ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2018

ஈஸ்வரமங்கலத்தில் பிறந்து வளர்ந்து அண்டத்தையே சுற்றி வந்த "ஈஸ்வரபட்டர்"

நம் குருநாதருக்குக் கல்வி அறிவு இல்லை.

படிப்பில்லை என்றாலும் அவர் தாயின் கருவிலே விளைந்தது தான். அவர் தாய் தந்தையர் பூஜை புனஸ்காரங்கள் மந்திரங்கள் இதெல்லாம் சொல்லித்தான் வளர்ந்திருக்கின்றார்கள்.

இருந்தாலும் அகஸ்தியரின் வாழ்க்கையைப் போன்று, பூஜை செய்யும் போது குருநாதருடைய தாயும் தந்தையும் இறந்துபோய் விடுகிறார்கள். சகோதர சகோதரிகளும் இல்லை.

இளமையில் வெளி வரும்போது தாய் கருவிலே விளைந்த அந்த சக்தி தான் இவருக்குள் இருக்கின்றது. ஏங்கித் தவிக்கும்போது அவர் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பிக்கின்றார்.

ஆனால் தாய் கருவிலே அவர் விளையப்படும் பொழுது அவர்கள் கற்றுக் கொண்ட இராமாயணம், மஹாபாரதம், கார்த்திகை புராணம் போன்ற அந்த உணர்வை பதிவு செய்ததை வைத்துக் குருநாதர் அனாதையாகத் தான் வெளியேறி வந்தார்.

அங்கங்கே ஏதாவது தொழில் சேருவது பத்து நாட்களுக்கு இருக்கின்றது. கடையில் சேர்வது சமையல் சமைக்கின்றது. இப்படியே தான் உலகம் முழுவதற்கும் சுற்றி வந்திருக்கின்றார் ஈஸ்வரபட்டர்.

அவர் எல்லா வழியிலும் வந்து ஞானத்தைப் பெற்றார். ஆனாலும் அவருக்குள் விளைந்த உணர்வுகள் தாய் கருவிலே விளைந்தது தான்.

அதன் அடிப்பைடையில் அந்த சந்தர்ப்பத்தில் தாய்  கருவிலே பூர்வ புண்ணியமாக அமைந்து சில சக்திகளை அவர் பெறக்கூடிய தகுதி பெறுகின்றார். அகஸ்தியனைப் போன்று 2000 சூரியக் குடும்பங்களையும் அறிந்தவர்.

ஆனால் அவர் கற்று வந்தவர் அல்ல. எழுதவும் தெரியாது. எந்த பாறையில் எழுதினாலும் சும்மா இரண்டு கோடு போட்டுவிட்டுப் போய்விடுவார்.

இதில் நான் என்னா எழுதி இருக்கிறேன் என்று கேட்பார். நான் (ஞானகுரு) ஏதாவது சொன்னால் கோபித்துக் கொள்வார்.

கோபத்திருக்குள் அவர் கண்ணுக்குள் இருந்து ஒரு விதமான ஒளி வரும். அந்த “ஒளிகள்...” வரும் போது என்னை அறியாமலே உடலை இயக்கும். அந்த இயக்கத்தின் உணர்வுகள் என்னை இயக்கும்.

குருநாதர் எனக்கு எப்படிக் கொடுத்தாரோ அதன் அலைவரிசையில் தான் உங்களுக்கும் கொடுக்கிறேன்.

உபதேசிக்கும் போது நீங்கள் பார்க்கலாம். குருநாதர் காட்டிய வழிகளில் மெய்ப் பொருளை எடுத்துச் சொல்லும்போது உடலிலே சில மாற்றங்கள் வரும். கண்களிலும் ஒரு விதமான ஒளிகள் வரும்.

எண்ணத்தால் அது உங்களுக்குள் பதிவாகி நீங்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது உங்களைச் சுற்றி வெளிச்சம் வருவதையும் பார்க்கலாம். உங்களுக்குள் பேரொளியாக மாறும்.