ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 31, 2023

அருள் வழியில்… இப்பொழுது வருபவர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் தான்…!

பாம்பினங்கள் விஷத்தைப் பாய்ச்சித் தன் உணவுக்காக மற்ற உயிரினங்களை எடுத்தாலும் மற்ற உடலில் உள்ள விஷங்கள் எல்லாம் தன் உடலில் கலந்து கலந்து

1.பல விதமான வர்ணங்களாக… நாகரத்தினமாக விளைகின்றது…. “கல் மயமாகின்றது…!”
2.ஆனால் மனிதனான பின் உயிருடன் ஒன்றி உணர்வுகளை ஒளியாக மாற்றப்படும் போது இது “மின் மயமாகின்றது…”

அதாவது… இயக்கம் உயிர் துடிப்பு எப்படி ஆகின்றதோ நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்த்து… ஒளியின் சேர்க்கை ஆகிறது.

தேனீக்கள் ஒன்றாகச் சேர்ந்து தேனை உருவாக்கி ஒரு கூடாகக் கட்டி அதிலே எப்படி அமைத்துக் கொள்கின்றதோ இதைப் போன்று நமது உயிரும் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகளை… தேனீயைப் போன்று ஒன்றாக இணைந்து ஒளியாக மாற்றுகிறது.

துருவ நட்சத்திரம் திடப்பொருள் அல்ல… உயிரின் இயக்கத்தைப் போல ஈர்க்கும் ஒன்றுடன் இணைந்து அது வாழும் தன்மையும் பெற்றது திடப்பொருள் ஆகிவிட்டால் வைரமாக… கல்லாக… கோள்களைப் போன்று பாறை ஆகிவிடும்.

மின் இயக்கத்துடிப்பாக அதன் உணர்வின் இயக்கம் வரும் பொழுது கோள்கள் தன் சுழற்சியின் மையத்தில் வெப்பமாகி அதன் உணர்வைக் கவர்ந்து கொண்டு வருகின்றது

ஆனால் உயிரணு தோன்றி நட்சத்திரமாக வளர்ச்சி ஆக்கப்படும் பொழுது தேனீயைப் போன்று தன் உணர்வின் தன்மை ஒளியின் உணர்வுகளை ஒன்றாக எடுத்து “ஒளிக்கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டே உள்ளது….”

தேனீக்கள் சேகரித்து வைத்திருக்கும் தேனை நாம் உட்கொள்ளும் பொழுது அது எப்படி சுவையாக இருக்கின்றதோ அதைப்போன்று
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து
2.நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு ஆகாரமாகச் செலுத்தி அதனை வளர்ச்சியாக்கும் போது
3.விஷத்தை மாற்றி இனிமை என்ற உணர்வை ஊட்டி அதை வளர்த்துக் கொள்வதே ஆறாவது அறிவின் சிறப்பு.

எல்லாமே… சந்தர்ப்பத்தால் நுகர்ந்தறிந்த உணர்வுகள் தான் பரிணாம வளர்ச்சிக்கே காரணமானது.

மனிதனாகி ஆறாவது அறிவு பெற்றபின்…
1.தீமையை நீக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி
2.நமக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் ஜீவ அணுக்களை உயிரணுக்களாக மாற்றி
3.ஆறாவது அறிவின் துணை கொண்டு அனைத்து உலகிலும் வரும் இருளை நீக்கி
4.ஒளி என்ற உணர்வின் அறிவாக ஒருக்கிணைந்த இயக்கமாகப் பெறச் செய்வது தான் நம்முடைய நோக்கமாக இருத்தல் வேண்டும்.

உயிர் உடலான இருளுக்குள் இருந்து தான் உணர்வின் அறிவாக இயக்குகின்றது. ஆனால் மகரிஷிகள் என்பவர்கள்… உயிரைப் போல ஒளியின் உடலாக மாற்றி இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் “சூரியனே அழிந்தாலும்” அதிலிருந்து வெளிப்படும் விஷத்தின் தன்மையைக் கூட ஒளியாக மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவர்கள்.

அத்தகைய ஆற்றல் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இதைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது
1.நுகர்ந்த உணர்வு உங்கள் உடல் உறுப்புகளில் உள்ள ஜீவ அணுக்களின் முகப்பில் இணைந்து
2.ஒவ்வொரு நோடியிலும் சுவாசிப்பது… புருவ மத்தியில் உயிரிலே மோதுவது போன்று
3.அந்த ஜீவ அணுக்களும் இந்த உணர்வைப் பெறும் தகுதி பெறுகின்றது.

உங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் அத்தகைய தகுதி பெறச் செய்வது தான் எம்முடைய (ஞானகுரு) இந்த உபதேசத்தின் நோக்கம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் என்னுடைய நினைவை துருவ நட்சத்திரத்திற்கு எப்படி அழைத்துச் சென்றாரோ அதே போல்
1.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் உங்கள் உணர்வுகளைத் தொடர்பு கொள்ளச் செய்து
2.உங்கள் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்களின் முகப்பில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கும்படி செய்கின்றேன்.

விஷத்தை ஒளியாக மாற்றும் அந்த அரும் பெரும் சக்தியை நீங்கள் பெறுவதற்கு… அதற்குண்டான சரியான காலப்பருவங்களை இப்பொழுது ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

குருநாதர் எந்தெந்தப் பருவங்களில் எதனெதன் சந்தர்ப்பத்தில் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதே போல்
1.உங்களுக்குள் அந்த மனப்பக்குவம் வளர்ச்சி பெறுவதற்குத் தக்க
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கிறேன்.

அப்படி மனப்பக்குவமாகி விளைந்த பின் உங்களில் விளைந்த உணர்வுகள்… உங்களுடன் பழகும் மற்றவர்களுக்கும் நன்மை பயக்கும் சக்தியாக மாறும்.

ஆகவே “பிந்தி வருபவருக்கு…” உங்கள் மூலமாக உயர்ந்த சக்திகளைக் கிடைக்கப் பெறச் செய்ய முடிகின்றது ஏனென்றால் வளர்ச்சி பெற்ற பருவம் ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு அது விளைகின்றது என்பதை நீங்கள் உணர்தல் வேண்டும்.

1.குருவுடன் தொடர்பு கொண்ட உங்களில் விளைந்த அந்த உணர்வுகள் தான்
2.இனி வருவோருக்கு அந்த மகரிஷிகளின் உரமான சத்தும் கிடைக்கப் பெறுகின்றது.

அணு குண்டுகளை உருவாக்கிய எந்த நாடும் அதைப் பயன்படுத்தப் போவதில்லை… தானாகவே வெடிக்கப் போகிறது…

இங்கே சில உண்மைகளை வெளிப்படுத்துகின்றோம் என்பதின் பொருளே
1.இக்கலியின் மாற்றத்திலிருந்து மக்களை நல்வழியில் கல்கிக்கு அழைத்துச் செல்வதற்காக
2.பல சித்தர்களினாலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை இன்று இந்நிலையில் அச்சித்தர்களுடன் கலந்தே
3.இவ்வுலக மக்கள் இதிலிருந்து மீண்டு உண்மையை உணர்ந்து ஏற்று நடப்பதற்காகத்தான்…!

இந்தச் சக்தி அனைவருக்கும் பொதுவானதே. அச்சக்தியின் நிலையை ஏற்கும் தன்மை மட்டுமல்ல… ஏற்றதனை வழி நடப்பதிலும் அச்சக்தியின் தன்மையுள்ளது.

அனைத்தையும் அறிந்து விட்டோம் என்ற நிலையில் நம் சக்தியை விரையமாக்கினாலும் அச்சக்தி நிலைத்திடாது. அச்சக்திகளை நிலைநிறுத்தி வாழும் தன்மையிலே வழி வந்திட வேண்டும் நாம் அனைவருமே.

சூரியனிலிருந்து நாம் அணுக்கதிர்களைப் பெற்று வாழ்கின்றோம். அவ்வாவியான அணுவேதான் இவ்வுலகும் அனைத்து உலகுமே.

ஆவியான அணுவை ஆக்கும் வழியில் செயல்படுத்திடாமல் அழிக்கும் நிலைக்குச் செயல்படுத்திடும் வினையை இவ்வுலக மக்கள் கூடிய விரைவில் உணரும் காலம் மிகவும் நெருங்கிக்கொண்டே வருகிறது.

எந்நிலையில்…? என்று கேட்பீர்கள்...!

இவ்வுலகில் சூரியனிலிருந்து வரும் அணுக்கதிர்களைக் கொண்டேதான் பல நிலை பெற்ற செயல்களை இம் மனிதனின் எண்ணம் கொண்டு உருவாக்கியுள்ளான்.

இவன் உருவாக்கிய அணுகுண்டுகளை ஒவ்வொரு நாட்டிலும் பாதுகாக்கும் நிலையில் பூமியின் அடியில் புதைத்துப் பல இரும்புக் கவசங்களைக் கொண்டு சிறு அணுவும் வெளிப்படாத நிலையில் தன் அறிவை எல்லாம் சக்தியையெல்லாம் செயல்படுத்தி விஞ்ஞானக் குண்டுகளைப் பல நாடுகளில் புதைத்து வைத்துள்ளான்.
1.“இன்று வெடிக்கப் போகின்றேன்... நாளை வெடிப்பேன்...!” என்று பயமுறுத்தலுடன்
2.பயமுறுத்தலுக்காக வைத்துள்ள குண்டுகளை இவனும் வெடிக்கப் போவதில்லை... மற்றவனும் வெடிக்கப் போவதில்லை.

ஆனால் இவ்வுலகம் சுற்றிக் கொண்டே உள்ள நிலையில் சூரியனின் அணுக்கதிர்களைப் பெற்றுக் கொண்டே உள்ளது. இவ்வுலகமும் ஈர்த்து வெளிப்படுத்திக் கொண்டே உள்ளது.

ஆவியில் வந்த அணுக்கதிர்கள்தான் அனைத்துமே. இவ்வுலகம் ஈர்த்த நிலையில் அது வெளிப்படுத்தும் நிலைகொண்டு இவ்வுலகத்தின் பாதுகாப்பினால் ஆன அணுகுண்டுகள் வைத்துள்ள நிலையெல்லாம் இப்பூமி வெளிப்படுத்தும் காந்த சக்தியை ஈர்த்துக் கொண்டே உள்ளன.

இந்நிலையிலேயே இன்னும் சில காலங்களில் அதன் சக்தி இழந்து… இவ்வுலக சக்தி தன்னுள் ஈர்த்த சக்தியை வெளிப்படுத்தும் நிலையில் கக்கும் நிலையில் அதன் மேல்பட்டு… “ஓர் இடத்தில் வெடிக்கும் நிலையில்”
1.அணுக்களின் சிதறலினால் அனைத்து அணுகுண்டுகளுக்கும் அதனதன் ஈர்க்கும் நிலையில்
2.அனைத்தும் வெடிக்கும் நிலை மிகக் குறுகிய காலத்தில் உள்ளது.

இப்பூமியில் அணுகுண்டுகள் வெடிக்கும் நிலையில் இப்பூமியே அதிரும் நிலையில்தான் சிறு அதிர்வினால் இவ்வுலக நிலையே மாறும் தன்மைக்கு வரப்போகின்றது.

இந்நிலையை அறிந்து நல்வழி பெற்று வாழ்வதுதான் நம்மால் இன்று செய்திட முடியும்.

இன்று இந்நிலையை வெளிபடுத்துபவர் ஏன் அந்நிலையிலிருந்து காப்பாற்றலாமே...? என்ற வினாவும் எழலாம்.
1.அனைத்தையும் அறிந்து சூட்சும நிலைகொண்டு நல்வழி புகட்டிடலாமே தவிர
2.அனைத்தும் அறிந்த ஆண்டவன் என்ற அச்சக்தியின் சக்தியே “நான் என்ற சக்தி எனக்கில்லையப்பா…!”

யானறிந்த சக்தியை என்னுடன் கலந்துள்ள பல ரிஷிகளின் நிலை கொண்டே இந்நிலையை வெளியிடுகின்றேன். அதி விரைவில் அனைவருக்குமே வெளியிடவும் காலம் சொல்வோம்.

August 30, 2023

“உயிரைப் போன்றே ஒளியாக மாற வேண்டும்” என்று விரும்புபவர்களுக்கு…!

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.

“தினம் தினம்” நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வதை “ஒரு தலையாயக் கடமையாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…”

1.உடலுக்கு வேண்டிய உணவை எப்படி அவ்வப்போது உட்கொள்கின்றோமோ
2.அதைப் போன்று நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்களுக்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்ய வேண்டும்.

27 நட்சத்திரங்களும் புவியின் ஈர்ப்பிற்குள் அதனதன் அலைகள் கவரப்படும் போது மின்னலாகப் பாய்கின்றது. சில நட்சத்திரங்களின் அலைகள் எந்தப் பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ மண்ணுடன் கலந்து அந்தந்த நட்சத்திரங்களின் குணங்களுக்கொப்ப வைரங்களாக விளைகின்றது.

காற்றில் இருப்பதைப் புவி ஈர்ப்பின் தன்மை கொண்டு கவர்ந்து வைரங்களாக அது விளைகின்றது.

அது போன்றே துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுகச் சேர்க்க
2.உயிரைப் போன்றே ஜீவணுவாகி… (ஒளியான) உயிரணுவாக மாறிவிடும்.

கோடிக்கணக்கான ஜீவணுக்கள் நம் உடலில் இருப்பதை உயிரைப் போன்ற உயிரணுக்களாக…
1.ஒளியான அணுக்களாக மாற்றும்போது ஓர் ஒளியின் உடலாகவும்
2.எத்தகைய விஷத்தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் நம் உயிர் பெறுகின்றது.

இதை நாம் அறிந்து கொள்தல் வேண்டும்.

நட்சத்திரங்களுடைய அலைகள் பூமிக்குள் கவரப்பட்டு அது மண்ணுக்குள் கருவுற்று வைரங்களாக விளைந்த பின் அது வெடித்துத் தனித் தன்மையாக வெளி வந்துவிடும்.

இதைப் போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு உணவாகக் கொடுத்தபின்… நாளுக்கு நாள் அது விளைந்து வெளிப்படும் பொழுது… அறிவின் வளர்ச்சி… அறிந்திடும் வளர்ச்சியாக இங்கே வருகின்றது. அதாவது…
1.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவது போன்று
2.நமது ஜீவணுக்களின் துணை கொண்டு கண்ணின் வளர்ச்சி கொண்டு
3.அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்களின் துகள்கள் மின்னலாக மாறி பூமிக்குள் பட்ட பின் சிறுகச் சிறுக வைரமாக விளையப்படும் பொழுது ஒளியின் உடலாக அது பெறுகின்றது… நட்சத்திரங்கள் மின்னுவது போன்று…!

நமது உயிரும் மின்னணு போன்று தான் இயங்கிக் கொண்டே உள்ளது. அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு உடலில் உள்ள ஜீவணுக்களும் இயங்குகின்றது.

மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி ஆவதை அதற்குண்டான இணைப்புகளைக் கொடுத்து நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறோம். நமக்கு வேண்டிய உபகரணங்களை அந்த மின்சாரத்தால் (மின் அணுக்களால்) இயக்கி அதன் வழி அனைத்துப் பயன்பாடுகளையும் பெறுகின்றோம்.

அது போல் நம் உயிரும் சூரியனின் தொடர்பு கொண்டு தான் இயங்குகின்றது. ஒவ்வொரு ஊரிலும் சப்ஸ்டேஷனை (EB SUB-STATION) எப்படி நாம் வைத்திருக்கிறோமோ அதைப் போன்று நம் உயிரும் அந்த நிலை பெறுகின்றது.

அதாவது…
1.சூரியனின் துணை கொண்டு அந்த மின் கதிர்கள்
2.உயிர் வழி நம் உடல் அணுக்களை எல்லாம் இயக்குகின்றது.

இருப்பினும்… இது அனைத்தையும் அறிந்திடும் தன்மை கொண்டு வாழ்க்கையில் வரும் விஷத்தை எல்லாம் மனித உடலில் இருந்து வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன் “அகஸ்தியன்...”

அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஒரு மனமும் ஒரு மனமாகி… அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிர் அணுக்களை வளர்த்து… ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் “துருவ நட்சத்திரம்…” விஷத்தை ஒளியாக மாற்றிடும் தன்மை பெற்றது.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்ட விஷங்கள் தனக்குள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.

அந்த வைரத்தைத் தட்டி நாம் சாப்பிட்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்…! ஆனாலும் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாக நாம் காண முடிகின்றது… வெளிச்சமாகத் தெரிகின்றது.

1.இன்றைக்கும்… விஷம் தான் உலகை இயக்குகின்றது
2.சூரியனும் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பமாகி இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது
3.நமது உயிருக்குள்ளும் விஷத்தின் தாக்குதலாகி அதனால் துடிப்பின் தன்மை ஏற்பட்டு இயங்கிக் கொண்டுள்ளது
4.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது

இதை எல்லாம் நாம் அறிதல் வேண்டும்.

உதாரணமாக
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் யாரும் கவர முடியாது
2.குரு துணை இல்லாது அதை எடுப்பது மிகவும் கடினம்,

ஆனால்
1.அத்தகைய கடும் விஷத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய குருவை (ஈஸ்வரபட்டர்) நாம் பெற்றுள்ளோம்
2.விஷத்தை ஒளியாக மாற்றிக் கொள்ளும் பருவத்தை நமது குருநாதர் ஏற்படுத்தி உள்ளார்.
3.அதைத்தான்… அந்தக் கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றும் திறன் உங்களுக்கும் பெறச் செய்து கொண்டிருக்கிறோம் (ஞானகுரு)

ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் உயிரின் முகப்பில் ஈர்க்கப்பட்டு உடல் முழுவதும் எப்படிப் படர்கிறதோ இதே போல்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய (அணுக்கள்) அந்த ஜீவணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
2.அதன் துணை கொண்டு இந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தை ஈர்க்கச் செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அதே போல் உங்களில் இயக்கச் செய்யும் போது “நமது குருநாதராக” ஆகின்றார்.

ஏனென்றால் அவர் வழியில் நாம் தொடரப்படும் பொழுது “அதனுடைய தொடர்வரிசை” வருகின்றது குரு வழியில் இதைப் பெற்றால் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

ஜெப நிலை

கேள்வி:

நாம் ஏதாவது ஒரு காரியத்தைப் பற்றி முடிவு எடுக்க முடியாமல் இருந்தால் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டு இருக்காமல் அந்த விஷயத்தை ஆராய்ந்து கூறுமாறு அந்தராத்மாவிடம் ஒப்பித்து விட்டு நமது வேறு காரியங்களைச் செய்து கொண்டிருந்தால் அந்த அந்தராத்மா அந்தக் காரியத்தை அலசிப் பார்த்து சரியான விடையைக் கண்டு பிடித்து நம் வெளி மனதிற்குத் தெரியப்படுத்தும் என்று எண்ணுகின்றேன்.

ஈஸ்வரபட்டர்:
இந்நிலைதான் ஜெப நிலை (தியானம்) என்று நான் உணர்த்தும் நிலை.

ஒரு நிலைக்கு நம்முள் தீர்வு கண்டிட நம்முள் சுற்றியுள்ள எண்ணச் சிதறல்களை ஒரு நிலைப்படுத்தி அந்நிலையிலேயே நம் மனதை அமைதியுறச் செய்து அந்நிலையில் நம் மனது தெளிவு பெறும் நிலைதான் நீங்கள் சொல்லும் அந்தராத்மா முடிவெடுக்கும் நிலை என்பது.

அந்நிலைதான் ஜெப நிலையும். ஜெபம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் நிலைதான்.

இன்று நம்மில் கலந்துள்ள பல பெரியோர்களின் வழியில் அவர்கள் வழிப்படுத்திச் சென்ற நிலை வாழ்க்கை நிலைக்கும் ஜெப நிலைக்கும் வேறுபாடில்லை.

வாழ்க்கை நிலையில் வரும் நிலைகளுக்குத் தெளிவு பெற வழியமைத்த நிலைதான் இஜ்ஜெபநிலை. இந்நிலையையே ஞானிகளும் சித்தர்களும் வழியமைத்து வந்ததுதான் அவர்களின் உயர்ந்த நிலை.

இவ்வெண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் பல நிலைகளில் செயல் படுத்துகிறது.
1.உள் மனம் வெளி மனம் மட்டுமல்ல
2.முதல் பாடத்தில் சொல்லியுள்ளேன் அகக்கண் புறக்கண் என்பதையே ஞானக்கண்ணால் வென்று வா..! என்று.

சாதாரண மனிதர்களின் நிலைக்கும் சித்தர்களின் நிலைக்கும் எந்நிலையில் மாற்றம் உள்ளது...?

நாம் சாதாரண மனிதர்களாகிய நாம் ஒன்றை எண்ணும் பொழுது பிற நிலை தாக்கினால் நம் எண்ணம் ஒன்றையேத்தான் சுற்றிக் கொண்டிருக்கும். அந்நிலையில் தாக்கும் மற்றதின் நிலையை இந்நிலைபோல் செயல்படுத்திட முடிந்திடாது.

1.எண்ணத்தின் சிதறலைத் தாங்கும் சக்தியை இழந்து
2.அந்நிலையில் மனச் சோர்வு கொண்டு நம்மை அறியாமல் பல சொற்களை வெளியிடுவோம்.
3.நம் நிலைக்கும் பதட்டம் வரும்
4.அப்பதட்டத்திலிருந்து வருவது தான் கோபமும்.

இப்படி நாமே வளர்த்துக் கொள்வதுதான் நம்மில் இந்நிலையெல்லாம். இந்நிலையில் இருந்து மீள்வதற்குத் தான் பல நிலையின் மோதல்களைத் தாங்கும் நிலை ஏற்படுத்திட ஜெபம் என்ற நிலையை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள்.

ஜெப நிலையை நம்முள் ஏற்படுத்திக் கொண்டால் எந்நிலையிலும் அது தாக்கும் நிலையிலேயே அந்நிலைக்குத் தீர்வு கண்டிட நம்மைப் பக்குவப்படுத்திடும் நிலையாக வரும். நம்மை நாமே அடிமைப்படுத்தும் நிலையிலிருந்து அத்தகைய ஜெப நிலையைப் பெற்றிட வேண்டும்.

இதை நமக்குப் புரியச் செய்வதற்காகப் பல இதிகாச நூல்களில் ஆண்டவன் என்று ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல தலைகள் பல கைகள் இருப்பதாகக் காட்டினார்கள் ஞானிகள்.

ஆண்டவன் ஒரே சமயத்தில் பலருக்கும் எந்நிலையில் அருள் புரிகின்றார் என்பதைப்போல் சித்தர்கள் மக்களுக்கு உணர்த்தும் வகையில் உணர்த்திய வழிகள் தான் ஆண்டவனுக்குப் பல தலைகளும் பல கைகளும் காட்டப்பட்டது.

சூட்சும நிலையில் உள்ளவர்கள் (ஞானிகள்) ஒரே சமயத்தில் பல நிலைகளில் தன் செயலைச் செயலாக்குகிறார்கள்.

ஒவ்வொரு மனிதனும் அவரவரின் எண்ணத்தின் சிதறலினால்தான் பல நிலைகள் பதட்ட நிலை பெற்று தன்னுள் தன்னையே கைதியாக்கி வாழ்கின்றான்.

உள் மனம் வெளி மனம் என்பதல்ல இவ்வெண்ண மனம். பல நிலைகளுக்குச் சென்றாலும் ஒரு நிலைப்படுத்திடும் பக்குவம் பெற்றாலே ஒவ்வொரு மனிதனும் தன் ஆத்மாவிற்கு நல் சொத்தைச் சேர்த்த நிலை பெறுகின்றான்.

1.இன்று மக்களுக்குப் போதனை நிலையும் குறைவு
2.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் குறைவு
3.வழி நடத்திடும் அவர்களது பெரியோர்களின் நிலையும் (தாய் தந்தை) உபதேசிக்கும் நிலையற்றதினால் வந்த நிலை இவ்வுலகின் நிலை இன்று.

முந்தைய காலத்தில் பல நீதி நிலைகளைக் கதையாக்கி தாத்தா பாட்டி கதை என்ற ரூபத்திலும் அரிச்சந்திரனின் கதையாகவும் விக்கிரமாதித்தனின் கதையாகவும் மக்களின் எண்ணத்தில் பதிய வைப்பதற்காகப் பல நீதி நூல்களை வெளியிட்டார்கள்.

இன்று அனைத்து நீதி நூல்களையுமே ஆராயும் தன்மையில் வைத்துள்ளார்கள். அந்நிலையையும் மாற்றி அன்று சித்தர்கள் வெளியிட்டதின் வழியிலேதான் இன்று இருக்கும் விஞ்ஞான உலகத்தின் அறிந்த நிலையெல்லாம்.

“முள்ளை முள்ளால் எடு...” “வைரத்தை வைரத்தால் அறு...” என்பதைப் போல் ஒவ்வொரு நோய்க்கும் அந்நோயின் தன்மை கொண்ட எந்நிலை கொண்ட நோய் வருகிறதோ அதன் தன்மைக்குகந்த மருந்தை அதன் விஷத் தன்மையிலேயே அதற்கு மேல் இதை ஏற்றி இதை வெளிப்படுத்தும் நிலையை உணர்த்தியவர்களே நம் சித்தர்கள் தான்.

இவ்வுலகில் வந்து குவியும் அமிலத் தன்மையிலிருந்து பல நிலைகளைத் தன்னுள் ஈர்த்து ஒவ்வொன்றையும் செயல்படுத்திக் காட்டிய பல ரிஷிகள் உள்ளார்கள்.

போகரின் நிலையும் போகரை ஒத்த நிலைகளில் உள்ள பல ரிஷிகளின் நிலையும் இன்று அழியாத உடலை எந்நிலையில் பாதுகாத்து வைத்துள்ளார்கள்.

இக்காற்றில்தான் அனைத்து நிலைகளுமே கலந்துள்ளன. தன் நிலையையும் தன் உடலையும் அழியாத நிலைப்படுத்திப் பாதுகாக்கும் பக்குவத்தை இன்றும் ஈர்த்துச் செயல்படுத்துகிறார்கள்.

இவ்வுடலையே கல்லாகவும் எந்நிலைக்கொண்ட உலோகம் போலவும் காத்து வைத்திட முடியும். இக்காற்றில் உள்ள அமிலத்தை தனக்குகந்ததை ஈர்த்துக் காத்து வருகின்றார்கள்.

வைரமாகவும் இவ்வுடலை ஆக்கிட முடியும். மண்ணுடன் மண்ணாக மக்கும் நிலையிலும் ஆக்கிடுகின்றோம்.

1.அனைத்துமே இவ்வெண்ணத்தினால் வந்ததுதான்...!
2.உலக சக்தியும்... சக்தியாக சக்தியுடனே நம் எண்ணத்தைக் கலக்கவிட்டு நல்சக்தி பெற்றுவிட்டால்
3.“அனைத்து சக்திகளையுமே நம்முள்ளே கண்டிடலாம்...!”
4.இவ்வெண்ண சக்தியினால் வளர்வதுதான்… வளர்வது மட்டுமல்ல வாழ்வதுதான் இவ்வுலகமும் பிற உலகங்களுமே.

August 29, 2023

தொழில் செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

தொழிலில் நஷ்டமானால் “நஷ்டம் ஆகிவிட்டது…” என்று எண்ணத்தை விடுத்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஈரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சிறிது நேரம் வலுவாக்க வேண்டும்.

அந்த நஷ்டத்தால் ஏற்பட்ட வேதனையை துருவ நட்சத்திரத்தின் சக்தியைன் எடுத்து அப்புறப்படுத்திய பின்
1.நமக்குச் சிந்திக்கும் திறன் வருகின்றது
2.அடுத்து எப்படி அதை சமாளிக்க வேண்டும் என்ற ஞானமும் வருகின்றது
3.அந்த ஞானத்தின் வழி கஷ்டத்தை நிவர்த்திக்கும் சக்தி நமக்குள் வருகின்றது.

நஷ்டம் வருகிறது என்றால் இவ்வாறு செய்யாதபடி நம் நண்பர்களிடத்தில் இதைச் சொன்னாலோ அவரும் திரும்ப அந்த வேதனைப்படும்படி தான் சொல்வார்.

அந்த வேதனையை மீண்டும் சொன்ன பிற்பாடு
1.அடுத்து அவர் ஏதாவது நமக்கு உதவி செய்ய வேண்டும் என்றாலும்
2.பணம் கொடுத்தால் திரும்ப வருமா…! என்று சந்தேகப்பட்டு “என்னிடம் இப்பொழுது பணம் இல்லை…” என்று சொல்லிவிடுவார்

காரணம்… அவரை பாதுகாத்துக் கொள்ளத்தான் அவ்வாறு செய்வார். அந்தச் சமயத்தில் நம்முடைய சிந்தனைகள் (கஷ்டம் என்று சொன்னது) நமக்கு நாமே தண்டனை கொடுத்த மாதிரி ஆகிவிடும்.

இதைப் போன்ற பழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் நம்முடைய சொல்…
1.கஷ்டங்களைச் சொல்லாதபடி இந்தக் காரியங்கள் இப்படி நடக்க வேண்டும் என்று கேட்டுப் பழக வேண்டும்
2.அப்பொழுது நமக்கு உதவி செய்யும் பண்புகளை அங்கே உருவாக்கும்

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்

சில பேர் “தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் எண்ணி… இந்த மாதிரி ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு… எனக்குப் பணம் கொடுங்கள்…!” என்று கேட்டபின் அவருக்குக் கொடுத்தால் அடுத்து அவரிடம் திரும்ப வாங்க முடியாத நிலை ஆகிவிடும்.

நம் உடலின் ஈர்ப்பிற்குள் வட்டத்தில் இருந்த இந்த உணர்வுகள் தான்
1.அந்த (நமது) உணர்வே நம் உடலுக்குள் எதிரியாக மாறி எதிரிகளை உருவாக்கிக் கொண்டு
2.நமக்கு ஏற்படும் நன்மைகளை வரவிடாதபடி தடுக்கும்

இதைப் போன்ற உணர்வுகளிலிருந்தெல்லாம் தப்புவதற்கு ஆத்ம சுத்தியை நீங்கள் அவசியம் கடைப்பிடித்துப் பழக வேண்டும். காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அவரவர்கள் வசதியைப் பொறுத்து எடுத்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

தொழில் நஷ்டம்…! என்று சொல்வதைக் காட்டிலும் அந்த அருள் சக்தியைப் பெற்று வளர்த்துக் கொண்ட பின் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற ஞானமும் சிந்திக்கும் ஆற்றலும் வரும்.

நம்மிடம் பொருள் வாங்கியவர் அதற்குண்டான பணம் வர வேண்டும் என்றாலும்
1.அவர்களுக்கும் அந்த வருமானம் வர வேண்டும் என்று நாம் எண்ணினால்
2.நமக்குள்ளும் அந்தத் தொந்தரவு வருவதில்லை… நாம் எண்ணும்போது அவர்களுக்கும் நல்ல நிலை ஏற்படும்.

ஆனால் கொடுத்தேனே… சமயத்தில் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று வேதனைப்பட்டால் இந்த வேதனை அவருக்குள்ளும் பாய்ந்து அவருடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து… அவருடைய வரவும் குறையும்… அதனால் நமக்கு வர வேண்டிய பணமும் தடைப்படும்.

இதை எல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்

ஆகவே வாடிக்கையாளர்கள் எல்லோரும் நல்ல நிலைகள் பெற வேண்டும்… பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று நாம் தியானித்தால் அவர்கள் வளர்ச்சி பெறுகின்றனர்… “நம் பணம் தேடி வரும்…”

உதாரணமாக கடன் கொடுத்தவர்களில் கொஞ்சம் “போக்கிரித்தனம்” செய்பவர்களாக இருந்தால்
1.அவன் கேட்டால் கொடுக்கவில்லை என்றால் உதைப்பான் என்று தெரிந்தால் பணம் அவர்களுக்கு முதலில் தேடிப் போகும்
2.ஆனால் நீங்கள் இரக்கம் ஈகை என்று இருந்தால் உங்களிடம் “சொல்லிக் கொள்ளலாம்” என்று வரும்.

அவர்களுக்குப் பணம் போகும்… உங்களுக்குச் சங்கடம் தான் வரும். பார் இவ்வளவு தூரம் செய்தேன் கேட்டவுடனே அவனுக்குக் கொடுக்கின்றான் நமக்குக் கொடுக்கவில்லையே…! என்று மீண்டும் வேதனை தான் வரும்.

ஆகவே பணம் தராதவரைப் பற்றி அந்த வேதனையை நாம் அதிகமாக எடுக்க எடுக்க அவருக்குத் தப்பி வந்தாலும் கூட மீண்டும் கடன் கொடுக்க முடியாத நிலை ஆகிவிடும். அவரும் இருப்பதைத் தட்டி பறித்துச் சென்று விடுவார். அடுத்து நம் காசைக் கூடப் பெற முடியாத நிலை ஆகிவிடும்.

இதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டீர்கள் அல்லவா…!

ஆகவே ஆத்ம சுத்தி செய்து அவர்களுக்கும் பணம் (வருமானம்) வர வேண்டும்… எல்லோருக்கும் பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இப்படிச் செய்யச் செய்ய…
1.உங்களுக்கு மன உறுதி கிடைக்கின்றது
2.தொழிலும் மன சங்கடம் இல்லாதபடி நடத்த முடிகின்றது
3.அதற்கு வேண்டிய வரவு வரும்
4.மனம் வலிமை பெறும்போது உங்களைத் தேடி அந்தக் காசு வரக்கூடிய சந்தர்ப்பமும் வரும்.

ஆவியின் பிம்பமான "அனைத்து பிம்பமுமே ஆண்டவன் தான்"

 

உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளுக்கு மட்டும் மற்ற உடலில் ஏறினால் வெளி வரும் சக்தியில்லேயே...! மற்ற முனிவர்களும் சித்தர்களும் ரிஷிகள் மட்டும் தன் சக்தியை எந்நிலையில் செயல்படுத்துகிறார்கள்...? என்று இதைப் படிப்பவர்கள் எண்ணலாம்.

இந்நிலையை அறிவதற்கு முன் இவ்வுலகின் நிலையை முதலில் அறிந்திடுவோம். நேற்றைய பாடத்தில் அனைத்துமே ஆவி தான் என்று உணர்த்தினேன்.

எந்நிலை என்று அறிந்திட எண்ணுவீர்.

இவ்வுலகம் எப்படித் தோன்றியது…? மற்ற மண்டலங்கள் எப்படித் தோன்றின…? இவ்வுலகம் தோன்றிய நாள் முதற்கொண்டே இதே அளவுடன் தான் உள்ளனவா…? இவ்வுலகின் நிலையென்ன…? என்று அறிந்திட எண்ணுவீர்.

ஆவியான உலகங்கள் தான் அனைத்து உலகங்களுமே. உலக ஆரம்ப காலத்தில் உலகம் எப்படி தோன்றியது…? இக்காற்றுடன் இக்காற்றே ஆவிதான்.

காற்றுடன் கலந்துள்ள நீரும்… சகல சக்திகளும்… கலந்துள்ள இவ்வாவி
1.காற்றில் கலந்துள்ள அமிலங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து திடப்பொருளாகி
2.அத்திடப் பொருளில் உள்ள காந்த சக்தியினால் பல அமிலத் தன்மைகள் உள்ள திட பிம்பங்களைத் தன்னுள் ஈர்த்து
3.அதுவே சுழலும் வேகத்தில் இக்காற்றினில் கலந்துள்ள சகல அமில சத்தையும் தன்னுள் ஈர்த்து
4.ஒரே கோளமாக ஆனது தான் இப்பூமியின் நிலையும்.
5.இதைப்போலத்தான் மற்ற பூமிகளின் நிலையும்.
6.சிறுகச் சிறுக ஈர்த்துத்தான் இவ்வுலகமே ஆனதப்பா.

இக்காற்று மண்டல ஆவியில் கலந்துள்ள அமிலத் தன்மையினால் வளர்ந்தது தான் இப்பூமி.

எந்த நிலைகொண்ட அமிலத்தை ஈர்த்து இப்பூமி வளர்ச்சி பெற்றதோ அதே நிலைகொண்ட அமிலத்தைத்தான் இன்றும் ஈர்த்து வளர்கிறது.

இவ்வளரும் நிலை இந்நிலை கொண்டேதான் வளர்ந்து கொண்டே உள்ளனவா…? வளர்வதற்கு சக்தியான அமிலம் எங்கிருந்து வந்து கொண்டே உள்ளது என்றும் எண்ணுவீர்.

இவ்வுலகம் எந்நிலை கொண்டு வளர்ந்ததோ அந்த நிலை கொண்ட சுவாச நிலைகொண்ட உயிர் அணுக்கள்தான் இன்று இவ்வுலகிலுள்ள உயிரணுக்களின் தன்மையெல்லாம்.

இவ்வுயிரணுக்களின் சுவாச நிலையும் இவ்வுலக சுவாச நிலையும் ஒன்று போல்தான் இருந்திடும். இவ்வுலகின் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்க்கின்றன.

இவ்வுலகம் எப்படி ஆவியான அமிலத்தைத் தன்னுள் ஈர்த்து வளர்த்து கொண்டதுவோ அதைப்போல் இவ்வுலகம் வெளிப்படுத்தும் சுவாச நிலையை மற்ற மண்டலங்கள் ஆவியாக ஈர்த்து அதற்குகந்த நிலையில் அதன் தன்மை உள்ளது.

இவ்வுலகத்தின் சுவாச நிலை ஈர்த்து எடுக்கும் அளவு அதன் ஆவியையும் வெளிப்படுத்துகிறது. அதனால் இவ்வுலகம் வளர்ந்து கொண்டே உள்ளதுவா…? குறைந்து உள்ளதுவா…? என்று எண்ணுவீர்.

இவ்வுலகின் காலங்கள் மாறுபடும் பொழுது இவ்வுலகின் தன்மையிலும் மாறுபாடு நடக்கின்றது. அந்நிலையில் அதன் ஈர்ப்புத் தன்மையில் மாறும் நிலையில் உள்ளது. அந்நிலையில்தான் இவ்வுலகத்தின் அளவு நிலையும் மாறுபடும் தன்மை பெறுகிறது.

இவ்வுலகம் மாறுபடும் நாளில் தான் எல்லா மண்டலங்களுமே மாறுபடும் தன்மை பெறுகின்றது. அந்நிலையில் ஏற்படும் ஆவியின் சக்தி நிலைகொண்டு ஒவ்வொரு மண்டலங்களிலும் மாறுபடும் தன்மைகள் வருகின்றன.

அந்நிலையை சூட்சுமத்தில் வருபவர்கள் அறிந்திடலாம்.

1.இவ்வுலகம் யாரும் கண்டு எடுத்து வாழ்வதற்கு வந்த உலகமல்ல.
2.ஆவியினால் அவதரித்த உலகம்.
3.ஆவியின் உயிரணுக்களை ஈன்றெடுத்த உலகம்.
4.ஆவியின் ஆவியான அனைத்துமே கலந்துள்ள உலகம்.
5.நீ அருந்தும் நீரும் ஆவிதான் நெருப்பும் ஆவிதான்.
6.நீ இன்று செல்வமாக்கக் கருதும் இப்பூமியின் பொக்கிஷங்கள் அனைத்துமே ஆவிதான்.
7.ஆவியின் ஆவிதானப்பா அவ்வாண்டவனே.

ஆவி உலகம் என்பதனை நாம் இன்று பேய் பிசாசு ரூபத்தில் இனி எண்ணிலடாகாதப்பா.

இம்மனித உடலில் இருந்து பிரிந்த ஆத்மாக்கள் தன் ஆசையை செயல்படுத்திடத்தான் இவ்வுலகையே இவ்வுலக மக்களின் எண்ணத்தையே மாசுபடுத்தி இருக்கிறது.

ஆசையின் நிலையிலிருந்து உடலை விட்டுப் பிரிந்த ஆவிகளின் வழிவழியாய் வந்ததின் கொடுமையின் கொடுமைதானப்பா இன்று உடலுடன் வாழ்பவர்களின் நிலையெல்லாம்…!

இதிலிருந்து மீள்வதற்காக முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் இவர்களின் நிலையை விளக்கிடுவேன்.

ஆண்டவா… ஆண்டவா…
ஆண்டவா…. ஆண்டவா…!

ஆண்டவன் எங்குள்ளான்…?
ஆண்டவன் எங்குள்ளான்…?
என்றே அறிந்திட… “ஆண்டவனை”
எங்கும் எதிலும் காண்பதற்கே
என்னையே நான் ஆண்டவனாக்க…
என்னில் அவ் ஆண்டவனை
என்றும் கண்டிடவே….!

என்னுள்ளே அன்பையும்
சத்தியத்தையும் தர்மத்தையும்
அஹிம்சையையும் ஏற்றிடவே

ஏற்றிய வழியினிலே
ஆண்டவனைக் கண்டிடவே
ஆண்டவா… ஆண்டவா…!
என்றே நம் ஆத்ம
ஜோதியை வணங்கிடுவோம்

அகிலத்திலே அகிலமாக
ஆவியின் ஆவியாக
ஆவியின் சக்தியே
ஆவியே ஆண்டவனே…!

ஆவியின் பிம்பமான
அனைத்து பிம்பமுமே
ஆண்டவன் என்று கண்டு
ஆண்டவா ஆண்டவா…!
என்றே வணங்கிடுவோம்…!

August 28, 2023

உயிர் நமக்குக் கொடுக்கும் தீர்ப்பு

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பல உண்மைகளை உங்களுக்கு உபதேசத்தின் வாயிலாக உணர்த்தி உள்ளோம்

ஆக… எந்த நிலையிலும் உயிர் உடலை விட்டுத் தான் வெளியே செல்கின்றது ஆனால் உடலை விட்டுச் செல்லும் பொழுது
1.வாழும் காலத்தில் நாம் எதைச் சேர்த்துக் கொண்டமோ அதற்குத் தக்க தான்
2.அடுத்து மாற்று உடலை உயிர் உருவாக்குகின்றது… உணர்வுக்கொப்ப உடலை மாற்றுகின்றது

கோடிச் செல்வங்கள் வைத்திருப்பவரும் யாரும் நிம்மதியாக இருப்பதில்லை அவர்களும் வேதனை வெறுப்பு சலிப்பு சஞ்சலம் சங்கடம் இவைகளை எடுக்கத் தான் செய்கிறார்கள்.

அவர்கள் உடலில் கடுமையான நோய்களாக அது விளைந்து விடுகிறது. செல்வத்தால் அவர்கள் வாங்கிய பொருள்களை அனுபவிக்க முடியாத நிலை தான் வருகின்றது… அதைப் பயன்படுத்த முடியாத நிலையும் வருகின்றது.

ஆகவே எப்படி இருந்தாலும்
1.இந்த உடலில் சிறிது காலம் தான் வாழ முடியும்.
2.வாழும் காலத்தில் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் யாம் சொல்லும் தியானத்தை அதிலே நெறிப்படுத்திக் கொள்ளுங்கள்.

சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ விரோதமோ அவைகளை நுகர நேர்ந்தால் அது இயங்கிடாது தடைப்படுத்திக் கொள்ளுங்கள் அதற்குத்தான் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யும்படி உங்களிடம் சொல்கின்றோம் (ஞானகுரு).

ஆத்ம சுத்தி உங்களைச் செய்யும்படி சொல்லி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் உடல் உறுப்புகள் அனைத்திலும் பரவும்படி செய்து
2.அந்தச் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்று நான் தியானித்து
3.உங்கள் உடலில் உள்ள அந்த அணுக்கள்… நீங்கள் எண்ணியதை ஈர்த்து அது வளரும் பருவம் பெறுவதற்கு
4.வளர்ச்சி பெறும் பருவத்தைச் செயல்படுத்துவதுதான் என்னுடைய (குருவின்) வேலை.

ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும்… பரிசுத்தப்பட வேண்டும்… அசுத்தங்கள் அகற்றப்பட வேண்டும்… அருள் பெருக வேண்டும்… இருள் புகாத நிலைகள் வேண்டும்… என்று குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்கள் உடலைக் கோவிலாக மதித்து உயிரை ஈசனாக மதித்து அந்தச் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்று யாம் தியானித்துக் கொண்டிருக்கின்றோம்.

உங்கள் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்த வேண்டும். உயிர் எல்லாவற்றையும் உணர்த்தினாலும் எல்லாவற்றையும் உணர்த்தும் அறிவு இந்த ஆறாவாது அறிவுக்கு உண்டு.

உயிரைப் போன்றே உணர்வை ஒளியாக மாற்றிப் பிறவி இல்லாத நிலை அடையச் செய்வது தான் நமது குரு காட்டிய அருள் வழி.

நாம் எண்ணிய உணர்வுகள் உயிரால் இயக்கப்பட்டு அந்த உணர்வின் செயல்தான் நம்மை வழி நடத்துகிறது.
1.“மனிதனுடைய எண்ணம் தான் இதற்கு மூலமாகின்றது…”
2.எண்ணியதைத் தான் உயிர் இயக்குகின்றது… அந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது
3.அதன் வழியே செயலும் நடந்து கொண்டிருக்கின்றது.

தனித்து… கடவுள் என்று ஒருவன் இல்லை…!

ஆகவே நாம் எண்ணும் உணர்வுகளில்
1.எந்தெந்தத் தீமைகளைச் செய்கிறோம் என்று அந்தக் கணக்கை உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்
2.அதே சமயத்தில் தீமைகள் எதையெல்லாம் நீக்கினோம்…? என்று அந்தக் கணக்கையும் உயிர் போட்டுக் கொண்டே இருக்கும்.

நமக்கு ஜட்ஜ்மெண்ட்…! தீர்ப்பு கூறுவது நமது உயிர்தான்

எதன் கணக்காக வருகின்றதோ…
1.நீ இவ்வளவு செய்தாய்… அதற்குண்டான உடலை இனி நீ பெறுவாய்
2.அதை நீ அனுபவித்துப் பார்…! என்று உயிர் தீர்ப்பு கூறி அதன் வழி அடுத்த வாழ்க்கை (ண்ஹம் வாழ்க்கை) தொடர்கின்றது.

ஆகவே உயிரை நாம் மதித்து பழகுதல் வேண்டும்.

ஏனென்றால் நாம் எதை எண்ணுகின்றோமோ அதைத்தான் இயக்குகின்றது அதைத்தான் உடலாக்குகின்றது அதைத்தான் ஆளுகின்றது அதை எண்ணும் பொழுது அதன் வழி வருகிறது

உடலான மணமே நமக்குள் எண்ணமாகி… அந்த எண்ணத்தின் உணர்ச்சியே வாழ்க்கையின் செயலாக மாறிக் கொண்டே இருக்கின்றது.

தீமைகளை நீக்கிடும் அருள் உணர்வை ஏங்கிப் பெற்று அதை வளர்த்துக் கொண்டால் இன்றைய உலகில் படர்ந்து கொண்டிருக்கும் விஷத்தன்மைகள் நமக்குள் கவராது தடுக்க முடியும்.

எந்தச் செயலைப் பார்த்தாலும் கேட்டாலும் நுகர்ந்தாலும் பிறரின் குறைகளை அறிய நேர்ந்தாலும் அந்தத் தீமைகள் தனக்குள் வளராதபடி மனத்தூய்மையாக்க ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆத்ம சக்தி செய்து கொண்டே வர வேண்டும்.

வாழ்க்கையில் இந்தக் கணக்கு நமக்குள் கூடினால் நம் உயிர் அதற்குண்டான தீர்ப்பாக… நம்மைப் பிறவியில்லா நிலை அடையும்படி செய்யும்.

அதிலே சிறிது தவறினால் எந்த விஷத்தின் தன்மை கூடி… எதன் அடிப்படையாக நமக்குள் அது வளர்ந்ததோ… அதன் தீர்ப்பாக உயிர் மீண்டும் நம்மைப் பிறவிக்குக் கொண்டு வந்துவிடும்.

ஆனால் இன்றைய விஞ்ஞான உலகில் நாம் மீண்டும் மனிதனாக வருவதற்கு பல்லாயிரக் கணக்கான வருடங்கள் ஆகும். இதையெல்லாம் சிந்தனையில் வைத்துக் கொள்ள வேண்டும்

நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தையும்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்து
2.இந்தப் பிறவியில் வரக்கூடிய இருளை அகற்றி உயிருடன் ஒன்றி ஒளி உடலைப் பெறுவோம்.

“ஆவி” என்றாலே நாம் பயப்பட வேண்டுமா…?

சக்தியின் சக்திகள்தான் சகலருமே. பாகுபாடு வந்ததெல்லாம் மனிதரின் எண்ணத்தில் தான்...!

அனைத்து உலகமுமே எந்த நிலையில் அமைந்தன...?

அனைத்து உலகத் தன்மையுமே ஆவிதானப்பா. அவ்வாவியே “சக்தி தானப்பா...” அவ்வாவியை எவ்வுலகத்திலும் காணலாம்.
1.நீ காணும் சூரியனும் ஆவிதான் (VAPOR)
2.சூரியனைச் சுற்றியுள்ள 48 மண்டலங்களும் ஆவிதான்
3.நட்சத்திர மண்டலமாகக் காணும் பல கோடி மண்டலங்களும் ஆவிதான்
4.இவ்வுலகமும் நீர் நெருப்பு மாடு மனை நீயும்தான் அனைத்துமே ஆவிதான்.
5.ஏன் சகலமும் ஆவிதான்.
6.சகலத்தில் வந்த ஆவியின் பிம்பம் தான் இன்று நாம் காணும் அனைத்துமே.

ஆவி என்றாலே பேய் பிசாசு என்று மக்களின் மனதில் பீதியை ஏற்படுத்தி விட்டார்கள். இப்பீதியை ஏற்படுத்தி யாவரும் அவ்வெண்ணத்தில் கலந்த பயத்தினால் வந்ததுதான்.

இவ்வாவி என்றாலே உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாவையே ஆவி உலகம் என்ற உலகமாக்கி எல்லோர் நினைவிலும் ஆவி என்றாலே அரண்டு நினைக்கும் நிலையில் தான் காலம் காலமாக பழக்கத்தில் வந்துவிட்டது.

ஆவியுடனே ஆவியாக வாழும் நாம் நம்மைப் போல் வாழ்ந்த உடலை விட்டுச் சென்ற ஆவிகள் தன் எண்ணத்தின் நிலைகொண்டு அது அது எடுத்த சுவாச நிலையின்படி சுற்றிக் கொண்டுள்ளது.

வாழ்ந்த காலத்தில் நல்லவனாகவும் தீய நினைவு கொண்ட விஷம் படைத்தவனாகவும் வாழ்ந்ததை நிலைப்படுத்தி தன் குரோதத்திலும் நல் நிலையில் உள்ள நல் ஆவியும் சுற்றிக் கொண்டே உள்ளது.

1.இவ்வுலகினிலே தன் எண்ணத்தை முதலில் செயல்படுத்தி
2.அதன் பிறகு பிறவி எடுக்கலாம் என்ற நிலையில் பல ஆவிகள்
3.அதாவது உடலை விட்டுச் சென்ற ஆவிகள் உடலுடன் உள்ள மனிதர்களின் எண்ணத்துடன் கலந்து செயல்படுத்திட
4.இரண்டு எண்ணமும் ஒரு நிலைப்படும் பொழுது
5.உடலுடன் உள்ளவர்களின் உடலில் உடல் கூடு இல்லாத ஆவிகள் அதன் நிலையைச் செயல்ப்படுத்திட இவ்வுடலில் ஏறுகின்றது.

இவ்வுடலில் வந்து ஏறிய ஆவிகள் அவ்வுடலில் இருந்து கொண்டே தன் எண்ணப்படியெல்லாம் உடலுடன் உள்ள வரை செயல்படுத்துகிறது.

பல துர் ஆவிகளின் நிலைக்கு ஆளாகும் உடலுடன் உள்ளவர்களுக்கு அவர்களின் எண்ணத்தை நல்ல நிலைப்படுத்திட அவ்வாவிகள் அவர்களை விடுவதில்லை.

நாம்... அவர் செய்யும் பாவங்கள் என்று எண்ணுகின்றோம். பாவத்தை அவன் மட்டும் செய்யவில்லை. அவனை ஆட்டுவிப்பது அத் துர் ஆவியின் நிலைதான்.

அறியாமல் தன் எண்ணத்தில் களங்கம் வைத்திருப்பவனுக்கு துர் ஆவிகளின் செயலுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்று உணர்ந்து வாழ்ந்தால் தன் எண்ணத்தைச் சுத்தப்படுத்தி புனித வாழ்க்கை வாழ்ந்து இத் துர் ஆவியின் நிலையிலிருந்து தன் நிலையை உயர்த்தி வாழ முடியும்.

பேய் பிடித்துள்ளது பிசாசு பிடித்துள்ளது ஆவியை ஓட்ட வேண்டும் என்றெல்லாம் ஆவியை ஓட்ட வேப்பிலை தட்டி பலவித ஒலிகளை எழுப்பும் வாத்திய இசையை இசைத்து அவ்வாவியை ஓட்டுவதாகச் சொல்கிறார்கள்.

எவ்வாவியை யார் ஓட்ட முடியும்...?

அவ்வாவிக்கு பிற உடலில் ஏறி தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத்தான் முடிந்திடுமே தவிர உடலில் இருந்து வெளி வந்திட அவ்வாவிக்கு சக்தியும் திறமையும் இல்லை.

அவ்வுடல் என்று மாறுபடுகிறதோ அதனுடன் தான் இவ்வாவியும் வெளிப்படுகின்றது. பிற உடலில் ஏறிய இவ்வாவியினால் மனித ஜென்மத்திற்கு ஜெனனத்திற்கு வர முடிந்திடாது.

ஆண்டவன் சக்தியில் அருளிய ஏழு ஜென்மங்களையே பல ஆவிகள் பயன்படுத்திடாமல் ஆவி உலகிலும் தன் ஆசையை செயல்படுத்திட மற்ற உடலில் ஏறி தன் ஆத்மாவுக்கு அடங்காத இன்னலைத்தானே தேடிக் கொடுக்கின்றது.

ஒருவர் உடலில் இருந்து அவர் ஆவி பிரிந்து செல்லும் பொழுது அவ்வுடலுக்குச் சொந்தமான ஓர் ஆவி மட்டுமா பிரிந்து செல்கிறது...?

அவ்வுடலுடன் இருந்த பொழுது அவன் ஏற்றிக் கொண்ட பல ஆவிகளுமே பிரிந்து செல்கின்றன.

அவன் உடலில் ஏறிய ஆவிகளின் சுவாச நிலை மாறுபட்டு பல பல புதிய புதிய இன வர்க்கங்கள் வருவதுவும் இம்மனித மனங்கள் எடுத்த சுவாசத்தின் நிலையிலிருந்துதான்.

துர் ஆவியைப் போலவே...
1.நல் நிலையில் நம் சுவாசம் கொண்டு பல நிலைகளைத் தன்னுள் காணும் ஒவ்வொருவருக்கும்
2.அந்நிலையில் அவர் உடலில் ஏறிய ஆவிகளும்
3.அவர் எடுத்த அவ்வுடலுடன் உள்ளவரின் சுவாச நிலை கொண்டு
4.அவ்வுடலில் ஏறிய நல் நிலை பெற்ற ஆவிகளும்
5.இவ்வுடலுடன் இருந்தவனின் ஆத்மா பெறும் பாக்கியத்தையே அவையும் பெறுகின்றன.

அதாவது தன் ஆத்மா மட்டும் சாந்தி பெறுவதில்ல. பல ஆத்மாக்களுக்கும் விமோசனம் கிடைக்கின்றது.

August 27, 2023

மனிதன் வெளிப்படுத்தும் “எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்கள்” (கண்ணுக்குத் தெரியாதது)

கேள்வி:-
சாப அலைகள் பாவ அலைகளின் இயக்கம் என்பது முற்பிறவியில் நாம் செய்ததா…? எத்தனையோ கோடிப் பிறவிகளில் நாம் எடுத்தது நம் ஆன்மாவிலேயே கலந்திருப்பதால் அதன் இயக்கமாக எதிர்பாராது விபத்துகள் ஏற்படுகின்றதா…? அல்லது விபத்து நடக்கும் இடத்தில் அங்கே பதிவான உணர்வின் செயலா…? ஒரே இடத்தில் எனக்கு ஏன் இரண்டு முறை விபத்து ஏற்பட்டது…? அந்த இடத்திலே சாப அலைகள் இருக்கிறதா…? விபத்து ஏற்பட்ட அதே பாதை வழியாக மீண்டும் செல்லலாமா…? அல்லது வேறு பாதையில் மாற்றிச் செல்ல வேண்டுமா…?

குரு இதற்குண்டான விளக்கத்தைக் கொடுத்து உணர்த்தும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பதில்:-
அதாவது “இன்ன இடத்தில் விபத்து ஏற்படும்” என்று மற்றவர்கள் சொன்ன உணர்வு உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகி இருக்கிறது.
1.”அந்தக் குறிப்பிட்ட இடம்” வந்தவுடன் அது உங்களுக்குள் நினைவுக்கு வருகின்றது
2.அது தான் அந்த இடத்தில் இயங்கியது (விபத்தாகிறது)
3.அந்த அலைகள் உங்களுக்குள் இருக்கின்றது… அதை இழுத்துக் கொண்டு வருகின்றது.

மற்றவர்கள் “இங்கே விபத்தாகும்…” என்று சொன்னாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து அதை மறைத்து விட்டால் இத்தகைய சம்பவங்கள் நடக்காது.

ஏனென்றால்… பிறர் சொல்லும் உணர்வுகள் ஆழமாக நமக்குள் பதிவாகி விட்டால் அந்த இடத்திற்கு வந்தவுடன் “டக்…” என்று நினைவுக்கு வரும் அந்த சமயத்தில்
1.நீங்கள் வாகனத்தில் சென்றால்….பிரேக் இடாதபடி உங்களை அந்த வண்டிப் பக்கமே அழைத்துச் செல்லும்.
2.மற்றவர்கள் வந்து உங்களை இடிப்பது அல்ல
3.இதிலே தான் இந்த விஷயம் இருக்கின்றது… அதாவது நீங்கள் தான் அதிலே போய் விழுகின்றீர்கள்
4.காரணம் சந்தர்ப்பங்கள் நம்முடைய நினைவாற்றல்கள் அந்த மாதிரி இயக்குகின்றது
(5.ஒரு மனிதனுடைய உணர்வுகள்… சந்தர்ப்பம் இப்படியெல்லாம் இயக்கிவிடும்)

உதாரணமாக வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீட்டில் கஷ்டங்கள் இருக்கின்றது என்று சொல்வார்கள். சொன்னதற்குப் பிற்பாடு என்னதான் வீட்டின் சுவரை இடித்து அதை நீங்கள் மாற்றி வைத்தாலும் “அவன் சொன்ன இடி தான் இங்கே வரும்… குடும்பத்தில் குறைகளும் சங்கடங்களும் தான் வரும்…!”

இது எல்லாம் நாம் பதிவு செய்த உணர்வுகள் அதே இடம் வந்தவுடன் மீண்டும் அந்த ஞாபகத்திற்கு வரும்.

ஒரு பனை மரத்தில் அருகிலே நாங்கள் சென்றோம்… அதைப் பார்த்தோம்… அதில் ஒரு பூதம் பார்த்தேன்…! என்று வெறுமனே சொன்னால் கூட போதும்

எங்கெங்கே…? என்று கேட்பார்கள்.

அங்கே… அந்த ஒற்றைப் பனை மரம் இருக்கிறது அல்லவா என்று சொன்னால் போதும்…! ஆ... அப்படியா… என்பார்கள்…!
1.அங்கே பேயும் இல்லை பூதமும் இல்லை…!
2.ஆனால் அந்தப் பக்கம் நாம் செல்லும் பொழுது அன்றைக்கு அவர் சொன்னாரே…! பூதம் இருக்கிறது என்று.
3.இந்த ஒற்றைப் பனை மரத்தில் தானே… என்று எண்ணினால் போதும்.
4.உடனே அந்த இடத்திலே பேயாக அது காட்சி கொடுக்கும்.

இதெல்லாம் உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்

ஏனென்றால் அத்தகைய மனிதனுடைய உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் போது “நம்முடைய எண்ணம்… அது இழுத்துக் குவித்துக் கொடுக்கும்…”

ரேடியோ டிவி அலைகள் இயங்குவது போன்று தான் மனிதனுடைய எண்ண உணர்வின் இயக்கங்களும்.

அதற்குத்தான் மீண்டும் மீண்டும் உங்களை ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து அதை வலுவாக்கி
1.நாளை நடப்பது நல்லதாக இருக்க வேண்டும் என்று
2.நாம் கட்டாயப்படுத்தி இந்த எண்ணத்தை எடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஜோதிடம் ஜாதகம் பார்த்தாலும் அதிலே கஷ்ட நஷ்டங்களைத் தான் முதலிலே சொல்கிறார்கள். நல்லதை ஏதாவது முதலில் சொல்கிறார்களா…?
1.அந்த கஷ்டத்தைத் தான் நாம் பதிவு செய்கின்றோம்… ஏற்றுக் கொள்கிறோம்.
2.அப்புறம் அதிலே மீளக்கூடிய உணர்வு எங்கிருந்து வரும்…?

காசுக்காக வேண்டி சாங்கியத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்வான். காசைச் செலவழித்துத்தான் போக்க வேண்டும் என்று சொல்வான்.

இது எல்லாமே மனிதனின் பதிவின் இயக்கம் தான். நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).

மனிதனுடைய எண்ணங்கள் உணர்வுகளின் இயக்கங்களைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து… குருநாதர் காட்டிய வழியில் அதை மாற்றி அமைக்கக்கூடிய வழி முறையைத் தான் மீண்டும் மீண்டும் உணர்வுபூர்வமாகச் சொல்லி “உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவாக்குகின்றோம்…”

1.தீமையை நீக்கும் அந்த அருள் மகரிஷிகளின் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தால்
2.வாழ்க்கையில் அறியாமல் வரும் எத்தனையோ கொடுமைகளிலிருந்து
2.எதிர்பாராத விபத்துகளிலிருந்து தப்ப முடியும்..!

கோலமாமகரிஷியால் ஆட்கொள்ளப்பட்ட ஆதிசங்கரருடன் தொடர்பு கொள்ளுங்கள்

அன்றாட வாழ்க்கையில் ஆவியின் தொடர்பில்லாமல் வாழ்வது மிகவும் கடினமான நிலை. தன் எண்ணத்தைச் செயல்படுத்திட எந்த ரூபத்திலும் அவ்வாவி செயல்படுத்திடும்.

அவ்வாவியின் எண்ணமெல்லாம்...
1.தான் முன் ஜென்மத்தில் விட்டு வந்த குறையை
2.எந்தெந்த நிலையில் யார் யார் மேல் அன்பு பாசம் ஆசை குரோதம் வெறுப்பு விருப்பு கொண்டு வளர்ந்ததோ
3.இவை எல்லாவற்றையுமே எந்த ரூபத்திலும் அந்த எண்ணத்திற்குகந்தவர்கள் கிடைத்தவுடன்
4.அவர்களின் உடலில் எப்பாகத்திலும் ஏறி அவர்கள் எண்ணத்துடனே கலந்து தன் நிலையைச் செயல்படுத்திக் கொள்ளும்.

நம் குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற ஆவிகள் மட்டும் நம்மை வந்து காத்துச் செயல்படுத்தும் என்பதல்ல. இவ்வுலகில் சுற்றியுள்ள எந்த ஆவியும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திடத் தனக்குகந்த உடலை எடுத்துக் கொள்கின்றது.

ஆவியின் நிலை இந்நிலையில் உள்ளதினால் இதை உணர்ந்த ஜெபம் கண்ட நம் முன்னோர் பலர் இந்நிலையிலிருந்து மக்களை மீட்கத்தான் பல வழிகளை நமக்கு உணர்த்தினார்கள்.

இவ்வுலகம் முழுவதுமே ஆண்டவன் என்றால் யார் என்று சொல்கிறார்கள்...?

ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு நிலைப்படுத்தித் தான் வணங்கும் பக்தியைக் கொண்டே அவர்களுக்கு உகந்த நிலையை ஆண்டவனாக்கி வணங்குகின்றார்கள்.

அனைத்து உலகிலுமே இவ் ஆவி என்னும் பயந்த கிலி நிலை பரவித்தான் உள்ளது. பலரின் கண்களுக்கு ஆவியின் நிலை புலப்படுவதையும் கேட்டிருப்பீர்.

சில நிலைகளில் ஆவியின் நிலையையே ஆண்டவனாக வணங்குகின்றார்கள். சக்தி நிலையறிந்து சக்தியான அவ்வாண்டவனைக் கண்டவர்கள் யார் உள்ளார்கள்...?

நம் ரிஷிகள் எல்லாரும் நம்மை இவ்வாவியின் நிலையில் இருந்து தப்ப பல ஜெப வழிகளை நமக்குணர்த்தி அச்சக்தியிலிருந்து தான் பெற்ற பல நல் உணர்வுகளை நமக்கு ஊட்டினார்கள்.

அந்த நிலையில்தான் கோலமாமகரிஷி அவர்கள்...
1.தன் ஜெபத்தை... தான் பெற்ற அருள் செல்வத்தை...
2.அனைவரும் உணர்ந்து நல் வழிக்கு மக்களைச் சீர்படுத்த ஆதிசங்கரரின் உடலில் அவர் நிலையை ஏற்றி
3.ஆதிசங்கரரையே அனைவரும் தெய்வமாகக் காணும் நிலைக்கு
4.அவர் உடலில் இவர் இருந்து பல செயல்களைச் செய்து வந்தார் ஆதிசங்கரரின் ரூபத்திலேயே.

அவர் சொல்லி வந்த உபதேசங்களை வழி நடத்திட பல இடங்களில் பல மடாலயங்கள் அமைத்தார்கள். அந்நிலையையே வழி வழியாய் இன்று மக்களுக்கு உணர்த்துவதற்காக சங்கராச்சாரியார்கள் என்று மத வழியை அவ்வழியில் புகட்டி வழி நடத்தி வருகின்றார்கள்.

நல்வழியில் வந்த நிலைதான் ஆதிசங்கரரின் நிலை. ஆனால் அனைவரையும் ஒன்று போல் எண்ணும் நிலைக்கு இல்லாமல் மாறியதின் நிலை இன்றுள்ள நிலை.

1.பக்தி மணம் உள்ளது
2.பக்தி மணத்தில் எல்லா மணமும் ஒன்றே என்னும் ஒரே மணத்தைப் பரப்பிவிடாமல்
3.அம்மணத்துடன் சிறு விஷமான மணமும் கலக்கவிட்டு விட்டார்கள்.

இந்நிலையில் சிறிதளவு மாற்றும் தன்மை இன்று வந்தாலும் அவர்கள் வழியிலேயே உலகத்தையே தெய்வ மணமாக்கிடலாம்.

இவ் ஈஸ்வரபட்டனாகிய நான் இக்கலியின் ஆரம்பத்தில் ஓர் உடலை ஏற்று இப்பக்தி மணத்தைப் பரப்பியதுவும் ஜாதி நிலையில் இருந்துதான். ஜாதியின் மதத்தின் நாமத்தைச் செப்பிட விரும்பாததினால் இந்நிலையில் செப்பவில்லை நான்.

வழி வழியாய் வந்த வினைதான் இவ்வினை. நாமாக ஏற்ற நிலையல்ல. நாமாக மீளும் நிலையைத்தான் இனி அனைவரும் எண்ணத்தில் கொண்டு செயல்படுத்திட வேண்டும்.

ஆதிசங்கரராய் வணங்கிடும் கோலமாமகரிஷி அவர்கள் இன்றும் உள்ளார். என்றும் இருப்பார்...!

இன்று அவர் நடத்திச் சென்ற வழியில் வந்த சங்கரர் வழியில் இருந்திடும் பல ஜெபங்கள் செய்து பூஜிப்பவர்கள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால்...
1.அவரிடத்திலுள்ள சிறு கறையையும் நிறைவாக்கி ஜெபம் பெறும் பொழுது
2.அந்த ரிஷிகளின் தொடர்பு பெற்று... இன்று மகான் என்ற இன்றுள்ள மனிதர்களால் நாமம் பெற்றவர்கள்
3.சப்தரிஷிகளின் சொல் நாமத்தை ஏற்றிடலாம்.

மாமகான் என்ற நாமத்துடனே பல ரிஷிகளுடனும் கலந்திடலாம் இப்பாக்கியத்தை எண்ணி வழியமைத்து வந்திட்டாலே...!

August 26, 2023

“சுவாசிக்கும் உணர்வும்… உட்கொள்ளும் உணவும்…” உடலுக்குள் அமிலமாகி இரத்தமாக மாறும் போது ஏற்படும் மாற்றங்கள்

பாம்பினங்கள் விஷத்தைப் பாய்ச்சி நாகரத்தினமாக உருவாக்குகின்றது ஆனால் ஒடக்கான் போன்ற உயிரினங்கள் அது நுகரப்படும் பொழுது தன் உடலில் விஷத்தன்மையாக உருவாக்குகின்றது.

விஷத்தன்மையாக மாற்றிக் கொள்வதன் நோக்கம் மற்ற பூச்சிகளையும் வண்டினங்களையும் முழுமையாக விழுங்கப்படும் பொழுது “அதற்குள் இருக்கக்கூடிய விஷம் அதற்குள் ஏற்படும் அமிலமும்” அதனுடன் சேர்த்து விழுங்கியதை (பூச்சி வண்டு) அமிலமாக நீராகக் கரைத்துவிடும்.

கரைத்து உள்ளே சென்ற பின் இரத்தத்தில் கலந்து உடலில் இருக்கும் அணுக்களுக்கு ஆகாரமாகப் போகின்றது… அதனின் உணர்வின் சத்தைக் கொண்டது

மனிதர்கள் நாம் உணவாக உட்கொள்கிறோம் என்றால் அவையெல்லாம் நம் உடலில் ஜீரணிக்கும் போது முதலில் அமிலமாகத் தான் மாறும்.
1.நமக்குள் சேர்க்கும் விஷத்தன்மை கொண்டு “பித்த சுரபி” அதனுடைய சுரப்புக்குத் தக்கவாறு
2.இந்த உணவுக்குள் கலந்த பின் அந்த அமிலத்தைக் குளுக்கோஸ் ஆக மாற்றுகின்றது.

குளுக்கோஸ் ஆக மாற்றி வரப்படும் பொழுது இரத்தத்தில் இருக்கக்கூடிய செல்கள் இந்த உணர்வின் தன்மை சுழல… சுழலச் செய்து “செவ்வணுக்களாக…” மாற்றுகின்றது.

ஆனால் அதை மாற்றும் தன்மை இல்லை என்றால்
1.விஷத்தின் தன்மை அந்த குளுக்கோசைச் சர்க்கரையாக மாற்றி விடுகின்றது
2.இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகமானால் சர்க்கரைச் சத்து தான் அதிகமாகும்… அதை மாற்றும் வல்லமை பெற வேண்டும்.

ஒரு மனிதன் அடிக்கடி வேதனையைச் சுவாசிக்கிறான் என்றால் அவ்வாறு வேதனைப்படுவோரைப் பார்க்கும் பொழுது நாமும் வேதனைப்பட்டுச் சோர்வடைகின்றோம்

காரணம்… அவருடைய செயலைப் பார்த்து “ஒன்றும் முடியவில்லை…” என்கிற பொழுது சோர்வு வருகின்றது. சோர்வினால் அடுத்துக் கோபம் என்ற உணர்வைக் கலந்து சுவாசிக்கின்றோம்.

1.இது கலந்த பின் இந்த உணர்வு பிரிக்கப்பட்டு குளுக்கோசாக மாற்றுவதற்கு மாறாக
2.இந்த உணர்வின் செல்கள் அழுத்த நிலைகள் கொண்டு இரத்தக் கொதிப்பாக உடலில் ஒரு பக்கம் உருவாகும்.

சர்க்கரைச் சத்து உள்ளவர்களுக்கெல்லாம் சீக்கிரமே இரத்தக் கொதிப்பு வரும். காரணம் அவர்கள் நுகர்ந்த உணர்வுக்கொப்ப உடலில் உள்ள அணுக்களின் தன்மை இப்படி மாறுகின்றது.

இந்த வாழ்க்கையில் எதை எடுத்திருந்தார்களோ இரத்தங்களை எடுத்து வைத்தியரீதியிலே அணுக்களைப் பரிசோதித்துப் பார்க்கும் பொழுது இரத்தக் கொதிப்பு இருக்கின்றது; சர்க்கரைச் சத்து இருக்கின்றது; அந்த இரண்டும் மோதலாகித் தனித்துப் பிரிக்கப்படும் போது அதனால் சளி உருவாகி ஆஸ்துமா உருவாகின்றது என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆகவே
1.இரத்தத்தில் இனிப்பு அதிகமாகி விட்டால் சளி அதிகமாக உற்பத்தியாகி
2.உடலில் எல்லா இடத்திலும் உறையும் தன்மை அமிலங்கள் மாறிவிடுகின்றது… ஒவ்வொன்றும் இப்படி மாறுகிறது.

ஏனென்றால் உடலுக்குள் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது…? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறேன்.

நாம் பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் தப்ப வேண்டும் என்ற எண்ணங்களை எடுத்து வலுவாகித் தான் மனிதனாக வந்துள்ளோம்.

ஆனால் மனிதனாக ஆனபின் நம்முடைய இந்த வாழ்க்கையின் சந்தர்ப்பங்கள்
1.உடலுக்குள் அணுத்தன்மைகள் மாறி… அடுத்து இந்த உடலின் ரூபத்தை மாற்றும் நிலை வந்து விடுகிறது
2.கடைசியில் வேதனை வேதனை என்று கொண்டு போய்… மனித உடலையே மாற்றும் சக்தியாக வந்து விடுகின்றது.

வாழ்க்கையின் சந்தர்ப்பங்களால்… வேதனையைச் சந்திக்கும் போது அதை நாம் நுகர நேர்கின்றது. ஆனால் “அதை மாற்றி அமைக்கக்கூடிய சந்தர்ப்பம் தான்” ஞானிகள் காட்டிய மெய் வழியினை உங்களுக்கு யாம் இப்போது உபதேசிப்பதினுடைய நோக்கங்கள்.

புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது

அன்றாண்ட அரசர்கள் தன் பெயர் நிலைக்கத் தன் புகழ் ஓங்க... கோயில்கள் மூலமாகத் தன் பெயரை நிலைநாட்டினார்கள்.

கோயில்களைச் ஸ்தாபிதம் செய்து அந்நிலையில் பல கல்வெட்டுகளில் தன் பெயர் நிலைக்கத் தன் புகழின் ஆசைக்காக தன்னால் எழுப்பிய கோயிலிலேயே தன் பெயரையும் கல்வெட்டில் செதுக்கி வைத்து அவர்கள் பெயர் என்றுமே அழியாமல் இருக்க வேண்டுமென்றே புகழ் ஆசையினால் பல கோயில்களைக் கட்டினார்கள்.

புகழின் ஆசையில் வந்ததுதான் இன்று நாம் சென்று வணங்கும் பல கோயில்களின் நிலை. அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த அவ்வரசர்களின் ஆவிகளும் அந்நிலையிலேயே தான் சுற்றிக்கொண்டுள்ளன.

1.இன்று நாம் வாழ்ந்திடும் இந்நாட்டில்... ஆண்டவனின் பெயரையே
2.தன் புகழுக்காகத்தான் அன்றாண்ட அரசன் முதல் இன்று வாழ்ந்திடுபவர் வரை எண்ணி வணங்குகின்றோம்.

ஆண்டவன் என்பது எந்நிலையில் உள்ளது பார்த்தாயா...?

அன்று இருந்தவர்களின் குண நிலையைப் பொறுத்துத்தான் இன்று வாழும் மக்களின் நிலையும் உள்ளது. வழி வழியாய் வந்த மக்களின் “சுவாச நிலை” மாறுபடவே இல்லை.

மனித உடலை விட்டு ஆவி உலகுக்குச் சென்றாலும் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட அவ்வாவிகளுக்கு ஆசையும் அடங்கவில்லை.

அவ்வெண்ணத்தின் தொடர்ச்சியில் வரும் எண்ணம்தான் இப்பொழுது உள்ளவர்களின் நிலையும்.
1.புகழ் ஆசையினால் வந்த வினைதான் இன்று இவ் உலகம் உள்ள நிலையும்
2.புகழுக்காக ஏங்கிடும் எண்ணம்தான் எல்லோருக்குமே இன்று உள்ளது.

இன்றிருப்பவரின் மன நிலை அவர்கள் செய்த நிலை மட்டுமல்ல தொடர்ந்து கொண்டே வரும் “பல ஆவிகளின் தொடர்தான்...”

புகழ் என்னும் பேராசைக்கு அடிமைப்பட்டதினால் இன்றுள்ள எல்லோரின் மனமும் புகழ் ஒன்றுக்கே எண்ணி ஏங்கும் நிலையில் உள்ளது.

1.காலத்தையே விஷமாக்கியவர்கள் அன்றாண்ட அரசர்கள்தான்.
2.மனிதர்களின் மனதையெல்லாம் பேராசைக்கு உட்படுத்தியவர்களும் அவ்வரசர்கள்தான்
3.அவ்வெண்ண நிலை இன்றும் இங்கு மாறவில்லை.

பல கோயில்களில் ஆண்டவனின் விக்ரகங்கள் களவாடும் நிலை எப்படி வந்தது...? கயவனை அவ்வாண்டவன் பிடித்துத் தரக்கூடாதா...? அவனுக்கு நல்வழி புகட்டக் கூடாதா...? என்றெல்லாம் ஆண்டவனை நாம் பல வினாக்களைக் கேட்கின்றோம்.

கல்லான விக்ரகம்தான் ஆண்டவன் என்பது எடுத்துச் செல்பவன்... தான் அவனின் எண்ணத்தின் பேராசையினால் களவாடிச் செல்கின்றான். கல் என்ன செய்யும்...?

ஆனால் சில கோயில்களில் களவாடிச் செல்லும் விக்ரகங்கள் எடுத்துச் செல்பவன் உதிரம் கொட்டி இறப்பது எந்நிலையில்...?

அக்கோயிலை ஸ்தாபிதம் செய்த ஆவி வந்து அவனை அடித்துக் கொன்று விடுகிறது. ஆவியின் நிலையும் தொடர்பில்லாத சில கோயில்களில்தான் அவ்விக்கிரகங்கள் களவு போகும் நிலையில் உள்ளன.

ஆவி நிலையில் உள்ள எந்தக் கோயிலின் விக்ரகமும் களவாடிச் செல்பவனின் நிலையைப் பார்த்து அவனை விட்டு வைத்திடாது. பல கோயில்களின் நிலையும் இந்நிலையில்தான் இன்றுள்ளது.

ஆண்டவன் என்னும் ஆண்டவனையே இந்நிலைக்கு வந்ததின் நிலையெல்லாம் அரசர்களினால் வந்த வினைதான்...!

தெய்வ பக்தியும் நல்லொழுக்கமும் நற்போதனையும் மக்களின் எண்ணத்தில் பதியச் செய்து ஆத்மீக வழியில் அன்புடன் வாழ்வதற்கு வழியமைத்துச் சென்றிடாமல் இக்கலியின் காலத்தையே விஷமாக்கி இவ்விஷத்தின் தொடர்புடனே வாழ்கின்றான் ஒவ்வொரு மனிதனும்.

இந்நிலையில் ஜாதி மதம் என்ற வேலி வேறு. இதைப் படித்திடும் ஒவ்வொருவரும்
1.தன் எண்ணத்தைத் தூய்மைப்படுத்துங்கள்
2.சத்தியத்தை உம்முள் ஐக்கியப்படுத்துங்கள்
3.அன்பையே ஆண்டவனுக்கி வணங்கிடுங்கள்.

தெய்வத்தைக் கண்ட பேரானந்தப் பொக்கிஷத்தை நம் ஆத்மா என்ற ஆண்டவனுக்கு அற்பணித்தே வாழ்ந்திடலாம். ஒவ்வொருவரும் இன்று சூழ்ந்துள்ள விஷத் தன்மையில் இருந்து மீண்டு தன்னைத் தானே உணர்ந்து வாழ்வதற்கே இப்பாட நிலையும் ஜெப நிலையும்.

August 25, 2023

பக்கத்தில் இருந்து புத்தி சொன்னால் அது ஏறாது… ஆத்மார்த்தமாக அருள் உணர்வைப் பாய்ச்சினால் தான் அது ஏறும்

குடும்பங்களில் சிக்கல் வரும்…? எப்படி…? சில நேரங்களில் சிலர் பிடிவாதமாக இருப்பார்கள். அது அதிகமானால் நாம் அதை நுகர்ந்தால் நமக்குள்ளும் வந்துவிடும்

1.அதனால் பகைமை தான் வரும்
2.வெறுப்பு தான் வளரும்…!

அதை மாற்றுவதற்கு என்ன வழி…?

வெறுப்பு உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும்.

பிடிவாதமாக இருப்பவருக்கெல்லாம் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஆற்றல்கள் பெற வேண்டும் என்று
1.நம் மனதில் வலிமை பெற வேண்டும்
2.இப்படி வலிமை பெற்றால் “அவர்கள் உணர்வு நம்மை இயக்காது..” (இது முக்கியமானது)

அதாவது நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை…! அவர்கள் உணர்வு அதைக் கேட்க விடாது தடுக்கின்றது என்றால் “அந்த உணர்வு” நமக்குள் வந்து நம்மை இயக்காது தடைப்படுத்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால்… அவருடைய உணர்வுகள் “எல்லை கடந்து செல்லப்படும் பொழுது…” சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்.

அவர்கள் திருந்த வேண்டும்… அவர்கள் தெளிந்து வாழ வேண்டும்…! என்ற உணர்வை நாம் வளர்த்துக் கொண்டு அந்த உணர்வின் வலுவை நாம் ஏற்றுக் கொண்டால்
1.நாம் சொன்னதை அவர் கேட்காத நிலை சென்றாலும் கூட அங்கே அவர்களை சிந்திக்கும்படி செய்யும்
2.அப்பொழுது நாம் எடுத்த உணர்வு அவரை திருத்தி வாழ வழி வகுக்கும்.

இல்லை என்றால் பெரிய நியாயஸ்தர் மாதிரி அவர்களுக்கு அடிக்கடி நாம் புத்திமதி சொன்னால் விஷத்திலே பாலைப் போட்டது போன்று தான் ஆகும். அந்த விஷம் என்ற நிலையில் என்னதான் நாம் சொன்னாலும். நல்ல உணர்வுகளை எடுக்காது
1.எதிர் உணர்வு…
2.அவர் உடலுக்குள்ளும் “எதிர் நிலை” வரப்படும் பொழுது அதை உணர்வார்கள்.

இல்லையென்றால் அந்த விஷத்தின் தன்மை குடும்பமே பரவும் எல்லோருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் இதைப் பேசப் பேச விஷத்தன்மைகள் எல்லோருக்குள்ளும் பரவி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையும் அந்த விஷம் மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலைகள் வரும் போதெல்லாம் நாம் ஆத்ம சுத்தி செய்து அவர்கள் வெறுப்பான செயல்களைச் செய்தாலும் கூட அவர்கள் திருந்தி வாழ வேண்டும் தெரிந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

இப்படி…
1.தூரத்தில் இருந்து செலுத்தப்படும் பொழுது தான் அது வரும்
2.சமாதானப்படுத்திப் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டு சொன்னால் அந்த விஷம் தான் வேலை செய்யும்
3.நாம் சொல்லும் இந்த சமாதானம் அவர்களுக்குள் ஏறாது.

அந்த உணர்வுகள் தன்னாலே அந்த உணர்வின் இயக்கத்தை மாற்றவில்லை என்றால் கோடி பேர் வந்தாலும் திருத்த முடியாது.
1.அவர்கள் தெரிந்திட வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
2.ஆனால் பகைமையாக மாற்ற கூடாது.

ஒவ்வொரு குடும்பத்திலும் இது நடந்து கொண்டேதான் இருக்கின்றது..!

தியானம் செய்ய வேண்டும் என்று பெண்கள் வெளியில் சென்றால் ஆண்கள் நீங்கள் ஏன் தியானம் செய்கிறீர்கள் என்பார்கள். அதே சமயத்தில் ஆண்கள் தியானத்திற்குச் சென்றால் பெண்கள் அதைச் செய்யக்கூடாது என்பார்கள்.

இதைப் போன்று அவரவர்கள் உணர்வுக்கொப்ப மனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் நல்ல நிலைகள் செல்லாது தடை வந்து கொண்டே தான் இருக்கும்.

இது போன்ற காலங்களில் எல்லாம் “மன உறுதி கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று
1.எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுப்பி தீமைகள் புகாது தடுத்து
2.எந்தத் தீமையையும் ஈர்க்காதபடி நாம் தடைப்படுத்த வேண்டும்

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்…!

எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடலிலும் உள்ளது

ஆவியின் தொடர்புடன் தான் பல அணுக்களின் உந்தலினால் நாம் வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளோம் என்றேன். தாஜ்மஹாலின் நிலையை விளக்கினேன்.

இங்கு பல கோயில்களின் நிலையும் அது போல் தான். தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் நிலையென்ன...?

அங்கு ஆண்ட இராஜராஜ சோழனின் எண்ணமேதான் அக்கோயில். எவ்வெண்ணம் வைத்து அவ்வரசன் அக்கோயிலை ஸ்தாபிதம் செய்தாரோ அதே எண்ணம் கொண்டே அவ்வரசர் உடலை விட்டு அவ்வாத்மா பிரிந்த பிறகும் அந்த நிலையிலேயே அவ்வாத்மா அங்குள்ளது.

இன்றும் மறு ஜென்மம் எடுத்திடாமல் சூட்சும நிலைக்கும் சென்றிடாமல் ஆசையின் நிலையிலேயே அவ்வாத்மா அங்கே சுற்றிக் கொண்டுள்ளது. இதைப்போலதான் பல கோயில்களின் நிலையும்.

அன்று வாழ்ந்தவர்களின் மன நிலையைப் பொறுத்தே கோயில்களை எழுப்பினார்கள். இங்கு வாழும் மக்களின் எண்ணமும் இங்கு வாழ்ந்தவர்களின் எண்ணத்தின் தொடர்புடன்தான் உள்ளன.

ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்தவர்களின் எண்ணம் எந்தெந்த நிலையில் உடலை விட்டுப் பிரிந்து சென்றனவோ அதே நிலையில் தான் அவர்கள் வாழ்ந்த பூமியில் வாழ்பவரின் எண்ணமும் தன் எண்ணத்திற்கு உகந்ததைச் செயல்படுத்த அவ்வெண்ணத்திற்கு உகந்தவர்களின் உடலில் அவ்வாத்மா சென்று தன் எண்ணத்தைச் செயல்படுத்துகிறது.

1.ஒவ்வொரு மனிதனின் நிலையும் இந்த நிலையா...?
2.பிற ஆவிகளின் தொடர்பில்லாமல் யாருமில்லையா...?
3.இங்கு மட்டும்தான் இந்நிலையா...?
4.இவ்வுலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களின் நிலையெல்லாம் எந்நிலை...?

இப்படிப் பல வினாக்கள் எழுந்திடலாம் இதைப் படிப்பவர்கள் ஒவ்வொருவருக்குமே.

மன நிலையில் நமக்குள்ள அதி பேராசையும் அதி கோபம் துவேஷம் இந்நிலையை நாம் வளரவிடும் பொழுது பல ஆவிகள் நம்மைத் தாக்கும் நிலைக்கு ஆளாகித்தான் ஒவ்வொருவருமே வாழ்கின்றோம்.

முன் ஜென்மத்தில் நமக்கிருந்த எண்ணத்திற்கும் இஜ்ஜென்மத்தில் வாழும் முறைக்கும் தொடர்புள்ளதினால் ஒரே குடும்பத்தில் வாழ்ந்திடுபவர்களுக்கும் எண்ண நிலை மாறுபடுகிறது. நம் எண்ணத்திற்கு உகந்த அணுக்களின் தன்மையும் நமக்குள் குடிபுகுகின்றது.

1.விதையொன்று போட்டுச் செடி ஒன்று முளைவதல்ல.
2.எண்ணத்திற்கு உகந்த ஆவிகளின் தொடர்பு ஒவ்வோர் உடம்பிலும் உள்ளன.

இந்நிலையிலிருந்து நாம் விடுபட நம் நிலையில் அத்தெய்வ பக்தி என்ற ரூபப்படுத்தி நம் முன்னோர்களென்பது சூட்சும நிலையில் வாழ்ந்திடும் ஆண்டவன் ரூபத்திலுள்ள அரும்பெரும் ஜோதிகள் வழிகாட்டியபடி அஹிம்சையையும் அன்பையும் ஏற்றே பேராசையையும் பெரும் கோபத்தையும் நம்மை அண்டவிடாமல் வாழ்வதுவே நல் வாழ்க்கை.

அவ்வழியினைப் பிடித்து நம்மைச் சுற்றியுள்ள பல ஆவிகளின் ஏவலுக்கு நாம் ஆளாகாமல் இந்நிலையை அறிந்து வாழ்வதுதான் உத்தமம்.

1.ஜோதிடம் கண்டு வாழ்வதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
2.மை போட்டுக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்
3.பூ கட்டிக் கேட்பதுவும் கோயில்களில் அருள் வந்து ஆடுபவர்களைக் கேட்பதுவும் ஆவியின் தொடர்புடன்தான்.

வழி வழியாய் வந்தவர்கள் எண்ணத்தில் இருந்து வந்ததுவே… ஆண்டவனின் ரூபத்தில் நாமத்தைச் சொல்லித் தன் எண்ணத்தைச் செயல்படுத்த… இவ்வாவிகளெல்லாம் வந்து ஆடுவது தான் இன்று நாம் காணும் நிலையெல்லாம்.

இன்று நாம் வாழும் இந்நாட்டில் ஆண்டவனின் ரூபத்தில் ஆவியின் தொடர்பாட்டத்தைக் காண்கின்றோம். இவ்வுலகில் ஒவ்வொரு பாகத்திலும் ஆங்காங்கு வாழ்ந்த மக்களின் எண்ணம் ஒவ்வொரு ரூபத்தில் அவர்கள் ஆவி உலகிற்குச் சென்ற பிறகும் இப்பொழுது வாழ்ந்திடும் மக்களின் ரூபத்தில் வந்தே தான் செயல்படுத்துகிறார்கள்.

ஆவியின் தொடர்பில்லாமல் எத்தேசத்திலும் எந்நிலையும் நடக்கவில்லை...!

விஞ்ஞானியாய் விஞ்ஞானம் பல கண்டு வாழ்பவனுக்கும் அவன் வழியில் இருந்த ஆவியின் தொடர்பினால் தான் இவன் விஞ்ஞானமும் வளர்கிறது. ஒவ்வொரு பாகத்திலும் இவ்வாவியின் தொடர்பு கொண்டுதான் வாழ்கின்றார்கள் மக்கள் எல்லோருமே.

1.தன் நிலை உணர்ந்து வாழ்பவர்கள்தான் சூட்சும உலகிற்குச் செல்கிறார்களே தவிர
2.ஆவியின் தொடர் கொண்டு வாழும் ஒவ்வொருவரும் அடுத்தடுத்தே பல பிறவியை எடுக்கின்றார்கள்.

பல பிறவியில் மனிதராகவே பிறவி எடுத்தாலும் நன்றே...! ஆனால் மனிதப் பிறவி மாறுபட்டு மிருகமாகி மிருகத்திற்கும் கீழ்நிலைக்குச் சென்று புழுவாகி விமோசனமே இல்லாமல்… இத்தெய்வமான மனித வாழ்க்கையை ஏன் சிதற விட்டு அழுகும் அணுக்களாக அல்லல்பட்டுச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும்...?

மனித ஜென்மத்திலிருந்து மாறுபட்டு மிருக ஜென்மத்திற்கு வந்தாலே மனித ஜென்மத்தில் நடந்தவை எல்லாமே மிருக ஜென்மத்தில் தெரிந்திடும்.

நடந்தவையை நினைத்தே மிருகமாகி ஒவ்வொரு ஜென்மத்திலும் விட்ட குறையெல்லாம் தெரிந்தே ஏன் அல்லல்பட்டு வாழ வேண்டும்...?

1.இவ்வுடல் என்னும் மாய ரூபம் தான் மாறுபடுகிறது
2.நம் எண்ணம் என்றுமே அழிவதில்லை
3.நம் ஆத்மாவுடனேதான் நம் எண்ணமும் சுற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் நாம் இருப்பதனை உணர்ந்து ஒவ்வொருவரும் தெளிந்து தெரிந்து வாழ்ந்திட வேண்டும்.

August 24, 2023

உடல் பயிற்சியைக் காட்டிலும் “மனதை அமைதிப்படுத்தும் பயிற்சி கட்டாயமானது”

சர்க்கஸில் விளையாடுபவர்கள் உடம்பை எத்தனை வகைகளில் வளைக்கின்றார்கள்…! நம்மால் அவர்களைப் போல் வளைக்க முடிகிறதா…? முடியாது.

ஆனால் அப்படி வளைத்துப் பழகியவர்கள் ஒரு மாதத்திற்கு அதைச் செய்யாமல் “சும்மா இருக்கட்டும்…!” அடுத்து அந்த உடலை வளைக்க முடியாது.

பல ஆட்டங்கள் ஆடலாம்... ஆனால் ஒரு மாதம் சும்மா இருக்கட்டும். அதைத் திரும்ப பழைய மாதிரிக் கொண்டு வர வேண்டும் என்றால் அவ்வளவு எளிதானதல்ல.

அதே போன்றுதான் ஆசனப் பயிற்சி செய்து பழகியவர்கள்… நான் அந்த ஆசனம் போடுவேன்… இந்த ஆசனம் போடுவேன்…! என்றெல்லாம் சொல்வார்கள். கொஞ்சம் சோர்வடைந்து இரண்டு நாளைக்கு விட்டு விட்டால் போதும். அடுத்து அந்தப் பயிற்சிக்கே போக விடாது.

அந்தச் சோர்வு “இப்பொழுது செய்யலாம்… சரி அப்புறம் செய்யலாம்…! என்று அப்படியே ஒரு ஐந்து நாள் சென்றால் அப்புறம் அவ்வளவு தான்… செய்ய முடியாது.

ஆசனப் பயிற்சி தொடர்ந்து செய்து வருபவர்களும் மனச் சலிப்போ… சஞ்சலமோ… மற்றவர்கள் உணர்வுகளைக் கேட்டால் அவர்களையும் இந்த உணர்வுகள் அது தடைப்படுத்தி விடும்.

ஆசனத்தால் நான் உடலைத் திருத்தி ஆரோக்கியமாக வாழ்ந்து விடுவேன் என்று சொல்வார்கள் ஆனால்
1.வேதனையான உணர்வை எடுத்தார்கள் என்றால்
2.அந்த விஷத்தின் தன்மை கொண்டு ஆசனப் பயிற்சி செய்யப்படும் பொழுது
3.நரம்பு மண்டலங்கள் முறுக்கப்படும் பொழுது சிலருக்குப் புத்தி பேதமே ஆகிவிடும்.
4.அல்லது வெறுப்பின் காழ்ப்புணர்ச்சி வரும் அல்லது பிரஷர்…!
5.அந்த அழுத்தத்தின் தன்மை வந்து… நரம்பு மண்டலங்கள் செயலிழந்து விடும் தளர்ச்சி அடைந்து விடும்.

ஆசனத்தைச் செய்து இரத்தக் கொதிப்பை மாற்றலாம் உடல் உபாதைகளைப் போக்கலாம் என்று சொல்வார்கள். மருத்துவர்கள் ஆலோசனைப்படி உறுப்புகளின் படங்களையும் போட்டுக் காட்டுவார்கள் இன்னென்ன பயிற்சியால் இப்படி நன்மைகள் பெறலாம் என்றும் சொல்வார்கள். [ஆரம்பத்தில் நானும் (ஞானகுரு) எனக்கு ஒரு குருவை வைத்து இந்த ஆசனப் பயிற்சிகளை செய்து கொண்டிருந்தேன்}.

ஆக… ஆசனம் நமக்கு உதவி செய்கின்றது. ஆனாலும் ஒவ்வொரு நாளும்
1.கவலையோ வெறுப்போ கோபமோ அன்றன்றைக்குச் சந்திக்கும் சந்தர்ப்பம்
2.எதன் உணர்ச்சியின் வேகமோ… அதற்குத் தக்க (அந்த எண்ணங்களுடன்) பயிற்சிகளைச் செய்யப்படும் பொழுது
3.உணர்ச்சியின் வேகத்தால் மூளையைக் கூடப் பாதிக்கக்கூடிய நிலை வந்து விடுகிறது.
4.அதாவது சிரசாசனம் சர்வங்காசனம் இதைப் போன்ற நிலைகள் நம்மை ரொம்பவும் பாதிக்கின்றது

காரணம்… மக்கள் மத்தியில் பல பல உணர்ச்சிப் போராட்டங்களில் வாழும் பொழுது குடும்பத்தில் வெறுப்பின் தன்மை ஏற்பட்டால் அதனுடைய அழுத்தம்
1.நம் உடலில் அழுத்தங்கள் அதிகமாகப்படும் பொழுது
2.சிறு மூளையில் உள்ள நுண்ணிய நரம்புகள் வெடித்து விடும்… ஆள் அவுட்…!

இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் சலிப்பு சஞ்சலம் கோபம் கவலை வேதனை இது போன்ற உணர்வுகளை மாற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
1.உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்கு அதை உணவாகக் கொடுத்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இரத்த ஓட்டமாகப் பெருக்கிக் கொண்டால்
3.தீமையான உணர்வின் இயக்கங்களை நாம் சமப்படுத்திக் கொள்ள முடியும்
4.உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் ஒன்றுக்கொன்று பகைமையாகாதபடி எதிர்ப்பாகாதபடி
5.எதிர்மறையான இயக்கங்களுக்குக் கொண்டு செல்லாதபடி இணைந்து செயல்பட்டு
6.மகிழ்ந்து வாழும் சக்தியாக நாம் பெற முடியும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற பின் நம் நிலை (ஆவி உலகம்)

மக்களின் வாழ்க்கை நிலையிலும் ஆவியின் தொடர்பு கொண்ட நிலையில் தான் பலரின் நிலை உள்ளது. எண்ணம் நல்வழியில் சென்று தெய்வ பக்தி கொண்டு மனிதர்களின் எண்ணமெல்லாம் அவர்கள் செல்லும் வழிக்குத் தெய்வமாக அருள் புரிகிறார்கள்... நாம் இப்போது போற்றி வணங்கிடும் சப்தரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களுமே.

நல் வழியை மாற்றி நாம் நம் மனதை அடிமைப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு அந்நிலையிலெல்லாம் ஆசை கொண்டு சென்ற பல ஆவிகளின் தொடர்புகளை நம்முள்ளேயே நமக்குத் தெரியாமலேயே அவ்வாவிகளின் ஏவலுக்குகந்தவனாக நம்மை நாம் அடிமைப்படுத்தி வாழ்கின்றோம் என்பதனை உணர்ந்தே வாழ்வதற்காகத்தான் இந்நிலையில் உணர்த்தி வருகின்றேன்.

1.காலம் காலமாக இவ்வாவிகளின் நிலையெல்லாம்
2.நல் நிலையில் உடலை விட்டுப் பிரிந்த ஆவி சூட்சும நிலை கொண்டு...
3.தான் வாழ்ந்த குடும்பத்திற்குத் தன் அங்கத்தின் அங்கமாய்
4.தான் பெற்று வளர்த்த மக்களின் நன்மைக்காக பல நல்ல நிலை கொண்ட சக்தியை
5.தான் வாழ்ந்த குடும்பத்திற்கு தன் இரத்தத் தொடர்புடைய பிள்ளைகள் காலம் வரை தெய்வமாக
5.அக்குடும்பத்திற்குத் தான் விட்டுச் சென்ற சில குறைகளையும் பூர்த்தி செய்யும் நாள் வரை
6.அக்குடும்பத்திற்குப் பல உதவிகளை அக் குடும்பத்திலுள்ளோர் அறியாமலேயே அது செயல்படுத்தி
7.அக்குடும்பத்திலேயே தன் எண்ணத்தைச் சுழலவிட்டு அவ்வாவியின் நிலை இருக்கிறது.

அந்நிலையின் தன்மை பூர்த்தி பெற்ற பிறகுதான் தன் நிலைக்கு உகந்த உடல் கிடைத்த பிறகு மறு ஜென்மம் பெற்று வாழ்க்கைக்கே வருகிறது.

ஆனால் குரோதத்திலும் பேராசையிலும் தான் வாழ்ந்த நாளில் பல தீய பழக்கங்களுக்குத் தன்னை அடிமைப்படுத்தி வாழ்ந்த ஆவிகள் எல்லாம் ஆவி நிலைக்குச் சென்ற பிறகும்...
1.எந்த நிலையில் அவ்வாவி பிரிந்ததோ அதே குரோத நிலையில்தான்
2.அவ்வாவி அக்குரோதத்தை எந்த நிலையில் விட்டுச் சென்றதோ அதனின் தொடர் நிலையாக குரோதம் கொண்டவர்கள் மூலமாக
3.தான் வாழ்ந்த நாளில் பெற்ற நல்ல நிலையில் இருந்த ஆவி எப்படியெல்லாம் தன் நிலையைச் செயல்படுத்தினவோ
4.அதேபோல் தான் இத்துர் ஆவிகளும் வந்து தீமைகளைச் செயல்படுத்துகின்றன.

இத்துர் ஆவிகளினால் அதன் சுவாச நிலைகொண்டு மற்ற மிருக உடலுக்கு எந்நிலையில் சென்று மனிதன் மிருகமாகும் மிருக இனத்திற்குச் சென்று வாழும் நிலைக்கு ஆளாகின்றான்.

வாழ்ந்த நாளில் நாம் எடுக்கும் வாழ்க்கை முறை கொண்டுதான் மறு ஜென்மம் நமக்கு அமைவதுவும்.

இன்று மனிதர்களுக்கு உள்ள எண்ணமும் செயல் திறமை அறிவு அனைத்துமே மிருக ஜெந்துக்களுக்கும் பறவைகளுக்கும் உண்டு.

மனிதனைக் காட்டிலும் பறவைகள் மிருகங்கள் இவைகளுக்குத் தன் போன சரீரத்தின் நிலையெல்லாம் தெரிந்திடும். ஆனால் அவைகளுக்குச் சொல்லாற்றலும் நம்மை ஒத்துச் செயல்படுத்த அங்கங்களும் இல்லாததினால் தான் விட்டுச் சென்ற குறையை எண்ணியே மிருகமாக வாழ்கின்றன.

மனிதன் அம்மிருகத்தைத் தன் நிலைக்கு அரும் பெரும் சுவையாக்கிச் சமைத்து உண்ணுகின்றான். இவன் உண்ணும் நிலையும் ஆவியாகி அம் மிருகத்திற்குத் தெரிகின்றது.

அம்மிருக உணவை… பறவைகளின் உணவை நாம் புசிப்பதினால் நம்முள்ளேயே நாம் அவற்றின் அவ்வுடல்களில் எந்த எந்த அணுக்களின் தாக்கல்கள் இருந்தனவோ அவற்றையெல்லாம் நம்முள்ளும் நாம் ஏற்றிக் கொள்கின்றோம்.

இவ்வுலகில் பல நிலைகொண்ட ஆவித்தன்மை உள்ள பொழுது
1.அவ்வாவி அணுக்களுக்கு நம்மை நாம் அடிமைப்படுத்திடாமல்
2.வரும் தடங்கல்களை எல்லாம் நாம் போக்கி
3.நம்முள் உள்ள சிறு சிறு மனச் சஞ்சலங்களையும் நம்மையே சுற்றிக் கொண்டில்லாமல்
4.இந்நிலையையெல்லாம் புனிதப்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.

இவ்வாவிகளின் நிலையே பல நிலையில் உள்ளன. இன்று தாஜ்மஹால் என்ற நிலையில் உள்ள மும்தாஜ் என்னும் ஆவியின் நிலையென்ன...?

அவ்வாவி இன்னும் அத் தாஜ்மஹாலிலேயே அந்த நிலையிலேயே சுற்றிக் கொண்டுள்ளது. எந்த எண்ணத்தைப் பூர்த்தி பெறாமல் விட்டுச் சென்றதோ அதே நிலையில் தான் இன்னும் உள்ளது அவ்விரண்டு ஆவிகளுமே... ஷாஜஹான் என்னும் ஆவியும்...!

அவ்வாவிகளுக்கு அதற்கு மேல் நிலைக்குச் செல்லும் நிலைக்கும் ஆசைப்படவில்லை மறு ஜென்மத்திற்கும் வரவில்லை. சூட்சும நிலைக்குச் செல்வதற்கும் முடியவில்லை.

ஆனால் அவ்விரண்டு ஆவிகளுமே ஆனந்த நிலையில்தான் இன்றும் அந்நிலையில் உள்ளன. அவையின் நிலை என்றுமே அந்நிலையிலேதான் இருந்திடும், ஆனந்த நிலையில் அன்புடனே வாழ்ந்து வருகின்றன அவ்விரண்டு ஆவிகளுமே அம்மாளிகையில்.

வாழ்ந்த நாளில் இரண்டும் இணைந்து வாழாத நிலையில் ஆவி நிலையில் இணைந்த காவியக் காதலராய் இன்றும் வாழ்கின்றார்கள் அவ்விரண்டு ஆவிகளுமே...!

இந்நிலைபோல் இவ்வாவி உலகில் பல நிலைகள் உள்ளன.

August 23, 2023

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுக்கும் “எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் பவர்”

திடீரென்று ஒருவர் உடல் நலக் குறைவால் அவதிப்படுகிறார் என்றால் அவரைச் சீராக்க
1.இந்தத் தியான வழியில் உள்ளோர் ஆத்ம சுத்தி செய்து குருவினுடைய உணர்வுகளை அதிகமாக எடுத்துக் கொண்டால்
2.நோயாளியின் உணர்வுக்கும் நமக்கும் “எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்” என்ற அழுத்தத்தை உணர்த்தும்… அந்த அறிவாக இயக்கும்
3.குரு வழியில் இதை முறைப்படி செய்தால் நம்முடைய எண்ணத்தில் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்று காட்டும்.

வைத்தியத்திற்கு என்று அந்த நோயாளியை டாக்டரிடம் அனுப்பினாலும்
1.அந்த நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது டாக்டருக்கு உண்மையான நிலைகள் தெரிய வர வேண்டும் என்று
2.நாம் இங்கிருந்து பிரார்த்தனை செய்து இந்த உணர்வைப் பாய்ச்சினோம் என்றால்
3.இதே அலைகள் அங்கே (டாக்டருக்கு) உண்மையை உணர்த்தி
4.நோய்க்குண்டான மருந்தை உடனடியாகக் கொடுத்து அவரை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

அதாவது நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அந்த டாக்டர் கொடுக்கக்கூடிய மருந்துடன் ஊடுருவிய பின் அந்த இயக்கத்தைச் சீராக்குகின்றது. உங்கள் எண்ண வலு கொண்டு சமாளிக்க முடியும்… நோயாளியைக் காக்க முடியும்.

அதற்குப் பதில்
1.இப்படி ஆகிவிட்டதே… அவருக்கு என்ன ஆகுமோ…? என்று பதறி இருந்தால் இந்த நிலை வராது
2.மருத்துவரைத்தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டு வர வேண்டும்
3.டாக்டரைக் காட்டிலும் குருவினுடைய அருள் உணர்வுகள் ஊடுருவி அந்த நோயாளியை நாம் சரியான முறையில் காக்க முடியும்.

ஆகவே… சந்தர்ப்பத்தில் சில நேரங்களில் கஷ்டங்களோ உடல் நலக்குறைவோ இது போன்ற நிலை ஏற்பட்டால் சரியான முறையில் தியானம் எடுத்திருந்தால் “அதற்குண்டான ஞானமும்… அது எப்படி வழி நடத்த வேண்டும்…?” என்ற சிந்தனையும் வரும்.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரருளும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணிவிட்டால் “சஞ்சலம்… சலனம்…” இதையெல்லாம் நீக்கிவிடும்.

எது உண்மையின் உணர்வோ அதை உணர்ந்து அதற்குத்தக்க நம்முடைய எண்ணங்கள் சீராகும்… அதற்குத்தக்க நல்ல செயல்களைச் செயல்படுத்த முடியும்.

1.ஒரு சிலருக்கு என்ன ஏது…? என்று சொல்ல முடியாது
2.அப்படி இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு நோயாளியைப் பார்க்கப்படும் பொழுது
2.எலக்ட்ரிக்… எலக்ட்ரானிக்…! என்ற உணர்வின் தன்மையாக அந்த நோயாளிக்குள் ஊடுருவி இயக்கச் சக்தியாக மாற்றும்
3.துடிப்பு நின்றாலும் கூட இருதயத்திற்கு மேலே கையை வைத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பாய்ச்சினால்
4.மீண்டும் துடிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

ஆனால் இருதயத்தை இயக்கக்கூடிய சிறு மூளை நரம்புகளில் அது பழுதானால் அதை ஒன்றும் செய்ய முடியாது.

திடீரென்று எதிர்பாராத நிலையாக இருந்தால் அதை இயக்க வைக்க முடியும். துடிப்புகளில் ஏதாவது பிசாகனால் கையை வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் அது சீராக இயங்கும்.

ஆக ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஆனால் எதுவாக இருந்தாலும் நாம் எடுக்க வேண்டியது துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தான்.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் வலுவான நிலைகள் எண்ணி
2.நமது பார்வையை செலுத்தி இந்த உணர்வுடன் கையை அங்கே வைத்தால் உடனடியாக வேலை செய்யும்
3.நோயாளியால் பேச முடியாது என்று இருந்தாலும் இவ்வாறு செய்ய முடியும்.

இவ்வாறு தியானத்தில் நாம் வலிமை பெற்று எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

யார் உடல் நலக் குறைவாக இருக்கின்றார்களோ இந்த உணர்வலைகள் அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களையும் சீராக்க முடியும் அருள் உணர்வுகளை அங்கே பாய்ச்சப்பட்டு அவர்களை உடல் நலம் பெறச் செய்ய முடியும்.

ஆகவே நம்முடைய மன உறுதி… நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் தான் நோயிலிருந்து விடுபடச் செய்ய முடியும்… அதை நிரூபிக்க முடியும் எல்லோருக்குமே இந்த சந்தர்ப்பங்கள் உண்டு…!

தியானத்தை எடுத்துக் கொண்டவர்கள் மன உறுதி கொண்டு செயல்படுத்தினால் இது போன்ற நோய்களை மாற்றி அமைக்க முடியும் ஆது போல் ஒவ்வொரு காரியத்திற்கும் இதைச் செயல்படுத்தலாம்.

உதாரணமாக நாம் வேலை பார்க்கும் ஆபீசில் குறை இருந்தாலும்
1.அந்தக் குறையை நமக்குள் விடாதபடி ஆத்ம சுத்தி செய்துவிட்டு
2.மேலதிகாரிக்குச் சிந்திக்கும் ஆற்றலும் நம் மீது நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்று எண்ணினால் இந்த உணர்வுகள் அங்கே ஊடுருவும்.

ஆனால் நாம் தவறு செய்துவிட்டு மேலதிகாரி நம் வழிக்கு வர வேண்டும் என்றால் அது நடக்காத காரியம்…! நமக்குள் தப்பில்லாத நிலைகள் கொண்டு பார்த்துக் கொள்ள வேண்டும்.

உண்மை என்று தெரிந்து கொண்ட பின் ஆத்ம சுத்தி செய்து
1.மேலதிகாரி என் பால் நல்ல உணர்வை உணர்ந்து
2.அந்த உண்மையின் இயக்கத்திற்கொப்ப “எனக்கு உதவி செய்ய வேண்டும்…” என்று எண்ணினால் நிச்சயம் நடக்கும்.

தவறு செய்துவிட்டு தவறுக்கு ரைட் மார்க் கொடுக்க வேண்டும் என்றால் அது தவறான நிலை.

உயிராத்மாவிற்கு நாம் சொத்து சேர்க்கின்றோமா…?

அன்றாட அரசர்கள் முதல் இன்று வரை நாம் எந்த நிலை கொண்டு வாழ்கின்றோம்...? ஒவ்வொரு உயிரனங்களும் எப்படி எப்படி வாழ்கின்றன...? என்பதனை முன் பாடத்தில் சிறுகச் சிறுக அளித்து வந்த பாடத்தினையே விவரித்தே அளிக்கின்றேன் (ஈஸ்வரபட்டர்).

“பூதம் புதையல் காத்த கதை...” என்று கதையாகக் கேட்டிருப்பீர். பூதம் எங்குள்ளது...? பேய் பிசாசு என்பது என்ன...? என்பதனை அறிந்து வாழ்ந்திடவே இந்நிலையில் சொல்லி வருகின்றேன்.

பல நூறாயிரம் வருடங்களுக்கு முன் அன்றாண்ட அரசர்களின் நிலையெல்லாம் என்ன...?

தன் நாட்டைக் காக்கத் தன் நாட்டு மக்கள் வாழ்வதற்கு மேலும் மேலும் பொருள் சேர்க்க… ஒரு நாட்டுடன் ஒரு நாடு சண்டையிட்டே பல நாட்டைப் பிடித்து பேரரசர் ஆக வேண்டும் என்ற வெறி நிலை கொண்டு… அவ்வரசனின் மன நிலையில் ஒரு அரசுடன் மற்ற அரசு சண்டை இடும் நிலையில் பல உயிர்ப் பலிகள் நடந்தது.

அவ்வுயிர்ப் பலி நடந்த இடத்தில் அவ்வாத்மாக்களின் நிலையென்ன...?

குரோத நிலையில் வெறியுணர்வுடன் பல ஆத்மாக்கள் சென்றன. இன்னும் பல... அன்று வாழ்ந்த மக்களிலேயே ஒவ்வொரு நாட்டிற்கும் நடக்கும் சண்டையில் தனக்குகந்த ஒரு நாட்டிலிருந்து ஒரு நாட்டிற்குக் கடத்திச் சென்ற பல பொக்கிஷங்களெல்லாம் மறைத்து வைத்த நிலையில் அந்நிலையில் அதை மறைத்து வைத்த மக்களின் ஆவிகளும் எவ்வரசனின் பொக்கிஷத்தை யார் யார் களவாடி எங்கெங்கு எடுத்துச் சென்றனரோ அந்நிலையில் அன்றாண்ட அரசர்கள் இறந்த பிறகு அவர்களின் ஆவி அவர்களின் பொருளைக் களவாடிச் சென்றதின் நிலையையறிந்து களவாடிச் சென்றவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அதை எடுத்திடாமல் அவ்வாவிகள் அதைப் பூதமாகக் காக்கின்றன.

அரசனின் வம்சத்தார் எடுக்கவும் முடிந்திடாமல் களவாடிச் சென்றவனின் ஆவி அந்நிலையில் இருந்தே காக்கின்றது. இப்பூமியில் பல நிலைகொண்ட பொன் பொருள் ஆபரணங்கள் விக்ரகங்கள் இன்றும் பூமியில் “பூதங்கள் காக்கும் நிலையில் தான் உள்ளன...”

சில இடங்களிலிருந்து புதையல் எடுப்பதின் நிலை அந்நிலையில் காத்து வந்த ஆவிகளின் சக்தியிழந்து அது மனச்சலிப்புப்பட்டு விரக்தி நிலையில் மறு ஜென்மம் எடுத்த பிறகுதான் இப்பொழுது சில புதையல்கள் கிடைப்பதுவும்.

அதுவும் அதன் தொடர்புடைய வம்ச வழிக்கு… வம்ச வழி என்பது அச்சொத்தை அடைய வேண்டுமென்ற உரிமை பெற்றவருக்குத்தான் அதை அடையும் தன்மையும் வருகிறது.

அன்று ஆண்ட அரசர்களில் பலரின் நிலையும் இன்னும் இதே நிலையில் தான் உள்ளது. சகல சம்பத்துடன் சக்கரவர்த்தியாய் வாழ்ந்தேன் என்பவனின் நிலையும் இன்றும் பூதத்தின் நிலையில்தான் உள்ளது.

1.பல நாடுகளைப் பிடித்தான்
2.பல பொக்கிஷங்களைச் சேர்த்தான்
3.ஆனாலும் தன் உயிராத்மாவிற்கு என்ன சேமித்தான்...?

பேராசையை “வீர முரசு” என்று முழங்கிட்டே வாழ்ந்திட சக்கரவர்த்திகளின் நிலையெல்லாம் என்னப்பா...? வீழ்ச்சி பெற்று வந்திட முடியாது.

கலியில் இவ் உலகப் பிரளயம் மாறி புத்துயிர் பெற்று இவ்வாவிகளெல்லாம் ஆரம்ப நிலை கொண்டு அடுத்த பிறவியின் சுற்றலில் ஆத்மாவிற்கு ஆத்மீக வழியை எடுத்து வாழும் நாள் வரை பூதமாகவும் பேயாகவும் அலையும் ஆவிகளுக்கு முடிவே இல்லாமல் உள்ளது.

இப்பொழுது வாழ்ந்திடும் மக்களெல்லாம் இவ்வாவிகளின் பிடியில் சிக்கியுள்ளோம். இப்பிடியிலிருந்து மீள்வதற்கே இதை உணர்த்துகின்றேன்.

August 22, 2023

உடல் அணுக்களுக்குள் இருக்கும் “ரெக்கார்டை” மாற்றினால் தான் தீமைகளிலிருந்து விடுபட முடியும்

சில தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையானவர்கள்… இதைச் செய்யக்கூடாது… அதைச் செய்யக்கூடாது… என்று நினைப்பார்கள் ஆனால் இரண்டு பேர் சேர்ந்து சிகரெட் பிடிப்பதைப் பார்த்த பின் “எப்படியோ அதைக் குடிக்க வேண்டும்…” என்ற ஆர்வம் வந்துவிடும்.

கொஞ்ச நேரம் மனதைக் கட்டுப்படுத்திப் பார்ப்பார்கள் அப்புறம் என்ன ஆகும்…?
1.எப்படியோ கொஞ்சம் அதைச் செய்து பார்க்கலாமா…
2.அந்த வழியில் போகலாமா…! என்று இந்த உணர்வு வரும்.

அதே மாதிரித் தான் லாகிரி வஸ்துகளைப் (போதை உண்டககுவது) பயன்படுத்துபவர்கள். நான் அதைக் கட்டுப்படுத்தி விடுவேன் என்று சொல்வார்கள். ஆனால் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பழகிய பின் இந்த உணர்ச்சிகளை உந்தும்.

தன்னை அறியாமலே அங்கு செல்லும். யாராவது அதைப் பற்றிப் பேசினாலோ அல்லது ஆடிக் கொண்டே அங்கே முன்னாடி போனால் போதும் உடனே அதைச் சாப்பிட வேண்டும் என்று இழுத்துச் சென்று விடும்.

ஏனென்றால் அந்தத் தீயதுக்கு அவ்வளவு சக்தி இருக்கின்றது.

1.உங்கள் மனது இவ்வாறு மாறினாலும் அடுத்த கணமே எண்ணத்தைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
2.அது நமக்குள் வராதபடி வளராதபடி தடுத்துப் பழகுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்று இந்த வலுவை ஒவ்வொரு நிமிடத்திலும் சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

ஆகவே… இந்த வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட காலையில் ஒரு 15 நிமிடம் ஆவது துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் பழக வேண்டும்… உடலுக்குள் அதை வலு ஏற்றிக் கொள்ள வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எலக்ட்ரானிக்காக மாற்றிக் கொண்டால்
2.குறைபாடுகள் வந்தால் அது நம்மை இயக்காதபடி சிந்தித்துச் செயல்படும் வலிமை வரும்..
3.இதை உங்கள் அனுபவத்தில் பெறலாம்

உலக நடப்புகளை பத்திரிகை டிவி மூலம் அறிந்து கொள்கிறோம். அதைக் காதிலே கேட்டாலும் அடுத்த கணம் கண்ணுக்கே நினைவு வருகிறது. (எங்கே என்ன ஏது என்று அந்த இடத்திற்கே நம் நினைவுகள் செல்கிறது)

காற்றில் இருப்பதை டிவி ஆண்டெனா எப்படிக் கவர்கின்றதோ அது போன்று நம் கண் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகின்றது. ஆன்மாவாக மாற்றியதை உயிரின் காந்தம் இழுத்துச் சுவாசிக்கும்படி செய்கிறது.

சுவாசித்தது உயிரிலே மோதச் செய்து அந்த உணர்வலைகளை உடல் முழுவதும் பரவச் செய்கிறது.

உலகெங்கிலும் நடக்கக் கூடிய கொடுமைகள் கொலை கொள்ளை போன்ற
1.எத்தனையோ பதிவுகள் டி.வி பத்திரிக்கை மூலம் இதற்கு முன்னாடி நாம் கவர்ந்தது நமக்குள் அந்த அணுக்கள் உண்டு.
2.அதே அணுக்கள் மீண்டும் தன் உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை அறியாமலே அதனதன் செயலுக்கு அழைத்துச் செல்லும்… அது நாம் அல்ல…!

அதாவது… ஆண்டனா கவர்ந்த அலைகள் டிவி.க்குள் நுழைந்த பின் அதனதன் பாகங்கள் அந்தந்த வேலையைச் செய்வது போன்று நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் அதனதன் இயக்கங்களாகச் செயல்பட தொடங்கி விடுகின்றது

ஆகவே உலக நிலைகள் எதைக் கேள்விப்பட்டாலும் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “உலகம் நலமாக இருக்க வேண்டும்…” என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு பழக்கத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்பதற்குத்தான் நினைவுபடுத்தித் தியானப் பயிற்சியாகக் கொடுக்கின்றோம்.
1.குரு உயர்ந்த உணர்வுகளை எனக்குக் கொடுத்தார்
2.அதன் வழி உங்களையும் பெறச் செய்கிறோம்.

தலை வலிக்கின்றது… மேல் வலிக்கின்றது என்று என்னிடம் எத்தனையோ குறைகளைச் சொல்கின்றார்கள்… அழுது என்னிடம் கொட்டுகின்றார்கள். அதையெல்லாம் நான் கேட்டுக் கொண்டிருந்தால் எத்தனை ஆத்ம சக்தி செய்ய வேண்டும்…?

சாதாரணமாக ஒருவர் வேனைப்படுவதைக் கேட்ட உடனே நம் உடலில் அது தீமையாகப் பரவுகின்றது. வாழ்க்கையில் ஒவ்வொன்றாக இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால் வந்து கொண்டே தான் இருக்கும்.

ஆக… நல்லவருக்குத் தான் எல்லாத் தொல்லைகளும் வருகிறது.

நான் தியானம் செய்தேன் என்று சொல்லிவிட்டு பிறருடைய துன்பங்கள் எல்லாவற்றையும் கேட்டு அதை உடனடியாகச் சுத்தப்படுத்தவில்லை என்றால் அந்த உணர்வுகள் வலிமை பெற்று உமிழ் நீராக ஆன பிற்பாடு உடலில் அதிகமாகிவிடும்.

1.அதை உடனுக்குடன் அதை மாற்றிப் பழக வேண்டும்
2.ரெக்கார்டை (RECORD) மாற்றிப் பழகிக் கொள்ள வேண்டும்
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்தக் குறிப்பை உடலுக்குள் அதிகமாக்கும் ஒரு பழக்கத்திற்கு நாம் வர வேண்டும்

பொய் உலகிலிருந்து தப்பி மெய் உலகிற்கு வாருங்கள்

இக்கலி மாறி கல்கிக்கு வரும் பொழுது இவ்வுலகம் சுழலும் தன்மையில் சிறு அசைவின் மாறுதல் பட்டு மறுபடியும் அதே நிலைகொண்டு சுழற்சி சுற்றிக்கொண்டு இவ்வுலகம் இருக்கும் என்கின்றோம்.

இவ்வுலகின் நிலை மாறுவதைப்போல் இவ்வுலகுடன் தொடர்புடைய ஒவ்வொரு மண்டலங்களின் நிலையும் மாறுபடுகிறது.

அந்நிலையில் மாறுபடும் பொழுது இப்பொழுது இவ்வுலகிற்கு எந்தெந்த நிலைகொண்ட சக்திகளெல்லாம் இப்பூமி ஈர்த்ததோ அதைப் போல் இப்பூமியிலிருந்து இப்பூமி வெளியிட்ட சக்தியை மற்ற மண்டலங்களின் நிலையுமே அந்த ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் மாறுபடுகின்றது.

இப்பொழுதுள்ள இவ்வுலகில் எல்லா ஜீவராசிகளின் நிலையுமே அதை ஈர்த்து வெளியிட்ட தன்மையில்... பிறகும் சுழலும் சுழற்சியில் இதே நிலையில் அதன் நிலை வந்திடாமல் அதன் சக்தி நிலையுமே மாறுபட்ட தன்மையில்தான் சுற்றிக்கொண்டு வரும். அடுத்த சுற்றலின்போது இருந்திடும்.

இப்பொழுது வாழும் ஜீவராசிகளுக்கு மட்டும்தான் இந்நிலையா...? ஆவி உலகில் உள்ளவர்களின் நிலையெல்லாம் என்ன என்பீர். அடுத்த சுழற்சியில் அவ்வாவி நிலையில் உள்ளவர்கள் எந்நிலையில் வந்து பிறப்பார்கள் என்பீர்.

அவர்கள் இப்பூமியில் வாழும் காலத்தில் எவ்வெண்ணத்தில் எந்நிலைகொண்ட சுவாசம் எடுத்தார்களோ அந்நிலையிலே தான் சுற்றிக்கொண்டு இருப்பார்கள் என்று முதலிலேயே சொல்லியுள்ளேன்.

1.இவ்வுலகம் இக்கலி முடிந்து கல்கியில் மாறுபடும் பொழுது
2.மற்ற மண்டலங்களில் இருந்து இப்பொழுது நாம் பெறும் சக்தி நிலையும் மாறுபடுவதினால்
3.ஆவி நிலையில் உள்ளவர்களின் எண்ணத்திற்கும் சுவாசத்திற்கும் உகந்த தன்மை இப்பூமியில் கிடைக்காததினால்
4.அடுத்த சுழற்சியில் பல ஆயிரம் காலங்கள் ஆனாலும் ஆகலாம்.
5.அவர்களுக்கு உகந்த பிறப்பிடம் பெற்று பிறவி எடுத்திட...!

இப்பொழுது மனிதர்களாக வாழ்பவர்களுக்காவது சூட்சும நிலை பெற்று எம்மண்டலத்திலும் எவ்வுடலையும் ஏற்கும் தன்மை வருகின்றது.

ஆகவே.. இப்பொழுது நாம் வாழ்ந்திடும் வாழ்க்கை பாக்கியம் பெற்ற வாழ்க்கை என்று கருத்தில் கொண்டு வாழ்வதுதான் உயர்ந்த வாழ்க்கை உன்னத வாழ்க்கை...!

1.இவ்வாழ்க்கையை நிலைக்கச் செய்து ஒவ்வொருவரும் வந்திடுவீர் சூட்சும நிலைக்கே.
2.ஆவி உலகின் சிக்கலில் எவரும் சிக்கிக் கொள்ளாதீர்...!

August 21, 2023

மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாக நான் இருக்கின்றேன் - ஞானகுரு

தியானம் செய்யும்போது எப்போதுமே புருவ மத்தியிலிருக்கும் உங்கள் உயிரைத் தான் எண்ணி தியானிக்க வேண்டும். “என் (ஞானகுரு) உயிரை எண்ணுவதனால் பயனில்லை…”

சாமி (ஞானகுரு) உயிரால் உருவாக்கப்பட்ட அருள் உணர்வலைகள் இங்கே பரவி இருக்கப்படும் பொழுது உங்கள் உடலிலே அது பதிவாகின்றது.
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைத் தான்
2.குரு வழியில் எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் என்று ஏகமாக எண்ணி
3.அந்த உணர்வலைகளை இங்கே பரப்பிக் கொண்டே உள்ளோம்.
4.மிகவும் சிக்கலான காலங்களில் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய முதல் குருவாகவும் நான் (ஞானகுரு) இருக்கின்றேன்

குரு அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணும் பொழுது எல்லோரும் சேர்ந்து… தியானத்தின் மூலம் தவமிருந்து வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே உண்டு… அது உங்களுக்குக் கிடைக்கின்றது.

அது மிகவும் வலிமைக்க சக்தி…!

யாம் சொன்ன முறைப்படி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவருடைய அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நீங்கள் ஏங்கினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எளிதில் பெறலாம்.

எந்தக் காரியம் நடைபெற வேண்டும் என்றாலும் இந்த முறைப்படித் தான் எண்ணி அதைச் செயல்படுத்த வேண்டும் ஆனால்
1.நமது ஆசை நல்ல உணர்வின் தன்மை கொண்ட ஆசையாக இருக்க வேண்டும்.
2.நல்லதைச் செயல்படுத்தக்கூடிய இச்சையில் நாம் செயல்பட வேண்டும்
3.அதன் வழி ஏங்கித் தியானித்தால் உங்களுக்கு அது கிடைக்கும்.

ஆகவே எந்தத் திசையில் எங்கிருந்தாலும் துருவ நட்சத்திரத்தின் பால் நினைவைச் செலுத்தி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் மிகவும் எளிதாக கிடைக்கும்.
1.அது வலிமைமிக்க சக்தியாக உங்களுக்குள் வரும்
2.உங்கள் அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய ஆசைகள் எல்லாம் குரு வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவதாக இருக்க வேண்டும். குரு துணை கொண்டு அதைத் தான் பரப்புகின்றோம்.

எல்லோரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது நம் பூமி முழுவதும் அது படர்கின்றது

உலகின் எந்த மூலையிலிருந்து நீங்கள் எண்ணினாலும்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் உணர்வுகளைப் பெற முடியும் (வாக்காகக் கொடுக்கின்றேன் – ஞானகுரு)
2.ஏனென்றால் அவர் உணர்வுகளைப் பெற்று தான் நான் வளர்ந்தது
3.அவர் உணர்வை எடுத்துத் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்…
4.அவர் இன்று ஒளியின் உடலாக இருக்கின்றார்… அவருடைய உணர்வை எளிதில் பெற முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்… அவர் எடுத்துக் கொண்ட உணர்வை எனக்குள் விளைய வைத்து அந்த ஞான வித்தைத் தான் உங்களுக்கும் கொடுக்கின்றேன்.

ஆகவே…
1.ஞானகுரு கூறிய வழிப்படி குரு அருளைப் பெறுவேன்
2.குரு அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவேன் என்றால்
3.இது தான் முறை… முறைப்படி துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுகின்றோம்.

குரு காட்டிய உணர்வுகள் எனக்குள் விளைந்தாலும் ஒளியின் உடலாக இருக்கும் அந்தக் குருவின் அருளை எளிதில் பெற முடியும். ஏனென்றால் சப்தரிஷி மண்டலத்தில் அவர் உள்ளார்.

அவர் உடலுடன் இங்கே இருந்த காலத்தில் எனக்கு உபதேசித்த உணர்வுகள் ஆழமாகப் பதிவானது. அதை உங்கள் எல்லோருக்குள்ளும் பதிவு செய்து… ஒருக்கிணைந்து அந்த உணர்வின் தன்மை அலைகளாகப் பரப்பி வைத்திருப்பதனால் அதனை நீங்கள் எளிதில் பெற முடியும்.

“சாமி செய்து கொடுப்பார்…” என்றால்
1.குருவின் வழியை நமக்குக் காட்டினார்
2.அந்த ஞானத்தின் வழியினைப் பதிவாக்கப்படும் பொழுது இதுவே குருவாக அமைந்து
3.அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் அருள் வழியாகக் கிடைக்கும்
4.குரு ஒளியான உணர்வைப் பெறக்கூடிய தகுதியும் நீங்கள் பெறுவீர்கள்.

இதிலே இன்னும் விளக்கம் தெரிய வேண்டுமா…?

வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்

தியானத்தின் மூலமாக உணர்வின் எண்ண அலையை இங்கே சுட்டிக் காட்டிய வழிமுறைப்படி… எண்ணத்தில் ஓடக்கூடிய உணர்வுகளை மின்காந்த வீரியத் தன்மை உயிராத்மாவில் எடுக்கும் பொழுது சூரியனுடன் மற்றக் கோள்களின் சந்திப்பின் அமில ஈர்ப்பு மோதும் பொழுது சூரியன் அதை எடுத்துச் சமைத்து தன் ஒளியைக் கக்குவதைப் போன்று இவ்வாத்மாவில் உணர்வின் எண்ணத்தை அமைதிப்படுத்தும் தியானத்தில் ஒளியை மனித ஞானத்தில் வளர வளர மெய் ஞான உண்மைகளை சரீர உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் செயல் ஒன்றினால்தான் ஆத்மாவின் ஒளித் தன்மையை மெய் ஞானத்தின் ஒளியறியும் ஆத்மாவாக செயலாக்கும் நிலை பெற முடியும்.

வாழ்க்கையில் எண்ணத்தின் சிந்தனை குடும்பம் உடல் ஆரோக்கியம் தொழில் மற்ற எதுவாயினும் அதே தொடரில் எண்ணத்தைச் செலுத்தி வாழ்ந்து வளர்ந்த வாழ்க்கை ஓட்டத்தில்… இவ்வுடல் உள்ள வரை வாழ்ந்தாலும்
1.இஜ்ஜீவித உடலில் எண்ணத்தின் செயல் வேட்கைக்குத்தான் ஆத்மாவின் பிடிப்பு செயல்படும் இறுக்கத்தால்
2.ஆத்மா முன்னேறாத .நிலை ஆகி
3.எல்லா நிலைகளையும் அறியத்தக்க எண்ணம் கொண்ட மனிதனின் செயல்
4.மிருக நிலைக்கொப்ப பூமியின் ஈர்ப்புடனே சிக்கிவிடும்.

அதாவது யானை காட்டில் பிறப்பெடுத்து வாழ்ந்தாலும்… அதனுடைய செயலுக்கொப்ப வாழ்ந்து மடியும் யானையும்…
1.அதே யானையை அரசர்கள் பட்டத்து யானையாக உபயோகப்படுத்தும் பொழுது அரசனுக்கொப்ப அவ் யானைக்கு மரியாதையும்…
2.வித்தகனிடம் சிக்கும் யானை வித்தகன் பழக்கப்படுத்தும் (சர்க்கஸ்) வித்தையை அறிந்து வித்தை காட்டும் யானையாகவும்…
3.பல வேலைகளைச் செய்ய யானைகளைப் பழக்கப்படுத்தும் போது அதற்குத் தக்க உழைப்பைத் தருகின்றதோ
4அந்தந்த நிலைக்கு யானையின் செயலை உபயோகப்படுத்திக் கொள்கின்றான் மனிதன்… தன் செயலுக்காக…!

இதைப் போன்று சில மிருகங்கள் மனிதன் பழக்கப்படுத்தக் கூடிய வளர்ப்பு நிலை கொண்டு செயல்படுகின்றதல்லவா…?

மனிதன்… இவ்வுடல் என்ற பிம்பத்தின் வாழ்க்கைக்காக மட்டும்தான் தன் தேவை அனைத்தையும் செயல்படுத்தி வாழுகின்றான்… அத்தகைய வாழ்க்கை உடலுடன் மடியும் நிலை…!

ஆன்மாவின் மெய்யறிய வேண்டும் என்றால்
1.மனித உணர்வின் அலையை வாழ்க்கையின் ஈர்ப்பின் எண்ணத்தில் பதிவாய் மட்டும் வாழாமல்
2.உணர்வின் எண்ணத்தில் பகுத்தறிவு வானோர்களின் (மகரிஷிகள்) அமைதியைப் போன்று
3.எண்ணத்தை அமைதிப்படுத்தி உயர் ஞானத்தின் மெய்யறியுங்கள்.

புதிய கண்டுபிடிப்புகளை அறியக் கூடிய விஞ்ஞானிகளையும் வான சாஸ்திரத்தைக் கணிக்கும் சாஸ்திரங்கள் அறிந்தவர்களையும் ஊன்றிப் பார்த்தால் அவர்களின் எண்ண சிந்தனை அமைதியான ஓட்டத்தில்தான் செயல்படுவதைக் காணலாம்.

எண்ணத்தின் சிந்தனையை ஓர் தொடரில் செலுத்தி அமைதிப்படுத்தும் ஞானி… மெய் ஞானியாகலாம். எண்ணத்தின் உணர்வை அமைதியாக்கும் தியானமே முதலில் செயலாக்கிடல் வேண்டும்.

மனித உணர்வில் இருக்கக்கூடிய ஒலியின் தொடர் மனித ஒலியின் எதிர்ப்பில் மோதும் பொழுது எடுக்கும் ஒலியின் மின் காந்தத்தின் வீரியத்தை ஞானத்தின் மெய்யறிய முதலில் பக்குவப்படுத்தல் வேண்டும்.

மெய் ஞானத்தின் ஒலி பொதுத் தன்மைக்கு செயலாக்கும் சத்தியமே ஆத்மாவின் அழிவில்லா வளர்ச்சி ஒளி நிலை.

வாழ்க்கையில் எதிர் மோதல் யாவையுமே… உணர்வின் வீரியத்தின் விபரீதமாய் எண்ணத்தைக் காரமாக்கும் செயல்படுத்தும் ஒலியால்..
1.மனித உணர்விலிருந்து பெற்ற மெய்யொலி விரயமான விபரீத செயலே
2.மனித வாழ்க்கையிலும் ஞானியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்ததனால்தான்
3.இப்பூமியில் பல கோடி ஞானிகளும் தத்துவ செயலுக்காக சக்தியை வளர்க்க முடியாமல்
4.விரக்தியையும் சலிப்பையும் வளர்த்து… இன்று இப்பூமியில் மனிதச் செயல் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது.

மனித உணர்வில் எடுக்கக்கூடிய மெய் ஒலியை இங்கே கொடுக்கும் போதனை வழியில் உணர்வை ஒட்டி இதன் தொடர்பலையின் உண்மைத் தத்துவத்தை… ஆத்ம ஞானமாய்… ஆத்மாவிற்குச் சொந்தமாக்கும் வழியறிந்து… வழி தந்த முறைப்படி ஒவ்வொருவருமே இப்பூமியின் ஈர்ப்புப் பிடிப்பிலிருந்து இப்பூமிக்கோளின் முதிர்வின் ஒலியாய்… பல கோடி தேவரிஷிகளின் ஒளி சக்தியுடன் ஒளிரும் ஒளி ஆத்மாவாகும்… மெய் ஒளி மெய் ஞானியாய் வளர முடியும்.

வாழ்க்கையில் எதிர்ப்படும் இன்ப துன்பங்களின் உண்மையை தியானத்தின் சூட்சுமத்தில் முன் கூட்டி அறியக்கூடிய பக்குவங்களை இச்சரீர பிம்ப சொந்த பந்த செயல்பாட்டுக்கு விரயமாக்காதீர்கள்.

பொதுத் தன்மைக்குச் செயலாக்கும் நிலைக்கும் உணர்வுடன் உடல் சொந்தம். மற்றச் சொந்தங்களுக்கும் செயலாக்கும் முறையையும் சூட்சுமத்தில் நம் அகத்தில் அறிந்து மகிழும் ஆத்மாவின் சொத்தாய் பக்குவப்படுத்தும் ஞான ஒளியை ஒவ்வொருவரும் உண்மைத் தன்மையில் பயன்படுத்துங்கள்.

1.வெறும் புகழுக்காகவும் பாசத்திற்காகவும் சக்தியை விரயப்படுத்தாமல் “ஆத்மாவின் சொத்தாக”
2.மெய் ஞானத்தின் ஒளியை குற்றம் குறைகளை குணத்தில் நீக்கி
3.உயர்ந்த மெய் ஞானியின் ஒளியை அகத்தில் ஏற்று
4.ஞானத்தின் ஒளியை மெய் ஞானத்தின் தத்துவத்தின் மூச்சின் மூச்சாய்
5.மூவுலகின் சக்தியையும் உடல் கோளத்தில் ஆக்கப்பெறும் ஆத்மாவின் ஒளிக் கோளத்தை
6.ரிஷிகளுக்கு சொந்தமாக்கும் செயலாய் பொதுத் தன்மைக்கு
7.ஒவ்வொரு ஆத்மாவும் இப்பூமியைப் புனிதப்படுத்தும் புனித ஆத்ம ஒளியை மெய் ஞானியாய் ஆக்குங்கள்.

மெய ஞானமாய்த் தரும் சகல ரிஷிகளின் சக்தி ஒளியாய் ஒளி பெறுவீர்.