ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 31, 2013

என் மனதே சரியில்லை...! (MOOD) என்பார்கள் - மனது ஏன் அலைக்கழிக்கின்றது...?

1. கடல் அலைகள் போன்று எண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றது
கடலில், சிற்றலை பெரிய அலை வருவது போன்று, மனித வாழ்க்கையில் இன்று ஒவ்வொரு நிமிடத்திற்கு நிமிடம், எண்ணப் புயல்கள் மாறிக் கொண்டே தான் இருக்கும். அலைகள் மாறிக் கொண்டே தான் இருக்கும்.

ஒரு நண்பனைப் பார்த்தவுடன், மகிழ்வோம். அடுத்த நண்பன் வந்தவுடன், அவன் நம்மைத் திட்டினான் என்றால், உடனே “அப்படியா சொன்னான்?” என்று, ஆத்திரத்துடன் செயல்பட்டுவிடுவோம்.

அடுத்து வரக்கூடிய நண்பனுடைய நிலைகளில், கொடுத்த பாக்கியை கொடுக்க முடியாது என்று சொன்னவுடன், “இருக்கட்டும் நான் பார்க்கிறேன்” என்ற ஆத்திர உணர்வுடன் செயலபடுவோம்.

அடுத்து ஒரு நண்பன் வந்தவுடன், இன்னொருவர் சொல்கிறார். “உங்களைப் பைத்தியக்காரர், ரொம்ப மோசமான ஆள், இரண்டில் ஒன்று பார்க்கிறேன்” என்று சொல்கின்றார். அதை நாம் கேட்டவுடனே, நம் மானமே போய்விடும் என்று, சோர்வான நிலைகளில் இந்த அலைகள் வந்து பலவீனமான நிலைகள் ஏற்படும்.

இப்படி, ஒரு நிமிடத்திற்கு நிமிடம், மற்றவர்களை நாம் சந்திக்கும் பொழுது, அந்த உணர்வலைகள் நமக்குள் தாக்கப்பட்டு, அந்த உணர்வாலே அத்தகைய அலைகள் மோதிக் கொண்டேதான் இருக்கும்.
2. பல உணர்வலைகள் நமக்குள் தாக்கப்படுவதால் அது நம்மை அலைக்கழிக்கின்றது
சாதாரண வாழ்க்கையில், காற்று மண்டலம் எப்படி இந்தப் பூமியிலே சுழலுகின்றதோ, இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப நம் உடலில் அலை அலையாக மாறி வருவதை, சுதிவாய்வு என்று சொல்கின்றனர்.

இவ்வாறு நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளெல்லாம், உடலாக மாறி, அந்த உடலின் தன்மையினுடைய நிலைகள் ஆவியாக மாறி, அது ஒலியாக மாறி, நமக்குள் அது சொல்லாகவும், செயல்களாகவும் செயல்படுகின்றது.

உங்களுக்குள் இருக்கக்கூடிய எந்த உணர்வை எண்ணினாலும், அந்த எண்ணத்தைச் சிறிது நேரம் சுவாசிக்கும் பொழுது, அந்த உணர்வின் அலைகள் உங்களை அலைக்கழிக்கின்றது. நடக்கின்றது. அதன் வழிகளிலே உங்களைச் செயலாக்குகின்றது.

இதை நாம் அறிந்துணர்ந்தவர்கள்தான். அறியாதவர்கள் யாரும் இல்லை. எல்லோருக்கும் தெரியும். புதிதாக யாம் ஒன்றும் சொல்லவில்லை.

நம் உடலிலே எந்தெந்த குணங்களை
அதிகமாக, ஆழமாகப் பதிவு செய்திருக்கின்றோமோ,
அது அதிவேகமாக முன்னனியிலே வந்து,
அதைச் சுவாசித்து, அதன் வழிகளில் தான் நாம் நடக்கின்றோம்.

இன்று வரையிலும் நாம் சாந்தமான நிலைகளில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதையும் தாங்காதபடி, ஆழமான உணர்வுகள் நமக்குள் பதிவாகி உள்ளதை, நாம் உந்தச் செய்யும் பொழுது, அந்த உணர்வை முன்னனியிலே வைத்தவுடன், அந்த உணர்வுகள் நமக்குள் வேகமாகக் கூடி, அதன் வழிகளில்தான் நாம் நடக்கின்றோம்.

இதைப் போன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலத்திலே தான், நமது குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தைப் போக்க,
உங்களை நீங்கள் நம்புங்கள்,
தாய் தந்தையை தெய்வமாக எண்ணுங்கள்,
தாய் தந்தையருடைய அருளால், எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியையும் எளிதில் நீங்கள் பெறமுடியும்.

யாம் சொல்லும் முறைப்படி, இந்த ஆத்ம சுத்தியையும் தியானப் பயிற்சியையும் நீங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பொழுது, உங்களுக்குள் வரும் எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுபடும் அருள் ஆற்றல் கிடைக்கும். வாழ்க்கையில், நீங்கள் எல்லோரும் மகிழ்ந்து வாழ முடியும். எமது அருளாசிகள்.

December 29, 2013

கோபம் நமக்கு எதனால் வருகின்றது? அதைக் கட்டுப்படுத்தும் வழி

1. இல்லாததைச் சொல்கிறார்கள் என்று உணர்ச்சிவசப்படுகின்றோம்
கோபம் வரும் நிலைகளில், அந்தக் காரமான உணர்வுகள்  நமக்குள்  அதைத் தூண்டச் செய்து,  அந்த காரமான நிலைகளில் நாம் பேசி,  பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால்,   அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

ஆக,  மெய்ஞானிகள் விண்ணின் அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக்கொண்டதனால், அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும், அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை. 

ஆனால், எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும், அந்த உணர்ச்சிகள் தூண்டாவண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி, அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய பார்வையில் பட்டவுடன், அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால், ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார், நம்மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார்,  அந்தச் சொல் வெறும் வார்த்தைதான்.  
அதை நமக்குச் சொன்னவுடன், அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
நமக்குள் அடக்கமுடியவில்லை.
இவ்வாறு சொல்கிறானே! என்று பதட்டமும்,
பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி, தவறு செய்யும் நிலைகளுக்கு எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ, அவர்களை அழிப்பதற்கு வருகின்றது.

இல்லாததைச் சொல்கிறான் என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது.

ஆனால் அதே சமயம் இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ்நீராககச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது. இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன், அது நம் உடலில் சாப்பிட்டவுடன் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து, அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி, நம் தசைகளாக மாறிவிடுகின்றது.
2. நம்மையறியாமல் கோபப்படும் நிலைகளிலிருந்து விடுபட என்ன செய்யவேண்டும்?
உதாரணமாக, இப்பொழுது ஒருவர் தவறு செய்திருக்கிறார், கோபமான  உணர்வை நம் புலனறிவு இழுத்திருக்கின்றது. அப்பொழுது அந்த கோபத்தை நினைவுபடுத்தி கண்ணிலே பட்டவுடன், நாம் இங்கே பார்த்தவுடன்,
அடுத்து ஒருவர் சந்தோஷமாகச் சொன்னால்,
இந்தப் புலனறிவு அவரைப் பார்க்கும்போது,
அவர் சொல்வதைச் சரியாகக் கிரகித்து இழுக்காது. 

ந்தக் கோபத்தின் மேல், இந்த உணர்வின் நினைவலைகள் பட்டு, நாம் செயல்படுத்தும்போது அந்த நினைவலைகள், கண்ணிலே பாய்ந்துகொண்டிருக்கும்.

நம் முன்னால் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால், இந்த உணர்வுகளை அது கிரகிக்கக்கூடிய சக்தி இருக்காது.  மிகவும் கஷ்டமாகத் தெரியும். ஆக, நம் கண்ணின் புலனறிவு அதன் வழிக்குத் தக்கவாறுதான் அதை ஈர்ப்பது.

பாலிலே, சர்க்கரையைக் கலந்து குடிக்கப்படும்போது, எப்படியோ, நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தாலும், இதைப்போல கசப்பான உணர்வுகளையும், மற்றவைகளையும் கலந்து நாம் சுவாசிக்கும்போது, நம் உயிருக்குள் பட்டு, இந்தச் சுவையின் தன்மைகள் மாறிவிடுகின்றது.

ஆக இரண்டு எண்ணங்களை நாம் சுவாசிக்கும்போது, அதன் உணர்வுகள் இரண்டுக்கும் மாறுபட்ட நிலைகள் சிதறுண்டு, நம் நினைவலைகளை இயக்கச் செய்கின்றது. இப்படித்தான், நம் உடலின் உறுப்பின் நிலைகளும், மற்ற நிலைகளும் இயங்குகின்றது.
3. கோபத்தைக் கட்டுப்படுத்தும் வழி
இதை நாம் கட்டுப்படுத்துவதற்குத்தான்,   மெய்ஞானியின் அருள் சக்தியை உங்களுக்குள் பதியச் செய்கின்றோம்.  மகரிஷிகளின் அருள்சக்தி நாம் பெற வேண்டும் என்று அதற்குள் நினைவைச் செலுத்திப் பழகிக்கொண்டால், அப்பொழுது  உடனடியாகக் காற்றிலிருந்து, இந்த ஞானியருடைய அருள் சக்தியை நாம் பெற முடிகின்றது.  அவ்வாறு சுவாசித்து, நம் உடலில் வரக்கூடிய துன்பங்களைப் போக்க இது உதவும்.

இதற்கு நமக்கு ஆற்றல் தேவை. அதற்குத்தான் நாள் முழுவதும் உழைத்தாலும், நாம் ஒவ்வொரு நாளும் ஒரு பத்து நிமிடம் அந்த சக்தியைப் பெருக்கவேண்டும்.

ஏனென்றால் ஞானியருடைய, மகரிஷிகளுடைய அருள்சக்தியை உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம். ஒரு பத்து நிமிடமாவது, அந்த ஞானியருடைய அருள் சக்தியை எடுத்து, மாற்றிப் பழகிக்கொள்ள வேண்டும்.

அப்படி பழகிக் கொண்டால், நம் வாழ்க்கையில் எப்பொழுது எங்கே, எத்தகைய நம் எண்ணங்களைத் தடுமாறச் செய்யக்கூடிய நிலைகள் வந்தாலும், அப்பொழுது நாம் ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிரை எண்ணி, ‘’ஆத்மசுத்தி’’ செய்து நம் உடலுக்குள் நினைவைச் செலுத்தும்போது, நம்மையறியாமல் ஆத்திரப்படக்கூடிய நிலைகளிலிருந்து, பயப்படும் நிலைகளிலிருந்து, விடுபடுகின்றோம். நாம் சிந்தனை குறைந்திருக்கக்கூடிய நிலைகளிலிருந்து விடுபடுகின்றோம்.

நம் உடலில் வியாதிகள் இருந்தாலும், அந்த வேதனையான எண்ணங்கள், நமக்கு பல முறைகளில் பல தீமைகளை உருவாக்குகின்றது. ஆக, வேதனை என்பது விஷம். இதைப்போன்று நம்மையறியாது பல நிலைகள் உருப்பெற்றுவிடுகின்றன.

இதையெல்லாம் மாய்க்கவல்ல சக்தி அந்த சப்தரிஷிகளுக்கு உண்டு. “சப்தரிஷிகள் தங்களுக்குள் விளையை வைத்ததை நாம் பெறுவதுதான் இந்த ஆத்மசுத்தி.

December 28, 2013

விஞ்ஞானிகள் கணிக்கும் அளவுகோலுக்கு இந்த உலகம் இனி நிற்காது

1. விஞ்ஞானிகள் கணிக்கும் அளவுகோலுக்கு இந்த உலகம் இனி நிற்காது
சூரியன் ஒளி தரும் சக்தியாகவும், மற்றதை இயக்கும் சக்தியாக இருந்தாலும், மனிதனால் ஏற்பட்ட இந்தச் சக்தி, சூரியனும் நஞ்சின் தன்மை அடைந்து கொண்டே வருகின்றது.

இந்தச் சூழ்நிலையில், இன்று நாம் மனிதன் சுவாசிக்கும் அனைத்து உணர்வுகளிலும் அது கலந்து கொண்டே உள்ளது. மற்ற கோள்கள் விஷத்தன்மை கொண்டது. மற்ற கோள்களில் விஷத்தின் தன்மை கொண்டு, வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த உயிரணுக்களைப் போல நாமும் ஆக நேரிடும்.

இவ்வாறு இந்தக் காற்று மண்டலத்தில் சேர்த்துக் கொண்ட இந்த நச்சுத்தன்மையான உணர்வுகள், நம் உடலில் கலந்து, இந்த உணர்வின் ஆற்றல், இந்த உடல் இழந்தாலும், உடலில் கலந்த இந்த நச்சுத்தன்மையான உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஒன்றி, அதன் செயலாக இயக்கி, வேதனைகளை அனுபவித்ததே ஆக வேண்டும் (உயிருடன் ஒன்றிக் கொண்டு).

ஆக, எந்த விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, இன்று பல நிலைகளில் அற்புதங்களைக் கண்டு கொண்டான், பிறர் வியக்க அற்புதச் செயல்களைக் கண்டோம்; தன் ஆற்றலை வெளிப்படுத்தினான்; என்ற நிலைகள் இருந்தாலும்,
இதைப் போல நச்சுத்தன்மையான உணர்வின் சக்தி,
அவன் உடலிலும் விளைந்து,
வேதனையை அனுபவித்தே ஆக வேண்டும்.

இந்த உடலில் எந்தெந்த செயல்கள் செய்கின்றோமோ, அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி, நாம் நிலையான வேதனைகள்பட்டே தீரவேண்டும்.

ஒரு உடலுக்குள் சென்று இதை மாற்றிக் கொள்ள எண்ணினாலும், அந்த உடலையும் வேதனைப்படச் செய்து, அங்கும் வேதனையான உணர்வுகளை வளர்த்து, அந்த மனிதனையும் வீழ்த்தி, உயிராத்மா வெளியே வரப்படும் பொழுது, இந்த வேதனையையே உணவாக உட்கொண்டு, வேதனையை அனுபவிக்கும் உணர்வின் சரீரமாக நம் உயிர் மாற்றிவிடும்.

சூரியன் இன்று விஷத்தன்மையாகி, அது செயலிழக்கும் தன்மை, துரித நிலைகளில் வந்துவிட்டது. விஞ்ஞானிகள் பல காலத்தை அளவிட்டார்கள். அந்த அளவுகோலுக்கு நிற்காது.

ஆனால், அவன் அளவிடுவதற்கு முன் சூரியன் நஞ்சாக மாறும் பொழுது, இங்கு பூமியில் மனிதனின் சிந்தனைகள் முழுமையாக மாறி, மிகவும் வேதனைப்படும் நிலையும், வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய நிலையும், பூமிக்குள் துரித நிலைகளில் வருகிறது.
2. ஈஸ்வராய குருதேவர் மக்களை மீட்ட வேண்டும் என்று எண்ணினார்
நமது குருநாதர் காட்டிய அருள்வழிப்படி, அவர் எமக்கு எவ்வாறு எல்லாவற்றையும் காட்டினாரோ, அதையெல்லாம் கண்டுணர்ந்துதான், உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறோம்.

நமக்கு இந்த மனித உடல் கிடைத்தது பெரிய பாக்கியம்.
ஆனால், கிடைத்த இந்த பாக்கியத்தை
சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

ஏனென்றால், நாம் வயல்களில் எவ்வாறு களைகளை நீக்குகின்றோமோ, அதைப்போல வாழ்க்கையிலே தோன்றும் விஷத்தன்மையான களைகளை நீக்கவில்லை என்றால், அது நமக்குள் இரண்டறக் கலந்து, நம் நல்ல உணர்வுகள் அழிக்கப்பட்டு, துன்பமே வாழ்க்கை என்ற நிலைகள் ஊடுருவி, அதுவே வளர்ந்துவிடும் நிலைகள் ஏற்பட்டுவிடுகின்றது.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளிலிருந்து மனிதன் மீளவேண்டும் என்று நமது குருநாதர் காட்டிய, அவர் கண்டுணர்ந்த நிலையில், அவர் உடலிலே துன்பத்தை நீக்கிய வழிகளில்தான், செயல்படுத்துகின்றோம்

நமது குருநாதர், இந்த உலக மக்களை மீட்பதற்கு, நல்லதை எண்ணி ஏங்கினார். அவர் எம்மிடம், மக்கள் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அந்த மெய் ஒளியின் தன்மையை உனக்குள் கூட்டி, அந்த நச்சுத் தன்மைகள் உனக்குள் வளராது தடுத்து, அந்த உணர்வின் சக்தியை உனக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அதை உனக்குள் வளர்க்கப்படும் பொழுது, இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும், வாழ எண்ணும், நல்லதை எண்ணும் அந்த நல்ல உள்ளங்களில் அந்த மெய் உணர்வுகள் வளரவேண்டும் என்று நீ ஏங்கி ஒலிபரப்பு.

ஆக, நீ எடுக்கும் இந்த உணர்வுகள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படர்ந்து, ஒவ்வொரு உள்ளத்திலும் விளையட்டும் என்று எம்மிடம் கூறினார் குருநாதர்.
3. சிறுதுளி வெள்ளம் போன்று மெய் உணர்வுகள் பரவட்டும்
சிறுதுளி பெருவெள்ளம் போன்று, ஒரு நெல்லை விதைத்தால் அது விளைந்து நெல்கள் பலவாகி, அந்தப் பல நெல்களையும் விளைவித்து எடுத்துக் கொண்டால்தான் மலைபோல் குவிகின்றது. அப்படி மலைபோல் குவிந்தால்தான் அவரவர்கள் பசிக்கு, அளவுக்குத் தககவாறு உணவாக எடுத்து உட்கொள்ள முடியும்.

நீ ஒரு நெல்லாக இருக்கின்றாய். அந்த நெல்லின் தன்மையை பலவாக வளர்த்துக் கொண்டு, அந்த உணர்வின் சக்திவாய்ந்த உணர்வின் ருசியை, ஒவ்வொரு உள்ளத்திற்குள்ளும் ஊட்டு.

ஒவ்வொரு உள்ளத்திலும் விளைந்து,
அந்த உணர்வின் எண்ண அலைகளாக வெளிபரப்பும்
அதை ஒன்று சேர்த்து,
அந்தத் தீமையை நீக்கும்
மெய் உணர்வுகளாகப் பரப்பச் செய்,
என்று கூறினார் நமது குருநாதர்.

அப்படிப் பரவும் அந்த மூச்சலைகள், காற்று மண்டலத்தில் கலந்திருக்கும், “நச்சுத் தன்மைகள் அனைத்தையும் பிளக்கட்டும்”.

நச்சுத் தன்மைகளைப் பிளக்கும் எண்ணங்கள் கொண்ட, பல ஆயிரம் பேர் சேர்ந்து, அந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ளும் நிலையில், அவர்களிலிருந்து வெளிப்படும் சக்தியின் தன்மை, நாம் இன்று கூட்டு அமைப்பாக வளர்ந்து தியானிக்கும் இந்த உணர்வின் எண்ண அலைகள், நம் பூமி முழுவதும் பரவும்.

அப்படிப் பரவி, விஞ்ஞானிகளால் வெளிப்படுத்தப்பட்ட, சூரியனால் கவரப்பட்ட நஞ்சான அணுக்களையும், “இன்று மனிதனை மனிதனே கொன்று குவித்திடும், இரக்கமற்ற நிலையில் செயல்படுத்தும் இந்த எண்ண அலைகள், ஒவ்வொரு மனிதனின் உடலிலும் விளைந்து வெளிப்படும் நச்சுத் தன்மையாக படரும் நிலைகளையும் தடுத்து, மக்களை மீட்கச் செய்யும், என்று உணர்த்தினார் குருநாதர்.

அதைத்தான் யாம் செய்து கொண்டிருக்கின்றோம். எமது அருளாசிகள்.

December 27, 2013

நாம் நன்மை செய்தாலும், பதிலுக்கு தீமை செய்பவர்களுக்கு எப்படிச் செய்யவேண்டும்?

ஒவ்வொரு நிலைகளிலும் பிறருக்கு நன்மை செய்தாலும், அந்த நன்மை பெற்றவர்களும், மீண்டும் எமக்குத் தீமை செய்வார்கள்.

அப்பொழுது, அந்தத் தீமையே செய்யப்படும் பொழுது, அந்தத் தீமையை அழித்திட, எனக்குப் பல சக்தி கொடுத்தார். கொடூரச் சக்திகள் கொண்டு நான் எண்ணத்தால் எண்ணினால் போதும். அவர்களுடைய நிலைகள் செயலற்றதாக ஆகிவிடும்.

ஆனால், அதற்கு மாறாக, பிறர் நமக்குத் தீங்கு விளையவைத்தாலும், எம்மை எண்ணும் பொழுது, அவருக்குள் தீமையை விளைவிக்கும், “அந்த எண்ணங்கள்தான் அழிய வேண்டுமே” தவிர,
அவர்களுக்குள் இருக்கக் கூடிய நல்ல எண்ணங்கள் ஓங்கி வளர்ந்து,
நன்மை பயக்கும் சக்தியாக அது மலரவேண்டும் என்றுதான்,
குருநாதர் இந்தச் சக்தியினை எமக்குக் கொடுத்தார்.

ஆகவே, ஆற்றல்மிக்க இச்சக்தியை எமக்குள் கொடுத்திருந்தாலும், ஒவ்வொரு நிமிடத்திலும் எத்தனையோ பரிசீலனைகள் இன்றும் வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த நிலைகளிலும் யாம் கூர்ந்து கவனித்து, அவர்களுடைய உணர்வுகளை எமக்குள் செலுத்தாதபடி, அவர்கள் நலம் பெறவேண்டும், அறியாத நிலைகளிலிருந்து, விடுபட வேண்டும், என்ற நிலைகளைத்தான் குருநாதர் காட்டிய நிலைகளில், யாம் செய்கின்றோம்.

ஆகவே, நீங்கள் எங்கே சென்றாலும், எந்த நிமிடம் ஆனாலும், இதைக் கேட்டுணர்ந்தவர்கள், “எனக்கு இவ்வாறு துன்பம் செய்தார்” என்று அவர்களை எண்ணாதபடி, “எனக்குத் துன்பம் வந்து கொண்டே இருக்கிறது” என்று எண்ணாதபடி, இந்த எண்ணத்தை மாற்றவேண்டும்.

இதற்குத்தான் இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை, குருநாதர் எமக்கு அருளிய வழிப்படி, உங்களுக்கும் தைரியத்துடன், ஏனென்றால் உங்களுக்கும் தைரியம் பெறவே, இதைக் கொடுக்கின்றேன்.

சொந்த பந்தங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட அன்றைய ஞானிகள் உருவாக்கிய நிலை

1. சொந்த பந்தங்களுக்குள் ஒற்றுமை ஏற்பட அன்றைய ஞானிகள் உருவாக்கிய நிலை
சூரிய குடும்பத்துக்குள் ஏதாவது ஒரு சமயம் அது மாறுபட்டு விட்டால், அந்தப் பிரபஞ்சமே செயல் இழந்துவிடும். இதைப்போல நாம் ஒரு குல வழியில் வந்தவர்கள்தான், பந்துக்கள்.

அந்த பந்துக்கள் என்ற நிலையில் பாசத்தை வளர்ப்பதற்குத்தான். கல்யாணங்களிலும், விசேஷ காலங்களிலும் மனம் மகிழச் செய்வதும், ஒருவருக்கொருவர் உதவி செய்வதும், ஒருவருக்கொருவர் சந்திக்கச் செய்வதும். ஏற்பட்டது.

அதேசமயம் திருமணக் காலங்களில், ஒருவர் ஏழ்மையாக இருந்தால் அவரால் செயல்படுத்த முடியாது என்பதற்காக, அன்று ஞானிகள் காட்டிய அருள் வழியில், விசேஷ காலங்களில் ஆளுக்குக் கொஞ்சம், அவரவர்கள் இந்தப் பொருட்களை வாங்கிக் கொடுத்தால், அந்த சமயத்தில் அவர்களுக்கு விசேஷக் காரியம் சிரமம் இல்லாதபடி நடக்கும்.

ஆனால், இன்று காரியங்கள் நடக்கின்றன என்றால் கௌரவத்திற்காக வேண்டியும், “இவர் என்ன செய்தார்?, அவர்கள் என்ன செய்தார்கள்?” என்று பொறாமைகளை வளர்க்கும் நிலைதான், இன்று இருக்கின்றது.

அன்று ஒன்று சேர்த்த நிலைகளில், பந்துக்கள் வாழ வேண்டும் என்பதற்காக, திருமணமோ அல்லது மற்ற வைபவங்களோ அது நடத்தப்படும் போது, இதைப்போல மனம் உவந்து "அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்" என்று ஒருவருக்கொருவர் பொருள் உதவி செய்யப்போகும்போது, அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்பட்டது.

அதைப்போல ஒரு குடும்பத்தில் சிறுகுறைகள் ஏற்பட்டால், சில அலுவல் ஏற்பட்டால், எல்லோரும் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கும், நோய்வாய்ப்பட்டாலோ அதற்காக அந்த பந்தத்தின் தன்மைகொண்டு, அவர்கள் வீட்டிலே ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு செய்வதற்கும், மனம் உவந்து போவதற்காக, இப்படியெல்லாம் ஒற்றுமையைச் செய்து வைத்தார்கள். அது ஒரு பிரபஞ்சம்.

நம் சூரியக் குடும்பம் எவ்வாறு ஒரு பிரபஞ்சம் ஆகின்றதோ, இதைப்போல நம் மூதாதையர்கள் அதன் வழிகளிலே நாம் இணையப்படும் போது, பிரபஞ்ச இயக்கத்துக்குள் அது வருகின்றது.
2. கௌரவத்திற்காக இன்று பகைமையை வளர்க்கும் நிலை வந்துவிட்டது
இதைப்போல அன்று செய்துகொண்ட நிலைகள், காலத்தால் எங்கோ சென்றுவிட்டது. இன்று சிந்திக்கக்கூட நேரம் இல்லை. ஏதாவது விசேஷங்கள் நடந்தால்,
என்னை மதிக்கவில்லை, .
எப்படி நடத்துகின்றான் பார்க்கிறேன்என்று
எவ்வளவு தொல்லைகள் கொடுக்க முடியுமோ, அவ்வளவையும் கொடுப்பார்கள்.

இப்பொழுது, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் இருக்கின்றது. அதற்குத் திருமண ஏற்பாடுகள் ஆகின்றது என்றால், அதே போல் திருமணம் ஆகாத ஒருவர், அவருக்குக் கல்யாணம் நடக்கவில்லை என்றால், “அந்தப் பெண் மோசம்என்று ஊர் எல்லாம் சொல்லுவதும், தம்பட்டம் அடிப்பதும், அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு துன்பம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்குக் கொடுப்பார்.

அந்த அளவுக்கு, நம்முடைய உணர்வின் நிலைகள் தீய விளைவுகளாக மாறிவிட்டது. நம்மையறியாமலேயே, அந்தச் செயல்களை செயல்படுத்தச் செய்கின்றது.
3. அறியாது வரும் பகைமையை உடனுக்குடன் மாற்ற சதுர்த்தி செய்யவேண்டும்
இதைப்போன்ற நிலைகளை மாற்றுவதற்குத்தான், ஞானிகள் காட்டிய அருள்நெறிப்படி மாதத்திற்கு ஒருநாள் சதுர்த்தி என்று வைத்துள்ளார்கள்.


நமக்குள் பகைமை இருந்தாலோ, வெறுப்பு இருந்தாலோ, நாம் அமர்ந்திருந்து நாம் ஒவ்வொருவரும் அந்தப் பகைமையை நீக்க, மாதத்தில் ஒரு நாள் அந்த சதுர்த்தியன்று அந்த சப்தரிஷி மண்டலங்களை எண்ணி நம் மூதாதையர்களை எண்ணி அவர்கள் மெய்யொளி பெற வேண்டும் என்று எண்ணி, நாம் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி தியானிக்க வேண்டும்.

அப்படி தியானித்துவிட்டு, நாங்கள் பார்ப்பதெல்லாம் நலம் பெற வேண்டும்’ என்றும், ங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
அடுத்து, உங்களுக்குள் யாரெல்லாம் வெறுப்படைந்தனரோ,
ங்கள் பார்வை அவரை நலமாக்க வேண்டும்,
ங்கள் சொல் அவரை இனிமையாக்க வேண்டும்,
ங்களைப் பார்க்கும்போது அவருக்கு நல்ல மனம் வர வேண்டும்,
அவர்கள் குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சி பெற வேண்டும்,
மகிழ்ச்சியாக அவர்கள் வாழ வேண்டும்,
அவர்கள் இல்லத்தில் மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்,
அவர்களை அறியாத இருள் நீங்க வேண்டும்,
அவர்கள் மெய் பொருள் காண வேண்டும் என்று, இதையெல்லாம்
அந்த சதுர்த்தியன்று நாம் எண்ண வேண்டும்.

சதுர்த்தியன்று, இவ்வாறு நாம் எண்ணினால், நமக்குள் ருக்கும் பகைமை நீங்குகின்றது. கீதையிலே சொன்னது போல, “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்” நம் உணர்வின் சக்தி, நமக்குள் வளர்கின்றது.

எல்லோரும் நலம் பெறும் எண்ணத்தை, பந்துக்களிடம் இருக்கக்கூடிய பாசத்தை வளர்த்துக் கொள்ள முடிகிறது. இதைப்போல, சதுர்த்தியன்று நமது பந்துக்களும் எண்ணினால், நம்மையறியாது வந்த தீய விளைவின் நிலைகளை, எல்லோராலும் மாற்றிக் கொள்ள முடிகின்றது.

இதற்குத்தான் களி மண்ணால் விநாயகரைச் செய்து, கடலிலே கரைக்கும் நிலையாகக் காட்டினார்கள். 

அதாவது, நம்மை அறியாமல் சேரும் பகைமை உணர்வுகளை நம் ஈர்ப்பிலிருந்து (ஆன்மாவிலிருந்து) விலக்கும் பொழுது, சூரியனின் காந்தப்புலனறிவுகள் அதைக் கவர்ந்து கடலுக்கடியில் கொண்டு போய் அமிழ்த்திவிடும்.
ஆக, நம் ஆன்மா சுத்தமடையும். இந்தக் காற்று மண்டலம் தூய்மை அடையும். அனைவரும் ஒன்றி வாழும் நிலைகள் ஏற்படும். 

அந்த உணர்வுகளை மனிதன் இன்று ஆறாவது அறிவு கொண்டு, சப்தரிஷி, அதாவது சொல்லால், செயலால், அந்த மெய் ஒளியைத் தனக்குள் சிருஷ்டித்து, இருள் சூழ்ந்த நிலைகள், இந்த பூமியின் பிடிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு, இத்தகைய நிலைகளை அன்று மெய்ஞானியர்கள் செய்தார்கள்