ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2022

துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்கின்றாயா...? என்று கேட்டார் குருநாதர்

பாம்பினங்கள் மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது தான். அந்த விஷம் அதிகமாக அதற்குள் வளர்ச்சி அடையப்படும்பொழுது அது வைரக்கல்லாக... நாகரத்தினமாக மாறுகின்றது.
1.ஆண் பெண் என்ற உணர்வுகள் கொண்டு ஈர்க்கப்பட்டால்
2.அது வைரமாக நாகரத்தினமாக மாறுகின்றது.

இதே போன்று தான் மனிதனின் உணர்வுகள் உணர்ச்சியின் தன்மை கொண்டு இரண்டும் ஒன்றான பின் உணர்வை ஒளியாக மாற்றிடும் அந்த உயிரணுவாக மாறுகின்றது. மனிதனுக்கு அடுத்து உடல் இல்லை.

அகஸ்தியனும் அவன் மனைவியும் இப்படித்தான் உணர்வின் தன்மை ஒன்றாகி ஒளியின் சரீரம் பெற்றுத் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்துடன் குருநாதர் என்னை அங்கத்தினராக இணைத்தார். அங்கத்தினராக இணைத்து அதனைப் பின்பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி அகற்றுவது...? என்றும் உணர்த்தினார்.

புலி குகைக்குள் சுற்றுவது போல 20 வருடம் காடு மேடெல்லாம் அலைந்து... புலியும் பாம்பும் தாக்கிக் கொள்ளும் இடங்களிலும்... புலியும் பன்றியும் தாக்கும் இடங்களிலும் என்னைச் செல்லும்படி செய்து... காட்டு விலங்குகள் ஒன்றுக்கொன்று எவ்வாறு தப்பிக்கின்றது...? என்று சில உண்மை உணர்வுகளை நேரடியாகக் காணும்படி செய்தார். தெரிந்து கொண்டேன்.

அந்த மிருகங்கள் ஒன்றை ஒன்று தாக்கி இறக்கப்படும் போது அதனின் உடல்கள் எப்படி மாறுகின்றதோ இதைப் போன்று
1.மனிதன் பிறிதொரு வேதனையை நுகரப்படும் பொழுது தாக்கி... இந்த உடலை உருமாற்றச் செய்து விடுகின்றது
2.மனிதன் அல்லாத உருக்களாக மாற்றி விடுகின்றது.

ஆகவே அதைப் போன்ற நிலையிலிருந்து விடுபட நீ துருவ நட்சத்திரத்துடன் அங்கத்தினராகச் சேர்கின்றாயா...? என்று கேட்டார்.

இருளை அகற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் கால மெம்பராக இணைந்துவிடு என்றார்.

1.உன் ஆயுள் முழுவதற்கும்... எப்பொழுதெல்லாம் தீமைகளைக் காணுகின்றாயோ
2.அப்பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நுகர்ந்து அந்த உணர்வை வளர்த்து
3.உன் உடலுக்குள் தீமைகளை மாற்றி அமைக்கும் சக்தியாக நீ பெற வேண்டும்.

ஏனென்றால் எத்தகைய நஞ்சையும் ஒளியாக மாற்றி அமைக்கும் சக்தி பெற்றது தான் அந்தத் துருவ நட்சத்திரம்.
1.ஆகவே அதனை நீ பெறு... அதன் வழி நீ வாழ்...! என்று
2.இந்த உண்மையின் தன்மையை குருநாதர் உணர்த்தினார்.

எமது குருநாதர் என்னை எப்படி ஆயுள் கால மெம்பராக அங்கே இணைத்தாரோ... அதன் வழியில் தான் உங்களையும் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஆயுள் மெம்பராக இணையச் செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்கள் தவறுகள் வந்தாலும் அதிலிருந்து நீங்கள் மீட்டிக் கொள்ள முடியும்.

பிறர் படும் வேதனைகளையோ துயரங்களையோ கோபங்களையோ நுகர நேர்ந்தாலும் அது உங்களுக்குள் உருப்பெறாதபடி தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்து புருவ மத்தியில் நீங்கள் எண்ணப்படும் பொழுது தீமைகள் உட்புகாது தடுக்கின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று உடலுக்குள் உள் முகமாகச் செலுத்தப்படும் பொழுது இது வலிமை கூடக் கூட நோயாளியின் உணர்வைக் கேட்டறிந்தாலும் அந்தத் தீமையின் உணர்வுகளைப் பிளந்து விடுகின்றது... ஆன்மாவைத் தூய்மையாக்குகிறது.

துணியில் அழுக்குப்பட்ட பின் அது போகவில்லை என்றால் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அந்த அழுக்கை வெளியேற்றி அதை எப்படித் தூய்மையாக்குகின்றோமோ அதே போன்று தான் நாம் சந்தர்ப்பத்தால் நுகரும் தீமையான உணர்வுகள் நம் உடலில் இரத்தநாளங்களில் கலந்தாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து அதைத் தூய்மையாக்க முடியும்.

அது உடலில் பெருகப் பெருக...
1.இந்த உடலை விட்டு எப்போது பிரிந்தாலும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைய முடியும்
2.அதற்குத்தான் உங்களை ஆயுள் கால மெம்பராக இணைப்பது.

உயிருடன் ஒன்றும் உணர்வை ஒளியாக மாற்ற வேண்டும் என்பதே “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற வான்மீகியின் தத்துவம்

உயிரையும் ஆன்மாவையும் இரண்டையும் ஒன்றாகக் கலக்கும் சக்தியின் வீரியத்தைக் காட்ட வந்த காவிய மகரிஷியே வான்மீகி ஆவார்.

தன்னுடைய காவியத்தில் அந்த உயிர் ஆன்ம சக்தியின் தொடருக்கு இராமன் சீதை என்று காட்டினாலும் வாழ்க்கைத் தத்துவத்திலும் கூட “ஒருவனுக்கு ஒருத்தி...!” என்றபடி வாழும் வாழ்க்கை நியதியைக் காட்டினார்.

அந்த வழியில் நடந்திடும் பரிபக்குவத்தை மனிதர்கள் தங்களுக்கு ஏற்படும் அனுபவ ஞான நிலைகளும் கூட
1.தங்களுக்குத் தாங்களே விதித்துக் கொள்ளும் வாழ்க்கை நெறி முறையின் கோட்பாடு என்று காட்டி
2.அது சக்திச் சுடரால் காக்கப் பெறும் என்ற சூட்சமத்தையும் காட்டினார்.

அப்படிப்பட்ட வாழ்க்கை நெறி “கற்பு...” என்னும் சுடரால் ஒளி பெற்று விளங்குவதால் அந்தக் “கற்பு நெறி...” என்பது ஒழுக்கம் என்கிற தொடரில் பெறப்படும் உயர்ந்த பண்பு நிலை தான்.

நாம் கைக்கொள்ள வேண்டிய சாராம்சமாக அதையே வழிகாட்டியாக அமைத்து நடை முறைச் செயலாக அதனின் இயக்கம் கொண்டால் அது நல் வினைப் பயனாகப் பெற்று
1.நம் உயிர் ஆன்ம சக்தி என்றும் பிரகாசித்து
2.ஜோதித் தத்துவத்தில் நிலையாக விளங்கும்.

அப்படிக் காக்கப் பெறாத வாழ்க்கைத் தொடர் என்பது காமத்தின் அடியாக எழும் மோகமாகி வாழ்க்கை நெறியை அழித்து உயிர் ஆன்ம சக்தித் தொடரில் குலத்தையும் பூண்டோடு அழித்து மறைத்துவிடும்.

சாந்த குணம் பெற்ற உயிர் சக்தியான இராமன் அகன்றாலும்.. தைரிய குண சக்தியான லட்சுமணனால் காக்கப்படும் நிலை இருந்திருந்தாலும்...
1.சீதை என்ற ஆன்மாவில் பதியப் பெறும்
2.ஆசை என்னும் குண உந்துதல் சரீரத்துடன் ஊட்டப் பெற்றால் என்ன ஆகும்...?

நம் ஆன்மாவில் எதைப் பதிவு செய்து வழி நடத்துகின்றோமோ அதுவே ஆன்ம சக்தியாகச் சரீரத்தையும்
1.ஊட்டப் பெற்ற சக்தியின் தொடரில்
2.ஊட்டப் பெற்ற சக்தியின் வாசனை சமைக்கப்பட்டு சரீர கதியில் வெளி வந்து
3.அந்தச் சமைப்பின் தொடரிலே உடலில் உள்ள எல்லா உயிரணுக்களையும் தன் செயலுக்கு (ஆசைக்கு) வழி நடத்துகின்றது.

ஆசை என்ற சிறு தொடரில் இப்படி அறியாது அகப்படும் ஆத்ம சக்தியானது “மோகம்” என்னும் படு குழியில் வீழ்த்தப்படுவதைக் காட்டிடவே
1.இராவணனிடம் அகப்பட்டுத் தத்தளிக்கின்றது என்பதாக
2.இராவணேஸ்வரன் சீதையைக் கவர்ந்து சென்றான் என்பதில்
3.அவன் பூமியோடு பெயர்த்து எடுத்துத்தான் சீதையைக் கவர்ந்தான் என்று காட்டப்பட்டிருக்கும்.

ஏனென்றால்
1.ஆன்ம சக்தியை வலுவாகப் பெற்றிருந்தால்
2.எத்தகைய தீய குண சக்தியின் வீரியமும் ஆன்ம சக்தியை நெருங்க முடியாது...! என்பதே அதனின் சூட்சமப் பொருள்.

அந்தத் தொடரில் சிந்திக்கத் தலைப்படும் ஞானி அறிய வேண்டிய உண்மையின் சாரம் ஒன்று உண்டு.

நம் ஆத்மாவைக் காக்கும்... காத்துக் கொண்டிருக்கும்.. ஜெப ஆகார அமில குண சூட்சமத்தைக் காட்டவே சீதையைக் காக்க வந்த “பக்ஷிராஜன்...! (ஜடாயு) என்ற ஓர் பாத்திரப் படைப்பில் விளக்கம் தந்தார் வான்மீகி.

ஒரு தந்தை தன் குழந்தையைப் பேணுவது போல் அது நம் ஆன்மாவை எப்பொழுதும் வட்டமிட்டுக் காக்கும் என்றெல்லாம் தொடர்புபடுத்திக் காட்டியுள்ளார். ஆனாலும்
1.நம் ஆன்ம சக்திக்குச் சக்தியூட்டும் உயிர்ச் சக்தி (இராமன்) இல்லாததால்
2.அசுர குணத் தன்மை வீரிய குணச் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்று தெளிவாக்குகின்றார் வான்மீகி.

அந்த ஜடாயு தன் சிறகை இழந்துவிட்டது என்பதே நம் சூட்சமச் சரீரத் தொடரில் சிறகு இழந்து விட்டால் உயிர்ச் சக்தி தன் பறக்கும் தன்மை இழந்து விடுகிறது.

மீண்டும் ஆன்ம சக்தியான சீதையை உயிர்ச் சக்தியான இராமன் அடைய எத்தனையோ கடும் சோதனைகளுக்கு ஆட்படுகிறான்.

பல உயர்ந்தோரின் ஞானத் தொடர்பு பெற்ற பின் உயர் சக்திகளைப் பெற்றுத் தன் எண்ணம் கொண்டு வழி வகுத்த பாதையில் உயர்வில் தான் சீதையை அடைய முடியும்.
1.அதைத் தவிர வேறு மார்க்கம் எதுவும் இல்லை என்ற சூசகப்படுத்தி
2.நம் உயிர் ஆன்ம சக்தி காக்கப் பெறும் தொடர்பை வலியுறுத்துகிறார் காவிய ரிஷியான வான்மீகி.

August 29, 2022

கணவன் மனைவி தியானத்தின் மூலம் கிடைக்கும் அபூர்வ சக்திகள்

இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தன் குடும்பத்தைப் பொறுத்தவரையிலும் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போலக் கவர்ந்து கொண்ட சக்தியாக... அருள் உணர்வுகளை இணைத்து வாழ்தல் வேண்டும்.

நளாயினை போன்று மதித்து நடக்க வேண்டும் என்றால்
1.கணவனை மனைவி உயர்த்தி எண்ணுவதும்
2.கணவன் மனைவியை உயர்த்தி எண்ணுவதும் தான்.

இந்த ரெண்டு எண்ணங்களும் உயர்த்தி எண்ணும் போது உயர்ந்த உணர்வாக இரண்டு பேரும் வளர்த்துக் கொள்ள முடிகிறது. இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஆனால் பெரும் பகுதி குறை சொல்லும் பழக்கத்தில் தான் இன்று வாழ்கின்றோம். நம் உடலிலே இது போன்ற எத்தனையோ உணர்வுகள் உண்டு இருந்தாலும் அதை மாற்றி அமைக்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று ஒவ்வொரு நொடியிலும் ஒன்றுபட்டு வாழும் நிலையாக உயர்ந்த நிலை பெறுதல் வேண்டும்.

கணவர் தொழில் செய்யும் இடங்களில் அனைத்தும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று மனைவியும்... அதே போன்று மனைவியின் செயல்கள் அனைத்தும் உயர்ந்து இருக்க வேண்டும்... மனைவி வெளிப்படுத்துவது உயர்ந்த சொல்களாக வர வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்... கணவன் மனைவி இருவருமே இப்படி எண்ணிப் பாருங்கள்.

நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது என்று இதைத் தான் சொல்வது.

நளாயினி முடமான தன் கணவனைக் கூடையில் அமர்த்தித் தூக்கிச் சென்றாள் என்று உருவ அமைப்பைக் கொடுத்து நமக்குக் காவியத்தைப் படைத்துக் காட்டி உள்ளார்கள்.

கணவன் சொல்லை சிரம் மீது ஏற்று அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். இதைப் போன்று கணவன் மனைவியை உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

1.சக்தி தான் சிவமாகின்றது...
2.பெண்கள் எப்பொழுதுமே உயர்ந்த நிலையில் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உடலாக மாறுகின்றது.
3.அதே மாதிரி கணவனும் எண்ணி எடுக்கும் பொழுது “அதே சக்தி நிலைகொண்டு”
4.உயிரில் அந்த உணர்வுகளை ஊட்ட உதவுகிறது.

அதுதான் நளாயினி என்று சொல்வது.

எமனிடமிருந்து சாவித்திரி தன் கணவனை மீட்டினாள் என்றால் பிறரிடமிருந்து தீங்கான உணர்வுகள் வந்தாலும்... மனைவி அருள் உணர்வுகளைத் தனக்குள் பெற்றுக் கணவன் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்ற உணர்வினைச் செலுத்தி விட்டால் “எத்தகைய தீய நிலைகளோ சாப அலைகளோ இங்கே வந்து சாடாது...”

1.உங்களுக்கு முன்னாடி ஒரு துப்பாக்கியை வைத்துச் சுட்டாலும் கூட அந்த உணர்வுகள் திடீரென்று திசை மாறும்.
2.கணவனைக் காத்திடும் சக்தியாக செயல்படுத்த முடியும்
3.அங்கே சக்தி கொடுக்கப்படுகின்றது... துன்பத்திலிருந்து மாற்றப்படுகின்றது.

ஆகவே கணவன் மனைவி ஒவ்வொருவரும் நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷியின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியையும் “ஒன்று சேர்த்து எடுத்து... ஒருவருக்கொருவர் இணைத்துப் பழகுதல் வேண்டும்...”

இரு மனமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றாக இணையும் பொழுது இரண்டு உயிரும் வலுவாகி அடுத்துப் பிறவி இல்லா நிலையை அடைய உதவுகின்றது.

தீய சக்திகளுடன் நேரடியான மோதலைத் தவிர்த்து நாம் விலகித் தான் செல்ல வேண்டும்

வாலியின் வீரிய குணத்தின் தன்மையின் ஆணவம் எந்த எதிர் மோதல்களையும் தன் வசமாக்கித் தன் சக்தியுடன் ஒன்றச் செய்யும் சூட்சமம் பெற்றது.

அதிலே நல்வினைப் பயனை எண்ணியிருந்தால் ஆச்சா மரம் வெட்டப்படத் தேவை இருந்திடாது. அது தான் மனித குல மனத்தின் வீரிய சக்தி...!

வாலி வதம் என்ற சம்பவம் சபரிமலைத் தொடர் அருகே ஒதுக்குப்புற வட பகுதியில் வாழ்ந்த ஓர் இன மக்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம்.

தவத்தின் சக்தி பெற்றவன் பிற ஆன்மத் தொடருக்கு அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஜடாக்கினியின் செயல் இருந்திருந்தால் அவன் நிலை உயர்ந்திருக்கும். வான்மீகி பதம் பார்த்தான். அந்த ஆச்சா மரம் வீழ்ந்தது.

ஜடாக்கினி மனதிறத்தால் மற்றவர்கள் பெறும் சக்தித் தொடருக்கு எண்ணத் தடை ஏற்படுத்தித் தீவினையால் விளையாடி விட்டான். அதன் பயன் இராமபாணம் வான்மீகியால் பாய்ச்சப்பட்டது.

ஜடாக்கினி உயர் எண்ண வீரிய சக்தி தீவினைப் பயனை விளைவிக்கும் மந்திர சக்தியுடன் மோதுண்ட பொழுது எந்தப் பிரம்மாஸ்திரம் வென்றிருக்கும் என்பதனை விளக்கிடவும் வேண்டுமோ...?

இராமன் மறைந்திருந்து அம்பெய்தான் என்பதன் சூட்சமம் என்ன...? அதிலே நீங்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காரியம் ஒன்றுண்டு.

தியானத்தின் மூலம் ஞானச் செல்வங்கள் (மனிதர்கள்) இன்று பெற்றுக் கொண்டிருக்கும் உன்னத நிலைகளும் மற்ற செயல்களும் எதைக் காட்டும்...?

நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கும் ஞான சக்திகளைப் பலர் பல எண்ணம் கொண்டு நோக்கிடும் செயலுக்கு
1.உங்களை உற்றுப் பார்க்க ஆரம்பித்தால் - அவர்களின் பார்வை அலையை
2.உங்களின் பார்வை அலையை நேர் கொண்டு மோதிடாமல் தவிர்த்திடவும் வேண்டும்.

மற்றவர்கள் மத்தியிலே உலகோதய வாழ்க்கையைப் பற்றிப் பேச வேண்டிய நிலையில்
1.பிறரின் பார்வையைக் கூடுதலான நேரம் நம் பார்வையோடு சந்திக்காமல்
2.சிறிது தவிர்த்திடவும் வேண்டும்.

தன் தவ சக்தியைக் குறைத்துக் கொண்டு வாலியின் தொடர் மீண்டும் பிறருக்குத் தீங்கிழைக்காதவண்ணம் தடுத்து ஆட்கொண்ட செயல் தான் வான்மீகியார் பெற்ற அனுபவ நிலை என்பது

அந்தக் காப்பிய ரிஷி மீண்டும் தன் ஈர்ப்பின் தொடரில் வெகு வேகமாகச் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் செயலில் பற்பல ரிஷிகளுடன் தொடர்பு கொண்டார். அதில் பரசுராமர் தொடரும் உண்டு.

ஜடாக்கினி அனுபவம் ஞானம் என்பதே உயர் சக்தி வலுக்கூடும் வலுவின் வலுவாகும்,
1.தன்னுடைய அனுபவமே போதனையாகி
2.உயர் சக்தியை ஆட்கொள்ளும் நாத வித்தின் மூலம் பரிமளிக்கும் செயல் நிலைக்கு
3.மீண்டும் எண்ண வலுவின் திட வைராக்கிய சிந்தனையால்
4.எந்த மண்டலமோ அந்த மண்டலத்தின் சூட்சமும்
5.எந்தெந்த நட்சத்திரங்களோ அவைகளின் அமில குண ஈர்ப்பின் சேமிப்புமாக
6.இந்தச் சரீரத்தை வைத்து ஈர்க்கும் காந்த அமிலத் தொடர்பும்
7.பேரொளியாகச் சுடர்விட்டுப் பிரகாசித்திடும் நிலையாக
8.தன் உயிர் அமில மூல முலாமைத் தெளிந்து
9.அந்தச் சக்தியின் தொடரில் எண்ண வலுவை உயர்வாக்கிப் பெறும் ஜடாக்கினி ஒளி சக்தி கொண்டு
10.குறைவுபடா சேமிப்பாக்கிச் செயல் கொள்வதே பக்குவமான செயல் ஆகும்.

காப்பிய ரிஷி வான்மீகி ஆச்சா மரத்தை வாலியின் தொடர்பில் பதம் பார்த்து ஆத்ம சக்தி பெறும் சக்தி அலைத் தொடர்பில் குறைவுபடும் காரண மூலம் ஜடாக்கினி மந்திர விழி பிதுங்கும் செயல்படுத்தி எண்ணத் தடையாகும் இராமபாணத்தை எய்ததின் தொடர் ஜடாக்கினி அனுபவ ஞானம்,

எடையிடும் பொருள் எடை காட்டும் கல் ஆனதில் எடையிடும் எண்ண அளவீட்டில் தராசின் முனை முள் அளவீடு ஆவதைப் போல் அந்த அனுபவ ஞானம் தன் நிறை காண சபரியிடம் பதம் பார்த்தான்.

மனைவியைப் பிரிந்த இராமன் சபரிக்கு மோட்சத்தை அளித்திட இயலவில்லை என்ற கதையின் தொடர்பிற்குச் சூட்சம விளக்கம் உள்ளது. இராம ஜெப ஏக்கமாக ஜெபத்தில் ஏங்கினாள் சபரி.

இந்த ஏக்கத்தில் பூர்த்தி செய்ய எப்படிச் சங்கடத்தின் அலைகளை ஈர்த்துக் கொண்டிட்ட வழி காட்டும் குரு பூரணத்துவம் நிறைவு பெறாத் தொடர் நிலையில் தன்னை உணர்ந்து மீண்டும் வழியமைத்தான்.

தெளிவின் தொடர்பில் மகரிஷிகளின் தொடர்புபடுத்திப் பெறும் ஜடாக்கினி சக்தி ஈர்ப்பிற்குச் செயல் கொண்டிட மனித மனங்களின் ஜீவ ஏக்கம் சிஷ்யர்கள் என்ற தொடர்பில் சங்கடமற்று சமமான பாவனையில் நிலை கொண்டிட்டுச் செயலுறும் பொழுது அந்த உண்மைச் சீடர்களின் ஏக்கம் குருவிற்கே எற்பட்டு உண்மையை உணர்ந்து தெளிந்து சூரிய குலம் என்று குறிப்பிடும் வீரிய அமில முலாம் ஈர்ப்பில் தொடர்புகளில் தொடர்பு கொண்டு ஈர்த்து வலுக் கொண்டிட்டால் இராமபாணம் பாயும் இலட்சியத்தை எய்தும்.

இராமபாணம் திரும்புவதைப் போல் செயல் கொண்டிட்ட சக்தியும் எண்ண ஈர்ப்பின் வலுவால் வலுத்துத் தன் சக்தியை மீண்டும் வலுக் கூட்டிக் கொள்ள முடியும்.

சபரி மோட்சம் என்று சொல்கின்ற சூட்சமத்தில் சபரி பெற்ற சக்தியின் வலு ஐயப்ப மாமுனியின் தொடர்பால் தன் எண்ண இலட்சியத்தை அடைந்தது.

இந்தச் சக்தியின் தொடர்பால் அந்த ஐயப்ப மகான் எப்படித் தன் சக்தியின் குறைவுபடாத் தன்மையில் அந்தச் சபரியின் மூலத்தையே தாய் சக்தியாக ஆக்கிக் கொண்டு தன் அனுபவத்தில் பெற்றுக் கொண்ட எத்தனையோ சக்தித் தொடரில் சபரி சக்தியும் ஒன்று.

August 27, 2022

“ஆயுள் மெம்பர்” என்பது நமது வாழ்நாள் முழுவதுமே துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்வது தான்

யாராவது நமக்குத் தொந்தரவு கொடுத்தார்கள் என்றால் என்னை இப்படிப் பேசினான்... பேசினான்...! என்று அவர்களுடைய துயரமான ஈர்ப்பு வட்டத்தில் தான் நம் நினைவுகள் சென்றுவிடுகிறது.

அவருடைய உணர்வையே வளர்த்து நமக்குள் தொந்தரவுகளை உருவாக்கிப் பல பல கஷ்டங்களை உருவாக்கிக் கொள்கின்றோம்.

இதை மாற்றி அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நமது வலுவைக் கூட்டி
1.அவர்களுக்கு நல்ல வழிகள் கிடைக்க வேண்டும்
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும் என்று எண்ணிவிட்டோம் என்றால்
3.அவருடைய உணர்வுகளை இழுக்கும் சக்தி இங்கே குறைக்கப்படுகின்றது.

ஆனால் “என்னை இப்படிப் பேசினானே...” என்று எண்ணினால் அது உடனே இங்கே வந்துவிடும். ஒருவர் நம்மைத் திட்டி விட்டால் அல்லது அடுத்தவர்களைத் திட்டும்போது அது பதிவாகிவிட்டால் அதைத் திருப்பி எண்ணும் பொழுது நினைவுக்கு வருகின்றது. அது நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

அதைத் தடுப்பதற்கு ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் அவர்கள் அறியாமையிலிருந்து விடுபட வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று இப்படி மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆயுள் மெம்பராகச் சேர்ந்தவர்கள் அனைவரும் குடும்பத்தில் ஒன்றுபட்டு வாழ்ந்து காட்ட வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும் நாம் ஒரு சூரியக் குடும்பம் போன்று
1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
2.ஒரே குடும்பமாக வாழ்ந்து பழக வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துப் பரப்பப்படும் பொழுது இனி வரக்கூடிய விஞ்ஞான அழிவுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆகையினால் பிறருடைய சங்கடங்களையோ வேதனைகளையோ அதிகமாகக் கேட்டுப் பழகாதீர்கள்... அதைப் பதிவாக்காதீர்கள். அப்படியே கேட்க நேர்ர்ந்தாலும் அதை உடனுக்குடன் மாற்றி பழகுதல் வேண்டும்.

ஆயுள் கால மெம்பர் என்பது...
1.நமது வாழ்நாள் முழுவதுமே அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ்வது தான்
2.அந்த அருள் ஒளியை நமக்குள் பெருக்குவதற்குத் தான் அதிலே சேர்வது.

இதைச் சீராகப் பயன்படுத்தி இந்த வாழ்க்கையில் வரக்கூடிய துன்பங்களை அகற்றி நாம் பிறவில்லா நிலை அடைதல் வேண்டும் ஆயுள் மெம்பர் என்றால் என்றும் பேரானந்த நிலை கொண்டு நாம் வாழ்ந்திட முடியும். அந்த வழிகளை நாம் கடைப்பிடித்துப் பழகுதல் வேண்டும்

இந்த உடலும் நம்முடன் வருவதில்லை... தேடிய செல்வமும் நம்முடன் வருவதில்லை. நாம் சேர்க்கும் அந்த அருள் சக்திகளே நம்முடன் இணைந்து வருகின்றது. அதன் வழி கொண்டு என்றுமே ஏகாந்த நிலை பெறுகின்றோம்.

எதுவுமே நமக்கு எதிர்ப்பு இல்லாத நிலையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்திகளைப் பெறுகின்றோம்

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றால் நமது உணர்வுகள் பிறருடைய தீமைகளை அகற்றும் சக்தியாகப் பெருகும். அந்த நிலை பெறச் செய்வதற்கு தான் உங்களை ஆயுள் மெம்பராக அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைப்பது.
1.உங்களுக்கு அந்த அருள் சக்திகளைக் கொடுக்கின்றோம்.
2.அதைச் சீராகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பிறவா நிலை பெறச் செய்யும் செயலைத் தவிர நமக்கு இந்தப் பூமியில் வேறு வேலை இல்லை…!

“ஜடாக்கினி மன திறன்…!” என்னும் மூலச் சக்தி நாத விந்துவாக… இரசமணியாகச் செயல்படும் அந்த வீரிய குண அமிலம் “இராமபாணம்…” என்று காட்டப்பட்டது.

எந்த இலட்சியம் தன் கருத்தோ அந்த இலட்சியத்தை எய்தும் பாக்கிய நிலை பெறுவது அதுவே தான்…! ஆனால் அந்தப் பாக்கிய நிலை பெற்றுவிட்டால் மட்டும் போதாது. அதை வளர்க்கவும் வேண்டும்.

இராமபாணத்தை எய்தினால் அது அப்படியே திரும்பி வரும்…! என்கின்ற பொருள் எல்லாம் என்ன…?
1.எண்ணம் கொண்டு செலுத்தப்படும் ஜடாக்கினி மூல சக்தியை
2.வான இயலை இலக்காகக் கொண்டு செலுத்தப்பட்டால்
3.அதை நம் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டால்
4.அந்தச் சக்தி குறைவுபடாது மேன்மேலும் வளரும் என்பதே இராமபாணம் திரும்பும் தொடர்.

ஜடாக்கினி அனுபவத்தில் வான்மீகிமாமகரிஷி மாத்திரம் தப்பித்துக் கொண்டாரா… என்ன…? அவர் பெற்ற அனுபவப் பாட நிலை என்ன…?
1.ஜடாக்கினி செயல் சக்தியைச் செலுத்திக் கண்ட “ஓர் அனுபவமாக..”
2.“வாலி வதம்…! என்ற பாங்கில் இராமன் தலை குனிந்தான்…! என்கின்ற பொருள் என்ன…?

ஆச்சா மரத்தை வெட்டுபவன் அந்த வலுவான மரத்தை முறித்திட வலுவான சக்தி மாத்திரம் போதாது. அந்த ஆயுதம் கூர்படத் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.

“தான் பெற்ற தவ சக்தியை” வான்மீகி கூர்பார்த்த விதம் ஆச்சா மரத்தை வெட்டும் செயல் போல் அவர் செயல் நிலை இருந்தாலும் சபரி அன்று அவரைக் கேட்டாள் “என்னையும் வானத்தில் இருத்த முடியுமா...? என்று…!”

அங்கே அந்த உபதேசத் தத்துவம் மழுங்கி விட்ட ஆயுதத்தால் ஆச்சா மரத்தை வெட்ட முடியுமா…?

உலகோதயம் என்னும் பிடிப்பில் “ஆச்சா மரம்…” என்பதெல்லாம் சொல் நாமம் பெயர் விளக்கத்திற்காகச் சூட்சமமாகக் கொடுக்கப்பட்டது தான். ஏனென்றால் நம் கவனம் ஞானத்தை வளர்த்திடும் எண்ணத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும்.

இது சொல் ஈர்க்கும் செயல் மாத்திரமல்ல…! இதிலே வலியுறுத்தும் காரியார்த்தம் (நுட்பம்) எது என்றால் “ஊசி முனைத் துவாரத்தில் நீர் குறைந்துவிடும்…” என்கின்ற பொருளின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைப் புரிந்து கொண்டால் ஞானத்தை வளர்க்க உதவாத… நம் ஆத்ம பலத்தை வீரியப்படுத்த உதவாத எந்தச் செயலையும்
1.உற்றுறுந்து கேட்கவும் வேண்டாம்…
2.அதிசயித்து நோக்கவும் வேண்டாம்….
3.”பெருமாள் படியளந்தான்…” என்பது போல் இருக்க வேண்டுமே தவிர
4.எடுக்கும் வீரிய ஜடாக்கினி முல சக்தி நம்முடைய முக்கியமான சேமிப்பாக இருக்க வேண்டும்.

August 26, 2022

எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்

விஞ்ஞான அறிவால் அணுகுண்டுகளையும் மற்ற எத்தனையோ விதமான கெமிக்கல் குண்டுகளையும் உலகில் பல நாடுகளில் தயார் செய்து வைத்திருக்கின்றார்கள்.

மின்னல்கள் தாக்கப்படும் பொழுது கடலிலே பாய்ந்தால் மணலாக மாறுகின்றது. அந்த மணலிலிருந்து யுரேனியமாகப் பிரித்து எடுத்து “அணுவைப் பிளக்கும் சக்தியாகக் கொண்டு வருகின்றார்கள்…”

அதை மற்றதுடன் கலந்து நியூட்ரான் என்கிற நிலையிலும் புரோட்டான் என்கிற நிலையிலும் சில நிலைகளைச் செயல்படுத்துகின்றனர்.

பொதுவாக நட்சத்திரங்களில் இருந்தும் உமிழ்த்தப்பட்டு வரும் கதிரியக்கச் சக்திகள் சூரியனின் ஈர்ப்புக்குள் வரும் போது
1.சூரியன் இழுத்து வரும் பாதையில் ஒன்றுடன் ஒன்று கலந்தால் அதிகமான அழுத்தங்கள் ஆகும்.
2.அந்த அழுத்தத்தைக் கண்ட பின் மற்றதெல்லாம் அஞ்சி (நியூட்ரான்) ஓடுகின்றது.
3.ஓடினாலும் ஒன்றோடு ஒன்று கலந்து பல மாற்றங்கள் ஆகின்றது… சக்தி வாய்ந்த நிலையாக மாறுகின்றது.

அதை எடுத்துத் தான் இராக்கெட்டை விண்ணிலே செலுத்தினார்கள். நட்சத்திரங்களில் இருந்து வரக்கூடிய துகள்களைப் பிரித்து “நியூட்ரான்” என்று கொண்டு வருகின்றார்கள்.

அதை எடுத்துக் கொண்ட பின் “வெடிக்கச் செய்தால்” சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

அத்தகைய உணர்வுகள் மனிதன் இருக்கும் பக்கம் பட்டால் விஷத்தின் தன்மை கலந்து… சிந்திக்கும் தன்மை குறைந்து… மனிதனுடைய நல்ல குணங்கள் எல்லாம் மறைந்து விடுகின்றது.
1.மனிதன் இருப்பான்... ஆனால் பைத்தியம் பிடித்தது போன்று ஆகிவிடுவான்.
2.மனிதனை மனிதனே கொன்று சாப்பிடும் நிலைகள் வருகின்றது

அதே சமயத்தில் அணுகுண்டுகளை வெடித்தால் கதிரியக்கங்கள் மோதி அனைத்தையும் பஸ்பமாக்கி விடுகின்றது இது மனிதன் கண்டுபிடித்தது தான். ஆனால் இதில் கட்டடங்கள் ஊரெல்லாம் அழிந்து விடுகின்றது என்று எண்ணி என்ன செய்தான்…?

நியூட்ரான் குண்டுகளை வீசி மக்களைப் புத்தி பேதமில்லாது செய்துவிட்டுத் “தான் ஆட்சிக்கு வரலாம்…” என்று செயல்படுத்துகின்றார்கள்.

இவ்வாறு எத்தனையோ செய்தாலும் அந்த விஷமான கசிவுகளைச் சூரியனுடைய காந்த சக்தி இந்த இரண்டையுமே (கசிவு + கதிரியக்கம்) கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

காற்றலைகளில் இது பரவப்படும் பொழுது இதனுடைய அழுத்தம் எப்படி வான் வீதியில் நியூட்ரான் என்ற அழுத்தம் மற்றதோடு மோதும் பொழுது விரட்டிச் செல்கின்றதோ இதே போல கதிரியக்கச் சக்தியும் இதுவும் இரண்டும் மோதப்படும் பொழுது சுழிக்காற்றாக மாறுகின்றது.

இரண்டும் சேர்ந்த பின் என்ன நடக்கிறது…?

நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்திகள் கலந்து தான் மண்ணோ கல்லோ செடி கொடிகளோ எல்லாமே உருவாகியுள்ளது.

1.சுழிக் காற்றாக மாறி… கல் மண் மற்றும் அனைத்திலும் இருக்கும் கதிரியக்கத்தைக் கவர்ந்து கொண்ட பின் இன்னும் வீரியம் அதிகமாகி
2.காற்றாடி போல (TORNADO) எல்லாவற்றையும் மேலே தூக்கிக் கொண்டு… பிய்த்து எறிந்து கொண்டு போகின்றது.

அமெரிக்கா சீனா ரஷ்யா ஜப்பான் எல்லா நாடுகளும் இது நடக்கின்றது பார்க்கலாம்…! எங்கெங்கே அதை உற்பத்தி செய்தார்களோ அந்த நாடுகளில் எல்லாம் இது சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றது. பெரிய கட்டிடங்களாக இருந்தாலும் சுக்கு நூறாகத் தவிடு பொடியாகிப் போய்க் கொண்டிருக்கின்றது.

1.கடல்களிலே பட்டால் கடல் அலைகள் பெருகி (TSUNAMI) நகருக்குள் இது பாய்ச்சப்பட்டு
2.ஊரே சின்னாபின்னமாகும் நிலைகளும் வந்து கொண்டிருக்கின்றது.

இதே சுழல் காற்றின் நிலைகள் மேகங்களிலே இழுக்கப்பட்டால்
1.இந்த உணர்வின் தன்மை மோதிய பின் மழை நீராகக் கொட்டு… கொட்டு… என்று கொட்டி… மேக வெடிப்பாகிப் (CLOUDBURST) பெரும் மழையாக
2.ஒரு வருடத்தில் பெய்யும் மழை ஒரு மணி நேரத்தில் பெய்து நகரமே வெள்ளக் காடாக ஆகி விடுகின்றது.

இந்த மாதிரி உலகத்தில் எந்த நிமிடம்… எது நடக்கும்…! என்று தெரியாத நிலையில் தான் இன்று இருக்கின்றோம்.

ஆகவே இன்றைய சூழ்நிலையில் எந்த நிமிடம் எந்த நிலை ஆனாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றிப் பிறவி இல்லா நிலைகள் அடைதல் வேண்டும்.

இதை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் (ஞானகுரு). யாம் சொன்ன முறைப்படி வளர்த்துக் கொண்டால் இதில் சிக்க மாட்டோம்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்துக் கொண்டால்
2.”ரிமோட் செய்வது மாதிரி…” ஒதுக்குப் புறமான இடங்களுக்கு அழைத்துச் சென்று “நாம் தப்ப முடியும்…”

ஏனென்றால் விஞ்ஞானத்தை மிஞ்சியது அந்த மெய் ஞானம்.

மெய் ஞானத்தின் உணர்வு வளரப்படும் பொழுது அதிலே வளர்ச்சி பெற்றவன்… மனிதனாக முழுமை அடைந்தவன் துருவ நட்சத்திரமாக நம் பூமியின் வடக்குத் திசையில் நிலை பெற்றிருக்கின்றான்.

1.அந்த உணர்வை எடுத்து நம்மைக் காக்கக்கூடிய சக்தியாக வளர்த்து
2.உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலையை அடைவோம்.

ஒலி கேட்டு உணர்ச்சி வசப்பட்டாலும்… “ஒளி கொண்டு” அதைத் தெளிதல் வேண்டும்

யானை நீர் மொள்ளும் ஓசையைக் கேட்டே அம்பெய்து சிரவணனைக் கொன்ற தசரதனின் செயலை வான்மீகியார் சுட்டிக் காட்டிய நிலைகளில் “சூட்சமப் பொருள் உள்ளது...!”

அது என்ன..?

பார்வை ஒளியற்ற பெற்றோரைச் சுமந்து செல்பவன் சிரவணன். ஒரு சமயம் அவனுடைய தாய் தந்தையர் தாகம் என்று தண்ணீர் கேட்டதும் அதற்காக நீரைத் தேடி அலைந்தான். ஆனாலும்
1.நீர் கிடைக்கும் வரை அவன் எடுத்த எண்ணம் என்ன...?
2.கடமை என்ற சொல்லும் உண்டு.
3.கடமையின் பால் உணர்வுதனை மாற்றிக் கொண்ட செயலும் உண்டு.

விலங்கினங்கள் நீர் அருந்தும் ஓசையைக் கொண்டே அந்த மிருகங்களைப் பார்க்காமலேயே மறைந்திருந்து குறி தவறாது அம்பெய்யும் ஆற்றல் பெற்றவன் தான் தசரதன்.
1.அதை வீரத்தில் சேர்ப்பதா...?
2.கற்ற வித்தையின் ஞானத்தில் சேர்ப்பதா...?
3.அல்லது உணர்வுகள் கூட்டிக் கொண்ட மோகம் அறிவுக் கண்ணை மறைத்ததாகச் சொல்வதா..?

ஏனென்றால் தசரதன் அவன் இளமையின் ஆற்றலால் கற்றுக் கொண்டதுதான் அந்தக் கலை. அவனுடைய செவிப் புலன் அறிவாக ஓசையைக் கொண்டு குறிப்பறியும் ஆற்றலைக் காட்டியது ஞானம் தான்.

ஆகவே வான்மீகியார் கூற வந்த தெளிந்த பொருள் என்ன...?

காமத்தின் விளைவால் மோகத்தில் கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் செயல்பாடு... சரீர உணர்வின் இயக்கத்தால்... “கருத்தறிய முடியாத அலட்சிய மனோபாவனையக் காட்டியது தான்...” தசரதனின் அந்தச் செயல்.

தண்ணீருக்காகத் தேடிய சிரவணன் அவன் எடுத்த சஞ்சல உணர்வலைகள் பாசத்தின் அடியாக பதைபதைப்பாக அவன் அறிவின் பொறி கலக்கமுற்றது.

அதனால் குறிப்பறியாத ஈர்க்கும் செயலில்... எதிர் மோதல் குணங்கள் உணர்வுகளின் உந்துதலால்... குறிப்பறியாச் செயலுக்கு அறிவின் மயக்கமே ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு... “வினைச் செயலின் விளையாட்டாக சிரவணன் நீர் மொள்ளும் சப்தம் அமைந்தது...!”

1.அப்படிப்பட்ட “சிரவணனின் அறிவின் மயக்கமும்”
2.ஒலி கொண்டு அறியும் ஆற்றலின் அலட்சியத்தால் விளைந்த “தசரதனின் அறிவின் மயக்கமும்”
3.சந்தர்ப்பத்த்கால் சந்தித்த சந்திப்பு... அம்பாகச் சிரவணன் உடலில் பட்டுத் தைத்து அவன் உயிரைக் குடிக்க முனைந்தது.

ஆனால் ஞான வழிச் செயல் ஆக்கத்திற்குத் தனித் தன்மையான பொருளும் உண்டு. எப்படி...?

செவிப்புலனால் ஒலி ஈர்க்கும் அறிவு செயல்பட்ட அந்தக் காலத்தில்
1.ஒளி கொண்ட ஒலி நாதத்தைத் தனக்குள் நிறைத்துக் கொண்டால்
2.புற உலகின்கண் எழும் சப்தங்களை உணர்ந்திட முடியாத செயலுக்கு
3.நமக்குள் சேக்கும் மெய் ஒலியின் அந்த ஓங்கார நாதமே அதிர்வுகளாக ஓசையைப் பெருக்கச் செய்து
4.அதே தொடரில் ஆத்ம வலுவைக் வலுக் கூட்டிக் கொள்ளும் உயிர் கலப்பால்
5.மெய்யை அறியும் உயர் ஞானமாக அது அமைந்து தெளிவான ஆக்கபூர்வமான செயல்களைச் செய்விக்கச் செய்யும்.

ஆகவே ஒலி கொண்டு புலன்களால் அறிந்தாலும் ஒளி கொண்டு ஒலியை ஊர்ஜிதப்படுத்திடும் மெய் ஞானம் பெற்றால் தான் நம் செயல்கள் என்றுமே வளர்ப்பின் வளர்ப்பை வளர்க்கும் செயலாக நன்மை பயக்கும்.

August 25, 2022

உடலை விட்டுப் போவது உறுதி தான்... அதற்காக வேதனைப்பட வேண்டிய அவசியம் இல்லை

ஆயுள் மெம்பராகச் சேரக்கூடியவர்கள் ஒவ்வொருவருமே குருநாதராக மாற வேண்டும். உங்கள் பார்வையில் தீமையைப் போக்கக்கூடிய சக்தியாக வளர வேண்டும். உங்கள் எண்ணம் உலகத்தை நல்லதாக்கும் அந்த உணர்வுகளாக விளைய வேண்டும்.

அருள் ஞானச் சக்கரம் இருக்கும் வீடுகளில் எல்லாம் ஈஸ்வரா...! என்று உயிரை எண்ணி அந்தச் சக்கரத்தை பார்த்து...
1.யாராக இருந்தாலும் சரி.. அவர்கள் உடல் நலம் பெற வேண்டும்...
2.lஅவர் நோய் நீங்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

இதைச் செய்தால் மற்றவருடைய துன்பங்களோ நோய்களோ துயரங்களோ நமக்கு வருவதில்லை.

ஒவ்வொரு உடலிலும் எத்தனையோ விதமான நிலைகள் இருக்கும்.
1.எப்படி இருந்தாலும் உடலை விட்டுப் போவது உறுதி தான்
2.அதற்காக வேதனைப்பட வேண்டியது அவசியம் இல்லை.

உடலில் நோய் இருந்தால் அது நீங்க வேண்டும் என்று சொல்லுங்கள். ஆனால் நோய் நீங்கி அவர்கள் வாழ்ந்தாலும் “எத்தனை வருடம் வாழ்கின்றார்கள்...!”

டாக்டரிடம் சென்று காசைச் செலவழித்து எல்லா மருத்துவமும் பார்க்கத்தான் செய்கின்றோம். உயிருடன் முழுமையாக இருக்கின்றார்களா...? இல்லை...!

நான் அதைச் செய்தேன்... இதைச் செய்தேன்... கடைசியில் இறந்து விட்டார்களே...! என்று எண்ணி வேதனைதான் படுகின்றோம்.

அப்படி எண்ணாதபடி...
1“எப்படி இருந்தாலும்” மகரிஷிகளின் அருள் உணர்வு அவர்களுக்குள் வளர வேண்டும்... உயர்ந்த நிலை பெற வேண்டும் மட்டும் எண்ணுங்கள்.
2.உடலை விட்டுப் போய்விட்டார்கள் என்றால் உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்
3.உடலில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நீங்கி அழியா ஒளிச் சரீரம் பெற்றுப் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று “இப்படித்தான் நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்...”

ஏனென்றால் அவர்களுடன் நாம் பழகியிருக்கிறோம். அவர்களுடைய உணர்வுகளும் நமக்குள் பதிவு உண்டு. மேலே சொன்னபடி எண்ணிச் செய்தால் தீமைகள் நமக்குள் வளராதபடி தடுத்துக் கொள்ளலாம்.

ஆகவே சக்கரத்திற்கு முன் நீங்கள் தியானம் செய்து
1.குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்
2.தொழில் நன்றாக நடக்க வேண்டும்
3.என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்
4.குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வசிஷ்டர் அருந்ததி போன்று வாழ வேண்டும் என்று வரிசைப்படுத்தி நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்
5.குறை என்ற நிலைகள் வரவே கூடாது.

ஏனென்றால் இந்தச் சக்கரத்தில் அவ்வளவு சக்திகள் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக அது வரும்.

துருவ நட்சத்திரம் எப்படி ஒளியாக இருக்கின்றதோ அந்த உணர்வோடு நாம் ஒன்றி வாழ வேண்டும்.
1.நம் குருநாதர் அதைக் கவர்ந்தார்... அதன் வழி அங்கே இருக்கின்றார்.
2.அதன் வழியில் நாமும் முயற்சி எடுக்கும் பொழுது அந்த உணர்வுகள் இருளை அகற்றிடும் சக்தியாக வரும்
3.துருவ நட்சத்திரத்தின் பால் நம்முடய பற்று அதிகமாகும்
4.வாழ்க்கையில் ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும்... சங்கடங்கள் உட் புகாது தடுக்கும்.

அத்தகைய உணர்வுகளை நாம் பெற வேண்டும்.

சமமான நிலை நிலைக்கச் “சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா…”

சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம். முயற்சியும் செய்கிறோம். ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை யார் எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட...பொட...!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்...!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே... நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்...! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும். அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா...?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்...” அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்... நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

அப்படியானால் பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே… தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்...!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன...? எப்படி...?

வாழ்க்கை நடை முறையில் மாற்றமான எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் மோதி அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ...ம் ஈஸ்வரா...! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி
2.அவ்வாறு சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன...?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ...ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து அதன் வழியில் செயல் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால் அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்...” என்று காட்டப்பட்ட
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமமான நிலை நிலைக்க வேண்டும் என்ற செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்...!

August 24, 2022

தியானத்தில் “ஞானம்” பெறுவது முக்கியம்

தியானம் என்பது தனித்து அமர்ந்து சக்தி பெறக்கூடியது அல்ல. காரணம்... எவ்வளவு சக்தி பெற்றாலும் நாம் அந்த “ஞான சக்தி” என்ற நிலையை அடிக்கடி நினைவுபடுத்தி அதைப் பெருக்கிக் கொண்டே வர வேண்டும்.

1.ஞானத்தின் உணர்வுகள் பெருகினால் தான்
2.இந்த வாழ்க்கையில் ஓரளவு சிந்தித்து செயல்படும் தன்மையும்
3.தீமையான உணர்வுகள் நமக்குள் வளராதபடியும்
4.மீண்டும் பிறவிக்கு வராதபடி தடைப்படுத்தும் சக்தியும் வரும்.

ஞானத்தின் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கி வளர்த்துக் கொண்ட பின்... உடலை விட்டுப் பிரிந்து சென்றால் உயிர் நேரடியாக நம்மை அங்கே அழைத்துச் சென்று விடும்... அதைப் பார்க்கலாம்.

செத்த பிற்பாடு என்ன...? என்று சாதாரணமாக நினைப்பார்கள்...!

யார் மீதாவது நாம் அதிகப் பற்றுடன் பிரியத்துடன் இருந்தால் இந்த ஆன்மா உடலுக்குள் வந்து எப்படி ஆட்டிப் படைக்கின்றது...? இறந்த பின் எத்தனை அவஸ்தைப்படுகிறது...? இன்னொரு உடலுக்குள் சென்று தான் கஷ்டப்பட்டது போல அவர்களையும் கஷ்டப்படுத்தும் நிலையாக வரும்.

அனுபவத்தில் நாம் பார்க்கலாம்.

உடலில் பட்ட அவஸ்தைகளை அங்கேயும் உண்டாக்கி வேதனையை அங்கேயும் எடுத்து அதை முழுமையாக்கிக் கொண்ட பின் விஷம் அதிகமாகி இந்த உடலை விட்டுப் போன பிற்பாடு நிச்சயம் பாம்பாகப் பிறக்கும்.

வேதனைகள் வந்த பின் சிந்திக்கத் தெரியாதபடி குடும்பத்திலோ தொழிலிலோ மற்றவர்களையோ வெறித் தன்மையாகப் பேசினால்... அல்லது அடித்துத் தாக்கும் உணர்வுகள் வந்தால்... அடுத்து புலியாகத்தான் பிறக்க நேரும்.

ஒரு உடலுக்குள் சென்று இத்தகைய நிலைகளை வளர்த்து வெளியே வந்தால் புலியாகத்தான் பிறக்கும்.

ஆனால்... ஒவ்வொரு நொடிகளிலும் இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் கேட்டாலும் அதை எல்லாம் நல்லதாக மாற்றி அமைக்கக்கூடிய சக்தி நமக்கு உண்டு.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அந்தச் சக்தியை எடுத்து
2.வருவதை எல்லாம் மாற்றி அமைத்துக் கொண்டே வரவேண்டும்.

தன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளரச் செய்ய வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தியால் பெற வீட்டில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அதே போல் நம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக இருக்க வேண்டும்... தெருவில் உள்ளோர் நன்றாக இருக்க வேண்டும்... ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்... உலக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்

சண்டையிடுபவர்களை நாம் பார்க்க நேர்ந்தால் அவர்களும் சிந்தித்துச் செயல்பட வேண்டும். உண்மையின் உணர்வுகளை உணர வேண்டும். ஒன்றுபட்டு வாழும் உணர்வு பெற வேண்டும். அவர்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

காரணம்... அவர்கள் சண்டையிட்ட உணர்வு நமக்குள் பதிவு இருக்கும். அதை மேலே சொன்னபடி எடுத்து மாற்றி அது நமக்குள் வளராதபடி பக்குவப்படுத்த வேண்டும்.

ஒரு செடியில் விளைந்த வித்தை அது அப்படியே விட்டு விட்டால் அது முளைத்து வளர ஆரம்பித்துவிடும். அது போன்று மற்றவர்கள் உணர்வுகள் சந்தர்ப்பத்திலே தான் நமக்குள் பதிவாகின்றது. அது வளராதபடி தடுக்க வேண்டும்.
1.அந்தக் குடும்பங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினால் அதற்கு இது எதிரான நிலை.
2.இப்படி இது வளரும் போது அந்த அணுக்கள் நல்ல அணுக்களாக நமக்குள் மாறும்.

ஆகவே ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி எத்தகைய தீமையையும் மாற்றி நம் உடலில் நல்ல அணுக்களாக அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

AGRICULTUREல் (விவசாயப் பண்ணைகளில்) வீரிய வித்தாக மாற்றுவது போன்றது செய்து பழக வேண்டும் ஒவ்வொரு உணர்வையும் நல்லதாக.. ஒளியாக... மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.

நுனிக் கரும்பின் சுவையை உணர்ந்தவர்களே ஞானிகள்

சுவையில் பொதுவாக இரண்டு வகை உள்ளது.

1.நாவினால் உணர்ந்து சரீரத்திற்குத் தேவையான ஆகார நியமனங்களின் மூலமாக ஊட்டப் பெறும் நிலை “அறுசுவை...!” ஒன்று.
2.மற்றொன்று எண்ணத்தால் சுவைக்கும் தனித் தன்மையான “பேரின்பச் சுவை...!”
3.இரண்டுமே பொது நிலைகளில் “எண்ணத்தின் வழி தான்...” கிடைக்கின்றது.

எண்ணத்தின் வழியாக இருந்தாலும் அனுபவ அணுகு முறைச் செயல்களின் மாறுபாட்டை உணரப் பெறும் பொழுது... “தான் உணர்ந்து... அனுபவத் தன்மையால்... பதிவு செயல் நடைபெறுகிறது...!”

உலக வாழ்க்கையின் எண்ண நினைவோட்ட வலுக் கொண்ட கால கட்டங்களில் அந்த எண்ண ஓட்ட வலுவிற்கு வீரியச் சுவை ஊட்டிட
1.ஆகார வழிகளில் பெறப்படும் முறைகள் அத்தனையும்
2.எதன் எதன் சுவைகளில் இச்சைப்படுகின்றோமோ
3.நாவின் அதி சுவைக்கு அடிமையாகும் அத்தனை நிலையும்
4.நம்மை அறியாமல் இயக்கும் உணர்வுகளின் உந்துதல்களின் வேகத்திற்கு நம்மை நாமே அடகு வைத்து
5.மீள முடியாதபடி ஓர் கட்டுக்குள் அடங்கி விடுகின்றோம்.

காற்றில் இருக்கும் அமில குணத் தன்மைகளில் படர்ந்துள்ள ஆகார நிலைகளை (மணங்களை) நுகர்ந்து அதற்குகந்த திட உணவைப் பக்குவப்படுத்திச் சமைத்துப் புசிக்கும் பொழுது ஏற்படுத்தப்படும் ஜீரண சமைப்பு அதன் மற்ற காலங்களில் கிரியா ஊக்கியாகி (உணவைப் பார்த்ததும் உமிழ் நீர் ஊறுகிறது அல்லவா...!) மறை பொருளாக நிற்கும்.

பின் சரீரச் செயல் நிலைக்கு அதை மாற்றும் பொழுது உடல் உறுப்புகளுக்குள் சுரக்கும் அமிலங்களும் அதில் சரீரம் சக்தி பெறுவதாகவே இருந்தாலும் காற்றில் கலந்துள்ள அமில குணங்களின் இயக்கமாகவே செயல்படும்.. “நம்மை அதன் வழியிலேயே இயக்கும்...!”

ஆனால் உயிர்த் தன்மையின் கட்டுக்குள் எண்ணமும் சரீரமும் செயல்படும் பொழுது
1.பேரின்ப நுகர்ச்சியை அனுபவிக்கும் ஆன்மா - தான் பெறும் நாவின் சுவையையே மாற்றி
2.நாசியின் வழி ஆகாரம் பெற்று
3.சரீர வளர்ப்புக்கும் உயிர்ச் சக்திக்கும் சக்தியூட்டி
4.புறக் கழிவுகளற்ற நியமனக் கட்டுப்பாடாக
5.மற்றொரு வழியை ஏற்படுத்திக் கொண்டு அனைத்துச் சக்தியையும் பெறும்.

இரகசியத் தன்மையாக ஒரே மரத்திற்கு இரு விதச் செயல் தன்மைகள் காட்டப்படுகிறது. அதாவது
1.உணர்வுகளின் அது உந்துதல் குணச் சுவை அமிலமே மரத்தின் மேல் நிலையும்
2.அது அடி மரமாகப் பக்குவமாக விளைந்த தன்மையே “மருந்தாவும்...” உபயோகப்படுத்தப்படும்.

ஒரு மரத்தின் அடி மரம் போன்ற விளைச்சலாக (மருந்தின் குணம் போல்) உள்ளடங்கி ஈர்க்கும் தியான முறைகளில் எல்லாம் எந்த எண்ணத்தை வழி நடத்துகின்றோமோ அந்த எண்ணத்திற்கொப்ப ஞான வளர்ச்சியின் வழி முறைக்கு அது வித்தாகும்.

ஆனால் அதுவே உணர்வின் உந்துதல் என்ற நிலையில் சரீரம் தொட்டு நீர்சக்தியாக அனுபோக முறைப்படுத்தப்படும் பொழுது எப்பொழுதோ உடலுக்குள் உணவு மூலமாக ஊட்டப்பட்ட நிலைகள் எல்லாம் தனக்குகந்த ஆகார நிலை அமிலம் (சுவாசத்தின் மூலம் உருவான உமிழ் நீர்) சூட்சமம் கிடைக்கப் பெற்றதும் நம் மனக் கட்டுப்பாட்டையும் மீறிச் செயல்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

சரீரத்திற்கு வலுக் கூட்டும் முறையாக சரீரத்திற்கு ஆகாரத்தை உட் கொண்டாலும்
1.காற்றின் வழி எடுக்கும் ஆகாரத்தையே (அந்தக் குணத்தையே)
2.முதன்மையாகக் கொடுத்துத் தன் ஞானத்தால் கூட்டிக் கொண்டான்
3.அன்றைய சித்தன் தனக்குகந்த வழித் தொடரில் எல்லாம்…!

சரீரத்திற்குக் கொடுக்கப்படும் திட உணவின் மூலம் உடலுக்குள் உருவாகும் அமிலங்களின் உணர்வின் உந்துதலை அடக்கிட காற்றிலிருந்து நேரடியாக ஆகாரத்தை எடுத்துத் தன் உயிரான்ம சக்தியை வலுப்படுத்திக் கொண்டார்கள் அன்றைய சித்தர்கள்...!

August 23, 2022

குருநாதருடன் ஆயுள் மெம்பராக நாம் இணைய வேண்டும்

வீட்டிலே சில பேர்களைப் பார்க்கலாம்…
1.இப்படிப் பேசுகின்றார்கள் உருப்படுவார்களா…? இப்படிப் பேசுகின்றார்கள் உருப்படுவார்களா…? என்று
2.இப்படிச் சொல்லிச் சொல்லியே “தன்னை உருப்படாமல்…” செய்து கொள்வார்கள்.

இந்த மாதிரிப் பேசுபவர்கள் உடல்களில் பாருங்கள்…! ரொம்பச் சங்கடங்கள் வரும். குடும்பத்தில் சண்டை வரும். பையன் மீது வெறுப்புகள் வரும்.

இவர்கள் எண்ணமே… உருப்படுவார்களா…? உருப்படுவார்களா…? என்று சொல்லும் போது மற்றவர்கள் இவர்களுக்கு உதவி செய்வதற்கு மாறாக பகைமையாக்கிப் பிரித்துவிடும்.

நண்பர்களிடம் அடிக்கடி இதைச் சொன்னாலும் அவர்கள் உடலில் பதிவாகி அவர்களும் இப்படிப் பேசுகின்றார்களே உருப்படுவார்களா…! என்ற நிலைக்கு வந்து விடுவார்கள். “எப்பொழுது பார்த்தாலும் இப்படிப் பேசுகிறார்கள்… இவர்கள் எல்லாம் உருப்படுவார்களா…?” என்று அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள்.

இப்படித்தான் மாறிக் கொண்டே போகும்.

எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் கேட்டாலும் அதை நுகரப்படும் பொழுது உயிரிலே பட்டுத் தான் அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.

தீமை என்று தெரிந்து கொள்கின்றோம்… நமக்குள் அது புகாது முதலில் தடுத்துக் கொள்ள வேண்டும். அப்படித் தடுக்க வேண்டும் என்றால்
1.ஈஸ்வரா… என்று உயிரான ஈசனிடமே வேண்ட வேண்டும்… அவன் தான் நமக்கு உணர்த்துகிண்றான்.
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும்… எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பெருக்கி பழகுதல் வேண்டும்.

மற்றவர்கள் தவறு செய்தாலும் கூட அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். ஒரு தெளிவான நிலைகள் அவர்களுக்குள் வர வேண்டும் என்று இந்த உணர்வை எடுத்தால் நமக்குள்ளும் தெளிவாகின்றது.

அதே சமயத்தில் அவர்கள் எடுத்தால் அங்கே தெளிவாகின்றது.
1.எடுக்கவில்லை என்றாலும் அங்கிருந்து வந்த உணர்வுகளை
2.நாம் மேலே சொன்னபடி எண்ணிச் சுவையாகச் சமைத்து மாற்றிக் கொள்ள வேண்டும்.

காரமான உணர்வின் தன்மை அவர்களுக்குள் இருந்தால் நோயின் தன்மை அங்கே விளைகின்றது. அந்தக் காரத்தை நமக்குள் எடுத்தால் அதே நோய் நமக்கும் வரும்.

ஆகையினால் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றால் நமக்கு ஒரு பாதுகாப்பு தேவை. அதற்குத் தான் ஒவ்வொரு நொடியும் அந்த துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுக்கும்படி சொல்கிறோம்.

துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து வளர்த்துக் கொண்டால் அதன் வழி உண்மை நிலைகளை நாம் உணர முடியும்.

கணவன் மனைவி இருவருமே அந்தத் துருவ நட்சத்திரத்தினுடைய சக்தியை எடுத்து ஒருவருக்கொருவர் பாய்ச்சப்படும் பொழுது தீமைகளை அகற்றி மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்.

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும். நம் குடும்பங்களில் முதலில் இதைப் பரப்பிப் பழக வேண்டும். நாம் எடுக்கும் உணர்வு நம் வீட்டில் மட்டுமல்ல… மற்ற இடங்களிலும் பதிவாகின்றது. அனைவருக்கும் கிடைக்கும் சக்தியாக வருகிறது

1.நம் குருநாதர் ஒளியாக இருக்கின்றார்
2.அவர் விண்ணிலே ஒளியாக இருப்பது போல நாமும் ஆயுள் மெம்பராக அவருடன் சேர வேண்டும்.

“சூட்சமத்தை…” உள்ளடக்கிய காவியமே இராமாயணம்

தந்தை சொல் தட்டாத தனயன் என்றும்... சகோதரப் பாசம் என்றும்... உலகுக்கு நீதியைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் போதனைகளை வலியுறுத்தி வாழ வழியைக் கூறும் இராமாயணக் காவியத்தை உலகினுக்குக் கொடுத்துள்ளார் வான்மீகி.

அதே சமயத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளையும் கட்டுப்பாட்டையும் புலப்படுத்தி அந்தந்தச் செயல் வழிகளிலும் “ஒரு சூட்சமத்தை உள்ளடக்கி...” உயிரான்ம ஆன்மத் தத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

1.“விதியின் பின் இராமன்...!” என்று காட்டுக்கு ஏகும் செயல் முறையை ஆத்ம ஞானம் பெறக்கூடிய வழிகாட்டியாகவும் உணர்த்தினார்.
2.இராமன் என்ற உயிர்த் தத்துவமும் சீதை என்ற ஆன்ம தத்துவமும் காட்டிற்குத் தவம் மேற்கொள்ளச் செல்லும் தன்மைகளில் ஆத்ம தத்துவப் படிப்பினையைக் காட்டுகிறார்.

இராமன் இருக்குமிடம் தான் அயோத்தி...! என்று குறிப்பிட்டுக் காட்டி நகர வாழ் மக்கள் எல்லோரும் இராமன் பின்னாடி செல்ல... விதி முன் செல்ல... இராமன் பின் செல்ல... பின் நகர மக்களும் உடன் சென்ற நிகழ்ச்சியாகவும் காட்டுகின்றார்.

அவ்வாறு காட்டியதன் உட்பொருள் என்ன...?

சரீர உயிரணுக்களின் செயலைத்தான் அவ்வாறு பொருள்படும்படியாகச் சூட்சமத்தில் காவியக் கதையாகத் தீட்டியுள்ளார் வான்மீகி.

உயிரான்மாவானது தனது எண்ண வழிச் செயல் முறைகளுக்கொப்ப விதி வழி செல்லும். விதி வழி செல்லும் பொழுது
1.உயிரின் பின் செல்லும் சரீர உயிரணுக்கள் அடையும் துன்பத்தையும் காட்டி
2.உயிர் ஆன்மச் சக்தியானது சரீர உயிரணுக்களின் நற்கதிக்குச் செயல்படும் ஈர்ப்பின் நிலையை விட்டு விடும் பொழுது
3.இந்தச் சரீரத்தில் வாழும் அத்தனை உயிரணுக்களுமே துன்புறும்…! என்று தெளிவாக விளக்கியுள்ளார் வான்மீகி.

இராமன் என்றாலும் இராவணேஸ்வரன் என்றாலும் “இரா…” என்னும் சொல் இரண்டும் பொதுவாக உள்ளது. மாயை என்று பொருள் பட இராமன் என்றும் இராவணன் என்றால் மாயையை ஆடையாகப் போர்த்திக் கொண்டவன் என்றெல்லாம் சூட்சமப் பெயரிட்டுக் காட்டுகின்றார்.

உயிர் ஒன்று தான்...! அது இராமனானாலும் சரி... இராவணேஸ்வரன் ஆனாலும் சரி..!
1.அவைகள் செயல் கொள்ளும் எண்ணச் செயலில்
2.விதி என்று அழைக்கப் பெறும் விளைவைத் தானே உருவாக்கிக் கொள்கிறது.

தான் உண்டாக்கும் அந்த வினையின் பயனுக்குள் தானும் ஒடுங்கி... ஒன்றி... அந்த விதியின் செயல் நிகழ்த்தும் நிகழ்வுகளுக்குத் தான் உட்பட்டு விடுகின்றது.

ஒவ்வொரு உயிரும் தன் எண்ணச் செயலின் இராமனாக ஆகிறது. ஆனால் அதே உயிர் எண்ண நினைவிற்கொப்ப அந்த எண்ணமே செயல்பட்டு இராவணேஸ்வரன் ஆகித் தன் ஆத்ம சக்தியை இழக்கிறது.

அது மட்டுமல்ல...!

1.அதே உயிர்ச் சக்தி தன்னைத் தான் அழித்துக் கொள்வதோடு தன் குலத்தையும் அழிக்கும் என்பதையும்
2.தன் சரீரத்தில் உள்ள குணத்தின் வாசனைக்கொப்ப வந்து உருவாகும் அத்தனை உயிரணுக்களையும்
3.தன் விதி வழிச் செயலால் கீழான இழி நிலைக்குக் கொண்டு போய்விட்டு விடும்...! என்று தெளிவுபடுத்துகிறார் வான்மீகி.

தன் குலத்தையே அழிவு நிலைக்குக் கொண்டு சென்று அழியக் காரணமாக
1.“இராவணேஸ்வரன் கொண்ட காம அந்தகாரச் செயல்...! என்ற குணத் தன்மைக்கு
2.தானே - அவனே காரணம் ஆயினான்.

ஆகவே விதி வழி செல்வதா..? என்பதையும் மதி வழிச் செயல் எது...? என்பதையும் எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் தெளிவு பெறுக…!

August 22, 2022

தியான வளர்ச்சியில்... நம் மூச்சலைகள் மோதினாலே அனைத்தும் ஒளியாக மாறும்

கணவன் மனைவியாக வாழ்பவர்கள் பாசத்துடன் இருப்பார்கள். அவர் கடுமையாக உழைத்துக் கொண்டே இருக்கின்றார். ஆனால் அவருடன் வேலை செய்பவர்கள் எல்லாம் தொல்லை கொடுக்கின்றார்களே... என்று எண்ணுவார்கள்.

இருந்தாலும் மனைவி இப்படி எண்ணி இந்த உணர்வைச் சமைத்து வெளிப்படுத்தினால் ஆண்கள் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் சுத்தமாக அது செயலற்றதாக மாற்றிவிடும் (பாசமாக இருப்பவர்களுக்குள்).

1.கணவருக்கு இந்த மாதிரித் தொல்லை வருகின்றதே... இப்படிச் செய்கின்றார்களே...! என்ற உணர்வை எடுத்தால்
2.கணவனை நினைக்கும் போதெல்லாம் இந்த உணர்வுகள் பாய்ந்து அவருடைய திறமைகளை எல்லாம் குறைத்துவிடும்.

இதையெல்லாம் மாற்ற நாம் அருள் ஒளி பெற வேண்டும்.
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவருடைய உடல் முழுவதும் படர்ந்து அவர் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும்
2.எங்கள் இரு மனமும் ஒன்று பட வேண்டும்... இரு உயிரும் ஒன்றாக இணைய வேண்டும்
3.இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று
4.இரண்டு பேரும் ஒரு ஐந்து நிமிடமாக எண்ணிப் பழக வேண்டும்

அதிகாலையில் முழிப்பு வரும் பொழுது இது போன்று செய்து பழக வேண்டும்.

நான்கு மணிக்கு மேல் உங்களை அறியாமலே அந்த முழிப்பு நிச்சயம் வரும். அந்த நேரத்திலே சுதாரித்து இந்த சக்தியை இரண்டு பேருமே எடுக்க வேண்டும்

பெண்கள் தங்கள் கணவருக்குக் கிடைக்க வேண்டும் என்றும் ஆண்கள் தங்கள் மனைவிக்கு அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.

அவர்கள் உயர்ந்த சக்தி பெற வேண்டும். குரு அருளைப் பெற வேண்டும் என்று இந்த உணர்வுகளை அதிகமாகச் சேர்த்து அவர்கள் பார்வையில் தீமை அகற்றும் அந்த அருள் சக்தி பெற வேண்டும் அவர்கள் பார்ப்போர் எல்லாம் நலம் பெற வேண்டும் என்று செலுத்திப் பாருங்கள்

அவர் சொல்லிலே இனிமை பெற வேண்டும். அவர் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும். அவரைப் பார்ப்பவர் எல்லாம் அந்த புனித நிலை பெற வேண்டும் என்று கணவன் மனைவிக்கு எண்ண வேண்டும். இதே போல மனைவியும் கணவனுக்கு எண்ண வேண்டும். ஒரு இரண்டு நிமிடமாவது இதை எண்ண வேண்டும்.

அதிகாலையில் இவ்வாறு செய்து விட்டு அடுத்து எழுந்தபின் ஒரு ஆனந்தமான நிலையாக இருக்கும்.
1.இது போன்று தொடர்ந்து செய்து வந்தால் வீட்டிலே பளீர்... பளீர்... என்று வெளிச்சம் வரும்
2.உங்கள் உடலில் இருந்து வீட்டிற்குள்ளேயே அது படரும்.

ஏனென்றால்
1.நாம் அருள் சக்திகளை நுகரப்படும் பொழுது அது பட்ட உடனே மோதி இருளை நீக்கி
2.அந்த வீட்டிற்குள் பளீர்... என்று ஒரு வெளிச்சம் வரும்... பார்க்கலாம்.

ஏனென்றால் உங்கள் மூச்சலைகள் பட்ட உடனே இது போன்ற நிலைகள் நிச்சயம் வரும்.

சூரியன் தனக்குள் விளைந்த பாதரசத்தால் தன் அருகில் வரும் மற்ற உணர்வுகளுடன் மோதி விஷத்தைப் பிரித்து விட்டுப் பளீர்... என்று இந்த பிரபஞ்சம் முழுவதற்குமே வெளிச்சமாகின்றது.

இதே போன்று நாம் வீட்டிற்குள் செய்தோம் என்றால் நம் உடலில் எடுத்துக் கொண்ட துருவ நட்சத்திரத்தின் சக்தியுடன்
1.தீமை என்ற உணர்வுகள் மோதிய பின் அது விலகிப் போகும்
2.நம் உடலில் ஒரு விதமான வெளிச்சம் வரும்
3.புதுவிதமான ஒரு மகிழ்ச்சி வரும்... அனுபவத்தில் பார்க்கலாம்.

ஒவ்வொரு நாளும் இதைச் செய்து பழகுங்கள். இப்படிச் செய்து வந்தீர்கள் என்றால் நான் கொடுத்த ஞான வித்திற்கு “நீங்கள் சக்தி ஊட்டுகின்றீர்கள்...” என்று அர்த்தம்.

மதி வழி முன் சென்றால்... வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்...

இராமன் என்றும் லட்சுமணன் என்றும் சீதை என்றும் அவர்களைச் சரீரமாக உருவமாகக் காட்டி வெளியிட்ட நிலையில் எல்லாம்
1.குணங்களாக நம் எண்ணங்கள் செயல்படும் விதத்தையும்
2.தன் ஆன்மாவின் செயலுக்குச் சக்தியூட்ட வேண்டிய காரியத்தை வலியுறுத்தியும்
3.போதனைகளாகக் (உபதேசம்) கொடுத்துள்ளார் வான்மீகி மாமகரிஷி.

ஆனால் ஆசை என்ற உணர்வுகள் செயல்பாட்டிற்கு வந்ததும் எந்த உணர்வுகள் அதைத் தூண்டியதோ அதே உணர்வுகளுக்கு வலுவூட்டிவிடும் ஆசை நிலையைச் சித்தரிப்பதே “மாயமான்...!”

அந்த மாயமான் மேல் சென்ற எண்ணமே வேரூன்றி உயிர்ச் சக்தியான இராமனை அந்த மானைப் பிடித்துக் கொடுக்கச் செய்தது சீதையின் நிலை. “ஆசை வழி உணர்வுகளின் உந்துதலின் செயல்” தான் அது.

உயிர் சக்தி (இராமன்) தடுத்தும் கேட்காமல் ஆன்மாவில் பதிவு செய்யப்பட்ட நிலை போல் திரும்பத் திரும்ப அதே எண்ண ஓட்டம் செயல் கொண்டு தனக்குகந்த வீரியத்தையே வலுக் கூட்டிக் கொள்வது போல் அந்த மானைப் பிடித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டது. (சீதை)

ஆன்ம சக்தியின் மீதுள்ள பற்றுதலாலும் தடுக்கப்பட வேண்டிய நிலை மாறி ஆசை உணர்வுகளின் வேகம் அந்த மாயமானின் பால் ஈர்க்கப்படும் நிலைகளை “அந்த ஆன்ம விளக்கங்களை... சூட்சமமாகப் பொருள்படுத்தியது...”
1.எல்லா ஆன்மாக்களும் உணர்ந்து பெறுதலுக்கு ஒரு காரணமும்
2.வெளியிடக் கூடாத இரகசியமாக மற்றுமொரு காரணமும் ஆகும்...!

ஆசை உணர்வுகளின் வழி ஏகிய உயிர்ச் சக்தி
1.அந்த உலகோதய ஆசை என்ற மாயமானை இனம் கண்டு கொண்டதும்
2.எண்ணமாகிய இராமபாணத்தைச் செலுத்தி அதன் ஓட்ட வீரியத்தை வலுவிழக்கச் செய்தது.

ஆன்ம சக்திக்குத் துணையாக நிற்கும் தைரிய குணச் சக்தியையும் ஆன்மா இழந்து... பலம் குன்றுவதைக் காட்டவே... இலட்சுமணனை இராமர் பால் அனுப்பிய சீதையின் நிலையாகக் காட்டப்படுகிறது.

அதாவது மனக் குழப்பங்கள் ஏற்படுவதைக் காட்டி தெளிவற்ற நிலையில் உண்டாக்கப்படும் உணர்வுகள் தன்னுடைய வீர குணத்தை அப்புறப்படுத்தி
1.ஆன்மாவைச் சக்தி இழக்கச் செய்கின்றன.
2.உயிர்ச் சக்தியையும் ஆன்ம சக்தியையும் பிரித்து விடுகின்றன.
3.பிரிப்பதன் மூல காரணம் உலகோதய “அதி ஆசை நிலை...!”
4.இதற்கு மானைச் சுட்டிக் காட்டியது “சூட்சம நிலை...”

மீண்டும் உயிர்ச் சக்தி தன் சக்தியாக ஆன்ம சக்தியை அடைய வேண்டி மாயமானாகிய அதி ஆசை நிலையைத் தான் தகர்க்கின்றது. ஆன்மாவாகிய சக்தி நிலை ஏக்க உருக்கொள்கிறது. அப்பொழுது தைரிய குண இலட்சுமணன் சாந்த குண இராமனை அணுகிச் சக்தியூட்டியதாகச் சொல்லப்படுகிறது.

எப்படி...?

உயர்ந்த சக்திகளை தைரிய குணத்தின் ஈர்ப்பில் சமைத்து வீரமான அந்தக் குணத்தையே சாந்த குணத்திற்கு வலுவூட்டி ஆன்மாவைச் சூழ்ந்துள்ள மாய இருளை அகற்றச் செய்கிறது.

ஆக இராவணன் என்ற அசுர குணத் தன்மைகளை சக்தி இழக்கச் செய்ய தன் எண்ணங்களான இராமபாணத்தைச் சக்தியாகச் செயல் கொண்டு போர் என்ற நிலையில்
1.எண்ணங்களின் எதிர் மோதல் போராட்டங்களாகவும்
2.குணச்சுவைகளுக்கொப்ப நிகழ்ந்த நிகழ்வுகளின் முடிவின் ஆக்கமே உயிராத்மாவுடன் கலந்த அல்லது கலக்கும் நிலை பெறுகின்றது.

அதாவது
1.உயிர் சக்தியினைப் பிரிந்தால் ஆன்மா தாக்கப் பெறும்..
2.அதுவே உயிருடன் கலக்கும் சிந்தனையாகக் காக்கப் பெறும்..! என்று வான்மீகியார் தெளிவாக்குகின்றார்.

அசுர குண எண்ணப் பிடிக்குள் சிக்கிக் கொள்ளும் ஆத்ம ஞானியையும் உலகோதய ஆசை நிலையாகிய மாயமான் வடிவம் கொள்ளத் தூண்டுகின்றன...!

ஏன்...?

காரணம் சரீரமும் அதற்குள் இருக்கும் சரீரத்தின் தனித்துவம் என்ற குணங்களும் தான்...!

அது மட்டுமல்ல...! பிற ஆன்மாக்களையும் அந்த ஆசை அலைக்குள் அகப்படுத்த போக்குக் காட்டி மயக்குகின்றன. அந்த மாய அலைக்குள் படும் உயிர்ச் சக்திகளையும் தன் வழிக்கே இழுக்க முயல்கிறது. (இது உலகில் ஒவ்வொருவருடைய அன்றாட வாழ்க்கையிலும் தினசரி நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி...!)

உண்மைதனை உணர்ந்து கொண்ட உயிர்ச் சக்தியாகக் காவியத்தில் இராமனைக் காட்டுகின்றார். தன் ஆன்மாவைத் தன்னிடத்திலிருந்து (உயிர் சக்தியிடமிருந்து) பிரித்துவிட நடக்கும் நாடகத்தை வான்மீகியார் அங்கே சுட்டிக் காட்டுகிறார்.
1.மாரீசன் என்ற ஞானி (மாயமான்) அந்த ஆசைக்குத் துணை போக
2.தானே அந்த ஆசை வலையில் பட்டு விட்டதையும்
3.எண்ணமாகிய இராமபாணம் பட்ட பின் மாரீசன் மீண்டதாகவும் காட்டி
4.உயிரான்மாக்கள் பெறும் ஞான நிலைக்கு உயரிய வழி வகுத்து
5.மதி வழி முன் சென்றால்... வீரிய ஏற்றமான விதி வழி பின் செல்லும்...! என்று அருளியுள்ளார் அந்த வான்மீகி மாமகரிஷி...!

இறந்தவர்கள் உடலிலிருந்து நமக்கு வரக்கூடிய தொல்லைகள்

உடலை விட்டு இந்த உயிர் சென்று விட்டால் அடுத்த கணம் இந்த உடல் சவமாகி விடுகின்றது. இறந்த பிற்பாடு உடலை உருவாக்கிய அணுக்கள் உயிரணுக்களாக மாறி… புழுவாகி இந்த உடலையே சாப்பிடுகின்றது.

சாப்பிட்டு இந்த உடல் தசைகள் தீர்ந்த பிற்பாடு அதுவும் இறக்க நேருகின்றது. நம் உயிரணுவைப் (உயிர்) போல் அதுவும் உயிரணுக்களாக மாறுகின்றது.

உயிரணுக்களாக மாறிய பின் அந்த உயிர் என்ன செய்கின்றது...?

1.யார் யாருடன் பழகி அந்த உணர்வுகள் தசைகளோடு இணைந்ததோ
2.இது உயிரணுவான பின் அவர்கள் உடலுக்குள் சென்று
3.அந்த உணர்வுகளைத் தீண்டி அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் உணர்வாகச் சேர்கின்றது.
4.உடல்களிலே பலவிதமான நோய்களை உருவாக்கும் தன்மை வருகின்றது.
5.தசைகளில் நோய் வருகின்றது… எலும்புகளிலே மற்றவைகளிலே நோயாக மாறுகின்றது.

அதாவது ஒருவர் இறந்த பிற்பாடு அவர் யார் யாருடன் நெருங்கிப் பழகினாரோ அந்தப் பழகியவர்கள் உடலில் இப்படிச் சேர்கின்றது.

ஆனால் உயிருடன் இருக்கும் பொழுது அவர்கள் உணர்வுகளைப் பதிவாக்கி நாம் கவர்ந்து கொண்ட பின் இதைச் சூரியன் எடுத்துக் கொண்டால் அந்த உடலில் இருந்து வரக்கூடிய சத்தை எல்லாம் அந்த உடலில் எந்த நோயாக மாறியதோ அதை எல்லாம் இங்கே உருவாக்குகின்றது.

இதுவே உயிரணுக்கள் வெளியே சென்ற பிற்பாடு
1.அந்த இறந்த உடலைச் சாப்பிட்டது போல இந்த உடலைச் (உயிருடன் இருப்பவர்கள்) சாப்பிடும் நிலைகளிலே
2.குஷ்டரோகமா மற்றும் அழுகிய நிலைகளோ படை பத்து போன்ற நோய்கள் வருகின்றது.

நான் ஒன்றுமே செய்யவில்லை… என் உடலில் படையாக வந்து விட்டது பத்து வந்துவிட்டது… ஒன்றும் செய்ய முடியவில்லை என்றெல்லாம் சொல்வார்கள்.

மனிதனுக்குள் தொடர்ந்த இந்த உணர்வின் அலைகள் இப்படி எல்லாம் மாற்றிக் கொண்டு போகின்றது. எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து வந்த பிற்பாடு மனிதனின் நிலைகள் இப்படி ஆகிறது.

இதை எல்லாம் மாற்றி அமைக்க நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் துருவனாகித் துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரம் ஆன அதிலிருந்து வரக்கூடிய பேரருள் பேரொளியை அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை நுகர வேண்டும்.

அதற்காக வேண்டித் தான்…
1.பல முறை உபதேசத்தைக் கொடுத்துப் பல விதமான உணர்ச்சிகளை நுகரச் செய்து
2.உங்கள் இரத்தங்களில் கலக்கச் செய்கிறோம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறச் செய்வதறகுத் தான் மணிக்கணக்கில் பேசுகின்றேன்.

ஒரு சிலர் அரை மணி நேரத்தில் சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள். மூன்று மணி நேரம் பேசுகிறேன் என்றால் நீங்கள் சுவாசிக்கும் அந்த அருள் உணர்வுகள் உங்கள் இரத்தங்களிலே கலக்கப்படுகின்றது.

எந்த அளவிற்கு உற்றுப் பார்க்கின்றீர்களோ இரத்தத்தில் கலந்து அந்த அணுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுகின்றது. உற்றுப் பார்த்துப் பதிவான உணர்வு கொண்டு மீண்டும் அதை எண்ணி எடுத்தீர்கள் என்றால் நான் (ஞானகுரு) கொடுக்கும் அருள் ஞான வித்து உங்களுக்குள் விளையும்.

அது விளையத் தொடங்கினால் ஒவ்வொரு நொடிகளிலும் மகரிஷிகள் பெற்ற அந்த அரும் பெரும் சக்தியை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

வாழ்க்கை எப்படி இருக்கின்றது…? குடும்பத்தில் கணவன் மனைவி எப்படி ஒன்றி வாழ வேண்டும்…? என்று யாம் சொல்லப்படும் பொழுது அதை வைத்து… சர்வ தீமைகளிலிருந்தும் நீங்கள் விடுபட முடியும்.

தீமை நம்மை இயக்காதபடி கணவன் மனைவி ஒருவருக்கொருவர் காத்துக் கொள்ளவும் முடியும்.

August 21, 2022

எந்த நல்ல காரியமாக இருந்தாலும் அதற்குத் தேவை “முயற்சி மட்டும் தான்...”

எந்த நிலை பெற வேண்டி விழையும் (ஆர்வம், விருப்பம்) மனம்... அதைப் பெற நல்ல நிலையாக எண்ணிச் செயல்படும் காலங்களில்
1.செயல் நிலை எப்பொருளோ அப்பொருளே கருத்தாகவும்
2.அந்தக் கருத்தின் கருப்பொருளே வீரிய வளர்ப்பாகவும்
3.அப்படிச் செயல்படுத்தும் நிலை எதுவோ அதுவே “முயற்சி...!”

கடலில் உருவாகின்ற சிப்பி தனக்குள் முத்தை வளர்ப்பாக்க எடுக்கும் முயற்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது...?

சரியான காலமறிந்து அந்தக் காலத்தைப் பயன்படுத்தும் விதமாக மழை நீர் தன்னுள் விழும் நேரத்தை அறிகிறது. அந்த நேரம் வாய் திறந்த நிலையில் அது எடுக்கும் உணர்வின் ஞானம் தன்னுள் விழும் நிலை கருத்தறிந்து உயிரணுவின் கருக்கொள்கிறது.

பின் வாய் மூடி ஒரிடத்தே அமைத்துத் தன் கருவின் கருவையே முத்தாக்கும் செயல் நிலைக்கு வருகிறது. இருந்தாலும் சில மாறுபாட்டின் தன்மையால் முத்து விளையாமலும் போகலாம்.
1.ஆனால் ஆக்கத்தின் ஆக்கம் ஊக்கம் என்பது போல் “முயற்சி விளைவாக்கும்...!”
2.முத்தாக விளையாவிட்டால் என்ன செய்வது...! என்று
3.சிப்பி மழை நீரைக் கவர முயற்சிக்காமல் இருப்பதில்லை (இது முக்கியம்..!)

அதைப் போல் தான் உயர் தெய்வீக உயிர்ச் சக்தி (நீல வண்ணராமன்) உலகோதய உடல் வாழ்க்கை மோதல்கள் நடை பெறும் கால கட்டத்தில்... விதி என்ற எண்ணச் செயல் வழி முறை வலுப் பெற்று வேறு வேறு திசைக்குத் தள்ளினாலும்... தன் உணர்வுகளின் செயல்பாட்டைத் தன் ஞானக் கட்டுக்குள் அடக்கும் முறைப்படுத்தினான். (முயற்சி செய்து)

வெளி மோதல் எண்ணங்களின் செயலுக்குத் “தான் ஏகும் முறை என்பது...”
1.விதி முன்னாடி செல்ல இராமன் பின்ன்னாடியே சென்றான்...! என்ற சொற்றொடரில்
2.நடந்த நிகழ்ச்சிகளின் செயலே விதி வழி முறையானாலும்
3.தன் வாழ்க்கையில் அப்படி வந்த அந்த மோதல் காலங்களில்
4.தன் சூழலில் தனக்கு எந்த வித மாற்றத்தையும்.. உயிர்ச் சக்தியின் சக்திக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை...! என்ற
5.சம நோக்குப் பெறும் நிலையை வான்மீகி மகரிஷி வற்புறுத்தி
6.பாசம் என்ற நிலையில் தனக்குள் வகுத்த சட்ட திட்டங்களுக்கும்... ஒழுங்கு வரை முறை நியமனங்களுக்கும் கட்டுப்பட்டே... உலக நியதி இயங்குகிறது...! என்று சொல்லி
7.இராமன் அதற்குக் கட்டுப்பட்டே அந்த “விதியின் வழி ஏகினான்...!” என்பதில்
8.உயர் சக்தி “மதியின் பால் இயங்க வேண்டிய அவசியத்தை... மாயமான் படலம்..!” மூலமாக வான்மீகியார் அருளியுள்ளார்.

ஆக வாழ்க்கையில் அன்றாடக் கடமைகளைச் செயல்படுத்திக் கொண்டு வந்தாலும்
1.விதி என்ற நிலையில் அது வீரியமாக இயக்கும் கால கட்டங்களில்
2.தன் உயிராத்மாவிற்குப் பாதிப்பு உண்டாக்கும் நிலைகளைத் தன் எண்ண வலு கொண்டு தவிர்த்த இராமன்
3.தியானம் செய்வதற்காகக் காட்டுக்குச் சென்றான்...! என்று காட்டும் நோக்கில் (சூட்சம உணர்வு)
4.உயிர் தன்மையின் உயர்வைக் காட்டுகின்றார் வான்மீகியார்.

உயிரின் உயர்வைக் காட்டும் வான்மீகி மாமகரிஷி விதி வழி செல்லும் செயல் வாழ்க்கையில் அதிலே வனத்தில் பட்ட துன்பங்களாகவும் கூறவும் தவறவில்லை.

இதை எல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டால் நாம் செல்லும் ஞானப் பாதையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சலிப்போ சோர்வோ சங்கடமோ சஞ்சலமோ நம்மை அண்டாது...!

August 20, 2022

குருநாதர் வழியில் காடு மேடெல்லாம் அலைந்து உண்மைகளைத் தெரிந்தாலும்... உலகம் எப்படிப் பார்த்தது...?

தனித்து நான் (ஞானகுரு) சாமியாராக இருந்தேன். குருநாதர் காட்டிய வழியில் காடு மேடு எல்லாம் அலைந்து பல அனுபவங்களைப் பெற்று விட்டு வந்த பிற்பாடு என் மனைவிக்கு இதையெல்லாம் சொன்னேன்.

ஆனால் “சாமியாராகப் போய்விட்டார்...!” என்று ஊரெல்லாம் என்னைத் திட்டினார்கள். குடும்பத்தை விட்டு விட்டுச் சாமியாராகச் சென்று விட்டார் என்று திட்டிய சொந்தக்காரர்களும் நண்பர்களும் ஏராளம்.

சாமியம்மாவும் “பாவிப்பயல்...! என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்...” என்று என்னைத் திட்டியதும் உண்டு. அதே சமயத்தில் என் பிள்ளைகளைக் கூப்பிட்டு உன் அப்பனிடம் காசு வாங்கிக் கொண்டு வா...! பெத்துப் போட்டுச் சென்று விட்டால் யார் கொடுப்பது...? என்று துரத்தி விட்டவர்களும் உண்டு.

இது எல்லாம் இமயமலையில் நான் குருநாதர் காட்டிய வழியில் அனுபவம் பெறுவதற்காகச் சென்ற போது நடந்த நிகழ்ச்சிகள்.

குருநாதர் எம்மைக் கோவணத் துணியைக் கட்டிக் கொண்டு தான் அங்கே போகச் சொன்னார். அங்கெல்லாம் பனி ஜாஸ்தி. அது சீன எல்லை வேறு. அதிலே பல இம்சைகள். துணி இல்லை கிடு... கிடு... என்று நடுங்குகின்றது.

அப்படி நடுக்கம் வரும் பொழுது குருநாதர் சிலவற்றைச் சொல்லியுள்ளார். அதன்படிச் செய்தவுடன் உடலுக்குள் வெப்பமாகி நடுக்கம் நீங்குகின்றது.

நடுக்கம் நீங்கியபின் என்னுடைய பையன் தண்டபானி இருக்கின்றான். அவனைக் காட்டுகிறார் குருநாதர்.

அவனுக்கு மூல பௌத்திரம் மாதிரி இரத்த இரத்தமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தெரு மூலையில் உட்கார்ந்து கொண்டு நைனா... நைனா... என்று சொல்லிக் கொண்டு வலி பொறுக்க முடியாமல் உட்கார்ந்து போய்க் கொண்டிருப்பதைக் குருநாதர் காட்சியாகக் காட்டுகின்றார்.

அதைப் பார்த்ததும் பாசத்தால் எண்ணியவுடன் உடனே எனக்குக் குளிர் அதிகமாகிறது. மறுபடியும் கிடு... கிடு... என்று உதறுகிறது. பார்த்தோம் என்றால் “கிர்...” என்று இருதயமே விரைக்கின்றது.

அப்பொழுது குருநாதர் என்ன சொல்கிறார்...?

அனுபவம் பெறுவதற்காக எனக்குக் காட்டிய அந்த மூன்று இலட்சம் குடும்பங்களை எண்ணச் சொல்கிறார்.

அந்தக் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் “நன்றாக வாழவேண்டும் என்று நீ இங்கிருந்து எண்ணு...” என்று அங்கே உபதேசிக்கின்றார்.

அப்பொழுது அவர்களுக்கெல்லாம் நல்லதாக வேண்டும் என்று எண்ணும்போது இங்கே குளிரினால் வரும் இரைச்சல் குறைகிறது. பனி என்னைத் தாக்கவில்லை.

ஏனென்றால்... இந்த உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு...? என்ற நிலையை அந்த இடத்தில் வைத்துத்தான் பாட நிலையாகக் கொடுக்கின்றார்.

அதாவது... அங்கே காட்சி தெரியும்போது “இப்படி ஆகிவிட்டதே...” என்று பையன் மேல் பாசம் வருகிறது. அதே சமயத்தில் சாமியம்மா (என் மனைவி) என்ன நினைக்கின்றது...?

இரண்டு மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அது பட்டினியாக இருக்கின்றது. ஏனென்றால் என் மூத்த பையன் அதைச் செய்கிறேன்... இதைச் செய்கிறேன்... என்று சொல்லி சொத்தை எல்லாம் இழக்கச் செய்துவிட்டான்.

இந்தச் சூழ்நிலையில்... இப்படியெல்லாம் இருக்கிறதே என்று சொல்லி மைசூரில் இருக்கும் என் மகள் என்னைத் திட்டுகின்றது. “பிள்ளைகளைப் பெத்துவிட்டுச் சோறு போடாமல் சுற்றிக் கொண்டுள்ளான்...!” என்று திட்டுகிறார்கள்.
1.இதெல்லாம் என் காதில் கேட்கிறது.
2.நான் இமயமலையிலிருந்து இதெல்லாம் பார்க்கின்றேன்.

பாசத்தினால் எடுக்கும் பொழுது எப்படியெல்லாம் இந்த உணர்வுகள் மாறுகின்றது...?

அந்த உணர்வால் நான் என்ன அவஸ்தைப்படுகின்றேன்...? என்று குருநாதர் அந்த இடத்தில் வைத்து நேரடி அனுபவமாகக் கொண்டு வருகின்றார்.

ஆக...
1.கஷ்டப்படும் குடும்பங்களை எண்ணி அவர்களுக்கெல்லாம் நல்லதாக ஆகவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சும் போது குளிர் ஒடுங்குகின்றது.
2.அதே சமயத்தில் குடும்பப் பாசம் என்ற நிலையில் அந்த இடத்தில் எண்ணும் பொழுது குளிர் பாதிக்கின்றது... நல்லதை எண்ண முடியவில்லை.

சிலர் எல்லோருக்கும் நல்லவைகளைச் சொல்வார்கள். தன் குடும்பப் பற்று வரும்பொழுது “தன் பையன்... தன் பிள்ளை...” என்று வரும்போது அவர்களுக்குள் அந்த உணர்வுகள் வரத்தான் செய்யும்.

ஏனென்றால் அந்தப் பாசம் என்ற உணர்வு வரும்போது எப்படியெல்லாம் தடைப்படுத்துகிறது...? என்று இமயமலையில் வைத்து குருநாதர் சொல்லிக் கொடுக்கின்றார்.

யாம் சந்தித்த அந்த மூன்று இலட்சம் பேரை எண்ணி... அவர்களெல்லாம் நலம் பெற வேண்டும் என்று அங்கிருந்து எண்ணச் சொல்கிறார்.

இப்படி பல வகையில் சிரமப்பட்டு உண்மைகளை எல்லாம் தெரிந்து நான் இங்கே வந்த பிற்பாடு சில இடங்களில்
1.இந்தச் சாமி கல்யாணம் செய்து விட்டாரே...!
2.கல்யாணம் பண்ணிய சாமியார்கள் எல்லாம் அயோக்கியச் சாமியார்கள் என்று இப்படியும் சொல்கின்றார்கள்.

காரணம்... சாமியார் ஆகிவிட்டால் கல்யாணம் செய்யக்கூடாது.

எப்பொழுதாவது என் மனைவி என் அருகில் வந்து ஏதாவது பேச முற்பட்டால் சில பேருக்கு இதைப் பார்க்கும் பொழுது “குடும்பப் பற்றுடன் இருக்கின்றாரே இந்தச் சாமியார்...” என்று சொல்கின்றார்கள்.

இது எல்லாம் “மனித உணர்வுகளுக்குள்...” நடந்த நிகழ்ச்சிகள்.

காம குணத்தை அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது தெய்வீகம்...! – “காமாட்சி”

காமத்தின் அடியாகப் பிறக்கும் “மோகம்...” என்பது சரீர உணர்வு அலைகளின் நாதத்தில் கலந்து தனக்குத் தேவையான ஆகார அமில குணத் தன்மைகளை தனதாக்கிக் கொள்ளும் தன்மை பெற்றது.

1.புலனறிவு கொண்டு ஈர்க்கப்படும் செயல் எண்ணத்திற்கும்
2.ஆகார நியமனங்கள் இல்லாது சரீரம் தொட்டு இயக்கப்படும் எண்ணத்திற்கும்
3.தனக்குத் தானே சில கட்டுப்பாடுகள் வழியமைத்துக் கொண்டு
4.மனோ தைரிய வீரிய குணத்தை வீரமான செயல் தன்மை கொண்டு செயல்பட
5.சபலம் (மோகம்) தானே தன் வழி செல்லா நிலையில் மறைந்து விடும்.

குரு தன் சிஷ்யனை உயர்த்தும் மார்க்கத்தில் சபலத்தின் வழியில் சிக்காதபடி பயிற்சி வழி முறைகளைக் காட்டிப் பக்குவப்படுத்துவார். அந்தப் பக்குவத்தில் நற்குணங்களின் உயர் தன்மையின் வீரிய குண செயல்பாட்டையும் போதிப்பார்.

அப்படிப்பட்ட ஒரு உயர்வின் சிறப்பைக் குரு வழியாகக் காட்டும் காவியம் இராமாயணத்தில் “பூவினும் மெல்லிய மனம் கொண்ட பெண் கல்லானாள்...!” என்று அகலிகையைக் காட்டுகிறார்கள். அந்தக் கல்லே பின் “பெண்ணாக ஆனாள்...!” என்றும் காட்டுகிறார்கள்.

அதனின் உட் கருத்து ரிஷித் தன்மை பெற வழி காட்டும் போதனைப்படுத்திய வான்மீகி மாமகரிஷி ரிஷி பத்தினி சக்தியும் பெற வேண்டும் என்ற சூட்சமத்தைக் காட்டுகிறார்.

விசுவாமித்திரர் பெற்ற உபதேசத்தில் அவர் பெற்ற சக்தியின் செயலையே கல்லான அகலிகை தன் நிலை உயர்த்தப் பெண் ஆனாள் என்று “அகலிகை சாப நீக்கப் படலத்தில்” காட்டுகின்றார்.

ஏனென்றால் காம குணத்தையே அடக்கி ஆட்சி செய்யப்படும் பொழுது அது “தெய்வீகம்...” அதையே “காமாட்சி...” என்று காட்டுவதும் ஈஸ்வரத் தத்துவமுமே.

ஆனால் மோகத்தின் வேகத்தைக் காட்டினால் என்ன ஆகும்...?

அங்கே தெய்வீகத் தன்மைகள் மாறி சிருஷ்டி அல்லாத தன்மைக்கு அந்தக் குணங்கள் தனக்கொத்த வீரியம் கொள்ளும் பொழுது காமம் அந்த மோகத்தின் சபலமாகி விடுகின்றது.

அந்த மோக மயக்கம் நீக்கும் தத்துவத்தைச் “சாப நீக்குப் படலம்...” என்று செயல்படுத்தி ரிஷி பத்தினி சக்தியின் உயர்வைத் தன் காப்பியத்தில் பாசம் என்ற வழிச் செயலுக்கு ஆக்கம் தந்தார் அந்த வான்மீகி மாமகரிஷி.

கௌதம முனிவருக்குத் தன் நிலை உயர்த்த ரிஷி பத்தினி வேண்டும். அந்தச் சக்தியின் தொடர் அகலிகையின் எண்ணத்தின் பால் செலுத்திப் பெற அகலிகையின் சிறு சலன சபலம் தடையாகிப் போனதால்
1.கௌதம முனிவன் பெற்ற சஞ்சல சபல நிலை நிறைவேறாத எண்ணத்தால்
2.தனக்குள் எழுந்த கோபமும் அந்தக் கோபத்தின் பின் எழுந்த விரக்தியும்
3.விரக்தியின் பின் எழுந்த மனோதிடமும் வைராக்கியமும்
4.இந்தக் கூட்டு முறை வழித் தொடரில் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு
5.தானும் தனித்த சுயப்பிரகாசத்தை எட்ட மண்டலமாவேன்...! என்ற சுய வீரிய குணத்தைக் காட்டவே “அகலிகை கல்லானாள்…!”

சபல குணம் என்று உருவகப்படுத்திக் காட்டவே இந்திரன் என்ற பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் வான்மீகி.

சபல குண வலையில் விழுந்ததால்... தன் மனது சபல குணத்தின் பால் திருப்பிய குணத் தன்மையால்... இந்திரனால்... “அகலிகை தன் நிலையில் மாசு கொண்டாள்...” என்பது மோக குணத்தால் தான்…!

1.இந்திரன் என்ற சரீர உருவகத்தை யாரும் மனத்தினாலும் எண்ண வேண்டியதில்லை...!
2.இந்திரன் என்று மகரிஷி காட்டியது மோகத்தால் எழும் சபல குணத்தைத்தான்…!

ரிஷி பத்தினி என்ற சிறப்பை அகலிகையின் சக்தி கௌதம முனிவனின் சக்தியுடன் ஒன்றும் பொழுதுதான் அளவிடுவதற்கரிய சிறப்பைப் பெறும் என்பதையும் சிவ சக்தி என்ற ஐக்கிய நிலையில் தான் வானஇயலில் மண்டலமாக வளரும் சக்திக்கு வலுக் கொள்ள முடியும் என்பதையும் நன்கு புலப்படுத்தி உலகிற்கு நீதியைப் போதனைப்படுத்தும் தன்மைக்கு அதை அருளியிருக்கின்றார்.

இதே தொடர்பை விசுவாமித்திரர் வாயிலாகவே வான்மீகியார் காட்டி உபதேசிக்க வைக்கின்றார்.

அதாவது அகலிகை தன் நிலை உணர்ந்து தன் உயர்வைத் தான் தேடிக் கொண்டு தன்னுடைய பதியான கௌதம முனிவனுக்குச் சக்தியூட்டித் தானும் அந்த முனிவனின் சக்தியுடன் ஒன்றுதல் என்பதே
1.பால்வெளி சூட்சமத்தில் கலக்கும் தொடர்பைக் காட்டி
2.ரிஷியின் சக்தியுடன் தான் ரிஷி பத்தினிச் சக்தியாகக் கலக்கும் ஆத்ம கலப்பே
3.ஆத்ம ஜோதிக் கலப்பாக முழுமை பெறும் என்று காட்டுகின்றார்.

இப்படிப்பட்ட பூரணத் தன்மையைப் புரிந்து கொள்ளக் கூடிய காவியத்தை.. சூட்சமமாகக் காட்டப்பட்ட அந்தத் தத்துவத்தையே... பலர் “சபல குணத்தை இந்திரன்...” என்று உருவகப்படுத்தி தங்களுக்குள் உள்ள அறிவின் ஞானத்தால் அறிந்தோ அறியாமலோ மாசுபடுத்தி விட்டார்கள்.

இராமன் கால் பட்டு அகலிகைக்கு விமோசனம் என்பதன் பொருள் என்ன...?

அகலிகைக்குக் குருவாகி உபதேசிக்கும் தன்மையில்
1.அவள் கல்லான மனத்தின் பால் நின்று
2.ஜெபம் என்ற வழி முறையை... அந்த உயர்வைப் பெறும் வழியை...
3.விசுவாமித்திரர் புரிய வைத்தார் என்பதே அதன் பொருள்.

August 19, 2022

போக்கிரி வலுவானவன் தான்… ஆனால் உடலுக்குப் பின் எந்த நிலை அடைகிறான்…?

ஒரு போக்கிரி இருக்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவன் மற்றவர்களை அடித்து உதைத்துப் பழக்கப்பட்டவன். ஒருவன் மற்றவனை அடிப்பதை இவன் பார்த்தால் மன தைரியத்தோடு இருப்பான்.
1.அப்படித் தான் அடிக்க வேண்டும்…! என்று சொல்வான்.
2.ஏனென்றால் அவன் அடித்துப் பழகியவன்
3.அடித்து அடித்தே அவன் உணர்வுகளை வலுப் பெற்றவன்.

அவனுடைய அழுத்தம் அதிகமாக இருப்பதால் மற்றவர்கள் அடிப்பதை இவன் பார்த்தாலும் “அப்படித்தான் வேண்டும்…” என்ற வகையிலே தன்னுடைய உணர்ச்சிகளை வலுப்படுத்திக் கொள்கின்றான்.

ஆனால் ஒருவன் மற்றவனை அடிப்பதைப் பார்த்தால் நமக்கு நடுக்கம் தான் வரும். பயமும் பதட்டமும் சேர்ந்து வரும்.

போக்கிரியினுடைய அழுத்தம் மற்றவர்களைச் செயலிழக்கச் செய்து உடல் உறுப்புகளைப் பின்னப்படுத்தும். அத்தகைய பின்னப்படுத்தும் உணர்வுகள் வரப்படும் பொழுது அதே உணர்வைத்தான் அவனும் வளர்த்துக் கொள்ள முடியும்

அடுத்தவர்களைச் சிதையச் செய்த உணர்வுகள் தான் அவனுக்குள் சுவாசமாகி அதுவே உடலுக்குள் வளரும். உடலை விட்டுப் பிரிந்தால்
1.“எட்டுக்கால் பூச்சி… ஆக்டோபஸி…!” போன்ற பல விதமான உயிரினங்களாக மாறி அதிலே அவன் அவஸ்தைப்படும் தன்மை வரும்.
2.உணவைச் சரியாக உட்கொள்ள முடியாது கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சி இனங்களாக உயிர் உருவாக்கி விடும்.

மற்றவர்களைக் காக்க வேண்டும் என்ற நிலையில் மனிதனாக இருக்கின்றோம். இருந்தாலும் உயிர் அதுவாக மாற்றி விடுகின்றது.

இது போன்ற உணர்வுகளை மாற்றுவதற்குத் தான் துருவ நட்சத்திரத்தின் உணவுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம். ஆயுள் கால மெம்பராகச் சேரும் நீங்கள் அதன் தொடர்பை எடுத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் வலுவாக்க வேண்டும்.

சண்டை செய்தவர்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும். அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் பூரண குணம் கிடைக்க வேண்டும் என்று இத்தகைய உணர்வுகளை எண்ணிச் சொல்லுதல் வேண்டும்.

ஆகவே இப்படி நாம் நுகர்ந்த உணர்வுகள் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து கொண்ட பின் அது நம் உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலக்கின்றது.

இரத்தத்தில் அது சுழன்று வரப்படும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குச் சுவையான உணர்வாக மாறிவிடும்.

அடுத்தவர்களைப் பற்றி நன்றாக வேண்டும் என்று சொல்லும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் நல்ல முறையில் வளரும்.

அப்பொழுது எதனுடன் தொடர்பு கொள்கின்றது…?

1.உயிருடனும் துருவ நட்சத்திரத்துடனும் தொடர்பு கொள்கிறோம்.
2.இதைத்தான் விஷ்ணு தனுசு என்று சொல்வது
3.உயிருடன் ஒன்றி... உணர்வின் தன்மைகளை எல்லாம் ஒளியாக்குகின்றோம்.

சக்கர வியூகம்

எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் பதிவு செய்கின்றோமோ… அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில் “தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்தச் சப்த நாத ஒளி வட்டத்தில் எது வீரியமாக இருக்கின்றதோ…!” அதனின் தொடர் செயல் நிகழ்வில்… (அந்த) எண்ணம் உருவாக்கிடும் உருக்கோலமாகத் தான் நாம் ஒவ்வொரு நாளும் உருவாகின்றோம்.

பூமியின் சுவாச நிலை அதாவது பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமிலத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் நிறம்… மணம்… நீரமில மூலத் தொடர் இந்த முக்கூட்டின் ஆதிமூலத்தையே கண்டிடலாம்.

1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய ஈர்ப்பின் பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலகோதய ஈர்ப்பின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செயல் கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் பெற வேண்டும்.

வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற்றிட வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…!” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.

சங்கட உணர்வின் ஈர்ப்பால் அத்தகைய அமிலங்கள் நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் சரீரத்தில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.

ஒரே நிலை கொண்டு செயல்பட வேண்டும் என்றால்
1.எதிர் மோதலாக வரும் உணர்வுகளை
2.அது நமக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…!”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.

“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.

இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகோதய கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனாக நிச்சயம் ஆக்கம் பெறும்.

August 17, 2022

துருவ நட்சத்திரத்தின் அழுத்தம் எப்படிப்பட்டது...?

பிரபஞ்சத்தில் வருவது அனைத்தையும் சூரியன் தன் பாதரசத்தால் மோதி வெப்பம் காந்தமாக உருவாக்கப்பட்டு விஷம் தனித்துப் பிரிந்து ஓடுகின்றது.

ஆனால் அந்த விஷத்தை வெப்பகாந்தம் மறுபடியும் எடுத்து அணுக்களாகச் சேர்த்து “எலக்ட்ரிக் எலக்ட்ரான்...” என்ற நிலையில் மற்ற பொருளை எடுத்துச் செல்கிறது.

அதே சமயத்தில் 27 நட்சத்திரங்களிலிருந்து வரக்கூடியது ஒரு அழுத்தமான உணர்வுகள் கொண்டது... அது மிகவும் வலுவானது. அது நேராகச் சூரியனுடைய ஈர்ப்புக்கு வரும்போது...
1.வரும் பாதையில் பார்த்தோம் என்றால் மற்ற நுண்ணிய அணுக்கள் எல்லாம் அதைக் கண்டு அஞ்சி ஓடி ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும்
2.அப்போது அதனுடைய அழுத்த நிலைகள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைக் கண்டறிந்து
3.நியூட்ரான் என்று அதற்கு விஞ்ஞானிகள் பேரை வைக்கின்றார்கள்.

அது “நியூட்ரானாக...” எப்படி மாற்றமடைகின்றதோ அதே போல நமக்குள் இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு எதையுமே “நல்லதாக” மாற்ற முடியும்.

எதை வைத்து...?

27 நட்சத்திரங்களிலிருந்து வருவது வலுவான நிலைகள் கொண்டு சந்தர்ப்பத்தால் மோதுகின்றது. ஆனால் நம் குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அந்தந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கச் சொல்கின்றோம்.
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது
3.இதனுடைய உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று மோதி இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
4.எத்தகைய தீமையையும் மாற்றி அமைக்கக்கூடிய சக்தியாக உருவாகின்றது.

மாடு ஆடுகள் இவைகள் எல்லாம் இயற்கையில் வந்ததை உணவாக உட்கொண்டு அதனுடைய உணர்ச்சிக்குத் தக்க தான் இயங்குகின்றது. ஆனால் மனிதன் இயற்கையிலே விளைந்ததை வேக வைக்கும் போது அந்தச் சந்தர்ப்பம் அதனுடைய சக்தி இழக்கப்படுகிறது.

நெருப்பிலே பாத்திரத்தை வைத்து மற்ற பொருள்களைச் சேர்த்து எதன் எதன் அளவுகோல் கொண்டு அதற்குள் போடுகின்றோமோ அதை ருசியாக மாற்றுகின்றோம்.

இயந்திரத்தையோ மற்ற கருவிகளையோ உருவாக்க... உலோகத் தன்மைகளையும் இதே மாதிரித் தான் செயல்படுத்துகின்றோம்.

பல விதமான நோய்களை நீக்க அதற்குண்டான மருந்தினைக் கலவையாக உருவாக்கி அதை மருந்தாகக் கொடுத்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறோம்... நோய்களையும் தணிக்கின்றோம்.

அதே போல் தான்
1.தீமைகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து அடுத்த கணமே அதிலே இணைத்து விட்டால் அதனுடைய செயலை இழக்கச் செய்துவிடும்.
3.அப்போது தீமைகளை இழுக்கும் சக்தி குறைகின்றது.

ஏனென்றால் துருவ நட்சத்திரம் எல்லாவற்றையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது. அந்த உணர்வினை உடலுக்குள் சேர்க்கப்படும் பொழுது
1.27 நட்சத்திரத்தின் உணர்வுகள் எப்படி வலுவாக வருகின்றதோ (நியூட்ரான் போல்)
2.அது போன்று அழுத்த நிலைகளில் துருவ நட்சத்திரம் தீமையினுடைய செயலை இழக்கச் செய்கின்றது.

சில பேருக்குத் தன்னை அறியாமலே பதட்டங்கள் வரும். ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்ட பின் அந்தப் பதட்டம் வராதபடி மன வலிமையைக் கொடுக்கும். பதட்டமான உணர்ச்சிகள் நம்மை இயக்காதபடி தடுக்கலாம்.

மன வலிமை கூடிய பின் சிந்திக்கும் ஆற்றல் கூடுகின்றது. அந்த சந்தர்ப்பத்தில் எப்படிச் செய்யலாம்...? என்று அதற்குத் தக்க உபாயங்களும் வருகின்றது.

கஜலக்ஷ்மியாக அமர்ந்திட்டாள் பூமித்தாய்

1.சுவாசத்தின் வீரியத்தைக் காட்டிட நாசியாக யானைகளையும்
2.சுவாசத்தில் நறுமணத்தைக் காட்டிடத் துதிக்கையில் அமுதக் கலசத்துடன் மலர்களையும்
3.மன எண்ண வீரியத்தின் தூய்மையைக் காட்டிட ஏழு எண்ணங்கள் கலந்த (தூய்மை எண்ணமாக) வெண்மையான யானையின் நிறத்தையும்
4.சுவாச நிலை முக்தி பெறும் தொடருக்கு ஆதி மூல நீர் சக்தியைக் காட்டியும்
5.நீரடி மூல வித்து நீர் மண் தொடர்பில் சித்தன் நிலை பெறும் சித்துக்கள் என்பதைக் காட்டிட நீரின் சுவாசத்தை ஈர்த்துச் சமைத்திடும் ஆகார நியதியைக் கொண்டு முளைத்து நீர் மேல் கிளைத்தெழும் தாமரை இதழ்களைக் காட்டி
6.பரிபூரணத்தைப் பெற்றிடும் வழியாக வண்ண மலரில் அமர்ந்திட்டாள் “கஜலக்ஷ்மி…!” என்று அன்று உணர்த்தினார்கள் ரிஷிகள்.

மண்டலமாக உருக்கோலம் பூண்ட நம் பூமித் தாய் பெற்று வளர்த்திட்ட… இன்னும் வளர்ச்சியின் வலுக்கொள்ளும் ஈர்ப்பின் செயலில்… தன்னை மேன் மேலும் வளர்த்துக் கொள்கின்றது.

அதைப் போல் பூமித் தாயின் செல்வங்களான ஒவ்வொரு உயிரான்மாவும் ஆதிமூலச் சக்தியின் தொடர் கொண்டு தன்னை வளர்ச்சி நிலைப்படுத்திடும் தொடருக்கு “கஜலக்ஷ்மியாக அமர்ந்திட்டாள் பூமித்தாய்…! என்பதிலும் அதே சூட்சமமே காட்டப்பட்டுள்ளது.

August 16, 2022

நமக்கு லாபகரமானது எது…?

வீட்டில் கஷ்டமோ சங்கடமோ மற்றதோ வந்தாலும்… “அட போ…!” என்று இந்த உணர்வைப் பெருக்கிப் பாருங்கள்
1.இந்த உணர்வுகள் வலுக்க… வலுக்க… வலுக்க…
2.செய்வினையோ தோஷங்களோ மற்ற எதுவாக இருந்தாலும் நமக்கு அது ஒரு லாபகரமானதாக மாறிவிடும்.

பொருளையோ இந்த உடலையோ சொத்தையோ எண்ணிவிட்டால் பற்று இங்கே வந்து விடுகின்றது… புவியின் ஈர்ப்புக்கே வருகின்றது.

இந்த மாதிரி ஆகிவிட்டதே…! நான் எப்படி வாழப் போகின்றேன்…? என்று எண்ண வேண்டியது இல்லை. இந்த உடல் எப்பொழுதுமே மடியக்கூடியது தான்…! அதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இருந்தாலும்... இந்த உடலில் இருந்து தான் உயர்ந்த சக்திகளை எடுக்க முடியும். வாழ்க்கையில்
1.துன்பத்தைச் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் எப்பொழுது வருகின்றதோ அப்போது தான்
2."அதிலிருந்து விடுபட வேண்டும்..." என்று உணர்வு வருகின்றது.

வீட்டில் இருக்கக்கூடிய எலிக்கு… பூனையைப் பார்க்கும் சந்தர்ப்பம் வருகிறது. சந்தித்த பின் பூனை எலியைப் பிடித்து விட்டால் பூனையின் நினைவு தான் எலிக்கு வருகின்றது.

எலியோ பூனையின் உடலுக்கு அது இரையாகின்றது. இரையாகும் போது நரக வேதனைப்படுகிறது. ஆனால் எலியினுடைய அந்தச் சந்தர்ப்பம் தீமையில் இருந்து விடுபட வேண்டும்... வேதனையில் இருந்து விடுபட வேண்டும்... என்று எண்ணுகிறது.

பூனை எலியைப் பிடித்த பின் எலியின் உயிரான்மா அதனுடைய வலுவைப் பெற்று அதனின் சந்தர்ப்பம் எலி பூனையாகப் பிறக்கக்கூடிய நிலை வருகின்றது

அதே போல இந்த மனித வாழ்க்கையில்
1.கஷ்டம்... தொல்லை... என்று வரப்படும் பொழுது
2.அதை எல்லாம் “அருளைப் பெறக்கூடிய சந்தர்ப்பம் என்று நினைத்து விட்டால்”
3.வேதனை என்ற நிலையே வராது.

சொல்வது அர்த்தம் ஆகின்றது அல்லவா.

எப்படித்தான் இருக்கட்டும்…! இந்த உடலோ சொத்தோ சுகமோ நம் கூட வருகின்றதா…? இல்லை.

இந்தத் தீமைகளை எல்லாம் நீக்கிய அருள் உணர்வுகளை வலுவாக்கப்படும் பொழுது அதன் வழி உயிர் வெளியேறிய பின் இன்றைய செயல் நாளைய சரீரமாக மாறுகிறது.

"எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்..." என்று அவருடைய நினைவை கூட்டிக் கொண்டே வந்தால் இந்த உணர்வுகள் வலுப்பெற்று இந்த உடலுக்குப் பின் யாரை நினைவுக்குக் கொண்டு வந்தோமோ… உயிரான்மா அங்கே தான் செல்லும்.

அவர்கள் உடலில் சேர்ந்த பின் மீண்டும் அங்கேயும் இதே தொல்லைகளைத்தான் கொடுக்கும்... பழி தீர்க்கும் நிலையாக வரும். விஷத்தின் தன்மை உருவான பிற்பாடு பிறவி இல்லா நிலை அடைவதற்கு மாறாக சாகாக் கலையாக மாறி… இந்த வேதனை உணர்வு எதுவோ அதன் உணர்வின் தன்மைக்கொப்ப இன்னொரு உடலுக்குள் தான் செல்ல வேண்டி இருக்கும்

ஆனால் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை பெற்றால்
1.எத்தகைய விஷத் தன்மையும் அதனைக் கொல்வதில்லை
2.இதுதான் வேகாநிலை என்று சொல்வது.

அந்த நிலையை நாம் அடைதல் வேண்டும்.

வலம்புரிச் சங்கு

உயிரணுக்கள் தன் எண்ணச் செயலுக்கொப்ப வீரியம் கொள்ளும் நிலையே நீர் சக்தியில் (கடல் நீரில்) பலவித உயிர் சக்திகள் உருவாகும் செயல் நிலையில் எல்லாம் தனித்துவம் ஒன்று உண்டு.

1.ஆயிரம் ஆண்டுகள் நீர் சக்தியின் தொடரில்
2.சுவாசத்தின் சக்தி கொண்டு பெறப்படும் அந்த அரிய அமில குணங்கள்
3.சூரிய சக்தியின் பலனையே ஈர்க்கும் “சங்காக...!” கடலிலே உருப்பெறுகின்றது.

“சங்கு சுட்டாலும் வெண்மை தரும்…!” என்பார்கள். அதி உஷ்ணத்திலும் அதி உஷ்ண அக்கினி ஜுவாலையிலும் தன் குணம் மாறாமல் (தன்னையே) தன் அமில குணத்தையே காத்துக் கொள்ளும் திட வீரிய அமில குண அணுக்களின் சேர்க்கை அத்தகைய சங்கிலே உண்டு.

அத்தகைய சங்கின் குணத்தைப் போல் நம்முடய குணம் இருக்க வேண்டும்.

நீரானாலும் சரி நெருப்பானாலும் சரி சங்கின் அமில குணம் மாற்றமடையா சிறப்பு ஒன்று தான்.

1.ஆயிரம் காலங்களுக்கு மேல் வாழும் பொக்கிஷமாம் அந்த உயிர்ச் சக்தி
2.தன் நிலையில் பரிபூரணத்துவம் பெற்று விட்டு வெளிக் கிளம்பும் சூட்சமத்தில்
3.அந்தச் சங்கு - நீர் மேல் மிதக்கும் முக்கியமான ஈர்ப்பின் செயலை அறிந்துணர வேண்டும்.

வலம்புரிச் சங்கில் உள்ள விசேஷ குணம் என்ன...?

வாக்தேவி நட்சத்திரத்தின் அமில குணம் உயரிய நாதமாகி... ஓங்காரமாகச் சக்தியாக உயிர் சக்தியுடன் ஒன்றி... நாபிக் கமலம் தொட்டு ஓங்கி உயர் சக்தியாகப் பிசிரற்று வெளிப்பட... சங்கு நீர் அமிலக் குணம் நாம் விண்ணுலகம் செல்ல வழி காட்டும்...! சூட்சமப் பொருளை மனதில் கொள்க...!
1.நக்கீரனை எண்ணி சங்கின் குணத்தைப் பெற வேண்டும்.
2.அந்தச் சங்கு அமில குணத்துடன் ஒன்ற வேண்டும்.
3.நெற்றிப் பொட்டில் உயிர் இருக்கும் இடத்தில் குறுகுறுப்பை உண்டாக்கும்.

August 13, 2022

நம்மை நாம் அறிந்து கொள்வோம்

உதாரணமாக சண்டையிடுவோர்களைப் பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நமக்கும் அதே உணர்வுகள் வருகின்றது,
1.இது தெரிந்து கொள்ள உதவுகின்றது.
2.தெரிந்தாலும் உயிரிலே பட்ட பின் உணர்ச்சிகளாக இயக்கப்பட்டு உடலுக்குள் அந்த உணர்ச்சிகளை ஊட்டுகின்றது

உணர்ச்சிகளால் அறிய முடிகின்றது. அந்த உணர்ச்சிகளால் நாம் இயக்கப்படுகின்றோம். நாம் கண்ணிலே பார்க்கிறோம் என்றால் கருவிழி ருக்மணி நம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றது. “மூளையில் அல்ல...!”

உடலில் எலும்புக்குள் உள்ள ஊனில் வித்தாகப் பதிவாக்குகின்றது ஆதைத் தான் ஊழ்வினை என்று சொல்வோம்.
1.இங்கே பதிவு செய்தால்தான் மீண்டும் மீண்டும் அது நினைவுக்கு வரும்.
2.பதிவாகவில்லை என்றால் நினைவு வராது.

அவர்கள் இருவரும் சண்டை போட்ட உணர்வுகள் (மூச்சலைகள்) வெளி வருவதைச் சூரியனுடைய காந்தப்புலனறிவு கவர்ந்து வந்தால் அது உணர்வாக மாறுகின்றது.

உதாரணமாக செடி கவர்ந்து கொண்டால் அதை வித்து என்று சொல்கின்றோம். அது போல் தான் கோபம் இங்கே “உணர்வாக” (வினை) மாறுகின்றது

அந்த உணர்வை நாம் சுவாசித்த உடனே உயிரிலே பட்டு உணர்ச்சிகளாக மாற்றி அந்த உணர்வுகள் நம்மை இயக்குகின்றது. இந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்தில் கலந்த பின் அவர்கள் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் போன்று நம் உடலிலும் பரவுகிறது.

நம் உயிரிலே மோதும் பொழுது இயக்கத்தின் சக்தியாக மாறுகிறது. இரத்தத்தில் கலந்தால் இந்திரலோகமாக மாறுகிறது. இந்திரலோகம் என்றால் கருத்தன்மைகள் உருவாகும் இடம்.

நம் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது கருவாகி உருவாகிவிட்டால் பிரம்மலோகம்... அணுவாகின்றது. அணுக்களாக உருவாகிவிட்டால் அதற்கு உணவு தேவை.

அப்போது உணவுக்காகக் கிளர்ச்சியாகி உந்தப்படும் பொழுது உயிரில் பட்டு உணர்ச்சிகளாக மாறி இரத்த நாளங்களில் கலக்கின்றது.
1.உயிருக்கு எட்டும் போது சண்டையிட்டவர்கள் வெளிப்படுத்திய உணர்வுகளைப் பரமாத்மாவிலிருந்து கண்ணின் காந்தப் புலன் இழுக்கின்றது.
2.காந்தப்புலன் இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது... சுவாசிக்கச் செய்கின்றது.
3.அந்த உணர்வுகள் உணர்ச்சிகளாக மாறி இது உணவாக எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை வருகிறது.

நம் உடலில் எத்தனையோ கோடி உணர்வுகள் இருப்பினும் இதன் உணர்வு வலுப்பெறும் போது அந்தக் கோப உணர்வுகளைக் கவர்கிறது.

அதே உணர்ச்சியின் தன்மை நமக்குள் ஏற்படும் போது என்ன நடக்கிறது...?

யாரையாவது பார்த்தோம் என்றால் திடீரென்று நமக்குக் கோபம் வரும். கோபம் ஏன் வருகிறது...? ஒருவரைப் பார்த்தால் ஏன் சப்தம் போடுகிறோம் என்று தெரியாது...!

சண்டை போடுவதே சிலருக்குத் தெரியாமல் இந்தக் கோபத்தின் தன்மை வரும். பளீர்... என்று வரும். காரணம் அந்த அணுக்களுக்குச் சாப்பாடு வேண்டும் என்பதற்காக அப்படி இயக்குகின்றது.

அந்த நேரத்தில் நம்மால் நல்ல குணங்களை என்ன முடிகின்றதா...? இல்லை.

சில நேரங்களில் நாம் நல்ல குணங்களை எண்ணினால் அது முடிவதில்லை. வெறுப்பு வேதனை போன்ற அணுக்கள் ஜாஸ்தியாக நம் ஆன்மாவிலே முன்னாடி இருந்தால் அத்தகைய நிலை தான் வரும்.

ரேடியோ டி.வி. ஸ்டேசன் ஒலி/ஒளிபரப்பு செய்த உடனே எந்தெந்த உணர்வுகள் எந்த அலைவரிசைகளில் வருகிறதோ திருப்பி வைத்தவுடனே டி.வி.யிலே பார்க்கின்றோம்... ஒளிகளைக் காண முடிகின்றது. காற்றிலிருந்து பிரித்து எடுக்கின்றது.

இதே போன்றுதான் நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகள் எப்போது பதிவானதோ இந்த உணர்ச்சிகள் தன்னிச்சையாக இயக்கப்படும் பொழுது நமக்கு அந்த எண்ணங்கள் வருகின்றது.

1.நாம் அமைதியாக இருந்தாலும்... சண்டை போட்ட நினைவெல்லாம் வரும்... பாக்கி நினைவு வராது
2.வெறுப்படைந்தது தவறு செய்தது தவறான நிலையில் எல்லா நினைவையும் இழுத்துக் கொண்டு வரும்.

ஏனென்றால் அது வலு பெற்றது. நல்ல அணுக்களுக்குச் சாப்பாட்டை விடுவதில்லை. நல்ல அணுக்கள் சோர்வடைந்து விடுகின்றது. அப்படிச் சோர்வடைந்த பின் அடுத்து ஒரு நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும் என்றாலும் கூட
1.“என்ன வாழ்க்கை போ...!
2.என்ன செய்து என்ன ஆகப் போகின்றது...?” என்ற சொல் வரும்.

வலு கொண்டு ஒரு நல்ல எண்ணத்தையோ ஒரு காரியத்தையோ பற்றிப் பேசவோ செயல்படுத்தவோ முடியாத நிலைகள் ஏற்பட்டு விடுகின்றது.

காரணம் “அதனுடைய அழுத்தம்: அதிகமாக இருப்பதால் ஆன்மாவில் வந்து இயக்கி விடுகின்றது.

ஆகவே நம் கண் கருவிழி ருக்மணி இது போன்று பதிவாக்கி அத்தகைய உணர்ச்சிகள் வந்தால் அடுத்த கணமே ஈஸ்வரா...! என்று புருவ மத்தியில் எண்ணி... துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று சிறிது நேரம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இந்த உணர்வுகளை இழுத்து
1.அந்த வேதனைப்பட்ட கோபப்பட்ட உணர்வோடு சேர்த்து இணைத்து... ஒட்டச் செய்ய வேண்டும்.
2.எப்படிப் பதிவானதோ அந்தப் பதிவான இடத்திலேயே கலக்க செய்ய வேண்டும்.

அக்ரிகல்சுரலில் (AGRICULTURE) வித்துக்களை மாற்றுவது போன்று மாற்ற வேண்டும். இப்படி மாற்றினால் சண்டை போடும் உணர்ச்சியை மாற்றிவிட்டுச் சிந்திக்கும் தன்மையாக வரும்.

செய்து பாருங்கள்.

வடக்குத் திசையிலிருந்து நாம் எடுக்க வேண்டிய உயர்ந்த சக்தி

மகரிஷிகளின் ஒளி காந்த சக்தியைப் பெற்றுத் தன் உயிராத்ம சக்தியை வலுக் கொள்ள அந்த வீரிய எண்ணச் செயல் மூலம் வளர்வதற்கே வளர்ப்பின் வளர்ச்சியின் ஆகார அமில குணம் தேவை என்று ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளோம்.

ஒருமித்த எண்ணம் கொண்டு நம் உயிராத்ம சக்தியுடன் அதை ஒன்றச் செய்து இந்தத் தியான முறை வலுவினால் வளர்ச்சிப்படுத்தப் பெற்றுக் கொள்ள வேண்டிய ஆகாரம்
1.அதாவது காமதேனு என்று சூட்சமமாக மகரிஷிகள் உணர்த்திய
2.அந்த “ஆகார நியமனம்” பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

சூரிய மண்டலத்தின் சமைப்பின் ஒளிக் கதிர்களை வானுலகில் வரும் ஆகாய உயிரணுக்கள் எடுத்து அந்தப் பரவெளி சூட்சமத்தில் தங்களை வளர்த்துக் கொள்ளும் நிலையில் அந்த வீரிய உயிரணுக்களின் சக்தியை நாம் எடுக்கும் தியானத்தின் மூலம் ஈர்த்துப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நம் உயிரான்மாவின் சக்தியை மேன்மேலும் வளர்ச்சி கொண்டிட வேண்டும் என்றால் பரவெளியில் உலவிடும் இந்த உயிரணுவாகிய காமதேனுவின் பாலை (ஆகாரமாகப்) பெற்றிட வேண்டும் என்று சூட்சமப்படுத்தினார்கள் அன்றைய ரிஷிகள்.
1.அந்த அமில ஆகாரத்தைப் பரிபூரணமாகப் பெற்று விட்டால்
2.சிருஷ்டியின் இரகசியம் தெரிந்துவிடும் என்றும் காட்டினார்கள்.

இதையே தான் “உலக வழக்கப்படி” நாம் நினைத்த மாத்திரத்தில் இந்தச் சரீர வளர்ப்பிற்குக் காமதேனு திட ஆகாரத்தைப் படைத்து அளித்தது…! என்ற சித்தின் செயல்பாட்டினுள் சித்தனே மறைந்துள்ளான்.

“விசுவாத்திர மாமகரிஷிக்கு”
1.இரசமணி சக்தியின் மூல முலாமையும்
2.காமதேனு சக்தியையும் உணர்த்தி
3.அதை அவர் பெறும் பக்குவத்திற்கு உருவாக்கித் தந்தவர் வசிஷ்ட மாமகரிஷி.

தான் பெற்றது காமதேனுவின் குழந்தை நந்தினியின் சக்தி தான் என்றும் உணர்த்துகின்றார் வசிஷ்டர். ஆக இதெல்லாம் சூட்சமப்படுத்திக் காட்டப்பட்ட பேருண்மைகள்.

1.பரவெளியில் உலவிக் கொண்டிருக்கும் காமதேனு என்றிட்ட
2.(உயிரணுக்களின்) பசுக்களின் வீரிய ஆகாரத்தை ஒவ்வொருவரும் பெற்று விட்டால்
3.மண்டலங்களையே உருவாக்கிடும் சிருஷ்டியின் பரிபூரணத்துவத்தைப் பெற்றிடலாம் என்ற
4.ஞானிகளால் கொடுக்கப்பட்ட போதனை காட்டிய வழி முறையை அறிந்து கொள்ள வேண்டும்.

பரவெளியில் தோன்றிப் பல்கிப் பெருகி அந்தக் காமதேனு – நந்தினி என்ற உயிரணுக்கள் சிவ சக்தியின் கலப்பாகப் பிறிதொன்றைத் தன் சக்தியை உள் நிறைத்து உருவாக்கிடும் ஓர் பொருளே அந்த உயிரணுக்களின் முட்டைகள் என சித்தர்களால் காட்டப்பட்டது.

சூரிய வெப்ப ஒளியில் அந்த முட்டைகள் உடைந்து பரவெளியில் சுழன்று ஓடும் பூமியின் ஈர்ப்பின் அருகாமையில் அந்த உயிரணுக்கள் வந்தாலும் பூமியின் ஈர்ப்பில் சிக்கிடாமல் உந்து விசையால் புறப்படும் பாணம் போல் அந்த உயிரணுக்கள் பரவெளியில் உலவிடும் சூட்சமத்தைச் செப்பிடத்தான் முடியுமோ…?

1.பூமியின் வட திசையில் விழிப்பார்வையை விண்ணிலே செலுத்தி
2.ஈஸ்வரா என்று புருவ மத்தியில் ஏக்கத்துடன் அந்தப் பேரொளியை ஈர்த்திடும் தொடர்பில்
3.காமதேனு தன் ஆகாரத்தை நமக்கு ஊட்டிடுவாள்.
4.அறிவாய்… உணர்வாய்… தெளிவாய்…!