ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 31, 2019

வாழும் நாட்களை எல்லாம் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நம் மனதைத் தந்துவிடக்கூடாது…! என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


எண்ணத்திலும் செயலிலும் வார்த்தையிலும் உயர்வு தாழ்வு என்ற எண்ணம் தான் மனிதர்களின் மனதிலே ஊன்றியுள்ளது.

உயர்வு எனும் பொழுது நம் உடலுக்கு… நம் உயிருக்கு.. அவ்வழியாகச் செல்வம் என்ற உயர்ந்த நிலை நாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான் நம் எண்ணத்தில் ஊன்றி நிலைத்திட வேண்டுமப்பா…!

1.உடல் வாழ்க்கையில் இந்த உலகிலே சேர்த்திடும் சொத்து சுகத்தைத்தான் நாம் எண்ணி வாழ்கின்றோம்.
2.அழியாச் செல்வத்தை நாம் எண்ணுவதில்லை.
3.தூல சரீரத்தைத்தான் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்… சூட்சம சரீரத்தை எண்ணுவதில்லை.

மனிதர்களின் எண்ணமும் செயலும் இன்னும் ஒரு நிலைப்படாமல் இந்தச் சரீர நிலையை எண்ணிக் கொண்டே தான் வாழ்ந்திடுகிறார்கள்.

1.வாழும் நாள் எல்லாம்…
2.மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களுக்கு நாம் மனதைத் தந்துவிட்டால்
3.நம் மன நிலையில் பல சோர்வுகளை அடைந்து பல தீய அணுக்களின் செயல்களுக்கு நாம் உட்பட்டு
4.நம்மையே… நம் சுவாச நிலையையே… கெடுத்துக் கொள்கின்றோம்.

தீய எண்ணத்தை வளரவிட்டு அந்நிலையையே எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் தீய அணுக்களின் வேலை துரிதப்படுகின்றது.

அந்நிலையில் நம் உயிர் அணுவிற்குப் பெரும் சோர்வைத்தான் நாம் அளிக்கின்றோம். இந்நிலையையே வளர விட்டால் நம் சுவாச நிலையும் மாறுபட்டு இன்னும் பல தீய அணுக்களைத்தான் நாம் மேலும் மேலும் பெறுகின்றோம்.

இந்நிலை எல்லாம் அறிந்து நம் உயிரணுவிற்கு நாம் பெறும் அழியாச் செல்வமான “ஆத்ம ஜோதி” என்ற நிலையைப் பெறத்தான் இந்த ஜெப நிலையிலிருந்து ஈஸ்வர தியானங்கள் பெற்று அந்நிலையில் நமக்குக் கிடைக்கும் பல அரிய பொக்கிஷங்களை நம் உயிரணுவிற்குச் சேமித்து வைத்திடல் வேண்டும்.

இந்த உடலில் உள்ள பொழுதே மனிதனாகப் பிறந்த இந்தப் பாக்கியத்தை
1.ஞானச் சரீரத்திற்கு… அந்த ஞான நிலை பெற…
2.நம் ஆத்மாவிற்கு அழியா நிலை பெற…
3.நம் எண்ணத்திலும் செயலிலும் நல்ல உணர்வுகளையே என்றும் நாம் சுவாச நிலையில் எடுத்துக் கொண்டால்
5.நம் உயிர் நிலை ஊட்டம் பெறுகின்றது,

கோவில் என்பது குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி அழுகும் இடமல்ல..!


சீதாவை இராவணன் சிறைப்பிடித்துச் சென்று “எத்தனையோ கொடுமைப்படுத்தினான்..!” என்று வேதனைப்படுகின்றோம். ஏன் இராமனே கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் கொண்டு போய் விட்டான்..! என்று வேதனைப்படுகிறோம்.

இராமன் நான் மக்களுக்காக வேண்டி இதைச் செய்கிறேன்…! மக்கள் என்னைக் குறையாகச் சொல்கிறார்கள் நீ போ….! என்று கர்ப்பிணியான சீதாவைக் காட்டில் தள்ளி விட்டால் அது என்ன செய்யும்…?

இராமாயணக் காவியத்தைப் படித்துப் பாருங்கள். ஏனென்றால் நாம் நுகரும் உணர்வுகள் சீதா இராமா. அந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் நமக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். நாம் தூண்டுகின்றோமா...?

1.கண்ணிலே பார்ப்பது துவைதம்
2.நுகர்ந்து (சுவாசித்து) அறிவது அத்வைதம்
3.சுவாசித்தது நம் உயிரிலே பட்ட பின் அந்த உணர்வின் தன்மை விசிஷ்டாத்வைதம்.

தூய்மையான உணர்வை உன் உடல் ஆக ஆக்கு. இது தான் கோவிலின் தத்துவம். ஆனால்
1.கோவிலுக்குப் போய் எத்தனை பேர் அழுகாமல் வருகின்றார்கள்..?
2.அங்கே குறைகளைச் சொல்லாதவர்கள் யார்…?

“சரணாகதித் தத்துவம்” என்று ஒன்றை மட்டும் பழகி வைத்திருக்கின்றோம். காசைக் கொடுத்து அபிஷேகம் எல்லாம் செய்து பழம் மற்ற பொருள்களை எல்லாம் கொடுத்து அங்கே குறைகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

கோவிலை மதிக்கின்றோமா…? நம் உடலைக் கோவிலாக மதிக்கின்றோமா…? உயிரை ஈசனா மதிக்கின்றோமா…? ஆக கோவிலுக்குச் சென்று எதை அபிஷேகம் செய்கிறோம்…?

குறைகளையும் குற்றங்களையும் வேதனைகளையும் சொல்லி உயிரால் உருவாக்கப்பட்ட உடலான ஆலயத்தை அசுத்தப்படுத்துகின்றோம். நன்மை ஏதாவது செய்கிறோமா…!

சில குடும்பங்களில் அண்ணன் தம்பிக்குள் ஒற்றுமை இல்லாது போய்விடுகிறது. எத்தனையோ பேர் பஞ்சாயத்துப் பண்ணினாலும் ஒன்றும் அது முடியவே முடியாது

ஒருத்தருக்கு ஒருத்தர் அண்ணன் தம்பிக்குள் வீராப்பு செய்து கொண்டு கடைசியில்…
1.தன் உடலில் நோய்களைத் தான் உருவாக்கிக் கொள்கிறார்களே தவிர
2.இந்த உடலுக்குப் பின் நாம் எங்கே போக வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள்.

ஆனால் நாம் நுகர்ந்த அந்த உணர்வுகளை எல்லாம் நம் உயிர் படைத்தே தீரும். அதை நாம் அனுபவித்தே தான் தீர வேண்டும். அதிலிருந்து தப்ப முடியாது.

ஏனென்றால் நாம் நுகர்ந்த உணர்வை எல்லாம் நம் உயிர் இயக்கிக் காட்டுகிறது. அப்பொழுது நம் ஆறாவது அறிவை வைத்து வரும் தீமைகளைத் துடைக்க வேண்டுமா…  இல்லையா,..?

1.தீமைகளைத் துடைப்பதற்கு.. நம் ஆறாவது அறிவை எப்படிப் பயன்படுத்துவது…? என்பதைத்தான்
2.ஆலயங்களிலும் காவியங்களிலும் ஞானிகள் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

உணவாக உட்கொள்ளும் உணவில் மறைந்துள்ள நஞ்சை மலமாக மாற்றிடும் ஆறாவது அறிவைச் சரியான நிலையில் பயன்படுத்துவதற்காக உருவம் அமைத்து தெய்வச் சிலைகளுக்குப் பாலபிஷேகம் சந்தனம் அபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்து அதைக் காட்டுகின்றனர்.

அதைப் (துவைதம்) பார்த்ததும்…
1.எங்கள் குழந்தைகள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.குடும்பத்திலுள்ளோர் எல்லோரும் ஒரு ஆனந்த நிலை பெற வேண்டும்
3.எங்கள் வீட்டிற்கு வரும் அனைவரும் ஆனந்த நிலை பெற வேண்டும்
4.எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அந்தப்  பாலை போல மனம் பெற வேண்டும்
5.ஒன்றுபட்டு வாழும் அந்த அருள் சக்தியும் பண்புடன் வாழும் அருள் சக்தியும் எல்லோரும் பெற வேண்டும் என்று
6.சாமிக்கு அந்த அபிஷேகம் செய்யும் பொழுது இப்படி எல்லாம் எண்ணினால் (அத்வைதம்) ஒன்றுபட்டு வருமா வராதா…?

அந்த உயர்ந்த உணர்வுகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் விளையும் (விசிஷ்டாத்வைதம்). இதைத் தூண்டுவதற்குத் தான் ஞானிகள் சிலையை வைத்தார்களே தவிர
1.அங்கே போய் கஷ்டத்தை எல்லாம் சொல்லி
2.நான் அந்த அத்தனை நேரம் உனக்கு விரதம் இருந்தேன்… என்னை ஏன் இன்னும் சோதிக்கின்றாய் என்று அழுது புலம்புவதற்காக அல்ல…!

ஆகவே நம்மைச் சுத்தப்படுத்துவதற்காக ஞானிகள் கட்டிய கோவிலை நாம் அசுத்தப்படுத்தலாமா…?

என் பையனுக்கு அந்த அருள் ஞானம் கிடைக்க வேண்டும். அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அருள் ஞானம் பெறவேண்டும் நாங்கள் பார்க்கும் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்று எண்ண வைப்பதற்குத்தான் கோவிலைக் கட்டினார்கள்.

July 30, 2019

தியானத்தில் எதை முக்கியமாக நினைக்க வேண்டும்…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


பல நாள் தவம் இருந்து தியான நிலை என்றால் என்ன…? என்று தெரியாமலே பல தியான முறைகளை நாம் எல்லோருமே கையாளுகின்றோம்.
1.தியானத்தில் எப்படி அமர்வது…?
2.சுவாச நிலையை எப்படி ஒருநிலைப்படுத்துவது…?
3.தன்னை மறந்து அமரும் நிலை தான் தியான நிலை என்றும் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.
4.தியானத்தில் அமர்ந்த பின் எண்ணத்தில் சிதறல்கள் வரும் பொழுதெல்லாம் அந்த எண்ணத்திலேயே ஊன்றிடாமல் எப்படி இருப்பது…? என்ற எண்ணத்திலும் உள்ளார்கள் பலர்.

இப்படிப் பல நிலைகள் சொல்லி உள்ளதால் தனக்கு எது உகந்தது…? எதை எடுத்துக் கொள்ளலாம்…? என்ற எண்ணத்திலேயே இன்னும் பலர் இருக்கிறார்கள்.

வாழ்ந்திடும் காலம் எல்லாம்… வாழ்க்கை வாழ்ந்து விட்டு
1.தன் வயதான காலத்தில்தான் ஜெப நிலையில் இருக்க வேண்டும்…
2.என் மனம் இன்னும் ஒருநிலைப்படவில்லை…! என்றெல்லாம் இன்றையப் பெரியவர்கள் பலர் உள்ளார்கள்.

ஜெபம் என்றால் என்னப்பா…? ஜெபித்திடும் பொருள் என்னப்பா…?

என் (ஈஸ்வரபட்டர்) வழியில் ஜெபம் என்பதெல்லாம் நம் ஜெபத்துடனே கலந்து
1.நம் நினைவிலும்…
2.கனவிலும்…
3.எந்த நிலையிலும்..
4.எந்த நிலை எனும் பொழுது - நம் வாழ்க்கை நிலையிலும் நாம் செய்யும் வேலை நேரத்திலும்
5.நம்முடனே அந்த ஆண்டவன் உள்ளான் என்ற எண்ணத்தில்…
6.அதாவது அந்த எண்ணம் மட்டும் அல்ல… “இருக்கிறான்…!” என்ற எண்ணத்தில்
7.ஒரே நிலையில் நாம் எண்ணிக் கொண்டே இருந்தால் அதுதானப்பா நமக்குகந்த ஜெபம்.

பூஜை செய்வது… கோவிலுக்குச் செல்வது… இவை எல்லாம் நம் மனதை அமைதிப்படுத்த வேறு நிலையிலிருந்து நம் எண்ணத்தை அந்த ஆண்டவனையே நாம் எண்ணிக் கொண்டிருப்பதற்காகத்தான்…!

ஜெப நிலையில் நீங்கள் இருக்கும் பொழுது உங்கள் எண்ணத்தை ஈர்க்கும் நிலை அந்தச் சித்தர்களின் நிலைக்கு வருகிறதப்பா..! அந்நிலையில் அவர்களுடைய பரிபூரண ஆசிகளைப் பெறுகின்றீர்கள்.

ஜெப நிலையில் இருக்கும் பொழுது நாம் விடும் மூச்சும் நல் மூச்சாக வெளிப்படும். எண்ண அலைகள் மற்ற அணுக்களுடைய நிலைகள் உயர்ந்த அணுக்களுடைய நிலைகள் நம்முடைய மூச்சிலும் கலக்கப்படுகிறது. நல்ல அணுக்களாகக் கிடைக்கப் பெறுகின்றது.

அந்நிலையில் சிறுகச் சிறுக நாம் ஈர்க்கும் மூச்சில் நம்முடைய உயிரில் அது சேர்க்கப்படுகின்றது. அது சிறுகச் சிறுக அந்த உணர்வுகள் சேர்க்கப்பட்டவுடன் நம் உயிர் நிலை உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றது.

அந்நிலையில் உயர்ந்த சுவாச நிலைகளை அடிக்கடி அந்தச் சுவாச நிலையில் நம் உயிரணுவிற்கு உயிருக்குக் கிடைக்கப் பெறுகின்றது.

இந்நிலையில் அந்த உயிருக்கு நாம் பெற்ற சக்தி அந்த ஆத்மாவிற்கு ஊட்டமளித்திருப்பதனால் எந்தத் தீய அணுக்களும் தீய சொற்களும் நம்மை வந்து அணுகாது.

1.நம் சுவாச நிலையிலேயே நம் ஜெப நிலையில் இவ்வருளைப் பெற்றிருப்பதனால்
2.ஆயிரம் அணுகுண்டுகளைப் போட்டாலும் அதலபாதாளத்தில் நம்மை அடைத்து வைத்திருந்தாலும்
3.சுவாச நிலையில் நாம் இந்நிலை பெற்றிருக்கும் பொழுது எந்தத் தீய சக்திகளும் நம்மை வந்து தாக்கிடாது.

இந்த நிலை பெறத்தான் இந்தப் பாட நிலை எல்லாமே…!

ஒவ்வொருவரும் இதில் உள்ள உண்மையை உணர்ந்து உருவமில்லா ஆண்டவனை எண்ணிக் கொண்டே பல கோடி ஜெபங்களை ஜெபித்துப் பல மந்திரங்களைச் சொல்லி கால நிலையைக் கடத்திடாமல்
1.ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்று புருவ மத்தியில் உயிரான ஈசனை எண்ணி
2.விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளைத் தியானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள்.

தியானத்தில் இருக்கும் பொழுது உங்கள் ஜெபத்தில் பல நறுமணங்கள் கூடும் உங்கள் ஜெபத்திற்கு அருளை அளித்திடுவார் அவ்வீஸ்வரர்.

நாம் நம் ஆத்மாவிற்கு நல்ல மணங்களை அளித்துத்தான் ஊட்ட நிலையைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஈசனுக்குச் செய்ய வேண்டிய அபிஷேகத்தை நாம் செய்கிறோமா…?


கோவிலுக்குச் செல்பவர்கள் இன்றைய வழக்கத்தில் என்ன செய்கிறார்கள்..?

பால் அபிஷேகத்திற்குக் சாசு எல்லாம் கொடுத்து விட்டு என் பையனுக்கு அத்தனை செலவழித்தேனே.. அவன் இப்படி ஆகிவிட்டானே…! என்று வேதனையைத் தான் எண்ணுகிறார்கள்.

அங்கே சாமிக்குச் சந்தனம் அபிசேகம் செய்யும் போது பார்த்தால் இங்கே இவர்களுக்குக் கண்ணில் தண்ணீர் வரும். அழுது கொண்டிருப்பார்கள். ஆக அங்கே குறையைத்தான் எண்ணிச் சொல்கிறார்கள்.

1.என் பையன் இப்படி இருக்கிறான்.
2.என் வீட்டுக்காரர் இப்படி எல்லாம் பேசுகிறார்.
3.என் மாமியார் இப்படிப் பேசுகிறார்கள்
4.என் நாத்தனார் இப்படிப் பேசுகிறது
5.பக்கத்து வீட்டில் இடைஞ்சல் செய்கிறார்கள் என்று
6.வரிசையில் இதைத்தான் கோவிலில் அடுக்கிக் கொண்டு போகிறார்கள்.

அங்கே சந்தோஷத்தை ஊட்டும் நிலையில்லாதபடி அதை மொத்தமாகவே சிறைப்பிடித்து விடுகிறார்கள். சீதாவை இராவணன் என்ன செய்கிறான்…? சிறைப் பிடித்து வைத்துக் கொள்கிறான்.

1.அதாவது சுவாசித்த அந்த அரக்க உணர்வுகள் உங்களுக்குள் சேர்த்துக் கொண்ட பின்
2.அடுத்து நல்லதை அங்கே பேச முடியவில்லை…!

இராமாயணத்தில் இதை எல்லாம் தெளிவாகவே கொடுக்கின்றார்கள். ஆனால் நாம் அதைப் புரிந்து கொண்டோமா என்றால் இல்லை…!

இன்றைக்குப் பண்புடன் இருக்கிறோம் பாசத்துடன் இருக்கிறோம். நம்முடைய குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

ஆனால் அவனுக்குச் சரியாகப் படிப்பு வரவில்லை என்றால் அவன்  படிக்கவில்லையே.. படிக்கவில்லையே…! என்று எண்ணி வேதனைப்படுகிறோம். வேதனை உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

அதை எல்லாம் நீக்குவதற்காகத் தான்
1.நம் உடலில் உள்ள ஆயிரத்தி எட்டு குணங்களையும் கோவில்களில் சிலைகளாக வடித்து வைத்து
2.அது ஒவ்வொன்றும் என்னென்ன செய்யும் என்று காட்டியிருக்கின்றார்கள்.

சிவாலயம் ஆனாலும் பெருமாள் கோவிலாக இருந்தாலும் மற்ற எந்தக் கோவிலாக இருந்தாலும் நம் உடலில் நடக்கக் கூடியதைச் சிலைகளாக உருவமாக்கி நாம் எப்படி வணங்க வேண்டும் என்று காட்டினார்கள் ஞானிகள்.

நம் பையன் தவறு செய்கிறான் என்றல் உற்றுப் பார்க்கின்றோம். அந்த உணர்வை நாம் நுகர்ந்தால் நம் உயிரிலே “அபிஷேகம்” நடக்கின்றது.

ஆக அவனின் தவறான செயலைப் பார்த்ததும் நமக்கு எரிச்சல் ஆகின்றது. அதை நம் உடலில் சேர்க்கப்படும் போது எரிச்சலான உணர்வையே மீண்டும் நமக்குள் கூட்டுகின்றது.

எரிச்சன் ஆன பின் பையனிடம் “ஏன்டா இப்படிச் செய்கிறாய்…?” என்று கேட்டால் இது அவனுடைய உயிரில் “அபிஷேகம்” நடக்கிறது. அவன் உடலில் எரிச்சல் ஆகிறது.

தாயோ தந்தையோ யார் சொன்னாலும் அவர்கள் மேல் அவனுக்கு வெறுப்பு வருகின்றது. ஆனால் அவர்கள் தப்பு செய்யவில்லை.
               
1.மனிதன் சந்தர்ப்பத்தல் தனக்குள் நுகர்ந்த உணர்வுகள் அது எப்படிக் கெடுதலாக அமைகின்றது…?
2.அதை எப்படி நல்லதாக மாற்றிக் கொள்ள வேண்டும்…? என்பதனை
3.ஆலயத்தில் அன்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

எப்படி…?

சாமி சிலைக்கு அபிஷேகம் செய்வதாகக் காட்டுகின்றார்கள். பாலாபிஷேகம் சந்தனாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் என்று எத்தனையோ அபிஷேகங்கள் செய்கிறார்கள்.

அதைப் பார்த்ததும் நாம் எதை எண்ண வேண்டும்…?

1.அந்தப் பாலைப் போன்ற மனம் நாங்கள் பெற வேண்டும்.
2.என் பையனுக்கு அந்தப் பாலைப் போல மனம் வர வேண்டும்.
3.எங்கள்  குடும்பத்தில் உள்ள அனைவரும் பாலைப் போல ஒரு தெளிந்த மணம் பெற வேண்டும்.
4.சந்தனத்தைப் போல நறுமணம் நாங்கள் பெற வேண்டும்
5.எங்கள் குடும்பத்தில் என் கணவருக்கு என் பிள்ளைக்கு எல்லாருக்கும் சந்தனத்தைப் போன்ற நறுமணம் கிடைக்க வேண்டும் என்று எண்ணிடல் வேண்டும்.

அங்கே சாமி சிலைக்கு அபிஷேகத்தை நடத்தும் போது மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாம் எண்ணினால் அந்த உணர்வுகள் தான் நமக்குள் அபிஷேகம் நடக்கிறது.

அந்த உணர்வின் தன்மை உயிரான ஈசனுக்குள் பட்டு நம் உடலுக்குள்ளும் போகின்றது. நாம் எதைச் சுவாசிக்கிறோமோ அதற்குத் தகுந்த மாதிரித்தான் நம் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் இது சாப்பாடாகக் கிடைக்கும்.

ஆகையினால் நல்ல அணுக்களை வளர்க்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்..?

அங்கே பாலாபிஷேகமோ சந்தனாபிஷேகமோ செய்யும் பொழுது நாம் எண்ண வேண்டியது
1.பாலைப் போன்ற தூய்மையான மனம் என் பையனுக்கு வர வேண்டும்…
2.அவனுக்குத் தெளிந்த மனம் வர வேண்டும்
3.மகிழ்ந்து வாழும் சக்தி அவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று இப்படித் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இதைச் செய்தால் நமக்குள் வந்த எரிச்சலை மாற்ற முடியும். பையனுக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி அந்தப் பக்குவமான நிலையில் சொல்லப்படும் பொழுது அங்கேயும் எரிச்சல் ஆகாது.. வெறுப்பு வராது.. மகிழ்ந்திடும் உணர்வுகள் வரும்.

செய்து பாருங்கள்…!

July 29, 2019

கவலையிலிருந்து மீண்டு விட்டால் “எல்லாமே தீர்ந்து விடுமா…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மனித உடலில்.. இந்த மனித ஜென்மத்தில்.. பல தவறுகளும் பாவங்களும் நடைமுறையில் எல்லோருமே செய்கின்றோம். அந்தத் தவறைத் தவறு என்று உணர்ந்து கொண்டு “தவறு செய்யாதவர்கள்” யாருமே இருக்க முடியாதப்பா…!

அந்தத் தவறிலிருந்து விடுபட்டு தன் நிலை என்ன..? தான் யார்..? என்ற எண்ணத்துடன் பல நல்ல உணர்வுகளை நற்காரியங்களை எடுத்துக் கொண்டு
1.நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரே எண்ணத்துடன் அவ்வீஸ்வரனை எண்ணும் பொழுது
2.நம் உயிர் நிலைக்கு.. நம் ஆத்மாவிற்கு.. அச்சக்திதான் ஒரு நிலையில் ஊட்டம் பெறுகிறது,

“அந்த நிலையிலேயே நாம் என்றும் இருந்து கொண்டிருந்தால்…” நம் வாழ்க்கை முறையில் பல இன்னல்களும் பல இன்பங்களும் வந்து மோதும் பொழுதும் நம் உயிர் நிலைக்கு நம் ஆத்மாவிற்கு இவை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாதப்பா..!

ஒரு மனிதனுக்குக் கஷ்டங்கள் கவலைகள் வந்திடும் பொழுது அவற்றிலிருந்து நாம் எப்படி மீண்டு… நம் எண்ணத்திலும் நம் சுவாசத்திலும் ஒரு நிலைப்படுத்திட வேண்டும் என்று சொல்லுகின்றோமோ அப்படித்தான் இன்பத்திலிருந்தும்… அதி சந்தோஷத்திலிருந்தும்… மீண்டு வர வேண்டுமப்பா…!

1.கவலையிலிருந்து மீண்டு வந்தால் எல்லாமே தீர்ந்தது…! என்று எண்ணிட வேண்டாமப்பா..!
2.நாம் எப்படிக் கவலையிலிருந்து மீள வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதே போலத்தான்
3.அதி சந்தோஷத்தையும் நம்முள் ஏற்றுக் கொள்ளாமல் மீள வேண்டுமப்பா…!

இன்றைய மனிதர்கள் எல்லோருமே மனித வாழ்க்கையில் உள்ள கஷ்டநஷ்டங்களில் கவலையிலிருந்து மீண்டு சந்தோஷ நிலைக்குச் செல்ல வேண்டும்…! என்று தான் விரும்புகின்றார்கள்.

1.இதிலிருந்து மீண்டு அதற்குச் செல்லும் பொழுது
2.அவ்வெண்ணமும் அந்தச் சுவாச நிலையும் மாறுபட்டு
3.நம் ஆத்ம நிலைக்கே அது பெரும் தீங்காகிறதப்பா…!

இந்த நிலையிலிருந்து மக்கள் மீண்டு ஒரு வழிக்குக் கொண்டு வரத்தான் அன்றைய ஞானிகளும் ரிஷிகளும் ஆண்டவனின் ரூபத்தை வைத்துப் பல நூல்களை வடித்தார்கள் “மனிதர்கள் மனதில் பதியும்படி…!”

மனிதர்கள் எண்ணத்தில் சுவாசத்தில் என்றுமே ஒருநிலைப்படுத்தி அவ்வுயிரணுவிற்கு ஊட்டம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் இருக்கும் ஜெப நிலையிலிருந்து பல உன்னத நிலைகளை அடையலாம்.
1.எண்ணத்திலும் சுவாசத்திலும் தானப்பா நம் ஆத்மாவிற்கு நாம் சேர்த்திடும் சொத்தெல்லாம் உள்ளதப்பா…!
2.பல ரிஷிகளும் ஞானிகளும் பெற்ற நிலையெல்லாம் அது தானப்பா…!

மனித வாழ்க்கையில் வந்திடும் பல இன்னல்கள் இன்பங்கள் எல்லாவற்றையும்
1.மனிதன் தன் எண்ணத்திலும் செயலிலும் எற்றுக் கொள்ளாமல்
2.பிறரின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் தன் மனதைக் கலங்கவிடாமல் என்றும் ஒரே நிலையில் இருந்து
3.தன் எண்ணத்தில் வந்து மோதிடும் பல அபிலாஷைகளுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து மீண்டு
4.தன் சுவாச நிலையில் “ஒரு நிலை எய்தி வாழ்ந்திட வேண்டுமப்பா…!”

அது தான் நம் ஆத்மாவிற்கு நாம் சேமிக்கும் சொத்து...!

புள்ளி விபரம் வைத்துப் பல கணக்குகள் போட்டு நட்சத்திர மண்டலக் கணக்குகளை எல்லாம் மனிதர்களுக்குப் புகட்டிட விஞ்ஞானிகள் பல நாட்கள் தன் அறிவையும் நேரத்தையும் செலவழித்து மக்களுக்குப் புகட்டுகிறார்கள்.

இதிலெல்லாம் பெறும் இலாபம் என்னப்பா…! அதனால் மனித ஆத்மாவிற்குப் பயன் என்னப்பா…?

ஆத்மாவிற்கு எந்த நிலையை நாம் தேடிக் கொள்ள வேண்டும்…? என்ற எண்ணம் மனிதனுக்கு வந்துவிட்டால்
1.அவன் ஆத்ம நிலையில் இருந்து கொண்டே அறிந்திடலாம்
2.அகண்ட அண்டத்தில் உள்ள பல கோடி உண்மைகளை…!

“மரணமில்லாப் பெரு வாழ்வு…!” வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?


இந்த மனித உடல் நமக்கு நீடித்த நாள் இருப்பதில்லை. ஆனால் இந்த உடலை வைத்துத்தான் பிறவியில்லா நிலையை அடையும்  சக்திகளைப் பெற முடியும்.

இந்த மண்ணுலகில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்ற நிலையை அடைந்த துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலமும் இந்தச் சூரியக் குடும்பமே அழிந்தாலும் அவைகள் அழியாது.

அகண்ட உலகில் வருவதைத் தனக்குள் ஒளியாக மாற்றி என்றும் பதினாறு என்று அவர்கள் வளர்ந்து கொண்டே உள்ளார்கள். அதைத்தான் “மரணமில்லாப் பெரு வாழ்வு” என்பது.

1.இதைப் போல் மனிதனாகி அதிலே உயர்வு பெற்று
2.ஒளி நிலை பெற்ற தன்மைகள் ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உண்டு.
3.இவை அனைத்தும் ஐக்கிய உணர்வாக அங்கே வளரும் தன்மை பெற்று வளர்ந்து கொண்டே உள்ளது.

வான மண்டலத்தில் பார்த்தால் சில பகுதிகளில் ஒளிக் கதிர்களாக மின்னுகின்றது. பல பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளது.

அகண்ட (அண்டத்தின்) பாதையில் சுழற்சியின் வேகத்தால் வரும் ஒளி அலைகள் தான் இவையே தவிர இதைப் போன்ற வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது ஒளியின் கதிராக அது வாழும்… வளரும்… அந்த நிலைகளில் சக்தி பெறுகின்றது.

ஆகவே அத்தகைய நிலையை இந்த மனித உடலில் நாம் நினைவிருக்கும் பொழுதே பெறுதல் வேண்டும். நினைவு இழந்து விட்டால் எதனைக் கொண்டு நினைவிழக்கச் செய்கின்றதோ அதன் வழியில் சென்றுவிடும்.

மனிதனின் வாழ்க்கையில் எது அவனை நினைவிழக்கச் செய்கின்றதோ அதை மாற்றிட அருள் சக்திகளைப் பெற்று அருள் வழியில் சிந்தித்தால் அவனும் ஒளியின் தன்மை பெறுவான்.
1.நம் உடல் சதமானது அல்ல…! உயிர் தான் என்றும் சதமானது...!
2.இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நாம் நெருப்பில் விழுந்து விட்டால் இந்த உடல் கருகி விடுகின்றது. கருகிய நிலையில் வேதனையுடன் இந்த உடலை விட்டு உயிர் பிரியும் போது இந்தத் தசைகளும் உடலில் உள்ள அணுக்களும் கருகி விடுகின்றது. ஆனால் உயிர் மட்டும் கருகுவதில்லை.

கருகிய உணர்வுகள் உயிருடன் ஒன்றுகின்றது. இந்த உடலில் வாழும் காலத்தில்
1.யார் மேல் பற்று கொண்டு வாழ்ந்ததோ
2.அந்த நட்பான நிலைகளில் அவர்களும் இதைப் பதிவு செய்திருந்தால்
3.அந்த உடலுக்குள் எரிந்தவனின் ஆன்மா சென்று அங்கேயும் எரிகிறதே… எரியுதே..! என்று கத்தும்.. கதறும்…!
4.அவன் மடிந்த நிலைகள் அதே நினைவாற்றல் கொண்டு அங்கேயும் மடியச் செய்யும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இதைப் போன்ற எத்தனையோ நிலைகளிலிருந்து நாம் விடுபட  வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் நாம் எதைப் பெறவேண்டும்..? எவ்வாறு நாம் வாழ்க்கை வழி நடத்த வேண்டும்..? என்று எண்ணுதல் வேண்டும்.

வீடு அழகாகக் கட்டுகின்றோம். தூசி படர்கின்றது. பெருக்கிச் சுத்தப்படுத்துகின்றோம். வீட்டைக் கூட்டிப் பெருக்கவில்லை என்றால் நாம் எவ்வளவு ஆடைகள் அலங்காரமாகப் போட்டிருந்தாலும் தூசி நம் மீது ஒட்டத்தான் செய்யும்.

ஆகவே வீட்டில் அவ்வப்பொழுது வரும் தூசிகளைக் கூட்டிப் பெருக்கித் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வீட்டை அழகுபடுத்திக் கொண்டே தான் இருக்க வேண்டும்.

இதைப் போன்று தான்…
1.மனிதனின் வாழ்க்கையில் வரும் தீமைகளை மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு
2.அந்த அசுத்தங்களைத் துடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
3.அருள் ஒளியை நமக்குள் பெருக்கி உடலில் உள்ள தீமைகளைத் தூய்மையாக்கிக் கொண்டேயிருக்க வேண்டும்.

இந்த உணர்வின் வளர்ச்சி பெறும் பொழுது தான் நாம் பிறவி இல்லா நிலையை அடைய முடியும். இது முக்கியமானது…!

July 28, 2019

சிரமமான நேரங்களில் நல்ல உணர்வுகளை எப்படிக் கொண்டு வருவது…?


சாமி சிலைக்குப் பாலாபிஷேகம் செய்யும் போது சில பேரைப் பாருங்கள். வீட்டில் இருக்கின்ற கஷ்டத்தை எல்லாம் சொல்வார்கள்.
1.நான் இப்படி இருக்கின்றேனே…!
2.உனக்கு எத்தனை தடவை பாலாபிஷேகம் செய்திருக்கின்றேன்…?
3.குடும்பத்தில் எத்தனை தொல்லைகள் வந்து கொண்டே இருக்கிறது…?
4.பக்கத்து வீட்டுகாரனைப் பார்… என்னை எப்படி எல்லாம் பேசுகிறான்..
5.கேட்கும் நேரம் எல்லாம் அவனுக்குக் காசு கொடுத்தேன்… அதைக் கேட்கப் போனால் என்னை எத்தனை திட்டு திட்டுகிறான்..? என்று
6.இப்படி வரிசையாக அடுக்கிக் கொண்டே போவார்கள்.

ஆனால் கடனை வாங்கியவருக்கு எல்லாம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற பிரியம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வரவேண்டிய காசு வரவில்லை.

நாம் இரண்டு தடவை நடந்திருப்போம். மூன்றாவது தரம் போகப்போகும் போது என்ன செய்கிறோம்…?

இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டு இருந்தால் ஒன்றும் நடக்காது.. பணம் கொடுக்க மாட்டார்கள்…! என்று “பணம் கொடுக்கவில்லையே” என்று கோபமாகப் பேசி அந்த வெறுப்பாகின்றோம்.

இப்படி ஒரு தரம் வெறுப்பாகப் பேசிக் கொண்டு வந்தால் போதும்.  நமக்குப் பணம் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள் பாருங்கள்.
1.அதற்குக் கூட அவர்களுக்கு வருமானம் வராதபடி
2.இந்த வெறுப்பாகப் பேசிய உணர்வுகள் அங்கே அவர்களுக்குத் தொல்லை செய்யும்.

ஏனென்றால் இந்த உணர்வுகள் அங்கே வேதனைப்படும் செயலாக அவர்களை இயக்கத்தான் செய்யும். அதனால் அவர்களுக்கு வியாபாரம் இல்லாமல் போகும்.

நாம் பணம் கேட்கப் போகும் போதெல்லாம் இன்னும் கொஞ்சம்  கோபித்துக் கொண்டே வருவோம். இங்கே இவர்களிடம் கோபித்துக் கொண்டு வந்த பின் அதே உணர்வுடன் அடுத்த இடத்தில் பணம் கேட்டால் அங்கேயும் வராது.

பணம் வரவில்லை என்கிற பொழுது நம் குழந்தைகள் கிட்டேயும் சீறிப் பாய்வோம். அந்த மாதிரி நேரத்தில் சொந்தபந்தம் யாராவது வந்தாலும் அவர்கள் அன்பை இழந்து விடுவோம்.

முதலில் எங்கள் வீட்டிற்குச் சாப்பாட்டுக்கு வாருங்கள்…! என்று அவர்களிடம் சொல்லியிருப்போம். ஆனால் அந்தச் சிரமான நேரத்தில் அந்தச் சொந்தக்காரர்கள் வீட்டிற்குள் வந்தால் போதும்.

இந்த நேரத்திற்கு வந்திருக்கின்றார்கள் பார்… சாப்பாட்டுக்கு…! என்று தன்னை அறியாமலேயே அவர்களைப் பகைமையாக மாற்றுகிறது. அதை யார் செய்தது….?

நாம் நுகர்ந்த அந்த உணர்வுகள் நம்மை அப்படிச் செயல்படுத்துகிறது. 

இதை எல்லாம் நாம் தெளிவாக அறிந்து கொள்வதற்குத் தான் சிலையை வைத்து “இந்தத் தெய்வம் நல்லது செய்யும்…!” என்று ஆலயங்களில் காட்டினார்கள் ஞானிகள்.

அங்கே சாமிக்கு அபிஷேகம் செய்யும் பொழுது
1.பாலைப் போல் மனம் நாங்கள் பெற வேண்டும்.
2.சந்தனத்தை போல் நறுமணம் நாங்கள் பெற வேண்டும்
3.பன்னீரைப் போல் ஒரு தெளிந்த மணம் நாங்கள் பெற வேண்டும்
4.இந்த ஆலயம் வருவோர் அனைவருக்கும் அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று
5.இந்த உணர்வை எல்லாம் நுகர்ந்தால் நமக்குள் இங்கே அபிஷேகம் நடக்கின்றது
6.அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவுகின்றது. (எப்படி…?)

பாலைப் போன்ற மனத்தையும் சந்தனத்தின் நறுமணத்தையும் பன்னீரின் மணத்தையும் எண்ணி ஏங்கும் பொழுது - சுவாசிக்கும் உணர்வுகள்
1.நம் உயிரிலே படும் போது “சங்கு”
2.அந்த உணர்ச்சிகள் “சக்கரம்” இயக்கம்
3.அந்த நல்ல உணர்வுகளாக நாம் இயக்க முடியும்…! என்பதனை ஆலயங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஆக நம்முடைய வாழ்க்கையின் சிரமமான நேரங்களில் நல்ல உணர்ச்சிகளை எப்படிக் கொண்டு வர வேண்டும்..? நல்ல இயக்கமாக எப்படி மாற்ற வேண்டும்…? என்பதற்குத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

கதைகளிலும் காவியங்களிலும் வடித்த உருவம் தான் கடவுள்..! என்று மக்கள் எண்ணும்படியான நிலை உருவானது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


இன்றைய மானிட மக்களுக்கு… நன்மை தீமைகளை வழி வகுத்துச் சென்றிட… புரியாத நிலைகளில் தான் இன்றைய மதங்களும் மக்களும் உள்ளார்கள்.

ஆதியில் இருந்து… இம் மனித ஆரம்ப காலத்திலிருந்தே...
1.உதயத்திலிருந்தே வந்த பல சித்தர்கள் கொடுத்த பல உண்மை நிலைகளை எல்லாம்
2.அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி பிரித்தும் சேர்த்தும் சிதற விட்டுவிட்டார்கள்.

பல உண்மை நிலைகளை மதம் என்ற அடிப்படையில் உலகில் பல பாகங்களில் பல சித்தர்களால் வெளியிட்டதை
1.அந்தந்த நிலையில் உள்ள மக்களுக்குப் புரியும்படியாக வெளியிட்டதை
2.காலத்தின் செயலால் ஒரே அடிப்படையில் ஒவ்வொருவரும் தன் நிலைக்குச் சாதகமாக்கிக் கொண்டார்கள்.

ஆனால் எல்லோரும் சொல்லும் அடிப்படைக் கருத்து நம் ஆத்மாவிற்கு நாம் சேமித்து வைத்திடும் நிலை என்ன…? என்ற ஒன்றே தான்.

அதை வைத்துத்தான் பலர் பல வழிகளில் பல கதைகளைக் கட்டி… உண்மை இரகசியத்தை எல்லாமே மக்களுக்கு உண்மையாகப் போதிக்காமல் கதை வடிவில் அதை வடித்து
1.கதையையே கடவுளாகக் காட்டி…
2.மக்களுக்குக் கடவுள் என்றாலே “கதையில் வடித்த உருவம் தான்…!” என்ற எண்ணம் வரும்படிச் செய்துவிட்டார்கள்.

எல்லா மக்களுமே தான் உயர வேண்டும்… உயர்ந்த வாழ்க்கை வாழ வேண்டும்… என்ற எண்ணத்தைக் கொண்டு தான் வாழ்கின்றார்கள். ஆனாலும் அவ்வாழ்க்கையில் வரும் பேராசை நிலையில் தான் பல பாவங்களுக்கு உட்படுகின்றார்கள்.

நல்வழியில் நடத்திச் சென்றிடத்தான் அன்றையச் சித்தர்கள் பல அரும்பாடுபட்டுத் தவமிருந்து தான் பெற்ற சக்தி நிலைகளை மக்களுக்கு உணர்த்தினார்கள்.

இராமாவதாரத்தில் வந்த வான்மீகி முனிவரால் எழுதப்பட்ட இராமாயணக் காவியத்தையே அதில் உள்ள உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

அதில் உள்ள குணா அம்சங்களை ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படிக் குணா அம்சங்கள் அமைகிறது…? என்ற தத்துவ உண்மைகளை உணர்த்திடாமல்
1.அந்தக் கதையையே தன் தன் நிலைக்கு உகந்தபடி மாற்றியும் மறுத்தும்
2.இது தான் உண்மை… இது எல்லாம் தவறு…! என்று சுட்டிக் காட்டும் நிலையில் அன்றே சிலர் திருத்திவிட்டார்கள்.

அன்று எழுதிய இராமரின் கதை தான் இன்றும் பல கோணங்களில் திரித்துச் சிதறடித்தாலும் அந்த இராமரின் கதையே தான் உலவிக் கொண்டுள்ளது.

இராமாயணத்தின் மகத்துவத்தை அதிலுள்ள உண்மை நிலைகளை உலகிலுள்ள மக்கள் எல்லோரும் புரிந்து கொண்டால் இன்று உலகில் நடந்திடும் இக்குழப்ப நிலைகளும்… மனிதனை மனிதன் ஏமாற்றி வாழும் நிலையும் இருந்திடாதப்பா…!

எல்லோரும் என்னும் பொழுது ஒரு நற்செயலைச் செய்பவரும் நல்ல காரியத்தைச் செய்பவர்களும் பல நல்ல நிலைகளை எல்லாம் இப்பொழுது மதங்களின் வழியில் தன் தன் மதத்திற்கு உகந்தபடி சிதறடித்துவிட்டார்கள்.

ஆனால் எல்லோரும் சொல்வது இப்பொழுது உலகெங்குமே ஒரே நிலையில் கூடி வருகிறது. இந்நிலையே கூடி வந்து
1.ஒருவனே தேவன் ஒன்றே குலம்…
2.அத்தேவனில் இருந்து பிரிந்து வந்த பிம்பங்கள் தான்…
3.நாம் எல்லோருமே… எந்த மதத்திற்கும் யாரும் அடிமையில்லை…! என்ற சொல்லெல்லாம் இந்த மனிதனின் மனதிலும் ஏறவில்லை.

ஏட்டிற்கும் எழுத்திற்கும் தான் அது எல்லாம் இப்பொழுது உகந்ததாக உள்ளது.

ஆண்டவனையே… “தனக்கு மட்டும் தான் சொந்தம்…!” என்ற எண்ணத்தில் கோவில்களுக்குச் செல்பவர் தான் பலர் உள்ளனர் இன்றும்.

July 27, 2019

கணவன் மனைவி ஒன்றி வாழ வேண்டியதன் அவசியம்…!


இராமாயணத்தைக் கற்றுக் கொண்ட இராகவேந்திர சுவாமிகள் இராம நாம ஜெபத்தைப் பாடிக் கொண்டே “நான் சொர்க்கம் அடைய வேண்டும்” என்ற நிலை பெற்றவர்.

இராமனுடைய பாடல்களை… இராம ஜென்ம பூமி என்ற நிலைகளில் இராமாயணக் காவியங்களைப் பாடிக் கொண்டவர்.

சங்கர பீடங்களில் இராம நாம ஜெபத்தைத் தினமும் ஆயிரம் முறை எழுதிக் கொண்டிருந்தால் “உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்…!” என்று இன்றும் சொல்வார்கள். இராமன் யார் என்றே அறிய முடியாதபடி அந்த நிலைகள் அவ்வாறு இருக்கிறது.

இராகவேந்திரரின் மனைவி என்ன செய்கிறது…?

நீ இராமனையே பாடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றாய்…! எனக்குச் சாப்பாட்டுக்கு இல்லையே…! என்று கேட்கிறது.

நீ என் கூட வந்தால் பிசாசு…! நீ வரக்கூடாது என்கிறார். நான் இராமனையே பாடிச் சொர்க்கம் அடையப் போகிறேன்...! என்று உலகிற்குச் சொல்கிறார்.

தன் மனைவியைக் கூட வரவிடாதபடி துரத்திவிடுகின்றார். ஆனால் உலகிற்கு இராம நாம ஜெபத்தைப் பாடுகின்றார்.

மனைவியோ இராம நாமத்தைப் பற்றிச் சொல்ல முடியாதபடி அவர் உணவுக்கு வழி இல்லை.

ஆக மொத்தம் திருமணமாகிக் கணவனும் மனைவியும் ஆன பிற்பாடு இங்கே அனாதையாக விட்டுவிட்டு… “நான் போகின்றேன்…!” என்றால் என்ன ஆகிறது…?

அப்பொழுது மனைவி பின்னாடியே வருகின்றது. எனக்கு எப்படியும் உணவைக் கொடு… இல்லை என்றால் உன் கூடவே நானும் பாடுகிறேன்…! என்று சொல்கிறது.

1.நீ (மனைவி) வந்துவிட்டால் எனக்கு உன் மீது ஆசை வந்துவிடும்.
2.அதனால் நரகத்திற்குத்தான் போவேன்…! என்று இப்படிப்பட்ட நம்பிக்கையில் அவர் சொல்கிறார்.

அவரை இன்று கடவுளாகத் துதிக்கலாம். ஆனால் அவர் தன் மனைவியைத் துறந்துவிட்டு இப்படிப் போகிறார். அவருடைய மனைவியும் பின்னாடியே துரத்திக் கொண்டே போகின்றது.

நான் இராமனைப் பாடுகிறேன். நீ பிசாசு… வரக்கூடாது…! என்றே சொல்கிறார்.

நான் பிசாசாகி உன்னிடமே வருவேன்…! என்று கிணற்றில் விழுந்து தற்கொலை செய்கிறது. வெளி வந்த அந்த ஆன்மா அங்கே அவருக்குள் போகிறது.

அதற்குப் பின் அவரால் பாடல்கள் பாட முடியவில்லை. அப்பொழுது என்ன செய்கிறார்…? அந்தக் காலத்தில் “ஜீவ சமாதி” என்பார்கள்.

இனி என்னால் முடியாது என்று சொல்லிக் குழியைத் தோண்டச் சொல்லி அந்த இராமனைப் பாடிக் கொண்டே ஜீவ சமாதிக்குள் சென்று அதற்குள் ஐக்கியமாகின்றார்.

ஆனால் மனைவியின் ஆன்மா அவர் உடலுக்குள் தான் போனது. போய் இந்த நிலை (ஜீவ சமாதி) ஆன பிற்பாடு உயிர் எங்கே போகிறது…? விண் செல்லவில்லை.

சோறு மேல் தான் ஆசை வந்தது…! இராகவேந்திரர் சாமிகள் கும்பிடுபவர்களை எல்லாம் பெரும்பகுதி பாடல்களைப் பாடி விட்டு சாப்பாடு போட்டார்கள்… சாப்பாடு போட்டார்கள்…! என்று தான் சொல்வார்கள்.

அதனின் உணர்வின் ஆசை இருக்கும் பொழுது அதிலே சிக்கிக் கொண்டு செல்வம் வேண்டும்… செல்வாக்கு வேண்டும்… சொத்து வேண்டும்…! என்று தான் போவார்கள்.

அர்ச்சனை என்று எல்லாக் காசுகளும் போட்டு இந்த ஆசைகளில் தான் கும்பிடுகின்றார்கள். “மோட்சம் அடைய வேண்டும்” என்ற எண்ணம் இல்லை.

இராகவேந்திர சுவாமிகள் பக்தியின் நிலைகளில் அவர் தர்மத்தைப் பேசும் பொழுது
1.அந்த ஞானிகளின் அருளைப் பெற வேண்டும் என்ற உண்மையை எடுத்துரைத்தார்.
2.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணினார்.
3.ஆனால் தன்னை அணுகி உள்ளவரை (மனைவியை) மறந்துவிட்டார்.

இராகவேந்திரரின் ஆன்மா பல காலம் திரிந்து மும்முடிவாரத்திலிருந்த பாலயோகீஸ்வரரின் உடலில் புகுந்தது.

அவருடைய உடலில் இராகவேந்திர சுவாமிகளுடைய உணர்வுகள் பதியச் செய்யும் பொழுது பாலயோகியினுடைய உடலில் இருந்துதான் இந்த உணர்வின் சக்தியை மெய் ஒளியைப் பெற முடிந்தது.

ஒன்றுமறியாத பாலயோகியினுடைய உடலிலிருந்து மெய் ஒளியைக் காணும் நிலைக்கு அவர் எடுத்துக் கொண்ட மெய் ஒளியின் தன்மை கொண்டு எவ்வாறு ஜீவ சமாதி ஆனாரோ
1.முன்னூறு ஆண்டுகளுக்குப் பின் அவருடைய உயிராத்மாவும்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் அடைந்தது.