிமையாகவும் கூடாது

சரீரத்தில் தாக்கப்படும் நோயை நீக்க மருத்துவ அறிவின் எண்ணமானது நோயின் குணத் தன்மைகளை நாடி அளவறிந்து “மருந்து கொடுப்பது...” என்பது அணுபோக முறைப்படி செயல்படுத்த வேண்டும்.

சரீரத்தில் செயல்படும் தன்மைகளை நாடிகளின் துடிப்பலையால் காலம் அறிந்து அந்த நோயின் தன்மைகளை அறிந்து கொண்டு நோய் கடிந்திடும் செயலின் மூலம் மருத்துவப் பொருள்களைச் “சூரணம்...” செய்து கொடுத்து நற்பயன் விளைவித்தனர் அக்காலங்களில்.

அப்படிக் கொடுக்கப்பட்ட வைத்திய முறையில் மனப்பக்குவம் பெற்றிடும் வழி முறைகளுக்கு
1.“நாவின் அதி சுவை குணங்களை...” நீக்கிடும் எண்ணத்திற்கே
2.மருத்துவத்தின் தன்மைக்கொப்ப விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டன.

ஆனால் இன்றைய விஞ்ஞான மருத்துவத்தில் நோயின் குணங்களைச் சரீரத்தில் கண்டவுடன் அந்த நோயை நீக்கிடும் செயலுக்கு அதி தீவிர செயல் புரிந்திடும் மருந்துகளைச் சரீரத்தினுள் செலுத்தி நோயைக் கண்டவுடனேயே மருத்துவத்தால் குணமாக்கினாலும்... “பல்கிப் பெருகிடும் புதிய புதிய நோய்கள் ஏற்படக் காரணம் என்ன...?”

1.மாறு கொண்ட எண்ணங்களால் நற்குணங்களையே சூரணம் செய்து
2.தீமையான குணங்களுக்கு அவைகளையே உரமாக்கிக் கொள்ளும் எண்ணம் செயல்படுவதால்
3.ஜீவாத்மா பிறவி என்ற நோயில் அகப்பட்டு வதைப்படுகிறது.

இத்தகைய செயலுக்கு மூல காரணம் யார்...?

ஆனால் ஆத்ம பலத்தில் பரிபூரணம் பெற்றிட வேண்டும் என்றால் உலக வாழ்க்கைச் சூழலில் நம்மை மோதிடும் எதிர் நிலைகளுக்கு நம் எண்ணத்தைச் செலுத்திடலாகாது... அதற்கு அடிமையாகிவிடக் கூடாது.

1.இந்த உண்மையின் முழுமையைக் கொண்டு ஆக்கம் பெற்றிடவும்
2.எண்ணத்தில் பீடித்துள்ள பிணிகளை நீக்கிச் செயல் கொள்ளவும்
3.நற்சுவாசப் பரிசுத்தம் கொள்ள வேண்டும் என்றே உரைக்கின்றேன்.
4.ஞானச் செல்வம் பெற்றிட வேண்டும் என்றே கூறுகின்றேன்.

பேரருள் சக்தியாகத் தன்னுள் “மெய் ஞான விழிப்பு...” கண்டால் எண்ணத்தின் பரிசுத்தத்தால் ஈஸ்வரரின் ஆசி கொண்டு மகரிஷிகளின் அருளாசி பெற்றிடலாம்.

சிலவற்றை மறைத்தே உரைத்திட வேண்டியதுள்ளது. பேரருள் உலகோதயச் செல்வத்தை அளித்திடும் நிலையில் இன்று இல்லை.

இன்றை மனிதனின் எண்ணத்தின் மாறுபாடே காரணம் என்றால் சூட்சமங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.
1.எண்ணத் தூய்மை கொண்ட இந்தத் தியானத்தின் வழியிலேயே பேரருள் ஆசி பெற்று
2.வாழ்க்கை நிலையையும் கூட உயர்வு பெற முடியும்.

September 28, 2022

அமாவாசை அன்று செய்யக் கூடாதது...

பிறந்ததிலிருந்து இறக்கும் வரை மந்திரம் சொல்லும் பழக்கம் இன்றுள்ள பெரும் பகுதியான மக்களிடம் உள்ளது.
1.இறந்த பின் அந்த உடலைக் கருக்கி விட்டாலும்
2.உடலில் இருந்து வெளியேறிய உயிரான்மா இந்தக் காற்று மண்டலத்தில் தான் இருக்கும்.

“ஐந்தாம் படை…” என்று சொல்வார்கள். நாட்டுக்கு நாடு ஒவ்வொரு அரசனுக்கும் அது இருக்கும். எங்கெங்கே என்ன இருக்கின்றது…? என்று இறந்தவர்களைப் பற்றிய முழு விவரங்களை அரசனுக்குச் சொல்வார்கள்.

அதனின் செயல்கள் இன்றும் குடுகுடுப்புக்காரன் என்ற பெயரில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் நடந்து செல்லும் போது பாதம் பட்ட நிலைகளில் வீட்டு வாசல்படியில் இருக்கக்கூடிய மணலை எடுத்துக் கொள்வார்கள்.

நல்லது செய்வதாக… ஜோதிடம் சொல்வது மாதிரி நம் வீட்டிற்கே வந்து தலை முடியையும் பழைய துணியையும் கேட்டு வாங்கிச் செல்வார்கள்.

குடுகுடுப்புக்காரர்கள் என்று சொல்வதெல்லாம் அரசர்களுக்கு ஐந்தாம் படை வேலை செய்தவர்கள் தான். அன்றைய அரசன் காட்டிய உணர்வின் தன்மை கொண்டு மக்கள் மத்தியில் வந்து இந்த மூன்று பொருள்களை எடுத்துக் கொள்வார்கள்.

இறந்த முன்னோர்களுக்கு நாம் இங்கே என்ன செய்கின்றோம்...?

சுட்ட சாம்பலை எடுத்துக் கரைத்து விடுகின்றோம். அமாவாசை அன்று அவர்களுக்கு உணவு படைத்து அவர்கள் அணிந்த துணிகளை எல்லாம் வைத்து அழைப்போம்.

அதே சமயத்தில் அமாவாசை அன்று பித்ருக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களை எழுதி வைத்துள்ளார்கள். அதனின் உட்பொருள் என்ன…?

அமாவாசை அன்று சூரியனுடைய ஒளிக்கதிர்கள் அதிகமாக நமக்குக் கிடைப்பதில்லை. ஏன்…?

பூமியைச் சேர்த்துச் சுழன்று கொண்டிருக்கும் சந்திரன் சூரியனுடைய ஒளிக் கதிர்களைக் கவர்ந்து ரசம் பூசிய கண்ணாடி போல் எல்லா நாளும் நமக்குப் பரப்பிக் கொண்டு இருக்கின்றது. அதாவது பூமியின் இயக்க உணர்வுக்கு உதவி செய்கிறது சந்திரன்.

ஆனால் சந்திரனை பூமி முழுமையாக மறைக்கப்படும் போது
1.சூரியனுடைய ஒளிக்கதிர்கள் வராதபடி அது பூரண அமாவாசை ஆகின்றது.
2.அதனால் சந்திரன் மூலம் சூரியனின் ஒளிக்கதிர்கள் நமக்குச் சரியாகக் கிடைப்பதில்லை (பூமியிலிருக்கும் எல்லாவற்றுக்கும் இதே நிலை தான்)
3.அன்று கனமான சுவாசமாக நமக்கு இருப்பதன் காரணமே இது தான்

ஆகையினால் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் இங்கே சுழன்று கொண்டிருக்கப்படும் போது அமாவாசை அன்று வழக்கமாகக் கிடைக்கும் அலைகள் அவர்களுக்கும் கிடைப்பதில்லை.

அமாவாசை அன்று நாம் சாப்பாடு போட்டுத் துணிமணிகளை எல்லாம் வைத்து முன்னோர்களைக் கூப்பிடுவோம்.

ஆனால் அரசன் என்ன செய்வான்...?

அதற்கென்று ஒரு ஆளை நியமித்திருப்பான்.
1.வாழும் போது நாம் எந்தெந்த மந்திரங்களை எல்லாம் பதிவு செய்தோமோ
2.அந்த விவரங்களை எல்லாம் அவன் அரசனிடம் சொல்வான்.

அதன் பிரகாரம் கோவில்களோ மற்ற இடங்களிலோ “மந்திரங்களைச் சொல்லி” யாகங்களை வளர்ப்பார்கள். மந்திர ஒலிகளை வைத்து அந்த உணர்வின் தன்மை கொண்டு நம் முன்னோர்களின் ஆன்மாக்களைக் இழுத்து கைவல்யப்படுத்திக் கொள்வார்கள்.

அதாவது
1.நாம் இங்கே உணவையும் அவர்களின் துணியையும் வைத்துக் கூப்பிடும் போது
2.அவர்கள் அங்கே இழுத்துக் கவர்ந்து கொள்வார்கள்.

ஆக மொத்தம் உடலுடன் இருக்கப்படும் பொழுது அரசனுக்கு அடிமை. இறந்த பின்னும் ஆன்மாவை அவன் கைவல்யப்படுத்தி விடுவான்… நம் ஆன்மாவும் அவனுக்கு அடிமை தான். கைவல்யப்படுத்திய ஆன்மாக்களை எதிரி நாட்டின் மீது ஏவிப் பில்லி சூனியங்களுக்குப் பயன்படுத்துவான்.

அரசர்களுக்குள் போர் முறை வரப்படும் பொழுது பக்தியின் தன்மை கொண்டு இறந்தார்கள் என்றால் எதிரிகளை வீழ்த்தும் உணர்வுடனே மடிகின்றனர்.
1.அந்த ஆன்மாக்களையும் கவர்ந்து கொண்டு எதிரிகளை வீழ்த்த ஏவல் செய்வான்.
2.இதைப் போன்று தான் மாற்று அரசனும் செய்வான்.
3.மனித உடலிலிருந்து எடுத்துத் தான் அன்று இந்த வேலைகளைச் செய்வார்கள்.
4.அன்றைய அரசர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இது தான்.

தனுர் வேதம் கற்றுக் கொண்டவர் தான் போர்முறை நடத்த முடியும் என்று இதைத் தான் மகாபாரதத்தில் சொல்லியிருப்பார்கள்.

தனுர் வேதம் என்றால் ஒரு மனிதனுக்குள் மந்திரங்களைச் சொல்லிப் பதிவு செய்து அதன் பின் அதே பதிவை வைத்து மீண்டும் இறந்த பின் அந்த ஆன்மாவைக் கவர்ந்து ஏவத் தெரிய வேண்டும்.

அப்படி ஏவத் தெரிந்தவன் எவனோ அவன் தான் அந்த நாட்டையும் மற்றதையும் பாதுகாக்க முடியும் என்று அரசு நியதிகள் அன்று உண்டு.

ஒரு மனிதனுக்குள் மந்திர ஒலியினைப் பதிவாகி அந்தப் பதிவை மீண்டும் எடுத்துக் கொள்ளத் தெரிய வேண்டும். அதை வைத்துத் தான் அன்று பல நிலைகளைச் செயல்படுத்தினார்கள்.

எளிதில் ஆன்மாக்களைக் கவர்வதற்குத் தான் அமாவாசை என்று அந்த இருண்ட நாளை அன்று அரசன் தேர்ந்தெடுத்தான்
1.அன்று அரசன் எதைக் காட்டினோ அதே வழியில் தான் நாமும் செயல்படுகிறோம்.
2.அரசனால் காட்டப்பட்ட சாஸ்திர விதிகளில் இப்படிச் சிக்கி
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை உயர்ந்த நிலை பெறச் செய்யாதபடி
4.ஐதீகம் என்ற முறைகளில் மாதத்தில் ஒரு நாளும் வருடத்தில் ஒரு நாளும் ஒரு சாங்கியத்தைச் செய்து விட்டு
5.அதனுடன் திருப்தி அடைந்து கொள்கிறோம்

அதைப் போன்ற நிலைகளிலிருந்து மீண்டு நாம் முன்னோர்களை விண் செலுத்தப் பழக வேண்டும். சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா...! அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று சப்தரிஷி மண்டல ஒளி அலைகளை முதலில் நமக்குள் வலு கூட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டல ஒளி அலையுடன் கலந்து
1.உடல் பெறும் உணர்வுகள் அனைத்தும் அங்கே கரைந்து
2.என்றென்றும் மகிழ்ந்திடும் நிலையாக அழியா பருவம் பெற்ற ஒளியின் சுடராகி
3.பேரானந்தப் பெரு நிலை அடைய வேண்டும் என்று வீட்டிலுள்ளோர் அனைவரும் உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அந்த ஆன்மாக்கள் எடை இல்லாமல் இருப்பதால் நாம் உடலுடன் ஒரு இயந்திரம் போன்று இருப்பதால் நாம் பாய்ச்சும் அந்த சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்கள் உயிராத்மாவில் இணையப்பட்டு
1.சப்தரிஷி மண்டல ஒளி அலையும் இந்த உயிராத்மாவும் சந்திக்கும் நிலையில்
2.புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடக்கச் செய்து “நேரே…” அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கே அழைத்துச் சென்றுவிடும்...!

இவ்வாறு “தினசரி” நாம் எண்ணுதல் வேண்டும்.

ஒவ்வொரு உயிரும் பெற வேண்டிய உயரிய தன்மையைத் தான் அகஸ்தியர் விநாயகனாகக் காட்டினார்

மனித குலம் உண்மையை உணர்ந்து வாழவும் அந்த வாழ்வில் உயர் ஞானச் செயலின் சிறந்த பேறு பெறும் வழியாகவும் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களின் விசேஷத் தன்மைகளைச் “சிலை வடிவில்...” சித்தர்கள் அன்று உணர்த்தினார்கள்.

அந்தச் சித்தர்களின் மனித குல உயர்விற்கு வழி காட்டிய தெய்வச் சிலைகளின் தத்துவத்தையே கேடுறச் செய்து ஆர்ப்பரித்துப் பகட்டைக் காட்டிடும் நிலைக்கு இன்று வந்து விட்டார்கள்.

சித்தன் படைத்த செயலையே மனிதன் பகட்டிற்காகவும் கௌரவ வாழ்விற்கும் பயன்படுத்திச் சீர்குலைத்து விட்டனர். அப்படிச் சீர்குலைக்கப்பட்டதால்
1.வாழையடி வாழையாக வழி வரும் மெய் ஞான உயர் சக்தி பெற விழைந்த ஆத்ம ஞானிகளால்
2.உட்பொருள் வெளிப்படுத்தும் எண்ணமின்றி மறைக்கப்பட்டு விட்டது.

விநாயகர் உருவத்தைக் காட்டி ஆற்றங்கரையில் வைத்த நிலை எல்லாம் இன்று கேலிக்குரிய நகைச்சுவைப்படுத்தி ரசித்து மகிழும் நிலைக்குச் சென்று விட்டது.

இன்றைய மனித மனங்கள் உட்பொருளை நாடி அறிந்து கொள்ளத் தயங்குதுவும்... பயம் என்ற போர்வை கொண்டு பக்தி என்ற குளிர் போக்கத் தானும் நடுநடுங்கி... அறிவொழிந்து...! அதிலிருந்து விடுபட முடியாத நிலை ஆகிவிட்டது.
1.ஜோதி என்ற தன் உயிர்க்கனலின் நெருப்பே பக்தி என்ற குளிரை விரட்டும்...! என்று அறியாமல் போனதென்ன…?
2.அந்தக் குளிரை நீக்க வந்தவனும் உட்பொருளை அறிந்ததில்லை...!

ஆவியான நீர் அமிலங்கள் எல்லாம் தன் செயலில் தான் நெருங்கி... ஒன்றோடொன்று கண பரிமாணம் கொண்டு... பிறிதொன்றின் சேர்க்கையில் நீர்த் திவலையாகும் நிலையில் “அதுவே சிவமாகின்றது” (திடமாகி உருவமாகின்றது).

அது பூமிக்குள் வரும் காரிய நிலை கொண்டு சுழலும் தன்மையிலே சக்தியாகவும்... பூமியில் படிந்து பின் எழும் செயலின் தொடர்பில் மீண்டும் நீராகவும்... அதுவே எழும் தொடரில் ஆவி நீர் அமிலமாகவும் செயலுறும் தொடர்புகளை அறிந்து கொள்தலே “பிரம்மம்...!”

அத்தகைய பேருண்மைகளை அறிந்து கொண்டவர் தான் “அகத்தியர்...!”

அவர் உயிரணுவின் செயல் சுழலும் சக்தியாகப் பரிணமித்துப் பூமிக்கு வந்த காரியத்தில் வினையான தன்மைக்கு நாயகனாக இந்தச் சரீரம் பெற்றார்.

வினையின் நாயகனே விநாயகர் என்று தன் உயிர் ஆன்ம சக்தியையே உயர்த்திக் கொள்ளும் வழியாக
1.எல்லா உயிர்த் தொகைகளுக்கும் உயிரணுக்கள் பொதுவாகவும்
2.அது பெறும் வீரியத்தில் வித்தியாசமும்… அதுவே பின் எண்ணத் தொடரில் சரீரமாகவும்
3.தன் அமில குண நிலைக்கொப்பத் தனக்குகந்த... தான் பெற்ற தன்மை கொண்டு... ஞான வழியில் “ஒவ்வொரு சரீரமும் பெறுகிறது...” என்றார் அகத்தியர்.

அத்தகைய உயிரணுக்களுக்குள் வீரிய சக்தி கொண்டது “யானை...” என்றும் அது பெற்ற சக்திக்கு அதன் “சுவாசமே...” காரணம் என்று தெளிவாக உணர்த்தினார்.

மனித குலம் ஞானத்தில் உயர்வடைய வேண்டும் என்றால்
1.தான் எடுக்கும் எண்ண ஓட்ட சுவாச கதியை உயர்வாக்க வேண்டும் என்பதற்காக
2.விநாயகரை உருவகப்படுத்திக் காட்டினார் அந்த அகத்தியர்.

நீர்ச் சக்தியைத் தன் எண்ண ஓட்ட கதியுடன் ஒன்றுபடுத்திக் கண்ட அந்த அகத்திய மாமகரிஷி “சுவாச வழியில் வீரியம் பெறும் நிலையைப் புகட்டினார்...!”
1.வினைக்கு நாயகனே விநாயகன் என்று
2.தன் உயிர் குருவைக் கண்டு கொண்ட பின்
3.அவர் சென்ற வழியின் உயர்வே “கணபதி...”

கணங்களை ஆளக்கூடிய தலைவன் “கணநாதன் என்ற உயிர்ச் சக்தியானது” தன்னுள் உள்ள கணம் என்ற கூட்டமாகிய அனைத்து உயிரணுக்களுக்கும் நாயகனாக வினையின் நாயகனாகச் செயல்படுகிறது.

1.கணங்களுக்கெல்லாம் (உயிரணுக்களுக்கெல்லாம்) அதிபதியாக ஒரு வழிகாட்டியாக
2.உயிர் ஆத்ம சக்தி... தான் சக்தி பெறும் மார்க்கமாகச் சக்தி பெற்று
3.தான் பெறும் சக்தியையே சரீர உயிரணுக்களுக்கும் ஊட்டிடும் நிலையே “கணங்களின் பதியான கணபதி ஆவான்...” என்று
4.உயிர் பெறும் உயரிய தன்மைக்குச் சித்தனால் காட்டப்பட்டதே விநாயகர் என்பதை அறிந்துணர்தல் வேண்டும்.

September 27, 2022

எண்ணம் சொல் செயல் இந்த மூன்றையும் நேர்கோட்டில் வைத்திருப்பவனே குருவாக முடியும்

பரவெளியில் படர்ந்துள்ள ஒளியான மின் அணுக்கள் காந்தத்தின் உள் நிகழ்வாக அசையும் நிலை சூட்சமமாக அதற்குள் இருந்தாலும் சஞ்சலமில்லாத மனத்திறன் கொண்டு வைராக்கியப் பற்று கொண்டோன் நல் ஆக்கத்தின் செயலுக்காகத் தன்னைத் தான் உணர்கின்றான்.

உணர்ந்து தெளிந்த வழியின் ஈர்ப்பினால் சகலத்தையும் தன்னுள் சக்தியாகக் கூட்டும் செயலாகப் “பேரருள்...” என்ற மூலத்தில் கலக்கின்றான்.

சகலத்தையும் அறிந்து கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியம் இயலாது என்றாலும்
1.தனக்குள் தானே நல் வழி ஆக்கத்திற்காகச் செயல்படும் விதம்
2.ஒவ்வொருவரும் தன் ஆத்மாண்டவனை உயர்த்தும் செயலே கடமை விதி.

அதே போல் சரீரத்துடன் கலந்து எண்ணிடும் செயல் அனைத்திற்கும் ஓர் வரைமுறைக்கு உட்படுத்தப்பட்ட செயலைக் காட்டும் கடமை விதியும் உண்டு.

உலகோதய நடைமுறை வாழ்க்கை நெறியில் தன் சிந்தனையைத் தெளிவாக்குவதற்காகக் குருவை நாடுகின்றான்.

குரு என்றால் என்னப்பா...?

குரு என்றாலே “ஒளி நிலை...” என்பது பொருள்...!

1.தனக்குத் தானே உபதேசத்தை ஏற்றுக் கொண்டவன் தான்
2.பிறருக்கு உபதேசிக்கத் தகுந்தவன்.

அவ்வகையில் கூறும் குரு… எண்ணம் சொல் செயல் அனைத்தும் நேர்கோடாகப் பரிணமிக்கத் தன் செயல் நடைமுறைகளால் குருவாகின்றார்.

கடமை விதி… சிஷ்யர்களாகிய அனைவருக்கும் உண்டு என்றாலும் குருவிற்கும் உண்டு.
1.கடமை விதி... உலகோதய நிலை விடுத்துப் பேரருள் தெய்வத் தன்மை நிலை அடைவதற்கு
2.ஓர் வழி காட்டும் அமைப்பே குரு.

பேரருள் சூட்சமம் அறிந்த கோடானுகோடி உயிராத்மாக்கள் நல்லாக்கச் செயல் நிகழ்வுகளில் மூலத்தில் கலந்து வாழ்கின்றனர். ஆனால் சிலரே அனைத்து உயிர்களும் அந்தப் பேரானந்த லயத்தில் இன்புறுதல் வேண்டும் என்று கண்டுணர்த்தினர்.

அவர்கள் காட்டிய அன்பு நெறிகளில் “நான்...!” என்ற நிலை இல்லையப்பா...!
1.நான் என்ற சொல்லும்
2.நான் தான் பெற்றுத் தருவேன்...! என்ற சொல்லும் எதற்கப்பா...?

“தனித்துவமான சக்தி...” பெறும் நிலையன்றோ நாம் புகட்டியது.

ஒவ்வொரு உயிராத்மாக்களும் நல் நிலை பெற வேண்டும் என்று எமக்குள்ள ஆசையால் தானே எல்லாமுள் எல்லாமாக விளங்கும் பேரருள் சக்தியுடன்... மாமகரிஷிகளின் ஆசியுடன்... “மறைக்கப்பட்ட இந்த உண்மை நிலைகளை...” இங்கே எடுத்து இயம்பிக் கொண்டிருக்கின்றோம்.

1.இதில் நான் என்ற நிலை எங்கே உள்ளது...?
2.பரப்பிரம்ம நிலைதனில் சகல உயிர்களையுமே
3.அந்த ஈஸ்வரனாக எண்ணிச் செயல் கொள்ளும் அன்பு வழியைத்தானே இங்கே காட்டுகின்றோம்.

குருவே உன் உயிராக ஆத்மாவில் இயக்கும் செயலில்... சரீரம் கொண்டு செயல்படும் நிலையில் எல்லாம்... கடமை விதி என்பது பக்தி நிலை தானே தவிர “நீ உன்னை உயர்த்தும் சிங்கார அழகு எங்கே...?”

1.குருதேவர் (ஈஸ்வரபட்டர்) ஊட்டுவார்...! குருதேவரே ஊட்டட்டும்… என்று
2.உன் முயற்சியின் வழியை விலக்கினால்
3.உன் உயிராத்மா உயர்ந்த சக்தி பெறும் அந்த ஒளியின் அழகு சுயப்பிரகாசமாக வளர்வது எங்கே...?
4.யாம் விரும்புவதே ஒவ்வொரு ஆத்மாக்களின் சுய முயற்சிதான்.
5.அதுவே நல்லாக்கத்தின் வழி.
6.வினைக்கு நாயகன் விநாயகன்..! என்று தன்னைத்தானே அறிந்து கொள்வதே குரு காட்டிய கடமை விதி.

உன்னை நீ உணர்ந்து சித்தன் காட்டிய விநாயகரின் உருவத்தில் மனித உடலும் யானையின் தலையும்...? எதற்காக என்ற வினாவிற்குரிய தெளிவை அறிவின் துணை கொண்டு தெளிதலே நல்லாக்கத்தின் வழி.

தெளிந்த பின் தன் உயிராத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் செயலும் வேண்டும்.

September 26, 2022

நாம் உயிருடன் ஒன்ற வேண்டும்.. உடலுடன் அல்ல...! என்று தான் இராமாயணம் காட்டுகிறது

கர்ப்பமாக இருக்கும் சீதாவை இராமன் காட்டிலே விட்டு விட்டுச் சென்று விடுகின்றான். அங்கே கர்ப்பிணியாகத் தவித்துக் கொண்டிருக்கும் சீதாவின் நிலையை உற்றுப் பார்த்து அருகிலே வான்மீகி இருக்கும் ஆசிரமத்திற்குச் அழைத்துச் செல்கின்றனர்.

வான்மீகி சீதாவின் உண்மை நிலையை உணர்ந்து கொள்கின்றார்.

சீதா என்ற மகிழ்ச்சி என்ற உணர்வின் தன்மை...
1.இராமனின் செயலும் - அந்த எண்ணத்திற்குத் தக்க இந்த உணர்வுகள் எப்படி வேலை செய்கிறது...? என்றும்
2.அரசாங்க நிலைகள் எப்படி ஆகின்றது...? என்றும்
3.மக்கள் எப்படி வாழுகின்றனர்...? என்றும் இந்தக் காவியத்தின் உண்மை நிலைகளைச் சொல்கின்றார்.

வான்மீகி சீதாவிற்கு ஓதிய வான இயலின் உணர்வுகள்... சீதா நுகர்ந்த அந்த மெய் உணர்வுகள்... இரத்தத்தில் கலந்து கருவில் இருக்கக்கூடிய குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகக் கிடைக்கின்றது.

பத்து மாதம் ஆகிப் பிறந்த பின் வளர்ச்சியாகி லவ குசா என்ற நிலையில் இராம காவியத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.

தன் தாயின் செயலை...
1.சீதா மாசு பட்டதல்ல... மாசற்ற நிலை கொண்டது
2.எதனிலும் கலக்கவில்லை... உண்மையின் உணர்வுகளையே பெற்றது என்ற நிலையில்
3.இராமனின் நிலைகள் எதனெதன் உணர்ச்சியின் தன்மையோ அதனதன் உணர்வுகள் தான் செயல்படுகிறது என்று பாடலாகப் பாடுகின்றார்கள்.

இது எல்லாம் மனிதர்கள் புரிந்து கொள்வதற்குத் தான்.

ஆனால் வெறும் கதையாகத் தான் படித்துத் தெரிந்து கொள்கின்றோமே தவிர உண்மையின் உணர்வை நாம் அறிந்து கொள்ளும் நிலையே அற்றுப் போய்விட்டது.

காரணம்... “நமது உணர்வுக்கொப்ப” உற்றுப் பார்க்கப்படும் போது அதே உணர்வு வருகின்றது. அந்த உணர்வைத் தான் நாம் வளர்த்துக் கொள்கின்றோமே தவிர
1.ஞானத்தின் உணர்வைப் பெறும் தகுதி இல்லாது
2.காவியத் தொகுப்புகளை அவரவர்கள் இஷ்டத்திற்குச் செயல்படுத்தி விட்டார்கள்.

ஆனால் குருநாதர் இதை எல்லாம் எமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினார்.

வான்மீகி உணர்த்திய அந்த வழிப்படி லவ குசா இராமனைப் பற்றிப் பாடுகின்றனர். பாடலைக் கேட்கும் பொழுது இராமன் தன் மனைவி சீதா மாசு பட்டவள் அல்ல என்ற உண்மையை உணர்கின்றான்.

சீதா எவ்வளவு தொல்லை பட்டிருக்கும் என்ற உண்மையை உணர்ந்து மகிழ்ச்சி என்ற நிலைகளில் இனி அரவணைத்து
1.தான் செய்த குற்றத்தை மறந்து என்னுடன் இணைந்து மீண்டும் வாழலாம் என்ற நிலைக்கு இராமன் வருகின்றார்
2.ஆனால் மாசுபடும் உணர்வுடன் கலந்தால் அந்த உணர்வின் தன்மை எப்படி இருக்கும்...? என்ற நிலையைத் தான் இங்கே காட்டப்படுகின்றது.

விஷ்ணுவின் பக்தன் ஆஞ்சநேயர் என்றாலும் அதே உணர்வின் தன்மை தான் எண்ணிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. விஷ்ணுவின் மறு அவதாரம் சீதாராமன் என்று கூறப்படுகின்றது.

எதை எல்லாம் நுகர்ந்தோமோ உயிரான விஷ்ணுவிடம் வரும் போது அது வரம் கொடுக்கும் நிலையாக அமைந்து விடுகின்றது. இந்த உணர்வின் தன்மை உடலில் சேர்க்கப்படும் பொழுது சீதா - மகிழ்ச்சியின் தன்மையை பிரம்மம் ஆகின்றது. பிரம்மாவின் மனைவி சரஸ்வதி அந்த ஞானத்தின் தன்மை கொண்டு வருகின்றது.

இருந்தாலும் இந்தச் சீதா...
1.தன் உணர்வின் தன்மை என்றும் ஒளியின் மயமாக வேண்டும் என்றும்... அருளொளியாக வளர வேண்டும்
2.கணவன் மனம் தெளிந்திட வேண்டும் தெளிவான நிலைகள் வளர வேண்டும் என்ற
3.தெளியச் செய்யும் உணர்வின் தன்மையைத் தான் எண்ணத்தால் எண்ணி எடுக்கப்படும் பொழுது
4.எந்தச் சுவையின் தன்மையோ... விஷ்ணுவிடம் இணையும் நிலை தன்மை வரப்படும் பொழுது
5.நுகர்ந்த உணர்வின் தன்மை (சீதா) ஒளியாகி அதைத் தன்னுடன் அரவணைக்கும் தன்மை வருகின்றது.

இதைக் காட்டுவதற்குத் தான் தன் கணவன் (விஷ்ணு) என்ற நிலையில் மகிழ்ச்சியான நிலைகள் கொண்டு “நிலையான நிலைகள்” பெற்றதனால்
1.கடைசியில் இராமன் அரண்மனைக்குக் கூப்பிடும் பொழுது
2.இந்தப் பூமியில் விளைந்த உணர்வின் சத்து பூமியைப் பிளந்து
3.உடலில் பெற்ற சத்துக்கள் எல்லாம் பூமியுடனே ஐக்கியமாகின்றது.

ஆனாலும்... பூமியிலே வந்த மணத்தின் உணர்வுகள்... உணர்ச்சிகள்... வந்ததெல்லாம் சீதா எடுத்துக் கொண்டதனால் உணர்வின் தன்மை ஒளியாகி... உணர்வின் தன்மை அது இயக்கமானது போல
1.”சீதா - சீதாராமா என்ற சுவையின் உணர்வின் ஒளியாக விஷ்ணுவுடன் ஐக்கியமாகின்றது...
2.சொர்க்கம் அடைந்தது என்ற நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

இதனின் விரிவாக்கம் சொல்ல வேண்டும் என்றால் குறைந்த்து இரண்டு மாதம் ஆகும். உங்களுக்குச் சுருக்கமாகச் சொல்லி இந்த உண்மைகளை நீங்கள் உணரும்படி செய்கின்றோம்.

இந்த மனித வாழ்க்கையில் வரும் உண்மையின் இயக்கங்களை நீங்கள் அனுபவங்களாகத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே இராமாயணத்தில் அவ்வளவு பெரிய உண்மைகள் உண்டு.

காட்டிற்குள் அழைத்துச் சென்று... சீதா என்ற சுவையைப் பற்றிய உண்மை நிலைகளை “மனிதனான பின் இதையெல்லாம் தெரிந்து கொள்கிறோம்...” என்று குருநாதர் எனக்கு உணர்த்துகின்றார்

நான்...! என்பது யார் என்று புரிந்ததா…?

1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து... பொருள் புரிந்து... அறிந்து... தெளியும் வகைகள் புலப்பட எழுத்தில் வடிக்கும் ஆசானும்
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு... கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போயின…?

கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைக்கின்றான் மனிதன்...! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?

எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்...” என்றால் வெறும் உலகோதய நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்கன்றோ சென்று விட்டது “அறிவு...”

எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால்
1.ஆத்மாவா…. நான் என்பது…?
2.எண்ணத்தின் அலையே சுவாசமாகி...
3.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி...! என்று பாடுகின்றோம்.

ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது.

அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.

சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்...” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்... உறங்குவதும்... புறத் தொழில் புரிவதும்... கழிவுகளை நீக்குவதும்... பார்த்தல்... கேட்டல்... நுகர்தல்... சுவைத்தல்... ஸ்பரிசித்தல்... அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே... இயல்பாக... “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்...”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?

சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?

எண்ணத்தின் அலையே சுவாசமாக சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான். “நான்...” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெற வேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி எந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட... மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்...!”

நான்...!” என்பது யார் என்று இப்பொழுது… “புரிந்ததா…?

September 25, 2022

கல்லாவின் பால்

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனம் கொண்டே சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்டிட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாக உயிராத்மாவை எண்ணி
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெற்றிடவே “மௌனம்...”

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால் “பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல...”

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெற்றிடும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏடறிவின் வழி கற்றவர் அன்றி படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கல்லா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின் தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொண்டிடும் சப்தரிஷிகளின் ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
2.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
3.என் நிலைக்கும் உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தின்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில் ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில் உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”

September 24, 2022

உட்கார்ந்து தியானமிருப்பது என்பது “ஒரு பயிற்சி... பழக்கத்திற்குத் தான்…!”

பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும்பொழுது “மீண்டும்” பள்ளிக்குச் சென்று யாரும் படிப்பதில்லை.

படித்து விட்டு வந்துவிட்டோம். படித்து முடித்து வந்தபின் தப்பாகி விட்டால் “ஓடிப் போய்ப் பள்ளியில் உட்கார்ந்து” மீண்டும் படிப்பதில்லை.

பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுத்த பாடநிலையைப் பார்த்து அதன்படி செய்த நிலைகளில்... “இதில் என்ன குறை இருக்கின்றது...” என்று “திரும்பிப் பார்க்க வேண்டும்…” ஆகவே
1.தியானம் இருந்து பழகியபின்
2.பழையபடி ஓடி வந்து தியானமிருப்பதில்லை.

இங்கே பாட நிலையை உங்களுக்குள் உறுதிப்படுத்தியபின் அருள் உணர்வுகளின் “பதிவு... RECORD” உங்களுக்குள் இருக்கின்றது.

1.வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சிக்கலாகின்றதோ அந்த இடத்திலேயே… அப்போதே… இதனுடய சிந்தனை என்ன…?
2.சாமி என்ன உபதேசம் செய்தார்…?
3.“சாமி உபதேசம் செய்ததற்கும்... நமக்குள் இப்போது வருவதற்கும்,,. என்ன வித்தியாசம் இருக்கின்றது…?”
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால்...
6.உங்களுக்கு அப்பொழுதே “விடை” தெரியும்.
7.அந்த விடையை வைத்து மாற்றிக் கொள்ளும் சக்தி உங்களுக்கு வர வேண்டும்.

ஆனால் இப்பொழுது என்ன செய்கிறோம்…?

சாமியை நம்புகிறோம்... சாமியாரை நம்ப முடிகின்றது.. மந்திரக்காரரை எல்லாம் நம்ப முடிகின்றது. நாம் இப்படித்தான் தேடிப் போகின்றோம்.

நமக்குள் இந்தச் சக்தியை வளர்த்து இந்த வாழ்க்கையில் வந்த துன்பங்களை நீக்கி அந்தப் பேரருள் என்ற உணர்வை வளர்த்து இனிப் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும் என்ற அந்த நிலைக்கு வருதல் வேண்டும்.

அப்பொழுது இந்த வாழ்க்கையில் தீமை புகாது “தீமைகளை அடக்கிடும் வல்லமை” வருகின்றது.

ஆனால் இதை விட்டு விட்டு என்ன சொல்வார்கள்…?

தீமை வரப்படும் பொழுது...
1.எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதே...
2.இந்த வேலை செய்தால் அப்படி நடக்கின்றது... தொழில் செய்தால் நஷ்டமாகின்றது...
3.இந்த வண்டியை ஓட்டினால் கஷ்டமாக இருக்கின்றது...
4.”எதைச் செய்தாலும்…” எனக்கு ஒரே தொல்லையாக இருக்கின்றது என்பார்கள்.

இப்படிக் கஷ்டங்கள் ஆனபின் அப்புறம் அந்த உணர்வு கொண்டு பிள்ளைகளை எண்ணினால் அவர்களுக்குள்ளும் இந்த உணர்வுகள் பதிவாகி விடுகின்றது. அவர்கள் தொழில் செய்தாலும் நஷ்டமாகின்றது.

இப்படியே...
1.என் குடும்பத்தில் தொடர்ந்து எல்லாமே நஷ்டமாகின்றது
2.என் குடும்பத்திற்கு “யாரோ... ஏதோ... என்னமோ... செய்து கொண்டிருக்கின்றார்கள்...”
3..யாரோ செய்துவிட்டார்கள்…! என்ற இந்த உணர்வு தான் வரும்.

அதற்குத் தகுந்த மாதிரி ஜோதிடம் பார்ப்பவர்களிடம் செல்வார்கள். அவன் என்ன செய்வான் தெரியுமா..,?

நாம் இந்த எண்ணத்துடன் செல்கிறோம் அல்லவா.., இதை மீண்டும் உறுதிப்படுத்திவிடுவான் (RE - RECORD). உங்களுக்குத் “தோஷத்தைச் செய்துள்ளார்கள்...” என்பான்.

சகஜ வாழ்க்கையில் ஏதாவது சிறு குறைகள் இருந்தால் அந்தக் குறையின் தன்மை வரும் பொழுது என்ன செய்வோம்…? “இன்னார் தான்... செய்திருப்பார்கள்” என்று உறுதிப்படுத்துவோம்.

அதே மாதிரி நாம் எண்ணும்பொழுது இந்த உணர்வு கலந்து அலைகளாகப் பாய்ச்சப்படும் பொழுது.., நீங்கள் அங்கே போனவுடன் (ஜோதிடம் பார்ப்பவன்) இன்னொரு ஆவியின் உணர்வு கொண்டு… அல்லது உணர்வின் வலிமை பெற்று... இதை அறியும் உணர்வு மோதப் பெற்றவுடன் அவன் என்ன சொல்வான்..?

1.உங்களுக்குப் பக்கத்தில் தான் இருக்கின்றார்கள்
2.ரொம்பவும் தெரிந்தவர்கள்தான்… என்று இலேசாக ஒரு வார்த்தையை விட்டுப் பார்ப்பான்
3.இவராக இருக்குமோ என்று நம்மிடம் இருந்து சொல்கள் வந்தவுடன்
4.”அவர்களே தான்” என்பான்...
5.கடைசியில் இவர்கள் தான் செய்தார்கள் என்று பகைமையை உண்டாக்கிவிடுவான்.

உங்களுடைய சந்தர்ப்பம்... சந்தேகமாக இருந்தாலும்... பின் “அவர்கள் தான் செய்திருப்பார்கள்…” என்று உறுதியாகிவிடும்.

இந்த மாதிரிச் செய்து விட்டார்கள் என்ற உணர்வு ஆனபின் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம்... “ஜிர்... ஜிர்...” என்று பகைமை உணர்ச்சிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

“பாவிப்பயல்...” ஒன்றும் தெரியாமல் இருந்து கொண்டு “எந்த வேலையைச் செய்திருக்கின்றான் பார்...” என்ற எண்ணங்கள் வரும்.

ஆனால் அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது “ஏன்… இப்படி முறைத்து முறைத்துப் பார்க்கின்றார்கள்...?” என்று அந்த உணர்வை அவர்கள் எடுத்துக் கொண்ட பின் அதற்குத் தக்க மாதிரி பதிலுக்கு அவர்களுக்குள்ளும் கலக்கமாகும்.

பின் ஒருவருக்கொருவர் என்ன ஆகும்…? அங்கேயும் வித்தியாசமாகி அவர்களும் முறைத்துக் கொள்வார்கள்.

அப்பொழுது என்ன முடிவுக்கு வருவார்கள்…?

1.“பார்த்தாயா.., ஜோதிடக்காரன் சொன்னது... “கரெக்ட்...”
2.அடுத்து வீட்டிற்குள் வம்பு வந்தது…! என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி... நாம் “பிறருடைய உணர்வுகளைத்தான்” வளர்த்துக் கொள்கின்றோமே தவிர நல்லதை எடுப்பதற்கு முடிகின்றதா...?

நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் உணர்வை வளர்த்துக் கொண்டால் இருள் சூழும் நிலைகளிலிருந்து உங்களை மீட்டிக் கொள்ளும் சக்தி “உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்…!”

இவ்வளவு பெரிய உடலை வளர்த்து வந்ததும்… உங்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டி வந்ததும்… நீங்கள் நுகர்ந்த உணர்வு தான்... உங்கள் உயிர் தான் இதையெல்லாம் உருவாக்கியது.

எதெனெதன் நிலைகளில் எண்ணுகின்றோமோ அதன் வழியில் தான் உயிர் இயக்கிக் காட்டுகின்றது.

1.நாம் உயர்ந்த உணர்வை எடுத்தால்... அது கருவாகி
2.அதை வளர்த்து விட்டால்… “உயர்ந்த ஞானத்தையும் தீமைகள் புகாத நிலையும்”
3.உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.

அதற்குத் தான் எம்முடைய உபதேசமே... (ஞானகுரு).

செவிக்கும் வயிற்றுக்கும் உணவு கொடுக்கின்றோம்... “உயிருக்கு” உணவு கொடுக்கின்றோமா...?

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.

அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழியுண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர்.

சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலகோதய எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும் உரை நடையும் மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.
4.அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
5.செருக்கின் தொடரில் எழுந்திடும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.

உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

1.ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும்
2.நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?

அதற்கு எது முக்கியம்..?

1.நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை.
2.ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொண்டிடும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடா…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடிடும் வழியாக்கிக் கொண்டதே வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்.

செவிக்கு உணவு வயிற்றுக்கு உணவு என்பது போன்றே
1.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
2.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது.

ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும். வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது.

1.வாய்மை மொழியே தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
2.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

காயகல்பம்…!

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றிக் கொண்டு பால்வெளியில் உள்ள மற்ற கோள்களின் தொடர்பு கொண்டே பல சக்திகளை ஈர்த்துச் சமைத்துச் சுவாச அலைகளாக வெளிவிடுகின்றது.

பூமி சூரியனைச் சுற்றி வரும் நிலையில் நெருங்கியும் விலகியும் சுழன்றோடும் நீள் வட்டத் தொடரில் பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களையே “பருவ காலங்கள்…” என்று அன்றே ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்.

ஒவ்வொரு பருவ காலத்தையும் அந்த இயற்ககையின் செயல் நிகழ்வுகளை தன் சரீர உணர்வு கொண்டு அனுபவ ஞானத்தால் உணர்ந்து கொண்டார்கள்.

அவ்வாறு உணர்ந்து கொண்ட அந்த இயற்கையின் சூழலில்
1.அண்டத்தின் அதி உன்னதத் தன்மைகள் அனைத்தையும்
2.சமுதாய நல அமைப்பிற்கு நல் வாழ்க்கை நெறிகளாக
3.பல வழிகளில் பேருண்மைகளை நமக்குக் காட்டினர் அன்றைய மகரிஷிகள்.

புவியியல்… உயிரியல்… வானியல்… என்றே மூன்று வகைக் கோணத்திலேயும் இயற்கையின் செயல்பாட்டை அவர்கள் உணர்ந்து தெளிந்தனர்.

அதே சமயத்தில் அந்த வானியல் தன்மைகள் பூமியின் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளும் கிரியைகள் அனைத்தையும் தன் சரீரத்தில் கண்ட பொழுது “உயிரியல் தத்துவமாக” அதை உலகிற்கு உணர்த்திக் காட்டினார்கள்.

1.அறிந்ததை அறிந்ததாக எண்ணப் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டு
2.மௌனம் என்ற பூட்டால் பூட்டப்பட்டு
3.உணர்ந்து கொண்ட உணர்வின் அனுபவ ஞானங்கள் அனைத்தும் (காலத்தால்) மறைக்கப்பட்டதால்
4.வாழ்க்கையின் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல செயல்களை அவர்கள் உரைத்திருந்தாலும்
5.இன்றைய சமுதாயத்தின் எண்ணங்களால் “மாற்றமே” காணப்படுகின்றது.

காயகல்பத் தொடருக்கு உணர்த்தப்பட்ட மண் வள குணத் தன்மைகள் மறை பொருளாகவே இருக்கட்டும்…!

1.வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் அலைகளைப் பூமி அதிகமாக ஈர்த்திடும் காலகட்டங்களில்
2.பருவ காலத்தின் சுழற்சியில் குளிர்விப்பு குணத் தன்மைகளும்
3.கார்த்திகை மாதம் தொடங்கி… மார்கழியில் செயல் கூடி.. தை மாதத்தில் உருவாகும் “உவர் அமில அடர்வாக…”
4.பூரணச் சந்திரனின் “தண் ஒளி…” (குளிர்ச்சியான) கலந்திடும் செயலின் உருக்கோலமும் வண்ணமும் காட்டி
5.இரவுக் காலங்களில் பூமியின் வெக்கையால் மண் நெகிழ்ந்தே இருக்கும் நிலையில்
6.அமில அடர்வின் குணம் லேசான தன்மையாக வெளிப்படும் செயலை அறிந்து கொள்ள வேண்டும்.
7.ஆகாய நீர் உரித்தே எடுத்துக் கொள்ளவும்…
8.சூரிய வெப்ப அலையில் அந்த நீரினுள் மறைத்துக் கொள்ளவும்…
9.சுடாத நெருப்பில் காய்ச்சிக் கொள்ளவும்…
10.உயர் ஞானத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்………

இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்து அனுபோக மருத்துவ முறைப்படி இதையே குரு என்ற பெயர் நாமமிட்டு குருக்கோளின் (வியாழன்) தொடர்பினால் பெற்றதையே ஔஷதங்களில் கலந்து உடல் பிணிகளை அகற்றிடும் செயலுக்கே செயல் கொண்டனர்.

அனுபவ முறைகளைச் செவிப்புலனறிவால் அறிந்து கொண்ட சிலரால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்திடும் நிலைக்கும் இதே முறையைப் பயன்படுத்துகின்றனர்.

1.ஆனால் இந்தச் செயல்கள் அனைத்தையும் மெய் ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் - “காயகல்பமாக…”
2.மேன்மேலும் ஆக்கத்தின் செயலுக்கு உண்மையைக் காட்டும்.
3.அதைப் பெற்று நீங்கள் உயர்ந்திட எமது ஆசிகள். (ஈஸ்வரபட்டர்)

September 23, 2022

நீ பேசவில்லை… “பச்சிலை தான் பேசுகிறது…” என்றார் குருநாதர்

குருநாதர் என்னைக் காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அழைத்துச் சென்று பல கஷ்டங்களைச் செயற்கையாக ஏற்படுத்தித் தான் உண்மைகளை உணரும்படி செய்தார்.

ஆனால் நீங்கள் இங்கே சமமான இடத்தில் அமர்ந்து இந்த உபதேசங்களைக் கேட்கின்றீர்கள்.
1.எந்த அளவிற்கு இதைக் கூர்ந்து கவனித்துப் பதிவாக்குகின்றீர்களோ
2.உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து வாழ்வதற்கு இது உதவும்.

ஒரு பச்சிலையைக் காட்டி… “இந்தப் பச்சிலை பேசுமாடா…!” என்பார் குருநாதர்.

அது எப்படி சாமி பேசும்…? என்பேன். அவர் ஒவ்வொன்றாகத் தொட்டுத் தொட்டுத் தொட்டுத் தொட்டுக் காண்பிக்கின்றார். பச்சிலை எப்படி சாமி பேசும்…! என்று நான் கேட்கின்றேன்.

“பச்சிலை தான் பேசுகிறது…” என்பார்.

நான் பேசாது என்பேன். இரண்டு பேருக்கும் “சண்டை” வரும்.

காட்டிற்குள் அழைத்துச் சென்ற பின்…
1.பச்சிலை தான் பேசும் என்பதை நீ தெரிந்து கொள்ளும் வரை
2.“உன்னை விடமாட்டேன்” என்பார் குருநாதர்.

அப்போது நான் என்ன செய்ய முடியும்…! அவர் ஒவ்வொரு பச்சிலையாகக் கொடுத்து முகர்ந்து பார்க்கும்படி சொல்வார். பல பச்சிலைகளை முகர்ந்த பின் கடைசியிலே என்ன செய்தார்…?

எனக்குத் தெரியாமலே ஒரு விஷமான செடியைக் கையில் கொடுத்து அதை என்னை நுகரும்படி செய்தார்.

மயக்கம் வருகின்றது… அம்மா… அப்பா…! என்று சொல்கின்றேன்.

இப்பொழுது யாருடா பேசுகிறது…? என்று கேட்கின்றார்.

என் உடலில் “நோய் பேசுகிறது…” என்று சொன்னேன்.

நோய் எப்படிடா வந்தது…? இந்த பச்சிலை தானே காரணம் என்று சொல்கிறார் குருநாதர்.

சில பச்சிலைகளை நுகரும் பொழுது எனக்கு உற்சாகம் வந்தது… ஜம்… என்று இருக்கின்றது.

காட்டிற்குள் அங்கே சாப்பாடு ஒன்றும் கிடையாது. ஒரு லிட்டர் அரிசி; ஒரு டப்பா; மோரில் ஊறப் போட்ட கத்திரிக்காய்; மோரில் ஊறப் போட்ட மிளகாய்… (உப்பு கலந்தது) இதை வைத்துத் தான் இரண்டு மாதம் நாங்கள் இரண்டு பேரும் காட்டிலே காலம் தள்ளினோம்.

இரண்டு கட்டையை வைத்துத் தீயை மூட்டி மேலே பாத்திரத்தை வைத்து நீரை அதிகமாக ஊற்றி அரிசியைப் போட்டுக் கஞ்சி மாதிரிக் காய்ச்ச வேண்டும். அதிலே மிளகாயையும் கத்திரிக்காயையும் ஒரு துண்டு போட்டால் அது தேவாமிர்தமாக இருக்கும். இது தான் அங்கே சாப்பாடு.

ஆனால் குருநாதர் பச்சிலைகளை நுகர்ந்து பார்க்கும்படி சொன்னார். நுகர்ந்து உடலுக்குள் மாற்றங்களாகும் போதுதான் எனக்குத் தெரிய வருகின்றது.

பச்சிலை பேசுமாடா என்று கேட்டுக் கேட்டுச் சில விஷமான பச்சிலைகளை நுகரும்படி செய்ததும் எனக்கு மயக்கம் வந்து விட்டது. எம்மா… எப்பா…! எம்மா… எப்பா…! என்று கத்தத் தொடங்கினேன்.

என்னடா செய்கிறது…? என்று குருநாதர் கேட்டார்.

சாமி… எதையும் சாப்பிட முடியவில்லை.. தலை வலி வருகின்றது எப்படியோ மயக்கமாக இருக்கிறது…! என்று சொன்னேன்.

இதை எல்லாம் பேசுவது யாருடா…? என்று கேட்டார்.

“நான் தான் பேசுகிறேன்…” என்று சொன்னேன்.

உன்னை பேச வைப்பது எது…? அது யாருடா…! நீ நுகர்ந்த பச்சிலை தான் இவ்வாறு பேச வைக்கின்றது என்றார்.

பச்சிலைகளுக்கு மணம் உண்டு.
1.தன் மணத்தால் மற்றொரு செடியின் மணத்தை அருகில் விடாது தள்ளி விடுகின்றது
2.இப்பொழுது நீ நுகர்ந்த பச்சிலையின் உணர்வுகள் உன் உடலில் உள்ள அணுக்களில் சேர்ந்த பின்
3.இந்த வேலையை எல்லாம் செய்கின்றது… நல்லதை வர விடாதபடி தடுக்கின்றது…!

நீ எம்மா… எப்பா… என்று அலறுகிறாய் என்றால் அப்பொழுது எது பேசுகின்றது…?

உயிரணு எப்படி ஆனதோ இதைப் போன்று அந்தப் பச்சிலை உருவாகி குறித்த காலம் வந்து உனக்குள் இவ்வாறு செய்கின்றது. “பச்சிலை தான் பேசுகிறது…” என்பதை இவ்வாறு உணர்த்துகின்றார்.

உயிர் தோன்றிய பின் வளர்ச்சியில் மனித உடல் பெற்ற பின் உணர்ச்சிக்கொப்ப எண்ணமும் அதற்குத்தக்க செயலும் வந்தது. ஆனால் விஷமான செடிகளின் மணத்தை நுகர்ந்த ஐந்தாறு நாட்களுக்குள் உனக்கு இப்படி ஆகிவிட்டது. எம்மா… எப்பா… என்று வேதனைப்படுகின்றாய்…!

உங்களிடம் இப்பொழுது நான் சொல்கின்றேன் ஆனால் நான் காட்டிற்குள் சிரமப்பட்டு… இன்னல்பட்டு… வேதனைப்பட்டுத் தான் அதையெல்லாம் அறிந்து கொண்டேன்.

விஷமான செடிகளின் மணங்களை நுகரும்படி செய்து கை கால் குடைச்சல்களை ஏற்படுத்தித் தான் குருநாதர் தெரிய வைத்தார்.

ஒரு மாதம் இரண்டு மாதம் இவ்வாறு சுற்றிய பின் ஒவ்வொரு குணங்களுக்கும் நீ நுகர்ந்தது என்ன செய்கின்றது…/
1.இந்த உணர்வுகள் உன் உடலில் என்ன செய்கின்றது…?
2.அந்த அணுக்களுக்குள் என்ன இயக்கங்கள் ஏற்படுகின்றது…?
3.அதை மீண்டும் சரி செய்வது எப்படி…?

அதைத் தெரிய வைப்பதற்காக வேண்டி வேறு சில பச்சிலைகளை நுகரும்படி செய்தார். அதை நுகர்ந்த பின்பு “அப்பாடா…!” என்று சொல்கிறேன். உடல் நன்றாக ஆகின்றது.

உன் உடல் இப்பொழுது எவ்வாறு நன்றாக ஆனது…? என்று அதை எல்லாம் அனுபவபூர்வமாகத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார்.

நாம் எப்படி இயங்குகின்றோம்…? என்பதைத் தெரிய வைப்பதற்குத் தான் இதை எல்லாம் செய்தார்.

September 22, 2022

தான் விரும்பியது உடனே கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் தியானம் செய்தால் என்ன ஆகும்…?

தியானத்திற்கு வருகின்றோம் என்று சொல்பவர்கள் எந்த நினைவுடன் வருகிறார்கள்...?
1.என் பிள்ளைக்கு நன்றாகப் படிப்பு வர வேண்டும்
2.நான் தியானம் எடுத்தால் உடனே செல்வம் வர வேண்டும்... செல்வாக்கு வர வேண்டும்... என்று
3.இவைகளை எண்ணித்தான் தியானம் எடுக்கின்றார்கள்

ஆனால் அவ்வாறு எண்ணித் தியானம் செய்த பின் ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்கின்றார்கள்...?

காரணம் ஆசை ஒன்றிலே இருக்கின்றது... செய்வது வேறாக இருக்கிறது.

பலகாரத்தைச் செய்யும் போது இன்னென்னதைச் சேர்த்தால் ருசியாக வரும் என்று நினைக்கின்றோம். ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செல்லும் பொழுது கலக்கும் பொருளைச் சேர்த்து அதை ருசியாகக் கொண்டு வருவதற்கு மாறாகக் கலக்கும் பக்குவத்தை மாற்றினால் ருசி எப்படி வரும்...?

ஏனென்றால்…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உங்களை அறியாது இயக்கும் சங்கடமான உணர்வுகளைத் துடைத்துவிட்டு
2.சிந்தித்துச் செயல்படும் தன்மைக்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத் தான் இந்தத் தியானத்தையே கொடுக்கின்றோம்.

ஆனால் தியானத்தை எடுத்து என்ன செய்கின்றார்கள்...?

1.தான் பெற வேண்டும் என்ற ஆசையில் வரப்படும் பொழுது
2.நாளுக்கு நாள் அதையே கூட்டுகிறார்கள்… கவர்கின்றனர்
3.வலுவாக (அழுத்தமாக) எண்ணி எடுக்க வேண்டிய அருள் சக்திகளையும் அதைப் பயன்படுத்தும் முறைகளையும் விட்டுவிடுகிறார்கள்.

கம்ப்யூட்டர் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் கொண்டு தான் இயக்குகின்றது.
1.அதனுடைய அழுத்தங்கள் எந்த அளவிற்கு இருக்கின்றதோ அந்த அளவிற்குத் தான் இயக்கமாகின்றது - அனைத்தும் மேக்னட்
2.அதற்குள் உணர்வின் உணர்ச்சிகளைத் தட்டும் போது (ஆணைகள் – COMMANDS) அழுத்தம் எதுவோ அந்த ஒலி அலைகளை எழுப்புகிறது.

அதாவது... காந்தப்புலன் அறிவால் வரக்கூடிய உணர்வுகளும்... அதனுடன் சேர்த்துக் கெமிக்கலில் அந்த அழுத்தத்திற்குத் தக்க ஒலி அலைகளைப் பரப்புகின்றது.

அதே போன்று தான் நம் உயிரின் தன்மைகள் கொண்டு எதனின் உணர்வுகளை நுகர்கின்றமோ உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகள் எழும்பி அதற்குத் தக்க தான் ஒலி/ஒளியாகி நம்மை இயக்குகின்றது.
1.இன்றைய விஞ்ஞானம் இதை நிரூபிக்கின்றது
2.அன்றைய மெய் ஞானிகள் சொன்னதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.

ஆகவே இதைப் போன்றுதான் நம் நம்மை அறியாமலே பல தவறுகள் இயக்கத் தொடங்கி விடுகின்றது. நடக்கவில்லை... கிடைக்கவில்லை... என்ற பிடிவாதமான உணர்வு வளரப்படும் பொழுது இப்படியே நடக்கின்றதே... இப்படியே நடக்கின்றதே... இப்படியே நடக்கின்றதே...! என்று வேதனைப்படும் பொழுது எல்லாருடைய மனமும் கெடுகின்றது.

சிந்திக்கும் தன்மை இழக்கப்படும் பொழுது
1.தன்னை அறியாமலே அவரும் தவறு செய்கின்றார்
2.நம்மையும் தவறு செய்யும் நிலைகளுக்கு அது அழைத்துச் சென்று விடுகின்றது.

கார்த்திகை நட்சத்திரம்

எண்ணம் கொண்டே வாழ்க்கை நிலைகளுக்கு உரைத்து வந்ததில்…
1.மனத்தின் பக்குவம் உலகோதய வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணத் தன்மைகள் அலை அலையாக வந்திட்டாலும்
2.துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளின் மீதே சென்று… சேருமிடம் சேர்வதைப் போல்
3.நம் நிலையிலும் உணர்வுகளைச் சமன்படுத்திட வேண்டும் என்ற எண்ணம் உந்துதலாக
4.அதன் வழி முறைகளைச் சிந்தையில் இருத்திச் சித்தன் நிலை பெற வேண்டும்.

பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு தாழ்வு முறைகளுக்கு அல்ல.

மருத்துவ குணங்களாகப் புகட்டினலும் எண்ணத்தின் நிறைவன்றோ சரீர சுகம் அளிக்கின்றது. சரீரத்தில் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்து வீரியம் கொண்டு எதிர்மோதல் குணத் தன்மைகளில் நோயை விலக்கிட்டாலும் மீண்டும் அதே நிலை காணப்படுவதெல்லாம் எண்ணத்தின் செயல் தான்.

1.நோய் உடலிலா…? எண்ணத்திலா…?
2.சுவாச நிலைகளின் இயல்புத் தன்மையை மாற்றினாலே எண்ண ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்கள் இயற்கை கொண்டா…? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்.
3.எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பில் நல்லாக்கம் பெற்றிடலாம்.

கார்த்திகை தீபம் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருள் புரிந்திட்டதா…? இன்றைய நடை முறைக்கு அது பெரும் சடங்காகிவிட்டது.

அன்று சித்தன் கண்ட உண்மைப் பொருள் பௌர்ணமி நிலவின் ஒளி சக்தியும் நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் பூமியின் ஈர்ப்பில் செயல் கொண்டே சில சூட்சம வித்தின் தன்மைகள் பூமித் தாய் அளித்திடும் செயலுக்கே மறைபொருள் காட்டி ஜோதியின் உட் பொருள் காட்டி ஜோதியின் பொருள் உணர்த்த கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியில் பூமி ஈர்த்துப் பெற்றிடும் சக்தியின் செயலையே அந்த மாதத்தில் தீபமேற்றி வணங்கிடும் முறை காட்டப்பட்டது.

எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில் அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில் உயர் ஞானம் கொண்டே அறிந்த காயகல்ப முறையே ஜோதி தீப வணக்கமாகக் கூறப்பட்டது.

இந்த மாதக் காலங்களில் சிற்றின்ப நுகர்வுகள் விடுத்து மனத்தை ஒருமுகப்படுத்திவிட்டு தியானிக்கச் செய்த வழி கார்த்திகை மார்கழி மாதங்களில் சிந்தனையில் செயல் ஒருமுகபடுத்தப்பட்ட தை மாத பௌர்ணமியில் பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகள் பெற்றிடவே ஞானிகளால் சிஷ்யர்களுக்கு உணர்த்தப்பட்டது.

அந்த வழி முறைகள் எல்லாம் இன்றைக்கு மாற்று நிலை பெற்றுவிட்டது.

September 21, 2022

துருவ நட்சத்திரத்துடன் இணைவதற்குத் தான் பயிற்சி கொடுக்கின்றோம்

நோயாளியிடம் நோயின் உணர்வைப் பற்றி நாம் அதிகமாகக் கேட்க நேர்ந்தாலும் அது நமக்குள் பதிவாகி விடுகின்றது… இரத்தத்தில் கருவாக உருவாகின்றது… அணுவாக வளர்கின்றது.

அதே போல் சண்டை போடுபவர்களைப் பார்த்தாலும் அந்தக் கார உணர்வுகள் நமக்குள் கருவாக உருவாகி உடலிலே அணுக்களாக விளைகின்றது.

நாம் கோபப்படவே வேண்டாம்…!
1.கோபப்படுபவர்களை ஒரு பத்து நாளைக்குச் சேர்ந்தால் போல் வேடிக்கை பார்த்தால் போதும்.
2.அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் இருக்கிறது என்று சொல்வார்கள்.

ஆஸ்த்மா நோய் உள்ளவர்களை அதிகமாகக் கவனித்துப் பார்த்தால் அதற்குப் பின் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் சளி இருக்கிறது… ஆஸ்த்மாவிற்கு உண்டான அறிகுறிகள் தென்படுகிறது என்று சொல்வார்கள்.

ஒரு சர்க்கரைச் சத்து அதிகமாக உள்ளவரிடம் நாம் அடிக்கடி பேசிப் பழகினால் போதும். அதே சர்க்கரைத் சத்தை உருவாக்கக்கூடிய அணுக்கள் இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தத்தைப் பரிசோதித்தால் சர்க்கரை வியாதி உங்களுக்கு ஆரம்பித்துவிட்டது என்பார்கள்.

1.இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
2.எந்த வகையில் நமக்கு நோய் வருகிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான்.

சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் “என்னால் முடியவில்லை… முடியவில்லை…” என்று சொல்லும் போது அதை நாம் கேட்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்…?

அடுத்த கணமே நம் நினைவு ஈஸ்வரா என்று புருவ மத்திக்குச் செல்ல வேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஈஸ்வரா என்று உயிரிடம் வேண்ட வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் அந்த அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இரத்த நாளங்களில் இதைக் கலக்கச் செய்ய வேண்டும்.

அதற்குப்பின் நோயாளி உடலில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். அவருடைய சர்க்கரை வியாதி நீங்க வேண்டும் என்று இவ்வாறு நாம் அங்கே பாய்ச்சி விட்டால் அந்த நோய் நமக்குள் உருவாகாதபடி தடுத்துவிடலாம்.

இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

நாம் எல்லோருடனும் சகஜமாகத்தான் பழகுகின்றோம். வலி அதிகமாக இருக்கிறது என்று அவர் வேதனைகளைச் சொல்லும் பொழுது நாம் பரிவுடன் தான் கேட்கின்றோம். இந்த உணர்வு உயிரிலே பட்ட பின் பதிவாகி விடுகிறது.
1.இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.ஞாபகமாக இருந்து ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்றும்… மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அந்த நோயிலிருந்து அவர் விடுபட வேண்டும் என்றும் நாம் சொல்லிவிட வேண்டும்.

இந்த உணர்வுகள் உடனே நம் இரத்தத்திலே கலந்துவிடுகிறது. அந்த நோயைத் தணிக்கக் கூடிய சக்தியாக மாறிவிடுகின்றது.

கையிலே அழுக்குப் பட்டால் உடனடியாக எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ… உடையிலே பட்டால் அதை எப்படித் துவைத்துத் தூய்மையாக்குகின்றோமோ இது போன்று எந்த நோயைப் பற்றிய உணர்வு நமக்குள் வந்தாலும் அதை மறந்து பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் படர வேண்டும்…
1.உடல் நலமாகக் கூடிய சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.சர்க்கரைச் சத்து நீங்க வேண்டும் இரத்தக் கொதிப்பு குறைய வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தி உடலிலே படர வேண்டும்
4.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இதைப் பெருக்கிக் கொண்டே வரவேண்டும்.

இப்படிப் பெருக்கிக் கொண்டால் இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்தால் இரத்தக் கொதிப்போ சர்க்கரை வியாதியோ அவைகள் எல்லாம் குறைவதைப் பார்க்கலாம்.

நம் எண்ணத்தாலேயே இதையெல்லாம் மாற்றி அமைக்க முடியும்.

அருள் ஞானச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என் உடல் நோய் நீங்க வேண்டும் உடல் நலமாக வேண்டும் நரம்பு மண்டலங்கள் சீராக இயக்க வேண்டும் என்று என்று எண்ணிக் கொண்டே வர வேண்டும்.

இது கூடக் கூட நம் உடலில் எல்லாம் மாறத் தொடங்கும்.

ஆனால் எப்படித்தான் இருந்தாலும்
1.நீடித்த நாள் இந்த உடலில் நாம் வாழப் போவதில்லை
2.குறித்த காலம் வரையிலும் நாம் அந்த அருள் சக்தியைப் பெருக்கிப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க இந்த உடலுக்குப் பின் தீமைகள் நமக்குள் சேராதபடி பிறவி இல்லா நிலை அடைகின்றோம். இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு அவசியம் வர வேண்டும்.

காரணம்… நாம் கொண்டு போவது என்ன இருக்கின்றது…?

அருள் சக்தியைப் பெருக்கிக் கொண்டே வந்தால் நோய் பலவீனமாகும்… சிந்திக்கும் தன்மை வரும். சிந்திக்கும் தன்மை வந்தாலும்
1.உதாரணமாக ஒரு செடி மரமாகிக் காய்த்து அதனுடைய காப்பு எல்லாம் முடிந்த பின் அந்த மரம் பட்டுப் போகத் தான் செய்யும்.
2.அது போல் நம் உடலில் உள்ள அணுக்கள் மடியத்தான் செய்யும்.

மடிந்தாலும் கடைசியில் எந்தச் சத்து உயிருடன் ஒன்றி இருக்க வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உயிரிலே எஞ்சி இருக்கப்படும் பொழுது நாம் அங்கே செல்கின்றோம்.

ஆகவே இந்த உடலுக்குப் பின் உயிரோடு ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைவதே “சொர்க்கம்” என்று சொல்வது.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கிக் கொண்ட பிற்பாடு நமது உயிர் அங்கே இழுத்துக் கொண்டு செல்கின்றது.
2.அதற்குத்தான் உங்களுக்கு இப்பொழுது பயிற்சி கொடுக்கின்றோம்.

குரு நாடி – உயிர் நாடி

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக அகக்கருவிகளில் (ஐம்புலன்களில்) செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடிடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்..” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்து செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழியோடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும்முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும்… உணரவும் முடியும்.

September 17, 2022

காலம் காலமாக ஞானிகள் மக்களுக்குக் கொடுப்பது “அருள் ஞானப் பொக்கிஷம் தான்”

ஏற்கனவே சொன்னது போன்று அருணகிரிநாதரைக் காக்க வேண்டும் என்று அவருடைய சகோதரி
1.தீமைகளை அவர் உடலில் ஏற்றுக் கொள்ளாதபடி திருமூலர் உணர்வுகளைத் தனக்குள் ஏற்று
2.தன் சகோதரன் அவன் திருந்த வேண்டும் என்று அவனுக்குள் சென்று அவனையும் திருத்தி
3.மெய் உணர்வுகளைப் பெறச் செய்து இந்த உடலுக்கு பின் சகோதரனும் ஒளியானது… தானும் ஒளியானது.

திருமூல மந்திரம் என்பது சாதாரணமானதல்ல…!

இந்த உலகம் தோன்றிய நிலையிலிருந்து சூரியன் எப்படி உருவானது…? பிரபஞ்சம் எப்படி உருவானது…? பிரபஞ்சத்தில் இருந்து உயிரணுக்கள் எப்படி உருவானது…? மனித உடலுக்குப்பின் நாம் என்ன செய்ய வேண்டும்…? என்ற தத்துவத்தை அன்று அகஸ்தியன் கண்ட உண்மைகள் அனைத்தையும் திருமூலர் கண்டார்.

அதே காலத்தில் தான் வியாசகர் கண்டார் அதே காலத்தில் தான் வான்மீகியும் கண்டார். ஐயாயிரம் ஆண்டுகளுக்குப் பின்
1.உலகில் ஒரு சோதனை என்று வரப்படும் பொழுது
2.அறிந்திடும் ஆற்றலைப் பெற்ற அந்த அருள் ஞானிகள் தான்
3.அகஸ்தியன் பெற்ற பேருண்மை எல்லாவற்றையும் அறிந்து
4.மக்களுக்கு அதை ஒரு பொக்கிஷமாகக் கொடுத்தனர்.

அந்த அருள் ஞானிகள் அகஸ்தியன் பெற்றதைத் தங்களுக்குள் வளர்க்கப்பட்டு வெளிப்படுத்திய உணர்வுகள் எல்லாம் நமக்குள் இனி இயங்கத் தொடங்க வேண்டும்.

விஞ்ஞானத்தால் வரும் பேரழிவிலிருந்து நம்மை காக்க வேண்டும். காரணம் விஞ்ஞானத்தின் அழிவு எப்படி வரும்…? என்று சொல்ல முடியாது.

காற்று மண்டலம் நாளுக்கு நாள் விஷத்தன்மையாக மாறினாலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைய வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது விஞ்ஞானத்தால் வந்த விஷத்தின் தன்மை நம்மைத் தாக்காது. இந்த உடலுக்குப் பின் ஒளி என்ற நிலையை அடைய முடியும்.

என்றும் மாறாத நிலையாக நாம் பெறுவதற்கு வலிமையான உணர்வுகளை நமக்குள் சேர்த்துப் பழகுதல் வேண்டும் அதற்குத் தான் இங்கே அருள் ஞானச் சக்கரத்தைக் கொடுத்துத் தியான பயிற்சியையும் கொடுக்கின்றோம்.

நான் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞானச் சக்கரத்தைத் தெய்வீக நிலையாக குரு காட்டிய அருள் வழியில் பேரின்ப நிலை என்ற நிலையில் அருள் சக்கரமாக எண்ணிப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அதன் முன் அமர்ந்து தியானித்தாலே உயர்ந்த சக்திகள் கிடைக்கும் கவலையுடனும் சஞ்சலத்துடனும் இருந்தால் அந்தச் சந்தர்ப்பத்தில் சக்கரத்தை உற்றுப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று எண்ணினால்
1.சக்கரத்தில் இருந்து உயர்ந்த உணர்வு வரும்…
2.நம்மைத் தெளிவாக்கும்… தெளிவான மனம் கிடைக்கும்… சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்…
3.வாழ்க்கையை எப்படி வழி நடத்த வேண்டும்…? என்ற உணர்வும் வரும்
4.பிறருடைய தீமைகள் நம்மை இயக்காதபடி தடைப்படுத்தி வாழவும் முடியும்
5.இந்த உடலுக்குப் பின் என்றும் நிலையான அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்
6.மகிழ்ந்து வாழ முடியும்… மன நிறைவும் கிடைக்கும்.

ஆனால் வேதனை என்ற உணர்வு வளர்க்கப்படும் பொழுது இன்னொரு உடலுக்குள் சென்று மீண்டும் அதே வேதனையைத் தான் வளர்க்க முடியும். மனிதனல்லாத உருவாக மாற்றிவிடும் உயிர். இது போன்ற நிலையில் இருந்து விடுபட்டு அருள் வழி வாழ்வோம்… மெய்ப்பொருளைக் காணுவோம்.

1.இந்த உடலுக்குப் பின் பிறவில்லா நிலை அடைய
2.வாழ்க்கையில் தொழில் வளம் பெருகவும் மன அமைதி பெறவும் அருள் வழி வாழவும்
3.அருள் வழி வாழச் செய்யும் அருள் சக்தி பெறவும் இது உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

உணர்ச்சிகள் (சுவாசக் காற்று) நாடிகள் வழி உடலை இயக்கிக் காட்டும் விதம்

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில் காட்சிப் புலனறிவு... செவிப் புலனறிவு... உணர்வுப் புலனறிவு... நுகர்தல் புலனறிவு... சுவைத்தல் புலனறிவு... என்று ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும் புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா...?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா. உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும் ஆத்ம பலமும் பேரின்பப் பெரு வாழ்வும் பெற்றிட
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டிட...!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா...!

“ஈஸ்வரா...!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு ஒலிக் காற்று என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை விழிக் காற்று என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையில் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்...?

சோம்பல் ஏற்படுத்துவதும் வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்
1.சுவாசத்தில் சுதியும்... விழிக் காற்றும்...
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்...!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே...! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

September 16, 2022

உடல் அழுகினாலும்... பிறவியில்லா நிலை அடைவது தான் நமது குறிக்கோளாக இருத்தல் வேண்டும்

நாம் எப்படித் தான் இந்தத் தியானத்தில் வலிமை பெற்றாலும் நம் உடலிலுள்ள தீமையின் நிலைகள் அது அழுகும். அது அழுகிய பின் தான் இந்த உயிரே வெளியே செல்லும்.

ஒரு பழம் கனிந்தது என்றால் உட்கொண்டால் சுவையாக இருக்கின்றது. சுவையின் தன்மையாக இருந்தாலும் கடைசியில் அது தன்னிச்சையாக அழுகத் தான் செய்யும்.
1.அழுகிய மணங்கள் காற்றிலே கலக்கப்படுகிறது
2.ஆனால் அதில் உள்ள வித்தின் சத்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் தெளிவாக்குகின்றது
3.கனிந்து அழுகி வெளியே செல்லவில்லை என்றால் “வித்து முழுமை பெறாது...”

அழுகிய உணர்வு காற்றிலே படர்கின்றது. அதன் உணர்வின் சத்தைச் சூரியன் கவர்ந்து கொள்கின்றது.

ஆனால் அதே சமயத்தில் அந்த வித்தை மீண்டும் நிலத்தில் ஊன்றப்படும் பொழுது அதே சத்தின் தன்மையைக் கவர்ந்து அதே கனியைப் போன்று உணர்வின் தன்மை உரத்தின் சத்தாக “மரங்களை விளையச் செய்கின்றது...”

இதைப் போன்று தான் நம் உயிரான உணர்வின் நிலைகள் கொண்டு இருளை நீக்கிடும் உணர்வின் சத்தை விளைய வைக்கப்படும் பொழுது மனிதனாக நாம் விளைகின்றோம்.

ஆனால் அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வினைச் சேர்த்து ஒளியாக மாற்றி இந்த உடல் என்று அழுக்கை நீக்கி அழுக்கை நீக்கிடும் உணர்வின் தன்மை பெற்று என்றும் ஏகாந்த நிலை என்ற நிலையினை அடைய முடியும்.

இதுவே நம் குருநாதர் காட்டிய நிலைகள்.

கோடிச் செல்வம் வைத்திருந்தாலும் அது நம்முடன் வருவதில்லை. இந்த உடலும்... உடலின் அழகும் நம்முடன் வருவதில்லை. வாழ்ந்தோம்... மகிழ்ந்தோம்... வளர்ந்தோம்... என்று இருப்பினும் இந்த உடலில் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப இந்த உடல் அழுகத் தான் செய்கின்றது.

இந்தப் பிடிப்பின் தன்மை உடல் அழுகிய நிலைகள் ஆன பின்... அணுக்களின் இயக்கம் இல்லையென்றால் இந்த உயிர் வெளியே செல்கின்றது.

எதன் வழியில் இந்த இயக்கத்தைச் சேர்த்து இந்த உடல் அழுகுகின்றதோ அதற்குத்தக்க... கடைசி நிமிடத்தில் இந்த உயிர் வெளியே செல்லும் பொழுது அதன் வழி வெளியே செல்கின்றது உயிர்

1.ஆனால் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி அதனை வலுவாக்கப்படும் பொழுது
2.இந்த வலுத்தன்மை கொண்டு உடலை விட்டுச் செல்லும் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றது.
3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இது ஈர்க்கப்படுகின்றது.
4.உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைக்கப்படுகின்றது... ஒளியின் சரீரம் பெறுகின்றோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் பிறவி இல்லா நிலை அடையத் தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.

மூன்று நாடிகளும் சந்திக்கும் நெற்றிப் பொட்டே... ”திரிவேணி சங்கமம்...!”

மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.

சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.

அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.

மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே...”
2.”திரிவேணி சங்கமம்...!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.

சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை...” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.

இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.

எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்பமில குணங்களை நல் நிலைப்படுத்திடவே வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.

1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது. ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.

1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.

சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு “ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே…” இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.

September 15, 2022

தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக இருக்கின்றேன் - ஈஸ்வரபட்டர்

நமது குரு அவருடைய வாழ் நாளில் பல நஞ்சான உணர்வுகளை நீக்கி ஒரு பித்தரைப் போன்று தான் வாழ்ந்தார். ஆனால் மக்கள் பித்துப் பிடித்த நிலையில் தான் இந்த உலகிலே வாழுகின்றனர். அதிலிருந்து அவர்கள் அகல வேண்டும் என்ற நிலையைத் தான் எனக்கு குருநாதர் சொன்னார்.

ஏன் சாமி...? பைத்தியம் பிடித்த மாதிரி போஸ்ட் கம்பியில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள்...! என்று நான் அவரிடம் கேட்டேன்.

நீ தான்டா கேட்டாய்...! வேறு யாரும் கேட்கவில்லை...!
1.பைத்தியம் என்று சொல்லுகின்றாய்... என்னிடமே நீ அதைக் கேட்கின்றாய்
2.என் செயலை நீ அறிய விரும்புகின்றாய்
3.நீ நாளடைவில் அறிந்து கொள்வாய்
4.அதைப் போன்று நீ செயல்படு...! என்று காட்டினார்.

உலக மக்கள் தான் நுகர்ந்த உணர்வின் ஆசைகள் கொண்டு பித்தரைப் போன்று தான் வாழ்கின்றனரே தவிர தனக்குள் இருளை நீக்கிடும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துவதில்லை.

தீமைகள் எனக்குள் வராதபடி பித்தனாக நான் இருக்கின்றேன்...!
1.தீமைகள் புகாது தடுக்கும் பித்தனாக நான் இருக்கப்படும் போது எனது உயிர் ஒளியின் சரீரம் பெறுகின்றது
2.ஒளி பெறும் சரீரத்தை அதனின் உண்மை ரகசியத்தை நீ அறிந்து கொள்...
3.என்னுடன் இணைந்து வா...! என்றார்.

தாவர இனங்களின் மணங்கள் எப்படி இயங்குகின்றது...? தாவர இனம் பேசுமா...! என்று குருநாதர் என்னிடம் கேட்டார்.

பேசாது...! என்று நான் சொன்னேன்.

அப்போது காட்டிற்குள் என்னை அழைத்துச் சென்று தாவர இனங்களின் உணர்வின் சத்தை நுகரும்படி செய்து அனுபவமாகக் காட்டினார்.
1.தாவரங்களின் மணமே நம் எண்ணங்களாக வருவதும்... நம்மை இயக்கச் செய்வதும்
2.அது தான் நம்மைப் பேச வைக்கின்றதே தவிர... நாம் அல்ல...!

எந்த உணர்வின் சத்து நம்முள் உண்டோ... அதனின் உணர்வின் மணங்கள் நமக்குள் எப்படி உண்டோ அந்த உணர்ச்சியின் இயக்கமாக நம்மை இயக்கிக் காட்டுவது உயிருடைய வேலை. அந்த உணர்வின் தன்மை உடல் ஆக்குவதே உயிரின் வேலை.
1.உணர்வின் தன்மை எது அதிகமோ
2.அதன் வழி தான் நம்முடைய இயக்கமும்... அடுத்த உடல் வாழ்க்கையும் என்று குரு தெளிவாக்கினார்.

காட்டிற்குள்ளும் மேட்டிற்குள்ளும் அலைந்து உண்மையின் உணர்வுகள் அறிந்ததை... பல காலம் பல தொல்லைகளுக்கு மத்தியில் அவர் ஊட்டிய உணர்வின் தன்மைகளை அறிந்து கொண்டோம்.

அதை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று குரு சொன்னார். ஏன் அதைச் சொன்னார்...?

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக எண்ணி... அந்த உடலை உயிர் தான் உருவாக்கியது என்ற நிலையில் அதை ஆலயமாக மதித்து
1.ஒவ்வொரு மனிதனையும் கடவுளாக மதித்தால்
2.அவர்கள் செய்யும் குறைகள் உன்னைச் சாடாது என்றார் குரு.

அந்தக் குறைகள் நீக்கப்பட வேண்டும் என்று உணர்வினை நீ எடுத்தால் இந்த உணர்வலைகள் காற்றலைகளில் பரவுகின்றது. நம் பூமியிலே பரமாத்மாவிலே படர்கின்றது.

அவர்கள் குறைகளை எண்ணாதபடி அவர்கள் நல்ல மனம் நிறைவு பெற வேண்டும் என்ற உணர்வினை எடுத்தால்
1.நமது உயிரான கடவுளுக்கும் சேவை செய்கின்றோம்
2.இந்த உடலான ஆலயத்திற்குள் அசுத்தத்தை நீக்கிடும் சக்தி பெறுகின்றோம்
3.நல்ல உணர்வைக் காக்கும் தன்மை பெறுகின்றோம்.

ஆகவே பேரருள் என்ற உணர்வுகளைச் சேர்த்துப் பழகி ஆண்டவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்று “ஆலயங்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வது போன்று... ஒவ்வொரு உயிருக்கும் அதை நீ செய்ய வேண்டும்...!” என்று எனக்கு உபதேசித்தருளினார் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

தியானத்தின் மூலம் நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும்

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் இன்னும் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.அந்தச் சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடிடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது...!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்...!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது... அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்திட்டேன்.

என்று உரைத்தது...? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா...? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது...?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட... பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது...?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.

September 14, 2022

புத்தகத்திலோ ஏட்டிலோ படித்து யாம் உபதேசிக்கவில்லை… அன்று நடந்ததை நுகர்ந்தறிந்து தான் சொல்கிறோம்

அருணகிரிநாதர் பல தவறுகள் செய்தவர். செல்வத்தை வைத்துப் பேரின்பம் பெற விரும்பியவர்.

அதன் வழி எல்லை கடந்து தன்னுடைய சகோதரியிடமே கேட்கப்படும் பொழுது “நீ எதை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ என்னையவே நீ அனுபவித்துக் கொள்…” என்று ஏக்க உணர்வுடன் மூர்ச்சையாகி மாரடைப்பால் சகோதரி இறந்து விடுகின்றது.

தம்பி மீது உள்ள உணர்வுகளை வைத்து அவனுடைய உடலிலே அந்த ஆன்மா சேர்கின்றது.

தன்னுடைய சகோதரி இறந்து விட்டதே… உணவு கொடுத்த தாயை மறந்து விட்டோமே…! என்று அப்போது தான் தன் தவறைப் பற்றிச் சிந்திக்கின்றான் அருணகிரி.

ஆனால் அவருடைய சகோதரியோ… தன் சகோதரன் நல்லவனாக வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட வேண்டும் என்றும்… உலகத்தை அறிந்திட்ட திருமூலரின் உணர்வுகளையே எடுத்து வளர்த்துக் கொண்டது.

இந்த உடலை விட்டுச் சென்ற பின் என்ன நடக்கின்றது…?

இவனோ மரணமடைய எண்ணுகின்றான். திருவண்ணாமலையில் உள்ள கிளிக் கோபுரத்தின் மீது ஏறி அதிலிருந்து கீழே விழுந்து தன் உடலை மாய்த்துக் கொள்ள விரும்புகின்றான்.
1.இந்த உடலில் இந்தப் பிறவியில் நாம் செய்த தவறுகள் போதும்…
2.இனி அடுத்த பிறவியாவது “தவறில்லாத நிலைகள்” நடந்து கொள்ள வேண்டும் என்று உடலை அழிக்க முயற்சிக்கின்றான்.

ஆனாலும் அவனுடைய சகோதரி இந்த உடலை விட்டுச் சென்ற பின் அவனுடைய உடலுக்குள் சென்று அந்த உணர்வினை ஈர்த்துவிட்டது உள் சென்ற பின் உடலுக்குள் உந்தி அவனை மடிய விடாதபடி அவனுள் நின்றே தான் வளர்த்த உணர்வை அங்கே நிறைவேற்றுகின்றது.

சிறிது நேரம் கழித்த பின் அவன் சிந்திக்கின்றான்.
1.அவன் உடலிலிருந்த சகோதரியின் உணர்வுகள் இயக்கப்பட்டு
2.”நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…!” என்று பாடலையே பாடுகின்றான்.

எதனின் உணர்வுகள் கொண்டு எந்த இசையின் தன்மையை வருகின்றதோ அந்த உணர்வின் தன்மை உடலில் இரத்த நாளங்களில் சேர்க்கப்படும் போது… அதனின் உணர்வை உருவாக்கும் விந்துகளாக ஆகின்றது.

இப்படி இந்த உடலில் எடுத்துக் கொண்ட பல கோடி உணர்வுகள் உடலுக்குள் எப்படிச் சேர்கின்றது…? ஆகவே எப்போது எதனை அதிகமாகச் சேர்த்தோமோ அதனின் உணர்வு கொண்டு தான் வருகின்றது என்று தன்னை அறியும் நிலையில் அவன் வெளிப்படுத்துகின்றான்.

தன் உடலில் சேர்த்துக் கொண்ட அகந்தை என்ற உணர்வுகளும் ஆசை என்ற உணர்வும்
1.ஆசை என்ற உணர்வு கொண்டு பிறிதொரு வேதனையை உணராத நிலையில்
2.குருடனைப் போன்று தவறின் வழியிலே செய்து கொண்ட உணர்வுகள்
3.அந்த உணர்ச்சியின் நாதங்களே அவனுக்குள் அதை இயக்கிவிட்டது என்ற இந்த நிலையை அறிகின்றான்.

அந்தச் சகோதரி அவனுள் நின்று “திருமூலரின் மந்திரத்தை” தான் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் எப்படி அதனின் இசையாக மாற்றுகின்றது…? நீ குஷ்டரோகியாக எப்படி ஆனாய்…” என்ற இந்த உணர்வுகளை இங்கே உணர்த்தப்பட்டு இந்த பாடலைப் பாடுகின்றான்.

அந்த சகோதரி தன் சகோதரனை மீட்ட வேண்டும் என்ற உணர்வுடன் அந்த உடலுக்குள் சென்று… 1.27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவரக்கூடிய உணர்வுகள்
2.சூரியனுடைய ஈர்ப்புக்குள் உணவாக அது வரும் நிலையில் ஒன்றுடன் ஒன்று மோதி நாதங்கள் மாறுவதும்… சுருதிகள் மாறுவதும்…
3.ரா ரா ரா ரா ரா… ரீ ரீ ரீ ரீ ரீ…. ரூ ரூ ரூ ரூ ரூ… டூ டூ டூ டூ டூ… என்ற நிலைகளில் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த நாதங்கள் எப்படி மாறுகின்றது…? என்று
4.திருமூலர் கண்ட உண்மையை உணர்த்துகிறது.

இதைப் போன்று தான் உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து உணர்வுகள் உயிரிலே உராய்வுக்குத் தக்க எண்ணங்களும் எண்ணத்தின் உணர்வும் உணர்வுக்கு ஒப்ப செயல்களும் அதற்குத்தக்க உடல் என்ற நிலையில் இதை தெளிவாக திருமூல மந்திரத்தின் உணர்வினை அருணகிரிநாதர் பாடியுள்ளார்.

காலத்தால் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

ஆனால் இந்த உண்மைகளை உணர்வதற்காக குருநாதர் என்னை அந்தந்த ஸ்தலங்களுக்குச் செல்லும்படி செய்து அக்காலத்தில் நடந்த சம்பவங்கள் அந்த உணர்வுகள் பரவி இருப்பதை அருணகிரிநாதர் என்ன எடுத்தார்…? சகோதரி என்ன எடுத்துக் கொண்டது…? என்று காட்டுகின்றார்.

அருணகிரியின் வாழ்க்கையைப் பற்றிப் புத்தக வாயிலாக வந்திருப்பினும் ஏடுகளில் இது பதிவாக்கப்பட்டு இருப்பினும்
1.அவர்கள் (அருணகிரியும் அவருடைய சகோதரியும்) உடலிலிருந்து வெளிப்பட்ட உண்மையின் உணர்வுகள் எப்படி இருக்கிறது…? என்று திருவண்ணாமலைக்கு என்னைப் போகச் சொல்லி
2.அதன் உணர்வின் தன்மை எப்படி இருக்கிறது…? என்று இந்த காற்றிலே படர்ந்து இருப்பதை நுகரும்படி செய்து
3.ஆந்த உணர்ச்சிகளால் அவன் பாடிய பாடலும் அவன் பிறவி இல்லாத நிலை அடைந்ததும்
4.அவன் உடலுக்குள் இருந்த சகோதரி இந்த உணர்வின் தன்மை எடுக்கச் செய்ததும்
5.உடலுக்குப் பின் இரண்டு உயிரான்மாக்களும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்று ஒளியின் சரீரம் எப்படி அடைந்தனர்…? என்று தெளிவாகக் காட்டினார்.

அதைத்தான் உங்களுக்குச் சொல்கின்றேன் (ஞானகுரு).

காற்று (பிராணன்) நம்மை இயக்கும் விதம்

பஞ்ச பூதங்கள் என்ற ஆகாயம் காற்று நீர் நெருப்பு மண் இவைகள் சரீரத்தில் செயல்படும் செயலுக்குப் பிராணன் என்றிட்ட உயிர் காற்று நாடிகள் வழியோடி அந்தந்த இடங்களில் சுவாச அலையைக் கூட்டி இயக்குகின்றது.

அதாவது மனிதச் சரீரத்தில் இயற்கையாக நடைபெறும் சுவாசத்தின் கதியே சரீரத்தின் உட்கருவிகள் செயல்பட நாடிகளின் வழி ஓடி ஆங்காங்கு பஞ்சேந்திரிங்களின் தொழிலுக்குச் செயல்பட “இந்தச் சுவாசக் காற்றே பற்பல செயல்களுக்கு வழி வகுக்கின்றது...!”

உயிர்க் காற்று என்று கூறப்படும் பிராணக் காற்று என்பது
1.இருதயப் பகுதி நாடிகளிலிருந்து மேலெழுந்து சென்று வெளிச் சுவாசங்கள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து
2.அங்கு செயல்படும் சூரிய அக்கினி சந்திரன் என்ற முத்தலை நாடிகளுள் சந்திர நாடியின் வழி கீழே ஒடி
3.மூலத்தைச் சுற்றி மேலெழுந்து நாபிப் பகுதியில் பத்துத் தலையுள்ள பச்சை வண்ண நாடியில் சுற்றி ஓடும் பெரிய சுவாச நாடியில் கலந்து
4.மீண்டும் மேலெழுந்து சிரசின் மூளைப் பகுதியில் சுவாச நாடிகளின் வழி இரண்டு சுற்றுகளாகச் சுற்றி
5.மீண்டும் வெளிச் சுவாச அலைகள் மோதிடும் நெற்றிப் பொட்டில் கலந்து ஈர்த்து அதே மோதலில் செயல்படுகின்றது.

சரீரத்தில் சுவாசம் நாசியின் வழியாக உட்செல்லும் பொழுது உடலினுள் இயங்கும் இந்த உயிர்க் காற்று என்பது நொடிக்கும் குறைவான நேரத்தில் நாடிகளின் வழியாக ஓடிச் செயல்படுகிறது... செயல்படுத்துகின்றது. பசி தாகம் ஏற்படுவதெல்லாம் இந்த உயிர்க் காற்றின் மூலம் தான்.

சரீரச் செயல் அனைத்தையும் ஒரு கட்டுக்குள் வைத்து பஞ்சேந்திரியங்கள் புற வாழ்க்கைச் செயலில் இயங்கும் இயக்கத்தை நிலை நிறுத்தி
1.ஒருமையும் ஐந்தடக்கி தியானத் தொடரில் நிலை பெற்று விட்டால்
2.காற்றிலிருந்தே ஆகாரம் பெற்றிடும் அமைப்பு ஏற்பட்டுவிடும்.

சரீரத்தின் குறி ஸ்தானம் என்றிட்ட மர்ம ஸ்தானத்திலும் மலம் கழியும் இடமாகிய மூல இடத்திலும் வட்ட வடிவில் சுழன்றோடும் காற்று அங்குள்ள நாடிகளின் வழியே செயல்படும் பொழுது உணர்வின் உந்துதலாக மலம் நீர் இவற்றை வெளியேற்றும் செயலுக்கும் ஆண் குறியின் சுக்கிலத்தைக் கிளர்ந்து வெளித் தள்ளும் செயலுக்கும் இயக்குகிறது. அதை மூலத்தின் காற்று என்பர்.

சுவாசக் காற்றின் செயல் நாபிப் பகுதியில் உள்ளிட்ட நாடிகளில் ஓடிடும் பொழுது இரைப்பையில் உணவை ஜீரணித்துச் சாறு என்றும் சக்கை என்றும் பிரித்திடும் செயலுக்கு உதவுகின்றது,

அதே சமயத்தில் உணவின் சத்துக்களை நரம்புகளின் வழி கொண்டு சென்று சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கும் சுவாசக் காற்றாகவும் சுவாசத்தின் கதியில் காற்று நூலாகச் செயல்கள் நிகழ்கின்றன.

September 13, 2022

செல்வத்தின் மேல் வரும் “பற்று” நம்மை நரக வேதனைக்குள் தான் அமிழ்த்தும்

மனிதர்கள் நாம் வாழ்வது சிறிது காலம் தான். நாம் தேடிய செல்வங்களும் “என்றும்” நம்முடன் இருந்ததில்லை.

செல்வம் தேடி வைத்திருக்கும் குடும்பங்களை எல்லாம் பார்த்தால்… கோடிக் கணக்கில் பணம் இருக்கும்…! ஆனால் குடும்பத்தில் எத்தனை வேதனைப்படுகிறார்கள் என்று பார்த்தால் தெரியும்… நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

செல்வம் இருக்கும்… வேதனையிலிருந்து மீள முடியாத நிலை தான் அங்கே இருக்கும். துயரத்தின் உணர்வுகள் எல்லை கடந்து இருக்கும்.
1.செல்வம் எது இருப்பினும் அதுவே எதிரியாக மாறுகின்றது.
2.செல்வத்தின் நிலை சிந்தனைகளைக் குறைக்கச் செய்கின்றது… செயல்களை மாற்றுகின்றது…
3.செல்வம் இருந்தாலும் தன்னை மதிக்கவில்லை என்றால் வேதனை தான் வரும்.

வேதனை என்றாலே விஷம். ஆகவே சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது. உடலில் உள்ள அணுக்களில் விஷத்தன்மை பரவி நோயாக மாறுகின்றது.

செல்வத்தைப் பார்க்க வேண்டியதுதான்… ஆனால் “ஆசையோ விடாது…” அதையே ஒவ்வொரு நிமிடமும் நினைத்து நரக வேதனையைத் தான் அது உருவாக்குமே தவிர நல்லது செய்யாது.

ஆகவே செல்வம் இருந்தாலும் அருள் செல்வம் (ஞான சக்தி) என்ற நிலை இருந்தால் தான் செல்வத்தைப் பாதுகாக்கும் தன்மையாக வரும். நம் உடலில் அருள் ஒளி என்ற உணர்வைப் பெருக்க முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.

நம் உயிர் ஈசன்… நம் உடல் சிவம்…! ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தெந்த உயர்ந்த குணங்களை எண்ணுகின்றோமோ அது எல்லாம் நல் வினைகளாக உடலுக்குள் உருவாக்கி அந்த வினைக்கு நாயகனாக அது நம்மை இயக்குகிறது… அதுவே நம்மை வழி நடத்தும். ஆகவே நல்வினைகளையே நமக்குள் சேர்த்தல் வேண்டும்.

எத்தகைய தீமைகள் வந்தாலும் வயல்களில் களைகளை எப்படி நீக்கிக் கொண்டே இருக்கின்றோமோ அதைப்போல
1.உடலில் வரும் தீமை என்ற நிலைகளை
2.அவ்வப்போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அவைகளை நீக்குதல் வேண்டும்.

தீமைகளை நீக்கும் அருள் சக்திகளைப் பெறுவதே அழியாச் செல்வம்.