ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 29, 2024

சுவாசத்தின் மூலம் (காற்றிலிருந்து) உணவை எடுப்பதே பேரின்பச் சுவை

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.
1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை...!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை...!”
3.இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்...” கிடைக்கின்றது.

எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது... “தான் உணர்ந்து... அனுபவத் தன்மையால்... பதிவு செயல் நடைபெறுகிறது...!”

உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்ட வலுக் கொண்ட கால கட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.

காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா...!) மறை பொருளாக நிற்கும்.

பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும் காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்.. “நம்மை அதன் வழியிலேயே இயக்கும்...!”

ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா - தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.

இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் அது உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்...” உபயோகப்படுத்தப்படும்.

ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.

ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்...!

விஷத்தின் இயக்கமும்… விஷத்தை முறிக்கும் அதனின் சில செயலாக்கங்களும்

மாமரத்தின் சத்தும் ரோஜாப் பூவின் சத்தும் விஷச் செடியின் சத்தும் சந்தர்ப்பவசத்தால் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலவையாகி… புவியின் ஈர்ப்பிற்குள் சிக்கப்பட்டுக் கருவுற்றுச் செடியாக விளையப்படும் பொழுது அரளிச் செடியாக மாறுகின்றது. அந்த மூன்றும் ஒன்றாக இணைந்து அரளிச் செடியாக மாறுகின்றது.

அரளிச் செடியாக மாறும் பொழுது
1.மாமரம் போல் இலைகள் இருந்தாலும் அதிலே சில வித்தியாசங்களும்
2.ரோஜாப் பூவைப் போன்று இருப்பினும் மணமும் கொண்டாலும்
3.விஷத்தன்மைகள் கலக்கப்படும் பொழுது அந்தச் செடி விஷத்தன்மை கொண்டதாகி விடுகிறது.

விஷச் செடியின் சத்து பத்து சதவீதம் ரோஜாப்பூவின் சத்து மூன்று சதவீதம் மாமரத்தின் சத்து பத்து சதவீதம் கவரப்பட்டு இந்த உணர்வுகள் ஒன்றாக இணைந்து ஒரு வித்தாக பூமியிலே பதியும் பொழுது “அதனதன் சதவீதம்” காற்றிலிருந்து இழுத்து அரளிச் செடியாக விளைகின்றது.

செடி உருவான பின் அந்த அரளிப் பூவில் ரோஜாப்பூ போன்ற மணங்கள் வரும்.
1.அரளிப் பூவைச் சாப்பிட்டால் மயக்கம் வரும்
2.அரளி விதையை உட்கொண்டால் மனிதனை மாய்த்துவிடும்.
3.ஆனால் அரளிச் செடியின் மணத்தை நுகர்ந்தால் “நம் உடலில் இருக்கக்கூடிய தீமையான அணுக்களைக் கொன்று விடும்…”

இதிலே இத்தனை வித்தியாசங்கள் உண்டு…!

அந்த அரளிப்பூக்களை எடுத்து சூரிய புடமாக்கி… தேங்காய் எண்ணெயில் கலந்து அதைக் காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்குக் கால்கள் வீக்கமாகி நீர் வடியும்…
1.அந்த இடங்களில் காய்ச்சிய இந்த எண்ணையைத் தடவினால் அரிப்பு நின்றுவிடு.ம்
2.நீராக வடியும் அந்த இடத்திலிருக்கக்கூடிய விஷத்தன்மைகளும் மடிந்து… அந்தத் தோல் நன்றாக ஆகிவிடும்.

அந்த அரளியிலேயே ஓரடுக்கு அரளி… பல அடுக்கு அரளி என்றெல்லாம் உண்டு.

நம்மை அறியாது தோலில் சேரும் சில விஷத்தன்மைகளால் இதனுடைய மணம் பட்ட பின் அது தோலை உருவக்கிய நல்ல அணுக்கள் மடிவதும்… அதனின் மலம் பட்டபின் தசைகள் குறைவதும் நீராக வடிவதும்… அந்த நீரையே உணவாக எடுத்து உட்கொள்ளும் நிலை பெறுகிறது (தோல் சம்பந்தப்பட்ட வியாதி).

அத்தகைய அணுக்கள் மடிந்தால் சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து கொள்கிறது. பின் அந்த மனிதனுடன் யாரெல்லாம் தொடர் கொண்டு பேசுகின்றார்களோ அல்லது பழகுகின்றார்களோ
1.அவருடைய சுவாசத்திற்குள் அந்த விஷ அணுக்கள் சென்று உடலில் அரிப்புத் தன்மையாகி
2.சுவாசப் பைகளிலும் அரிப்பாகி… தன்னை அறியாது வேதனைப்படும் நிலை வரும்.

ஒரு மனிதனில் விளைந்த அந்த நோயின் உணர்வு இங்கே வந்து விடுகின்றது. ஏனென்றால் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்ட அத்தகைய உணர்வுகளை நாம் நுகரப்படும் போது உயிர் ஓ… என்று ஜீவ அணுவாக ஆக்கி ம்… என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது… நோயாக உருவாக்கி விடுகிறது.

இது எல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய செயல்கள். இதையெல்லாம் நாம் மாற்றிப் பழக வேண்டும்.

குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டிய நிலைகளைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

1.வாக்குடன் கொடுக்கின்றேன்… புரிந்து கொள்ளுங்கள்.
2.யாம் சொன்னதை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.

February 28, 2024

நம்முடைய கடைசி எல்லை

மீண்டும் மீண்டும் யாம் உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…
1.ஞானிகளால் உணர்த்தப்பட்ட பேருண்மைகளை…
2.அவர்கள் வழியிலேயே அதை அறிந்து… நாம் எவ்வாறு வாழ வேண்டும்…?
3.இந்த வாழ்க்கையில் எவ்வாறு தெளிவுடன் செயல்பட வேண்டும்…?
4.இந்தப் பிறவிக்குப் பின் அடுத்து நாம் எந்த உடலைப் பெற வேண்டும் என்பதனைத் தான்…!

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன்… சந்தர்ப்பத்தால் அவனுக்குள் விளைந்த நஞ்சினை வென்றிடும் ஆற்றலைத் தனக்குள் பெற்றான்.

அந்த உணர்வின் துணை கொண்டு “வான இயலின்” ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து… அது “புவி இயலாக” மாறும் பொழுது தாவர இனங்களாக உருவாகுவதையும்… அந்தத் தாவர இனங்களின் சத்தினை உயிரணுக்கள் (உயிர்கள்) நுகர்ந்து தனக்குள் அணுக்களாக மாற்றி உடல்களாக உருவாகுவதையும்… “உயிரியலாக” மாறுவதையும் அறிந்துணர்ந்தான்.

அதே சமயத்தில்
1.உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்கள் பெற்ற பின்
2.அதனுடைய கடைசி முடிவு… அதனுடைய கடைசி எல்லை எது…? என்பதனையும் அகஸ்தியன் அறிந்து கொண்டான்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி பேரருள் பேரொளியாக துருவ நட்சத்திரமாகி… துருவத்தை எல்லையாக வைத்து இன்றும் தனது வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டு… அகண்ட அண்டத்திலிருந்து வருவது அனைத்தையும் ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளான் துருவ மகரிஷி… துருவ நட்சத்திரமாக…!

அதாவது உயிரணு தோன்றி பரிணாம வளர்ச்சியில் மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி… அதையே கடைசி எல்லையாகப் பிறவி இல்லா நிலைகள் கொண்டு வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் துருவ மகரிஷி.

அவனின்று விளைந்த உணர்வுகளை… அவனுக்குப் பின் வந்த மக்கள் யார் யாரெல்லாம் அதை நுகர்ந்து கொண்டனரோ… ஆறாவது அறிவை ஏழாவது நிலை ஒளியாக மாற்றும் திறன் கொண்டு… துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றனர்.

ஆதியில் விண் சென்ற முதல் மனிதனான அகஸ்தியன்
1.அவன் வாழ்ந்த காலத்தில் தன் வாழ்க்கையை எவ்வாறு வழி நடத்தினானோ அவன் வழிப்படி நாமும் சென்றால்
2.மனிதனின் கடைசி எல்லையான சப்தரிஷி மண்டலங்களுடன் இணைந்து பிறவி இல்லா நிலை அடையலாம்
3.இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றும் நிலை கொண்டு வாழலாம்.

உயிரணு தோன்றி மனிதனான பின் உணர்வினை ஒளியாக மாற்றி அமைத்து உயிருடன் ஒன்றி வாழும் துருவ மகரிஷியின் உணர்வுகளை நுகர்ந்து… நாம் அனைவரும் அதனின் ஈர்ப்பு வட்டதில் சப்தரிஷி மண்டலங்களாக வாழ முடியும்.

இராவணன் + ஈஸ்வரன்... “இராவணேஸ்வரன்” என்பதன் உட்பொருள்

 

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்... சகோதரப் பாசம் என்றும்... உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி...” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

“விதியின் பின் இராமன்...!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை
1.ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும்
3.காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி...! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல... விதி முன் செல்ல... இராமன் பின் செல்ல... பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன...?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது
1.உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தையும் காட்டி
2.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
3.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும் என்று தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள் பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்...! அது இராமனானாலும் சரி... இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி... ஒன்றி... அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல...!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்...! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்...! என்ற குணத் தன்மைக்கு
2.தானே - அவனே காரணம் ஆயினான்.
3.ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது...? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…! 

February 27, 2024

“மாயமான்” என்னும் உலக மாயை - ஆசை வழி இழுக்கும் உணர்வுகளின் உந்துதல்

இராமன் என்றும் லட்சுமணன் என்றும் சீதை என்றும் அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் (உபதேசம்) கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.

ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வந்ததும் எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் ஆசை நிலையைச் சித்தரிப்பதே “மாயமான்...!”

அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வேரூன்றி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை. “ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.

உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)

ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை... சூட்சமமாகப் பொருள்படுத்தியது...!”
1.எல்லாம் ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்
2.வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்...!.
3.ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
4.அந்த உலகோதய ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
5.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.

ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து... பலம் குன்றுவதைக் காட்டவே... இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.

அதாவது மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டித் தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள்
1.தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி… ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் உலகோதய “அதி ஆசை நிலை...!”
4.இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை...”

மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி மாயமானாகிய அதி ஆசை நிலையைத் தான் தகர்க்கின்றது. ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உரு கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தியூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

எப்படி...?

உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.

ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.

அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.

அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலகோதய ஆசை நிலையாகிய மாய மான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன...! ஏன்...?

காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்...!

அது மட்டுமல்ல...! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி...!)

உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
1.மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக
2.தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும்
3.எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டி
4.உயிரான்மாக்கள் பெறும் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
5.மதி வழி முன் சென்றால்... வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்...! என்று அருளியுள்ளார் அந்த வான்மீகி மாமகரிஷி...!

உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது… உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது

ஆற்றிலோ அல்லது ஒரு குளத்திலோ (நீருக்குள்) ஒரு கல்லினைப் போட்டால் அந்த இடத்தில் பளீர் என்று விலகிக் கொள்ளும். அடுத்து அது மூடிக்கொள்ளும்.

அது போன்று தான்
1.பக்தி மார்க்கத்தில் மூழ்கிய நிலைகள் கொண்டு உண்மைகளை மறைத்த நிலைகள் கொண்டு
2.அந்த ஞானிகள் உணர்த்திய உண்மைகளைச் சொல்லி அதற்குண்டான விளக்க உரைகளை இப்போது யாம் (ஞானகுரு) கொடுத்தாலும்
3.கேட்கும் பொழுது பளிச்… என்று அலைகள் உங்களுக்குள் படர்கிறது.
4.ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் மூடி சம நிலை அடைந்து விடுகின்றது.

நல்ல உணர்வுகள் மறைந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் தீமையின் நிலைகள் வளராது உடனுக்குடன் அதைத் தடுப்பதற்குத் தான் இதனை உங்களுக்குள் அறிவிப்பது.

ஆகவே எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் எங்கு சென்றாலும் “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினை உயிருடன் ஒன்றச் செய்து உள்முகமாகச் செலுத்தி
1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உடல் முழுவதும் படர வேண்டும்
2.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இப்படி ஐந்து முறை ஆறு முறை உள்ளே சக்கரம் போன்று சுழற்றுங்கள்.
3.உங்கள் ஜீவான்மாக்களைச் சுத்தப்படுத்துங்கள்… உங்களுக்கு முன் இருக்கக்கூடிய ஆன்மாவைச் சுத்தப்படுத்துங்கள்

தொழிலோ மற்ற எந்தக் காரியங்களோ அங்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்… நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்… நாங்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

எங்களுடன் தொழில் செய்பவர்கள் எங்களிடம் வேலை செய்வோர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்… நாங்கள் ஒன்று சேர்ந்து தொழிலை வளம் பெறச் செய்ய வேண்டும்… அறியாது சேர்ந்த இருளை நீக்கும் ஆற்றல் நாங்கள் பெற வேண்டும்…! என்று ஆன்மாவை அடிக்கடி இப்படி எண்ணிச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

அருள் உணர்வைப் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கை வாழ்ந்தால் என்றுமே அது மகிழ்ந்து வாழும் சக்தியாக அமையும். வரும் தீமைகளை உடனுக்குடன் அகற்றிட முடியும்.

அதே போல் உங்கள் குடும்பத்தில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை நிவர்த்திக்கும் பழக்கம் வர வேண்டும்.

1.இந்த உடல் உங்களது அல்ல
2.எண்ணும் எண்ணம் உங்களது அல்ல
3.உணர்வின் இயக்கமாக உயிர் இயக்குகின்றது
4.உணரும் அறிவே நமக்குள் இருக்கின்றது
5.அறிவின் உணர்வாகத் தான் நம் உணர்வின் தன்மை செயல்படுகின்றது.

ஆகவே அந்த ஞானிகள் காட்டிய அருள் உணர்வுடன் ஒன்றுவோம் அருள் ஞானிகள் பெற்ற ஆற்றலை நாம் பெறுவோம். அறியாது வந்த தீமைகளை அகற்றுவோம்.
1.மகரிஷிகளின் அருள் வட்டத்தை எல்லையாகக் குறி வைத்து
2.இந்த வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம்.

அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நீங்கள் மகிழ்ந்து வாழ்ந்திட எமது குரு அருளும் எமது ஆசியும் உங்களுக்குள் உறுதுணையாக இருக்கும். உங்களை அறியாத வந்த தீமைகள் அகன்று… மெய் உணர்வுடன் ஒன்றி… பேரானந்தப் பெருநிலை பெறுவீர்கள் என்று பிராத்திக்கின்றேன் (ஞானகுரு).

February 26, 2024

விஞ்ஞான உலகில் “நரகலோகத்தைச் சந்திக்கிறோம்” என்று கண்கூடாகவே பார்க்கின்றோம்

விஞ்ஞான உலகில் வாழ்கிறோம். உடல் பற்றுடன் இருப்போம் என்றால் மருத்துவமனைகளில் இன்று பார்க்கலாம்… ஒரு மனிதனுக்குக் கேன்சர் வந்து விட்டால் எத்தனை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்…?

நோயைக் கண்டுபிடிப்பதற்காக மனம் உவந்து
1.மூக்கிலும் வாயிலும் மற்ற இடங்களிலும் டியூபுகளைச் சொருகுவதும்
2.தலையோ மற்ற இடங்களில் உள்ள உறுப்புகளை அறுத்துப் பரீட்சிப்பதும்
3.சில நேரங்களில் அந்த உறுப்புகளை அகற்றி மாற்று உறுப்புகளையும் வைத்துச் செயல்படுத்துகின்றார்கள்.
4.எத்தகைய நரகலோகத்தைச் சந்திக்கிறோம் என்று பாருங்கள்.

இதை எல்லாம் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஆனால் ஞானிகள் அன்றே இதைக் காட்டினார்கள். சித்திரபுத்திரன் கணக்கின் பிரகாரம் எமன் தண்டனை கொடுக்கின்றான் என்று…!

கண்களால் பிறரை உற்றுப் பார்த்து பரிவுடன் அவர்கள் வேதனைகளைக் கேட்டறிந்தாலும்… கண்களால் பார்த்து நுகர்ந்த அவருக்குள் விளைந்த (வேதனை) உணர்வுகளை நமக்குள் கவரப்படும் பொழுது அது புத்திரனாக… அணுக்களாக இங்கே வந்துவிடுகிறது.

அவன் கஷ்டப்படுகிறான்… கஷ்டப்படுகிறான்… என்று
1.பாசத்தால் நாம் சொன்னால் பாசக் கயிறாக வழி தொடர்ந்து சிந்திக்கும் திறன் அனைத்தும் இழக்கப்பட்டு
2.எமன் எருமை மீது வாகனமாக வருவது போன்று சிந்தனையற்ற நிலைகள் ஆகி
3.தீய வினைகளாக நம் உடலில் அது விளைந்து உறுப்புகள் கெடுகிறது.

அந்த உறுப்புகளைச் சீர்படுத்த நாம் அறுவை சிகிச்சைகள் செய்வது போன்று அந்த எமலோகத்தைக் காட்டியிருப்பார்கள்.

அதாவது… நம் எண்ணமே தீமைகளை விளைய வைக்கும் உறைவிடமாக எமலோகமாக மாறி… நல்ல உணர்வுகளை அது எப்படி அழிக்கின்றது…? என்ற நிலையைக் காட்டுவதற்காகக் காவியமாக எடுத்துரைத்துள்ளார்கள். நாம் எளிதாகப் புரிந்து கொள்வதற்குப் படங்களாகவும் வரைந்து காட்டி உள்ளார்கள்.

எமலோகத்தின் செயல்கள்…
1.எமன் அழைத்துச் சென்ற பின் எண்ணெய்க் கொப்பரையில் போட்டு ஆட்டுவதும்
2.மண்டையை ரம்பத்தை வைத்து அறுப்பதும் கை கால்களைத் துண்டிப்பதும்
3.தலைகீழாகத் தொங்க விடுவதும் நெருப்பிலே வைத்து எரிப்பதும் போன்ற எத்தனையோ நிலைகளைக் காட்டியிருப்பார்கள்.

குழந்தைப் பருவத்திலிருந்து எத்தனையோ நிலை நமக்குள் விளைந்தது… இந்த உடல் என்ற சொர்க்கலோகத்தில்… எண்ணத்தால் எமலோகத்திற்குள் சிக்கி அறியாமலே நம் உடலுக்குள் எத்தனை அறுவை சிகிச்சைகள் (ண்ஹரக வேதனைப்படும்படியாக) நடக்கிறது…? அன்று மெய் ஞானிகள் காட்டினார்கள்.

விஞ்ஞான அறிவால் கண்கூடாக நம் உடலுக்குள் அனுபவிக்கின்றோம்.

உடல் இந்த சொர்க்கலோகத்தை நாம் மறந்திடலாகாது. அதிலே நாம் எண்ணியது அனைத்தும் இந்திரலோகமாக மாறி உடலாக மாறிக் கொண்டுள்ளது என்பதை உணர்தல் வேண்டும்.

1.மெய் உலகான அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் நீங்கள் ஒன்றி வேகா நிலை என்ற முழுமை அடைந்திட
2.என் குருநாதர் காட்டிய நிலைகளை உங்களுக்குள் உபதேசிக்கின்றேன்.
3.இந்த உபதேசத்தின் வாயிலாக அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்தியை
4.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு).

எல்லோரும் அந்த உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று நான் (ஈஸ்வரபட்டர்) கொடுத்த சக்தியை அவர்களுக்குள் விளைய வைத்து என்று நீ செயல்படுகின்றாயோ
1.அந்த உணர்வுகளால் நீயும் உயர்ந்த நிலை பெறுகின்றாய்
2.அவர்களும் உன்னுடன் ஒன்றி வருகின்றார்கள்.
3.அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் மகிழ்ந்து வாழும் நிலை பெற வேண்டும்.

இதைத்தான் குருநாதர் எனக்குக் காட்டினார். அவர் காட்டிய நெறிகளைக் கடைப்பிடித்து… பத்தாவது நிலையான கல்கி என்ற “உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவோம்.

February 25, 2024

தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்

எந்த நிலை பெற வேண்டி விழையும் (ஆர்வம், விருப்பம்) மனம் அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில்
1.செயல் நிலை எப்பொருளோ அப்பொருளே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளே வீரிய வளர்ப்பாகவும்
3.அப்படிச் செயல்படுத்தும் நிலை எதுவோ அதுவே “முயற்சி...!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது...?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது. அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம் தன்னுள் விழும் நிலை கருத்தறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின் வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்கு வருகிறது. இருந்தாலும் சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் என்பது போல் “முயற்சி விளைவாக்கும்...!”
2.முத்தாக விளையாவிட்டால் என்ன செய்வது...! என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை (இது முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) உலகோதய உடல் வாழ்க்கை மோதல்கள் நடை பெறும் கால கட்டத்தில்... விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்... தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்குத் “தான் ஏகும் முறை என்பது...”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்...! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை...! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்... ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே... உலக நியதி இயங்குகிறது...! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்...!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை... மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்...! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி விதி வழி செல்லும் செயல் வாழ்க்கையில் அதிலே வனத்தில் பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில்… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது...!

நம்முடைய தினசரி தியானம் எந்த அடிப்படையில் இருக்கிறது…?

மனித வாழ்க்கையில் நமக்குள் உயர்ந்த குணங்கள் இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அதனின் இயக்கச் சக்திகள் மறைந்து நஞ்சுக்குள் சிக்கித் தவிக்கும் நிலைகள் வந்து விடுகின்றது.

இதையெல்லாம் அறிந்து கொள்வதற்கு எத்தனையோ காவியங்களை ஞானிகள் எடுத்துரைத்துள்ளார்கள்.

ஆனால் ஆறாவது அறிவைப் பயன்படுத்த முடியாது அதை இழந்ததனால் இன்று எவரோ செய்வார்… தெய்வம் செய்யும்… ஜோதிடம் செய்யும்… காலங்கள் செய்யும்… யாகங்கள் செய்யும்… சாமியார் செய்வார்… மற்றவர்கள் செய்வார்கள்…! என்ற இத்தகைய எண்ணங்களைத் தான் பரப்பி வைத்திருக்கின்றோமே தவிர “தன்னை நம்பப் பழகவில்லை…”

ஏனென்றால் நாம் எத்தகைய உணர்வை நமக்குள் இணைக்கின்றோமோ நமது உயிர் அதை இயக்கி நமது உடலாக மாற்றி விடுகிறது. அதாவது
1.நாம் எண்ணிய உணர்வுகளை வித்தாக (வினையாக) மாற்றி அந்த வித்தின் நிலையை இயக்கி
2.நாம் எடுத்துக் கொண்ட உயர்ந்த உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி அதே உணர்வின் உடலாக இயக்கி
3.அந்த உணர்வின் சத்துக்களாக நமக்குள் எவ்வாறு விளைகிறது என்ற நிலையை
4.ஞானிகள் தெளிவாக எடுத்துக்காட்டி இருந்தாலும் அதனை அறியாது இன்றும் இருக்கின்றோம்.

மற்ற உயிரினங்கள் அதனுடைய (எண்ணத்தால்) தியானத்தால் மனிதனாக வளர்ச்சிக்கு வருகின்றது. அப்படித் தான் நாம் வந்துள்ளோம். ஆனால்
1.மனிதனான பின் தீமைகள் அகற்ற முடியும்
2.மெய் ஞானிகளின் உணர்வை நுகர்ந்து நமக்குள் உயர்ந்த நிலைகளை உருவாக்க முடியும் என்று இருந்தாலும்
3.இப்போது நாம் எதைத் தியானிக்கிறோம்…? என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நமது குழந்தையை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதே சமயம் குழந்தை நாம் எண்ணியபடி கல்வியில் சிறந்து வரவில்லை என்றால் அவனைக் கண்டு “இவன் இப்படி இருக்கின்றானே… அவன் எதிர்காலம் என்னவாகும்…?” என்று வேதனைப்படுகின்றோம்.

இந்த வேதனையை மீண்டும் மீண்டும் எடுத்து அவனிடம் கடிந்து இரண்டு தரம் அழுத்தமாகப் பேசும் பொழுது அவன் நம் மீது பாசமாக இருக்கும் உணர்வுகளுடன் கலந்து விடுகிறது.

1.நமக்குள் விளைய வைத்த வேதனையான நஞ்சை அவனுக்குள் பாய்ச்சப்படும் பொழுது
2.நம் சொல் கடினமாகி அவனுக்குள் அவன் அறியாது இயக்க நிலைகள் தடையாகி
3.உடல் நலக் குறைவாகி… காய்ச்சலோ மற்ற குறைபாடோ வந்து விடுகிறது.

ஆனால் அவன் தவறு செய்யவில்லை… நம்முடைய நிலைகள் இவ்வாறு ஆகிவிடுகிறது. இந்த மாதிரி நேரங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்…? ஆனால் என்ன செய்கின்றோம்…!

குழந்தையை எண்ணி எண்ணி இப்படி ஆகிவிட்டானே என்று வேதனையை பாய்ச்சியபின் அந்தக் காய்ச்சலாகும் போது நமக்குள் வேதனை இன்னும் அதிகரிக்கிறது.

அவனைக் காத்திடும் நிலை கொண்டு… “வேதனைகளையே” நமக்குள் சமைத்துச் சமைத்து அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம்.

அவன் காய்ச்சலாக இருக்கப்படும் பொழுது “டேய் கண்ணு… கொஞ்சம் சாப்பிடுடா…!” என்று சொல்கின்றோம்.

அந்த வேதனையால் அவனால் உணவு உட்கொள்ள முடியவில்லை என்றால்… “சாப்பிட வேண்டும்…” என்று அழுத்திச் சொல்லப்படும் போது இன்னும் கொஞ்சம் அவனுக்கு வேதனை அதிகமாகி “நீ போ…” என்று வேகமாகச் சொல்லி விடுகின்றான்.

நாம் அதைக் கேட்ட பின்… அடப் பாவமே… அவன் சாப்பிடவில்லையே இரண்டு நாட்களாகி விட்டது… மூன்று நாட்களாக ஆகிவிட்டதே…! என்ற தாய்ப் பாசத்தால் இந்த உணர்வை நுகர்ந்து
1.அங்கே விளையும் நஞ்சினை இங்கே வித்தாக விளைய வைத்து
2.அவனை எண்ணும்போதெல்லாம் இது ஒரு தியானம் தான்.

இப்படி இருக்கின்றானே…! அவன் என்ன ஆவான்…? என்ற இந்த வித்தினை உருவாக்கி… அந்த உணர்வின் சத்தை நமக்குள் கருவாக்கி… அவனின் நிலையைத் தியானித்து… அந்தத் தீய வினையே நமக்குள் உருவாகிவிடுகிறது.

நாம் தவறு செய்யவில்லை அவனும் தவறு செய்யவில்லை
1.அவன் உயர வேண்டும் என்ற எண்ணத்தை வைத்தோம்
2.உயர வேண்டும் என்ற “செயலை” நமக்குள் வைக்கவில்லை.

பால் சத்தாக இருந்தாலும் அதற்குள் நஞ்சினை விட்டால் அது அந்தப் பாலைச் செயலற்றதாக ஆக்குவது போன்று “நம்முடைய நல்ல உணர்வுகள்” நாம் நுகர்ந்த உணர்வுகளால் நஞ்சாகப் பாய்ந்து… நஞ்சின் செயலாகவே மாறி விடுகின்றது.

இப்படித்தான் இன்று
1.குறைகளை எண்ணி எண்ணி அதையே தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.
2.ஆகவே நாம் எதைத் தியானிக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

காமாட்சி

காமத்தின் அடியாகப் பிறக்கும் “மோகம்...” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளை தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.

1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் தொட்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் வழியமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட
5.சபலம் (மோகம்) தானே தன் வழி செல்லா நிலையில் மறைந்து விடும்.

குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் சபலத்தின் வழியில் சிக்காதபடி பயிற்சி வழி முறைகளைக் காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குண செயல்பாட்டையும் போதிப்பார்.

அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் காவியம் இராமாயணத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்...!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்...!” என்றும் காட்டுகிறார்கள்.

அதனின் உட் கருத்து
1.ரிஷித் தன்மை பெற வழி காட்டும் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி
2.ரிஷி பத்தினி சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.

விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.

ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்...” அதையே “காமாட்சி...” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமுமே.

ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்...?

அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.

அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைச் “சாப நீக்குப் படலம்...” என்று செயல்படுத்தி ரிஷி பத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.

கௌதம முனிவருக்குத் தன் நிலை உயர்த்த ரிஷி பத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனதால்
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்...! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!”

சபல குணம் என்று உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.

சபல குண வலையில் விழுந்ததால்... தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்... இந்திரனால்... “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்...” என்பது மோக குணத்தால் தான்…!

1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை...!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!

ரிஷி பத்தினி என்ற சிறப்பை
1.அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுது தான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்பதையும்
2.சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வான இயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி
3.உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.

இதே தொடர்பை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.

அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியூட்டித் தானும் அந்த முனிவனின் சக்தியுடன் ஒன்றுதல் என்பதே
1.பால்வெளி சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் தான் ரிஷி பத்தினிச் சக்தியாகக் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும் என்று காட்டுகின்றார்.

இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே... பலர் “சபல குணத்தை இந்திரன்...” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.

இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன...?

அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.ஜெபம் என்ற வழி முறையை... அந்த உயர்வைப் பெறும் வழியை...
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.

February 24, 2024

குல வழியில் வரும் சாப அலைகளின் தாக்கம்

நம்முடைய மூதாதையர்கள் பண்டைய காலங்களில் இரண்டு தலைமுறை அல்லது மூன்று தலைமுறை வரையிலும் ஒன்றாகச் சேர்த்து “ஒரு பெரிய குடும்பமாக” வாழ்ந்து வந்திருப்பார்கள்.

காலத்தால் சிறு வேதனைகள் வளர்ந்து மனஸ்தாபம் ஆகி ஒருவரை ஒருவர் பிரிய நேர்ந்தால் இவர்களுக்குள் சொத்து பாகங்கள் பிரிக்கப்படும் பொழுது சிறிதாகிவிடும்.

ஏகமாக இருக்கப்படும் பொழுது சொத்தின் பெருமான அளவு அது அதிகரித்திருக்கும். ஆனால் பிரித்து வரப்படும் பொழுது
1.அவர்கள் உழைப்புக்கொப்பத் தன் பங்காகத் தனக்கு நிறையக் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில்
2.அது குறைவாக வரப்படும் பொழுது “என்னை இப்படி மோசம் செய்து விட்டார்களே…” என்று சாப அலைகளை விடுவார்கள்.

நான் ஒன்றி வாழ்ந்தேன்… நம்பி இருந்தேன் என்னை மோசம் செய்து விட்டார்கள்…! என்ற இந்த உணர்வின் சக்தியை வளர்த்து விட்டால் அதற்கப்புறம் ஒவ்வொரு நிமிடமும் அவர்களைக் காணும் போதெல்லாம் வெறுப்பின் தன்மை வரும். “இதுவும் தியானம் தான்…”

அந்த வெறுக்கும் தன்மை வளர்ந்து வளர்ந்து இவரைப் பார்க்கும் பொழுது அவருக்கு வெறுப்பும்… அவரைப் பார்க்கும் பொழுது இவருக்கு வெறுப்பும் இப்படி வந்து விடுகிறது.

அதே சமயத்தில் இவரைச் சார்ந்தவர்கள் இரண்டு பேர் சாட்சியாக வருவார்கள் அதே மாதிரி அவர் பக்கம் ரெண்டு பேர் சாட்சியாக வருவார்கள்.

சார்ந்து பேசினாலும் இவர்கள் இடும் சாப அலைகள் அவருடன் இணைந்த மற்றவர்களுக்கும் இது இணைந்து விடும்.

எனக்கு மோசம் செய்தானே… இவன் எல்லாம் உருப்படுவானா…? அவன் குடும்பம் நன்றாக இருக்குமா…? என்று இப்படிச் சொல்லும் பொழுது இவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்ன சொல்வார்கள்…?

நீ இப்படிச் சொல்லலாமா…? நீதான் அப்படி ஆவாய். அவனுக்குச் சாட்சியாக இருந்து அவனைக் கெடுத்தவனே நீ தான்…! என்று
1.நண்பனுக்காக அல்லது இவனைப் போற்றி வளர்க்கும் நிலைகள் சாட்சியாகச் சொல்லப்படும் பொழுது
2.கேட்டறிந்த உணர்வுகள் கடும் சாப வினைகளாக இப்படிச் சிக்கிக் கொள்கின்றார்கள்.

அடிக்கடி இப்படிப் பேசி வித்தாக ஆனபின் என்ன நடக்கிறது…?

ஒரு மரத்தில் விளைந்த வித்தை ஒரு இடத்தில் நாம் ஊன்றினால் அந்த உணர்வின் துணை கொண்டு… காற்றிலிருந்து தன் தாய் மரத்தின் சத்தை நுகர்ந்து அது அதே மரமாக விளைகின்றது.

அது போன்று
1.ஒருவன் சாபம் இட்ட உணர்வுகள் நாம் கேட்டறிந்த பின் அந்த வித்தாக நமக்குள் விளைந்து
2.அந்த வித்து தன் மணத்தை அவரிடமிருந்து வெளிப்பட்ட உணர்வை அதைக் கவரும் பொழுது
3.ஆன்மாவாகச் சேர்த்து நம் உணர்வுடன் சேர்க்கப்படும் பொழுது
4.”அந்தச் சாபமிட்ட நிலைகள்” அடுத்து நாம் எந்தக் காரியம் செய்தாலும் அதைத் தடைப்படுத்துவதாக இது வந்து கொண்டேயிருக்கும்.

பாலில் பாதாமைப் போட்டு எவ்வளவு சுவையாக வைத்திருந்தாலும் அதிலே ஒரு மிளகாய் பட்டு விட்டால் அந்தக் காரத்தின் சுவை முன்னணியில் இருந்து அதை ரசிக்க விடாது செய்யும்.

இதைப் போன்று தான் சாபத்தின் நிலைகள்
1.உயர்ந்த குணங்கள் கொண்டு இருந்தாலும்… நல்லதைச் செய்தாலும் நல்ல பெயர் வாங்க முடியாது
2.இவர் என்ன பெரிதாகச் செய்தார்…? என்று எதிர்மறையான கேள்வியைக் கேட்டு விடுவார்கள்.
3.அவர் சொன்ன அந்தச் சொல்லையே நாம் திரும்பத் திரும்ப எண்ணி இதுவே நஞ்சாகி… கடுமையான வினைகளாக நமக்குள் விளைந்து விடும்.

அந்தச் சாப அலையின் தொடர் குடும்பத்தில் பாய்ந்து தாய்மார்கள் கர்ப்பமுற்றார்கள் என்றால்… இத்தகைய உணர்வுகளைக் கேள்விப்பட்டு அதைக் கவர நேர்ந்தால் கருவிலிருக்கும் குழந்தைகளுக்கும் குல வழியில் சாப அலைகள் தொடர்ந்து விடுகிறது.

குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அந்தக் குடும்பத்தில் வளர்ந்த குழந்தைகளுக்குத் தன்னை அறியாமலே சில தவறான நிலைகளும்… பல பல நோய்களும் உருவாகி விடுகின்றது.

ஆக… கருவில் இருக்கும் போது சாபங்களைக் கேட்டு நுகர்ந்தறிந்தால் தான் அது பதிந்து அந்த நிலை வருகின்றது

1.ஒரு குடும்பத்தில் நான்கு குழந்தைகள் இருந்தால் எல்லோருக்கும் அந்த சாப அலைகள் சாடுவதில்லை.
2.சாபமிட்டதைப் பற்றிப் பேசி… சாபமிட்ட குடும்பத்தைப் பற்றிப் பேசி இருந்தால்
2.கருவற்றிருக்கும் குழந்தைகளில் அது வித்தாகி… அதுவே பூர்வ புண்ணியமாக அமைகின்றது.

சாப அலைகள் “குல வழியில்” இப்படித்தான் வருகிறது…!

இவர்கள் தவறு செய்யவில்லை என்றாலும்… சந்தர்ப்பத்தால் எதனை உற்றுக் கேட்டு அதைக் கவர்ந்தனரோ வந்து இவ்வாறு இயக்கிவிடுகிறது.

இதையெல்லாம் துடைப்பதற்காக எத்தனையோ வழிகளை மகா ஞானிகள் கண்டுணர்ந்தார்கள். அதைத்தான் உங்களுக்கு திரும்பத் திரும்ப நினைவுபடுத்தி உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

பூமியின் சுவாச அலையில் சிக்காது… “மெய் ஞானிகளின் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும்…”

எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் பதிவு செய்கின்றோமோ… அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில் “தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்தச் சப்த நாத ஒளி வட்டத்தில் எது வீரியமாக இருக்கின்றதோ…!” அதனின் தொடர் செயல் நிகழ்வில்… (அந்த) எண்ணம் உருவாக்கிடும் உருக்கோலமாகத் தான் நாம் ஒவ்வொரு நாளும் உருவாகின்றோம்.

பூமியின் சுவாச நிலை அதாவது பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமிலத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் நிறம்… மணம்… நீரமில மூலத் தொடர் இந்த முக்கூட்டின் ஆதிமூலத்தையே கண்டிடலாம்.

1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய ஈர்ப்பின் பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலகோதய ஈர்ப்பின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செயல் கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் பெற வேண்டும்.

வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற்றிட வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…!” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.

சங்கட உணர்வின் ஈர்ப்பால் அத்தகைய அமிலங்கள் நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் சரீரத்தில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.

ஒரே நிலை கொண்டு செயல்பட வேண்டும் என்றால்
1.எதிர் மோதலாக வரும் உணர்வுகளை
2.அது நமக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…!”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.

“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.

இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகோதய கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனாக நிச்சயம் ஆக்கம் பெறும்.

February 23, 2024

இரு நிலை கொண்ட இயக்கத்தை ஒரு நிலையாக்க வேண்டும்

பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்த நிலையில் மீண்டும் இன்னொரு உடல் பெறும் நிலையை வங்கிட்டு… அதை மறைத்து விட்டு… ஒளியின் சிகரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளைச் செயலற்றதாக மாற்றி… அழியா ஒளி நிலை பெற நமக்கு வழிகாட்டுவது தான் “விநாயகர் தத்துவம்…”

அதற்காகத் தான் இந்தப் பிள்ளையார்…? என்று கேள்விக்குறி இட்டு நம்மைச் சிந்திக்கும்படி வைத்தார்கள் அன்றைய ஞானிகள்.

உயர்ந்த ஒளியின் உணர்வாகத் தனக்குள் அரசாட்சி புரிந்து வருவது அனைத்தையும் மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஞானிகள் உணர்வை நாம் எடுத்தோம் என்றால் “அவனுடன் ஒன்றிய அவனாக” நாம் மாறுகின்றோம்.

1.நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் “நான்” என்றாலும் தனித்த நிலைகள் கொண்டு உயிரே இயக்குகின்றது
2.அதிலே நாம் எண்ணிய உணர்வுகள் எது எதுவோ… அதனுடன் இணைந்து செயல்படும் பொழுது தானாகின்றது.
3.ஆனாலும் உயிருடன் ஒன்றிய உணர்வுகள் அனைத்தும் ஒளியாக மாறும் பொழுது அனைத்தும் நானாகின்றது
4.அது தான் “நான் தானாகி - தான் நானாகின்றது.

உயிர் ஒளியின் தன்மையாக இருந்தாலும்… நுகரும் உணர்வுகள் தனக்குள் அடர்த்தியாகி மறைத்தாலும்
1.”தான் என்ற இரு நிலைகள் கொண்டு இயங்குவதே”
2.பின் உணர்வின் ஒளியாக மாறிய பின் - மீண்டும் “ஒளி சிகரமாக மாறிய பின் நானாகின்றது…”

நான் தானாகி… தான் நானாகின்றது. சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!

ஆகவே இந்தப் பிள்ளை யார்…? என்று நினைவுபடுத்தி நாம் இந்த மனித வாழ்க்கையில் ஆறாவது அறிவின் தன்மையைச் சீராகப் பயன்படுத்தி விண் செல்ல வேண்டும் என்பதை ஞானிகள் காட்டினார்கள்.

ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தியவர்கள் ஏழாவதாக ஒளி என்ற நிலை அடைந்து என்றும் பதினாறாக விண்ணில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தப் பிரபஞ்சத்தில் நஞ்சை அடக்கும் சக்தி பெற்ற சூரியனோ அது கொதிகலனாகும் போது நஞ்சினைப் பிரித்தாலும்
1.அதிலிருந்து வெளிப்படும் காந்தப் புலனறிவுகள் அதே நஞ்சினைக் கவர்ந்து ஓர் இயக்கச் சக்தியின் நிலையாகப் படர்கின்றது.
2.இருப்பினும் இந்தச் சூரியன் அது அழிந்திடும் நிலை தான்.

ஆனால் அதனின்று விளைய வைத்த உயிரின் ஒளி நிலைகள் தான் கவர்ந்த உணர்வை ஒளியாக மாற்றிவிட்டால் பின் எதிலுமே அது வேகுவதில்லை.
1.அத்தகைய வேகா நிலை பெற்றது தான் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும்
2.அந்த நிலையை நாமும் அடைதல் வேண்டும்.

“நக்கீரனை எண்ணி…” சங்கின் குணத்தைப் பெற வேண்டும்

உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பல வித உயிர் சக்திகள் உருவாகும் செயல் நிலையில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.

1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக...!” கடலிலே உருப்பெறுகின்றது.

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள். அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.

அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும்.

நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையா சிறப்பு ஒன்று தான்.

1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு - நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.

நக்கீரனைக் கேட்டால் சொல்வார்…! சங்கறுக்கும் குலத்தில் பிறந்து வாழ்ந்து புலமை பெற்ற அவரது திட எண்ணம் வீரியத்தின் குணம் எங்கிருந்து வந்தது..? வலம்புரிச் சங்கின் நீரை அவர் அருந்தினார்.

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன...?

வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி... ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி... நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட... சங்கு நீர் அமில குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்...! சூட்சமப் பொருளை மனதில் கொள்க...!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

February 22, 2024

அடிக்கடி நினைத்து ஜெபிக்க வேண்டிய ஜெபம்

அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஏங்கி வந்தால் தான் யாம் கொடுக்கக்கூடிய வாக்குகள் உங்களுக்குள் நல்ல முறையில் வேலை செய்யும்.

காரணம்…
1.மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கானோர் உணர்வுகளைத் தூண்டி
2.அந்த ஏக்க உணர்வுகளின் அடிப்படையில் தான் பதிவு செய்கின்றேன்.

அதே சமயத்தில் எப்போதுமே அன்னை தந்தையரை வணங்கிப் பழகுங்கள். அவர்களுடைய அருளாசியால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இது மிகவும் முக்கியம்.

யாம் கொடுக்கும் இந்த உபதேச வாக்குகளைச் சீராக உற்று நோக்கி அதைப் பதிவு செய்தால் ஞான வித்தாக வளர்ந்து
1.நீங்கள் எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்கும்.
2.ஆத்ம சக்தி செய்யும் போது அந்த நேரத்தில் உடனுக்குடன் சிரமங்களைப் போக்க அது வழிகாட்டும்

ஆக… நீங்கள் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும். உணர்வுகள் உடலைத் தனக்குள் அணைத்துக் காட்டும். எண்ணிய உணர்வின் ஞானமாக உணர்த்தும்.

அதன் வழியில் உங்களைக் காத்திடும் உணர்வுகள் உங்களுக்குள் வரும். அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகையினால் யாம் உபதேசிக்கும் பொழுது கூர்ந்து கவனித்து இந்த வாக்குகள் பதிவாக்க வேண்டும் என்று அந்த எண்ணத்துடன் இருங்கள்.
1.எந்த நல்லது பெற வேண்டும் என்று ஏக்கத்துடன் வந்தீர்களோ
2.நல்ல முறையில் உங்களுக்கு அந்தப் பலன் கிடைக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற்று எங்கள் உடலில் அறியாது வந்த நோய்கள் நீங்க வேண்டும் எங்கள் உடல்கள் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உங்களுக்குப் பரிபூரணமாக இப்பொழுது கிடைக்கும்…”
1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
5.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் நான் பார்ப்பதெல்லாம் நலமும் வளமும் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போர் எல்லாம் நலம்பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ந்து வாழ வேண்டும்
11.மகரிஷிகளின் அருள் சக்தியால் என் சொல்லிலே இனிமை பெற்று என் சொல்லைக் கேட்போர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற வேண்டும்
12.மகரிஷிகளின் அருள் சக்தியால் என்னைப் பார்ப்போருக்கெல்லாம் நல்ல எண்ணம் வரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்
13.பல உயர்ந்த உணர்வுகள் உங்களுக்குக் கிடைக்கும்
14.உங்கள் உடலை எத்தகைய பிணிகள் இருந்தாலும் நீங்கும்… வலியோ வேதனையோ இருந்தால் குறையும்
15.தீமைகள் உங்களை விட்டு அகலும்… உங்கள் உணர்வுகளால் அறிய முடியும்.

ஆகவே யாம் கொடுக்கும் இந்த (மகரிஷிகள்) அருள் வாக்குகளை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நினைவு கொண்டால் நீங்கள் ஏங்கும் போதெல்லாம் அந்தச் சக்தி கிடைக்கும்.

ஒரு நாளைக்கு ஆயிரம் முறை நீங்கள் சொல்லிப் பாருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் இப்படி சொல்லிக் கொண்டே இருங்கள்

பாலோ தண்ணீரோ அல்லது பதார்த்தங்களையோ வைத்து இவ்வாறு ஜெபித்து அதற்கு அப்புறம் அதை எடுத்து உட்கொண்டு வாருங்கள். நல் மருந்தாக அமையும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் வரும்.

எமது அருளும் குரு அருளும் உங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும்.

வடக்கு திசையின் முக்கியத்துவம்

மகரிஷிகளின் ஒளி காந்த சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்ம சக்தியை வலுக் கொள்ள அந்த வீரிய எண்ணச் செயல் மூலம் வளர்வதற்கே வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை என்று ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிராத்ம சக்தியுடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம் அதாவது…
1.காமதேனு என்று சூட்சமமாக மகரிஷிகள் உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொண்டிட வேண்டும் என்றால் பரவெளியில் உலவிடும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலைப் (ஆகாரமாக) பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய ரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும் என்றும் காட்டினார்கள்.

இதையே தான் “உலக வழக்கப்படி” நாம் நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்ற சித்தின் செயல்பாட்டினுள் சித்தனே மறைந்துள்ளான்.

விசுவாத்திர மாமகரிஷிக்கு “
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.

தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.

1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம் என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் என சித்தர்களால் காட்டப்பட்டது.

சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?

1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்திடும் தொடர்பில்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
4.அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!

February 21, 2024

தாமரை மலர்

பால்வெளி மண்டல சூட்சம சக்திகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

அதாவது ஆதிசக்தியின் “நீர் அமில ஒளி காந்த மூலம்…” உள்ளடங்கி ஓர் வண்ணமாக மூலத்திலிருந்து வெளிப்படும் ஏழு வண்ண அமில குணங்களாக வெளி வருகிறது.

1.நிறம்
2.குணம்
3.உள்மூல நீர் அமிலம் என்ற
4.முன்று சக்திகளின் தொடரின் கலப்பில் பால்வெளியில் படர்ந்து கொண்டே உள்ளது.

(வான இயலை உன்னிப்பாகப் பார்த்தால் பலவிதமான வர்ணங்களையும்… எண்ணிலடங்கா வாயுக்களையும்… உருவாக்கும் ஜீவ சக்தியையும் காண முடியும்)

அதிலே தான் ஒன்றுடன் ஒன்று கலந்து பிறிதொன்றை உருவாக்கும் உயிரணுக்கள் தோன்றுகிறது. அத்தகைய வினைச் செயலின் படைப்பில் அனைத்துச் சக்திகளையும் காத்திடும் பக்குவத்தில் உயிரணுவிலே முலாமாகும் வீரிய அமிலம் தன் வளர்ச்சியின் வளர்ப்பாக்க மற்ற அமில குணங்களைத் தன் வளர்ப்பிற்குத் துணை சக்திகளாக எடுத்துக் கொள்கிறது.

அவ்வாறு வளரும் பக்குவத்தில் கோடானு கோடி உயிரணுக்கள் பால்வெளியின் பரமாத்மாவின் தத்துவத்தில் ஒன்றுடன் ஒன்று ஈர்த்துப் பிறிதொரு சக்தியாகவும் வளர்ச்சி கொள்கிறது.

அந்த வளர்ச்சியில் எந்த அமில முலாம் வீரியமாக வளர்ச்சி நிலை பெற்றதோ அதுவே வினையின் கதியால் வினையின் செயலுக்குத் தொடர் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டேயுள்ளது. (இந்தத் தொடர் காலம் காலமாக நடக்கின்றது)

நீர் நிலையின் ஊடே பாய்கின்ற ஒளிக் கதிர் (வானவில் – RAINBOW) ஏழு வண்ணங்களைக் காட்டுவது எட்டாவது வண்ண மூலத்திலிருந்து தான்.

அந்த ஏழு வண்ணங்களின் அமிலங்களுக்குள் நீர் சக்தியின் மூல சக்திகள் பாய்ந்து அது செயல் கொண்டிட்ட விதங்களை சித்தர்கள் காட்டியுள்ளார்கள்.

நீர் சக்தியின் குளிர்விப்பால் தான் உயிரணுக்களின் இயக்கத் தொடர்பில் சரீரங்களாக… பிம்பங்களாக உருப்பெறுகின்றது. ஜீவனுள்ள உருவங்களாக ஆனதைத் தான் சீவலிங்கம் (சிவலிங்கம்) என்று சொல்வது.

சரீரம் என்ற குகைக்குள்… உயிரணுவின் காந்த அமில ஈர்ப்பின் குணம் சக்தியாகச் செயல் கொள்வது என்பது சரீரத்தின் மூலம் பெறும் வளர்ச்சி பெறும் நிலை.

அதாவது “ஆன்மா வலு கொண்டிடும் தற்காப்புப் பணி…!” என்று விளங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஆன்மாவைச் சுற்றி ஓடும் ஒளி வட்டத்தின் ஊடே உயிர் சக்தி சூட்சமத்தில் செயல் கொள்கிறது என்பதையும் அறிந்திடல் வேண்டும்.

பால்வெளியில் பரந்துள்ள நீர் சக்தி அது வளர்ச்சி கொள்ளும் பக்குவத்தில்
1.மனக் குகையினூடே பாதுகாப்பு வளையமிட்டு
2.ஆத்ம லிங்கத்தைப் பூஜிக்கும் உயிர் சக்தி
3.மகரிஷிகளின் அருள் சக்தியின் துணை கொண்டு
4.தன் சுய சக்தியை வளர்ச்சிப்படுத்தும் செயல் நிகழ்வில் எழுவதே “உயர் ஞான ஜோதி மலர்…!”

தாமரை மலரை உவமை காட்டுவது எதற்கு…? சூரியனின் தொடர்பு கொண்டு நீர் சக்தியின் மூலமாக உயிரணுக்கள் உடல் பெற்று உருவாகும் நிலையை உணர்த்துவதற்காகத்தான்.

ஏனென்றால் இரு வித சுவாசத்தின் அலைகளாக பூமி தனக்குள் ஈர்க்கும் அலையும் பூமி அதை ஈர்த்துச் சமைத்து வெளிக்கக்கும் சுவாச அலையும் பரவெளியில் மோதுண்ட நிலையில் அதை ஈர்த்து உருவாகும் மலரே “தாமரை மலர்…!”

தாமரை தான் ஈர்த்திடும் அமில குணத்தின் மூலம் அமுதத்தை மலரும் மலராக மலர்கிறது. தன்னுள் பாய்ந்திடும் விஷ அமில சக்தியைத் தன் இலைப்பரப்பில் பதிய வைத்துக் கொள்கிறது.

அந்த விஷ அமிலத்தையே இலையின் மூலம் தன் சக்தி குறைவு படாமல் ஏழு வண்ணத்தில் ஓர் வண்ணமாக மலராக மலர்ந்திட தனக்குகந்த ஆகாரத்தைச் சமைத்துச் சூரிய சக்தியின் தொடர்பில் தன்னை வளர்ச்சி நிலைப்படுத்துகின்றது.

இந்தத் தத்துவத்தைத் தெரிந்து கொண்டால்
1.வாழ்க்கையில் நம் மீது வந்து மோதும் எத்தகைய நிலையையும் (நிறம் குணம் அமிலம்) நறுமணமாக
2.அமுதமாக பேரொளியாக நாம் மாற்றிக் கொள்ள முடியும்.

விண்ணுக்குச் செல்லும் “உந்து விசை”

உந்து விசை கொண்டு புவியின் ஈர்ப்பைக் கடந்து இராக்கெட்டை விண்ணிலே செலுத்துகின்றனர். புவியில் விளைந்த எரிபொருளின் துணை கொண்டு அதை இயந்திரத்தில் அடக்கி அழுத்தத்தால் உந்தி விண்வெளியில் வீசுகின்றனர்.

இராக்கெட்டை விண்ணிலே பறக்கும்படி செய்து. விண்ணிலிருக்கும் பல நிலைகளை எளிதில் கவர்ந்து அதை அறிகின்றனர். உடல் வாழ்க்கைக்காக (சுகத்திற்காக) விஞ்ஞானிகள் இதைச் செய்கின்றார்கள்.

மெய் ஞானிகளோ விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அதனின் வலு கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் ஆனார்கள்
1.ஆதியில் அகஸ்தியன் இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்தாலும் தன் அருகில் உள்ள சீடர்களுக்கு இதனை உபதேசித்தருளி
2.அதனின் நினைவு கொண்டு நீங்கள் உடலை விட்டு அகலும் போது “உந்து விசையால்… என்னை உந்தித் தள்ளுங்கள்…!” என்றான்
3.முதல் முதலிலே அகஸ்தியன் அவ்வாறு விண்ணுலகம் சென்றான்.
4.அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் விண்ணுலகில் ஏழாவது அறிவாக அவரின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாக விளைந்தார்கள்.

அக்காலங்களில் எழுத்தறிவு இல்லாததால் “உடலில் விளைய வைத்த உணர்வின் தன்மை கொண்டு பிறருக்குள் பதிவு செய்து…” அந்தப் பதிவின் நினைவின் ஆற்றலால் அவர்கள் வாழ்க்கையை இயக்கி… அவ்வாறு ஆரம்ப நிலையில் வளர்ந்தவர்கள் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

பிற்காலங்களில் மனிதனின் அறிவின் ஞானம் வளர… மனிதனின் உடலுக்கு இச்சைகள் சேர… இதுவே சொர்க்கம் என்ற நிலையில் அரசர்கள் சென்று விட்டார்கள்.

அரசனும் சரி… அவன் காட்டிய வழியில் சிக்கியவர்களும் சரி… அனைவரும் விண் செல்லாது அவர்கள் எடுத்துக் கொண்ட ஆசையின் உணர்வுகள் பேயாகச் சுழன்று… பேயின் உணர்வு கொண்டு தாக்கும் நிலைகளும்… பின் மிருக நிலைகளுக்கே சென்றனர். அரசன் வழியில் தான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அதை எல்லாம் மாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் ஞானிகள் காட்டிய அருள் வழியினை உங்களுக்கு உபதேசித்து வருகின்றோம் (ஞானகுரு).
1.அருள் வழியில் உங்கள் உணர்வுகளை உந்தச் செய்து… உணர்ச்சிகளைச் தூண்டும்படி செய்து
2.அந்த மகரிஷிகளின் ஆற்றலை நினைவு கொண்டு உங்களைத் தியானிக்கும்படி சொல்கிறோம்.

ஆகவே வேகா நிலை பெற்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வினை நமக்குள் வினையாகச் சேர்த்து அதை நாயகனாக ஆக்க வேண்டும்.

வாழ்க்கையில் எப்போதெல்லாம் தீமைகள் நம்மைச் சாடுகின்றதோ அத்தருணத்தில் “ஈஸ்வரா…” என்று அந்த மகரிஷிகளை எண்ணி அந்தச் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் என்று உள் செலுத்தி நாம் கேட்டறிந்த தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

அதே சமயத்தில் தீமை செய்தவர்களுக்கும்… அதிலிருந்து அவரை மீட்டிட மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் பாய்ச்ச வேண்டும்.

இது தான் அன்றைய மகரிஷிகள் செய்த நிலைகள். அதனை நீங்கள் அனைவரும் பற்றிட முடியும் சாதாரண மக்களும் விண்ணின் ஆற்றலைப் பெரும் வண்ணம் தான் எளிதாகக் கொடுத்துள்ளார்கள் நமது தத்துவ ஞானிகள்.

February 20, 2024

“நம்மைக் காத்திட்ட… அரும் பெரும் சக்திகள்” நமக்கு முன் காற்றிலே இருப்பதை எடுக்கப் பழக வேண்டும்

மனிதனின் வாழ்க்கையில் நாம் உணவாக உட்கொள்ளும் அதற்குள் மறைந்து வரும் நஞ்சினை ஆறாவது அறிவு பெற்ற இந்த மனித உடல் மலமாக மாற்றி விடுகின்றது.

ஆறாவது அறிவின் தன்மையால் “இயக்கும் சக்தி” நமக்குக் கிடைக்கின்றது. அதாவது நஞ்சு கொண்ட உணர்வினை நீக்கித் தெளிந்த உணர்வு கொண்டு விளைந்திட்ட அந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகளை அகற்ற வேண்டும்.

அதை அகற்றவில்லை என்றால் நஞ்சு கலந்து… பின் சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது.

உடலில் அழுக்குப் பட்டால் குளிக்கின்றோம். வேலை செய்யும் போது கையில் அழுக்குப் பட்டால் சுத்தப்படுத்தி அதற்குப் பின் உணவை உட்கொள்கிறோம்.

நாம் அணியும் ஆடைகளில் அழுக்கு அதிகரித்து விட்டால் சோப்பைப் போட்டு நுரையேற்றித் துணியுடன் இரண்டறக் கலந்த அழுக்கினைப் போக்குகின்றோம். மனிதனின் ஆறாவது அறிவினுடைய செயல்கள் தான் இது எல்லாம்.

ஆனால் ஆறாவது அறிவை ஞானிகள் எப்படிப் பயன்படுத்தினார்கள்…?

1.அன்றைய மகரிஷிகள் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி
2.”சக்தி வாய்ந்த உணர்வைத் தனக்குள் நுகர்ந்து”
3.தன்னை அறியாது புகுந்த உணர்வினை ஆறாவது அறிவால் நீக்கி
4.தன் எண்ணத்தைத் தெளிவாக்கித் தெளிந்த உணர்வு கொண்டு வாழ்க்கை வாழ்ந்து
5.அருள் ஒளியின் சொத்தாகத் தன் உயிருடன் ஒன்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அவரில் விளைந்த உணர்வின் சத்தைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது காற்று மண்டலத்தில்… அதாவது பூமிக்குள் பரமாத்மாவாவிலே கலந்துள்ளது.

இதைப்போல மற்ற தாவரங்கள் உமிழ்த்தும் “அதனதன் உணர்வும்… அதனதன் மணமும்… அதனதன் குணமும்…” வெளிப்பட்டு வருவதை இதே சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து பரமாத்மாவாவிலே சுழன்று கொண்டு தான் உள்ளது.

மனிதருக்குள் எத்தகைய நோய்களாக விளைந்ததோ அவர்களிடமிருந்து வெளிப்பட்ட நோயின் உணர்வுகள் அனைத்தும் இந்தப் பரமாத்மாவில் கலந்துள்ளது.

பரிணாம வளர்ச்சியில் மனிதனாக ஆவதற்கு முன் நாம் உயிரினங்களாக வாழும் பொழுது
1.அந்தந்தச் சரீரத்தில் தன்னைக் காத்திடும் உணர்வு கொண்டு விளைந்த உணர்வுகள் இதே பரமாத்மாவில் தான் உண்டு.
2.ஒவ்வொரு சரீரத்திலும் காத்திடும் உணர்வை ஊழ்வினையாகப் பதிவு செய்து அந்த வித்தின் தன்மையாக
3.அந்தந்த உடலிலே காத்திட்ட உணர்வுகளும் இந்தப் பரமாத்மாவிலே கலந்துள்ளது.

இவ்வாறு “எத்தனை சரீரங்களில் நம்மைக் காத்திடும் உணர்வாக எடுத்துக் கொண்டோமோ” அது அனைத்தும் நமக்குள் வித்தாக இருப்பினும்
1.அதில் விளைந்த உணர்வுகள் அலைகளாகப் படர்ந்து இந்த பூமியிலே பரமாத்மாவிலே படர்ந்துள்ளது.
2.அத்தகைய நல் உணர்வுகளைக் கவர்ந்து நமக்குள் வளர்த்திடும் நிலையாக வர வேண்டும்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்ற நிலையை உணர்ந்து… நம்மை அறியாது மூடி மறைக்கும் தீமைகளை ஆறாவது அறிவு கொண்டு நீக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றப் பழகிடல் வேண்டும்.

கஷ்டங்களையே எண்ணிக் கொண்டிருந்தால் அது விலகாது

மனித குல மேன்மையின் சிறப்புக்கு வழி காட்டிய மகான்கள் பலரும் உண்டு.

மனிதர்கள் வாழும் வாழ்க்கை நெறி முறைக்கு அன்பின் வழியாக ஜீவகாருண்யத்தையும் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறியும் நல் நடத்தையும் பல வகைகளிலும் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

அதைச் செவ்வெனச் செய்யத் தியான முறைகளையும் அதன் மூலம் தெளிந்து கையாள வேண்டிய வழி வகைகள் இன்னென்னெது தான்...! என்று
1.தன்னைத் தான் உணரும் பக்குவத்திற்கு
2.இவைகளே ஏணியாக நின்று உயிரான்மாவின் சக்தியை உயர்த்தும் என்ற போதனா முறைகளையும் கொடுத்தார்கள்.

ஆனால் தன் வாழ்க்கையையே தியானமாக்கும் நிலைக்கு அந்த எண்ண வலுவை கூட்டிக் கொள்ளும் ஆத்மாக்கள் எத்தனை பேர்களப்பா...?

உலகோதய வாழ்க்கை நடைமுறை இல்லற நெறிகளில் வாழ்ந்திடுபவர்கள் “தன்னைத் தாக்கிடும்...” எதிர் மோதல்களையே எண்ணித் தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தால் வரும் துன்பங்கள் விலகிவிடுமாப்பா...?

1.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே “தியானம்...!” என்பதை உணர்ந்து கொண்டு
2.நன் நெறிகளைக் கடைப்பிடிப்போன் - வரும் துன்பங்களைப் பெரிதாக எண்ணிடாமல்
3.அவைகளை விலக்கித் தன் ஆத்மாவையும் காத்துக் கொண்டு
4.வாழ்க்கைச் சுவைதனைச் சுவைத்து வாழும் வாழ்க்கையில் முழுமையை (பேரானந்தத்தை) அடைகின்றான்.

அப்படி இல்லாது துன்பங்களை எண்ணிக் கலக்கமுறும் செயலால் உயிரையே மாய்த்திட வேண்டும் என்ற தற்கொலையின் எண்ணச் செயலில் எதை உன்னால் அழித்திட முடிந்திடும்…?
1.ஒன்றிலிருந்து ஒன்று இயற்கையின் வளர்ச்சியில்
2.ஒன்று தன் செயலில் மற்றொன்றாக உருவெடுக்குமே அல்லாது
3.எதை அழித்திட முடியும்...?

நீ எடுத்த துக்க அலைகள் உன் உடலுக்குள் வலுவாக வீரியமாகச் செயல் கொண்டு ஆவிகளின் பிடியில் (இறந்த மனிதர்கள்) சிக்குண்டு அல்லலுறும் நிலையே வேண்டாமப்பா…!
1.சகலத்திற்குமே தீர்வுண்டு...!
2.வாழ்க்கைத் துன்பங்களிலிருந்து மீளவே இந்த முறைகளை உணர்த்துகின்றோம்.

மகான்கள் அளித்திட்ட நல் நிலையான அந்தப் பேறுகளைக் கடைப்பிடித்து ஒழுக்கத்தின் வழியில் நின்று அன்பு கொண்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வைராக்கியமான சிந்தனையைக் கொண்டால் தான் ஆக்கம் அளிக்கும்.

மகாவீரர் காட்டிய உயிரின் பரி நிர்வாண நிலை என்ன...?

உலகோதயப் பேராசைகள் என்ற மாயப் பிடிப்பில் இருந்து விடுபட்டு உயிராத்மாவின் சக்தியை வலுக்கூட்டி வைராக்கிய சிந்தனையை வலுக்கூட்டவும் ஜீவகாருண்ய வழியில் ஒழுகும் முறை ஏற்படுத்திக் கொண்டதும் “தன் உயிராத்மாவின் சக்தியை உயர்த்தவே…!”
1.மகாவீரர் பட்டினி கிடந்தது
2.தன் ஆத்மாவில் எத்தகைய தீதும் சேராது... எண்ணம் கடந்த செயல் நிலையே.

ஆனால் இந்தக் கலியில் புறச் செயல்களின் (வேலைப் பளு) ஆதிக்கம் மிகுந்துள்ள சூழலில் உடலை வருத்திடும் செயலில் (விரதம்... நேர்த்திக் கடன்) எண்ணம் கூடி விட்டால் நல் ஆக்கம் பெறுவதில் தேக்கம் தான்.

மனிதச் சரீர உடல் உறுப்புக்கள் இல்லற ஒழுக்க நெறியில் கடமைகளும் ஆற்றிடச் செயல் கொள்ளும் பொழுது
1.உடல் உழைப்பு கொள்ளும் பொழுது
2.அந்தச் சரீரத்தில் குறைவுபட்ட சக்தியின் சேமிப்பிற்கு ஆகாரமும் தேவைதான்.
3.நாவின் சுவைக்காக அல்ல…!
4.ஆகாரம் புசித்தலில் அதிக அளவும் விஷம் தான்.
5.ஆகாரத்தை அமுதமாக உட்கொண்டே நல் நிலை பெற்றிடுங்கள்.

“காற்றிலிருந்து ஆகாரம் பெற்றிடும் செயலுக்கு...” ஆத்ம வலு கூட்டிக் கொள்ளும் முறையும்... யாம் காட்டிடும் தியான வழியில் வழி உண்டு...!

February 19, 2024

சாப வினை எப்படி வருகிறது…?

கடந்த காலங்களில் குடும்பத்தில் பற்றும் பாசத்துடன் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதில் கொடுக்கல் வாங்கலிலோ… உணவாக உட்கொள்ளும் நிலைகளிலோ… அல்லது விசேஷங்களுக்குச் செல்லும் பொழுதோ அந்தச் சந்தர்ப்பம்… ஒருவர் அதிகமாகச் செலவழித்து ஒருவருக்கு அதைக் கொடுக்காத நிலை ஏற்பட்டால் பேதங்கள் வருகிறது.

1.அவர் போகும் போது தனக்கு வேண்டியதை மட்டும் சௌகரியமாக எடுத்துக் கொண்டு செல்கின்றார்
2.நமக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார் என்ற இந்தப் பகைமை உணர்வுகள் விளைந்து விடும்.

பொறுத்திருந்து… அவர் போகும் போது கொடுத்திருக்கலாம் என்றாலும் அது வரை பொறுக்காது கோபம் மேலிட்டு… வெறுப்பு வந்துவிடுகிறது. அந்த வெறுப்பு ஊழ்வினை என்று வித்தாக ஆழமாகப் பதிவாகி கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வரும் அவர்களுக்குள் வெறுப்பு வளரத் தொடங்கி விடுகிறது.

அது பரவி வர வர அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பு. வெறுப்பான உணர்வு கொண்டு அடுத்து சுடு சொல்லாகத்தான் வரும். பெரியவர்களாக இருந்தால் மதிக்கச் சொல்லாது.

ஆகவே… மதிப்பற்ற நிலைகள் நம் சொல் வெளிப்பட்டு நம்மைப் பார்க்கப்படும் பொழுது நம் ஆன்மாவில் சேர்த்த வெறுப்பான உணர்வுகளும் அவர்கள் சுவாசித்து நம் மீது வெறுப்படையும் தன்மையாக விளைந்து விடுகின்றது.
1.மூதாதையர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழும் பொழுது
2.நாளுக்கு நாள் பகைமைகள் உருவாகி இத்தகைய இடையூறுகள் வந்துவிடுகிறது.

அடுத்து பாகப்பிரிவினை வரும் பொழுது எனக்கு இவ்வளவு தான் கொடுத்தார்கள் அவனுக்கு நிறையக் கொடுத்தார்கள் என்று பாசத்துடன் ஒன்றி வாழ்ந்த நிலைகளில் இதைப் போன்ற நிலைகள் தடைப்படுகிறது.

தடைப்பட்ட பின் ஒன்றுபட்ட குடும்பமாக வாழ்ந்தாலும்… மூத்தவராக இருக்கப்படும் பொழுது அவர்கள் பிள்ளைக்குத் தனியாகச் சலுகை செய்கின்றார்கள்… என் பிள்ளைக்கு ஒன்றும் கொடுக்கவில்லை…! என்ற இந்த உணர்வு நஞ்சின் தன்மையாக விளைந்து விளைந்து “நாளடைவில் விஷத்தின் தன்மையாக விளைந்துவிடுகிறது…”

பின் யார் மீது இந்த வெறுப்பு அதிகமாக விளைந்ததோ “அடப்பாவி இப்படிச் செய்கின்றாயே… இப்படிச் செய்கின்றாயே…” என்ற நிலைகள் இந்த உடலில் அதிகமாக விளையப்பட்டு “வெளிப்படும் மூச்சுகள்…” அந்தக் குடும்பம் முழுவதும் படர்கின்றது.

ஒருவருக்கொருவர் வெறுப்பானாலும் வெறுப்பற்றவர்களோ…
1.எதற்காக நீங்கள் ஒருவர் ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றீர்கள் என்ற உணர்வுடன்
2.ஒன்று சேர்ந்து வாழ நல்ல வார்த்தைகளைச் சொன்னாலும்
3.பாகப்பிரிவினையால் விளைந்த பேத உணர்வுகள் அங்கேயும் சேர்த்து அறியாதபடி… அவர்களுக்குள்ளும் வெறுப்பின் உணர்வுகளே விளையும்.

எனக்கு இப்படிச் செய்தானே… அவன் குடும்பம் உருப்படியாகுமா…? என்ற இந்த உணர்வுகள் அதிகரித்து விடுகிறது. இது போன்ற சாப உணர்வுகளை வெளியிட்டால்… வெளியிட்ட அந்த அலைகள் அவர்கள் உடலில் மறைந்து “வித்தாக” விளைந்து வரத்தொடங்கும்.

இரண்டு தலைமுறைக்குப் பின் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்களில் கரு உருவாகிக் குழந்தைகள் பிறந்த பின்…
1.அதே சாப அலைகள் தொடரப்பட்டு
2.மூதாதையர்கள் உடலில் விளைந்த உணர்வின் உமிழ் நீர் (அமிலங்கள்) கூடி… அந்த உணர்வின் சத்து வித்தாக மலர்ந்தது
3.இங்கே சொல் வடிவில் இணை பிரியாது வந்து கொண்டே இருக்கும்.
4.சாப அலைகளாக குடும்பங்களில் அது இயக்குவதை இன்றும் பார்க்கலாம்… நம்மை அறியாமலே மறைமுகமாக வந்து விடுகின்றது.

மனிதனாக வருவதற்கு முன் எத்தனை இன்னல்கள் பட்டோமோ… மனிதனான பின்னும் இப்படிப்பட்ட தீமைகளில் சிக்குண்டு… தீமைகளை அகற்ற முடியாத நிலைகள் தான் நாம் சுழன்று கொண்டுள்ளோம்.

மூதாதையர்கள் குடும்பத்திற்குள் இட்ட சாப அலைகள் பதிந்து அவருக்குள் விளைந்தது அலைகளாகப் பரவி உள்ளது. அதிலே ஒருவருக்கொருவர் தான் எண்ணியதற்குத் தடை வரும் போது பகைமையாகி அதனால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு அடுத்தவருக்குப் பல இன்னல்களை ஏற்படுத்தி… அதைக் கண்டு ரசித்து மடிந்தவர்களும் பலர் உண்டு.

வேதனைப்பட்டவர்களைக் கண்டு ரசித்த உணர்வுகள் அவர் உடலில் விளைந்தது குடும்ப குடும்பத்தின் சந்ததியினருக்கும் இது வருகின்றது. உடல்களில் இருந்து குல வழியில் இது வருகின்றது.

1.உதாரணமாக ஆஸ்த்மா போன்ற நோய்கள் எல்லாம் மூதாதையர்களால் விளைந்தது தான்
2.ஒருவருக்கொருவர் இன்னல் படும் பொழுது “தான் என்ன செய்வது…?” என்று பெருமூச்சு விட்டிருப்பார்கள்.
3.அதே சமயத்தில் வேதனைப்பட்ட உணர்வுகளால் உறுப்புகள் சீராக இயங்காது
4.உமிழ் நீர்கள் சுரக்கப்படும் பொழுது உறைந்து அது நெஞ்சுச் சளியாக உருவாகின்றது.

விஷத்தன்மை கொண்டு அங்கே உருவான அத்தகைய உணர்வுகள் அணுவாக மலர்ந்து வித்தாக உருப் பெற்று வருகின்றது. அதன் வழிகளிலும் குல வழிகளில் பின் தொடர்ந்து வருகின்றது.

தனித்த மனிதர் நம்மிடமிருந்து இப்போது அந்த நோய் வரவில்லை. முந்தி எத்தனையோ நிலைகள் விளைந்தது… குல வழியில் நமக்குள் பின் தொடர்ந்து வருகின்றது.

ஒருவருக்கொருவர் பேசிய அந்த சாப அலைகள் கொடூரத் தன்மை கொண்டது.
1.கொடூரத் தன்மை கொண்டு நமக்கு கிடைக்கும் நல்ல நிலைகளை அது கிடைக்க விடாதபடி தடுத்து
2.இருள் சூழ்ந்த நிலையாக்கி மனிதனுக்குள் எதிர்நிலையாக வருகிறது.

நாம் தவறு செய்யவில்லை. ஆனால் வாழ்க்கையில் இது போன்ற நிலை வருகின்றது. இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

February 18, 2024

“நம் ஆன்மாவைத் தூய்மை செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியமானது…” என்று தெரிந்து கொள்ள வேண்டும்

சில செடி கொடிகளை (வாசனையை) நாம் நுகர்ந்தால் மகிழ்ச்சியும் சில செடிகளை நுகர்ந்தால் மயக்கமும் வரும். அது போல்
1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை “எது அதிகமாக வருகின்றதோ” அதுவே நம் உடலில் மணமாக (ஆன்மா – மனம்) மாறும்.
2.இந்த மனம் அதிகமாகப் படும் பொழுது ஆன்மாவிலிருந்து சுவாசிக்கும் பொழுது சிறுகச் சிறுகக் கலந்து
3.அதனின் வலு குறையாது அந்த மண(ன)த்தை வளர்த்துக் கொண்டே இருக்கும்.

ஏனென்றால் நஞ்சுக்கு வீரிய சக்தி ஜாஸ்தி. காரணம் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் ஆகும் பொழுது என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது ரோட்டிலே ஒரு பிச்சைக்காரன் நம்மிடம் வந்து மீண்டும் மீண்டும் “ஐயா…ஐயா…” என்று திரும்பத் திரும்ப கேட்டது நமக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

காசை எடுத்துக் கொடுப்பதற்கு முன்… “இத்தனை தரம் கேட்கின்றானே…” என்று அந்த நேரத்தில் அவனை எப்படி வெறுத்தோமோ வீட்டிற்குள் வந்த பின் பையன் மீது வெறுப்படைவோம்.

பிச்சைக்காரன் இரண்டாவது தரம் மூன்றாவது தரம் எப்படிக் கேட்டானோ அதே போன்று நாமும் பையனிடம் திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பிப்போம். பையன் நம் மீது வெறுப்படைவான். வீட்டில் பெண்களிடம் சொன்னாலும் இனம் புரியாது அவர்களும் வெறுப்பார்கள்.

இதைப் போய் ஜோசியக்காரனிடம் சென்று இப்படி இருக்கிறது என்று சொல்லிக் கேட்டால்
1.உங்களுக்குக் கெட்ட காலம்… ஏழரை நாட்டான் சனி பிடித்திருக்கின்றான்…
2.உங்கள் நட்சத்திரப் பிரகாரம் இப்படித்தான் இருக்கிறது என்று அவன் சொல்வான்… உறுதிப்படுத்திவிடுவான்.

இதுகள் எல்லாம் நம்மை அறியாது உடலுக்குள் விளைந்த உணர்வுகளின் இயக்கம் தான். ரோட்டிலே ஒரு பிச்சைக்காரன் பிச்சை கேட்டான்.. நம்மை அவன் முறைத்து முறத்துப் பார்த்தான் நாம் பதிலுக்குப் பேசினோம் என்று இருப்போம்.

ஒரு பாலிலே பாதாமைப் போட்டாலும் அதில் சிறிதளவு காரத்தைப் போட்டால் யார் குடித்தாலும் காரமாகத்தான் இருக்கும். நல்ல சுவையை அது இயக்க விடுமா…?

நான் நல்லவன்… எல்லாவற்றையும் சரி செய்து விடுவேன் என்று சொன்னாலும் அவர் அந்தப் பாலைக் குடித்தாலும் இந்தக் காரம் தான் முன்னாடி வரும்.

நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த அந்த உணர்வு நமக்குள் இயங்கப்பட்டுக் குடும்ப வாழ்க்கையில் சிக்கல்… இனம் புரியாத வெறுப்பு…! தனக்கு முதியவர்கள் இருந்தாலும் இதே நிலைகள் உருவாக்கப்பட்டு வீட்டில் கலக்கங்கள் வந்துவிடும்.

ஏனென்றால்
1.எந்தப் பிச்சைக்காரன் உடலில் அந்த உணர்வுகள் விளைந்ததோ
2.“ஐயா……” என்ற இந்த சோகமான உணர்வு அவன் எப்படி வேதனைப்பட்டானோ
3.அது நமக்குள் ஆகி நம் உயிரிலே பட்டு இயக்கங்கள் ஆகும் போது அந்த உணர்ச்சிகள்
4.நம்மை… நம் குடும்பத்தை… மற்றவர்களை… எப்படி இயக்குகிறது…? என்பதைத் தெளிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நமக்குள் அது வித்தாகி அதன் வளர்ச்சிக்கு வரும் பொழுது இந்த நிலையைத் தான் செயல்படுத்தும். இதெல்லாம் இயற்கையினுடைய சில செயல்கள்.

தொழில் செய்யும் இடத்திலும்… நான் முதலாளியாக இருக்கின்றேன்…. நிர்வாக நிமித்தமாகச் சுற்றிப் பார்க்க வருகின்றேன் என்று வைத்துக் கொள்வோம்.

இதே உணர்வின் வேகங்கள் அங்கேயும் சொல்லாக வரும். வேலை செய்யும் அந்தத் தொழிலாளி செவிகளில் இது பட்டபின் நம்மை உற்றுப் பார்ப்பான்.

பார்க்கப்படும் பொழுது பிச்சைக்காரனிடம் எந்த வெறுப்படைந்தோமோ அவன் மீது பட்டு முதலாளி என்று அச்ச உணர்வுகள் இருப்பினும் அவனை பலவீனப்படுத்தும் நிலையே அங்கே வரும்.

முதலாளி வந்தார் பார்த்தார் என்று சென்றாலும்… அடுத்த கணம் அகன்ற பின் அந்த வெறுப்படைந்த உணர்வுகள் அவன் இயந்திரத்திலோ மற்ற நிலையில் அவன் வேலை செய்யப்படும் பொழுது அல்லது கணக்குகளை உற்றுப் பார்க்கப்படும் பொழுது
1.இவன் உணர்வுக்கொப்ப கண்ணின் புலனறிவு ஓடும்.
2.ஒரு இயந்திரத்தை அவன் இயக்குகிறான் என்றால் இயந்திரத்திற்குள் இந்த உணர்வலைகள் பட்டு
3.அந்த காந்தப் புலனறிவால் துரித நிலையில் இயக்கப்பட்டு அதனுடைய ஈர்ப்புத் தன்மை மாறி
4.நாம் எந்த வெறுத்த உணர்வு கொண்டு உற்று நோக்கினோமோ அது இயக்கப்பட்டு (ஏனென்றால் எல்லாவற்றிலும் காந்தப்புலன் உண்டு)
5.அந்த இயந்திரம் சீரற்ற நிலையாகி… “உற்பத்தியாகும் பொருள் தரமில்லாது பாதிப்படைந்து விடும்…”

ஆக முதலாளி பார்த்தார் என்றாலும் வேலை செய்கின்றவரின் உணர்வுக்குள் அது ஊடுருவி அங்கே தவறுகளை உண்டாக்கி விடும் நம்முடைய சோர்வான உணர்வு மற்றவர்களின் செயல்களுக்குள் ஊடுருவி அதற்குத் தக்கவாறு நம் தொழிலையும் அது பாதிக்கும்.

தவறு செய்யவில்லை…! சந்தர்ப்பத்தால் நமக்குள் விளைந்த வெறுப்படைந்த உணர்வுகள் “அங்கே மற்றவர்களுக்குள் கலந்து கலந்து…” நம்மை உற்று நோக்கி எதிர்பார்ப்பவரின் உணர்வுக்குள் இயங்கி… “நமக்கே எதிரியாக்கிவிடும்…”

அதே சமயம் அந்த உணர்வு கொண்டு வீட்டிற்குள் நாம் அமரும் இடத்திலும் இது அதிகமாகப் பதிவாகின்றது.
1.அதிலே சூரியனின் காந்த சக்தி (வெப்பம்) படரப்படும் போது அது அலைகளாக் கிளர்ந்து அங்கே (வீட்டிற்குள்) பரவத் தொடங்கும்.
2.ஆன்மாவில் அது கலந்து அதிகமாக அதையே நினைவு கூறும் தன்மை வந்துவிடும்.

தொழிலில் கஷ்டமும் நஷ்டமும் எடுத்துக் கொண்ட பின்… எதை எதை எல்லாம் உடலில் விளைவிக்கின்றோமோ… அந்த உணர்வுகள் வீட்டிலே அமர்ந்திருக்கும் போது ஆழமாக அங்கே (தரைகளிலும் சுவர்களிலும்) பதிந்து
1.அதுவே மீண்டும் மீண்டும் நினைவாற்றலாக வரும்… சங்கடத்தையும் சலிப்பையும் உண்டாக்கும்.
2.இதையெல்லாம் நீக்க வேண்டுமா இல்லையா…! இதை யார் நீக்குவது…?

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே… ஒளி நிலை பெறும் மார்க்கம்”

விண்ணிலே தோன்றும் உயிர்த் தன்மை அணுக்களாகப் புவிக்குள் வந்து உடல் பெற்றாலும் இந்தச் சரீர வாழ்க்கையில் மெய்யை உணரத் தலைப்பட்டால்
1.தன்னுள்ளே ஒளி நாதத்தைக் கூட்டி ஒளியாகக் கலக்க
2.ஒலி நாத வித்துக்களே தேவை.

ஒலி நாத வித்துக்களைப் பெறும் வழியை அறிந்து... அதன் வழி நடந்து... அதற்குரிய இடம் சேரும் தன்மைகளில் வீரியத்தைக் கூட்டித்
1.தனக்குகந்த ஒலி நாதத்தைத் தானே ஈர்த்துத் தேடிக் கொள்ளும்
2.அந்த ஒலி நாதத்தைப் பெறும் அந்தந்த உயிர்த் தன்மை அணுக்களையும் தன் வழியில் வழி நடத்தி ஒலி நாத வித்துக்களாக மாற்றி
3.அதனதன் அமில குண நிலைக்கொப்ப வீரிய நிலை கொண்டு ஒளி நிலையாக
4.நட்சத்திரங்களாக… கோளங்களாகப் படைக்கும் சக்தியை வளர்த்தால் அது ஆதி சக்தியின் சக்தியாக அந்தச் சக்தியில் தான் கலக்கும்.

இதன் உண்மை வழிதனில் செயல்பட்டுத் தனக்குகந்த அமில குண வழி வீரியம் கொண்டவரே “காண்டீப முனிவர் என்ற மகான்...!

பௌருஷம் என்ற என்ற புருஷார்த்த தன்மை வீர குணமாகச் செயல் கொண்டாலும் கோப நிலையை வளர்த்துக் கொண்ட நிலையில் ஆத்மாவின் அமில முலாமாக வளர்த்த பிறகு அதன் வித்தியாசத்தை உணர்ந்து கொண்டார்.

கோபத்தை மாற்றிச் சமப்படுத்தும் “சாந்தமான வீர குணமே ஒளி நிலை பெறும் மார்க்கம்...!” என்றும் அந்த ரிஷிகளின் சக்தியில் தன்னைச் சேர்க்கும் என்றும் தெளிவாக உணர்ந்து கொண்டார் காண்டீபர்.

1.தாய் சக்தியின் கூட்டு அமில சக்தியோ அல்லது ரிஷி பத்தினி என்ற (மனைவி) சக்தியின் ஆத்ம கலப்போ தான்
2.”மாமகரிஷியாக நம்மை ஆக்கும்…” என்ற உண்மையை உணர்ந்தார்.

அதனின் உந்துதலாக மகரிஷி என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ண உறுதியே பின் “ஐயப்பனாக... ஐயப்ப முனிவராக...! வளர்ந்து அந்த ரிஷித் தன்மை அடையும் நிலை பெற்றுவிட்டார்…”

அன்று காண்டீப முனிவராக இருந்து பெற்ற ஞானத்தின் தத்துவத்தில் தன் வளர்ப்பைத் தான் வளர்த்து அதற்காகக் கண்டு கொண்டதே சரணகோஷ நாதத்தின் ஒலி (சரணம் ஐயப்பா...!).

1.மனித உடலே ஒரு காண்டீபம்.
2.அதில் இயக்கும் சக்தியான உயிரே நான் (நாண்).
3.உயிர் இல்லை என்றால் உடல் ஏது..? இயக்கம் ஏது..? நான் ஏது..?
4.இந்தத் தத்துவத்தைக் காட்டி நான்(ண்) ஏற்றுதல் என்ற இணைப்புச் செயலில்
5.உயிருடன் ஆன்மாவைத் தொடர்புபடுத்தும் பக்குவத்தைக் காட்டினார் காண்டீப முனிவர்.

(நான்.. நான்...! என்று எல்லோரும் சொல்கிறோம். அந்த நானே இந்த நாணிலிருந்து வந்தது தான். ஆனால் நான் என்று சொல்லி உள் நின்று இயக்கும் உயிரை மறந்த நிலையில் “உடலைத்தான் நான்...!” என்று நம்பிக் கடைசியில் உயிரையும் ஆன்மாவையும் அறியாது… அதைக் காக்காது… மீண்டும் மீண்டும் உடல் பெறும் நிலைக்கே… இருளுக்குள் சென்று விடுகின்றோம்)

உயிரையும் ஆன்மாவையும் நெருங்கிச் சேர்த்து உயிரான்மாவை (தன்னை) மீட்டிடும் ஒலி நாத ஒளியாகக் காண்டீபம் என்ற கூட்டு இயக்கமாக வீரிய எண்ண உயர் நிலைக்குத் தன்னைத் தயாராக்க வேண்டும் என்றார்.

1.உயிரினை மீட்டும் ஒலி நாதத்தையே “நாணின் ஒலி” என்றும்
2.அதையே உயிர் நாத கீதமாக்கி அந்த வழியின் தொடர்பில் தொடர்ந்து மீட்டும் பொழுது
3.எழும் ஒலி நாதம் “சரணம்...!” என்று உயிர்ப்பிப்பதாகக் கூறி
4.நம் உயிருடன் ஒன்றிடும் ஜெபத்தையே சரணம் என்ற சரணாகதித் தத்துவத்தை வெளிக்காட்டினார் காண்டீப மகரிஷி.

ஐயப்பன் பெற்ற பேரின்ப இரகசியம் இந்த ஜோதித் தத்துவம் தான்.

அதாவது உடலில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி நிலைப்படுத்திச் சரீரத்தையே ஒளியாக்கி உயிர் ஆன்மக் கலப்பின் ஜோதி ஸ்வரூபமாக்கிக் கொண்டார் ஐயப்பன்.

தனக்குள் எப்படிப் பேரொளியாக மாற்றிக் கொண்டாரோ அந்த அத்தனை உயிரணுக்களையுமே
1.ஆத்ம பிம்ப ஒளிக் கதிர்களாகப் பிரித்து வானில் ஒன்றுபடுத்தி
2.தன் ஆத்ம ஜோதியை எல்லோருக்கும் காட்டினார் ஐயப்பன்
3.அந்த ஐயப்ப ஜோதியே நாம் காணும் “ஆகாய ஜோதி...!”

February 17, 2024

களி நடனம்...!

ஆகாயலிங்கம் என்பது ஆகாய உயிரணு... விண்ணுள் ஒடுங்கி விண்ணில் படைத்து விண்ணுள் வாழ்வது.
1.அதன் ஈர்ப்பு சுழற்சியின் சக்தியாக
2.தன்னுள் கலந்து வாழ்வாகும் (வாழ்க்கை) தன்மையின் செயல்பாடே “நடனம்...!”

அதன் ஒலி நாத அசைவுகளின் தன்மை முதற்கொண்டே வானியலின் உயிரணுக்கள் காரண காரியங்கள் செயலாகின்றன.

அதே சுழற்சித் தன்மைகள் தான் புவியியலிலும் உயிரணுக்கள் தன் தன் வளர்ச்சியின் செயல் கொண்டு அதே பரிணாம வளர்ச்சியின் முடிவில் மனிதன் வரையிலும் செயலுக்கு வருகின்றது.

அத்தகைய தன்மையையே ஆனந்தக் களி நடனம் செய்வதாக.. அசைவதாகக் காட்டிய “உயிரியல் தத்துவ மகரிஷிகள்...” தன் செயல்பாட்டைக் கொண்டே மனித சரீரத்தில் சக்தி பெறச் செய்விக்கும் முறைகளை யோக மார்க்கமாகவும் தியான வழி மார்க்கமாகவும் வழிகாட்டினார்கள்.

யோக மார்க்கம் என்பது நாம் சுட்டிக் காட்டும் இந்தத் தியான நடை முறையில் உள்ளடங்கிச் செயல்படுவதையும் இந்தச் செயலின் தொடரினால்
1.விண்ணுக்குச் செல்லும் தத்துவ மூலகாரண அடவுகளை (மறைந்த பொருள் தன்மை)
2.முத்திரையாகக் (காரியார்த்த விளக்கத் தன்மை) கொண்டு சிவ நடனமாகக் காட்டினார்கள்.

நடனத்தின் ராஜா (நடராஜர்) என்று காட்டிய உயிரியல் தத்துவமே பதஞ்சலி யோக சூத்திர விளக்கமாகவும் அதைக் கண்டு கொண்டு தன் உயிராத்மா பெறும் ஞானத் தன்மைக்கு
1.சுவாசத்தினால் பெறும் சக்திகள் அனைத்தையும் சுட்டிக் காட்டி
2.அவைகளை முத்திரைகளாகக் (யோக - நாட்டிய) காட்டினார் பதஞ்சலி.

சுவாசத்தில் வரும் உணர்வுகளின் அதி தீவிர முரண்பாட்டுத் தன்மைகளை முயலகனாகக் காட்டி அதை மிதித்துத் துவம்சம் செய்வதாகவும் காட்டுகின்றார்.

கிளர்ந்தெழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் அந்தக் கட்டுப்பாட்டுத் தன்மைகளுக்கே முதலிடம் தந்து அதன் பிண்ணனியின் தத்துவத்தை விளக்கிக் காட்டும் சூத்திரதாரியே பதஞ்சலி முனிவர் ஆவார்.

பதஞ்சலி முனிவர் தன் அனுபவ ஞான வளர்ச்சியில் பெற்ற தனித் தன்மைத் தத்துவத்தை... விளக்கவொண்ணா அந்த அதி அற்புதமான உயிரியல் தத்துவத்தை... “நடராஜராக...” உருவகப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மாற்றி விட்டார்கள்.

எந்த மெய் ஞானத்தின் தத்துவத்தை உலகிற்கு மகா மகான்கள் தந்தனரோ அதைக் கடைப்பிடிப்பதிலும் செயல்பாட்டிலும் சூனியத்தைக் கடைப்பிடித்து.. வியாபாரப்படுத்தி... வெறும் வாயளவு மந்திரச் சொற்களைச் சொல்லிக் கொண்டு... பக்தி என்ற வழிக்கு முதலிடம் தந்து இன்று செயல்படுவதுவும் நடராஜரின் விந்தையே...!

பதஞ்சலியால் உருவாக்கப்பட்ட நடராஜரின் உருவத்தைப் பார்த்தால்
1.ஆகாய கங்கை என்று தலையில் ஆதி சக்தியை உயிரியல் புவியியல் தத்துவமாகக் காட்டி அவைகளின் மூலத்தை “வெட்ட வெளியான ஆகாயமாகக் காட்டினார் - சிதம்பர இரகசியம்...!”
2.உயிரணுவிற்குள் இயங்கும் உயிர் என்பதை நாகமாகக் காட்டி அதன் விஷம் கண்டத்திலும் (கழுத்திலும்) அமுதமாகிய பிறைச் சந்திரன் நெற்றியிலும் காட்டி இருவிதத் தன்மைகளும் செயல்படும் என்று உட்பொருள் படுத்தியுள்ளார்.
3.உயர்த்திய கரத்தில் அக்கினி என்றும் ஜோதித் தத்துவம் என்றும்
4.அணுவின் சுழற்சியின் அசைவின் ஒலி நாதத்தைக் காட்ட உடுக்கையையும்
5.சரீர கதியில் செயல்படும் உயிரணுவின் செயல்பாடு பெற வேண்டிய குணம் சாந்தம் என்பதைக் காட்ட ஒரு கையில் மானையும்
6.சம்ஹரிக்க வேண்டிய துர்குணங்களை அதன் உணர்வுகளை அன்று காட்ட இன்னொரு கையில் மழுவாயுதத்தையும்
7.உடல் செருக்காகிய மதத்தை நீக்க வேண்டும் என்று யானைத் தோலைப் போட்டும்
8.துர்க் குணமான கோபத்தை நீக்க வேண்டும் என்று புலித் தோலையும் அணிந்தவன் என்று உருவகப்படுத்தினார் பதஞ்சலி.

அதே போல் உணர்வுகளின் (உணர்ச்சிகளின்) அதிவேகமான தன்மையை முயலகன் என்று காட்டி அதைத் தன் காலடியில் வைத்துத் துவம்சம் செய்யப்படுவதாகக் காட்டுகின்றார்.

இடக்கரம் யானையின் துதிக்கை போல் நீண்டு “ஹஸ்த முத்திரை” என்ற பாங்குபடுத்தி
1.சுவாசத்தால் தீமைகளை நீக்க வேண்டும்.. ஜெபத்தால் ஞானத்தைப் பெற வேண்டும் என்பதை ஹஸ்த முத்திரையின் மேல் அபய முத்திரையாகக் காட்டி
2.இடது காலைத் தூக்கி நாட்டியமாடும் பாவனைப்படுத்தி வலது நாசித் துவாரமாகிய “சூரிய கலை...” என்ற சுவாசம் பெற வேண்டிய ஓட்டகதியை நிச்சயப்படுத்திக் காட்டினார் பதஞ்சலி.

சுவாச அலையால் பெற வேண்டிய வீரியத்தையும் ஒருமித்த சுவாசத்தையும் சுட்டிக் காட்டிடவே ஹஸ்த முத்திரையாகக் காட்டி அதன் வழியில் சக்தி பெறும் உயிரான்மா “ஆனந்தக் களி நடனம் புரியும்... ஜோதியில் ஒடுங்கும்...!” என்று ஆகாய லிங்கமாகக் காட்டினார்.

சிதம்பரம் (சிற்றம்பலம்) என்ற சரீரத்தில் செயல்படும் அத்தனை உயிரணுக்களும் உயிரான்மாவின் சக்தியைப் பெற்று ஜோதிக்குள் கலக்கும் சிவமாகிய சக்திக்குள் ஒடுங்கும் என்பதே “திருக்கோவில் ரகசியம்...!” (சரீர ரகசியம்). இவ்வாறு
1.உயிரியலின் சூட்சம ரகசியத்தை அறியும் உயிராத்மா
2.”களி நடனம் கொண்டு சக்தி பெறும்...!” என்பதையே நடராஜர் நடனமாகக் காட்டினார்.

“உயிரை ஒட்டி” நம் ஆறாவது அறிவைப் பயன்படுத்த வேண்டும்

பூரண நிலவாக இருக்கப்படும் போது சந்திரன் முழுமையான வெளிச்சத்தை வெளிப்படுத்துகிறது. காரணம் சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை எந்தக் கோளும் இடைமறிப்பதில்லை…. நேரடியாகச் சந்திரனுக்கு வருகின்றது.

பௌர்ணமி அன்று முழுமையாகப் பிரகாசிக்கின்றது. இருந்தாலும் அடுத்த நாளை எடுத்துக் கொண்டால் மற்ற கோள்கள் இடைமறிக்கப்படும் பொழுது சிறுகச் சிறுக பதினைந்து நாட்களில் தேய்பிறையாக மாறிவிடுகின்றது அதனுடைய ஒளி மங்கிக் கொண்டே வருகின்றது.

சூரியனிலிருந்து வரக்கூடிய அந்த ஒளிக்கதிர்களை மற்ற கோள்கள் தடைப்படுத்துவதனால் இருளடைந்து அதனுடைய முடிவுக்கு வருகின்றது… முழுமையாக மறைந்து விட்டால் அமாவாசை.

அதே போல் அது சமயம்
1.சூரியனிலிருந்து வெளிப்படக்கூடிய ஒளிக்கதிர்களை மறு பிரதி பிம்பமாக (கண்ணாடி போல்) வெளிப்படுத்தும் சக்தி
2.சந்திரனிலிருந்து வருவது நம் பூமிக்கும் கிடைப்பது தடைப்படுகின்றது.
(பௌர்ணமி முழுமையாக இருந்தால் பூமியில் இரவிலும் அந்த வெளிச்சம் தெரியும்)

ஆனால்
1.அமாவாசைக்குப் பின் வெள்ளிக் கோள் அதன் அருகில் வந்து ஒளிக்ற்றைகளை எடுத்துக் கொடுக்கின்றது
2.சிறுகச் சிறுக சூரியனின் ஒளியைப் பெறப் பெற… சந்திரன் மறுபடியும் பூரண நிலவாக “பௌர்ணமியாக” வருகின்றது.

உயிரணு தோன்றி எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்று நம்மை மனிதனாக உருவாக்கியது நமது உயிர். முழு நிலா எப்படி இருக்கின்றதோ இதைப் போல்
1.மனிதன் இயன்றவரை அனைத்து நிலைகளையும் அறிந்து…
2.தீமைகளை அகற்றி வாழக்கூடிய உணர்வின் உணர்ச்சிகளை எழுப்பும் மனித உடலாக அமைக்கின்றது நமது உயிர்.

இப்படித் தெரிந்து கொள்ளும் சக்தியைக் கார்த்திகேயா என்று காட்டுகின்றார்கள். அதாவது நமது ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்று காரணப் பெயர் வைக்கின்றார்கள்.

மனித வாழ்க்கையில் அன்பும் பண்பும் பரிந்து கொண்டு பிறிதொரு மனிதர்களைப் பார்க்கின்றோம். ஒருவன் அவனுக்கு ஆகாதவனை வெறுத்துக் கோபமாகப் பேசுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவனின் சிந்திக்கும் சக்தி இழக்கப்படுகின்றது.

கோபமாக நிந்தித்துக் கொண்டிருக்கும் அந்தச் செயலினை நாம் பார்த்தால்…
1.நமக்குள்ளும் கோபத்தின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
2.சிந்திக்கும் தன்மை இழந்து நிந்திக்கும் உணர்வு நமக்குள்ளும் வந்து விடுகின்றது.

மனிதனாக வருவதற்கு முன் புழுவிலிருந்து எத்தனையோ கோடி உடல்கள் பெற்றுப் பரிணாம வளர்ச்சி பெற்ற நிலையில்
1.தன்னைக் காட்டிலும் வலிமையான உயிரினங்களிடம் சிக்கி
2.அது துன்புறுத்தி உணவாக உட்கொள்ளும் போது அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற நிலையில்
3.உணவுக்காக அந்த மிருகம் இதைக் கொன்று தசைகளைத் தின்றாலும்
4.அதனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்று எடுத்துக் கொண்ட உணர்வுகள் வலுவாகி
5.இந்த உயிரான்மா அந்த உடலுக்குள் சென்று அதனுடைய உணர்வை எடுத்து அதே உடலாக மாறுகின்றது.
6.அதனுடைய குட்டியாகும் போது அது இதைப் பாதுகாக்கிறது.

இதே மாதிரி ஒவ்வொரு உடலிலும் “தான் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வைச் சேர்த்துச் சேர்த்துப் பரிணாம வளர்ச்சி அடைந்து… நம்மை மனிதனாக உருவாக்கிய “உயிரான ஈசனை நாம் மதித்து நடக்க வேண்டும்…”

வீட்டை அழகாகக் கட்டி வைத்திருந்தாலும் எப்படியும் அதில் தூசிகள் படுகின்றது… நூலாம்படைகளும் வருகிறது. அதை எல்லாம் துடைக்கத் தவறினால் தூசிகள் அதிகமாகி நெடி வந்துவிடும்.

அந்த வீட்டில் அடுத்து நாம் அமர முடியாது… குடியிருக்க முடியாது

அது போல் பரிணாம வளர்ச்சியில் எத்தனையோ தீமைகளைச் சந்தித்திருந்தாலும் அதை எல்லாம் மாற்றி அமைக்கக்கூடிய உடல் அமைப்பைக் கொடுத்தது நமது உயிர்.

சிந்தித்துச் செயல்படும் ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்றி இந்த உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள் தான் மனிதர்களான நாம்.

உடல் என்பது உயிரால் உருவாக்கப்பட்ட இந்த உடல் ஒரு ஆலயம்… இது ஒரு கோட்டை.

ஆறாவது அறிவைக் கொண்டு தூய்மையான உணர்வுகளை இந்த உடலுக்குள் பெருக்கி… உயிருடன் ஒன்றி இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலை அடையும் பருவம் பெற்றது…
1.இதே உயிர் தான்…! அவனை ஒட்டி ஆறாவது அறிவை நாம் சீராகப் பயன்படுத்தி
2.வாழ்க்கையில் வரும் தீமைகளை அவ்வப்போது தூய்மைப்படுத்த வேண்டும்.
3.தவறினால் அழுக்குகள் அடைந்து ஒவ்வொரு குணமும் பாழ்பட்டுவிடும்..

எப்படிப் பூரண நிலா கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து முழுவதுமாக இருள் அடைவது போன்று நம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து உணர்வுகளும் சிறுகச் சிறுக இருளடைந்து… உயிர் அதை இயக்க முடியாத நிலைகள் கொண்டு வெளியே சென்றுவிடும்.

வெளியில் சென்றாலும் சிந்திக்கும் தன்மை இழக்கப்பட்ட மிருக இனங்களாகத்தான் அடுத்துப் பிறக்க வேண்டி வரும். மனிதனல்லாத உருவாகத் தான் பிறக்க நேரும்.

அதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்குத்தான் தீமைகள் உங்களுக்குள் வரும் பொழுதெல்லாம்
1.வெள்ளிக் கோள் தன் ஒளிக்கற்றைகளால் சந்திரனுக்கு (அமாவசைக்குப் பின்) ஜீவன் ஊட்டியது போல்
2.அருள் ஞானிகள் உணர்வை உங்களுக்குள் சேர்ப்பிக்கும் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
3.அருள் உணர்வுகள் உங்களுக்குள் பெருகப் பெருக இருளகன்று என்றுமே ஒளியின் அறிவாக நிலைத்திருக்க முடியும்.

February 16, 2024

“உலகோதய நான்… பரப்பிரம்மமாகிய நான்” ஆக வேண்டும்

தன் உயிர் சக்தியை வலுக்கூட்ட சரீரம் கிடைக்கப் பெற்ற இந்தக் கால கட்டத்தில் உண்மையை நாம் உணர்ந்து
1.“உலகோதய நான்…” என்ற நிலையை விடுத்து
2.“பரப்பிரம்மமாகிய நான்…!” என்ற நிலை பெறும் வழி அறிந்திட வேண்டும்.

தன் உயிர் சக்திக்கு ஒத்த ஆகார நிலை வழி அமைத்து சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களையுமே சக்தி பெறச் செய்யும் மார்க்கம் அறிந்து அந்த எண்ண வழித் தொடரில் “பசுக்களுக்காக வசுவா…? வசுவிற்காகப் பசுக்களா..?” என்ற கேள்வி எழுந்து பெறப்பட்ட ஞான வழித் தொடர் தான் “கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தான் கோபாலன்…!” என்ற தத்துவமே.

கண்ணன் என்ற உயிர் சக்தியின் வலுவைக் காட்டி வசுவாகிய ஒளிச் சக்தியை அதனுள்ளே காட்டிக் “கோபாலன்…!” என்ற பசுக்களைப் பராமரிக்கும் வித்தகனாக உணர்த்தினார் வியாசகர்.

1.தனது சரீரத்தையே அண்டமாகவும்
2.சரீர உயிரணுக்கள் எல்லாவற்றையும் பசுக்களாகவும்
3.கண்ணனாகிய உயிர் சரீர உயிரணுக்களுக்கும் தனக்கும் ஆகாரம் ஊட்டுவிக்கும் தன்மையில்
4.நாதத்தைக் காட்டக் கண்ணன் கையில் வேய்குழலும் (புல்லாங்குழல்)
5.அதற்கும் “காற்றே தான் ஆகார சக்தி…!” என்பதை மறை பொருளாக வைத்து
6.இந்த ஜெப வழித் தொடர் வலுப் பெற்றுவிட்டால்
7.சரீரம் தனக்குகந்த பக்குவத்திற்கு உயரிய ஒளிக் காந்த சக்தியின் சக்தி வலுக்கூட்டும் செயல் தன்மையும்
8.அதே தொடரில் கால மாற்றமாகிய இயற்கையின் சீற்றத்தையும் கலியில் காட்டிடவே
9.அதைக் காவியமாக்கிச் சொல்லாமல் சொல்வித்து
10.”உயிர் ஒளி சக்தி பெற்றுக் கொள்ள வேண்டிய உயர்வைக் காட்டினார் மாமகரிஷி வியாசகர்…!”

ஆதார சுருதி நாதத்தில் செயல்பட்டு நம் ஜெபமாகிய அந்நாத ஜெபமே எண்ணத்தின் வலுவாகி உயிர் சக்தி அதனுள் வளரும் சக்தி நிலைப்படுத்திட “கோவர்த்தனைகிரியைச் சுட்டு விரலால் தூக்கியதாகக் காட்டுகின்றார் வியாசகர்…!”

அதாவது…
1.கரத்தை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி
2.நம் உயிர் பெற வேண்டிய உயர்வைக் காட்டி
3.அதன் சக்தி வலுவை மலையாகக் காட்டி
4.அதன் பாதுகாப்பில் பசுக்களாகிய உயிரணுக்கள் கூடிக் காக்கப் பெற்றன என்பதே அதன் தத்துவம்…!

தன் உயிர் சக்தியை ஒளி காந்த சக்தியாக உயர்த்துவதோடல்லாமல் முத்தொழில் தத்துவத்தில் காத்தல் என்பது சரீரத்தில் நிலை நின்ற “அத்தனை உயிரணுக்களையுமே” என்பது மறை பொருள்.

திட ஆகாரத்தின் மூலம் பெறப்படும் வீரியச் சுவை குணங்களில் எந்தச் சுவை வீரியக் கூட்டப்படுகின்றதோ அந்தச் சுவை குணங்களின் வழித் தன்மைக்கு ஒப்ப உணர்வுகளின் உந்துதல் ஏற்பட்டு உணர்வுகளின் வழிதான் எண்ணம் என்ற நிலைப்படுத்திவிடும்.

உயர்ந்த எண்ணங்களின் வழியில் தான் கட்டுக்குள் அடங்கிச் செயல்புரியும் உணர்வுகள் என்பது நாம் ஏற்படுத்தப்பட வேண்டிய செயல் முறை. ஞானம் என்பது அனைத்து உயிர்களுக்கும் பொது மறை.

உணர்வுகளின் வழிக்கெல்லாம் புலன்கள் போவது என்பது உயிரின் ஆதார வித்தையே. கொள்ளை கொண்டு போய்விடக்கூடிய செயலுக்கு உட்பட்டதாகவும் உயரிய எண்ணத்தின் வழி எடுக்கப்படும் வீரிய உயர் ஞான சக்தி
1.“தன் உயர்வைத் தானே தேடிக் கொள்ளும் சுயப் பரப்பிரம்மமாக என்பதன்
2.கருப் பொருள் உணர்ந்து கொள்வதே நல்லது.

ஆகவே
1.உயிர் பெறும் அந்த ஒளி காந்த சக்தியுடன்
2.சரீரத்தில் உள்ள அத்தனை உயிரணுக்களையுமே ஒளி சக்தியான ஆகாரம் உண்ண வைத்து
3.ஒளி நாத தத்துவத்தில் ஒளி பெறும் தன்மைக்கு வழி முறை செயலுக்கு நாம் ஒவ்வொருவரும் வரவேண்டும்.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்தறிந்து எவ்வாறு செயல்பட வேண்டும்…?

நம் பிள்ளை சொன்னபடி கேட்கவில்லை… சரியாகப் படிக்கவில்லை… அவன் மீது கவலையும் வெறுப்பும் கோபமும் வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?

அந்த நிமிடமே ஈஸ்வரா என்று உயிரை எண்ணி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரிலே அதை மோதவிட்டு
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உடல் முழுவதும் பரவச் செய்து
3.என் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று “நாம் முந்திக் கொள்ள வேண்டும்…”

அந்த வலிமையைச் சேர்க்க சேர்க்கத் தவறான உணர்வுகளிலிருந்து மீட்டிடும் சக்தியாக அது வரும்.

பின் பையனைப் பார்த்து…
1.சிந்தித்து செயல்படும் சக்தி பெற்று நீ ஞானி ஆக வேண்டும்
2.தெளிந்தவனாக வரவேண்டும் தெளிவானவனாக நீ வரவேண்டும்
3.தெளிந்த நிலையில் நீ நிச்சயம் வருவாய்…! என்று இதை நாம் சொல்லிப் பழகுதல் வேண்டும்.

இப்படிச் செய்தால் அவன் குறைகளை நீங்கள் நுகர்வது இல்லை. அவன் குறை உணர்வு இங்கே வந்து அவனைக் குற்றவாளியாக்கும் உணர்வுகளிலிருந்து நீங்கள் தப்பலாம். இல்லையென்றால் பாசத்தால் குழந்தையை வளர்த்த நிலையில் அவனைக் காக்கும் நிலை வராது

அதே போன்று தொழில் செய்யும் இடங்களிலும் எத்தனையோ இன்னல்கள் வருகின்றது.

நமக்குக் கடன் கொடுத்தவன் நாளைக்கு வந்து கேட்டால் நாம் கொடுக்க வேண்டுமே…! என்ன செய்வது என்று தெரியவில்லையே…? என்று எண்ணினால்
1.அந்த உணர்வு மூலத்தில் (உயிரில்) மோதுகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் அது கனலாக எழும்புகின்றது
3.என்ன செய்வது…? ஏது செய்வது…? என்ற பதட்டங்கள் வருகின்றது

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை… உணர்ச்சிகள் இப்படி வரப்படும் பொழுது “உங்கள் எண்ணங்கள் நலமாக சீராக இருக்கின்றதா…? இல்லை…! பலவீனம் அடைகின்றது…”

அப்போது என்ன செய்ய வேண்டும்…?

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உயிரான மூலத்தில் மோதச் செய்து… மோதிய உணர்ச்சிகள் நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களை ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று..
1.துரிதமாக இந்த உணர்வினைச் செலுத்துதல் வேண்டும்.
2.இப்படிச் செலுத்தி விட்டால் அடுத்து நல்ல சிந்தனைகள் வரும்
3.ஏன்…? எதனால்…? என்ற கேள்விக் குறி வரும்.
4.அப்படி அந்தக் கேள்விக்குறி வைக்கப்படும் பொழுது சிந்தனை சீராகி அதை நிவர்த்திக்கும் “உபாயம்” வரும்.

நிவர்த்திக்கும் உபாயங்கள் வந்த பின் நண்பரிடத்திலே சென்று இதை இப்படிச் செய்ய வேண்டும்… இப்படிச் செய்தால் நிச்சயம் நலமாக இருக்கும்... “அதற்கு உன்னுடைய உதவி வேண்டும்…” என்று சொன்னால் நீங்கள் எண்ணிய வலுவாந உணர்வுகள் நண்பனுக்குள் ஊடுருவி… உதவி செய்யும் பண்பு வரும்.

ஆனால் அப்படி எண்ணாதபடி இங்கிருந்து போகும் பொழுதே… நான் கடன் வாங்கினேன் கொடுக்க முடியாதபடி சந்தர்ப்பம் விரயமாகி விட்டது என்ற வேதனை வந்தால் என்ன ஆகும்…?
1.மூலாதாரத்தில் வேதனைகள் மோதி
2.மூண்டெழும் கனலாக அந்த உணர்வுகள் உடல் முழுவதும் பரவி
3.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பலவீனமடைந்து நண்பரிடத்தில் கஷ்டத்தைச் சொல்வோம்.

அவர் செவிகளிலே படுகின்றது. நம் கஷ்டத்தை எல்லாம் கேட்கப்படும் பொழுது அவருக்கு அந்த சந்தேகம் தோன்றுகிறது. பணம் கொடுத்தால் மீண்டும் வருமா…? என்ற சலனங்கள் அங்கே தோன்றி கேள்விக்குறியாக எழும்பிவிடும்.

“நம்முடைய மனமே” அவர் நமக்குக் கொடுத்து உதவும் அந்தப் பண்பை இழக்கச் செய்து விடுகிறது. அதனால்தான் இதை மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலத்தால் அறிந்து கருத்தறிந்து செயல்படும் அந்தச் சக்தி வேண்டும் என்று சொல்வது.

ஆகவே… அப்போது அந்தக் கருத்தை அறிந்திடும் நிலையாக…
1.அது எப்படி வருகின்றது…? எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று
2.மனவலிமையை நமக்குள் கொண்டு வர வேண்டும்.

அப்படி மன வலிமையைக் கொண்டு வர வேண்டும் என்றால் அதிகாலை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பதிவு செய்து வலு சேர்க்க வேண்டும்.

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியிலே நினைவினைச் செலுத்தி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.அந்த மூலாதாரத்தில் இந்த அருள் உணர்வுகளைக் கனலாக நாம் மூண்டெழச் செய்தல் வேண்டும்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடல் முழுவதும் பரப்பச் செய்ய வேண்டும்.
3.கண்ணின் நினைவுகளை உடலுக்குள் செலுத்தி சோர்வை அகற்றி
4.வீரிய உணர்வாக எடுத்து நமக்குள் உற்சாகப்படுத்தி… மன வலிமையைக் கொண்டு வருதல் வேண்டும்.

தொழிலை எப்படிச் சீராக நடத்த வேண்டும்…? என்று அதற்குண்டான தெளிவான சிந்தனைகள் வரும். எல்லோரையும் நலம் பெறச் செய்யும் சக்தியாக வரும்.