ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2021

இயற்கையின் சக்தி எப்படிப்பட்டது...? ஞானிகள் அதைப் பயன்படுத்திய விதம் எப்படி...?

 

இரண்யன் தனக்கு எதிலேயும் தனக்கு இறப்பு வரக்கூடாது என்றுதான் வரம் கேட்டான்.
1.ஆகையினால் அவனைக் கொல்லவில்லை.
2.ஆனால் தீமைகளையும் பகைமைகளையும் உள்ளே போகாதபடி தள்ளி விடுகின்றது... (நரசிம்மா) தீமைகளை வளர்க்கவில்லை.

நன்றாக இதைக் கவனித்துப் பாருங்கள். காவியத்தை ஞானிகள் எப்படிப் படைத்துள்ளார்கள்...? தெளிவாக நமக்கு எப்படிக் காட்டி இருக்கிறார்கள்...? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

விஷ்ணு அவனைக் கொன்றானா... இல்லை...! மடி மீது வைத்து இங்கே உள்ளே வராதபடி தடுத்து விட்டான். “இரண்யனைப் பிளந்தான்...” என்றால் தனக்குள் இருக்கக்கூடிய பல விதமான தீமை செய்யும் உணர்வுகளை விலக்கித் தள்ளி விடுகின்றது.

1.அருள் உணர்வுகள் எதை நாம் அரவணைத்தோமோ அதை உயிருடன் சேர்த்துக் கொள்கிறது.
2.அந்த அறிவின் தன்மை நமக்குள் பெருகுகின்றது.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஒவ்வொரு நாளும் நாம் வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

அதிகாலை ஆறு மணிக்கெல்லாம் நாம் ஈர்க்க மறுத்த தீமைகளைச் சூரியன் கவர்ந்து மேலே கொண்டு சென்றுவிடுகிறது

ஏனென்றால் நம் கண்ணின் நினைவு உயிருடன் ஒன்றி அங்கே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செல்கின்றது. அந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது பகைமை உணர்வுகளை எல்லாம் அகற்றி விடுகின்றது.

வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும் செயலில் ஜொலிப்பும் வாழ்க்கையில் ஜொலிக்கும் நாங்கள் எல்லோரும் பெற வேண்டும். எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும் என்று எல்லோரும் எண்ண வேண்டும்.

அப்படி எண்ணும் பொழுது அந்தப் பகைமைகளையும் அசுர குணங்களையும் தள்ளிவிட்டு விடுகின்றது. நாம் யாரும் அதை ஈர்க்கவில்லை என்கிற போது சூரியன் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கவர்ந்து மேலே இழுத்துச் சென்று விடுகின்றது.

அது இறப்பதில்லை... அதனால் தான் எனக்கு எதிலுமே இறப்பில்லை என்று இரண்யன் கேட்டான் என்று சொல்வது. ஆக... வெளியிலே வந்தபின் நாராயணன் (சூரியன்) அவனைக் கவர்ந்து கொள்கின்றான்.

காரணம் அவன் கொடுத்த வரம் தானே அது.
1.இந்த விஷம் இல்லையென்றால் அந்த்ச் சூரியனே இயங்காது.
2.ஒவ்வொரு அணுவிலும் இந்த விஷம் இல்லை என்றால் அதனின் உணர்ச்சிகள் இயங்காது... எந்தக் குணமும் அது இயங்காது.

எல்லாவற்றையும் இயக்குவதற்கு நானே தான் மூலம்... அதே சமயத்தில் அதை அடக்குவதற்கும் நானே தான் மூலம்... “என்னால்தான்...” என்று இரண்யன் சொல்கின்றான்.

விஷத்திற்கு வலு கூட்டக் கூடாது என்று தான் அந்த அசுர சக்திகளைக் கண்ணன் வீழ்த்தினான் என்று தீப ஒளித் திருநாளாகக் காட்டுகின்றார்கள்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிவரை நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும். அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நம் ஆன்மாவில் புத்தாடையாக அணிய வேண்டும்.

ஒளியை எடுத்த பின் வேதனைப்படுத்தும் உணர்வுகள் உள்ளே செல்லாதபடி நீக்கி விடுகிறோம். நமக்குள் அதை வளர விடுவதிலலை.

1.விஷ்ணு இதைச் செய்கிறான்... இரண்யனோ அங்கே நாராயணனிடம் சேர்ந்து விடுகின்றான்.
2.அவன் கேட்டபடி வரப்படி அவனைக் கொல்லவில்லை... அழிக்கவில்லை.
3.ஆனாலும் அந்த தீமையை வளர்க்க விடாதபடி தள்ளி விடுகின்றான் – நரசிம்மா...!

துருவ நட்சத்திரம் ஆகும்போது தனது பங்காக ஒளியாக மாற்றுகின்றது. பாசிட்டிவ் நெகட்டிவ் பாசிடிவ்...! சுழற்சியின் மோதலில் தான் ஒளியே வருகிறது சூரியனுக்கு. அதே உணர்வின் தன்மை தனக்குள் எடுக்கும் போது ஒளியாக மாற்றுகின்றது.

விஷம் இல்லை என்றால் அந்த உணர்ச்சியின் ஒளி அலைகள் பரவாது. இருளுக்குள் அடங்கி ஒளியாகப் பரவும். காரணம்...
1.ஒரு பொருளுக்குள் அந்த விஷத்தின் தன்மை இல்லை என்றால்
2.அந்தப் பொருளின் சக்தியை ஒளியாகக் காட்டாது... அந்த அறிவால் இயக்காது.
3.எந்தப் பொருளில் விஷம் கலக்கிறதோ அந்தப் பொருளின் மணத்தை வீரியமாக அதனின் உணர்ச்சியை ஊட்டுகிறது.

இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அந்த ஞானிகள் கண்ட மூலங்களை உங்களுக்குப் பிரித்துக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

மேல் நோக்கிய சுவாசத்தின் முக்கியத்துவம் - ஈஸ்வரபட்டர்

 

மனிதனுக்கும்… மற்றெல்லா மிருகங்களுக்கும்… பட்சிகள் யாவைக்குமே… இயற்கையின் ஒளி ஈர்ப்பு… தனக்கு முன்னாடி உள்ளதை ஊடுருவிப் பார்க்கும் தன்மையில் தான் அமையப் பெற்றுள்ளது.

ஒரே சுழற்சி கதியில் தான் ஈர்ப்பின் சுழற்சி ஓட்டமே சுழன்று ஓடுகின்றது.
1.முன்னோக்கிச் செல்லும் சுழற்சி கதியில்தான் வாகனங்களையும் மனிதன் அமைக்கின்றான்
2.மேல் நோக்கிய கதியில் தான் தெய்வ சக்தியை எண்ணி வணங்குகின்றான் மனிதன்.

ஆனால் மேல் நோக்கிச் சுவாசம் ஈர்த்து பூமி கக்கும் பூமி எடுத்து வெளிப்படுத்தும் ஈர்ப்பின் சுவாசத்தை
1.ஜீவராசிகள் தன்னுடைய சுவாச ஈர்ப்பிற்கு
2.கீழ் நோக்கிய சுவாசமாகத் தான் எடுத்துப் பூமியின் பிடியில் சிக்கி
3.பூமியின் ஈர்ப்புடன் ஈர்ப்பாகவே இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பெல்லாம் உள்ளன.

ஆரம்பக் கதியில் எந்த உயிரணு எந்த அலைத் தொடர் அமிலக் கூட்டின் உருவகத் தன்மை எடுத்து ஆவியாகிப் பிம்பமாகி ஒவ்வொரு பிம்ப மாற்றத்திலும் வழிப்படுத்திக் கொண்ட உணர்வெண்ணக் கூட்டு அமில ஈர்ப்பின் பிடி…
1.இந்தப் பூமியின் சுவாசப் பிடியின் தொடர்பு ஈர்ப்புப் பிடியிலே சிக்குண்ட தன்மையில்
2.கீழ் நோக்கிய சுவாச ஈர்ப்புடன் வாழும் தன்மையிலேயே உள்ளது.

இதையே பகுத்தறியக்கூடிய ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் தன் ஜீவ பிம்ப உடலின் எண்ண சக்தியை நற்குண வழித் தொடரில் மேல் நோக்கிய சுவாச அலையை ஈர்த்தெடுக்ககூடிய ஜெபம் கொண்ட சக்தி பெற்றால்… அதனால் ஏற்படும் வளர்ச்சி நிலை என்ன…?

ஏனென்றால் இந்தப் பூமியின் ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் நிலையில் “நற்குண ஜெப முறையினால்…” இந்த உடல் முழுமைக்கும் படர்ந்துள்ள அனைத்து அணுக்களுக்கும் மேல் நோக்கிய சுவாச அலை ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மேல் நோக்கிய சுவாசத்தால்…
1.உடலின் அணுக்களுக்கு எல்லாம் ஊடுருவும் உயர் காந்த சக்தியின் செயல் ஏற்பட்ட பிறகு
2.இந்த ஜீவ பிம்ப உடலில் இருந்தே இவ்வெண்ணத்தை ஒளியின் அலையாக
3.தனித்த ஒரு ஜோதி உணர்வாகச் செயல்படுத்த முடியும்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் எதைச் சேர்த்தாலும் அதுவும் எரிந்து பஸ்பமாகத்தான் செய்யும்.. ஒளியாகத்தான் காட்டும். அதைப் போல் இவ்வுணர்வால் எடுக்கும் எண்ண ஜெப முறையின் வழியினால் உயிரான்மாவைப் பேரொளியாக ஆக்கிட முடியும்.

1.சூரியனின் ஒளி.. கண்ணாடியில் பட்டு மறு பக்கம் ஊடுருவுவதைப் போல் இல்லாமல்
2.அதே சூரியனின் ஒளி… பாதரசம் பூசிய கண்ணாடியின் மேல் படும் பொழுது
3.இவ்வொளியை ஈர்த்து இரசக் கண்ணாடி வெளிப்படுத்தும் ஒளியைப் போல்
4.இந்த உடல் பிம்பக்கூட்டிற்கு நற்குண அமில இரசத்தைப் பூசி ஜெபம் கொண்டோமானால்
4.வள்ளலார் உணர்த்திய அருட்பெரும் ஜோதி என்ற நிலையான தனிப் பெரும் கருணை கொண்ட அவர் உணர்த்திய முறையான
5.நம் ஆத்மாவை ஜோதியாக… அருட்பெரும் ஜோதியாக.. ஆக்கிடல் வேண்டும்.

பூமியின் ஈர்ப்புச் சுவாசப் பிடியில் உள்ள நிலையில் ஜீவன் பிரிந்தால் இதே சுழற்சி ஓட்டத்தில் மீண்டும் மீண்டும் சிக்குண்டு சுழலும் தன்மை தான் பெற்றிட முடியும்.

அவ்வாறு பூமியின் பிடியுடன் மேன்மேலும் சிக்கிப் பல அமில குணங்களின் மாற்றத்திலும் இவ்வுடல் பிம்ப உயிரணுக்கள் எவையுமே எவ் வீர்ப்புப் பிடிக்கும் செல்லாமல் மற்ற ஜென்மத் தொடர் வழிக்கும் செல்லாதபடி நம் ஜெப நிலை இருந்திடல் வேண்டும்.

ஆகவே நம் உயிர் ஆத்ம ஜோதியை அருட்பெரும் ஜோதியாக… தனிப் பெரும் கருணை கொண்ட எச்செயலையும் உருவாக்கும் தன்மைக்கு… உயிர் ஆத்மாவின் உயர் ஆத்ம ஜோதியை நாம் வளர்க்க முடியும்... வளர்க்க வேண்டும்..!

August 30, 2021

உடலில் உருவாகும் அணுக்களுக்கு உயிர் சாப்பாடு கொடுப்பதை ஏன்... என்று நாம் கேட்க முடியுமா...?

 

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்க்கின்றோம்... அவ வேதனைப்படுகின்றார் என்று கண் பார்க்கின்றது. நண்பராக இருக்கும் போது நம் இரக்க மனம் அவருக்கு உதவி செய்கின்றது.
1.இரக்கம் என்பது வலு குறைவு.
2.ஈகையோ உதவி செய்யச் செல்கிறது.

ஆனால் இதிலே விஷம் (வேதனை என்பது விஷம்) பட்டால் என்ன ஆகும்..?

உதவி செய்த அந்த நல்ல குணங்களுக்குள் அது பதிந்து இணைந்து விடுகின்றது. அந்த உணர்வின் தன்மை அணுவாக உருவாகத் தொடங்குகின்றது.

அந்த நண்பரைத் திரும்பத் திரும்ப எண்ணினோம் என்றால் முதலிலே அது கருவாகின்றது. கருவான பின் அதற்குச் சாப்பாடு தேவை.

அவர் உடலிலிருந்து வரும் உணர்வை எடுத்து அது வளரத் தொடங்குகிறது. ஏனென்றால் அணுவாக ஆகிவிட்டால் இந்த வேலையைச் செய்யும்.

பொதுவாக ஒரு செடியில் விளைந்த வித்து நிலத்தின் மீது (மேலெழுந்தவாரியாக) விழுந்து விட்டால் முளைக்காது. மழை பெய்தாலும் பதிவானால் தான் முளைக்கும். அப்படியே முளைத்தாலும் மேலே இருந்தது என்றால் கருகிவிடும்.

அதைப் போன்று தான் நாம் எடுத்துக் கொண்ட அந்த நோயாளியின் வேதனையான
1.உணர்வு இரத்தத்திலே சுற்றுகின்றது... பதிவாகின்றது
2.எந்த உறுப்பின் பாகம் சுழல்கின்றதோ அந்த நேரத்தில் அவனைப் பற்றி நினைத்தோம் என்றால்
3.அந்த உறுப்பில் போய் ஒட்டிக் கொள்கின்றது

ஒட்டியவுடன் துடிப்பின் நிலைகள் வரும். பட...பட... என்று அடிக்கும். அந்த அணு என்ன செய்கிறது...? முட்டையை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளி வந்துவிடும். வெளியிலே வந்த பின் அது கத்த ஆரம்பிக்கும்.

உதாரணமாக குஞ்சுகள் வந்த பின் தாய்க் கோழி என்ன செய்கின்றது...? குக்குக்கூ... என்று கத்தி அதற்கு இரையைக் கொடுக்கின்றது. குஞ்சுகள் பின்னாடியே போகின்றது.

அது போல் தான்
1.நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் குஞ்சாக ஆகிவிட்டது என்றால் சிறு மூளைக்கு எட்டுகிறது அந்த உணர்ச்சிகள்
2.உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகிறது.
3.ஆணையிட்டவுடன் காற்றிலிருந்து அந்தச் சக்திகளை இழுக்கிறது.

சுவாசித்த பின் இதே உயிர் அதற்கு அதைச் சாப்பாடாகக் கொடுக்கின்றது. “ஏன் சாப்பாடு போடுகிறாய்...?” என்று உயிரிடம் கேட்க முடியுமா...?

ஆறாவது அறிவால் தான் அதை எல்லாம் தடுக்க முடியும். ஆறாவது அறிவால் தீமைகள் வளராதவண்ணம் தடுத்து அதை அடக்கிப் பழக வேண்டும்.

அதைத்தான் அங்குசபாசவா என்று காட்டுகின்றார்கள். ஆறாவது அறிவு பெற்றவன் எதையுமே அடக்க வல்லமை கொண்டவன்.
1.மிகப் பெரிய யானை இருந்தாலும் சிறிய அங்குசத்தை வைத்து அடக்கி விடுகிறார்கள்
2.அதைப் போன்று அருள் ஒளியின் தன்மையை நாம் எடுத்துக் கொண்ட பின்
3.எவ்வளவு பெரிய தீமை வந்தாலும் இந்த அருள் ஒளியைப் பாய்ச்சியவுடன் அது அடங்குகிறது.

காவியத்தில் இப்படித்தான் நமக்குக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள். ஆனால் என்னென்னமோ நாம் கதைகளை எழுதி வைத்திருக்கின்றோம்.

ஒரு சிலையை வைத்துக் காட்டி மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து விடுபட இவ்வளவு விரிவுரையைக் கொடுத்திருக்கின்றார்கள் ஞானிகள்.

உலகெங்கிலும் உள்ள இன்றைய தெய்வ பக்தி நிலை - ஈஸ்வரபட்டர்

 

பூண்டின் செடி வித்தான ஆரம்ப வளர்ச்சி நிலையில்… அதன் கிளைத் தொடர் அச்செடி வளர்வதற்குகந்த ஜீவ சக்தி இருக்கும் வரை… அப்பூமியின் சுற்றளவில் ஆரம்பப் பூண்டுக் கிழங்கின் வளர்ச்சிக் காலம் முடிவுற்றாலும்… அதன் தொடர் வளர்ச்சிக் கிளைப் பூண்டுகள் எவ்வித்தின் ஆரம்பத்தில் வளர்ச்சி கொண்டு வளரப் பெற்றதோ… அதன் குண ஜீவ சக்தியும்… தன் வளர்ச்சிக்குகந்த நிலப்பரப்பு உள்ளவரை வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

அதைப் போல் இம்மனிதக் கரு எண்ணத்தில் சக்தி கொண்ட ஆத்மாக்களின் வளர்ச்சியினால் பல ஆயிரம் காலங்களுக்கு முன் அவர்கள் உணர்ந்து வெளிப்படுத்திச் சென்ற உண்மை நிலைகளின் படர் தன்மை வழித் தொடர் அலைத் தன்மையில் இன்றளவும் இந்தப் பூமியில் பல தெய்வங்களை வணங்கக்கூடிய முறையாக வழி பெற்று விட்டது.

1.பல குணங்களை உணர்ந்த சித்தர்களினால்
2.நல் வழிப்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த அலைத் தொடரின் உருவங்களாகப் படைக்கப்பட்டவை
3.எல்லாமே இன்று கால நிலையின் மாற்றத்தினால் மாறி விட்டது.

ஆக மனித எண்ணத்தின் உணர்வலைகள் பல கூறுகளில் மாறு கொண்டு… மாறு கொண்டு… சுழற்சி பெற்ற வழிதனில்
1.உண்மைச் சக்தியின் தெய்வ நிலை
2.வெறி கொண்ட பக்தி முறையாக இன்றுள்ள சுழற்சி நிலையில் உள்ளது.

இந்தியாவில் இந்த நிலை என்றால் மற்ற இடங்களில் ஜாதி வெறியற்ற நிலையின் இனமாற்றம் என்ற வெறி உணர்வின் ஈர்ப்பில் தெய்வ சக்தியின் அன்பு பாச பிணைப்பின் வழித் தொடர் செல்ல முடியா உணர்வு எண்ணங்கள் தான் உலகெங்கிலும் அங்குள்ளன.

ஆனால் மனித எண்ண உணர்வால் எடுக்கும் சக்தியினால் எச்சக்தியும் பெறவல்ல ஆற்றல் மனித பிம்பக் கூட்டிற்கு உண்டு.

விஞ்ஞானத்தின் தொடர்பினால் ஒன்றின் சேர்க்கை கொண்டு அறியக் கூடிய செயல் வன்மையினால் பலவற்றையும் உணரும் மனிதன் இவ்வுடல் பிம்பக் கூட்டைக் கொண்டு எந்நிலையையும் உணரவும் செயலாற்றவும் முடியும்.

ஆவி நிலையின் சுழற்சி ஈர்ப்பில் மனித உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் படர் கொண்ட சுழற்சியில் இந்தப் பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியே மனிதன் எடுக்கும் எண்ணமுடனும் உணர்வுடனும் சுழன்று கொண்டுள்ள நிலையில் இந்த மனிதப் பிம்பக் கூட்டின் எண்ணத்திற்கொப்ப இவ்வாவி ஈர்ப்பின் அலைத் தொடரில் சிக்குண்ட மனிதர்களும் வாழ்கின்றனர்.

காற்றுடன் கலந்துள்ள படர் தொடரில் பல சக்திகளின் சுழற்சியின் மத்தியில் தான் மனிதனும் வாழ்கின்றான்.
1.எண்ணத்தின் சுவாச நிலைக்கொப்ப எல்லாம்
2.எண்ணிய நிலை கொண்ட அலைத் தொடர் வருகின்றது.

பயம்… சந்தோஷம்.. மற்ற எந்த நிலைகள் கொண்ட எவ்வெண்ணத் தொடராக இருந்தாலும் அந்நிலையான சுவாச நிலையின் அலைத் தொடர் பிம்பக் கூட்டின் சுழற்சியுடன் எண்ணத்தில் எண்ணும் நிலைக்கொப்ப எல்லாமே உடலுடன் சேமித்துக் கொண்டே தான் உள்ளது.

1.பக்தி மார்க்கமானாலும் யோக சக்தி மார்க்கமானாலும்
2.விஞ்ஞான அஞ்ஞான எஞ்ஞானமானாலும்
3.எண்ணத்தில் எண்ணும் வழித் தொடர் கூட்டு அமிலச் சேர்க்கையை
4.உடல் என்ற பிம்பங்கள் சேமித்துக் கொண்டேயுள்ளது.

எவ்வெண்ணத்தை உயர்த்தி… அதன் வழித் தொடர் கொண்ட குணத் தன்மையில் இவ்வெண்ண சுவாசம் உள்ளதுவோ… அவ்வழித் தொடர் கொண்ட அலையின் அமில குணத்தின் வீரியத் தன்மை தான் மனிதக் கூட்டின் பிம்பக் கலவையில் நிறைந்திருக்கும்.

நாம் எதை நமக்குள் நிறைத்திட வேண்டும் என்பதை உணர்ந்து இந்த மானிடப் பிறவியில் முழுமை அடைந்து ஞானைத்தின் முதிர்வு என்னும் நிலையை எய்திடல் வேண்டும்.

August 29, 2021

மனிதனுக்குள் இயங்கும் 1008 குணங்களைத் தான் 1008 தெய்வங்களாகப் படைத்தார்கள் ஞானிகள் - ஈஸ்வரபட்டர்

 

சுவை தரும் இயற்கைக் கனிகள் தன்மையில் இனிப்பின் சுவையே ஒவ்வொன்றுக்கும் மாறுபாடு உள்ளது.

மிளகாய்க்கும் மிளகிற்கும் வெங்காயத்திற்கும் இஞ்சி போன்றவற்றின் கார குணமானது ஒன்றுக்கொன்று மாறுபட்ட காரம் கொண்டது.

அதே போல் அதை ஒவ்வொன்றையும் உண்ணும் பொழுதும் உடல் நிலைக்கு ஒவ்வொரு நிலையான “உஷ்ண கதியும்” ஏற்படுத்தவல்ல குண நிலையும் அவைகளுக்கு உள்ளது.

புளிப்பு சம்பந்தப்பட்டதை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றின் புளிப்புச் சுவையும் அதற்குகந்த உடல் தன்மைக்கு அதனுடைய குணச் செயலும் ஏற்படுகின்றது.

இதைப் போன்றே உணர்வின் எண்ணங்களும்
1.ஒவ்வொரு மனித பிம்பத்தின் உணர்வு எண்ண நிலைக்கொப்பத்தான்
2.அப்பிம்ப உடலில் இருந்து செயல் கொள்ளும் ஆத்ம உணர்வின் சேமித
2.குணச் சக்தியின் அமிலக்கூட்டு உருவாகியுள்ளது.

இந்திய பூமியில் தான் மனித குணங்கள் கொண்ட பல நிலையான விக்கிரகங்களை அமைத்து வணங்குகின்றனர்.

மற்றவர்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்…” என்று ஒரே ஆண்டவனை வணங்கும் பொழுது இங்கே பல நிலையான விக்கிரக ஆராதனையும் மாறு கொண்ட பூஜை முறைகளையும் வழிப்படுத்தியதன் உண்மை நிலை என்ன…?

இது எல்லாம் அன்று ஒவ்வொரு சித்தனாலும் தான் எடுத்த சக்திகளை அந்தந்த மனிதக் கூட்டின் அமில ஈர்ப்பின் நிலைக்கொப்ப ஒன்றின் சக்தியினால் பிறிதொன்றின் வழித் தொடர் கூட்டி வழிப்படுத்தித் தந்த முறை வழியில் வந்தது தான்…!
1.குண நிலைகளின் உருவத்தை உருவகக் கல்லாகச் செதுக்கி வைத்து
2.கல்லின் உருவத்தில் குணங்களையும் அதனின் இயக்கங்களையும் உணர்த்தினான்.

விஞ்ஞான முறைப்படி இன்று பாடநிலைகளைப் பல வகையில் கல்வி கற்பவர்களுக்குக் கொடுப்பது போல் அன்றைய சித்தர்கள் சிற்பங்கள் மூலமாகப் பாமர மக்களுக்கும் புரியும் வண்ணமாக உணர்த்தினார்கள்.

1.குண மாற்றத்தின் சக்திதனை எடுத்து
2.அக்குணத்தின் விக்கிரகத்துடன் எண்ணத்தைச் செலுத்தி வணங்கும் நிலையில்
3.எக்குண தெய்வத்தை ஒருவன் வணங்குகின்றானோ
4.அக்குணத்தின் அடிப்படை சக்தியின் உணர்வை அவ்வாத்மாவும் ஏற்று
5.அவ்வழி சக்தித் தொடர் பெற வேண்டிய நிலைக்கொப்பத்தான்
6.பல உருவ வழிபாட்டினை உணர்த்திச் செயல்படுத்தி வந்தனர்.

ஆக சப்தரிஷிகளினால் இன்றளவும் அவ்வழிபாட்டின் தொடர் சுழற்சி வளர்ந்து கொண்டுள்ள உண்மை தான் “பல உருவ வழிபாட்டு முறை எல்லாம்…!”

உருவ வழிபாட்டின் மாறுபட்ட குண நிலை போன்றே மனித பிம்ப உடல் எண்ணத்திலும்… மாறு கொண்ட நற்குணங்களிலும் பல நிலைகள் உண்டு…. தீய குணங்களிலும் பல நிலைகள் உண்டு...!

இதைப் போன்றே சப்தரிஷிகளினால் செயல்படுத்தும் முறையிலும் அவரவர்கள் ஆரம்ப குணத் தன்மையில் அதிகமாகச் சேமித்த எண்ண உணர்வின் விகித நிலையின் வளர்ச்சித் தொடரிலே தான் இன்றளவும் தான் பெற்ற அலைத் தொடரின் வழித் தொடர் கொண்ட ஒளி அலையை உணர்வலையாக்கி பல தன்மைகளை மாற்றி மாற்றிச் செயல் கொள்கின்றனர்.

சப்தரிஷிகளினால் இந்தப் பூமியில் விதைத்த மனிதக் கருவின் வளர்ச்சியின் தொடரே இன்றைய இக்கலி மாறி கல்கி சுழற்சியில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் மாறப்படும் இந்த மனிதக் கரு உருவங்களும் மாறு கொண்ட தன்மையில் தான் உருவாகும்.

சப்தரிஷிகளின் சக்தி நிலை கூடக் கூட காலப் போக்கில் தீய நிலைகளை எல்லாம் மாற்றி உயர் சக்திகளை அவர்கள் வளர்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

1.இந்தத் தொடர் முறை மாற்றத்தின் வழிதனையும்
2.பல குண வழித் தொடர் ரிஷிகளின் தொடர் நிலையையும் நாம் எடுக்கும் ஜெபத் தொடரில்
3.ஒவ்வொருவர் எடுத்த தனித்த உயர் சக்தியின் வழித் தொடர் அலையை ஜெப முறையினால் நாமும் எடுக்க முடியும்.

August 28, 2021

மகரிஷிகளின் உணர்வை நம் உடலிலுள்ள அணுக்களுக்குப் பொன்னாடையாகப் போர்த்த வேண்டும்

 

ஆறாவது அறிவால் சிருஷ்டிக்கும் வலிமை பெற்றவர்கள் நாம். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து நம்மை அறியாது வரும் அசுர சக்திகளை அடக்கி நல்ல சக்திகளாக மாற்றிடும் நிலையாக நாம் செயல்படுத்த வேண்டும்.

காலையிலிருந்து இரவு வரையிலும் ஒவொரு நாளும் தீமைகளை நீக்கும் நிலையாகத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் துணையாகப் பெற்று அசுர குணங்களை அழித்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஓங்கச் செய்திடல் வேண்டும். இரவில் தூங்கச் செல்லும் பொழுதெல்லாம் இதை மறவாது செய்ய வேண்டும்.

நம்முடைய நினைவின் எண்ணங்கள் அந்த அருள் வழி சென்று
1.நம் மனதைத் தூய்மைப்படுத்தவும்
2,நம் உடலைத் தூய்மைப்படுத்தவும்
3.நம் தொழிலைத் தூய்மைப்படுத்தவும்
4.அதனால் மகிழ்ந்திடும் நிலைகளையும் பெறுதல் வேண்டும்.

விவசாய நிலங்களைப் பண்படுத்தும் போது அந்த நிலம் பண்படுகிறது. அதே போல்
1.நம் மனதைப் பண்படுத்தும்போது வீடும் குடும்பமும் பண்படுகிறது
2.மனதைப் பண்படுத்தும் போது சகோதர உணர்வுகள் பண்படுகின்றது
3.மனதை பண்படுத்தும் போது மனிதனின் வாழ்க்கையும் பண்படுகிறது
4.பண்புடன் பழகும்... பண்புடன் வளர்ந்திடும் நிலையும் வளர்கிறது.

என்றுமே ஒளியின் சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றால் மகிழ்ந்து வாழும் சக்தி பெறுகின்றோம்.

என்றுமே இருளை நீக்கிப் பொருள் காணும் சக்தியாக நாம் வளர்வதே தீப ஒளித் திருநாள்.
1.அசுரனை நீக்கிய நாள் என்றும்
2.அசுர சக்திகளை நீக்கிடும் நாள் என்றும்
3.அத்தகைய அருள் சக்திகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய நாள் என்றும்
4.நாம் அதைப் பெற வேண்டும் என்று நினைவுபடுத்தும் நாள் தான் தீப ஒளித் திருநாள்.

அன்று எப்படிப் புத்தாடையாக மேலாடையைப் போர்த்துகின்றோமோ அதைப் போன்று தீமைகளை அகற்றிட்ட அருள் ஞானிகளின் உணர்வை நம் நல்ல குணத்துடன் இணைத்து இதைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.

ஆகவே நம் வாழ்க்கையில் தூய்மைப்படுத்தும் உணர்வான அருள் மகரிஷியின் அருள் சக்திகளை
1.தெளிந்த மனதுடன்... தெளிந்திடும் சக்தியாக நமக்குள் போர்த்தச் செய்வதே
2.இங்கே கொடுக்கப்படும் உபதேசமும்... யாம் கொடுக்கும் தியானப் பயிற்சியும்.

நம்மைத் தாக்கிக் கொண்டிருக்கும் அசுர குணங்களிலிருந்து மீளும் நந்நாள் தான் இது.

நமது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த பகைமை உணர்வுகளையும்... பாசத்தால் கேட்டறிந்த பிறரின் வேதனை உணர்வுகளையும்... சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட கொதித்தெழும் கோப உணர்வுகளையும்... அது போன்ற அசுர குணங்களை எல்லாம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நீக்கும் நாள் தான் தீப ஒளித் திருநாள்.

1.நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று
2.அதனின் வலுவின் துணை கொண்டு அசுர குணங்கள் தாக்காது நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்...!” - ஈஸ்வரபட்டர்

  

ஆரம்பக் கல்விக்குக் குழந்தையை நாம் அனுப்பும் பொழுது சில குழந்தைகள் பள்ளி செல்லவே… பயம் கொண்டு அழுது… பிறகுதான் பள்ளிக்குச் செல்கிறது.

பள்ளியில் கல்வி போதனையை அந்தந்தக் காலங்களில் வைக்கும் தேர்வு
1.அக்குழந்தைக்கு அதன் எண்ண வளர்ச்சியின்
2.அறிவின் அடிப்படையில் தான் அதன் ஞானம் வளர்ந்திருக்கும்.
3.அதைக் கொண்டு தேர்வு எழுதும் பொழுது… அதற்குகந்த பயம்… அச்சம்… இருந்து கொண்டு தான் இருக்கும்.

வளர… வளர… அதற்குகந்த அறிவின் செயல் ஞானத்திற்கொப்ப முதிர்ச்சியுற்ற பிறகு ஆரம்பக் கல்வியானது மிக மிகச் சுலபமாகவும் குழந்தையின் கல்வி போலவும் வளர்ந்தவர்களுக்குத் தெரிகிறதல்லவா…!

அதைப் போன்று மனிதனின் குண அமிலத்தை நற்குணங்களின் வழித் தொடர் கொள்ள அன்பு பாசம் வீரம் ஞானம் ஆசை என்ற இந்த ஐந்து குணங்களைச் சாந்தமாக்கி நம் குண அமிலத்தையே நற்குண அமிலமாகச் செயல் கொள்தல் வேண்டும்.

அப்படிச் செயல் கொள்ளும் பொழுது நம் உணர்வின் அலைத் தொடர் உயர் சக்தியின் அமில ஈர்ப்பில் இவ்வெண்ணம் செலுத்தும் முறை கொண்டு
1.முருகனின் அழகுடையவன்
2.குணமுடையவன் இனிமை கொண்டவன்
3.மணமுள்ளவன் ஒளியானவன் ஒலியானவன் என்ற தத்துவ உயர் ஞான முருகனாக
4.நம் உணர்வின் எண்ணம் முருகனாகச் செயல் கொள்ளும் நிலைக்கு
5.வளரும் ஐம்புலன்களான நற்குணங்களை ஆறாம் புலனாக வழிப்படுத்தி நாம் முருகனாக உருவாக வேண்டும்.

ஆக… வளர்ந்த கல்வியில் உள்ளவனுக்குப் பள்ளிப் பாடத்தில் முதல் வகுப்புப் பாடம் எப்படி எளிதாக உள்ளதோ… ஒவ்வொரு வகுப்பாகப் பரீட்சையில் தேறிய உயர் கல்வியில் உள்ளவனுக்கு முதல் பாட நூலில் தேர்வு வைத்ததைப் போன்று…
1.வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு இக்கட்டான செயலையும் வரும் இன்னலையும்
2.மாற்றியமைப்பது என்பது இந்த முருக குணம் கொண்டவனுக்கு மிக மிக எளிதாகிவிடும்.

நற்குணங்களின் வழித் தொடர் செயல் ஞான ஈர்ப்பிற்கு… நம் உணர்வைச் செலுத்தும் காலங்களில் ஏற்படும்… வாழ்க்கையில் எதிர் கொள்ளும் சோதனை எல்லாமே… “நம் உயர்வின் தேர்வு தான்...!”

இந்தத் தேர்வில் இருந்தெல்லாம் நாம் பெறும் மதிப்பெண் நிலைக்கொப்ப அடுத்த தேர்விற்கு நாம் உகந்தவர்கள் ஆகின்றோம் என்ற உணர்வின் எண்ணத்தில் சென்று கொண்டே நம் செயல் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆன வளர்ச்சி இருக்குங்கால் இந்நற்குணங்களின் செயலுடன் ஒன்றிய “முருகனின்… அழகனின் அழகென்ற பட்டத்தை..” நாம் பெற முடியும்… இனிமை என்ற உணர்வின் செயலுடன் நம் எண்ணத்தின் ஈர்ப்பு ஒலியின் ஒளியாகக் கலந்துவிடும்.

இச்சக்தி நிலை கொண்ட உருவம் தானப்பா முருகனேயன்றி தனித்தொரு சக்தி வந்து நற்குணங்களாக அவதரித்து நற்படைப்பைப் படைக்கவில்லை…!

ஆகவே…. இடும்பன் என்ற அரக்க குணத்தை வளரவிட்டு… வாழ்க்கையை இருள் என்ற அழுகையின் ஊடே சோர்வென்ற சக்திதனில் சுழலவிட்டு… உயிர் என்ற ஆத்மலிங்கத்தைச் சதா சர்வ காலமும் நிந்தித்துத் துவேஷித்து… உயர் சக்தியான உயிர் ஆத்மாவை மண்ணுடன் மண்ணாக புழுவாகப் பூச்சியாக சக்திதனில் சுழல விடாமல்…
1.உயர் வழித் தொடர் கொண்டு மனித பிம்பம் பெற்ற நாம்
2.உயர் அலைத் தொடரின் உணர்வின் வழித் தொடர் செல்ல
3.முருகனின் உருவாக நம்மை உருவாக்க வேண்டும்.

உணர்வின் இனிமையையும் உணர்வின் அழகையும் உணர்வின் மணத்தையும் உணர்வின் ஒலியையும் உணர்வின் ஒளியாக உயர் ஞானச் செயலின் ஈர்ப்பில் செயல் செல்ல… இந்த ஐம்புலன் என்ற நற்குணக் கூட்டைச் “சாந்தம்…!” என்ற சக்தி கொண்டு செயலாற்ற வேண்டும்.

August 27, 2021

“தனக்கு இறப்பே வரக்கூடாது...” என்று இரண்யன் வரம் வாங்கிக் கொண்டான் என்றால் அதனின் உட்பொருள் என்ன...?

 

நாம் ஒரு தீபத்தைப் பொருத்தினால் அந்த வெளிச்சம் தன் அருகில் இருக்கக்கூடிய பொருளை எல்லாம் அது காணச் செய்கின்றது.

இதைப் போன்றுதான் நமது உயிர் நமக்குள் ஒளியாக (வெளிச்சமாக) இருக்கின்றது. நாம் எதை எண்ணுகின்றோமோ அந்தக் குணத்தைத் தன் ஒளி கொண்டு அந்த உணரவின் குணத்தையும் மணத்தையும் நமக்குள் உணர்த்துகின்றது.. அறியச் செய்கிறது.

அதாவது
1.உணர்வின் வழியில் உணர்த்துகின்றது
2.மணத்தின் நிலைகள் அறியச் செய்கின்றது.

உயிர் நமக்குள் தீபமாக… சுடராக இருந்து நாம் எதை எண்ணுகின்றோமோ... அப்பொருளை நுகர்ந்த உணர்வின் துணை கொண்டு “அந்த உணர்ச்சியை ஊட்டி...”
1.உணர்வால் நம்மை அறியச் செய்கிறது
2,மணத்தால் தன் அறிவைக் காக்கச் செய்கின்றது.

இந்தப் பேருண்மையை நாம் அனைவரும் அறிதல் வேண்டும் என்ற நினைவுக்குக் கொண்டு வரும் நந்நாள்தான் தீப ஒளித் திருநாள்.

ஒரு அசுரன் இந்த உலகில் உள்ள மக்களை எல்லாம் கொன்று குவித்துக் கொண்டுள்ளான். கிருஷ்ண பரமாத்மா கண்ணனாக உலகத்தில் தோன்றி அந்த அசுரனை வதம் செய்து வென்றான் என்று ஒரு சாரார் சொல்கின்றார்கள்... சாஸ்திரங்களிலும் இது காட்டப்பட்டுள்ளது.

முருகன் வழியில் எடுத்துக் கண்டால் அசுர சக்திகளை அகற்றி சூரபத்மனைக் கொன்று குவித்தான் என்றும் காவியங்கள் உண்டு. ஆனால்
1.அந்தக் காவியங்களில் தப்பில்லை.
1.அதில் உள்ள மூலக் கருத்தினைத் தான் நாம் தவறாகக் கருத்தில் கொண்டு வாழ்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ளோம்.

காரணம் சூரியனை இயக்குவதும் அந்த விஷம் (நஞ்சு) தான். ..!

விஷத்தின் தாக்குதல் இல்லை என்றால் சுழற்சியின் வேகம் இல்லை. ஆனால் சுழற்சியின் வேகம் அதிகரிக்கும் போது நஞ்சினைப் பிளந்து ஒளியின் தன்மையாகப் பெறுகின்றது.

அதாவது…
1.சுழற்சியின் வேகம் அதிகரிக்கும் போது வெப்பம் அதிகமாகிறது
2.அந்த வெப்பத்தின் நிலைகள் தாங்காது நஞ்சு பிரிந்து விடுகிறது
3.இருந்தாலும் அந்த நஞ்சினால் தான் வெப்பமாக ஆனது.

அதே போலத் தான் நமது உயிரின் துடிப்பிற்கு காரணமே இந்த நஞ்சு தான். நஞ்சின் இயக்கம் இல்லை என்றால் உயிரின் இயக்கமும் இல்லை.

உதாரணமாக ஒரு ரோஜாப்பூ இருக்கிறதென்றால் அதிலிருந்து வெளிப்படும் மணத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

அதை நாம் நுகர்ந்தால் நறுமணமாக இருக்கின்றது. ஆனாலும் அந்த மணத்தை வீசச் செய்வது உணர்த்துவது அதில் உள்ள விஷம் தான்.

சூரியனிலிருந்து வெளிப்படும் காந்தம் அல்ட்ரா வயலட் அந்த நஞ்சைக் கவர்ந்துதான் பூமிக்குள் வருகின்றது.
1.எதைக் காந்தம் இழுக்கின்றதோ அது மோதும் வேகத்தில் அங்கே வெப்பம் ஆகின்றது.
2.ஆனால் வெப்பமாகும் பொழுது இரண்டறக் கலக்கின்றது
3.கலந்த பின் அந்த விஷமே அதனின் மணத்தைப் பளீர்... என்று வீசச் செய்கின்றது

ஆகவே இந்த நஞ்சு இல்லை என்றால் உலகம் இல்லை என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஒருவனுக்கு கோபம் வருகிறது. கோபத்தால் அவன் தவறு செய்கிறான். நாம் பார்க்கின்றோம்... அவன் தவறு செய்கின்றான் என்ற உணர்ச்சியின் வேகத்தைக் கூட்டுகின்றது...!

தவறு என்று உணர்கின்றோம்... அப்பொழுது கோபம் வருகின்றது. கோபத்தின் உணர்வுகள் நமக்குள் விளைகின்றது. அவன் செய்தது தவறு என்று வரப்படும்போது
1.அங்கே இதே நஞ்சு தான் அவனைத் தவறு செய்ய வைக்கின்றது
2.அவனில் விளைந்த அந்தத் தவறை நாம் நுகரப்படும் பொழுது
3.நம் நல்ல குணத்தை இழக்கச் செய்து நம்மையும் தவறு செய்ய வைக்கின்றது.

அதனால்தான் இரண்யன்
1.எதிலேயுமே எனக்கு இறப்பு இல்லை...
2.என்னுடைய செயல்கள் எனக்கு வலு ஜாஸ்தி என்று சொல்கிறான்.

இதை எல்லாம் மகா ஞானிகள் இயற்கை எப்படி வளர்கிறது...? என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.

சக்தியைப் பெண்ணாகக் காட்டியதன் உண்மைப் பொருள் என்ன..? - ஈஸ்வரபட்டர்

 

சப்தரிஷிகளாலும் சித்தர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்பட்ட உயர் சக்தியின் நிலைகள் எல்லாம் ஊன்றிப் பார்த்தால்
1.ஒவ்வொரு சப்தரிஷியும் தன் சக்தியால் வணங்கப்படும் தெய்வங்கள்
2.பெண்மை உருவங்களாகத் தான் இருக்கும்.

ஆகவே பராசக்தியையும் ஆதி சக்தியையும் பெண்மையின் சக்தியாக வணங்கும் நிலை என்ன…?

ஒவ்வொரு சப்தரிஷியின் உயர்ந்த சக்திக்கும் உண்மையை ஊன்றிப் பார்த்தால் அவர்களின் ஆரம்பகால தாம்பத்ய வாழ்க்கையின் உணர்வின் எண்ண மோதலின் ஒன்றுபட்ட உயர் சக்தியின் வழித் தொடர் பெண்மையின் சக்தி கொண்டு தான் ஆண் வலுப் பெற்று ரிஷியாக சப்தரிஷியாக உயர்ந்தான்.

1.ஜீவனற்ற… ஜீவனை வளர்க்கும் சக்தியற்ற நிலை…
2.அமில குண ஆண்மைக்கு வலுத் தந்த சக்தியே
3.இத் தாம்பத்ய எண்ண வலு பெண்மையின் ஜீவ வளர்ச்சி வாழ்க்கையின் கூட்டினால் தான்…!

இக்கலியிலும் ஆதாம் ஏவாள் என்று உணர்த்திய மனித இன வளர்ச்சியின் செயல் முறையும் இதன் உண்மை கொண்டு தான்.

அமிலமான சிவ உருவம் கொண்டு திருவள்ளுவருக்கு வாசுகி அம்மையாரின் உயர் ஞான ஈர்ப்புக் கரு அமில செயல் சக்தி கூடித் தான்
1.அவர் (வாசுகி) வளர்த்த ஞானக் கருவை இவர் உருவில் வெளிப்படுத்தி
2.இன்றளவும் வள்ளுவனையும் வாசுகியையும் போல் என்று
3.பெரியோர்களின் வாழ்த்தாக அமையப் பெற்ற வாழ்த்தின் சொல்லின் உண்மை இதுவே…!

பெண்மையின் கரு வளர்ச்சியினால் உயர் இன வளர்ச்சியின் வித்தை உருவாக்க முடிகின்றது. ஒரு சித்தர் தன் பாடலில் “பூவையரை அன்னையெனப் புகழ்ந்தாய் போற்றி…!” என்றும் உணர்த்தியுள்ளார்.

அதன் உட்பொருள் என்ன…? படைப்பின் படைப்பே
1.பூவையரை அன்னையாகக்கூடிய செயலுக்கு
2.இந்த மனிதக் கரு இன வளர்ச்சியைப் பெருக வைத்து
3.உயர் சக்தியை வளர்க்க செயலாக்க வழி தந்த படைப்பிற்கே
4.பூவையரை அன்னையாகும் வளர்ச்சியைத் தந்ததற்காகப் போற்றி வணங்கினார்.

அதே போல் மகாத்மா காந்திக்கு வலுத் தந்ததே அவரின் மனையாளான கஸ்தூரிபா காந்தியின் பக்தி மார்க்க வழி முறை தான்.

பூவையரின் சுவாச அலையே “கரு வளர்ச்சி” அலை. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் ஈர்ப்பலைக்கு வீரிய சக்தி உண்டு. ஆனால்
1.சிவனான அமிலமுடன் மோதுண்டு வெளிப்படும் சக்தியில் தான்
2.அச்சக்திக்கே சக்தி கிடைக்கின்றது.

மனித இன வாழ்க்கையின் எண்ணத்தின் உணர்வு நிலைக்கொப்ப ஒன்றுடன் ஒன்று இந்த எண்ணத்தின் செயல் இணையும் பொழுது தான் படைப்பு முழுமையாகின்றது.

பாவாகவும் ஊடையாகவும் நூற்பு நெய்யப்படும் துணியைப் போல் இரண்டு நிலைக்குள்ள எண்ணங்கள் ஒன்றாக இணைந்து மோதுண்டு இந்தத் தாம்பத்ய எண்ண உணர்வில் அமில பிம்ப சிவ ஊடைக்கு சக்தி ஈர்ப்புப் பாவாய் இந்தத் தாம்பத்ய நிலை அமைந்து
1.பெண்மையின் உயர் வழியைச் செயல் கொள்ளும் ஆண்மையின் நிலையில் தான்
2.இந்தப் பூமியின் உயர் ஞானங்களும் சித்து நிலைகளும் சப்தரிஷியின் நிலையும் உருவானதே…!

August 26, 2021

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இயக்கம்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகளை யாம் (ஞானகுரு) மீண்டும் மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது

1.அதுவே அந்த உணர்வின் இயக்கமாக இங்கே என்னைப் பேச வைப்பதும்... பேசுவதும்...!
2.உணர்வலைகளை ஒலி பரப்புவதும்... அதை நீங்கள் கேட்டு உணர்வதும்
3.அந்த குரு அருள் உங்களுக்குள் பதிந்து கொண்டிருப்பதும்...!

நஞ்சு பரவிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் யார் எதுவாக இருப்பினும் இந்த உடல் எவ்வாறு ஆனாலும் உடல் நமக்குச் சொந்தமல்ல... இந்தப் பூமியும் சொந்தமல்ல.

குரு காட்டிய வழியில் நாம் நடக்கும் போது விண்ணுலக ஆற்றல் நமக்குச் சொந்தம் ஆகின்றது... இந்தப் பூமியும் சொந்தமாகிறது... இந்த உடலும் நமக்கு இன்று சொந்தமாக இருக்கின்றது.

மனிதனான பின் சொந்தமாக்க வேண்டியது எது என்பதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குச் சொந்தமாக்கி அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி அவர் விண்ணுலகம் சென்றது போன்று நாமும் அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்று ஒளியின் உணர்வாக மாற்றுவதே நமக்குச் சொந்தம்.

பேரின்பப் பெரு வாழ்வாக என்றும் அழியா ஒளிச் சரீரம் பெறுவதே நமது கடைசி நிலை. அதன் வழிகளில் குரு காட்டிய பேரன்பை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இது அனைத்தும் நான் பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் உரு செய்து பதிவாக்கினார். அவர் தனக்குள் எதைப் பெற்றாரோ அதைப் பெறும் பாக்கியத்தை எனக்கும் ஏற்படுத்தினார்.

அவர் காட்டிய உணர்வு வழி செல்லப்படும் பொழுது அந்த அருள் உணர்வினை உணர முடிகின்றது.
1.அதே உணர்வின் ஒலிகள் தான் இங்கே எழுப்பப்படுகின்றது
2.உணர்வின் அலைகள் உங்களுக்குள் படுகின்றது
3.அந்த அலையின் தன்மையை நீங்கள் ஈர்க்கின்றீர்கள்
4.குரு அருளின் உணர்வின் தன்மை உங்களுக்குள் பதிவாகின்றது
5.அந்தப் பதிவின் நிலைகள் உங்களுக்குள் குருவாகின்றது
6.குருவின் தன்மை நினைவாக்கப்படும் பொழுது அந்த அலையின் தொடர் கொண்டு
7.பேரின்பப் பெரு வாழ்வு வாழும் நிலையை நீங்களும் அடைகிறீர்கள்.

நீங்கள் அதை அடைய வேண்டும் என்று தான் எனது பிரார்த்தனையே. அந்த எண்ணத்துடன் தான் குருவை வேண்டுகின்றேன். அவரை வேண்டி அந்த உணர்வுகளை எடுக்கப்படும் போது நீங்களும் அதைப் பெற்றால் உங்களுக்குள் மகிழ்ச்சி தோன்றும்.

நீங்கள் மகிழ்ச்சியானால் எனக்கும் அந்தப் பேரின்ப வாழ்வு கிடைக்கும்.

ஆகவே குருநாதர் பெற்ற நிலைகளைத் தியானித்து அந்த அருள் உணர்வுகளை எனக்குள் சேமித்து நீங்கள் எல்லாம் அதைப் பெற வேண்டும் என்பதற்காக நான் (ஞானகுரு) சதா தவமிருக்கின்றேன்.

அந்த தவத்தின் பலனை நீங்கள் பெற்று
1.மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்லும் பொழுது
2.அது எனக்கும் சொந்தம் ஆகின்றது உங்களுக்கும் சொந்தமாகிறது.
3.நாம் அனைவரும் அந்த மகரிஷிகள் வாழும் அருள் வட்டத்திற்குள் செல்வோம்.

அவர்களின் அருள் வட்டத்திற்குள் நாம் செல்ல வேண்டுமென்றால் நம் முன்னோர்களின் உயிரான்மாக்களை விண்ணில் செலுத்த வேண்டும்... செலுத்துவோம்...!

ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எய்துகிறார்களா…? - ஈஸ்வரபட்டர்

 

தாய் தந்தையரின் அன்பில் உருவாக்கப்பட்டு அறிவின் ஞானமும் நல்லொழுக்க உயர் மகனாக வளர்க்கப்பட்ட தன் மகனுக்கு அவனது வளர்ச்சியின் வம்சம் வளர பெண்மையின் சக்தி கூடி தன் மகனின் வாழ்க்கையின் நிறைவில் தாய் தந்தையர் பூரிப்பு காண்கின்றனர்.

1.பெண்மை எது ஆண்மை எது..?
2.உயர் சக்தியின் தன்மை எது…?
3.படைப்பின் படைப்பில் முன் ஜென்மத் தொடர் அறியும் முறையில் ஆரம்ப வளர்ச்சி முறைதான் வளர்ந்ததா…?
4.பெண்ணாகப் பிறவி எடுத்து முற்பிறவி இப்பிறவி எப்பிறப்பிலும் பெண்ணாகவும்
5.ஆண் ஆணாகவும் தான் பிறவி எடுக்கின்றனரா…?
6.பிறவியின் தொடர் வழிப்படும் முறை என்ன…?

பின்னிப் பின்னி வரும் தொடர் வளர்ச்சி நிலையில் ஆவியாகிப் பிம்பமாகி… மீண்டும் ஆவியாகிப் பிம்பமாகும் வழித் தொடர்தான் இயற்கையின் நியதி.

ஓர் ஆத்மா பிறப்பெடுத்து அப்பிறவி மாறி ஆவியான நிலையில் அந்த ஆவியின் உணர்வு அமில குணத்தின் ஈர்ப்பு எண்ணம் ஆண் உணர்வுடன் ஆணின் ஈர்ப்பில் அந்த உயிர் ஆவி சிக்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.

ஆக அந்த ஆண்மைக்குகந்த அமிலத்துடன் கலக்கப் பெற்று அவ்வீர்ப்பின் வித்தாக ஜீவன் கொள்ளும் ஜீவக் கருவிற்கு ஆண் வித்தின் அமில ஈர்ப்பின் வீரிய குணமுடன் பெண்ணின் ஆவி உயிர் சென்றிருந்தாலும் சரி.. அல்லது ஆணின் ஜீவ பிம்பமுடன் உள்ளவரின் உயிர் சென்றிருந்தாலும் சரி…!

அந்த ஆண் மகனின் அவ்வமில வித்தின் ஜீவ சக்தி அதிகமாக வளர்க்கும் அமில வளர்ச்சி உதிரமுடன் உருவாகும் நிலையிருந்தால்
1.முன் ஜென்ம பெண் ஆவி உயிரே
2.இவ் ஆணின் ஈர்ப்பில் சிக்கி
3.ஆண் உயிர் வித்தாக பெண் அமிலச் சேர்க்கையில் ஜீவன் கொள்கின்றது.

வாழ்ந்த நாளில் மகன் மகள் சகோதரன் சகோதரி இப்படிப் பந்தபாசத்தில் உள்ளவரும் எண்ணத்தில் ஒரு நிலையான உணர்வு நிலையில் ஆண் சுவாசமுடன் ஆணின் உடலில் ஏறும் எவ்வுயிர் அணுவாக இருந்தாலும்
1.ஆண் பெண் என்ற நிலை மாறி இவ்வீர்ப்பிற்கு வந்த நிலையில்
2.ஆணின் உதிர அமில ஜீவ சக்தியின் வளர்ச்சிகொப்ப ஆணாகவும் பெண்ணாகவும்
3.ஜீவிதம் கொண்ட பிறப்பெடுக்க முடிகின்றது.

இந்நிலை கொண்டு தான் பெண்ணின் ஈர்ப்பிற்கு வரும் ஆண் பெண் என்ற எவ்வாவி உயிரணுவாக இருந்தாலும் இப்பெண்ணின் ஈர்ப்பின் வீரியம் கொண்ட உணர்வு எண்ணமுடன் அவ்வுடலின் ஈர்ப்பில் சிக்குண்டுள்ள அவ்வாவி உயிர் அணு என்ன செய்யும்…?

பெண் ஆண் என்ற தன் உணர்வு மாறி எந்தத் தாயின் ஈர்ப்பில் வளர்ச்சிக்கு வந்ததோ அதன் நிலையினால் பெண் ஆண் என்ற முந்தைய ஜென்ம முறை
1.ஒவ்வொரு ஜென்ம நிலையிலும் இவ்வீர்ப்பு ஜெனன உணர்வு நாளில்
2.இவ் ஆண் பெண்ணின் உணர்வு ஜீவித ஈர்ப்பு வளர்ச்சி அதிகம் கொண்டவர்களின் அமில நிலைக்கொப்ப
3.பெண் கருவாகவும் ஆண் கருவாகவும் அவதரிக்கும் நாளில்
4.ஆண் பெண்ணின் ஜீவ உயிரணு ஈர்ப்பின் விகித நிலைக்கொப்பத்தான்
5.அஜ்ஜீவன் ஆணாகவும் பெண்ணாகவும் உருவாகின்றது.

முந்தைய கால உணர்வு எண்ணமானது ஆவி உயிரணுவின் நிலையில் உருவாகும் ஜீவ சக்தி கரு வளர்ச்சி நாளில் தான் ஒவ்வொரு ஜென்மக் கருவும் ஆண் பெண் என்ற உருவ நிலை கொள்கின்றது.

ஆணின் உணர்வு எண்ண அமிலமும் பெண்ணின் உணர்வு எண்ண அமிலமும் மாறு கொள்கின்றது. பெண்ணின் உடலில் உருவாகும் ஜீவ சக்திக்கு உயிரணுக்களின் வளர்ச்சியை வளர்க்கும் ஈர்ப்புக் குண ஜீவ சக்தி அதிகமுண்டு.

எவ்வுடலின்… எவ்வமில ஜீவித உணர்வு உயிரணு வளர்க்கும் தன்மை அதிகமுள்ளதோ… அவ்வீர்ப்பின் நிலைக்கொப்ப பெண் ஆண் என்ற உருவ பிம்ப உணர்வு ஜீவ கரு உருவாகின்றது.

மனிதனின் ஜீவ கரு உயிரணுவின் வளர்ச்சித் தன்மை கொண்ட இனத் தாவரங்கள் சில உண்டு. மனிதனின் ஜீவ சக்திக்கு உகந்த சக்தி குணம் மாங்கனிக்கு உண்டு.

மாங்கனியின் கொட்டையை அம்மரத்தின் கனி எவ்வளவு சுவையாக இருந்தாலும் அம்மரத்தின் கொட்டைய நாம் பயிர் செய்தால் அம்மரம் விட்ட கொட்டையில் வளர்த்த மரத்தின் கனியின் சுவையை உண்டு பார்த்தால் “தாய் மரத்தின் கனிச் சுவை சேய் மரத்தின் கனிச் சுவைக்கு இருக்காது…”

தாய் மரத்தின் கொட்டையை எடுத்து வளர்க்க விட்டு அவ்வளர்த்த வித்துச் செடியுடன் தாய் மரத்தின் கிளையை ஒட்டுச் சேர்த்து ஒட்டு மரமாக வளரும் மாங்கனியின் சுவை தாய் மரத்தின் கனியைக் காட்டிலும் சேய் மரத்தின் தாய் மரத்துடன் ஒட்டுச் சேர்த்து வளர்த்த கனியின் சுவை தாய் மரத்தின் சுவையைக் காட்டிலும் நற்சுவையாக இருக்கும்.

ஒன்றின் துணை கொண்டு ஒன்றாக உருவாகும் உணர்வின் எண்ண ஈர்ப்பு நிலைக்கொப்பத்தான் ஆண் பெண் என்ற நிலை உருவாகி வளர்கின்றதப்பா…!

1.வளர்ப்பின் வளர்ப்பாகி…
2.ஆவியாகி பிம்பமாகி ஆவியாகும் செயல் சுழற்சியின்
3.ஈர்ப்பின் உணர்வு உயர் நிலை வளரும் நிலைக்கொப்பத்தான்
4.வளர்ச்சியின் தொடர் வளர்ச்சி… வளரும் ஈர்ப்புத் தன்மை உருவாகின்றது.

August 25, 2021

தியானத்தின் மூலம் வலுவுக்கு வலு சேர்க்கும் முறை

 

அந்த மகரிஷிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளைப் பெறவேண்டும் என்றால் கண்ணின் நினைவு கொண்டு நினைவாற்றலை மகரிஷிகளின் பால் கொண்டு சென்று அதைக் கவர்ந்து கொண்டால் தான் நம் உடலுக்குள் செலுத்தி அணுக்களாக உருவாகிக் கொண்டிருக்கும் கருவிற்குள் உபதேசிக்க முடியும்.

(கண்ணன் கருவிலிருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்று சொல்வார்கள்)

இங்கே நான் (ஞானகுரு) உபதேசம் கொடுத்துக் கொண்டிருந்தாலும்
1.உங்கள் நினைவலைகள் வேறு பக்கம் இருந்தால் இது பதிவாகாது.
2.எம்முடைய உபதேசத்தை நீங்கள் கேட்கும் அந்தச் சமயம் எந்த நினைவு கொண்டு வருகின்றீர்களோ…
3.கண்ணன் கண்கள் உங்களுக்கு அந்த உபதேசத்தைத்தான் கொடுப்பான்.

இப்படி எல்லாம் பல நினைவுகள் வருவதனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னை என்ன செய்தார்…?

இவனைச் சும்மா விடக் கூடாது என்பதற்காகத்தான் எறும்புப் புற்றுக்குள்ளேயும் காட்டுக்குள்ளேயும் கொண்டு போய் பல இன்னல்களை ஏற்படுத்தினார்.

அப்பொழுது எனக்கு வீட்டு நினைவு எங்கே வருகிறது…? எப்படி வீட்டு நினைவு வரும்…?
வசமாகக் கொண்டு போய்ச் சிக்க வைத்துவிடுவார்.

காட்டுக்குள்ளே “செந்தேள்…!” ஒன்று இருக்கிறது. அது கொட்டியதென்றால் எப்படித் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. மிளகாயைப் போட்டு அரைத்துத் தேய்த்தால் எப்படி இருக்கும் எரிச்சல்…! அதே போல இருக்கும்.

அதை என்னைக் கொட்ட வைத்தார். அது கொட்டினவுடனே, ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று துடித்துக் கொண்டு இருப்பேன். கொஞ்ச நேரத்தில் பார்த்தால் “விண்… விண்…” என்று வலி இருக்கும்.

“ஈஸ்வரா…” என்று சொல்லுடா…! என்பார். ஆனால் ஈஸ்வரா…! என்று சொல்ல எனக்கு வராது. ஈஸ்வரா என்று சொல்லும் பொழுது ஐய்யய்யோ… ஐய்யய்யோ என்று தான் அலறிக் கொண்டு இருப்பேன்.

விஷம் எந்த அளவுக்கு ஏறியதோ அந்த அளவுக்கு நான் அலறும் பொழுது உன்னுடைய நல்ல குணங்கள் எல்லாம் எங்கேடா போனது…? என்று கேட்பார் குருநாதர்.

எல்லாருக்கும் நல்லது செய்தாய்…! நல்லது செய்த அந்த நல்ல குணங்கள் எல்லாம் எங்கே போனது…? இந்த விஷத்தைக் கண்டது அது ஓடி ஒளிந்து விட்டது அல்லவா…! என்று அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

இதற்காகத்தான் இராமாயணத்தில் வாலியைக் காட்டுகின்றார்கள்.

ஆனால் வாலியை இராமன் மறைந்திருந்து தான் தாக்கினான். நேராகத் தாக்கவில்லை…!
ஏன்…?

நமக்குள் வேதனை வந்தாலும்… அது நம்மைத் தாக்கினாலும்.. நம்முடைய நினைவு அந்த வேதனையின் மீது இருக்கக்கூடாது.

உதாரணமாக ஒரு புலி வருகிறது என்று எண்ணிப் பாருங்கள்…! புலி வருகிறதா..!. என்று எண்ணிய உடனே கிடு…கிடு…வென நடுங்குவோம்.

நாம் இருக்கும் இந்தப் பக்கம் ஒரு போக்கிரி வருகிறான். பார்ப்பவரை எல்லாம் எல்லாம் அடிக்கிறான்… உதைக்கிறான் என்று சொன்னால் போதும்.

இங்கே நமக்குக் கிடு…கிடு…வென்று வரும்.

அப்பொழுது அந்த நேரத்தில் நம் வலு எல்லாம் எங்கே போகிறது…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

”போக்கிரி…” என்று சொன்னவுடனே நம் வலு அனைத்தும் அவனிடத்தில் போகிறது. நம் நிலை எல்லாம் அங்கே போய்விடுகிறது.

வாலி என்ன செய்கிறான்…? அவனுக்கு நேராக நின்றால் (நம்முடைய) சம பலத்தை எடுத்துக் கொள்கிறான். இராமாயணத்தில் வான்மீகி மாமகரிஷி மிகவும் தெளிவாகவே இதைக் காட்டுகின்றார்.

நம்மிடம் இருக்கும் நல்ல குணத்தின் வலு இழந்தபின் அடுத்து நாம் எதை எடுக்க முடியும்… முடியாது.

1.அதற்காக வேண்டித் தான் நம் கண்கள் செல்லும் வழியில் (கண்ணன் சொல்லும் வழியில்)
2.புருவ மத்தியில் ஈஸ்வரா என்று நம் உயிரை எண்ணி
3.அவனை (போக்கிரியின் உணர்வை) நேரடியாகத் தாக்காதபடி
4.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
5.எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் அந்த உபதேசத்தைச் செய்ய வேண்டும்.
மகரிஷிகளின் அருள் ஒளியை நமக்குள் கூட்டிக் கொண்டு என்று நம் உடலில் இந்த வாசனையை அதிகமாகப் பரவச் செய்து கொள்ள வேண்டும்.

அப்பொழுது அவனை எண்ணும் பொழுது (முதலில்) நமக்கு எப்படி நடுக்கம் வருகின்றதோ… அதே மாதிரி
1.“அவன் நம்மை எண்ணும் பொழுது..”
2.மறைமுகமாக நாம் பரவச் செய்த மகரிஷிகளின் உணர்வை அவன் நுகர்ந்தால்
3.அது அவனுக்குள் போய் அவனிடத்தில் இருக்கும் அந்த வீரியத் தன்மையை குறைக்கும்… “தடுமாறச் செய்யும்….!”

ஏனென்றால் அவன் உணர்வைக் காட்டிலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நாம் இதை எண்ணும் பொழுது
1.நம்மைத் தாக்க வேண்டும் என்று எண்ணினால் நம்மைப் பார்த்ததும்
2.நம் நினைவுகள் அவனுக்குள் குபு…குபு… என்று போய் அவன் உணர்வு அனைத்தையும் மாற்றிவிடும்…!

செய்து பாருங்கள்.

August 24, 2021

வீர குணத்துடன் தியானிக்க வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

ஈர்ப்புத் தன்மையின் வளர்ச்சித் தொடரில் ஆணாகவோ பெண்ணாகவோ உருவாகி வளர்ந்து ஒவ்வொரு ஜென்மங்களும் எடுக்கும் கருவில் உருவ பிம்ப உணர்வு எண்ண வாழ்க்கை முறையில்
1.இவ்வெண்ணத்தை எப்படி வழி நடத்துகின்றோமோ - அவ்வழியின் நிலைக்கொப்ப குண நலன்கள்
2.பிம்ப உடலின் கூட்டு அமிலமுடன் ஜீவ சக்தியுடன் கூடிய சுவாசத்தால்
3.உடல் அமில விகித நிலையும் ஒவ்வொரு பிறவியிலும் மாறுடுகின்றது.

ஆனால் மனித எண்ண பிம்ப உடலில் தான் செயலாற்றும் திறமையும் சொல் வடிவ உணர்வலைகளும் உள்ளது.

இந்த உடல் அமிலக்கூட்டையே உணர்வின் எண்ணத்தால் தாக்கப்படும் எந்த ஒரு குண நிலையையும் சமமான நிலைப்படுத்திச் செயல்படக்கூடிய தன்மை இவ்வெண்ணத்தால் வழிப்படுத்தும் முறை கொண்டு செயல்படுத்த முடியும்.

வாழ்க்கையில் நம்மை எதிர்கொள்ளும் மனித பிம்பத்தை விட்டுப் பிரிந்த ஆவி நிலை கொண்டோரின் அலையிலிருந்து இவ்வுடல் பிம்ப எண்ணத்தில் ஈர்க்கப்படும் உணர்வு நிலையை
1.எண்ணத்தால் சமப்படுத்தும் நிலை பெற்றுவிட்டால்
2.இவ்வெண்ண பலத்தினால் எந்தச் செயலையும் செயலாக்க முடியும்.

வீரமான உணர்வுகளையும் அவ்வீரத்தின் உயர் ஆற்றலையும் கொண்டு
1.நம்மை வந்து மோதும் எந்தத் தீய செயலையும்
2.நாம் எடுக்கும் எண்ணத்தின் பார்வை கொண்டே நம்மை அவை வந்து தாக்காமல்
3.நம் உணர்வின் சுவாசம் பட்ட நிலையிலேயே அந்தத் தீய சக்தியைப் பார்வையாலேயே மாற்ற முடியும்.

எண்ணத்தால் எடுக்கும் ஜெபத்தின் வீரிய… வீரச் செயல்… தன்மை இருந்தால் அதே சமயத்தில் நம்முள் உள்ள அமிலக் கலவையின் கூட்டு
1.நற்குண வழித் தொடர் பெற்றிருக்குங்கால்
2.இவ்வீரிய வீர உணர்வாக எந்த நிலையையும் நாம் பெற முடியும்.

அன்பு பாசம் ஞானம் அனைத்தும் நமக்கு வேண்டியது தான்…!

ஆனால் அனைத்துச் சக்திகளையும் சாந்தமுடன் சுழலவிடும் ஜெபத்தினால் இவ்வாழ்க்கை என்ற நிறைவுக் குணத்துடன் மட்டும் தான் சுழல முடியும்.

ஆக… வீரத்தின்… வீர சக்தித் துடிப்பு உணர்வின் செயல் கொள்ளும் செயல் நிலையை… இவ்வுடல் என்ற அமிலக் கூட்டிலேயே வீரியம் கொள்ள வேண்டும்.

1.வீரத்தின் வீரிய செயல் குணத் துடிப்பு உணர்வால் உந்தப்படும் இவ்வெண்ணத்தின் ஈர்ப்பலையை
2.உயர்ந்த ஜெப சக்தியின் தொடர்பு கொண்டு
3.சித்தர்கள் சப்தரிஷிகள் ஆகியோரின் உணர்வுடன் ஒன்றப்படும் செயலினால்
4.இம்மனித பிம்ப உடல் சக்தி தான் தெய்வ சக்தியாகின்றது.

ஆவலும்… ஆவலுக்குகந்த ஆசை விரமும்… உணர்வால் ஜெபமுடன் கூடிய அறிவும்… ஞான வழித் தொடரில் செலுத்தி அவ்வழியினில் நாம் சென்றோமானால்
1.நாம் செல்லும் அந்த வேகம் கொண்டு
2.நம் சுழற்சியுடன் நம்மை வழி நடத்திச் செல்லும் குருவின் நிலைக்கே
3.நம் செயலைக் கொண்டு சுழற்சியின் சக்தி வேகம் அதிகம் கொள்ளும்.

அறியும் அறிவாற்றல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டுமப்பா…!

இவ்வாழ்க்கை இன்பம் துன்பம் என்ற சுழற்சியின் கதியிலேயே எண்ணத்தைச் சமப்படுத்தி உண்டோம்… உறங்கினோம்… வாழ்ந்தோம்…! என்ற குறுகிய சுழற்சியில் இருக்கக் கூடாது.

எந்த நல்ல குணத்தின் சக்தியை நாம் பெற்றிருந்தாலும் அறிவோம்…! “ஹரிநாராயணா…” என்ற உண்மை நாமத்தின் வழித் தொடர் ஜெப நாமத்துடன் நம் செயல் சுழன்று கொண்டேயிருக்க வேண்டும்.

ஹரி ஓ…ம் (அறிவோம்) எதனையும் நாம் அறிந்து கொண்டேயிருப்போம். ஹரி நாராயணா… ஹரே… படைப்பின் படைப்பு நாராயணா…!
1.உன் படைப்பையே நான் அறிய
2.படைக்கப்பட்ட படைப்பையே அறிந்து படைக்க வருகின்றேன் என்ற
3.அறிவோம்…! என்ற வீர உணர்வு சுழற்சியின் செயல் வளர்ச்சியில்
4.ஞானச் செயல் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

காலத்தின் மாற்றமும் உருவத்தின் மாற்றமும் மாறிக் கொண்டே தான் உள்ளது ஒவ்வொரு நொடிக்குமே.

இந்தச் சுழற்சியின் சுழற்சியாகச் சிக்குண்டு கிடைக்க முடியாத பாக்கியமாக மனித உருவத்தை எடுத்துள்ள நாம் இவ்வுருவத்தின் ஜீவத் துடிப்பு சக்தியைக் கொண்டு தான் எந்தச் சக்தியையும் பெற முடியும் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்.

இந்த உடல் பிம்ப உணர்வு எண்ணத்தையே
1.“வீரம்…” என்ற உயர் சக்தியின் வீரிய குணமாக… நம் குணத்தை ஜெபம் கொண்டு
2.மகரிஷிகளின்பால் நம் எண்ணத்தைச் செலுத்தி
3.நாம் எடுக்கும் தியானத்தால் பல உன்னத நிலைகளைப் பெறலாம்.

ஆறாவது அறிவிலிருந்து ஏழாவது அறிவுக்குத் தான் நாம் செல்ல வேண்டும்... ஐந்துக்கு அல்ல...!

 

தாவர இனங்களுக்கெல்லாம் ஐந்து புலனறிவு தான்.
1.அந்தச் செடி கொடிகளை வேக வைக்காமல் சாப்பிடும் எந்த உயிரினமானாலும் மிருகமானாலும்
2அந்த உணர்வின் சத்தாக அதற்குள் இயங்கி அது எண்ணமாகி
3.அதே ஐந்து புலனறிவாகத் தான் அதுவும் இயங்கும்.

ஒரு வேப்பமரம் கசப்பின் சத்தை அதைத் தன் உணர்வால் கவர்ந்து வளர்வது போல... ஒரு மாடோ மற்ற மிருகமோ எந்தச் செடியை அது நுகர்ந்து தன் உணர்வால் எடுத்துக் கொண்டதோ அதை நுகர்ந்து பார்த்து... தன் இனமான சத்தை அது வளர்ந்து அது உணவாக உட்கொள்ளும்.

அது உணவாக உட்கொண்டாலும் அது உடலில் கருவாகி அதனின் குட்டியாகப் படும்பொழுது இது எந்தெந்த உணர்வின் உணவை அது உட்கொண்டதோ அந்த உணர்வின் சத்து கருவிலே விளையும் அந்த கருவுக்குள் ஊன்றி அது ஈன்ற பின் இந்தத் தாய் அதற்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

தன் உடலில் எத்தகைய உணர்வுகள் தாய் அதை உணவாக உட்கொண்டதோ அதனுடைய கன்றும் இது பிறந்த பின் அது வளர வளர இந்தத் தாய் எந்தெந்த ஆகாரத்தைச் சாப்பிட்டதோ அந்த ஆகாரத்தை இந்தக் கன்றும் சாப்பிட ஆரம்பிக்கும்.
1.அந்தத் தாய் வயிற்றிலே விளைந்த இந்தக் கருவின் உணர்வுகள் கொண்டுதான் இந்தக் கன்றும் உணவாக எடுக்கும்.
2.புதிதாக நாம் எதைப் போட்டாலும் அது எடுக்காது.

இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நாம் நல்லவைகளை எண்ணினாலும் அதற்குள் நஞ்சான அசுர உணர்வுகள் புகுந்து விடுகிறது.

நமக்குள் புகுந்து நரக வேதனையாகச் செயல்படுத்தும் இந்த அசுரனை நீக்கத்தான் “கண்ணன் அசுரனைக் கொல்ல உபாயத்தைக் கொடுத்தான்...” என்று காவியங்கள் காட்டுகின்றது.

காரணம்... யாரை உற்றுப் பார்த்து “நம்மை வேதனைப்படுத்துகிறார்...” என்று எண்ணுகிறோமோ அவருடைய வேதனைப்படுத்தும் உணர்வுகள் நமக்குள் வருகின்றது.

1.எந்த வேதனை அவர்கள் உடலில் வித்தாக (வினையாக) உருவானதோ
2.அவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை நாம் கேட்டறிந்து நுகரும் போது
3.நம் உடலிலே விளைந்தது நமக்குள் வித்தாக ஊன்றி விட்டால்
4.அவரை மீண்டும் மீண்டும் நினைக்கச் செய்து
5.நம்மை எப்படிக் கெட்டுப் போக வேண்டும் என்று எண்ணினாரோ எத்தகைய தவறு நிகழ வேண்டும் என்று எண்ணினாரோ
6.அந்த உணர்வுகள் அனைத்தும் நமக்குள் வந்து நம் நல்ல குணங்களைச் செயல்படுத்தாதபடி
7.நமக்குள் வேதனைப்படும் நிலையாக நரகலோகத்தை நமக்குள் பெருக்கிக் கொண்டே போகும்.

இப்படி அந்த அசுரன் (வேதனைப்படுத்தும் உணர்வு) நமக்குள் சென்றாலும்
1.நம் உயிரான விஷ்ணு அதற்கு வரம் கொடுப்பதும்… எண்ணியதை இயக்கச் சக்தியாகப் பிரணவமாக்கி ஜீவனாக்கச் செய்வதும்
2.அதன் வழியிலே பிரம்மமாகி (பிரம்மா) சிருஷ்டிப்பதும்
3.சிருஷ்டித்த உணர்வுகள் நம் உடலாகச் சிவமாக்குவதும்
4.நாம் எண்ணியது அனைத்தும் உருவாகும் இடமாக இந்தச் சிவலோகத்திற்குள் இந்திரலோகமாக
5.இதைச் சித்தரித்துத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையில் நாம் எத்தனையோ வேதனைகளைக் கடந்து அந்த வேதனையை நீக்கிடும் ஆற்றல் மிகுந்த சக்தியாகப் பெற்றுத் தான் வந்திருக்கின்றோம்.

எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அதை உருவாக்கும் ஆற்றல் பெற்றவன் என்று “மனிதனின் ஆறாவது அறிவைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்...”

1.அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.நாம் செய்யும் நன்மைக்குள் புகும் தீமையான உணர்வுகளை வேக வைத்து அதன் செயலாக்கங்களை வீழ்த்தி
3.நல்லதைக் காக்கும் சக்தியாகச் செயல்பட வேண்டும்
4.ஏழாவது நிலையான ஒளியாக மாற்ற வேண்டும் என்பதே ஞானிகள் நமக்கு உரைத்தது.

ஆண்டவன் நாமத்தை ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி - ஈஸ்வரபட்டர்

 

அறிவு மார்க்கம் பக்தி மார்க்கம் சித்து மார்க்கம் இப்படி ஒவ்வொரு வழியினரும் ஞானத்தை மனிதனுக்குகந்த மார்க்கமாகத்தான் உணர்த்துகின்றனர்… உணர்கின்றனர்.

ஞானம் என்பது மனிதனுக்கு மட்டும் தான் உண்டு. மிருகங்களுக்கு ஞானம் இல்லை…! என்கிறான் மனிதன். அறிவு மட்டும் மிருகத்திற்குண்டு. பகுத்தறியும் நிலை கொண்ட மனிதனுக்கு ஞானம் உண்டு என்று உணர்த்துகின்றான்.

1.அறிவு-கூர்மை
2.அறிதல்-தெரிந்து கொள்வோம் என்ற ஆர்வம்
3.அறிவோம்-அறிவின் ஆற்றலைச் செயல்படுத்தச் செல்லும் வழி.

எறும்பு அதற்குகந்த அறிவைக் கொண்டு ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? தனக்கு வேண்டிய ஆகாரத்தை அறிவைக் கொண்டு அறிகின்றது.

தன் செயலைக் கொண்டு அவ்வுணவைச் சேமிக்க மண்ணைப் பறித்து அவ்வுணவை அதில் சேமித்து பிறருக்குத் தெரியாவண்ணம் பாதுகாக்கின்றது.
1.அறிவைக் கொண்டு செயல்படுத்தி
2.தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பாதுகாக்கும் எறும்பிற்கு ஞானமில்லையா…?

ஒவ்வொரு சிறு பிராணியும் தனக்குகந்த அறிவின் ஞானத்தைச் செயல் கொண்டுதான் ஜீவிக்கின்றது. மனிதனைக் காட்டிலும் அறிவும் ஞானமும் சில மிருகங்களிடம் உண்டு.

ஆனால் அதற்குகந்த அங்க அவயங்களும் சொல் வெளிப்படுத்தும் ஒலி பாஷையும் இல்லாததனால் உணர்வின் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தக்கூடிய பகுத்தறியும் ஞானம் இல்லை.

அறிவின் செயல் ஞானமுண்டு. உயர் ஞானத்தை உணர்வின் தன்மையை மாற்றியமைத்துச் சக்தி கொள்ளக்கூடிய ஞானத்தின் வளர்ச்சி அங்கில்லை.

இந்த ஞானத்தைச் செயலாக்கி ஒன்றுடன் ஒன்று சேர்த்து பிறிதொன்றின் கூட்டமைக்க மனிதனின் ஞானத்திற்குச் செயல் திறமை சொல்லாற்றல் இவை உண்டு.

இந்த ஞானத்தின் உயர் ஞானம் கொள்ளத்தான் பக்தி மார்க்கம்… சித்து மார்க்கம்… யோக மார்க்கம்…! என்றெல்லாம் இந்த மனித உடலின் உணர்வை எண்ணத்தால் ஒருநிலைப்படுத்தி ஜெபம் என்று வழிப்படுத்துகிறார்கள்.

ஒவ்வொருவரும் அறிந்த ஒவ்வொரு மந்திரச் சொற்களைச் சொல்லி உயர் ஞானத்தைப் பெற்று ஆண்டவனிடம் முக்தி பெறும் மார்க்கத்தை இவ்யோக சாதனையால் உணர்வைக் கட்டுப்படுத்தி சுவாசத்தை ஒவ்வொருவரும் தான்… தான்… அறிந்த மார்க்கங்களை உணர்த்துகின்றார்கள்.

1.பக்தியினால் ஞானம் கொண்டு
2.சக்தியினால் உணர்வை ஒரு நிலை கொண்டு
3.எண்ணத்தால் உயர் ஞானத்தின் அலையை நாம் செயல்படுத்த
4.நற்குணங்களின் அலைத்தொடரில் இந்த ஞானத்தைச் செலுத்தி அந்த ஞானச் செயலாக நாம் ஒன்றாகலாம்.

இயற்கையின் படைப்பில் உயிரணுத் தோன்றி உருவாய் உருவமாக உருக்கொண்டு இயற்கைச் சுவாச முறையை மாற்றியமைத்துச் சகல சித்து நிலை பெறுவதல்ல…! உயர்ந்த ஞான சக்தியின் வழித் தொடர் பெறுவதற்கு.

இந்த ஞானம் கோபத்தில் உள்ளவனுக்கும் துணை செல்கிறது... திருடனுக்கும் துணை செல்கிறது… வஞ்சகனுக்கும் துணை செல்கிறது.. பெரும் காமுகனுக்கும் துணை செல்கின்றது.

அவரவர்கள் அறியும் அறிவின் செயலைச் செய்விப்பதே ஞானம் தான்.
1.ஞானத்தைப் பகுத்தறியும் உயர் ஞானமாக்கி
2.உயரக்கூடிய நிலைக்கு உயர் ஞானமாக்கி “ஞானியாகுங்கள்…!”

நற்குணங்களின் படைப்பை ஞானத்தின் சாந்தம் கொண்டு “மனிதனும் தேவனாகலாம்…!” என்று சித்தர்கள் உணர்த்திய முறை இதுவே.

உணர்வின் எண்ணத்தை “ஆண்டவனின் நாமத்தை” ஜெபித்து வருவதல்ல தெய்வ சக்தி…!
1.உணர்வின் எண்ணத்தை நற்குணங்களின் அமிலமாக
2.நாம் வளர்க்கும் செயல் முறை ஞானம் தான் மனிதன் தெய்வமாகும் முறை.

August 23, 2021

நரகாசுரன் என்பவன் யார்...!

 

ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணத்தை எண்ணும் பொழுது அதை நமது கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி சுவாசிக்கச் செய்து அது நம் உயிரிலே பட்டு இயக்கப்படும் பொழுது ஓ... என்று பிரணவமாக்கி ம்... என்று நம் உடலாக ஆகிறது.
1.அது தான் இந்திரன். இந்திரன் என்றால் விந்து என்று பொருள்.
2.அது நமக்குள் கருவாகி உருவாகும் சக்தியாக அது உருப்பெறுகிறது.

நாம் எண்ணியதைச் சுவாசிக்கப்படும் போது நமது உயிர் அதை இயக்குகின்றது. உயிருக்குள் எப்பொழுதும் துடிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே உள்ளது.

உயிர் ஈசன் என்றால் துடிப்பினால் ஏற்படும் வெப்பம் விஷ்ணு. ஆகவே அந்த இயக்கத்திற்குள் ஏற்படும் வெப்பம் (விஷ்ணு) சுவாசித்த உணர்வுக்கு வரம் கொடுத்து விட்டான் என்று பொருள்.

அசுரன் எனக்கு எதிலுமே இறப்பு வரக்கூடாது என்ற நிலையில் அவன் விஷ்ணுவிடம் வரம் வாங்கிக் கொண்டான். எதிலேயுமே இறப்பில்லாத நிலைகள் என்றால் அதனின் உட்பொருள் என்ன...?

ஒருவன் நல்ல செயல்களைச் செயல்படுத்துகின்றான். இருப்பினும் பிறிதொருவர் வேதனைப்படுவதைப் பார்க்க நேருகிறது. அவனின் கண்களான கண்ணன் “அவன் வேதனைப்படுகிறான்” என்ற உண்மையை உணர்த்துகின்றது.

ஆனால் கண் பார்த்து அவன் உடலிலிருந்து வரக்கூடிய வேதனையான உணர்வைச் சுவாசிக்கும்போது அந்த நேரத்தில் விஷ்ணுவான உயிர் வரம் கொடுத்து விடுகின்றான்.

வேதனைப்படுகிறார் என்ற நிலைகளில் வரம் கொடுத்த பின் அந்த வேதனை உடலுக்குள் போன பின் இந்த இந்திரலோகத்திற்குள் நல்ல செயல்கள் செயல்படுத்துவதை அது தடுக்கின்றது.

பால் நிறையச் சத்து உள்ளது தான். இருந்தாலும் அதில் சிறிதளவு விஷம் கலந்து விட்டால் குடிப்போரை மயங்கச் செய்கிறது. ஆக இந்த அசுரன் என்பது விஷம்.

1.ஒருவன் வேதனைப்படுவதைக் கண்கள் காட்டி
2.அதில் இருந்து காப்பாற்றும் உணர்வின் செயலைக் கண் நமக்குக் காட்டினாலும்
3.அந்த நல்ல செயல்களின் வழிகளிலேயே உள் புகுந்து அசுர சக்தி நமக்குள் வந்து விடுகின்றது.

ஒருவர் வேதனைப்படுவதை நாம் பார்த்து அதை நுகர்ந்து அவருக்கு உடனே உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த எண்ணத்தால் நம் உயிர் வரம் கொடுத்து விடுகின்றது விஷ்ணு.

அந்த வேதனை நம் உடலுக்குள் சென்றபின் அவர்கள் எத்தகைய வேதனைப்பட்டார்களோ அதே உணர்வுகளை நம் உடல் முழுவதற்கும் தூண்டச் செய்கின்றது.

1.வேதனைப்பட்டவர் அவர்...!
2.ஆனால் நாம் நன்மை செய்யப் போக அந்த நன்மையின் உணர்வுக்குள்
3.அவர் பட்ட வேதனை ஊடுருவி நமக்குள் வந்து நல்ல குணங்களைச் செயல்படுத்தாதபடி
4.நம் உடலான இந்திரலோகத்தில் அந்த அசுர சக்திகள் செயல்படுகின்றது

இதைப் போல் நாம் எந்தக் காரியங்களைச் செய்தாலும் அதிலே கெட்டதை நீக்க நாம் முயற்சிக்கின்றோம்... புற நிலையில்...!

ஆனாலும் “கெட்டது” என்று உணர்ந்து கொண்ட பின்
1.அந்த உணர்வின் சத்து நம் உடலுக்குள் சுவாசிக்கும் பொழுது
2.உயிரான விஷ்ணு வரம் கொடுத்து விடுகின்றான்.
3.உடலுக்குள் அந்த அசுர சக்தி செயல்பட ஆரம்பித்து விடுகின்றது.

நமது வாழ்க்கையில் நம்மை அறியாத நிலையில் அசுர சக்திகள் இப்படித் தான் புகுந்து விடுகிறது.

நல்லவர்கள் அனைவருமே பிறர் துயரப்படுவதை எண்ணி அவர்கள் துயரைத் துடைக்கத் தான் எண்ணுகின்றோம். ஆனால் அவர்கள் படும் துயரமான உணர்வுகள் வெளிப்படுவதை எல்லாம் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

துயரப்படுபவர்களைப் பார்த்து அவர்கள் உடலிலிருந்து வெளி வரும் துயரமான அந்த உணர்வலைகளைக் கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி உயிரான ஈசனிடம் அதை ஒப்படைக்கின்றது.

1.ஈசன் அதை நமக்குள் உணர்த்தும் போது அந்த நல்ல காரியங்களைச் செய்தாலும்
2.அதனுடன் தீய விளைவுகளும் நமக்குள் சேர்ந்து விடுகின்றது.
3.அந்த அசுரனை வீழ்த்தும் வழி இல்லாது அது வளர்ந்து விடுகிறது என்பதைத் தான் “நரகாசுரன்” என்று காட்டுகின்றார்கள்.

கோபத்தை வீரமாக்கி அதை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தி “வீரிய சக்தியாக…” மாற்ற வேண்டும்- ஈஸ்வரபட்டர்

 

1.வீரமான உணர்வலைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கியம்.
2.வீரத்தின் உணர்வாற்றல் சக்தி தான் மனிதனின் வாழ்க்கை அமையும் நிலைதனை.

இந்த வீரத்தை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் மனித வாழ்க்கையின் வெற்றிக்கு இவ்வீரம் தான் வித்தப்பா…!

இவ்வுலக நடைமுறை அரசியல் தலைவர்களின் உண்மை நிலையினை ஊன்றிப் பார்த்தால் வீரத்தின் ஞான சாந்தநிலை புலப்படும்.

ஆனால் நம் உணர்வில் கலந்ததுள்ள வீரத்தை நாம் அதன் நிலையிலேயே செலுத்தி விட்டால் வீரத்தின் வீழ்ச்சியை விரைவில் அடைவோம்.
1.வீரத்தை ஞானத்தால் சாந்தமாக்கிச் செயல்படும் பொழுது
2.அந்த வீரத்தின் வீரிய சக்தியை வளர்த்துக் கொண்டேயிருக்கலாம்.

வீர்த்தைக் கோபத்தால் செலுத்தும் பொழுது நம் வீரத்தின் செயல் தெறித்துவிடும்… அதை நாம் உடனே அறியலாம்.

இஞ்ஞானத்தை எப்படி வழிப்படுத்துவது…?

திருடனுக்கும் ஞானம் உண்டு.. குருடனுக்கும் ஞானம் உண்டு… மிருகங்களுக்கும் ஞானம் உண்டு. பக்தி யோகம் எவ்வழிக்குச் செல்பவனுக்கும் ஞானம் உண்டு.

ஞானம் இல்லாவிட்டால் திருடன் எப்படிச் சாதுரியமாகப் பிறரை ஏமாற்றித் திருட முடியும்…?

திருடனும்…
1.தன் ஞானத்தைக் கொண்டு திருட வேண்டிய நிலைக்கு
2.பிறரை ஏமாற்ற அந்தச் சாந்தத்தைக் கற்றுத்தான்… பொறுமையுடன்…
3.தன் திருட்டைப் பிறர் அறியாவண்ணம் திருடிக் கொண்டு வர
4.மிகவும் சாதுரியமாகத் தன் ஞானத்தைச் சாந்தமாக்கித் தன் நிலையைச் சாந்தமாக்கிக் கொள்கின்றான்.

அதையே… ஏன் நாம் நல்வழியின் உணர்வுக்கு… ஞானத்தைச் சாந்தமாக்கி உயர் ஞானம் கொள்ள முடியாது…!

கண் ஒளியற்றவன் தன் ஞானத்தைச் சாந்தமாக்கி உணர்வின் எண்ணம் கொண்டே தன்னைக் காத்துக் கொள்கின்றான் அல்லவா…?

தான் வாழ வேண்டும் என்ற ஒரே ஆசை உள்ளவன் உணர்வை இச்சாந்தத்தின் பால் செலுத்தி ஞானம் கொண்டு கண் ஒளி உள்ளவர்களைக் காட்டிலும் அதிக ஆண்டுகள் ஜீவிக்கின்றான்.

மிருகத்திற்கு ஞானம் உண்டு. அந்த ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…? எல்லா நிலைகளையும் மிருகம் உணர்ந்திருந்தாலும் அங்க அவயங்களும் சொல்லாற்றல் திறமையும் மனிதனை ஒத்த நிலை இல்லாததனால் அதன் ஞானத்தை எப்படிச் செயல்படுத்துகின்றது…?

1.ஒலியின் ஈர்ப்பை ஒளி கொண்டு
2.தன்னை வளர்க்கும் எஜமானரின் சொல் ஒலியை இவ்வொளியால் கவனித்து
3.தன் ஞானத்தை உடலுக்குள் பதியச் செய்து கொள்கின்றது.

சில குறிப்பிட்ட ஒலி அலைகளை… தன் மேல் விசுவாசம் கொண்டு பரிவுடன் செலுத்தும் வளர்ப்பவனின் ஒலியை…
1.தன் ஒலியால் ஈர்த்து எடுத்துப் பதிய வைத்துள்ள நிலைக்கொப்ப…
2.வளர்க்கப்பட்டவனின் ஒலி பாய்ச்சிய முறை கொண்டு
3.அதன் ஞானத்தின் செயல் இருக்கும்.

மனிதனின் வளர்ப்பில் உள்ள பிராணிகளுக்கு அந்தந்தப் பிராணிகளின் கூக்குரலின் நிலைக்கொப்ப இவன் ஒலியை அதன் ஒளியுடன் பாய்ச்சும் பொழுது அதன் ஈர்ப்பில் அதனுடைய ஞானம் வெளிப்படுகின்றது.

பக்தியின் நிலை ஞானம் எப்படிச் செயல்படுகின்றது..?

ஆண்டவனை வணங்கினால் அவன் அருள்வான் பல…! என்று தன் உடல் தேவைக்கும் செல்வத்திற்கும் வாழ்க்கையில் உழன்றுள்ள மற்ற நிலைகளுக்கும் ஆண்டவனை நினைத்து வணங்கும் ஞானம் எப்படிச் செயல் கொள்ளும்…?
1.அவரவர்களின் உணர்வுக்குகந்த
2.எதிர்பலனின் நிலையைத்தான் அவனவன் அடைய முடியும்.

August 22, 2021

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும் - ஈஸ்வரபட்டர்

 

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் ஞானத்தின் சக்தி கொண்டு… பக்தி என்ற முறைப்படுத்தி உயர் சக்தியை ஞான வழியின் ஜெபமாக்கி… நமக்கு மேல் உயர்ந்த சக்தி கொண்ட சப்தரிஷிகளின் அலையை நாம் எடுக்க எடுக்க… நற்சக்தியின் அமில குணங்கள் நமக்குள் வளர்ச்சியாகிப் பெருகும்.

அப்படிப் பெருகத் தொடங்கினால் உடலுடன் கூடிய உணர்வான
1.சோம்பல் ¬- தன் எண்ண பலத்தால் எத்தன்மையான சோர்வு வந்தாலும் எண்ணத்தின் நிலைக்கொப்ப “சோர்வை…” அகற்ற முடிகின்றது.

2,தூக்கம் ¬- “தூக்கத்தையும்…” நம் வேலையின் நேரத்திற்கொப்ப உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு மாற்றி அமைக்க முடிகின்றது.

3.பசி - எண்ணத்தால் வேறு ஒரு செயலில் உள்ள பொழுது “பசியையும்…” மாற்ற முடிகிறது.

4.காம இச்சைகள் - உடல் “காம இச்சையையும்…” மனிதனால் இச்சைக்குகந்த நிலையில் செல்லாமல் ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்ள முடிகிறது.

5.உடல் கழிவுகளின் உந்தல்

6.உடலில் ஏற்பட்டுள்ள வியாதியின் வலிகள் - எண்ணத்தால் அவ்வலியையே மறக்கக்கூடிய தன்மை மனிதனுக்கு உண்டு.

இந்த ஆறு நிலைகளையும் உணர்வால் வெளிப்படும் நிலைதனை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

அதே போல் உணர்வால் உந்தப்படும் உடலின் இச்சைகளையே ஒழுங்குநிலைப்படுத்தி
1.உணர்வின் தன்மையில் செல்லாமல்
2.ஞானத்தால் கால நிலை அனுசரித்து
3.உடல் பிம்ப உணர்வு உந்தலின் அலையையே
4.எண்ணத்தால் ஒழுங்குபடுத்துகின்றான் மனிதன்.

எண்ணத்தைக் கொண்டு எச்செயலையும் செய்விக்கும் மனிதனைப் போல் மிருகங்களின் நிலை இல்லை.

அதன் உடலில் ஏற்படும் உணர்வின் உந்தலானது ஞானத்தின் எண்ணம் கொண்டு மாற்றியமைக்கக்கூடிய பக்குவமும் செயல் திறனும் மிருகங்களுக்கு இல்லாததனால்தான் மனிதனை ஒத்த உணர்வை மாற்றியமைத்து “வாழ்க்கை” என்ற சமுதாயப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால் மனிதன் தன் எண்ணத்திற்குகந்த வளர்ச்சி செயல் ஞானத்தைச் செய்விக்கின்றான். உணர்வை மாற்றி அமைக்கக்கூடிய எண்ணம் செயல் மற்ற இனங்களுக்கு இல்லை.

உணவைத் தேடி உண்டு கழித்து உறங்கி காம இச்சையின் இனப் பெருக்க உணர்வும் உடல் பிணியில் உண்டாகும் அவஸ்தையில் சர்வ சதா அவ்வலியின் தன்மையுடன் ஒன்றியும் உணர்வை மாற்றியமைக்க முடியாத நிலை தான் மற்ற இனங்களுக்குண்டு.

மனிதனின் ஞானம் எவ்வுணர்வையும் கால நிலை சூழ்நிலை இதன் வட்டத்தைக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தித் தன் ஞானத்தால் உணர்வின் எண்ணத்தையே செயல்படுத்தும் திறன் பெற்றது.

August 21, 2021

உடலுக்குள் பல மாற்றங்களை உண்டாக்கி வலியோ வேதனையோ நோயோ எப்படி உருவாகிறது…? என்பதை நேரடியாகக் காட்டினார் குருநாதர்

 

ஈஸ்வரபட்டாய குருதேவர் எம்மை (ஞானகுரு) பதினான்கு வருடம் பல காடு மேடெல்லாம் அலையச் செய்தார். என்னை அறியாது எனக்குப் பல துன்பங்களை அங்கே ஊட்டினார்.

அந்தத் துன்பத்தை நான் நுகர்ந்து பார்க்கும் போது அது எல்லாம் எனக்குள் வந்து விடுகின்றது. அதை எப்படி மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அனுபவபூர்வமாக நான் தெரிந்து கொள்வதற்காகவே அதை எல்லாம் கொடுத்தார்.

அதற்காக வேண்டி மூன்று லட்சம் பேரைச் சந்திக்கும்படியும் செய்தார். அதை நான் வேடிக்கை பார்க்கும் பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தில் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
1.ஒருவருக்கொருவர் சண்டை போடுவது… ஒருவருக்கொருவர் தகாத நிலையில் பேசுவது…
2.இது போன்ற எத்தனையோ உணர்வின் தன்மைகளை நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது
3.சுவாசித்தது உயிருடன் மோதும் பொழுது ஏற்கனவே நான் எடுத்துக் கொண்ட நல்ல குணங்களுக்குள் இது கலந்து
4.அந்த விஷத்தின் தன்மை எனக்குள் இருக்கும் நல்ல குணத்தைச் செயலாக்க விடாதபடி
5.என் எண்ணங்கள் எப்படி எல்லாம் மாறுபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும்
6.என்னை அறியாமலே உடலுக்குள் பல கவலையும் பல சஞ்சலமும் ஏற்படச் செய்து
7.எவ்வளவு திடசாலியாக இருந்தாலும் பலவீனப்படுத்துவதையும் குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டிருக்கும் போது அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வைக் கூர்மையாகக் கவனிக்கப்படும் பொழுது அந்த உணர்வின் அலைகள் இங்கே பதிவாகி விடுகின்றது.

அந்த அலைகள் உடலுக்குள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் இரவில் படுத்திருக்கும் போது அந்த உணர்வுகள் தன்னை அறியாமலேயே சுவாசிக்கச் செய்து “பயப்படச் செய்வதையும்… தூங்கவிடாமல் எப்படிச் செய்கிறது…? என்பதையும்” நேரடியாக அனுபவபூர்வமாக குருநாதர் காணும்படி செய்தார்.

அங்கே பார்த்த உணர்வுகள் உடலுக்குள் அது எதுவாக இணைகின்றது…? அது மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக உணர்ச்சிகளை ஊட்டி உடலில் அணுக்களாக வளரச் செய்து நோய்களாக எப்படி உருவாகிறது…?

காரணம்…
1.ஒவ்வொரு நாளும் எந்தெந்தக் குணங்களை எடுக்கின்றோமோ…
2.அந்தக் குணங்களுக்குத் தக்கவாறு… ஒவ்வொரு உணர்வுக்குத் தக்கவாறு தான் உடலும் உடல் உறுப்புகளும் அமைந்தது.
3.ஈரல் கல்லீரல் மண்ணீரல் கிட்னி சிறுகுடல் பெருங்குடல் இருதய வால்வுகள் சிறு மூளை பெரு மூளை என்று
4.அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு எதனெதனை அது சேர்த்ததோ
5.அந்த மிருதுத் தன்மைக்குத் தக்கவாறு தான் அதனுடைய செயல்களும் இருக்கின்றது.

அந்த உறுப்புகளின் இயக்கங்களையும் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒலிகளுக்கொப்ப அது எப்படி இயங்குகிறது..? என்ற நிலையையும் உடலுக்குள்ளேயே வைத்துக் காட்டினார் குருநாதர்.

மருத்துவம் படிப்பவர்கள் படிப்பு (PRACTICAL) மூலமாகத் தெரிந்து கொள்வதற்காக பிறருடைய உடல்களை எப்படி எடுத்துப் பரீட்சித்துப் பார்ப்பார்களோ அதே போல
1.எத்தகைய உணர்வை நீ சுவாசிக்கின்றாய்...?
2.எடுக்கும் எண்ணங்கள் அனைத்தும் உடல் உறுப்புகளை எப்படித் தாக்குகின்றது…?
3.அந்த உணர்வின் வேகத் துடிப்பு இரத்தத்துடன் கலந்து சுழன்று வரப்படும் போது
4.ஒவ்வொரு உறுப்புகளிலும் இது எதிர்மாறாகும் போது அது எப்படி எரிச்சலாகின்றது…
5.அது எந்தெந்த வேதனையாக உருவாக்குகின்றது...? என்று காட்டினார்.

உடலிலே சர்க்கரைச் சத்து அதிகமாகி விட்டால் எந்த அளவிற்குச் சர்க்கரை அதிகமாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி சிறு நீரின் கலர் மாறுகின்றது… பார்க்கலாம்…!

அதைப் போல் பிறருடைய செயல்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாலும்… இந்த உணர்வுகள் அது சுவாசித்து உடலுக்குள் செல்லும் போது இரத்தமாக மாறி… உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளுக்குள் ஊடுருவி… இதற்கும் அதற்கும் எதிர்மறையாகும் போது
1.அந்த உறுப்புகள் எப்படிப் பின்னமாகின்றது...?
2.உனக்குள் வலி எப்படி வருகிறது…? என்ற நிலையையும்
3.என்னையே முன்னிறுத்தி என் உடலின் இயக்கங்களைப் பார்க்கச் சொல்கிறார்.

எக்ஸ்ரே படங்களிலும் மற்ற ஸ்கேன் படங்களிலும் பார்ப்பது போல் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி அது எவ்வாறெல்லாம் உன் உடலில் விளைகிறது…? என்பதை குருநாதர் ஒவ்வொரு நிலைகளிலும் இதைக் காட்டினார்.

பின் அதை எல்லாம் மாற்றும் உபாயமாக மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டிய முறைகளையும் கொடுக்கின்றார். அதை எல்லாம் கண்டுணர்ந்த பின் தான் உங்களுக்குள் இதை உபதேசிக்கின்றேன்.

1.நீங்கள் சாதாரண நிலையில் இருந்தாலும்
2.சிறு குழந்தையாக இருந்தாலும் அல்லது படிக்காதவர்களாக இருந்தாலும்
3.யாம் உபதேசிப்பதைக் கூர்மையாகப் பதிவு செய்யப்படும் போது
4.குருநாதர் காட்டிய அருள் ஞானிகளின் சக்திகளை நீங்களும் பெற முடியும்.

அந்த மெய் ஞானிகள் தீமையை நீக்கும் ஆற்றல்களைப் பெற்று எவ்வாறு விண்ணுலகம் சென்றார்களோ அந்த உணர்வின் சத்தை உங்களுக்குள் நினைவு கூர்ந்து இங்கே உபதேசமாகக் கொடுக்கும் போது உற்றுக் கவனித்தால் அது உங்களுக்குள் பதிவாகிவிடுகின்றது.

அந்தப் பதிவை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால் அவர்கள் பெற்ற சக்தியை நீங்களும் பெற முடியும்… விண் செல்லவும் முடியும்…!

ஞானமும் சாந்தமும் விவேகமும் இருந்தால் தான் நாம் போகும் ஞான வழியில் முன்னேற்றம் காண முடியும் - ஈஸ்வரபட்டர்

 

உணர்வின் எண்ணத்தை உணர்த்தி வந்தேன். மனித உடலின் அமில குணங்களையும் குணத்தினால் விளையும் உணர்வு உடல் ஆரோக்கியம் இவற்றையும் சில குறிப்பிட்டுள்ளேன்.

அணுவுக்குள் அணுவாக அணுவின் அணுவுக்குள் உள்ள நாம்
1.நம் எண்ண வலிமையை எப்படி வழி நடத்துகின்றோம்…?
2.மனிதனின் நற்குண அமிலமான அன்பு பாசம் பரிவு ஞானம் வீரம் சாந்தம் இவற்றை நாம் எப்படிச் செயல்படுத்துகின்றோம்…?

நம் குழந்தையிடம் அன்பை மட்டும் செலுத்தி அன்பின் செயலால் வளர்க்கப்படும் குழந்தை அவ்வன்பையே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொள்ளும்.
1.அவ்வன்பிலேயே வளர்ந்த நிலை கொண்டு
2.தனக்குச் சாதகமான… தனக்கு வேண்டிய உணர்வு தேவையின் நிலையைத்தான்
3.நம்மிடம் எதிர்பார்த்துப் “பிடிவாதத்தில்” நிற்கும்.

இப்படி வெறும் அன்பினாலேயே வளர்க்கப்பட்ட குழந்தை… அது வளர்ந்த பிறகு நம்மிடம் இந்த உணர்வின் குணத்தைத்தான் எதிர்பார்க்கும்.

அன்பினால் மட்டும் எச்சக்தியையும் செயல்படுத்திட முடியுமா…? முடியாது. அவ்வன்பே கடும் விஷம் ஆகி எதிர்த்துத் தாக்கும்.

அன்பைக் கொண்டு செயல்படுத்தி அச்செயலே நமக்கு எதிராகும் தருணத்தில் நம் உணர்வில் கோபம் குடிகொள்ளும். இதனை எப்படிச் செலுத்துவது…?

1.அன்புடன் ஞானத்தைச் செலுத்தி
2.சாந்தமாக நாம் ஊட்டும் அன்பினாலேயே
3.அக்குழந்தையை உயர் ஞானக் குழந்தையாக நாம் வளர்க்க முடியும்.

பரிவும் இதே போன்றது தான்…! பரிவை ஒருவருக்குச் செலுத்தப்படும் பொழுது… பரிவுடன் கூடிய ஞானத்தால் சாந்தம் கொண்டு அப்பரிவைச் செலுத்தும் பொழுது பரிவினால் விளையக்கூடிய நற்பயனை நாம் காணலாம்.

ஆசையின் நிலையும் அப்படிப்பட்டது தான். ஆசையினால் உள்ளது தான் இந்த உலகமே..! உண்ண உடுக்க உணர எண்ண வாழ்க்கையின் ஆணிவேரே இவ்வாசை தான்.

ஆசை கொண்டு நாம் புதிதாக ஒரு தொழிலுக்கு வித்தூன்றி வளரச் செய்கின்றோம் என்றால்
1.அவ்வாசையின் வித்திற்கு ஞானம் என்ற முதல் போட்டு
2.சாந்தம் என்ற நீரை ஊற்றினால் தான்
3.அவ்வித்து வேரூன்றி வளர ஏதுவாகும்.

ஞானமில்லா வழியில் சாந்தம் கொள்ளாமல் ஆசை கொண்டு எதைச் செய்தாலும் அது வியாபாரமாக இருந்தாலும் சரி… வாழ்க்கை நடைமுறைச் செயலாக இருந்தாலும் சரி.. ஒரு வீட்டையே கட்டுகிறோம் என்றாலும் சரி… அது நிறைவு தராது.

ஆசைப்பட்டுத்தான் வீட்டைக் கட்ட நாம் முற்படுகின்றோம்.

ஆனாலும் வீட்டைக் கட்டி முடிக்கத் தன்னிடமுள்ளள பொருளாதாரச் சூழ்நிலை… மற்றும் அந்த வீட்டிற்குகந்த பொருள் கிடைக்கும் நிலை… இவற்றை எல்லாம் இந்த ஞானத்தால்
1.தன் ஆசையின் உருவத்தை ஞானம் கொண்டு
2.தன் ஆசையின் செயலை எந்த வடிவில் அமைக்க முடியும்…? என்ற ஞானம் அறிய “சாந்தம்” தேவை.

ஆசையை ஞானம் கொண்டு சாந்தப்படுத்தினால் நாம் அமைக்கும் வீடு நம் உணர்வின் ஆசைக்கு உகந்த நிலையில் அமையுமப்பா..!

August 20, 2021

புடமிட்டுப் பஸ்பமாக்கி எத்தகைய கடினமானதையும் கரையச் செய்யும் சித்தர்களின் ஆற்றல்

 

உதாரணமாக… ஒரு பெரும் பாறையாக இருக்கிறது என்றால் கடப்பாரையை வைத்தோ அல்லது உளியைக் கொண்டோ சம்மட்டியால் அடித்து நாம் அந்தப் பாறைகளைப் பிளக்கின்றோம். அவ்வளவு வலு இருக்கின்றது அந்த இரும்பிற்கு…!

ஆனால் மனித உணர்வுக்குள் அதே இரும்பின் சத்து அதிகமாகச் சேர்ந்து விட்டால் அந்த வலுவின் தன்மை அதிகமாகி…
1.இரும்பு எப்படி மற்றொன்றைப் பிளக்கின்றதோ
2.மனித உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல உணர்வின் சத்துகளைப் பிளக்கும்.
3.இடி மின்னல்களைப் போல உடலிலே வலியும் பல நோய்களும் ஏற்படுகின்றது.

ஏனென்றால் ஒவ்வொரு தாவர இனங்களுமே ஒவ்வொரு உலோகத்தின் தன்மையை அதிகமாகக் கொண்டு வளர்ந்து வந்தது தான்.

நாம் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் அந்தத் தாவர இனச் சத்துக்களை நுகர்ந்து… உணவாக எடுத்து… அந்த உணர்வின் மணத்தால் மனிதனுடைய எண்ணங்கள் ஓங்கி வளர்ந்து… இன்று மனிதனாக நம்மை உருவாக்கி இருக்கின்றது

சந்தர்ப்பவசத்தால்…
1.இரும்பு சத்து அதிகமாகக் கொண்ட காய்கறிகளையோ அல்லது எண்ணத்தால் பல நிலைகளை அதைப் போன்று சுவாசிக்கும் பொழுதோ
2.அந்த இரும்பின் சக்தி நம் நல்ல குணங்களுக்குள் கலந்துவிட்டால் கடுமையான நோய்களாக வந்துவிடுகின்றது.

மனித உடலில் இப்படிப்பட்ட நோய்களாகித் தொல்லை கொடுக்கும் நிலைகளை “அதை எப்படி நீக்குவது…?” என்று அன்றைய சித்தர்கள் என்பவர்கள் சிந்திக்கின்றனர்.

அதற்குண்டான உபாயத்தை அவன் சிந்தித்து அதன் வழி தான் நுகர்ந்து எடுத்துக் கொண்ட நிலைகள் கொண்டு இதை நீக்க முடியும் என்ற உணர்வுகள் அது அவனுக்குள் வலு பெறுகிறது.

அப்படி வலுப் பெற்ற நிலைகள் கொண்டு பல தாவரங்களைப் பறித்து அந்த இரும்புடன் அதைக் கலந்து புடம் போடுகிறான். புடம் போடும் போது
1.இரும்புக்குள் இருக்கும் அந்தக் கடினமான பாறையை உடைக்கச் செய்யும் கடுமையான சத்தின் வலு இழந்து
2.அந்த இரும்பே கரைந்து போகும் நிலைகளை உருவாக்குகின்றான் சித்தன்.

அப்படி உருவாக்கிப் பஸ்பமாக்கிய அந்த உணர்வின் சத்தை ஒரு மனித உடலுக்குள் கொடுக்கப்படும் போது
1.உடலிலே கடினமான வேதனைகள் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த சக்தி நீங்கி அதைக் கரைத்து விடுகின்றது
2.உடல் நலம் பெறும் சக்தியாக அது வருகின்றது.

ஒரு மனிதனின் உடலில் இப்படித் துன்பங்களை ஊட்டும் இந்த உணர்வின் சத்தைத் தன் எண்ணத்தால் இதையெல்லாம் கலந்து இதை நீக்க முடியும் என்று செயல்படுத்தியவர்கள் தான் அன்றைய சித்தர்கள்.

“புடமிட்டுப் பஸ்பமாக்கும் உணர்வுகள்” சித்தனின் உடலில் சக்தி வாய்ந்த உணர்வாக விளைகின்றது. அவர் கண்டறிந்த மருந்தோ மனித உடலில் இருக்கும் நோயை மாற்றுகின்றது.

அதே சமயத்தில் மனித உடலிலே சாடும் அந்தக் கடுமையான வேதனைகள் தனக்குள் வளரவிடாத நிலைகளிலே அந்தச் சித்தன் எடுத்துக் கொண்ட ஞானம் அவன் உடலிலே அணுக்களாகப் பெருகுகின்றது.

1.இப்படிக் கடின சக்திகளை வென்ற அந்த உணர்வின் ஆற்றல் அவன் உடலில் விளைந்து
2.எந்தக் கடினமான நிலைகள் வந்தாலும் அவனுடைய சிந்தனைகள் அனைத்தும்
3.அதை நிவர்த்திக்கும் உணர்வின் ஞானமாக அங்கே உருவாகின்றது.

“பரிதாபப்படுவதால்” நமக்கும் பிறருக்கும் நன்மை கிடைப்பதில்லை - ஈஸ்வரபட்டர்

 

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எடுக்கக்கூடிய உணர்வின் எண்ணச் சுவாசமானது பிறர் ஈர்ப்பில் பாவம் என்ற பரிதாபச் சுழற்சியில் தன் எண்ணத்தைச் செலுத்தாமல் இருத்தல் வேண்டும்.

1.தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும்
2.கணவன் மனைவி குழந்தைகள் என்று இருந்தாலும்
3.சகோதர பந்தபாசங்கள்… உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும்
4.ஆண்டவனாக இருந்தாலும்…
5.அவர்கள் எடுக்கும் உணர்வின் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படும் இன்னலைக் கண்டு உடல் நலக் குறைவு எதுவாக இருந்தாலும்
6.அவர்கள் மேல் பரிதாப எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் பரிதாப எண்ணத்தில் நாம் சிக்காமல்
7.சுயநலம் கொண்ட தன் நலமுடன் பிறரின் நலம் காண நம் உணர்வின் எண்ணச் செயல் பட்டு
8.அவர்கள் அலை நம் மேல் சாடாமல் நம் அலையின் சக்தியை அவர்கள் மேல் பாய்ச்சி
9.அவர்கள் நல்ல நிலை பெறவேண்டும்…! என்ற உயர்வான சக்தி அலையைத்தான் நம் எண்ணத்தில் எடுக்க வேண்டும்.

பரிதாபப்பட்டுச் செய்யும் தர்மம் பரிதாப அலை உணர்வை நம்மை அறியாமல் நம் எண்ணம் எடுப்பதினால் பரிதாப எண்ணத்திற்குரிய அலை குண அமிலமாக இவ்வுடல் பிம்ப அமிலம் அவர்கள் எடுத்த அலைத் தொடரின் ஈர்ப்பில் சிக்கிவிடுகின்றது.

ஆக நம் உணர்வுடன் அது கூடி நம் எண்ணமே அச்சுழற்சி அலையுடன் சென்று நாளாவட்டத்தில் அவ்வுணர்வின் பரிதாப நிலைக்கு நாமும் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

1.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் செயலின் ஈர்ப்பானது உடனே நம்மைச் சாடும்.
2.இரத்தத் தொடர்பு கொண்டவர்களின் அலைத் தொடர் “இன்னும் வேகமாக…!” நம் உணர்வுடன் ஏறிவிடுகின்றது

வைத்தியர்கள் மற்றவர்களுக்குத் தன் உணர்வின் எண்ணத்தைச் செயல் கொண்டு செய்விக்கும் மருத்துவத்தினால் வியாதியஸ்தர்களின் ஈர்ப்பில் பெரும்பகுதி சிக்க மாட்டார்கள்.

அவர்கள் சொல்லும் அந்த வியாதிக்குத் தக்கவாறு தான் செய்ய வேண்டிய மருத்துவ ஞான அலையை உணர்ந்து அதன் வழியில் செய்யப்படும் மருத்துவத்தால் அவர்களுக்குக் குணமாக வேண்டும் என்ற செயலின் நிலைக்கொப்ப வைத்திய முறையைக் கடைப்பிடிக்க முடிகின்றது.

1.நோயாளிகளின் ஈர்ப்பில் சிக்காமல்
2.அவர்கள் படும் இன்னலின் பரிதாபம் கொள்ளாமல்
3.மருத்துவத்தால் மாற்றியமைக்கலாம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நிலைக்கொப்ப
4.பிறர் ஈர்ப்பும் இத்தகைய மருத்துவரைச் சாடுவதில்லை.

அப்படிப்பட்ட மருத்துவரால் செய்யப்படும் செயல் குணமும் நலம் பெற வழி கொள்கின்றது.

ஆனால் அதுவே தன் குழந்தை தன் தாய் தந்தையர் என்ற சுற்றத்தில் உள்ளவர்களின் நிலைக்காகச் செய்யப்படும் மருத்துவத்தில் பயம் கலந்த உணர்வு கூடி விடுகிறது.

அவ்வாறு கூடுவதனால்… உணர்வின் எண்ணம் பாசம் என்ற பரிதாப அலையை எடுக்கும் பொழுது தன்னுடைய செயலில் தடுமாற்றம் ஏற்படுகின்றது.

ஆகவே…
1“உணர்வின் எண்ண ஒலிக்கு உள்ள உண்மையை உணர்ந்து…!”
2.ஒவ்வொருவரும் பிறர் அலையின் ஈர்ப்பில் சிக்காமல்
3.சுயநலம் என்ற தன் நல வளர்ப்பால் பிறர் நலத்தை வளர்க்கக்கூடிய வளர்ப்பாக்குங்கள்.

உணர்வின் எண்ணம் உயர் ஞான சக்தியின் தொடர்புடன்… நமக்கு மேல் சக்தி கொண்ட நமக்குச் சித்தர்களினால் வழிப்படுத்திச் சென்ற சக்திகளின் தொடரை ஜெபம் கொண்டு “ஒவ்வொரு வழியிலும் உணர்த்தி வரும்… முன்னோர்களின் தொடர் அலையை எடுக்கப் பழகுங்கள்…!”

August 19, 2021

நல்லதைச் செயல்படுத்த நமக்குக் காலதாமதம் ஆவது ஏன்...?

 

நம்மை அறியாமலே எத்தனையோ வேதனைகளை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அன்றாட வாழ்க்கையில் வருகிறது. அதை எல்லாம் மாற்றி அமைக்க வேண்டும்.

நம் உடலுக்குள் அவை புகாதபடி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் வாழ்க்கையில் வரும் இருளை மாற்றுகின்றோம். அசுர சக்திகள் நம்மை அணுகாது மாய்க்கின்றோம்.

இது தான் தீப வழி... தீப ஒளித் திருநாள் என்பது.

இதைக் கணவன் மனைவி இருவருமே தனக்குள் வளர்க்கப்படும் போது தீயது வராதபடி தடுக்கவும் செய்கின்றது.

கருணைக் கிழங்கை வேக வைத்த பின் அதில் உள்ள விஷம் நீங்குவது போன்று... தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றியபின் செம்பும் வெள்ளியும் ஆவியாக மாறுவது போல்... தீமைகளை அகன்று செல்ல வைக்க வேண்டும்.
1.தீமைகள் என்பது அறிவதற்கு நமக்கு உதவியது.
2.ஆனாலும் அது அணுவாக நமக்குள் உருவாகி விடக் கூடாது.

உதாரணமாக வெள்ளியும் செம்பும் தங்கத்துடன் சேர்த்துச் சூட்டிலே காண்பித்தவுடன் உடனே அவைகள் உருகி நகையாக ஒட்டிக் கொள்கின்றது
1.ஆனால் தங்கம் உருக வெகு நேரமாகும்
2.இதைப் போன்றுதான் நல்ல குணம் உடனடியாக இயங்காது.

ஒரு பாலைக் குடித்தோம் என்றால் நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்துத் தான் உடலுக்குள் அதனின் சத்து கூடுகின்றது. ஒரு நல்லதைச் செய்ய வேண்டும் என்றால் மெதுவாகத்தான் பேசுகின்றோம். ஆனால் ஒரு கோபம் வருவது உடனே இயக்குகின்றது.

ஒருவர் ஏதாவது சொல்லி விட்டார் என்றால்
1.ஒரு நொடிக்குள் நாம் கோபப்பட்டுப் பேசி விடுகின்றோம்... உடனே அதை அழுத்தி விடலாம்
2.ஆனால் அடுத்துச் சாந்தமாக பேச வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.

அதாவது சாந்தமாகச் சொல்லி ஒருவருக்கு அந்த அர்த்தத்தைப் புரிய வைக்க வேண்டுமென்றால் வெகு நேரமாகிறது.

சுருக்... என்று சொல்லி விட்டால் உடனே அங்கே கோபத்தை உண்டு பண்ணிவிடலாம்.
1.என்ன சொன்னாய்...?
2.பார்... உன்னை என்ன செய்கிறேன் என்று... உடனே எதிர்த்துப் பேச வந்துவிடும்.

ஆனால் அதற்குப் பதிலாக ஒரு நல்லதைச் சொல்வதற்குக் கேட்பதற்கு ரொம்ப நேரம் ஆகிவிடும்.

ஆகவே நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அந்தச் சக்தியை நாம் தடைப்படுத்த வேண்டுமல்லவா. ஒரு நொடிக்குள் நம்மை உணர்ச்சிவசப்படச் செய்ததை மாற்ற
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.கணவன் மனைவியும் இருவரும் சேர்ந்து இந்த ஆத்ம சக்தியை
3.சிறிது நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டோம் என்றால் அதைச் சுத்தப்படுத்த உதவும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

எங்கெங்கேயோ போகிறோம்... என்னென்னெமோ செய்கின்றோம்...! ஆனால் இருந்த இடத்திலிருந்து நீங்கள் இந்த சக்திகளைப் பெற முடியும். அந்தச் சக்தி பெறக்கூடிய சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

உயிர் ஒளி பெற்றது... அது ஒளியாக இருப்பது போல்
1.உணர்வுகளை ஒளியாக மாற்றிச் சென்ற அந்த மெய் ஞானிகள் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால்
2.வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய இருளையும் நாம் மாற்றி விடலாம்.
3.அந்தத் தீப வழியாக அருள் உணர்வுகள் வரும்.

தொழிலும் சீராக இருக்கும் உங்கள் வாழ்க்கையும் சீராக இருக்கும். கணவன் மனைவி இதே மாதிரி செய்து பாருங்கள். சரியில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள்... சரியாக வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

சுயநலம் கொண்டு தான் படைக்கும் சக்தியே அனைத்தையும் படைக்கின்றது - ஈஸ்வரபட்டர்

 

1.தன்னலத்தை வளர்த்துத் தான் பிற நலத்தை வளர்க்க முடியுமே அன்றி
2.பிறர் நலத்தால் தன் நலம் என்றுமே வளராது.

உருவாகும் சக்திக்கே சுயநலம் தான் காரணம்…! ஜீவ சக்தி கொண்ட துடிப்பனைத்திற்குமே சுயநிலையுடன் கூடிய தன்னலம் கொண்ட சுய நலம் உண்டு.

சுயநலமில்லா எச்சக்தியும் வளர முடியாது. உணர்வின் எண்ணத்திற்கே சுயநலம் உண்டு.

சுயநலம் கொண்டு தான் முருகனைப் படைத்த போகனும் செயல் கொள்கின்றான். வெங்கடாசலபதியைப் படைத்த கொங்கணவனும் செயல்படுகின்றான்.

சூரியனாக உருளும் சூரிய தேவனின் சக்தியும் சுயநலம் கொண்டு தன் வளர்ப்பைத் தான் ஈர்த்துப் பிற மண்டலங்களுக்குச் சூரியனின் சக்தி செல்கிறது.

மிதந்து கொண்டேயுள்ள இப்பேரண்டத்தில் உருண்டோடுகின்ற மையப்புள்ளியாக தன் சுயநல வளர்ப்பின் சக்தி கொண்ட பெரிய மண்டலமான சூரிய மண்டலம் தன் வளர்ப்பின் சக்தி வளர சூரியனின் குடும்ப மண்டலமாக உள்ள நாற்பத்தியேழு மண்டலங்களையும் தன் ஈர்ப்பின் வட்டத்தின் சுழற்சியுடன் வளரவிட்டுக் கொள்கிறது.

வளர்ந்த மண்டலங்களின் அமில சுழற்சி கொண்ட அலையைச் சூரியன் தனக்குணவாக எடுத்துத் தன் வளர்ப்பில் தன்னைச் சார்ந்துள்ள பிற மண்டலங்களையும் வளர்க்கச் செய்கிறதேயன்றி சுயநலமின்றிப் பிற நலமாக எதுவும் செயல்படவில்லை.

சூரியனானாலும் சரி… வளர்ந்தோடும் மற்றெல்லா மண்டலங்களும் சரி… சப்தரிஷிகளானாலும் சரி… சப்தரிஷியின் தொடர் கொண்ட சகல ஜீவ உணர்வு உயிரணுக்களும் சரி… எல்லாமே சுயநலத்தின் தொடர் படைப்புத்தான்.

ஆதிசக்தியின் சக்தி என்கிறோம்…!
1.அச்சக்தியே ஆக்கல் காத்தல் மாற்றல் என்ற சுழற்சி சுயநலம் கொண்டு தான் படைக்கின்றான்
2.படைப்பின் பலன் காணுகின்றான்
3.மீண்டும் படைப்பின் படைப்பையே உருவாக்க படைத்ததை மாற்றி மாற்றி அழிக்கின்றான்.
4.உரு மாறி மாறி சக்தி நிலை செயல்பட்டால் தான் சக்தியின் சக்திக்கே சக்தி கூடுகின்றது,

ஒன்றான சக்திக்கு ஜீவன் ஏது…?

ஒன்று ஒன்றுடன் சேர்ந்து இரண்டு ஒன்றாகி… ஒன்றுடன் பிறிதொன்று சேர்ந்து இரண்டாகி.. ஒன்றாகி… இரண்டாகி… ஒன்றாகி…
1.சுயநலம் கொண்டு கருவாகும் சக்தி அலை இருந்தால் தான்
2.படைப்பின் பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

சுயநலம் கொண்ட வாழ்க்கை தான் மனித வாழ்க்கை.

சுயநலம் கொண்டு பிறர் நலம் காணுங்கள். ஆக… தன் வளர்ச்சியைக் கொண்டு தான் பிற வளர்ச்சியை நிச்சயம் வளர்க்க முடியும்…!

August 18, 2021

ஆத்ம சுத்தியின் அதிசயமான ஆற்றல்கள்

 

ஜோசியரிடம் சென்று கேட்கின்றோம்.. மந்திரக்காரனிடம் கேட்கின்றோம்... என்னிடமும் (ஞானகுரு) வந்து கேட்கிறீர்கள் அல்லவா.

ஆனால் யாம் சொன்ன முறைப்படி
1.ஞானிகள் கொடுத்த வாக்கினைப் பயன்படுத்திப் பாருங்கள்.
2.கணவன் மனைவி உங்கள் இருவருடைய சக்திகளையும் ஒன்று சேர்க்கும்.

ஒரு உயிர் விண்ணிலே ஒளியாகத் தோன்றுகின்றது. சந்தர்ப்பத்தில் புவியின் ஈர்ப்புக்குள் வருகிறது. வந்த பின் என்ன செய்கிறது...?

உதாரணமாக நம் புவிக்குள் இருக்கும் மரங்கள் வெளிப்படுத்தும் சத்துகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்திருக்கிறது. அது எல்லாம் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

1.ஆனால் விண்ணிலிருந்து வந்த உயிர் இதிலே மோதி
2.இரண்டும் சேர்ந்து உறைந்த பின் கவர்ந்த சத்தை உயிர் உடலாக மாற்றுகின்றது
3.சக்தி சிவம் ஆகின்றது.

ஆண் பெண் இருவரும் சேரும் போது உருவாகுவதுதான் குழந்தைகள். அதைப் போல் இருவருடைய எண்ணங்களும் ஒன்று சேர்த்து உயர்ந்த எண்ணங்களை எண்ணி ஒருவருக்கொருவர் அந்த அருள் உணர்வைப் பரப்பிக் கொண்டால் அது வலுக் கொண்டதாக மாறுகிறது.

1.அப்படி வலுக் கொண்டதாக மாற்றி விட்டால் பிறிதொருவரின் எண்ணங்கள் நம்மைப் பாதிப்பதில்லை.
2.அவசியம் இதைச் செய்து பாருங்கள்.
3.இது இருவருக்குமே ஒரு பாதுகாப்புக் கவசமாக ஆகின்றது.

உதாரணமாக ஒரு இராக்கெட்டை ரஷ்யாவில் இருந்து விடுகின்றார்கள். அமெரிக்காவிலும் இராக்கெட்டை விடுகின்றார்கள்
1.ரஷ்யாவில் இராக்கெட் வெளியிலே கிளம்பிய உடனே
2.சூரியனுடைய காந்தப் புலனுக்குள் உராய்ந்த உடனே அமெரிக்காவில் இருப்பது இதை அறிந்து கொள்கின்றது
3.அது அந்த வேக அலையினை எடுத்துக் கொள்கிறது.

அதைப் போல கணவனும் மனைவியும் யாம் சொன்ன முறைப்படி இந்தத் தியானத்தை எடுத்து இருவரும் சேர்ந்து அந்த உயர்ந்த சக்தியினைப் பரப்பிக் கொண்டீர்கள் என்றால் பாதுகாப்பாக வரும்.

1.ஒரு சங்கடமான நிலையோ அல்லது
2.நீங்கள் போகும் பாதையில் ஒன்றைக் குறி வைத்துச் செல்லும் பொழுது ஏதாவது விபத்துகள் ஏற்படக்கூடிய நிலை இருந்தது என்றால்
3.கணவன் மனைவி உங்கள் எண்ணத்தை ஊடுருவி அங்கே பாய்ச்சும்போது இது உராய்ந்தவுடனே
4.அங்கே எதிர்ப்பு சக்தி இருந்தது என்றால் உடனே டக்… என்று கம்ப்யூட்டர் மாதிரி உங்களை அங்கே போக விடாதபடி தடுத்துவிடும்

ரேடாரை (RADAR) வைத்தவுடன் எப்படி அதிலே மற்ற நிலைகள் தெரிகின்றதோ அதே மாதிரித் தெரிய வரும். விபத்துக்களிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள இது உதவுகிறது.

கணவன் மனைவி இரண்டு பேரும் ஆத்ம சுத்தி செய்து விட்டு ஒரு காரியத்திற்குச் சென்றீர்கள் என்றால்
1.உங்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாராவது வந்திருந்தாலும்…
2.இந்த உணர்வு அங்கே பட்டு அந்த நிமிஷத்தில் எண்ணத்தை மாற்றி விட்டு
3.உங்கள் பாதையில் நீங்கள் சீராகச் சென்று கொண்டிருப்பீர்கள்…
4.அவர்கள் எண்ணம் மாறிப் போகும்... அவர்களை ஏதாவது ஒரு பக்கம் திசை திருப்பும்
5.அல்லது உங்களை வேறு பக்கம் அழைத்துச் சென்றுவிடும்

இதை எல்லாம் உங்கள் அனுபவத்திலே பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியமும் ஞானமும் - ஈஸ்வரபட்டர்

 

நம் பூமி இல்லாவிட்டால் நாம் ஏது…? நம் பூமியையே வளர்க்கும் சூரியனின் சக்தி இல்லாவிட்டால் நம் பூமி தான் ஏது…?

சூரியனுக்குச் சக்தி தருவது சூரியனைச் சுற்றியுள்ள 47 மண்டங்கள் தாம். 47 மண்டலங்களின் துணையுடன் இயங்கும் சூரியன் தன் அலையைக் கொண்டு பிற மண்டலங்களின் அலையை எடுத்துத் தான் வளர்ந்து பிற மண்டலங்களையும் வாழ வைக்கின்றது.

சூரிய அலையை ஈர்க்கும் மண்டலமாக நம் பூமியின் ஜீவன் உள்ளது.
1.சூரிய மண்டலத்திலிருந்து வெளிப்படும் அலையைக் கொண்டு
2.நம் பூமி வெளிப்படுத்தும் அலையின் மோதலில் உருவான ஓ…ம் என்ற ஒலியின் சுழற்சி கொண்டு
3.உருண்டோடும் இவ்வுலக சுழற்சி ஓட்டத்தில் உருவான உயிர் ஜீவன்கள்
4.ஓமுக்குள் ஓமாய் ஓ…ம் என்ற நாதத்துடன் உருண்டோடும் பூமியில்
5.அந்நாதத்தால் உருவான ஜீவ நீரும் காற்றும் ஒளியும் கொண்டு ஜீவத் துடிப்பு பெற்று
5.இந்தப் பூமியின் ஈர்ப்பு ஜீவ உடல் கொண்ட உயிர் பிம்பங்களின் சுவாசத்தில் எடுக்கும் ஒலி தான் “ஓமுக்குள் ஓமாய் உள்ள ஒலி…!”

ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தனித்தொரு நிலையில் எதுவும் இல்லாமல் இரண்டு ஒன்றாகி அவ்வொன்றுடன் பிறிதொன்று சேர்ந்து ஒன்றாகி உருளுகின்ற உயிர் ஜீவ சக்திக்குத் தனித்த சக்தி நிலை எது..?
1.தனித்த ஒன்றான நான் என்ற சக்திக்கு ஜீவனே இல்லை.
2.ஜீவனற்ற சக்தி தான் “நான்” என்ற சக்தி.

இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுடல் பிம்பத்தில் ஏற்படும் எந்த ஒரு பிணியையும் உணர்வால் எடுக்கும் எண்ணத்தின் சக்தியை மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு நீக்கிட முடியும்.

“மேல் நோக்கிய சுவாசமாக…” இவ்வுடல் பிம்ப உணர்வு எண்ணம் கொண்டு உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள பன்னிரெண்டு வகையான குண அமிலத்தையும் ஆறு வகை குண அமிலத்தையும் நற்சக்திப்படுத்தும் நிலை கொண்டு செயல்படுத்திடல் வேண்டும்.

சலிப்பைச் சாந்தமாக்கி…
கோபத்தை வீரமாக்கி…
சங்கடத்தை அன்பாக்கி…
இப்படி உணர்வின் குணத்தால் உந்தப்பட்டு அவற்றினால் உடல் பிம்பத்த்தில் ஏற்கனவே ஏற்றிக் கொண்டுள்ள வியாதியின் தன்மையை மாற்றிட
1.நம் குண நலத்தை ஞான வழி பூண்டு மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
2.நம் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் உடல் பிம்ப ஆரோக்கியத்திற்கு அதை நம் உடலில் பாய வைத்துக் கொண்டு
3.உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் வழித் தொடர் ஜெபத்தையும் பெற்றிடலாம்.

இப்படி இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டல சுழற்சியுடன் சிக்குண்டு வாழ் நாட்களை சலிப்பு சங்கடம் கோபம் வஞ்சனை குரோதம் காமம் வெறி என்ற உணர்வுகளிலிருந்து மாற்றிடும்
1.நற்குணத்தின் அமிலத்தின் வளர்ப்பின் ஞானத்தின் வளர்ச்சியால்
2.எந்த மண்டலத்திலும் செயல் கொள்ளும் நிலை பெற்ற உயிராத்மாவாக
3.நம் உயிராத்மாவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உடல் பிணியின் வேதனைப்பிடியிலிருந்து உணர்வின் எண்ணத்தைச் சுயநலம் மிக்க தன்னலம் கொண்டு செயல்பட்டால் தன்னலத்தின் வளர்ப்பால் பிற நலத்தை வளர்க்கலாம்.

1.உடல் என்ற பிம்பத்தை வைத்துத்தான் எந்த ஞானத்தையும் வளர்க்க முடியும்.
2.உடல் பிணிக்கு ஏற்ற மருந்து தேவை.
3.உணர்வின் பிடிக்கு உணர்வின் எண்ண நிலைக்கொப்ப சுழலவிடாமல்
4.உணர்வின் எண்ணத்திற்கு ஞானம் தேவை.

August 17, 2021

உபதேசம் செய்வது அர்த்தமாகவில்லை...! என்று சொல்கிறார்கள்

 

சாமி (ஞானகுரு) இந்நேரம் வரை உபதேசம் செய்தார்...
1.எனக்கு அர்த்தம் தெரியவில்லையே...! என்று இருக்கவே வேண்டாம்.
2.”என்ன உபதேசிக்கிறார்...” என்று கேட்டுப் பதிவாக்கிக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.

ஒரு டேப்பிற்கு ஒன்றுமே தெரியாது. அதில் உள்ள நாடாவில் தான் முலாம் பூசப்பட்டு இருக்கின்றது. ஆனால் பேசுவது எல்லாம் அதிலே பதிவாகின்றது. வேறு எண்ணம் அதற்கு இல்லை.

உதாரணமாக சிறிய குழந்தைகளுக்கு “அங்கே செல்ல வேண்டும்... இங்கே போக வேண்டும்...” என்ற எண்ணங்கள் இல்லை.

ஒரு பாடல் நன்றாக இருக்கிறது என்றால் குழந்தை அதைச் சும்மா கவனித்துக் கொண்டே இருந்தால் போதும். அதே பாட்டை அதே மெட்டில் அந்தக் குழந்தை பாடத் தொடங்கும்

ஆனால் பெரியவர்கள் ஆயிரம் தடவை கேட்டாலும்... அந்தப் பாடலை அதே மெட்டைப் பாட முடிகிறதா...? என்றால் இல்லை. ஏனென்றால் பல எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றது.

பல ஆயிரம் புத்தகங்களைப் படித்துக் கொண்டு வந்து
1.நாம் இத்தனை புத்தகங்களைப் படித்து இருக்கின்றோம்... சாமி சொல்வது அர்த்தமில்லை...! என்று
2.படித்த நிலைக்கு ஒப்பிட்டுப் பார்த்தால் நான் சொல்வது உங்களுக்கு அர்த்தமாகாது.

ஆகவே அந்த மெய் ஒளியின் தன்மையை உங்களுக்குள் பதிவு செய்து... நாம் அந்த வழியில் பெற வேண்டுமென்று ஏக்கத்துடன் இருந்தால் இது பதிவாகும்.

அந்தப் பதிவான நிலைகள் கொண்டு மீண்டும் தியானத்தில் எண்ணி எடுத்தால்
1.படித்துக் கொண்டு வந்த அனைத்திற்கும் விடைகளை உங்கள் உள்ளத்திலிருந்து கொடுக்கும்
2.இந்த தியானத்தை முறைப்படி எடுத்தால் படித்தது அனைத்தையும் நீங்கள் அர்த்தம் தெரிந்து கொள்வீர்கள்.

காவியங்களைப் பற்றி எல்லாம் உங்களுக்குச் சிறுகச் சிறுகத் தான் பதிவு செய்து கொண்டு வருகின்றேன். சில நேரம் முழுவதும் சொல்கின்றேன்.... சில நேரம் சுருக்கமாகச் சொல்கிறேன்.

முழுவதும் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி உங்களிடம் இல்லை... கொஞ்சம் கொஞ்சமாகச் சொன்னாலும் கிரகிக்கும் சக்தி இல்லை.

இராமாயணமும் மகாபாரதமும் பல மொழிகளில் பாடல்களாகத் தான் எழுதி வைத்திருக்கின்றார்கள். திருவள்ளுவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர்கள் சொல்வதெல்லாம் படித்துவிட்டு அர்த்தமாகிறது என்று எப்படிச் சொல்கிறார்கள்...! என்று தெரியவில்லை. அர்த்தம் தெரிந்து எல்லோருக்கும் தெரிவதில்லை.

குழந்தைப் பருவத்தில் ஒன்றாம் வகுப்பில் பாடம் படிக்கிறோம். தெரிந்து கொண்ட பாடத்தை அங்கே பள்ளியில் சொல்லிக் கொடுப்பதில்லை.

அந்த வகுப்பில் படித்த பின்பு அடுத்த வகுப்பிற்குச் என்றால் ஏற்கனவே தெரிந்த ஒன்றாவது வகுப்புப் பாடத்தை அவர்கள் சொல்லித் தருவதில்லை.

இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் கற்றுக் கொடுத்துத் தேர்ந்த பின்புதான் அடுத்த நிலைக்குப் போகின்றோம். இப்படி வரிசையாகப் போய்ப் பனிரெண்டாம் கிளாஸ் வரை போகின்றோம்.

அத்தனையும் படித்தாலும் அதற்குப் பின் இன்ஜினியருக்கு போகிறாயா...? மருத்துவத்திற்குப் போகிறாயா...? என்று கேட்கின்றார்கள். படித்ததற்குத் தகுந்த மாதிரித் தேர்வு வைத்து டாக்டராகவோ இன்ஜினியராகவோ செல்லலாம் என்று அங்கே பிரிக்கின்றார்கள்.

பிரித்த பிற்பாடு அப்புறம் படித்துத் தான் கல்லூரியில் தெரிந்து கொள்ள வேண்டுமே தவிர படிக்காமல் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.

1.நான் பல புத்தகங்களை ஏற்கனவே படித்திருக்கிறேன் என்று படித்த நிலையைச் சொல்லிக் கொண்டு
2.கல்லூரிப் பாடத்தைப் படிக்க வேண்டும் என்று இல்லாதபடி
3.“இச்ச்....” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டால் அந்தப் பாட நிலை ஏறாது.

கல்லூரரிப் படிப்பைச் சீராகப் படித்துப் பதிவாக்கி அந்த உணர்வின் சக்தியை நமக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அங்கே தேர்வாக முடியும்.

சிலர் நிறையப் படித்து விட்டு வந்து...
1.என்னமோ இந்தச் சாமி சொல்கிறார்...
2.வேண்டுமென்றால் கேட்டு விட்டுப் போவோம் என்ற நிலையில் இருக்கின்றனர்.
3.படித்த நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்படித்தான் வரும்.

ஏனென்றால் இந்த வாழ்க்கை... இந்த இயற்கை... எப்படி நிகழ்ந்து கொடுக்கிறது...? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் முக்கியம்.

ஆகவே...
1.நாம் “குழந்தை உள்ளங்களாக” இருந்து
2.அந்த மெய் ஒளியைப் பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் இருந்தால்
3.யாம் உபதேசிக்கும் அனைத்தும் நிச்சயம் உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகும்.

மனிதனைக் காக்கும் மருத்துவம் பொருளை ஈட்டும் நோக்கத்திலேயே வளர்ந்து விட்டது - ஈஸ்வரபட்டர்

 

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் வரக்கூடிய வியாதிகள் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

கை கால் உணர்விழந்து வாதப்பிடிப்பு நோய்கள் எப்படி வருகின்றன…?

1.கோப உணர்வை வளரவிட்டுப் படபடக்கும் உணர்வுடன்
2.சலிப்பு சோம்பல் என்ற சங்கடத்துடன் கோப உணர்வின் அலையை மீண்டும் மீண்டும் எடுத்து அதனை அடக்கி
3.தன் சந்தோஷ உணர்வைக் கூட்டிக் கொள்ள உந்தலை அடக்கி
4.மற்றொரு உணர்வின் ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி
5.கோபத்தினால் வரக்கூடிய விளைவுகளைக் கண்டு அஞ்சி
6.சந்தோஷத்தால் மாற்றியமைக்க முடியும் என்ற தன் எண்ணத்தை மாற்றியமைத்து
7.இன்பம் என்று எதனைச் செயல்படுத்த எண்ணுகின்றானோ
8.இவ்விரண்டு அலைகளும் இவன் உணர்ந்து எண்ணும் எண்ணத்தால் சுவாசமுடன் மோதுண்டு
9.சத்ரு மித்ரு நிலையாகி நரம்புகளின் இயக்கத் தன்மை குறைவாகி உணர்வின் ஈர்ப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டு
10.சிறு மூளை பெருமூளை நரம்புகள் சரிவர இரத்த ஓட்டங்கள் ஓடப் பெறாமல் சில அடைப்புகளாகி
11.அதனால் வரும் வியாதிகள் தானப்பா இந்த வாத நோய்கள் எல்லாம்.

தோல்களில் ஏற்படும் சர்ம வியாதிகள் எப்படி வருகின்றன…? கட்டிகளும் சில புண்களும் எப்படி வருகின்றன…? உடலில் உள்ள பாக்கித் தன்மை எல்லாம் சரி வர இருந்தாலும் சர்மங்களில் ஏற்படும் ஒரு சில வியாதிகள் எப்படி வருகின்றன…?

உடலில் உள்ள சிறு உறுப்பிற்கும் நகம் முதற் கொண்டு ரோமங்கள் வரை ஜீவ சக்தி இருந்தால் தான் சீராக வளர்கின்றது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்குகந்த அமில ஈர்ப்பை அந்தந்த உறுப்புகளே தனக்குகந்த ஆகாரத்தைத்தான் எடுத்து வளர்கின்றது.

நகத்தின் அமிலமும் பற்கள் ரோமம் எலும்பு சதை எல்லாமே அதனதன் குண அமில ஆகாரத்தைத் தன் ஈர்ப்பின் சுவாசத்தால் எடுத்துத் தான் வாழ்கின்றன.

இப்படி வாழும் நிலையில் சர்மங்களில் அந்தந்த இடங்களின் ஈர்ப்பு ஜீவ சக்தி பாதிக்கும் பொழுது அதற்குகந்த துடிப்பு உணர்வை எடுக்காத முறையில் ஏற்படுவது தான் உடலில் ஏற்படும் சில கொப்பளங்களும் நகங்களின் வெடிப்புத் தன்மையும்.

ஈறுகளில் ஏற்படும் விஷ அணுக்களின் தாக்குதலினால் பற்களில் வியாதியும் சில அமில பாதிப்பால் ரோம (தலை முடி) வளர்ச்சி குன்றி உதிர்வதும் ஏற்படுகின்றன.

மனித எண்ண உணர்வு நிலைக்கொப்ப வியாதிகள் வரும் பொழுது இன்றைய விஞ்ஞானத்தால் சில செயற்கை முறை கொண்ட மருத்துவத்தால் பல சாதனைகளைச் செய்கிறார்கள்.

டி,பி வியாதிக்கெல்லாம் அந்த வியாதிக் கிருமியை அழிக்க அதற்கு மேல் சக்தி கொண்ட சில மருந்துகளைச் செலுத்தி இவ்விஷ விரிய சக்தி உடலைப் பாதிக்காமல் இருக்க அதற்கு மாற்று மருந்தையும் அதனுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.

1.உள்ள வியாதியை மற்றொரு சக்தியினால் அதனை மாற்றி…
2.மாற்றக்கூடிய அச்சக்திக்கு அதன் வீரிய குண படர்ப்பு உடலைப் பாதிக்காமல் இருக்க
3.மற்றொரு மருந்தையும் தந்து தான் விஞ்ஞான மருத்துவம் இன்றுள்ளது.

புற்று நோய்க்கெல்லாம் உறுப்புகளில் எந்தெந்தப் பாகத்தில் அதிகமாகத் தாக்கப்பட்டு அதனை ஆரம்ப காலத்தில் கண்டுணரும் முறை கொண்டு அந்தந்த உறுப்புகளை நீக்கி விடுகின்றனர்.

அதாவது உயிர் வாழக்கூடிய நிலை இருந்தால் கருப்பை மார்பகங்கள் குடல்கள் இவற்றின் நிலையில் புற்று நோய் தாக்கப்பட்ட இடங்களை நீக்கிச் செயல் கொள்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

நீக்கிவிட்டு உயிர் வாழ முடியாத பாகமாக இருந்தால் அத்தகைய தாக்குண்ட இடங்களில் உள்ள புற்று வியாதியை கதிரியக்கம் கொண்டு மின் அலையினால் அந்தந்தப் பாகங்களைச் செயலிழக்கச் செய்து செயல் கொள்ள வைக்கின்றார்கள்.

1.மின் அலையின் சாதனத்தால் உடல் மண்டல நரம்புகள் அனைத்தும் செயல் கொள்ளும் முறைகளையும்
2.உடல் உறுப்பின் உள் நிலைகளைக் காணக்கூடிய சாதனைகளையும் (X RAY, SCAN) இன்றைய விஞ்ஞானம் செய்கிறது.

இன்னும் பல விநோதக் கருவிகளை உருவாக்கி அதன் மூலம் உடல் முழுவதையுமே ஆராய்ந்து உயிர் காக்கும் செயல் ரூபம் அனைத்துமே
1.இன்று பொருளை ஈட்டும் வழியில் தான்…
2.விஞ்ஞான மருத்துவத்தில் வளர்ந்து கொண்டுள்ளதே தவிர
3.உணர்வின் எண்ணம் கொண்டு
4.நாம் எடுக்கும் சுவாசத்திற்கு வலுத் தந்து வளர்க்கும்
5.உன்னத சக்தியின் அலையை ஈர்ப்பார் யாரும் இல்லை…!

உடலில் தசைகளில் உருவான நோய்களை அகற்றினாலும் எண்ணத்தின் உணர்வால் உருவான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது.