ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2016

வடக்கு வாசlலைத் திறப்பதன் முக்கியம் என்ன...?

வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் என்று காட்டுவார்கள். பரமபதம் என்று அன்றைய நாளில் பரமபதத்தையும் விளையாடிக் காட்டுகின்றார்கள்.

முதலில் தாயக் கட்டையை உருட்டுவோம். அதில் தேள், பன்றி, நாய், குதிரை, யானை இதைப் போன்று எல்லாம் காட்டப்பட்டிருக்கும். இதை எல்லாம் கடந்து வரிசையாகச் சென்ற பின் ஏணி வருகின்றது.

ஏணி மேல் ஏறிப் போகின்றது. அடுத்த கட்டங்கள் வரப்படும்போது பாம்பு வராத நிலைகளில் எல்லையைக் கடக்கின்றது.

ஒரு சிறு பாம்பு கடித்தால் அது மீண்டும் கீழே வந்து விடுகின்றது.

இதை மனிதன் தன்னைத்தான் உணர்ந்து நாம் எப்படி மனிதன் மனிதனாக உருவானோம்? மனிதனான பின் நாம் என்னவாக ஆக வேண்டும்? என்று சிந்திக்கும்படிச் செய்கின்றார்கள்.

இந்த உடலைப் விட்டுப் பிரிந்த பின் நாம் பிறவியில்லா நிலைகளை அடைவதுதான் “சொர்க்க வாசல் – பரமபதம்” என்றார்கள்.

சொர்க்க வாசல் என்பது எப்பொழுது? மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாம், அதிலிருந்து அந்தச் சொர்க்க வாசல் என்று சொர்க்கக் கதவைத் திறப்பார்கள்.

இப்பொழுது வழக்கத்தில் என்ன செய்கிறோம்? காலை நான்கு மணிக்கெல்லாம் கதவைத் திறந்தவுடனே கோவிலுக்குள் சென்று முந்திக் கொண்டு போகவேண்டும் என்று போவோம்.

“நான் சொர்க்கம் அடையப் போகிறேன்..,” என்ற நிலையில் பிறரைத் தள்ளிவிட்டுத் தான் சாமியைக் கும்பிடுவதற்குச் செல்வோம். அன்றைய தினம் விரதமும் இருப்போம்.

அப்பொழுது எதிலே சொர்க்கம் இருக்கிறது? தான் பெறவேண்டும் என்ற ஆசையில் தெய்வத்தை நாம் எண்ணினாலும் தன் அருகில் இருக்கக்கூடிய மனிதனைத் தள்ளுகின்றோம்.

அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ குணமோ மனிதனைப் பண்புடன் அரவணைத்து வாழும் நிலைக்குப் பெறவேண்டும் என்று தான் சிலையாகப் படைக்கப்பட்டது.

அந்தச் சிலையை ஒவ்வொருவரும் உற்றுப் பார்த்து விண்ணில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியை நுகர்ந்து தன் உடலுக்குள் சேர்த்து உடல் பெறும் உணர்வை மாற்றி அழியா ஒளிச் சரீரம் பெறுவதற்காகச் செய்தார்கள் அன்றைய மெய்ஞானிகள்.

வழக்கமாக எல்லோரும் நேர் வாசல் வழியாகப் போகும் நிலைகளிலிருந்து வடக்கு வாசலைத் திறக்கும்படிக் காட்டுகின்றார்கள். நாம் வடக்கில்தான் சொர்க்கம் அடைகின்றோம் என்பதனை இங்கே தெளிவாகக் காட்டுகின்றார்.

நம் பூமியின் வடக்குத் திசையில் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக எண்ணிலடங்காத ஒளியின் உயிராத்மாக்கள் சுழன்று கொண்டுள்ளது.

ஆகவே, சாதாரண மனிதனும் உடலை விட்டுப் பிரிந்தால் எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தான் அங்கே தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

June 28, 2016

கேதர்நாத் அனுபவம்

குருநாதர் சொன்ன முறைப்படி கேதார்நாத்திற்கு செல்லப்படும்போது அங்கு கடும் பனிப்பாறைகள். இதே போல அங்கே சென்று நான் கடந்து ஒரு இடத்தை விட்டு மாறிய பின் ஒரு மலை மாதிரித் தான் தெரிந்தது. இதைக் கடந்து அந்தப் பக்கம் போய் விட்டேன்.

அதைக் கடந்து போகும் வரையிலும் ஒன்றும் தெரியவில்லை. அந்தக் காலத்தில் என்றைக்கோ அரசர்கள் தன் பரிவாரத்துடன் போன பாதை போல இருக்கிறது. எல்லாம் பனிப்பாறைகள் மூடியபடி கிடக்கிறது.

தங்க ஆபரணங்கள் ஏராளமாகக் கிடக்கின்றது. குருநாதர் எந்த ஆசைக்கு வைத்தாரோ, ஏற்கனவே நிஜமாகவே இருந்ததோ, அல்லது என் கண்களால் பார்த்த பின் பணத்திற்கு ஆசைப்படுகிறேனா என்று பார்ப்பபதற்கா வைத்தாரோ எப்படி வைத்தார்? என்று எனக்குத் தெரியாது.

பார்த்தவுடனே அப்பொழுது அந்த உண்மையின் உணர்வை அறிகின்றேன். அறிந்து கொண்டபின் என்ன செய்கின்றேன்?

ஏதாவது கொஞ்சம் எடுத்து சாம்பிளுக்குக் கொண்டு போக வேண்டுமென்றாலும் பயம். இதற்கு ஆசைப்படுகிறான் என்று குரு என்னை எதாவது செய்துவிட்டார் என்றால் என்ன செய்வது?

ஒரே ஒரு வேஷ்டியைத்தான்  கட்டியிருக்கின்றேன். போர்த்திக் கொள்வதற்குக் கூட ஒன்றும் இல்லை. குருநாதர் சொன்ன உணர்வை எடுத்துக் கொண்டால் குளிர் என்னைத் தாக்காதபடி பாதுகாத்து கொள்ளலாம்.

இருந்தாலும் அவர் சொன்ன முறைப்படி நான் செய்யப்போகும்போது இதையும் கடந்து பார்த்துவிட்டுச் செல்லுகின்றேன். இதைக் கடந்து அடுத்த பக்கம் போகலாம் என்று குருநாதர் சொன்னார். சுடு தண்ணீர் இருக்கின்றது. அங்கே நீ போய்ப் பார் என்கின்றார்.

அங்கு போவதற்கு முன்னாடி என்ன ஆகிவிட்டது, நான் நடந்து வந்த பாதையில் உள்ள பனிப் பாறைகள் “திடு.., திடு.., திடும்..,” என்று எல்லாம் இடிந்து விழுந்தது.

ஆக, வேறு பாதை எனக்குத் தெரிந்தால் தானே நான் திரும்பிப் போக முடியும். அப்பொழுது பாறைகள் இடிந்து விழுந்தவுடன் அப்பொழுது தான் எனக்குச் சந்தேகம் வருகின்றது.

“ஐய்யோ..,” பிள்ளைக் குட்டிகள் எல்லாம் என்ன ஆவது? நாம் இதற்குள் போய்விட்டால் என்ன ஆகியிருப்போம் என்று நினைத்தேன். அவ்வளவுதான்.

அதை நான் நினைத்தவுடன் குருநாதர் சொன்னதை விட்டு இந்த உடல் ஆசை வந்துவிட்டது. அப்பொழுது என் பையன் என்ன செய்வான்? பெண்டு பிள்ளைகள் என்ன செய்யும்? என்ற உணர்வை எடுத்தவுடனே என்ன ஆனது?

உடனே இருதயம் “கிர்..ர்ர்ர்ர்..,” என்று இரைய ஆரம்பித்துவிட்டது. அந்தக் குளிர் என்னை வாட்ட ஆரம்பித்து என் இருதயமே இரைகிறது. இன்னும் கொஞ்ச நேரத்தில் என் உயிரே போய்விடும் போல இருக்கின்றது.

ஆனால் இதைத்தான் நான் பார்க்க முடிகின்றது அதை எண்ண்ணினேன். ஆனால் இதை மாற்றும் எண்ணம் கூட வரவில்லை. “இறந்துவிடுவோமோ...,” என்ற உணர்வு தான் வருகின்றது.

அப்பொழுது தான் அந்த இடத்தில் குருநாதர் மீண்டும் காட்சி கொடுக்கின்றார்.
“மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போலே மறைவதை பாராய்..,”

ஏனென்றால், அங்கே தங்கம் மற்ற ஆபரணங்கள் எல்லாம் இருந்தது. ஆனால், உயிரை விட்டுப் போனபின் என்ன இருக்கின்றது? சுகமாக வாழ வேண்டும் என்று எண்ணினார்கள் (பனிப் பாறையில் உறைந்த அரச பரிவாரங்கள்) அதெல்லாம் இல்லையே.

பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ,
மின்னலைப் போலே மறைவதைப் பாராய்,
இப்பொழுது இன்னும் கொஞ்ச நேரத்தில் மாளப்போகிறாய், மறைந்து விடப் போகிறாய். நீ யாரை காக்கப் போகின்றாய்? என்று கேட்கிறார் குருநாதர்.

நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ?
நிலையில்லா இவ்வுலகம் இந்த உடலான உலகம் உனக்குச் சதமா?
என்று வினாக்களை நாதத்தை எழுப்புகிறார்.

இவைகள் எல்லாம் அனுபவ ரீதியிலே மனிதனின் ஆசை வரப்போகும் போது நாம் போகும் பாதைகள் எத்தனை?

இந்த மனித வாழ்க்கையில் வரப்போகும்போது எத்தனையோ பேர் இந்தச் சாமியாருக்கென்ன? இவர் (என்னை) கொள்ளை அடிக்கிறார் என்று சொல்கின்றனர்.

மந்திர தந்திரங்களைச் செய்யும் சாமியார்கள் மாதிரி எத்தனையோ பேர் என்னைப் பற்றிப் பேசுகின்றனர், ஏசுகின்றனர். எத்தனையோ தொல்லைகளும் கொடுக்கின்றனர்.

அதையெல்லாம் நான் காதில் வாங்கிக் கொள்வதில்லை.

அப்பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும், அவர்கள் உண்மையின் உணர்வை அறியக்கூடிய தன்மை வர வேண்டும் என்று தான் சொல்லுகின்றேன்.

ஆனால், அவர் உணர்வை எனக்குள் விட்டால் எனக்குள் இப்படி ஒரு விரலை நீட்டினாலே அவனைத் தூக்கி எறியக் கூடிய சக்தி உண்டு.  இருந்தாலும் அதை நாம் பயன்படுத்தினால், நாம் உண்மையின் இயக்கத்தைக் காண முடியாது.

இந்த உணர்வின் தன்மை கொண்டு அவனின் விஷத்தின் தன்மையை அடக்க முடியும். ஆனால், அதே வெறியின் தன்மை எனக்குள் உருவாகும்.

இது இரண்டையும் சந்தர்ப்பத்தால் உருவாக்கப்பட்டு நீ எப்படி வாழ வேண்டும்? இந்த மனிதனின் உடலுக்குப் பின் மீண்டும் வீரிய சக்தி எது? இவையெல்லாம் உன்னைத் தாக்கிடாது உன்னைப் பாதுகாக்கும் உணர்வு எங்கே இருக்கின்றது? என்ற கேள்விகளை எழுப்புகின்றார் குருநாதர்.

ஆகவே, அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெறப் படும்போது உன்னைப் பாதுகாக்கும் சக்திகளையெல்லாம் நீ பெற முடியும். தீமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு அருள் உணர்வை உனக்குள் பெருக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே உனது கடைசி நிலை.

இவ்வளவு சக்தியையும் நீ இதற்குத்தான் பயன்படுத்த வேண்டும். உனக்குள் வலுவான சக்தி கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவான உணர்வைப் பெற்று தீமை என்ற நிலைகளை நீக்கி தூக்கி எறிய வேண்டும்.

ஒருவன் எனக்கு எதிரியாக இருக்கின்றான் என்று உணர்வைப் பாய்ச்சி அவனைத் தூக்கி எறிந்து அவனைத் துன்புறுத்தும் நிலை வந்தால் அதே உணர்வு உனக்குள் நல்ல அணுக்களைத் தூக்கி எறிந்து விடும் துன்புறுத்தும் உணர்வே உனக்குள் விளையும்.

சக்திகள் எதுவாக இருந்தாலும் நுகர்ந்த உணர்வு உடலுக்குள் நின்று இயக்கப்படும்போது அது உன் உடலையேதான் இயக்கும். ஆகவே இதை நீ எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத்தான் அனுபவப் பூர்வமாக குருநாதர் கொடுத்தார்.

இப்பொழுது நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? உட்கார்ந்து கேட்கின்றீர்கள். லேசாக அனுபவத்தைச் சொல்கின்றோம். “என்னமோ.., சாமி சொல்கின்றார் நம்மால் முடியுமா..,?” என்று நினைக்கின்றீர்கள்.

June 23, 2016

விண் செல்லும் மார்க்கத்தை உங்களுக்கு மிகவும் எளிதில் கிடைக்கும்படிச் செய்கிறேன், விட்டுவிடாதீர்கள்

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் எப்படி விண் செலுத்த வேண்டும்?

 அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் ஒரு 48 நாட்களுக்கு காலையில் 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணி தியானிக்க வேண்டும்.

தியானித்துவிட்டு உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அங்கே அந்தச் சப்தரிஷி மண்டலத்தில் செலுத்தி உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பெரு வீடு பெரு நிலை அடைய வேண்டும் என்று உந்தித் தள்ளுதல் வேண்டும்.

அவ்வாறு அனைவரும் ஏகோபித்த நிலையில் தியானித்து உந்தித் தள்ளினால் அவர்கள் ஒளியின் சரீரம் பெறுகின்றார்கள். பின், அவர்கள் ஒளியான உணர்வுகள் அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் அனைவரும் அந்தச் சப்தரிஷி மண்டலத்திலிருந்து எளிதில் பெற ஏதுவாகின்றது.

உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் எடுத்துக் கொண்ட சங்கடம் சலிப்பு வெறுப்பு வேதனை என்ற உணர்வுகள் நம் உடலில் இருந்தாலும் சப்தரிஷி மண்டலத்திலிருந்து வரும் உணர்வை எளிதில் நுகர்ந்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த உதவும்.

ஆகவே, அந்த உணர்வின் வலுவை நாம் பெற்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைய முடியும். ஏனென்றால் மனிதனின் கடைசி எல்லை.

தேடிய செல்வமும் சொத்தும் எவ்வளவு தான் சேர்த்து வைத்திருந்தாலும் இந்த உடலை விட்டுப் பிரிந்தபின் என்ன கொண்டு போகப் போகிறோம்?

எப்பொழுதுமே உயிருடன் ஒன்றி அந்த அருள் உணர்வைப் பெற்றோம் என்றால் நாம் அங்கே சப்தரிஷி மண்டலம் சென்றடைகின்றோம்.

அதைப் பெறுவதற்காகத்தான் ஞானிகள் அத்தனை வேலையும் செய்தார்கள். உங்களுக்குச் சுலபமாகக் கிடைக்கின்றது என்று விட்டுவிடாதீர்கள்.

ஏனென்றால், மிகவும் கடினமாக்கிக் கொடுத்திருந்தார்கள். நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி மிகவும் எளிதில் கிடைக்கும்படிச் செய்கின்றேன்.

அந்த ஞானிகள் காட்டிய அந்த அகஸ்தியன் வழியில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இதைப் பின் தொடர்ந்தால் இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீங்கள் அகற்றலாம்.

இந்த வாழ்க்கையில் தெளிந்த மனதுடன் வாழலாம். இந்த உடலுக்குப் பின் அனைவரும் பிறவியில்லா நிலை அடையலாம். எமது அருளாசிகள்.

June 22, 2016

மணத்தால் நுகர்ந்தறியும் உயிரினங்களின் இயக்கத்தை அனுபவபூர்வமாகக் காட்டினார் குருநாதர்

புலனறிவைப் (ஐம்புலன்கள்) பற்றி நன்கு அறிந்து கொண்டவர்கள் கடந்த கால நம் மூதாதையர்கள் என்று சொல்லலாம். அவர்கள் மனிதனானபின் இதையெல்லாம் தெளிவாக்கி இருக்கின்றார்கள்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் என்ன செய்கிறார்கள்?

தன்னைக் பாதுகாத்து கொள்வதற்காகப் பல தாவர இனங்களின் அறிவைத் தெரிந்து கொண்டு தன் அருகிலே அத்தகைய தாவரங்களைப் போட்டுக் கொள்கின்றனர்.

மணத்தால் நுகர்ந்துதான் மற்ற உயிரினங்கள் இரைக்குத் தேடிச் செல்கின்றது. அப்பொழுது இவர்கள் உறங்கும் போது நுகர்ந்து வந்தால் அப்புறம் அந்த உயிரினங்கள் என்ன செய்ய முடியும்? விலகிச் சென்றுவிடுகிறது.

நான் ஒரு சமயம் ஒரு இடத்தில் படுத்திருந்தேன். நான் அலுங்காமல் படுத்திருந்தேன், நல்ல பாம்பு அங்கே வந்து படுத்திருக்கின்றது.

நான் ஒரு பக்கமாகத் திரும்பிப் படுத்தேன். “நெளு நெளு” என்று இருந்தது. “என்னடா.., இது.., நெளு நெளு என்று இருக்கிறது?” தலையணை தான் போலிருக்கிறது என்று மறுபடியும் என்ன செய்தேன்?

இந்தத் தலையணையை எடுத்து அது மேல் போட்டுக் கொண்டு  மறுபடியும் படுத்துக் கொண்டேன். அடுத்து, “ஜிலு.., ஜிலு...,” என்று மறுபடியும் அதை நகர்த்திக் கொண்டு மறுபடியும் வருகின்றது.

பாம்பு தன் உடலில் வெப்பத்திற்காக வேண்டி இதைப் பண்ணுகின்றது.

அப்புறம் பார்த்தால் நெளு நெளு என்கிறது. “என்னடா இது.., மறுபடியும் நெளு நெளு என்று இருக்கின்றது” என்று நினைத்துக் கொண்டு எழுந்து விளைக்கைப் போட்டுப் பார்த்தால் – நல்ல பாம்பு.

அப்புறம் என்ன செய்வது? அலறிவிட்டேன். அவ்வளவு தூரம் பாம்பு அது வந்தாலும் கூட என்னால் தெரிய முடியவில்லை.

“சடார்...,” என்று வேகமாக நான் எழுந்தவுடன் என்ன செய்கிறது?

நம்மை அடித்துவிடுவான் என்று “சுர் ர் ர்..,” என்று என்னைப் பார்த்துச் சீறுகிறது. “எப்படியோ போ.., சாமி” என்று சொல்லி விட்டுவிட்டேன்.

இந்த மாதிரி நேரத்தில் இதையெல்லாம் சொல்லி உதாரணமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

வெள்ளைப்பூண்டு வேண்டும் என்றார் குருநாதர். அந்த நேரம் வெள்ளைப் பூண்டிற்கு எங்கே போவது? அப்புறம் அடுத்த வீட்டில் போய் வாங்கி வந்தேன்.

இது அகமதாபாத்தில் நடந்த சம்பவம்.

அதை நசுக்கி இரண்டு மூலையில் போட்டவுடன் அதன் வாசனையைக் கண்டு அது குட் பை (Good Bye) போட்டு நகர்ந்து ஓடிவிட்டது. நான் அதைக் கொல்லவில்லை. 

குருநாதர் சொல்லி இருக்கிறார் வெள்ளைப்ப்பூண்டை நசுக்கிப் போட்டால் அதன் மணத்தை நுகர்ந்து அந்தப் பாம்பு ஓடிவிடும். பாம்பை நீ அடித்தால் அது மனிதன் ஆகிவிடும். பாம்பு உன்னைக் கடித்தால் நீ அதுவாகி விடுவாய்.

இந்த மாதிரி ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நம் குருநாதர் இதையெல்லாம் தெளிவாகக் காட்டியுள்ளார். 

June 21, 2016

பயம் அதிர்ச்சி போன்றவைகளினால் மனம் அமைதி இழக்கின்றது - தப்பிக்கும் வழி

இரண்டு பேர் கடுமையாகச் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதை நம்மிடம் வந்து சொல்கிறார்கள்.

அதைப் பார்த்துவிட்டு அப்புறம் “ஐய்யய்யோ...,” என்று அலறுகின்றோம்.

அவர்கள் சொன்னவுடனே அந்த உணர்வு பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் தான் வருகின்றது. “சரி நடக்கின்றது..., நாம் ஏன் அங்கு போக வேண்டும்..,?” என்று எண்ணுகின்றோமா என்றால் இல்லை.

ரோட்டில் போகிறோம். ரோட்டில் போய்கொண்டிருக்கும் போது ஒரு விபத்து நடக்கின்றது. அடிபட்டுக் கீழே விழுந்துவிடுகின்றான். விழுந்து அங்கே நசுங்கிக் கிடக்கின்றது. உடனே கூட்டம் கூடிவிடுகின்றது.

“என்ன கூட்டம்.., எதனால்?” என்று கேட்டவுடன் ஆக்சிடென்ட் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

சரி என்ன என்று தான் பார்த்துவிடுவோம் என்று அதை உற்று நோக்கிப் பய உணர்வோடு இதைப் பார்ப்பார்கள்.

அவன் எப்படி நசுங்கியிருந்தாலும் அந்த உணர்வுகள் இங்கே வந்து விடுகின்றது. இரவிலே என்ன ஆகின்றது?

கனவிலே காட்சிகள், வண்டியில் போகின்ற மாதிரி இருக்கின்றது, நசுக்குகின்ற மாதிரித் தெரிகிறது. அதனால் என்னால் சரியாகச் சாப்பிட முடியவில்லை, மற்ற வேலைகளைச் செய்ய முடியவில்லை என்பார்கள்.

எல்லாமே தெரிகின்றது. விபத்தைப் போய்ப் பார்த்தபின் குறைந்தது 4 நாட்களுக்கு இப்படித் தான் இருக்கின்றது. இப்படி அதே உணர்வுகள் அதிகமானபின் அந்த பயத்தினாலே மனிதன் தன் சிந்தனையை இழந்துவிடுவான்.

ஏனென்றால், புலனறிவால் நாம் அறிந்தாலும் கூட நமக்குள் பலவீனமான நிலைகள் இருக்கின்றது. அதை அறியப்படும்போது அதன் உணர்வை நுகர்ந்தால் நமக்குத் தீமை என்று நினைத்தாலும் அதை நாம் விடுவதில்லை. அதை நுகர்ந்து பார்க்கின்றோம்.

இப்படி நம்மை அறியாமலேயே இந்த உணர்வுகள் அதை நுகர்ந்து பார்க்க வேண்டும் என்று இயக்குகின்றது. ஆக, தெரிந்து கொள்ளக்கூடிய விருப்பம் தான் வருகின்றது.

அது தெரிந்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்ற பின் தான் தெரிய வருகின்றது.

அவன் பயத்தால் எப்படித் துடித்தானோ நுகர்ந்த உணர்வுகள் பய உணர்ச்சிகளை நம் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களுக்குள் சேர்ந்து விடுகின்றது.

அவன் எப்படிப் பதட்டம் அடைந்தானோ அது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுக்குள் இதைக் கண்டபின் உணர்ச்சியால் வெப்பம் ஆகின்றது.

அதே மாதிரி அந்தப் பய அலைகள் வந்தால் என்ன செய்யும்?

ஒன்றுமே செய்யாமல் சும்மா ஒருவன் படுத்திருந்தால் கூட பார்த்தால் பயம் வருகின்றது. அவன் செத்துப் போய்விட்டானா? என்று பயந்த அதே உணர்வுகள் நம்மை இயக்குகின்றது.

அதே சமயத்தில் வீட்டிற்குள்ளே இருந்தாலும் கூட ஒன்றை நாம் பார்த்தவுடனே அந்த நினைவு வரும். “ஓ..,” அங்கே பார்த்த நிலைகள் இங்கேதான் இருக்கின்றது என்று வீட்டில் படுத்திருந்தால் கூட இந்த நினைவு வருகிறது.

அப்போது இதில் எது அறிகிறது? நம் உடலில் எதைப் பதிவு செய்தோமோ இந்தப் புலனறிவுதான் நம்மை இப்படிச் செய்கின்றது. தெளிவாகச் செய்யும் நம் செயலாக்கங்கள் அனைத்தும் பலவீனமடைகின்றது.

இதைப் போன்ற நிலைகளை மாற்றியமைக்க நாம் என்ன செய்யவேண்டும்?

விபத்துக்களையோ மற்ற எதிர்பாராத சம்பவங்களையோ பார்க்க நேர்ந்தால், கேட்க நேர்ந்தால் உடனே நம் கண்ணின் நினைவினை “ஓம் ஈஸ்வரா” என்று நம் உயிரின் பால் செலுத்த வேண்டும்.

பின் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா, அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று வானை நோக்கி ஏங்கித் தியானித்து அந்தச் சக்திகளை உடலுக்குள் இணைக்கச் செய்ய வேண்டும்.

பின், அடிபட்டவர்கள் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்  அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற உணர்வினைப் பாய்ச்சுதல் வேண்டும்.

இவ்வாறு செய்தால் நமக்குள் புகும் அதிர்ச்சியான உணர்வுகளை துருவ மகரிஷிகளின் உணர்வலைகள் அடக்கிவிடும். மன பலம் கிடைக்கும். 

June 15, 2016

“புலஸ்தியர் வம்சம்” - “இக்ஷ்வாகு வம்சம்”

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன். “புலஸ்தியர் வம்சத்தில்” வந்தவன் தான் அகஸ்தியன். அணுவின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தவன் அவன். எதன் உணர்வோ அதன்படி எண்ணங்கள் எப்படித் தோன்றியது என்று உணர்த்தியவன் அகஸ்தியன்.

அதாவது பத்தாவது நிலை அடைந்தது. ஒரு உணர்வின் தன்மை வந்தது “இக்ஷ்வாகு வம்சம்”.  எது..,?

இந்த உடல் பெற்ற பின் நாம் எதை இச்சைப்படுகின்றோமொ அந்த வம்சத்தில் வந்தவன் தான் அரசன். இந்த நாட்டைப் பிடிக்க வேண்டும் அந்த நாட்டைப் பிடிக்க வேண்டும். என்று இச்சைப்படக் கூடிய நிலைகள் வருகின்றது.

ஆக, தசரதச் சக்கரவர்த்தி. இந்த உடலின் இச்சைகொண்டு வரும்போது இக்ஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்தவன், பிரியப்பட்டான்.

ஆனால், அந்த அகஸ்தியனுடைய மூதாதையர்கள் யார்? புலஸ்தியர்கள். புலனை அறிந்தார்கள்.

அந்த உணர்வின் புலனை அறிந்து அந்த மணத்தால் எடுக்கப் போகும் போது அணுவின் இயக்கத்தை அறியும் தன்மை புலஸ்தியர் வம்சத்தில் தோன்றிய அந்த அகஸ்தியனுக்கு வந்தது.

இக்ஷ்வாகு வம்சத்தில் வந்தது தசரதச் சக்கரவர்த்தி. அவன் இந்த நாட்டை காக்க நல்லவன் (இராமன்) வர வேண்டும் என்று இந்த நிலைகள் வந்து இச்சைப்பட்டான்.

இந்த உணர்வின் தன்மையை வளர்க்கப்படும்போது அந்த இச்சையின் அளவுகள் கூட்டமைப்பில் எப்படி நடக்கின்றது என்பதனை இராமாயணத்தில் தெளிவாகக் கொடுக்கின்றனர்.

இக்ஷ்வாகு வம்சம் - நாம் எல்லாம் ஆசைப்பட்டு அந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் பத்தாவது நிலை அடையக் கூடியது. எதில் இச்சைப்படுகின்றோமோ அதன் வழியே நாம் செல்லுகின்றோம்.

ஒரு நாட்டை இச்சைப்பட்டால் அதை அடைய வேண்டும் என்றால்  அந்தச் சக்தியின் தன்மை வரும்போது அவனுடைய மகன் இங்கே மற்றவரோடு வரும் போது பரதனாகின்றான். இருந்தாலும் சகோதரப் பற்று வருகின்றது.

இச்சைப்பட்ட கைகேயின் உணர்வுகள் என்ன செய்கின்றது, ஆக தீமையை மாற்றி நல்லது செய்ய விடாது அவன் வாயை அடைக்கின்றது. அந்த உணர்வு ஆன பின் உடலில் நோயாகி மடிகின்றது. எதை இச்சைப்பட்டானோ அந்த வம்சத்தில் இவன் (தசரதன்) மடிகின்றான்.

ஆகவே, இதே உணர்வு நமக்குள் எடுக்கப்படும்போது நாம் கோபப்பட்டோ வெறுப்புப்பட்டோ இருந்தால் அது தசப்பிரியன் (இராவணன்) என்ற நிலை வரப்போகும் போது சந்தோஷம் என்ற நிலைகளில் இயக்குகின்றோமா? இல்லை.

கோபமாக இருப்பவனிடம் போய் சந்தோசம் என்று சொன்னால் என்ன செய்வான்? சீதாவை (அந்தச் சந்தோசத்தை) இயக்குகின்றானா? இல்லை. ஆகவே அவன் சீதாவைச் சிறைப்பிடித்தான். இவ்வளவு அழகாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் இராமயாணத்தை தலை கீழாக மாற்றி நாம் என்ன செய்கின்றோம்? சீதா காட்டிற்குப் போய்விட்டாள். பல அல்லல்பட்டாள். இதில் அழுகின்றவர்கள் இருக்கின்றார்கள்.

ஒரு சமயம் சீதாவைப் பற்றிய கதை பற்றி இராமாயணத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் போது அந்தக் கதை வரவில்லை என்று சொன்னவுடனே டி.வி. பெட்டியையே தூக்கி உடைத்துள்ளார்கள். அவ்வளவு பக்தி.

ஞானிகள் உருவாக்கிய காவியப் படைப்புகள் சாதாரணமானவை அல்லை. நம் குரு காட்டிய அருள் உணர்வு கொண்டு அந்தக் காவியங்களைப் படித்துப் பாருங்கள். அதன் மூலக் கூறுகளை அறிந்துகொள்ள முடியும்.

அதன் துணை கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை எளிதில் போக்க முடியும். உடலுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

பணம் சம்பாதிக்க மட்டும் தான் சினிமா, டி.வி. எடுக்கிறார்கள் - மக்களை நல்வழிப்படுத்தும் ஞானிகள் காட்டிய நிலைகள் இல்லை

டி.வி.யில் காட்டிய இராமாயணத்தில் சீதாவாக நடித்த அந்தப் பெண் வெளியில் வந்தது என்று சொன்னால் “சீதா வந்துவிட்டாள்..,” கண்டவுடனே அந்த வரவேற்பு வருகின்றது.

இப்படிச் டி.வி./சினிமாவில் நடித்துப் பெயரானவுடனே என்ன நடக்கின்றது. அவர்களையே கடவுளாக்கிப் பின்னாடி போகின்றார்கள்.

சினிமாவைப் பார்த்தேன், சாதாரண மனிதனைக் கடவுளாக்கி இன்று போய் கொண்டிருக்கும் நிலைகள் தான். சினிமாக் கதை வசனத்தை எழுதி ஆகா..., இந்தக் கதை எழுதியதால் நன்றாகப் படம் ஓடியது என்று போக வேண்டியதுதான்.

எல்லோரையும் நாம் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து அவர் பெரிய கடவுள் என்று நான் போய்விட்டேன். இப்படித்தான் நமது கதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றதே தவிர நாம் எங்கே செல்கின்றோம்? எப்படி இருக்கின்றோம்? எதன் வழியில் நாம் இருக்கின்றோம்? என்ற நிலையை நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

ஆக, மனிதனுக்காக வேண்டி எடுக்கும் பொழுது காசுக்காக வேண்டிக் கதைகளை எழுதுகின்றான். கதைகளைத் திரிபு செய்கின்றான். அப்பொழுது அதிலே காட்டப்படும் நிலைகள் அதனதற்குத் தக்கவாறு நமக்குள் எண்ணங்கள் வருகின்றது.

அடிக்கடி சண்டை போட்டு கலாட்டா செய்பவனுக்கு, சினிமாவில் சண்டை போடும் காட்சி வந்தது என்றால், “அடுத்து..., எப்படிடா சண்டை போடுவது?” என்ற உணர்வுகளைத் தூண்டுகிறது.

நாம் சாந்தமும் ஞானத்தோடு அங்கு போனால் அந்தச் சண்டை போடும் காட்சியைப் பார்த்தவுடன் “என்ன படம்.., இது.., ஒரே கலாட்டாவாக இருக்கின்றது? என்று உணர்வுகளைத் தூண்டுகிறது.

ஆகவே, உணர்வுக்கொப்பத் தான் அந்த இயக்கம் ஆகின்றது.

இப்பொழுது சினிமாவில் நடக்கக்கூடிய கதைகள் எல்லாம் எப்படி இருக்கின்றது?

காசுக்காக வேண்டி..., எப்படிக் குற்றவாளியாக்க வேண்டும்? எப்படித் திருட வேண்டும்? எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டும்? எப்படியெல்லாம் பிழைக்க வேண்டும்? என்ற நிலைகளைத் தான் காட்டுகின்றார்கள்.

சினிமாவில் இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தூண்டும்போது அது வழி வந்து அது தான் நடைமுறையில் இன்று நடக்கின்றது. பார்க்கலாம் நீங்கள்.

மோட்டார் சைக்கிளில் போகும் போது திருடுகின்றான். போய்க் கொண்டிருக்கும் போது எப்படித் திருட வேண்டும் என்பதைச் சினிமாவில் காட்டுகின்றான். பார்த்தவுடன் நிஜ வாழ்க்கையில் மோட்டார் சைக்கிளில் போகும்போது செயினை அறுத்துவிட்டு ஓடிப் போகின்றான்.

மனிதன் திருந்தி வாழ்வதற்கும் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதைச் சினிமாவில் காட்டி இருந்தால் பரவாயில்லை.

இன்றைய சினிமா உலகில் என்ன நடக்கின்றது?

அவன் காசு சம்பாதிக்க வேண்டும். “யார் கெட்டுப் போனால் எனக்கு என்ன..,?” என்ற அந்த நிலையில் தான் இன்று சினிமாவினுடைய நிலைகள் நடக்கின்றது. நாடகங்கள் எடுத்தாலும் கூத்தாடி நாடகமாகப் போய்விட்டது.

அன்று ஞானிகள் காட்டியது “மனிதன் திருந்தி எப்படி வர வேண்டும்?” என்று அது தெளிவாகக் காட்டப்பட்டது.

இராமாயணத்தைப் பற்றிப் பட்டிமன்றம் வைத்து இராமனைப் பற்றியும் தசரதனைப் பற்றியும் கேவலமாகப் பேசுபவர்கள் இருக்கின்றார்கள்.

இராமனுக்கு எப்படி வந்தது சக்தி? குகனுக்குத்தான் இந்தச் சக்தி உண்டு அவன் தான் இராமனைக் காப்பாற்றினான். படித்த வர்க்கங்கள், இப்படி வியாக்கியானப்படுத்தி ஜட்ஜ்மென்ட் கொடுக்கின்றார்கள்.

உண்மையின் நிலைகளை நாம் உணர்வதற்கும் மக்களுக்குத் தெளிவான நிலைகளைக் கொண்டு வருவதற்கும் இல்லை.

காவியத் தொகுப்பில் இவனுடைய கருத்தை அவன் சொல்வதும் அவனுடைய கருத்தை இவன் சொல்வதும் இரண்டுக்கும் எப்படி என்று இவர்களுக்குள் போர்முறை வருகின்றதே தவிர ஞானிகள் காட்டிய கருத்துக்கள் அனைத்தையும் முழுமையாக அழித்துவிட்டனர். போர்முறைக்கே வருகின்றது.

இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீளுதல் வேண்டும். அந்த மெய்ஞானிகள் உணர்த்திய பேருண்மைகளை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்கே இதை வெளிப்படுத்துகின்றோம்.

June 14, 2016

சந்தர்ப்பம் வலுவாக நம்மை இயக்கினாலும் அதை விட வலிமையான துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நம்மைக் காக்க முடியும்

முதலில் நான் (ஞானகுரு) உபதேசம் சொல்லிக் கொண்டு வந்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவாக்கிப் பதிவாக்கி அதை நீங்கள் புரிந்து அந்த உணர்வின் தன்மை வளர்ச்சியாகி வருகின்றது.

அதே சமயத்தில் உங்களை அறியாமல் ஏதாவது தப்பு வந்தாலும் உடனே “ரிமோட்” செய்து அது உடனே மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி உங்களுக்குள் வர வேண்டும் என்றுதான் இதை உபதேசிக்கின்றேன்,

வந்தால் தவறு செய்பவனைப் பார்த்தவுடன் உங்களுக்குள் கோபம் என்ற உணர்வு வருகின்றது.

அந்தக் கோபப்படும் உணர்வு இங்கே ரிமோட் - வலுவாக ஆகும் பொழுது தீமையைப் பார்த்தவுடனே நமக்குள் புகாதபடி அவனுக்கு நல்ல அறிவு வரட்டும் என்று நமக்குள் உட்புகாமல் தடுத்துக் கொள்தல் வேண்டும், சேனாதிபதி.

ஆகவே, குரு வழி என்ன? நமக்குள் எடுத்துக் கொண்ட தீமையை நீக்கும் உணர்வுகள் உருபெறுகின்றது. அதுதான் வசிஷ்டர் பிரம்ம குரு.

நீங்கள் மற்ற உபதேசங்களுக்குப் போனீர்கள் என்றால் இவ்வளவு நேரம் கேட்டுக் கொண்டிருப்பீர்களா? அவர் என்ன பேசுகிறார்? இவர் என்ன பேசுகிறார்? என்று திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள்.

உங்கள் அனைவருக்குள்ளும் எப்படியும் பதிவு செய்ய வேண்டும் குருநாதர் காட்டிய அருள்வழியில் ரிக்கார்டு செய்துவிடுகின்றேன். அடுத்துச் சிறிது நேரம் சிந்தனை செய்தீர்கள் என்றால் ஞானிகள் பெற்ற உணர்வு உங்களுக்குள் அந்த ஞானம் பெருகும்.

உங்கள் வாழ்க்கையில் இந்தத் தியானத்தை எடுத்துக் கொண்டு போனால் ஒருவன் திருட வருகின்றான் என்றால் அது முதலிலேயே தெரியும். சுதாரித்துக் கொண்டு தடுத்துவிடலாம்.

திருடன் போகிறான் என்று கவனக் குறைவாக இருந்தால் பிட்பாக்கெட் அடித்துவிட்டுச் சென்றுவிடுவான். பிட்பாக்கெட்காரன் வருகிறான் என்றால் தெரிந்து கொள்ளலாம்.

ஏனென்றால், வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்புக் கவசமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவு செய்கிறோம்.

யாரும் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வு அதன் வலிமையைக் காட்டிவிடுகின்றது.

ஆக, மொத்தம் அதைக் காட்டிலும் வலிமையான துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்கிவிட்டால் இதன் வலிமை காட்டும் போது தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.

வேதனை என்ற உணர்வு நமக்குள் வந்தால் கலி. அடுத்த நிமிடம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறவேண்டும் என்று எடுத்தால் கல்கி. ஆக, உயிரைப் போல உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி வரவேண்டும்.

அந்த நிலை பெறச் செய்வதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

June 13, 2016

கம்ப்யூட்டர் மூலம் செயற்கைக்கோளை இயக்குவது போல் மெய்ஞானிகளின் உணர்வை எடுத்துத் தீமைகளை விலக்க முடியும் (REMOTE CONTROL)

ஒரு கம்ப்யூட்டரில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்று இயங்கும் போது எதன் அழுத்தமோ அதன் வழி நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது. விஞ்ஞானம் நிரூபிக்கின்றது.

ஒரு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகின்றார்கள் விஞ்ஞானிகள். அப்பொழுது அதை இராக்கெட்டில் எடுத்துக் கொண்டு போகும் போது ஒவ்வொரு கோளும் எத்தனையோ திசைகளில் வருகின்றது.

ஆனால், மற்றது மோதிடாதபடி இந்த உணர்வுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரெக்கார்டு விடுகின்றார்கள். இராக்கெட் இத்தனை டிகிரியில் போக வேண்டும் என்று அதில் பதிவாக்கிவிடுகின்றான். அந்த உணர்வாகி அந்த டிகிரி வந்தவுடன் சுற்றுகின்றது. 

திசை மாற்றி அனுப்புகின்றான் என்றால் ஒன்றும் தெரியவில்லை. கம்ப்யூட்டரில் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலையில் மாற்றுகின்றான். இது வந்த பிற்பாடு தான் இராக்கெட் வெளி வருகின்றது. அப்பொழுது திசை மாறிச் செல்கின்றது.

இதைப் போன்றுதான் அருள் ஞானத்தின் உணர்வை உங்களுக்குள் சேர்க்கப்படும் பொழுது தவறு என்ற நிலைகளில் “ரிமோட்”. இந்தத் தீமைகளிலிருந்து விடுபடும் ஞானம் உங்களுக்கு வரவேண்டும் என்பதற்குத்தான் இதையெல்லாம் சொல்கின்றேன்.

ஞானிகள் காட்டிய உணர்வுகள், “நாம் எதைப் பெறவேண்டும்?” என்று அன்று சொன்னார்கள். இராக்கெட்டின் இயக்கத்தின் மூலமாக விஞ்ஞானி இன்று நிரூபித்துக் காட்டுகின்றான். தரையிலிருந்தே இயக்குகின்றான்.

ஆனால் நாம் இங்கிருந்து கொண்டே “சண்டாளப் பயல்.., இப்படிச் செய்கிறான்..,” என்று இயக்குகின்றோம். அது அவனை இயக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவனுக்குப் புரையோடச் செய்கின்றது.

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தான் என்றால் ஆக்சிடென்ட் ஆகின்றது. அப்பொழுது மனிதனுக்கு மனிதன் இயக்குகின்றோம் அல்லவா?

அதே சமயத்தில் அன்பான நிலைகளில் “எனக்கு உதவி செய்தான்” என்று எண்ணினால் அங்கே விக்கல் பாய்கின்றது. அந்தச் சந்தோசமான நிலைகள் இரண்டு பேருக்கும் வருகின்றது.

ஏனென்றால், இந்த உணர்வின் இயக்கங்கள் எல்லாவற்றையும் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்கின்றது. பதிவின் உணர்வுகள் மீண்டும் நினைவாகின்றது. அதனின் நிலைகள் நமக்குள் எப்படி இயக்குகின்றது? என்ற இந்த நிலைகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

“இந்த உடலுக்குப் பின்.., நாம் எங்கே செல்ல வேண்டும்..,?” அந்த உணர்வைப் பெறச் செய்வதற்குத்தான் கோவிலைக் கட்டினார்கள் ஞானிகள்.

விண்ணுலக ஆற்றலை, விண் சென்ற அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை மனிதர்கள் ஒவ்வொருவரும் பெற்று இந்த வாழ்க்கையில் வந்த இருளை நீக்கி அழியா ஒளிச் சரீரம் பெறும்படி செய்தார்கள்.

கோவிலுக்குச் சென்றால் நாம் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் விண்ணின் ஆற்றலைப் பெறுகின்றோமா?

June 11, 2016

கடவுள் எங்கேயோ இல்லை, அவன் நமக்குள் (உள்) நின்றே அவன் இயக்குகின்றான் – அகஸ்தியன் சொன்னது

நம்மை மனிதனாக உருவாக்கிய தாயையும் தந்தையையும் நாம் எப்படிக் கடவுளாக எண்ண வேண்டும் என்று ஆதியில் அகஸ்தியர் தாயின் உணர்வின் தன்மையை தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

நம்முடைய சாஸ்திர விதியே இதுதான்.

நமது உயிர் நமக்குள் “ஓ” என்று இயக்கி அந்த உணர்வின் துணையால் பல கோடி உணர்வின் தன்மை நாம் பெற்று பல மிருக இனங்களாகப் பிறந்தும் அதிலிருந்து நம்மை காத்திடும் உணர்வின் துணைகொண்டு இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய “உயிரே கடவுள்”.

இதை அறிந்துகொள்ளும் நிலைகள் பெற்றவன் முதல் மனிதன் அகஸ்தியன். அணுவுக்குள் அணுவின் ஆற்றலைத் தனக்குள் கண்டுணர்ந்து இந்த உணர்வின் செயலை தெளிவாகத் எடுத்துரைத்தான் அகஸ்தியன்.

அணுவின் ஆற்றலைக் கண்டுணர்ந்து அவனுக்குள் விளைந்த அந்த உணர்வின் சக்திகள் இன்றும் நம் பூமியில் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

அவன் இந்த உடலிலே தீமைகளை அகற்றி உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக இன்றும் துருவத்தில் நிலைகொண்டு துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இயங்கிக் கொண்டுள்ளார்.

அந்த அகஸ்தியன் அவன் காட்டிய நிலைகள் தான் சாஸ்திரப்படி உயிரே கடவுள். முதலிலே பேரண்டத்தின் நிலைகள் எதுவாக இருப்பினும் கடவுள் எங்கேயோ ஒளிந்து கொண்டுள்ளான் என்ற நிலை இல்லை.

நமக்குள் நம்மை உருவாக்கியது நமது உயிரே.

பேரண்டத்தின் ஆற்றலே அந்த உணர்வின் தன்மையை கவர்ந்து வெளிப்பட்டாலும் அந்த உணர்வைப் பிளந்து உணர்வின் இயக்கத்தை அறிந்து, அறிந்த நிலைகள் நம்மை இயக்கி இத்தகைய உடலின் உணர்வே மனிதனாக உருவாக்கியது.

ஆகவே கடவுள் எங்கேயோ இல்லை. அவன் நமக்குள் நின்றே அவன் இயக்குகின்றான்.

எத்தகைய குணத்தின் தன்மை நாம் நுகர்கின்றோமோ இந்த உணர்வினை 'ஓ' என்று ஜீவனாக்கி இந்த உணர்வின் சத்தை நமக்குள் ஜீவ அணுவாக மாற்றும்போது நாம் எண்ணிய குணமும் நமக்குள் பதிந்த உணர்வும் மீண்டும் அதை நினைவுபடுத்தி அது இயக்கப்படும்போது அதுவும் கடவுளாகத்தான் ஆகின்றது.

“தூணிலும் இருக்கின்றான்.., துரும்பிலும் இருக்கின்றான் உன்னிலும் இருக்கின்றான்.., அனைத்திலும் இருக்கின்றான்..,” என்று பிரகலாதன் கதையில் இது தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சூரியனின் காந்தப் புலனறிவு ஒரு உணர்வின் சத்தை அது கவர்ந்து கொண்டால் அதே சூரியனால் இயக்கப்படும் உடலின் இயக்கத்திற்குள் நம் உயிரால் கவரப்பட்ட உணர்வின் தன்மை அதைப்போல இருந்து உணர்வின் இயக்கத்தை உணர்ந்து அது உணர்ந்த உணர்வின் செயலாக நம்மை இயக்கும் செயலாக அது கடவுளாக இயக்குகிறது.

இந்தப் பேருண்மை நமது சாஸ்திரத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே, அந்த சாஸ்திர விதிப்படி இன்று நமது உயிர் கடவுள். உள் நின்று இயக்குகின்றது.

நாம் எண்ணிய உணர்வின் சத்தை 'ஓ..,' என்று ஜீவனாக்கி 'ம்..,' என்று உடலாகி நம்முள் நின்று அக்குணமே கடவுளாக இயக்குகின்றது என்ற பேருண்மையை அணுவின் ஆற்றலையும் அணுவின் இயக்கத்தையும் தெளிவாக அன்று எடுத்துரைத்தார் அகஸ்தியர்.

அதனின் உணர்வே இன்று படர்ந்து கொண்டிருப்பது. அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த இந்த உண்மையைத்தான் மகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர் இதை உணர்த்துகின்றார்.

நம் குருநாதர் உணர்ந்த அறிவின் தன்மையை நாம் அனைவரும் பகிர்ந்து அந்த அறிவின் தன்மை நாம் தெளிந்து நமது வாழ்க்கையில் வரும் நம்மை அறியாது சேரும் இருளிலிருந்து மீளும் நிலைக்கே இதை உணர்த்துகின்றோம்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்கள் சாதாரணமானவை அல்ல. அதில் உள்ள மூலக்கூறுகளை நாம் அறிந்து கொண்டால நாம் அனைவரும் விண் செல்வது சுலபம்.