ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2017

நமக்கு நோய் வரக் காரணமே இரத்தத்தில் சேரும் தீமைகள் தான்.- இரத்தம் என்றுமே சுத்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்..?

விஞ்ஞானி விஞ்ஞான அறிவைக் கொண்டு ஒரு கம்ப்யூட்டரைத் தயார் செய்கின்றான். அதிலே எழுத்துக்களை அடிக்கும் பொழுது பிழைகள் வந்து விடுகின்றது.

அவன் அதைக் கண்டுணர்ந்து அந்தப் பிழைகள் வராமல் இருக்க அதற்குகந்த சக்தி வாய்ந்த நிலைகளைச் செயல்படுத்துகின்றான். பிழைகள் நீங்கிச் சீரான நிலையில் இயங்கச் செய்கின்றான்.

கம்ப்யூட்டர் அதிர்வின் தன்மை கொண்டு கெமிக்கல் கலந்த காந்தப் புலனை வைத்துக் கொண்டால் இந்த ஒலியின் அதிர்வுகளைக் காட்டப்படும் பொழுது அது எழுத்தோ படமோ சப்தமோ இயக்கிக் காட்டுகின்றது.

உதாரணமாக பேட்டரிக்குள் வைத்திருக்கும் பல பொருள்கள் எதிர் நிலையாகும் பொழுது வெளிச்சமாக வருகின்றது.

இதே போல கெமிக்கல் கலந்த உணர்வுகளின் அதிர்வுகளை எடுக்கப்படும் பொழுது இது உராய்ந்து அதற்குத் தக்க ஒளிக் கற்றைகளை வீசுகின்றது.

அதன் வழி கொண்டு மனித ரூபங்களையும் கம்ப்யூட்டரில் போட்டுக் காட்டுகின்றான் விஞ்ஞானி.

ஒரு மனிதனின் கை ரேகையை எடுத்து அந்த மனிதனின் உணர்வின் தன்மையைக் கம்ப்யூட்டரில் இந்த உணர்வின் அதிர்வுகளைப் பதிவாக்கி அதில் மீண்டும் அதிர்ச்சிகளைச் செயல்படுத்தும் பொழுது இந்த மனிதன் தான்என்று அவன் ரூபத்தையே…” காட்டுகின்றது.

இதே போல தான் நமது வாழ்க்கையில் பிறிதொருவரின் செயல்களைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது
1.அவன் மோசமானவன்…!
2.கோபக்காரன்கெட்டவன்தவறு செய்பவன்…. முரண்டு பிடிப்பவன்
3.பிறருக்குத் தீங்கு செய்பவன் என்று
4.இந்த உணர்வெல்லாம் கண் பதிவாக்குகின்றது
5.பின் நமது எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் ஊழ்வினை என்ற வித்தாக மாற்றி விடுகின்றது.

நாம் பிறிதொருவரின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது நம் உயிரில் பட்டு இந்த உணர்வின் அதிர்வுகள் நம் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.

1.இரத்தங்களில் எதனின் உணர்வுகள் கலக்கின்றதோ
2.உடலிலுள்ள அணுக்களில் இது சிதறப்பட்டு
3.அந்தந்த உணர்வுக்கொப்ப ரூபங்களை மாற்றி அமைக்கின்றது.

இன்று மனிதனாக இருக்கின்றோம். மிருக குணங்களை கொண்ட உணர்ச்சிகளை நாம் அடிக்கடி நுகர்ந்து நம் இரத்த நாளங்களில் கலந்து விட்டால் இதன் உணர்ச்சியின் இயக்கங்கள்
1.நம் உடலில் உள்ள அணுக்களில் கலக்கப்பட்டு
2.அதற்குத்தக்கவாறு நம் உடல் உறுப்புகள் மாற்றமடைகின்றது.
3.உறுப்புகள் மாறும் பொழுது இதனின் மலங்கள் கொண்டு
4.நம் சிந்திக்கும் தன்மையும் மாறுகின்றது.

சகஜ வாழ்க்கையில் கோபப்படுவது வெறுப்படைவது வேதனைப்படுவது போன்ற உணர்ச்சிகளைத்தான் அடிக்கடி நம்மால் பார்க்க முடிகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு நாம் என்ன மாற்று வழி வைத்திருக்கின்றோம். சற்று சிந்தித்துப் பாருங்கள்.

நாம் தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலக்கின்றது. நுகர்ந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.

மனிதன் ஒரு எந்திரத்தை உருவாக்கி அதில் பிழைகள் வந்து விட்டால் கம்ப்யூட்டரின் இயக்கத்தால் கண்டு பிடித்துச் சரி செய்து சூப்பர்..என்ற நிலையில் அதை மாற்றியமைத்து எந்திரத்தைச் சீராக்கி விடுகின்றான்.

வெறுப்படைபவர்கள் கோபப்படுவோர்கள் வேதனைபடுவோர்கள் வேதனைப்படுத்துவோர்கள் போன்ற பலரின் உணர்வுகளை நாம் பதிவாக்கி அதை நுகர்கின்றோம்.

அந்தந்த உணர்வுகளுக்குத் தக்கவாறு இயக்கம் ஆகின்றது. உதாரணமாக
1.வேதனைப்படுவோரைப் பார்த்து அவர் மீது அன்பு கொண்டால்
2அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் செயல்படுகின்றோம்.
3.அவர் மீது அன்பு இல்லாதபடி வெறுப்பாக இருந்தால்
4.அவர் செய்த நிலைகளுக்கு அப்படி வேதனைப்பட்டுதான் ஆகவேண்டும் என்ற உணர்வு நமக்குள் வருகின்றது

வேதனைப்படுவோரின் உணர்வை நுகர்ந்தாலும் வெறுப்படைந்தால் அவர் மீது வெறுப்பின் நிலையே நமக்குள் அதிகமாக வந்து விடுகின்றது.

ஆனால் எப்படிப்பட்ட்ட உணர்வுகளை நுகர்ந்தாலும் அந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.

இத்தகைய தீமையான இயக்கங்கள் நமக்குள் வளர்ந்திடாது மாற்றி அமைக்க வேண்டும். தீமையான இயங்களை மாற்றியமைக்கும் சக்தியாகத்தான் உங்களுக்குள் தீமையை வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

உயிருடன் ஒன்றி இருளை மாய்த்து என்றும் ஒளியாக இருப்பது தான் அந்தத் துருவ நட்சத்திரம். அதற்கு விஷ்ணு தனுசுஎன்று காரணப் பெயரை வைக்கின்றார்கள் ஞானிகள்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில்
1.தீமையான நிலைகளைக் கண்டால்
2தீமைகளை நுகரக்கூடிய சந்தர்ப்பம் வந்தால்
3.அந்தத் தீமையின் உணர்ச்சிகள் நம் உடலில் வராதபடி
4.தீமையான உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்காதபடி
5.நம் உடலை உருவாக்கிய அணுக்கள் தீமைகளைப் பருகாதபடி
6.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கொண்டு மாற்றி அமைத்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை அவ்வப் பொழுது நமக்குள் ஏற்றி வைத்துக் கொண்டால் விஞ்ஞானிகள் “SUPER COMPUTER…” என்று செயல்படுத்துவது போல் நம்முடைய வாழ்க்கையில் தீமைகளை உடனுக்குடன் மாற்றியமைக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே மகிழ்ந்து வாழ முடியும்.

வியாழன் கோளை “குரு” என்று ஏன் சொல்கிறோம்...?

இந்த பூமியே சீக்கிரம் அழியப் போகின்றது. ஏனென்றால் இன்றைக்கு இருக்கக்கூடிய விஞ்ஞான உலகில் அணுக் கதிரியக்கங்கள் அதிகமாகப் பரவிவிட்டது.

அவைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து விட்டது. இந்தப் பூமியின் நடு விட்டத்திற்குள் அணுக்கதிரியக்கங்கள் ஊடுருவிப் போய்விட்டது.

அந்த அணுக் கதிரியக்கங்கள் சூரியனின் வெப்ப காந்தங்களுடன் கலந்தவுடனே
1.இந்த உணர்வுகள் அதில் இருக்கக்கூடிய காந்தமும்
2.பூமியில் இருக்கக்கூடிய காந்தமும்
3.ஒரு உலோகத்திற்குள் இருக்கக்கூடிய காந்தங்களுக்குள் மோதியவுடனே
4.புயல் அடித்த மாதிரி இரும்பே உருகுகின்றது.
5.அந்தக் கதிரியக்கங்கள் மீண்டும் அது வளர்ச்சி அடைகின்றது.

அது ஓங்கிய நிலைகள் கொண்டு சுழிக் காற்று போன்று எல்லாவற்றையும் பிளந்து அதனின் வீரிய சக்தி அடங்குகின்ற வரையிலும் இங்கிருக்கக்கூடிய செடி கொடி கல் மரம் கட்டிடங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டுப் போய்க்கொண்டே இருக்கும்.

ஏனென்றால் இந்தப் பூமியில் இருக்கக்கூடிய இந்த அணுவின்

விஷத்தை எடுத்துப் பிளந்து (NUCLEAR REACTION) அது செய்து கொண்ட நிலை இது.

வேறு வேறு வேலைகளுக்குக் கரண்ட் உற்பத்தி செய்வதற்காக அதைச் செய்கிறோம் என்று விஞ்ஞானிகள் சொல்லலாம். ஆனாலும் இதனுடைய தணிந்த உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றிக் கொண்டே இருக்கின்றது.

பூமிக்குள் அணுவைப் பிளந்தால் விபத்து என்று தெரிந்த பின் பூமியைக் கடந்து வான வீதியிலே இந்த அணுக்களைப் பரீசீலனை செய்து வெடிக்கச் செய்தார்கள்.

வான்வீதியிலும் இந்த அணுக்களுடைய தன்மை படர்ந்து விட்டது. மற்ற கோள்களுக்குள்ளும் சூரியனுக்குள்ளும் அது சென்று விட்டது.

அதே சமயத்தில் வான்வீதியில் படர்ந்த அந்த அலைகள் பூமியின் ஈர்ப்புக்குள் வந்து நமக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய திரையையும் (OZONE LAYER) பிளந்து மீண்டும் இந்த விஷத்தின் தன்மை பூமியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் தான் வந்து கொண்டு இருக்கின்றது.

இவை அனைத்தும் பூமியின் நடு விட்டம் அடைந்து விட்டது. வெப்பத்தின் தணல் கூடிவிட்டது. பனிப் பாறைகள் உருகத் தொடங்கிவிட்டது.

உருகிய நீர்கள் பூமியில் இருக்கக்கூடிய நிலத்தை ஒடுக்கச் செய்து கொண்டிருக்கின்றது. மீண்டும் மீண்டும் வெப்பத்தினால் பனிப்பாறைகள் கரைய அந்த நீரின் தன்மை அதிகமாகப் படரும் தன்மை வரப்போகும் போது சூரியனை விட்டு பூமி நகர்ந்து சென்று விடுகின்றது.

விலகிச் சென்று மீண்டும் இது குறைந்தவுடனே (பூமி) பனிப்பாறையாக உறைந்துவிடும். நம் உயிர் எல்லாம் அந்த பனிப் பாறைக்குள் சிக்கிவிடும்.

இன்று கோழி முட்டைகளை ஐஸ் பெட்டியில் வைத்துவிட்டு அடுத்துத் தேவைப்படும் பொழுது மிஷினில் சூடு செய்து குஞ்சு பொரிப்பார்கள்.

இதே மாதிரி முந்தி வியாழன் கோளில் நம் உயிர் எல்லாம் சிக்கப்பட்டு மீண்டும் அதிலிருந்து தெறிக்கப்பட்டு வான வீதிக்கு வந்து இந்தப் பூமிக்குள் வந்து தான் நாம் மனிதனாகப் பிறந்திருக்கின்றோம்.

அதனால் தான் வியாழன் கோளை… “குரு…” என்று சொல்வது.

அதிலே மனிதர்கள் வாழ்ந்து அதிலேயும் விஞ்ஞான வளர்ச்சியாகி இத்தகைய தவறு செய்து பயன்படுத்திய அந்த ஆயுதங்கள் இன்னும் இருக்கின்றது.

அதே உணர்வு வளரப்படும்போது அது வளர வளர இந்தப் பூமியும் குறையப் போகின்றது.

பூமியில் இங்கிருக்கும் விஞ்ஞானிகள் செய்து வைத்திருக்கின்ற ஆயுதங்களைக் காட்டிலும் பன் மடங்கு சக்தி வாய்ந்த நுட்பமான ஆயுதங்கள் எல்லாம் அங்கே வியாழன் கோளில் புதைந்து கிடகின்றது.

இதைக் குருநாதர் காட்டியிருக்கின்றார்.

வியாழன் முழுவதும் பனிப்பாறைகளாகி அதற்குள் சிக்கிய உயிர்கள் அதிலே வந்த அந்த ஒவ்வொரு உயிரணுவினுடைய தன்மையினுடைய நிலைகள்தான் மீண்டும் இது ஜீவன் பெற்றுப் பல நிலைகள் வந்தது.

வியாழன் கோளைப் பற்றியும் மற்றும் இருபத்தியேழு நட்சத்திரங்களைப் பற்றியும் சில உண்மை நிலைகள் அது எப்படி வந்தது என்று குருநாதர் காட்டினார்.

இதை விஞ்ஞானிகள் கண்டு கொள்ள ரொம்ப நாளாகும். இப்போது நான் சொன்னதை இனிமேல் கண்டுபிடித்து ஒரு காலத்தில் சொல்வார்கள்.

November 29, 2017

தற்கொலை செய்த பின் எந்த நிலையில் இருப்போம் என்று தெரிந்தால் யாரும் தற்கொலை செய்யவே மாட்டோம்...!

மனிதனின் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் ஆத்திரம் தாங்காமலோ பிறருடைய கடும் சொல்லை ஏற்க முடியாமலோ கடுமையான சூழலில்  தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்கின்றனர். (சிலர் தூக்குப் போட்டு இறக்கின்றனர்).

அப்பொழுது மனிதனின் எண்ணங்கள் போய்விடுகின்றது. உடலை அழித்து விடுகின்றது. விஷத்தைக் குடிப்பவர்கள் உயிரை விட்டுப் பிரிந்த உயிரான்மா எங்கே செல்லும் தெரியுமா?

எந்த விஷத்தைக் குடித்தார்களோ அதன் நிலை கொண்டு பாம்பாகவோ தேளாகவோ இதைப் போன்ற விஷம் கொண்ட சரீரமாகத்தான் அடுத்து பிறப்பார்கள்.

வேறு எங்கும் போகமாட்டார்கள்.

இந்த மனித உடலை விட்டுப் போன பின்
1.வேறு உடலுக்குள் போனாலும்
2.அவர்களையும் இதே போன்று விஷத்தைக் குடித்துச் சாக  வைப்பார்கள்.

இதில் விளைந்த விஷம் அந்த உயிருடன் அவனுடன் ஒன்றிக் கொண்டே தான் இருக்கும். வேறு எங்கும் போகாது. நாம் இந்த உடலில் இம்சைப்பட்டிருந்தால் அடுத்த உடலில் அதுவும் அதே இம்சையைத்தான் படும்.

1.விஷத்தைச் சாப்பிட்டுவிட்டு எத்தனை துடி துடித்தாரோ
2.அது உயிரிலே கலந்து கொண்டு
3.அதே துடிப்பு நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும்.

இந்தத் துடிப்பான உணர்வுகள் உடலுக்குள் போனவுடனே அது வேலை செய்யத் தொடங்கி விடுகின்றது.

சில பேர் தற்கொலை செய்து கொண்டு… “இந்த உலகத்தை விட்டே நான் போய் விடுகிறேன் என்பார்கள்..! எங்கே போவது…?

அவனிடமிருந்து (உயிரிடமிருந்து) தப்பிக்கவே முடியாது.
1.தப்பு செய்தால் தப்பு தான்.
2.சரியாகச் செய்தால் சரி தான்.
3.மார்க் போட்டுக் கொண்டே இருக்கும் நமது உயிர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் கீதையிலே வியாசகர் சொன்னது நீ எதை எண்ணுகிறாயோ.. நீ அதுவாகின்றாய்…!

ஒருவரைக் கோபத்துடன் சண்டையிட்டு நான் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்பார்…! என்று நினைக்கலாம். சுட்டுப் பொசுக்கும் எண்ணம் முதலில் என்னிடம் தான் வருகின்றது எனக்குள் வளர்கின்றது.

சுடப்பட்ட பின் அவன் துடித்த உணர்வு அதே எண்ணத்தை நாம் எண்ணிக் கொண்டிருந்தால் நேராக என்னிடம் வந்துடுவான். என் உடலுக்குள் வந்த பின்னாடி
1.நான் சுட்டுப் பொசுக்கிய உணர்வின் தன்மை என்ன செய்யும்…?
2.என்னைச் சுட்டு பொசுக்கிக் கொண்டேயிருக்கும்.
3.இந்த உயிருடன் ஒன்றி அந்த இம்சைப் படுத்திக்கொண்டே இருக்கச் செய்யும்.

உயிரிடம் இருந்து யாரும் தப்ப முடியாது.

உயிரோடு ஒன்றிய அந்த நிலைகள் நீ தவறு செய்தாய்… அதனால் வேதனைப்படு என்று இந்த உயிர் செய்யும்.  ஏனென்றால் அவன் கடவுள்.


பெரும் பகுதியானவர்கள் நாம் இந்த உடலை விட்டுப் போய் விட்டால் எல்லாம் முடிந்தது என்று நினைக்கின்றோம்.

தற்கொலை செய்து கொள்ளும் உயிரான்மாக்கள் எங்கே போகின்றது? அடுத்த உடலுக்குள் புகுந்து அந்த உடலையும் எப்படி அல்லல்படுத்துகின்றது? கடைசியில் விஷமான உயிரினங்களுக்குள் சென்று அடைவதையும் நேரடி அனுபவமாகக் குருநாதர் காண்பித்துத் தெரிய வைத்தார்.

அதைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

வாழ்க்கையில் கடுமையான இன்னல்கள் ஏற்படும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்?

ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணத்தைச் செலுத்தி.
1.மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உயிருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உடலுக்குள் நினைவைச் செலுத்த வேண்டும்
3.என்னை அறியாது வந்த தீமைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா என்று
4.அந்த மெய் உணர்வுகளை நம் உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும். அதை நம் உடலாக ஆக்க வேண்டும்
5.இதை நாம் சிருஷ்டித்தால் மெய் உணர்வைத்தான் உயிர் நமக்குள் கொடுக்கும்.

அடுத்து உடலைவிட்டு போய் விட்டால் உயிர் நம்மை எதுவாகப் படைக்கும்? நம்மை அந்த மெய் ஞானியாகப் படைத்துவிடும். ஏனென்றால் முழு முதற் கடவுள் நாம் சிருஷ்டிக்கும் உடல் பெற்றவர்கள்.

ஆனால் இந்த மனிதப் பிறவியில் இதை இழந்து விட்டால் அடுத்து மீண்டும் தேய் பிறை என்ற நிலைக்கே நம்மை உயிர் அழைத்துச் செல்லும்.

ஆகவே
1.விஜயதசமி பத்தாவது நிலை பெறும் அந்தப் பாதையிலே
2.ஞானிகள் சென்ற பாதையிலேயே நாம் செல்வோம்.
3.நம்மை அறியாது வந்த எத்தகைய இருளையும் போக்குவோம்.
4.”கல்கி…” என்ற அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.

வியாசக பகவான் கொடுத்த “வராக அவதாரத்தின் முக்கியத்துவத்தை…” அறிந்து கொள்ளுங்கள்

வராகன் என்றால் – “மிகவும் வலிமையானது…” என்று பொருள்

பன்றி தன் உடலின் வலிமை கொண்டு சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளக்கிறது. பிளந்து எடுத்த பின் சாக்கடைக்குள் இருக்கும் நல்ல மணத்தைப் பிரித்து (அதில் மறைந்துள்ள உணவு பொருளை) எடுத்துச் சந்தோஷமாகச் சாப்பிடுகிறது.

சாக்கடையில் ஒரு பருப்பைப் போட்டு விட்டு நீங்கள் முகர்ந்து பாருங்கள். என்ன வாசனை வருகிறது? அந்த நல்ல பருப்பின் வாசனை வருகிறதா? அல்லது மேலே இருக்கும் வாசனை வருகிறதா?

நல்ல வாசனையைப் பிரிக்க முடியுமோ? பிரிக்க முடியாது…” அதைக் காட்டுகிறார் குருநாதர்.

பல உடல்களிலே தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பெற்று பன்றியான உடல் அமைப்பைப் பெற்றது.

குருநாதர் சொல்கிறார்நீ (ஞானகுரு) முதலில் பன்றியாகவும்  இருந்தாய்.

இதைக் காட்டுவதற்காக சாக்கடைப் பக்கத்தில் என்னைக் கூட்டிக் கொண்டு போனார். சாக்கடையிலிருந்த குப்பையெல்லாம் அள்ளிப் போட்டு வைத்துள்ளார்கள்.

FLUSH OUT – கழிப்பறைகள் இல்லாத காலம் அது.  கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்தும் சாக்கடை அது. சாக்கடையில் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது.

பழனியில் என் வீட்டிற்கு அருகில் தான் இது நடக்கிறது.

நான் தெலுங்கு பேசுவதால் வாடா தெலுங்கு இராஜ்ஜியம்…!” என்று குருநாதர் என்னைக் கூப்பிடுகிறார்.

திருப்பதி வெங்கடாஜலபதி மிகப் பெரிய செல்வந்தர். நீ வெங்கடாஜலபதியை தோஸ்து (நண்பனாக்கி) பண்ணிக் கொள் என்பார்.

இல்லை நான் முருகனைத் தான் வணங்குகிறேன் என்பேன்.

டேய்நீ தெலுங்குஇராஜ்ஜியம்டா, அங்கே போடா..! என்றெல்லாம் சொல்வார்.

சாக்கடைப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு காப்பி வாங்கிக் கொண்டு வாடா…” என்றார். எனக்குக் காப்பி.. அவருக்கு டீ.. அவர் வாங்கி வரச் சொன்னார். வாங்கி வந்தேன்.

நான் வாங்கி வந்த டீயில் சாக்கடையில் இருந்து அள்ளிப் போட்டிருந்த குப்பைகள் இரண்டைப் போட்டார். என் காப்பியிலும் இரண்டைப் போட்டு சர்ர்ர். என்று ஆற்றிவிட்டுச் சாப்பிடுடா…!” என்றார்.

சாக்கடையை அள்ளிப் போட்டுவிட்டுக் காப்பியைச் சாப்பிடு என்றால்… “எப்படி இருக்கும்…?”

நைனாவிற்கு ரொம்பப் (எனக்கு) பைத்தியம் பிடித்து விட்டது…! என்று எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

இங்கேயும் அங்கேயும் நான் பார்க்கிறேன். சாமி…! இதைப் பார்த்தாலே எனக்கு வாந்தி வருகிறது…! என்கிறேன்.

நான் சொல்வதைச் செய்கிறேன்என்று சொன்னாய் அல்லவா…! நீ செய்டா…” என்கிறார். நான் சாப்பிடுகிறேன் பார்…” என்று சொல்லி அவர் சாப்பிடுகிறார்.

அவர் சாப்பிடுவதைப் பார்த்தாலே எனக்குவாந்தி வருகிறது

அப்பொழுது கடவுளின் அவதாரத்தில்… “வராக அவதாரத்தைப்பற்றி அந்த இடத்தில் காட்டுகிறார்.

என்னால் காபி சாப்பிட முடியவில்லை. காபியைக் கொட்டி விட்டு வட்டைக் கப்பைக் கொண்டு போய் டீ கடையில் திரும்பக் கொடுக்கிறேன்.

என் வீட்டுப் பக்கத்தில் டீக்கடை வைத்திருக்கும் பாய்அவர் அந்த வட்டக்கப்பை வாங்க மறுக்கிறார்.

நைனா…! இந்த வட்டைக்கப்பை உங்கள் வீட்டில் வைத்துச் சாப்பிடுங்கள்சாக்கடையில் இருப்பதைப் போட்டதால் இதில் யாரும் காப்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் இதை உங்கள் வீட்டிற்கே கொண்டு போங்கள் என்கிறார்.

வேறு வழியில்லாமல் அதற்கான காசைக் கொடுத்தேன்.

வட்டகப்பை கடை வாசல் முன்னாடி கூட வைக்க வேண்டாம் என்கிறார்.

பக்கத்தில் இப்ராஹிம் சைக்கிள் கடை வைத்துள்ளார். அங்கே வைத்தேன். கொஞ்ச நேரம் கழித்து எடுத்துக் கொள்கிறேன்…” என்று சொன்னால் கூட அவர் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்.

உங்கள் வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போங்கள். பன்றி முகர்ந்து பார்த்துள்ளது. யாராவது பார்த்தால் நானும் அதைச் சாப்பிடுகிறேன் என்று நினைத்துக் கொள்வார்கள் என்கிறார்.

பன்றி முகர்ந்து பார்த்துள்ளது என்று அங்கு வைக்கக்கூட விட மாட்டேன் என்கிறார். நான் என் வீட்டிற்கே கொண்டு போய் வாசற்படி அருகில் வைத்துவிட்டேன்.

முறுக்கு நிலக் கடலை பொட்டுக் கடலைவாங்கிக் கொண்டு வாடா என்றார் குருநாதர். ஒரு குச்சி எடுத்து வாடாஎன்றார். சாக்கடைக்குள் மூன்று கோடுகளைப் போடச் சொன்னார்.

போட்டேன்.

நிலக் கடலைப் பருப்பை முதலிலும் அடுத்து பொட்டுக் கடலையையும் அதற்குப் பிறகு முறுக்கையும் போடச் சொன்னார்.

பன்றி அந்தப் பக்கம் மேய்ந்து கொண்டு வருகிறது. கடலைப் பருப்பின் வாசனைஎண்ணையில் பொறித்தெடுத்த முறுக்கின் வாசனை.. வருகிறது.
1.நேராக கடலைப் பருப்பை முகர்ந்து எடுக்கிறது.
2.அடுத்து முறுக்கை எடுத்துச் சாப்பிடுகிறது.
3.மூன்றாவதாக பொட்டுக் கடலையைச் சாப்பிடுகிறது.

பார்த்தாயாடா., பன்றி எப்படி எடுக்கிறது என்று…?” அந்த இடத்தில் காட்டுகிறார். நீயும் இதற்கு முன்னால் பன்றியாக இருந்தவன் தான்டா. இந்த உயிர் தான் பன்றியாகவும் ஆக்கியது என்கிறார்.

தீமைகளை நீக்கும் உணர்வுகளைப் பன்றி உடலிலிருந்து பெற்ற பிறகு மனிதனாக்கிக் கொண்டு வந்தது இதே உயிர் தான் என்று காட்டுகிறார். இங்கே விளக்கம் கொடுக்கிறார் குருநாதர்.

பன்றி எவ்வாறு பல உடல்களிலிருந்து தீமையை நீக்கிநீக்கிவந்தது. பன்று உடலில் வலுவானதால் அதற்குத்தகுந்த உறுப்பாகி நாற்றத்தைப் பிளந்து அதில் உள்ள நல்ல மணத்தைப் பிரித்து எடுத்துச் சாப்பிடுகிறது என்று நிதர்சனமாய்க் காட்டுகிறார்.

எனக்கு ஒரு பக்கம் பயம் இருந்தது. முறுக்கையும் கடலைப் பருப்பையும் இதில் துவட்டி எடுத்து சாப்பிடச் சொல்லப் போகிறார் என்று.


1.பல உடல்களில் தீமையை நீக்கி
2.அதற்குத் தக்க உடல்கள் மாறி மாறி
3.இதே உயிர் தான் பன்றியாக உருவாக்கியது.
தீமைகளையெல்லாம் நீக்கும் உடல் உறுப்புகளைப் பன்றி பெற்றதனால் சாக்கடையில் வரக் கூடிய நாற்றத்தை எண்ணாது அதிலுள்ள நல்லதை நுகர்கிறது என்று குருநாதர் விளக்கம் சென்ன பிறகு மனது தெளிவாகி விட்டது.

நாற்றத்தைப் பிளந்து நல்லதை எடுக்கும் வலு வளர்ச்சியான பின் பன்றி மனிதனாகப் பிறக்கின்றது.

மனிதனான பின் நஞ்சைப் பிரித்து விட்டு நல்ல உடலாக உன்னை மாற்றுகிறது. எது ஆனதோ எல்லாமே சந்தர்ப்பம் தான்.

சாக்கடை என்று எண்ணுகிறாய்.
1.நீ சுவாசிக்கும் நாற்றம் வலுவாகிறது
2.இதைச் சுவாசித்து உயிரில் பட்டபின் நாற்றமாகிறது
3.உன்னால் நல்லதைப் பிரிக்க முடியவில்லை என்கிறார்.
4.எண்ணியவுடனே நாற்றம் வந்தது.
5.எண்ணாமல் இருந்தால்  நாற்றம் வந்ததா? என்று கேட்டார்.

வீட்டுக்கு முன்னாடி தான் சாக்கடை இருக்கிறது. ஆனால் நாற்றம் தெரிகிறதா? அந்த வீட்டுக்காரருக்கு நாற்றம் தெரிவதில்லை.

ஆனால் நாம் போனால் உடனே அச்சச்சோ….” என்று மூக்கைப் பிடிக்கிறோம்.

ஒரு சமயம் திடீரென்று குருநாதர் வருகிறார். இங்கே வாடாஎன்று என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போகிறார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருக்கிறோம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு எனக்கு நாற்றம் வருகிறது. என்ன என்று பார்க்கிறேன். பார்த்த பின்.. சாமி…! இங்கே அசூசை இருக்கிறது பாருங்கள் என்றேன்.

கூப்பிட்டு வரும் பொழுது முதலிலே நினைத்தாயா…? நினைக்கவிலை, அதனால் வாசனை வரவில்லை. ஆனால் கண்ணில் பார்த்தவுடன் அசூசை இருக்கிறது தெரிகிறது. வாந்தி வருகிறது.

எதனால் இப்படி வருகிறது?
1.“நம் எண்ணத்தில் எண்ணுவதால் தான் அது வருகிறதுஎன்று
2.இவ்வளவு தெளிவாகக் கொடுக்கிறார்.

உடலாக இருப்பதெல்லாம் சிவம் தான். எடுத்துக் கொண்ட உணர்வு எதுவோ அதற்குத்தக்க உடலை உருவாக்குகிறது.

நம் உயிரணு பூமிக்குள் வரும் போது
1.எந்தச் சத்தை முதலில் நுகர்ந்ததோ அதற்குத்தக்க உடலாகிறது.
2.உடலான பின் மூஷிக வாகனா அந்த மணதைச் சுவாசித்து
3.அதற்குத்தக்க வாழ்க்கை ஆகின்றது என்று
சாக்கடைக்கு அருகில் என்னை அமர வைத்து வியாசக பகவான் கண்டுணர்ந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை உணர்த்தினார் குருநாதர்.

இன்று இந்தக் காற்று மண்டலம் நச்சாக இருந்தாலும் அதில் மறைந்துள்ள மெய் ஞானிகளின் உணர்வை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இந்த அனுபவத்தின் மூலமாகத்தான்
1.மகரிஷிகளின் உணர்வுகளைத் தனித்துப் பிரித்துக் கவரும்படி செய்தார்.
2.அத்தகையை ஆற்றல் நீங்களும் பெறவேண்டும் என்பதற்குத்தான் இந்த உபதேசமே.

November 28, 2017

சாமிக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது நாம் என்ன நினைக்க வேண்டும்...?

இன்று கல்விக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். கல்வியை வளர்க்கின்றோம். கல்வியை வளர்த்துக் கொண்டாலும் இந்த உடல் இச்சைக்குச் செயல்படுவோர் சிலர் செய்யும் தவறோ ஏராளமானது..!

டாக்டர் படிப்போ மற்றதற்கோ மேற் படிப்புக்குச் செல்லும் போது கல்லூரி நுழை வாயிலிலேயே (கல்லூரிக்குள்) உள்ளே வந்த பிறகு கெட்ட வழியில் எப்படியெல்லாம் தவறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்கிறார்கள்

RAGGING...” என்ற முறை கேடான நிலை நடக்கிறது.

அரசாங்கமும் பார்த்துக் கொண்டு தான் உள்ளது. அந்தப் பள்ளியோ.., கல்லூரியோ... அதை  நடத்துபவர்களும் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்.

உயர்ந்த படிப்புக்குச் செல்பவரையும் தவறு செய்யும் உணர்ச்சியை ஊட்டி அந்தத் தவறு செய்பவனாக மாற்றி நாட்டைக் காக்கும் நிலையில் இல்லாமல் தவறு செய்து வாழும் உணர்வாக முறை கேடான நிலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

கல்வி கற்றுத் தர வேண்டிய இடத்தில் தவறு செய்வதை உருவாக்கும் நிலையாக நடப்பதைப் பற்றிச் சிந்திப்பார் யாரும் ல்லை.

இந்த உணர்வின் தன்மை பெருகி வரும் இந்த காலத்தில் நாம் சிந்திப்பது எப்போது..? சிந்தனையுடன் தீமைகளை அகற்றுவது எப்போது...?

இப்படிப்பட்ட தீமையான உணர்வுகள் பரவிக் கொண்டு வருகிறது. இந்தக் காற்று மண்டலமும் நச்சுத் தன்மையாக ஆகிக் கொண்டே வருகிறது. இதிலிருந்து நாம் மீள வேண்டுமா... இல்லையா...?

எப்படி மீட்பது..?

ஆயிரம் தான் யாம் சொன்னாலும் கேட்கும் போது..., சாமி (ஞானகுரு) நன்றாகச் சொல்கிறார் என்கிறார்கள். நன்றாக இருந்தது என்று தான் சொல்கிறார்கள்.

அடுத்தாற் போல் வாழ்க்கையில் சந்திக்கும் போது யாராவது வெறுப்பாகப் பேசினால் போதும்.
1.பார்... சாமி நல்லதைச் சொல்கிறார்... ஆனால் இவனைப் பார்..!
2.நான் ஒன்றுமே செய்யவில்லை...! என்னை எப்படித் திட்டுகிறான்…! என்று
3.நல்லதை விட்டு விட்டு அதைப் பிடித்துக் கொள்வார்கள்.

கடையில் கடனுக்காகச் சரக்கைக் கேட்பார். அவர் கொடுக்கவில்லை என்றால் உடனே அவர் அந்தச் சரக்கெல்லாம் மோசம்...” என்பார்…!

கடன் இல்லை...” என்று சொன்னதற்காக இப்படி எல்லாம் நடக்கிறது.

இதைப் போன்று எத்தனையோ நடக்கின்றது. பிறர் செய்யும் தீமையை நுகரும் போது தீமையான நினைவுகளே நமக்குள் வருகிறது.

1.எந்தச் சாமியைப் பார்த்து... நாம் என்ன செய்வது...?
2.என்ன தியானம் பண்ணி... என்ன செய்வது...?
3.எந்தக் கடவுளைப் பார்த்து... என்ன பண்ணுவது...? என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றார்கள்.

அதனால் தான் கோவிலில் (மனித உடலைப் போல்) சிலைகளை வைத்து அந்தத் தெய்வத்திற்குப்
1.பாலாபிஷேகம் செய்கிறார்கள்
2.தேனாபிஷேகம் செய்கிறார்கள்
3.சந்தன அபிஷேகம் செய்கிறார்கள்
4.நன்னீர் விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
5.பன்னீரை விட்டுச் சுத்தப்படுத்துகிறார்கள்
   
எதற்காக அந்தச் சிலைக்கு இதையெல்லாம் செய்கிறார்கள்?

பாலாபிஷேகம் செய்கிறர்கள். நாம் அதை வேடிக்கை பார்க்கிறோம் அவ்வளவுதான். ஏன்... ஏதற்கு...! என்று எண்ணுவதில்லை.

பாலாபிஷேகம் தேனாபிஷேகம் செய்வதைக் கண்களால் பார்க்கும் போது எதை எண்ண வேண்டும் என்று ஞானிகள் காட்டியதை நாம் அறிய வேண்டும்.

1.பாலைப் போன்ற மணம் நாங்கள் பெற வேண்டும்.
2.மகிழந்து வாழும் சக்தி நாங்கள் பெற வேண்டும்.
3.தேனைப் போன்று சுவையான நிலைகள் பெற வேண்டும்.   
4.கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டும்.
5.அந்த அருள் சக்திகள் ங்கள் உடலில் படர வேண்டும்,
6.ங்கள் குடும்பத்தில் படர வேண்டும்,
7.கோவிலுக்கு வரம் குடும்பமெல்லாம் அந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணி அந்த உணர்வுகளைச் சுவாசிக்க வேண்டும்  

எத்தனை பேர் நாம் இப்படி நினைக்கிறோம்...?

பாலபிஷேகம் தேனாபிஷேகம் செய்து நல்ல ஒழுக்கத்தை நமக்குள் சுவாசிக்கச் செய்வதற்காக அவ்வாறு வைத்துள்ளார்கள் ஞானிகள். கோவிலுக்குச் சென்றால் இவ்வாறு நாம் நினைக்கிறோமா?

நம்மைப் பண்படுத்துவதற்கு சிலையை வைத்துள்ளார்கள். இது துவைதம். அங்கு ஊற்றும் பாலைப் பார்க்கும் போது அதிலிருந்து வரும் மணம் அத்வைதம்.

நாம் நுகர்ந்தறியப் போகும்போது உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சிகளை எண்ணி ஏங்கும்போது அது வருகின்றது. அந்த உணர்ச்சியின் தன்மை வரும் போது விசிஷ்டாத்வைதம்.
       
அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகிறது. அந்த உணர்வின் தன்மை உடலாகும் போது
1.தீமைகளை நீக்கி நல்ல மணமுள்ள அணுக்களை
2.நீ உன் உடலில் உருவாக்கக் கற்றுக் கொள்.

ஏனென்றால் அது கல் சிலை தான். அதிலே ஊற்றிய உணர்வின் தன்மையை மனிதனான நாம் நுகரப்படும் போது
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை
2.நமக்குள் எப்படி வளர்க்க வேண்டும் என்று
3.;அதைக் கண்டுணர்ந்த ஞானிகள் இதைச் செய்திருக்கிறார்கள்.