ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 31, 2023

ஞானிகள் வழியில் சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்

மனித ஆத்மா ஒன்றுக்குத் தான் இக்காற்றினில் கலந்துள்ள பல அமில நிலைகளில் தனக்குகந்த அமில சக்தியை ஈர்க்கும் பக்குவ நிலை பெறலாம் “தாவர நிலையைப் போல…!”

மற்ற ஜீவ ஜெந்துக்களின் நிலையில் இத்தகைய சக்திநிலை இல்லை. மனித ஆத்மாவில் அது நிறைந்துள்ளது.

ஆனால் சாதாரண வாழ்க்கையில் பார்த்தும் கேட்டும் சுவாசத்தில் உணர்ந்தும் பேசியும் வரும் நாம்… “நமக்குகந்த சக்தியை உணராமல் செயல் கொள்கின்றோம்…”

இயந்திரத்தின் துணையுடன் சில கருவிகளை “அதற்குகந்த அமிலத்தைச் செலுத்தி…” ஒளிப்படங்களைப் பிம்பப்படுத்திக் காண்கின்றோம்.

1.அந்த அமில சக்தியையே நம் உணர்வுடன் ஈர்த்து
2.இக்காற்றினில் கலந்துள்ள அச்சக்தியை ஒருநிலைப்படுத்தி
3.எங்குள்ள நிலையையும் உள்ள நிலையிலேயே நாம் கண்டிடலாகாதா…? என்றுணரல் வேண்டும்.

இவ்வுடல் என்னும் கோளத்திற்குகந்த காந்த சக்தியினால்… காற்றில் கலந்துள்ள எந்த அமில சக்தியையும்.. ஒலி ஒளி இவற்றின் சக்தி நிலையையும்… நம் உயிராத்மாவினால் செயல்படுத்தி ஈர்த்திட முடிந்திடும்.

வானொலியின் துணையுடனும்… தொலைக்காட்சியின் துணையுடனும்… இயந்திரத்தின் துணையுடனும் (கம்ப்யூட்டர்)… செயல் கொள்ளும் இந்த நிலையை மனிதனால் செயல்படுத்திய அந்தச் செயற்கையை “நம் இயற்கை ஆத்மாவினால் அனைத்து சக்திகளுமே அறிந்திட முடிந்திடும்…!”

1.மனித உடல் என்னும் இப்பிம்ப நிலை பெற்று இன்று நாம் வாழ்ந்திடும் நிலையில்
2.ஆதியிலே முதல் உயிரணுவாய்த் தோன்றிய நாள் முதற்கொண்டு
3.பல நிலைகளை எடுத்துப் பல சுவாச நிலைகளின் தொடருடன் வாழ்ந்து
4.நம்முடனே கலந்து வந்துள்ள அமில சக்தியில் நம் ஆத்மாவுடன்
5.பல நன்மை தீமை கொண்ட பல கோடி அணுக்களைச் சேமித்தே தான் வழி வந்துள்ளோம்.

ஆனால் இனி வாழ்ந்திடும் வாழ் நாட்களில்… நம்முள் உள்ள… நாம் பழக்கப்படுத்தி அடிமை கொண்டு வாழ்ந்து வந்த தீய சக்திகளின் நிலைக்கு அடிபணிந்திடாமல்…
1.நல்லுணர்வைச் சேமித்து… நம் நியதியையே ஞானிகள் வழியில் சென்றிடும் தன்மைக்கு
2.சத்தியத்தையும் தர்மத்தையும் நியாயத்தையும் கடைப்பிடித்தே செயல்படல் வேண்டும்.

October 30, 2023

அமிர்தவர்ஷினியின் ஆசி வேண்டுமப்பா…!

சித்தன் காட்டிய சொல்லில்…
1.எதிலுமே அதனின் ஆரம்ப நிலை கொண்டு
2.”முடிவு இதுதான்…” என்று நாம் கணித்து விடக்கூடாது.

ஞான வளர்ச்சியின் பாதையில் இருப்போர்… சித்தர்கள் என்னும் நிலையைப் பெற… வாழ்வியல் அனுபவ ஞானம் பெறும் போது வெறுப்பு மிகுதியாக இருக்கும் காலங்களில் எல்லாம் தங்களைக் காத்துக் கொள்ள
1.உண்மைகளை உணர வேண்டும் என்று மறைபொருள் சூட்சும சூத்திரங்கள் கொண்டு
2.அந்த அறிவின் மயக்கத்தை நீக்க அவர்கள் கூறி வெளிப்படுத்திய பாடல்களில் சிறிது கடுமையும் உண்டு.

சிவசக்தி நிலை கலப்பாக மேன்மையுறும் செயல்களைத் தம்முள் கண்டு தெளிந்து… தங்களை வளர்த்துக் கொள்ளும் பக்குவத்தில்… மௌனத்தின் செயல்பாடாகச் சாந்த நிலையை ஏற்றிட… அதை “ஊக்குவிக்கும் செயல் சக்தியை…” சித்தர்கள் தமக்குள் எப்படி கூட்டிக் கொண்டார்களப்பா…?

1.“ஆரம்ப நிலை கொண்டு எதையும் கணித்து விடாதே…” என்று கூறுவதெல்லாம்
2.பிறர் பால் நாம் கொண்டிடும் எண்ணத்தின் உயர்வைக் கூட்டுவதற்குத் தான்.

மாமகரிஷி போகப்பெருமான் தன்னை வளர்த்து உயர்த்திக் கொள்வதற்காகத் தாய் சக்தியினைப் பெற்ற பேறைச் சொல்லால் விளக்கிட முடியுமா…?

தாய்மையின் சக்தியை விளக்குதல் என்பது என்றால் இந்த பூமியின் (புவனேஸ்வரி) உயர்வு நிலையைத் தான் முதலில் காட்டப்பட வேண்டும். பல முறையும் இதைக் கூறி வந்துள்ளேன்.

என் நிலையோ அந்த நிலை…? நன் நிலையே நமக்கு.

அம்மன் சக்திகள் அனைத்தும்… “ஆவியின் நிலைகள்…” என்று உரைத்திட்டால்… எந்த வகையில் தெளிந்திட்ட உண்மை அது…?

1.சகலமும் ஆவி தான்
2.இந்தப் பூமியும் ஆவி தான்
3.அண்ட சராசரங்களும் ஆவி தான்
4.”ஆவியான உன்னை…” (நீ) அறிந்து கொள்ள காட்டப்படும் நெறிமுறைகளில் தெளிவினைக் காட்டுவது எது…?

அம்மன் சக்திகளில் “பெயர் சொல்லி உலவக்கூடிய ஆவிகள்” – மை போட்டுக் குறி கூறுபவன் நிலையாக வளர்ந்து… அவைகளின் வளர்ச்சி நிலையைப் பற்றிச் சிறிது கோடிட்டுக் காட்டிடவும் முடிந்திடும்.

அது எல்லாம் மனிதனின் எண்ணத்தை வயப்படுத்தும் செயலுக்கே உபயோகப்பட்டுக் கொண்டுள்ளது. பத்திரிக்கை உலகையும்… மற்ற எத்தனையோ வெளி உலகத் தொடர்புகளையும் (MEDIA) விட்டுவிடவில்லை…. “வசியம் என்ற பேரில்” எல்லாவற்றையும் பீடித்திருக்கிறது.

மனித மனத்தினைத் தாக்கிடும் சக்தியாகச் செயலுறும் அவைகளின் பிடியிலிருந்து… தங்களைக் காத்துக் கொள்ள எண்ணம் கொள்வோர் அரிதாகிக் கொண்டே வருகின்றனரப்பா.

சத்தியம் என்பது உன்னுள் நிலைபெற்று இருத்தலே சாஸ்வதமானது.
1.எந்தச் சிறு சக்தியின் எதிர்ப்பின் நிலையும் தமக்குகந்த வேகத்தை காட்டும்
2.அந்த நிலை நமக்கு எதற்கு…?

“அம்மன் சக்திகள்” அக்கினி போல் சுடர்கின்றதப்பா. அருளாசி வேண்டுவது நம்மை வளர்த்துக் கொள்வதற்குத் தான்… புரிகிறதா…? அந்த நிலையில் நமது எண்ணம் உயர்வு அடைவதற்குத் தடைக்கல்லாக இருப்பது எது…? என்று உணர்ந்து கொண்டாயா…?

“சக்தி புராணம்” என்று கூறப்பட்டதே வான இயல்புகளைக் காட்டுவதற்குத். தான்.
1.”ஆகாய கங்கை” பாகீரதன் தவத்திற்கு எங்கிருந்தப்பா இறங்கி வந்தாள்…?
2.நாம் கூறுவது நம்முள் வளர்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டிய “தாய் சக்தியின்” உயர்வைத் தான்.
3.எண்ணத்தின் உயர்வு உயர் ஞானம் என்றால்… அந்த மெய் ஞானம் விழிப்பாகி அது சுடராகப் பிரகாசிக்கும்
4.அமிர்தவர்ஷினியாக அது பெருகிடுமப்பா.

ஜோதித்துவ பொருளுக்கும் - உயிர் சக்தியின் தொடர்பிற்கும் மறைபொருள் உண்மையை நீ உணர்ந்து பார். சக்தியின் கலப்பாகப் பொருள் காட்டும் எந்த நிலையாக இருந்தாலும்
1.“அதிலே குறை காண்பது நம் நோக்கம் அல்ல….!”
2.நாம் கொண்ட உண்மையில் வளர்ந்து காட்டுவதே விவேகம்
3.வாய்ச்சொல் தவத்தைக் காட்டும்… மொழியின் உயர்வையும் காட்டும்.
4.ஆனால் நாவடக்கம் நம்முள் உயர்வைக் காட்டி தவத்தைக் கூட்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி உமிழ் நீராக உடலுக்குள் சேரச் சேர “உணவு உட்கொள்வது குறையத் தொடங்கும்”

சூரியன் தனக்குள் இருக்கும் பாதரசத்தால் அருகில் வரும் நஞ்சினை விரட்டுகின்றது. அதைப் போன்று மனிதன் தன் ஆறாவது அறிவால் தீமை தனக்குள் புகாதபடி அதை விலக்கிக் காட்ட வேண்டும்.

மேலே ஏழு லோகம்… கீழே ஏழு லோகம்… ஆக… கலர் ஆறு ஏழாவது ஒன்று (ஒளி). மனிதநின் அறிவு ஆறு ஏழாவது ஓன்று (தெரிந்து செயல்படும் ஒளி). இந்த ஏழு லோகங்களை வென்ற மனிதன் தான் விண் செல்ல முடியும் என்பார்கள்.

ஆனால் மகாபாரதத்தில் மேலே ஏழு லோகம் இருக்கிறது. மூன்று லோகத்திலும் பார்த்தேன். நஞ்சு கொண்ட… விஷங்கள் கலந்த நாகலோகத்திலும் சென்று பார்த்தேன்… காணவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

இப்படி விரிவாக்கிக் காட்டும் நிலை என்ன…?

மனிதன் அறிவு ஆறு… ஆனால் அதே சமயத்தில் விஷத்தின் தன்மை அதனின் அடுக்குகள் வேறு. அதை நாம் ஒளியாக மாற்றும் சக்தி பெற வேண்டும்.

இது எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் காட்டிய நிலைகள்.

யாம் (ஞானகுரு) உபதேசிக்கப்படும் போது இப்பொழுது உங்களுக்குள் உமிழ் நீர் சுவை மிக்கதாக ஊறும். உங்கள் ஆகாரத்துடன் இந்த உமிழ் நீர் கலக்கின்றது.

இது சேரச் சேர சாப்பாடு அதிகமாக உட்கொள்ளும் நிலைம் உங்களுக்கு இருக்காது. ஏனென்றால் இந்த உணர்வின் தன்மை அமுதாக… மிக சக்தி வாய்ந்ததாக உங்களுக்குள் சேருகின்றது.

அதாவது… ஞானிகள் உணர்வு கலந்த உமிழ் நீர் உங்களுக்குள் சேர்ந்து கொண்ட பின் சாப்பிட்ட உணவைச் சத்துள்ளதாக… “அமுதாக” மாற்றுகின்றது நல்ல ஜீரணிக்கும் சக்தி கிடைக்கும்… நல்ல அணுக்களாக உருவாக இது உதவும்.

எந்த அளவுக்கு இந்த உபதேசங்களைத் திரும்பத் திரும்பக் கேட்கின்றீர்களோ… உங்களுக்குள் இது சக்தி வாய்ந்ததாக மாறிக்கொண்டே வரும்.

வெயில் காலத்தில் மாங்காய் சாப்பிட்டிருக்கின்றீர்களா…? காரத்தையும் உப்பையும் தொட்டுத் தின்றால் அது எப்படி இருக்கும்…? இப்பொழுது சொன்னவுடனே உமிழ் நீர்கள் எப்படி ஊறுகிறது.

அந்த உணர்வினை நுகர்ந்தவுடனே அந்தப் புளிப்பை இழுத்துக் கவர்கிறது அல்லவா. இது போன்றுதான் நாம் எண்ணும் உணர்வுகள் எதுவோ நம் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து கொண்டே வரும்.

அந்தந்த ஆகாரம் சாப்பிடும் பொழுது எனக்கு அஜீரணம் ஆனது… எனக்கு நெஞ்சைக் கரித்தது…! என்றெல்லாம் நாம் சொல்வோம்.

நல்ல ஆகாரத்தைச் சாப்பிட்ட பின்… ஒரு மனிதன் வேதனைப்படுவதை அந்த விஷமான உணர்வை நுகரப்படும் பொழுது சாப்பிட்ட ஆகாரத்தை அது அஜீரணமாக்குகின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைப்பதற்குத் தான் மணிக்கணக்காக உபதேசிக்கின்றோம்.

உங்கள் உடல் இருக்கக்கூடிய அனைத்து குணங்களுக்கும்… மனிதனாக உருவாக்கிய அந்தத் தெய்வங்களுக்குக் குருநாதர் காட்டிய அருள் உணர்வை இந்த உபதேச வாயிலாக “யாம் அமுதாகப் படைத்தது… நல்ல உணவாகக் கொடுத்தது…”

உங்கள் உடலில் உள்ள அணூக்களுக்கு அமுதாகக் கிடைக்க வேண்டும் என்று என்று முதலில் பிரார்த்தனை செய்துவிட்டுத் தான் உபதேசத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன்..

சந்தர்ப்பம்… உங்கள் உடலில் அந்த அமுது இப்போது கிடைத்திருக்கின்றது. மீண்டும் இதைப் போல் எண்ணி எடுத்து அமுதாகக் கொடுத்துக் கொண்டே வாருங்கள்

வேதனை என்ற விஷத்தின் தன்மையைக் கொடுத்து விடாதீர்கள்.

அந்த அருளைப் பெற வேண்டும் இருளை நீக்கி மெய்ப்பொருளைக் காண வேண்டும் என்று அந்த மகரிஷியின் அருள் உணர்வுகளை அமுதாகச் சேர்த்துப் பாருங்கள். உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் உங்களுக்குள் பதிவாக்கிய பின் அதை அருள் சக்தியாகப் பெருக்கும் தகுதியை உங்களுக்குள் உருவாக்குகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைக் கூட்டிக் கொண்டு இந்த உடலுக்கு பின் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டு பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தவும் முடியும்.

மகிழ்ந்து வாழும் சக்தியை நாம் பெற முடியும்.

October 29, 2023

“நம்முடைய இச்சை” எதுவாக இருக்க வேண்டும்…?

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் கொடுத்த அரும் பெரும் சக்தியை… என்னை எப்படி அதைப் பெறச் செய்தாரோ நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டும். அவர் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் தவறு செய்கின்றோமா…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்ய வைக்கின்றதா…? என்பதை நீங்கள் சிந்தனை செய்து அந்த தவறு செய்யும் உணர்ச்சிகளைத் தடுக்கப் பழக வேண்டும்.

அதற்கு வேண்டிய கடும் ஆயுதமாகத் தான் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து ஆயுதமாகப் பயன்படுத்தும் போது… தவறென்ற உணர்வு உங்களுக்குள் வராதபடி… உங்கள் உடலுக்குள் தீமையை விடாதபடி தடுக்கும். அது தான் கார்த்திகேயா…!

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நம் ஆறாவது அறிவால் தான் தெரிந்து கொள்கின்றோம். தெரிந்து கொண்டாலும் அந்த வேதனை உடலுக்குள் புகாதபடி தடுக்கும் சக்தியாக… நம் ஆறாவது அறிவை சேனாதிபதியாக மாற்ற வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று இச்சைப்படுதல் வேண்டும். அதை நுகர்ந்தால் நமக்குள் கிரியை ஆகின்றது. கிரியை ஆகும் போது “தீமையை நீக்கும் அந்த ஞான சக்தியாக” வருகின்றது.

முதலில் சொன்ன மாதிரி நண்பன் என்ற நிலையில் ஒருவர் மீது பாசமாக இருக்கின்றீர்கள். நோயுடன் வேதனைப்படுகின்றான் என்று உற்றுப் பார்க்கின்றீர்கள்.

அதை இச்சைப்பட்டுக் கேட்டறியப்படும் போது உங்களுக்குள் கிரியையானால் அந்த வேதனை உணர்வு தான் ஞானமாக உங்களை இயக்கும். அந்த நண்பருடன் சேர்ந்து நீங்களும் வேதனையில் தான் உழல முடியும்.

நோயால் வேதனைப்படுகின்றான் என்று தெரிந்து கொண்டாலும் அடுத்த கணமே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று “அதை இச்சைப்பட வேண்டும்…” உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்பட வேண்டும்..

அடுத்து அந்த நண்பன் உடலில் துருவ நட்சத்திரத்தின் சக்தி படர வேண்டும் என்று இச்சைப்படுங்கள்… அவன் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று இச்சைப்படுங்கள்.

இப்படி இச்சைப்படும் போது அந்த அருள் சக்தி இங்கே கிரியை ஆகின்றது. தீமை நீக்கும் உணர்வு உங்களுக்குள் வலிமை ஆகின்றது.

அதற்குப் பின் அவன் செவிகளில் படும் படியாக… நீ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற இச்சைப்படு. அவ்வாறு நீ இச்சைப்பட்டால் அது உன் தீமைகளை நீக்கும்… நீ நன்மை பெறுவாய்…! என்று சொல்லிப் பழக வேண்டும்.

இது எல்லாமே நம் புராணங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

மனிதனாக ஆனபின் எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட கார்த்திகேயா என்று நம் உணர்வுகளை ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வானால் உயிர் எல்லாவற்றையும் தெரிவிக்கின்றது… உணர்வுகள் ஒன்றாகின்றது தெளிவாகின்றது… பிறவியில்லா நிலை அடையச் செய்கின்றது.

காரணம்… நாம் இந்த உடலில் “நீடித்த காலம் இருப்போம்…” என்று எண்ண வேண்டாம் முழுமையான நிலையில் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தாலும் உலகில் விஷத்தன்மை இன்று அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றது.

அதிலிருந்து தப்பித்துக் கொள்ளத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி எடுத்து வலு சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கே உபதேசிக்கும் அருள் ஞானக் கருத்துக்களை திரும்பத் திரும்பப் படித்து உங்களுக்குள் பதிவாக்குங்கள்.

ஜாதகமோ ஜோதிடமோ வாஸ்து சாஸ்திரமோ மற்ற நியூமராலஜியோ “நமக்கு எல்லாம் செய்யும்” என்று அதை நம்பிக் கொண்டு… நேரத்தையும் காலத்தையும் வீணாக்காதபடி… காலத்தால் வரும் தீமைகளை அகற்றும் அருள் ஞான சக்தி நமக்கு உண்டு என்று “உங்களை நம்பிப் பழகுங்கள்…”

அத்தகைய அருள் சக்தி தான் இப்பொழுது உங்களுக்குள் கொடுக்கப்படுகிறது. அதைப் பெருக்கி வாழ்க்கையிலே பேரின்பம் பெறுங்கள்… ஏகாந்த நிலை என்ற பகைமயற்ற உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதை உங்களுக்குள் உறுதியாக்கிக் கொள்ளுங்கள்.

புதுப் புது மருத்துவத்தை விஞ்ஞானம் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை இல்லை

இன்றைய இவ்வுலக நியதியிலே “நீதி…” என்னும் சொல்லே
1.இக்காலத்திற்குகந்ததாக
2.இன்றைய மனிதர்களின் எண்ணத் தொடரினால்
3.மாறி மாறி வரும் இவ் அரசியலின் நிலைக்கொப்ப சாதகப்படுத்தி
4.அநீதியையே நீதி என்ற சொல்லாக்கி நிலை நாட்டுகிறார்கள்.

இன்றைய இவ்வுலக நியதியில் நீதியும் சத்தியமும் எங்கு ஓங்கி நிற்கின்றது…? தனக்குகந்த பொருளாதாரத்தின்… “செல்வத்திற்கு அடிபணிந்த நிலையில்தான் இன்றைய உலக நீதியே உள்ளது…!”

சத்தியமும் ஜெயமும் ஒன்றுமறியா பாமர மக்களுக்குத் தான்…! இன்றைய உலக நியதிப்படி சொந்தமில்லா நிலையில் அடிமைப்படுத்திட்ட நிலையில்தான் நீதியும் சத்தியமுமே நிலைத்துள்ளன.

இச்செல்வத்திற்கு அடிமைப்பட்டும் செயற்கையில் வாழ்ந்திடும் இவ்வுலக நியதியில் தர்மமும் நியாயமும் தலை நிமிர்ந்திட வழியுமில்லை… இன்றைய நிலைக்கொப்ப நீதியுமில்லை.

அவரவர்களே தான்…
1.தன் உணர்வை நல் நிலையாக தன் எண்ண ஜெபத்தில் வழிப்படுத்தி
2.தம்முள் உள்ள பல கோடி அணுக்களையும் பல நிலை கொண்ட அணுக்களையும்
3.தன் ஜெபத்தினால் நல்லணுவாய் அடக்கச் செய்து… தன் ஆத்மாவை வளர்ச்சி கொண்டிடல் வேண்டும்.

நம்மையே நாம் ஓர் ஆண்டவனாய்… அனைத்து சக்திகளுமுள்ள கோளமாய் உணர்ந்து…
1.நம்முள் உள்ள மற்ற அணுக்களின் உந்தலுக்கு அடிபணிந்திடாமல்
2.நம் உணர்வே ஒரு நிலை கொண்ட நீதியாய் சத்தியமுடன் செயல்படல் வேண்டும்.

இன்றைய இவ்வுலகின் ஜீவஜெந்துக்களின் எண்ண நிலையே மாறு கொண்டு தீய சக்திகளுக்கு அடிபணிந்தே இந்நிலையின் தொடரின் எண்ண சக்தியால் “காற்றில் அசுத்த அணுக்கள் நிறைந்து பரவி வருகின்றது…”

இன்றைய நிலைக்கொப்ப புதிய புதிய வியாதிகளின் தொடர் நிலை பரவும் நிலையும் வெகு துரிதமாக உள்ளது.

விஞ்ஞானத்திலும் மருத்துவ ஆராய்ச்சியிலும் பல பல புதிய மருத்துவத்தைக் கண்டுணர்ந்து செயலாக்கினாலும் இக்காற்றிலுள்ள விஷத் தன்மையை மாற்றும் நிலை எங்குள்ளது…?

இச்சுவாசத்தின் எண்ண சக்தியின் நிலைதான் இன்றைய இவ்வுலகின் நிலையுடன் கலந்துள்ள நிலை.

இவ்வுலகின் மேல் கலந்துள்ள சுவாசத்தையேதான் நம் பூமியும் ஈர்த்துச் சுவாசமெடுத்து வெளிப்படுகின்றது.
1.இந்த அசுத்தக் காற்றை உயிராத்மாக்கள் மட்டும் சுவாசித்து வெளிப்படுத்தவில்லை
2.இப்பூமியும் அக்காற்றையேதான் தன் சுவாசத்தில் ஈர்த்து வெளிப்படுத்துகிறது.

இக்கலியில் மாறு கொண்டதுதான் இக்காற்றின் அசுத்த நிலையெல்லாம். கலியில் வந்த மனிதர்களின் பேராசையினால் தான் இவ்வுலகின் நியதியே மாறு கொள்ளப் போகின்றது...!

இப்பூமியில் மனித ஆத்மாவாய் வாழ்ந்திடும் நாம்… நம் ஜெப நிலையை ஒருநிலைப்படுத்தினாலன்றி மாறப் போகும் கலியின் பிடியில் சிக்கி மீள வழி பெற முடியாது.

அத்தகைய அல்லல்படும் நிலையில் இருந்து மீண்டு சூட்சும நிலை பெறவில்லை என்றால்…
1.இன்று மனிதராய் வாழும் இப்பாக்கியத்தை
2.நாமே நசியவிடும் நிலைதான் நமது நிலையாகிவிடும்.

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் நல் சக்தி உண்டு…!

வாழ்க்கையில் நடந்த பல தீய நிலைகளை எண்ணி… சோர்வை அண்ட விடாமல் இனி நடக்கும் நிலையை உணர்ந்து செயல்பட்டு… ஒவ்வோர் ஆத்மாவுமே சக்தி ஜெபம் பெற்று…
1.சக்தியுடன் சக்தியாய்… ஒளியுடன் ஒளியாய்க் கலந்துள்ள…
2.நம் சப்தரிஷிகளின் நிலையுடனே கலந்திடலாம்.

October 28, 2023

ஓடம் தேரில் செல்லுமா…! அல்லது தேர் ஓடத்தில் செல்லுமா…!!

இராமன் குகன் மீது நட்பு கொண்டான்... குகனின் துணை கொண்டு கங்கையில் ஓடத்தில் இராமன் சென்றான் என்றாலும்...
1.இராமன் கொண்ட பாசம் சகோதர நயமாக...
2.தன் மனத் தேரில் குகன் பவனி வரும் பாங்காக வந்தது என்பது… அது அன்பில் சிறந்தது

ஒரு தேரை (தவளை) ஆற்றின் கரையில் வாழும் பொழுது ஆகாரம் புசிப்பதற்காக சிறு சிறு பூச்சிகளை விழுங்குகின்றது. அந்தப் பூச்சிகளின் உயிர் தேரைக்குள் சென்று தேரையாகப் பிறக்கும் நிலை பெறுகின்றது.

ஆனால் இராமன் தன் பாணத்தால் “அறிந்திடாத் தன்மையால்” அதன் மீது எய்த பொழுது அவ் உயிர் சக்திகளின் பிறப்பின் நிலை மனித உடலுக்குள் வந்து உயிரணுக்களாக... மனிதனாகப் பிறக்கும் (உயர்ந்த நிலையாக) விமோசனம் பெறுகிறது.

ஆனாலும்…
1.சந்தர்ப்பத்தின் வசம் வினைப் பயன் காரியார்த்த நடைமுறைகள் அதை உணர்ந்து கொண்டிடும் உயர் ஞானம் போல
2.அதிவேக உணர்வுகள் கூட்டிக் கொண்டிடும் உணர்வுகளால்
3.எண்ணத்தால் ஏற்படுத்தப்படும் சந்தர்ப்பத்தின் வசம் “இராமன் கொண்ட அனுபவமாக”
4.தெய்வீக புருஷன்… அரக்க குணம் கொண்ட (இராவண) பிறப்பின் நிலை எண்ணத்தால் வரு(ந்)த்திட்டான் என்று காட்டி
5.”இராமபாணம் துளைத்தது” என்று கொண்டிட்ட உயர்வான எண்ணம் எடுத்துத் தன்னைத்தான் காத்துக் கொண்டு
6.சாப நிலையை மாற்றி விமோசனத் தன்மையாகத் தன்னை உயர்த்தியது என்பதுதான் இராம காவியத்தின் சூட்சுமம்.

அன்பின் வசம் தான் அனைத்துமே (அகண்ட அண்டத்தில்) அடங்கும்…!

உலக நிலையில் ஒன்றை அறிந்து கொள்தல் என்பது இன்றைய அனுபவ நடைமுறையாக இருக்கலாம். ஆனால் இயற்கை என்ற “வசுக்கள் சக்தியை…”
1.மனிதன் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னில் தெளிந்து
2.ஆத்ம பலம் பெற்றிடும் வழியாகத் தன்னைத்தான் வளர்த்து
3.ஈர்ப்பின் செயல் (எங்கே செல்ல வேண்டும் என்ற) சூட்சுமம் அறிந்து கொள்ள வேண்டும்

புயலால் கடல் மிகவும் கொந்தளிக்கும்… அது போல் கோப குணத்தால் மனிதனின் மனம் தத்தளிக்கும்….! ஞானச் செல்வங்கள் அத்தகைய உணர்வுகளில் சிக்கிடாத நிலைக்கு வானவியல் தத்துவ செயல் குணம் கொள்ள வேண்டும்,

மேகத்தின் ஊடே சூரிய ஒளியைக் கவர்ந்து பல வண்ணம் காட்டும் “ஸ்படிக நீர்…” வான்வெளியில் செயலுருவாக கருப்பொருள் காட்டுவதைப் போன்று
1.ஒளியின் சக்தியைப் பெற்றுப் பெற்று உயர்ந்திடுவேன் என்ற எண்ணம் வளர வளர...
2.அந்த மேன்மையான நிலையில் வழி நிற்றலே சம்பூரணம்

ஆக…
1.தானாக வளர்வது இயல்பு நிலை…
2.பலனாய் வளர்ப்பது “நம் நிலை…!” (ஞானிகள் வழி)

இதிலே பொருள் உண்டு… உணர்ந்து கொள்…!

ஞானவனம்… தபோவனம்…!

நீங்கள் தான் உங்களைக் காத்துக் கொள்ள முடியுமே தவிர “மற்றவர்கள் உங்களைக் காப்பாற்ற வேண்டும்...” என்ற நிலைக்குப் போகாதீர்கள்.

ஏனென்றால் நாம் எதை நல்லதாக எண்ணுகின்றோமோ உயிர் நம்மை அதன் வழியே இயக்குகின்றது… அந்த நல்ல உணர்வை உருவாக்குகின்றது.

இன்று மனித உடலில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் முழுமையாக இதிலேயே இருக்க முடியுமா…? இல்லை…! மிகக் குறுகிய காலமே இந்த உடலில் நாம் வாழுகின்றோம்.

அந்தக் குறுகிய காலத்திற்குள் என்றும் ஏகாந்த நிலை பெற்ற துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் பெருக்க வேண்டும். அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத் தான் உபதேச வாயிலாக அதைப் பதிவாக்குகின்றோம்.

பதிவானதை நீங்கள் மீண்டும் எண்ணும்போது துருவ நட்சத்திரத்தின் சக்தி உங்களுக்குள் வளர்ந்து... தீமைகள் புகாது தடுத்து அது உங்களைக் காக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.

அதை நீங்கள் எப்படியும் பெற வேண்டும் என்று தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் அந்த உயர்ந்த சக்தியைப் பாய்ச்சுகின்றேன்.

அதை எடுத்து உங்கள் எண்ணத்தால் தீமைகளை நீக்கி... உங்களைக் காத்து வாழ வேண்டும். சாமி (ஞானகுரு) செய்து தருவார்…! என்று அல்ல. சாமி சொன்ன வழியிலே “அந்த உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும்… நம்மால் தீமையை நீக்க முடியும்... நம்மால் பிறருடைய தீமைகளையும் போக்க முடியும்...!” என்ற இந்த நம்பிக்கைக்கு நீங்கள் வரவேண்டும்.

நாம் யாருமே கெட்டவர்கள் அல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வேதனைப்படும்படி ஆக்கிவிடுகிறது.

உதாரணமாக... ரோட்டிலே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராதபடி திடீரென்று ஒரு நாய் குறுக்கே விரட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். நாய் விரட்டும் போது நமக்குப் பதட்டமாகிறது.

அந்தப் பதட்டத்திலே நல்லதை எண்ண முடியாது போகின்றது நாய் விரட்டுகின்றது ஐய்யய்யோ... நாய் கடித்து விடுமே...! என்று பயப்படுகின்றோம் யாராக இருந்தாலும் அப்படித்தான் சொல்வோம்.

அந்த மாதிரி நேரங்களில் நாய் நம் பக்கத்தில் வந்தாலும் கூட ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அந்தப் பதட்டத்தைத் தணித்து அமைதிப்படுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்... இரத்த நாளங்களில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உள்முகமாக இதைச் சுவாசித்துச் சுத்தப்படுத்த வேண்டும்.

மற்றவர்களுக்குச் (அவர்களை நாய் விரட்டினால்) சொல்லும் போது துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீ பெறுவாய். உனக்குள் அந்த வலுவான நிலை கிடைக்கும்... இனிமேல் நாய் உன்னை விரட்டாது என்று சொல்லிவிட்டு... மகரிஷிகளின் அருள் சக்தியால் அந்த நாய் என்னைக் கடிக்காது இருக்கக்கூடிய சக்தியாக அது பெற வேண்டும் என்று எண்ணும்படி நாம் வழி காட்ட வேண்டும்.

அதே சமயத்தில் மேலே சொன்ன எதையும் சொல்ல முடியவில்லை என்றாலும் கூட உன் தாயை எண்ணி “அம்மா.....” என்று நீ சொல்லப்பா... நாய் கடிக்காது… உன்னை விரட்டாது.

“அம்மா...” என்ற சொல்லைச் சொல்லும் போது தாய் நம்மை காத்த்திட்ட உணர்வுகள் அங்கே குவியும். நம்மைக் கககும் சக்தியாக அது அப்போது வரும். அம்மா... என்று சொன்னாலே போதுமானது... பதட்டப்பட வேண்டியதில்லை…! என்று தெளிவாக்க வேண்டும்.

ஏனென்றால் நாயைக் கண்டு பயத்தையும் பதட்டமான உணர்வையும் எடுத்துக் கொண்ட பின் அது உடலுக்குள் எல்லா அணுக்களிலும் சேர்ந்து விடுகின்றது.

அப்படிச் சேர்ந்து விட்டால் அவன் எப்பொழுது பார்த்தாலும் பதட்டம் அடைபவனாகவே.... எந்த வேலையைச் செய்தாலும் பதட்டத்துடன் செய்வதும்... சரியாகச் செய்யாதபடி “குற்றவாளியாக” மாற்றிக் கொண்டே இருக்கும்.

காரணம்... அது அவருடைய குறை அல்ல...!

அதற்கு முன்னாடி அவன் கெட்டிக்காரனாக இருந்தாலும் கூட... இது போன்று சந்தித்த பின்... எதிர்பாராதபடி நாய் விரட்டிய நிலைகள் “கடிக்க வந்து விடுமே...” என்று எடுத்த உணர்வுகள் பதட்டம் பயமும் ஏற்பட்டபின் இந்த உணர்ச்சிகள் உடலில் சேர்ந்து மாற்றி விடுகின்றது.

காரணம்... எல்லா அணுக்களிலும் இந்தக் காந்தம் உண்டு. அப்படி ஆகாதபடி தடுப்பதற்குத் தான் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று அடிக்கடி சொல்கிறோம்.

தீமைகளை நீக்கக்கூடிய ஞானவனமாக இந்த உடலை தபோவனமாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா...!

October 27, 2023

“தன்னுடைய பிழைப்புக்கு” ஞானகுருவின் ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்புகிறார்கள்

இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன் ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.

அதே சமயத்தில்
1.தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும் உண்டு.
2.ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.

இதைப் போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின் ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.

அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின் சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.

இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள் கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.

சிலருக்கு எம்முடைய (ஞானகுரு) உபதேசங்களை படிக்கும் போதும் கேட்கும் போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம் இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில் சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி…” நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.

இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின் தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள் அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.

மீண்டும் புழுவாக… பூச்சியாக… பாம்பாக… தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.

இன்று மனிதனாக இருக்கின்றோம்… விஷத் தன்மைகள் உலகெங்கிலும் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்புவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்…?

மெய் ஞானிகளின் அருள் சக்திகளைப் பெற்றால் தான் விஷத் தன்மைகளிலிருந்து மீட்டிக் கொள்ள முடியும். அதற்குத் தான் தொடர்ந்து இதைச் சொல்கிறோம்.

 

அன்று நாம் அரசனுக்கு அடிமை… இன்று இயந்திரங்களுக்கு (ARTIFICIAL INTELLIGENCE) நாம் அடிமை

இன்றைய மனிதனின் பல எண்ண சக்தியினால் கணிதத்தின் (கம்ப்யூட்டர்) தொடர்பு கொண்டு…
1.செயற்கையினால் இயந்திரத்தின் துணை கொண்டு
2.ஒருவர் இருவர் அறிந்த சக்தியை இயந்திரங்களின் வழியில் செயல்படுத்தி
3.மற்ற ஆத்மாக்களின் சக்தியை இவ்வியந்திரத்தின் கணிதத் தொடர்பு கொண்டு சக்திக்கு அடிமைப்படுத்தி
4.செயலற்ற சோம்பேறி நிலையில் சென்று கொண்டுள்ளது இன்றைய உலகம்.

உலகம் எப்படித் தோன்றியது…? எந்நிலையில் உயிரினங்கள் வளர்ச்சி கொண்டன…? என்ற நிலையை அறியவும் ஆராயவும் இன்றளவும் இம் மனித எண்ணங்களின் நிலையுள்ளது.

பிறரின் தொடர்பை மட்டும் இயக்கி உள்ள நிலை இது…!

1.தான் பிறந்து வளர்ந்து செயல் கொண்டு வாழ்ந்திட… தனக்குள்ள சக்தியையும்…
2.தான் வாழவே தன்னுள் உள்ள தன் ஆத்மாண்டவனையும் வணங்கிடல் வேண்டும்…! என்று உணராமல்
3.பிறரின் சக்தியில் அடிமை கொண்டு வாழ்ந்து என்ன பயன்…?

நாம் பிறவியெடுத்த பயனை உணர்ந்து ஆத்ம ஜெபம் கொண்டால் நம் சக்தியுடன் அனைத்து நற்சக்திகளையும் ஈர்த்துச் செயல்படுத்தி வாழ்ந்திடலாம்.

நம் ஆத்மாவான நம் சக்தியை நாம் உணர்ந்து செயல் கொண்டால்தான் இம் மாறப்போகும் இக்கலியின் மாற்றத்திலிருந்து நம் ஆத்மாவை ஒளிரச் செய்திட முடிந்திடும்.

ஆத்ம சக்தியை உணர்ந்து கொண்டால் அவரவர்களிடத்திலுள்ள இவ்வெண்ண சக்தியின் தொடரைக் கொண்டு இக்கோளம் மட்டுமல்ல… இப் பிரம்மாண்ட அனைத்துக் கோளங்களையுமே நமதாக்கும் சக்தி ஒவ்வோர் ஆத்ம சக்திக்கும் உண்டு.

அனைத்துக் கோளங்களுமே நமக்குச் சொந்தமானவைதான்.

இப்பூமியில் உயிரணுவாய் உயிராத்மாவாய் வாழ்ந்திடும் நாம் நம் சக்தியைச் செயல் கொண்டதாக்கி வாழ்ந்து காட்டிடல் வேண்டும். ஜீவன் பிரிந்த பிறகு ஆவி உலகில் இவ்வுடலில்லாமல் நம் சக்தியை வளர்த்திட முடியாது.

மாறப் போகும் கலியிலும் பிறகு வரும் கல்கியிலும் ஆவி உலகில் ஆத்மாக்களாய்ச் சுற்றிக் கொண்டுள்ள நிலையில்…
1.இவ்வுடலில் இருந்து பிரிந்து சென்ற நிலையிலுள்ள எண்ண நிலைக்கொப்ப…
2.பிறவி எடுத்திடும் நாள் வரை இவ்வாவி உலகில் சுற்றிக் கொண்டேதான் எண்ணத் தவிப்புடனே இருந்திடல் வேண்டும்.

இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 

October 26, 2023

உயர் ஞானத்தால் கிடைக்கும் “விமோசனம்”

1.ஆதிசக்தியின் (ஆவியாக இருக்கும் இருண்ட உலகில்) அகண்ட பேரண்டத்தில் காந்தத்தின் புலமாய் (BLACK HOLE)
2.அண்டத்தின் செயலில் காந்தத்தின் உள் நிகழ்வாகச் சிருஷ்டியின் அளப்பரிய செயலுறும் வளர்ச்சியாக
3.எண்ணிலடங்காத கோடானு கோடி உயிரணுக்களின் ஜீவிதமாகத் துடிப்பும் வெப்பமும் கொண்டு
4.அநித்திய மறைபொருள் சூட்சுமக் கலப்பே பிரம்மமாகப் படைப்புகள் உருவாகி... பின் மாற்றமாகி…
5.சுருதியின் ஆதார நாதமய செயல் உருவாக… குணங்களாக உள்ளடக்கும் ஓர் மறை பேரும் உன்னுள் அறிந்திடவே (ஒலி மொழி சொல் உணர்வு)
6.காந்தப்புலனின் ஈர்ப்பாக சரீரத்தையே சுற்றி ஓடும் ஓங்கார நாத இலயத்தில் கலந்து (ஆன்மா)
7.அதே துடிப்பின் நிகழ்வுகளை அறிந்திட முடியும்.

மகரிஷிகளின் சக்திகளை எடுத்துத் தியானிக்கும் அனைத்து உயிராத்மாக்களும்… இஜ்ஜீவபிம்ப சரீரம் கொண்டே உணர்ந்து கொள்வதோடு மட்டுமின்றி… உண்மையின் நெறி முறைகளைக் கருத்தினுள் தெளிந்து கொள்ள முடிவதே… “உயர் ஞான வளர்ப்பின் துவக்கமப்பா…”

ஒன்றுக்குள் செயல்படும் கருத்தின் வழிமுறைகளை…
1.வினா (விடை) என்ற பாங்கில் எண்ணி எடுக்கப்படும் போது...
2.அதிலே தெளிவுபடுத்திக் கொள்ளும் விடையே “அறிவின் தெளிவு…”

தெளிந்ததைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரப்படும் போது அதுவே உயர் நிலை பெறுவதற்கு வழி வகுக்கும்.

“சிரசின் உச்சியே ஆகாயம்…” என்று உணர்த்திய பொழுது… தொழில்படு வினையின் “கட்டளைக் கேந்திர மூளையின் செயலிலும்” இருவிதமான செயல்கள் உண்டு (இடது வலது).

சுவாசம் கொண்டு கவன ஈர்ப்பு நரம்பின் மூலம் எடுக்கும் நாதம்… (உயிர் வழி சுவாசம்) அந்த எண்ணத்தின் பாங்கைச் செயல் நடத்திடும் அமைப்பின் கருத்து உயர் ஞானம் என்றால்
1.அவ்வளர்ப்பின் ஆக்கம் வினைப் பயன் களைந்திட… வேரற நீக்கிடும் செயலுக்கு…
2.மனித சரீரத்தின் கட்டளைக் கேந்திர மூளையின் வலப் பக்க செயலைச் சிவமாகக் காட்டினான் சித்தன்.

அதே போல்
1.தாய்மையின் மேன்மையை... சக்தியாகச் சுடர்விடும் ஒளியே
2.மகரிஷிகளின் பாசப் பிணைப்பில் கட்டுண்டு செயல்படும் நிலையைக்
3.கட்டளைக் கேந்திர மூளையின் இடது புறமாகக் காட்டினான்.

ஒன்றின் செயலில் கொள்ளப்படும் அறிவு உயர் ஞானம் என்றால்… அது வினைப் பயன் களைவதோடு மட்டுமின்றி எண்ணம் சொல் உள்ளடங்கிய செயல் உயர் ஞானத் தெளிவைக் காட்டி மேலாம் அறிவாகச் சித்திக்கும்… பரப்பிரம்ம லயத்தில் (மகரிஷிகளுடன்) அது கலக்கச் செய்யும்.

பூமியின் நிகழ்வுகளை ஊன்றி அறிந்திருப்பாய், மழை பெய்த அடுத்த நாளே… நீரின் சக்தியில் அணுக்கள் பச்சை வண்ணமாகப் “பாசி பிடித்தல்” என்ற நிலையைக் காட்டும்.

வண்ணத்தின் பகுப்பைக் காட்டும் சந்திரனின் காந்த ஒளி அலைகள் பூமியில் படரும் பொழுது… நீரின் ஊடே பாய்ந்திடும் அந்த ஒளிக் கிரணங்கள் பூமியின் ஒத்த நிலையாக… பூமியின் ஈர்ப்பின் செயலிலும் ஜீவத் துடிப்பு ஏற்பட்டு… சூரியக்கதிர்களின் வெப்ப அலைகள் தணிவுற்றுச் சமைத்திடும் காலங்களில் ஏற்படும் அதே ஜீவத்துடிப்பு மரகதக் கற்களாக பூமியில் விளைகிறது.

அது போல்…
1.நீரமில சக்தியை உண்டு சூரியக் கதிர் சமைப்பு நிலைகளாக வளர்ந்திடும் அனைத்துத் தாவர இனங்களும்
2.”பச்சையம்” என்ற ஜீவரசத்தைத் தன் வளர்ச்சியின் வளர்ப்பிற்கு உள் நடத்துவதைப் போல்
3.புவியியலில் நாம் பெற்றிடும் ஞானம் வானவியலில் தொடர்பு கொண்டு
4.அவ்வண்ணம் கடந்த உயர்வு… சுடரில் மறைந்துள்ள வண்ணமாக (ஆறு வண்ணம் - ஏழாவது வெண்மை ஒளி)
5.வான் காட்டும் திறப்பில் படர்ந்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டும்.

மண்டலக் கணக்கு - 48 நாள்கள்

மனிதர்கள் இந்த உடல் இச்சைக்குத் தான் செல்கின்றனரே தவிர “உயிரின் இச்சைக்கு” யாரும் செல்வதில்லை. ஆனால் அவனுடன் தான் நாம் ஒன்றி வாழுகின்றோம்.

எதை எடுக்கின்றோமோ அந்த உணர்வுக்கொப்ப உடலாகிறது. உடலாகும் போது “வேதனை.. வேதனை…” என்று எடுத்தால் வேதனைப்படும் நிலை தான் வருகிறது..

வேதனை அதிகமாகி விட்டாலோ அந்த வேதனைக்கொத்த உடலாக… அடுத்து உயிர் நம்மை மாற்றிவிடும். ஆகவே இது போன்ற நிலையிலிருந்து நாம் மீள வேண்டும்.

இந்த உண்மைகளை எல்லாம் இப்போது அறியக்கூடிய தகுதி பெற்றிருக்கிறோம் என்றால் அது யாரால்…?

நம்முடைய மூதாதையர்கள் முதலில் மனிதனாக உருவானார்கள். அவர்கள் வழியில் நம் தாய் தந்தை உடல் பெற்றார்கள். அவர்கள் வழியில் நாம் மனித சரீரத்தை இப்போது பெற்றுள்ளோம்.

ஏனென்றால் “மனிதன் ஒருவன் தான் இறந்த பிற்பாடு அவர்களை (முன்னோர்களை) விண் செலுத்த முடியும்…”

ஒருவருக்கொருவர் நாம் மனதில் நினைக்கின்றோம்… “எனக்குத் துரோகம் செய்தான் பாவி… எங்கிருந்தாலும் அவன் உருப்படுவானா…? என்று…!”

நாம் இப்படி எண்ணினால் அவன் அமெரிக்காவில் இருந்தாலும் கூட இந்த உணர்வு அங்கே சென்று அவனை இயக்குகின்றது… அவன் செய்யும் காரியத்தைக் கெடுக்கிறது.

அதே போன்றுதான் நம்முடைய மூதாதையரின் உணர்வுகள் நமக்குள் இருக்கின்றது. அதை வைத்து அவர்களை நாம் விண் செலுத்த முடியும்.

அருள் சக்திகளை இப்போது குரு வழியிலே நமக்குள் பெருக்குகின்றோம். அதற்குண்டான சக்தி கிடைக்கின்றது… காற்றிலே அந்த உணர்வுகள் உண்டு.

நம் முன்னோரின் ஆன்மாக்கள் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இருந்தாலும் கூட நாம் விண் செலுத்த முடியும். முன்னாடி செய்ய மறந்து விட்டோம். இப்பொழுதாவது நாம் செய்யப் பழக வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று சொல்லி 48 நாட்களுக்குள் அனுப்பி விட்டால் அங்கே சென்று முழுமை அடைகின்றார்கள்… ரிஷியாகின்றார்கள்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் பிரியமாக இருக்கின்றார்கள் அதிலே ஓருவர் திடீரென்று இறந்து விட்டால் பற்றுடன் எண்ணும் போது அந்த உடலுக்குள் தான் போகும். அந்த உடலில் ஆவியாக இருக்கும்.

ஆனாலும் இறந்த ஆன்மா திடீரென்று உடலுக்குள் புகுந்த உடனே முதலில் தெரியாது. அதனால்தான் ஒரு மண்டலம் என்ற கணக்கை வைத்து ஞானிகள் நமக்குக் காட்டினார்கள்.

எது எது எந்தப் பொருளாக இருந்தாலும் “ஒரு மண்டலத்திற்குள் கருத்தன்மை அடைவது” மாறும் தன்மை வருகிறது. இதைத் தெரியப்படுத்துவதற்குத் தான் மண்டலக் கணக்கை ஞானிகள் கொடுத்தார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்றார்கள் என்றால் அந்த ஒரு மண்டலத்திற்குள் (48 நாட்களுக்குள்) சப்தரிஷி மண்டல உணர்வை எடுத்து வளர்த்து இலேசாக அங்கே விண் செலுத்தி விடலாம்.

அங்கே சென்ற பின் உடல் பெறும் விஷத்தன்மைகள் எல்லாம் கரைந்து விடுகிறது. துருவ நட்சத்திரம் சமைத்துக் கொடுக்கும் உணர்வுகளை எடுத்து ஒளி உடலாகப் பெறுகிறது.

மனிதன் ஒருவன் தான் இதைச் செய்ய முடியும்…!

இதற்கு முன்னாடி நமக்குப் பழக்கம் இல்லை. இப்போது தெரிந்து கொண்டோம். அடிக்கடி இதைப் போன்று செய்து பழகினால் இன்றைய விஷ உலகில் அடிக்கடி வரும் தீமைகளை நீக்க முடியும்.

மூதாதையர்களை விண் செலுத்திய வலுக் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நமக்குள் அதிகமாகப் பெருக்கிக் கொள்ள முடியும். இந்த உடலை விட்டு எப்பொழுது நாம் பிரிந்தாலும் நம்மையும் அது அங்கே இழுத்துச் சென்றுவிடும்.

மாறாக… “ஐய்யய்யோ இந்தக் காசை எல்லாம் என் பிள்ளை கண்டபடி செலவழிக்கின்றானே… நாளை அவன் என்ன செய்வான்…? என்று பிள்ளை மீது நினைவு அதிகமானா அந்த உடலுக்குள் தான் வர வேண்டும்

காசு சம்பாரித்துக் கொடுத்தேனே… நாளை என் பிள்ளை என்னை எங்கே ஏமாற்றப் போகின்றானோ…? என்று எண்ணினால் அவன் உடலில் புகுந்து விடுவோம். அங்கே பேயாகப் போய் அவனையும் வேதனைப்படுத்தத்தான் செய்யும்

ஆகவே எந்த நிமிடம்… எந்த நிலை… ஆனாலும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் ஒரு பழக்கத்திற்கு வந்துவிட்டால் நம் உயிரின் இயக்கம் எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்… அங்கே கவர்ந்து சப்தரிஷி மண்டலத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

அந்த உணர்வுக்குத் தக்க இருளை நீக்குகின்றது உணர்வின் அறிவு எப்பொழுதுமே சந்தோஷமாகப் பேரானந்த நிலையாகப் பெற முடியும். அது தான் விஜய தசமி. உயிர் தோன்றி பத்தாவது நிலையாக முழுமை அடையும் சந்தர்ப்பம்… பிறவி இல்லா நிலை…!

ஒவ்வொரு மாதத்திலும் ஞானிகள் தெளிவான காரணங்களைக் காட்டி நம்மை நல்வழியில் வாழச் செய்ய வழிவகுத்துக் கொடுத்தார்கள். மக்களுடைய எண்ணங்கள் தடுமாறும் இந்தக் காலகட்டத்தில் குரு வழியில் இதை நாம் செயல்படுத்துவோம்.

October 25, 2023

தீமையிலிருந்து மீட்டிடும் சக்தியைப் பெறுவதற்கு “எத்தனையோ துன்பத்திற்கு என்னை ஆளாக்கினார் குருநாதர்…”

விஞ்ஞான அறிவு… எட்டாத தூரத்தில் இருக்கக்கூடிய கோள்கள் வெளிப்படுத்தும் உணர்வினை லேசர் என்ற இயக்கத்தைக் கொண்டு அதைக் கவர்ந்து எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரில் பதிவாக்கி அதனின் உணர்வின் ஓசைகளைக் கவர்ந்து கொள்கின்றார்கள்.

அதைப் பதிவாக்கி இராக்கெட்டை உந்து விசையால் செலுத்தப்படும் பொழுது வான் வீதியிலே பறக்கின்றது. எதன் உணர்வின் தன்மையோ அந்த ஒலிக்கொப்ப அந்தக் கோள் இருக்கும் இடத்திற்கு இழுத்து அழைத்துச் செல்கின்றது. அதாவது இந்த இராகெட்டை அங்கே இழுத்துச் செல்லும் தன்மை வருகிறது.

அந்தக் கோளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைத் தரையில் இருந்தே மனிதன் விஞ்ஞான அறிவால் தெரிந்து கொள்கின்றான். அந்தக் கோளிலே என்னென்ன நடக்கின்றது என்று அறியும் ஆற்றல் வருகிறது.

அன்றைய மெய்ஞான அறிவுக்கும் இன்றைய விஞ்ஞான அறிவிற்கும் உங்களுக்கு தொடர்பு கொடுத்துச் சொல்கின்றோம். சாமிக்கு என்ன தெரியும்…? என்று விட்டு விடாதீர்கள்…!

இதை எல்லாம் குருநாதர் எனக்குத் தெளிவாகக் கொடுத்ததை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காற்று மண்டலத்தில் உள்ள நச்சுத்தன்மையை உங்கள் சுவாசத்திற்குள் மறுக்கும் சக்தியாக அது வர வேண்டும்… அத்தகைய ஆற்றலை நீங்கள் பெற வேண்டும்.

இல்லை என்றால் அந்த விஷத்தின் தன்மை ஈர்க்கப்பட்டு மனிதனுடைய ரூபத்தை மாற்றும் சக்தியாக வந்துவிடும். குருநாதர் அதைத்தான் சொன்னார்.

அவர் காட்டிய வழியில் உயர்ந்த ஆற்றலைப் பெற வேண்டும் என்பதற்குத் தான் பதிவு செய்கின்றேன். பதிவானதன் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுதல் வேண்டும்

பத்தாவது நிலை பெற்றது… வசிஷ்டர்…! அதாவது கவர்ந்து கொண்ட உணர்வுகள். நமக்குள் அது பதிவாக்கப்படும் பொழுது பிரம்ம குருவாக வருகிறது.

அதன் வழி ஞானத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது அது பிரம்மம் ஆகி அதனுடன் இணைந்து அருந்ததி… எதன் சக்தியின் ரூபம் பிரம்மம் ஆனதோ… அதன் மணத்தின் உணர்ச்சியாக அது இயக்கும்.

பெண்கள் இதையெல்லாம் அவசியம் கூர்ந்து… கவனித்து… அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் உங்களுக்குள் ரெக்கார்ட் ஆகி விடுகின்றது பெண்களுக்கு அணுத் தன்மையாக மாற்றும் சக்தி அதிகம் உண்டு.

தன் கணவருக்குத் தொழிலில் சிக்கல் ஏற்பட்டு விட்டது என்று அந்த உணர்வுகள் மோதும் பொழுது என் கணவர் அந்த அருள் சக்தி பெற வேண்டும்; சிந்தித்து செயல்படும் திறன் அவர் பெற வேண்டும்; அவர் பார்வையில் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று பெண்கள் உங்களுக்குள் இதை உருவாக்கி கணவருக்குப் பாய்ச்சினால் உங்கள் எண்ணம் நிச்சயம் அவரைக் காக்கும்.

ஏனென்றால் செல்வத்தைத் தேட என்று அவர் வெளியிலே தொழிலுக்குச் செல்லும் பொழுது எத்தனையோ எதிர்ப்புகள் வரும்… மாறுபட்ட உணர்வுகளைச் சந்திக்க நேரும்.

என் கணவருக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினால் அவரை தெளிந்த மனிதனாக மாற்ற முடியும்.

என் கணவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும்… அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்… அனைவரும் போற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று பெண்கள் நினைக்க வேண்டும்.

அதே சமயத்தில் சம்பாதித்துக் கொடுத்தால் “என் கணவர் மாதிரி இல்லை…” என்று மெச்சுவோம். அதிலே சிறிது குறைவானால் எல்லாவற்றையும் இப்படியே விட்டுவிடுகின்றார் என்று வேதனை வரும்.

இரண்டு தடவை இப்படி ஆனால் போதும். அடுத்து… இப்படிச் செய்து கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆவது…? எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு என்ன செய்வது…? என்று சந்தேகங்கள் வந்துவிடும்.

காரணம்… உணர்வுக்கொப்ப அந்த உணர்ச்சிகள் எழும்ப… உணர்வின் செயல்களாக அது வருகின்றது. எதைப் பதிவு செய்கின்றோமோ உயிர் கவர்கின்றது… உயிரிலே படுகின்றது… இரத்தத்தில் கலக்கின்றது தீமையின் உணர்வாக உடலுக்குள் அணுவாக விளையத் தொடங்குகிறது.

அவ்வாறு ஆகாது தடுப்பதற்காக வேண்டித் தான் வாழ்க்கையில் எவ்வாறு தெரிந்து வாழ வேண்டும் என்று எவ்வளவவோ சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள். நல்லதை எண்ணி எடுத்து அதன்வழி செயல்படுத்தும் போது அதுவே தெய்வமாக வந்து இயக்குகிறது.

ஆனால் இந்த வாழ்க்கையில் ஆசையின் பால் செல்லப்படும் பொழுது எத்தனையோ துயர்கள் வந்து சேருகின்றது… தன்னைக் காக்கும் சக்தியையும் இழந்து விடுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இது போன்று சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. இந்த உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு குருநாதர் என்னை 20 வருடம் காடு மேடெல்லாம் அலைய வைத்து “எத்தனை துன்புறுத்தினார்…?” என்று எனக்குத் தெரியும்.

ஒவ்வொரு மனிதனும் அவனுடைய சந்தர்ப்பம் நுகர்ந்த உணர்வால் கொண்டு எப்படி எல்லாம் துன்பப்படுகின்றனர்… வேதனைப்படுகின்றனர்... வேதனை வந்த பின் எத்தனை நோய்கள் அவருக்கு வருகின்றது…? அதிலிருந்து மீட்டிட என்ன செய்ய வேண்டும்…? என்று தான் காட்டினார்.

அவர் எனக்குப் போதித்ததைத் தான் உங்களுக்கும் வாக்காகச் சொல்லிப் பதிவு செய்து உங்களை மீட்டிடும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள்

எல்லா மண்டலமும் ஒரே நிலை கொண்டு வளர்ச்சி பெறும் என்பதல்ல…!

வான மண்டலத்தில் நட்சத்திர மண்டலமாகவும்… சிறு சிறு கோளமாக உள்ள மண்டலங்களும்… ஜீவனற்று உள்ள மண்டலங்களும்… பெரிய மண்டலங்களின் ஈர்ப்பு சக்தியில்
1.அதன் சக்தி நிலையும் (அமில நிலை) பெரிய மண்டலங்களின் அமில நிலையும் ஒன்றுபடும் பொழுது
2.இதன் ஈர்ப்புடன் வந்து சேர்ந்து அந்நிலையிலேயே கலந்து சுழல்கின்றது.

மண்டல வளர்ச்சி கொண்ட சிறு சிறு நட்சத்திர மண்டலங்களாய் சுற்றிக் கொண்டுள்ள கோளங்கள் எல்லாம் பெரிய மண்டலங்களின் பிரளய நிலையின் காலங்களில்தான் வந்து சேருகின்றன.

பூமியின் பூமத்திய ரேகையின் இன்றுள்ள நிலை… நடக்க இருக்கும் பிரளயத்தின் போது பிரளயத்தின் அசைவினால்… சிறிது மாறுபட்ட இடத்தில் வரப்போகின்றது.

1.இன்று நீர் நிலைகளாய் ஆழ்கடலாய்ச் சூழ்ந்துள்ள இடமெல்லாம்
2.சமமான தரையாகச் (நிலங்களாக) செயல் கொள்ளப் போகின்றது.

இம்மனித ஆத்மாக்கள் ஜீவராசிகள் மட்டும் மாறப்போகின்றன என்பதல்ல. இன்று வளர்ச்சியில் உள்ள தாவர வர்க்கங்களின் நிலையும் மாறப் போகின்றது.

இன்று ஆத்மீக நெறியை அறியும் சக்தி நிலையே குறைந்துள்ளது. செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ள ஆத்மாக்கள் எல்லாம் இயற்கையின் சீற்றத்திலிருந்து தப்பும் நிலையை உணர்ந்திடல் வேண்டும்.

வாழும் வாழ்க்கை செயற்கைக்கு அடிமைப்பட்டுள்ளதை மாற்றி இவ் இயற்கையின் கால மாறுதலை உணர்ந்தே வாழ்ந்திடுங்கள்.

1.பல சித்தர்கள்… பல ரிஷிகள்… வாழ்ந்து செயலாக்கி இன்றும் ஆண்டவன் ரூபம் கொண்டு
2.நம் கோயில்களின் மூலமாகப் பல சக்தி நிலைகளை உணர்த்திக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்ற நாம்
3.நம் ஆத்மாவிற்கு உயர்ந்த சக்தியின் நிலையைச் சேமிக்கும் சக்தி பெற்றிட வேண்டும்.

நம் சக்தியைச் செயற்கைக்கும் விளையாட்டிற்கும் வீண் விவாதத்திற்கும் இன்றைய அரசியம் ஆட்டத்திற்கும் அடிபணியச் செய்திடக் கூடாது.

1.நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அடிமைப்படுத்திடும் எத்தகைய நிலையிலிருந்தும் மீளும் நிலையில் நம் சக்தியை ஓங்கச் செய்தே
2.இக் குறுகிய காலத்தில் அன்பு என்ற ஜெபத்தின் செயல் கொண்டு
3.ஆத்ம சக்தியை வளர்க்கும் பரிபக்குவ நிலையில் வாழ்ந்திடுங்கள்.

October 24, 2023

சுவாசிப்பது உமிழ் நீராக மாறி உடலுக்குள் சென்று என்ன செய்கிறது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும்

குருநாதர் என்னை மலைப் பகுதிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்று 27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படக்கூடிய மின்னல்கள் ஒளிக்கற்றைகளாகப் பூமிக்குள் பரவுவதை “எது எது எப்படிக் கவருகிறது…?” என்று காட்டினார்.

அதிலே ஜோதிப்புல் என்றும் காட்டினார்… ஒளிக்கற்றைகளை தன் விழுதுகளில் கவர்ந்து கொண்ட பின் மோதும் போது வெளிச்சத்தை எப்படிக் கொடுக்கின்றது…? இயற்கையினுடைய நிலைகள் எப்படி சந்தர்ப்பங்கள் வருகிறது என்று அனுபவத்திலே காட்டினார்.

குருநாதருடன் அலைந்து தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டேன். காட்டிற்குள் சாப்பாடு வெறும் பேரீச்சம்பழம் தான். இல்லை என்றால் ஒரு பச்சிலையைக் காண்பிப்பார். அதைச் சாப்பிட வேண்டும். தண்ணீரைக் குடித்துக் கொள்ள வேண்டும். இதுதான் உணவு.

அதே சமயத்தில் அரிசியையும் மோரில் ஊற வைத்த கத்திரிக்காய் மிளகாய் மாங்காய் ஒரு டப்பா இதையும் எடுத்துச் செல்லும்படி சொல்வார். டப்பாவில் தண்ணீரை ஊற்றி அதிலே எல்லாவற்றையும் போட்டு வேக வைத்துக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார்.

சோறு கிடையாது…! வெறும் தண்ணீராகக் கஞ்சியாகக் குடிக்கும்படி சொல்வார். ஏனென்றால் அரிசி சாதம் சாப்பிட்டுப் பழகியதனால் அந்த உணர்வின் சத்து உடலிலிருக்கும் அணுக்களுக்கு அத்தகைய உணவு கிடைக்கவில்லை என்றால் அது மாறிவிடும்.

ஆகையினால் உன்னை இப்படிச் சாப்பிடும்படி சொன்னேன் என்று அதிலேயும் விளக்கம் கொடுப்பார்.

காரணம்... பச்சிலையைச் சாப்பிடுகின்றாய்…! இதே உணர்வு உடலில் விளைந்தால் அதற்குண்டான வித்தியாசங்களாக வந்துவிடும். அதை மாற்ற வேண்டும் என்பதற்காக இதையும் சொல்லி அதையும் சொல்லி ஒவ்வொரு வகையிலும் அதைச் சீராக்கிக் கொண்டு வருவார்.

சக்தி இருக்கிறது என்று காட்டுக்குள் எடுத்தாலும் உணவுப் பழக்கத்தால் எப்படி மாற்றங்கள் ஏற்படுகின்றது…? என்று காட்டுவார்.

அப்போது அவர் என்ன முறைப்படி கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கப்படும் பொழுது அது தேவாமிர்தமாக இருக்கும். வெயில் காலங்களில் நீர் மோரைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்…? ஒரு மாங்காயை உப்பைத் தொட்டுத் தின்றால் எப்படி இருக்கும்…?

இப்பொழுது வாயில் உமிழ் நீர் சுரக்கின்றது அல்லவா… இது எங்கிருந்து வருகின்றது…? ஒன்றுமே உங்களுக்குக் கொடுக்கவில்லை… ஆனால் மாங்காயைப் பற்றிச் சொன்ன உணர்வுகள் செவிகளில் படுகிறது… உங்களுக்கு அதைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகின்றது.

நுகர்ந்த உடனே அந்தப் புளிப்பு கலந்த உமிழ் நீராகச் சுரக்கின்றது. இது சாப்பாட்டுடன் கலக்கின்றது

இதே போன்றுதான் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் கண்ணுற்றுப் பார்த்து நுகரும் உணர்வுகள்… எதைக் கேட்டறிந்தாலும் உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்துவிடுகிறது.

ஆனால் அது தீமை என்ற நிலையில் இருந்தால் விஷத்தன்மையாக மாறிவிடுகின்றது ஆக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு அடுத்துப் பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் கேட்டால் இந்த விஷங்கள் உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து ஆகாரத்துடன் கலந்து வயிற்றிலே “கட…புடா… கட…புடா…! என்று ஆகிறது.

இது ஏன்… எதனால்…? என்று நாம் அறிவதில்லை வயிறு நிறையச் சாப்பிட்டபின் சஞ்சலமாகச் சலிப்பாகப் பேசுவதைக் கொஞ்ச நேரம் கேட்டுப் பாருங்கள்.

அது எல்லாம் உமிழ் நீராக மாறி அடுத்து நெஞ்சு எரிகிறது கப கப என்று எரிகிறது என்பார்கள். பேசிய உணர்வு கவரப்பட்டு இப்படி உமிழ் நீராக மாறி நல்ல ஆகாரத்தையும் கூட நுகர்ந்த உணர்வுகள் மாற்றி விடுகின்றது.

இதை எல்லாம் குருநாதர் அனுபவத்தில் கொடுத்தார். நான் இதைப் புத்தகத்திலோ மற்ற நிலைகளிலோ பார்த்துப் படித்துச் சொல்லவில்லை. நம் உடலுக்குள் என்னவெல்லாம் நடக்கிறது…? என்று காட்டிற்குள் வைத்து இதை எல்லாம் அறியும்படி செய்வார்.

“இந்தப் பக்கம் வா…” என்று அங்கே வேறு ஒரு செடியைக் காண்பிப்பார்… அதனின் மணத்தை நுகரு…! என்பார் நுகர்ந்தவுடன் அந்த உணர்வுகள் சேரும்… உமிழ் நீர்கள் எனக்குள் மாறும்.

நீ சாப்பிட்ட தண்ணீரின் சத்து இப்போது எப்படி வருகிறது பார்…! என்று காட்டுவார். நீ நுகரும் இந்த மணத்திற்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கின்றது என்று நுகரச் சொல்லி… அறியச் செய்து… உணரும்படி செய்வார்.

இதையெல்லாம் முழுமையாக உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்குத் தான் சொல்கிறேன். காரணம் உங்கள் சந்தர்ப்பம் அந்தந்த நேரமோ அப்போது இந்த உண்மைகளை நீங்கள் அறிந்து… ஞானத்தின் வழியிலே சீராகச் செல்வதற்கு இது உதவ வேண்டும் என்பதற்காகத் தெளிவாக்கிக் கொண்டு வருகின்றேன்.

ஆகவே இந்த அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்ளுங்கள். மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடிப் பொழுதும் உங்களுக்குள் வளர்க்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

சாதாரண எண்ணத்துடன் ஆராய்ச்சி செய்தால் மெய் உணர்வைக் காண முடியாது

பூமி தோன்றிய நிலையை… சூரியனிலிருந்து சிதறி வந்த கோளங்கள் பல ஒன்று சேர்ந்து ஆரம்ப நிலையில் ஆவியாய்க் குளிர்ந்து ஒன்றுபட்டு இப்பூமியாகச் சுழல்கின்றது என்ற யூக நிலையில் உள்ளனர்.

பூமி தோன்றிய நிலையை ஆரம்ப நிலைப்படுத்திப் பல நிலைகளில் செப்பிவந்துள்ளேன். வரிசைத் தொடரை இன்று உணர்த்துகின்றேன்.

இந்தப் பூமியே “ஆண்பால் பெண்பால் கொண்ட இரண்டு ஆத்மாக்களின் ஜோதிக் கலப்பினால்…” உற்பத்தியானது.

இந்தப் பூமியைப் போன்ற… இன்று வாழ்ந்திடும் வளர்ந்த அறிவு நிலை பெற்ற… ஆத்ம உடல் கொண்ட மனித இனம் இப்பூமியில் வளரும் நிலைக்கும் முதலே…
1.நம் சூரியனைச் சார்ந்துள்ள 48 மண்டலங்களில்லாமல்
2.மற்ற சூரியனைக் காட்டிலும் சக்தி கொண்ட நிலையில் வாழும் மண்டலங்களில்
3.பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே மனித ஆத்மாக்கள் உண்டு.

நம் பூமியில் இம்மனித இன வர்க்கங்கள் தோன்றியதெல்லாம் மூன்று மாற்றங்களுக்குப் பிறகு தான் மனித இன வர்க்கமே அறிவு நிலை பெற்று வளர்ச்சி நிலையில் வாழ்ந்து வருகின்றது.

அதுவும் இக்கலியினால் மாற்றம் கொண்டு கல்கியில் இன்னும் மாற்றம் கொண்ட நிலையில்தான் செயல்படப் போகின்றது.

ஆனால் இந்நிலையில் செப்பியபடி மனித ஆத்மாக்கள் வளர்ச்சி கொண்ட மண்டலங்கள் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இருந்து வருகின்றன.

அத்தகைய மண்டலங்களில் வாழ்ந்த அறிவு நிலை பெற்ற ஆத்ம உடல் கொண்ட சூட்சும நிலையைக் கொண்டோருக்கு எந்த மண்டலத்திலும் தன் நிலையைச் செயலாக்கும் பக்குவம் உண்டு.

அத்தகைய வளர்ச்சி கொண்ட… ஜீவன் கொண்ட ஆத்மாக்களினால்தான்
1.ஒவ்வொரு மண்டலமுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு
2.ஈர்ப்பு நிலையின் சக்தியினால் ஒவ்வொரு மண்டலமாக (புதிதாக) உருப் பெறுகின்றது.

சப்தரிஷிகளின் மண்டலம் ஏழு என்று உணர்த்துகின்றனர். இவ் ஏழு நட்சத்திர மண்டலம் மட்டும் சப்தரிஷியினால் உருக்கொண்டு செயல்பட்டு வாழ்கிறார்கள் என்பதல்ல பொருள்.

இந்த ஏழு சப்தரிஷி மண்டலம் என்பதின் பொருள்…
1.இந்தப் பூமியிலிருந்து இம் மனித ஆத்மா உயர் நிலை பெற்று
2.ஜெப நிலை கொண்ட ஆத்ம மண்டலங்கள்தான் அந்த ஏழு நட்சத்திர மண்டலங்களும்.

அனைத்து மண்டலங்களுமே ஆத்ம நிலை பெற்ற ஜீவன் கொண்டு வாழ்ந்து வழி வந்த ஆத்ம மண்டலங்கள்தான். இப்பூமி தோன்றிய நிலையும் இரண்டு ஒன்றுப்பட்ட ஆத்மாக்களின் அன்புக் கலவையினால் ஆண் பெண் என்ற சக்தி நிலையில் உருவானது தான்.

1.மற்ற சூரியக் குடும்பத்தில் இருந்து வீரிய ஜெபம் கொண்டு
2.ஒரே நிலையில் சூட்சுமம் பெற்று
3.இப்பூமியை இரண்டு ஆத்மாக்களுமே ஒன்றுபட்டு ஈர்த்து ஆவி நிலையாக ஆத்மாவுடன் இணைத்து
4.இரண்டு ஆத்மாவுமே ஆத்மாவுக்குகந்த சக்தியின் ஈர்ப்புத் தன்மையினால்
5.பல சக்திகளைத் தன்னுள் ஈர்த்தே சிறுகச் சிறுக வளர்த்துத்தான் உயிருடன்
6.உணர்வுடனே இப்பூமியை இன்றளவும் வளர்த்துக் கொண்டே தன் சக்தியின் செயலினால் சுற்றிக்கொண்டு
7.பல உயிரினங்களை வளர்த்துக் கொண்டே வாழ்கின்றது இந்தப் பூமி.

இப்பூமியில் ஆண் பெண் என்ற பிணைப்பு நிலையினால் மற்ற உயிராத்மாக்களின் உற்பத்தி நிலை ஏற்படுவதின் நிலையும் இப்பூமியின் நிலையும் ஒன்றுபட்டதுதான்.

இப்பூமி தோன்றி உயிரணுக்கள் உதித்துச் சில காலங்களிலேயே இனத்துடன் இனச் சேர்க்கையினால் இன வளர்ச்சி பெறும் நிலை வந்துவிட்டது.

உயிரணு உதித்தால் அந்த உயிரணுவிலிருந்து பல கோடி உயிரணுக்கள் வளர்ச்சி பெறுகின்றன. அதன் தொடர்ச்சியிலே எந்த உயிரணுக்களுமே அழிவதில்லை. உயிரணுவாய் உதித்த பிறகு அவற்றின் உடல் பிம்ப நிலைதான் மாறு கொள்கின்றது.

இந்நிலையில் வளர்ச்சி பெறும் உயிராத்மாவாக ஞானி சித்தன் ரிஷி சப்தரிஷியாக ஆகி சூட்சுமம் கொண்ட பிறகு
1.ஒவ்வொரு சப்த ரிஷியின் நிலையிலும் தான் ஈர்த்து செயல் கொண்ட ஆசை நிலைக்கொப்ப
2.மற்ற மண்டலத்துடன் சேர்ந்தும் தனி மண்டலமாய் உருப்பெற்றும்
3.தான் வாழ்ந்து வழிவந்த மண்டலத்தை ஆண்டவனாய்க் காத்திடும் நிலையிலும்
4.தன் தன் சக்தி நிலைக்கொப்ப இவ்வுலகில் மட்டுமல்லாமல்
5.மற்ற மண்டலங்களிலும் பால்வெளி மண்டலத்திலும் சென்று வரும் நிலையிலும்
6.தான் பெற்ற சக்தியைச் செயலாக்குகின்றனர் சப்தரிஷிகளெல்லாம்.

ஆகவே… பூமியில் இன்று மனித ஆத்மாவாய் வளர்ச்சி கொண்ட நிலையில் நாம் சேமிக்கும் சொத்து நிலைதான் அப்பேரானந்த நிலை. ஆனால் வழியின் நிலையை அறிந்திடாமல் வாழ்ந்திடும் நிலைதான் இன்றுள்ள நிலை.

இன்றுள்ள மக்களின் எண்ண நிலையே “ஆராயும் நிலையையும் தர்க்க நிலையையும்” வளர்த்துக் கொண்ட நிலையாக உள்ளது.

எந்த நிலையையும் ஆராய்ந்து… அறிவு நுட்பத்தின் வழித்தொடரின் ஞான வழியில் வந்திட்டால்… உண்மை நிலையின் வழித் தொடரை அறிந்திடலாம்.

1.ஆனால் இன்றுள்ள ஆராயும் நிலையோ சஞ்சலமுடன் செயல்படுவதினால்
2.மெய் உணர்வை அறிந்திட முடியாமல் உள்ளது.

October 23, 2023

“ரெக்கார்ட்” மிகவும் முக்கியம்

விஞ்ஞான அறிவு கொண்டு கம்ப்யூட்டரில் ரெக்கார்டு செய்து கொள்கின்றார்கள். தட்டி விட்ட பின் அதனுடைய இயல்புகளைத் தெரிந்து கொள்கின்றனர்.

மனிதர்களாக இருக்கும் நாமும் இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்றால் உற்று நோக்கி… அதைப் பதிவு செய்து கொள்கின்றோம்.

(கம்புயூட்டரில் பதிவானதைத் தட்டுவது போல்) சண்டையிட்டவர்களை மீண்டும் எண்ணியுடன் நமக்குக் கோபம் வருகிறது. அந்த நேரத்தில் நம் நல்ல காரியங்களைக் கெடுக்கின்றது.

கோவிலுக்குச் சென்று வணங்குகின்றோம். எண்ணியபடி நடக்கவில்லை என்றால் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம். எப்படி…! “என்னத்தைச் சாமி கும்பிட்டோம்…? ஒன்றும் நடக்கவில்லையே…!” என்று அதை எண்ணுகின்றோம்

அந்த ரெகார்டைத் தட்டியவுடன் சோர்வடைந்து… நல்லதையே எடுக்க முடியாது போய் விடுகின்றது

ஏனென்றால் எண்ணிய உணர்வுகளைத் தான் எலும்புகளில் (கம்ப்யூட்டர் போல்) ரெக்கார்ட் செய்து வைத்துக் கொள்கிறது. இப்படி எண்ணிலடங்காத பதிவுகள் நமக்குள் உண்டு.

ஒன்று விஞ்ஞானம் அதை எல்லாம் நிரூபிக்கின்றது…!

அதே போன்று தான் சண்டை போடுவதையும் பதிவாக்குகின்றீர்கள் குடும்பத்தில் வந்த கஷ்டங்களையும் பதிவாக்குகின்றீர்கள் அந்தந்தப் பதிவை எண்ணும் பொழுது அதன் வழியே நடக்கிறது.

அதே சமயத்தில்… அத்தகைய கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்று நிலை வரும் போது… “கஷ்டங்களை மறந்து…” அந்த மகரிஷிகளை அருள் சக்தி பெற வேண்டும் என்று உணர்வை எடுத்தால் அருளைப் பெருக்குகின்றோம்… சிந்திக்கும் ஆற்றலையும் அது கொடுக்கின்றது. “சிரமங்களை மீட்டுத் தருகின்றது நம்முடைய எண்ணம்…”

நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

உதாரனமாக துணி எடுக்க ஜவுளி கடைக்குச் செல்ல வேண்டும் என்று போகும் போது அந்த நேரத்தில் குழந்தை வந்து அடம்பிடித்தால் என்ன நடக்கிறது…?

ஏன்டா… இப்படி வெளியே போகும்போது அடம்பிடிக்கின்றாய்…? என்று இந்த வெறுப்படைந்தால் போதும். கடைக்குச் சென்று சரியான துணியை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்…!

இந்த சங்கடம் தான் அங்கே வேலை செய்யும்… வெறுப்பு உணர்வு தான் முன்னாடி கண்களில் வரும்.

நல்ல துணியை எடுத்துப் போட்டாலும் “இது வேண்டாம்… இது வேண்டாம்…” என்று சொல்லிக் கொண்டிருப்போம். கடைசியில் வெறுப்பு அதிகமாகி “சடைத்துக் கொண்டு… சரி இதையாவது கொடுங்கள்…” என்று எடுத்து வருவோம்.

வீட்டில் மற்றவர்களோ சந்தோஷமாக இருப்பார்கள். துணியைக் காண்பிப்போம். “என்னங்க… போயும் போயும் இந்தத் துணியைப் போய் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறீர்களே…!” என்பார்கள்.

இல்லைங்க… இதுதான் நல்லது என்போம் நன்றாகப் பாருங்கள் என்பார்கள். பார்த்தாலும் அன்றைக்கு அது தெரியாது.

ஆனால் மறுநாள் காலையில் பார்த்தால்… சனியன்…! போகும்போது குழந்தை குறுக்கே வந்து அடம்பிடித்தான். எத்தனையோ தொல்லை கொடுத்தான் என்று மீண்டும் “சனியன்…” என்று தான் நாம் சொல்வோம்.

இந்த உணர்வுகள் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த வெறுப்பு வரும். இந்த உணர்வோடு அன்றைக்கு மற்ற காரியங்கள்… ஒரு சமையலையே செய்தாலும் (துணி எடுத்ததை எண்ணி) சனியன் என்று எண்ணிக் கொண்டு காயை அறுத்துக் கொண்டிருந்தால் போதும். அந்த உணர்வு என்ன செய்யும்…?

கையில் எடுத்து இப்படிப் பிடித்து அப்படி அறுப்பதற்குப் பதில் அது சிறிதளவு சாய்ந்தால் போதும் கையிலே அறுபட்டு விடும். என்ன கிரகமோ…? என்று சொல்வோம். இதைப் பார்க்கலாம்.

ஆக… கீதையில் நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். மனித வாழ்க்கையில் இயக்கப்படும் உணர்வின் இயக்கங்கள் தான்.

ஏனென்றால் இந்த உடலில் எத்தனை நாள் வாழுகின்றோம்…? இன்றைய செயல் நாளைய சரீரம்.

ஆகவே இது போன்ற தீமைகளை நீக்க அருள் ஞானிகள் உணர்வுகளை… உங்களுக்குள் பெறச் செய்வதற்கு தான் இந்த உபதேச வாயிலாக தொடர்ந்து “ரெக்கார்ட் செய்கின்றேன்…”

எந்த அளவிற்கு நீங்கள் இதைக் கூர்ந்து பதிவு செய்கிறீர்களோ அந்த அளவுக்கு… அது திரும்ப எண்ணும் பொழுது “உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்”

குருநாதர் காட்டிய வழியில் மகரிஷிகளின் அருளாற்றலைப் பெற்றேன். அதை உங்களில் பதிவாக்குகின்றேன் நீங்கள் இந்தப் பதிவை எடுத்துக் கொள்ளலாம்.

பையனோ குடும்பமோ தொழிலோ சரியில்லை என்றால் அதை ரெக்கார்ட் செய்கின்றீர்கள். எப்போது பார்த்தாலும் இப்படியே நடக்கின்றது என்றும் பதிவு செய்து கொள்கிறீர்கள்.

உதாரணமாக… மனைவி மீது கொஞ்சம் வெறுப்பு இருந்தால் அதைப் பதிவு செய்து விட்டால் போதும். “தண்ணீர் கொண்டு வா…” என்போம்.

அவர்கள் வேலையில் கவனமாக இருக்கும் போது சரியாகக் காதில் விழுகாது. “எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…! நான் சொன்னால் என் மனைவி கேட்பதே இல்லை…! என்று கோபமாகத்தான் அடுத்துப் பேச வரும்.

அதே போன்றுதான் மனைவியும் கணவனை பார்த்து… “ஏதாவது ஒன்று என்றாலும் பொறுமை இல்லாதபடி உடனே இவருக்குக் கோபம் வந்து விடுகிறது. என்னை குற்றவாளியாகவே இவர் பார்க்கின்றார். இந்த உணர்வு தான் குடும்பத்தில் வளர்கின்றது.

இது எல்லாம் சந்தர்ப்பங்கள் தான்…!

அதை மாற்றி அமைப்பதற்குத் தான் அந்த ஞானிகள் உணர்வினைப் பெறச் செய்வதற்கு உபதேசமாக ரெக்கார்ட் செய்கிறோம்.

இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. நீங்கள் அதை இச்சைப்பட்டு வளர்த்துக் கொண்டால் அது கிரியையாகி அந்த ஞானமாக நல்வழியில் உங்களை வழி நடத்தும்.

ஆகவே அந்தத் தெய்வீக பண்புகளை வளர்த்துப் பழக வேண்டும். அருள் ஞானிகள் உணர்வை வளர்த்தால் நாம் தெய்வமாகின்றோம். நாம் எல்லாம் தெய்வமாக ஆவதற்குத் தான் ஞானிகள் இத்தகைய தத்துவங்களை கொடுத்தார்கள்

நல் வழி நடந்தால்... ரிஷிகளின் துணை நமக்கு என்றும் உறுதுணையாக இருக்கும்

“எண்ண நிலைப்படிதான் அனைத்து நிலைகளும் இயங்குகிறது...!” என்று உணர்த்தி வந்தேன். இந்நிலையின் சூட்சும நிலையை உணர்த்துகிறேன்.

மகிழ்ச்சியாக உள்ள இடத்தில் அனைவரின் எண்ண நிலையும் மகிழ்ச்சி கொண்டதாகவும்... துக்கம் அனுஷ்டிக்கும் இடத்தில் அந்த நிலைக்கொப்ப அனைவரின் நிலையிலுமே துக்க நிலை சாடும் என்றுணர்த்தினேன்.

இப்படி இவ்வெண்ண நிலையின் சுவாச நிலை கொண்டுதான் இன்றைய “கைரேகை ஜோதிட நிலையும்... மனோவசிய நிலையும்” உள்ளன.

அந்நிலையிலுள்ளோர் (மனோவசியம் செய்பவர்) தன் எதிரில் அமர்ந்துள்ளவரின் எண்ணத்துடன் தன் எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி அவரது எண்ணத்துடன் ஈர்க்கும் நிலையில் மனோவசியம் செய்யப்படுவோரின் அனைத்து நிலைகளுமே செய்யப்படுபவருக்கு இவரின் எண்ணக் கலவையுடன் வந்து மோதி அனைத்து நிலைகளும் அறிகின்றனர். இந்நிலை அறிபவர்கள் மற்ற ஆவியின் தொடர்பை வைத்து ஈர்க்கும் சக்தியைச் செயல்படுத்துகின்றனர்.

ஆனால் நம்மில் உயர்ந்த ரிஷிகளின் நிலையும் எண்ண சக்தியின் சக்தி நிலைத்தொடர் கொண்டுதான் அவர்கள் சூட்சும நிலைக்குச் சென்றதின் நிலையும்.

இவ்வுலகினில் பிறந்திட்ட அனைவருக்குமே ஒவ்வொரு நிலையான எண்ணக் கலவையின் வாழ்க்கை நிலையுண்டு.

அவ்வழியில் நல்லுணர்வு கொண்ட சக்தி நிலையின் எண்ணக் கலவையுடன்... வாழ்க்கையில் வழி வந்தவர்களின் நிலையில்தான் இவ்வுலகம் தோன்றிய நாள் கொண்டே...
1.பல சக்தி நிலையை இவ்வெண்ணத்துடனே ஈர்த்து இன்று ஆண்டவனாய்ச் செயல்படுகின்றனர்.
2.அவர்கள் மனித ஆத்மாவாய் நம்மைப் போன்ற நிலையில் வந்தவர்கள் தான்...!

எண்ணமுடன் தீய சக்தியை வளரவிட்டவர்களின் நிலை எல்லாம் எந்த நிலைக்குச் சென்றிட்டார்கள் என்று முன் பாட நிலையிலேயே உணர்த்தியுள்ளேன்.

நல்லுணர்வின் வழி வந்தவர்கள்...
1.தன் வாழ்க்கையில் நடந்திடும் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஜெயித்த நிலை கொண்டு வந்தவர்கள் தான்
2.இவ் உலகில் தோன்றிய மகான்கள் எல்லாரும்.

இதன் வழி வந்தவர்களின் உடல்களைத்தான் இவர்களின் நிலையைக் காட்டிலும் சக்தி கொண்ட ரிஷிகள் தன் உடலாக ஈர்த்துச் செயல்படுகின்றனர்.

ஆதிசங்கரர் போன்றோரும் மற்றும் அருணகிரிநாதர் முகமது நபி புத்தர் இயேசு பிரான் ஐயப்பர் கோலமாமகரிஷி இக்கலியில் வந்திட்ட இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகாநந்தரும் இன்னும் பல ரிஷிகளும் இவ்வழியில் வந்தவர்கள் தாம்...!

நம் போகரே பல உடல்களைத் தன்னுடலாகச் செயல் கொண்டு செயல்படுத்தி வந்தார். இவ்வுலகினிலே ஆறுமுகனாய் இவர்கள் புராணக் கதையில் சொல்லிய நிலையில்லாமல் ஆறு உடல்களைத் தனதாகச் செயல்படுத்தி வந்தார்.

1.பிறவி எடுத்துப் பிறந்து வளர்ந்து வழிபடுத்தவில்லை தன் சக்தி நிலையை நம் போகர்
2.பல ஆத்மாக்களை ரிஷியின் நிலைக்குச் சென்றிடும் பக்குவ நிலை ஏற்படுத்தித் தந்தார் நம் போகர்
3.இன்று அனைவருக்கும் முருகனாய் ஜோதி அருள் அளித்திட ஆண்டவனாய்ச் செயல் கொண்டுள்ளார்.

இவ்வெண்ண நிலையின் தொடர் நிலையை வைத்துத்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலையெல்லாம் செயல் கொண்டு நடக்கின்றது. போகரைப் போன்றே இந்நிலையில் பல சித்தர்கள் இவ்வுலகெங்கும் செயல் நிலைப்படுத்தி நல் உணர்வுகளை இன்றும் செயலாக்கி வருகின்றனர்.

ஆனால் இக்கலியில் பக்தி நிலையும் தன் உணர்வும் குறைந்ததினால் பல நிலைகள் செயல்படாமல் செயற்கைக்கே அடிமைப்பட்டுச் சென்று விட்டனர்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்...
1.நம் எண்ண சக்தியின் தொடர் நிலையை ஈர்த்து
2.நல்லுணர்வு கொண்ட எந்த ரிஷியின் சக்தியின் தொடரையும் நாம் ஈர்த்துச் செயல் கொண்டிட முடிந்திடும்
3.நாமும் அவர்களின் நிலையை அடைய முடியும் என்பதற்குத் தான்...!

October 22, 2023

சித்தனாக... மகரிஷியாக... ஆகும் செழுமை

பரிசுத்தம் தங்கும் மனம் என்பது எதுவப்பா…?

தங்கத்தைச் சுத்தம் செய்யும் ரசம் (திரவகம்) தங்கத்தின் செழுமையைக் காட்டும். “மகரிஷிகளின் அருள் சக்தி” பரிசுத்த மனதைத் தெளிவாக்கிடும் உண்மையின் நிலை ஆகும்.

1.“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதத்தைக் கூட்டி… உன்னுள் உன்னை நீ தெளிந்த விதம்
2.உலகத்தையே உன்னைப் பார்த்திடச் செய்துவிடும்.
3.யாம் சொன்ன தியான வழியைக் கடைப்பிடிக்கும் போது உன் உள்நிலை சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

அதை யாம் (ஈஸ்வரபட்டர்) அறிவோம்.

பாய்மரக்கப்பலில் “விரிக்கபட்ட பாய்”
1.காற்றின் வேகத்தால் கடலில் படகைச் செலுத்துவதோடு மட்டுமல்லாதபடி…
2.சில நேரத்தில் படகையே நிலைகுலையைச் செய்திடும் செயலும் உண்டு.

அது போல்
1.அறிவின் விவேகம் (ஆறாவது அறிவு) அலைக்கழித்திடாமல் சமன்படுத்திட பழியைக் காண்கின்றது
2.காண்பதோடு செயல்படுத்தும் காரியமும் ஆற்றுகின்றது.

அறிவின் பரிணாம வளர்ச்சி விஞ்ஞான அறிவினால் இயந்திர பாகங்கள் பொருத்தப்பட்டு கடலோடும் வழிவகுக்க அறிவின் நிலைக்களன் வித்தாகின்றது.

மகரிஷிகளின் அருள் பார்வை உன் மீது விழும் பொழுதே அது சத்திய சோதனையின் துவக்கம் என்று நீ எண்ணுவாய். அது சோதனை அல்லவப்பா...!

தாய் தன் குழந்தையைப் பரிந்து எடுக்கும் பாசத்தின் விளைவு… தவழ்ந்திடும் குழந்தை தானே நடந்திடும் செயலில் கொள்கின்ற அனுபவ நடைமுறை போல்…
1.மகரிஷிகளின் ஒளி சக்திகளை எந்தெந்த உயிராத்மாக்கள் தன் நிலையை உயர்த்துவதற்காக வேண்டி ஏக்கமாய் ஏங்குகின்றதோ
2.அந்த மகான்களின் எண்ணத்துடன் தானும் ஒன்றி…
3.அவர்களுடன் இணைந்து ஜெபித்திடும் செயலில் தியானிக்கின்றதோ…
4.அந்த நல்வழி நிச்சயம் அங்கே சிறக்கும்.

உலக வாழ்க்கை நடைமுறையிலும் “பொன் (தங்க) நகை படும் பாடு… உன் பாடு…!” என்ற சூட்சுமப் பொருளாக உணர்த்தி வந்ததனை…
1.உம்மைப் பக்குவப்படுத்திட முனைந்ததன் பொருளாக
2.நீ அறிய வேண்டியது முக்கியம்.

காப்பிய ரிஷி தசரதன் பெற்றுக் கொண்ட “புத்திர சோகம்” என்று சுட்டிக்காட்டப்பட்டதை…
1.உறவின் வழிமுறைக்குப் போதனைப்படுத்தியதாக உணர்ந்து
2.சிந்தனையில் அதை நீ சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மனதின் விசாலம் எது…? தயை என்ற சொல்…!

உலகளவிற்கு மனதிற்குள் இடர்கள் வந்தாலும்… அதுவும் ஒரு கடுகு அளவு தான். ஆனால் சித்தன் ஆகும் மனதின் விசாலம் எத்தனை பெரியது…? சிந்தனை செய்…!
1.முயற்சி வினையாக்கும்
2.விடாமுயற்சி திருவினைப் பயனாகும்.

ஆஞ்சநேயன் விஸ்வரூபம் காட்டினான்… ஆகாயத்தில் நீந்தினான்… அணுவளவாய் ஒரு மாறினான்… நெருப்பில் உலவினான்… நீரில் மிதந்தான்… உடலையே சிறகு போல் எளிதாக ஆக்கினான்… கணம் கொண்ட பக்குவ கதியாக்கினான்… பேரின்ப லயத்தை அனுபவித்தான்…! என்று காட்டுவதெல்லாம்
1.கூறிடும் பொருளின் அடிப்படை நிலைகளின்
2.தியானம்… தியானம்… தியானமே…!

கண்டவன் சக்தியை… மகரிஷிகளின் செயல்பாட்டை… “புறம் கூறி” செயலின் செயல்பாட்டை… அணை போட்டுத் தடுக்க முடியாது. ஆனால் மகரிஷிகள் “அறம் கூறினால்…” நிலைமை என்ன ஆகும்…? அவர்கள் அன்பு மகான்களப்பா.

நம் கைகளைக் கொண்டு சூரியனை மறைத்து விட முடியுமா…? முடியாது…! ஆனால் “நான் மறைத்துவிடுவேன்…” என்று அதைச் செயல்படுத்தித் தனக்குத் தானே மறைந்துக் கொண்டால் அது எண்ணத்தின் மாயை தான்.

ஒருமையைப் பலப்படுத்திடும் செழுமை… சித்தர்கள் மகரிஷிகளின் செயல். அதற்குள் ஐந்தும் அடங்குதல் என்பது விண் செல்ல வேண்டிய பாதையைக் காட்டும் தெய்வீக நிலை.

1.பூக்களின் மணத்தை நுகர்ந்திடும் மன நிலையே
2.யாம் சுட்டிக் காட்டும் இந்த எளிய தியானத்தில் உணர்ந்து கொள்ள வேண்டிய “ஆரம்ப அனுபவ நிலை…”

மகோன்னத நிலையே ஆத்ம சம்பூரணம்…!

அசுர உணர்வுகள் வந்தாலும்… அகஸ்தியனைப் போன்று அதை அடக்கக்கூடிய “ஜீரணிக்கும் வல்லமை” பெற வேண்டும்

அகஸ்தியன் காட்டிற்குள் செல்கின்றான்… அங்கே வாதாபி என்று அரக்க சகோதரர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தங்கள் ரூபத்தை மாற்றக் கூடியவர்கள். (இன்றும் இது போன்ற ரூபத்தை மாற்றக்கூடிய புலையர்கள் காட்டுக்குள் இருக்கின்றார்கள்). வாதாபி சகோதரர்கள் அகஸ்தியனை விருந்தாளியாக வரவேற்கின்றார்கள்.

விருந்தாளியாக வருபவர்களுக்கு மாமிச உணவு கொடுப்பது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கிறார்கள்.

நான் மாமிசம் சாப்பிடுவது இல்லையப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

இல்லைங்க… எங்கள் ஊருக்கு யார் வந்தாலும் நாங்கள் இதைக் கொடுக்கத் தான் செய்வோம்… அது தான் எங்களுடைய வழக்கம் என்று சொல்கின்றார்கள்.

நடைமுறையில் பார்த்தோம் என்றால் எங்கள் வீட்டுக்குச் சாமி நீங்கள் வந்திருக்கிறீர்கள் சிறிதளவு காபி சாப்பிடுங்கள் என்பார்கள். ஆனால் சர்க்கரைச் சத்தாக இருக்கும்.

எனக்கு எதிரியாகும்... வேண்டாம்…! என்று சொன்னாலும்… பாசத்தால் நான் சாப்பிட்டேன் என்றால் என்ன ஆகும்…? சர்க்கரைச் சத்து அதிகமாகும்.

அல்லது முதலில் சாப்பிட்டு வந்திருப்பேன்… இங்கே மீண்டும் குடிக்க வற்புறுத்தும் பொழுது சாப்பிட்டால் அஜீரணம் ஆகிறது அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்…? தள்ளாட்டமாகும்.

“வேண்டாம்…” என்று சொன்னாலும் கூடக் கொஞ்சமாவது அதைச் சாப்பிட வேண்டும் என்று அன்பால் கட்டளை இடுவார்கள். சாப்பிடவில்லை என்றால் மனவருத்தம் ஆகிறது.

“வருத்தப்படுகிறார்களே…” என்று எண்ணி நான் அதை உட்கொண்டால் என் உடல் தான் நலிவடைகின்றது.

அதே போல் கல்யாணத்திற்கு மற்ற விசேஷத்திற்கோ பத்திரிக்கை கொடுக்கப்படும் பொழுது என்ன நடக்கிறது…?

ஒரு முறை தான் வருகின்றீர்கள் நீங்கள் கண்டிப்பாகக் காபி சாப்பிட வேண்டும் அல்லது கொஞ்சம் பலகாரத்தையாவது சாப்பிடுங்கள் என்று சொல்கின்றார்களா இல்லையா…!

நாம் அதைப் பற்றி சிந்திக்கிறோமா என்றால் இல்லை. போற்றுவதற்கு அந்த நிலையைச் செய்கிறோம்.

அதே மாதிரித் தான் அக்காலத்தில் வாதாபி என்ற அரக்க சகோதரர்கள் அகஸ்தியனைக் கட்டாயப்படுத்தி “மாமிசம் சாப்பிட வேண்டும்” என்று சொல்கின்றார்கள்.

எங்கள் விருந்தாளிக்கு நாங்கள் செய்து தான் ஆவோம். நீங்கள் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார்கள்.

அகஸ்தியர் சரி என்று சொல்கிறார்… ஏனென்றால் அப்பொழுது அவர் புரிந்து கொள்கின்றார்.

வாதாபி ஆடாக மாறுகின்றான்… மற்றவன் அறுத்துச் சமைக்கின்றான் அகஸ்தியனுக்குக் கொடுக்கின்றான்.

சாப்பிட்டு முடிந்தபின் ஏ…வ்வ்வ்…! என்று அகஸ்தியன் ஏப்பம் விடுகின்றான்… ஏனென்றால் அவர் புரிந்து கொள்கின்றார் கணங்களுக்கு அதிபதியாகித் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் தான் அந்த அகஸ்தியன்.

அதனால் ஏ…வ்… என்று ஏப்பமிட்டபின் “வாடா வாதாபி…!” என்று தன் சகோதரனை அழைக்கின்றான்.

அவன் அப்பொழுதே ஜீரணம் ஆகிவிட்டானப்பா…! என்று அகஸ்தியர் சொல்கின்றார்.

ஆஹா அப்படியா…! உன்னை நான் இப்போது கொன்று சாப்பிடப் போகின்றேன் பார்… என்று அடுத்தவன் சொல்கின்றான். அகஸ்தியன் தன் பார்வையிலேயே அவனைச் சுட்டு பொசுக்கி விடுகின்றான்.

இராமாயணத்தில் படித்துப் பாருங்கள்… இதை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் புராணங்களில் இதை எப்படி மாற்றுகின்றார்கள் என்றால் “அகஸ்தியன் கணபதியை வணங்கிச் சென்றதால்தான்…” அரக்கனைக் கொன்றான். ஆகையினால் அந்தக் கணபதியை “வாதாபி கணபதி” என்று சொல்கின்றனர்.

அரக்க உணர்வு கொண்டு மற்றவர்களை வேதனைப்படுத்திய அந்த அரக்கனைக் கொன்றவன் அவன்…! ஆகையினால் “அந்தக் கணபதிக்கு” நீங்கள் அபிஷேகம் அர்ச்சனை செய்தால் உங்கள் பாவம் தோஷம் எல்லாம் போகும் என்று காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் நிலைதான்.

யாரும் தப்பாக நினைக்காதீர்கள்…!

அகஸ்தியன் தீமைகளை வெல்லும் வலிமை பெற்றான்… அரக்க உணர்வுகளை அடக்கினான். திருமணமான பின்… தான் கண்ட ஆகண்ட அண்ட்த்தின் உண்மைகளை எல்லாம் மனைவிக்குப் பாய்ச்சினான் அகஸ்தியன்.

இருவருமே ஒருவரை ஒருவர் உயர்த்திடும் நிலையாக… மனைவி உயர வேண்டும் என்று கனவனும் கணவன் உயர வேண்டும் என்று மனைவியும் அருள் உணர்வென்ற கருவை உருவாக்கச் செய்தனர்.

வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து இரு மனமும் ஒன்றாகி… இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றிப் பேரருள் உணர்வை உருவாக்கி… உயிரைப் போன்றே உணர்வுகளை எல்லாம் ஒளியாக்கும் தனமை பெற்றனர்.

அவருடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்தில் இருந்து வந்து கொண்டேயிருக்கின்றது.

அந்த உணர்வை வலுவாக்கிக் கொண்டால் நம்மை அறியாமல் வரும் தீமைகளைச் சுட்டு பொசுக்குமா இல்லையா… இந்த வழியை யாரும் காட்டவே இல்லையே…!

ஆனால் இப்பொழுது நான் (ஞானகுரு) இந்த விளக்கத்தைச் சொன்னால் “சாமி ஏதோ புதிதாகச் சொல்கின்றார்… கதை விடுகிறார்…” என்று தான் நினைக்கின்றார்கள்.

இயற்கையின் உண்மை நிலைகளை குரு எனக்குக் காட்டினார் அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடிகிறது.

October 21, 2023

“சூட்சம உலகிற்கு எல்லோரையும் ஞானியாக அழைத்துச் செல்லவே” ரிஷிகள் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்

இன்றும் இக்கலியில் ஆத்மீக நெறியும் நல்லொழுக்கம் அன்பு பாசம் பக்தி தர்மம் நியாயம் சமத்துவம் இப்படிப்பட்ட நல்லுணர்வுகளும் சத்தியத்துடன் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.
1.இந்த நிலையில் வாழும் ஆத்மாக்களின் நல்லுணர்விற்காகவே
2.இப்பூமியின் நிலை இன்றளவும் நிலைத்துச் செயல்படுகிறது.

எண்ணத்தில் நல் சக்தியும் தீய சக்தியும் உள்ள நிலையில்... நல்லுணர்வைக் காட்டிலும் தீய உணர்வின் வழி நிலைதான் பெருகும் நிலையில் உள்ளது.

இன்று வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் மட்டுமல்ல தீய உணர்வுடன் வாழ்வது. இவ்வுடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்களிலும் தீய சக்தி நிறைந்த எண்ண நிலைகள்தான் நல்லுணர்வைக் காட்டிலும் பெருகிய நிலையில் உள்ளன.

ஆவி உலகிலும் நல்லுணர்வு கொண்ட ஆத்மாக்களின் நிலையுண்டு. வாழும் மனித ஆத்மாக்களிலும் இந்நல்லுணர்வின் நிலை உள்ளதினால்தான் நம் ரிஷிகளின் சக்தி நிலை இன்றளவும் இப்பூமியின் நிலையைக் காத்தருளும் நிலையில் செயல் கொண்டு நடக்கின்றது.

இன்றைய விஞ்ஞானத்தினால் செய்து வைத்துள்ள அணு குண்டுகளும் விஷ மருந்துகளும் நிறைந்துள்ள இந்த நிலையிலும்
1.ஒரு நொடியில் அனைத்துமே மாற்றம் கொள்ளும் விஷ சக்தியின் தாக்குதலிலிருந்து
2.நல்லுணர்வு உடையோர் வாழ்வதினால்... இவ்வுலக நிலையே நம் ரிஷிகளினால் காக்கப் பெற்று வருகிறது.

நல்லுணர்வையே உலகெங்கும் பரப்பிடும் நிலைக்காக பக்தி நிலையை வளரவிட்டதின் நிலையே... இன்று பக்தியையே தன் பேராசைக்கு உகந்த சக்தியாக நாடும் நிலையாக இன்றைய எண்ண நிலை உள்ளது.

பூமிக்காகவும் இப்பூமியில் வாழ்ந்திடும் உயிராத்மாக்களுக்காகவும் தன் சக்தி நிலையைச் செயல்படுத்திய நம் ரிஷிகளின் சக்தி நிலை செயல்படாமல்... மீட்டுச் செல்லும் நிலைக்கு இன்று வந்துள்ளது.

“மீட்டுச் செல்லும் நிலை...” என்பது...
1.இம் மாறப்போகும் கலியில் வாழ்ந்திடும் மனித ஆத்மாக்கள் இக்கலியுடனே ஈன நிலை பெற்று...
2.கல்கியின் ஆரம்ப நிலை உயிரினமாகிப் பல நிலைகளை எய்தி...
3.பல கோடி ஆண்டுகள் இவ்வெண்ண சக்தியுடனே அல்லல் கொண்டிடாமல் தடுக்கும் நிலை தான்.

இக்கலியிலேயே மனித ஆத்மாவை மனிதனாய் ஞானியாய் சித்த அருள் பெற்று சூட்சும நிலைக்குச் சென்றிடச் செயல் கொண்டிடும் நிலைதான் இன்றுள்ள நம் ரிஷிகளின் செயல் நிலை.

இந்நிலையை ஒவ்வொருவரும் உணர்ந்து மாறப்போகும் இக்கலியின் நிலையை எண்ணத்தில் கொண்டு இவ்வெண்ண சக்தியினால் செயல் கொண்டே வாழ்ந்திடுங்கள்.

October 19, 2023

இருளைப் போக்கும் அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது”

ஒரு நோயாளியையோ ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்தாலோ உங்களால் தாங்க முடியவில்லை. நான் (ஞானகுரு) அத்தனை பேர் கஷ்டத்தையும் கேட்க வேண்டி இருக்கின்றது… எல்லாவற்றையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கின்றது.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

காட்டிற்குச் சென்று தவமிருந்தோ… அல்லது மந்திரங்களைச் சொல்லிச் சொல்லி ஜெபித்தோ ஆண்டவனை நான் அடையப் போகின்றேன் என்று செய்வார்கள்.
மந்திரங்களை ஜெபிக்கலாம்… அந்த உணர்வுகள் உடலில் பெருகும்… உடலை விட்டு ஆன்மா போகும். எங்கே…?
1.இதே மந்திரத்தை மீண்டும் எவன் ஜெபிக்கின்றானோ அங்கே அந்த உடலுக்குள் தான் செல்லும்.
2.சாகாக்கலையாக அந்த உடலில் விளையும். விளைந்த பின் அவன் பெரிய மேதை ஆகி விடுவான் ரிஷியாகக் கூட ஆகிவிடுவார்
3.எல்லாம் தெரிந்தவராகின்றார்… அவர் பிழைப்புக்குப் போக ஆரம்பிப்பார்.

என்னிடம் வந்து கஷ்டங்களை நீங்கள் சொல்கின்ற மாதிரி அய்யா… சாமி… கஷ்டமாக இருக்கின்றது என்று எல்லோரும் அவரிடம் சொல்வார்கள். அவர் அதற்குப் பக்குவம் சொல்லி… பதிலுக்கு “நான் செய்தேன்…!” என்ற புகழுக்கு ஏங்குவார்.

விஷத்தைத் தான் சேர்ப்பார்… விஷத்தின் சேமிப்புகள் அதிகமாகும் அவர் ஆசை அந்த உடலில் பெருகும்… கடைசியில் அதனால் அவர் மடிவார்.

ஆன்மா வெளி வரும். வந்த பின் சாகாக்கலையாக மீண்டும் எந்த விஷத்தின் அளவுகோல் அந்த உடலில் அதிகமானதோ அதற்குத் தக்க உயிரினங்களாகத்தான் உயிர் பிறக்கச் செய்யும் உயிர்.

இதைத் தான் குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

இப்படி
1.அடுத்தவருக்கு நல்லது செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு உடலுக்குப் புகழ் தேடி வாழ்கிறோம் என்றால்
2.மனிதனுடைய ஈர்ப்புக்குள் தான் மீண்டும் வர முடியும்.

ஏன்…?

புகழுக்காக ஏங்கி அதனால் பிறர் போற்றும் நிலை வரும் போது அடுத்தவர்கள் துயரங்களை எல்லாம் கேட்டால் என்ன ஆகும்…?

வீட்டிலே பெண்கள் பிள்ளைகளை எல்லாம் விட்டு விட்டுச் “சாமியாராக” வெளியே வந்து விடுவார்கள். வெளியில் மற்ற இடத்திலே நல்ல வரவேற்புகள் இருக்கும்.

ஆனால் அந்தக் குடும்பத்தில் இருக்கக்கூடிய சகல கஷ்டங்களையும் இவரிடம் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

1.நுகர்ந்த உணர்வுகள் இவர் உயிரிலே படும்.. பட்டதும் அந்த உணர்ச்சிகள் வருகின்றது
2.வேண்டாம் என்று தடுத்தால் அங்கே கோபம் வரும்.

ஏனென்றால் “சும்மா தொல்லை கொடுக்கின்றார்கள்…!” என்று அதைக் கேட்டவுடனே “சொல்ல வேண்டாம்…” என்று இவர் சொல்வார்… மனதிற்குள் இங்கே போர் ஆகி இவருக்குக் கோபம் வரும்.

ஆனாலும் இவர் இல்லை என்று சொன்னால் மற்றவர்கள் விடுவார்களா என்றால் விடமாட்டார்கள்.

இங்கே எத்தனை பேர் என்னிடம் (ஞானகுரு) வந்து கஷ்டம்… கஷ்டம்… நஷ்டம்… என்னால் முடியவில்லை…! என்று அதைத்தான் சொல்கின்றார்கள்
1.எனக்கு அந்த அருள் பெற வேண்டும்
2.இருளைப் போக்கும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று யாராவது கேட்கின்றார்களா என்றால் “சுத்தமாகக் கிடையாது…”

நானும் பலமுறை சொல்லிப் பார்த்தாகிவிட்டது…!

அவர்கள் படும் கஷ்டத்தை எல்லாம் நான் என் செவிகளில் கேட்டு அந்த உணர்வினை நான் நுகர வேண்டும்… அவர்கள் கஷ்டத்தை என் உடலில் நான் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மிகப் பெரிய சக்தியை குருநாதர் வழியில் பெற்றிருந்தாலும் கூட
1.கஷ்டத்தைச் சொல்பவர் நிலைக்குத் தான் நான் செல்ல வேண்டி இருக்கின்றது
2.நான் சொல்வதை அவர்கள் பின்பற்றும் நிலை இல்லை என் பையன் உயர்ந்த ஞானம் பெற வேண்டும்.

என் பையன் ஞானியாக வேண்டும்; சிந்தித்துச் செயல்படும் திறன் பெற வேண்டும்; எங்கள் குடும்பத்தில் ஒற்றுமை வளர வேண்டும் அந்த அருள் சக்தி எங்களுக்கு வேண்டும்… என்னுடைய நிலத்தில் விவசாயம் நன்றாக நடக்க வேண்டும் நான் தொழில் செய்யும் இடங்களிலே என்னுடைய வாடிக்கையாளர் அனைவரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும்… என்னிடம் வாங்கிச் சென்ற பணத்தை அவர்கள் திரும்பக் கொடுக்கும் சக்தி வர வேண்டும் என்று எண்ணி கேட்கின்றோமா…!
1.யாராவது ஒருவர் சொல்லுங்கள் பார்க்கலாம்
2.யாரும் நினைப்பதில்லை…!

சோகமா…! அல்லது அது தான் சுகமா…?

இமைகளின் துரித கதி இயக்கத்தின் ஊடே (தூசி) உள் நுழையும் செயலே சந்தர்ப்பவசம்.

ஞானத்தின் பாங்கு செயல்பட விழிப்பு கொள்ளும் மனம்… வாழ்க்கையின் நடைமுறை அனுபவ சந்தர்ப்பங்கள்… படர்தல் எனும் எண்ணத்தின் குணம் நம்முள் இயங்கி அனுபவ நிகழ்வுகளை உணர்த்துகின்றன.

1.இமை காத்திடும் செயலின் கவனம்
2.அந்த இயற்கை உணர்வின் உந்துதல்… நொடிக்கும் குறைவான காலமே.

கண்ணில் படிந்த தூசியின் உறுத்துதல் “உடனடியாக உணர்த்துவதைப் போன்று…”
1.மெய் ஞானத்தின் ஆன்ம வலு காட்டிடும் செயலில் நாம் ஊட்டிக் கொள்ளும் குணங்களின் செயலில்
2.அக்குணங்களின் வலுவைக் கூட்டும் ஈர்ப்பின் சந்தர்ப்பவசங்கள்…
3.வாழ்வின் நடைமுறை அனுபவ நிகழ்வுகள் காட்டுவதை மனிதர்கள் உணர்வதில்லை.

நடைமுறை அனுபவங்களில் நாம் சந்திக்கும் துக்கமோ அல்லது மகிழ்ச்சியோ அதை அனுபவித்திடும் செயலாக அதே உணர்வுகளின் வலுவைக் கூட்டிக் கொள்வதினால் மாமகரிஷிகள் சுட்டிக்காட்டிய “சோ..க…ம்” கிடைக்குமா…?

ஆத்ம சக்தி எனும் அருமருந்தைக் கைகொள்ளும் நமக்கு… எண்ணியதை எண்ணியபடி பெற்றுவிடும் நற்பயனாய்… ஈர்ப்பின் செயல் அச்செயலுக்குள் சமைப்பு…
1.“சமைப்பின் பலன்…” என்றே கொள்ளும் குணங்களின் வலுவை வலுவாக்கிடும் செயலில்
2.சோகம் என்ற நாதம் இன்று மனிதனின் எண்ணத்தில் அது வெறும் துக்கமாகத் தான் காட்டப்படுகின்றது.

கலங்குகின்ற நெஞ்சம் சரீரம் கொண்டு அனுபவித்திடும் துக்கமாகப் பெருக்கிக் கொண்டு இடர்படும் நிலைகள் இராமன் பெற்ற அனுபவங்களாக அதனுள் மூழ்கி… கொண்ட குணங்களை வலுவாக்கிடும் செயலின் துரிதம் போல… நற்குணங்களின் செயல்பாட்டில் உயர்வைக் கூட்டிக் கொள்ள செயல்படும் குணங்களின் தன்மைகளில் “துரிதமும்… செயல்பாடும்… ஒன்றே…!

வானைச் சுட்டிக்காட்டி செயல்பாட்டின் பேதங்களைப் பகுத்தறியும் பண்பாக “சோ…” என்ற ஒலி ஈர்ப்பில் “க…” எனச் சமைத்து “ம்…” எனும் முழுமையாக நம்மால் நற்குண நற்சுவாசமாக எடுத்து… மாறு கொண்ட குணங்கள் நமக்குள் வந்து ஊறு விளைவிக்கும் செயலை மாற்றி… விரிவு கொண்டிடும் நல் ஒளி அணுக்களின் செயல் உறுதியாக்குவதே “சோ…க…ம்…”
(குறிப்பு:- சோகம்… சோகம்… சோகம்… என்று ஒரு பத்து இருபது முறை வேகமாகச் சொல்லிப் பாருங்கள்…)

சூரியன் சுழலும் பொழுது ஒலி வருகின்றது “சோ……கம்”.
1.அதாவது தன் நிலைகளில் மற்றதை விரிவடையச் செய்து
2.தனக்குள் இழுத்து “கம்…” – “சோ……கம்”.
3.விஷத்தை வெப்பத்தால் நீக்கி விட்டுத் தனக்குகந்ததாக எடுத்துக் கொள்கின்றது என்று
4.அந்த நாத சுருதியின் தன்மையை அன்று வியாசகர் தெளிவாகக் காட்டினார்.

போகரின் சக்தி

மாறப் போகும் இஜ் ஜீவ உடலையோ மாற்றம் கொண்டு சுழலப் போகும் இப்பூமியின் நிலையையோ சலிப்பு நிலைப்படுத்தி எண்ணத்தை வளரவிடாமல் நம் ஆத்மாவின் உயர்ந்த நிலையை உயர்த்திடும் எண்ணத்தில் செயல் கொண்டு நடந்திடல் வேண்டும்.

1.பூமி ஆரம்ப நாள் தொட்டு வந்திட்ட உயிரணுவாய் உயிராத்மாவாய்... வளர்ந்த நற்ஜோதியின் நல்தெய்வங்களெல்லாம்...
2.இப்பூமியில் ஒவ்வொரு பிரளயத்திலும் பல நிலையிலும் வாழ்ந்து அந்நிலையின் தொடரினால்...
3.இன்றளவுமுள்ள நல் நிலையில் வந்திட்ட நல் ஆத்மாக்களின் சக்தி நிலையின் தொடராக...
4.சூட்சும உலகத்தில் இருந்து கொண்டே இன்று பல நிலைகளுக்கு...
5.நல் ஆத்மாக்களாகப் பலரை ஈர்க்கும் நிலைகொண்டு செயல்படுகின்றன.

இவ்வுலகில் இந்தியாவில்தான் ஞானிகளும் சித்தர்களும் வழி வந்ததின் நிலை அதிகம். இவ்வுலகனத்துமே இவ் இந்தியாவில் இருந்துதான் பல சித்தர்கள் சென்று ஆத்மீக வழியை வழி நடத்தினார்கள்.

இயேசு கிருஸ்து இந்தியாவில் சில இடங்களில் வந்து வாழ்ந்து சென்றார். முகமது நபியும் இவ்விந்தியாவில் வந்து வாழ்ந்தவர்தான். புத்தரின் நிலையும் அதுவே...!

“இந்தியாவை உயர்ந்த எண்ணத்தில் காட்டல் வேண்டும்...” என்ற நிலையில் விளக்கவில்லை. இப்பூமியில் உள்ள அனைத்து நிலைகளும் பொதுவானவையே...!
1.ஆத்மீக நெறியில் தொடர் நிலை வழி வந்த முதல் நிலை இங்குதான்.
2.ஆனால் இன்று நாம் எல்லாரும் முருகராய் வழிபடும் அப்போகரின் ஆரம்ப ஞான சித்து நிலை பெற்ற இடம் சீனாவில்தான்.

இன்று... இன்றைய மக்களினால் பிரித்த நிலைதான் சீனா... இந்தியா என்ற நிலையும்...! அந்நிலையில் வழிவந்தவர்தான் நம் போகர்.

போகர் சித்து நிலையின் தொடர் நிலையில் சூட்சுமத்தில் செயல் கொண்டிடும் சக்தி பெற்ற பிறகு இன்று மெக்கா மதீனா என்று புண்ணிய யாத்திரை ஸ்தலமாகச் சென்றிடும் இடத்தில் இதே நம் போகர்தான் முகமது நபியின் நாமத்தில் செயல் கொண்டு அந்நாட்டில் இப்பக்தி நிலையை அல்லா என்னும் நாமத்தில் வளர விட்டார்.

இன்றைய புண்ணிய ஸ்தலமாய் செயல் கொண்டு துதித்திடும் அம் மெக்கா மதீனாவின் திரைகளுக்குள் பூஜிக்கும் சக்தி நிலை என்ன..?

காட்சி - யானைச் சிலையின் மேல் லிங்க ஜோதியின் காட்சி...!

பல கோடி மக்கள் தரிசிக்கச் சென்றிடும் அந்நிலையிலுள்ள திரையின் மர்ம நிலையென்ன...?

1.ஆண்டவனின் சக்தி நிலை ஒன்றே
2.இஜ் ஜாதி இனம் போர்வையில் வழி வந்ததின் நிலைதான் இன்றுள்ள நிலை.
3.அங்குள்ளவர்கள் சிலருக்கு மட்டும் உண்மையின் நிலை புரியும்.

அல்லாவாய் அங்கு செயல்படுத்துபவர் யார்...?

காட்சி: மேடையில் ஜிப்பா அணிந்து தலையில் துணியுடன் ஒரு பெரியவர் காட்சியளிக்கின்றார்... புன்னகைத்தே தலையை மட்டும் அசைக்கின்றார்...! அடுத்து பெரிய வேல் எதிரில் நிற்கிறது...!

யாரென்று எண்ணுகின்றீர்...?

அல்லாவாய் செயல் கொண்டவரும்... முருகனாய் வழி வந்தவரும்... இலங்கையில் கதிர்காமத்தில் சில நிலைகளைச் செய்தவரும்... “அனைவருமே ஒரே சக்தி நிலை கொண்ட போகரின் நிலைதான்...”

சூட்சும நிலையில் எவ்வுடலையும் தனதாக ஏற்கும் சக்தி பெற்ற போகரினால் பல நாடுகளில் அவரது எண்ணத்தின் செயல் ஜோதி சக்தி “இன்றும்...” செயல் கொண்டு வருகின்றது.

அவர் வாழ்ந்த ஒவ்வொரு சூட்சும நிலையிலும் பல போதனை சக்திகளை வளரவிட்டுச் சக்தியளித்துச் செயலாக்கியுள்ளார். ஜாதகம் நாடி மருத்தவம் இப்படிப் பல நிலைகளைச் சித்து நிலை கொண்ட நாளிலேயே படரவிட்டுள்ளார்.

இன்று இவ்வுலகெங்கும் வெடி நிலையை ஆரம்பித்தவரே நம் போகர்தான். ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு வெடி நிலையினால் பல நிலைகளை ஆரம்ப நாளில் செயலாக்கிக் காட்டியவர் நம் போகர்தான்.

சித்து நிலையில் அவர் அறிந்த நிலைதான் இன்று இவ்வுலகம் முழுவதும் பரவியுள்ள மருத்துவ நிலையும். அந்நிலையின் தொடரை வைத்துத்தான் இன்றைய வளர்ச்சி நிலையெல்லாம்.

அவர் சீனாவில் வாழ்ந்த நாளில்தான் சூட்சுமத்தின் ஆரம்ப நிலையில் பல நிலைகளை முதன் முதலில் செயலாக்கி வெளிப்படுத்தினார். அன்றே பல சக்தி நிலையை சித்து நிலையினால் சூட்சும நிலை பெறும் நிலையெல்லாம் அறிந்து செயலாக்கினார்.

இவரின் நிலை போன்றே...
1.இவ்வுலகம் தோன்றிய நாள் தொட்டு தன் சக்தியைச் செயல் கொண்டு வந்திடும் நல் ஆத்மாக்களெல்லாம்
2.இக்கலியில் வாழ்ந்திடும் பிம்ப நிலை கொண்ட ஆத்மாக்களை
3.நல்லுணர்வு கொண்டு வந்திடும் சக்தி நிலைக்கு அழைத்துச் சென்றே
4.இம் மாறப்போகும் கலியின் பிடியிலிருந்து மீட்டே...
5.கல்கியில் நல் ஆத்மாக்களாய் செயலாக்கிட அழைத்துச் செல்கின்றனர்...!

October 18, 2023

கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!

வாழ்க்கையில் கடுமையான தீமைகள் வந்தால் அவைகளை எப்படி வெல்வது..? என்பதைக் காட்டுவதற்காக… குருநாதர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

“மின்னலைப் பாருடா…!” என்றார். அதனால் அப்போது எனக்கும் அவருக்கும் சண்டை கூட வந்தது.

மின்னலைப் பார்த்து என் கண்கள் பறிபோய்விட்டால் என்ன செய்வது… நான் பிள்ளை குட்டிக்காரன்… எங்கே செல்வது…? என்று மின்னலைப் பார்க்க மறுத்தேன்.

நான் சொன்னதைச் செய்கிறேன் என்று சொன்னாய் அல்லவா… மின்னலைப் பார்…! என்று கட்டாயப்படுத்தி என்னை நிர்பந்தப்படுத்துகின்றார்.

27 நட்சத்திரங்களின் உணர்வுகள் மின்னல்களாக வந்தாலும்
1.அதை அடக்க வல்லமை பெற்ற தாவர இனங்கள் உண்டு…
2.ஆனால் அந்தத் தாவர இனங்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்…?
3.அவர் கையிலே அதை வைத்திருக்கின்றார்… மின்னலைப் பாருடா…! என்று சொல்கின்றார்…
4.நான் பார்க்க மாட்டேன் என்று சொல்கின்றேன்… இரண்டு பேருக்கும் தர்க்கம் வருகிறது

நான் பார்க்கின்றேன் அல்லவா… நீ(யும்) பாருடா…! என்று மீண்டும் சொல்கின்றார். பின் நான் பார்க்கும் பொழுது கண்களை அது ஒன்றும் செய்யவில்லை குளு…குளு… என்று இருந்தது எரிச்சலோ இருளடையச் செய்யும் நிலையோ… எதுவும் இல்லை.

அந்த ஒளிக்கற்றைகள் என் உடலுக்குள் செல்கின்றது…!

அவர் கையில் வைத்திருந்த பச்சிலையைத் தான் பார்க்க முடிந்தது… மீண்டும் நான் மின்னலைப் பார்த்து எடுக்க வேண்டும் என்றால் அது மீண்டும் வேண்டும் அல்லவா…!

அப்போது தான் குருநாதர்
1.இந்த உணர்வை உனக்குள் பதிவு செய்கின்றேன்… நான் பதிவு செய்ததை மட்டும் எடு…
2.பச்சிலையைத் தேட வேண்டும் என்று நீ அதற்குச் சென்று விடாதே…! என்று சொல்கின்றார்.

ஏனென்றால் அப்படிச் சென்றால் உடலுக்குப் பிழைப்புக்குத் தேட ஆரம்பித்து விடுவாய். ஆகவே
1.நான் சொன்ன பதிவை உணர்வாக நினைவாக எடுத்து வளர்த்து அதை அருள் ஒளியாகப் பெருக்கி
2.மற்றவர்களுக்கு இருளைப் போக்கும் உபாயத்தைக் காட்டு…! என்று சொல்கிறார்

அகஸ்தியன் எத்தனையோ கோடி மின்னல்களை அவன் நுகர்ந்தவன்... தனக்குள் பேராற்றல்களைப் பெற்றவன்.

எப்படி…?

வியாழன் கோள் தன்னுடைய உபகோள்களை வைத்து 27 நட்சத்திரங்களுடைய சக்தியைக் கவர்ந்து ஒன்றாக்கி… உணர்வின் தன்மை தனக்குள் மற்றதுடன் இணைத்து “ஒளியாகும் தன்மையாக அது எப்படிப் பெறுகின்றதோ…” அதைப் போன்ற ஆற்றலை அகஸ்தியன் பெறுகின்றான்

இந்த உணர்வுகளை எல்லாம் அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் பொழுதே பெறப்பட்டு… பல தாவர இனங்களின் சக்திகளை மணத்தால் நுகர்ந்து விஷத்தை ஒடுக்கும் தன்மையாகப் பெறுகின்றான்.
1.ஒளியின் மின் கதிர்களைத் தனக்குள் தாங்கும் சக்தியும்
2.மின் கதிர்கள் செல்லும் இடங்களை அறிந்துணரும் சக்தியும் பெறுகின்றான்.

இன்று எப்படி…
1.எலெக்ட்ரானிக் என்று நுண்ணிய அலைகள் கொண்டு ஆணையிட்டு இயந்திரங்களைத் தன்னிச்சையாக இயக்குகின்றார்களோ
2.செல்ஃபோன் கம்ப்யூட்டர் இவைகள் எல்லாம் வெகு தூரத்தில் இருக்கும் அலை வரிசைகளைக் கவர்ந்து இயங்குவது போன்று
3.அகண்ட நிலைகள் வருவதை எல்லாம் கவரக்கூடிய திறன் அகஸ்தியனுக்கு வருகின்றது
4.மின் கதிர்கள் எங்கெல்லாம் செல்கின்றதோ… எதை எதை நுகர்கின்றதோ
5.அந்த உணர்வின் அதிர்வுகளை எல்லாம் அகஸ்தியன் காண்கின்றான்.

அகஸ்தியன் பெற்றதையெல்லாம் “நீ உனக்குள் எப்படி உருவாக்கிக் கொள்ள முடியும்…” என்ற நிலையை உணர்த்தி அதை எனக்குள் வித்தாகப் பதிவு செய்தார் குருநாதர்.

உங்களுக்குள்ளும் அதை இப்போது வித்தாகப் பதிவு செய்கின்றேன் அந்த உண்மை நிலைகளை நீங்களும் பெற முடியும்.

இதை எல்லாம் எதற்காகப் பதிவாக்குகிறேன்…? இந்த உடலுக்குப் பின் என்ன வேண்டும்…? என்பதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குத் தான்.… அது உங்கள் அபிப்ராயம் தான்…!

குருநாதர் அனைத்தையும் எனக்குக் காட்டினார். டிவி அலைகளும் மற்ற கம்ப்யூட்டர் உணர்வலைகளும் என்னவெல்லாம் செய்யும்…? (மேலே முதலில் சொன்னபடி) என்று காட்டினார்.

டி.வி. பெட்டியில் எந்த ஸ்டேசனைத் திருப்பி வைக்கின்றோமோ வீட்டில் இருந்த இடத்திலிருந்து படத்தைக் காண முடிகின்றது இன்ன இடத்தில் இருந்து வருகின்றது என்று தெரிந்து… அதைத் திருப்பி வைத்தால் உடனே அதை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது… “எங்கிருந்தாலும் அதைக் காண முடிகின்றது…”

அதே போன்று தான்
1.நீங்கள் எங்கே… எந்த இடத்தில் இருந்தாலும்… அந்த இருந்த இடத்திலிருந்து
2.அகண்ட அண்டத்திற்கும் எண்ணத்தைப் பரப்பிய உணர்வின் ஒளிக் கற்றைகளை
3.குருநாதர் காட்டிய வழியில் உங்களுக்குள் நான் பாய்ச்சுவதை நீங்கள் எண்ணி அதை எடுக்க முடியும்.

நம்பிக்கை இருந்தால் நிச்சயம் எடுக்கலாம்…!

ஆனால் நம்மால் முடியுமா…? குருநாதர் சக்தி கொடுத்தார்… சாமி எல்லாவற்றையும் பார்த்தார்… நான் எப்படிப் பார்ப்பது…! என்று எண்ணத்திற்கு நீங்கள் செல்லக்கூடாது.

குருநாதர் பைத்தியக்காரராகத் தான் தெரிந்தார்… அகண்ட அண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் சொன்னார். நான் அதைப் பதிவு செய்தேன்… பார்த்தேன்… அறிந்தேன்...!

அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்…! ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து… ஈசன் வீற்றிருக்கும் ஆலயத்தைச் சுத்தம் செய்… நீ அந்தச் சேவையைச் செய் என்றார் குருநாதர்.

அதைத்தான் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறேன். ஆனால்
1.நான் சேவை செய்ய வரும் பொழுது நீங்கள் கதவை இறுக்கி மூடிக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.
2.நீங்கள் கதவை (மனக் கதவு) மூடி கொள்கின்றீர்கள்.. நான் என்ன செய்வது…!

சற்று சிந்தித்துப் பாருங்கள்.

எவ்வெண்ணமும் முன் தொடரில்லாமல் வருவதில்லை…!

தெய்வ நிலை கொண்ட ரிஷிகளின் சக்தியினால் இப்பூமியில் இன்று வாழ்ந்திடும் மனித இன வர்க்கத்தின் தொடர் நிலையே அடுத்து மாறப்போகும் கல்கியில் வந்திடும் உயிரினங்களின் சக்தி இன்று வாழ்ந்திடும் எண்ண நிலை கொண்ட ஆத்மாக்களின் சக்தியைக் காட்டிலும் வளர்ச்சியுற்ற நிலை வரப்போகின்றது.

இப்பூமி தோன்றிய நாள் தொட்டு இம் மனித ஆத்மாக்களாய் வளர்ச்சி கொண்டு வாழ்ந்திட்ட நிலைகள் மாறி மாறிப் பல தடவை (மூன்று) ஏற்பட்டுள்ளன.

இப்பூமியில் ஆரம்பத்தில்…
1.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் இயற்கையின் தாவர வர்க்கத்திலிருந்து மாறு கொண்ட உயிரினங்கள் வளர்ச்சி பெற்றன
2.பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் மனித உடல் கொண்ட ஆத்ம நிலையும் வந்தது.

அந்நிலையின் வளர்ச்சி கொண்டு இப்பூமியின் பிரளய நிலை மாறி மற்ற நிலை வந்த பொழுதும் ஆரம்ப நாளில் இப்பூமியில் தோன்றிய உயிரணுக்களின் நிலைக்கும் இரண்டாவது மாற்றம் கொண்டு வளர்ந்திட்ட உயிரணுக்களின் நிலைக்கும் மாறு கொண்ட நிலை வந்தது.

அந்நிலையின் தொடர்ச்சியில் பல கோடி ஆண்டுகள் இப்பூமியின் தொடர்ச்சி நிலை இருந்தது. ஒவ்வொரு மாற்றம் கொண்ட நிலையிலும்
1.இப்பூமியின் நிலையும்… உயிரினங்களின் நிலையும்
2.இப்பூமியில் வளர்ந்த தாதுப் பொருட்களின் நிலையும் மாறி மாறித்தான் வந்து கொண்டுள்ளன.

இன்று நம் பூமியில் பல நிலைகொண்ட உலோகங்கள் சில சில இடங்களில் வளர்ந்து வருகின்றன. ஆனால் உலோக சக்தியிலேயே உருளுகின்ற மண்டலங்கள் சில உள்ளன.

மற்ற அமில நிலைகளை ஈர்க்காமல் ஒரு நிலை கொண்ட ஒரே அமில சக்தியின் சக்தியை மட்டும் ஈர்த்து வளருகின்ற சிறிய மண்டலங்கள் சில உள்ளன.

நட்சத்திர மண்டலமாக உருளுபவை நிலையெல்லாம் இந்நிலையில் தான் பெரும்பாலும் உள்ளன. மாற்றம் கொண்ட மண்டலமும் உண்டு.

நம் பூமியில் மாறி மாறி வந்திடும் இப் பிரளய நிலையில் உயிரினங்களும் மாற்றம் கொண்டே சுற்றி வருகின்றன என்று சொன்னேன். உயிரினங்கள் சுவாசித்து வெளிப்படுத்தும் நிலைக்கொப்பத் தான் அவற்றின் சக்தி நிலையுள்ளது.

ஆனால் பூமி ஒவ்வொரு தடவையும் மாற்றம் கொண்டு சுழலும் நிலையில்
1.பூமியின் சுவாச நிலையும் மாற்றம் கொண்ட நிலையின் தொடரினால்
2.அந்நிலையிலிருந்து வளர்ச்சியுறும் இன வர்க்கங்கள் அதற்குகந்த நிலையில்தான் வளர்கின்றன.

ஆரம்ப நாளில் உலகம் தோன்றிய நிலையிலிருந்து பல பிரளய நிலை ஏற்பட்டு அன்று தோன்றிய உயிரினங்கள்
1.அன்றிலிருந்தே எவையுமே அழிந்திடாமல் பல எண்ண நிலையில் சக்தி நிலையின் தொடர்பு கொண்டு…
2.இன்றளவும் என்றென்றும் வாழ்ந்து கொண்டேதான் உள்ளன.

பல புராணக் கதைகளைக் கேட்டு வருகின்றீர்கள்… இவற்றின் நிலையெல்லாம் என்ன…?

ஒவ்வொரு பிரளயம் நடப்பதற்கும் முந்தைய வாழ்க்கையில் நடந்த நிலைகளை அவ்வாத்மாவின் தொடர் கொண்டு வந்திட்டவர்கள்… அடுத்த பிரளயத்தில்…
1.சக்தி கொண்ட நிலை பெற்றவர்களின் எண்ணத்தில் உதித்திட்ட நிலைகள்தான்
2.இன்று நாம் நம்ப முடியாமல் கேட்டிடும் புராணக் கதைகளெல்லாம்.

எவ்வெண்ணமும் முன் தொடரில்லாமல் வருவதில்லை…!

வாழ்க்கையில் நடப்பவைக்கும் கனவில் காண்பவைக்கும் மாறுபட்டுக் காண்கின்றோம். எவையுமே பொய்யல்ல…!

இவ்வுலகம் எத்தனை பிரளய நிலை ஏற்பட்டுச் சுற்றிக் கொண்டு வந்தாலும் எண்ணமும்… எண்ணத்தின் கலப்பினால் நாம் கண்டு பேசி வாழ்ந்திடும் நிலையெல்லாம்… “நம்மைத் தொடர்ந்து கொண்டேதான் வரும்…!”

October 17, 2023

ஆத்மீக நெறி கொண்டு செயல்பட்டால் தான் உலக மாற்றத்தைத் தடுக்க முடியும்

இன்றைய இப்பூமியின் பூமத்திய ரேகையின் நேர் கோட்டை வைத்து அந்த நிலையில் இன்றைய விஞ்ஞானிகளால் மேலே வான மண்டலத்தில் வான இயல் நுட்பக் கருவிகளை வைத்து இப்பூமியில் ஏற்படும் இயற்கையின் மாற்றத்தைக் கண்டறிகின்றனர்.

அதைப் போல இப்பூமத்திய ரேகையின் மையத்தில் இப்பூமியின் உள் பாகத்தில் சில நிலைகளைச் செய்வித்தால் இப் பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் சுவாசத்தின் தன்மையைக் கொண்டு…
1.இப்பூமியில் தற்பொழுதும் இனி நடக்கப்போகும் காலத்தின் இயற்கையின் சீற்றத்திலிருந்து
2.எந்தெந்த இடங்களில் நிகழப்போகும் பெரும் மாற்றத்தைக் கண்டறிந்து அந்த ஆத்மாக்களைக் காத்திடவும் முடிந்திடும்.

வான நிலையில்தான் இவர்களின் ஆராய்ச்சி நிலை எல்லாம் உள்ளது. பூமியின் உள் நிலைகளை அதிகமாகக் காண முயலவில்லை.

ஆனால் இப்பூமி கவர்ந்து வெளிப்படுத்தும் நிலையிலிருந்துதான் இப்பூமியைச் சுற்றியுள்ள வான நிலையும் உள்ளது.

வளர்ந்திட்ட விஞ்ஞானத்தின் சக்தி அறிந்த ஆத்மாக்களினால் அவர்களின் சக்தியையே செயல் கொண்டு காத்திடும் நிலைப்படுத்திடும் ஆத்மீக நெறியையும் கலக்க விட்டால் உலகைக் காக்கவும் முடிந்திடும்.

இவ்வுலகையே செயலாக்கிடும் சப்தரிஷிகளின் சக்தி கொண்டு…
1.மனித உடலுடன் உள்ள விஞ்ஞான ஆத்மாக்களினால்
2.இவ்வுலகை இக்கலியின் கடைசி மாற்றத்திலிருந்து காத்திடும் சக்தி நிலையும் உண்டு.

ஒவ்வோர் ஆத்மாவிற்குமே ஆதிசக்தியின் செயல் சக்தி அனைத்தும் உண்டு. செயல்படுத்திட்டால் அந்த நற்சக்தியுடன் கலந்தே செயலாக்கிட முடியும்.

சக்தி பொதுவானதே…!

மெய் வழி செல்லும் பாதையைத் தான் எம்மால் காட்டிட முடியும்…. ஏற்றுக் கொள்வதும் அதன் வழி செயல்படுத்துவதும் அவரவர்கள் எண்ணத்தால் தான் அது முடியும்.