ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2023

“எண்ணியது ஓன்று... நடப்பது வேறு…” என்றால் அது விதியின் செயலா…?

எப்படி ஒவ்வொரு கோளத்தின் சந்திப்பினால் கால மாற்றங்கள் இப்பூமியின் பருவ காலம் பெறுகின்றதோ அதைப் போன்று இச்சரீரமும் பெறுகின்றது.

பூமியின் பருவ காலத்தில் சில அதிர்வு நிலைகளால் கடல் பொங்குவது... சூறாவளி... காற்று வீசுவது... எரிமலை வெடிப்பது... பூகம்பம் வருவது...! இத்தன்மை போன்று மனித உடலின் தன்மைக்கும் ஏற்படுகின்றது.

கால மாற்றத்தில் பிற மண்டலங்களின் சந்திப்பில் பூமி ஈர்க்கும் அலையின் தன்மையில் அதிர்வு ஏற்படுகின்றது. அதைப் போன்றே....
1.இம்மனித ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஏற்காத் தன்மை மோதும் பொழுது
2.அதிர்வு நிலைகளை இச்சரீர இயக்கமும் பெறுகின்றது.

இந்தப் பூமியில் எந்த நிலை கொண்டெல்லாம் கால மாற்ற சீதோஷ்ண நிலை மாறுபடுகின்றதோ அதற்கொப்ப இந்த உடல் பிம்பச் செயல்களில் “உணர்வுகள் மாறும் போது..”
1.இச்சரீர ஆரோக்கியத் தன்மையிலும்
2.எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞான வழியிலும்... பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.

உடனே மனிதன் நான் எண்ணியது ஓன்று... நடப்பது ஒன்றாக உள்ளது... “எல்லாம் விதியின் செயல்...!” என்று எண்ணி விடுகின்றான்.

எண்ணத்தின் வாழ்க்கைத் தொடரில் செயல் கொள்ளும் ஞானம்... ஓர் மாற்று நிலைக்குச் செயல்படும் பொழுது... உணர்வின் உந்தலால் உடலையே பாதிக்காத தன்மைக்குத் தன் ஞானத்தைக் கூட்டி... மதியைக் கூட்டி வென்று
1.சம உணர்வின் சாந்த குணமுடன்
2.இச்சரீர இயக்கத்தின் அணு சக்திகளை வீரியமாக்கி
3.உயிராத்மாவை ஒளிரச் செய்தல் வேண்டும்

மணலை அதி உஷ்ணமாக்கிக் கண்ணாடி செய்து தன் பிம்பத்தையும் எதிர்படும் எதனையும் அக்கண்ணாடியில நாம் பார்க்க முடிகின்றது.

அதைப் போன்று இந்த உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் சம உணர்வுபடுத்தும் செயலில் விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒளி அலையை எடுத்து உணர்வின் எண்ணத்தால் வீரிய சக்தியாக உடலிலே வளர்த்திட வேண்டும்.

1.அத்தகைய உயிராத்மாவின் சமைப்பினால்...
2.மனிதன் “ஞான திருஷ்டி” என்ற சகல சித்து நிலையையும் பெற முடியும்.

June 29, 2023

ஆறு அறிவு பெற்ற நாம் பத்தாவது அறிவுக்குச் செல்ல வேண்டும்

உங்களை யாராவது திட்டிக் கொண்டிருந்தாலோ அல்லது குற்றமாகப் பேசிக் கொண்டிருந்தாலோ உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

ஆனால் திட்டுகிறார் என்று…
1.என்னை இப்படிப் பேசுவதற்கு ஆகிவிட்டதா…?
2.நான் உன்னை அதற்கு மேல் பார்க்கிறேன்…! என்று எண்ணி எடுத்தால்
3.நமக்குள் ஜிர்…ர்ர்… என்று அந்த வேகம் வந்து விடுகிறது
4.அடுத்து கை கால் குடைச்சல் மேல் வலி எல்லாம் வந்து விடுகிறது

அவ்வாறு ஆகாதபடி தடுக்க நாம் உடனே ஆத்ம சுத்தி செய்யப் பழக வேண்டும். ஆத்ம சுத்தி செய்து கொண்ட பின் என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… நாளை நல்லது செய்யக்கூடிய அந்த உயர்ந்த எண்ணங்கள் அவர்களுக்குள் தோன்ற வேண்டும் என்று அவர் திட்டிய உணர்வை நமக்குள் புகவிடாது தடுத்து… நல்ல உணர்வைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
1.அவர்கள் எத்தனை திட்டு திட்டினாலும் சரி…
2.நம்முடைய எண்ணங்கள் தான் அவர்களுக்குள் சென்று அவர்களை மாற்ற வேண்டும்.

ஆனால் மாறாக அவர்கள் திட்டியதைக் காதிலே கூர்ந்து கேட்டால் அவர்களை நினைத்துத் திட்டிக் கொண்டே இருப்போம்.

அந்த்த் திட்டை வாங்கி அவர் உணர்வை பெருக்கிக் கொண்டால் கடையில் வியாபாரத்திற்காக பொருளை எடுத்துக் கொடுத்தாலும் வியாபாரம் மந்தமாகிவிடும். ஒரு கைக்குழந்தையை சும்மா தூக்கினாலும் கூட அது விரா விரா… என்று கத்தும்.

நீங்கள் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தீர்கள் என்றால் வயிறு கடா புடா என்று நஞ்சாக மாறி மறு நாள் உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பிக்கும்.

நாள் முழுவதும் குடும்பத்திற்காக… உடலுக்காக… தொழிலுக்காக… நாம் உழைக்கின்றோம். நம் வீட்டைத் தூய்மைப்படுத்துகின்றோம். நாம் அணிந்திருக்கும் உடையில் அழுக்குப் பட்டாலோ அல்லது அசிங்கமானது பட்டாலோ அடுத்தவர்கள் பார்ப்பார்களே…! என்று சொல்லி உடனே சோப்பைப் போட்டுத் தூய்மைப்படுத்தி விடுகின்றோம்.

அது போல் தான் நாம் நல்ல எண்ணத்துடன் சென்றாலும் தீங்குகள் வருகின்றது… அது உடலுக்குள் சென்று இம்சை கொடுக்கின்றது
1.உடனே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
2.ஆத்ம சுத்தி செய்து அதை மாற்றிக் கொள்வது கஷ்டமா…?

மகரிஷிகளின் அருள் சக்திகள் இந்தக் காற்றிலே நமக்கு முன் இருக்கின்றது. அதை எடுத்து தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.சிறிது நாள் அனுபவத்தில் பழக்கப்படுத்தி எடுத்து கொண்டாலே போதுமானது
2.எந்தத் துன்பம் வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்.

செடி கொடி மரங்கள் வளர்ந்து வரும் போது தன் சத்தை இழந்திருக்கும் வேளையில் அதற்குண்டான உரத்தைப் போட்டுக் காற்றில் இருந்து அதனின் இனமான சத்தை எடுத்து எப்படி அதை வளர்க்கச் செய்கின்றோமோ அது போன்று தான்
1.இந்த உபதேசத்தின் வாயிலாக மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குள் யாம் (ஞானகுரு) உரமாகக் கொடுத்து
2.காற்றிலே படர்ந்துள்ள மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்கிறோம்.

ஞானிகள் மகரிஷிகள் ஆகி ஒளியாக மாறி விண் சென்ற வழியில்… அதே பாதையிலே நீங்களும் ஒளிச் சரீரம் பெறலாம். அதைப் பெறக்கூடிய தகுதியைத் தான் இப்பொழுது உருவாக்குகின்றோம்.

யாரும் சாவதில்லை… உடல்கள் மாறுகின்றது சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப மறு உடல் எடுக்கின்றது… மறு உடலை இயக்குகின்றது.

உடல்கள் மாறினாலும் உயிருடன் ஒன்றியே இருக்கின்றோம். ஆனால் அவனுடன் சேர்ந்து நாம் ஒளியாக மாற வேண்டும்… அது தான் விஜயதசமி…!

விண்ணிலே உயிர் தோன்றிய பின் பூமிக்குள் விஜயம் செய்து பல உடல்கள் மாறி மனிதனாக வளர்ச்சி அடைந்த பிற்பாடு “ஆறாவது…” அறிவு என்ன செய்கிறது…?

உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் மறைந்து வரும் நஞ்சை மலமாகக் கழித்து விடுகிறது. கெட்டதை நீக்கி நல்லது செய்யக்கூடிய எண்ணத்தை ஊட்டுகின்றது.

அந்த நல்ல எண்ணத்தை எடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நமக்குள் இணைத்து விட்டால் “ஏழாவது…” நிலையான ரிஷி சிருஷ்டிக்கக்கூடிய தன்மை பெறலாம்.

“எட்டாவது…” நாம் நினைத்தாலும் எந்தத் திசையிலிருந்தும் கெட்டது வராதபடி நமக்குள் ஒளியாக மாற்றிக் கொள்ள முடியும்.

“ஒன்பதாவது…” தீமைகளைப் பிளந்துவிட்டு உயிருடன் உயிராகச் சேர்ந்து உடலை விட்டுச் செல்லும் நிலை.

உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள விஷத்தை மனித உடல் மலமாக எப்படிக் கழிக்கின்றதோ இதே போன்று உடலை விட்டு வெளியே நாம் சென்ற பின்
1.எந்த நிலையும் நம் உயிராத்மாவைக் கவராதபடி விண் செல்வதே பத்தாவது நிலை
2.அழியா ஒளிச் சரீரம் பெறுவதே கல்கி – பத்து…!

“என்று இந்த மனித உடலைப் பெற்றோமோ…” அது முழு முதல் கடவுள். மனித உடல் சிருஷ்டிக்கக் கூடிய சக்தி பெற்றது என்று விநாயகர் தத்துவத்தில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

விநாயகருக்குக் கொழுக்கட்டையை வைத்துக் காட்டியுள்ளார்கள். காரணம்… இயற்கையில் விளைந்த தாவர இனங்களை வேக வைத்து அதைச் சுவையாக மாற்றி உணவாக உட்கொள்ளும் சக்தி பெற்றுள்ளோம்.

அதே போல் வாழ்க்கையில் வரக்கூடிய இடையூறுகளை நீக்கிடும் நிலையாக
1.சுவை கொண்ட ஞானிகள் உணர்வுகளைச் சேர்த்து
2.சுவைமிக்க உடலாகவும்
3.சுவைமிக்க சொல்லாகவும்
4.சுவைமிக்க செயலாகவும்
5.சுவைமிக்க உயிராத்மாவாக மாற்றி
6.வைரம் விஷத்தை அடக்கி ஒளியின் தன்மையாகப் பேரொளியாக எப்படி ஒளி வீசுகின்றதோ
7.சூரியன் விஷத்தை ஒடுக்கி ஒளிச் சுடராக எப்படிப் பிரகாசிக்கின்றதோ
8.அதைப் போல் வருவது அனைத்தையும் நாம் ஒளியாக ஆக்க முடியும்.

அது தான் பத்தாவது நிலை…!

பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை தான் “பிறவா நிலை”

தாவரங்களில் எப்படி அதனுடைய முதிர்வுத் தன்மையில் அத்தாவரத்தின் பலன் வெளிப்பட பூவும் பிஞ்சும் பிடிக்கும் தருணத்தில் பால்பிடித்து அதனுடைய முதிர்வின் பலனை அந்தந்த இன வளர்ச்சிக்கொப்ப பலனைத் தருகிறது…?

இதில் தாவரத்திற்குத் தாவரம் மாறுபடுகிறது. இதில் சில மரங்கள் தன் வளர்ப்பின் பலனானக் காய் கனிகளை வெளிப்படுத்துவதில்லை.

ஆனால் தன்னுடைய முதிர்வின் ஈர்ப்பில் விழுதுகளையும் ரோமம் போன்ற முதிர்வின் செயல் வெளிப்பட்டு அதனுடைய வளர்ச்சித் தன்மையின் தொடர் கொண்ட சில மரங்கள்… பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மரமே மலையாகும் ஈர்ப்பு வளர்ச்சி முதிர்வு செயல் கொள்கின்றது.

பலன் தரத்தக்க மா… பலா… இப்படி உள்ள மரங்கள் சில நூறு ஆண்டுகளுக்குப் பலனைத் தந்த பிறகு மரமே பட்டுவிடுகின்றது. ஜீவத்தன்மையில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை பெற்று உடல் மாறும் வரை தன் பிறப்பின் பிறப்புத் தொடரைச் செயல்படுத்தி மடிகின்றது.

இத்தொடரில் இருந்தெல்லாம் சில மிருகங்களின் நிலையும் மனிதனின் நிலையும் மாறு கொள்கின்றன.

ஆனால் பிறப்பிலிருந்து வளர்ச்சி பெற்றுப் பிறப்பு நிலை வளர்க்கும் காலங்களுக்கு எல்லாத் தன்மையிலுமே… எப்படி பூ பிஞ்சில் பால் பிடித்து பலன் தருகின்றதோ… அதைப் போன்று மனித மிருக நிலையிலும் பருவ முற்றலில் பால் உணர்வு கொண்டு இரு நிலை கொண்ட சேர்க்கையில் பிறப்பின் தொடரை (கரு) வளர்க்கும் வழி நிலை பெறுகின்றதல்லவா…!

மனித உணர்வில் பருவம் பெற்று பெண் தன்மையில் கரு வளர்க்கும் வயது வரம்பு காலத்திற்குப் பிறகு இயற்கையின் கர்ப்ப கால தன்மை மாறி மாதவிடாய் நின்று மீண்டும் குழந்தைப் பருவ நிலைக்கொப்ப உடல் நிலை பெறுகின்றது.

இடைப்பட்ட தருணத்தில் கரு வளர்க்கும் காலம் ஆரம்ப வளர்ச்சி வளரும் நிலையும் முதிர்வு நிலைக்கு மீண்டும் எந்த் நிலையுமற்ற தன்மை கொண்டு சரீர இயக்கமே தான் பெற்ற அமிலக் கூறின் வளர்ச்சிக்கொப்ப முதிர்வு நிலை என்ற ஓர் நிலை பெற்ற பிறகு கரு வளர்க்கும் நிலையற்றதாக ஆகிவிடுகின்றது.

இச்செயல் நிலைக்கும் ஓர் அடுத்த நிலை உள்ளதல்லவா…?

மனிதப் பிறப்பு இறப்பில் வயது நிலையற்றுச் சரீர உணர்வில் எடுக்கும் அலை நிலைக்கொப்ப பிறப்பு இறப்பு நிகழ்கின்றன. ஆனாலும்… பிறந்த சிசுவிலிருந்து வயது முதிர்ந்த நிலை வரையிலும் எத்தருணத்திலும் இறப்பு நிலை ஏற்படுகின்றது.

இத்தன்மையின் உடலை விட்டுப் பிரியும் உயிராத்மா
1.வயது வரம்பு கொண்டு முதிர்வு நிலை பெறுகின்றதா…?
2.ஆத்மாவிற்கு முதிர்வுத் தன்மை எப்படிக் கூடுகின்றது?

மாமரத்தில் பூ பிடிக்கும் தருணத்தில் இம்மரத்தின் இலைகளே தெரியாத அளவிற்கு அதிகமாகப் பூக்கள் பிடிக்கின்றன. ஆனால்… நல்ல கனியாகி பலன் வெளிப்படுத்தும் விகித நிலை “நூற்றில் ஒரு பாகம் கூட… முதிர்வு நிலைக்கு வருவதில்லை…!”

ஆனால் முதிர்வு நிலை பெற்ற கொட்டைகளைப் பதித்தால் தான் மீண்டும் மாங்கன்று வளருகின்றது. கனியில் சொத்தை விழுந்த கொட்டைகள் வளர்ச்சிக்கு வருவதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு விதைத் தன்மையிலுமே உள்ளதல்லவா…?

இம்மனித உயிர் ஆத்மாவானது தன் பிறப்பின் கருவைப் பருவ வளர்ச்சிக் காலத்தில் கருவின் தொடரை வளர்க்கின்றது. சில தாவரங்களைப் போன்று தன் வளர்ப்பின் பலன் தந்த பிறகு மரத்தின் நிலை பட்டுப் போவதைப் போன்று கருத்தரித்த பிறப்பு நிலை வளர்க்கும் கால நிலை மாறினாலும் மனித வாழ்க்கையின் செயல் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட… மீண்டும் பல வருடங்களுக்கு வாழ முடிகின்றது.

1.இம்மனித அமிலம் தான் எல்லாத் தன்மையிலும் முதிர்வு பெற்ற உயிராத்மா கொண்டது.
2.இதிலும் அடுத்த நிலை பெறுவதென்பதுதான் ஞானத்தால் ஒளி நிலை பெறும்
3.பிறவா நிலையான “பிறப்பின் பிறப்பையே காக்கும் நிலை…”

சிறு வயதில்… தான் எடுத்த உணர்வின் இச்சையை மாற்றாமல்
1.தன் குண வளர்ப்பில் ஆத்ம பலம் பெறாத சிசுக்களோ சிறுவர்களோ
2.அல்லது வாழும் பருவத்தில் பாதி நிலையில் உணர்வின் இச்சையினால் தற்கொலையும் விபத்துக்களும் ஆளானவர்களோ
3,தன்னைத் தான் மறக்கும் குடி வெறிகளிள் சிக்கியவர்களோ
4.கொலை செய்யப்பட்டோ வாழும் பருவத்தில் அதிவேதனையால் உடல் அழுகிய நிலையில் பிரியும் உயிராத்மாக்களோ
5.இவை எவையும் மீண்டும் பிறப்பிற்கு வருவது என்பது…
6.எப்படி சொத்தை விழுந்த மாங்கொட்டையை விதைத்தாலும் அதன் வளர்ச்சி நிலை வளர்வதில்லையோ
7.அதைப் போன்று இம்மனித உணர்வின் எண்ண ஞானத்தின் செயல் உருவ அங்க அவயங்களின்
8.அழகின் பொலிவு கொண்டு பிறப்பு நிலை பெற முடியாது (இது முக்கியம்)

பிறப்பு நிலைக்கு வந்தாலும்.. எத்தொடர்பில் ஆத்மா பிரிந்ததோ அதே நிலையில் அங்ககீனமுள்ள நிலையில் தான் பிறக்க நேரும். ஞானமுடன் கூடிய அறிவு வளர்ச்சியற்ற குழந்தைகளாகத்தான் சாதாரண வழித் தொடரிலேயே பிறப்பு இறப்பு செயல் கொள்கின்றது.

(இன்று அங்ககீனமுள்ள குழந்தைகளும்… மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் அதிகமாகப் பிறப்பதன் காரணம் புரிந்ததா…!)

எண்ணத்தின் வலுக் கொண்ட… “ஆத்ம பலம் பெற்ற ஆத்மாக்கள் தான்..” மீண்டும் தன் இனத் தொடர்பில் பிறப்பு பெற்று… முதிர்ந்த கொட்டைகள் பக்குவமான வளர்ச்சிக்கு வருவதைப் போன்று… மனிதப் பிறப்பு பெற்று வருகின்றது.
1.இதில் அடுத்த நிலை பெறுவது என்பதுதான்
2.இங்கே உணர்த்தப்படுகின்ற மனிதன்… “தெய்வ நிலையாகும்” தன்மை.

June 28, 2023

யாம் சொல்லிக் கொடுக்கும் இந்த ஜெபத்தை (மந்திரம்) சீராகச் செய்யுங்கள்

1.தாய் தந்தையரை நாம் மறவாது இருக்க வேண்டும்.
2.குரு அருளையும் மகரிஷிகளின் அருளை பெற வேண்டும் என்றால் எப்பொழுதுமே அன்னை தந்தையை வணங்கிப் பழக வேண்டும்.
3.அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

அதன் வழியில் யாம் (ஞானகுரு) கொடுக்கும் உபதேச வாக்கினை உற்று நோக்கி சீராக உங்களுக்குள் பதிவு செய்தால் ஞான வித்தாக உங்களுக்குள் பதிவாகிறது.

ஞான வித்தினை நீங்கள் வளர்க்க வளர்க்க… தியானம் செய்யும் போதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்கு எளிதில் கிடைக்கும்
1.உங்களால் சிரமங்களைப் போக்க முடியும்… அதற்குண்டான வழியையும் காட்டும்
2.அருள் வழியில் எண்ணியதை உங்கள் உயிர் இயக்கிக் காட்டும்
3.அருள் உணர்வை உடலுக்குள் அணைத்துக் காட்டும்
4.எண்ணிய உணர்வின் ஞானமாக உங்களில் உணர்த்தும்
5.உங்களைக் காத்திடும் சக்தியாக வரும்
6.அந்த ஞானத்தின் தன்மை கொண்டு தீமைகளிலே சிக்காது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.

ஆகவே யாம் கொடுக்கும் அருளாசியை நேர்முகமாகப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எந்த ஏக்கத்திலே… எதைப் பெற வேண்டும் என்று வந்தீர்களோ… உங்கள் துன்பங்கள் நீங்கி உடல் நலம் பெறுவீர்கள்.

குரு அருள் உங்களுக்குக் கிடைக்கும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் உடல் நலம் பெற வேண்டும்
3.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் தொழில் வளம் பெற வேண்டும்
4.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் குடும்பம் நலம் பெற வேண்டும்
5.மகரிஷியின் அருள் சக்தியால் எங்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
6.மகரிஷிகளின் அருள் சக்தியால் உலக மக்கள் நலம் பெற வேண்டும்
7.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்
8.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்களைப் பார்ப்போரெல்லாம் நலம் பெற வேண்டும்
9.மகரிஷிகளின் அருள் சக்தியால் எங்கள் சொல்லைக் கேட்பவர் வாழ்க்கையில் இனிமை பெற வேண்டும்
10.மகரிஷிகளின் அருள் சக்தியால் நாங்கள் பார்ப்போருக்கும் எங்களைப் பார்ப்போருக்கும் நல்ல எண்ணம் பெற வேண்டும் என்று
11.இதை எல்லாம் உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கி இருங்கள்
12.பல பல உணர்வுகள் வரும்... மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் இணையும்

யாம் கொடுக்கும் இந்த வாக்குகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்… “நூறு முறை… ஆயிரம் முறை…” இது போன்று எண்ணி ஏங்கிப் பாருங்கள்.

மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் நோய் நீங்க வேண்டும்… உடல் நலம் பெற வேண்டும்… எங்கள் குடும்பம் முழுவதும் மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் மன பலம் மன வளம் பெற வேண்டும். உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்.

ஒரு டம்ளரில் நீரை வைத்து இது போன்று தியானியுங்கள். தியானம் முடிந்த பின் அதைத் தீர்த்தமாக எடுத்துப் பருகி பாருங்கள். நோய் இருந்தால் அதற்குண்டான மருந்தையும் இதிலே வைத்துத் தியானித்த பின் உட்கொள்ளுங்கள்
1.உங்கள் உடலில் இருக்கக்கூடிய சர்வ வேதனைகளும் விலகும்…
2.அதை உங்களால் நிச்சயம் உணர முடியும்

யாம் கொடுக்கும் வாக்கின் வித்தை நீங்கள் சீராக வைத்து.. அதை மீண்டும் மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தால்… “நீங்கள் ஏங்கும் பொழுதெல்லாம் இந்தச் சக்தி கிடைக்கும்…”

சித்தர்கள் தெய்வங்களப் பல உருவில் வடித்ததன் காரணம் என்ன…?

ஒவ்வொரு செயலிலும் அதன் வளர்ப்பின் முதிர்வு நிலை (பலன்) எவ்வாறு தெரிகின்றதோ... அதைப் போன்ற மனிதன் பெறும் ஒளி சக்தியைக் கொண்டு...

1.இவ்வெண்ணத்தின் உயர் ஞானத்தால்
2.எதனையும் தெய்வம் நமக்குத் தரும்...! என்ற மனிதனின் உயர்வு குணமாய்
3.எத்தெய்வத்தை மனிதன் எண்ணுகின்றானோ... அத்தெய்வமாய் மனித நிலை ஆக முடியும்.

மனித உணர்வின் எண்ணத்தில் இப்புவியில் வளரவல்ல ஒவ்வொரு தொடரிலும் தன் ஞானத்தைச் செலுத்தி அதன் தொடர் வளர்ப்பின் செயலைப் பார்த்தால்... செயலின் முதிர்வின் தொடர் நிலை வளர்ப்பு முற்றலை அறியலாம்.

நீரின் சுவையே... ஒன்றிலிருந்து வளர்ப்பின் தொடர் பெற்றுப் பிரியும் பொழுது... “உராயும் தன்மையில்” தொடர் நிலை அச்சுவையுடன் ஒட்டி அச்சுவை சக்தியின் ஆவியாகி... அதே தொடரின் பிறிதொன்றில் அந்நீர் ஆவித் தன்மை திடம் கொண்டு... செயல் மோதலின் சுழற்சியில் பல செயல்கள் மாறி மாறி வளர்கின்றன. (நாம் சமைக்கும் நிலையிலிருந்து இயற்கையில் உருவாகும் அனைத்துமே இதற்கு உதாரணம் தான்)

எல்லாச் செயலுக்கும்... காற்று மண்டலத் தொடரில் இந்நீர் ஆவியாகி அமிலமாகித் திடம் கொண்டு மீண்டும் அதிலிருந்து பிரிக்கப்படும் தொடர் நிலையில் “கனம் கொள்ளும் செயல் வளர்ச்சி தான்..!”

“நீரான ஆதி சக்தியின் சக்தித் தொடர்” இஜ்ஜீவ பிம்ப சரீரத்திலிருந்து இச்சரீரத்தை இயக்கும் உயிர் பிரிவதற்குள்ளேயே... இச்சரீரத்தின் ஜீவ ஜெனிப்பில் நீர் சக்தியின் வளர்ப்பின் சத்தாய் இச்சரீரத்திலுள்ள ஒவ்வொரு உயிரணுக்களும்... இஜ்ஜீவ நீரின் உணவைப் பெற்று வாழும் இதன் உணர்வின் எண்ணத்திலேயே உயர் நிலைபெற... நம் செயல் இருக்க வேண்டும்.

எப்படி நீரை ஊற்றி விதைப் பயிரில் அதன் பலன் மகசூலைத் தாவரம் தருகின்றது...? எப்படி நீர் சக்தியின் தொடர்பில் பூமியில் கனி வளங்கள் அதனதன் வளர்ச்சிக்கொப்ப முற்றிய நிலை பாறையே தன் வளர்ப்பின் முற்றலாய் வைரத்தை வளர்க்கின்றது...?

மண் படிவங்கள் எத்தொடரில் எவ் உலோக வித்து வளர்ந்தாலும் அதன் முற்றலில் படிவங்களாக அதது எடுக்கும் நீர் சக்தியில் தங்கமே மண்ணுடன் கலந்த நிலையும் படிப்படியாகக் குவிந்த தன்மையில் அடர்த்தியாகத் தன் இனத்தைப் பெருக்கும் வளர்ப்பில் அதனதன் இனத் தொடரில் முதிர்வுத் தன்மை பெறுகிறது.

அதனின் தொடர் வளர்ப்பில் கனி வளர்ச்சிக்கு அடுத்த நிலை வளர்ப்பான... மண் வளத்தின் ஆவி அலையில் தாவர இன வளர்ப்பில்... புழு, பூச்சி, ஊர்வன, பறப்பன, இப்படி வளர்ப்பின் முதிர்வுத் தொடர் வரிசையாக வருகின்றது.

இவை ஒவ்வொன்றிலுமே பல மாற்றத்தின் சுழற்சி ஓட்டம் அந்தந்தப் பூமியில் அது எடுக்கும் அலைத் தொடர்புக்கொப்ப ஆதி சக்தியுடன் ஜீவ சக்தியாய் நீர் சக்தியில் சுழற்சி ஓட்டம் சுழலும் முதிர்வில் மனித உரு வருகின்றது.

மனிதனான பின் அறியும் ஞானத்தின் உயர் ஞானப் பகுத்தறிவில் ஜீவநீர் இச்சரீரத்திலேயே முதிர்வின் தொடர் பெற்ற மனிதக்கரு உரு சொல் செயல் எல்லா நிலைகளையும் பெற்ற தன்மையினால் இத்தன்மைக்கடுத்த உயர் செயலுக்கு எண்ணத்தை உயர் காந்த மின் அணுக்களைக் கவரும் ஆற்றல் பெறுகின்றது.

ஆகவே நீருடன் கூடிய இச்சரீரத்தின்
1.ஜீவ அணுக்கள் ஒவ்வொன்றையுமே வீரிய ஒளி பெறச் செய்ய...
2.எண்ணத்தை மேல் நோக்கிச் செலுத்தி வலுக் கூட்டி
3.எவ்வுணர்வின் அலையும் இச்சரீர இயக்கத்தில் வந்து மோதாமல்
4.இச்சரீர உணர்வின் அலை மட்டும் வீரியத் தன்மை பெற
5.எண்ணத்தின் செயலைக் கொண்டு உயிரணுக்கள் ஒவ்வொன்றையுமே வலுக் கூட்ட வேண்டும்.

அத்தகைய வலுக்கூட்டிக் கொண்ட... வீரிய சக்தி பெற்ற உயர் காந்த வலு ஆத்மாவை... இப்பூமி இயக்கத்தில் பிறருடன் தொடர்பு கொள்ளும்... வார்த்தையோடும்... எந்த எண்ண உணர்வும் அது பாதிக்காது.

இவ்வாத்மாவின் வளர்ப்பும் இச்சரீர ஜீவ காலத்திலேயே ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ணத்தில் ஒளி சக்தியை ரிஷி சக்தியின் சக்தித் தொடர்புடன் வலுக் கூட்டும் செயலுடனே செயல்படுத்திக் கொண்டே இருத்தல் வேண்டும்.

1.இப்பூமியின் பிடிப்பிலிருந்தும்... வேறு எப்பூமிப் பிடிப்பிலும் சிக்காமலும்
2.எப்பூமியின் எம்மண்டலத்தின் தொடர்பையும் அறியும் வலுவையும் கூட்டி...
3.கூட்டப் பெற்ற வலுவின் செயலை... இச்சரீர இயக்கத்தின் தொடர்பில்
4.புதிய நிலையை ஜீவப் படைப்பில் படைக்கும் வழித் தொடருக்கு ஞானத்தைச் செலுத்திட வேண்டும்.

அத்தகைய முதிர்வை மனிதனால் தான் படைக்க முடியும்.

அன்று சித்தர்கள்... ரிஷிகள் எழுதிய காவியத்தில்...
1.மனித உருவம் கொண்ட தெய்வத்தைக் காட்டி
2.அத்தெய்வத்திற்கு நெற்றியில் கண்ணும் பல கைகளும்
3.ஒரு பாதி பெண்ணாகவும் மறு பாதி ஆணாகவும் காட்டிய தன்மையின் உள் அர்த்தங்கள் பல உண்டு.

ஒவ்வொருவரும் தன் ஞானத்தால் அறிந்து உயர்வு நிலைக்குச் செயல் கொள்ளும் மார்க்கத்தில்... காற்று மண்டலத்தில் தன் வளர்ப்பின் உயர்வை அறியும் ஞானத்திற்குப் பல சக்திகளை சரீர ஜீவிதத்தில் ஒளி பெற்றுப் பல நினைவுகளை அறியலாம்.

June 27, 2023

“நினைத்த உடனே” உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்

ஒரு குடும்பத்திலே எட்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள்... அதிலே ஏழு பிள்ளைகள் சொன்னபடி கேட்கின்றார்கள்... நன்றாக இருக்கின்றார்கள். ஒரு பிள்ளை மட்டும் சேட்டை செய்கின்றான்... சொன்னபடி கேட்கவில்லை.

அவன் எதிர்காலம் என்ன ஆகுமோ...? என்று அவன் மீது தான் தாய் தந்தையருக்கு எண்ணம் அதிகமாக இருக்கும். என்ன ஆவானோ...? என்ன ஆவானோ...? என்ற நினைப்பாக இருக்கும்.

இருந்தாலும்
1.அவன் ஏதாவது செய்து விட்டால் உன்னைத் தொலைத்து விடுகிறே\ன் பார்...
2.தொலைந்தே போவாய் பாவிப் பயலே...! என்ற இந்த வேகம் தாய் தந்தைக்கு ஜாஸ்தியாக இருக்கும்.
3.ஆனால் தாய் தந்தையர் இறந்த பின் அதே உணர்வுடன் உடலுக்குள் வந்து இவனைத் தொலைக்கும்.
4.அவன் எந்த வேலையைச் செய்தாலும் அது உருப்படி ஆகாதபடி விஷமாகப் போய் அந்த உடலில் நஞ்சை வளர்த்து
5.உன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்…! என்று இந்த விஷத்தை வளர்த்து
6.ஆடாகவோ மாடாகவோ போய்ப் பிறக்க வேண்டியது தான்... இது தான் நாம் கண்ட பலன்.
7.பாசம் எல்லை கடக்கும் போது நஞ்சாக மாறி இத்தகைய வேலைகளைச் செய்துவிடும்.

இதிலிருந்தெல்லாம் உங்களை மீட்டுவதற்குத் தான் “சூரியக் குடும்பம் மாதிரி” வாரத்தில் ஒரு நாள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு முறைப்படி கூட்டுத் தியானங்கள் செய்யுங்கள் என்று சொல்கிறோம்.

அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களைக் குலதெய்வமாக எண்ணி அவர்களை விண் செலுத்த வேண்டும்.

காரணம்… அவர்கள் குல வழியில் தான் மனிதனாக நாம் வந்திருக்கின்றோம். தெய்வமாக இருந்து நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள் தான்…! எத்தனையோ நல்வழி காட்டியவர்களும் அவர்கள் தான்... ஞானத்தையும் சொன்னார்கள் நமக்காக வேண்டி எத்தனையோ உதவிகளையும் செய்தார்கள்.

அவருடைய உணர்வு கொண்டவர்கள் தான் நாம். அந்த ஆத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று அவசியம் நாம் செய்தல் வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலங்களுடன் இணைக்க வேண்டும் என்று பௌர்ணமி அன்று பழகிக் கொடுக்கிறோம்.
1.அங்கே தொடர்பு கொண்டு அந்தச் சக்தி பெறுவதற்கும் பழகிக் கொடுக்கின்றோம்.
2.நீங்கள் அதை எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

குருநாதர் இதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தார்... நான் எடுத்துக் கொண்டேன். அதை உங்களிடமும் சொல்கின்றேன் நான் (ஞானகுரு) நினைத்ததை எடுக்க முடிகின்றது...!

அதை வைத்து உங்களுக்கு நோய் இல்லை… துன்பம் இல்லை… நன்றாகி விடுவீர்கள்…! என்ற வாக்கினைக் கொடுக்கின்றேன். அதன் பிரகாரம் நீங்கள் எண்ணினால் உங்களுக்கு நல்லதாகின்றது

இதையே நீங்களும் பழகி உங்கள் வாக்கால் மற்றவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சொன்னால் அங்கேயும் இது நல்லதாகும். இதே போன்று
1.உங்கள் பிள்ளைகளுக்கு எண்ணி அவர்கள் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று எண்ணினால் ஆது சீராகும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும் எண்ணினால் அதுவும் நடக்கும்.

சாமியாரிடம் சென்று நல்ல நேரம் வருகின்றதா...? கெட்ட நேரம் வருகின்றதா...? என்று காசைக் கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே உங்களுடைய மூதாதையர்களை ஐக்கிய மனதாகச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
1.விண் செலுத்தப் பழகுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.
2.விண்ணின் ஆற்றலைப் பெறுவதற்குத் தான் பௌர்ணமி தியானம்.

அந்த ஆன்மாக்கள் அங்கே போனவுடன் இன்னொரு உடல் பெறாதபடி “அந்த ஒளிக்கதிர்கள் பட்ட பின் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளியாக மாறுகின்றது...!” சப்தரிஷி மண்டல உணர்வுகள் அவர்களுக்கு ஆகாரமாகக் கிடைக்கின்றது.

உதாரணமாக… ரேடாரை இங்கே கீழே வைத்து... இயந்திரத்திலும் இது அமைக்கப்பட்டு லேசர் ஒளிக் கதிர்களின் இணைப்பின் தொடர் கொண்டு எத்தனையோ இலட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளதை விஞ்ஞானிகள் இன்று இயக்குகின்றார்கள்.

அதைப் போல
1.“(ரேடியோ) ஒலிக் கதிர்கள்” ரேடார் - விண்ணிலிருந்து எடுக்கக்கூடிய ஆற்றலையும்
2.அதற்குள் லேசர் கதிரியக்கமான ஞானிகள் உணர்வின் ஒளியையும் உங்களுக்குள் பாய்ச்சி
3.இந்த இரண்டு சக்திகளையும் பௌர்ணமி அன்று சேர்க்கப்பட்டு… இதைச் செயல்படுத்துகின்றோம்
4.அதை எண்ணிப் பழகிக் கொண்டால் விண்ணின் ஆற்றலை உங்களால் ஈர்க்க முடிகிறது.

அதன் வழி கொண்டு மூதாதையர்கள் ஆன்மாக்களை நாம் விண் செலுத்தினால் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து விடுகிறது. அவர்கள் ஒளிச் சரீரம் பெற்ற பின்
1.ரேடார்...! ஒலிக்கதிர்களுடைய எண்ண அலைகளை நாம் பாய்ச்சப்படும் போது
2.கதிரியக்கச் சக்தி...! அந்த லேசருடைய தன்மை நமக்குள் பவர் கூடுகின்றது.
3.நாம் நினைத்த உடனே உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்
4.அதை வைத்து வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும் துடைத்துக் கொள்ளலாம்

மகரிஷிகளின் ஆற்றலை எடுத்துத் தான் துடைக்க வேண்டுமே தவிர மந்திரத்தைச் சொல்லிச் செயல்படுத்த முடியாது. இதைக் கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.

உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி இன்றைய மனிதனுக்குக் குறைந்து விட்டது

விஞ்ஞானத்தில் இன்று வரையிலும் இப்பூமியில் ஒலி அலைகளையும் ஒளிக் காட்சிகளையும் காற்றலையில் கலக்கவிட்டுப் பதிவு செய்கின்றார்கள்.

மேலும் இப்பூமிக்கும் மற்றக் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய... விஷமான அமிலத்தை (CHEMICALS) உலோகத்தில் செலுத்திப் பிற மண்டலங்களிலிருந்து இப்பூமியின் தொடர்பிற்கு வலுவாக்க... வளர்ச்சியுறும் உண்மை நிலை அறிய... விஞ்ஞான சாதனைகளைச் செயல்படுத்தவும்... மனிதனின் எண்ண உணர்வு செயல் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சரீர ஜெனிப்பில் சாதாரண வாழ்க்கை நிலையில் ஆயுட்காலம் அதது எடுக்கும் தன்மை கொண்டு எப்படியும் சராசரி அறுபதோ எழுபதோ எண்பதோ ஆண்டுகள் தான் இருக்கப் போகின்றது.

விஞ்ஞானத்தால்... பிற மண்டலங்களுக்குச் செல்லவும் அங்குள்ள உண்மை நிலையறியவும் கருவிகளின் நிலையால்
1.இன்றைய கருவியின் செயற்கைக்கு மின் காந்த அலையை
2.இயற்கையில் மனிதனின் உணர்வு எண்ணத்தை வளர்க்கவல்ல உயர்காந்த நுண்ணிய மின் அணுக்களை
விஞ்ஞானிகள் செலுத்தும் செயல் சாதனைக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் கிடைக்கப் பெற முடியாது...!

இன்று மனிதனால் பெறப்பட்டு வளரும் உயர் காந்த மின் அலையின் செயல்... இக்கோள்களில் (SATELLITES) செலுத்தப்பட்டு செயற்கையில் ஒலி பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் ஒளிப் படங்கள் வண்ண ஒளிப் படங்கள் ஒலி அலை வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றும் பல மின் ஒளிச் சாதனங்களுக்காகப் பிரித்து எடுக்கின்றனர்.

இவ்வாறு மின் காந்த அலைகளைப் பிரிப்பதினால் மனித எண்ண உணர்விற்கு நேரடியாகக் கிடைக்கப் பெற வேண்டிய... உயர் ஞான எண்ணத்தை அறியவல்ல... தன்னைத்தான் உணர்ந்து செயல்படச் செய்யும் இயற்கையான சக்திகளைப் பெற முடியாத நிலை உருவாகி விட்டது.

தனக்குள் உள்ள இறை சக்தியை.. எண்ணத்தின் உணர்வால் வலுவாக்கி வளரும் ஜீவித சரீரத்தை “இச்செயற்கை அலைகள்... சூழ்ந்து விட்டது...!

ஜீவ சரீரத்தில் ஜீவ சரீரமுடன் மனிதனுக்கு மனிதன் பேசப்படும் உறவு படுத்திக்கொள்ளும் உணர்வின் செயல் வளர்ப்பிற்கு...
1.வானொலியில் கேட்கப்படும் ஒலி அலைக்கும்
2.தொலைக் காட்சியில் காணும் ஒளி அலைக்கும்
3.இச்சரீரத்தின் உணர்வைச் செலுத்தும்பொழுது
4.அதே உணர்வைத்தான் இச்சரீரம் எடுக்க முடியும்.

செடிக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைத் தனக்குச் சத்தாக எடுத்து வளருகின்றது. அதுவே காய்ச்சிய நீரை... ஆற வைத்து ஊற்றினாலும் அச்செடிக்கு வேண்டிய ஜீவ சக்தி கிடைக்காது. அதனால் அத்தாவரம் வளர்வதில்லை.

அதைப் போன்று இச்சரீர உணர்விற்கு செயற்கை மின் காந்த ஒலியைக் கேட்கும் உணர்வினால் இச்சரீர ஜீவ ஆத்மாவானது...
1.தன் உயர்வு நிலைக்குத் தேவையான எண்ணத்தின் உணர்வு எடுக்கும் கவன நரம்பின் பொட்டின் பதிவிற்கு
2.உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி நிலை குன்றி விட்டது.

ஏனென்றால் எண்ணத்தின் உணர்வுகள் எவ்வலையை எடுக்கின்றதோ அதே நிலையைத்தான் இச்சரீர நிலையில் வளர்க்கும் நிலை உள்ளது.

இன்றைய மனித உணர்வின் எண்ணங்களே... செயற்கை அலையை அதிகமாகக் கேட்டு... பார்த்து... பழக்கப்படுத்தி வளர்த்துக் கொண்ட வலுவினால்... எதனையும் உணரும் பக்குவம் மாறி... இவ்வாத்மாவையே செயற்கை அலையுடன் செயல்படுத்தும் முறைக்கு மாறி விட்டது.

ஆகவே..
1.இவ்வாத்மாவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு அடகு வைக்கும் வாழ்க்கையையும்...
2.தன்னைத்தான் உணராமல் பித்தனாக வாழும் மனிதச் செயல்களையும்...
3.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு மாற்றி ரிஷிகள் காட்டிய மெய்யை வளர்க்க வேண்டும்.

இப்பூமியின் மண் வளங்கள் அது எடுக்கும் அலை ஒன்று. அதே மண் வளத்தின் தொடர்பில் வளரும் தாவரம்... தன் உணவை எடுத்து வளர்ந்து பலன் தருகிறது. ஆனால் எண்ணமில்லாத உணர்வு... செயலுடன் அது வளருகின்றது.

மிருகத்தின் நிலையோ... தனக்கு வேண்டிய உணவைத் தேடவும் புசிக்கவும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறங்கவும் தன் உணர்வின் இச்சையில் தேவையை அறிந்து கொள்ளவும் தன் ஐந்தறிவைக் கொண்டு வாழ்கிறது.. வளர்கிறது.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இக்குறுகிய நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் பெருக்கத்தால் தன்னைத் தானே உணராத நிலைக்குச் சென்று செயற்கையின் பிடிப்பிலேயே சிக்குண்டு விட்டான்.

1.செயற்கை ஒலி அலைகளையும் தொலைக்காட்சி ஒளி அலைகளையும்
2.தன் எண்ணத்தின் உணர்வில் பதியவிடும் அலையினால்
3.மனிதனுக்குக் கிடைத்துள்ள ஆறறிவு பொக்கிஷமான பகுத்தறியும் உயர் ஞானத்தையே
4.தவற விடும் நிலைக்கு இன்று கொண்டு வந்து விட்டார்கள்.

இது தான் இன்றைய உண்மை நிலை...!

June 26, 2023

திருச்சிற்றம்பலம்

பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல் அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.

எப்போது…?

ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.

மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில் புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

ஆக... திருமூலர் என்று சொல்பவன் ஒரு அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான் உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் - நடராஜா…!

நடராஜா என்றால் நமக்குத் தெரியுமா...? தெரியாது. உருவம் கிடையாது... நடராஜாவை வைத்திருக்கின்றார்கள் நம் பூமி நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப் பெயர் நடராஜா.

இதற்குள் தோன்றிய நிலைகள் கொண்டு “நடனங்கள் பல…” சுழற்சியின் தன்மை கொண்டு அது நிற்காமல் ஓடுகின்றது.

அதே சமயத்தில் அது மோதும் நிலைகள் கொண்டு
1.ஒவ்வொரு உணர்வின் அணுக்களின் செயல்களும் “ஒலி ஒளி என்ற நிலைக்கே…”
2.இந்த பூமிக்குள் வளர்ச்சியின் தன்மை மாறி மாறிப் பல ஆயிரம் உடல்களாக எடுத்து
3.ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்கி - புலிக்குக் கோபம் மானுக்குச் சாந்தம் எருமைக்கு அசுர குணங்கள் என்று
4.ஒவ்வொரு குணத்தின் தன்மை தனக்குள் வளர்த்துக் கொண்டதை 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு 1008 நடனங்களைக் காட்டினார் திருமூலர்.

நடராஜா என்கிற பொழுது பூமி ஓங்கார நடனம்…! அதாவது சுற்றும் பொழுது சுற்றும் வேகத்தில் “ஓங்காரக் காளி” தீய சக்திகள் அனைத்தையும் அழித்து விடுகிறது. காலிலே அசுரனைப் போட்டு மிதிப்பதாக அதைக் காட்டுகின்றார்கள்

இங்கே சிவத்தைக் காட்டும் பொழுது நடராஜா...! பூமி சுழலும் போது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின் சக்தி உள்ளே வடிகட்டி வருவதை அசுரனைக் காலிலே மிதித்து அடக்குவதாக இங்கே காட்டப்பட்டுள்ளது.

ஒரு மனிதனின் தவறான செயலைப் பார்த்துக் கோபப்படுகின்றோம். கோபமான உணர்வைச் சுவாசித்து உயிருக்குள் பட்ட பின் எரிச்சலாகின்றது.

ஆனால் அதே சமயம் இந்த உணர்வின் சக்தி உடலுக்குள் பரவி நல்ல குணங்களுக்குள் கலந்தவுடனே அனைத்தும் எரிச்சலாகிறது. அப்போது இந்த உடலான சிவம் என்ன செய்கிறது…?
1.ஓங்கார நடனம்... இரு உன்னை அழித்து விடுகிறேன்...! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.
2.சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் அது கோப உணர்வின் சக்தி உடலை இயக்கும் நிலைகள் - ஒலி ஒளி
3.தாவர இனத்தினுடைய மணம்… குணம்... ஆனால் அதனுடைய உணர்வு... இயக்கம்…!

மிளகாயை வாயிலே போட்டால் என்ன செய்கின்றது…? காரம்... ஸ்…ஆ…! என்று அலறுகின்றோம் கசப்பை வாயிலே போட்டால் ஓய்…! உமட்டல் என்ற நிலை வருகிறது.

இதைப் போன்று தான் இந்தப் பூமி நடராஜா… நிற்காமல் சுழல்வதால் அதனின் ஜீவன் கொண்ட நாம் எப்படி இருக்கின்றோம்...? என்பது தான் அந்த ஸ்தல புராணத்தின் தத்துவம்.

சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக் கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.

தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில் மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத் துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண வேண்டும் என்று விரும்புகின்றான்.

தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால் தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன் உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்” என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்

அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து கொள்ள முடியவில்லை.

நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் “பருப்பு போன்று” சிறு அளவில் செயல்படும் கருவி

நாம் மேல் நோக்கிப் பார்த்து எடுக்கின்ற சமமான உணர்வு கொண்டு வளர்க்கப்படும் எண்ணத்தின் உணர்வைப் புருவ மத்தியில் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அத்தகைய நுண்ணிய அலைகளைச் சுவாசித்து எடுக்கும் பொழுது நம் எண்ணங்கள் அனைத்தும் ரிஷிகளின் எண்ணமுடன் கலக்கின்றது.

ஆக… சப்தரிஷிகளினால் இன்று இப்பூமியில்… எப்பூமியிலிருந்து தான் வளர்ந்து வலுக்கூட்டி… இன்றும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக மனித எண்ணத்தின் பகுத்தறிவை வழி நடத்துகின்றனரோ… அவர்களின் எண்ணமுடன் நம் எண்ணத்தைச் செலுத்தி… அனுதினமும் தியானித்து அந்தச் சக்திகளை நாம் ஈர்க்க வேண்டும்.

அத்தகைய தியான ஒளி ஈர்ப்பினால்
1.இச்சரீரத்தை இயக்கவல்ல ஆத்மாவில்…
2.அன்று சித்தர்கள் காட்டிய ஞானக்கண் என்ற கவன நரம்பின் பொட்டுத் தன்மையின் மூலம்
3.நாம் எடுக்கும் சுவாசத்தால் எந்த ரிஷிகளின் அலையை எடுக்கின்றோமோ
4,அவ்வலையைச் சிறு மூளைக்குச் செலுத்தி
5.ஆத்மாவின் செயலுக்கு வலுத் தருகின்ற புருவத்தின் நடு மையத்தில் பொட்டில்
6.கவன நரம்பு செயல்படுகின்ற “பருப்பு போன்று… சிறு அளவில் செயல்படுகின்ற கருவி…”
7.இப்பூமியின் சமைப்புக்கு முன் நாம் எடுக்கின்ற நேரடி ஈர்ப்பால்
8.அதற்குகந்த எண்ணத்தின் வளர்ச்சியின் வலுவை அந்தக் காந்த நுண் அலைகள் மூலம் பெற முடியும்.

இயல்பாக… நம் கண்ணின் ஒளியில் எதிரில் காணும் பொருள்களை எல்லாம் சூரியனின் ஒளியோ மற்ற ஒளிகளோ உள்ள வெளிச்சத்தில் தான் கண் பார்த்துப் படம் எடுக்கின்றது.

ஆனால் இக்கவன நரம்பில் பொட்டின் பதிவு பெறும் காந்த நுண் அலையின் வளர்ச்சி கொண்ட வலுத் தன்மையினால் விழியை மூடிக் கொண்டே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் நிலைகளை
1.இருட்டிற்குள் எப்படி வெளிச்சத்தைக் காட்டி அதிலுள்ள உண்மைகளை இவ்விழி படமெடுத்து அறியும் இன்றைய நிலையை
2.வலுப்படுத்தப்பட்ட ரிஷிகளின் ஒளியிலிருந்து எடுக்கப்பட்ட காந்த நுண் அலைகள் கொண்டு
3.இச்சரீரத்தில் வளருகின்ற பல கோடி அணுக்களின் வீரியத் தன்மை உணர்வையும்
4.இப்பொட்டில் பதிவாக்கப்பட்ட ஒளித் தன்மை வளர்ச்சியினால்
5.விழியை மூடிக் கொண்டே பிரகாசத் தன்மையில் நாம் காணலாம்.

இதன் வலு வளர வளர… நாமிருக்கும் இடத்திலிருந்தே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி மண்டலத்தின் உருத்தன்மையும்… உருப்பெறும் மாற்றுத் தன்மைகளையும் அறிய முடியும்.

நடக்க இருக்கும் நிலைகளையும் முன் கூட்டியே அறிந்திட முடியும்…!

June 25, 2023

மனப்போரை எல்லாம் “குருக்ஷேத்திரப் போராக” நாம் நடத்த வேண்டும்

ஞானிகள் மகரிஷிகள் அனைவருமே நெருப்புக்குச் சமமானவர்கள்… தீமையைச் சுட்டுப் பொசுக்கக் கூடிய சக்தி பெற்றவர்கள். அந்தச் சக்தி நமக்கு முன் இந்தக் காற்றிலே இருக்கின்றது.

நம்மை அறியாது வரக்கூடிய தீமைகளை நீக்குவதற்கு அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழியில்… மெய் ஒளி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… என்று எடுத்து நமக்குள் அந்தத் தீமைகளைப் பொசுக்கிப் பழகுதல் வேண்டும்.

குருக்ஷேத்திரப் போர்…! குரு…! இந்த உடலில் இருக்கக்கூடிய அனைத்திற்கும் உயிரே குருவாக இருக்கின்றது.

நான் பேசுகின்றேன்; நீங்கள் திட்டுகிறீர்கள்; மற்றதைப் பார்க்கின்றேன்; எல்லாவற்றையும் சுவாசித்து… உயிரான குருவிடம் சென்றுதான் அது வேலை செய்கின்றது… உயிர் அதை எல்லாம் பிரம்மமாகச் சிருஷ்டித்து விடுகின்றது.

உதாரணமாக… வேதனை வருகிறது என்றால் என்ன செய்ய வேண்டும்…?
1.வேதனை உருவாக்கக்கூடியதைக் காதிலே கேட்டு…
2.அந்த உணர்ச்சிகளைச் தூண்டி சுவாசித்து… உயிரான குருவிடம் சென்ற பின்… (அப்போது மனப் போராகிறது)
3.ஈஸ்வரா…..…! என்று உயிரை எண்ணி (மனப் போரை நாம் குருக்ஷேத்திரப் போராக்க வேண்டும்)
4.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
5.குருக்ஷேத்திரப் போரில் அவனிடம் (உயிரிடம்) ஒப்படைத்து விட்டால்
6.மற்றவர்கள் திட்டியது… கேலி பேசியது… வேதனைப்படச் செய்தது… உள்ளே புகாதபடி தடைப்படுத்தப்படுகிறது.

அதாவது குருவிடம் (உயிரிடம்) சொல்லி தனக்குள் கெட்டது புகாமல் தடுக்கச் செய்வதற்குத் தான் “குருக்ஷேத்திரப் போர்…” என்று நமக்குக் காண்பித்துள்ளார்கள்.

நம்மை ஒருவன் திட்டிக் கொண்டே இருக்கின்றான் என்று அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தால் போதும். சுவாசித்ததும் ஜிர்.. ஜிர்..ர்ர்.. ஜிர்.. என்று இயக்கிக் கொண்டிருக்கும் (நமக்குள் இரைச்சலாகிறது).

அந்த உணர்வுகள் உடலுக்குள் போகாதபடி தடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
1.ஈஸ்வரா…….! என்று ஓங்கி (சொல்லி) அந்த ஓங்காரம்… வானை நோக்கி ஏகி
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கினால் இங்கே குருவிடம் (புருவ மத்தியில்) வந்து விடுகிறது.
3.அப்போது சாதாரண மனிதன் பேசிய (திட்டியதை) உணர்வைச் சுட்டுப் பொசுக்கி விடுகிறது.

இத்தகைய பேருண்மைகளைக் காட்டிய மெய் ஞானியின் உணர்வை எண்ணி அதைப் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று அவனிடம் வேண்ட வேண்டும்.

ஏனென்றால் அவன் தான் சிருஷ்டிக்கின்றான்…!

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும். என்னைத் திட்டியவர்களுக்கு என் சொல் நல்லதாகப் பட வேண்டும்… என் பார்வை அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும்… என் சொல் அவர்களுக்கு இனிமை ஊட்ட வேண்டும்… என்னைப் பார்க்கும் பொழுது நல்ல எண்ணங்கள் வர வேண்டும்.

இப்படிச் செய்தால் குருக்ஷேத்திரப் போர்... தீமைகள் நமக்குள் வராதபடி தடுக்கப்படுகின்றது.

“சப்தரிஷிகளின் நேரடி வலுவில்” (தொடர்பில்) நாம் இருக்க வேண்டும்

இதுவரை சுட்டிக் காட்டிய எண்ணத்தின் உணர்வை “இறைவனுக்குள் நாம்... நமக்குள் இறைவன்...!” என்ற பகுத்தறிவில் மனிதனின் எண்ண உணர்வை இப்புவி ஈர்ப்பில் கர்ம காரிய வாழ்க்கையிலிருந்தே தன் எண்ணத்தின் ஞானத்தை “உயர் ஞானமாக்கிடல் வேண்டும்...”

இப்புவியில் தோன்றி இப்புவியிலுள்ள உயர் சத்தைத் தனதாக வளர்த்துக் கொண்டவர்கள் தான் சப்தரிஷிகள்.

சூரிய மண்டலத்தின் சமைப்பில் தன் சப்த ஒளியைப் பாய்ச்சி... ஒளி கொண்ட வண்ண அமில உயிர் ஜீவ வித்து இப்பூமியில் மீண்டும் எண்ண உணர்வுடன் கூடிய செயல் தன்மைக்கு வளர்ப்பவர்களும் “அவர்கள் தான்...”

சப்தரிஷிகளின் செயல் தன்மையால் வளரும் நாம்... நம் எண்ணத்தின் உணர்வை விண்ணிலே செலுத்தி... அவர்கள் பால் நினைவைச் செலுத்தி அவ்வொளியின் நேரடி அலையை இஜ்ஜீவ ஆத்மாவில் வளரக்கூடிய உயிர் அணுக்களுக்கு உணவாகக் கொடுக்க வேண்டும்.

1.இறைவனுக்குள் நாம்... நமக்குள் இறைவன்...! என்ற நிலையில்
2.உயிர் தெய்வம் எப்படிச் செயல் கொள்கின்றதோ
3.அச்செயலின் தெய்வத்திற்கு... இவ்வுடலில் வளரும் ஒவ்வொரு அணுவையுமே
4.தெய்வமாக்கும் உயர் காந்த ஈர்ப்பில் செயல் கொள்ள வேண்டும்.

சூரியனிலிருந்து உதித்த நம் உயிர்... அவ்வுயிரின் உயிரணுக்களெல்லாம் உயிர் தெய்வ அணுக்களால் வளரும் காந்த ஜீவ வீரியத்தை... சப்தரிஷிகளால் பாதுகாத்துப் பக்குவப்படுத்தப்பட்ட சமைப்பின் தொடரை... நம் உணர்வின் எண்ணத்தைச் சப்தரிஷிகளின் எண்ணமுடன் கலந்து செயல்படும் பொழுது...
1.நாம் வேறல்ல...
2.அந்த ரிஷிகள் வேறல்ல...! என்ற நிலையை எய்துகின்றோம்.

அப்படிப்பட்ட ரிஷிகளின் தொடர்புடன் இஜ்ஜீவ ஆத்மா வலுப்பெறக் கூடிய வளர்ச்சியினால்... தினசரி வாழ்க்கையில் ஏற்படுகின்ற செயலில் எல்லாம்... தான் பெற்ற உயர் ஞானத்தால்... சமமான உணர்வு சமைப்பு கொண்ட நிலையில் செயல்படும் பொழுது... எத்தகைய தீய உணர்வுகளும் நம் சரீரத்தைப் பாதிக்காது.

இவ்வாறு நம் ஆத்மாவின் அலை வீரிய உணர்வு பெறும் பொழுது
1.இக்காற்றலையில் பலவாகக் கலந்துள்ள பல நிலை கொண்ட அமிலக் கூறுகளும்
2.பல உணர்வில் ஜீவன் பிரிந்த ஆவி ஆத்மாக்களின் அலையும்
3.இப்புவி ஈர்ப்பில் சுழன்று கொண்டுள்ள இன்றைய நச்சான காற்று மண்டல அலையும்
4.சப்தரிஷிகளின் நேரடி வலுவில் ஜெபம் கொள்ளும்போது
5.எந்த அலையும் நம் நிலையைப் பாதிக்காது.

மனித வாழ்க்கையில் இருந்தே...
1.புருவ மத்தியில் எடுக்கும் ஓ...ம் ஈஸ்வரா...! என்ற ஒளி நாதத்தின் சமைப்பால்
2.இச்சரீர வாழ்க்கையில் எந்நிலையயும் உணரும் பக்குவத்தையும்
3.முன் கூட்டி அறியும் செயலையும்
4.வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நடைமுறை நிலைகளுக்கும் தெளிவு காணும் பக்குவத்தையும்
5.முதலில் நாம் பெற வேண்டியது அவசியமாகும்...!

பல கோடி வருடங்களாய்... உயிர் பெற்று உருவாகி உருவாகி... உயர் தன்மை பெற்ற இம்மனித எண்ண உணர்வு சரீரத்தில்... ஒவ்வொரு உயிரும் ஒன்றைப் போன்று ஒன்றில்லாமல்... தான் வளர்ந்த வீரிய உணர்வின் அடுத்த நிலைக்குத் தனக்குள் உள்ள இறைவனை... தனக்குள் வளரும் இறை அணுக்களை... “இறைவனுக்கும் வீரியத் தன்மையாக...!” மகரிஷிகளின் அருள் ஒளியிலிருந்து எடுக்கும் ஜெபத்தால்... நிச்சயம் செயல் கொள்ள முடியும்.

June 24, 2023

நான்…! என்ற அகம் வரும் போது தான் மனிதனின் வளர்ச்சி குறைகிறது

1.இராவணன் யார்…? அவன் சிவ பக்தன்… (மனித உடல்).
2.இராமனோ விஷ்ணு பக்தன் உயிரின் இயக்கத்தைக் கொண்டவன்.

இராவணன் இந்த உடலின் இச்சைக்குச் சகலத்தையும் கற்று உணர்ந்தவன். சகோதரி சூர்ப்பணகையின் பாசத்தால் “என்னை அவமதித்து விட்டானே…” என்று அந்த சாம்ராஜ்யத்தில் வெறுப்பின் தன்மை வளருகின்றது.

பத்துத் தலை இராவணன் என்று சொல்லும் பொழுது மனிதன் எல்லா வித்தைகளையும் கற்றுக் கொண்டு பத்தாவது நிலை அடையக்கூடிய தன்மை வந்தாலும்
1.நான் என்ற அகம் வரப்படும் பொழுது வளர்ச்சியின் தன்மை இல்லாது போய் விடுகின்றது.
2.நான் என்று அகம் வரப்படும் பொழுது தன் சகோதரனாக இருக்கும் அதாவது இந்த உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்கள் தூங்குகின்றது (கும்பகர்ணன்).

இராவணவன் எல்லாவற்றிலும் வல்லமை பெற்றவன் இந்த உடலின் இச்சைக்குச் செயல்படுபவன் என்று தான் அவனைக் காட்டுகின்றார்கள்.

எதனின் சுவையின் தன்மை கொண்டானோ சூர்ப்பணகையினால் வந்த வினையை… தன் சகோதரி மேல் இருக்கும் பாசம் என்ற அந்த உணர்வின் தன்மை வரப்படும் பொழுது… தனக்கென்று அகம் கொண்ட செயலின் தன்மை வரப்படும் போதுதான் அங்கே அழிவின் தன்மை வருகின்றது.

1.இங்கே இராவணனைக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் உணர்ச்சி வசப்படும்போது சிந்தனை (கும்பகர்ணன்) இல்லை
2.அங்கே அவமதிக்கும் தன்மை வரும் பொழுது இதே உணர்வுகள் எதிரியின் தன்மையாக (இலட்சுமணன் – சூர்ப்பணகை) வாழ்க்கையில் எப்படி வளர்கின்றது…? என்ற நிலையைத்தான்
3.இந்த உடலுக்குள் எண்ணிய சக்திகள் இயக்கமும்
4.அதே சமயத்தில் தசரதன் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை உயிர் சக்கரவர்த்தியாக இயக்குகின்றது என்ற நிலையும்
5.இந்த இரண்டு பிரிவையும் காட்டியுள்ளார்கள்.

குருநாதர் இதை மிகவும் தெளிவாக உணர்த்துகின்றார்…!

இராவணன் எங்கே இருக்கின்றான்…? என்றால்
1.எல்லாவற்றிலும் முன்னேற வேண்டும் என்ற இச்சை கொண்ட நம் உடல் தான்.
2.முடிவின் தன்மையில் இருக்கப்படும் போது அகம் என்ற நிலையில் தேய்பிறையாகி விடுகின்றது.

பாசத்தால் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்தச் சக்திக்கு எது அருவமோ அதனின் உணர்வின் தன்மை கொண்டு இங்கே சக்கரவர்த்தியாக இருந்தாலும் இது அதற்குள் இயங்கி (உயிர் உடலுக்குள்) எவ்வாறு வருகிறது…? என்று காவியத் தொகுப்புகள் தெளிவாகக் காட்டுகின்றது.

இதற்காக வேண்டி இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று கூட நினைத்தேன் (ஞானகுரு). ஆனால் நேரமில்லை...!

1.பலரும் பல விதமாக எழுதி இருக்கின்றார்கள்
2.அதற்குள் நீ எதற்காகப் போகின்றாய்…? நான் சொல்வதை மட்டும் புரிந்து கொள்…! என்று சொன்னார் குருநாதர்.

வைரம் பாய்ந்த மரமே மலையாக ஆவது போன்று நம் ஆன்ம வளர்ச்சியும் இருத்தல் வேண்டும்

கார்மேகக் கண்ணன் அகிலத்தையும் தன் வாயில் காட்டியதாகவும்… பெண்களிடம் தான் லீலா விளையாட்டுகளை நிகழ்த்தியதாகவும்.. கிருஷ்ணாவதாரம் வியாசரால் எழுதப்பட்டுள்ளது.

அந்தத் தத்துவத்தில் பல உண்மைகள் உண்டு… கதை ரூபத்தில் நாம் அதைக் கேட்கின்றோம்… படிக்கின்றோம்…!

இம்மனிதக்கரு எண்ணத்தின் உணர்வு ஒவ்வொன்றையும் கிருஷ்ணனாகக் கண்டு… அக்கிருஷ்ணனின் பிம்பம் பெற்று… அப்பிம்பத்தின் தொடர் கொண்டு நிகழும் வழித் தொடர் ஒவ்வொன்றுமே
1.உயிர் ஆத்மா உயரும் பரமாத்மாவின் தொடர்பைக் குறிக்க
2.கீதையில் சூட்சும ரூபங்கள் பல உண்டு.

தன் உயிர் ஆத்மாவின் உண்மை ஜெனிப்பை நாம் உணர்ந்து நம்முள்ளுள்ள வீரிய சக்தியை இக்கர்ம காரியத்தில் மோதும் உணர்வுகளுக்கு ஞானத்தைக் கூட்டித் தன் உயர் ஞானத்தின் உண்மை எது…? என்ற பகுத்தறியும் எண்ண வாதத்தால்… எண்ணத்தின் உணர்வைச் சமமாக்கக் கூடிய வீரத்தின் ஞானமுடன் ஒவ்வொரு ஆத்மாவும் செயல்பட்டதென்றால்…
1.அன்று ரிஷிகளினால் உணர்த்தப்பட்ட…
2.இன்று கதையாய் உருவம் தந்துள்ள வழி ஒவ்வொன்றையுமே
3.நம் உயிர் ஆத்மாவின் சித்தில் நாமும் பெற முடியும்.

இவ்வெண்ணத்தின் பகுத்தறியும் உயர் ஞானத்தைக் கொண்டு அறிவின் வளர்ச்சியைச் சாந்த குண உணர்வுடன் அறியக் கூடிய தொடர்புக்குச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சில தாவரங்கள் விதைக்கப்பட்டு அதனுடைய சத்து நிலை உள்ள காலம் வரை பலன் தந்து ஒரு மாதம்… மூன்று மாதங்கள்… இப்படித் தன் சத்தின் பலனைத் தந்துவிட்டு மக்கி விடுகின்றன.

ஆனால் சில மரங்கள்…
1.“பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்குத் தான் எடுத்த சத்தின் தொடரினால்”
2.அம்மரமே வைரம் பாயும் தன்மைக்கு வளர்ந்து…
3.மரமே மலையாகிப் பல கோடி ஆண்டுகளுக்குப் பூமியின் சுழற்சியில் வலுக் கொள்கின்றது…!

காற்றலையின் சுழற்சியில்தான் எல்லா அமிலங்களும் சுழல் கொள்கின்றன.

மரத்தின் வலுவான வளர்ச்சி முற்றலில் அவ் ஈர்ப்பின் பிடிப்பிற்கு வைரத்தை வளர்க்கவல்ல அமிலத்தைத் தன் ஈர்ப்பில் பெற்று அது வளருகின்றது.

சிறு விதையான மிளகாய் விதை இக்காற்றலையில் கலந்துள்ள கார உணர்வின் சத்தைத் தன் வளர்ப்பிற்கு வலுக் கூட்டித் தன் வளர்ப்பின் பலனாய்ப் பலவற்றைத் தருகின்றது.

எண்ணத்தின் உணர்வை….
1.சிறு விதை எடுத்த பலனைப் போல்… வளர்ச்சியைப் போல்… பலன் தன்மை பெறத்தக்க செயலும் உண்டு…
2.வைரத்தின் ஈர்ப்பாக… மலையாகும்… மரத்தின் தொடர்பைப் பெறும் செயலும் உண்டு…!
3.மனிதன் எடுக்கும் அறிவின் ஞானத்திற்கு…!

அடுத்தவர்களைப் பார்த்து இரக்கப்பட வேண்டுமா… கூடாதா…? நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

மனிதனாக வர வேண்டும் என்றால் 1008 குணங்கள் வேண்டும். அந்த 1008 நல்ல குணங்கள் தான் நம்முடைய உடலை உருவாக்கியது.

அத்தகைய நல்ல மனதுடன் ரோட்டிலே செல்லும் பொழுது ஒரு பையன் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். அதை உற்று நோக்கி அவன் வேதனைப்படுவதைக் காணுகின்றோம்.

அவன் படும் வேதனையை நுகர்ந்து எனக்குள் சேர்த்த உடன் அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி என் ஆகாரத்துடன் கலக்கின்றது.
1.முதலில் கீழே விழுந்து விட்டானே என்று இரக்க உணர்வு கொண்டு காப்பாற்றி விடுகின்றேன்
2.ஆனால் ஆகாரத்துடன் கலந்த அந்த வேதனை உணர்வுகள் என் உடலில் சத்தாக மாறி விடுகின்றது.

இன்று நான் அவனைக் காப்பாற்றி விட்டேன். அடுத்த நாள் அந்தச் சாப்பாட்டுடன் கலந்த வேதனை உணர்வுகள் ஒரு விதமான அலசலாக மாறுகின்றது.

அதே சமயத்தில் பலவீனமான மனம் கொண்டவர்கள் அவன் அடிபட்டு மிகவும் காயமாகி விட்டான் என்பதைப் பார்த்தவுடனே பதட்டமும் வேதனையும் வந்து விடுகிறது.

அந்த இரண்டும் சேர்ந்து உயிருக்குள் பட்டு அந்த உணர்வுகள் உமிழ் நீராக மாறி சிறு குடலில் கலந்த உடனே
1.அடிபட்டவனைப் பார்த்தவுடன் உடல் பதறுகின்ற மாதிரி…
2.அந்தப் பதட்டத்தில் உடலை எப்படிக் குலுக்கியதோ
3.நாம் சாப்பிட்ட ஆகாரத்தையும் இவ்வாறு குடல் பகுதியில் குலுக்கி அலசி விட்டு விடுகிறது.
4.ஆகாரத்தை ஜீரணிக்காதபடி பட..பட… என்று அந்த விஷம் (வேதனை) வயிற்றாளையாகப் போக ஆரம்பிக்கும்.
5.நல்ல சத்தாகச் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மாதிரி ஆகிவிடும்.

உழைத்து நன்றாகச் சாப்பிட வேண்டும்… டாக்டர் சிபாரிசு செய்தார் என்று உடல் ஆரோக்கியத்திற்காக நாம் சாப்பிட்டாலும் இங்கே பயத்தின் துடிப்பு வேகமாக இருக்கப்படும் பொழுது இப்படி ஆகின்றது.

பயத்தால் துடிப்பும் வேதனையும் இரண்டையும் சுவாசித்து உயிரிலே பட்ட பின் உடல் நடுக்கம். அதிலே வடித்துக் கொண்ட இந்தச் சத்து ஆகாரத்திற்குள் இணைந்த பின்
1.சிறு குடல் மூன்றரை கஜம் இருக்கும்… அது கோர்த்து… இழுத்து… மூடி.. அப்படியே பிழியும்.
2.பாம்பு தவளையை விழுங்குவது போன்று அது சுருக்கி இறுக்கி அந்தச் சத்தை எப்படி ஜீரணிக்கின்றதோ
3.அதே போல் சிறுகுடல் இழுத்து நெருக்கி சத்தைப் பிழிய முற்படும் போது அதை ஜீரணிக்க விடாதபடி (முடியாதபடி) விட்டு விடுகின்றது.

ஆனால் நாம் தவறு செய்யவில்லை.

பாச உணர்வு கொண்டு அங்கே கீழே விழுந்தவனைப் பார்க்கின்றோம். பாச உணர்வுகள் கொண்டு வரும் போது பயம் எனக்குள் துடிப்பாகி அது எனக்குள் ஜீவன் பெற்று விடுகின்றது. பயமாகி வயிற்றாளை போகின்றது.

நான் சத்தாகச் சாப்பிட்டேன் என்றால் என்ன சொல்வது…?

பயமான சக்திகள் அதிகமாக கூடிவிட்டால் “டப்…” என்று ஒரு சாமான் கீழே விழுந்தால் நாம் உடனே துள்ளி விடுவோம். ஏதாவது படித்துக் கொண்டிருக்கும் போது “சறுக்…” என்ற சத்தம் கேட்டால் போதும் கவனம் அங்கே போகும்… படிப்பு வராது.

ஒரு நல்ல பொருளை எடுக்க வேண்டும் என்று சொன்னால் வேதனையும் பயமும் கலந்த உணர்வுகள் தூண்டியவுடனே
1.பொருளை எடுக்கக்கூடிய கவனம்… ஞாபக சக்தி எல்லாமே இழந்து விடும்…
2.பயத்தின் துடிப்பிலேயே போய்க் கொண்டிருக்கும்… இரக்கம் உள்ளவர்களுக்கு இவ்வாறு ஆகின்றது.

இதை நாம் எவ்வாறு சுத்தப்படுத்துவது…?

ஆனால் ஒரு முரடன் கீழே விழுந்து அடிபட்டவனைப் பார்த்தால் என்ன செய்வான்…?
பாசமும் இரக்கமும் கொண்டு செயல்படும் பொழுது அடிபட்டதைப் பார்த்து வயிற்றாளை போக வைக்கிறது. “ஓ… ம்…” அந்த உணர்வின் சக்தி என் உடலுக்குள் சென்று வினையாகச் செயல்படும் சக்தியாக வருகின்றது.

ஆனால் போக்கிரி அடிபட்டதைக் கவனித்தவுடன்
1.”அவனுக்கெல்லாம் இப்படித்தான் வேண்டும்…!” என்று கொடூரமான நிலைகளில் பேசி அதைப் பார்த்து ரசித்துக் கொண்டு செல்வான்.
2.அவனுடைய உணர்வு வேதனையை நுகரும் தன்மையே இல்லை
3.அசுரத்தனமான நிலைகள் கொண்டு பிறர் இம்சைப்படுவதைக் கண்டு ரசிப்பதும் பிறரை இம்சிப்பதும் தான் அவனுக்கு அது வழக்கம்.
4.அந்த உணர்வை இவனுக்குள் எடுத்துக் கொள்வதில்லை… அதை ரசிக்கின்றான்.

உதாரணமாக ஒரு கொள்ளை அடிக்கிறவன் வீட்டிற்குள் வந்தால் பணத்தை எடுத்துச் செல்கின்றான். ஆனால் என்னை நீ காட்டிக் கொடுத்து விடுவாய் என்று சொல்லி வீட்டில் உள்ளவரையும் அடித்துக் கொல்லத்தான் பார்க்கின்றான்.

பணத்தையும் எடுத்துச் செல்கிறான்… ஆளைக் கொல்லவும் செய்கிறான். அவனுக்கு அந்த இரக்கம் இருக்கின்றதா… வருகின்றதா…? இல்லை. ஆகையினால் அந்த உணர்வின் தன்மையை அவன் நுகராதபடி ரசித்துக் கொண்டே செல்கிறான்.

இதே பழக்கத்திற்கு இவன் சென்றான் என்றால் அங்கிருந்து ஒரு பஸ் வேகமாக வருகிறது என்றால் “என் மீது ஏற்றி விடுவானா…? பார்ப்போம்…!” என்று முரட்டுத்தனமாகத் தான் நிற்பான்.

சில பேரரை நீங்கள் பார்க்கலாம் புத்தி கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தால் அந்தக் குணம் உள்ளவர்கள் நடுரோட்டில் போய்க் கொண்டே இருப்பார்கள். எதையும் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

காரோ பஸ் வந்தாலும் கூட சைக்கிளில் செல்பவர்கள் ரோட்டை விட்டு இறங்க மாட்டார்கள். அப்படி இறங்காதவர்கள் எப்படிப்பட்ட புத்தியில் இருக்கின்றார்கள் என்றால்
1.இரக்கமும் நல்ல புத்தியும் இருக்காது.
2.இறங்க மாட்டார்கள்… நிமிர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள்
3.அவர் வீட்டிலும் கொஞ்சம் கூட இரக்கம் இருக்காது… எதை எடுத்தாலும் எதிர்த்துச் செயல்பட்டு கொண்டிருப்பார்கள்.

ஆனால் இன்று ஒரு முறை தப்பித்தாலும் “என்னைக் கண்டு எல்லோரும் பயந்துவிட்டார்கள்… பார்…!” என்று அவன் நினைப்பான்.

ஆனால் அடுத்தாற்போல் இன்னொருவன் இதே போன்று வேகமாக கண்ட்ரோல் இல்லாத வரும் பொழுது அந்த உணர்வு கொண்டே இந்தப் போக்கிரி அடிபட்டுச் சாவான்.

1.பாசத்தாலும் விஷம் வந்து வேதனையாகி உடல் நலம் கெடுகின்றது
2.முரட்டுத்தனமாகச் சென்றாலும் இப்படி ஆகிவிடுகிறது.

காரணம்… நான் எதைக் கொடுக்கின்றேனோ உயிர் அதை இயக்கி விடுகின்றது… அதை அப்படியே சிருஷ்டித்து விடுகின்றது. இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்

குருநாதர் காட்டி வழியில் மெய் ஞானிகள் கண்டுணர்ந்த அருள் உணர்வினைப் பெற வேண்டும். அந்த மகரிஷியின் அருள் சக்திகளை நீங்கள் பெற வேண்டும்.
1.அதை வளர்த்துக் கொண்டால் உயிர் அதுவாகவே நம்மை ஆக்கிவிடும்
2.அருள் உணர்வுகளை உயிர் சிருஷ்டித்து நம்மை அருள் ஞானிகளாக உயிர் நம்மை உருவாக்கி விடும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது…!

June 23, 2023

இது தான் நடக்கும்…! என்ற மன வலிமை வேண்டும்

மண்டலங்களில் நம் சூரியனின் சக்தி பல மண்டலத்தின் அமிலத்தைப் பெற்று தன் சமைப்பின் சத்தான உயர் அலை ஒளியை வெளிக்கக்கி ஒன்றின் தொடர் சுழற்சி ஓட்டத்தில்யே தன் வட்ட ஓட்ட மையச் சுழற்சியுடன் சுழன்று கொண்டே உள்ளது.

சனி மண்டலம் தன் தொடர்பில் சந்திக்கின்ற அமிலங்களின் தொடர்பைத் தான் எடுத்துத் தனக்கு வேண்டிய சத்தை வளர்ச்சிக்கு எடுத்து வேண்டாத் தன்மையை கரையக்கூடிய நிலைக்கு வெளிக்கக்கி கொண்டேயுள்ளது.

எல்லாத் தொடர்பின் வலுவின் மோதலினால் உருப்பெறுவதுதான் ஆதிசக்தி நீர்.
1.ஆதிசக்தியின் அமிலம் சிவனாய் உணர்த்தி
2.சிவனான பரப்பிரம்மமாகி பிரம்மமாய் சக்தி பெற்று
3.ஜீவித தொடர் சக்திக்கு எண்ணத்தின் உணர்வு செயல் நிலை கொண்ட இம்மனித பிரம்மம்தான் “உயர்ந்த பிரம்மத் தன்மை...”

“ஒரு சுழற்சி ஓட்டத்தில்” பலவற்றையும் வளர்க்கும் சூரியனே செயல் கொள்கின்றது. பலவாக ஓடும் எண்ணத்தின் ஓட்டத்தில்… பலவற்றையும் அறியக்கூடிய உணர்வின் எண்ணச் செயல்… மனித ஞானத்தில் செயல் கொள்ள…
1.மனிதன் தன்னுள் ஓடும் எண்ணத்தின் உணர்வை
2.சமமான சாந்தத்திற்குச் செயல் கொள்ள
3.கர்ம காரியத்தில் ஞானம் பெறல் வேண்டும்.

காட்டிற்குச் சென்று தனித்து ஜெபம் பெறும் காலத்தில்… மனித உணர்வுகள் மோதும் தருணமோ மற்ற எதிர்மறை செயல் எதுவாகிலும் மோதும் பொழுது “உணர்வுகள் மோதலினால்… உணர்வுகளினால் சாந்தத்தின் உயர் வலுவை மாற்றிக் கொள்ளும் பொழுது…” எதிர் நிலையின் பாதிப்பால்…
1.எடுத்த பலனின் செயல் விரையப்பட்டு
2.மீண்டும் பூமியின் ஈர்ப்புப் பிடியில் வலுவாகச் சிக்க வேண்டி உள்ளது.

ஆகவே… கர்ம காரியத்தில் மோதப் பெறும் எச்செயலானாலும் தன் ஞானத்தினால் உயர் ஞானத்தைச் செலுத்தி… ஏற்படக் கூடிய மாறு கொண்ட உணர்வுகளுக்கு வாழ்க்கைச் செயல்… தன் குடும்பம்.. ஆரோக்கியம்… தொழில்… சமுதாயம்…. எதுவாகிலும்… “அதிலிருந்து ஒதுங்குவதல்ல உயர் ஞானம் பெறுதல் என்பது…!”

வாழ்க்கையில் தன் உணர்வுடன் மோதப் பெறும்…
1.ஒவ்வொரு செயலையும் ஒதுக்கப்படாத தன்மையிலும்
2.தன் ஈர்ப்பின் சுழற்சியில் அதே எண்ணத்தின் ஓட்டம் ஓடிக் கொண்டே உள்ள நிலைக்கும்… எண்ணத்தைச் செலுத்திடாமல்
3.ஏற்படுகின்ற ஒவ்வொரு செயலுக்கும் தன் எண்ணத்தில் உயர்வைக் கூட்டி
4.அதற்குகந்த வழி நிலைகளை வகுத்துச் செயல்படுத்தக் கூடிய அறிவினால்
5.இக்கர்ம காரிய வாழ்க்கையில் தன் உயர் ஞானத்தைக் கொண்டு
6.உயர்ந்தோரின் ரிஷித் தொடர்பைப் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

ஆனால்… முதன் முதலில் ஜெபத்தில் அமர்ந்தால் உடலுடன் கூடிய வாழ்க்கையில் எடுத்த அலைச் சமைப்பின் தொடர்பு வாசனை எண்ணம்தான் ஏற்படும்.

ஆகவே… உயர்வின் ஞானத்தை நாம் பெற வேண்டும் என்றால் கர்ம காரியத்தில் தன் வாழ்க்கையில் செயல் கொள்ளும் எந்தச் செயலையும் அறிவின் உயர்வால் அதற்குகந்த வழி நிலைகளை… தான் பெற்ற ஜெப உணர்வு அலையினாலேயே கொண்டு வர வேண்டும்.

1.எண்ணத்தில் சஞ்சலத்தையும் சலிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்
2.“இது தான் நடக்கும்…!” என்ற எண்ணத்தின் வலுவைச் செலுத்தி
3.அதற்குகந்த தீர்வுகளைச் செயல்படுத்தி
4.எண்ணத்தின் மனோ வலிமையினால்…
5.ஜெபத்தில் ரிஷித் தொடர்புடன் - எவ்வெண்ணத்தை நாம் செலுத்தி ஜெபம் இருக்கின்றோமோ
6.அதற்குகந்த வலுவின் மின் காந்த வண்ண ஒளித் தன்மையை இச்சரீர ஆத்மா “நிச்சயம் பெற முடியும்…!”

June 22, 2023

நினைத்ததும் சக்தி பெற முடியாது.. வாக்காகச் சொல்லித் தான் கொடுக்கின்றோம்... “சும்மா இல்லை…!”

மெய் ஞானிகள் உணர்வுகள் காற்றிலே படர்ந்து இருப்பதை நுகர்வதற்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை வாக்காகச் சொல்லி உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.
1.சும்மா இல்லை…
2.நீங்கள் நினைத்த உடனே… யாரும் சொன்னவுடனே…
3.இப்படி எடுங்கள்…! என்றால் எடுக்க முடியாது…!

நீங்கள் அதைப் பெறுவதற்குண்டான தகுதியை ஏற்படுத்தி இந்த நினைவுக்குள் உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம் (ஞானகுரு),

1.திட்டியவனை எண்ணிய உடனே எப்படி ஜிர்..ர்ர்ர்… என்று வேகம் வருகின்றதோ
2.திட்டியவனைப் பத்து வருடம் கழித்துப் பார்க்கப்படும் போது… துரோகம் செய்தான் பாவி…! டட்டட்…டட்ட… என்று கோபம் வருகின்றது…”
3.பல்லை எல்லாம் நற…நற… தன்னை அறியாமலே கடிக்க வைக்கும்.
4.அவனை இரண்டில் ஒன்று பார்க்க வேண்டும் என்ற நிலை வரும்.

அதைப் போன்று தான்
1.உங்களுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் வருகின்றதோ அந்த நேரத்தில்
2.ஈஸ்வரா…….! என்று “வேகமாக எண்ணுங்கள்…”

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும்… என் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும்… என் செயல் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டு அடுத்து எதை வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்..

துன்பத்தைப் போக்கச் செய்து உங்கள் காரியத்தை நல்லதாக ஆக்கிவிடும்.

சில உடல்களிலே ஆவிகள் இருக்கும்... என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அவர்கள் சதா திட்டிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டால் இன்னும் கொஞ்சம் நமக்கு வேதனை அதிகமாகும்.

அதைக் கேட்கக் கேட்க நமக்குக் கை கால் குடைச்சல் வந்துவிடும்
1.பேசுபவர்களுக்குக் கொஞ்சம் குடைச்சலாகும்…
2.ஆனால் அதைக் கேட்பவர்களுக்கு அதிகமான கைகால் குடைச்சல் வரும்.

சண்டை போடுபவர்களை… திட்டுபவர்களை எல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தால் போதும். அடுத்த நாள் பிடரி வலிக்கின்றது இடுப்பு வலிக்கின்றது என்பார்கள்.

முதுகுத் தண்டில் மூன்றாவது எலும்பு… இடுப்பில் இருக்கும் மூன்றாவது எலும்பு… கழுத்தில் இருக்கும் எட்டாவது எலும்பு… தன்னாலே அங்கே வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.

டாக்டரிடம் சென்றால் “எலும்பு தேய்மானம்” ஆகிவிட்டது என்பார்கள் அல்லது இடுப்புக்குப் பெல்ட் போட வேண்டும் என்று சொல்வார்கள். இது தான் நடக்கும்.

அடிக்கடி கவலை… வீட்டிலே சண்டை போடுவது போன்ற எரிச்சலான உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
1.இது இரண்டும் ஒன்றாகக் குவியும்
2.விரிந்து கொடுக்கும் நிலை வரப்படும் பொழுது அந்த இரண்டு எலும்புகளுக்குள் நீர் புகுந்து விடும்
3.புகுந்த பின் தாங்க முடியாதபடி வலிக்க ஆரம்பிக்கும்
4.நரம்பு செயலற்றதாகி வேதனையாகி (நரம்பு) பிடித்துக் கொள்ளும்.

மூன்றாவது எலும்பு விரிந்து கொண்டே இருக்கும்… எக்ஸ்ரேயில் பார்த்து உங்கள் எலும்பு தேய்ந்து விட்டது என்பார்கள். இப்படி எல்லாம் வரும்.

இது போன்ற நிலையில் இருந்து நீங்கள் உங்களை மீட்டிக் கொள்வதற்கு ஆத்ம சுத்தியை அவசியம் செய்து கொள்ளுங்கள். இருளை நீக்கி மெய் ஒளியின் தன்மையை பெற்று ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

நம் ஆத்மாவை ஒளிப் பிழம்பாக ஆக்க வேண்டும்

1.பிரம்மத்தின் பிரம்மாவாய்… ஒவ்வொருவரும் தன் எண்ணத்தின் கர்ம காரியத்தில் ஏற்படக்கூடிய மாற்றத்தில்
2.மாற்றம் கொள்ளக்கூடிய செயல் நிலை ஒவ்வொன்றிலுமே
3.இன்னலில் இருந்து தன் ஞானத்தைக் கூட்டி உயர் ஞானமாக்கும் சித்தம் கொண்டால்
4.பரப்பிரம்மத்தில் பிரம்மாவாய்ப் படைப்பில் பிம்பம் பெற்ற நாம்
5.வாழ்க்கை நிலையிலிருந்து செயல் கொள்ளக்கூடிய எண்ணத்தின் உணர்வை
6.தடைப்படக்கூடிய கர்ம காரியத்தில் சலிப்பு சோர்வு என்ற சஞ்சல உணர்வை வளர்க்காமல்
7.தடைப்படும் காரியங்கள் ஒவ்வொன்றையுமே உயர் ஞானத்தைக் கூட்டி மாற்றியமைத்து
8.வளரும் தொடருக்கு வாழ்க்கையின் நிறைவை வளர்த்து
9.எண்ணத்தின் உணர்வைச் சமமான குண நிலைக்கு
10.சாந்தமான ஞானத்தின் வீரத்தை வளர்த்துக் கொண்டோமேயானால்
11.யாம் வழிகாட்டியபடி மேல் நோக்கிய சுவாசத்தால் எடுக்கவல்ல காந்த மின் நுண் அலைகள் மூலம்
12.இச்சரீரம் முழுமைக்குமே வலுக்கொள்ள வழி அமையும்.

எப்போது ஆறு வண்ணங்களின் முலாம் கொண்ட இஜ்ஜீவ ஜடபிம்ப பிரம்ம உடல் பெற்றோமோ… அப்போதே அதற்கடுத்த வான்மீகியாரால் சுட்டிக் காட்டப்பட்ட ஒளிப் பிம்பமான… நீர் மூர்த்தி உருவங்களைத் தெய்வ குணாம்ச வித்தகராய்ப் படைத்த… காவிய ரூபத்திற்கொத்த கருத்தின் ரூபமாய் இராமனைப் போன்றும் கிருஷ்ணரைப் போன்றும்
1.இச்சரீரத்தின் ஆத்ம ஒளியைச் விண்ணிலிருந்து எடுக்கும் உயர் காந்தமின் அணு வளர்ப்பினால்
2.நீல வண்ண ஒளி சரீரமாய் இச்சரீர ஆத்மாவையே ஒளிப் பிழம்பாக ஆக்கி
3.இச்சரீரத்தில் இருந்து கொண்டே அந்த (நம்) ஆத்மாவின் ஒளியை நாம் காண முடியும்.

அப்படிப்பட்ட ஒளியால் ஒளிரக் கூடிய வலுப்பெறும் சித்துத் தன்மையினால் எதனையும் ஊடுருவும் செயல் தன்மை இம்மனித சரீர வாழ்க்கை உணர்வு எண்ணத்திலேயே நாம் பெற முடியும்.

June 21, 2023

முற்றிய பின் தான் எதுவும் வித்தாகிறது… மனிதனுடைய முற்றல் எது…?

சூரியனின் ஒளிக் கதிர்கள் பிரகாசிக்கும் தருணத்தில்... நம் பூமியில் மழை பெய்யும் தருணத்தில் மேகக் கூட்டங்கள் விலகி மப்பும் மந்தாரமுமாய் மழைத் துளிகள் விழும் தருணத்தில் சூரிய ஒளி பூமியின் ஈர்ப்பில் பட்டுப் பிரகாசிக்கும் சமைப்பு அலையினால் “வானவில்” ஒளியின் வண்ணத்தை நாம் காண்கின்றோம்.

இராமாவதார காலத்தில் வான்மீகி எழுதிய காவியத்தில் வண்ணத்தின் ஒளியில் வளரும் குண உருவ இராமனை “நீல உருவாய்க்” காவியத்தில் காட்டினார்.

சூரியனுக்கும் பூமிக்கும் வான மண்டலப் பால்வெளியில் சமைக்கப்படும்
1.பூமி எடுக்கும் சத்தின் வளர்ச்சி வண்ண ஒளியின் தொடர் வளர்ச்சியை
2.வான்மீகி மகரிஷி பெற்ற ஜெபத்தின் தத்துவக் காவியத்தில்
3.உருவக நிலை உருவாகும் வண்ணத்தின் சேர்க்கையின்... ஆத்ம குணத்தின்... வளர்க்க வேண்டிய ஜீவ சரீரத்தைப் பற்றி...
4.இராமாயணத்தின் மூலம் அன்றே நமக்குப் பல உண்மைகளை உணர்த்தியுள்ளார்.

வானவில்லில் எப்படி வண்ணங்களைக் காணுகின்றோமோ அதற்கொத்த வண்ணத் தன்மை ஆறு வண்ணங்கள்... வலுக்கூடிய ஏழாம் வண்ணமான உருவக வண்ணம் கொண்ட செயல் நிலையில் தான்... மனித ஜீவனும் பிறக்கின்றது.

இச்சரீரத்தை இயக்கும் ஆத்மாவின் வண்ணம் ஆறு. வானவில்லின் ஒத்த வண்ணத்தின் வலு ஒளி பெற வேண்டும் என்றால்...
1.ஆத்மாவின் இயக்கத்தால் ஜீவ சரீரத்தின் உருவகத்தின் மூலம்
2.பகுத்தறியும் ஞான மனிதனை ஒளிச் சரீரமாக (வெண்மை நிறம்) வளர்க்க முடியும்.

ஆறு வண்ணத்தின் திரு உருவாய் ஆறுகுணத்தின் அறுசுவை உண்டு செயல் நிலைக்கு மனிதக்கரு உரு வளர வளர்ச்சி பெற்ற அடுத்தநிலை தான் இராமனும்... கிருஷ்ணனும்...!

அதாவது... ஆத்ம வலுவின் ஒளியைப் பெற்ற... அடுத்த தெய்வ நிலை பெற்ற...
1.அடுத்த தெய்வ நிலை பெறும் ஒளியைக் குறிக்க
2.ஜீவ உடலின் ஆத்ம வலுவின் மனிதனுக்கடுத்த வளர்ச்சி ஒளி நிலையான
3.தெய்வ நிலை பெறும் வண்ணத்தைக் குறிக்கும் ஒளி தானப்பா “நீல ஜோதி ஒளி நிலை...!” (இராமனும்... கிருஷ்ணனும்)

இராமரையும் கிருஷ்ணரையும் நீல வண்ணத்தில் உருவகம் தந்து தெய்வங்களாகக் குறிப்பு காட்டிய வான்மீகியார் தந்த காவியத்தில் இப்படிப் பல உண்மைகள் உண்டு.
1.ஜீவ சரீரத்தின் அடுத்த நிலை பெறும் சூட்சும மார்க்கங்கள் அனைத்தையும் குறிப்புகளாக
2.காவிய உருவத்தில் ரூப கர்ண நாமங்களைச் சூட்டி வடித்துள்ளார் வான்மீகியார்.

வான் மண்டலத்தின் சமைப்பின் ஒலியின் ஒளி கொண்டு மோதப் பெறும் அமிலக்கூறின் தொடர் வளர்ச்சியில் வளரும் தன்மை

மிளகாயின் விதையை விதைத்தால் அதிலுள்ள காரத் தன்மைக்கு ஜீவ நீர் சேர்த்து வளரும் தருணத்தில் அதன் உணர்வின் நிலைக்கொப்ப இக்காற்று மண்டலத்திலுள்ள தனக்குகந்த கார அமில உணவைத் தன் வளர்ப்பின் சத்திற்கு எடுத்து வளர்கிறது.

மிளகாய்ச் செடி அதன் ஊன் நிலை வெளிக்கக்கும் ஆவி உஷ்ணத்தினால் இலைகள் எல்லாம் முதிர்ச்சியுற்றுப் பூவாகிக் காயாகி முற்றிய பிறகுதான் மிளகாயாகவும் வித்தாகவும் பலனைத் தருகின்றது.

இப்படி அந்த வித்தின் தொடர் வளர்ச்சியில் மிளகாயின் பலனை எப்படிப் பெறுகின்றோமோ அதைப் போன்றுதான் நம் ஆத்ம உயிர் வித்தின் பலனும்.

இச்சரீரக் காலத்தின் முதிர்வில் சரீரத்திலுள்ள எலும்புகளின் ஊன் நிலை அது வெளிக்கக்கும் அலை உணர்வின் வளர்ப்பு நிலை வளரும் குழந்தைப் பிராயத்தில் பருவ நிலையில் சரீர மாற்று உணர்வு வளர்ச்சி முற்றுகின்றல்லவா..?

ஏனென்றால் உணர்வின் வளர்ச்சி முற்றல் ஜீவ வளர்ச்சி வளர்க்கும் பக்குவ காலமே... “பருவ காலம்...”

அதைப் போன்று எண்ணத்தின் உணர்வால் ஆத்மாவின் வளர்ச்சி முற்றும் வலு நிலை கூட வேண்டும் என்றால்...
1.ஆத்மா ஜெபத்தால் பெறும் வீரியத் தன்மையால்
2.சமமான குண வலுவைக் கொண்டு
3;ஆறு வண்ணங்களின் உரு வண்ணத்தைப் பெற்ற சரீரத்தை
4.ஒளி வண்ணத்தின் ஒரு வண்ணமாய் நீல வண்ண ஒளி ஆத்மாவாய்
5.இவ்வுயிராத்மா வலுப்பெறும் அந்த வளர்ச்சியின் உண்மையை
6.ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

(குறிப்பு:- சரீர ஜீவ உருவக வாழ்க்கையிலேயே சாதாரண பிறப்பு இறப்புக்கு... அடுத்து ஜென்மத் தொடர் பெறுவதற்கும்... ஆத்ம வலு நிலை கூடியிருந்தால் தான் பிறப்பிற்கு வர முடியும்).

சிதம்பரத்தில்… திருமூலர் சொன்ன “திருமந்திரம்”

அர்ஜுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்… கண்ணன் வழிகாட்டிச் செல்கின்றான்… என்றால் நம் கண்கள் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றது என்று காட்டுகிறார்கள்.

இங்கே மாடு வருகின்றது… மனிதன் வருகின்றான்… அவன் தவறாகப் பேசுகிறான்… என்றும் ஒரு காரை ஓட்டிச் செல்லும் பொழுது
1.ஒருவன் குறுக்கே வருகின்றான் வந்தால் மோதிவிடும் என்று கண்கள் தான் உபதேசிக்கின்றது.
2.வண்டியை நீ இப்படி ஓட்டு என்று அந்த உணர்வுடைய நிலைகளை அங்கங்களை கைகளை இயக்கச் செய்வது கண்கள் தான்…!

அதாவது…
1.நம் கண் பார்க்கின்றது… அந்த உணர்வினை இழுக்கின்றது… சுவாசிக்கச் செய்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மை கொண்டு “அங்கங்களை இயங்குகிறது…”

எடுத்துக் கொண்ட உணர்வுகள் கொண்டு நாம் இயங்கினாலும் “இந்த உணர்வுகள் வடிகட்டப்படுகிறது…”

இதைப் போன்று அவன் (கண்கள்) கொடுக்கும் உபதேசத்தின் தன்மை தன்னைக் காக்கும் உணர்வாக எடுக்கப்படும் பொழுது… தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.

அதே சமயம்… ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்தத் தாக்கும் உணர்வுஅவனைத் தாக்கும் நிலைகளுக்கு என்னை அழைத்துச் செல்கின்றது.

அவனை அழிக்க வேண்டும் என்ற நிலையில் சிந்திக்காது செயல்படும் உணர்வை எடுக்கப்படும் பொழுது அந்த வேதனையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை அழித்து விடுகின்றது.

கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று காட்டுகிறார்கள். விநாயகர் தத்துவத்தில் நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவே உனக்கு வாகனமாக அமைந்து நீ அதுவாக ஆகின்றாய் என்று காட்டுகிறார்கள். இதை ருத்ர தாண்டவம் என்று திருமூலர் காட்டியுள்ளார்.

1.நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் எப்படித் துடிக்கின்றதோ
2.நாம் எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அந்த அங்கங்களைப் பாசமாக அணைக்கின்றதோ
3.நாம் எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படியோ
4.அதை எல்லாம் நடனங்களாகக் காட்டி… அபிநயங்கள்…!
5.அதாவது… தான் எடுத்துக் கொண்ட உணர்வின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
6.அந்த நரம்பியல்கள் எப்படி நாதத்தின் நிலைகள் கொண்டு அது இயங்குகின்றது என்பதைத்தான் (ஏனென்றால் அங்கங்களை இயக்குவது நரம்புகள் தான்) ஒலி ஒளி என்ற நிலையில்
7.நாதத்தைப் பற்றி… அந்த நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் தெளிவாகக் காட்டியுள்ளார்.
8.ஒலி ஒளி அதற்குள் எத்தனையோ உட்பொருள்கள் அடங்கியுள்ளது.
9.ஒலியைப் பற்றி எத்தனையோ வியாக்கியானங்கள் செய்யலாம்…
10.ஆனால் நம் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று அந்த மெய் ஒலி(ளி)யைக் காட்டியது சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்.

விண்ணிலே தோன்றிய அந்த உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது ஓங்காரமாகிப் (ஓ…ம்ம்ம்ம்) பல நிலைகள் ஆகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்குகிறது.

ஒவ்வொரு தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்ட உடனே அந்த இலையின் ரூபங்கள் விரிவடைவதும்… உணர்வின் மணங்களை வெளிப்படுத்துவதும்…
1.சுவாசிக்கும் உணர்வின் தன்மை கொண்டு உயிரணுக்களின் இயக்கமும்
2.அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
3.ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருமாற்றமும்
4.அந்த உணர்வுக்குள் ஒலியின் மகிழ்ச்சியும்… ஒலியின் தன்மை கொண்டு “ஒளியாக நீ எவ்வாறு ஆவது…? என்று வெளிப்படுத்திய ஸ்தலம் தான் இது.

அந்த உட்பொருளை நாம் இன்னும் காண முடியாது தேடிக் கொண்டிருக்கின்றோம். புரியவில்லை என்று எண்ண வேண்டாம்…! நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளிலிருந்து மீட்டிக் கொள்வதற்குத் தான் இதைச் சொல்கின்றோம் (ஞானகுரு)

ரோட்டிலே செல்லும் பொழுது எத்தனையோ உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. காரணம் நமக்குள் 1008 குணங்கள் இருக்கின்றது பார்க்கப்படும் பொழுது இரக்க மனம் கொண்டு “ஐயோ இப்படி ஆகிவிட்டதே…!” என்று எத்தனையோ எண்ணுகின்றோம்.

மனிதரை உருவாக்கிய அந்த 1008 நல்ல குணங்களை வைத்துத் தான் அடுத்தவர்களிடம் நாம் என்ன ஏது என்று கேட்டறிகின்றோம். அப்போது
1.நல்ல குணத்துடன் அது சேர்ந்து வடித்து அந்த நல்ல குணமும் ரிப்பேர் ஆகிவிடுகின்றது.
2.அந்த நல்ல குணத்தை எண்ணும் போது அந்த வேதனை பயம் ஆத்திரம் கோபம் எல்லாமே வருகின்றது.

ஆனால் யாரும் தவறு செய்யவில்லை.

பிறருடைய குறைகளையோ அவர்கள் படும் துன்பங்களையோ தவறான செய்திகளையோ பார்க்கின்றோம். பத்திரிகை டிவிகளைப் பார்க்கின்றோம் உலகம் இப்படி இருக்கிறது…? நாளைக்கு என்ன ஆகுமோ…! என்று வர்ணனை செய்திருப்பார்கள்.

இங்கே திருடி விட்டார்கள் அங்கே கொன்று விட்டார்கள் அடித்து நொறுக்கொ விட்டார்கள் என்று எத்தனையோ சம்பவங்களை நாம் பார்க்க… படிக்க… கேட்க நேருகிறது. அந்த நேரத்தில் நல்ல குணங்கள் அனைத்தும் பதறுகின்றது… பதட்டமாகின்றது. நல்ல குணங்கள் எல்லாமே ரிப்பேர் ஆகி விடுகின்றது.

உதாரணமாக… ரேடியோ கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு மின்னல் தாக்குகின்றது. ஏரியில் வழி எடுக்கப்படும் பொழுது எர்த் ஆனவுடன் கரகரப்பாகி… கொர…கொர… என்று சத்தம் போடுகின்றது.

ஒலியை இழுத்துக் கொடுப்பது அங்கே ஓட்டையைப் போட்டு விடுகிறது அப்போது எதையுமே தெளிவாகக் கேட்க முடிவதில்லை.

1.ஒவ்வொரு ஸ்டேஷனிலிருந்து எடுத்து வடிகட்டி கொடுக்கக்கூடிய…
2.நுண்ணிய அலைகளில் பாய்ந்து வரக்கூடிய
3.அந்த அலைவரிசைகளைப் பிரித்து எடுத்துக் கொடுப்பதில் உள்ள இணைப்புகள் சூடாகி
4.அந்த இணைப்பு (பற்ற வைப்பு - SOLDERING) கழன்று விடும்... அதற்குப் பின் இது எடுத்துக் கொடுக்காது.

இதைப் போன்றுதான்
1.மனிதனுடைய உடலில் நுகர்ந்த உணர்வுகள்… மூளைக்குள் இந்த உணர்வின் தன்மை எடுக்கப்படும் பொழுது
2.குறையான உணர்வுகள் பட்டவுடனே பொறிகளை இழுக்கும் அந்த நிலைகள் நின்றுவிடும்.
3.என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நம் உடலுக்குள் நல்லதை இயக்கக்கூடிய குணங்கள் ரிப்பேர் ஆகிவிடுகிறது.

உங்களால் அதைச் சரி செய்ய முடியவில்லை…! அப்போது
1.ரிப்பேரான குரலில் தான் பேச முடியும்
2.ரிப்பேர் ஆன நிலைகளைத் தான் சுவாசிக்க முடியும்
3.ரிப்பேரான நிலைகளைத் தான் எடுக்க முடியும்…!

அதிலிருந்து மீட்டுக் கொள்வதற்குத் தான் ஞானிகள் கோவிலைக் கட்டி வைத்துள்ளார்கள். அதாவது வாழ்க்கையின் இடைவெளியில் ரிப்பேரானால் அதில் மீட்டுவதற்கு அங்கே வழி காட்டுகின்றார்கள்.

உன் உடலில் இன்னென்னது இப்படி மறைந்திருக்கின்றது. ஆகையினால் மலரைப் போன்ற மணம் பெற வேண்டும் என்று எண்ணு… மகரிஷிகளின் அருள் சக்தியை அதிலே போடு அபிஷேக ஆராதனைகளைப் போடு சுவையான இனிமையான மணங்கள் பெற வேண்டும் என்று எண்ணு. இதை உணர்த்திய அந்த மெய் ஞானிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணு…!
1.பொருளைக் காட்டி… அதைக் கண்ணில் உற்றுப் பார்க்கும்படி செய்து…
2.உயர்ந்த சக்திகளை எடுக்கும்படி சொல்கின்றார்கள்… காவியத்தையும் படைத்துள்ளார்கள்.

June 20, 2023

வெடுக்… வெடுக்… என்று பேசுபவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

உங்களிடம் யாராவது கடுமையாகப் பேசிக் கொண்டே இருந்தால் உம்… கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருங்கள். திட்டிக் கொண்டே இருந்தார்கள் என்றாலும் சரி… ஆமாம்… ஆமாம்… சரி…! என்று சொல்லுங்கள்.

மிகவும் வசனம் பேசிக் கொண்டிருப்பவர்கள் மோசமான நிலையில் இருப்பார்கள்… வாயில் வராததைப் பேசுவார்கள். ஆமாம்… ஆமாம்… சரி… சரி… ஆமாம்…! என்று சொல்லிக் கொண்டே இருங்கள்.

உனக்குக் கண் இருக்கின்றதா… காது இருக்கிறதா…? என்று மீண்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
1.இது அத்தனையும் நீயே வைத்துக் கொள் எல்லாவற்றையும் வைத்துக்கொள்… போ…! என்று சொல்லி விட்டு வந்துவிடுங்கள்.
2.அப்படியே மயங்கி சொத்… என்று விழுந்து விடுவார்கள்… இதைப் பார்க்கலாம்.

அதாவது… அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டே இருங்கள்… நீங்கள் திட்டவே வேண்டாம்…! எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்… எனக்கு வேண்டாம் நீங்களே அதை வைத்து அனுபவித்துக் கொள்ளுங்கள்…! என்று சொல்லிவிட்டுத் திரும்பி விடுங்கள்.

1.நீங்கள் வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை
2.ஏனென்றால் அவர் உடலில் இருக்கக்கூடிய “ஒரு ஆவி” அந்த வேலையைச் செய்கின்றது.

அந்த மாதிரி நேரங்களில் உடனே ஆத்ம சுத்தி செய்து கொண்டு “எல்லாவற்றையும் நீயே வைத்துக் கொள்…” என்று சொன்னவுடனே அந்த உடலில் இருக்கும் ஆவி அப்படியே மயக்கப்பட்டு விழுவதைப் பார்க்கலாம்.

1.இந்த வாக்கைச் சொன்னவுடன் அந்த ஆவி செயலிழக்கும்
2.அப்படிச் செய்கிறோம் என்றால் நாம் ஒரு நன்மையைச் செய்கிறோம் என்று அர்த்தம்… அவர்களுக்குத் தீமை செய்யவில்லை.

நம்முடைய உணர்வுகள் பாய்ந்து அவர்கள் உடலில் அறியாமல் இருக்கக்கூடிய அந்த ஆவி சோர்வடையும். அடுத்து கீழே விழுந்து எழுந்தார்கள் என்றால் “சுயநினைவு” வரும்.

அந்த ஆவியின் இயக்க நினைவில் இருந்து அவர்களை நீங்கள் காப்பாற்றுகின்றீர்கள் என்று அர்த்தம்…! நான் (ஞானகுரு) வாக்குடன் கூடி உங்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கின்றேன்

ஏனென்றால் திட்டுகின்றார்கள்… என்னால் தாங்க முடியவில்லை… பொறுக்க முடியவில்லை என்று மீண்டும் அவருடைய எண்ணங்களைத் தான் நீங்கள் இழுத்துப் போட்டுக் கொள்கின்றீர்கள்.

காரணம் விஷம் எதிலே வேண்டும் என்றாலும் ஊடுருவிச் செல்லும்…! அதை மாற்றி அமைக்கும் சக்தி நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் வாக்குடன் சொல்லி இதைக் கொடுக்கின்றேன்.

அதிகமாகப் பேசுகின்றார்கள் திட்டுகின்றார்கள் என்றால் “எல்லாவற்றையும் நீ வைத்துக் கொள்…!” என்று சொன்ன உடனே
1.அந்த உடலில் இருக்கக்கூடிய ஆவி பலவீனமாகி மயக்கப்படும்.
2.அப்போது இவர்களுடைய சுய சிந்தனை அங்கே வரும்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு அவர்களையும் காக்கின்றோம். இந்த வாக்கின் தன்மை அங்கே தீமையான நிலைகளை நீக்கச் செய்யும்… வயிற்றால் போகும்…!

அடுத்து யாருக்கும் தொந்தரவு கொடுக்க மாட்டார்கள்.

மனிதனின் முதிர்ச்சி… “சித்துத் தன்மை கொண்ட ரிஷி நிலை தான்…”

சூரியன் எத்தன்மை கொண்டெல்லாம் மற்ற மண்டலங்களில் இருந்து வெளிக் கக்கும் அமிலத்தைத் தனக்காக ஒளியாக்கி… அவ்வொளியின் வளர் சத்தில் தானும் வளர்ந்து… தன் ஈர்ப்பு வட்டத்திலுள்ள மற்ற கோளங்களையும் வளரச் செய்து செயல் கொள்கின்றதோ…
1.அத்தொடர்பின் வளர்ச்சியில் முதிர்ந்த வித்து நிலை தான்
2.மனித உரு எண்ண உணர்வின் பகுத்தறிவின் வளர் ஞான நிலை…!

ஒவ்வொன்றின் சத்தில் முதிர்ந்த வித்தைக் கொண்டு தான் பிறிதொரு வளர்ப்பின் செயல் நடக்கின்றது.

அதைப் போன்று தான் சூரியனின் சமைப்பில் பலவற்றின் மூலம் கொண்டு உயர்ந்த வளர்ச்சியில்… முதிர்வின் வித்துத் தன்மையான… “இப்பூமியின் மனித கரு உருவிலிருந்து” வளர்ச்சியின் வளர் தன்மை வித்தைச் செயல்படுத்துகின்றனர் ரிஷி சக்திகள்.

“மாவிதை” வளர்ந்து மரமாகிப் பல இலைகள் பூக்கள் கனிகளாக வளரும் தருணத்தில் எல்லாப் பூக்களும் கனியாகிப் பலன் தருவதில்லை. பூவிலும் பிஞ்சிலும் உதிர்ந்து விடுகின்றது.

வித்தின் சத்தெடுத்துக் கனி பெறும் நிலை அம்மரத்தின் தருண நிலைக்கொப்ப முற்றிய தன்மை வளர்ப்பு தன்மையைக் காட்டிலும் குறைவாய்த்தான் உள்ளது.

அதைப் போன்று…
1.மனித உருக் கருவின் எண்ணத்தில் உணர்வு நிலை பெற்று வாழ்க்கைத் தொடரில் வாழ்ந்தாலும்
2.வாழ்க்கையின் முதிர்வான உயர் ஞானம் பெறும் ஆத்மாக்கள் குறைவாய்த்தான் செயல் கொள்கின்றன.

உண்மையின் வழித் தொடர் மாமரத்தின் பூவும் பிஞ்சும் அதிகமாய் வளர்ந்தாலும் அது எடுக்க வேண்டிய சத்து நிலை குறையும் பொழுது பூக்கள் உதிர்ந்து விடுகின்றன. பிஞ்சான நிலையில் கரடு தட்டி உதிர்ந்து விடுகின்றன. அப்பிஞ்சுகள் மீண்டும் வளர்ச்சி நிலைக்கு வருவதில்லை.

“முற்றிய கொட்டைகள்” கொண்ட கனிகள் தான் வளர்ச்சி நிலை பெறுகின்றன…!

அதைப் போன்றே இம் மனிதக் கரு உரு பிறப்பிற்கு வரும் நிலையும்… ஞானமுடன் கூடிய எண்ண உணர்வும்… செயல் அங்க அவயங்களின் அழகும் பொலிவும் பெற்ற நிலையில் வாழ… சூரியனின் வளர்ச்சியின் முற்றிய நிலையில் வித்தாய்ப் பெற்ற சக்தியில் வளரப் பெற்ற நிலை மனிதக் கரு உரு நிலை.

மனித ஜீவ எண்ணத்தின் உயர் ஞான ஒளியின் உயர் ஆத்மாவின் வளர்ச்சியைக் கொண்டுதான்…
1.சகலத்தையும் அறியவல்ல சித்துத் தன்மையின் ரிஷி சக்தியால்
2.எவ் ஈர்ப்பு வட்டத்திலும் வீரிய சக்தி பெற்ற இவ்வொளி ஆத்மா சிக்காமல்
3.வளர்ச்சியின் வித்தைப் பிறப்பு நிலை வளர்க்க வழி அமைக்கும் வித்தின் மனிதக் கரு உரு ஜீவ உடலுக்கு உண்டு.

ஆனால்… தான் பெற்ற “மகத்தான உண்மை” நிலை அறியாத மனிதன் தன் உணர்வின் எண்ணத்தை விஞ்ஞான செயற்கை மின் காந்த அலையில் அடகு வைத்த “குறுகிய நிலையில்” இன்று வாழுகின்றான்.

ஆத்ம ஜீவ உடலிலும் எடுக்கும் உணர்வின் எண்ணத்திற்கு ஒப்ப எவ்வலையின் உணர்வின் எண்ணம் செல்லுகின்றதோ அதற்குகந்த அணுக்கள் தான் உடலின் அமிலத்தில் வளர்க்கும் நிலைக்கொப்ப ஆத்ம வலு வலுக்கூடும்.

இன்று காற்றலையில் ஒலிப்பரப்பு ஆகியுள்ள மின் காந்த ஒளி அலையின் ஈர்ப்பில் மனித உணர்வு சிக்குண்டுள்ளது.

இக்காற்றலையில் மின்காந்த ஒலி பரப்பில் (வானொலி டி.வி. அலை) அவ் ஈர்ப்பின் வட்டத்தில் மனிதன் அதைக் கேட்டும் தொலைக்காட்சிகளில் பார்த்தும் அதே படத்தை இச்சரீரம் உணர்வின் படமாக எடுத்துணரும் வழித்தொடரிலேயே உள்ளான்.

அதாவது காற்றலையிலுள்ள இயற்கைச் சத்தெடுத்து வளரும் வலுவைக் காட்டிலும் மின்காந்த ஒலியலையில் கேட்டும் பார்த்தும் செயல் கொள்ளும் மனிதனின் உணர்வு அதே அலை உணர்வின் அணுக்களை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

1.ஆக… தன் ஆத்மாவின் வளர்ச்சிக்கு இயற்கையின் வித்தின் சத்தை உரமாக செலுத்துவதைக் காட்டிலும்
2.சமைக்கப்பட்ட வலுவிழந்த மின் காந்த உணர்வுடன் எண்ணத்தைச் செலுத்தி அளிக்கும் சத்தாகவே உள்ளது.

செடி கொடிகளுக்கு நீரை நாம் ஊற்றி வளர்த்தால் நீரின் சத்தில் அது வளர்ந்து பலன் தருகின்றது. அதே செடிக்குக் “காய வைத்து ஆறிய நீரை ஊற்றினால்…” செடிக்குகந்த சத்து பெற முடியாமல் செடியும் கருகி வளர்வதில்லை.

அதைப் போன்று உடலிலுள்ள இவ்வுடலை இயக்கும் உயிராத்மாவை மீண்டும் இதே நிலை கொண்ட பகுத்தறியும் ஞானக் கரு உரு மனித ஜீவ வளர்ச்சியை வளர்க்க முடியாத நிலை இன்றுள்ளது.

1.இயற்கையின் சத்து உரத்தை ஆத்ம வலுப் பெற்று வளரும் நிலையை
2.செற்கை மின் காந்த சமைப்பின் சத்தை நாம் செலுத்தி
3.கரடு தட்டிய பிஞ்சின் உதிரும் மாம்பிஞ்சுகளைப் போன்று
4.இஜ்ஜீவ சரீரத்தில் வலுப் பெறும் ஆத்மாவை வலுவற்ற நிலைக்கு
5.செயற்கை மின் காந்த ஈர்ப்பையே இஜ்ஜீவ காந்த சரீரத்தில் வளர்க்கும் செயல் இக்கலியின் கடைசியில் வளர்ந்தோங்கி விட்டது.

இத்தகைய விஞ்ஞானச் செயற்கைப் பிடியில் இருந்து ஒவ்வொரு மனிதனும் உயர வேண்டுமென்றால்… எண்ணத்தின் உணர்வைச் சஞ்சலத்திலும் செயற்கையின் ஆசைப் பிடியிலும் செயல்படுத்தாமல்…
1.அன்று மகரிஷிகள் நமக்கு காட்டிய உன்னத குண வழிகள் கொண்டு
2.நம் உணர்வின் எண்ணத்தால் நமக்குள் பெற்றுள்ள சூரியனின் வளர்ப்பின் வித்தை மீண்டும் மங்காமல்
3.சூரியனுக்கு மேல் உயர்ந்த ஜோதி நிலை பெறத்தக்க வழியை ஒவ்வொரு ஆத்மாவும் பெறலாம்.

June 19, 2023

“என் மனதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை…” என்று சொல்கிறோம்… காரணம் என்ன…?

யாராவது அதிகமாகத் திட்டிக் கொண்டே இருந்தால் அவர்களை என்ன… ஏது…? என்று பதிலுக்குக் கேட்டோம் என்றால் அந்த நிலைக்குத் தான் நாம் போகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உடனே ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டும். என் சொல் அவர்களுக்கு நல்லதாக இருக்க வேண்டும். நாளை அவர்கள் செய்வதெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.
1.அதற்கும் மீறி சிலர் விஷத்தன்மையாகப் பேசிக் கொண்டே இருப்பார்கள்
2.ஏனென்றால் அவர்கள் உடலில் ஆவிகள் இருக்கும்
3.காரணம்… ஒவ்வொருவர் உடலிலும் ஒவ்வொரு விதத்தில் ஆவிகள் புகுந்து தான் இருக்கின்றது.

மனிதப் பிறவிக்கு வருவது என்றாலே… மனிதனை ஒத்த நிலைகள் எந்த ஏக்கத்தில் ஏங்கி இருக்கின்றோமோ… அதற்குத் தகுந்த மாதிரி ஆத்மா உடலில் வந்துவிடும்.

வந்த பின் எனக்குள் என் குணத்தோடு ஒட்டியே இருக்கும். கெட்ட குணமாக இருந்தாலும் நல்ல குணமாக இருந்தாலும் அதைச் சேர்த்து ஓங்கி வளரும். இரண்டு நிலைகள் கொண்டு அதிலேயே நிரந்தரமாக நான் இருப்பேன்.

சந்தர்ப்பத்தில் நாம் தாழ்ந்து… விலகி அல்லது ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்றாலும் அது விடாது.
1.கோபத்தை நாம் அதிகமாக எண்ணுகின்றோம் என்றால் கோபமான ஆன்மா எனக்குள் வந்த பின்
2.அந்த இடத்தில் சமாதானமாகப் போக வேண்டும் என்றால் இது விடாது.
3.ஏனென்றால் அந்த எரிச்சலின் தன்மை அது கூட்டி இன்னும் கொஞ்சம் வளர்க்கத் தான் அந்த ஆன்மா பார்க்கும்.

அதற்குத் தான் ஆத்ம சுத்தி செய்யும் போதெல்லாம் மகரிஷியின் அருள் சக்தி எங்கள் உடலிலிருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என் உடலில் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணும்படி சொல்கிறோம்.

ஒரு ஐந்து நிமிடம் அவ்வாறு எண்ணினால் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்கள் புனிதம் பெறுகின்றது.

தாய் தந்தையரின் ஆன்மாக்கள் நம் உடலில் இருந்தாலும் கூட சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளி என் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணினால் அந்த ஆத்மாக்களுக்கும் சக்தி கிடைக்கின்றது தாய் தந்தையரின் ஆன்மாக்கள் அதுவும் புனிதம் பெறுகிறது.

நீ பேயாய்ப் போ என்று ரிஷி சாபமிடுவதாக்க் குட்டிக் கதையாகச் சொல்லி இருப்பார்கள். பேயாகப் போ என்று சாபமிட்டவுடன் “எனக்கு ஒரு விமோசனம் இல்லையா…?” என்று கேட்கின்றான்.
1.நீ நல்லவனைத் தீண்டுவாய் அவன் நிழல் படும்
2.அவன் நிழல் பட்டவுடன் நீ மீண்டும் மனிதனாகப் பிறப்பாய்..!
3.ரிஷி சொன்னார் என்று இப்படியும் நமக்குக் காட்டி இருக்கின்றார்கள்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று தியானம் செய்து கொண்டே இருந்தால் நம் உடலில் இருந்தே அவைகளும் புனிதம் பெறும்.

உதாரணமாக கிணற்றில் விழுந்து இறந்த ஆன்மாவாக இருந்தால் நம்மையும் கிணற்றுப் பக்கம் இழுத்துக் கொண்டு போகும். வீட்டை விட்டு ஓடிப் போன ஆன்மா வந்திருந்தால் நம்மையும் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று விடும்.

சண்டை போடக்கூடிய ஆவியாக இருந்திருந்தால் நம்மைச் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்படி செய்யும். அப்பொழுதுதான் அவைகளுக்கு ரசிப்பாக இருக்கும்.

வெறுப்பாவே பேசிப் பழகிய ஆன்மாவாக இருந்தால் யாரைப் பார்த்தாலும் எதை எடுத்தாலும் வெறுப்பாகவே பேசச் சொல்லும். இது போன்று எத்தனையோ ஆன்மாக்கள் இருக்கும்… `நமக்குத் தெரியாமலே…!
1.நாம் தான் அப்படிப் பேசுகிறோம் என்று நினைப்போம்...
2.ஆனால் நம்முடன் இணைந்து அந்த ஆன்மாக்கள் அது இயக்கப்படும் பொழுது நாம் பேசுவதாகவே நாம் எண்ணிக் கொள்வோம்.
3.இதை எல்லாம் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் ஆத்ம சுத்தி அவசியம் செய்தே ஆக வேண்டும்.

எங்கள் இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் அனைத்தும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று அடிக்கடி எண்ணினால்
1.அவர்களுக்கும் ஒரு பாவ விமர்சனம் கிடைத்து
2.நமக்கு ஒத்துழைக்கும் நிலையாக நல்லது செய்யக்கூடிய ஆன்மாக்களாக இயங்கும்
3.அதே சமயத்தில் நமக்குள் கெட்டது வராதபடி நாம் தடுக்கவும் முடிகின்றது.

ஞானிகள் காட்டிய வழியில் நாம் இவ்வாறு செய்து பழக வேண்டும்.

ஆனால் மந்திரவாதியிடமோ… மந்திரிப்போரிடமோ சென்று தாயத்தைக் கட்டினால் அவன் ஒரு போக்கிரி ஆவியை நமக்குள் திணித்து விடுவான். மூன்று மாதம் நன்றாக இருக்கும். நான்காவது மாதம் பார்த்தோம் என்றால் “இருடா நானும் பார்க்கிறேன்…!” என்று அதுவும் சேர்ந்து வலுவாக இயக்க ஆரம்பிக்கும்.

அதை மீண்டும் மாற்ற இப்படியே அவரிடம் செல்லச் செல்ல மூன்று ஆவி நாலு ஆவி ஐந்து ஆவி ஆறு ஆவி என்று வரிசையிலே ஒவ்வொரு குணத்திற்குத் தகுந்த மாதிரி அதைக் கட்டிக் கொண்டே வருவான்.

கடைசியிலே என்ன ஆகும்…?

தாயத்தைக் கட்டினாலும் கூட உடலிலே கை கால் குடைச்சல் நம்மை விடாது… மேல் வலியும் விடாது. ஏனென்றால்
1.இந்த உணர்வுகள் உள்ளே புகுந்த நிலையில்
2.ஒன்றுக்கொன்று ஏற்றுக் கொள்ளாதபடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கும்.
3.ஆனால் ஒன்றுக்கொன்று அடக்கும். மன நிலை வேண்டும் என்றால் ஒத்து இருக்கும்
4.உடலில் கை கால் குடைச்சல் நிச்சயம் இருக்கும்.

தாயத்தைக் கட்டிக் கொண்டு வருவோரெல்லாம் மீண்டும் மீண்டும் அதனுடைய வழிக்கே தான் இழுத்துச் செல்லும்.

ஆத்ம சுத்தி செய்து பழகினோம் என்றால் நம் ஆன்மாவும் புனிதம் ஆகின்றது நம் உடலில் இருக்கக்கூடிய ஆன்மாக்களும் புனிதம் பெறுகின்றது.

இதே போன்று கணவன் மனைவிக்குள்ளும் ஆன்மாக்கள் இருக்கும்.
1.அது இரண்டு பேரையும் சேர விடாது
2.பிரியமாக இருப்பார்கள் ஆனால் நெருங்க விடாதபடி இந்த உணர்ச்சியினுடைய நிலைகள் இயக்கி விலக்கி விட்டுக் கொண்டே இருக்கும்.
3.இதை நினைத்து இரண்டு பேருமே வேதனைப்படுவார்கள்.

இவ்வாறு இருந்தாலும் ஆத்ம சுத்தி செய்துவிட்டு மகரிஷிகளின் அருள் நாள் சக்தி என் கணவர் பெற வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி என் மனைவி பெற வேண்டும் என்று இருவருமே இப்படித் தூண்டி எங்கே சென்றாலும் இருவருமே இப்படி இந்த உயர்ந்த உணர்வுகளை சேர்த்துக் கொண்டே வர வேண்டும்.

மனைவி வீட்டில் இருந்தாலும் கணவனுக்கு மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்றும் கணவன் வெளியிலே வேலைக்குச் சென்று இருந்தாலும் அங்கிருந்து மனைவியை எண்ணி… என் மனைவிக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று இப்படி இருவருமே செய்து கொண்டே வர வேண்டும்.

எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் செயல் எல்லாம் அனைவரும் மகிழ்ந்திடும் சக்தியாக வர வேண்டும் எங்களைப் பார்ப்பவர்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று இப்படி இருவருமே எண்ண வேண்டும்.

1.இது “சாதாரண சொல்…” என்று நினைக்க வேண்டாம்
2.இருவரையுமே ஒன்றி வாழச் செய்ய மகிழ்ந்து வாழச் செய்ய இது பேருதவியாக அமையும்.

June 18, 2023

“நாம் நினைத்தது நடக்க வேண்டும்…” என்ற ஆசையில் தான் விரதம் இருக்கின்றோம்…!

48 நாள் விரதம் இருக்கின்றேன்… என்று வைத்துக் கொள்வோம். வயிறு சுண்டச் சுண்டப் பசியோடு இருக்கும் நேரத்தில் யாராவது கூடக் கொஞ்சம் பேசினால் “இந்த நேரத்தில் வந்து கழுத்தறுக்கின்றான் பார்…” என்று சங்கடம் வரும்.

வீட்டு வேலைக்கு என்று வந்தவர்கள் யாராவது… சிறிது பேசினாலும் அவர்கள் பேசப் பேச எரிச்சல் கூடிக் கொண்டே வரும். அப்போது எதை விரதம் இருக்கின்றோம்…?
1.கெட்டதை நினைக்கக் கூடாது என்பதற்குத் தான் ஞானிகள் விரதத்தைக் காட்டினார்கள்,
2.ஆனால் அப்படிச் செய்கின்றோமா…? இல்லை…!

என் சொல் சுவை மிக்கதாக இருக்க வேண்டும். என் பேச்செல்லாம் இனிமையாக வர வேண்டும்… எல்லோருக்கும் உதவி செய்யும் பண்புகளாக வர வேண்டும் இன்றைய தினம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

பிள்ளைகளோ மற்றவர்கள் கோபித்தாலும் எனக்குள் நல்ல பண்புகள் வர வேண்டும்… தெளிவான சொல்களை நான் சொல்ல வேண்டும்… என்று கேட்டதை நீக்கிவிட்டு நல்லது வரவேண்டும் என்று இப்படித்தான் விரதம் இருக்கச் சொன்னார்கள்.

அறுசுவையாகப் படைத்துவிட்டு இங்கே உணவை உட்கொள்ளாதபடி பட்டினியாக இருந்து நாம் என்ன செய்கின்றோம்…?

செய்து வைத்த பதார்த்தத்தைப் பையன் தொட்டு விட்டால் “நாசமாகப் போகிறவனே… சாமிக்கு வைத்த்தை ஏண்டா தொட்டாய்…?” என்று நாசமாகப் போகும் உணர்வு தான் அந்த நேரத்தில் வருகின்றது.

இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க நடக்க அன்று பூராமே ஒரே சோர்வாகத் தான் இருக்கும். விரதம் முடிந்ததும் சாப்பிடவும் முடியாது… நெஞ்சைக் கரிக்கும்.

உடல் சோர்வடையும் பொழுது நினைவுகள் எல்லாம் எப்படி வரும்…? சமைத்து முடித்து விட்டுச் சும்மா உட்காரலாம் என்று உட்கார்ந்தால் போதும்…!
1.அந்தப் பாவிப் பயல் அப்படிச் செய்தான்… இவன் இப்படிச் செய்கின்றான்
2.நாளை என்ன செய்வானோ…? என்ன ஆகின்றானோ…? என்று இது எல்லாவற்றையும் கவர்ந்து இழுத்துக் கொண்டு வரும்.

அப்பொழுது நம்முடைய விரதம் என்னாகின்றது…! எதை நாம் விரதமாக இருக்கின்றோம்…?
1.நல்லதைக் கெடுப்பதற்குத் தான் அன்று விரதம் இருக்கின்றோம்.
2.நல்லதை வளர்ப்பதற்கு நாம் விரதம் இருக்கின்றோமா…?

ஞானிகள் சொன்னதை நாம் தலைகீழாக மாற்றி வைத்திருக்கின்றோம். நல்லதை நாம் எண்ணி விரதம் இருக்கவில்லை…!

“சஷ்டி விரதம்” என்று சொல்கின்றார்கள். சஷ்டி என்றால் சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா - ஏழாவது அறிவு…! நமது ஆறாவது அறிவு நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்திருக்கும் நஞ்சை மலமாக மாற்றி விட்டு நல்ல உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

அது போல் அந்த ஏழு நாட்களிலும் கெட்டதையே நினைக்காதபடி எல்லோரும் மகிழ்ந்து வாழ வேண்டும் ஒன்று பட்டு வாழ வேண்டும் நல்லது நடக்க வேண்டும் என்று இந்த உணர்வை நாம் சமைத்தோம் என்றால் இது சஷ்டி விரதம்.

வியாபாரத்தில் என்னிடம் பொருள் வாங்கிச் செல்பவர்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்… அவர்களும் தொழில் வளம் பெற வேண்டும்… என் குழந்தைகள் எல்லாம் மகிழ்ந்து வாழ வேண்டும்… ஞானத்தில் வளர்ச்சி பெற வேண்டும்… மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும்… என்று
1.எங்கே பேசினாலும்… யாரிடம் எதைச் சொன்னாலும் இந்த உயர்ந்த மூச்சை எடுத்து அங்கே பரப்பி.
2.அதை நாம் கவர்ந்தால் அது நமக்குச் சொந்தமாகின்றது.

ஆனால் விரதம் அன்று பச்சைத் தண்ணீர் கூட அருந்துவதில்லை என்று மிளகைப் போட்டுத் தண்ணீரைக் குடித்துச் சோர்வடைந்திருப்பார்கள். உடலுக்குள் எந்த ஆக்கிரமிப்பு கொண்டு அது வேதனை ஊட்டியதோ அந்த உணர்வு அறியாமலே “விசுக்…விசுக்…” என்று இழுக்கும்.

மாம்பழத்தை ருசியாகச் சாப்பிட்டுப் பழகியிருப்போம். சந்தர்ப்பம் நாம் ஒரு இடத்திற்குச் செல்கின்றோம். மாம்பழத்தைப் பார்க்கின்றோம்… வாங்க முடியவில்லை என்றாலும் அதை எண்ணினாலே உமிழ் நீர் ஊறுகின்றது. நினைத்த உடனேயே உமிழ் நீர் ஊறும்.

அதே சமயத்தில் நமக்கு வேண்டிய ஒரு பொருளைத் தேடி ரோட்டிலே நடந்து செல்கிறோம். எங்கும் கிடைக்கவில்லை என்றால் எரிச்சல் ஆகின்றது. அந்த நினைவுகள் நமக்குள் உமிழ் நீர் ஊறாதபடி வறட்சியாகும்… நாக்கிலே…!
1.இது எல்லாம் நாம் சுவாசிப்பதிலே இருக்கின்றது
2.நாம் எதை நினைக்கின்றோமோ உடனே அது இழுத்துச் சுவாசத்திற்கு வரும்
3.சுற்றிப் போட்டவுடன் ஆட்டோமேட்டிக்காக… கம்ப்யூட்டர் இயக்குவது போன்று வேலை செய்யும்.

இன்று சூப்பர் கம்ப்யூட்டர் என்று வைத்திருக்கின்றார்கள்… அதை வைத்து இயந்திரத்தை இயக்குகின்றனர். அதிலே சிறிதளவு குறை ஏற்பட்டால் அது உடனே சரி செய்கின்றது அல்லது நிறுத்தி விடுகின்றது. மிகப் பெரிய இயந்திரத்தையும் அதை வைத்து இயக்குகின்றார்கள்.

விஞ்ஞான வளர்ச்சியில் மனிதனைப் போன்று இயங்கக்கூடிய இயந்திர மனிதனையும் உருவாக்கி விட்டார்கள்.

சிலிகன் என்ற நிலைகளில் பேசக்கூடிய பேச்சை நாடாக்களில் பதிவு செய்து அங்கே இயக்கப்படும் பொழுது அந்த இயந்திர மனிதன் அதை சீராக செயல்படுத்துகின்றது.

1.இனென்ன வேலை செய்ய வேண்டும்
2.இதை இப்படி நிறுத்த வேண்டும்
3.இதை இப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்
4.இந்த வேலைகளை இப்படிச் செய் என்றால்
5.அந்தந்த ஒலிக்குத் தகுந்த மாதிரி அழுத்தமாகி ஒலி அதிர்வுகளைக் கொடுத்து இயக்குகின்றார்கள்
6.அந்த பொம்மை (ROBO) செய்து வருகிறது.
7.பதிவின் மூலம் இடப்படும் ஆணைகளுக்கொப்ப அந்த உணர்வலைகள் கொண்டு மெக்கானிக்கலாக இயங்குகிறது.

அது போன்றுதான் மனிதர்களாக இருக்கக்கூடிய நாம் இயங்குகிறோம் என்றால் இயற்கையில் விளைவித்த நிலைகள் காற்றிலே எத்தனையோ அலைகள் உண்டு. நினைத்தால் போதும்… இயக்குகிறது… இயங்குகிறது.

ஏனென்றால் கோடிக்கணக்கான குணங்களை இழுத்து ஒவ்வொரு சரீரத்திலும் உணவுடன் எடுத்து வளர்ந்து அது எல்லாம் உணர்வின் இயக்கச் சக்தியாக இருக்கின்றோம்…!

இருந்தாலும் கெட்டதையே திரும்பத் திரும்ப நினைத்தோம் என்றால் கெட்டதைத் தான் செய்து தீர்வோம். ஏனென்றால் நமக்குள் பதிவு செய்து வைத்திருக்கின்றோம்.

கம்ப்யூட்டரில் நாடாக்களில் பதிவு செய்தது இயக்குவது போன்று இயக்கி விடுகின்றது. அதாவது கம்ப்யூட்டர் ஆணையிட்டு இயக்குவது போன்று தான்
1.எதை நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றோமோ அந்த வேலையைத்தான் செய்வோம்.
2.தவிர நாம் பார்த்து அதை எல்லாம் கட்டுப்படுத்தி விடுவேன்… நான் நிறுத்தி விடுவேன் என்று செயல்பட்டால் அது நடக்காது.

இயந்திர மனிதனைக் கண்டுபிடித்தவன் ஆணையிடும் உணர்வுகளில் சிறிது மாற்றமானால் போதும். அது அவனையே அடித்துக் கொன்றுவிடும். விஞ்ஞானிக்கும் இது தெரியும். மூச்சலைகள் தவறினால் அது இயக்கமாகி அவனை அடித்துக் கொன்று விடுகின்றது.

அது போன்று தான்… நாமும் நல்ல மனதோடு இருக்கின்றோம் பிடிக்காத சம்பவமோ பிடிக்காதவர்கள் வந்தாலோ அல்லது எதிர்பார்க்காதபடி ஏதாவது நடந்தால் உடனே என்ன செய்கிறோம்…?

1.மனைவி நாம் சொன்னபடி கேட்டிருக்காது..
2.என்ன வாழ்க்கை…? என்று வெறுப்பாகி அந்தக் கோபத்திலே… செல்லமாக வளர்த்த பிள்ளையாக இருந்தாலும் அடித்து நொறுக்கி விடுவோம்
2.ஒரு நல்ல உயர்ந்த பொருளாக வாங்கி வைத்திருந்தாலும் கூட கோபத்திலே நொறுக்கி விடுகின்றோம்.

இயந்திர மனிதனின் (ROBO) ஆணைகள் சிறிது மாறி விட்டால் அது எப்படின் அடித்து நொறுக்குகிறதோ… அந்த இயந்திர மனிதன் இயங்குவது போன்று நாமும் இயந்திரமாகத்தான் இருக்கின்றோம். மனிதனுடைய நிலைகள் (நல்ல சிந்தனைகள்) இருப்பதில்லை.

விஞ்ஞானி இதையெல்லாம் இன்று காட்டுகின்றான்… நிரூபிக்கின்றான். ஆனால் அன்றைக்கு மெய் ஞானி இதைத் தெளிவாக உணர்த்திச் சென்றான்.

வாழ்க்கையில் இருளான நிலைகள் வந்தால் அதை மாற்றிக் கொள்வதற்கு கோயிலைக் கட்டி வைத்தான்…!
1.நீ எடுத்துக் கொண்ட குணம் உனக்குள் இந்த வேலையைச் செய்கிறது.
2.ஆகவே நீ உயர்ந்த குணங்களை எடுத்துக் கொள்… இந்தத் தெய்வ குணங்களை வளர்த்துக் கொள்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்துக் கொள்
4.அது உன்னை நல்வழியில் நடத்தும்… தீமைகளை அகற்றும்…! என்று தெளிவாகக் காட்டினான்..

ஆனால் நாம் ஆலயத்திற்கு சென்று அவ்வாறு எண்ணுகின்றோமா…?

குறைகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் தான் அங்கே சொல்லி வேதனைகளை மட்டும் தான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஞானிகள் உருவாக்கிய ஆலயங்கள் எல்லாமே நம்மைப் புனிதப்படுத்தக்கூடிய இடங்கள். அதை நாம் புரிந்து நடக்க வேண்டும்.

குருநாதர் எனக்கு எப்படி இந்த உண்மைகளை உணர்த்தி… என்னைத் தெளிவுபடுத்தி எனக்கு இந்த உயர்ந்த உணர்வுகளை ஊட்டினாரோ… அதே வழியில் தான் உங்களையும் தெளிவுபடுத்தி உயர்ந்த சக்திகளைப் பெறும்படி செய்கின்றோம் (ஞானகுரு).

உடல் மொழி (BODY LANGUAGE) vs உணர்வு மொழி

காட்சி:
கத்தியைக் கையில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் கல்லில் வைத்துத் தீட்டுவதைப் போன்றும் காட்சி தெரிகின்றது.

விளக்கம்:
நாவிதன் (முடி எடுப்பவன்) தன் தொழிலில் செயலுக்கொப்பத் தன் உணர்வையே செயல்படுத்திச் செயல்படுகின்றான்.

முடியைச் சிராய்த்து எடுக்கும் பொழுது...
1.கத்தியின் ஒட்டியுள்ள முடியை தன் உள்ளங்கையிலேயே தீட்டி...
2.கழுத்தில் காதின் ஓரங்களிலும் உள்ள மடிப்பிற்கொப்ப
3.கூர்மையாய்த் தீட்டப்பட்ட கத்தியை மிகவும் சாதூர்யமான முறையில்
4.தன் உணர்வையே அதுவாகப் பக்குவப்படுத்திக் கொண்ட முறையினால்
5.தன் தொழிலின் செயலை உணர்வு கொண்ட பக்குவத்தில்
6.பிறரிடம் பேசிக் கொண்டோ... எண்ணங்களை வேறோட்டத்தில் ஓட்டிக் கொண்டோ...
7.உணர்வின் நிலைக்கொப்பத் தொழில் செய்கின்றான்.

உணர்வால் வடிக்கப் பெற்ற உணர்வின் செயல் கொண்ட சரீரத்தைப் பக்குவப்படுத்தத்தக்க பயம்... அச்சம்... நாணம்... என்ற இயக்க ஓட்ட வடிப்பின் எண்ண செயலைத்தான் சரீரங்கள் செயல் கொள்கிகின்றன.

எவ்வுணர்வின் சுவை கொண்டு சரீரப் பக்குவம் உருவானதோ... அவ்வுணர்வின் குணமும்... செயலும்... கொண்ட வாழ்க்கையில் நடைமுறை செல்கின்றது.

அவரவர் எடுக்கும் செயலுக்கொப்பத் தொழில் முறையில் மனிதன் “தன் உடலையே” தொழிலுக்குகந்த உணவாகப் பக்குவப்படுத்த முடிகின்றது. ஆக...
1.இப்பூமியின் பிடிப்பிற்கும்... வாழ்க்கையின் செயலுக்கும்...
2.தன் உணர்வின் எண்ணத்தை அடகு வைத்துள்ள இன்றைய மனிதன்
3.உயர் ஞானத்தைப் பெறத் “தன் எண்ணத்தின் உணர்வைப்” பக்குவப்படுத்திடல் வேண்டும்.