ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 31, 2024

இறைவன் தெய்வம் குரு

மகரிஷிகள் தன்னைத்தான் கண்டுணர்ந்த முறைப்படி
1.மனிதனின் வாழ்க்கையில் எவ்வாறு உயர்வு பெற வேண்டும்…?
2.உயர்ந்த சக்திகளை எவ்வாறு பெற முடியும்…? என்ற நிலையை
3.தெளிவாக உணர்த்தி உள்ளார்கள் கடவுளின் அவதாரம் பத்து என்று.

அதே சமயம் சிவ தத்துவத்தின் பிரகாரம் நாம் எடுத்துக் கொண்ட உணர்வை நம் உயிர் ஓ…! என்று இயக்கி… நாம் எண்ணிய குணங்களை ம்…! என்று தன் உடலாக்கும் பொழுது சிவமாகின்றது.

நாம் எந்த குணத்தினை எண்ணுகின்றோமோ அந்த குணத்தின் தன்மை உடலுடன் இணைந்து இயக்கப்படும் போது “வினை என்றும்… விநாயகா என்றும்…” காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள் ஞானிகள்.

நாம் கடவுளாக வணங்குவது எல்லாமே…
1.ஒவ்வொரு இயக்கப் பொருள்களுக்கும் மகரிஷிகள் காரணப் பெயர்களை வைத்து
2.நாம் அறிந்து கொள்வதற்காகச் செயல்படுத்தப்பட்டது தான் அவை அனைத்துமே.
3.கடவுள் என்று தனிச் சக்தியாக எதுவும் இயங்கவில்லை.

நாம் எண்ணிய உணர்வுகள் அனைத்தும் உடலாகும் பொழுது சிவம் என்றும்… உடலுக்குள் அது இணைந்து செயல்பட்த் தொடங்கி விட்டால் வினை என்றும்… இந்த வாழ்க்கையில் நாம் எந்தக் குணத்தை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அந்த குணமே கணங்களுக்கு அதிபதியாகின்றது கணபதி…!

ஒருவரைக் கோபிக்கிறோம் என்றால் அந்தக் கோப உணர்வை நாம் சுவாசிக்கப்படும் போது “ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம். அந்தக் கோபத்தின் வழிதான் நாம் செயல்படுத்த வேண்டி வரும்.

கோப உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து விட்டால் கணங்களுக்கு அதிபதியாகி அதன் வழிகளில் இந்த உடலில் இயற்கையில் இருந்த நிலையைக் காட்டிலும் மாற்றமாகித் தேய்பிறையாக மாற்றுகின்றது.

கோப குணம் வளர்ச்சி அடைந்து… நல்ல குணங்களைத் தேய்பிறையாக மாற்றுகின்றது. ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம்.

இந்த வாழ்க்கையில் எந்தக் குணங்களை அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதன் உணர்வுப்படி கணங்களுக்கு அதிபதியாகி அதனுடைய செயலை இந்த உடலுக்குள் உருவாக்கும்.

நம் உயிர் ஈசனாக இருக்கும் பொழுது
1.நாம் எண்ணிய எண்ணங்கள் உடலுக்குள் உணர்வாகி உணர்வின் அணுவாகி
2.உடலுடன் இணையப்படும் பொழுது இறை… “இறைவா…”
3.அந்த உணர்வின் சக்தி உடலுக்குள் இயங்கத் தொடங்கினால் “தெய்வம்”
4.அந்த உணர்வின் சக்தி இயங்கி மீண்டும் அதைத் திரும்ப எண்ணினால்
5.அந்த குணத்தின் செயலாக நம்மை இயக்கும் “குரு…” என்று இவ்வாறு காரணப் பெயர்களை வைத்து
6.நாம் இயங்க வேண்டிய முறைகள் எது…? நாம் எப்படி இயங்க வேண்டும்…? நம்மை எப்படி இயக்க வேண்டும்…? என்ற முறைகளை வகுத்து
7.ஞானிகள் நமக்கு அதைக் காவியங்களில் தெளிவாகக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது இயற்கையின் உணர்வின் தன்மையைக் காவியமாக்கி… அந்தக் கருத்தினை எண்ணத்தால் எண்ணி அந்த உணர்வை நுகர்ந்தால்… நம் உயிர் அதை ஓ… என்று ஜீவ அணுவாக மாற்றி ம்… என்று நம் உடலாக மாற்றுகின்றது.

ஆகவே இந்த மனித வாழ்க்கையில் நாம் எதை நுகர வேண்டும்…? எதை நாம் வழிப்படுத்த வேண்டும்…? என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது நமது சாஸ்திரங்கள்.

போகரின் பூர்வாங்கம்

“கசாங்” என்ற நாமம் கொண்ட ஒருவர் சீனாவில் மஞ்சள் நதி பாயும் பாதையில் ஒரு பள்ளத்தாக்கில் ஒரு உயிர் பிரியும் துறவிக்கு உதவி செய்கிறார். அவருடைய ஆசியும் உபதேசமும் கிடைத்ததும் ஞானியாகும் வாய்ப்பைப் பெற்று மூலிகை வைத்திய நிபுணராகின்றார்.

சில சித்துகள் செய்யும் பொழுது அந்த நாட்டு அரசனின் கோபத்திற்கு ஆளாகித் தப்பிக் காட்டுக்குள் மறைந்து வாழ்கின்றார். சில அபூர்வ சக்திகளும் பெறுகின்றார்,

பின்னர் திபெத்தில் துறவிகளிடம் கலைகள் பல பயின்று இந்திய நாட்டுக்குள் நுழைந்து தெற்கே வருகின்றார். காளிங்கராயரிடம் தொடர்பு ஏற்பட்டதும் அவரையே குருவாக ஏற்கிறார்.

காளிங்கராயரிடம் உபதேசம் பெற்று வாழ்ந்து வரும் சமயம் கஞ்ச மலைக்கு (சேலம் அருகில்) வருகின்றார்கள். அந்த மலையின் மூலிகை விசேஷ குணத்தினால் இளமை பெறும் வாய்ப்பு பெற்று அதன் தொடரில் கஞ்ச மலையில் உள்ள காந்தப் பாறையில் இருவரும் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போகரின் (கசாங்) அழகிய தோற்றம் கண்டு அழகன் என்ற பொருளில் முருகா என்று அழைக்கும் குரல் கேட்டு அதைக் குரு தனக்குக் கொடுத்த அருள் வாக்காக ஏற்று அதனின் ஈர்ப்புத் தொடரிலேயே ஓம் முருகா என்ற நிலையில் உணர்வைச் செலுத்துகின்றார் போகர்,

அதன் பின் வாழ்க்கைச் சக்கரம் என்ற சூழலில் அகப்படும் வாய்ப்பாக அமையும் தருவாயில் குரு குறிப்பால் உணர்ந்து போகருக்கு விடை கொடுத்து அனுப்பிவிடுகின்றார்.

1.பிறவியின் பயனை எப்படி அடைவது...? என்ற நிலையை உணர்த்தி
2.அதன் வழியில் எப்படிச் செயல்பட வேண்டும்...? என்பதை சூசகமாக உணர்த்தி
3.காயகல்பமாகப் பேரின்பப் பெருவாழ்வு எப்படி வாழ வேண்டும்…? என்று போகருக்கு ஆசி கூறுகின்றார் காளிங்கநாதர்.

காளிங்கநாதர் தான் பறக்கும் நிலை பெற்ற சித்து நிலையில்
1.சரீரத்தையே இரும்புக் கல் தாதுவாக்கி
2.விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிராத்மாவை ஒளியாக மாற்றி மண்டலமாகச் சுழலச் செய்து
3.இன்றும் பேரொளியாக வாழ்ந்து கொண்டுள்ளார்.

போகர் தனக்குகந்த சீடர்களைத் தேர்ந்தெடுத்துக் கடுமையான தியானப் பயிற்சிகள் மூலம் அவர்களைப் பக்குவப்படுத்துகின்றார். அவர்களும் அதில் தேர்ந்து வளர்ந்து வருகின்றார்கள். அதிலே முதன்மை பெறுகின்றார் புலிப்பாணி.

அப்பொழுது உண்டாக்கப்பட்டதே தந்த வைத்திய முறையும் நாடி ஜோதிடமும். அப்பொழுது திடீரென்று போகரைக் காணாமல் அவர் சென்ற இடத்தை அறியாமல் சீடர்கள் திகைக்கின்றனர்.

புலிப்பாணியார் தன்னுடைய ஞானத்தால் போகர் சீனாவில் இருப்பபதை அறிந்து அங்கு சென்று அவரை அழைத்து வருகின்றார். நேராக இருவரும் பழனிக்கு வருகின்றார்கள்.

போகர் தான் சீன சென்ற நிலையில் தன்னுடைய தவ சக்தியை இழந்ததாகக் கூறி மீண்டும் அந்தத் தவத்தினை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்.

அதற்குக் குரு உபதேசம் அவசியம் என்று உணர்ந்து கஞ்ச மலைக்குச் சென்று தன் குருவாகிய காளாஞ்சி நாதரைத் தேடுகின்றார்.
1.அவர் தன் சரீரத்தையே கல்லாக்கி மண்டல சுழற்சியில் செயல்படும் விதம் அறிந்து
2.அவர் கூறிய வழியிலேயே அவரை விஞ்சிக் காட்ட வேண்டும் என்ற மன உறுதியுடன்
3.பழனிக்கு வந்து தன் சீடராகிய புலிப்பாணியையே குருவாக ஏற்கின்றார்.

சிஷ்யன் எப்படிக் குருவாக முடியும்...! என்று அவர் சங்கடப்படுகின்றார். போகர் அவரைத் தேற்றி அதற்குரிய வழிகளைக் கூறுகின்றார்.

போகர் தன் கையில் உள்ள தண்டத்தை ஒரு பீடத்தில் வைத்து அந்தத் தண்டத்திலே சூட்சமமாகப் புலிப்பாணி இருந்து குரு பீடம் ஏற்று உபதேசிக்கும்படி வேண்டுகிறார்.

புலிப்பாணி வான இயலின் தத்துவத்தைப் போகருக்கு அருளுகின்றார். குருவிற்குச் சிஷ்யன் உபதேசம் செய்ததால் “தகப்பன் சுவாமி...! என்ற பெயர் நிலைக்கின்றது.

தண்டத்திலிருந்து உபதேசம் பெற்று தன் சக்திக்கு வலு கூட்டியதால் போகநாதர் “தண்டபாணி...” என்ற நாமம் பெறுகின்றார். பின்னர் தண்டபாணிக்குச் சிலை செய்ய எல்லோரும் முடிவெடுத்துப் பழனியில் ஒன்றுகூடி ஞான திருஷ்டியினால் நவபாஷாண மூலிகைகளைத் தேடி உலகெங்கும் பறக்கும் சக்தியினால் சென்று தேடிக் கொண்டு வருகின்றனர்.

கல்வம் (மருந்து அரைக்கும் ஒரு குழிக்கல்) என்ற கருவியில் அதை இட்டு அரைத்து காற்றில் காயும் முன் அதைச் சிலையாக உருவாக்குகின்றார்கள்.

மீன் செதில் போல் முருகன் சிலை உருவெடுக்கின்றது. அதைப் பராமரிக்கும் பணி புலிப்பாணியாருக்குக் கொடுக்கப்படுகின்றது.

போகர் அதன் பின் அரபு நாடுகளுக்குச் சென்று அங்கே சில வேலைகளைச் செய்கின்றார் (மக்காவில்)
1.அங்கே உருவமற்ற இறைவனாகப் படைத்தார்.
2.”ஆயிரம் ஜோதிலிங்கம்…” என்றும்
3.சுவாசமாகிய நிலையைக் குறிக்க யானையின் தலை மீது வீரியத் தன்மை ஏற்படுத்தப்பட்டு ஒரு சக்தி பீடத்தின் மேல் அமைத்தார்.
4.அதை அடையாளப்படுத்தும் விதமாக “சொர்க்கத்தின் கல்...” என்று பெயர் வைத்து
5.அந்தக் கல்லில் நேர் மையத்தில் நடுப்பாகத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் அமைப்பை உண்டு பண்ணி “ஜோதிலிங்கத்தை” ஸ்தாபித்தார் போகர்.

பழனி மலை முருகன் போல் ஐவர் மலையில் கோரக்கர் கோரக்கும்பர் கோரக்நாத் என்று அழைக்கப்படும் ஒரு ரிஷியின் தலைமையில் புலிப்பாணியால் முருகன் சிலை செய்யப்படுகின்றது. சிலை பூர்த்தியாகும் நேரம் போகரும் வருகின்றார்.

கோரக்நாத்தைப் போகர் இலங்கையில் உள்ள கதிர்காமம் சென்று வரப் பணிக்கின்றார். அங்கே உள்ள பூமியின் பொக்கிஷங்கள் ஈர்ப்பின் செயல் வளர்ச்சி முதலியவற்றை அறிகின்றார் அவர்.

பின்னர் போகர் தான் “நிர்விகல்ப சமாதி...!” நிலைக்குத் தன்னைத் தயார்படுத்துகின்றார். கோரக்நாத் ஐவர் மலை முருகன் சிலை ரகசியம் அறிந்து பிருகு மகரிஷியின் வழித் தொடரால் தான் அது ஸ்தாபிதம் செய்யப்படும் நிலை தெரிந்து கதிரிக்குச் சென்று போகர் போல் அவரும் சமாதி நிலை கொள்கின்றார்.

January 30, 2024

உண்மைகளைத் தேடிச் சென்றாலும்… பெற முடியாத நிலையாகப் போய்க் கொண்டுள்ளது

1.அரசியல் ரீதியிலும் சரி… பாட நிலைகளில் தத்துவங்களைப் போதித்துக் கொண்டிருப்போரும் சரி…
2.ஞானிகள் காட்டிய அறநெறிகளைக் கடைப்பிடித்து அதன் வழியில் இன்று செயல்படுகிறார்களா…! என்றால் இல்லை.

யாரையும் தவறாகச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம். “நான் அல்ல இதைச் சொல்வது…!” குருநாதர் காட்டிய அருள் வழியில் தான் இதை உணர்த்துகின்றேன்.

காரணம்… இன்றைய உலக மக்கள் நல்லதை ஏங்கித் தவிக்கும் போது அந்த நல்ல உணர்வின் செயல்கள் எவ்வாறு மறைந்து கொண்டிருக்கின்றது…? என்பதைப் பார்க்கலாம்.

மதங்களில் தவறில்லை…! மதத்தின் தன்மை வகுத்து நல்ல ஒழுக்கங்களை ஞானிகள் கொடுத்திருந்தாலும் பிற்காலங்களில் தவறின் நிலைகளுக்கு வருகின்றது.

அகஸ்தியன் வழியில் வியாசகர் அண்டத்தின் தன்மையைக் கண்டறிந்து அதை உணர்த்தினாலும் அவருக்குப் பின் வந்தவர்கள்…
1.ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரிவாகப் பிரித்து முழுமையின் தன்மையை அறிய முடியாது
2.காலத்தால்… அரசு… அரசியல் என்ற நிலையில் இது மறைந்து விட்டது.
3.தன் நாட்டைக் காக்க தன் மதத்தைக் காக்கப் போர் முறைகள் உருவாக்கப்பட்டதால் உண்மைகள் மறைந்து விட்டது.

அன்று “மந்திரவாதிகளால்” மக்களை அடிமைப்படுத்தும் நிலைகள் இருந்தது. மனிதன் மடிந்த பின் அவன் உணர்வைக் கவர்ந்து அதனின் உணர்வின் தன்மை கொண்டு ஏவல் பில்லி சூனியம் என்று அன்றைய காலங்களில் அரசர்கள் செய்தார்கள்.

இஸ்ரேல் நாட்டில் அன்று போர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் குறி வைத்து அம்பை எய்து “ஜோதிடம் பார்த்துத் தான்” அதனைச் செயல்படுத்துவார்கள். அம்பு எய்த நிலைகள் கொண்டு அரசனின் வலுவின் நிலை அறிந்து தான் செயல்படுவார்கள்.

நமது நாட்டிலும் அரசனாக இருந்த கட்டபொம்மனும் மந்திர ஒலியால் “ஜக்கம்மா” என்ற நிலையில் குலதெய்வமாக வளர்க்கப்பட்டு… அதனை ஈர்க்கப்பட்ட கருவின் தன்மை கொண்டு எதிரிகளைக் கண்டுணர்ந்து… எதிரிகளிடமிருந்து தப்பிக் கொள்ளும் உணர்வின் தன்மை கொண்டு செயல்பட்டான்.

மற்ற நாடுகளிலும் இதே போன்று மந்திர ஒலிகளால் தனக்குள் கவரப்பட்டு தன்னையும் தன் நாட்டையும் காத்திடும் நிலையாக மனிதர்களுக்குள் மதங்களை உருவாக்கினார்கள்.

1.மதத்தால் சொன்ன நிலைகளை ஏற்படுத்திய பின் அதையே மந்திரம் ஆக்கி
2.அந்த மந்திரத்தின் நிலைகள் கொண்டு மனிதன் இறந்து விட்டால் அதைக் கவர்ந்து சக்தி வாய்ந்ததாக மாற்றி
3.தன் நாட்டினுடைய நிலைகளுக்கு மதங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

எந்த மதமாக இருந்தாலும் ஞானிகள் காட்டிய நிலைகள் மனிதர்களுக்குள் படர்ந்த பின்… பதிந்த நிலைகள் எவ்வாறு இயக்குகிறது என்ற நிலையை மந்திர ஒலிகளாக மாற்றித் தான் செயல்படுத்தி வந்தார்கள்.

அந்த மகான்கள் காட்டிய நிலைகளை யாரும் இப்போது கடைப்பிடிக்கவில்லை. எந்த மதத்தின் நிலைகள் கொண்டு பிரிவுகள் பிரிந்ததோ அந்த ஞானிகள் சொன்ன உண்மை நிலைகள் மறைக்கப்பட்டது.

நான் பெரிது… அவர்கள் செய்வது தவறு… இவர்கள் சொல்வது பொய்… என்று மதத்திற்குள் இனங்களாகப் பிரிக்கப்பட்டு அதனின் நிலைகள் கொண்டு
1.உலகெங்கிலும் மகான்கள் கொடுத்த நிலைகள் மக்களுக்குக் கிடைக்க முடியாதபடி
2.இன்று உண்மைகளைத் தேடிச் சென்றாலும் பெற முடியாது நிலைகளாக மடிந்து கொண்டுள்ளது “விஞ்ஞான அறிவு கொண்டு...”

மெய் ஞானத் தத்துவத்தால் மாற்றி அமைக்க வேண்டியது…!

மனிதனின் உடலில் உண்ணும் உணவிற்கொப்ப உடலில் இரத்தம் எப்படி மாறுபாடு கொள்கின்றதோ அதே போன்று நாம் சுவாசிக்கும் உணர்விற்கொப்பவும் உயிரணுக்களின் தோற்றம் உடல் தன்மையில் வளர்கின்றது.

இன்று விஞ்ஞான ரூபத்திலேயே மருத்துவரின் ஆராய்ச்சியில் உணவு உட்கொள்வதற்கு முன்னும்... பின்னும்... மற்றும் இனிப்புப் பதார்த்தங்களைத் தந்தும்.. (SUGAR LEVEL IN BLOOD) ஆராய்ச்சிகள் நடத்துகின்றார்கள்.

அதற்கொத்த விகிதத்தில் இரத்த அணுக்களின் மாற்றத்தைக் காணுகின்றார்கள், அதைப் போன்றே
1.உணர்வின் நிலைக்கொப்ப எடுக்கப்படும் எண்ணத்தால்
2.உயிரணுக்களின் ஆத்ம பதிப்பு உடனே இரத்த அணுக்களில் சேர்வதைக் காட்டிலும்
3.ஆத்மாவின் பதிவு எண்ணத்தின் மோதலாக
4.எண்ணத்தின் செயல்பாடு உணர்வைத் தூண்டக் கூடிய நிலையில்
5.உயிரணுக்களின் விகிதத் தன்மை வீரியம் கொள்கின்றது.

புரியாத புதிராகப் படிப்பவர்களுக்கு இது தோன்றும்...!

உணவை உண்ணும் பொழுது உடலுக்குள் இரத்தத்தில் உடனே அது அணுவாகச் செயல் கொள்கிறது. அதுவே “எண்ணத்தில் எடுக்கும் எதுவாகிலும்...!” நம் ஆத்மாவில் பதிவாகிறது.

பதிவான பின் ஆத்மாவின் உந்துதலினால் உணர்வில் மோதுண்டு ஒன்றையே மீண்டும் மீண்டும் எண்ணத்தில் கொண்டு உடலுக்குள் இருக்கும் (ஜீவ) உயிரணுக்களிலும் அச்சத்துக் கூடக்கூடிய சந்தர்ப்பத்தை எண்ணத்தால் எடுக்கும் உராய்வினால் ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்துவதினால் வாழ்க்கையில் மனித ஆற்றலின் செயல் யாவையும் “எண்ணமே தான் கடவுள்..!” என்ற தத்துவத்தில் எண்ணத்திற்கொப்பத்தான் செயல் திறமையின் ஆற்றலின் பரிமாண சக்தியாக வளர்கின்றது.

1.இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்ந்த ஞான ரிஷிகள் பிருகு முனிவரும் பிருகண்ட ரிஷியும்
2.என்றும் பதினாறு என்ற மார்க்கண்டேயத் தத்துவமாக இந்தப் பூவுலகத்திற்குத் தத்துவரீதியாக உணர்த்தினார்கள்
3.அந்த உண்மைகள் யாவையும் ஆதிசங்கரர் காலத்திற்குப் பிறகு வேதங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டது

என்றும் பதினாறு என்ற நிலையில் அழியாததாக “உயர்வெய்தும் உயிர் ஆத்மாவின் உயர்வை...”
1.இன்றைய மனித ஆற்றலின் சிந்தனை எல்லாம்
2.சரீர சுகத்தின் செருக்கில்
3.விஞ்ஞானத்தின் இயந்திரக் கதிக்கு அடிமைப்பட்டு விட்டது.

எண்ணத்தைக் கொண்டு எதையும் சிந்தனையில் சீர்படுத்தி உணரக்கூடிய தன்மை ஒவ்வொரு ஜீவ ஆத்மாவுக்கும் உண்டு. செலுத்தும் பக்குவத்தில் தனக்குள் இருக்கும் உயிரான ஈசனைச் சூட்சமத்தின் துணை கொண்டு ரிஷி சக்திகளின் சக்தியைக் காண வேண்டும்.

விதியின் கதிப்படி நடப்பதை எல்லாம் மதி கொண்டு மாற்றியமைப்பது போல் ஒவ்வொரு மனித ஆத்மாவில்…
1.சரீர விதியின் கதியை மாற்றியமைக்கக்கூடிய செயலை
2.“நான்”என்ற உண்மை உணர்தலில் பெற முடியும்.

விஞ்ஞானத்தில் எப்படி இயற்கை வளங்களைச் செயற்கை முறையால் மாற்றியமைத்து பல உண்மைகளை மாற்றும் நிலைப்படுத்துகின்றனரோ அது போன்ற நிலையை மனிதத் தத்துவத்திலும் “மெய் ஞானத் தத்துவத்தால்” மாற்ற முடியும்.

1.சரீர எண்ண அறிவின் ஆற்றல் கொண்ட மனிதப் பிறப்பின் தொடரில்
2.உயிரணுவின் தோற்றத்தின் நட்சத்திர ஒளி அலை அமிலத்தின் கூறு கொண்டு
3.பிறப்பின் தொடரில் வாழும் விதியின் கதியின் வாழ்க்கையில்
4.பிறப்பின் தொடரில் வாழும் முறையில் அந்தப் பிறப்பின் முடிவும்
5.நட்சத்திரத் தொடர் கொண்ட பூமியின் கதிக்கு
6.பூமி தொடர்பு கொள்ளக்கூடிய நட்சத்திர ஒளிகளின் செயல் தன்மை
7.ஒவ்வொரு இயற்கையின் செயலிலும் நடக்கும் கதி கொண்டு இயற்கையின் சுழற்சியுடன் சுழல்கின்றது.
(அதாவது உயிர் தோன்றி பல பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பிறந்து இறந்து சுழலும் நிலையின் இயல்பு இதுவே)

ஆனால் மதி கொண்ட ஞான ஒளி எடுக்கும் ஆத்ம ஞானிகளின் செயல் எப்படிப்பட்டது...?

உயிர் தோன்றிய அந்த (தன்னுடைய) நட்சத்திரத் தொடரையே தன் எண்ணத்தின் அறிவின் ஆற்றலைக் கொண்டு சரீரத்தில் இயங்கும் உயிராத்மாவின் ஒளித் தன்மையை விழிப்புறச் செய்கின்றார்கள். எப்படி...?

1.மெய் ஞான ஒளி அறிவின் வேரை வளர்க்கக்கூடிய
2.வான் கோள்களின் விண்மீன்களின் தொடர்பு படுத்தும் ஒளிச் சக்தியால்
3.ஆத்மாவின் விழிப்பால் - பேரண்டத்தின் உண்மையின் வளர்ப்பு கொண்ட விண்மீன்களின் விழிப்பு நிலையை
4.தன் சிந்தனையின் அறிவின் ஆற்றலைக் கொண்டு பெற்று
5.என்றும் பதினாறாக ஒளிரும் நட்சத்திரமாக விண்ணிலே பிரகாசிக்கச் செய்கின்றார்கள்.

மனிதனின் முதிர்வு நிலை அதுவே...!

January 29, 2024

“நான்…!” என்னும் பலன்

நான் என்பது யார்…? உயிரா.. ஆத்மாவா... இந்த உடலா..?

சரீரம் என்பது அழியக்கூடியது தான். ஆனால் இந்தச் சரீரத்தின் உண்மையின் இயக்கத்தில் உண்மையில் எண்ணம் என்பது எது…?

1.ஒரு பம்பரம் சுழல்கிறது என்றால் எந்த வேகத்தை அதற்குத் தருகின்றோமோ அது வரைக்கும் தான் அதனுடைய சுழற்சி இருக்கும். பின் நின்றுவிடும்
2.குழந்தையை ஆட்டுவிக்கும் ஒரு தூளியும் நாம் ஆட்டுவிக்கும் வேகத்திற்கொப்பத்தான் ஆடுகின்றது. பின் ஆட்டம் நின்றுவிடும்.

செயற்கையில் சுழலும் பொருள்கள் (ஜீவன் இல்லாத) அனைத்துமே நாம் செய்விக்கும் திறனைப் பொருத்து அதன் ஓட்டத்தின் கதியை அடைகின்றது. இயந்திரங்களும் அதனுடைய செயல்பாட்டின் நிலைக்கொப்ப ஓடுகின்றது.

ஆனால் கோள்களின் ஓட்டம் இயற்கையின் கதி விகிதத்தைக் கொண்டு ஜீவனுடன் ஓடிக் கொண்டே உள்ளது. இருந்தாலும்
1.மனிதனின் செயல் நிலையில் உண்மையின் தத்துவ உட்பொருளான
2.”நானின்...” இயக்கத்தை நாம் அறிதல் வேண்டும்.

சுவாசம் எடுத்துவிடுவதும்... கண் இமை மூடித் திறப்பதும்... செவி ஒலி கேட்பதும்... சுவை உமிழ் நீர் ஊருவதும்... இவை எல்லாமே நம் எண்ணத்தைச் செலுத்தாமலே தானே நடக்கின்றது.

கோள்கள் இயற்கையின் கதியில் எப்படி அது இயற்கையின் மாற்றத்திற்கொப்ப எல்லாம் செயல்பட்டு வளர்ந்தே ஜீவனுடன் எண்ணம் இல்லாமல் ஓடிக் கொண்டுள்ளதோ அதைப் போன்று தான்
1.நம் சரீரத்தின் இயக்கத்தின் கதியும் எண்ணத்தைச் செலுத்தாமலேயே
2.பசி... தூக்கம்... மற்றும் உடல் உபாதைகளில் ஏற்படும் வேதனைகளும்... தன் தன் கதியில்
3.நாம் எண்ணத்தைச் செலுத்தாமலே ஓடிக் கொண்டுள்ளது. (பசியோ தூக்கமோ உடல் வலியோ நாம் எண்ணி வருவதில்லை)

செயல்படும் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அந்த உந்துதல் ஏற்படக் கூடிய தருணத்தில்தான்
1.எண்ணத்தில் அதை அறிந்து
2.சாப்பிடவோ தூங்கவோ வலியை நீக்க வேண்டும் என்றோ
3.எண்ணத்தை அதற்காகச் செயல்படுத்துகின்றது உடல்.

கோள்களுக்கு எண்ணம் இல்லாததினால் அது சந்திக்கும் மற்ற கோள்களின் அமிலத் தொடர்பைக் கொண்டு அதன் ஜீவ ஓட்டம் தன் இச்சையில் ஓடிக் கொண்டுள்ளது.

மனித உடலின் இயற்கையின் செயல்படும் கதியில் ஏற்படக்கூடிய மாற்றத்திற்கு எண்ணத்தைக் கொண்டு பசிக்கு உணவையும்... சோர்வுக்கு உறக்கத்தையும்... செலுத்தக்கூடிய எல்லாவற்றிற்கும் எண்ணத்தைச் செலுத்துகின்றோம்.

அப்பொழுது... இந்த “எண்ணம் தான்...” நானா…?

விதை முளைத்து மரமாகி பலன் தந்து பல நாள் வாழும் மரத்திற்கு எண்ணம் இல்லாவிட்டாலும் உணர்வின் செயல் தன்மை உள்ள மரத்தின் உயிர் தன்மை வலுவாகி வளர்த்துக் கொள்கிறது.

தாவரங்கள் எண்ணமில்லாத இயற்கையின் வலுவானாலும் அதற்கு அடுத்த நிலை என்ற உயர் நிலைக்கு உயிர்ப்பிக்கும் அந்தத் தாவரங்களும் செல்வதில்லை.

ஆனால் மனிதச் செயலுக்கோ தன் எண்ணத்தைக் கொண்டு தெய்வ குணங்களான உயர் தன்மைகளை வளர்த்திட அறு குணங்களை உணரக்கூடிய எண்ணத்தின் பால் வரையறுக்கப்பட்ட குணச் சிறப்பின் விதிக்கொப்ப
1.மனிதனிடம் செயலாகும் எண்ணத்தின் கதி கொண்டே
2.நான் என்பது யார்..? என்ற எண்ணத்தை ஊன்றிப் பார்த்தோமானால்
3.மனித எண்ணத்தில் ஓடக்கூடிய பல குணங்களில் பொறுக்கி எடுத்த
4.நற்குணம் ஆறு எதிர் நிலையான தீய குணங்கள் ஆறு என்ற அடிப்படையில்
5.மனிதனுக்குள் ஓடக்கூடிய பல ஆயிரக்கணக்கான எண்ண குண நலன்கள்
6.பல விந்தையின் விபரீத நிலையிலும் செயல் கொள்கின்றதப்பா…!

அவனவன் எடுத்துக் கொண்ட எண்ணத்தின் தன்மைக்கொப்ப மெய் ஞானியாகவும் ஆகின்றான் விஞ்ஞானியாகவும் ஆகின்றான் அல்லது அஞ்ஞானியாகவும் ஆகின்றான்.

மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லாத சிறப்பாகத் தன் எண்ணத்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப மருத்துவம் பொறியியல் தத்துவம் கலைகள் இசை விவசாயம் என்று செயல்படுத்துகிறார்கள் அல்லவா...!

ஆகவே எண்ணத்தின் மூலமே உயிரின் பரிமாணத்தின் பலனாக மனித ஆத்மாவின் வலுவிற்கு வழி தேடும்
1.“நான்...!” என்னும் பலனை
2.நாம் அறிதல் வேண்டும்.

“கண்” தான் நமக்கு ஆண்டென்னா…!

சாதாரண ஆண்டன்னாவை வைத்து அருகிலே ஒலி/ஒளிபரப்பப்படும் அலைளை டிவி ரேடியோவில் படமாக ஒலிகளாகக் காணுகின்றோம். அதே சமயத்தில் வெகு தொலைவில் இருந்து ஒளிபரப்பப்படும் அலைகளைக் கவர்வதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்துக் கவர்கின்றோம்

தொலைவில் இருந்து வருவதை எளிதில் காணுவதற்குச் சக்தி வாய்ந்த ஆண்டென்னாக்களைப் பொருத்துகின்றார்கள். அப்பொழுதுதான் அதைக் குவித்து திரைப்படங்களாக டிவிக்களில் நாம் காண முடிகின்றது.

இதைப் போன்று தான் பழகியவர்களின் உணர்வுகளை நாம் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டுள்ளோம்… “அவருடைய ரூபங்களை… அவருடைய சொல்களை… அவருடைய செயல்களை…!”

அதே சமயத்தில் காவியங்களைப் படிக்கப்படும் பொழுது அதிலே சித்தரிக்கும் உணர்வின் தன்மையையும் இதைப் போன்று தான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

1.இவ்வாறு நாம் எதை எதை எல்லாம் எண்ணிப் பதிவு செய்து கொண்டோமோ…
2.பின் கண்கள் வழி கூடித் தான் நினைவாற்றல் (அந்த அலைகள்) வருகிறது
3.கண்கள் தான் நமக்கு ஆண்டன்னாவாகச் செயல்படுகின்றது.

என்னை ஒருவன் திட்டுகிறான் என்றால் அவன் உருவைப் பார்த்துப் பதிவாக்குகின்றோம். ஆனால் அவனின்று வெளிப்படும் உணர்வுகள் அலைகளாகப் படர்கின்றது.

அவன் சொல்லும் உணர்வைப் பதிவாக்கி விட்டால்… நான் இங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருந்தாலும் அயோக்கியன்…! என்னைத் திட்டினான்… பேசினான்… என்று திரும்ப எண்ணினால்
1.அந்த உருவங்கள் நினைவலைகளாகத் தெரிய வருகின்றது.
2.அந்த உணர்வின் தன்மை என் உணர்வுக்குள் விழிகளில் இருக்கும் திரைகளில் பட்டு உணர்த்துகின்றது… கண்கள்.
3.உணர்வின் நினைவாற்றலாக எனக்குள் இயக்கி அந்தக் கோப உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

விஞ்ஞான அறிவால் டிவி ரேடியோ மூலம் மற்றவைகளைக் காணுவது போன்று… மெய் ஞான அறிவால் பார்க்கப்படும் போது…
1.நுகர்ந்து பதிவு செய்து கொண்டது அது தான் கண்ணன்… கண்கள்
2.நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்.
3.எதைப் பதிவு செய்கின்றாயோ… அதனையே தான் நீ நினைக்கின்றாய்
4.பதிந்த உணர்வுகளை நினைக்கப்படும் பொழுது அதன் நினைவைக் கூட்டும் பொழுது அதுவாகவே நாம் மாறுகின்றோம் என்று தான்
5.அன்று வியாசகர் இதை எல்லாம் நமக்குத் தெளிவாக எடுத்துரைத்தார்.

சாதாரண மனிதனிடம் பழகும் பொது திட்டியவன் தவறுகளைச் செய்தவன் இடையூறு செய்தவன் என்று எண்ணத்தால் பதிவு செய்து கொண்ட பின் அந்த நினைவுகள் எதிர்கொண்டு வருகின்றது. நோயுற்றவர்களைப் பரிவுடன் பார்க்கப்படும் பொழுது அதுவும் பதிவாகி… நமக்குள் அந்த அலைகளும் வரத் தொடங்குகின்றது.

நம் பிள்ளைகள் மீது பாசம் கொண்டு இருந்தாலும்… சந்தர்ப்பத்தால் அவன் தவறு செய்கின்றான் என்றால் அந்த உணர்வைப் பதிவு செய்து கொள்கின்றோம்.
1.நல்லவனாக இருக்கும் பொழுது ஒரு பதிவு
2.ஆனால் தவறு செய்யும் போது அது ஒரு பதிவு
3.அவன் செய்த தவறினைப் பற்றி நாம் எண்ணப்படும் பொழுது
4.“நல்லவனாக இருந்தான்… இப்போது இப்படி ஆகிவிட்டான் என்ற உணர்வு நம்மை இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் எளிதில் காணுகின்றோம்.

இத்தகைய உணர்வலைகள் படரும் பொழுது நம்முடைய நல்ல எண்ணங்கள் தடைப்படுகின்றது…. நம் செயல்களும் மாறாக வரத் தொடங்குகிறது. தீமையின் உணர்வுகளை நுகரும் பொழுது நமக்குள் அது நோயாகி விடுகின்றது நல்ல சிந்தனைகள் அழிந்து விடுகின்றது.

இதைப் போன்று நம் எண்ணத்தால் நமக்குள் பதிவு செய்து கொண்ட நிலை எதுவோ கண்ணின் நினைவுக்கு வரும் பொழுது புவியிலிருந்து கவர்ந்து,,, ஆன்மாவாக மாற்றி… உயிரின் தன்மை நுகர்கிறது.

எப்படி ஆண்டன்னா அந்தந்த அலைகளைக் கவர்ந்து டிவி ரேடியோக்களில் பரப்பப்படும் பொழுது அந்த இயந்திரங்கள் ஒளி ஒலியாகப் பரப்பிப் படமாக ஒலிகளாகக் காட்டுகின்றதோ அதைப் போன்று தான் நம் கண்ணின் நிலைகளும்.

விஞ்ஞான அறிவுப்படி இந்த உண்மைகளை நீங்கள் காணலாம்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால் நம்மை அறியாது பதிவாகும் தீமையின் இயக்கங்களிலிருந்து தன்னை மீட்டிக் கொள்ளும் அருள் சக்திகளை எவ்வாறு பெற வேண்டும் என்பதற்குத் தான்…!

சக்தி வாய்ந்த ஆண்டன்னாக்களை வைத்து வெகு தொலைவில் இருப்பதை விஞ்ஞான அறிவு கொண்டு கவர்வது போன்று தான்
1.விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்வதற்கு உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றேன் (ஞானகுரு).
2.பதிவானதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்தால் உங்கள் கண்களுக்கு ஆற்றல் மிக்க சக்திகள் கூடி…
3.நினைத்தவுடன் ஞானிகள் அருள் சக்திகளைப் பெறும் தகுதி நீங்கள் பெறுகிறீர்கள்… வரும் தீமைகளை அகற்றிட முடியும்.

January 28, 2024

யோகா…!

விவேகானந்தர் வக்கீலுக்குப் படித்திருந்தாலும் நமது ஞானிகள் உணர்த்திய தத்துவங்களை எடுத்துரைத்து
1.எந்த மனிதனுக்கு நீ பூரண சேவை செய்கின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக நின்று அதுவே உனக்கு நன்மை செய்கின்றது.
2.உன் ரூபத்தில் அவர்களுக்குள் கடவுளாக நின்று அது செயலாக்குகின்றது.
3.நீ கடவுளை எங்கே தேடுகின்றாய்…? உன்னுள்ளே கடவுள் உண்டு என்று உணர்த்தினார்.

ஆனால் ஆரம்பத்தில் கடவுளைத் தேடி விவேகானந்தர் அலையும் நிலையில் இராமகிருஷ்ண பரமஹம்சரைக் கண்டு கடவுள் எங்கே இருக்கின்றார்…? நான் பார்க்க வேண்டும்…! என்று கேட்கின்றார்.

ஆனால் அந்தச் சமயத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர் முள் படுக்கையின் மீது படுத்திருக்கின்றார். விவேகானந்தர் அதை உற்றுப் பார்த்து “இங்கே முள் அல்லவா இருக்கின்றது அதிலே படுத்திருக்கின்றீர்களே…!” என்று கேட்கிறார்.

1.நீ முள் என்று பார்க்கின்றாய்… அதனால் உனக்கு வேதனை (வேதனையின் உணர்வை உனக்குள் நின்று உனர்த்துவது கடவுள்) தெரிகின்றது.
2.நான் முள் என்று நினைக்கவில்லை… எனக்கு வேதனை இல்லை…! என்று சுருக்கமாகச் சொல்லிப் பாடத்தை முடிக்கின்றார்.

விவேகானந்தர் நம் நாட்டின் தத்துவங்களை… பக்தியின் நல்ல ஒழுக்கங்களை அமெரிக்காவிற்குச் சென்ற போது சுட்டிக் காட்டினார். உலக நிலைகளில் இந்தியாவின் நிலைகளைப் பரப்பவும் செய்தார்.

மனிதனுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும்…? ஏனென்றால் அதுவே கடவுள் ஆகிறது.
1.நீ எண்ணும் எண்ணமே உனக்குள் கடவுள் ஆகிறது
2.அதனின் உணர்வின் செயலாக கடவுள் செய்கின்றது
3.கடவுளுக்குச் செய்யும் சேவையாக இது ஆகிறது என்ற இந்தத் தத்துவத்தை அவர் கொடுத்தார்.

இதை எல்லாம் குருநாதர் என்னிடம் (ஞானகுரு) சொன்னார். நான் புத்தகங்களைப் படிக்கவில்லை.

இந்தியா முழுவதும் யாத்திரை செய்த விவேகானந்தர் இமயமலைச் சாரலில் செல்லும் சமயம்… மந்திரவாதியிடம் சிக்கிக்கொண்ட ஒரு சீடன் “இங்கே மகான் வருகின்றார்…” என்று தேடி ஓடி வந்து விவேகானந்தர் காலிலே பாத நமஸ்காரம் செய்கின்றான். உங்களுடைய அருள் தேவை என்று கேட்கின்றார்… அவரின் சொற்பொழிவுகளையும் கேட்கின்றான்.

ஆனால் சீடனின் குருவான அந்த மந்திரவாதியியோ “நான் கடவுளையே கைவல்யம் செய்துள்ளேன் என்று சொல்லும் சக்தி பெற்றவன் அவனிடம் சிக்கியவன் தான் விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்கின்றான் அவரிடம் ஆசீர்வாதம் கேட்க வருகின்றான்.

இதற்கு முன்னாடி எத்தனையோ நடந்த நிகழ்ச்சிகள் வேறு…! கடைசியிலே நடந்த நிகழ்ச்சிகளை ௳ட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.
1.இதையெல்லாம் புத்தகத்தைப் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்
2.புத்தகத்தை படிக்கக்கூடிய சரியான நிலை எனக்கில்லை.
3.ஒரு பத்திரிகையைப் படிக்க வேண்டும் என்றாலும் நண்பர்கள் தேவை.
4.என்னுடைய படிப்பறிவு அவ்வளவுதான்…!

தான் விவேகானந்தரின் ஆசி பெற்றதைத் தன்னுடைய மந்திரவாதியிடம் அந்தச் சீடன் சொல்கின்றான்

ஆனால் அந்த மந்திரவாதியோ… நாளை அவன் பேசப்படும் பொழுது இரத்த இரத்தமாகக் கக்கப் போகின்றான்… அவருடைய பாதத்தை நீ நமஸ்காரம் செய்து வருகிறாயே…! என்று அவனை அச்சுறுத்துகின்றான்.

மந்திரவாதி தனக்குள் இருக்கும் ஆவியின் நிலைகள் கொண்டு ஏவல் செய்து விவேகானந்தர் மறுநாள் பேசப்படும் பொழுது… இரத்த இரத்தமாகக் கக்க வைக்கின்றான்.

அதைக் கடந்து சென்ற பின் விவேகானந்தர் குருவை எண்ணிப் பார்க்கின்றார். இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது…
1.நீ எதை எண்ணுகின்றாயோ அதுவே உனக்குள் கடவுளாக இருக்கின்றது.

2.அந்த உணர்வின் செயலாக்கமே உன்னுடைய செயலாக்கமாக வருகின்றது
3.முள் படுக்கையில் நான் படுத்திருக்கும் பொழுது “நீ கடவுளைக் காண வேண்டும் என்று வந்தால்
4.அப்போது நீ எண்ணிய உணர்வின் தன்மையை உன் உயிர் தான் அதை (அந்த வேதனையை) எவ்வாறு இயக்குகின்றது.
5.அந்த உணர்வின் செயலாக செயல் எவ்வாறு இருக்கின்றது என்று காட்டுகின்றார்

அதைக் கண்டு கொண்ட பின்பு தான் “நான் கடவுளைக் கண்டு கொண்டேன் எனக்குள்ளேயே…!” என்று அவர் உணர்ந்து ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அந்த உணர்வின் எண்ணங்களை எவ்வாறு இயக்க வேண்டும் என்று கால்நடையாக இந்தியா முழுவதும் பறைசாற்றினார்… பாத யாத்திரையாகச் சென்று.

ஆனால் வட இந்தியாவில் மந்திர ஒலிகள் அதிகம்… தென்னாட்டில் இங்கே சுழன்று வந்தார். இங்கிருக்கும் அறிவுகளைக் கண்டார்… மக்களுக்குத் தெளிவான நிலைகளை வழி காட்டினார்.

ஆனால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளதில்லை புத்தகங்களைப் படிக்கின்றோம்… அறிவின் ஞானத்தைப் போதிக்கின்றோம். தன் நிலையில் அவர் போதிப்பதைக் கடைப்பிடிப்பதில்லை.

காரணம்… நாட்டில் நடக்கும் நடப்புகளில் நல்ல ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாலும் அரசியல் பேதம் மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று சாடும் பொழுது… இதை அதிகமாகச் சுவாசித்த பின்… தன் எண்ணங்களில் அதைக் கவரப்படும் போது உண்மையின் நிலையைத் தன்னுள் செயல்படும் நிலைகளை இழந்தே நிற்கின்றோம். அதை மாற்றும் நிலைகள் அற்றே போய்விட்டது.

குருவை எண்ணுகின்றார்…
1.எண்ணியதுதான் கடவுள் என்று நீ உணர்த்தினாய்… அதன்படி உயர்ந்த நிலைகளை எண்ணினேன்
2.ஆனால் இந்த ஏவல் என்ற நிலைகள் “என்னைச் சாடுகின்றதே…” என்று விவேகானந்தர் வேதனைப்படுகின்றார்.

நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே உயர்ந்த எண்ணத்தைத் தானே எண்ணினேன் என்று சாதாரண மனிதன் பலருக்கு உபதாரம் செய்துவிட்டு அதன் நிலைகள் என்னைக் கடவுள் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் சோதிக்கின்றான் என்று வேதனையைச் சுவாசிப்பது போன்று இவரும் அவ்வாறே சுவாசிக்கின்றார்... நான் எந்தப் பிழையும் செய்யவில்லையே என்று…!

குரு அருளால் மந்திரவாதி ஏவல் பண்ணுகின்றான் என்று உணர்ந்து கொள்கின்றார். அதைப் புரியும் ஆற்றல் வந்துவிட்டது.

எனது உயிர் எனக்குள் இருந்து படைக்கின்றது என்று நீ சொன்னாயே. நான் நன்மைகளைத் தானே செய்கின்றேன். ஆனாலும் அவனுடைய தீமையின் நிலைகள் எனக்குள் வருகின்றதே… ஏவல் செய்கின்றானே…! என்று அவர் சிந்திக்கின்றார்.

மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த மந்திரத்தின் ஒலிகள் அவன் ஏவல் செய்யும் பொழுது “எந்தத் தீமையும் செய்யும் என்று” இதைப் பிற்காலங்களில் உணர்த்துகின்றார் தீமைகள் இருந்து மீள வேண்டும் என்று.

இதையெல்லாம் என் குருநாதர் சொன்னதை உங்களுக்கு அப்படியே சொல்கின்றேன்

பரமஹம்சர் காட்டிய நிலையில் கடவுளைக் காண என்று உண்மை நிலையில் தன்னை நாடி வந்தவருக்கு அந்த உணர்வின் தன்மை ஊட்டி தனக்குச் சரியான சீடனாக விவேகானந்தரை எடுத்து… இந்த உணர்வின் வேட்கைகளை உலகிற்குப் பரப்பச் செய்தார்.

ஆனாலும் அந்தத் தத்துவ ஞானி இத்தனை இன்னல்கள் பட்டார்.

அங்கே நகர்ந்து செல்லப்படும் பொழுதுதான் அடுத்தடுத்து அடுத்தடுத்து இந்தத் தீமைகள் வரப்படும் பொழுது “வெறுத்திடும் நிலைகள்” அவருக்குள் வருகின்றது.

1.இந்த உலகின் நிலைகள் நடப்பதை நான் என்னவென்று சொல்வேன்…! என்று தன் மூச்சின் உணர்வின் தன்மையை ஏங்கி…
2.தவறு செய்வோர் நிலைகளை இவருக்குள் அடக்கி அடக்கி அதனால் “தனக்குள் கொதிக்கும் நிலையே” அவருக்குள் வருகின்றது.

நான் தவறு செய்யாது இருந்து… மந்திரவாதியின் சீடன் இங்கே வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்ற பின் நடந்த நிகழ்ச்சியால்… இவருக்குள் கொதிப்புகள் எழுந்து
1.தீமைகளைச் செய்கின்றானே…! இந்தப் பாழடைந்த உலகத்தை நான் என்னவென்று சொல்வேன்…?
2.இனி நான் எதை எதிர்த்துப் போராடுவது என்ற நிலையில்
3.குறுகிய நேரத்தில் “இந்த உடலை விட்டு அகன்றால் போதும்…” என்ற அந்த உணர்வின் நிலையே அவருக்குள் வருகின்றது.

நன்மைக்காகச் செயல்படுத்திய நிலையில் கடைசியில் இந்த உடலை விட்டுப் போனால் போதும்… சேவை என்ற நிலை இருப்பினும் எல்லோரும் இந்த உண்மைகளை உணரட்டும்…
1.அருள் உணர்வுகள் என் உடலில் நிலைத்திருக்கட்டும்…
2.தீமைகளில் நான் சிக்காது இந்த உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தால் போதும் என்று கதறுகின்றார்.

இந்த உணர்வுகள் வேட்கை அதிகமாகும் போது தான் தன்னை அணுகி உள்ள சிஷ்யர்களிடம் “எனக்குக் கொதிக்கின்றது… வீசுங்கள்…” என்று தன் ஆன்மாவை அங்கே பிரிக்கின்றார்.

இவரைக் குண்டலினி யோகம் கற்றவர் என்று சொல்கின்றார்கள். எந்தக் குண்டலினியை அவர் செய்தார்…?

அவர் பள்ளியிலே படிக்கும் காலத்தில் குண்டலினி யோகம் இருந்தால் அதைப் பெற வேண்டும் என்று படிக்கும் பொழுது தான் யோகத்தை மரத்தடியில் செய்து கற்றுக் கொண்டார்.

ஆனால் பிற்காலத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்கப்படும் பொழுது
1.யோகம் என்பது அது அல்ல…
2.நீ எதை நினைக்கின்றாயோ இந்த உணர்வு தான் உனக்குள் யோகமாக அமைந்து
3.உணர்வின் செயலாக்கங்களாகச் செயலாற்றுகின்றது என்று பரமஹம்சர் சொன்னார்.

உணர்வினை நுகரும் நிலைகள் கொண்டு “உயிரின் இயக்கத்தால் உணர்வின் நிலை உனக்குள் எவ்வாறு வருகின்றது…?” என்ற இந்த யோகத்தைத் தான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கற்பித்தார். இவர்கள் சொல்லும் குண்டலினியை அவர் செயல்படுத்தவில்லை.

நான் யார்…? என்ற புதிருக்கு “விடை”

1.பல பல பிறவிகளில் நாம் செய்த நிலைகள் அனைத்தும் செய்வினையாகி (PAST)
2.அதனுடைய செயல் தொடராக இந்தப் பிறவியில் செய்கின்ற (தற்சமயம் நிகழ்ந்து கொண்டிருக்கும் – PRESENT) வினைப் பயனாகி
3.மீண்டும் செய்த வினையாகின்ற எண்ணத்தின் வழிச் செயலுக்கு வித்தாகும் (FUTURE) “இவனே…!”
4.ஏற்கனவே செய்யப்பட்ட முன் ஜென்ம வினையான உரத்தை ஈர்த்து
5.வினையினது இரு வழிச் செயலான நல்வினை தீவினை இரண்டின் பயன் வீரியப் பயனுக்கு
6.அந்தத் தொடரில் இவனும் உட்பட்டு இரண்டின் பலன்களையும் அனுபவிக்கும் நிலை வருகின்றது.

தீமையோ நன்மையோ எந்த வினையின் வீரியம் அதிகமாகின்றதோ அதற்குள் மற்றொன்று உள்ளடங்கி விடுகின்றது. அப்படி நடக்கும் செயலைத் “தன் விதி” என்னும் செயல்பாடாக
1.செய்த வினையின் வீட்டில் (முன் பிறவிப் பயனால் உருவான உடலில்)
2.செய்யப்பட்ட வினை வந்து இருந்து தன் அரசைத் தான் ஓச்சி
3.தனது செயலுக்கு இவனின் எண்ண உந்துதல்களுக்குத் துணையாகி
4.இன்ப துன்பங்களை ஒவ்வொரு நாளும் அனுபவிக்கச் செய்கின்றது.

மூலமும் இவனே ஆகின்றான்…! மூலக் காரணமும் இவனே ஆகின்றான்…! என்னும் தத்துவக் கோட்பாட்டின் தொடரில் நல்லது கெட்டதன் காரணத்தை ஆராயப் புகும் இவன்
1.தன் எண்ணச் செயலின் நிகழ்வு வழிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டான் என்றால்
2.நான் என்பது யார்…? என்ற புதிருக்கும்…
3.உயிரா…? ஆன்மாவா…? எண்ணமா…? என்றெல்லாம் சிந்திக்கச் செய்யும்
4.சுழல்கின்ற அணுவின் (உயிரணு) சுழலோட்ட எண்ணத்தின் வினைப் பயனைக் கண்டுணரலாம்.
5.மதி கொண்டு தெளிவு பெற்று உயர் ஞானம் பெறும் செயலுக்கெல்லாம் வழி உணர்ந்திடலாம்
6.அந்த வழியில் நல்வினைப் பயனுக்குச் சக்தி ஊட்டி… சக்தி பெற்று
7.ஆதி சக்தியால் (இயற்கை) கலப்பான தீவினையான எண்ணப் பயன் களையத் தலைப்பட்டு
8.அதைத் தொடர்ந்து வரும் செய்யப்பட்ட வினையின் (இப்பொழுது செய்து கொண்டிருக்கும்) நற்செயலின் செயலுக்கே உரமாக்கிடலாம்.

ஆகவே இந்த ஜென்மத் தொடரில் தொடர்ந்து செய்யப்படுகின்ற வினையின் செயலை
1.நற் செயலாக்கினால்
2.நல் சுவாசத்தால் ஈர்த்துக் கொண்டால்
3.அவ்வாறு அமைக்கும் அதே தொடரில் - செய்த வினைப் பயனை நல் வினையின் வளர்ப்பாக ஆக்க முடியும்.

சந்தர்ப்பத்தால் வரும் தீவினைப் பயன்களை எல்லாம் களைவதற்குத் தியான முறையாக வான இயல் வழியைக் (விண் செல்லும் மார்க்கம்) கண்டு அதன் வழியில் செல்லச் செல்ல அனைத்தும் ஒன்றான நல்வினைப் பயனாக்கிடலாம்.

இத்தகைய விதிகளை எல்லாம் செயல்படுத்துகின்ற காரண காரிய கர்த்தாவான மூலமும் “இவனே ஆவான்…!”

January 27, 2024

“தூர திருஷ்டி...”

1.கண்களால் பார்க்கும் செயல்படம்
2.அகத்திற்குள் தோன்றும் எண்ணத்தின் கற்பனைப் படம்.
3.கனவில் காணும் படம்
4.பிறர் சொல்லும் ஒலி (சொல்லை) கேட்டு அந்த எண்ணத்தில் எடுக்கும் படம்.
5.இப்படி மனித உணர்வில் நாம் நான்கு வகைப் படங்கள் எடுத்துக் கொண்டே உள்ளோம்.

நம்முடைய எதிரில் காண்பவை எல்லாம் நம் கண்கள் படமாக எடுத்துக் கொள்கின்றது.

கற்பனையாக எண்ணும் படத்தை நம் எண்ணத்தின் உணர்வில் ஒரு தடவை எந்த இடத்தை எண்ணிக் கற்பனையில் படம் எடுக்கின்றோமோ அதே தொடர் தான் எப்பொழுது அந்த இடத்தை எண்ணும் பொழுதெல்லாம் நினைவில் வருகின்றது.

அதே படத் தொடர்
1.மற்றவர்கள் ஒலியால் சொல்லக்கூடிய பொருளைப் பற்றி
2.எண்ணத்தின் நினைவு படமாகவே 
3.நம் ஆத்மாவில் நாம் பார்க்காமலேயே படமெடுத்து விடுகின்றது - “கற்பனையில்...!”

எண்ணம் உறங்கிய நிலையில் ஆத்மாவில் பதிவான உணர்வின் தொடர் கொண்டு நாம் சுவாசிக்கும் பொழுது “தூக்கத்திலே மோதும் சுவாச ஒலியால்” கனவாக... அந்தப் படமாக... ஆத்மாவில் பதிவு நிலை ஏற்பட்டுவிடுகின்றது.

சரீர வாழ்க்கையில் வாழக்கூடிய செயல் தன்மையில் கண்களால் மட்டுமல்லாமல் ஆத்மாவின் தொடர்பிலும் இப்படம் பதிவாகின்றது. (உதாரணமாக - செவி வழி கேட்கும் ஒலிகள்,,, மூக்கின் வழி சுவாசிக்கும் மணங்கள்... உடலில் உணரும் உணர்வுகள்...)

கண்களால் தான் நாம் அதிகமாகப் படமாக எடுக்கின்றோம். இருந்தாலும் அத்தகைய ஒளி கொண்ட சுவாச கதியில் இயக்கத்தின் தொடர் நம் கண்களின் தொடர்பில்லாமல்
1.கற்பனை... கனவு... வெளியிலிருந்து வரும் ஒலி இந்த மூன்றின் படமும்
2.உணர்வின் பதிவு கொண்டு சுவாசமெடுக்கும் காந்த மின் அலையால் ஆத்மாவின் படமாகப் பதிந்திருக்கின்றது.
3.ஆகவே பார்க்கும் பொருளைப் பற்றிய படங்களும் ஆத்மாவின் பதிவுப் படமே.

இந்தச் சரீரத்தின் செயலால் ஏற்படும் ஆத்மாவின் இயக்கத்தின் கதி தான் மனித வாழ்க்கையின் உயிர் செயல்பாடாக ஆத்மாவின் இயக்கம் ஜீவ காந்த சரீரமுடன் செயல் கொள்கின்றது.

இந்த ஜீவ காந்தமுடன்... ஆத்ம உயிரில்...
1.ஒலி... ஒளி கொண்ட பதிவின் தன்மை உணர்வின் நினைவலைகள் மோதும் செயல்பாட்டில்
2.விழிப்பு நிலை ஏற்படக்கூடிய "ஐந்தாம் நிலையான... ஞானத்தின் செயல் அறிந்து “தூர திருஷ்டி...! (TELESCOPE போல்) என்ற காட்சியைக் காணும் நிலையும்
3.அதற்கடுத்த "ஆறாம் நிலையில்... அண்டத்தில் சுழலும் மண்டலங்களின் உண்மையை" நம் ஆத்மா அங்கு சென்று அறியும் நிலையும்
4."ஏழாம் நிலையான... படைப்பின் படைப்பாக்கும்" செயல் தன்மையும்
5.அடுத்தடுத்த நிலைக்கு இந்த "உயிரும் ஆத்மாவும்" இணைந்து ஒளிப் படம் எடுக்கும் இந்த ஆத்மாவுக்கே ஏற்படக்கூடிய செயல் நிலைக்கு
6.ஆத்மாவின் விழிப்பு ("நம் விழிப்பு நிலை") இந்தக் கண் ஒளியில் இருந்து பெறுவதற்கு
7.விழிப்படலத்தின் ஒளித் தன்மையை "மின் காந்த ஈர்ப்பின் செயலுக்குக் கொண்டு வர வேண்டும்..."

அதாவது முதலில் சொன்னபடி நான்கு விதமான படங்களை எடுக்கும் நாம் ஐந்து ஆறு ஏழு என்ற நிலையில் நமக்குச் சொந்தமான "நம் உயிர் ஈர்ப்பது போல்" அலைகளை இழுத்துக் கவர்ந்து இயக்கும் நிலைக்கு வர வேண்டும்.

மூக்கு வழியாகக் காற்றைச் சுவாசிப்பது போல் "ஆன்மாவின் விழிப்பு என்ற... அந்தக் கண்கள் வழியாக" நுண்ணிய அலைகளைக் கவரும் நிலைக்கு வர வேண்டும்.

இன்று விஞ்ஞானக் கருவிகள் கவரும் நுண்ணிய அலைகளைக் காட்டிலும் மிகவும் நுண்ணிய நிலைகளைக் கவர முடியும்.

அது தான் ஆன்மாவின் விழிப்பு நிலை என்பது..!

ஞானிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

அன்றைய காலங்களில் இஸ்ரேல் நாட்டில் கிழக்கே பார்த்து வணங்கும் நிலை தான் உண்டு… நமது நாட்டிலும் கிழக்கே பார்த்து வணங்கும் நிலைகள் உண்டு.

ஆனாலும் அன்று நபிகள் நாயகம் மேற்கே பிறைச் சந்திரனைப் பார்க்கின்றார். அது தேய்ந்து வளர்வதையும் பார்க்கின்றார்.

அதாவது சந்திரன் தேய்ந்த நிலைகள் கொண்டு அமாவாசைக்குப் பின் கண்ணுற்றுப் பார்க்கப்படும் போது
1.சூரியனின் ஒளிக்கதிர்கள் அதன் மீது படும்பொழுது எப்படி அது வளர்கின்றதோ
2.இதைப் போல மனிதனுடைய எண்ணத்தில் தீமைகள் அகற்றிடும் தன்மை வளர வேண்டும் என்று
3.பிறைச் சந்திரனைக் காட்டி… ஆரம்பத்தில் அது வளர்வது போன்று
4.ஒளி கண்டு இருள் மறைவது போன்று “மனிதன் தனக்குள் எவ்வாறு தெளிந்த நிலைகள் பெற வேண்டும்…?” என்று
5.உபதேசக் கருத்துக்களை அங்கே மதீனாவில் பரப்பினார்.

அதன் வழியில் அக்காலங்களில் கிழக்கே பார்த்து வணங்குவதற்குப் பதில் மேற்கே பார்த்து வணங்கும்படி செய்தார்.

ஆரம்பத்தில் மக்காவில் நடந்த அதர்மங்களையும் தெய்வீகப் போர்வையில் தவறான நிலைகள் பல செய்ததையும்… தடுக்கத் தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துப் போர் முரசு கொண்டு நபிகள் செயல்படுத்தினார்.

காரணம்… ரோமானியர்கள் (கவர்னரின்) ஆட்சிக்கு கீழ் இருந்தாலும் அங்கே தீமை கொண்ட கொள்ளையர்கள் பெரும் சொத்துகளைச் சேர்த்து… மற்றவர்களை அடக்கி ஆண்டு… ஆங்காங்கு இருக்கும் நிலைகள் கொண்டு போர்கள் செய்து கொண்டிருந்தார்கள்.

1.சட்டங்கள் இருப்பினும் மதத்தின் கீழ் கடைபிடிப்பதில்லை. அந்த மதங்களின் மீது ஏதும் கை வைப்பதில்லை.
1.அவர்களுக்குக் கப்பம் கட்டுவதும் தன்னை எதிர்க்காத நிலைகள் இருந்தால் போதும் என்ற நிலைகள் இருந்ததனால்
2.இனப்போர்களும் மற்ற போர்களும் வந்தது.

இப்படி… மதத்தின் கீழ் தெய்வீகப் போர்வையில் அங்கே கொள்ளை அடிப்பதும் கொலைகள் செய்வதும் பல தவறுகள் செய்யும் அந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும் என்று நபிகள் நாயகம் போர் செய்து அந்த மக்காவைக் கைப்பற்றினார்.

அவருக்குள் செயல்பட்ட மகானின் அந்த ஞானத்தின் தொடர் கொண்டு அங்கே மக்காவில் இருக்கும் நிலைகளைச் சீராக்கினார்.

அங்கே 4000 ஆண்டுகளுக்கு முன்…
1.போகரால் உருவாக்கப்பட்ட முருகனும்
2.மனித உணர்வின் நிலைகள்… பல குணங்களின் சிறப்பு கொண்ட விநாயகர் தத்துவமும் “சிலைகளாக” மக்காவில் உண்டு.
3.அதிலே இருக்கும் விநாயகர் சிலையைத் தான் இன்றைய நிலைகள் திருப்பி வைத்து (போகருடைய நிலைகள் கொண்டு) முத்தமிடுகின்றார்கள்.
4.அங்கே யானை மீது லிங்கமும் உண்டு.

இது குருநாதரால் காட்டப்பட்ட நிலைகள். ஏனென்றால் இந்த உலகில் நடக்கும் இரகசிய நிலைகளை குருநாதர் தெளிவாக்கினார்… உலக மக்கள் அனைவரும் தெளிந்திட வேண்டும் என்ற நோக்கத்தில்…!

உணர்வின் எண்ணங்கள் கொண்டு உடல் எப்படி இயங்குகின்றது என்பதையும்… உயிரின் இயக்கங்களையும் உணர்வின் செயலாக்கங்களையும் இப்போது யாம் சொல்வது போன்று தான் அக்காலங்களில் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

அதே சமயத்தில் மனிதனுக்கு மனிதன் எவ்வாறு உதவ வேண்டும்…? என்றும் தீய பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்… குடி போதையோ மற்ற தவறான நிலையில் இருந்து அறவே நீக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

1.மனிதனை உருவாக்கிய உயிரைக் கடவுளாக மதித்து
2.உடலுக்குள் தீங்கு விளைவிக்காது காத்திட வேண்டும் என்று உணர்த்தினார்.

அப்படி உருவாக்கிய நிலைகள் கொண்டு தான் அங்கே மற்ற பழைய சிற்பங்களையும் சிலைகளையும் நீக்கிவிட்டு “உண்மையின் பொருளை மக்கள் பெற வேண்டும்” என்று செயல்படுத்தினார்.

January 26, 2024

மகரிஷிகள் காட்டிய உண்மைகளை உணர்ந்து கொண்டால் போதும்…!

பல கோடிச் சரீரங்களில் உயிர் கடவுளாக நின்று எண்ணியதை எல்லாம் உருவாக்கிக் கொண்டே உள்ளது. அதாவது

1.பரமாத்மாவாக மாறுவதைத் ஆன்மாவாக மாற்றித் தனக்குள் ஜீவான்மாவாக மாற்றுகிறது
2.அதுவே உள் நின்று கடவுளாக ஒவ்வொரு உணர்வுகளையும் உறுப்புகளையும் நமக்குள் உருவாக்குகிறது

இவ்வாறு உருவுக்கு உறுதுணையாக நம் உயிரின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்தான் அன்று வியாசகன்

ஆதியில் அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் தன்மையைப் பகுத்தறிந்து உணர்வின் செயலால் சாதாரண தன் இன மக்களுக்கு இது கிடைக்க வேண்டும் என்று இந்த 4000 ஆண்டுகளுக்குள் மிகத் தெளிவான நிலைகள் வியாசகன் கொடுத்தான்.

ஆனால் இதையெல்லாம் சாங்கிய சாஸ்திரமாக மாற்றப்பட்டு… மனிதனின் முழுமையின் உண்மை நிலைகளை அறியாதபடி…
1.மனிதனான பின் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலை தடுமாறி
2.கடவுளுக்கு நைவேத்தியம் செய்தால் நம்மைக் காப்பாற்றுவான் என்றும்
3.அவனுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்தால் அவன் மகிழ்ந்து எனக்கு உதவி செய்வான் என்றும்
4.இத்தகைய எண்ணங்களைத் தான் நமக்குள் உருவாக்கி விட்டார்களே தவிர
5.மனிதன் மகரிஷிகள் உணர்வைத் தனக்குள் எடுத்தால் தீமையான உணர்வுகளில் இருந்து மீள முடியும்
6.அந்த மகரிஷிகள் சென்ற இடத்தை நாம் அடைய முடியும் என்று உணர்த்தவில்லை.

அந்த மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள்…
1.அவர்கள் சொன்னது அனைத்தையும் உங்களுக்குத் தினசரி பதிவாக்கி தெளிவாக்கி
2.அதன் உணர்வை நினைவாக்கி உங்களைக் காப்பதும்
3.உங்கள் மூதாதையர்களை விண் செலுத்திக் காப்பதும்
4.இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் எங்கே செல்ல வேண்டும்…? என்ற நிலையை உணர்த்தி வருகின்றேன் (ஞானகுரு).

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவத்தின் வாயிலாக இந்த உணர்வின் இயக்கங்களை எம்மை அறியச் செய்து எல்லோருக்கும் உணர்வைப் பதிவு செய்யும்படி சொன்னார்.

அந்த அருள் வழிப்படி ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் அறிந்து இந்த வாழ்க்கையில் தீமைகளை அகற்றித் தீமையற்ற உணர்வைத் தன்னில் விளைய வைக்க முடியும்.

வான்மீகி படித்தவன் அல்ல வியாசகரும் படித்தவர் அல்ல. அதைப் போன்று தான் கிராமத்தில் வாழக்கூடிய படிப்பறிவில்லாத மக்களாக இருந்தாலும்
1.எம்முடைய உபதேச உணர்வுகளைப் பதிவு செய்து கொண்டால் போதும்
2.இந்த நினைவு உங்களைக் காத்திடும் எண்ணமாக வரும்.

எத்தகைய தீமையாக இருந்தாலும்… உங்களைக் காத்து மற்றவர்களைக் காத்தாலும்… அந்தத் தீமைகள் உங்களைச் சாடாது “உங்களைக் காக்கும் வலுவான எண்ணங்களை நீங்கள் பெற முடியும்…” என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன்.

“எத்தகைய தீமையை உருவாக்குபவரை” நீங்கள் உற்றுப் பார்த்தாலும் அதன் உணர்வை நுகர நேர்ந்தாலும் அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தாலும் அந்த தீமையின் உணர்வுகள் உங்களுக்குள் இணைந்து விடாது.

அதே சமயம் அந்த மகரிஷியின் உணர்வால் உங்களைக் காத்திட முடியும். தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் எவ்வாறு அந்தத் திரவகம் அதில் சேர்ந்த செம்பையும் பித்தளையும் ஆவியாக நீக்குகின்றதோ… இதைப் போன்று
1.உபதேசம் கேட்கும் அனைவருக்கும் இந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் எம்மால் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டு
2.எப்போது எந்த நிமிடத்தில் பிறருக்கு உதவி செய்கின்றீர்களோ
3.அவர்களின் வேதனைக் குரலைக் கேட்டு அவர்களுக்குப் பரிவான நிலைகள் கொண்டு உதவி செய்தாலும்
4.ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
5.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று பல முறை சொல்லி விட்டால்
6.திரவகம் போன்று இருக்கும் இந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் தீமையைக் கேட்டறிந்தத் தூய்மைப்படுத்தும்.

அதைத் துடைத்து விட்டு… தீமையில் வாடுபவர் அந்த மகரிஷிகளின் சக்தி பெற வேண்டும் அவர் நோய் நீங்க வேண்டும் அவர் எதிர்காலம் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உங்களுக்குள் படைத்திடல் வேண்டும் (இது முக்கியம்).

இந்த உணர்வின் செயலாக வெளிப்படுத்துவதை இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
1.எவர் கேட்டுணர்ந்தாலும் அவர் உடலிலும் புகுந்து
2.அந்தத் தீமையை அகற்றிடும் சக்தியாக விளையும்.

விநாயகர் தத்துவத்தில் இத்தகைய நிலையைத் தான் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
1.தன் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும்…?
2.தன் வாழ்க்கையில் வரும் நன்மைகளை எவ்வாறு காக்க வேண்டும்…?
3.பிறருடைய தீமைகளிலிருந்து நாம் எப்படி விடுபட வேண்டும்…?
4.தீமையில் வாடுவோருக்கு நாம் எவ்வாறு உதவி செய்ய வேண்டும்…?
5.தீமையான நிலைகள் தன்னைப் பற்றிடாது எவ்வாறு வாழ்ந்திட வேண்டும்…? என்ற இந்த நிலையை
6.சாதாரண பாமர மக்களும் அறிந்துணர்ந்து கொள்வதற்குத் தான் விநாயகர் தத்துவம் தெளிவாகக் காட்டப்பட்டது ஞானிகளால்…!

January 25, 2024

எதிலுமே… பதிவின் நினைவே நமக்குள் (மீண்டும்) வருகின்றது

உபதேசம் கொடுத்துக் கொண்டே வருகின்றேன் (ஞானகுரு). மீண்டும் அதை ஞாபகப்படுத்தும் நிலையாகத் திரும்பச் சொல்லும் பொழுது
1.”சாமி சொன்னதையே திரும்பச் சொல்கிறார்…” என்ற நினைவு வந்துவிடும்.
2.அப்புறம் பார்க்கலாம் என்று “இதைக் கேட்பதை மறந்து விடுவார்கள்…”

ஒரு செடி கசப்பின் தன்மை கொண்டு உருவான பின் மீண்டும் அந்தக் கசப்பினை நுகர்ந்தால் தான் அந்தச் செடியின் தன்மை வளர முடியும். ரோஜாப் பூ தன்னுடைய நறுமணத்தை மறந்து விட்டோம் என்று மீண்டும் மீண்டும் அதை நுகர்ந்தறிந்தால் தான் ரோஜாப்பூ நறுமணம் அங்கே வரும்.

1.ஒரு மாடோ ஆடோ எந்த உணர்வைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொண்டதோ
2.அதை மீண்டும் நினைவு கொண்டு உட்கொண்டால் தன் இனமாக… உடலாகி… நோயற்றதாக வாழும்.

ஆனால் அந்தத் தாவர இனைத்தைப் புசித்த மாடு மாற்றுத் தாவரத்தை அது சாப்பிடுமே என்றால் இந்த உணர்வுக்கு எதிர்நிலையாகி மாட்டிற்கு நோய் வந்துவிடும்.

ஆகவே நுகர்ந்து பார்த்துத் “தன் இனம் அல்ல” என்றால் அதை உட்கொள்ளாது விலகிச் செல்கின்றது. இதைப் போன்று தான்
1.நாமும் தீமை என்ற நிலைகளைக் கேட்டறிந்தால் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் வராதபடி அதிலிருந்து விடுபட வேண்டும்
2.அவ்வாறு விடுபட வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைத் தனக்குள் புகுத்துதல் வேண்டும்
3அவ்வாறு புகுத்தி விட்டால் அது தீமை அடக்கிடும் சக்தியாக நமக்குள் மாறும்.

இதை நாம் எளிதில் கண்டுணர்வதற்குத் தான் அந்த மகரிஷிகள் தெளிவான நிலைகளில் மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை எவ்வாறு எளிதில் அகற்ற முடியும் என்று தெளிந்த மனம் கொண்டு வாழ்வதற்குச் சாஸ்திரங்களைக் கொடுத்துள்ளார்கள்.

அதாவது…
1.சூட்சமத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை நாம் அறிய முடியவில்லை
2.அதை அறிவதற்காக வேண்டி உருவமாக்கி… அதைக் கதைகளாக்கிக் காவியமாகப் படைத்துள்ளார்கள் மெய் ஞானிகள்.

எண்ணத்தால் நமக்குள் அதைப் பதிவு செய்து… அந்த எண்ணத்தின் துணை கொண்டு ஞானிகள் காட்டிய உண்மை வழிப்படி காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் அருள் உணர்வுகளைத் தனக்குள் எடுத்து அடிக்கடி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1.எதுவுமே பதிவு செய்யாதபடி நினைவுக்கு வராது
2.பதிவு இல்லை என்றால் நினைவு ஏது…?

ஒருவர் என்னைத் திட்டினார் என்று பதிவு செய்து கொண்டால் தான் அது மீண்டும் நினைவுக்கு வரும். திட்டியது பதிவாகவில்லை என்றால் அந்த நினைவு வராது.

உதாரணமாக… இரயிலில் பயணம் செய்யும் பொழுது ஒருவர் நம்முடன் நல்லவராகப் பேசிக் கொண்டு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படிப் பயணம் செய்யும்பொழுது அவர் உள் உணர்வுகளில் எதிர்பாராதபடி திடீரென்று பயத்தினால் துடிக்கின்றார்… பார்க்கின்றோம்… பதிவாக்குகின்றோம்.

“ஐயோ நல்ல மனிதன்…! இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தாரே… இப்பொழுது திடீரென்று அவர் துடித்து விட்டாரே…!” என்று அடுத்தாற்போல் போல் நாம் இதைத்தான் சொல்வோம்.

1.ஆகவே அவரைப் பற்றிய அந்தப் பதிவு இல்லை என்றால் நினைவு மீண்டும் வராது
2.அதே போல் பள்ளியில் பாடங்களைப் படிக்கும் போது அதிலே பதிவு இல்லை என்றால் படித்தது மீண்டும் நினைவிற்கு வராது.

ஆகவே எதிலுமே பதிவின் நினைவே நமக்குள் வருகின்றது. அதற்காக வேண்டித் தான் அருள் உணர்வுகளைத் திரும்பத் திரும்ப உங்களுக்குள் பதிவு செய்து அதை நீங்கள் நினைவு கொள்ளும்படிச் செய்கின்றேன்.

அவ்வாறு நினைவு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்தால்
1.தீமையை நீக்கக்கூடிய சக்தியை நீங்கள் பெறலாம்
2.உயிரோடு ஒன்றலாம்… அழியா ஒளிச் சரீரம் பெறலாம்
3.மகரிஷிகள் வாழும் எல்லைக்குச் செல்லலாம்.

அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

ஆத்ம சக்தியின் வளர்ச்சிக்கு வானியலாக வழி வகுத்துத் தந்திட்ட “மகரிஷிகள்…” ஒவ்வொரு உயிராத்மாவும் தன் வாழ்வின் உண்மை நிலை உணரும் பொருட்டு…
1.நான் என்பது யார்…? என்ற ஞான முகிழ்விப்பு உதயம் காட்டிட
2.ஆத்ம விழிப்பால் பூரணத்துவ நிறைவைத் தன்னுள் கண்டு… தெளிந்து…
3.அன்பெனும் வித்தை ஊன்றி… ஞான நீரை மனமெனும் நெடு வயல் பாய்ச்சி எதிர் மோதல் களைய
4.பலன் எனும் செழுமை வளர்ப்பை ஆகாரமாகப் புசித்து உலக நலன் நாடும் வழிகாட்டியது
5.அளவுகோல் காணா… “பரிவின் வழி பாசமப்பா…”

உம்மை நீ உணர்ந்து கொண்டிட அளவில் சிறிதாகினும் பிடிப்பின் (உலகப்பற்று) நிலை விலக்கிடப்பா…!

முழுமையாக உம்மை ஆட்கொண்டிட்ட பிறகு… உம்மையே இயக்கும் செயல் சித்தம் தொடர்ந்த பிறகு… ஞானக்கண் திறந்திடவில்லை என்றிட்ட எண்ண (உன்னுடைய) உணர்வே எதிர் மோதல் அமில குணங்களாக வாயு பித்த சிலேத்துமம் என்பதில் ஒன்றின் பிரிவே கிளையாகக் கிளைத்து எழுந்தது உடல் நலிவின் காரணம்.

காயத்தைக் கல்வப்படுத்திடும் மூலிகை அன்றோ அருந்தினாய். காயத்திற்கு ஏது நலிவு…? எண்ணத்தின் சோர்வன்றோ விளையாடியது. “பஞ்சமுக ஒளியின்” பாடம்தான்… எண்ணியதை எண்ணியாங்கு நடத்துகின்ற ஆற்றலன்றோ நீ படைத்திட்டது.

பிரம்மனின் ஐந்து முகத்துள் சிரசின் முகம் உச்சியில் ஈஸ்வரரால் களையப்பட்டதாகப் படித்திருப்பாய். உன்னைச் சுற்றிச் சுழன்றோடும் ஒலி நாதத்தில் கலந்திருக்கும் ஒளியின் ஊடாக ஒலி ஒளியை ஈர்த்தே ஒளியில் கலந்தது என்ற சூட்சும உரையின் பதம்.

உரையின் தெளிவை உயர் ஞான வலுவால் அறிந்திடும் சிறு முயற்சி பதத்தின் உரையைக் காட்டும்…! விரித்தே உரைக்கின்றேன்.

பெற்றுக் கொண்டிட்ட சக்தியின் வளர்ச்சி அளவீடு சித்தன் காட்டிட்ட சித்தின் நிகழ்வாக (உலக நலனுக்காக) மழை வேண்டும் என்று எண்ணத்தை உரைத்திட்டானப்பா. உரையைச் செயலில் விளக்கி விட்டாய்.

மனதின் கூறு மேம்பட… ஈர்த்து வெளிக்காட்டிட தொடர்பு என்ன…? சொல்வது அனைத்தும் பாடம் தான். உன்னில் ஊன்றிப் பார். ஞானவழிச் செல்வங்கள் யாராக இருந்தாலும் அவர்களும் காணட்டும்.

உனது எதிர்புறமும் நேர்புறமும் இடது வலது பக்கங்களிலும் ஜோதியாகக் காண்ப்பது உயிராத்ம சக்தியின் வளர்ப்பு. எண்ணத்தில் உன்னையே நீ ஜோதியாகக் காண்கின்றாய்.

பஞ்சமுக ஜோதியாக விளங்கி விட்டால் பிறப்பின் நிலை ஏது…? அனைத்தும் அகண்டம்…! (பூரணத்துவம்)

ஐம்முகத் தொழிலில் அறிந்து உணர்ந்து செயல் கொள்ளுதல் எல்லாம் விளக்கவொண்ணா ஆனந்த இலயத்தின் பேரருள் செல்வ நிலையில்
1.பிரம்ம சாயுஜ்யம் என்ற உண்மையை உணர்வோன்
2.முத்தொழில் புரியும் படைத்தல் காத்தல் அளித்தல் பிரம்மா விஷ்ணு சிவன் அனைத்தும் தன்னுள்ளே தன்னையே காண்பான்.
3.எண்ணுகின்ற எண்ணம் ஈடேறுதல் சிருஷ்டி - அதுவே படைப்பு
4.எண்ணம் கொண்டு அனுபவித்தல் - காத்தல்
5.தன்னுள் அனைத்தையும் கட்டுக்குள் நிலை நிறுத்தி மோனத்தில் லயித்தல் - அழித்தல்.
6.பின்பு நிலை நிற்பது என்ன…? அதுவே அருளல் என்னும் “ஆதிசக்தியின் சக்தியாகக் கலத்தல் என்பதே… மறைத்தல் தத்துவம்…”

அண்டவெளியின் இயக்க கதியில் ஞானச் செல்வங்கள் உணர்ந்து அனுபவிக்கும் நிலைக்கு வித்திட்டேன்.
1.உயர்ந்து காட்டிடல் வேண்டும் என்ற
2.உமது செயற்பாடே… எமது ஆனந்தக் களி நடனம்.

சொல்லில் மறைபொருள் காட்டுவது… சித்தன் வல்லமை காட்டிய அனுபவித்தல் என்ற எட்டா நிலையை எட்டி விடவே இந்தப் பாடங்கள் அனைத்தும்.

January 24, 2024

மகரிஷிகள் காட்டிய வழி நடந்தால்… வாழ்க்கையில் வேதனைப்பட வேண்டியதே இல்லை

மனித வாழ்க்கையில் கஷ்டங்களும் சிரமங்களும் ஏற்பட்டால் அதைத் தீர்க்க “சாங்கிய சாஸ்திரத்தின்படி” இன்று முயற்சிக்கின்றார்கள்.
1.இங்கே கேட்டால் எனக்கு நல்லதாகும்… அங்கே கேட்டால் என்னுடைய கஷ்டங்கள் தீரும்
2.இன்ன இடத்தில் அல்லது இன்ன ஆலயத்தில் யாக குண்டம் இறங்கினால் எனக்கு நல்லதாகும்
3.கற்பூரத்தைக் கொளுத்தினால் எனக்கு நல்லதாகும் என்று
4.தனக்குள் எண்ணும் இத்தகைய எண்ணங்களை வலுக்கூட்டி விட்டு…
5.இன்றைய நிலைகளுக்கு (பிழைப்புக்கு) இதைப் பெற்றால் நல்லதாக இருக்கும் என்று எண்ணுவது “அது தீமையே…”

நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டால் அந்த மணம் சிறிது சிறிது நேரத்திற்கே இருக்கும்… அடுத்த கணம் மறைந்துவிடும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் நிலைகள் கொண்டு மேலே சொன்ன வழியில் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் பொழுது… இந்த உணர்வலைகள் படரும்… நினைவுகளைக் கூட்டும்… ஆனால் அடுத்து அது எல்லாமே அழிந்துவிடும்.

ஆனால் ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிப்படி நாம் செயல்படுவோம் என்றால்
1.மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்.
2.அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படத் தேவையில்லை
3.பொருள்களை (செல்வம்) நாம் விரயமாக்க வேண்டியது இல்லை.
4.எங்கெங்கோ தேடிச் சென்று அவர் செய்வாரா…? இவர் செய்வாரா…? என்ற எதிர்பார்ப்பில்
5.மற்றவர்களை நாட வேண்டியதில்லை… அவர்களை எண்ணி ஏமாறவும் வேண்டியதில்லை.

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த சாஸ்திர விதிப்படி ஒவ்வொரு ஊரிலும் தெருக்களில் மாரியம்மன் உண்டு… தெருவின் மூலைகளில் விநாயகனையும் அமைத்து இருப்பார்கள்.

முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினாலே போதும்…! மெய் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களின் உண்மைகள் உங்களுக்குள் பதிவாகி
1.உங்கள் எண்ணங்கள் வலுவாகி… மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து… தீமைகளைச் சுட்டுப் பொசுக்க உங்களால் முடியும்.
2.மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது உங்கள் உயிரே கடவுளாக நின்று
3.தீமைகளைப் போக்கும் சக்தியாகப் பரப்பித் தீமையற்ற உணர்வாக மாறும்.

துருவ மகரிஷியுடனும் சப்தரிஷி மண்டலங்களுடனும் உங்கள் நினைவு கூர்மையாகி (கூர்மை அவதாரமாக) அது வலுவாகும் போது வராகனாக மாறி தீமையான நிலைகளைப் பிளந்து விடும்.

என்றும் அழியாத நிலைகள் கொண்டு பெரு வீடு பெரு நிலை என்ற நிலைகளில் தெளிவாக நாம் அடைய முடியும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

மனிதனாக உருவாக்கிய உயிர் நீங்கள் நுகர்ந்த உணர்வின் அறிவையே எண்ணங்களாக “ஓ…” என்று ஜீவனாக்கி… இயக்கி… உடலாக மாற்றிவிடுகிறது.

மனிதனான பின் எதைச் செய்ய வேண்டும் என்ற நிலையைக் கண்டுணர்ந்த மகரிஷிகள் தனக்குள் வலிமைமிக்க சக்திகளைப் பெற்று தீமைகளிலிருந்து நீக்கிடும் நிலைகளைக் காட்டினார்கள்.
1.அதை நாம் அனைவரும் எளிதில் பெற முடியும்
2.தீமைகளை நாம் எளிதில் அகற்ற முடியும்
3.அந்த மகரிஷிகளுடன் ஒன்றாக இணைய முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் செயல்படுத்துங்கள்.

இயற்கை என்பது… உருவாகின்றதா…? உருவாக்கப்படுகின்றதா…?

 

ஐம்பூதத் தத்துவங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து பல்கிப் பெருகிடும் செயல் நிலைகள்… வளர்ப்பின் செயலாக்கம் வளர்ச்சியின் முதிர்வாக… மறைபொருள் சக்தி உறை பொருள் உருக்கோலம் கொள்ளும் வளர்ப்பாக… உறை பொருளின் பரிணாம முதிர்வு வினை செயலுருவது…
1.விடா சிந்தனை (முயற்சி) என்றே கதியுற்றுச் செயலுருங்கால்…
2.மதி என்ற தோன்றா நின்ற அறிவை ஞானத்தின் ஆக்கமாக…
3.எண்ணத்தின் வழி நாதத்தை உண்டு பண்ணி…
4.வினை செயல் அறிவுறுத்தும் அறிவு எதுவோ அந்த அறிவால் நிலை நின்று
5.முன்… பின்… நடு… என்றே கால நியமனங்களைக் கருத்தில் காட்டும்
6.சாயுஜ்யப் (தெய்வத்துள் புகும் நிலை) பெரு நிலையை… அறிவை அறிவால் அறிவர் ஞானியர்.

“ஊழ்” என்று முன் கடந்த வினைப் பயன்…
1.செய்யப்பட்ட வினையாக “எது பதிவின் நிலையோ”
2.அப்பதிவைச் செயல் நடத்தும் தொடருக்கு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்ட மனித உடல் இயக்க கதியில்…
3.செய்த வினையாகின்ற வளர்ச்சியின் வளர்ப்பில் காந்தம் செயலுருங்கால்
4.வீரிய மின் சக்தியாக இயற்கையின் சக்தியே வெளிப்படும் வேகமாகச் செயல்படுகின்ற செயல்பாட்டில்
5.சரீரத்தின் எலும்பினுள் ஊண் “செய்யப்பட்ட வினையாகச் செயல்படும் சூட்சுமம்” உண்டு.

“புதிதாக” உதிக்கின்ற உயிரணு, ஜீவன் கொண்ட உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்தபின்… “செய்யப்பட்ட வினை இதில் எது…?” என்ற வினா எழும்பலாம்.

ஆகாயம் நீர் காற்று நெருப்பு நிலம் என்றே உரைத்திடும் ஐம்பூதங்கள் ஒன்றினில் ஒன்று பொருந்தி… ஆகாயமாய் வியாபித்துள்ள மறைபொருள் செயல்பாட்டின் தன்மைகள் செயல்படுங்கால்… பிரதிவித் (பூமி-உலகம்) தத்துவம்… ஆக்கம் தத்துவம்… அதே தன்மையாக ஜீவன் உருக் கோலம் கொள்ளும் செயலிலும் உண்டு.

கோடானு கோடி நிறங்கள் கோடான கோடி மணங்கள் கோடான கோடி குணங்கள் நீரமில சக்தியுடன் கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கும் காந்தமாக உள் நிறைந்தே உதிக்கும் உயிரணுவின் செயலில்
2.உருப்பெறுவது எண்ணம் கொண்ட ஆத்மா என்றே உரைத்து வந்தோம்.

இங்கு எண்ணம் எதுவப்பா…?

செயல்பாட்டின் மூல சக்தியே… தனக்கொத்ததை வளர்க்கும் ஈர்ப்பில் “உறை பொருள் ஆக்கும் செயலுக்கே” செயல்படும் செயலை ஊன்றிப் பார்.

எண்ணியது எண்ணியாங்கு நடைபெறும் செயலில்… ஜீவன் கொள்ளும் கருத்து நடைமுறைச் செயலில… நாம் ஏற்படுத்திக் கொண்ட சுற்றுச்சூழலில் அப்படியே நடைபெறும் நிகழ்வுகளுக்கு எது காரணம்…?

எண்ணம் என்பாய்.

முழுவதும் விளக்கி விட்டால் அறிவின் சுடர் பிரகாசிக்க அதுவே தூண்டுகோலாகுமப்பா.

January 23, 2024

உள் நின்று இயக்கும் “கடவுளின் செயல் எது…?” என்று அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்

மனிதனான நாம் இப்போது எல்லோருக்கும் பல நன்மைகள் செய்திருப்பினும் நன்மை செய்வதருடைய நிலைகள் கடைசியில் என்ன ஆகிறது…?

தன் குடும்பத்திலோ அல்லது ஒரு ஆயிரம் பேருக்கோ நன்மை செய்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்

அதிலே ஒருவர் மிகவும் வேதனைப்படுகின்றார் என்றால்
1.அந்த வேதனைப்படுவர் உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வு கொண்டு அவருக்கு இரக்கப்பட்டு
2.பரிவுடன் அதிகமாக உதவி செய்ய நெருங்கும் போது அவருக்குள் விளைந்ததை இவர் நுகரப்படும் போது
3.அந்த வேதனை உணர்வுகள் இவருக்குள் ஊடுருவி… அவரின் நோயை இங்கே உருவாக்கி விடுகின்றது.

காரணம் கூர்மையாகப் பார்த்துத் தான் அந்த வேதனையை உணர்கின்றார்… உதவி செய்கின்றார். அப்படி உற்றுப் பார்த்து “அவரின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே…” என்று பக்தியில் கடவுளே… தெய்வமே… முருகனே… விநாயகனே…! என்று அந்த உணர்வின் தன்மை சொல்லி அங்கே நுகரப்படும் பொழுது இது உருப்பெற்று விடுகின்றது.

இது கூர்மை அவதாரமாக மாறி அவன் உடலில் உருவான தீமை இங்கே உருவாகி அதே நைந்திடும் உணர்வாக நோயாக இங்கே விளைந்து விடுகின்றது.

நாம் என்ன செய்வோம்…?
1.கஷ்டப்பட்டவருக்கு அனைத்து உதவியும் செய்தேனே…
2.கடவுளே…! எல்லோருக்கும் நான் நன்மை தானே செய்தேன்… எனக்கு இவ்வாறு நோய் வந்து விட்டதே…! என்று
3.அந்த வேதனையை நோக்கியே மீண்டு சென்று
4.எந்தத் தெய்வம் காக்கும் என்று எண்ணினோமோ “அவன் காப்பான்…” என்ற நோக்கத்திலேயே குறைகளை எல்லாம் சொல்லி
5.அது நிறைவேறும் என்ற நோக்கத்தில் (எதிர்பார்த்து) வேதனைகளை அதிகமாகஸ் சுவாசித்து
6.நிறைவுபெறும் எண்ணமே இல்லாது அழிந்திடும் உணர்வு கொண்டு அதையே நொந்திடும் உணர்வாக வளர்ந்துவிடுகிறது.

ஆனாலும்… நாம் இப்படி வேதனைப்படும் பொழுது… நமக்கும் இதே போன்று இன்னொருவர் உதவி செய்ய வருவார். “அடப்பாவமே…! இவர் எல்லோருக்கும் உதவி செய்தார்… இவருக்கு இப்படி ஒரு துன்பமா…?” என்று எண்ணும் போது… தன் கதைகளை எல்லாம் சொன்னால் அவர் கூர்ந்து கேட்டால்
1.ஆகா… நீயாவது எனக்கு இரக்கப்பட்டாயே…! என்று
2.கடைசியில் இறந்த பின் நம் ஆன்மா இவர் உடலுக்குள் தான் போகும்.

இப்படி இந்த உணர்வின் தன்மைகள் மாறி மாறி மீண்டும் பூமியின் தன்மைகளில் தேய்பிறைக்கே வந்து கொண்டுள்ளோம்.

பல கோடிச் சரீரங்களில் கூர்மையின் நிலையாக தன்னைக் காட்டிலும் வலிமையான நிலைகளைப் பெற்றுப் பெற்று
1.அதனின் உணர்வின் தன்மை கொண்டு உடல்கள் மாற்றமாகிப் பரிணாம வளர்ச்சி ஆகி மனிதனான பின்
2.இரக்கம் ஈகை பண்பு பரிவு என்ற நிலைகளில் எல்லோருக்கும் உதவி செய்யும் பண்புடன் வளரக்கூடியவன்
3.மற்றவருடைய நோய்களைக் கூர்மையாக எடுத்து உணர்வின் தன்மை அவருக்கு உதவி செய்தாலும்
4.புவியின் ஈர்ப்புக்குள்ளே தான் மீண்டும் சுழலும் நிலை வருகின்றது.

இதிலிருந்து மீளும் மார்க்கம்…?

இதற்குண்டான விளக்கங்களை யாம் இப்போது சொல்ல வந்தால்
1.”நன்மையே செய்யக்கூடாது” என்று நீங்கள் சொல்கின்றீர்களா…? என்ற இந்த வினாவில் தான் எல்லோரும் உட்கார்ந்து இருப்பீர்கள்…!
2.நன்மை செய்தவர் இப்படியானால் “எந்தக் கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்றப் போகிறார்…?” என்ற இந்த கேள்விக்குறியில் தான் இங்கே இருப்பீர்கள்.

அதனால் தான் இந்தப் பிள்ளை யார்…? (பிள்ளையார்) நீ சிந்தித்துப் பார்…! என்று விநாயகன் உருவமாகக் ஞானிகள் காட்டினார்கள்.

ஆதிமூலம் என்பது உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக இந்த மனித உடல் பெற்றது. இந்த கணங்களுக்கெல்லாம் இந்தக் குணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர்… கணேசா…!

நாம் எதை எதையெல்லாம் சுவாசித்தோமோ மூஷிகவாகனா அதற்கொப்ப அடுத்தடுத்து உடல்கள் மாறி மாறி வந்தது. இந்த மனித வாழ்க்கையில் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்…?

மான் புலியை பார்த்து அதனுடைய கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து அந்த உணர்வுகளைத் தன் உடலுக்குள் விளைய வைத்து இந்த உடலை விட்டுப் பிரியும் போது கூர்மையாக அந்தப் புலியையே எண்ணி
1.புலியின் உணர்வைச் சுவாசித்த நிலைகள் கொண்டு மூஷிகவாகனா
2.அந்தப் புலியின் உணர்வே இதை வாகனமாக அழைத்துச் சென்று தன்னுடன் அணைத்து
3.இதனுடைய தசைகளை அது உணவாக எப்படி உட்கொண்டதோ அதைப் போல
4.புலியின் உணர்வை இந்த மான் அதிகமாகச் சுவாசிக்கப்படும் பொழுது தன் இனமான சத்தைத் தனக்குள் கவர்ந்து
5.மானின் உயிரான்மா இந்தப் புலியின் உணர்வின் துணை கொண்டு புலியாக உருவாக்கச் செய்து விடுகின்றது.

இது இயற்கையினுடைய சில நியதிகள்… கடவுளின் செயலும் இது தான் ஒன்றுக்குள் ஒன்று செல்லப்படும் பொழுது உணர்வின் செயலாக கடவுளாக உள் நின்று இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

தியான வழியில் பெறும் அனுபவத்தால் மட்டுமே மெய்யை அறிந்துணர முடியும்

ஜீவாத்மா பரமாத்மாவாகும் செயல் நிலைகளை நிரூபணம் ஆக்கிக் காட்டு என்கின்ற வினாவிற்கு எளிமையாகப் பதில் உரைத்திட்டாலும்…
1.அறிவதை உணர்த்தலும் உணர்ந்ததைத் தெளிதலும்
2.தெளிந்த பின் நிலை நிற்றல் என்று செயல்படும் செயலை
3.”தியான வழி அனுபவத்தால்” மட்டுமே உணர்ந்து கொண்டிட முடிந்திடும்.

சூரியனின் சுழற்சி வேகத்தால் ஏற்படும் வெப்பத்தினால்… அதை நெருங்க முடியாத வெப்ப நிலை என்று பௌதீகப் பொருள் விளக்கம் கூறும் விஞ்ஞான நிரூபணங்கள் அறுதியிட்டு உறுதியாக விளக்கங்கள் கூறினாலும்… அனுபவம்… மெய் ஞானம் கொண்டு அகப்பொருள் தெளிதல் என்ற நோக்கில் “சூரியன் குளிர்ந்திட்டது என்று இயம்புகின்றது…”

வினாக்கள் தொடுக்கின்றவன் அனுபவத்தால் உணரட்டும்.

தன்னை உணர்ந்திடும் பக்குவத்தில் மனிதன் கைக்கொள்ள வேண்டிய மனோசக்தியால் சிந்தனையை வலுக்கூட்டும் ஆத்ம பலம் பெற்றிடும் எளிய முறை தியானத்தின் வழியில் தான்…!

1.ஆத்ம நிலை பெற்றே பிறப்பிற்கு வந்திடும் “உயிர் சக்தி”
2.மனிதன் என்ற ஜீவ பிம்பத்தில் தான் யார்…? என்கின்ற சிந்தனை தொட்டு
3.தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் விழிப்பு நிலையே ஆத்ம விழிப்பு.

அதுவே ஜீவன் கொண்ட செயலாக… ஈர்ப்பின் செயலின் “உயரிய மின் நுண் காந்த அலைகள்” ஈர்க்கப்பட்டு… ஆத்மா ஜீவன் கொண்ட ஜீவாத்மா நிலை பெறுவதெல்லாம்.

மேல் நோக்கிய சுவாசம் எடுத்து விண்ணின் சக்திகள் ஈர்த்திடும் வளர்ப்பில் சூரிய சக்தியாக… அதே தொடரில் மின் நுண்காந்த அலைகள் மேலும் ஈர்ப்பில் சேர்க்கப்பட்டு… பரவெளியில் படர்ந்துள்ள பால்வெளி சூட்சும சக்திகள் அனைத்தையும்…
1.அனைத்திலும் கலந்து செயலுரும் பரமாத்மாவாக
2.”தன்னிலை உயர்த்தும் ஜீவாத்மா…” பரமாத்மா பௌருஷமாகச் செயல் கொள்கிறது.

எண்ணத்தின் உயர்வு என்பது… வலுக் கொண்டு எடுக்கும் நற்சுவாச தியானத்தால் மனத்தின் பக்குவமாக…
1.வான்நோக்கும் உயர்வாக ஆத்மா எங்கெங்கிலும் சஞ்சரித்து
2.தனக்கொத்ததை ஈர்த்து வளர்ச்சியின் வளர்ப்பாக்கும் (மகரிஷிகளின் செயல்).

January 22, 2024

“மேல் நோக்கிய சுவாசத்தால்” மட்டும் தான் உயர் நிலை பெற முடியும்

 

பரமாத்மா என்று உரைத்திட்ட உரையின் உட்பொருள் என்ன…?

“நிலைபெற்ற நித்திய நிலை எதுவோ” அதுவே பரவிப் படர்ந்த… எங்கும் நிறைந்த மின் காந்தமாக… ஒளி காந்த சக்தியாக வியாபித்து… நிறம் மணம் குணம் என்ற வகையில் உதிக்கும் கோடான கோடி உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கிச் செயல்படும் சூட்சமத்துள்
2.மூலம் எதுவோ அதுவே பரமாத்ம தத்துவம்.

செயல்படும் செயலைப் பிரம்மம் என்று ஒளியின் ஊடே பரவிப் படரும் “உஷ்ணம்” செயலுரும் தன்மையால் ஆத்ம நிலை பெறும் உயிரணு… தன் எண்ணம் கொண்ட சுழற்சியில் “உயிராத்மாவாகின்றது…”

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள நுண் மின்காந்த சக்தியில் “தன் இச்சையாகப் பெற்றிடும்…” ஈர்ப்பின் நிலை கொண்டு பெற்றிடுவது ஆத்மா.

அதுவே பேரருள் செல்வம் என்றிட்ட ஆத்மாவின் “மூலம்…!”

உயிரணு தன் சுழற்சியின் செயல் நிலையால் எண்ணம் கொண்டிட்ட சுவாசமாக… தான் எவ்வித அமில குணங்களில் உதித்ததுவோ அதற்கொத்த அமிலக் கூறுகள் சுவாசம் கொண்டு ஈர்த்து… எண்ணம் கொண்ட சுழற்சியில் வலுப்பெற்று… அவ்வலுவின் வலுவால் உயரிய ஜீவன் கொண்ட ஜீவாத்மாவாக… தன் எண்ணத்திற்கொப்ப பிறப்பிற்கு வருகின்றது.

பிறப்பின் ஜீவித பரிணாம முதிர்வு கொண்டிட்ட பஞ்சபூத இயற்கை தத்துவ வளம் பெற்றிட்ட நம் சூரியக் குடும்பத்தில்
1.இந்தப் பூவுலகில் ஜீவாத்மாவாகப் பிறப்பிற்கு வரும் தொடரில்தான்
2.ஆத்மா அனுபவ விசேஷ காரிய நிலைகளுக்கு உட்பட்டு
3.அலசிப் பிழிந்த தன் எண்ணத்தின் உயர்வால்
4.பிறப்பிற்கு வந்திட்ட புவியீர்ப்பின் பிடிப்பிலிருந்து விடுபடும் பயன்
5.மேல் நோக்கிய சுவாசத்தால் நன்னிலை பெறுவதே.

“ஆதிசக்தி எனும் பேரருள் செல்வத்தில் கலந்து பிறவாமை பெறுவது…” உதித்திட்ட ஜீவனின் ஆக்கம்.
1.மனிதன் என்ற பிறப்பின் தொடருக்கு வந்திடும் உயிரணு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்டு
2.தன் வளர்ச்சியின் செயலில் தன்னைத்தான் உணர்ந்திடும் பக்குவம் பெற்று
3.தன்னை உணர்ந்திடும் தியானத்தின் மூலம்.. ஒழுக்க நன்நெறியாக வாழ்வியலில் பண்பு நிலை கொண்டு
4.மனம் பக்குவப்படுத்தப்பட… தூண்டப்படும் அறிவின் ஆற்றல் கொண்டு “சுவாச கதியில்” அறிந்திடுவது முதல் படி.

தைப்பூசம்

தைப்பூசம் என்றால் முருகனுக்கு நன்னாள். அதாவது நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையெல்லாம் நமக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று உணர்த்தும் நாள் அது.

முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பொழுது “காவடிகளை” எடுத்து ஆடுகின்றோம் காவடியில் “மயில் தோகைகளை” வைத்துள்ளார்கள்… முருகனுக்கு உகந்தது அந்த மயில் என்று வைத்திருக்கின்றோம்.

அதனின் உட்பொருள் என்ன…?
1.மயில் தன்னுடைய வாழ்க்கையில் விஷ ஜந்துகளை உணவாக உட்கொண்டாலும் அது மகிழ்ச்சியாகத் தோகை விரித்து ஆடுகின்றது
2.அதே சமயம் அந்த நஞ்சினையும் உள் அடக்குகின்றது.

இதைப் போன்று தான் ஆறாவது அறிவு கொண்ட நாமும் நஞ்சினை அடக்கும் சக்தி பெற்றவர்கள்.

கருணைக்கிழங்கு இருக்கிறது என்றால் அதை வேக வைத்து அதில் உள்ள நஞ்சினை நீக்குகின்றோம் தொக்கி உள்ள நஞ்சினை நீக்கப் புளி காரம் உப்பு இவைகளை வைத்து அடக்குகின்றோம்.

அதாவது
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு முதலில் கருணைக்கிழங்கில் நஞ்சு இருக்கிறது என்றும் அறிந்து கொள்கின்றோம்
2.அதை நீரிலே இட்டு வேக வைத்துக் கொதிகலனாக்குகிறோம்
3.அந்த நீரின் சத்து விஷமான கிழங்குக்குள் ஊடுருவி அதனுடன் இரண்டறக் கலந்து இருக்கும் விஷத்தன்மைகள் ஆவியாக மாற்றுகின்றது.
4.புளியை இணைத்தபின் தொக்கி உள்ள விஷத்தன்மையை அடக்குகின்றது.
5.மிளகாய் சீரகம் உப்பு மற்ற பொருள்களை இணைக்கப்படும் பொழுது சுவை மிக்கதாக உருவாகின்றது.

அதைத்தான் ச ர ஹ ண ப வா… குகா… என்று சரணம் அடையச் செய்யும் சக்தியாக மனித உடலான குகைக்குள் இருக்கின்றது. நாம் சுவையாக உணவை உட்கொண்டாலும் அதில் மறைந்திருக்கும் நஞ்சின் தன்மையை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வினை உடலாக மாற்றுகின்றது.

இது தான் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா. உடலில் இருந்து வரக்கூடிய ஆறாவது அறிவை இப்படித் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

இந்த உடலான குகைக்குள் நின்று வருவதை அணைத்து தீமையான நிலைகளை நீக்கிவிட்டு சரணமடையச் செய்யக்கூடிய சக்தியாக

இந்த உடலான குகைக்குள் நின்று… கந்தா வருவதனைத்தையும்… கடம்பா உருவாக்கி… கார்த்திகேயா…! நாம் அந்தக் கருணைக்கிழங்கு குழம்பைச் சுவையாக வைத்து எப்படி மகிழ்ச்சியாக உட்கொள்கின்றோமோ அதைப்போன்று தீமையான உணர்வுகளை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வுகளை உடலாக மாற்றுகின்றது.

இவ்வாறு நல்ல உடலாக மாற்றிய இந்த உணர்வின் சக்தியைத்தான் கார்த்திகேயா தெரிந்திடும் நிலை.

கருணைக்கிழங்கில் இருக்கும் நஞ்சினை அறிந்து… அந்த நஞ்சினை நீக்க அதை வேக வைத்து மற்ற நிலைகளை இணைத்துச் சுவையாக்குவது போன்று.. வாழ்க்கையிலும் அந்த நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
1.அது தான் முருகு மாற்றி அமைக்கும் சக்தி
2.முருகா அழகு படுத்தும் மகிழச் செய்யும் நிலையாக “மகிழ்வாகனா…” என்று
3.மயிலை வாகனமாக வைத்து அதன் கீழ் பாம்பினை வைத்துக் காட்டி உள்ளார்கள்.

இதை நினைவுபடுத்தும் நாளாகத் தைப்பூசம் அன்று காவடி எடுத்து “மயில் தோகைகளை அதில் வைத்து” ஆனந்தக் கூத்தாடி நாம் மகிழ்கின்றோம். அந்த மயில் எவ்வாறு நஞ்சினை நீக்கியதோ இதைப் போன்று
1.நமது வாழ்க்கையில் எத்தனை தீமைகள் வந்தாலும்… எத்தனை பேருடன் நாம் பழகினாலும்
2.சந்தர்ப்ப பேதத்தால் அறியாது வரக்கூடிய அந்த நஞ்சின் தன்மைகளை நீக்க
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ் நட்சத்திரத்தின் சக்தியைச் சேர்ப்பித்து
4.அந்த நஞ்சினை அடக்கி மகிழச் செய்யக்கூடிய சக்தியாக நாம் உருவாக்க முடியும்.

அப்படி உருவாக்கும் சக்தியை நினைவுபடுத்தி… எல்லோரும் அதைப் பெறக்கூடிய நன்னாள்தான் தைப்பூசம். அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாள் தைப்பூசம். நம்முடைய முன்னோர்கள் மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களை விண் செலுத்தும் நாள் தைப்பூசம்.

January 21, 2024

ஒவ்வொரு மகரிஷியும் “பல லட்சம் நல்ல உணர்வுகளை” வலுக்கொண்டதாக உருவாக்கியவர்கள்

இன்றைய காற்று மண்டலத்தில் பரவியிருக்கும் நஞ்சானது ஞானிகள் உணர்வுகளை அடைத்துக் கொண்டு… யாரும் அதை நுகர விடாது தடுத்துக் கொண்டிருக்கின்றது.

நம் ஆன்மாவில் நஞ்சான உணர்வுகள் வரும் போது
1.ஞானிகள் உணர்வை நாம் பெற வேண்டும் என்றால்
2.இதைக் கடந்து உணர்வுகள் வெளிச் செல்வதில்லை.
3.நஞ்சு அதிகரிக்கப்படும் பொழுது ஞானிகள் நிலைகளை அங்கே அடைய முடிவதில்லை
4.அந்த நஞ்சின் உணர்வுக்குள்ளேயே மீண்டும் சிக்கப்பட்டு ஞானிகள் உணர்வைப் பெறும் தகுதியை இழக்கச் செய்து விடுகிறது.

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் நல்ல உணர்வுகளில் நஞ்சு கலந்த பின் தீமையே வருகின்றது… நல்லதை அழித்திடும் உணர்வுகளாகப் பரவுகின்றது.

உதாரணமாக… நஞ்சின் தன்மை ஒரு குடம் பாலுக்குள் விட்டு விட்டால் அந்தப் பாலைக் குடிப்போர் அனைவரும் நஞ்சின் தன்மையே அடைந்து விடுகின்றனர்.

ஆனால் அந்த ஒரு குடம் பாலில் பல ஆயிரம் குடம் நல்ல பாலை விடப்படும் பொழுது நஞ்சின் தன்மை சிறுத்து அந்தப் பாலிற்கே வீரிய சக்தி கொடுக்கின்றது.

இன்றைய உலகில் வாழும் மக்கள் வேதனை என்ற உணர்வை அடிக்கடி எடுத்து அதை விளைய வைத்துக் கொண்டால் அந்த மூச்சுலைகள் வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது. அதனால் இந்தக் காற்று மண்டலமே விஷத்தின் தன்மையாக மாற்றி விடுகின்றது.

அதிலே வாழும் நமக்குள்ளும் அந்த உணர்வின் சத்து நம் ஆன்மாவில் வலுவாகி நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றி… உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையும்… சிந்தனயற்றதாக உருவாக்கும் நிலையும்… இங்கே உருவாக்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் மீள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

உலகில் யார் யாரிடம் எல்லாம் நாம் பழகினோமோ...
1.அவர்கள் அனைவருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று
2.அவர் பட்ட வேதனை உணர்வு நமக்குள் வளராது தடைப்படுத்த வேண்டும்.

நாம் சந்தித்த அனைவருக்கும் இந்த உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று நாம் எண்ணுவது போல் அனைவரும் அதே ஏகோபித்த நிலை வரப்படும் பொழுது
1.அது சிறு புள்ளியாக கோலத்தில் அடக்குவது போன்று அடக்கி
2.உயர்ந்த பாதையின் தன்மை ஒன்றாக இணைத்து அதை உள்ளடக்கி விடுகின்றது.

ஏகோபித்த நிலைகள் கொண்டு நாம் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அந்த மகரிஷிகள் உணர்வுகள் ஏகமாகப் படரப்படும் பொழுது தீமைகள் மறையப்படுகின்றது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பித்து
1.அதை எல்லோருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற உணர்வைக் கலந்து
2.நம் எண்ணத்தால் அலைகளாகப் பரப்பச் செய்யப்படும் பொழுது நமக்குள் இருக்கும் தீமைகளை அகற்றும் சக்தியாகிறது.

ஏனென்றால் ஒவ்வொரு மகரிஷியும் “பல லட்சம் நல்ல உணர்வுகளை” வலுக்கொண்டதாக உருவாக்கியவர்கள்.

நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் உணர்வை ஏகோபித்த நிலையில் எண்ணி அதை மூச்சலைகளாகப் பரப்பப்படும் பொழுது… பல ஆயிரம் குடம் பால்களை நாம் ஊற்றுவது போன்று…
1.மகரிஷிகளின் உணர்வலைகள் காற்றுக்குள் கலந்து அலைகளாகப் படர்ந்து
2.இந்தப் பூ மண்டலமே அது தூய்மைப்படுத்தும் சக்தியாக வலுக்கொண்டதாக மாறுகின்றது.
3.அந்தத் தூய்மையின் வீரிய உணர்வுகள் இந்த நஞ்சுகளை மாற்றுகின்றது.

ஆக… ஒரு குடம் பாலில் நஞ்சினை பட்டாலும் அதிலே ஆயிரம் குடம் நல்ல பாலை ஊற்றப்படும் பொழுது நஞ்சற்ற நிலையாக ஆவது போன்று நாம் இடும் மூச்சலைகள் இந்தக் காற்று மண்டலத்தை நஞ்சற்ற நிலையாக மாற்றி… நல்ல உணர்வுகளை நுகரும் சக்தியாக வருகின்றது.

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்து
1.நமக்குள் இருக்கும் எல்லா உணர்வுகள் - அது ஒன்றுடன் ஒன்று ஒன்றச் செய்து இணையச் செய்து
2.ஒவ்வொரு உறுப்புகளிலும் அருள் உணர்வுகளை இணையச் செய்து மகிழ்ச்சியூட்டும் நிலையாகப் பெருக்க வேண்டும்.

இது போன்று எல்லா மனிதர்களுடைய உணர்வுகளையும் கலந்து மகிழ்ச்சியூட்டும் நிலையாக நாம் செயல்படுத்தும் போது இந்தப் பூ மண்டலம் சுத்தமாகின்றது… நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகளான இந்த மண்டலமும் தெளிவாகின்றது.

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற… மகரிஷிகளுடன் நம் நினைவாற்றலை இணைக்கின்றது. அங்கே சீராக நாம் இணைக்கப்படும் பொழுது நமக்குள் தடையாக வரும் நிலைகளைப் பிளந்து… ஒருக்கிணைந்து இயக்கி… தெளிந்திடும் அறிவின் தன்மையை நமக்குள் வருகின்றது.

கோலங்களிடப்படும் பொழுது
1.அதற்குள் புள்ளிகள் அமைந்து அது வெளியே வர முடியாது தடைப்படுத்தப்படுவது போன்று
2.நமக்குள் இருக்கும் தீமைகள் அது ஒன்றுக்குள் அடங்கி… தீமை இயக்க முடியாதபடி அடங்கி விடுகின்றது.

தெளிந்த மனதும் பகைமைகள் வளர்ந்திடாது ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழும் உணர்வினை இது வளர்த்துவிடும்.
1.தனக்குள் ஒளியின் சுடராக வளர்த்திட்ட அருள் ஞானிகள் உணர்வினைக் கவர்ந்து
2.அதை நமக்குள் இணைத்து உருவாக்கும் நந்நாள் தான் “தைப்பூசம்…”

பச்சை வண்ண நாடிகள்

“சிந்தனைச் சிற்பி” என்பவன் அறிவின் ஆற்றலை மனோ சக்தியாகக் கண்டு கைகொள்ளும் காரியார்த்த செயல் நிலைகளாகக் கருத்தோன்றி தெளிந்து... மற்ற உயிராத்மாக்கள்
1.குறிப்பாக மனித குலம் மெய் சக்தியாக வளர்ச்சியுற ஏதாகிலும் ஓர் வழியாக மனம் உவந்து ஈர்த்தளிட்ட உபதேசக் காவியங்களை
2.ஓதி உணர்வோர் அந்த நுண்பொருள் தத்துவங்களை நற்கனியின் சாறு போல் ஞான தாகத்தால் அருந்திடுவீர்.

ககன மார்க்கமாகச் சென்றிட “ககனமணி சூட்சுமம் கொண்டு” இச்சரீரம் கொண்டே உலகெங்கிலும் சென்று… இயற்கையின் படைப்பில் இயற்கையுடன் மனம் ஒன்றி உயிராத்ம வளர்ச்சிக்கே அவ்வனுபவங்கள் கொண்டு “என்றும் நிலைபெறும் பேறு பெற்றனரப்பா…”

ஆழ் கடலும் கண்டான்… அடர் வனமும் கண்டான்… பாலையின் தன்மைக்குப் பின் பனி மலைகளின் ஊடே வாழ்ந்தான்…! பூமியின் தன்மை நினைத்து “உள் சென்று” விண்ணின் உயர்வாம் வேத வேதாந்த ஒலி நாதப் பொருளும் கண்டான்.

கண்டு… பெற்ற… அந்த முயற்சி கடினமப்பா…!

இன்றோ…
1.சகல மகரிஷிகளின் அருளாசி எனும் அமுது உண்டு
2.அரண் எனும் இல்வாழ்க்கையில் தவ நெறி நின்று
3.இருந்த இடத்திலிருந்து சக்தியின் வலு கூட்டுகின்றாய்.

கடினம் என்று ஒன்றுமில்லை கடினமாம் மனநிலை என்றால் கடினத்தையும் எளிதாகக் கடந்து பேரருள் செல்வமாக வாழ்ந்திடலாம்.

கண்ணனுக்கு உருவைக் கொடுத்த காவிய ரிஷி கண்டது நீர்க்கரையின் பசும்கொடி மலரையப்பா. மலர் என்றால் எளிதாக எண்ணி விடாதே.

“சீதை வனம்” உண்மை என ஸ்வரூபங்கள் கூறுகின்றன. சத்தியத்தின் சக்திக்கு என்றும் அழகுண்டு மணமுண்டு பண்புண்டு… “நன்னெறி வழிகாட்டும் வழியுமுண்டு…”

ஆதவனை மேகம் மறைத்து விட்டதாக எண்ணிவிடாதே. கரங்கள் கொண்டு கண்களைப் பொத்தி விட்டால் ஜோதிச் சுடர் மறைந்து விடுமா…? ஒளியின் வெள்ளத்திற்கு அணையிடவும் முடிந்திடுமா…?

இயற்கையின் சிருஷ்டிகளில் அனைத்திலும் “ஈஸ்வரனைப் பார்…”

வியாசக பகவான் அன்று கண்ட அற்புதம் “அவ்வனத்தில் இன்றும் உண்டு…” கண்ணனின் உருவைப் பசும்கொடு மலர் மேல் கண்டான். பச்சை வண்ணக் கொடியும் அந்தக் கொடியில் பச்சை வண்ண மலரும் அந்த மலரின் மகரந்தம் கண்ணனின் உருவாக வளர்ச்சியுற்று… ஒரு பாதம் வளைத்துப் புல்லாங்குழல் ஊதும் பாவனையாகப் பச்சை வண்ணப் பட்டுடுத்தி… பவளநிற உதடுகளும் கரிய நிற கண்களும் பொன் நிற வேய்குழலும் கொண்டு மலரும் அற்புதத்தை…
1.அண்டத்தில் கண்டதைப் பிண்டத்திலும் கண்டு
2.அந்தக் கண்ணனின் உருவைத் தன்னுள் உணர்ந்திட்ட மாயம்தான் அந்த “மாயக்கண்ணன்…”

வனத்தின் பாங்குக்கு விளக்கமும் வேண்டுமா…? தங்கத்தைச் சுத்தி செய்து அணிகலன்கள் ஆக்குவது போல் எண்ணத்தின் செயலும் உயர்வு கொண்டிடல் வேண்டும்.

பஞ்சபூதங்களைத் தன்னுள் உணர்ந்தது அதுவும் “ஓர் மலர்” காட்டிய விந்தை. செந்நிறம் கலந்த கரிய நிறமும் ஐந்து தலைகளுடன் படமெடுத்தாடி பாம்புடன் இணைந்து ஈரடி நீளமாக வால் பகுதி பூமியை நோக்கி நின்று காற்றினில் ஆடிடும் பொழுது தூரத்தில் காண்பவர் கடின சித்தமும் கலங்குமப்பா.
1.அச்சர்ப்பக் கொடி மலரில் சிவலிங்கமும் உண்டு…
2.சித்தன் கண்டிட்ட அனுபவங்கள் அளவிட முடிந்திடாது.

January 20, 2024

திரும்பும் இடத்தில் எல்லாம் விநாயகரையும் மாரியம்மனையும் ஞானிகள் வைத்ததன் நோக்கம் என்ன..?

விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் தான் வாழ்ந்திட… இளம் குழந்தைகளைத் திருடிச் செல்கின்றார்கள்.

திருடுவதற்கு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் அறியாத குழந்தைகளை ஏமாற்றிக் கடத்தி அழைத்துச் சென்று… கண்களை எடுத்து வியாபாரம் செய்கின்றார்கள்… மூளையையும் எடுக்கின்றார்கள்.

முதுமை அடைந்த மனிதனை இளமையாக்குவதற்கு அதை இன்ஜெக்ஷன் ஆக உருவாக்கப்பட்டு பொருளுக்குத் தக்கவாறு விஞ்ஞானிகள் இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.

1.பொருள் இருந்தால் போதும்
2.இந்தப் பூமியிலே வாழ்ந்தால் போதும்
3.இன்றைக்கு எனக்கு மகிழ்ச்சி தேவை என்ற நிலைகள் கொண்டு
4.ஒவ்வொரு மிருகமும் மற்றொன்றை எப்படி இரக்கமற்று வீழ்த்தித் தன் உணவுக்காகப் புசிப்பது போன்று தான்
5.இன்றைய மனிதனுடைய செயல்கள் வந்து விட்டது.

மிருகங்களோ ஒன்றை ஒன்று அடித்தாலும் அது பரிணாம வளர்ச்சியில் உள்ளது ஆனால் பரிணாம வளர்ச்சியில் வென்று முதிர்ச்சி பெற்றவன். இது போன்ற மிருக நிலைகளுக்கு நம்முடைய செயலாக்கங்கள் சென்றால் மீண்டும் இழி நிலையான கீழ் நிலைக்குத் தான் சென்ல்வோம்.

பௌர்ணமி தேய்ந்து கடைசியில் அது முழுமையாக இருள் சூழ்கின்றது. மீண்டும் சிறுகச் சிறுக ஒளி பெற்று மற்ற கோள்கள் மறைப்புகளிலிருந்து விடுபட்டு பூரண நிலைகள் பெறுகின்றது.

இதைப் போல மனிதன் மற்ற உணர்வின் எண்ணங்களுக்கு அடிமையாகி அதன் வழியில் தான் கீழ் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

இன்று உயிரைக் காக்கக்கூடிய படித்த டாக்டர்களாக இருந்தாலும் அவர் கண்டுபிடித்த விஞ்ஞான நுட்பங்கள் கொண்டு வருபவருடைய நோய்களை அறிந்து உறுப்புகளை மாற்றி குணப்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்களாக இருந்தாலும்
1.தொழில் அடிப்படை என்று வரும் போது பொருள் பணம்) வேண்டும் என்ற நிலையே அதிகமாக வளர்ந்து விட்டது.
2.பண வசதியற்றவன் ஒருவன் சிக்கினால் அவன் நோய் தீர்க்க என்று வரும் போது அவனுக்கு நோயே இல்லை என்றாலும்
3.அவனுக்குத் தெரியாமலே அவனுடைய உடலில் இருக்கக்கூடிய நல்ல உறுப்புகளை எடுத்து… கடைசியில் அவன் உயிரை வாங்கி விடுகின்றார்கள்.

இந்த அளவிற்கு விஞ்ஞான அறிவுகள் சென்றுவிட்டது.

தான் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தாலும் வாழ வேண்டிய மற்றவர்களின் உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். திருடியதற்காக… கொடுக்கும் பணத்தை ஏற்றுக் கொள்கின்றான்

சிந்தித்து செயல்பட்டு மனிதனைக் காத்திடும் நிலைகள் கொண்டு வளர்ந்த டாக்டர்கள் இதையெல்லாம் செய்ய அனுமதிக்கிறார்கள். அதைப் பின் தொடர்ந்து நாட்டைக் காக்க வேண்டும் என்ற அரசியல்வாதிகளும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள்.

1.இந்த மனித உடல் வாழ்க்கை தான் சிறந்தது என்று எண்ணுகின்றனர்
2.ஆனால் உலகை விட்டுச் சென்றால் எங்கே போகின்றோம்…? எந்த நிலையில் இருப்போம் என்பதை அறவே மறந்து விட்டார்கள்.

காரணம்… இந்த வாழ்க்கையில் எதையெல்லாம் யாரையெல்லாம் எப்படி எல்லாம் இம்சிக்கின்றோமோ இம்சைப்பட்டவருடைய கண் கூர்மையான நினைவாற்றல் கொண்டு யாரால் ஏற்பட்டது என்று எண்ணப்படும் போது
1.யார் இத்தகைய திருட்டுத் தொழிலைச் செய்தாலும் அந்த உணர்வலைகள் ஊடுருவி
2.இந்த உடலுக்குள் இருக்கும் உயிர் அதிலே இருக்கக்கூடிய காந்தங்கள் நுகரப்பட்டுப் பதிவு செய்து
3.அவன் பட்ட இம்சையின் உணர்வுகள் உடலுக்குள் புகுந்து “அதே இம்சையைக் கொடுக்கும்…” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

மற்றவர்களை இம்சிக்கலாம் அதை ரசிக்கவும் செய்யலாம் ஆனால் இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்த நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றச் செய்து “நீ இதை அனுபவி…” என்ற நிலையில் இதைப் பல காலம் வேதனைப்படும்படியாக வரும்.

இந்த நிலையிலிருந்து மீட்டிக்கொள்ள… ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டி அருள் வழியில் வழி நடந்திடல் வேண்டும்.

பக்தி என்ற நிலையில் மூட நம்பிக்கை கொண்டு… அசுரத்தனமான எண்ணம் கொண்டு… தெய்வத்திற்கு ஒரு குழந்தையைப் பலி கொடுத்தால் என்னை அந்தத் தெய்வம் காக்கும் என்ற நிலையிலும்… மற்ற உயிரினங்களைப் பலி கொடுத்தால் தெய்வம் காக்கும் என்ற நிலையிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

கல்வியில் சிறந்து மனிதனைக் காத்திடும் நிலை வந்தாலும்…
1.தன்னைக் காத்திட “எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்…!” என்று
2.பிறருடைய துன்பத்தை அறியாது துன்பத்தை உருவாக்கும் நிலை தான் இன்று உருவாகிக் கொண்டுள்ளது.

அன்று ஞானிகள் ஊர் தோறும் முச்சந்தியிலே விநாயகரை வைத்துக் காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு தெரு மூலையை எடுத்துக் கொண்டாலும் மாரியம்மன் தெய்வத்தை வைத்திருக்கின்றனர்.

நாம் சிந்தித்துப் பார்க்கும் நேரங்களில்
1.தன்னை அறியாது ஏற்படும் தவறுகளையும்
2.நல்லது செய்தாலும் அதிலே இன்னொரு தீய விளைவுகள் எப்படி மாறி (மாரி) வருகின்றது…? அதை எப்படி நீக்க வேண்டும்…? என்பதை உணர்த்துவதற்கு
3.மாரியம்மனையும் விநாயகரையும் திரும்பும் பக்கம்… நினைக்கும் பக்கம்… பார்க்கும் பக்கம் எல்லாம் உருவாக்கிக் கொடுத்தார்கள் அன்றைய ஞானிகள்.

ஆனால் பின் வந்தோர் அனைவரும் என்ன செய்தார்கள்…?

தன்னக் காத்திட பூதகணங்களாக உருவாக்கி… அந்தப் பூதங்கள் தான் நம்மை காக்கும் என்று பலி பீடங்களை அமைத்து உயிர்ப் பலிகளை இடச் செய்து அது தான் நம்மைக் காக்கும் என்று அசுர உணர்வுகளை வளர்த்துக் கொண்டு மனித நேயமற்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியன் நஞ்சு உருவாகும் உணர்வின் எண்ணங்களை அழித்து நஞ்சினைத் தனக்குள் அடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றான்.

விண்ணிலே உருப்பெற்ற உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து உடல் பெற்ற பின் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக அடுத்தடுத்து உடல்களை எப்படி மாற்றி வந்தது…?

ஒவ்வொரு நிலையிலும் தான் சுவாசித்த உணர்வுகள் மூஷிகவாகனா… அதாவது எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வின் மணங்களை நுகர்ந்து
1.அதுவே வாகனமாக இந்த உடலை அழைத்துச் சென்று அந்த உடலைக் காத்திடச் செய்தது
2.காத்திட்ட உணர்வுகளை எல்லாம் வினையாகச் சேர்த்து அதனின் அடிப்படையில் ஞானம் வளர்ந்து
3.அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து மனிதனாக வந்தது என்பதை உணர்ந்தவன் அகஸ்தியன்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை நீக்கி நல் வினையை நாம் எப்படிச் சேர்க்க வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் எப்படி விண் செல்ல வேண்டும்…? என்பதை சாதாரண மனிதனுக்கும் உணர்த்துவதற்கே திரும்பிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் விநாயகனை அன்று வைத்தார்கள் ஞானிகள்.

வியாசகனும் கண்ணனும்

நீர் சக்தியை முதன்மைப்படுத்திடும் “கணபதி இராசாயணம்” என்பதே அகஸ்திய குரு முனிவரின் தொடர்பு பெற்றிட்ட பொழுது… தாகவிடாய் கொண்டு நீர் தேடி அலைந்த பொழுது
1.அகஸ்தியர் தொடர்பினால் பெற்றுக் கொண்ட அனுபவமே
2.“தருமபுத்திரனுக்கு… தர்ம தேவதை அருளிட்ட உபதேசங்கள்…!”

தாய்மையின் பேறு என்ற மாளப்பெரிய பூமியின் மாண்பு ஒலி காட்டும் வேகம் அறிவின் சமத்துவ பாவனை என்றே… பண்பின் வழி நாடும் ஆத்மாக்கள் உயர்வு கொண்டிட்ட எண்ணத்தால்… மனித ஜீவித வாழ்க்கையிலும் வேண்டுவது ஒன்று உண்டு.

அது… அரிதாகிய மானிடப் பிறவி… உயர் ஞானத்தால் தான் பிறவா நிலை பெறல் வேண்டும் என்பதே.

“காவிய ரிஷி” (வியாசர்) கண்டு தெளிந்த அனுபவ ஞானம். இமயத்தில் மெய் ஒலி கேட்கும் நிசப்த ஏகாந்தத்தில் அறிந்து கொண்டிட்டது என்ன…?
1.அரிதாகிய மானிடப் பிறவி
2.சுயநோக்கின் (சுயநலம்) செயல்வழிப் போக்கால் கடமை கொண்ட மனத்தின் பாங்கு…
3.தன்னைத்தான் மாய்த்துக் கொள்ளும் என்பதே,

விட்டில் பூச்சி எனத் தோன்றி மறையும் பிறப்பாக… அதைக் கௌரவர்களாகச் சுட்டிக்காட்டி… அதன் நோக்கில் மாமகான் பெற்றிட்ட அனுபவ ஞான அனுபவத்தை… இன்றும் இமயத்தின் சாரல் செல்வோர் கண்டு உணரலாம்.

மெய் ஞான விழிப்பிற்கே அது விருந்து (வியாசர் விருந்து).

மாலைப் பொழுதில் தோன்றிடும் ஏராளமான பனி லிங்கங்கள் புலர் காலைப் பொழுதிற்குள் மறைந்துவிடும் இயற்கையை… இயற்கையின் செயலில் உயர் ஞானத்தால் அன்று தெளிந்தான் வியாசக மாமகான்.

கண்ணனையும் கண்டான்…! கிருஷ்ணா என்ற ஜெபத்தைக் காட்டிடும் உருவை… (தான் கண்டதை) விண்டு கூறிடும் அனுபவத்தின் முன் உருவமாகக் காட்டி
1.மனத்தின் வளத்தை நன்னெறிப்படுத்த உயர் நோக்கால் அன்று காட்டியது…
2.இன்றோ உருவ வழிபாட்டின் வியாபாரக் கூடமாக்கியது… அது மனித மனத்தின் விந்தை.

“பச்சை வண்ண நீரமில சுவாச நாபிக் கொடியைப் பிண்டத்தில் கண்ட பொழுது…” ககன மார்க்க வழி செல்லும் வியாசக பகவான்… அண்டத்திலும் ஓர் இடத்தில்… நீர்க் கரையில் இயற்கையாகக் கண்ணன் உருக் கண்டு… அவ்வுருவைக் காட்டித் தத்துவ விளக்கங்கள் அளித்திட்ட செயலை அறிந்து கொண்டிட வேண்டும்.

January 19, 2024

சூரியக் குடும்பத்தின் ஜாதகம்

ஜீவன் பெற்று கோளின் தன்மை ஆனாலும் சந்திரன் பூமியின் அணைப்பிலே தான் ஓடுகின்றது. பூமியின் அணைப்பிலே ஓடினாலும் சூரியனின் ஒளி பூமியில் பட்டு அதனுடைய நிழல் படும்பொழுது சந்திரனை முழு நிலவாக ஆக்குவதில்லை.

சூரியனின் ஒளியை பூமி தனக்குள் ஒரு பகுதி அதிகமாக எடுத்துக் கொள்கிறது. அத்தகைய பூமியின் நிழல் சந்திரனில் படும் பொழுது இருள் சூழ்ந்த நிலையாக அங்கே வளர்கின்றது.

இருப்பினும் இந்த சூரியனின் நிலைகள் கொண்டு மற்ற கோள்களின் சக்தியை அது உணவாக எடுக்கும் பொழுது புதனோ மற்ற கோள்கள் வரப்படும் பொழுது சூரியன் நேர் பார்வையாக வரும் நேரத்தில் பூமிக்கு நேரே அந்தக் கோள்கள் மறைத்துக் கொண்டால்
1.பூமிக்கு வரும் செவ்வாய்க் கோளின் உணர்வின்… அதாவது நாதங்களை எழுப்பும் உணர்வுகள் இதற்குக் கிடைப்பதில்லை.
2.ஒரு நிமிடம் மாறி விட்டால்… மனிதனாக விளைந்த நாத சுருதிகள் மாறும் பொழுது
3.இந்த மனிதனுக்குப் புத்தி பேதம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள்…
4.நாதங்கள் சுருங்கி விடுவதும்… பின் பல நோய்களும் வந்து விடும்.

மெய் ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக உணர்த்திய நிலைகள்.

ஒரு சூரியக் குடும்பத்தில் ஒதுங்கிய கழிவுகளை “வால் நட்சத்திரம்” என்று சொல்வார்கள்.

மற்ற நட்சத்திரங்களுடன் சேர்ந்து மற்ற கோள்களுடைய நிலைகள் பூமிக்குள் வராதபடி இந்த உணர்வின் அலைகள் உந்தப்பட்டு பிரபஞ்சமே அல்லாதபடி “ஒரு தனி இடத்திலே” அது ஒதுங்கி நிற்கும்.

ஒரு கட்டிடத்திலே சுழிக் காற்று அடித்தால் தூசிகள் எப்படி ஒரு பக்கம் ஒதுங்குகின்றதோ அது போன்று
1.மற்ற கோள்கள் உமிழ்த்தும் (கழிக்கும்) நிலைகள் அது எதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாதபடி
2.ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் இடைப்பட்ட இடத்திலே சுழன்று கொண்டிருக்கும்.

மற்ற ஈர்ப்பு எதுவும் இல்லாதபடி “கடும் நஞ்சின் தன்மையாக” அடைந்திருக்கும் நேரத்தில்… அது போகும் பாதையில் ஏதாவது சூரியக் குடும்பம் எதிர்பட்டால் என்ன ஆகும்…?

பிற மண்டலத்தில் இருந்து குவிக்கப்பட்ட தூசிகளைப் போன்றே அதற்குள்… சூரியன் ஈர்ப்பு காந்தத்தால் இதனின்று கலந்த அந்த நிலைகளும் வால் நட்சத்திரத்தில் உண்டு.

சூரியன் அதைக் கலந்து இழுக்கப்படும் பொழுது சூரியனுக்குள் சென்றால் அந்த நஞ்சினை மாற்றி அமைத்து விடுகின்றது

ஆனால் நட்சத்திரத்திங்களுக்கும் சிக்காது அதிலிருந்து விலகி இடைப்பட்ட நேரங்களில் கோள்கள் இருக்கும் பக்கமாகச் சென்று அதற்குள் விழுந்தால் அங்கே “எரிமலையும்… வெடிப்பும்” ஏற்படும்.

அதே சமயத்தில் கோள்கள் தடுக்காதபடி நம் பூமி போகும் பாதைக்குள் நுழைந்து… பூமியின் ஈர்ப்புக்குள் வந்தால் அது எந்தப் பிரதேசமோ அங்கே அரசாட்சி செய்யும் அரசனுக்கு “ஆகாது…” போய்விடும்.

அதாவது
1.நஞ்சின் தன்மையாக அங்கே கலக்கப்பட்டு
2.அந்த நாடுகளுக்குள் மக்களிடையே கலவரங்களும் சோர்வடையும் நிலைகளும்
3.அரசர்களுக்குள் சிந்திக்கும் திறன் இழக்கப்பட்டு அதனால் நாட்டுக்கு நாடு போர் முறைகளும் மூளும்.

பூமிக்குள் வரும் போது நடு மையத்தில் கொதிகலனாக ஏற்பட்டு சிறுகச் சிறுக விளைந்து சில பகுதிகளில் பூகம்பங்கள் கிளம்பும். அதே சமயத்தில் ஹைட்ரஜன் என்று நீருக்குள் இந்தச் சக்திகள் கலந்து மோதப்படும் பொழுது சுழல் காற்றாக உருவாகிப் புயலாக மாறிவிடும்.

இதுகள் எல்லாம் “விஞ்ஞானிகளுக்கு அப்பாற்பட்ட நிலைகளை” நான் (ஞானகுரு) சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலும் அதனின் அணுக்களின் செயலும் எவ்வாறு உருவானது…? என்பதை என்னால் அறிய முடிந்தது.

அதனின்று வடிக்கப் பெற்று உருப்பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற மனித உடலில்… இன்று ஜாதகம் என்ற பெயரால் மதம் இனம் குலம் என்ற பெயரால் நாம் வடித்துக் கொண்ட நிலைகள்
1.இந்த உடலில் இருந்து ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை இழந்து
2.மனித உருவையே அழித்து விடும் எண்ண உணர்ச்சிகள் வளர்ந்து விட்டது.

மதம் இனம் மொழி என்ற பேத நிலைகளாகி… நஞ்சின் தன்மை சுவாசிக்கப்பட்டு… பச்சிளம் குழந்தைகள் தவறே செய்யாத நிலை இருந்தாலும்… வெறி கொண்டு கொன்றிடும் நிலை வளர்ந்து கொண்டுள்ளது.

மனிதனுடைய உடலுக்குள் நஞ்சு கலந்து கலந்து அழித்திடும் உணர்வுகள் ஊடுருவிச் சென்று இந்தப் பூமியே முதுமை அடைந்து “மனிதனை மனிதனே கொன்று புசிக்கும் நிலை வந்து விட்டது…”

1.மனிதனைக் கொன்று அவன் வைத்திருக்கும் செல்வத்தைத் திருடுகின்றனர்
2.ஒரு மனிதன் கையில் சிக்கினால்… தன் பசியைப் போக்க அவனையே ரோஸ்ட் செய்து சாப்பிடும் நிலையும் இன்று வந்துவிட்டது.

“அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டும்

வியாசக பகவான் பார்த்தனுக்குத் தத்துவப் பொருளாகக் கீதையை உபதேசித்து… கண்ணன் என்று பாரத இதிகாசத்தை உலகினுக்கீந்த சூத்திரதாரியாகச் செயல்பட்ட அந்த மாமுனிவர் யாரப்பா…?

இயங்கும் இயக்கம் என்று தத்துவப் பொருள் காட்டிய எத்தனை எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகள்… அவற்றின் சம்பவங்கள்…
1.ஆத்மா ஐக்கிய நிலை
2.நீதியை நிலைநாட்டும் வேகம்… வேகம் கொண்டிட்ட விவேகம்…
3.இயங்கும் இயக்கமான சம்பவங்களில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்
4.வாழ்க்கை மோதல் சம்பவங்களின் நன்மை தீமைகளில் இருவினைப் பயனால் செயல்படுத்திடும் தாந்திரீகங்கள்
5.தாந்திரீகத்தால் வெற்றிக்கு வழி தேடும் போராட்டங்கள்
6.ஒலி உச்சாடனங்கள் என்று கைக்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் நடைபெறும் செயலாக
7.வேத விளக்கங்கள் காட்டி “உண்மையின் சக்தியே வெற்றி பெறும்…” என்றும்
8.சத்தியத்திற்கு ஏற்படும் சோதனையில் வென்று காட்டிடும் வழியாக
9.பேரருள் பெறும் மனத்தின் பக்குவமே “வானவியல் ஞான திருஷ்டி...!”

சத்தியமே விஸ்வரூபம் காட்டி வினைப் பயன் களைந்திட்ட உபதேசமும்… சத்திய நியாய தர்மத்தை வெறுத்திடும் கலியில் “குருவே (உயிர்) தர்மத்தை நிலை நாட்டும் தர்ம தேவனாக…” மனப்போராட்டத்தையே வென்று காட்டிடும் ஜீவன் முக்தனாக… ஒவ்வொரு ஆத்மாவும் நன்னிலை பெற்று விட்டால்… மனித எண்ணத்தின் உயர்வைக் கைக்கொள்ளும் காரியமாக… நன்னெறி வழிகாட்டிய மகரிஷிகளின் உயர் தத்துவத்தால் ஆத்ம வலு பெற்றிட வேண்டுமப்பா.

கிருஷ்ண லீலைகள் என்று காட்டியவற்றை இன்ப ரசம் என்று எண்ணுகின்றான். அனைத்துமே இன்பம் தான். “ஈஸ்வரரின் சொரூபத்தில்”
1.அனைத்து உயிர்களையும் ஒரே பாவனையாகக் காட்டுபவனவற்றில்,
2.எண்ணத்தால் ஆத்ம ஐக்கியம் பெற்றிடும் சம்பவங்களின் கோவையே கோபியர்கள் கொஞ்சிட்ட லீலைகள்.

“இறை சக்தி” தன்னுள் ஒன்றான தனி சக்தி என்றே…
1.அன்பு மனத்தினோடு நாயகன் நாயகி பாவனையாக
2.ஒன்று கலந்திடும் உயிர் ஆத்ம கலப்பே உயர் ஞானப் பொக்கிஷம்.

கோபியர்களுக்குத் தீங்கிழைக்க வந்துற்ற எத்தனை அசுரர்களைக் கண்ணன் மாய்த்தான்…? என்று காட்டியவற்றில் மனிதன் பெற்று உயர வேண்டிய ஒளி காந்த சக்தி… ஆத்மாவின் அருள்…
1.பேரருள் செல்வத்திடம் பற்று வைத்திடும் உள்ளமாக
2.காக்கப்பட வேண்டிய நிலைகள்… காக்கும் தன்மைகள் அனைத்தும் உணர வேண்டும்.

உயர் ஞான வளர்ப்பின் சித்து… சித்தன் கண்ட செயலாகக் கொண்ட எண்ணத்தின் லட்சியம் எதுவோ… அந்த லட்சியத்தை வென்றுவிடும் திட மனத்தின் சித்தம் எவ்வகையில் செயல் கொண்டிட வேண்டும்…? என்று விளக்கிட்ட காவிய படைப்பின் ஓர் அங்கமாக…
1.ஞானப்பயிர் வளர்க்க மகான்கள் உபதேசமாக மொழிந்த நிலைகளில் எல்லாம்
2.மனிதன் பஞ்சேந்திரியங்கள் கொண்டு செய்யும் தொழில் “கர்மா” என்று சூட்சுமப் பொருள்படுத்தி
3.செய்கின்ற வினைகளுக்கு உரிய நாயகன் எனும் உயர் சக்தி முயற்சி என்ற
4.ஆய்வில் கருத்தினைச் செலுத்திடும் பாங்கில் கண்ட இலச்சினை (அடையாளம் – LANDMARK)
5.அதுவே லட்சியமாகக் கொள்ளும் மனத்தின் திறன் வளர்க்க
5.மனத்திறன் ஈர்ப்பில் ஆத்ம ஒளிப்பயிர் வளர்க்க
6.வியாச பகவான் பெற்று உயர்ந்த அனுபவ ஞானமே… “அர்ஜுனன் என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டுமப்பா.

அர்ஜுனன் கைக் கொண்ட “காண்டீபம்” (கூர்மை) லட்சியத்தை அடைந்திட… கருவின் திருவாக உள்ளத்தில் விளைந்தது என்ன…? மரம் தெரிந்ததா…? மரக் கிளைகள் தெரிந்ததா…? கிளைகளில் ஆடும் இலைகள் தெரிந்ததா…?
1.இலை மறைவு… காய் மறைவு… அன்றோ அவன் கண்டது…!
2.மகரிஷி புகட்டிடும் உண்மைத் தத்துவம் இலச்சினை கண்டான்… அடைந்திடும் லட்சியம் கொண்டான்.

லட்சியம் மறைந்திடாத் தன்மையாக அடைய வேண்டிய குறிக்கோள்… அதுவே “உயர் ஞான விழிப்பின் பின் சாந்தம் குடிகொள்ளும் அமைதி…” காப்பிய ரிஷியின் ஒவ்வொரு அனுபவமே “ஆரம் கொண்ட முத்துக்களப்பா…”

நீர் தேடிப் பாலையில் அல்லலுற்ற பேய்த்தேர் என்றும் அலகைத் தேர் என்றும்… அன்று காட்டிட்ட கானல் நீரைக் கண்ட பொழுது… உயிர் வாழப் பதைபதைட்ட “பீமன்” என்னும் பலவான் ஆகும் மனித மனத்தின் பாங்கு… நீர் பருகிடும் அதி அவசரத்தால்… “பாலையின் நீரைப் பருகிட முடிந்திடுமோ…?”

1.நகுல மன உத்தியால் நீர் அருந்த… நீரைச் சுவைத்திட
2.சகாதேவனும் துவர் (துறவியின் ஆடை) ஆடை கொண்டு ஞான நீர் அருந்த
3.வென்றது தர்மம் என்று மனத்தின் பாங்கு பலம் பெறுவதே “ஆத்ம பலம் பெற்றிடும் சீரிய சிந்தனை…”

ஆடையில் நனைத்த நீரினைப் பருகிப் பின்னர் ஆடையை உதறிவிட்டால் பாலையின் ஏடென்ற துர் மணல் நீங்குமப்பா. “ஞானத்தைக் கூட்டி இதைத் தெரிந்து கொள்…!”