ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 30, 2013

நாம் வேதனைப்பட்டு விடும் மூச்சலைகள் வீட்டிற்குள் படர்ந்தால் வரும் பாதிப்புகள்

1. வீட்டிற்குள் நாம் விடும் மூச்சலைகள் என்ன செய்கின்றது?
நம் குடும்பத்திலுள்ளவர்கள் வேலைகள் நிமித்தமாக வெளியிலே செல்லும் பொழுது, பிறருடைய கடுமையான உணர்வலைகள் அவர்களுக்குள் தாக்கப்பட்டு, அந்த உணர்வாலே அந்த நல்லவரின் உணர்வின் எண்ணங்களையும் மாற்றி, நம் குடும்பத்திற்குள் ஊடுருவி, நமக்குள் பாய்ச்சும் பொழுது தீயவினைகளை உண்டாக்கி விடுகின்றது.

இதைப் போன்று, நம்மையறியாமலேயே சேரும் இந்த நிகழ்ச்சிகளை நம் குடும்பத்தளவு இந்த ஆத்ம சுத்தி செய்து, இதைப் போக்க வேண்டும். 

நாம் வெறுப்பான உணர்வுகளை எடுத்துக் கொண்டு வீட்டிலே நடமாடும் பொழுது, ஒருவருக்கொருவர் எதிர்ப்பான உணர்வுகள் தோன்றுகின்றது.

பின், இந்த உணர்ச்சிகளை
நாம் மூச்சால் வெளியிடும் பொழுது
சுவர்களிலும், பதிவு செய்து கொள்ளும்.
அதே சமயம் பூமியின் ஈர்ப்பலைகளில் நாம் இருக்கப்படும் பொழுது,
அந்த உணர்வுகள் பூமியிலேயும் பதிந்துவிடுகின்றது.   

அப்படிப் பதிந்தபின், நம் உடலிலிருந்து, வந்த இந்த வீட்டிலே வீசும் மணத்தைக் கொண்டு, அந்தக் கடுகடுப்பும், ஒருவருக்கொருவர் வெறுப்பான எண்ணங்களையும், நாம் தோற்றுவித்து விடுகிறோம். 

அதனாலே, நாம் எண்ணிய நல்ல காரியங்கள் தடைபடுகின்றது என்று, வேதனையும் சஞ்சலமும் கொண்டே நாம் இருப்போம்.

ஆக, நாம் எதற்குள் இருக்கின்றோம்? இந்த விஷத்தின் அறைகளுக்குள்ளே, நம் வீட்டிற்குள்ளேயே அதை உருப்பெறச் செய்து, அந்த உணர்வைச் சுவாசித்து, நமக்குள் அதிகமாக வளர்த்துக் கொள்கின்றோம்.

இன்று பூமி, எவ்வாறு விண்ணிலே வரக்கூடியதை வெளிப்படுத்தினாலும் அந்த உணர்வின் தன்மைகள் பூமிக்கு வெளியிலே விஷத்தின் ஆற்றல் இருக்கின்றது. பூமிக்குள்ளும் சேர்கின்றது.

இதைப் போன்றுதான், நம் உடலுக்குள்ளும் இயக்கிவிடுகின்றது. நம் வீட்டிற்குள்ளும் பரவச் செய்து, நமக்கு நாமே தண்டனை விதித்தது போன்று ஆகிவிடுகின்றது.
2. கூட்டுத் தியானத்தின் மூலம், வீட்டிற்குள் மகிழ்ச்சியான அலைகளைப் பெருக்க முடியும்
இதைப் போன்ற நிலைகளை நாம் மாற்ற வேண்டும் என்றால், இந்த முறைப்படி தியானம் செய்த வழிகளில் உங்கள் எண்ணத்தின் வலுவை உங்கள் வீட்டிற்குள் பரவச் செய்வதற்கு, வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானம் இருங்கள். இந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவருமே அருள் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

இதே மாதிரி வீட்டில் இறந்தவர்களுடைய உயிராத்மாவை நீங்கள் எண்ணி, “அந்த உயிராத்மா சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலக்க வேண்டும். அவர்கள் என்றென்றும் ஒளி நிலைகள் பெறவேண்டும் என்று, நீங்கள் எண்ணிப்பாருங்கள்.

அதற்குப் பின், சப்தரிஷி மண்டலங்களின் ஒளி காந்த சக்தியை நாங்கள் பெறவேண்டும்”. இது எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் திணித்து, உங்கள் உடலைத் தியானித்துவிட்டு, உங்கள் மூச்சின் எண்ண அலைகளைப் படரவிடுங்கள்.

வீட்டில் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும். நம் வீட்டிற்கு வருவோர் அனைவருமே நலமும் வளமும் பெறவேண்டும் என்று, உங்கள் உணர்வின் ஒளிகளைப் பாய்ச்சுங்கள்.

இந்த உணர்வாலே இழுக்கப்பட்ட அந்தச் சக்தி
உங்கள் வீட்டிற்குள்ளும் பதிவாகின்றது. 
 
அதே சமயம், தீமை செய்யும் உணர்வலைகள் கூடி, நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் வீட்டிற்குள் பதிவானாலும் அதை மாய்க்க இது உதவும். ஆக, ஒவ்வொரு நிமிடமும் நம் வீட்டையும், உடலையும், சுத்தப்படுத்தியே ஆக வேண்டும். எமது அருளாசிகள்.

April 29, 2013

தியானம் செய்பவர்கள் சாமியாராகப் போய்விடுவார்களா?

1. தியானம் செய்பவர்கள் சாமியாராகப் போய்விடுவார்களா?
ஆண்கள் தியானத்துக்குப் போய்க்கொண்டிருந்தால், பக்கத்து வீட்டுப் பெண்கள் பிடிக்காதவர்கள் இருந்தார்களென்றால், “தியானம் இருந்தார்களென்றால் என்ன செய்வது? நீ சாமியாராகப் போய்விடுவாய் பார்த்துக்கொள்”, என்று சொல்வார்கள்.

ஆனால், பெண்கள் ட்கார்ந்து தியானம் செய்தார்கள் என்று சொன்னால், ஆண்கள் என்ன செய்வார்கள்?
பெண், நீ இந்த அளவுக்குத் தியானம் இருப்பதா?
வீடு உருப்படுமா?” என்று கேட்பார்கள்.

ஆக, குழந்தைகள் போய், “சாமி ஏதோ நல்லது சொல்கிறார் என்று கேட்டு’, அது மனதிற்கு தகுந்த மாதிரி உட்கார்ந்து, புத்தகத்திற்கு முன்னாடி உட்கார்ந்தால்,
இந்த வயதிலேயே உனக்கு என்ன தியானம்?
நீ சாமியாராகப் போய்விடுவாய்,
நீ உட்கார்ந்தால் உதைப்பேன்
என்கின்ற நிலையில் தான் இருக்கின்றது.
அந்த அளவுக்குப் பக்குவம் பெற்றிருக்கிறோம்.
2. யாம் தியானம் செய்யச் சொல்வதன் காரணம் என்ன?
நல்ல ஒழுக்கத்தை நாம் எடுக்க வேண்டும்.
நமக்குள்ளே நல்லதைச் சேர்க்க வேண்டும்
நாம் நல்லதைப் பேச வேண்டும்
நல்லதைப் பேசுவதற்குண்டான சக்தி வேண்டும்
இதற்குத்தான், யாம் இதைச்சொல்கிறோம்.

தியானம் என்றால் என்னமோ பெரிய மலை என்று எண்ணுகிறோம்.
நமக்குள் நல்லதைப் பெறும் வழிதான் அது.
திரும்பத் திரும்ப நினைத்து,
அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

அந்த எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்கு, குரு என்ற நிலைகளில் நமது குருநாதர் எமக்குக் கொடுத்தார். அந்தச் சக்தியை யாம் வளர்த்துக் கொண்டோம்.
அப்படி யாம் வளர்த்த சக்தியை,
சொல்லாலே, பேச்சாலே, இந்த உணர்வாலே கொடுத்து,
உங்களுக்குள், நீங்களும் வளர்த்துக் கொள்ள
வழி சொல்லித் தருகிறோம். அவ்வளவுதான்.

யாம் கற்றுக் கொண்டோம். அதை உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தெரிந்து கொண்ட நிலையை, மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வாத்தியார் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து, இன்னென்ன பொருளை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததை, மீண்டும் செய்யத் தொடங்குகின்றோம். இதைப் போலத்தான், இந்த தியானம் என்பதின் நிலைகள். 

ஈஸ்வரன் - வெப்பம் - கடவுள் (ஞானகுருவின் தெளிவான விளக்கம்)

1. காருக்குள் இருக்கும் இஞ்சின் எப்படி இயங்குகின்றது?
இப்பொழுது நம் பூமி சுற்றிக் கொண்டிருக்கின்றது சுற்றும் பொழுது சூடாகின்றது சூடாகும் பொழுது, அதில் இருந்து இந்த வெப்ப அலைகள் உள்ளே வந்து, மற்ற அணுக்கள் பூமிக்குள் மோதி, அது எல்லாமே விளைகின்றது

வெளியிலிருந்து காற்றும் எடுத்துக்கொள்கின்றது சுற்றும் பொழுது சூடாகின்றது. இதைப்போல, நம் உயிர் இருந்த இடத்திலிருந்தே பல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது உயிர் துடித்துக்கொண்டே இருக்கப்படும் பொழுது, என்ன நடக்கின்றது?
காருக்குள் இருக்கும் இஞ்சின் என்ன செய்கின்றது?
அதற்குள் இருக்கும் பிஸ்டன், அது ஒன்றை இழுத்தவுடனே,
அது இழுத்து, முன்னும் பின்னுமாக அது அசைக்கப்படும் பொழுது
சக்கரத்தைச் சுற்றச் செய்கின்றது.

ஏனென்றால், உள்ளே காற்றைக் கொண்டுபோய்ச் செலுத்தியவுடன்,
ஒரு பக்கம் தள்ளுகின்றது,
ஒரு பக்கம் அமுக்குகின்றது.
2. தண்ணீர் இறைக்கும் பம்பு (PUMP) எப்படி வேலை செய்கின்றது?
தண்ணீர் அடிக்கும் பம்பை (Pump), இப்பொழுது நாம் என்ன செய்கின்றோம்? பம்பை நாம் கீழே அடிக்கின்றோம் அடித்தவுடனே காற்று என்ன செய்கின்றது?

தண்ணீரை ஊற்றி அதற்குள்ளே போனவுடனே, இது அடித்து இழுக்கப்போகும் பொழுது, கீழே ஆழத்தில் இருக்கின்ற தண்ணீரை இழுக்கின்றது. கீழே இருக்கின்ற தண்ணீரை, கை பம்பை வைத்து நாம் அழுத்தமாக்கினால், தண்ணீர் அது மேலே வருகின்றது.

அதே மாதிரி ஒரு மோட்டார் பம்பைச் சுற்றச் செய்கின்றோம். அது இழுக்கக்கூடிய பகுதியை அது என்ன செய்கிறார்கள்? இழுக்கும் பொழுது, வெளியில் தள்ளக்கூடிய பகுதியுடன் (Delivery) இணைத்தவுடன்,
ஆழமாகிணற்றிலிருந்து
தண்ணீரை இழுத்து, அது மேலே தள்ளுகின்றது.

இதைப்போலத்தான், நம் உயிர் என்ன செய்கின்றது? உயிரின் அந்த இயக்கத்துக்குப் பெயர் ஈஸ்வரா. ஆனால், அதற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய திறன் உள்ளது. ஆகவே, ஈஸ்வரா என்று, மெய்ஞானிகள் உயிருக்குப் பெயர் வைக்கிறார்கள்.
நம் பூமி சுற்றும் பொழுது, சூடாகின்றது. நம் உயிர் இப்படி இயக்கப்படும்பொழுது அதற்குள் சூடாகின்றது.

அப்படிச் சூடாகும் பொழுது, இயக்கியவுடனே மோட்டார் எப்படித் தண்ணீரை இழுக்கின்றதோ, அதே மாதிரி வெளியில் இங்கிருக்கக்கூடிய காந்த அலைகளுடன் மோதுகின்றது அப்படி மோதும் பொழுதுதான், பூமி சுற்றுகின்றது.
மோட்டாரில் காந்தம் இருக்கின்றது.
இன்னொரு காந்தத்தை எதிர்நிலை வைத்துச் சுற்றும் பொழுதுதான்,
வெளியிலிக்கும் காந்தத்தை இழுக்கின்றது.
இந்த காந்த அலைகளை – “மின்சாரம்”
சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்ப காந்தம் என்று சொல்கிறோம்.
3. பூமியின் நடு மையத்தில் உருவாகும் “வெப்பம்” தான், பூமிக்கு உயிர்
வெப்பமும், காந்தமும் உண்டாகக்கூடிய சக்தி. நாம் வெயில் என்று சொல்கின்றோமே, இதெல்லாம் அங்கே சூரியனிலிருந்து, மலை மலையாகக் கொட்டிக் கொண்டிருக்கின்றது.

ப்படிக் கொட்டுவது பவெளியில் படர்கின்றது. படர்ந்து வரும் பொழுது, நம் பூமி அங்கே போகும் பொழுது, இதில் மோதுகின்றது. இது மோதும் பொழுது  என்ன செய்கின்றது? வெப்பமாகின்றது.

அது வெப்பமான சக்தி கீழே வருகின்றது அது வேகமாக வீசும் பொழுது சூடாகின்றது. மற்றொன்றுடன் மோதும் பொழுது. சூடாகின்றது பூமியில் மோதும் பொழுது சூடாகின்றது. பூமி சுற்றும் பொழுது, அந்தச் சூடு என்ன செய்கின்றது?

எல்லாம் மத்தியில் அதற்குள் வெப்பமாகச் சேர்ந்துவிடும் இதே மாதிரி, பூமியின் நடு மையத்தில் இருக்கின்ற அந்த வெப்பம்தான், இத்தனை சக்தியையும் உருவாக்கச் செய்கின்றது 

காலையில் விழும் பனியைப் பாருங்கள்.
பனிகாலத்தில் பார்த்தோம் என்றால்,
பூமிக்கடியில் இருக்கும் தண்ணீர்
வெது வெது வெதுஎன்று இருக்கும்.
காரணம், கீழேருக்கக்கூடிய அந்தச் சூடுதான், அது உண்டாக்குகின்றது
அப்பொழுது அந்த வெப்பம்தான், பூமிக்கு உயிராகின்றது

அந்தச் சூடு இல்லையென்றால் இந்த பூமி விளையாது. அந்தச் சூட்டுக்கு பெயர்தான் பராசக்தி. தை திடமான பொருளாகப் பார்க்கும் பொழுது, சிவம் “சிவலிங்கம்என்று சொல்கிறார்கள். இதற்குப் பெயர் சீவலிங்கம்.
 

April 28, 2013

சாமி (ஞானகுரு) சொன்ன வழி

1. இந்த உடலுக்குபின் இன்னொரு பிறவி வேண்டாம்
இந்த மனித உடலுக்குப் பின், இன்னொரு சரீரம் பெறவேண்டாம். அது ஒளிச் சரீரமாகத்தான் இருக்க வேண்டும்.

ஆக, முடிவாக அந்த ஒளிச் சரீரம் பெறவேண்டுமென்ற எண்ணத்தை ஓங்கி வளர்த்துக் கொண்டு, “மெய்ஞானியின் அருள் ஒளியைப் பெறவெண்டும்” என்ற இந்த உணர்வினை ஓங்கிச் செலுத்தப்படும் பொழுது, இந்தப் புவிக்குள் நம் எண்ணங்கள் சுழலாது.

ஆக, நாம் அடிக்கடி நாம் அந்த அருள் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் அலைகள் வரும். இதற்காக வேண்டி,
நாம் மணிக்கணக்கிலே உட்கார்ந்து ஜெபமிருந்து,
சப்தரிஷி மண்டலத்திற்குப் போகவேண்டுமென்பதில்லை.
2. மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டிய சரியான முறை
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடத்திலும், எப்பொழுதெல்லாம் “கடுமையான எண்ணங்கள்” நம்மைத் தாக்குகின்றதோ, அப்பொழுது நாம் எடுக்கும் தியானத்தின் வலுக் கொண்டு,
“மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும்”
என்ற உணர்ச்சியைத் தூண்டுங்கள்”

“இப்படி ஆகின்றதே” என்று கோபம் வரும் பொழுது, அதே உணர்ச்சியின் வலுக் கொண்டு, “மகரிஷிகளின் அருள் சக்தியை பெறவேண்டும்” என்ற உணர்ச்சியைக் கூட்டுங்கள்.

ஏனென்றால், இந்தக் காரமான கோபமான நிலைகள் ஏற்படும் பொழுது, “ஈஸ்வரா” என்று அந்த வேகத்தைக் கூட்டுங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்குங்கள். இந்த உணர்ச்சி அதை (அருள் சக்திகளை) எடுக்க உதவவேண்டும்.
               
பிறர் நம்மைத் திட்டிய உணர்வுகள் அந்த உணர்ச்சியைத் தூண்டியவுடன்,
மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
நீங்கள் அங்கே செலுத்தப்படும் பொழுது,
அந்த உணர்வை “வேகமாக இழுத்து”,
உங்கள் கோபத்தை அடக்கி,
உங்களுக்குள் ஞானத்தைச் செயலாக்கும் நிலைகள் வரும்.

உங்களுக்குள் சொல்லின் நிலைகள் எங்கிருந்து அவர்கள் தோற்றுவித்தாலும், உங்கள் சொல்லால் சொல்லும் பொழுது, அங்கேயும் அடங்கும், பார்க்கலாம். உங்கள் அனுபவத்தில் இதை நீங்கள் பார்க்கலாம்.
3. சாமி செய்து தர மாட்டார், சாமி சொன்ன வழிகளிலே, நமக்குள் நாம் தான் வளர்க்க வேண்டும்
ஆகையினாலே, இந்த மனிதனுடைய சந்தர்ப்பத்தை, இந்த உடலின் சந்தர்ப்பத்தை இழக்காத நிலைகளிலே, ஒவ்வொரு நிமிடமும் உங்களைக் காக்க, உங்கள் எண்ணத்திற்கு வலுக்கூட்டுங்கள்.

சாமி (ஞானகுரு) “எனக்குச் செய்து கொடுப்பார்” என்று எண்ணாதீர்கள்.

யாம் உங்களுக்கு உணர்வைக் கொடுத்திருக்கிறோம், அதை நீங்கள் எடுக்க வேண்டுமல்லவா.
யாம் சாப்பாடு போட்டால்,
நீங்கள் சாப்பிட்டால் தானே நல்லது.

இங்கு வந்தவுடன், தலைவலி, மேல்வலி போய்விட்டால், இன்று தலைவலி போய்விட்டது மீண்டும் நாளைக்கு சாமியைத்தான் தேடி வரவேண்டும் என்று எண்ணுகிறோம்.

சாமி சொன்ன வழிகளிலே
எல்லாத் தீமைகளையும் போக்குவதற்கு,
நம் எண்ணத்தை வலுக்கூட்ட வேண்டும்
என்ற எண்ணத்திற்கு வரவேண்டும்.

அந்தப் பழக்கத்திற்கு நீங்கள் எல்லோரும் வரவேண்டும். அதைத் தான் யாம் விரும்புகின்றோம். எமது அருளாசிகள். 

அகஸ்தியன் கற்று ஞானியாகவில்லை, சந்தர்ப்பத்தால்தான் பெற்றான்

வானுலக ஆற்றலையும், புவியின் செயலாக்கங்களையும், முதன்முதலாகக் கண்டுணர்ந்தவர் அகஸ்தியர். ஏனெனில், அவர்தம் தாய் தந்தை உடலில் விளைந்த சத்து அவருக்குள் இயங்கி, தாவர இனங்களின் வளர்ச்சியையும், தாவர இனங்களில் செயல் மாற்றங்களையும், அதனால் ஏற்படும் அணுக்களின் தன்மையும் தெளிவாக அவரால் அறிய முடிந்தது. 

கற்று அல்ல,  உணர்வின் இயக்கம், சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்ச்சியின் தன்மை கொண்டு, அது அறிவின் தன்மையாக அகஸ்தியரிடத்தில் விளைந்தது.

அனைத்தையும் அறிந்துணர்ந்த அகஸ்தியர், 
துருவத்தை எல்லையாக வைத்து,
துருவத்தை உற்று நோக்கி,
அதனின்று வருவதைத் தமக்குள் உருவாக்கி
ஒளியின் கற்றைகளாக மாற்றியமைத்தார்.

மின்மினிப் பூச்சி, தான் நுகர்ந்த உணர்வுக்கொப்ப, அதனுடைய அடிப்பகுதியில் ஒளிக்கற்றைகள் வெளிப்படும். அதைப்போன்று,  அகஸ்தியர்  துருவப்பகுதியில் வரும் சத்தினையும், மின்பொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும்பொழுது உருவாகும் மின் கற்றைகளை நுகர்ந்து, அந்தப் பொறியின் உணர்வுகளை தமக்குள் விளையச் செய்தார்.
இதுபோன்றுதான், அகஸ்தியர் நுகர்ந்த உணர்வுகள், அவருடைய உடலில் உள்ள அணுக்களில் கலந்து, ஒளிக்கற்றைகளாக மாறியது.

இதன் தொடர் கொண்டு, அவரிடத்தில் இதனின் பெருக்கம் ஆகும்போதுதான், உடல் பெறும் உணர்வை ஒளியாக மாற்றி அமைத்தார் அகஸ்தியர்.

April 27, 2013

அப்பொழுதே ஜீரணமாகிவிட்டான் வாதாபி - அகஸ்தியன்

நட்சத்திரங்களின் கதிரியக்க மின்னல்களை
தமக்குள் அடக்கிடும் உணர்வின் தன்மை வரும்பொழுது,
எதையும் வென்றிடும் தன்மையை அகஸ்தியர் பெற்றார். அவர் எதையாவது உற்று நோக்கி உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் அதனை கருக்கிவிடும்.
வாதாபி என்ற ஒருவன் அசுர குணம் கொண்ட ராட்சஸன், அவனுடைய சகோதரனும் ஒரு ராட்சஸன். இவர்கள் இருவரும், இருவரில் ஒருவர் ஆடாக உருமாறுவதும், பின் ஆடாக இருப்பவனை வெட்டி சமைத்து விருந்தாளிக்கு உணவாக பரிமாறுவதும், உணவாக உட்கொண்டபின், வாடா. வாதாபி …“ என்றால் சாப்பிட்டவரின் குடலைப் பிளந்து வெளியே வந்து, விருந்தாளியை உட்கொள்வதும் என்ற நிலையில் காவியத் தொகுப்புகள் உண்டு.

மலைவாழ் பகுதிகளுக்கு வந்து, பேரருள் பெறவேண்டும் என்று எண்ணி வருபவர்களை, இப்படி வேட்டையாடிக் கொன்று புசித்துள்ளார்கள். அகஸ்தியர் அப்பகுதிக்குச் செல்லப்படும்போது, வழக்கமான அதே முறையில் அகஸ்தியரை ராட்சஸர்கள், வரவேற்றுள்ளார்கள்.

அகஸ்தியர் அவர்கள் அளித்த உணவை உட்கொண்டபின், வாடா..வாதாபி.. என்றால், வன் அப்போதே ஜீரணமாகிவிட்டான் என்று கூறுகின்றார். 

ராட்சஸனுக்கு ஆத்திரம் வருகின்றது. உன்னைக் கொன்று புசிக்கப் போகிறேன் என்றான். ஆனால் அகஸ்தியரின் வேகத் துடிப்பு, பார்வை ராட்சஸனைக் கருக்கிவிடுகின்றது.

ஆக இதுபோன்று அகஸ்தியரை, அவர் கண்டறிந்த உண்மையின் நிலைகளை, காவியங்களில் ஓரிரு இடங்களில், மட்டும் காண்பித்து, அகஸ்தியர் போவார், வருவார் என்றளவில் மட்டுமே உரைத்திருப்பார்கள். அகஸ்தியர் அனைத்திலும் வல்லவர் என்று மட்டுமே, கூறி நிறுத்திவிடுவார்கள்.

இதனால்,  அகஸ்தியர் கண்டுணர்ந்த பேருண்மைகளை, நாம் அறிய முடியாமலே போய்விட்டது. இதனின் உண்மைகளை, நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

யாம் இவைகளை, உங்களுக்கு விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், குறைந்தது 10 வருடங்களாவது அமர்ந்து உங்களுக்கு உபதேசிக்க வேண்டும். நீங்களும் இது போன்று 10 வருடம் அமர்ந்து கேட்கவேண்டும். ஆனால் யாம், உங்களிடம் சுருங்கச் சொல்லிப் பதிவு செய்கின்றோம்.

இந்த உணர்வின் தன்மையினை, நீங்கள் உங்களிடத்தில் பதிவாக்கி, மீண்டும் நினைவு கூறப்படும்போது, உங்களில் பேரறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக, கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலைகள் கொண்டு,
கம்ப்யூட்டர் பிற இயந்திரங்களை இயக்கவும், நிறுத்தவும்,
இயந்திரத்தில் பணிகளை மாற்றவுமான செயல்களை செய்விப்பது போன்று,
ஞானிகளின் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகும்போது,
ஒன்றை நாம் பார்க்கும்பொழுதே,
நன்மை தீமைகளை அறியச் செய்து,
தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வினை
உருவாக்கும் தன்மை உங்களிடத்தில் விளைகின்றது.