ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 30, 2015

மனிதர்களுக்கு மரியாதையும் கௌரவமும் முக்கியம் - மகரிஷிகளுக்கோ காரியம் தான் முக்கியம்...!

திரும்பத் திரும்பச் சொல்கின்றேன் என்று எண்ண வேண்டாம்.

தெளிந்த நிலைகள் கொண்டு நமக்குள் பதிவாக்கிக் கொண்டால் தான் இந்த நிலையை நாமும் உணர முடியும். "நாம் யார்?" என்ற நிலைகளில் சிந்திக்கவும் முடியும். 

நாம் நமது இயக்கமல்ல.

நமதாக இருக்கும் உயிரின் தன்மை நம் உடலில் அது ஒன்று சேர்க்கும் பொழுது "நமது".
"தான்" என்பதும் இதே தான்.
எதை எண்ணுகின்றோமோ "தான்" ஆகின்றது.

இந்த உடலாக இருக்கும் பொழுது உயிரோடு ஒன்றி “நான்” ஆகின்றது.

ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று உற்றுப்பார்த்தால் "ஓம் நமச்சிவாய" நம் உடலாக ஆகின்றது. அவன் உடலிலிருந்து வரும் வேதனைப்படும் உணர்வுகளை நாம் எடுக்கும் பொழுது "தான்" ஆகின்றது.

உயிர் - தான் ஆகித் தன்னுடைய நிலைகளாகும் பொழுது அந்த உணர்வின் இயக்கமாக நமக்குள் அது வேதனையாக உருவானால் "நான்" ஆகின்றது. எனக்குள் அந்த வேதனை வருகின்றது.
"நான்" என்ற நிலைகளில்,
என்னால் வேதனை தாங்க முடியவில்லை
என்று எண்ணுகின்றோம்.

அதே போல ஒருவருக்கு நாம் ஏதாவது உதவி செய்யவேண்டும் என்றால் - தான் ஆகி - நான் ஆகித் தான் செயல்படுகின்றோம்.

ஆக இதைப் போல காரணங்களுக்காக காரியங்களை எவ்வாறு இயக்குகின்றது? உணர்வின் செயல்கள் எவ்வாறு இயக்குகின்றது என்ற நிலையை,
ஆதியில் அகஸ்திய மாமகரிஷி
அவனில் கண்டுணர்ந்த உணர்வின் தன்மைதான் அது.

"அவன்" என்றால் பேசுவது நான் அல்ல. அவன் என்று நான் சொல்லலாம். அவனுடன் ஒன்றிய நிலைகள் கொண்டு அவன் என்ற நிலைகள் சமப்படுத்தும் நிலையாக மகரிஷிகளால் உருவாக்கப்பட்ட இந்த நிலைகள் தான்.
ஆகவே இதை நான் அவன் என்று சொன்னால் நான் தான்,
நான் தான் என்றால் அவன் தான் என்ற நிலைகள்.

இப்படிச் சமப்படுத்திப் பேசும் உணர்வுகள் அந்த மகரிஷிகளுக்குத் தான் உண்டு.

இந்தச் சரீரம் (ஞானகுரு) மகரிஷிகளின் உணர்வுக்குள் அடைப்பட்டு இருப்பதனால், அதனின் உணர்வின் துணைகொண்டு அவன் என்ற நிலைகள் கொண்டு இந்த உணர்வுகளின் இயக்கமாகத்தான் இப்பொழுது யாம் உபதேசிப்து.

ஆகவே பேசுவது நானல்ல.

அதாவது, உயிரின் உணர்வின் இயக்கத்தில் கவர்ந்து கொண்ட உணர்வின் சத்து
உடலில் இணைந்தபின்
அந்த உணர்வின் செயலே
அதன் உணர்வின் நினைவாகப் பேசுகின்றது.

June 29, 2015

உடலுடன் சொர்க்கம் அடைய விசுவாமித்திரரும் முயற்சித்தார்... முடியவில்லை...!

நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றினான். எதன் சுவையோ அந்த எண்ணங்களாக இந்த உடலுக்குள் எப்படி உருவாக்குகின்றான் என்று சொன்னானே, அந்த வான்மீகி மகரிஷி உடலுடன் இருக்கின்றானா?

அவன் எண்ணத்தால் கவர்ந்தான். உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக அந்த ஒளியின் வட்டமாக இருக்கின்றான்.

ஏனென்றால் அகஸ்தியன் துருவ நட்சத்திரமானபின் அதன் உணர்வின் தன்மையைக் கவர்ந்து பின் வந்தவன் வான்மீகி.

வானின் உணர்வைத் தான் அறிந்து தான் கண்டறிந்த உணர்வின் தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்தியவன் இன்றும் அந்த சப்தரிஷி மண்டலத்தின் உணர்வு ஆறாவது அறிவை ஏழாவது நிலை பெற்று சப்தரிஷி மண்டலங்களாக வாழ்கின்றான், வான்மீகி.மகரிஷி

இதைப்போல மீனவனாக இருந்த அந்த வியாசகன், வானை நோக்கி துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எடுத்தான்.

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து  பாற்கடலைக் கடைந்தான். விழுங்கியது எதுவோ அதற்குத்தக்க உடல் பெற்றார்கள் என்று கூறினானே அந்த வியாசகன்.

உண்மையில் இந்த பூமியின் நிலைகள் அது கடைந்தவற்றில் எதெது விளைந்ததோ, தாவர இனங்கள் விளைகின்றது. அது விழுங்கிய உணர்வுக்கொப்ப உணர்ச்சிகளும் எண்ணங்களும் நம் உடலில் எப்படிப் பெற்றது என்று வியாசகன் தெளிவாகக் கூறியுள்ளான்.

அப்படி உண்மையின் உணர்வை உணர்த்திய வியாசகன் உடலுடன் இருக்கின்றானா?

இருக்கின்றான்.

ஒளியின் உடலாக இருக்கின்றான். ஆனால் இந்தப்புற உடலில் இல்லை. சப்தரிஷி மண்டலத்துடன் ஒளியின் உடலாக இருக்கின்றான். ஆகவே நாமும் இந்த உடலுடன் யாரும் எங்கேயும் சொர்க்கம் செல்ல முடியாது.

இதற்குத்தான் அன்று இதன் உணர்வின் தன்மை கொண்டு பல யாகங்களைச் செய்து சொர்க்கலோகத்தை நான் அடைய முடியுமென்று  எண்ணுகின்றார்கள்.

ஆக இந்த உடலுடன் சொர்க்கம் செல்ல முடியாது. ஆனால், இந்த உடலிலே சொர்க்க உணர்வை வளர்க்க முடியும்  என்று இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றனர்.

இங்கே விசுவாமித்திரர், அவருக்குள் ஆத்திரமும் அறிவும் எதையும் பெறவேண்டும் என்ற ஆத்திர உணர்வுடன் செயல்படக் கூடியவர். அவரும் அந்த நிலையச் செய்ய முடியவில்லை.
வீரிய உணர்வு கொண்டு பல யாகங்கள் செய்து
உடலுடன் நாம் சொர்க்கம் போக வேண்டுமென்றால் முடியாது.

உணர்வின் தன்மை இந்த உயிருடன் ஒன்றி என்று நம் உணர்வுகளை ஒன்று சேர்க்கின்றோமோ அதுவே உடலான சொர்க்கம் (ஒளியின் சரீரம்) அடைகின்றது.

“எதனை எடுத்தோமோ அந்த சொர்க்கலோகத்திற்கு அழைத்துச் செல்கின்றது” என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் காட்டப்படுகின்றது.

ஆக இதைப்போல நம் எண்ணங்களால் உருவாக்கப்பட்ட உணர்வுகளைத் தெளிவாகக் கூறுகின்றது, நமது சாஸ்திரவிதிகள்.

June 27, 2015

நான் எப்பொழுதோ விபத்தில் இறந்திருக்க வேண்டிய ஆள்...! ஆனால் குரு அருளால் மெய் ஞானத்தைப் பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது - நடந்த நிகழ்ச்சி

யாம் (ஞானகுரு) எப்பொழுதோ இரயிலில் அடிபட்டு இறந்து போக வேண்டிய ஆள்.

எமக்குக் கல்யாணமாகி இருந்த சமயம் அது. மதுரையில் மீனாட்சி மில் கேட்டிலிருந்து வெங்கடாசலபுரத்திற்குப் போக வேண்டுமென்றால் ஒரு இரயில் பாதையைத் தாண்டித்தான் போகவேண்டும்.

இரயில் பாதை பாலத்துடன் கூடியதாக இருந்தது. எமது மனைவியை அழைத்துக் கொண்டு அந்தப் பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தோம்.

நாங்கள் இரயில் பாலத்தின் மீது நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்தப் பாதையில் இரயில் வந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் நாங்கள் தண்டவாளத்தை விட்டுக் கீழே இறங்கிப் போக முயன்றோம்.

கீழே இறங்கிப் போகலாம் என்றால் அங்கே கால் வைக்க முடியாதபடி அளவிற்கு அதிகமாக அசூசையாக இருந்தது.

உடனே என் மனைவி, “அய்யய்யே..,” என்று மூக்கைப் பொத்திக்கொண்டு எம்மையும் சேர்த்து இரயில் தண்டவாளத்திற்கு இழுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.

எமக்கு யோசிக்க நேரமில்லை, இரயில் அருகில் வந்துவிட்டது.

உடனே என் மனைவியை இரயில் பாதையின் மறுபக்கம் தள்ளிவிட்டு யாம் இந்தப் பக்கம் தாவிக் குதித்து வந்துவிட்டோம். ஒரு நொடிப்பொழுது தாமதித்திருந்தால் இரயிலில் அடிபட்டு இறந்திருக்க வேண்டியதுதான். இது நடந்த நிகழ்ச்சி.

இது போன்று ஒரு சமயம் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சர்பத் தயாரித்து விற்று வந்தோம். அப்பொழுது வியாபாரத்திற்குச் செல்ல யாம் இரயில் பாதையைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

ஒரு ஆளை வேலைக்கு வைத்து தள்ளு வண்டியில் சர்பத் தயாரிப்பதற்குண்டான சரக்குகளை ஏற்றி அவரை முன்னால் செல்லும்படி செய்தோம். யாம் பின்னால் வந்துகொண்டிருந்தோம்.

அப்படி வரும் பொழுது இன்றைக்கு இத்தனை பாட்டில் விற்றால் இவ்வளவு இலாபம், அவ்வளவு இலாபம் என்று மனதில் கணக்குப் போட்டுக் கொண்டு வந்தோம்.

அது சமயம் இரயில் பாதையில் இரயில் வந்துகொண்டிருந்தது எமக்குத் தெரியவில்லை.

ஆனால், சர்பத் வண்டியைத் தள்ளிச் சென்றவர் இரயில் பாதையைக் கடந்து சென்றுவிட்டார்.

யாம் மனதில் கணக்குப் போட்டுக் கொண்டே இரயில் வருவது தெரியாமல் இரயில் பாதையில் தண்டவாளத்தில் கால் வைக்கச் சென்றோம்.

அப்பொழுது எமது முதுகின் மேல் ஒரு கல் வந்து விழுந்தது. “யாரடா.., என் மீது கல் வீசுவது?” என்று வேகமாகத் திரும்பிப் பார்த்தோம். அங்கே ஒருவரையும் காணவில்லை.

என் மீது யார் கல் வீசியது என்று திரும்பிப் பார்த்த சமயத்தில் இரயில் வேகமாகச் செல்கிறது. அது சமயம் கல் என் மீது விழுந்திருக்கவில்லை என்றால் அன்றைக்கே யாம் இரயிலில் அடிபட்டு இறந்திருப்போம்.

பின்னாளில் குருநாதர் என்னிடம், “அன்று உன் மீது நான் கல் வீசவில்லையென்றால் அன்று நீ இரயிலில் சிக்கி நசுங்கியிருப்பாய்” என்று கூறினார். இது நடந்த நிகழ்ச்சி.

குருநாதர் என்னை எப்படி எப்படியோ கண்காணித்துக் காப்பாற்றி வந்து என்னை அவர்பால் ஈர்த்துக் கொண்டார்.

குருநாதர் என்னை எப்படி எப்படியோ காப்பாற்றி வந்தார் என்று யாம் உங்களிடம் கூறுகின்றோம். ஆனால், அதே சமயம் எம்மைக் கஷ்டப்படுத்திக் கொண்டுதான் இருந்தார். ஒவ்வொரு சமயமும்
எமக்குக் கஷ்டங்களைக் கொடுத்துத்தான்
உண்மைகளை யாம் அறியும்படி செய்தார்.

ஆனால், யாம் உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் வரும் கஷ்டங்களை நீக்குவதற்கு உபாயங்களைக் கூறி வருகிறோம்.

நமது அன்பர்கள் குரு காண்பித்த அருள்வழியில் தியானம் செய்வார்கள். நன்றாக இருக்கிறது என்றும் கூறுவார்கள்,
சில நன்மைகளும் பெறுவார்கள்,
பிறகு, தியானம் செய்வதை விட்டுவிடுவார்கள்.

ஒருவர் தியானத்தில் வளர்ந்தால்
அவருடைய குடும்பத்திற்கு நன்மைகள் கிடைக்கும்.
அவருடைய குடும்பத்தார் அனைவரும் நலம் பெறுவார்கள்.
அவரால் அவர் வசிக்கும் தெருவிலுள்ளோர் நலம் பெறுவார்கள்
என்று நாம் ஆசைப்பட்டுச் செய்தாலும்கூட அதை மறந்து
எமக்கு எதிரியாகத் திரும்புபவர்களும் இருக்கின்றார்கள்.

யானைகள், புலிகள் வாழும் காடுகளில் கூட இதுபோன்ற நிலை இல்லை. மனிதர்களின் மத்தியில்தான் இதுபோன்ற நிலைகள் இருக்கின்றன.

நீங்கள் தியானம் செய்கின்ற பொழுது உங்களைப் பார்த்து, “என்ன பெரிய.., தியானம் செய்கின்றார்” என்று மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்தால் போதும்.

பிறகு நீங்கள் ஒளிந்து ஒளிந்துதான் தியானம் செய்யவேண்டி வரும். மற்றவர்கள் செய்யும் கேலியும் கிண்டலையும் நீங்கள் ஏற்றுக் கொண்டால் பிறகு நீங்கள் தியானத்தையே விட்டுவிடவேண்டியதுதான்.

விஷத்தின் தன்மை என்பது வாலி, வலிமை அதிகம். வாழ்க்கையில் எத்தனையோ தீமைகள் உண்டு. அந்தத் தீமைகளிலிருந்து நீங்கள் மீள்வதற்குண்டான சக்தியை யாம் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காண்பித்த அருள் வழியில் யாம் உங்களுக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்.

உங்களுக்குக் கொடுத்துள்ள அருள் சக்தியின் துணை கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் அறியாது சேர்ந்த தீமைகளை நீக்கிட வேண்டும்.

யாம் உபதேசிக்கும் முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சுவாசித்து அதைப் பற்றுடன் பற்ற வேண்டும். அப்பொழுது நீங்கள் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

இது மிகவும் சுலபமான வழி. ஒன்றும் கஷ்டமில்லை. சிறிது காலம் கடைப்பிடித்து வந்தால் பிறகு எல்லாம் சீராக வரும்.

June 26, 2015

தீமைகளைப் பற்றாது தடுக்கச் செய்யும் கூட்டமைப்பு – கூட்டுத் தியானம்

அரசியலில் ஆனாலும் சரி, தெருவுக்குள்ளானாலும் சரி நாம் ஒருவருக்கொருவர் கோஷ்டிகளாக இணைந்து செயல்பட்டுத்தான் தனக்குள் காத்துக் கொள்ளும் நிலை வருகிறது.

இதைப் போன்றுதான் உயிரினங்களிலும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து தன்னைக் காத்துக்கொள்ளும் நிலையாக ஒருங்கிணைந்து அதனின் வலு கொண்டு தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது.

ஆனால், நாம் இப்பொழுது வாழ்க்கையில் எதை எடுத்துக் கொள்கிறோம்? இந்த வாழ்க்கையின் நிலைகளில் விருப்பு, வெறுப்பு என்ற நிலைகளில் யார் மேலாவது பகைமை கொண்டால் பழி தீர்க்க நமக்குள் ஒரு கூட்டமைப்பைச் சேர்த்துக் கொள்கிறோம்.
பழி தீர்க்கும் உணர்வாக
பல தொல்லைகளைக் கொடுக்கும் உணர்வேதான் வருகிறது.

குடும்பத்திற்குள் சிறு குறை ஏற்பட்டாலும், குடும்பத்திலுள்ளோர் நான்கு பேர் ஒன்று சேர்ந்து மற்ற இரண்டு பேரை மிரட்டுவார்கள். அங்கே பகைமை உணர்வுகளே வளர்ந்து கொண்டிருக்கும்.

இதைப் போன்ற நிலைகளையெல்லாம் நீக்க பல ஆயிரம் பேருடைய கூட்டமைப்பான உணர்வை உங்களுக்குள் பதியச் செய்து கூட்டுத் தியானத்தை அமைக்கின்றோம்.

நம் குடும்பத்திற்குள் ஆனாலும் சரி, தெருவுக்குள்ளானாலும் சரி, வாழ்க்கையில் எதுவானாலும் சரி
ஆயிரக்கணக்கானோரைக் கூட்டமைப்பாக வைத்து
அருள் மகரிஷிகளின் உணர்வை
உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கிறோம்.
                                          
கூட்டமைப்பாக அப்படிப் பதியச் செய்யும் மகரிஷிகளின் உணர்வின் சத்தை நீங்கள் அடிக்கடி ஆத்ம சுத்தி செய்துகொண்டால் அந்த உணர்வின் சக்தி உங்களுக்குள் வலு பெறுகிறது.

ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால்
பாலின் தன்மை சுருங்கி விஷமாகிறது.
இதைப் போல உங்கள் உடலில் இருக்கக்கூடிய விஷத்தின் தன்மை ஒரு துளியாக இருப்பினும் பல ஆயிரம் பேரின் உயர்ந்த குணங்களின் மணங்களை ஒருங்கிணைத்து அதனுடன் அந்த மகரிஷிகளின் சக்தி வாய்ந்த உணர்வுகளை இணைத்து உங்களைப் பெறச்செய்கிறோம்.

ஏனென்றால், தீமைகளை நீக்கிய உணர்வின் சத்தை நினைவு கொண்டு நாம் கூர்ந்து அந்த உணர்வின் சத்தாகவும் உங்களுக்குள் விளையச் செய்து அந்த வித்தினை உங்களுக்குள் பதியச் செய்கிறோம்.

இப்பொழுது நம் சகஜ வாழ்க்கையில் சண்டையிடுவோரையும், கஷ்டப்படுவோர்களையும் நாம் எண்ணும்போது அந்த உணர்வுகள் உடனே நமக்குள் வந்து இயங்குகிறது.

அதன் வழிக்கு நம்முடைய நல்ல குணங்களை மடக்கிவிடுகிறது, செயலற்றதாக்கிவிடுகிறது. அன்றைய நிலைகள் நமக்குள் சோர்வையும், சோகத்தையும் ஊட்டிவிடுகிறது.

ஏனென்றால், நாம் தவறு செய்யவில்லை என்றாலும் நம் உடலிலே பதிவு செய்த அந்த உணர்வுகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சூட்சமத்தில் நடக்கும் நிலைகளைக் கண் கொண்டு நேரடியாக உற்றுப் பார்க்கச் சொன்னார் குருநாதர்.

இவையெல்லாம் நமது குருநாதர் நேரடியாக எமக்குக் காட்டிய உணர்வின் தன்மைகள். அதைத்தான் உங்களுக்குச் சொல்கிறோம்.

ஆகவே, உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்த அருள் உணர்வின் சத்தைப் பெற “ஈஸ்வரா” என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி புருவ மத்தியில் நினைவைச் செலுத்துங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி இருங்கள். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், உடலிலுள்ள உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களும் பெறவேண்டும் என்று உங்கள் உடலுக்குள் அதைச் செலுத்துங்கள்.

இவ்வாறு மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் செலுத்தும்போது
அது உள் நின்று நமக்குள் தீமைகள் புகாது தடுத்து
நம் ஆன்மாவில் தெளிந்த நிலை பெறச்செய்து
நம்மைத் தூய்மைப்படுத்தும்.

தொடர்ந்து செய்து வந்தால் அன்றாட வாழ்க்கையில் வரும் சாப அலைகளையோ, வெறுப்பின் உணர்வுகளையோ, வேதனை அலைகளையோ உங்களுக்குள் வராது அதைப் பிளந்துவிடும்.

இவ்வாறு நீங்கள் ஒவொரு நிமிடமும் சுவாசித்தால் தீமைகளிலிருநு விடுபடவும் உங்கள் நினைவலைகள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றிடச் செய்யும்.

ஆகவே, சப்தரிஷி மண்டலத்தைப் பற்றுடன் பற்றி இந்தப் பூமியில் வரும் தீமைகளைப் பற்றாது அதைத் தடுக்கச் செய்யும் கூட்டமைப்புதான் இந்தக் கூட்டுத்தியானம்.

கூட்டுத் தியானத்தின் மூலம் கொடுக்கும் அருள் சக்திகளை நீங்கள் அலட்சியப்படுத்த வேண்டாம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில்
மகரிஷிகள் கண்டுணர்ந்த
பேருண்மைகளையும் மெய் உணர்வுகளையும் நீங்கள் பெறவேண்டும்.
தீமைகளிலிருந்து மீண்டு மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும்,
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீங்கள் இணைய வேண்டும்
என்ற இந்த இச்சையில்தான் இதை உபதேசிக்கிறோம்.
எமது அருளாசிகள்.

June 24, 2015

எல்லாமே என் நேரம்... எனக்கு வினை பிடித்து விட்டது...! என்று சொல்கிறோம்...! - அதிலிருந்து விடுபடுங்கள்

இன்று பத்திரிக்கையைப் பார்த்தாலே பல நிகழ்ச்சிகளை நாம் அறிய, நுகர நேர்கிறது. ஒரு இடத்தில் விபத்து நடந்தது என்று படித்தபின் அந்த பயமான உணர்வுகள் நமக்குள் பதிவாகிவிடுகிறது.

நமக்குள் உயர்ந்த குணங்கள் இருந்தாலும், பய உணர்வுகள் கலந்தபின் நம்முடைய நல்ல உணர்வலைகளைச் சரியாக இயக்கவிடுவதில்லை.

இதைப் போன்று ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மையறியாது நமக்குள் பதியச் செய்த இந்த உணர்வுகள் நம்மை அறியாது இயக்குகிறது. ஒரு வயலிலே வித்தைப் போட்டால் அதனின் சத்தை எடுத்துக் கவர்கிறது.

இயற்கையில் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட நிலைகள் அதனதன் தன்மையில் அது அது வளர்வது போல் நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வின் எண்ண அலைகளும், உணர்வின் வித்துக்களும், எண்ணங்களும்
காற்றிலே பரவியிருக்கும் தன் இனமான எண்ணத்தை எடுத்து
நமது ஆன்மாவாக உடலின் முன் பக்கமாக
நம் நெஞ்சுக்கு முன் கொண்டுவந்துவிடும்.
நெஞ்சுக்கு முன் ஒரு கடிகாரம் போன்று துடித்துக் கொண்டிருக்கும்.
அதை எல்லோரும் பார்க்கலாம், எல்லோருக்கும் இது உண்டு.

அந்தத் துடிப்பலையில் உள்ள காந்தம் நமக்கு முன் பரவலாகக் குவித்தாலும் அது சீராக நம் மூக்குக்கு நேராகக் கொண்டுவந்துவிடும்.

இதை நாம் சீராகப் பதிவு செய்தபின்
நம் உயிரிலே நெற்றியிலே உள்ள காந்தப்புலன் இழுக்கும்.
உள் புறமாக இழுத்து உயிருடன் உராயச் செய்யும் பொழுதுதான் இந்த உணர்வலைகள் உடல் முழுவதும் படர்கிறது.

நமக்குள் நெஞ்சின் பாகம் இருக்கும் நடு மையமான குறுத்தெலும்பு அந்தக் கடிகாரத் துடிப்பைப் போல இயக்கும். நம் உடலில் எத்தனை குணங்களைப் பதிவு செய்திருக்கிறோமோ அதை அனைத்தும் இழுத்து இங்கே குவித்துக் கொடுக்கும்.

சாப அலைகள் அதிகமாகக் கலந்தால் இது ஆன்மாவில் குவிந்து ஒரு பக்கத்தில் சேமித்துவிட்டால் அது எடுத்து இங்கிருந்து எடுத்துக் கொடுக்கும். இதற்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறது.

அப்பொழுது நம் உயிரிலே உராயப்படும் பொழுது அந்த உணர்வலைகளை இயக்கிக் காட்டுகிறது உயிர். அந்த உணர்வுகள் அனைத்தும் உடலுக்குள் படர்ந்து தன் தன் இனமான உணர்வுகளை இயக்கி நமக்குள் அந்த நிமிடம் இந்த உடலை இயக்கும்.
அதன் வழிகளிலே தான் நம் சொல்லும் இருக்கும்,
அந்த உணர்ச்சியின் தன்மைகொண்டுதான் நம் உடலின் இயக்கம்.
அதற்குத்தகுந்த மாதிரி இந்த உடலில் வழி நடத்தும்
அதற்குத் தகுந்த மாதிரி நம் முன்னே சொல்லைச் சொல்லும்.
அந்த உணர்வுக்கொப்பத்தான் கண் பார்வையும் இருக்கும்.

எனக்கு இப்படி இருக்கிறதே என்ற நிலைகளில் கண்ணால் பார்த்து நல்லதை நாம் நினைத்து எடுக்கும் திறனற்றுப் போய்விடுகிறது.

சாப அலைகள் இருப்பவரைப் பாருங்கள். எதையோ பறி கொடுத்தவரைப் போலவே இருப்பார்கள்.

முன்னாடி ஒரு பொருள் இருந்தாலும் கூட அவர்களுக்குத் தெரியாது. சில நேரங்களில் நண்பனே தன் எதிரில் வந்தாலும் கூட அந்த நண்பனைக் காணவிடாது.

பாருடா.., நான் வந்திருக்கிறேன் கொஞ்சம்கூட நம்மைக் கவனிக்கவில்லை பார்.., கொஞ்சம்கூட மரியாதை இல்லை பார்என்றுதான் நம்மை நினைக்க வைக்கும். அந்த அலைகள் தடுத்து நண்பனைப் பார்க்கவிடாது செய்யும்.

நண்பன் எண்ணும்பொழுது என்ன மனிதன்? வாங்க என்று கூப்பிடவில்லை. இவனைத் தேடி வந்து விஷயம் சொல்லலாம் என்று வந்தேன், வா என்று கூப்பிடவில்லை இவனிடம் நான் என்ன சொல்கிறது? என்ற நிலை ஆகிவிடும்.

ஆக நல்ல காரியத்தைப் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்று நண்பன் சொல்ல வரும்போது இந்த சாப அலைகள் நண்பனைப் பகைமையூட்டும் ஆன்மாவாக மாற்றிச் சுவாசித்து கண்களிலே அந்த அலைகள் பாயும்.

சில நேரங்களில் நீங்கள் பார்க்கலாம். கொஞ்சம் சோர்வோ, சஞ்சலமோ, வெறுப்போ இந்த மாதிரி உணர்வுகள் இருந்தால் உங்களுக்கு முன் நண்பர் இருந்தாலும்கூடத் தெரியாது.

சாப அலைகள் உள் நின்று இத்தனை வேலைகளையும் செய்யும். அதே சமயத்தில் அன்றன்று வாழ்க்கையில் படும் வெறுப்பின் உணர்வுகளும் இதுவும் அந்தச் சாப அலைகளுடன் சேர்ந்து இயக்கும்.

நஞ்சுக்குள் நல்ல பொருளை இட்டாலும் அதையும் தனக்குள் இணைத்து நஞ்சின் செயலாகவே ஆக்கும். அதைப் போன்று சாப அலைகள் நம் வாழ்க்கையில் வரும் எதிர்ப்பின் தன்மைகளை உருவாக்கி அந்த அலைகளையேதான் மீண்டும் உருவாக்கும்.

நம் நண்பனிடத்திலும் இதே வெறுப்பின் உணர்வுகளையே உருவாக்கும். அதே அலைகளைக் குவித்து நம் ஆன்மாவாக வரப்படும் பொழுது மன நோயையும், சஞ்சலத்தையும்தான் இது உருவாக்கிக் கொண்டிருக்கும்.

இது ஒவ்வொரு குடும்பத்திலேயும் இது உண்டு. நாம் தவறு செய்யவில்லை. இதைப் போன்று இன்றைய காலங்களில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

நல்லவர்களாக இருந்தாலும் சரி, அழகான குழந்தையாக இருக்கும். சாப அலைகள் வரும்போது அந்த அலையின் தொடர்பில் குழந்தை பிட்ஸ்வந்து துடித்துக் கொண்டிருக்கும்.

அதைப் பார்க்கும் தாய் தந்தையர், அவர்களைச் சார்ந்தோர் அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
செல்வம் இருக்கும்.
செல்வம் இருந்தாலும் மன நிம்மதி இருக்காது.

ஆக, நிம்மதியற்ற நிலையில் இந்த வேதனையான உணர்வுகள் உடலிலே விளையும். விளைந்து நோயாகி இறந்தபின் அந்தச் செல்வத்தைக் கூடக் காணமுடியாது.

செல்வத்தால் கண்ட சுகமும் அழிந்து வேதனையான உணர்வுகளை உடலுக்குள் சேர்த்து உயிருடன் ஒன்றி விளைந்தபின் மனிதனல்லாத உயிரினமாகத்தான் அடுத்து பிறக்க நேரிடுகிறது.

இதை உங்களுக்குத் தெளிவாகச் சொல்கிறேன். ஏனென்றால் யாரும் நாம் தவறு செய்யவில்லை.

சந்தர்ப்பத்தால் முந்தைய நிலைகள் இணைந்து நமக்குள் அது வழி தொடர்ந்து வந்தது. அந்த உணர்வே நமக்குள் இன்றும் அந்த இயக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நாம் அந்த அருள் ஞானிகளின் துணை கொண்டு சாப அலைகளிலிருந்து விடுபடவேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் சேர்த்து தீய வினைகள், சாப வினைகள், பாவ வினைகள், பூர்வ ஜென்ம வினைகள் அனைத்திலும் இருந்து நீங்கள் விடுபடுங்கள்.

என்றுமே உயிருடன் ஒன்றிய பேரானந்த பெருநிலைகள் பெற்று அந்த அருள் ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் நீங்கள் வாழ முடியும். அதற்குத்தான் இதை உபதேசித்தது.

June 23, 2015

"கடவுளுக்குப் ஃபோன் பண்ணுகின்றேன்டா..," குருநாதரின் பரிபாஷை (சூட்சம உணர்வுகள்)

நமது குருநாதர் போஸ்ட்டில் கல்லைக் கொண்டு தட்டுவார்.

தட்டிவிட்டு "ஹலோ...!" என்று சொல்லிவிட்டு இங்கிருந்து ஃபோன் (Phone) பண்ணுகின்றேன்" என்று சொல்வார்.

ஏன் சாமி போஸ்ட் கம்பியில் கல்லை வைத்துத் தட்டுகின்றீர்கள்...! என்று நான் கேட்பேன்.

நான் ஃபோன் செய்கின்றேன்டா...! என்று சொல்வார். நான் கடவுளுக்குப் ஃபோன் பண்ணுகின்றேன்டா..,! என்று சொல்லுகின்றார்.

அப்பொழுது அந்தக் கல்லைக் கொண்டு தட்டுவதற்கும், இந்த உணர்வினுடைய நிலைகளையும்
1.நீதான்டா "ஏன்?" என்று கேட்டாய்,
2.வேறு ஒருவரும் என்னைக் கேட்கவில்லை என்று சொல்கின்றார்.
3.காரணம், இதிலே வரக்கூடிய நாதங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்.

விண்ணிலே நாதங்கள் எப்படி வருகின்றதென்று நீ பார். அந்த விண்ணுலகில் ஒவ்வொன்றையும் எடுத்தால் ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. மோதியவுடன் சுருதிகள் மாறுகின்றது.

அப்பொழுது அகண்டு போனவுடன் சேர்த்துக்கொண்ட உணர்வுக்குத் தக்க கூஜா மாதிரி இப்படிப் பல உருவங்களில் இது மாதிரியெல்லாம் அந்த விண்வெளியில் உருவாகின்றது.

அப்படி அது விண்ணிலே உருவாகியபின் அதனுடைய வேகமாக வரும் பொழுது நாதம் எப்படி வருகின்றது பார்...! என்றார்.

அதற்குத்தான் போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டிக் காண்பிக்கின்றேன்டா. நாதத்தை நீ பார்... என்று சொல்கிறார்.

இது எல்லாம் அனுபவப் பூர்வமாக அவருடைய சக்தி கொண்டு உலகம் எப்படி இருக்கின்றதென்று
1.அவர் கண்டறிந்த உணர்வு அவருக்குள் இருந்து வருகின்றது.
2.இதெல்லாம் நமது குருநாதருடைய பரிபாஷைகள்.
3.அகண்ட அண்டத்தின் இயக்கத்தின் உண்மையின் உணர்வுகளும், நாம் விண் செல்லும் உபாயங்களும் அந்த உணர்வுகளுக்குள் உண்டு.

அதைத்தான் உங்களுக்குச் சொல்லி வருகிறோம்.