ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

Showing posts with label தீவிரவாதத்திலிருந்து விடுபடுங்கள். Show all posts
Showing posts with label தீவிரவாதத்திலிருந்து விடுபடுங்கள். Show all posts

January 19, 2017

“சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” எனும் நிலைக்கு இன்றைய உலகம் அழிவின் நிலைக்கு வந்துவிட்டது

ஆட்டை வெட்டிக் கருப்பணச் சாமிக்குக் கொடுத்துவிட்டால் நம்மைக் காப்பாற்றுவான் என்ற நிலையில் ஆட்டை வெட்டி ஆட்டின் உயிரை மனிதனாக ஆக்குகின்றோம்.

ஆட்டின் கறியை ருசித்துச் சாப்பிட்டு நாம் ஆடாகப் பிறக்கின்றோம். இதைப் போன்ற அசுர உணர்வின் தன்மையைத்தான் நமக்குள் வளர்க்க முடிகின்றது.

இன்றைய உலகில் விஞ்ஞான அறிவு கொண்டிருந்தாலும் மன பேதம், இன பேதம் மொழி பேதங்களை உருவாக்கிவிட்டார்கள்.

இன்று மனிதன் வெளியிலே செல்ல முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் மரண பயம் கொண்டு வாழ்கின்றோம். ஆகவே, தீமையான உணர்வுகளை நாம் எண்ணப்படும் பொழுது மனிதனல்லாத உருவை உருவாக்கிவிடும் நம் உயிர்.

பாம்பு எப்படித் அதனைத் தாக்கிவிடுவோம் என்று அது முந்தித் தாக்குகின்றதோ அது போன்றே “சாந்த மனம் கொண்டவன் கூட..,” அவனுக்குமுன் எதிரிகள் வந்தார்கள் என்றால் அவர்களுக்கு முந்தி இவன் தாக்கும் நிலைக்கு வருகின்றான்.

தீமைச் செய்வோனைக் காட்டிலும் தீமையற்ற நிலையில் இருப்பவர் “சாது மிரண்டால் காடு கொள்ளாது..,” என்ற நிலைகளில் சாந்த உணர்வு கொண்டோர் இத்தகையை தீமைகளைக் கண்டால் வேகமாக எதிர்த்துத் தாக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றார்கள்.

ஆக, மனிதன் என்ற உருவையே இன்று அழித்திடும் நிலை வந்துவிட்டது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் மீள வேண்டும். மீண்டிடும் நிலையாக குருநாதர் காட்டிய அருள் வழிப்படி நாம் அந்த அருள் ஞானிகள் கண்ட உணர்வினை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

விண்வெளியில் இன்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலங்களும், துருவ நட்சத்திரமும் அவைகளிலிருந்து வெளிப்படும் உணர்வின் தன்மையை உங்களுடைய நினைவினை அங்கே செலுத்தி அந்த உணர்வினை ஈர்க்கும்படிச் செய்கின்றோம்.

இன்று நாட்டில் விஞ்ஞானத் தன்மை கொண்டு காற்றில் கலந்து வரும் நஞ்சின் தன்மையிலிருந்து வராக அவதாரத்தில் காட்டியபடி தீமைககள நீக்கி நாற்றத்தைப் பிளந்து நல்லதை நுகர்ந்ததோ அதைப் போன்று இந்தக் காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டிருக்கும் அருள் மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கி அந்த எண்ணத்தை வலுவாக்கி அருள் உணர்வை நுகர்வோம்.

மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுவோம். அதன் தொடர்பு கொண்டு நம் முன்னோர்கள் இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அவர்கள் வெளி வரும் பொழுது இந்த உணர்வின் துணை கொண்டு அவர்களையும் நாம் விண் செலுத்துவோம்.

ஏனென்றால், இதற்கு முன் நாம் நமது முன்னோர்களை விண் செலுத்தத் தவறிவிட்டோம். அவர்கள் இந்தக் காற்று மண்டலத்தில் தான் சுழன்று கொண்டுள்ளார்கள்.

நம் முன்னோர்களின் உயிரான்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

அதன் துணை கொண்டு அந்த அருள் ஒளிகளை நமக்குள் பாய்ச்ச வேண்டும். நம்மை அறியாது வரும் இருளை நீக்க வேண்டும் என்று நாம் தியானிக்க வேண்டும்.

நாமும் விண்ணின் ஆற்றலைப் பெறும் பொழுது இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே சென்றடையலாம். நம் எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

மரணமில்லாப் பெருவாழ்வு என்பதும் பிறவியில்லா நிலை என்பதும் பேரின்பப் பெருவாழ்வு என்பதும் அந்தச் சப்தரிஷி மண்டலமே.

ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையான ஒளியின் தன்மை பெறுவோம்.

November 8, 2016

தீவிரவாதத்தின் பிடியிலிருந்து நம்மைக் காக்கும் சக்தி எது...?

இன்றைக்கு இருக்கக்கூடிய உலகம் காற்றிலே அதிகமாக விஷத் தன்மை பரவிக் கொண்டிருக்கின்றது. காஷ்மீரில் இன்று என்ன செய்கின்றார்கள்?

நான் தீவிரவாதி, நான் சொன்னபடி கேட்கவில்லை என்றால் நான் இதை அழிப்பேன். அங்கே முஸ்லிம்கள் தான் அதிகமாக இருக்கின்றார்கள்.

என்னுடைய கட்டுப்பாட்டிற்குக் கீழ் நீ வரவேண்டும். அதாவது “என் வழிக்குத் திரும்பு, இல்லை என்றால் உன்னைக் கொன்றுவிடுவேன்” என்று சொல்கின்றார்கள். பல பேரைக் கொன்றுவிட்டார்கள்.

அதே போல் அமெரிக்கா எத்தனை வகையில் பல அணுகுண்டுகளைச் செய்து வைத்திருந்தாலும் கூட அவன் நாட்டுக்குள் இருந்து அவர்களுடன் பழகி அவனுடைய விமானத்தை வைத்தே கட்டடங்களையும் மக்களையும் கொன்று குவித்தார்கள். அவர்களுடைய ஞானம் அப்படி இருக்கின்றது.

ஏனென்றால், ஆண்டவனுக்கு எதிரான நிலைகளில் செயல்படும்போது அவர்களைக் கொன்றால் ஆண்டவன் ரொம்பச் சந்தோஷமாகின்றான்.

ஆண்டவன் சந்தோஷப்பட்டு இவன் உயிரை அவனிடம் அழைத்துச் சென்று விடுவான், மோட்சத்திற்குக் கொண்டு போவான் என்று சொல்லி “முட்டாள்தனமான அறிவுகளில்” செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

உன் நாட்டைக் காக்க வேண்டும் என்றும் மக்களைக் காப்பாற்றுவதற்காக வேண்டி “நீ.., உன் உயிரை விட்டால்..,” உயிரை விட்டான் என்பதற்காக வேண்டி கடவுள் உனக்கு மோட்சம் கொடுப்பான் என்பார்கள்.

இப்படிச் சொல்லும் நிலை ஒவ்வொரு மதத்திலேயும் ஒவ்வொரு இனத்திலேயும் ஒவ்வொரு சாதியிலும் இந்த நிலை தான் இருக்கின்றது.

இன்று அந்த நிலைகள் உயிரைக் கொல்லும் தீவிரவாதமாக வளர்ந்து விட்டது. ஆக, அடுத்தவனைக் கொல்வதில் ஒரு சந்தோஷப்படக்கூடிய நிலையில் வெறித் தன்மை ஊட்டி இன்றைக்கு உலகமே அந்த நிலைகளுக்கு வந்துவிட்டது.

இந்த உணர்வெல்லாம் கேட்டுக் கொண்டபின் வீட்டில் நம் குடும்பத்துடன் வாழ்பவர்களுக்குள் என்ன செய்கின்றது?

நம் பையனை நன்றாக உயர்த்த வேண்டும் என்று எண்ணுகின்றோம். நாம் எண்ணியபடி அவன் நடக்கவில்லை என்றால், “இவன் என்னத்தைச் செய்யப் போகின்றானோ…,? கோபம் வருகின்றது.

இந்தக் கோபம் பயமாக வந்து அவனை மிரட்டிக் கொண்டேயிருப்போம்.

அந்த மிரட்டும் உணர்வுகள் ஒரு தடவை அவன் மேல் வெறுப்பாகி நமக்குள் பதிவாகி அந்தச் சொல்லாகச் சொல்லி அவனுக்குள் பதிவாக்கிவிட்டோம் என்றால் அவன் இல்லாத பொழுதெல்லாம் நாம் என்ன செய்வோம்?

வீட்டில் பெண்கள் அவனைப் பற்றிப் பேசினால் உடனே கோபப்படுவார்கள். அந்தப் பேச்சின் உணர்வுகள் செயல்படும்போது அவனுக்குள் பதிவாகிவிடும்.

அந்தப் பதிவு அவனை என்ன செய்யும்?

அவன் ரோட்டில் நடந்து சென்றால் சிந்தனை இழந்தவுடன் மேடு பள்ளம் தெரியாதபடி விபத்துக்குள்ளாவான்.

அல்லது எதிர்த்தும் வரும் ஆளையோ எதிர்த்து வரும் வாகனத்தையோ தெரியாதபடி ஆக்சிடென்ட் ஆகும். நம்முடைய நினைவுகள் இப்படி ஒன்றுக்கொன்று எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் இப்படித்தான் இயக்குகின்றது.

ஒரு குடும்பத்தில் ஒரு சிறு ஆக்சிடென்ட் ஆனது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படி ஆக்சிடென்ட் ஆன உணர்வுகள் வீட்டில் உள்ள அத்தனை பேருக்கும் அந்த உணர்வுகள் பதிவாகிவிடும்.

இந்த மாதிரி ஆன பின், அடுத்தாற்போல் வீட்டை விட்டு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது வெளியில் சென்றார்கள் என்றால் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற அந்த உணர்வுகள் தூண்டும்.

அவர்களை எண்ணி இங்கே போகும்போது இந்த நினைவு என்ன செய்கின்றோம் என்று தெரியாதபடி முட்டி மோதிக் கொள்வார்கள். காரிலோ எதிலோ சென்றால் மறுபடியும் ஆக்சிடென்ட் ஆகும்.

இப்படி அந்தக் குடும்பத்திற்குள் தொடர்ந்து அந்த உணர்வுகள் “இப்படி ஆகிவிட்டதே.., இப்படி ஆகிவிட்டதே..,” “கெட்ட நேரம் வந்துவிட்டது போலிருக்கின்றது..,” என்று நம்முடைய எண்ணங்கள் எண்ணக்கூடிய நேரம் நமக்குள் அது கெட்ட நேரமாக மாறும்.

அதை உடனே மாற்ற என்ன செய்ய வேண்டும்?

துருவ நட்சத்திரத்தை எண்ணி அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி நமக்குள் அதை இணைத்துக் கொண்டு அந்த மன உறுதியை வலுப்படுத்திக் கொண்டால் அந்தக் கெட்ட நேரத்தை நாம் நல்ல நேரமாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதை உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் வரக்கூடிய தொல்லைகளை உடனுக்குடன் இப்படி மாற்றி அமைக்க வேண்டும்.

நம்மைக் காக்கும் சக்தியை நம் எண்ணத்தால் தான் எடுக்க முடியும். எந்த ஆண்டவனும் வந்து நம்மைக் காக்கப் போவதில்லை.

ஏனென்றால், நமக்குள் எண்ணுவதை உள் நின்று இயக்கும் சக்தியாக கடவுளாகவும் நாம் எண்ணுவதை இயக்கி அதை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனாக இருப்பவனும் நம் உயிர் தான்.

அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை என்ற நிலை அடைவதே நம்மைப் பல கோடிச் சரீரங்களிலிருந்து மீண்டு மனிதனாக உருவாக்கிய உயிரான ஈசனுக்குச் செய்யும் சேவை ஆகும்.