ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 31, 2018

அகஸ்தியனும் அவர் மனைவியும் வாழ்ந்த வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும்


விஞ்ஞான அறிவால் ராக்கெட்டை விண்ணிலே ஏவி இங்கிருந்து ஒலி/ஒளி அலைகளைப் பாய்ச்சி அதனின் மோதலின் தன்மை கொண்டு அதனுடைய நாத சுருதிகளைத் தனக்குள் எடுத்து அதனுடைய வேகமும் அதனுடைய பொறியின் தன்மையும் விஞ்ஞானி கண்டறிகின்றான்.

இதைப் போலத் தான் நீருக்குள் இருக்கும் விஷக் கிருமிகளை அறிவதற்கு அழுத்தமான நஞ்சினை (ஆற்றலை) பாய்ச்சுகின்றார்கள். அவ்வாறு பாய்ச்சப்படும் போது நீரினைப் பிளந்து அதனுடைய உள்கூறுகளைக் காட்டுகின்றது.

அதை வைத்து அவர்கள் அந்த நீரையே நன்னீராக மாற்றுகின்றார்கள். அதனுடைய அழுத்தத்தையும் விஞ்ஞான அறிவில் கண்டு கொள்கின்றான்.

ஆனால் மெய் ஞானியோ உப்பு நீராக இருந்தால் தன் பார்வையால் பாய்ச்சும் உணர்வு கொண்டு அதை நன்னீராக மாற்றி விடுகின்றான்.

மெய் ஞானியான அகஸ்தியன் அவன் செல்லும் பாதையிலே எங்கே சென்றாலும் தன் உணர்வினைப் பாய்ச்சி தனக்கு வேண்டிய நன்னீரைத் தேடிக் கொள்கின்றான்.

காடு மலைகளில் செல்லபடும் பொழுது அவன் அமர்ந்த இடங்களில் மேகக் கூட்டத்தைத் தனக்குள் கவர்ந்து அங்கு நீராக மாற்றித் தன் வளர்ச்சிக்குண்டான நிலைகளைச் செய்கின்றான்.

1.வழுக்குப் பாறைகளாக இருக்கும்… உயிரினங்களே வராத நிலையும் இருக்கும்…!
2.அத்தகைய பாறையில் அகஸ்தியன் அமர்ந்திருந்தால்
3.அது மேகக் கூட்டங்களை இழுத்து நீராக அங்கே வடியும்.

அகஸ்தியன் சென்ற பாதைகளில் மேகங்களை இழுத்துப் பாறைகளுக்குள் நீராகப் மாற்றி பெரும் நீரோடையாக ஜீவ நதியாக ஓடும் நிலைகளும் இங்கு உண்டு. இவை எல்லாம் புவியியலின் மாற்றங்களே…!

“உயிரியலின் மாற்றங்களில்…” இதைப் போன்று ஒருவன் வேதனைப்படும் உணர்வைக் கவர்ந்தால் நமக்குள் சிதைவுண்ட உணர்வின் நிலைகளும் எதிர் நிலை போன்று பல பல நிலைகளும் உருவாகின்றது.

1.அந்தச் சமயத்தில் மகரிஷிகளின் உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால்
2.மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் ஊடுருவி
3.அந்தத் தீமையான உணர்வுகளை மாற்றி
4.நன்மை பயக்கும் அணுக்களாக நமக்குள் மாற்றி விடுகின்றது.

கணவன் மனைவி இருவரும் இதைப் போன்று உயர்ந்த நிலைகளை எடுத்து ஒவ்வொரு நிலைகளிலும் அந்த மகரிஷிகளின் உணர்வுகளைப் பெறவேண்டும் என்று
1.உயிரின் ஈர்ப்பால் உடலில் வளர்ககப்பட்ட அணுக்களில் பரவச் செய்து
2.மெய் ஞானிகள் தன் பார்வையால் நந்நீராக மாற்றுவது போல்
3.அகஸ்தியன் ஜீவ நீரை உற்பத்தி செய்வது போல்
4.உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் உணர்வாக மாற்றி ஒளியின் சுடராக ஆகலாம்.

நம்முடைய இன்றைய ஐதீகம் யாரால் உருவாக்கப்பட்டது...!


இயற்கையின் செயல் ஆற்றல்கள் எவ்வாறு இயங்குகின்றது என்ற உண்மையின் நிலைகளை அருள் ஞானமாக அதைத் தெளிவுற நமக்கு எடுத்துரைத்தவர்கள் அன்றைய மகா ஞானிகள்.

அவர்கள் கண்டுணர்ந்ததைச் சாதாரண பாமரனும் அறிவதற்காகவும் அந்த ஆற்றல்களைப் பெறுவதற்காகவும் ஒவ்வொரு மாதமும் விழாக்களாக நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
1.அதை நாம் உணரவும் முடியவில்லை
2.அதை அறியவும் எந்த முயற்சி எடுக்கவில்லை
3.இது தான் இன்றைய நிலை.

ஏனென்றால் பிற்காலத்தில் வந்த அரசர்கள் அந்த மஹா ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த நிலைகளை “ஐதீகம்...!” என்ற நிலைகளில் உரு மாற்றி விட்டார்கள்.

ஆனால் அதே சமயம்
1.இயற்கையில் உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் எவ்வாறு உருவானது...?
1.மனித உடலுக்குள் எத்தகைய பேருண்மைகள் நிகழ்கின்றன...?
2.ஒவ்வொரு குணங்களின் செயல்களும் எவ்வாறு இயக்குகிறது...?
3.சேர்த்துக் கொண்ட குணங்களுக்கொப்ப உயிர் அந்த உணர்வின் இயக்கமாக உடலாகவும்
4.அந்த உணர்வின் இயக்கமாக அறிந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளுதலும்
5.நுகரும் (சுவாசிக்கும்) மணத்தால் தன்னைப் பாதுகாக்கும் நிலையும்
6.உணர்வால் தன்னை இயக்கித் தன்னை வளர்த்துக் கொள்வதும்
7.அது எவ்வாறு என்ற உண்மைகளைத் தன்னைத்தானே அறிந்திடும் நிலைகளுக்கு
7.மகரிஷிகளால் தெளிவாக மக்களுக்கு உணர்த்தப்பட்டது

இவையெல்லாம் ஞானிகள் வெளிப்படுத்தியிருந்தாலும் தன்னைத்தானே அறியாத நிலைகள் தடைப்படுத்தப்பட்டு
1.அரசர்களின் உருவாக்கிய ஐதீகப்படித்தான்...
2.அரசர்ளின் வழிகளில் தான் நாம் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றோம்.
3.ஞானிகள் சொன்ன வழியில் நாம் செல்லவில்லை.

ஆறாவது அறிவை “முருகன்...” என்று ஞானிகள் சொன்னால் அதனை ஓர் அரசன் முருகனே எனக்குக் குலதெய்வம் என்றும் முருகனல்லாது வேறு யாரையும் வணங்குவதில்லை தனித்துப் பிரித்து கொண்டான்.

முருகன் யார்...? என்று தத்துவ ஞானிள் நமக்குத் தெளிவுற எடுத்து உரைத்திருந்தாலும் அதனை அந்த அரசனுக்கு கீழ் இருக்கும் குடிமக்கள்   அறிய முடியாத நிலைகளில் தடைப்படுத்தப்பட்டது. அறிய முடியாத நிலைமை ஆகிவிட்டது.

அந்த அரசனுக்குக் குலதெய்வம் என்ற நிலைகளில் ஸ்தல புராணத்தை வடித்து யாகங்கள் வேள்விகள் செய்து அதன் அடிப்படையில் சட்டங்களை இயற்றினார்கள்.

நம் குலதெய்வம் இட்ட நிலைகளில் இந்த அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கி அந்த சட்டத்தின் அடிப்படையில் மதம் என்ற நிலைகளை இயக்கிவிட்டார்கள்.

விஷ்ணு மதம் சிவ மதம் முருகன் மதம் விநாயகன் மதம் என்று இப்படிப் பல மதங்களாக இயக்கப்பட்டுவிட்டது.
1.உலகில் எண்ணிலடங்காத மதங்கள் உண்டு
2.எண்ணிலடங்காத இனங்கள் உண்டு

இலட்சுமி தான் எங்கள் குலதெய்வம் என்று செல்வமும் மற்ற பொருள்களையும் வைத்து அதை ஒரு அரசன் கடைபிடித்து அந்தச் சட்டத்தை இயற்றி அந்தக் குடிமக்களைத் தன் கீழ் கொண்டு வந்து விட்டான்.

இதே மாதிரி சரஸ்வதியை எடுத்துக் கொண்டால் “சாரதாதேவி...!” என்று அதற்கு மறு பெயரிட்டு அதை எனது குலதெய்வம் என்று ஒரு அரசன் கூறி ஒரு மதத்தை உருவாக்கித் தனது குடிமக்களை ஆட்சி புரியும் நிலைகளுக்குக் கொண்டு வந்து விட்டான்.

விநாயகர் தத்துவத்தை எடுத்துக் கொண்டால் விநாயகன் எங்கள் குலதெய்வம் என்ற நிலைகளில் “அவனே முதல் கடவுள்..!” என்று ஒரு சாரார் அதை எடுத்துக் கொண்டனர்.

அந்த மதத்தின் அடிப்படையில் எங்கள் விநாயகர்... கணபதி எங்கள் குலதெய்வம்...! என்ற நிலைகளுக்கு அவர்கள் இயற்றிய சட்டத்தின் கீழ் அந்தக் குடிமக்களைத் தன் வசப்படுத்திக் கொண்டார்கள்.

இன்று அந்த விநாயகர் தத்துவத்தையே நாம் அறிய முடியாத நிலைகளாகி காலத்தால் மறைந்தே போய் விட்டது.

விஷ்ணு எங்கள் குலதெய்வம் என்று அதை ஒரு மதம் என்ற நிலைகள் இயக்கப்பட்டு
1.அதிலே வடகலை தென்கலை என்ற நிலைகளில் 
2.நாமம் இடுவதிலும் முத்திரை இடுவதிலும் தனக்குள் போர் செய்து கொண்டு
3.உண்மை நிலைகளை அறிய முடியாத நிலைகளில் விரயமாகி விட்டது.

“அரங்கநாதன்...!” எங்கள் குலதெய்வம் என்று அதை ஒரு சாரார் ஒரு அரசன் கடைப்பிடித்து அதன் வழிகளிலே போதனை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதே போன்று “பெருமாள்...” தான் எங்கள் குலதெய்வம் என்றும் அவன்  கையிலே தான் எங்கள் உயிரும் எங்கள் இயக்கமும் என்று அதை ஒரு அரசன் கடைபிடித்து அவன் ஒரு தத்துவத்தை எடுத்துக் கொடுத்தான்.

அந்தப் பெருமாள் யார் என்றும்... அந்த அரங்கநாதன் யார் என்ற நிலைகளையும் அறிய முடியாத நிலை ஆகிவிட்டது. அதே சமயம் விஷ்ணு யார்...? என்று இன்றும் கேள்விக் குறியையே எழுப்பிக் கொண்டுள்ளோம். இது அல்லாது
1.“சாமுண்டீஸ்வரி... அழகு நாச்சி... துர்கா தேவி...!” என்றும்
2.அதை அவரவர்கள் குணங்களுக்கொப்ப அரசன் அதைக் கடைபிடித்து
3.எங்கள்  குலதெய்வம் இது தான் என்று மதங்களை வளர்த்து
4.அரசன் தன்னைப் பாதுகாக்கும் நிலைகளுக்குக் குலதெய்வமாக உருவாக்கிக் கொண்டான்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய அகஸ்தியன் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான்.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் நிலை கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் வீற்றிருந்து ஒளி சுடர் வீசிக் கொண்டிருப்பது அந்தத் துருவ மகரிஷி.

1.துருவ மகரிஷி என்றாலும்
2.அவன் ஒளிச் சுடராகத் துருவ நட்சத்திரமாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றான்
3.மனிதனுக்கு அறிவின் ஞானத்தைப் புகட்டிக் கொண்டிருக்கின்றான்.

அவனின்று வெளிப்படும் உணர்வின் சத்துக்கள் அனைத்தும் நாரதன் என்றும்... அவன் கலகப் பிரியன் என்றும் பின் வந்த ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

நமக்குள் அறியாது வரும் தீமைகளை நீக்க நாரதன் என்ற அந்த அருள் ஞானியின் உணர்வை நுகர்ந்தால்
1.நமக்குள் இருக்கும் தீமைகள் அகன்று
2.மெய் ஒளியின் உணர்வுகளைக் காணும் நிலையை
3.நாம் அடைவோம் என்ற தத்துவத்தைத்தான் அன்று காட்டினார்கள்.

March 30, 2018

பித்தனைப் போன்று இருந்த குருநாதருக்குள் இருக்கும் “எண்ணிலடங்காத விண்ணின் ஆற்றல்கள்...!”


மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் எமக்கு (ஞானகுரு) உபதேசித்தது போல அதையே தான் உங்களுக்குள்ளும் முழுமையாகப் பதிவு செய்கின்றேன்.

பதிவு செய்ததை வளர்க்க வேண்டும் என்றால் உங்களுடைய நினைவின் ஆற்றல் கொண்டுதான் அதைச் செயல்படுத்த முடியும்.

1.சாமிக்கு என்னமோ சக்தி இருக்கிறது...!
2.அதனால் தான் அவர் அதைச் செய்கிறார்... இதைச் செய்கிறார்...!
3.நமக்கு எங்கே...! அதெல்லாம் முடியும் என்று உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
4.நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பெற முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் (வெளித் தோற்றத்தில்) ஒரு பித்தனைப் போல தான் இருந்தார். குப்பைக்குள் மறைந்திருக்கும் சத்தினை எடுத்துத் தாவர இனங்கள் செழித்து வளர்வது போலத்தான் அவரின் நிலைகள்.
1.குருநாதர் பித்தனைப் போன்று இருந்தாலும்
2.எண்ணிலடங்காத விண்ணுலக ஆற்றலைத்
3. தனக்குள் சத்தான உணர்வுகளாக வளர்த்துக் கொண்டவர்.

அத்தகைய உணர்வின் சொல்லே எமக்குள் ஆழப் பதிந்தது. அதனின் நினைவின் ஆற்றலால் எனக்குள் வரும் தீமைகளையும் அகற்றிட முடிந்தது.

இதைப்போல ஒருக்கிணைந்த நாம் அனைவரும் அவரைப் பின்பற்றினால் அந்த மகா ஞானிகளின் உணர்வுகளைப் பெற முடியும்.

ஒரு நூலால் (தனித்து) ஒன்றும் செய்ய முடியாது. பல நூல்களை இணைத்து அதை கயிறாகத் திரித்தால் கடினமான பொருளையும் தூக்க முடிகின்றது.

இதைப்போல தான் நாம் அனைவரும் ஒருக்கிணைந்த நிலையில் உணர்வுகளைத் தூண்டி அருள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று
1.அந்த ஏக்க உணர்வுடன் நாம் தியானித்தோம் என்றால்
2.பல நூல்களைக் கயிறாகத் திரித்து வலுவான பொருளைத் தூக்குவது போல
3.மகரிஷிகள் விளைய வைத்த பேராற்றல்களை நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள முடியும்.

இதை ஏன் அவ்வாறு சொல்கிறோம் என்றால்
1.மகரிஷிகள் இந்த பிறவிக் கடனை அறுத்துச் சென்றவர்கள்
2.அவர் உணர்வுகளை அணுக வேண்டும் என்றால் நம் எண்ணத்திற்கு அந்த வலு கிடையாது
3.ஒரு மனிதன் தனித்து எண்ணும் போது அதற்கு வலுவில்லை.

ஆகவே ஒருக்கிணைந்த நிலையில் பல ஆயிரம் பேர் சேர்ந்து அருள் ஞானியின் உணர்வுகளைப் பெறும் கிளர்ச்சியை ஊட்டுகின்றோம்.

அந்தக் கிளர்ச்சியின் உணர்வுகள் உங்களுக்குள் வலு பெறச்செய்து அதனின் எண்ணத்தால் இயங்கி நமக்கு முன் சுழன்று கொண்டு இருக்கும் மகரிஷியின் அருள் ஒளியை ஏகோபித்த நிலைகளில் நாம் கவர்தல் வேண்டும்.

அப்பொழுது அவரவர்கள் எண்ணிய வலுவிற்குத்தக்க அந்த மகரிஷிகள் விளைய வைத்த அந்த ஆற்றல் மிக்க சக்தி நம் ஆன்மாவில் கலந்து நாம் தியானிக்கும் சுவாசத்திற்குள் உட்புகுந்து நமக்குள் வளர்ச்சி பெறத் தொடங்குகின்றது.

1.அவ்வாறு ஒருக்கிணைந்து தியானித்த பின்
2.மகரிஷிகளின் அருள் சக்தி தியானத்தில் அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நிலையில்
3.வாழ்க்கையில் எல்லா நலமும் வளமும் அவர்கள் பெற வேண்டும்
4.பொருள் கண்டுணர்ந்து செயல்படும் திறன் அவர்கள் பெற வேண்டும்
5.அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அவர்கள் வாழ வேண்டும் என்று
6.ஏகோபித்த நிலையில் அந்த உணர்வின் அலையை நாம் பாய்ச்ச வேண்டும்

அவ்வாறு வெளிப்படுத்தும் போது நலம் பெற வேண்டும்...என்ற ஏக்க அலைகளை ஒவ்வொருவரும் நாம் எடுக்கின்றோம். இதைத்தான் கீதையிலே நீ எதை நினைக்கின்றாயோ... நீ அதுவாகின்றாய்...!என்று சொல்லப்பட்டது.

1.நீங்கள் நலம் பெற வேண்டும் என்று நான் எண்ணினால்
2.அந்த உணர்வின் சக்தி எனக்குள் அதுவாகி
3.நலம் பெறச் செய்யும் சக்தியாக நான் செயல்படுகின்றேன்.

அதே போல நீங்களும்
1.நான் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் செயல்படும் போது
2.அந்த நலம் பெறும் சக்தி உங்களுக்குள் விளைந்து
3.நீங்கள் அதுவாகி எனக்கு நன்மை செய்கின்றீர்கள்.

ஆகவே மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றி என்றும் நிலையான ஒளிநிலை பெறும் அந்தத் தகுதியைப் பெறும் நோக்குடன் தான் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றோம்.

அவர் காட்டிய அருள் வழியில் தியானித்து அந்த அருள் மகரிஷியின் அருள் சக்திகளை நாம் அனைவரும் பெறுவோம்...!

சுரங்கப் பாதைகளை கோவிலுக்குள் யார் வைத்தார்கள்...? ஏன் வைத்தார்கள்...?


அன்று வாழ்ந்த அரசர்கள் தன் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்தால் அந்தத் தாய்க்குப் பலவிதமான விஷத் தன்மைகளை ஊட்டுகின்றான்.

பிறக்கும் தன் குழந்தைக்கு எந்த விஷமும் பாதிக்காமல் இருப்பதற்காக வேண்டித் தாய் உணவாக உட்கொள்ளும் ஒவ்வொரு (சோற்று) பருக்கையிலும் தலை முடியில் விஷத்தைத் தொட்டு அந்தப் பருக்கையுடன் சேர்த்துக் கொடுத்து விடுகின்றான்.

ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமான விஷமான பருக்கைகள்.

கர்ப்பமுற்றிருக்கும் தாயை அமர வைத்து
1.நம்முடைய அரசின் சட்டங்கள் இப்படி இருக்கின்றது...?
2.நம்முடைய போர் செய்யும் முறைகள் எப்படி...?   
3.நம் எதிரிகள் இப்படி இருக்கின்றார்கள்...?
4.அந்த எதிரிகளை எப்படி வீழ்த்துவது..? என்ற அறிவுகள் அனைத்தையும் போதிக்கின்றார்கள்.
5.குழந்தை பிறக்கும் பொழுதே அந்த அறிவுடன் வருவதற்காக அவ்வாறு செய்கின்றார்கள்.

பல விஷமான சத்துக்களைத் தாய் உட்கொண்டதால் அந்த உணர்வுகள் இரத்தத்தின் வழி குழந்தைக்குச் சேர்ந்து அவன் பிறந்து வளர்ந்த பின் மிக மிக வலிமையான ஆயுதங்களை எடுத்து எதிரிகளை வீழ்த்தும் வீரிய ஆற்றல் கொண்டவனாக வருகின்றான்.

அரசர்கள் தங்கள் குழந்தைகளை இப்படித்தான் வலிமை மிக்கவர்களாக உருவாக்கினார்கள்.

அதே போல அரசன் தன் மதத்தின் நியாயங்களையும் அவன் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையும் அரசாட்சிக்கு வரும் போது குல தெய்வங்களை உருவாக்கிச் சட்டங்களை இயற்றிவிடுகின்றார்கள்.

அந்தக் குலதெய்வம் தான் நம்மைக் காக்கின்றது என்ற நிலையில் ஸ்தலப் புராணத்தை வடித்து ஆலயமாகக் கட்டி அங்கே தெய்வத்தை உருவாக்கிவிடுகின்றார்கள்.

மேலும் அந்தத் தெய்வத்திற்கென்று மூல மந்திரத்தையும் உருவாக்கி எல்லோரையும் அதை ஜெபிக்கும்படி செய்வார்கள். இதையெல்லாம் உருவாக்கி
1.அதன் வழியில் மக்களை ஒன்றிணைக்கச் செய்து
2.மக்களைத் தன் வசப்படுத்தி
3.எதிரிகளை வீழ்த்துவதற்குத் தான் அதைப் பயன்படுத்தினார்கள்.

அரசர்கள் கட்டிய பெரும்பகுதி ஆலயங்களில் பார்த்தால் கோயிலுக்குள் (UNDER GROUND) சுரங்கப்பாதை வைத்திருப்பார்கள்.

எதிரிகள் ஜெயித்து வந்து விட்டால்..., “நீங்கள் எல்லாம் எப்படியும் செத்துப் போங்கள்... நான் தப்பித்து ஓடிப் போய்விடுகிறேன்...!” என்று ஆலயங்களில் உள்ள சுரங்கப் பாதை வழியாகத் தப்பிச் சென்று விடுவார்கள்.

எப்படிப் பார்த்தாலும் அரசர்கள் தான் சுகமாக வாழ எல்லா வேலைகளையும் அன்று செய்தார்கள். ஏனென்றால் அவனைக் காக்கும் நிலையில்
1.உயிரோடு இருக்கும் போது அவனுக்கு அடிமை
2.நாம் இறந்த பிற்பாடு நாம் ஜெபித்த அந்த மந்திரத்தைச் சொன்னால்
3.நம் ஆன்மா அவனுக்கு கைவல்யம் ஆகின்றது.

கைவல்யம் செய்த ஆன்மாக்களை எதிரிகளை வீழ்த்த அன்று பயன்படுத்தினார்கள் அன்றைய அரசர்கள்.

ஒருவர் செத்த பிற்பாடு என்ன செய்கின்றோம்..?

மாவிலே ஒரு பிண்டத்தைச் செய்து அதற்கு மந்திரத்தைச் சொல்லி ஆற்றிலே போய்ப் போட்டுவிட்டு வந்தால் “இறந்தவர்கள் செய்த பாவமெல்லாம் போகும்...!” என்பார்கள்.

அதை முடித்து பின் வீட்டில் வந்து எண்ணெய் தேய்த்து மூழ்கி விட்டு விநாயகர் கோவிலுக்குப் போய் மாவிளக்கு வைத்து நெய் தீபம் இட்டு தலைமகன் அங்கே அர்ச்சனை செய்தால்
1.அது மோட்ச தீபம் என்பார்கள்
2.இப்படி நம்மை முட்டாள் ஆக்கி வைத்திருக்கின்றார்கள்.

அடுத்து அமாவாசைக்கு என்ன செய்யச் சொல்கிறார்கள்...? பித்ருக்களுக்குச் சாப்பாடு கொடுத்துப் பழக வேண்டும் என்பார்கள். ஏனென்றால் பித்ருகளுக்குச் சாப்பாடு கொடுத்தால் அது புண்ணியம்.

புண்ணியமா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்...!

ஒரு நோயாளியை உற்றுப் பார்த்து அவரின் நிலையை அதிகமாக நேசித்தால் என்னாகும்..? அவன் இறந்த பின் அவன் ஆன்மா நமக்குள் தான் வந்து விடுகின்றது.

அது நமக்குள் வந்தால் அவன் எப்படியெல்லாம் நோயால் அவஸ்தைப்பட்டானோ அதே மாதிரி நமக்கும் நோய் வந்து விடுகின்றது.

இதைப் போன்று தான் பித்ருக்களுக்காக வேண்டி மந்திரத்தை ஜெபித்தால் அவர்கள் ஆன்மாவை நமக்குள் இழுத்துக் கொள்ளலாம். அவர்கள் பட்ட நோய்களும் அவஸ்தைகளும் தான் நமக்கும் வரும்.

ஞானிகள் காட்டியதை அரசர்கள் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்தி மக்களை மாக்களாக்கி எல்லோரையும் அவனுக்கு அடிமையாக்கும் நிலைக்கே கொண்டு சென்று விட்டார்கள்.

அதன் வழி தான் நாம் இன்றும் வழி நடந்து வருகின்றோமே தவிர ஞானிகள் காட்டிய மெய் வழியில் செயல்படுத்தவில்லை.

உடலை விட்டு மனிதன் பிரிந்து சென்றால் அவன் உயிரான்மா ஒளியின் நிலை அடைய வேண்டும் என்பது தான் ஞானிகள் சொன்னது. இதைத்தான் ஆலயங்களில் காட்டியுள்ளார்கள்.

1.இன்றைய செயலாக தெய்வ குணத்தை உன் வாழ்க்கையில் நீ வளர்த்தால்
2.நாளைய சரீரமாக நீ அழியாத நிலைகள் பெறலாம் என்பதைக் காட்டும் இடமே
3.ஞானிகளால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்களின் நோக்கம்.

March 29, 2018

“ஆண் பெண் என்ற நிலையில் ஒன்றினால்தான்... விண் செல்ல முடியும்...!” தனித்த நிலையில் செல்ல முடியாது...!


பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அந்த அகஸ்தியன் நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைத் தன் தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுதே பெற்றவன்.

அந்த உணர்வின் தன்மை பெற்றதால் பிறந்தபின் மற்ற நஞ்சு கொண்ட உயிரினங்கள் இவனிடம் அருகில் வருவதில்லை. அஞ்சி ஓடுகின்றது.

இவ்வாறு அவன் வளர்ச்சியில் வரப்படும் பொழுது பிரபஞ்சத்தில் உருவாகும் விஷத் தன்மைகளை அவன் நுகர்ந்தாலும் அந்த விஷத்தின் ஆற்றல் அவனை ஒன்றும் செய்வதில்லை.

சூரியன் தன் சுழற்சியின் வேகத்தால் தனக்குள் வந்து மோதும் விஷத்தை மாற்றி ஒளிக் கதிர்களாக வீசுகிறது. விஷத்துடன் மோதுவதால் தான் அங்கே வெளிச்சமாகின்றது.

விஷத்துடன் மோதிப் பிரிப்பதை நம் கண்களால் உற்றுப் பார்த்தால் நமது கண்கள் இருண்டு விடுகிறது. மற்ற பொருள்களைப் பார்க்க முடிவதில்லை.

ஆனால் அக்காலத்தில் அகஸ்தியன் அதை உற்றுப் பார்க்கும் பொழுது அவன் கண் இருளுவதில்லை. ஸ்தியனுக்கு அத்தன்மை இல்லை.

கஸ்தியன் தனது வாழ்க்கையில் நுகர்ந்து கொண்ட உணர்வுகளில் விஷமென்ற நிலைகள் இருந்தாலும்
1.அந்த விஷம் கொண்ட உணர்வுகள் அவனைத் தாக்காது
2.சூரியன் ஒளிக் கதிர்களாக எப்படி ஆக்குகின்றதோ (அதைப் போல)
3.பேரொளியாக மாற்றிடும் வல்லமை அவனின் உணர்வுகளில் வளருகின்றது.

பேரொளியாகத் தான் பெற்ற அந்தச் சக்தியைத் தன் மனைவியும் பெற வேண்டும் என்று உபதேசித்து அந்த உணர்வின் தன்மையை அங்கே பாய்ச்சுகின்றான்.

1.அகஸ்தியன் வளர்த்துக் கொண்ட ந்த உணர்வுகளை
2.அவன் கண்ட இயற்கையின் பேருண்மைகளை
3.தீமையை அகற்றும் அந்தச் சக்திகளை அகஸ்தியனின் மனைவியும் பெறுகின்றது.

ஒரு செடிக்கு... அது தன் இனத்தை உருவாக்க வேண்டும் என்றால் ஆண் இனமும் தேவை பெண் இனமும் தேவை.
1.ஆண் செடி உமிழ்த்தும் உணர்வுகள் பெண் செடிகளில் படும் போது தான்
2.அந்த வித்துக்கள் அதிகரிக்கின்றது.
3.ஆண் செடி இல்லாத நிலைகளில் அது உரு பெற்றாலும்
4.அது சத்தற்ற கூகையாகத் தான் பெரும் பகுதி விளையும்.

நெல் பயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் ஆண் செடியின் உணர்வுகள் அதிலே படவில்லை என்றால் கூகையாகத் தான் அது உரு பெரும். ஆண் பெண் என்ற நிலைகள் தான் தன் இனப் பெருக்கமும் ஆகின்றது.

கணவன் (அகஸ்தியன்) எந்த உயர்ந்த உணர்வினைப் பெறுகின்றானோ அதை மனைவி தான் பெற வேண்டும் என்று அவருடன் ஒன்றி வாழ்ந்து அந்த உணர்வினை ஏற்றுக் கொண்டு அதன் உணர்வை அவனின் மனைவியும் நுகர்கின்றது.

அதைத் தனக்குள் வளர்த்து அந்த ஒளியின் கதிர்களைத் தன் கணவனுக்கும் அது பெற வேண்டும் என்று
1.தன் கணவனால் பெற்ற உணர்வுகள்
2.மீண்டும் அவர் உயர வேண்டும் என்று கணவனை உயர்த்தி எண்ணுகின்றது
3.உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று இருவரும் ஒன்றிய நிலைகளில் எண்ணுகின்றனர்.

ன்றிக் கலந்த பின் விண் வெளியிலிருந்து வரும் உணர்வுகள் பூமியின் துருவப் பகுதி வழியாக வருவதை இருவருமே சேர்ந்து நுகர்ந்து அறிகின்றனர்.

நமது பூமி துருவ பகுதியின் வழியாக விஷத் தன்மைகளைத்தான் கவருகின்றது. அந்த விஷத் தன்மைகளை விஷ தன்மை கொண்ட தாவர இனங்கள் நுகர்கின்றது. தாவர இனங்கள் வித்தாக அதை உணவாகப் பெறுகின்றது.

அந்தத் தாவர இனங்களை உணவாக ருசித்து உட்கொள்ளும் நிலையில் து உணர்வின் எண்ணங்களாக எவ்வாறு வருகின்றது என்ற உண்மையை அகஸ்தியரும் மனைவியும் அதை அறிகின்றனர்.

இருவரும் இந்த உணர்வின் எண்ணங்களை வளர்த்துக் கொண்ட பின் இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிர்களும் நுகரும் உணர்வுகளை ஒளிக்கதிர்களாக மாற்றும் திறன் பெறுகின்றனர்.

1.ஆண் பெண் என்ற உணர்வுகள் ஒன்றி இரு உயிரும் ஒன்றாகி ஒளிக் கதிர்களாக மாற்றிய பின்
2.உடலை விட்டுச் செல்லும் பொழுது
3.ந்தத் துருவத்தினைக் கூர்மையாக அவர்கள் உற்றுப் பார்த்தனரோ
4.அந்த எல்லையில் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டும் உள்ளார்கள் .

நஞ்சினை வென்ற அவர்களின் உணர்வுகளை நாம் நுகர்ந்தோம் என்றால் தீமையை அடக்கி இருளை வென்றிடும் உணர்வின் அணுக்கள் நமக்குள் பெருகத் தொடங்கும்.

இதனின் உணர்வு கொண்டு நாம் உடலை விட்டுப் பிரிந்தால் நாம் அடுத்துப் பெறுவது அந்த ஒளியின் சரீரம். அதைத்தான் நம் சாஸ்ந்திரங்கள் தெளிவாக்குகின்றன. அதை நாம் அனைவரும் எளிதில் பெற முடியும். உங்களை நம்புதல் வேண்டும்.

ஆனால் தனித்து ஒரு மனிதன் அந்த ஆற்றலை நான் பெறுவேன் என்றால் அவன் முனியாகத்தான் ஆக முடியும்.

அந்த முனியின் தன்மை அடைந்தால் இங்கிருந்து இந்த பூமியைக் கடந்து செல்ல முடியாது.
1.முனித் தன்மை அடைந்தவன் கோபத்தின் உணர்வைத் தான் காட்டுவான்.
2.மற்ற மனிதன் பால் அதைத் தான் பாய்ச்சுவான்.
3.கோபத்தின் எல்லை கடந்தபின் அதன் வலிமை கொண்டு
4.மீண்டும் பிறப்பிற்குத்தான் வருவானே தவிர
5.மகரிஷிகளி அடைந்த அழியா ஒளிச் சரீரம் என்ற நிலையை அவன் அடைய முடியாது.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது...!